Home » Cover Story

எட்டுத்திக்கும் புகழ் பரவட்டும் இமயமும் பெயர் சிறக்கட்டும்

Rtn.Prof. Dr. ஜமீர் பாஷா

M.S.,FRCS(Eng).,FACS(USA).,FAIS.,FIAMS.,Dip.MAS(Ger.).,FIAGES.,FALS.,

Consultant Laparoscopic & Laser Surgeon

SHANAWAZ  HOSPITAL  தில்லைநகர், திருச்சி.

முச்சங்கம் உதித்த மதுரையில் பிறந்தவர்

முத்தமிழிலும் முகவரி கண்டவர்

தென் தமிழகத்தில் நுண் துளை அறுவைச் சிகிச்சை அறிமுகம் செய்தவர்

உலகெங்கும் பயணம் செய்து சாதனைப் பக்கத்தில் இடம் பிடித்தவர்

உலகத் தலைவர்களிடம் உன்னத நட்பு கொண்டவர்

வள்ளுவர் முதல் பாரதி வரை முழுமையாகக் கற்றவர்

நோய் என்று வருபவர்களுக்கு சிகிச்சைக்கு

முன்பே புன்னகையால் குணம் படுத்தக்கூடியவர்

வீட்டை அலங்கரிக்க விருதுகளை வைப்போர் மத்தியில

விருதுகளாலே வீட்டைக் கட்டியவர்..

தலைசிறந்த உலக மருத்துவர்களின் மிக முக்கியமானவர் SHANAWAZ HOSPITAL மருத்துவமனையின் நிறுவனர் Rtn.Prof.Dr. ஜமீர் பாஷா அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு….

கே: உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

நான் பிறந்தது மதுரையில் தான். என்னுடைய தந்தை சுங்க இலா அதிகாரியாக இருந்ததால், என்னுடைய பள்ளிப்படிப்பு கோவை கிக்கானி பள்ளி, ஊட்டி, கோத்தகிரி, என பல இடங்களில்  நடைபெற்றது. பல பள்ளிகளில் படித்தாலும் என்னுடைய எண்ணம் முழுவதும்  படிப்பின் மீதே இருந்தது. எல்லாப் பாடத்திலும் முதன்மை மாணவனாகத் தேர்ச்சிப் பெற்றேன். இந்தத் தேர்ச்சியின் மூலம் படிப்பு மட்டுமே வாழ்க்கையை உயர்த்தும் என்ற தத்துவத்தைப் என் வாழ்க்கையோடு பொருத்திப் பார்த்துக் கொண்டேன். வீட்டிலும், பள்ளியிலும் நன்றாகப் படிக்கும் மாணவன் என்று பெயரெடுத்துவிட்டேன்.

பள்ளிப் படிப்பை முடித்தவுடன் 1971 ஆம் ஆண்டு மதுரை மெடிக்கல் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பில் சேர்ந்தேன். மருத்துவத் துறையின் மீது இருந்த பற்றுதலால் இறுதியாண்டில் Surgery பிரிவில் முதல் மாணவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.  அதன் பிறகு அடுத்தடுத்த மருத்துவ பட்ட மேற்படிப்பு தஞ்சாவூரில் எம்.எஸ். படிப்பை படித்தேன். முதுகலைப் பட்டத்திலும் பல்கலைக்கழக முதல் மாணவனாகத் தேர்ச்சி பெற்றேன்.

கே:  மருத்துவராக வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குள் எப்படி வந்தது?

என் தந்தைக்கு என்னை ஒரு இ..ப அதிகாரியாகப் பார்க்கவேண்டும் என்ற என்ற ஆசை இருந்தது. அவர்களின் ஆசையை என்னால் நிச்சயம் பூர்த்தியாகக் கூடியதாகவே இருந்தது.  ஒரு நாள் அவர் நன்கு சிந்தனை செய்து அரசு அதிகாரியானால் ஒரு மேலதிகாரி இருப்பார் அவர்களின் கட்டளையிணங்கவே செயல்பட வேண்டும் என்று நினைத்து நீ டாக்டராக வேண்டும் என்று கூறினார். அதோடு டாக்டராகிவிட்டால் எதையும் நீ சுதந்திரமாக  முடிவெடுக்க முடியும். டாக்டர் என்பவர் இறைவனுக்கு இணையாக மதித்துப் போற்றப்படும் பணி என்பதையும் என்னிடம் கூறினார். அன்று அவர் கூறிய வார்த்தை என் மனதில் பசுமரத்தாணி அடித்தாற் போல் ஆழமாகப் பதித்தது.

அவரின் வார்த்தையை என் வாழ்க்கையாக மாற்றி கொள்ள முனைந்தேன். அதற்கு கடுமையான முயற்சி, பயிற்சி, எந்நேரமும் படித்ததன் மூலம் மருத்துவத்துறையில் இடம் கிடைத்தது. இன்று உங்களின் முன் ஒரு மருத்துவராக அமர்ந்திருக்கிறேன்.

கே: நுண் துளை அறுவை சிகிச்சை நிபுணரானது பற்றி?

மருத்துவத் துறைகளில் பல பிரிவுகளும், பல முறைமைகளும் இருக்கிறது, நான் படித்த முடித்த காலத்தில் இந்த சிகிச்சை முறை அப்போது தான் அறிமுகமாகிய காலக்கட்டம். இதில் என்னை இணைத்துக் கொள்ள விரும்பினேன். விரும்பினால் மட்டும் போதாது இதிலுள்ள அனைத்து நுணுக்கங்களையும்  கற்றுக் கொள்ள விரும்பினேன்.

இதற்கதாக ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளுக்குச் சென்று, அங்கு உயர்பயிற்சி எல்லாம் பெற்று, அமெரிக்காவிலுள்ள நியூயார்க் நகரத்தில் லேசருக்கான அறுவை சிகிச்சை முறைமைகளை முறையாக கையாண்டு கற்றுக் கொண்டேன்.

தென் தமிழகத்தில் முதன் முறையாக நுண்துளை அறுவை சிகிச்சையை அறிமுகம் செய்து வைத்த பெருமை என்னையே சாரும். அது மட்டுமின்றி பித்தப்பை சம்மந்தமான அத்துனை சிகிச்சைகளும் அப்போதே செய்தேன்.

கே:  அறுவை சிகிச்சையை முறையை அறிமுகப்படுத்திய, உங்களின் அடுத்தடுத்த படிநிலைகள் எவ்வாறு இருந்தது?

எனக்கு முன் இந்த அறுவை சிகிச்சையில் யாருமில்லை. நான் தான் முதலாமானவர். இந்த நுண் துளை அறுவை சிகிச்சைக்கென்று எந்தப் பாடத்திட்டமும், பாடப் புத்தகமும் இல்லை.

இதனால் நுண்துளை அறுவை சிகிச்சை அமைப்பு ஒன்றை தொடங்கி அதன் மூலம் பாடப்புத்தகத்தை ஒன்றை உருவாக்கினோம்.  Indian Associan of Gastrointestinal Ento Surgeons மூலம் இரைப்பை, குடல், ஈரல், சிறுநீரகம் போன்ற வயிறு சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும் வகையில் அகில இந்திய அசோஷேசன் ஒன்றை நிறுவி, அதன் தேசிய தலைவராக இருந்து பல திட்டங்களை அறிமுகம் படுத்தினேன்.

இதன் மூலமாக உலகநாடுகள் பலவற்றிற்குச் சென்று  பல சொற்பொழிவுகளும், கருத்தரங்குகளும், ஆய்வுக் கட்டுரைகளும் சமர்ப்பித்துள்ளேன். அப்போது உலகத் தலைவர்களின் நட்பு எனக்கு கிடைத்தது.

நான் கற்றதைப் பெற்றதை என்னுள்ளே வைத்துக் கொள்ளாமல் யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற வாக்கிற்கேற்ப இதுவரை 250க்கும் மேற்பட்ட இளம் மற்றும் மருத்துவ நிபுணர்களுக்கும் இலவசமாகப் பயிற்சி அளித்துள்ளேன். இதுகுறித்தான பல விழிப்புணர்வு கட்டுரைகள், தொலைக்காட்சி பேட்டிகள் என பல நிலைகளில் பரிணமித்துள்ளேன்.

என் மருத்துவப் பயணத்தில் இதுவரை பதினைந்தாயிரத்திற்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகள் செய்திருக்கிறேன் என்பதை பெருமையாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

கே: உலகத் தமிழ் மாநாட்டில் நீங்கள் பங்கு பெற்ற அனுபவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

தஞ்சாவூரில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதா அவர்களின் தலைமையில் நடைப்பெற்றது. இந்த மாநாட்டில் பல துறை வல்லூநர்கள் கலந்து  கொண்டார்கள்.

முத்தமிழ் என்று சொல்லக்கூடிய இயல், இசை, நாடகம் போன்றவற்றில் பல நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. அதில் நான்காவது தமிழான அறிவியல் தமிழ் என்ற ஒன்றை அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.  அந்த அறிவியல் தமிழில் நுண் துளை அறுவை சிகிச்சை பற்றி என்னை பேச அழைத்தார்கள். நான் முதல் சொற்பொழிவாக அந்த அமர்வில் பேசினேன். அப்போது தான் நுண் துளை அறுவை சிகிச்சை என்னும் வார்த்தையை அறிமுகம் செய்து வைத்தோம்.[hide]

கே: ரோட்டரி மாவட்டம் 3000 என்ற அமைப்பில் நீங்கள் செய்யும் பணிகள் பற்றி? 

இந்தப் பணியில், திருச்சி, மதுரை, திண்டுக்கல், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்ûடை, கரூர், தேனி ஆகிய எட்டு வருவாய் மாவட்டங்களை சேர்த்து ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களை ஒன்றிணைத்தோம். இதற்கு நான் ஆளுநராக இருந்து பணியாற்றி வருகிறேன்.

இதில் நிறைய சேவைகள் செய்திருக்கிறோம். உதாரணமாக, மொபைல் ஆம்புலன்ஸ், பள்ளிக்கட்டிடம்,பள்ளிக் கழிப்பறை, மருத்துவ முகாம்கள், இரத்ததானம், மரம் நடுதல், போன்ற பணிகள் செய்திருக்கிறோம்.

ஒரு ஆண்டில் ஐந்நூறுக்கும் அதிகமான உறுப்பினர்களை இந்த அமைப்பில் சேர்த்த பெருமை என்னை சேரும்.

கே: தற்போது நடக்கயிருக்கும் சிம்மாசனம் அமைப்பு பற்றிச் சொல்லுங்கள்?

நான் எது செய்தாலும், சமூகத்திற்கும், நாட்டு மக்களுக்கும் பெரிதும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்று சிந்திப்பேன். அப்படித் தொடங்கியது தான் இந்த சிம்மாசனம் எனும் மாநாடு இதன் தொடக்க விழா ஜனவரி 4 ம் தேதி நடைபெற உள்ளது. இதன் தொடக்க விழாவிற்கு சிறப்பு விருத்தினராய் தமிழக ஆளுநர் திரு பன்வாரிலால் புரோகித் அவர்கள் கலந்து கொள்கிறார்கள். அதே  போல் நிறைவு விழாவிற்கு தெலுங்கனா ஆளுநர் திருமதி. தமிழிசை சௌந்தராஜன் அவர்களும் கலந்து கொள்கிறார்கள். மேலும் இதில் சிறப்பு பேச்சாளர்கள், புகழ்பெற்ற மருத்துவர்கள், நடிகர் விவேக் போன்றவர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.  சமூக அக்கறையுள்ள விழா என்பதால் அனைவரும் குடும்ப விழாவாக சிறப்பாக செயல்படுத்த திட்டம் வைத்துள்ளோம். இதன் நோக்கமே மக்களுக்கு விழிப்புணர்வு கொடுக்க  வேண்டும் என்பது தான்.

கே: ரோட்டரி கிளப்பின் ஆளுநராகப் பணியாற்றி வரும், உங்களின் சேவைகள் பற்றி?

ரோட்டரி கிளப்பில் என்னை இணைத்துக் கொண்ட நாளிலிருந்து இன்று வரைபலசேவைத்திட்டங்கள்அனைவரும்ஒன்றிணைந்துசெய்துவருகிறோம்.

இதன் மூலம் ஆறு வகையான சேவைத் திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டுவருகிறது, அது.

எங்கும் அமைதி நிலவ வேண்டுதல் பணி.

பிணி நீக்கும் பணி

நீர் மேலாண்மை ப்பணி

தாய் சேய் நல மேன்மைப்பணி

கல்வியறிவு மேம்படும் பணி

பொருளாதாரம் மேம்படும் பணி

போன்ற பணிகள் தற்போது செய்து வருகிறோம். இதற்கு எங்களுக்கு பெரியளவில் ராயல் குழுமம் ஒத்துழைப்பு வழங்கி வருகிறது.

எனது மனைவியும் மருத்துவர் என்பதால், அவரும் மிகுந்த சமூக அக்கறையாளர். நாங்கள் ஆறு வகையான திட்டங்களை சேவைகளாக செய்து வருவதைப் போல அவர் தசவாதாரம் என்ற பெயரில் பத்து வகையான திட்டங்களை மாதம் ஒன்று என்ற கணக்கில் செய்து வருகிறார். இது மக்களிடையே பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு பிரியசகி என்று சேவைத்திட்டத்தினை அமல் படுத்தியிருக்கிறார்கள்.

கே: மருத்துவப் பணியின் சிறப்பாக நீங்கள் பார்ப்பது பற்றிச் சொல்லுங்கள்?

மருத்துவம் என்பது மகத்துவமும், மனித நேயமும் மிக்கது. இறைவனுக்கு இணையாப் போற்றப்படும் பணி.

நான் நவீன வளர்ச்சியில்லா காலக்கட்டத்திலேயே நுண்துளை அறுவைசிகிச்சையை  செய்திருக்கிறேன். நான் செய்யும் எதுவும் ஒரு தனி மனித சாதனையாக நான் என்று பார்த்ததில்லை, ஒரு மருத்துவமனை என்றால் நிறுவனர் முதல் இறுதிநிலை பணியாளர்கள் வரை இருப்பார்கள். இவர்களின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும்.

மருத்துவரை நம்பிவரும் நோயாளிகளின் முழுமையாக அறிந்து அவர்களுக்கு தேவையான மருத்துவமுறைகளை செய்து அவர்களை குணப்படுத்தி அனுப்பிவைக்க வேண்டும். ஒரு மருத்துவருக்கு அறுவை சிகிச்சை என்பது நூறில் ஒன்று. ஆனால் நோயாளிகளுக்கு அது வாழ்க்கை. அவர்களின் வாழ்க்கையை நம்மிடம் நம்பி ஒப்படைத்து விடுகிறார்கள். அவர்களின் நம்பிக்கையை காக்கும் விதமாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

ஒவ்வொரு உயிருக்கும் மருத்துவர்கள் பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும்.  நோயாளிகள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பொறுமையாகப் பதில் அளிக்க வேண்டும். என்ன பிரச்சனையோ அதை முழுமையாக அவர்களுக்கு புரியும் படி சொல்லுதல் வேண்டும்.

கே: வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்?

ஒரு சாதனை அனுபவத்தின் வெளிப்பாடுதான் சாதனையாக உருபெறுகிறது. இதுவரை ஐந்து வாழ்நாள் சாதனையாளருக்கான விருது பெற்றிருக்கிறேன்.

Lifetime Achievement Award-presented by Dr.MGR Medical University, Tamilnadu on Doctor’s Day July 1 2012.

Worldwide Achivevers Healthcare Excellence Award at New Delhi on 21 January 2015.

Lifetime Achievement Award-presented by The Association of Surgeons of india.

Lifetime Achievement Award-presented by All Economy survey Award council, New Delhi in 20125.

IMA Dr.M.GGARG Lifetime Achievement Award-presented by IMA on 28 December 2018 at Bengaluru.

ஆகிய சாதனையாளருக்கான விருது பெற்றிருக்கிறேன். அது தவிர பர்ல் 25 living legends in health care என்ற பட்டியியலில் இடம் பெற்றுள்ளேன்.

கே: உலக நாடுகள் பலவற்றிற்கு சென்றிருக்கிறீர்கள், அங்கிருக்கும் எல்லா சிகிச்சை முறைகளும் நம் நாட்டிற்கு வந்து விட்டதா?

நிச்சயம் எல்லாம் வந்துவிட்டது. நாம் நாட்டில் அதிநவீன மருத்துவ இயந்திரங்கள் வந்து விட்டது. குறிப்பாக என்னுடைய மகன் மற்றும் மகள் இருவரும் ரோபோடிக் மூலமாகத்தான் அறுவை சிகிச்சை செய்கிறார்கள்.

எல்லா அட்வான்ஸ் சிகிச்சை முறைகள், 3 டி அறுவை சிகிச்சைகள் போன்றவற்றை எங்கள் மருத்துவமனையில் செய்து வருகிறோம்.

கே: ஒரு மருத்துவராய் நீங்கள் இத்துறையில் சாதித்து விட்டதாக நினைக்கிறீர்களா?

