மனிதன், தன்னுடைய பிறப்பிலி ருந்து வாழ்க்கையின் இறுதி கட்டம் வரை அன்பு, பாசம், கருணை, மகிழ்ச்சி, துன்பம், பகை என்றபல்வேறு உணர்வுகளுக்கு கட்டுப்பட்டு வாழ்கின்றான். இவற்றுள் ‘பகை’ கொடிய நோய். பகைமையால் ஏற்படும் தீயன பற்றியும், பகைமையால் வரும் துயரை வெல்லும் முன்னெச்சரிக்கை பற்றியும் சிறு கதை மூலம் அறியலாம்.
‘பகைவன் என்றும் பகைவன் தான்’ அவன் மாறிவிடுவான் இல்லை மாறிவிட்டான் என்பது நாம் கொண்ட அறியாமை ஆகும். நாம் வளர்த்திய பகை நம்மிலும் வளரலாம், நம்மை சுற்றியும் வளர்ந்து நிற்கலாம். நம்மில் வளர்ந்து நிற்கும் பகை உயிர் நாடியை ஒருமுறைஆட்டி வடும். இதனையே வள்ளுவர்,
ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது (குறள்: 886)
என்ற பாடல் மூலம் விளக்கியுள்ளார். நம்மில் வளர்ந்த பகையும் நம்மை சுற்றியுள்ள பகையும் ஒன்றிர்கொன்று சளைத்தவை அல்ல. அதனால் பகைமைறைவள்ளுவர் ஒரு முள்மரம் என்றும், அதனை முட்செடியாக இருக்கும் பொழுதே களைத்து விட வேண்டும். அது முதிர்ந்து நின்றால் அதனை களைப்பவருக்கே பெரும் பாதிப்பாய் அமையும். ‘களைய வேண்டிய பகையை, அதன் தொடக்க நிலையிலேயே களைத்து விட வேண்டும். அக்கணமின்றி அது வலுத்தபின் பலர் கூடி தாக்கினாலும் அது தாக்குபவரையே அழித்து விடும்’ என்றார் வள்ளுவர்.
காக்கைகளுக்கும் ஆந்தைகளுக்கும் நடந்த போர்:
மகிழரோப்யம் என்ற ஆலமரம் ஒன்று நகரின் அருகில் இருந்தது. எண்ணற்கிளைகள் காக்கைகளின் உறைவிடமாக இருந்தது. மேகவர்னா என்ற காக்கையே அரசனாய் வலம் வந்தது. ஆலமரத்தின் அருகில் குகை ஒனறு இருந்தது. அதில் அரிமரதனா என்ற ஆந்தையின கீழ் ஆந்தைகள் கூட்டம் வாழ்ந்து வந்தது.
ஆந்தைகள் ஒவ்வொரு நாளும் இரவில் காக்கைகள் வாழும் ஆலமரத்தை முற்றுகையிட்டு, அவர்களால் முடிந்த அளவு காக்கைகளுடன் சண்டையிட்டு கொன்று வந்தன. காக்கைகளுக்கு இரவில் பார்க்கும் சக்தியற்று, ஆந்தைகளை எதிர்க்க இயலாது அழிந்து வந்தன.
மேகவர்னா, தன்னுடைய அமைச்சர் அவையில் இருக்கும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தியது. ஆலோசர்களான உஜீவ், சஞ்ஜீவ், அநுஜீவ், பிரஜீவ் மற்றும் சிரஞ்ஜீவ் இவர்களை அழைத்து ஆலோசனை நடத்த ஐவரும் அவர்கள் திட்டங்களை கூறினர். உஜீவ் ‘பகைவர்களுடன் சமாதானமாய் போய்விடலாம்’ என்க, ‘அவர்கள் கொடூரமானவர்கள், சமாதானம் வேண்டாம். போராடுவோம்’, அநுஜீவ் ‘அவர்கள் போர் தர்மங்களை பின்பற்றமாட்டார்கள். அதனால் நாம் வேறு இடம் செல்வோம்’ என்றது. உடனே, பிரஜீவ், ‘வேறு இடம் சென்றால் திரும்ப இயலாது’ எனக் கூறவே, சிரஞ்ஜீவ் ‘நாம் நம் நண்பர்கள் உதவியை நாடலாம்’ என்றது.