சாதித்துவிட்டேன் என்று சொல்லிவிட முடியாது சாதித்துக் கொண்டே இருக்கிறேன். இன்னும் சாதிக்க நிறைய இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதிய புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. மருத்துவத் துறையில் எதற்கும் முற்றுப்புள்ளி வைத்து விட முடியாது.

ஆனால் ஒன்றை சொல்லிக் கொள்வேன். ஒருமுறை ஒருவரை தலையில் கட்டியுடன் உயிர் போகும் தருவாயில் என்னிடம் அழைத்து வந்தார்கள். வந்தவர்கள் எங்கெங்கே பல மருத்துவமனையில் பார்த்து விட்டோம் எங்கும் முடியாது என்று சொல்லி விட்டார்கள். கடைசியாக உங்களிடம் சென்று பார்க்கும் படி நண்பர் ஒருவர் கூறினார் என்று வந்தோம் நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் என்று என்னிடம் வந்தார்கள். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து அவரை குணம் படுத்தினேன். அதன் நன்றிகடனாக என்னுடைய புகைப்படத்தை பூஜை அறையில் வைத்து வணங்கி வருவதாக என்னிடம் சொன்னார்.

அது போல் ஒருமுறை எனக்கு ஒரு விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் நான் மருத்துவமனையில் படுத்துவிட்டேன். இதை கேள்விப்பட்டவர்கள் கோயில், சர்ச், மசூதி ஆகிய தெய்வாலயங்களில் எனக்காக சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதையெல்லாம் பார்க்கும் பொழுது ஒரு மருத்துவராய் சாதித்து விட்டதாகவே கருதுகிறேன்.

கே: குடும்பம் குறித்துச் சொல்லுங்கள்?

என்னுடைய குடும்பம் ஒருமருத்துவ குடும்பம் மனைவி திருமதி. ஷகிலா ஜமீர் மகப்பேறு மருத்துவராக இருக்கிறார். தான் தேர்ந்தெடுத்தத் துறையில் பல சாதனைகள் புரிந்து வருபவர். என்னை போலவே மிகுந்த சேவை மனப்பான்மை குணம் கொண்டவர். சிறந்த நிர்வாகி, இல்லறத்தை மிகச்சிறப்பாக வழிநடத்தக்கூடியவர். எனது மகன் Dr. Shakir Tabrez Gold medal in M.S.,(Gen.Surgery) M.ch., in Urology  துறையில் பணியாற்றி வருகிறார். அதிநவீன மருத்துவத்தை முறையாகக் கற்று இன்று தலைசிறந்த மருத்துவராக இருக்கிறார். மகள். Dr. Rubina Shanawz., M.S.,(Obs,&Gyn) Won 3 Gold medals in M.S., (O&G). இவரும் மருத்துவராகப் பணியாற்றி வருகிறார்.

கே: வளரும் இளம் மருத்துவர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?

இளம் மருத்துவர்களே எதையும் நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். சவால் நிறைந்த உலகத்தில் நீங்கள் எவ்வாறு சரித்திரத்தில் இடம் பெற போகிறீர்கள் எதைப் பற்றி யோசியுங்கள்.

செய்யும் பணி எவ்வாறு மகத்துவம் மிக்கது என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்குள் கணிவும், மற்றவர்களிடம் பணிவும், உடலில் எந்தப் பிரச்சனையாக இருந்தாலும் அதை எதிர்கொள்ளும் துணிவும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

போட்டி நிறைந்த உலகில் உங்களின் முகம் தனித்துவமாக தெரிந்துகொள்ள வேண்டும் என்றால் செய்யும் பணியை ஈடுபாட்டுடனும், பற்றுதலுடனும் செய்யுங்கள். நீங்களும் சாதித்து விடுவீர்கள்.

கே: உங்களின் எதிர்காலத்திட்டம் பற்றி?

இந்த துறையிலே இன்னும் புதுமையாக செய்தல்வேண்டும். 

புதிய புதிய நவீன இயந்திரங்கள்  கொண்டு வர வேண்டும்.

இன்னும் சேவையை அதிகப்படுத்தவேண்டும்.

திருச்சியிலே வயிற்று சம்மந்தமான அத்துனை சிகிச்சைகளும் செய்யபட வேண்டும்.

வரும் முன் காப்போம்

நோயில்லா வாழ்வை உருவாக்குவோம்.

நேர்காணல்: விக்ரன் ஜெயராமன்[/hide]

இந்த இதழை மேலும்

எண்ணங்களை வலிமையாக்கு எதிர்காலத்தை வளமாக்கு

Ln. Vn. R. ரவிச்சந்தரன் MJF

International Senior Vice President (VCI)

நிறுவனர் , ராம் வீடியோ பஜார்,

மதுரை, சென்னை

மதுரை மண்ணில் பிறந்த மனிதநேயமிக்க விருதாளர்

பெண் விடுதலையைத் திரையில் புகுத்தியவர்

செய்யும் பணிகள் எல்லாம் சேவையில் முடிப்பவர்

மாணவர்களின் நலனுக்காக குறுந்தகடை உருவாக்கியவர்

பல தலைவர்களின் பாராட்டைப் பெற்றவர்

குணமான குடும்பத்தலைவன்; கண்டிபில்லாத பாசத்தந்தை

பல பொறுப்புகள் இவரை அலங்கரித்தும்

சற்றும் அகம்பாவம் இல்லாத அன்பாளர்

பழகுவதற்கு பண்பாளர்….”

ராம் வீடியோ பஜார் நிறுவனத்தின் தலைவர் Ln. Vn.R.ரவிச்சந்தரன் MJF அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு

கே: உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பெருமை மிக்க மதுரையில் பிறந்தேன். பெற்றோர் திரு. ராமநாதன், திருமதி. சம்பூர்ணலட்சுமி. என்னுடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். நான் தான் வீட்டின் இளைய மகன். என்னுடைய தந்தை மதுரையிலேயே சொந்தமாக ஜவுளித் தொழில் செய்து வந்தார். எங்களைப் படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்தார். இதனால் நான் மதுரையில் உள்ள பள்ளியில் தான் படித்தேன். என் பெற்றோர் எங்களை கண்டிப்புடன் வளர்க்காமல் கண்ணியமாக வளர்த்தார்கள். இதனால் சின்ன வயதிலேயே ஒழுக்கம் குறித்து நன்றாகத் தெரிந்து கொண்டேன்.

எனக்கு சின்ன வயதிலிருந்தே மீடியா துறையின் மீது ஒரு பிடிப்பு இருந்தது. இதனால் இதைப் பற்றி படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. சென்னைக்கு சென்று கல்லூரியில் சேர்ந்தேன். அங்கு மீடியா சார்ந்த நுணுக்கங்களை படிக்கின்ற காலத்திலேயே கற்றுக் கொண்டேன். கற்கும் போது நான் நினைத்தது ஒன்று எதைப் பார்த்தாலும் அதை வித்தியாசமாகப் பார்க்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன்.

கே: மீடியா துறையின் மீது ஆர்வம் எப்படி வந்தது?

படிக்கின்றகாலத்தில்பதியும்ஆசைதான்எதிர்காலவாழ்வின்அச்சாணியாகஅமையும்என்பார்கள். எனக்கும் அப்படி வந்தது தான் இந்த மீடியா துறை. படிக்கும் போது நிறைய நாடகங்கள் இயக்கியிருக்கிறேன். அவ்வாறு இயக்கும் போது என்னை அறியாமல் நாடகத்தின் சிற்சில மாற்றங்களை செய்து முடிப்பேன். அப்போது அது பெரும் கைத்தட்டல்களும் பாராட்டுகளும் கிடைக்கும்.

தற்போது இருப்பது போல் அப்போது மீடியா துறை சார்ந்த படிப்புகள் எதுவும் இல்லை. சென்னையில் அடையார் பிலிம் இன்ஸ்டியூட் ( அரசு திரைப்பட கல்லூரி) இருந்தது. எனக்கு பிடித்தமான இயக்குநர் துறை இருந்தது. ஆண்டுக்கு இத்துறையில் பத்துப் பேர் மட்டுமே படிக்க அனுமதி இருக்கும். அந்த ஆண்டு நானும் விண்ணப்பித்திருந்தேன். ஆனால் எனக்கு சீட் கிடைக்கவில்லை. வீட்டில் பெற்றோர் எவ்வளவோ சொன்னார்கள். ஒரு ஆண்டு வீணாகிறது என்று. ஆனால் என் மனம் கேட்கவில்லை. பிடிக்காத ஒரு படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படிப்பதை விட பிடித்த படிப்பிற்காக ஒரு ஆண்டு காலம் காத்திருப்பது சுவை என்று அறிந்திருந்தேன். அந்த காலக்கட்டத்தில் அப்போது ஒரு டிப்ளமோ துறையை படித்து முடித்தேன்.

அடுத்தஆண்டும்விண்ணப்பித்தேன். அப்போதும் சில காரணங்களால் எனக்கு சீட் கிடைக்கவில்லை. பிறகு சென்னையிலேயே பி.காம் பட்டப்படிப்பை படித்து முடித்தேன். அப்போது தான் சன் டிவி தொடக்கப்பட்டது. ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம் மட்டுமே ஒளிப்பரப்பு செய்யபட்டது. அதில் விளம்பரம் பிடிக்க தொடக்கினேன்.

கே: நீங்கள் இயக்கிய முதல் நிகழ்ச்சி எது? அது பற்றி?

விஜய் தொலைக்காட்சியில் உழைத்தார்கள் உயர்ந்தார்கள் என்று நிகழ்ச்சிதான் நான் செய்தமுதல் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு நான் தமிழநாடு முழுவதும் பயணம் செய்து. ஒவ்வொரு மாவட்டத்திலும் சாதித்த பல சாதனையாளர்களை இணங்கண்டு அவர்களின் சாதனைப் பக்கங்களை படம் பிடித்துக் காட்டினோம். அதில் ப. சிதம்பரம், ராம் கோ சுப்ரமணி ராஜா, நக்கீரன் கோபால், பி.டி.ஆர். பழனிவேல் ராஜா போன்றோர்களின் அறிமுகமும், அவர்கள் தங்கள் துறையில் வெற்றி பெற்ற அனுபவமும் எங்களுக்கு கிடைத்தது. அன்றைய காலத்தில் இந்நிகழ்ச்சி பெரும் வரவேற்பு பெற்றது. ஞாயிறு தோறும் ஒளிபரப்பப்பட்ட இந்நிகழ்சி பலர் கவனத்தை ஈர்த்தது.

தமிழகம் தோறும் சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து ஒளிப்பரப் பட்டதால் எனக்கும் நல்லொரு அடையாளமும், முகவரியும் கிடைத்தது.

இந்த நிகழ்ச்சியின் வெற்றியைப் பறைச்சாற்றும் நோக்கில் மதுரையில் ஒரு விழா ஏற்பாடு செய்தோம். அந்த விழாவில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சாதனையாளர்கள் அனைவரும் ஒன்றாக வந்தார்கள்.  பல துறை சாதனையாளர்கள் ஒன்றாக வந்தது. அன்று பரவலாகப் பேசப்பட்டது.

கே: அடுத்தடுத்து உங்கள் நிகழ்ச்சிகளின் படிநிலைகள்  எவ்வாறு அமைந்தது?

பெண்கள் நாம் நாட்டின் கண்கள் என்பது நாம் அறிந்த ஒன்று தான். ஆனால் எல்லா இடத்திலும் பெண்கள் சமமாக நடத்தப்படுகிறார்களா என்று பார்த்தால், அதற்கு இல்லை என்று தான் பதில் வரும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் பெண்களுக்கென்று ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட வேண்டும் என்று நினைத்தேன். அப்போது பெண்கள் பிரச்சனைகள், அநீதிகள் போன்றவற்றை வெளிக் கொண்டு வர வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு திறமைகள் வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள் மட்டும் நடத்திக் காட்டினேன்.

புதுமைப் பெண்கள் என்ற தலைப்பில் திரைப்பட நடிகை ரேவதி அவர்கள் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றை செய்தேன். இது பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் நிகழ்ச்சி. இதற்கு தமிழ்நாடு மட்டுமின்றி அந்தமான், சிங்கப்பூர், மலேசியா ஆகிய நாடுகளுக்குச் சென்று நிகழ்ச்சி செய்யப்பட்டது. இந்த நிகழச்சியின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் பொறுப்பை நான் பார்த்துக் கொண்டேன்.

பெண்கள் சமுதாயத்தின்வரமா? தவமா? சாபமா? என்ற தலைப்பில் ஒவ்வொரு தலைப்பிற்கும் ஒரு திறமையான நடுவரை வரவழைத்து இந்நிகழ்ச்சி செய்தோம். தொடர்ந்து 250 வாரம் வந்த இந்நிகழ்ச்சியில் ஒரு முறை கூட பெண்கள் அழுவதைப் போல காட்சிப்படுத்தவில்லை. பெண்கள் வெறும் அழுவதற்காக படைக்கபட்டவர்கள் அல்ல, ஆள்வதற்காகப் படைக்கப்பட்டவர்கள் என்பதை கருத்தில் கொண்டு ஓளிபரப்பு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியைப் பார்த்து கலைஞர் தொலைக்காட்சியில் சிநேகிதி என்ற நிகழ்ச்சி செய்வதற்காக என்னை அழைத்தார்கள்.  இதுவும் 750 தொடராக வெளிவந்தது. பெண்கள் தங்களுக்குள் சில படிநிலைகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அதில் அழகு, ஆரோக்கியம், திறமை, தன்னம்பிக்கை போன்றவை. இவற்றை மையமாகக் கொண்டு ஒளிபரப்பும் போது அந்த நிகழ்ச்சி வெற்றி பெறுகிறது.  அப்படி தொடங்கியது தான் ஜெயந்தி பாலகிருஷ்ணன் அவர்கள் பேசும் மனதில் உறுதி வேண்டும் என்ற நிகழ்ச்சி. இவர் பேசுவது பெண்களிடையே பெரும் வரவேற்பு பெற்றது. இப்படி பெண்கள் சம்மந்தமான நிறைய நிகழச்சிகள் செய்திருக்கிறேன்.

கே: பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்காக செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் பற்றி?

இந்தியாவின் எதிர்காலம் பள்ளியில் தான் தீர்மானிக்கப்படுகிறது. அதனால் தான் இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் இருக்கிறது என்று பெரிய அறிஞர்கள் சொல்கிறார்கள். வெறுங்கை என்பது மூடத்தனம்,விரல்கள் பத்தும் மூலதனம் என்பார்கள். இதனால் பள்ளி மாணவர்களுக்கு ஏதேனும் ஒரு நிகழ்ச்சி தொடங்கப்பட வேண்டும், அவர்களுக்குள் இருக்கும் சாதனைகளை வெளிக்கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில் விண்னைத் தொடு என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி செய்தோம்.

இந்த நிகழச்சியில் நேரடியாக ஒரு பள்ளியைத் தேர்ந்தெடுத்து அந்தபள்ளியில் உள்ள மாணவர்களைத் தேர்ந்தெடுத்து. அவர்களின் தனிப்பட்ட சாதனைகளை போட்டியின் வாயிலாக நடத்தி அதில் வெற்றி பெறும் சாதனை மாணவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இதன் மூலம் நிறைய சாதனை மாணவர்களை காண முடிந்தது.

இந்தநிகழ்ச்சி  350 தொடர்களாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. இது கின்னஸ் மற்றும் லிம்கா புத்தகத்திலிலும் இடம் பிடித்தது. என்னுடைய ஒரே கனவு மீடியாவின் மூலம் நல்ல கருத்துக்களை கொடுக்க வேண்டும் என்பது தான்.

தற்போது அறம் செய்வோம் என்ற தலைப்பில் வேந்தர் தொலைகாட்சியில் கல்லூரி மாணவர்களுக்கான நிகழ்ச்சிகள் செய்யப்பட்டுவருகிறது. என்னுடைய எல்லா நிகழ்வுகளும் இளைய சமுதாயத்தின் நலனுக்கானதாக இருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய குறிக்கோள்.

ஒவ்வொரு வருடமும் பள்ளி  மாணவ, மாணவியர்களுக்காக என் நண்பருடன் இணைந்து கோவையில் 80,000 த்திற்கும் அதிமான மாணவர்கள் கலந்து கொண்டு கேட்வே சாதனை நிகழ்ச்சி நடத்திக் கொண்டு இருக்கிறோம்.

கே: இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் சமுதாயம் மாற்றம் அடைந்துள்ளதாக நினைக்கிறீர்களா?

நிச்சயம் அடைந்திருக்கிறது. அதுவும் சாதாரணமாக அடையவில்லை. சாதனை மாற்றமாக அடைந்திருக்கிறது.  நான் செய்யும் நிகழ்ச்சிகள் அனைத்தும் குடும்பத்துடன் பார்க்கும் நிகழ்ச்சிகள் தான்.

படிக்கும் பிள்ளைகள் தொலைகாட்சியைப் பார்க்ககூடாது என்று விரும்பும் பெற்றோர்கள் கூட நாங்கள் தயாரிக்கும் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் படி தங்கள் பிள்ளைகளிடம் சொல்கிறார்கள். அதற்கு காரணம் இந்நிகழ்ச்சிகளின் வாயிலாக நாங்கள் தரும் விழிப்புணர்வு தான்.

வெறும் நகைச்சுவைக்காகவும், பொழுதுபோக்குகாகவும் நாங்கள் எதுவும் செய்வதில்லை. பெண்கள் சம்மந்தமான நிகழ்ச்சிகள் என்றால் அது அவர்களுக்குதன்னம்பிக்கை கொடுப்பதாக இருக்கும். அதைப் பார்த்து அவர்கள் சுயமாகச் சிந்தித்து சுயமாக முடிவெடுக்கும் அளவிற்கு உயர்ந்து விடுவார்கள்.[hide]

அதே பள்ளி மாணவர்களுக்கு செய்யும் பொழுது தங்களுக்குள் மறைந்திருக்கும் திறமையை வெளிகொண்டுவருவதால், அதைப் பார்க்கும் மாணவர்கள் தங்களின் திறமையை என்னவென்று அறிந்து கொள்ள முடிகிறது. நாங்கள் நடத்திய மனதில் உறுதி வேண்டும் என்ற நிகழ்ச்சியை இணையதள வழியாக ஒரு லட்சம் பேர் பார்க்கிறார்கள். அப்படி இருக்கும் போது இதை மக்கள் விரும்புகிறார்கள் என்று தான் புரிந்து கொள்ள முடிகிறது. ராம் வீடியோ பஜார் என்ற எங்கள் நிறுவனத்தின் மூலம் 2000 எபிசோடுகள் நடத்திக்காட்டிருக்கிறோம்.

கே: நிகழ்ச்சிகளுக்கான தலைப்பை நீங்கள் எவ்வாறு தேர்வு செய்கிறீர்கள்?

நிகழ்ச்சியோ, திரைப்படமோ, புத்தகமோ எதுவாக இருந்தாலும் தலைப்பு என்பது மிகவும் முக்கியமானது. தலைப்பு வித்தியாசமாக இருந்தால் அதை ஆர்வமாக பார்க்க படிக்க நினைப்பார்கள்.

அதுபோல தான் நான் என்னுடைய நிகழ்ச்சியின் தலைப்பிற்கு பெரிதும் முக்கியத்துவம் கொடுப்பேன். உதாரணமாக சிநேகிதி என்று தலைப்பு வைத்ததன் நோக்கம் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் பெண்கள், அதில் சொல்பவர்களை தங்கள் தோழியாக நினைத்துக் கொள்ள வேண்டும், தோழியிடம் எதையும் மறைக்காமல் சொல்லி விடுவார்கள் என்பதால் தான் இந்த தலைப்பை வைத்தேன்.

புதுமை பெண்கள் என்ற தலைப்பு பெண்களின் பிரச்சனைகள் எவ்வாறு இருக்கிறது, அதை எவ்வாறு எதிர்கொண்டு சாதிக்கிறார்கள் என்பதை கொடுக்கும் விதமாக இத்தலைப்பு இருக்கிறது. இப்படித்தான் மக்களோடு மக்களாக இருந்து தான் தலைப்பைத் தேர்வு செய்கிறேன்.

கே: நீங்கள் கடந்த வந்த இந்த இருபது ஆண்டுகளில் மீடியா துறையின் வளர்ச்சி எவ்வாறு அடைந்திருக்கிறது.

நாளும் மாறிவரும் உலக மாற்றத்தின் காரணமாக எல்லாதுறைகளும் நன்குவளர்ந்துவருகிறது. அதிலும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் மீடியா துறையின் வளர்ச்சி பெரும் அளவில் மாறியிருக்கிறது. அரை மணி நேரம் மட்டுமே ஒளிபரப்பபட்ட செய்திகள்  இன்று 24 மணி நேரம் என்று ஆகிவிட்டது. நொடிபொழுது நடக்கும் நிகழ்வுகள் கூட அடுத்த வினாடியே நமது கண் முன்னே கொடுத்து விடுகிறார்கள். எதற்கும் காத்திருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

ஆரம்பத்தில் பொதிகை என்ற தொலைக்காட்சி நிறுவனம் மட்டுமே இருந்தது. அதைப் பார்க்க மக்கள் பெரிய அளவில் இருந்தார்கள். ஆனால் இன்று சேனல்கள் அதிகளவில் மாறிவிட்டது.தொலைக்காட்சி இல்லாத வீடுகளே இல்லை. மக்களோடு மக்களாகி விட்டது. எதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலும் நமக்கு தெரிவுப்படுத்துகிறது.

உள்ளூர் செய்திகள் முதல் உலகளாவிய செய்திகள் வரை அமர்ந்த இடத்திலிருந்தே நம்மால் பார்த்துக் கொள்ள முடிகிறது என்றால் அதன் வளர்ச்சியை நான் சொல்ல தேவையில்லை.

சமுதாயத்தின் நான்கு தூண்களில் ஒன்று ஊடகத்துறை. இதன் வளர்ச்சி நாளும் அதிகரித்து வருவதால் மீடியா துறை சார்ந்த படிப்புகளை படிக்க நிறைய பேர் ஆர்வம் செலுத்தி வருகிறார்கள். குறிப்பாகப் பெண்கள். இதை நாம் போற்றி பாராட்ட தான் வேண்டும்.

நல்ல வழியாக ஊடகம் செய்தால் மேலும் இதன் வளர்ச்சி இன்னும் பல மடங்கு பெருகும் என்பதில் எவ்வித ஐய்யமுமில்லை.

கே: மீடியா துறையில் உள்ள சவால்கள் பற்றி சொல்லுங்கள்?

மீடியா துறையில் பல சவால்கள் இருக்கிறது. அந்த சவால்களை எதிர்கொள்ள வேண்டும் கொண்ட நோக்கத்தில் உறுதியாக இருக்க வேண்டும். அந்த சவால்களை ஆரோக்கியமான சவால்களாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒருசெயலை செய்தால் அதன் ஆழத்தைப் பார்க்காமல் வெளியேவந்துவிடக்கூடாது. ஏதேனும் ஒரு புதுமைகளை கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும். நிறைய யோசிக்க வேண்டும். பார்வையாளர்களின் தேவைகளை அறிந்து, அதற்கு ஏற்றார் போல் மாற்றங்களை கொடுக்க வேண்டும்.

மீடியாதுறை இன்று அசைக்க முடியாத சக்தியாக உருபெற்றுயிருக்கிறது. அதற்கு காரணம் அதில் வரும் உண்மைத் தன்மைகளை மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு சரியாக, உண்மையாக நிகழ்ச்சிகளை கொடுக்கும்  பொழுது அவர்கள் நம்மை ஏற்றுக்கொள்வார்கள். சவால்களையும் நாம் சமாளித்து வெற்றி பெற்றுக் கொள்ள முடியும்.

கே: நீங்கள் செய்த பிற நிகழ்வுகள் (Events) பற்றிச் சொல்லுங்கள்?

மதுரையில் பிரபலமான மருத்துவமனையில் 10000 உதடுபிளவுப்பட்ட குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை நடுத்துதல் நிகழ்ச்சி நடந்தினோம். அதில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் கலந்து கொண்டார். கலந்து கொண்டு அவர் பேசி முடித்தவுடன், அடுத்த நான் பேசு செல்லும் பொழுது அவர் என்னை அழைத்து நீங்கள் பேசும் பொழுது இதை பேசுங்கள் என்று எனக்கு சில வரிகளை எழுதிக் கொடுத்தார். அது அந்த நிகழ்வின் எனக்கு சிறப்பம்சமாக இருந்தது.

கோவையில் நடைபெற்ற Vasavi club International Conference icon நடத்தது. இதற்கு சேர்மேனாக இருந்து மிக சிறப்பாக நடத்திக்  கொடுத்தேன்.

பனிரெண்டாம் வகுப்பு முடித்த அரசு மற்றும் கிராமபுற மாணவர்கள் அடுத்த என்ன படிக்க வேண்டும், அவ்வாறு படிப்பதன் மூலம் அவர்களின் எதிர்கால வாழ்விற்கு எவ்வாறு சிறப்பாக அமையும், உதவித்தொகை, லோன் என எல்லா வாய்ப்புகள் பற்றியும் கூறும் அளவிற்கு ஒரு குறுந்தகடு ஒன்றை உருவாக்கினேன். அது மாணவர்வர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. இந்த குறுந்தகடைப் பற்றி அப்போது ஆளுநராக இருந்த திரு. ரோசய்யா அவர்களிடம் சொன்னேன். அதனை அவர் உடனே ஏற்று ஆளுநர் மாளிகையிலேயே இதன் வெளியிட்டு விழா நடத்துமாறு ஆளுநர் என்னிடம் சொன்னார். அதன் படி வெளியிட்டு இரண்டு இலட்சம் டிவிடி கள் தமிழ்நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளுக்கு இலவசமாகக் கொடுக்கப்பட்டது.

லைன்ஸ் கிளப் மற்றும் அரிமா சங்கத்தில் சுமார் 18  ஆண்டு காலம் பல பொறுப்புகளில் இருந்திருக்கிறேன். வாசவி கிளப் இண்டர்நேசனல் ஆளுநராகஇருந்திருக்கிறேன். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் என்ற ஊரில் வாசுகி என்ற பெண் பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்திருந்தார். மருத்துவத்தில் இடம் கிடைத்தும் படிக்க முடியாத நிலையில் இருந்தார். அவரின் நிலையை அறிந்து அவருக்கு உதவி செய்யும் வகையில் மெடிக்கல் கல்லூரியில் ஐந்து ஆண்டு காலம் படிக்க வைத்தோம். இன்று மருத்துவராகப் பணியறாற்றி வருகிறார். ஒரு முறை பாராட்டு விழாவில் என்னை இவர்கள் படிக்க வைத்தார்கள். நான் இன்று ஒரு மருத்துவராக இருக்கிறேன். நாளை நான் நான்கு பேரை படிக்க வைப்பேன் என்று கூறினார். இது அனைவரின் மனதையும் ஈர்த்தது.

இது போன்ற நிறைய நிகழ்வுகள் செய்து வருகிறோம். சென்னையில் திருவையாறு, மதுரையில் திருவையாறு, இசை மற்றும் மருத்துவம், நலிந்த கலை மீட்பு போன்ற தலைப்புகளில் நிறைய செய்து வருகிறோம்.

அரிமா சங்கத்தின் மூலம் சன் பவுண்டேசன் அமைப்பிற்கு நாங்கள் விருது கொடுத்திருப்பதில் பெருமை படுகிறோம்.

கே: தற்போது நீங்கள் வகித்து வரும் பொறுப்புகள் பற்றி?

  • Lions Club International Advisior
  • Vasavi Cun International Senior Vice President
  • Advertisment  Business Club Advicer.
  • Narayanapuram Association Secretary
  • T.v & Media Producter Council E.C Member.

கே : பெற்ற விருதுகள் பற்றி?

  • Super Best Governer -2013( VCI)
  • Best Service Award-Lions Club multible 324
  • மனித நேய விருதுசினிமா கல்சுரல் அகாடெமி
  • The Man of Success Chennai Council
  • Best motivater போன்ற இன்ன பிற விருதுகள் பெற்றிருக்கிறேன்.

கே: இத்துறையில் வளர்ந்து வரும் இளைஞர்களுக்கு நீங்கள் கூறுவது?

எதையும் உண்மையாகவும், உறுதியாகவும், மன வலிமையாகவும் செய்யுங்கள். எது தேவை என்பதை அறிந்து அதற்கு ஏற்றார் போல் உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

இதுசாதிப்புகளம், போட்டி நிறைந்தாகத்தான் இருக்கும். இருவர் ஓடி இரண்டாம் இடம் பிடிப்பது சாதனை அல்ல, ஆயிரம் பேர் ஓடி அதில் முதலாவது வருவது தான் சாதனை அதைபுரிந்து கொள்ளுங்கள்.

புதுமைகளைத் தேடி ஓடுங்கள். உங்கள் துறை சார்ந்த அத்துனை நுணுக்கங்களையும் கற்றுக் கொள்ளுங்கள்.

ஒரு சிறுவழி தான் என்று விட்டு விடாதீர்கள். அதிலும் பயணம் செய்து பாருங்கள். ஏதேனும் ஒரு பயன் கிடைக்கும்.

கே: குடும்பம் பற்றி?

என்னுடைய  தந்தை தான் என்னுடைய ரோல் மாடல் என்று சொல்வேன். என்னுடைய மனைவி திருமதி. சித்ரா இல்லத்தரசி. என்னுடைய வெற்றியின் வேராக இருந்து செயல்படுகிறார். வேலை நிமிர்த்ததின் காரணமாக குடும்பத்தை கவனிக்காத முடியாமல் போகலாம் அந்த நேரத்திலும் கூட என்னுடைய வளர்ச்சியை கருத்தில் கொண்டு அத்துனை பணிசுமைகளையும் சுகமாக சுமந்து வருபவர். அடுத்து என் மகன் ராம் விக்னேஷ், மருமகள் சித்ருபா, ஆசைப்பேரன் ஹர்சன். என் மகனும் என்னுடன் சேர்ந்து இத்துறையில் பணியாற்றி வருகிறார். கடுமையான உழைப்பாளி. எதையும் புதுமையாக படைக்க வேண்டும் என்ற தொலைநோக்குப் பார்வை கொண்டவர்.

என் பாசமிகு மகள் ர. நிவேதா. மாப்பிளை வெங்கடேஷ் பிரசாத் வுடன் திருமணம் ஆகி மிகச்சிறப்பாகவும், மகிழ்ச்சியாகவும் கோவையில் வசித்து வருகிறார்கள்.

எனது மகள் ர. நிவேதா. பேரன் ஹர்சன் என்னுடைய வாழ்வின் மிகப்பெரிய பொக்கிஷங்களாக இருக்கிறார்கள்.

கே: எதிர்காலத்திட்டம்?

தினந்தினமும் செய்யும் பணியில் புதுமைகள் புகுத்த வேண்டும்.

சமூக அக்கரைசம் மந்தமான நிகழ்ச்சிகளை தொடர்ந்து கொடுத்து கொண்டே இருக்க வேண்டும்.

டிஜிட்டல் மிடியாவில் இன்னும் கூடுதல் அக்கரை செலுத்தி மக்களுக்கு நல்லதொரு விழிப்புணர்வு கொடுக்க வேண்டும்.

என்னை ஒரு கூட்டம் பார்த்துக்கொண்டு இருக்கிறது, அவர்களுக்கு நல்ல விதையைக் கொடுக்க வேண்டும். இது தான் என்னுடைய திட்டம்.

தற்போது சென்னையில் உள்ள நிறுவனத்தைப் போல வெளி மாநிலங்களிலும் தொடக்க திட்டம் வைத்திருக்கிறோம். அதை மேலும் வளர்ச்சி நிலையைக் கொண்டு செல்ல வேண்டும்.

உண்மையாய் உழையுங்கள்

உறுதியாய் வெல்லலாம்.[/hide]

இந்த இதழை மேலும்

நம்பிக்கையை மகிழ்ச்சியாக்கு..! நாளை உலகை உனதாக்கு…!

Dr.N. நாகரத்னம் M.B.B.S.,M.D.,(O.G).,FRM.,DRM(GERMANY)

இயக்குநர், ரத்னா மருத்துவமனை

(பெண்கள் மகப்பேறு மற்றும்

குழந்தையின்மைக்கான சிறப்பு மருத்துவமனை)

செக்காலை, காரைக்குடி.

இலட்சியங்கள் கனவுகள் மலரட்டும், அவை

செய்யும் பணியில் மணக்கட்டும்

புதிய முயற்சிகள் தொடரட்டும், அவை

புத்துணர்வாய் நெஞ்சில் துளிர்க்கட்டும்

என்னும் தன்னம்பிக்கை வரிகளை தன்னகத்தே கொண்டு தான் கொண்ட மருத்துவத்துறையில் சாதித்து வரும் சாதனைப் பெண்மணி.

தான் பிறந்த மண்ணிற்குப் பெருமை சேர்க்கும் விதமாக கற்ற மருத்துவத்தை சொந்த ஊரிலே செய்ய வேண்டும் என்று தன்னால் முடிந்த மருத்துவ சேவையை செய்து வருபவர்.

குழந்தையில்லா தம்பதியினர் யாரும் இருந்திட கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, பல மருத்துவ புதுமைகளைப் புகுத்தி வரும் மருத்துவர்.

மருத்துவமனை தொடங்கி குறுகிய ஆண்டுகளே ஆனாலும் தான் தொடும் அனைத்தையும் சாதனைகளாகவே முடிக்கும் குணம் கொண்ட ரத்னா மருத்துவமனையின் இயக்குநர் திருமதி. Dr. N. நாகரத்னம் அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு.