ஐவரின் ஆலோசனையும் பிடிபடாத மேகவர்னா, தன் தந்தையின் ஆவோசகர் ஸ்திரஜ்வின் உதவியை நாடியது. அக்காக்கை ‘மேகவர்னா! உன் ஆலோசகர்கள் கூறியவை தவறில்லை. நீதிக்கு உட்பட்டவை தான். ஆனால் இந்த சூழ்நிலையில் அது தீர்வாக அமையாது. நீ ஒற்றர்களை ஏற்பாடு செய். அவர்கள் மூலம் ஆந்தைகளின் பலவீனங்களை அறிந்து அழித்து விடு. என்னை அடித்து இரத்தம் வர இங்கு விட்டு வெளியேறி விடு. நான் அவர்கள் நல் மதிப்பை பெற்று அழிக்கும் வழியை கூறுகின்றேன். அதுவரை ரிஷ்யமுகம் மலையில் பதுங்கியிருங்கள்’ என்றது. ஸ்திரஜ் கூறியது போல் மேகவர்னா தன் இனத்தோடு வெளியேறியது.[hide]
ஸ்திரஜை அடித்து இரத்தத்தை உடலில் தேய்த்து அங்கு எறிந்து விட்டு சென்றன காகங்கள். ஸ்திரஜ் அடிபட்டிருப்பதை அரிமரதனா ஒற்றர்கள் கூறியதும் அங்கு இரவில் வந்த ஆந்தைகள் ஆலமரத்தின் அடியில் வீழ்ந்து கிடந்த ஸ்திரஜை காத்தனர். ஸ்திரஜ், அரிமரதனாவை உலகத்தில் பெரும் நல்லவன் என்றும், மேகவர்னாவை மிக கொடியவன் என்றும் கூறியது. தான் குணமானதும் அவர்கள் இருக்கும் இடத்தை கூறுவதாய் கூறவே, ஒற்றர்கள் கூறியது உண்மை என்று அரிமரதனா ஸ்திரஜை நம்பி குகைக்கு அழைத்து சென்றது. தான் குகைக்கு வெளியே கூடு அமைத்து தங்குவதாய் கூறியது. அதனை நம்பி வெளியே காய்ந்த இலைகளை கொடுக்க ஸ்திரஜ் குகையை மூடும் அளவிற்கு பரப்பியது. ஆந்தைகள் சில பறந்து வேறு இடம் சென்றன.
ஸ்திரஜ், சமயம் அறிந்து ரிஷியமலைக்கு சென்று மேகவர்னாவையும் காகங்களையும் அழைத்து வந்தது. கம்பங்களில் தீயை பற்றி, காய்ந்த இலைகளில் வைத்தன. இதனை அறியாத ஆந்தைகள் தீயில் கருகி இறந்தன.
பாம்பின் வேடம்:
இரை தேடி, உணவு உண்டு வாழும் பாம்பு ஒன்றிற்கு வயதாகி விட்டதால் நகர மிகவும் சிரமம் கொண்டது. இரை இன்றி மெலிந்த பாம்பு ஒரு உக்தியை கை கொண்டது. கிணற்றில் வாழும் தவளைகளை நோக்கி சென்று சோர்வோடு படுத்து கொண்டது. அதனை பார்த்து பயந்த தவளைகள் பாம்பு சோர்வோடு இருப்பதை கண்டு அதன் அருகே சென்றன.
“ஏன் சோர்வாய் இருகின்றாய் உனக்கு என்ன நடந்தது” என்று கேட்கவே, பாம்பு தன் திட்டத்தை செயல் படுத்த துவங்கியது.
“நான் ஒரு பிராமிணன் ஒருவனை கடித்து விட்டேன். அவன் எனக்கு சாபம் இட்டு விட்டான். தினமும் தவளைகளுக்கு சேவை செய்ய கூறி சபித்து விட்டான்” என்று கூறவே அதனை முழுவதும் நம்பியது தவளைகளின் தலைவன்.
நீ தினமும் எங்களை உன் முதுகில் சுமந்து செல்” என கூறவே பாம்பு தன் திட்டம் வென்றதாய் எண்ணி சுமந்து சென்றது. பசியை பொறுக்காத பாம்பு, தவளையின் தலைவனிடம் “நான் தினமும் மற்ற தவளைகளை சுமக்கின்றன். வயதானவன் நான் உணவிற்கு எங்கு செல்வது. எனக்கு தவளை ஒன்றை உணவாக அளித்து விடுங்கள்” என்று கேட்க தவளையின் தலைவன் “தினம் நீ ஒரு தவளையை உண்டு கொள்” எனறது. காலம் நகர தவளைகள் குறைந்தன. வயதான பாம்பு நன்றாக வளர்தியது உடலை. நல்ல பாம்பு ஒன்று அதன் உக்தி புரியாமல் அதனிடமே உண்மை அறிய கேட்டது. “தவளைகள் அனைத்தும் வேறு வேறு சுவையில் உள்ளன.நான் அவைகளை தினமும் ஒவ்வொன்றாக உண்டு வாழ்கின்றேன்” என்றது. நல்ல பாம்பு அந்த கிணற்றில் வாழ்ந்த அனைத்து தவளைகளையும் அதில் வாழ்ந்த பாம்புகளையும் கொன்று தின்றது.
மேற்கண்ட இரண்டு கதைகளிலும் தன் பகைவர்களின் பொய் மொழி கேட்டு தவளையின் தலைவன் தன் இனமே அழிய காரணமாய் நின்றது. தன்னை விட பலமற்றவர்கள் உக்தியில் விழுந்த ஆந்தை தானும் தன் இனமும் தீயில் கருகி இறக்க காரணமாய் நின்றது. பகைவர்கள் என்றும் பகைவர்கள் தான் நண்பர்களாக மாட்டார்கள் என்பதை மறந்தனர். பகைவனின் நயமான பேச்சை கேட்காது, அவர்கள் என்றும் பகைவர்கள் தான் என்பதை மறவாது நான் எப்பொழுதும் விழிப்புடன் செயல்பட வேண்டும். எந்த ஒரு தொழிலும் பகைவன் இருப்பான். அவனுடைய பலம் பலவீனங்கள் அறிந்து அதற்கு தகுந்தாற்போல் தன்னை தயார் செய்து கொள்ள வேண்டும். பகைவனின் நட்பை முளையிலேயே கிள்ளி எறிபவனே வாழ்க்கை என்னும் வீதியில் தன்னம்பிக்கையோடு பயணிப்பான்.
தொடரும்.[/hide]
இந்த இதழை மேலும்