கே: உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

செட்டிநாட்டுப் புகழ் என்று அழைக்கப்படும் காரைக்குடியில் தான் பிறந்தேன். என்னுடைய தந்தை டாக்டர் நாகப்பன், தாயார் திருமதி. தெய்வானை. எனக்கு ஒரு சகோதரி. எனக்கு சிறு வயதிலிருந்தே மருத்துவராக வேண்டும் என்பது தான். அது தான் என்னுடைய ஆசையும் கனவாகவும் இருந்தது. அதற்கு காரணம் என்னுடைய தந்தை தான்.  என் தந்தை ஒரு கண் மருத்துவர். எங்கள் பகுதியில் மிகவும் பிரபலமானவர். அனைவரிடத்திலும் அன்பாகப் பழகும் குணம் கொண்டவர். தன்னிடம் வருபவர்களை ஒரு நோயாளியாய் பார்க்க மாட்டார், ஒரு உறவினர் போல் அனுசரணையோடு பழகுவார். இதையெல்லாம் சிறு வயதிலிருந்து பார்த்து வளர்ந்ததால் நாமும் ஒரு மருத்துவராக வேண்டும் என்று நினைத்தேன். என்னுடைய பள்ளிக் கல்வி என்று பார்த்தால் மதுரையில் உள்ள மகாத்மா மெட்ரிக் பள்ளி. தொடக்கக் கல்வியிலிருந்து பத்தாம் வகுப்பு வரை படித்தேன். பத்தாம் வகுப்பு முடித்தவுடன் காரைக்குடியிலுள்ள முத்தையா அழகப்பா பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பை முடித்தேன்.

எம்.பி.பி.எஸ் படிப்பை கோவையில் புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரியான பி.எஸ்.ஜி மெடிக்கல் கல்லூரியிலும், M.D(O.G) யை சிதம்பரத்திலுள்ள ராஜா முத்தையா ஆய்வு மையத்திலும் படித்தேன்.

கே: மகப்பேறு மருத்துவராக வர வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குள் எப்படி வந்தது?

திருமணம் ஆன எல்லா தம்பதியனர்களும் நினைப்பது நமக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பது தான். அவ்வாறு குழந்தையில்லாத போது அது குடும்பம் மற்றும் சமுதாய பிரச்சனையாகிவிடுகிறது. ஒரு பெண் எப்போது முழுமை அடைகிறார் என்றால் அது அவரின் தாய்மையின் போது தான். தாய்மை உணர்வைத் தாண்டி இவ்வுலகில் பரிசுத்தமான உறவு எதுவும் இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு தாய்மைக்கு பெருமை உண்டு.

ஒவ்வொரு முறையும் குழந்தைப்பிறக்கும் பொழுதும் அந்த பெண் மறுஜென்மம் அடைகிறார். தாய் மற்றும் குழந்தைக்கு நடுவே நாமும் ஒரு பகுதியாக இருக்கிறோம் என்பதை எண்ணும் போது மனதிற்கு மிகவும் மகிழச்சியாக இருக்கும். அந்தக்குடும்பம் மற்றும் அந்தக் குழந்தை காலம் முழுவதும் சொல்லிக் கொள்ளும் இந்த மருத்துவமனையில் தான் பிறந்தேன் என்று இந்த மருத்துவர் தான் நம் பிறக்கும் போது உடன் இருந்தார்கள் என்று சொல்லிக் கொள்ளும். இது போன்ற இன்னும் எத்தனையோ சிறப்புகள் மகப்பேறு மருத்துவத்தில் இருக்கிறது.

கே: ரத்னா மருத்துவமனை உதயமானது பற்றிச் சொல்லுங்கள்?

நான் படித்த முடித்து சில ஆண்டுகள் மருத்துவப் பயிற்சி மேற்கொண்டிருந்தேன். அப்போது என்னைப் பார்க்க வரும் நிறைய பெண்களின் ஏமாற்றமான எதிர்பார்ப்பு திருமணம் ஆகி இத்தனை ஆண்டுகள் ஆகிறது எங்களுக்கு குழந்தையில்லை என்பது தான். அப்போது  தான்  என் மனதில் உதயமாயின, நாம் ஏன் முழுவதுமாக ஒரு மகப்பேறு சம்மந்தமான மருத்துவம் கொடுக்ககூடாது என்று. இதனால் இதை மென்மேலும் தெரிந்து கொள்ள நினைத்தேன். இதனால் இந்திய முழுவதும்  இத்துறை சார்ந்த தேடுதலை தீவிர படுத்தினேன். பல பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டேன்.

கேரளாவில் Fellowship in Reproduction என்னும் துறையை ஒரு ஆண்டு படித்தேன். மேலும் ஜெர்மனியில் கீல் யுனிவர்சிட்டியில் Diploma in Reproductive medicine முடித்தேன். இங்கெல்லாம் படித்த அனுபவம் என்னை மிகவும் வலிமைபடுத்தியது. எதுவும் சாதாரணமாக தொடங்குவதில் எனக்கு ஒரு போதும் உடன்பாடு இருக்காது. ஒன்றை தொடங்குகிறோம் என்றால் அது சார்ந்த அத்துனை தேவைகளையும் நம்மால் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்பதால் அனைத்து உபகரணங்களுடன் தொடங்கியது தான் இந்த ரத்னா மருத்துவனை.

கே: குழந்தையில்லா தம்பதியினருக்கு டெஸ்ட்டியூப் பேபி முறை இறுதி தீர்வா?

தற்போது சூழலில் மக்களின் மனநிலை எப்படி மாறியுள்ளது என்றால், திருமணம் முடிந்து ஒரு ஆண்டுகள் ஆனவுடன் குழந்தையில்லை என்றால் அது  டெஸ்ட்டியூப் பேபி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று தவறான புரிதல்கள் இருக்கிறது.

திருமணம் ஆகி ஒரே ஆண்டில் குழந்தைப் பிறந்தவர்கள் இருக்கிறார்கள். இரண்டு  மூன்று ஆண்டுகளும் ஆகலாம். சிலருக்கு இரண்டு மூன்று ஆண்டுகள் குழந்தை இல்லை என்றதும் எங்களை அணுகுவார்கள். அவர்களை சோதித்து பார்த்து அவர்களின் உடலின் சாதாரண பிரச்சனைகள் தான் இருக்கும், மருந்து மாத்திரை மூலமே சரி செய்து விடலாம். மேலும் சிலர் விழிப்புணர்வு இன்றி இருப்பார்கள், அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பதன் மூலமே அவர்கள் கருத்தரித்திருக்கிறார்கள். இப்படி நிறைய தம்பதியினர்கள் நம் மருத்துவமனையில் கருவுற்று இருக்கின்றனர். டெஸ்ட்டியூப் பேபி சிகிச்சை அனைவருக்கும் பொதுவான தீர்வல்ல.

கே: நம் முன்னோர்களின் காலத்தில் இயற்கையாகவே கருதரித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது, ஆனால் தற்போது அந்த நிலை மாறியுள்ளதே அது பற்றி சொல்லுங்கள்?

உலகம் முழுவதும் இந்த நிலை மாறியுள்ளதாக சில ஆய்வுத்தகவல்கள் நம்மை எச்சரிக்கிறது. இதற்கு முக்கிய காரணங்கள் காலம் தாழ்த்தி திருமணம் செய்வது உணவுப் பழக்கங்கள், வேலைபளு ஆகியவை.

நம் முன்னோர்கள்  சரியான வயதில் திருமணம் செய்தார்கள், சரியான வயதில் குழந்தைகள் பெற்றெடுத்தார்கள். சில குடும்பத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பதைக் கூட பார்த்திருக்கிறோம். அப்போது தேவைகள் குறைவாக இருந்தது, குறுகிய வருமானம் இருந்தாலே குடும்பத்தை நடத்திக் கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது.

ஆனால் தற்போது அப்படியில்லை. பட்டங்கள், பணிகள்,சேமிப்புகள் என தங்கள் தேவைகளை பூர்த்தி செய்த பின்னர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்குள் அவர்களுக்கு வயது ஆகிவிடுகிறது. திருமணம் ஆனப்பின்னரும் அவர்கள் உடனே குழந்தைப் பெற்றுக் கொள்வதில்லை, அதற்கும் வருடங்களைத் தள்ளிப் போடுகிறார்கள்.

ஆண், பெண் இருவரும்  வேலைக்கு போகிறார்கள், அவர்கள் வீட்டிற்கு வருவதற்கு கால தாமதம் ஆகிவிடும், வீட்டில் சமைப்பதில்லை, இதனால் கடையிலிருந்து துரித உணவுகள் வாங்கி வந்து உண்கிறார்கள். இதனால் ஆண், பெண் இருவருக்கும் உடல் பருமன் ஏற்படுகிறது, பெண்களுக்கு சரியான மாதவிடாய் ஏற்படுவதில்லை.  வேலை செய்யும் இடத்தில் மனஅழுத்தம் போன்றவை குழந்தையின்மைக்கு பெரும் காரணமாக இருக்கிறது.

கே:  டெஸ்ட்டியூப் பேபி செய்யப்படுவதற்கான காரணம்?

டெஸ்ட்டியூப் பேபி முறைக்கு போக வேண்டும் என்றால் அதற்கான காரணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஆண்களுக்கு அணுக்கள் மிக குறைவாக அல்லது விந்தணு வெளிப்படாமல் போனால்.

பெண்களுக்கு கருமுட்டை உருவாகாமல் இருந்தால். வயது கூடும் போது பெண்களுக்கு கருமுட்டையின் தன்மை குறைய தொடங்கும். அப்போது முட்டை தானம் பெற்று டெஸ்ட்டியூப் பேபி செய்யப்படும்.

கருக் குழாயில் அடைப்பு இருத்தல் போன்ற காரணங்களால் டெஸ்ட்டியூப் பேபி செய்யப்படுகிறது.

கே: திருமணம் ஆன எல்லோராலும் தாய்மை நிலை அடைய முடியுமா?

இது தான் எங்களின் தளராத முயற்சி. எல்லோரும் தாய்மை நிலையை அடைய வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கமும் குறிக்கோளும். அதனால் எங்கள் மருத்துவமனையில் இத்துறை சார்ந்த அதிநவீன இயந்திரங்கள், மருத்துவ உபகரணங்கள் எல்லாம் வைத்திருக்கிறோம்.

எல்லோருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை கொடுப்பதில்லை. ஒவ்வொரு தம்பதியனரும் பல விதமான பிரச்சனைகளில் வருவார்கள், அவர்களின் பிரச்சனையை அறிந்து அவர்களுக்கு ஏற்றார் போல் அதை சரி செய்ய வேண்டும்.

கர்ப்பப்பையில் இரத்த கசிவு ஏற்படும், இவ்வாறு இருப்பவர்கள் கர்ப்பம் தரிப்பது மிகவும் கடினம், அவ்வாறு தரித்தாலும் கரு கலையும் சூழல் எற்பட்டுவிடும். அப்படிப்பட்டவர்கள் வரும் போதுகூட அவர்களின் உடலை அறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளித்து குழந்தைப்பேற்றை உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம்.[hide]

கே: பொதுவாக டெஸ்ட்டியூப் பேபியின் மூலம் பிறக்கும் குழந்தைகள் சுகப்பிரசவமாகப் பிறப்பதில்லையே அதற்கான காரணம் என்ன?

கிடைக்காத ஒரு பொக்கிஷம் கிடைக்கப் போகிறது என்பதால் இயற்கையாய் கருத்தரிப்பவர்களை விட அதிக அக்கரையாளர்களாக இருப்பார்கள்.

டெஸ்ட்டியூப் பேபியின் மூலம் கருத்தரிப்பவர்கள் பொதுவாக ஓய்விலேயே இருப்பார்கள். அவ்வாறு இருக்கும் போது உடல் அசைவின்றி அமர்ந்தே படுத்துக்கொண்டோ இருப்பார்கள். அவர்களுக்குள் ஒரு வித பயஉணர்வு இருக்கும். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கருத்தரித்திருக்கிறோம் ஏதேனும் செய்து எதாவது ஆகிவிடும் என்று என்று நினைப்பதால் தான் இது போன்ற பிரச்சனைகள்.

நாங்கள் நிறைய உடல் சார்ந்த பயிற்சிகள் கொடுக்கிறோம், ஆனாலும் அவர்கள் அதற்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. மனதளவிலும் அவர்கள் தயார்நிலையில் இருப்பதில்லை. அதனால் தான் சுகப்பிரசவத்தில் குழந்தையைப் பெற்றெடுக்க முடியவில்லை.

கே: உங்களின் மருத்தவப் பயணத்தில் உங்களால் மறக்க முடியாத நிகழ்வு பற்றி?

நான் பார்க்கும் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு விதத்தில் மறக்க முடியாதவர்களாக தான் இருக்கிறார்கள். குறிப்பிட்டு சொல்ல ஒரு சிலவற்றைக் கூறலாம்.

ஒரு ஐம்பது வயதுடைய மாதவிடாய் நின்று போன பெண் ஒருவர் எங்களிடம் டெஸ்ட்டியூப் பேபி மூலம் கருத்தரித்திருந்தார், அவர் மிகவும் கிராம பின்னணியை உடையவர், படிக்காதவரும் கூட, அவர்களுக்கு ஒவ்வொன்றையும் புரிய வைத்து, விழிப்புணர்வு கொடுத்து சரியாக கையாண்டு அவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்து அவர்கள் கையில் கொடுத்தோம்.

மாதவிலக்கு ஆன பின்பும் கருத்தரித்து ஆரோக்கியமான பத்து மாத குழந்தையை பெற்று எடுத்த அவரின் கண்ணீர் துளிகளை என்னால் என்றும் மறக்க முடியாது.

அது போலவே பிறப்பிலே இரட்டை கர்ப்பபை இருந்த ஒரு பெண் பல இடங்களில் சிகிச்சை செய்தும் தனக்கான பிரச்சனை என்னவென்று தெரியாமல் எங்களை நாடி வந்தார்கள். இரண்டு கருக்குழாயிலும் அடைப்பு இருந்தது. இது மிகவும் சவாலான விஷயம். அவர்களை பரிசோதித்து, இரண்டு கர்ப்பபையை கண்டறிந்து ஒன்றாக்கி, கருக்குழாய் அடைப்பை நீக்கி இயற்கையான முறையில் சிகிச்சை அளித்து அவர்களுக்கும் ஆரோக்கியமான குழந்தைப் பிறந்தது. இது போன்ற நிகழ்வுகள் மறக்கமுடியாதவை. இன்னும் பல.

கே: நகரப் பகுதியில் தொடங்குவதை விட காரைக்குடி போன்ற டவுண் பகுதியில் தொடங்கியதன் காரணம் என்ன?

செட்டிநாடு என்றாலே உணவு பாரம்பரியமிக்க ஊர் என்பது அனைவரும் அறிந்ததே.  அது போல எங்கள் மருத்துவமனையும் இந்த பகுதியில் பெயரெடுக்க வேண்டும். என்னுடைய ஒரே நோக்கம் ஏழை எளிய மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பது தான். அவர்களுக்கு இந்த சிகிச்சை எட்டாக்கனியாக இருந்துள்ளது, அதை மாற்றி அவர்களும் குழந்தை செல்வம் பெற்று பயனடைய வேண்டும் என்பது தான்.

ஏதேனும் பிரச்சனை என்றால் நகரப் பகுதிக்கு செல்லும் சூழலில் இன்று நகரத்தில் இருப்பவர்கள் கூட எங்களை நாடி வருகிறார்கள் அதற்கெல்லாம் காரணம் எங்களின் சிகிச்சை முறையும் அணுகுமுறையும் தான்.

மதுரை, திருச்சி  போன்ற நகரங்களில் இருந்து நிறைய பேர் வருகிறார்கள். அது மட்டுமின்றி துபாய், அந்தமான், சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்தும் வந்து எங்களிடம் சிகிச்சை பெற்று குழந்தைப்பேறுடன் மகிழ்ச்சியாக செல்கின்றனர்.

கே: உங்கள் மருத்துவமனையின் தனித்தன்மைகள் பற்றி?

குழந்தையின்மை பிரச்சனைக்கு வருபவர்கள் அதிகபடியான மன அழுத்ததில் இருப்பார்கள். அவர்களின் பிரச்சனைகளை நன்றாக கேட்டறிவோம். கேட்டறிந்து உடன் நேரடியாக மருத்துவம் செய்வதில்லை. அவர்களுக்கு புரியும் படி கவுன்சிலிங் கொடுப்போம், கவுன்சலிங் கொடுக்கும் போது அவர்களுக்கு கொடுக்கப்படும் மருத்துவம் பற்றி நன்றாகப் புரிய வைப்போம்.

ஆண், பெண் என தனித்தனியே பிரச்சனைகள் கேட்டறிந்து அவர்களின் உடல் தன்மைக்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்கப்படும்.

எங்கள் மருத்துவமனையில் கட்டணம் மிகவும் குறைவு, எல்லாத் தரப்பு மக்களும் பயன்படக்கூடிய அளவில் தான் கட்டணங்கள் வாங்கப்படுகிறது.  இங்கு அதிநவீன ICSI- IMSI, PICSI செய்யப்படுகிறது

ஆண்களுக்கு விந்து வெளிப்படாத தன்மையில் (OBSTRUCTIVE AZOOSPERMIA) இருப்பவர்களின் உடலில் ஊசியின் மூலம் உயிருள்ள விந்தணுக்களை (TESA, PESA) எடுத்து அதன் மூலமே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. Donor விருப்பம் இல்லாதவர்கள் இந்த நவீன சிகிச்சையில் குழந்தைப் பெற்றுக் கொள்ள வாய்ப்புள்ளது.

All in one Roof குழந்தையின்மை பிரச்சனைக்காக வரும் தம்பதியருக்கு தேவையான அனைத்து சிகிச்சை வசதிகளும் நம் மருத்துவமனையில் உள்ளது.

கே: கர்ப்ப காலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி?

கர்ப்பகால பெண்கள் எப்போதும் மகிழ்ச்சியான மனநிலையில்  இருக்க வேண்டும். ஆரோக்கியமான  உடற்பயிற்சி, சத்தான உணவுப் பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும்.

துரித உணவுகளை முழுவதுமாக தவிர்த்திடுதல் நல்லது.

மருத்துவர் கூறும் அறிவுரைகளை பின்பற்றி சுகமாக கர்ப்பக் காலத்தில் மகிழச்சியுடன் இருக்கலாம்.

கே: குடும்பத்தினரிடையே நேர செலவழிப்பு என்பது எப்படி இருக்கிறது?

என்னுடைய கணவர் டாக்டர் அருணாச்சலம் அவர்கள்.  அவர் எலும்பு முறிவு அறுவை சிகிச்சையாளராக இருக்கிறார், என்னுடைய வெற்றிக்கு முதுகெழும்பாகவும், உந்து சக்தியாகவும் இருந்து செயல்படுகிறார். மருத்துவப் பணியைப் பற்றி நன்கு அறிந்தவர். எனது இந்தப் பயணத்திற்கு முழு உதவியும் தூண்டுகோலாகவும் இருப்பவர். நேரத்தை நாங்கள் சரியாகப் புரிந்து கொண்டு இருக்கிறோம். எனக்கு ஒரு மகள் திவ்யதர்ஷினி பள்ளிப்படித்து வருகிறார். இவர் எங்கள் வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். எங்களை மிக நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறார். எங்கள் பணியில் நான் முழுமையாக ஈடுபட நன்முறையில் ஒத்துழைப்பு கொடுத்து, என் சிகிச்சையின் வெற்றியில் பிறக்கும் அனைத்து குழந்தைகளையும் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்து நன்கு ஊக்குவிப்பார்.

நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பார்கள், அது எங்கள் குடும்பத்திற்கு மிகப் பொருத்தமாக இருக்கும். திருமணமாகி குழந்தைப் பிறந்தவுடன் தான் என் மேற்படிப்புகளை தொடர்ந்தேன்.  இதற்கு பெரிதும் காரணமாய் இருந்தவர்கள், என் பெற்றோர் மற்றும் என் கணவர், கணவரின் பெற்றோர் என அனைவரின் ஒத்துழைப்பும், ஊக்கமும், புரிதல் தன்மையும் தான் என்னை இன்று வரை இத்துறையில் நீண்ட பயணம் மேற்கொள்ள உதவியது.

மருத்துவர் என்றாலே நேர செலவழிப்பு என்பது மருத்துவமனையில் தான் இருக்கும். என்னை பொறுத்தவரையும் அப்படித்தான் நான் எப்போதும் மருத்துவமனை என்றே இருப்பேன்.

கே: மருத்துவமனை தொடங்கிய தன் நோக்கம் நிறைவேறி விட்டதாக நினைக்கிறீர்களா?

மருத்துவசேவை என்பது ஒரு தொடர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே முடியாது. ஒவ்வொரு சிகிச்சையும் ஒரு வெற்றி தான். அந்த வெற்றி அதோடு நிற்பதில்லை. புதிய புதிய தேடுதலை நோக்கி நாங்கள் பயணம் செய்து கொண்டே தான் இருக்கிறோம்.

கருத்தரித்த நாள் முதல் அப்பெண்களை முறையாக கவனித்து, குழந்தை வளர்ச்சியை ஒவ்வொரு மாதமும் பரிசோதித்து, அக்குழந்தைகளை முழுமையாகப் பாதுகாத்து அவர்களின் பெற்றோர்களின் கையில் குழந்தையை கொடுக்கும் பொழுது அவர்கள் அடையும் ஆனந்தத்தை வார்த்தையால் சொல்லி விட முடியாது.

கே: எதிர்காலத்திட்டம் பற்றி?

எந்த வேலையாக இருந்தாலும் அதில் வெற்றி தோல்வி என்பது இயல்பான ஒன்று தான் யாரும் தோல்வியை தேடி வாங்கிக் கொள்வதில்லை.

வெற்றிக்கு நேர்மறை தோல்வி, மருத்துவத் துறையிலும் இது இயல்பு தான் என்றாலும் தோல்வி சதவீதத்திலிருந்து வெற்றி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும்.

இதுவரை 500 க்கும் மேற்பட்ட டெஸ்ட்டியூப் பேபி சிகிச்சை கொடுத்திருக்கிறோம். அதில் 75 சதவீதம் வெற்றியில் முடிந்திருக்கிறது. மேலும் இதை எதிர்காலத்தில் அதிகரிக்க வேண்டும்.

வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் அனைத்து சிகிச்சை முறைகளும் இங்கு வந்து விட்டது.

நம் துறை சார்ந்த புதிய புதிய கண்டுபிடிப்புகளை எல்லாம் நம் மக்களுக்கு கொடுக்க வேண்டும்.

எல்லோரும் தாய்மை நிலையை அடைய

எங்களால் ஆன முயற்சியை மகிழ்ச்சியாய் கொடுப்போம்…

நேர்காணல்: விக்ரன் ஜெயராமன்[/hide]

இந்த இதழை மேலும்

எதையும் விரும்பிச் செய் எதிர்காலத்தைப் பூர்த்தி செய்

அருட்செல்வர். முனைவர்.  பா. இராஜாராம்

முன்னாள் தலைவர்,தாவரவியல் துறை,

பூ.சா.கோ கலைக்கல்லூரி

முன்னாள் செயலாளர் SP. நரசிம்மலு நாயுடு நினைவு அறக்கட்டளை.

விஞ்ஞான ஆராய்ச்சியாளர்

கோவை.

இவர் மிகச்சிறந்த ஆசிரியர்

பார் போற்றும் கல்விமான்

அறிவியலைத் தமிழ் படுத்திய ஞானி

புகழ்பெற்ற இதழாசிரியர்

பன்மொழிப் பேசும் பண்பாளர்

அகிலம் போற்றும் ஆராய்ச்சியாளர்

உலகத்தைச் சுற்றிய உன்னத மனிதர்

பல சாதனையாளர்களை உருவாக்கிய சான்றாளர்

இயற்கை விஞ்ஞானி…

என பன்முக ஆளுமைக் கொண்ட பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியின் முன்னாள் தாவரவியல் துறைத் தலைவர் முனைவர் பா. இராஜாராம் அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு.

கே: உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னுரில்  ஜீன் மாதம் 15 ஆம் தேதி 1931 ஆம் ஆண்டு பிறந்தேன். பெற்றோர் திரு. டி.என். பாலகிருஷ்ண நாயுடு, நவநீதம்மாள். என்னுடன் பிறந்தவர்கள் ஆறு சகோதர்கள், இரண்டு சகோதரிகள் ஆவர். அதே போல் எனக்கு ஐந்து மகன்கள், ஒரு மகள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பணிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். தற்போது எல்லாம் மூன்று வயதிலேயே குழந்தைகளை பள்ளியல் சேர்த்து விடுகிறார்கள். ஆனால் நான் ஆறு வயதில் தான் ஒன்றாம் வகுப்பிலே சேர்ந்தேன். நான் படித்த பள்ளி குன்னுரிலுள்ள சிஎஸ்ஐ பள்ளியில் 1936 ஆம் ஆண்டு சேர்ந்தேன். கிருத்துவப்பள்ளி என்பதால் ஒழுக்கமும், கல்வி போதிக்கும் முறையும் முற்றிலும் மாறுப்பட்டதாக இருக்கும். இங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் அன்றைய காலத்திலேயே நன்றாக கல்வி கற்றவர்களாக இருந்தார்கள். அதன் பின் மேல்நிலை வகுப்பு செயிண்ட் அந்தோணியார் பள்ளியில் படித்தேன். அப்போது தான் எழுத்தறிவு முறை முதன் முதலில் பள்ளிகளுக்கு அறிமுகம் படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த பள்ளியில் படித்த பாடத்திட்டம் பிற்காலத்தில் பி.எஸ்சி படிக்கும் போது வந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

பள்ளிப்படிப்பை முடித்தவுடன் 1947 ஆம் ஆண்டு கும்பகோணம் அரசு கலைக்கல்லூரியில் என்னுடைய கல்லூரிப் பயணம் இரண்டு ஆண்டுகள் தொடங்கியது. பின்னர் சென்னையிலுள்ள பிரசிடென்சி கல்லூரியில் தாவரவியல் துறையைத் தேர்ந்தெடுத்தப் படித்தேன். முனைவர் பட்டத்தை சென்னையிலிருந்து இங்கு எக்ஸ்டென்சன் சென்டர் ஒன்று இருந்தது அதில் எனது வழிகாட்டுதல் ஆசிரியர் முனைவர். சுந்தரராஜீலு அவர்கள் மூலமாக முனைவர் பட்டம் பெற்றேன்.

கே: அறிவியல் துறையைத் தேர்ந்தெடுத்தன் காரணம் பற்றிச் சொல்லுங்கள்?

1947 ஆம் ஆண்டுகளில் ஜெர்மனி, கீரிஸ், நார்வே, போன்ற நாடுகளில் அறிவியலின் வளர்ச்சி அப்போதே பெரிய அளவில் இருந்தது. ஆனால் இந்தியாவில் அப்போது தான் அறிவியல் வளர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து கொண்டிருந்தது. அப்போது தான் இத்துறையைத் தேர்ந்தெடுத்து படித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.

மற்ற எல்லா துறைகளிலும் தகவல்கள் கிடைத்து விடும் ஆனால் அறிவியல் துறையில் நாம் தான் தகவல்களைத் திரட்ட வேண்டும். அறிவியல் இல்லாமல் இவ்வுலகம் இயங்காது என்பதை புரிந்து கொண்டேன்.  எல்லாவித பரிணாம வளர்ச்சிக்கும் அறிவியலே முதல் படி. இது போன்ற எண்ணற்ற காரணங்களால் தான் இத்துறையை படிக்க நேர்ந்தது.

அப்போது இருந்த அறிவியல் ஆசிரியர்கள் வெறுமனே புத்தக பாடத்தை நடத்தாமல், நடத்தும் பாடத்திற்கு ஏற்றார் போல் நேரடியாக அந்த இடத்திற்கே கூட்டிச் சென்று செய்முறையாக பாடத்தை கற்பிப்பார்கள்.

கே: உங்கள் முதல் ஆசிரியர் பயணம் பற்றிச் சொல்லுங்கள்?

பிரசிடென்சி கல்லூரியில் எம். ஏ தாவரவியல் படிக்கும் போதே என்சிசி யில் சீனியர் கேடட்டாக இருந்தேன். அப்போது புதிதாக படிக்கும் மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி கற்பிக்க வேண்டும். இப்பயிற்சி முறை இராணுவம் சார்ந்த அத்துனை பயிற்சிகளும் கொடுக்க வேண்டும். பின்பு இது சார்ந்த நன்மைகள் என்ன, பயன்கள் என்ன, எதிர்கால தேவைகள் என்ன என்பதை அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்படும். இது அவர்களின் எதிர்கால வாழ்விற்கு பெரும் பயனாக இருக்கிறது.

கற்பிக்கும் முறையில் இராணுவ முறைகளே சிறந்தது என அறிந்து கல்லூரி ஆசிரியர் பணியிலும் அந்த முறைகளையே பின்பற்றி என்னால் சிறந்த மாணவர்களை உருவாக்க முடிந்தது. ஜனவரி 26 ம் நாள் 1951 ஆம் ஆண்டு முதல் குடியரசு தின விழா தலைநகர் டில்லியில் கொண்டாடப்பட்டது. அப்போது இந்திய அரசிடமிருந்து ஒரு ஆணை வந்தது.  அது என்னவென்றால் தமிழ்நாடு, பம்பாய், கொல்கத்தா போன்ற மாநிலங்கள் ஒவ்வொன்றிலிலுருந்தும் 20 என்சிசி வீரர்கள் அனுப்பி வைக்கும் படி பாரத அரசு கேட்டுக்கொண்டது.  அதன்படி தமிழ்நாட்டிலிருந்து நானும் 20 பேர்களில் ஒருவனாக அனுப்பப்பட்டேன். டில்லியில் 15 நாட்கள் தீவிர பயிற்சி கொடுத்தார்கள். குடியரசுத் தலைவர் டாக்டர். இராஜேந்திரபிரசாத் அவர்களுக்கு சல்யூட் கொடுத்தோம். அது என் வாழ்நாளில் மறக்க முடியாத சிறந்த நிகழ்வாக இருக்கிறது.

இராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும் ஆசிரியராக வர வேண்டும் என்பதில் தீராத காதல் இருந்தது. இதனால் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் வ. ஊ. சி அறக்கட்டளை சார்பாக தூத்துக்குடியில் ஒரு கல்லூரி நிறுவப்பட்டது. அங்கு முதன் முதலாக 1952 ல் பணியில் சேர்ந்தேன். அங்கு அப்போது திரு. சீனிவாச ராகவன் முதல்வராக இருந்தார்.  நான்கு ஆண்டு காலம் அங்கு பணியாற்றி, கோவையிலுள்ள பி.எஸ்.ஜி கலைக்கல்லூரியில் 1956 ஆம் ஆண்டு அப்போது புதிதாகத் தொடங்கிய பயலாஜி துறையில் பணியாற்ற தொடங்கினேன். இங்கு 39 ஆண்டு காலம் பணியாற்றினேன். என்னுடைய ஆசிரியர் பணியின் அனுபவம் மொத்தம் 43 ஆண்டுகள். இந்த ஆண்டுகளில் அறிவியல் துறைக்கும் சுற்றுச்சூழலுக்கும் நிறைய புதுமைகள் செய்து கொண்டு வந்திருக்கிறேன்.

கே: ஆசிரியர்களின் ஆளுமைப்பண்பு எப்படியிருக்க வேண்டும் ?

ஆசிரியர்கள்  தான் எதிர்கால சமுதாயத்தின் ஏணிப்படி என்று சொல்வார்கள். அதனால் தான் ஆசிரியர் பணியை அறப்பணி என்று சொல்கிறார்கள்.

ஆசிரியர்கள் அணியும் ஆடையில் மிகவும் அக்கரையுடையவர்களாக இருக்க வேண்டும்.

எப்போதும் சுறுசுறுப்பாகவும், மாணவர்களை ஈர்க்கும் படி, வகுப்பிற்கு வரும் அந்த ஒரு மணிநேரம் மிகவும் பயனுள்ள வகையில் கருத்துக்களைப் போதிக்க வேண்டும்.

மாணவர்களை விட ஆசிரியர்கள் அதிகம் படிக்க வேண்டும். மாணவர்களுக்கு எழும் ஐயங்களை அவ்வப்போதே தீர்க்கும் வல்லமையுடையவர்களாக இருத்தல் வேண்டும்.

மாணவர்கள் ஆசிரியர்களை கூர்ந்து கவனிப்பார்கள். இதனால் பயம் பதட்டம், தடுமாற்றம், பிழை போன்றவற்றை தவிர்த்திடல் வேண்டும்.

வெறும் புத்தகப் பாடத்தை நடத்தாமல், அந்த பாடம் சம்மந்தமான இடத்திற்கே மாணவர்களை அழைத்துச் சென்று அவர்களுக்கு புரியும் படி கற்றல் பயிற்சியை கொடுக்க வேண்டும்.

தன் பாடம் சார்ந்த அறிவு மட்டும் இல்லாமல் எல்லாத் துறைகளிலும் புலமைப் பெற்றவர்களாக ஆசிரியர்கள் தங்களை தகவமைத்துக் கொள்ளல் வேண்டும்.

எத்துறை ஆசிரியராக இருக்கிறோமோ அத்துறையினை உயர்வாக எண்ணி கற்பித்தல் வேண்டும்.

இப்படி பல நற்குணங்கள் கலவை தான் ஆசிரியர்களின் பிம்பமாக பிரதிபலிக்கிறது.

கே: ஒரு ஆசிரியர்களின் வெற்றி எதை மையமிட்டு இருக்க வேண்டும்?

உலகத்திலே தன்னை விட தன் மாணவர்கள் உயர்ந்து விட்டார்கள் என்று பொறாமைபடாத ஒருவர் என்றால் அது ஆசிரியர்கள் மட்டும் தான்.

தன்னிடம் படித்த ஒரு மாணவன் தற்போது ஒரு துறையில் சான்றோனாக இருக்கிறான் என்று பிறர் சொல்லி கேட்கும் போது அவர்களுக்கு அது தான் பெரிய வெற்றி மகிழ்ச்சி.

என்னிடம் படித்த எத்தனையோ மாணவர்கள் இன்று பல துறைகளில் சாதனையாளர்களாக இருக்கிறார்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் யூஜிசி சேர்மன் முனைவர் திரு. தேவராஜ், கேஎம்சிஎச் மருத்துவமனையின் தலைவர் நல்ல பழனிசாமி, கே.ஜி. மருத்துவமனையின் தலைவர் டாக்டர். பக்தவச்சலம், டாக்டர். மாணிக்கராஜ் குழந்தைகள் நல மருத்துவர், முன்னாள் அமைச்சர் திரு கண்ணப்பன், சங்கரா கண் மருத்துவமனை நிறுவனர், டாக்டர். ரமணி, நீலகிரி பிரபல டாக்டர்கள் பி. சுதர்சனம், டாக்டர். பி. பத்பநாபன்  போன்றவர்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக தற்போதும் மருத்துவர்களாகப் சேவை செய்து கொண்டிருக்கிறார்கள். இதை எண்ணும் போதெல்லாம் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிது.

கே: கலைக்கதிர் மாத இதழில் தாங்கள் இணைந்தது பற்றி?

1951 ஆம் ஆண்டு கலைக்கதிர் இதழ் தொடங்கப்பட்டது. நான் அப்போது சென்னையில் கல்வி கற்று கொண்டிருந்தேன். இவ்விதழில் அப்போது திருவாளர்கள் டாக்டர் ஜீ. ஆர். தாமோதரன், பி. ஆர். கிருஷ்ணமூர்த்தி, தா.ஏ ஞானமூர்த்தி, மா.ரா.போ குருசாமி, இருசு பிள்ளை, ராஜமணிக்கம் போன்றவர்கள் பணியாற்றி கொண்டிருந்தார்கள்.

இவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அறிவியல் தமிழ் கலைக்கதிர் இதழைத் தொடங்கி நம்முடைய ஆசிரியர்களிடம் கட்டுரையை வாங்கி இப்புத்தகத்தில் இடம் பெற செய்ய வேண்டும் என்று நினைத்தார்கள்.

பத்திரிகை தொடங்கி நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் நான் கோவைக்கு வருகிறேன். அப்போது நானும் இந்த இதழில் தாவரவியல் சார்ந்த கட்டுரைகளை எழுதத் தொடங்கினேன். தமிழில் தாவரவியல் பற்றிய கட்டுரைகள் எழுதியது அக்காலத்தில் மிகவும் வரவேற்பினைப் பெற்றது. பிற்காலத்தில் அதை ஒரு புத்தகமாகவே எழுதி வெளியிட்டேன். இது பல கல்லூரிகளுக்கு பாடத்திட்டமாக இருக்கிறது.

மிகவும் பிரபலமான எழுத்தாளர்கள் இணைந்து தொடங்கிய இந்த கலைக்கதிர் இதழ் இன்றும் புகழ்பெற்ற இதழாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.[hide]

கே: உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தது குறித்து?

43 ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றி முடித்து, என்னுடைய பணி ஓய்வுக்குப் பின்னர் என்னுடைய மக்களின் ஆசைக்கிணங்க உலகச் சுற்றுப்பயணம் செய்ய நானும் என்னுடைய மனைவி சாரதாதேவியும் முடிவெடுத்தோம். என்னுடைய மனைவின் தந்தை மற்றும் அவரின் தந்தை எல்லோரும் காவல் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது என்னுடைய மாமனார் திரு. எம்.என். நாயுடு அவர்கள் 1906 ஆம் ஆண்டு பசிபிக் கடலிலுள்ள பீஜி தீவுக்கு சென்றார். அங்கு அதற்கு முன்னே ஆங்கிலேயேர்கள் அங்கு சென்று கரும்பு சாகுபடி செய்திருக்கிறார்கள். இந்தியாவிலிருந்து போனவர்கள் அங்குள்ள காட்டையெல்லாம் சுத்தம் செய்து விவசாயம் செய்துள்ளார்கள். இதில் என்னுடைய மாமனார் திரு. எம்.என் நாயுடு அவர்களும் ஒருவர். ஏழு மாத காலம் எங்களுடைய சுற்றுப்பயணம் அமைந்தது.  ஐரோப்பா, அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, நியிசீலாந்து இன்னபிற நாடுகளுக்குச் சென்றோம்.

உலகம் முழுவதும் சுற்றும் பொழுது ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு அதிசியங்கள், ஆச்சரியங்கள் பார்க்க முடிந்தது. அழிந்து போன உயிரினங்களைப் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். இதை எல்லாம் அனுபவமாக கொண்டு இந்தியாவிற்கு வந்த பின்னர் உயிரியல் அறிஞரின் உலகப் பயணம் என்ற தலைப்பில் 60 மாதங்கள் தொடர் கட்டுரையாக எழுதி கலைக்கதிரில் வெளிவந்தன.

கே: உங்களுக்குப் பிடித்த புத்தகங்கள் பற்றி?

நிறைய புத்தகங்கள் படித்திருக்கிறேன். அறிவியலைத் தவிர தமிழில் நிறைய புத்தகங்களைப் படித்திருக்கிறேன்.  குறிப்பாக கம்பராமாயணம், நாலாயிர திவ்ய பிரபந்தம், திருக்குறள், பனிரெண்டு திருமுறைகள் போன்ற புத்தகங்கள் என்னை ஈர்த்தவை.

கே: பணி ஓய்வுக்குப் பின்னர் நீங்கள் செய்த வேலைகள் பற்றி?

என்னைப் பொறுத்தவரை பணிக்குத்தான் ஓய்வே தவிர என்னுடைய வயதுக்கு இல்லை. இப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கவே ஆசைப்படுகிறேன். நான் பெற்றது, கற்றது போன்றவற்றை முடித்தளவிற்கு இந்த சமுதாயத்திற்கு கொடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறேன். இதனால் உதயமானது தான் இந்த உயிர் பன்மை சூழல் வேளாண்மை என்பதாகும்.

இந்த வேளாண்மை ஒரு நிலத்தில் பல தானியப்பயிர்கள் விளைவித்தல் முறைகளாகும். இது நீடித்த நிலைத்த தன்மையுடைய விவசாயம் ஆகும்.

இது விவசாயிகளுக்கு குறைந்த பொருட் செலவு தான் ஆகும். தன்னிடம் உள்ள பொருட்களைக் கொண்டே இந்த வகை விவசாயத்தை செய்து கொள்ளலாம்.

இந்த விவசாயம் எப்போதும் வருமானம் கொடுத்துக் கொண்டே இருக்கும். வார விவசாயம் கீரை வகைகள், முருங்கை, வெண்டை, தக்காளி போன்றவை 15 நாளுக்கானது, 45 நாளுக்கான விவசாயம் தேங்காய், மாதகணக்கில் அறுவடை செய்வது மலர்களும், பழங்களும் இப்படி எப்பொழுதும் விவசாயம் செய்தால் வருவாய் தரக்கூடியதாக இருக்கும்.

கே: உயிர் பன்மை சூழல் வேளாண்மை பற்றி சொல்லுங்கள்?

சூரிய ஒளி சரிவிகிதத்தில் அறுவடை செய்வது தான் அடுக்குப் பயிர் வேளாண்மை. சூரிய வெளிச்சம் இருந்தால் தான் தாவரங்களில் உணவு உற்பத்தி நடைபெறும்.

மழை நீரை சரியாக சேகரிக்க வேண்டும். நீரை நிலைநிறுத்த கூடிய அளவிற்கு அந்த மண்ணை முறை படுத்த வேண்டும்.

மரத்தின் வேர்கள் வெளியே தெரியக் கூடாது. வெளியே தெரியாத படி அவற்றை மண் கொண்டு மூடுதல் வேண்டும்.

மூன்றில் ஒரு பங்கு நிலத்தில் மரங்கள் இருக்க வேண்டும். அது தண்ணீர் தேங்ககூடிய இடம் அல்லது மேடான இடமாகவும் இருக்கலாம். அங்கெல்லாம் மரம் இருக்க வேண்டும். அப்போது தான் மழை நீர் சேமிக்கப்படும். ஏழு விதமான மரங்கள் இருக்கின்றன.  அவை வருடத்திற்கு ஏற்றார் போல் பலன் தரும். சவுக்கு, கடம்பா, பெரு மரம், குமிழ்தேக்கு, பலாமரம், தேக்கு செம்மரம், மாமரம் போன்றவை இருக்கின்றன. இவை உரிய  காலத்தில் அறுவடை செய்ய பட வேண்டும்.

பயிர் சுழற்சி முறையில் விவசாயம் செய்தல் வேண்டும். உதாரணமாக, இந்த ஆண்டு நெல்லை விதைக்கிறீர்கள் என்றால், அடுத்த பட்டத்தில் பயிறு வகைகளை பயிரிட  வேண்டும்.  இப்படி பயிரிடும் போது மண் வளம் காக்கப்படும். இப்படி எண்ணற்ற நன்மைகள் கொண்டது தான் உயிர் பன்மை வேளாண்மை. இதை அனைவரும் பயன்படுத்தி நல்லதொரு வளர்ச்சியை அடைய வேண்டும்.  வேளாண்மையில் நீடித்த நிலைத்த வருமானம் பெற உயிர் பன்மை சூழல் வேளாண்மையை உழவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.[/hide]

இந்த இதழை மேலும்

அனைத்தும் ஆனந்தமாகட்டும் அகிலமெங்கும் உன் பெயர் சிறக்கட்டும்…!

(5-ல் வளையாதது 15-ல் வளையும்)

Dr.Z.R. ஆனந்

நிறுவனர், i2C foundation

கோவை.

நம்பிக்கை எனும் நார் மட்டும்

நம் கையில் இருந்துவிட்டால்

உதிர்ந்த பூக்களெல்லாம்

ஒவ்வொன்றாய் வந்து ஒட்டிக் கொள்ளும்

கழுத்து மாலையாகவும்

தன்னைத் தானே கட்டிக் கொள்ளும்….

என்பார் சிந்தனைக் கவிஞர். அவரின் எண்ணங்களுக்கு வண்ணம் கொடுக்கும் விதமாக  கல்வித்துறையில் தடம் பதித்து வரும் தன்னம்பிக்கையாளர்.

கனவு காணுங்கள் எனும் கலாம் வழியில் மாணவர்களுக்கு உபதேசம் சொல்லி அந்தக் கனவை நனவாக்க எவ்வாறு நடை போட வேண்டும், அந்த நடைக்கு தடையாக உள்ளவற்றை எவ்வாறு தவிர்த்தல் வேண்டும் ஆகியவற்றை தனது அனுபவத்தின் மூலம் போதித்து வரும் போதனையாளர்.

உன் இலட்சியம் ஒன்றாக இருக்க வேண்டும், அதுவும் நன்றாக இருக்க வேண்டும். நேரத்திற்கு ஏற்றார் போல் இலட்சியத்தை மாற்றினால் அது உன் வெற்றிப் படிக்கட்டுகளை எட்ட விடாது என்பதே இவரின் தாரக மந்திரம்.

உலக நாடுகளில் உள்ள யோக நெறிகள், ஆன்மீக நெறிகளைக் கற்று, தன் சமுதாயத்திற்கு ஏதேனும் ஒரு வகையில்  மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் எப்போதும் சிந்தித்து வரும் சிந்தனையாளர்.

தாழ்வு மனப்பான்மையில் வாழும் இளைஞர்களுக்கும், சோதனையில் தவிப்போருக்கும் தனது மூன்றாவது கையான தன்னம்பிக்கை தான் பெரிய ஆயுதம் என்று தனது ஞானத்தால் அறிவுறுத்தி வரும் ஆசிரியர், ஆளுமை, ஆனந்தம், ஆரோக்கியம், தன்னம்பிக்கை, தன்னையறிதல், தைரியம், புத்துணர்வு போன்ற அத்துனை துறைகளின் பயிற்சியாளருமான I2C FOUNDATION நிறுவனர் DR.Z.R. ஆனந் அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு…

கே: உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில்.  பத்தாம் வகுப்பு வரை பிரஸ் காலனியில் உள்ள தம்பு உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். அதன் பிறகு பனிரெண்டாம் வகுப்பு வரை சிவானந்தா பள்ளியில் படித்தேன். பள்ளிப்படிப்பு முடித்தவுடன் வித்யாலாயம் கல்லூரியில் இளங்கலை கணிதத்துறைத் தேர்ந்தெடுத்துப் படித்தேன். இந்தக் கல்லூரி தான் என்னை அடுத்தப் படிநிலைக்குக் கொண்டு சென்றது. ஒழுக்கம், பண்பு, ஆன்மீகம் என பல பரிமாணங்களைக்  கொண்ட கல்லூரி அது. கல்லூரியை முடித்தவுடன் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பி.எட் 1992 ஆம் ஆண்டு சேர்ந்தேன். பின்னர் 1996 ஆம் ஆண்டு எனக்கு ஆசிரியராகப் பணி கிடைத்தது. அன்று முதல்  2019 ஆம் ஆண்டு வரை என்னுடைய ஆசிரியர் பணி சிறப்பாகச் சென்றது. பின்னர் தற்போது விருப்பு ஓய்வுப் பெற்றுவிட்டேன். . அப்பா ரத்தினம் ஆசிரியார். மேட்டுப்பாளையம் பகுதியில் அவர் மிகவும் பிரபலமான ஆசிரியர். அம்மா, அண்ணன் அக்காள், தங்கை அனைவருமே ஆசிரியர்கள், மனைவி வக்கீல்,ஒரு மகன்  இருக்கிறார்.

கே: நீங்கள் டாக்டர் பட்டம் பெற்றது பற்றி?

நான் படிக்கின்ற காலத்திலிருந்து இன்று வரை சுமார் 600 ஆதரவற்றோர் சடங்களுக்கு மேல் என்னுடைய சொந்த செலவில் அடக்கம் செய்திருக்கிறேன். இதற்காக எனக்கு நல்லடக்கச் சேவை விருதும் டாக்டர் பட்டமும் கிடைத்தது. நாம் நம் தந்தை காணாமல் போனால் எப்படிப் பதறுவோம். அந்த நிலையில் ரோட்டோரத்தில் மோசமான நிலையில் தந்தை இருந்தால் நம்மால் அவரை ஒதுக்க முடியுமா? நாம் அவரை கட்டி அணைத்து வீட்டிற்கு அழைத்துச் செல்வோம் தானே. அந்த நிலை யாராக இருந்தாலும் நாம் அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உந்துதலின் பேரில் இந்தச் சேவையை செய்து வருகிறேன்.

கே: ஆசிரியர் பணியிலிருந்து விருப்பு ஓய்வு பெற்ற உங்களின் அடுத்தப் பணி என்ன?

ஆசிரியப் பணி  என்பது மிகவும் புனிதமான பணி.  எதிர்கால சமுதாயத்தை ஒரு ஏற்றமிகு சமுதாயமாக மாற்ற அவர்கள் தூணாக இருந்து செயல்படுகிறார்கள. என்னுடைய 20 ஆண்டுகால ஆசிரியர் பணியில் பல மாணவர்களை சீர்ப்படுத்தி செம்மைப்படுத்திருக்கிறேன் என்பது என் மனதிற்கு மிகவும் மகிழ்வாக இருக்கிறது.

எனக்கு எப்போதும் மாணவர்களிடம் நல்லதொரு புரிதல் இருப்பதால் அவர்களுக்கு ஒரு ஆசிரியராய் இருந்து வழிக்காட்டுவதை விட  ஒரு சிந்தனையாளராய் இருந்து வழிகாட்ட வேண்டும் என்பது தான் என்னுடைய நோக்கம்.

இன்றைய சூழ்நிலையில் சமூகம் மாணவர்களுக்கு பல விதமான விஷயங்களை சிறிய வயதிலேயே கற்றுத் தருகிறது. மாணவர்களின்  மதிப்பு மிக்க நேரம் வலைதளங்களிலேயே செலவாகின்றது. மாணவர்கள் இதைத் தேடிச் செல்வதில்லை.சூழ்நிலைகள் தான் அவர்களை இதற்குள் வளைக்கின்றது. பல நேரங்களில் மாணவர்களால் நல்ல விஷயங்களையும், கெட்ட விஷயங்களையும் எப்படி எதிர்கொள்வது என்பது தெரியாமல் போகிறது.  மாணவர்களுக்க 13 முதல் 18 வயது வரை உள்ள வயது மிக முக்கியமானது.  இந்தக் காலங்களில் தான் அவர்கள் உடல் அளவிலும், மன அளவிலும் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்கொள்கிறார்கள்.

எனவே, இந்த வயதில் அவர்களின் நேர்மறை ஆற்றலைத் தூண்டி மற்றும் எதிர்மறை எண்ணங்களை நீக்குவதன் மூலம் அவர்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கை மற்றும் சமூகத்தை எதிர்கொள்வது எளிதாகிறது. இதை எப்படி பக்குவமாக அவர்களுக்கு எளிதாகவும், விருப்பம் உள்ளதாகவும் புரிய வைப்பது என்பதில் தான் இந்த பவுண்டேசன் பெரிய பங்கு வகிக்கிறது.

கே: PET பயிற்சி முறையைப் பற்றிச் சொல்லுங்கள்?

PET (Personal Improvement Transformation) பயிற்சி 12 வயது முதல் 18 வயதிலான குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறோம். இந்தப் பயிற்சியை அறிமுகம் செய்தது நான் தான். இது மூன்று படிநிலைகளைக் கொண்டிருக்கிறது. PET 1, உடல் மாற்றம், கோபம், பயம், போன்ற எதிர்மறை சிந்தனைகள் அனைத்தையும் நேர் மறையாக மாற்றி விடுவோம். PET 2, தலையின் பினயல் சுரப்பிப் பகுதியை திறக்கும் மூச்சுப் பயிற்சி. இதை மூன்றாவது கண் என்பார்கள், குழந்தைகள் தங்களின் இலக்கை நிர்ணயித்தல், அந்த இலக்கை அவர்கள் அடைய என்ன செய்ய வேண்டும் என்பதான வழிகாட்டுதல் பயிற்சியாகும். இது தங்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவும்.   PET 3, மனம் சார்ந்த பயிற்சியாகும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்தப் பயிற்சி கொடுக்கப்படுகிறது.  இந்தப் பயிற்சிகளுக்கெல்லாம்  10 முதல் 15 நாட்கள் போதுமானது.

எதையும் ஆனந்தமாக எடுத்துக் கொண்டு செயல்படுத்த வேண்டும், அவ்வாறு செயல்படுத்தினால் அனைத்தும் உன்னைத் தேடி வரும். தன்னைப் பற்றி அறிதல், தான் யார் என்று தெரிதல். மனதை மூன்று நிலைகளில் பிரிக்கலாம் மேல்மனம், நடுமனம், ஆழ்மனம் ஆகியவையாகும். அன்பை யார் வேண்டுமானலும் கொடுக்கலாம், ஆனந்தத்தை உங்களால் மட்டுமே கொடுக்க முடியும் போன்றவற்றை விளக்குவது தான் இந்தப் பயிற்சி முறைகளாகும். 48 நாட்கள் தொடர்ந்து செய்யும் எந்த வேலையும் நம் மனதை விட்டு நீங்காது.

கே: இந்தப் பயிற்சிகளை நீங்கள் எவ்வாறு கற்றுக் கொண்டீர்கள்?

எனக்கு சிறிய வயதிலிருந்தே யோக நெறிகள் மீது அளவு கடந்த பற்றுதல் இருந்தது. இதனால் யோகா, ஆன்மீகம் சார்ந்த புத்தகங்களைத் தேடித் தேடி படிப்பதுண்டு. ஓசோ, ஈஷா, மகரிஷி, போன்ற மனவளக்கலை மன்றங்களில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். இதற்காகவே 12 ஆண்டுகள்  என்னை அர்பணித்துக் கொண்டேன். இதில் எல்லாவற்றிலும் சொல்லும் ஒரே கருத்து நீ நீயாக இரு, உன்னை பற்றி நீ முதலில் உணர வேண்டும் என்பதாகவே இருந்தது. இது போன்ற பயிற்சிகளை நான் கற்றுக் கொண்டேன்.

கே: கருவறை தியானம் (Womb meditasion) என்ற புதிய தியான முறையை நீங்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள் அது பற்றி?

கருவறை தியானம் எல்லா வயதினருக்கும் சொல்லிக் கொடுக்கும் ஒரு பொதுவான தியானம். ஒரு தாய் பிரசிவித்த காலம் முதல் குழந்தைப் பிறக்கும் நாள் வரை கருவறையில் உள்ள குழந்தையின் நலனில் எவ்வாறு அக்கறை கொண்டு செயல்படு கிறார்களோ, அதன் படி தான் செய்யப்படுகிறது இந்த முறை.

இஸ்ரேல், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பிறக்கும் குழந்தைகளின் அறிவு மிக அதிகமாக இருக்கின்றது. இதற்கு காரணம் அவர்களின் தாயார்கள் அவர்களின் கருவறையில் இருக்கும் குழந்தைகளின் நலனுக்காக நிறைய பயிற்சிகள் செய்து வருகிறார்கள். அதனால் தான் அங்கு பிறக்கும் குழந்தைகள் அறிவாற்றலில் தலை சிறந்தவர்களாக இருக்கிறார்கள்.

இந்தக் கருவறை தியானம் தினமும் 10 நிமிடங்கள் செய்தால் போதும். 3 வது மாதம், 6 வது மாதம், 9 வது மாதம் குழந்தை சுமக்கும் பெண்ணின் நிலை எப்படியிருக்குமோ, அது போன்ற உணர்வு ஏற்படும்.இதை தொடர்ச்சியாக செய்பவர்களின் வாழ்க்கையில் தோல்வி என்பதே இல்லை.  இதை செய்யும் பொழுது அனைவருக்கும்  தாயின் கருவறையில் இருப்பது போல் எண்ணம் தோன்றும்.இந்த தியானம் வேறு எங்கும் சொல்லிக் கொடுப்பதில்லை. இதை யார் செய்தாலும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி தான்.[hide]

கே: I2C பெயர் காரணம் பற்றிச் சொல்லுங்கள்?

இந்தப் பெயருக்குப்பின் இரண்டு காரணங்கள் இருக்கின்றன. I2C என்றால் inner interface course என்பதாகும். இதன் பொருள் என்னவென்றால் தன்னை தனக்குள் போய் தேடுதல் வேண்டும். உன்னை நீ அறிதல் வேண்டும் என்பது தான். மற்றொன்று உன்னுடைய மூன்றாவது கண்ணான மனசாட்சிக்கு பயந்து வாழ்தல் வேண்டும். நீ செய்யும் தவறுகள் நன்மைகள் , தீமைகள் போன்றவற்றை அவர்கள் திறனாய்வு செய்து கொள்ளுதல் வேண்டும். என்பது போன்ற காரணத்திற்காக இப்பெயர் வந்தது.

கே: ஒரு மாணவனின் வளர்ச்சிக்கு பெரிதும் துணைபுரிபவர்கள் யார்?

இங்கு எல்லாப்படிநிலைகளும் ஒரு முக்கோண அமைப்பு உடையதாக இருக்கிறது. அதன் ஒரு மாணவனின் எதிர்கால வாழ்விற்கு பெரிதும் துணைப்புரிபவர்கள் என்றால் குடும்பம், ஆசிரியர், சமுதாயம் ஆகிய மூன்றும்  அவனை உயர்த்தும் ஏணிப்படிகளாகும்.

ஒரு மாணவனின் முதல் ஆசான் பெற்றோர்கள் தான். அவர்கள்  அவனின் நிறைகுறைகளை  கேட்டறிந்து அதற்கு ஏற்றார் போல் அவனை வழிநடத்த வேண்டும்.

பெற்றோர்கள், செய்ய தவறுவதை ஆசிரியர்கள் செய்தல் வேண்டும். அதனால் தான் அடங்காத பிள்ளைகளைக் கூட ஆசிரியர்களிடம் விட்டுவிடுகிறார்கள். என் வாழ்க்கையில் முறைத் தவறிப் போன எத்தனையோ மாணவர்களுக்கு நல்லதொரு முகவரி கொடுத்திருக்கிறேன். பிள்ளைகள் நிச்சயம் ஆசிரியர்கள் பேச்சைக் கேட்பார்கள்.  அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு குருவாகிய ஆசிரியர்கள் தான் நல்லதொரு வாழ்க்கையை அவர்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

இங்கு ஒவ்வொருவரையும் சமுதாயம் பார்த்து வருகிறது. தவறு என்று தெரிந்தால் அதைக் கண்டு தள்ளிப் போவது நல்ல சமுதாயம் அல்ல. அதை அங்கேயே திருத்தி விட்டுப் போக வேண்டும். அவ்வாறு நீங்கள் கண்டும் காணாமலும் போனால் இங்கு எதுவும் செய்யலாம் என்ற நிலை உருவாகி விடும்.  இதை இந்த சமுதாயம் திருத்துதல் வேண்டும். இவர்கள் மூவரும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கொடுத்து மாற்றினால் நிச்சயம் அவர்களால் சாதிக்க முடியும்.

கே: உங்களை நாடி வருபவர்கள் எந்த நோக்கத்தோடு வருகிறார்கள்?

மனித வாழ்க்கையில் எல்லோருக்குமே இன்பமாக அமைவதில்லை. இன்பம், துன்பம் கலந்த வாழ்க்கையில் சிலருக்கு இன்பத்தை விட துன்பமே பெரிதாகத் தெரிகிறது. அத்துன்பத்தை அவர்களால் வெல்ல முடியிவில்லை. அப்படிபட்டவர்கள் இன்பத்தை எதிர்பார்த்து எங்களிடம் வருகிறார்கள்.

அவர்களுக்கு எவ்வித பிரச்சனைகள் என்றாலும் எங்களிடம் ஒரு முறை வந்து விட்டால் அதை முழுவதுமாக அவர்களுக்கு தீர்வு கண்டு அவர்களின் வாழ்க்கையில் ஒளிமயமான எதிர்காலத்தை தராமல் நாங்கள் விட்டதில்லை.

அது போல் வருமுன் காப்பது சிறந்தது என்ற முறையில் பிரச்சனைகள், கஷ்டங்கள், துன்பங்கள் போன்றவை வராததற்கு முன்பே அவர்கள் எதை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் போன்ற பயிற்சிகளும் கொடுக்கப்பட்டு வருகிறது.

கே: நீங்கள் பயணப்பட்ட காலத்தில் உங்களால் மறக்க முடியாத நிகழ்வுகள் பற்றி?

நான் ஆசிரியராய் இருந்த போதும், தற்போதும் நிறைய பேருக்கு பல பயிற்சிகள் கொடுத்து அவர்களின் எதிர்கால வாழ்விற்கு ஒரு அச்சாணியாக இருந்து செயல்பட்டிருக்கிறேன். அவர்களும் என்னுடைய பேச்சைக் கேட்டு, என் சொல் படி நடந்து அவர்களின் இலக்குகளை வெற்றிகரமாக முடித்து இருக்கிறார்கள்.

அவ்வாறு சாதித்தவர்கள் என்னிடம் வந்து என்னுடைய நல்வாழ்க்கைக்கு நீங்கள் கொடுத்த ஊக்கமும் பயிற்சியும் தான் காரணம் என்று சொல்லி நன்றிப்பெருக்கோடு தங்களின் அன்பினை பகிர்ந்து கொள்வார்கள். அத்தருணம் என் வாழ்வில் ஒரு பெரிய மனநிறைவை ஏற்படுத்தும்.

இது போன்ற எத்தனையோ பேர்  என்னிடம் சொல்லி என்னை நெகிழ்வித்த தருணங்களே என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வுகளாகும்.

 கே: உங்களின் 24 மணி நேரம் பற்றி?

சரியான நேரத்தில் உறங்கி சரியான நேரத்தில் விழிப்பவர்கள் தான் சாதனையாளராய் உருவாகிறார்கள். சாதனை மனிதர்களின் சரித்திரப் பக்கங்களை திருப்பிப் பார்க்கும் அவர்கள் அதிகாலையில் விழிப்பவர்களாக இருப்பார்கள்.

நானும் அவர்களைப் போல தான் 4 மணிக்கு எழுந்துவிடுவேன். எழுந்து யோக முத்திரைகள் செய்வேன். 4 மணிக்குத் தொடங்கும் யோகா 7 மணி வரை தொடரும். இதை ஒருநாளும் செய்யாமல் விட்டதில்லை.

காலை உணவைத் தவிர்க்க மாட்டேன். குடும்பத்தினரிடம் பொன்னான நேரத்தை செலவிடுவேன். இறை வணக்கம்,பெரியோரை வணங்குதல் போன்றவை செய்வேன்.

அதன் பிறகு 8 மணிக்கு புறப்பட்டு அலுவலகம் வந்து விடுவேன். அதன் பிறகு பயிற்சிகளுக்கு வந்தவர்களுக்கு நான் கற்றதையும் பெற்றதையும் அவர்களுக்கு கற்றுக் கொடுப்பேன்.

அவர்களின் எதிர்ப்பார்வை 100 சதவீதம் தீர்த்து வைப்பேன். என்னுடைய மகிழ்ச்சி, சந்தோஷம் எல்லாமே இவர்கள் தான்.

கே: மனதை எவ்வாறு ஒருமுகப்படுத்த வேண்டும்?

மனித மனம் என்பது மாறும் குணமுடையது. மனம் நீரைப் போல் ஓடும், காற்று போல் பறக்கும் தன்மையுடையது. மனம் போன போக்கில் விட்டுவிட்டால் அதை மீண்டும் காட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது அவ்வளவு எளிது அல்ல.

மனதை கலங்காத நீர் போல் வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு கலங்கியவர்கள் எங்களிடம் வந்தால் அவர்களுக்கு அதிலிருந்து எவ்வாறு விடபட வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுத்து அவர்களின் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்திக் கொடுக்கிறோம்.

ஆனந்தத்தை பணத்தாலும் குணத்தாலும் வாங்க முடியாது. அது நல்ல மனத்தால் மட்டுமே வாங்க முடியும். மனதை அழுக்காக்கினால் தீங்கு வரும், அதை சரிசெய்து விட்டால் நன்மை வரும்.

கே: i2c யின் தனித்தன்மைகள் பற்றி?

தன்னைப் பற்றி தானே உணர்வது தான் இதன் தனித்தன்மை. நமக்கு அடையாளம் கொடுத்தவர்கள் பெற்றோர்கள். படிப்பு சொல்லிக் கொடுத்தவர்கள் ஆசிரியர்கள். இப்படி ஒவ்வொருவரின் வாழ்விலும் அவர்களின் வளர்ச்சிக்கு பலர் துணையாக இருப்பார்கள். இதை மட்டுமே நம் மனம் கருத்தில் கொள்ளும், அவ்வாறு கொள்ளும் பொழுது நீங்கள் யார் நீங்கள் உணர தவறுகிறீர்கள். இதை தான் நாங்கள் சொல்லிக் கொடுக்கிறோம்.

நிறைய பெற்றோர்கள் பயிற்சி முடிந்த பின்னர் என்னுடைய குழந்தை மற்ற பிள்ளைகளிடம் பேசவோ, விளையாடவோ மாட்டேன். எங்களுக்கு இது மிகப்பெரிய கவலையாக இருந்தது. எங்களிடம் வந்த பிறகு அந்த கூச்சம் அகன்று இன்று எல்லோரிடத்திலும் சகஜமாகப் பழகி வருகிறான் என்பதை பெருமையாகக் கூறுகிறார்கள். இது எங்களின் வெற்றியாகக் கருதுகிறேன்.

ஒவ்வொரு நாளும் புதிய புதிய பயிற்சிகள் கொடுக்க முற்படுகிறோம். மற்ற எங்கும் கிடைக்காத பயிற்சிகள் எல்லாம் எங்கள் இடத்தில் கிடைக்கிறது. அதற்கு காரணம் எங்களை நாங்கள் எப்போதும் தயார்படுத்திக் கொள்கிறோம்.

கே: அந்த அமைப்பில் ஆசிரியர்களை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறீர்கள்?

தற்போது எங்களிடம் ஏழு ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்கள் அனைவரும் மிகவும் அனுபவம் பெற்றவர்கள்.

இவர்கள் முதலில் அன்பானவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் இதில் அவர்களால் இயங்க முடியும்.

கற்றுத்தருபவர்கள் கலகலப்பாக இருந்தால் தான் கற்பவர்களுக்கு கலகலப்பைக் கொடுக்க முடியும் என்பதால், ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதில் பெரிதும் கவனம் செலுத்துகிறேன்.

யோக நெறிக் கற்றவர்களாக இருப்பார்கள். அதுமட்டுமின்றி இது வெறும் பாடம் போதிக்கும் கல்வி அல்ல. ஆரோக்கியம், ஆனந்தம் சார்ந்த கல்வி அதை அவர்கள் கருத்தில் கொண்டு அவர்களுக்குப் போதிக்க வேண்டும்.

நானும் என்னிடம் பணியாற்றும் அத்துனை ஆசிரியர்களும் பயிற்சிக்கு வரும் மாணவர்களை தங்கள் பிள்ளைகள் போல் பாவித்து அவர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொடுத்து வருகிறார்கள்.

கே: உங்களின் தாரக மந்திரம்?

5 ல் வளையாதது 15 ல் வளையும் என்பது தான் என்னுடைய தாரக மந்திரம். எங்களிடம் வருபவர்கள் எல்லா வயதிலிருந்தும் வருகிறார்கள். வயதிற்கு ஏற்றார் போல் எங்களின் அணுமுறை கொடுத்து வருகிறோம். சிரிக்காத குழந்தை, சிந்திக்காத குழந்தை, மனதை கட்டுபடுத்த முடியாத குழந்தை, மற்றவர்களிடம் பழகாத குழந்தை என பல நிலைகளில் வருவார்கள். அவர்களுக்கு தொடர்ந்து 12 நாட்கள் பயிற்சி கொடுப்போம் 12 நாட்கள் முடித்த பிறகு அவர்களே ஆச்சரியம் படும் அளவிற்கு அவர்களை மாற்றி விடுவோம். அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் அத்தனை கலைகளும் எங்களிடம் இருக்கிறது. இது போல தான் பெரியவர்களுக்கு ஏற்படும் மனபிறழ்தல், மன அழுத்தம், துன்பங்கள் போன்றவை எங்களால் தீர்வு காண முடிகிறது.

கே: இந்தப் பயிற்சியின் பலன்கள்  பற்றி சொல்லுங்கள்?

இந்தப் பயிற்சிகள் பன்முகத்திறமை கொண்டது. ஆனந்தம், ஆரோக்கியம், ஆளுமைப்பண்பு வளர்த்தல், தன்னம்பிக்கையை உணர்தல், தன்னைப் பற்றி அறிதல், தைரியம் வரவழைத்தல், புத்துணர்ச்சியுடன் மனமகிழ்ச்சியைத் தரல், தனிமனித மாற்றம், சிக்கல்களின் தீர்வுகள்  போன்றவை இதன் தலையாயப் பணிகளாகும்.

மன உலைச்சல், அலைச்சல் அகன்று முகமலர்ச்சியைக் கொடுத்தல். எல்லா நிலைகளிலும் அவர்களுக்கு ஆனந்தத்தைக் கொடுத்தல்.

தீர்வு காண முடியாத பிரச்சனை என்று  வருபவர்களுக்கு கூட, அந்தப் பிரச்சனை இனி அவர்களின் வாழ்க்கையில் ஏற்படா வண்ணம் அவர்களுக்கு ஊக்கம் அளித்தல்.

18 வயது முதல் 60 வயது வரை கவலையின்றி வாழ்க்கையை ஆனந்தமாய், அற்புமாய் மாற்றம்  கொடுக்கக்கூடிய வகையில் பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது.

கே: மன அழுத்தம் ஏற்பட காரணம் அதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றிச் சொல்லுங்கள்?

ஒரு நிகழ்வை ஒருவர் தவறாகச் செய்து விடுகிறார். அந்தத் தவறை ஏன் செய்தோம், எதற்காக செய்தோம், எப்படி செய்தோம் என்று யோசித்து அந்தத் தவறைத் திருத்திக் கொண்டால் நன்மை பயக்கும். ஆனால் அதை விட்டுவிட்டு எப்படித் தவறாக நடந்து விட்டதே இனி வாழ்க்கையே பறிபோய் விட்டது என்று அதை மறக்காமல் நினைத்துக் கொண்டே இருந்தால் மன அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதனைத் தீர்க்க வேண்டும் என்றால் அதிலிருந்து வெளி வர வேண்டும். அவ்வாறு வெளி வந்தாலே பாதி பிரச்சனைக்கு தீர்வு கண்டு விடலாம்.

மன அழுத்தம் தான் நிறைய நோய்களுக்கு காரணமாக இருக்கிறது.  இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

நீ நீயாக இரு.. வில்லென்றால் அம்பாக இருக்க வேண்டும், துப்பாக்கி என்றால் குண்டாக இருக்க வேண்டும். அது தான் உன்னுடைய சாதிப்பின் வழித்தடமாகும்.

கே: தன்னம்பிக்கை வாசகர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?

நான் எப்போதும் எல்லோரிடமும் ஒன்றை மட்டும் சொல்லிக் கொண்டே இருப்பேன். அது தான் தன்னம்பிக்கை என்ற ஒற்றை வார்த்தை. எந்தச் சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை மட்டும் கை விட்டுவிடாதீர்கள். உங்களின் வாழ்க்கையில் வெற்றிப் பெற வேண்டுமா? தன்னம்பிக்கையை இறுக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள்.

தோல்வி உன்னைத் துரத்தும், வறுமை உன்னை வாட்டும், ஏழ்மை உன்னை வீழ்த்தும், சங்கடம் உன்னை சாய்க்கும், தவறுகள் உன்னை தத்தளிக்க வைக்கும் எல்லாவற்றிலுருந்தும் உன்னை மீட்டெக்கும் ஒரே ஆயுதம் தன்னம்பிக்கை மட்டுமே.

கே: எதிர்கால இலக்கு பற்றி?

எண்ணம் நன்றாக இருந்தால் இலக்குகள் பெரிதாக இருக்கும். அது போல தான் என்னுடைய இலக்கும் மிகப் பெரியது. வசதியில்லாத மாணவர்களுக்கு நுண்சார் அறிவுத்திறன் மிகவும் அதிகமாக இருக்கும், அவன் படிப்பிலும் விளையாட்டிலும் மிக பெரிய அளவில் திறன் மிக்கவனாக இருப்பான். இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு என்று ஒரு பள்ளிக்கூடம் தொடக்க வேண்டும். அதுவும் அவனுக்கு இலவசமாகக் கல்விக் கொடுக்க வேண்டும். படிப்பு விளையாட்டு என எல்லாத்துறையும் இப்பள்ளியில் கொடுக்க வேண்டும். இது என்னுடைய ஆசை, கனவு, இலட்சியம், இலக்கு, நோக்கம் எல்லாம் இது தான்.[/hide]

இந்த இதழை மேலும்

உழைப்பை விதையாக்கு… உயர்வை வலிமையாக்கு…

Dr. K. K.கிருஷ்ணமூர்த்தி

ISCOP (Indian Society for Certification of organic products) தலைவர். 

ACCOPSA(Agricultural College Coimbatore  Past Students’ Association) தலைவர்.

Homeopathist, கோவை.

குலன் அருள் தெய்வங் கொள்கை மேன்மை

கலைபயில் தெளிவு கட்டுரை வன்மை

நிலம் மலை நிறைகோல் மலர் நிகர் காட்சியும்

உலகியல் அறிவோடு உயர்குண இணையவும்

அமைபவன் நூல் உரை ஆசிரியனே…

எனும் நூற்பாவில் நன்னூலார் நல்லாசிரியர் பற்றி எட்டு வகை பண்புநலன்களை வரிசைப்படுத்திக்கூறுவர். இவ்வரிசையில் சற்றும் வழித்தவறாதவர்.

இறை நம்பிக்கையோடு தன்னம்பிக்கையால் இன்று தரணியெங்கும் தனிமுத்திரை பதித்துவருபவர்.

வேளாண் அறிவியல் துறையில் ஆழ வேரூன்றியவர். மண்ணியல் துறையில் மகத்தான சாதனை புரிந்தவர்.

இறைவா இறைவா என்று இருந்தால் எப்போதும் நிறைவாய் நிறைவாய் இருப்பாய் என்பது தான் இவரின் தாரக மந்திரம்.

பழகுவதற்கு எளியவர், பண்பில் பெரியவர், எழுத்தாளர், பேச்சாளர், வேளாண் ஞானி, ஹோமியோபதி மருத்துவர், என பன்முகத்திறமை கொண்ட பேராசிரியர், ISCOP மற்றும் ACCOPSA  ஆகியவற்றின் தலைவர், KKK என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும்  DR. K. K.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு.

கே: உங்களின் பிறப்பும் இளமைக் காலத்தைப் பற்றியும் சொல்லுங்கள்?

பழைய சேலம் மாவட்டம் இன்றைய நாமக்கல் மாவட்டத்திலுள்ள கொன்னையார் என்னும் குக்கிராமம். அப்பா காளியண்ணன் கவுண்டர் மிராசுதாரர் என்று அழைப்பார்கள். விவசாயப் பின்னணி உடைய குடும்பம். எங்களுக்குச் சொந்தமாக நிறைய விளை நிலங்கள் இருந்தன. காலப்போக்கில் எங்களால் விவசாயத்தைத் தொடர்ந்து கவனிக்க முடியவில்லை. இதனால் எங்கள் பண்ணையில் வேலை பார்த்தவர்களுக்கே நிலத்தை விற்றுவிட்டோம். என்னுடைய பள்ளிக்கல்வி என்று பார்த்தால் திருச்செங்கோடு அரசுப்பள்ளியில் தான் பத்தாம் வகுப்பு வரை படித்தேன். பள்ளியில் நன்றாகப் படிக்கும் மாணவன். ஆசிரியர்களிடத்தில் நற்பெயர் கொண்ட மாணவன். பத்தாம் வகுப்பு முடித்தவுடன் சென்னை லயோலா கல்லூரியில் மேற்படிப்பு படிக்கச் சென்று விட்டேன். என்னுடைய கனவு ஒரு மருத்துவராகி மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்பதாகவே இருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த ஆண்டு மருத்துவத்துறையில் இடம் கிடைக்கவில்லை. இதனால் வேளாண் கல்லூரியில் சேரலாம் என்று முடிவெடுத்துவிட்டேன்.

கே: சொந்த ஊரிலிருந்து கோவை வந்தது குறித்து சொல்லுங்கள்?

மருத்துவராக வேண்டும் என்ற கனவு சில காரணங்களால் தடைப்பட்டது. இதனால் கோவையிலுள்ள வேளாண் கல்லூரியில் பி.எஸ்.சி (அக்ரி) பட்டத்திற்கு விண்ணப்பித்தேன்.அதன் படி எனக்கு அங்கு பயில அனுமதி கிடைத்தது. பி.எஸ்.சி யில் சேர்ந்தேன்.  ஆனாலும் மருத்துவராகவில்லையே என்று எனக்கும் என் குடும்பத்திற்கும் ஒரு ஆதங்கம் இருந்தது. ஒரு வருடம் பி.எஸ்.சி முடித்தவுடன் அடுத்த ஆண்டு மருத்துவதுறைக்கு விண்ணப்பித்தேன். விண்ணப்பித்த சில நாட்களில் எனக்கு பயில இடம் கிடைத்தது.  ஆனால் எனக்கு இளம் வயதிலிருந்தே இறை நம்பிக்கை அதிகளவில் இருந்ததால் பி.எஸ்சி(அக்ரி)யை வெற்றிகரமாக முடித்தேன். அக்காலத்தில் பி.எஸ்.சி முடித்தால் மேற்படிப்பு படிக்க இங்கு இடம் இல்லை. ஒன்று டெல்லி செல்ல வேண்டும் இல்லையென்றால் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்ற நிலை இருந்தது.  என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது அதே கல்லூரியில் அதே ஆண்டு எம்.எஸ்.சி பாடப்பிரிவுகளைக் கொண்டு வந்தார்கள். அப்போதும் நான் இறைவனுக்கு நன்றி சொன்னேன். மீண்டும் அதே கல்லூரியில் தொடர்ந்து படிக்கும் வாய்ப்புப் பெற்று  வெற்றிகரமாக முடித்தேன்.

கே: மண்ணியல் துறையைத் தேர்ந்தெடுத்ததன் காரணத்தைச் சொல்லுங்கள்?

வேளாண் துறையில் பல துறைகள் இருக்கின்றன. எனக்கு மிகவும் பிடித்த துறை மண்ணியல் துறை ஆகும். இதனால் முனைவர் பட்ட ஆய்வேட்டிற்கும் மண்ணியல் துறையில் தான் ஆய்வு செய்தேன். இப்பல்கலைக்கழகத்தில் முதல் முனைவர் பட்ட ஆய்வாளர் நான்தான். அப்போது என்னுடன் படித்த நண்பர்கள் எம்எஸ்சி முடித்தவுடன்  DAO பணியில் சேர்ந்து விட்டார்கள். இப்பணியில் பணியாற்றும் போது அவர்களுக்குத் தனி வாகனம் தரப்பட்டது மற்றும் பச்சை மையில் கையெழுத்து இடலாம் அந்தளவிற்கு அது (GAZETTED OFFICER) உயர்ந்த பதவி தான். அவர்கள் என்னைப் பார்த்து இன்னும் படித்துக் கொண்டு தான் இருக்கிறாயா என்று ஏளனமாகக் கேட்பார்கள். என்னுடைய ஓரே ஆசை எப்படியும் முனைவர் பட்டம் (Ph.D) முடிக்க வேண்டும் என்பதுதான்.

கே: நீங்கள் பணியாற்றிய முதல் வேலை அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்?

பி.எச்.டி முடித்தவுடன் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்தேன். அரசு வேளாண் வேதியியலார் (Govt Agri Chemist) என்ற பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். என்னுடைய 32 ஆம் வயதில் பேராசிரியர் பதவி வகித்தேன். 1971 ஆம் ஆண்டு வேளாண்மைப் பல்கலைக்கழகமாக உருவானது. அப்போது அப்பல்கலைக்கழகத்தின் முதல் பேராசிரியர் நான். என்னுடன் என்னுடைய குரு டாக்டர். மரியகுழந்தை மற்றும் ஜான் துரைராஜ் அவர்களும் பணியாற்றினார்கள். பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுது எனக்கு மதுரைக்குப் பணிமாறுதல் கிடைத்தது. அடுத்த நாளே செல்ல வேண்டும் என்று என்னைத் தயார் படுத்திக் கொண்டிருந்தேன். ஆனால் பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு வழிகாட்டுதல் செய்ய பேராசிரியர் இல்லாமல் போய்விடுமே என்று எங்கள் கல்லூரி முதல்வர் நினைத்தார். இதனால் என்னை அழைத்து மதுரைக்குச் செல்ல வேண்டாம். இங்கேயே பணியாற்றுங்கள் என்று சொல்லிவிட்டார். நாட்கள் சென்றன அடுத்தடுத்து சில பதவி உயர்வுகள், அதன் மூலம் பல்வேறு நலத்திட்டங்களைச் செய்து வந்தேன்.

கே: மதுரை வேளாண்மைக் கல்லூரியில் நீங்கள் முதல்வராய் பொறுப்பேற்ற பின் கொண்டு வந்த திட்டங்கள் பற்றி?

மதுரை வேளாண் கல்லூரி அப்போது மாணவர்களின் சண்டைக்கும் சச்சரவுக்கும் மிகவும் பெயரெடுத்த கல்லூரியாக இருந்தது. அப்போது  ஓரு நாள் திடீரென்று தொலைபேசி அழைப்பு வந்தது. அழைப்பில் சார்  கல்லூரி முழுவதும் ஒரே பிரச்சனையாக இருக்கிறது நீங்கள் உடனே வாருங்கள் என்று சொன்னார்கள். நானும் விரைந்து சென்று பார்க்கும் பொழுது கல்லூரியில் நிறையப் பொருட்கள் சேதாரமாகி இருப்பதைப் பார்த்தேன். காலவரையறையின்றி விடுமுறை அறிவிக்கப்பட்டது. மாணவர்கள் அனைவரும் வீட்டுக்கு அனுப்பப்பட்டனார்கள் அவர்களுக்கு ‘உங்களால் கல்லூரி பெரிய அளவில் பாதிப்பு அடைந்திருக்கிறது, இதனால் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தினால் தான் மீண்டும் இக்கல்லூரி திறக்கப்படும் என்று கடிதம் அனுப்பினேன். நான் குறிப்பிட்ட நாளுக்குள் அனைத்து மாணவர்களும் முழுமையாக பணத்தைக் கொடுத்துவிட்டார்கள். பணியில் சேர்ந்த முதல் நாளே, “இத்தனை நாட்கள் கல்லூரி எப்படியிருந்தது என்று எனக்குக் கவலையில்லை, இனிமேல் இக்கல்லூரி கட்டுப்பாடும் ஒழுக்கமும் உடையதாக இருக்க வேண்டும் என்று ஆசிரியர்களையும் மாணவர்களையும் அழைத்துக் கட்டளையிட்டேன். அப்போதே நான் கண்டிப்பான ஆசிரியர் என்பதை அனைவரும் உணர்ந்தனர்.

உங்களுக்கு என்ன பிரச்சனையாக இருந்தாலும் உடனுக்குடன் என்னிடம் நேரடியாகத் தெரிவியுங்கள் என்று சொல்லியிருந்தேன். நிறைய மாணவர்கள் முதல்வரை சந்தித்துப் பேசுவதற்கு அச்சம் கொள்வார்கள். ஆனால் அப்போது சைலேந்திரபாபு என்ற இரண்டாம்  ஆண்டு படிக்கும் மாணவர் என்னைப் பார்க்க அனுமதி கேட்டிருந்தார். உள்ளே வந்தவுடன் மாணவர்கள் விடுதியில் சில பிரச்சனைகள் இருக்கிறது, அதை நீங்கள் தீர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அவரின் கோரிக்கையை ஏற்று விடுதிக்குச் சென்று பார்த்தேன். அதை உடனே நிவர்த்தி செய்து வைத்தேன். அவர்தான் தற்போது காவல் துறையில் பணியாற்றும் Dr.சி.சைலேந்திரபாபு IPS,  DGP, ரெயில்வே துறை, தமிழ்நாடு அவர்கள்.

அதே போல் ஒரு நாள் கல்லூரியின் கடைநிலை ஊழியர் என்னைச் சந்திக்க வந்தார். அவர் ஐயா நாம் கல்லூரியின் நுழைவாயிலில் உள்ள பவுன்டன்(Fountain) உடைந்து விட்டது. அதை சரிசெய்யுங்கள் என்று என்னிடம் கூறினார். அதையும் உடனே நிவர்த்தி செய்தேன்.

கல்லூரியில் முதல்வர் பொறுப்பை ஏற்ற முதல் நாளே ஏற்கனவே திட்டமிட்டபடி வட இந்தியாவில் பஞ்சாப், ஹரியானா போன்ற இடங்களுக்கு வேளாண் அறிவியல் கருத்தரங்களில் ஒரு வாரத்திற்கு போய் கலந்து கொள்ள சென்றிருந்தேன். அங்கிருந்து திரும்பி கோவை வந்தேன்.

மேலும் கல்லூரியில் விளையும் தானியங்கள், காய்கறிகள், பழங்கள், முட்டை போன்றவற்றை வெளியில் கொடுப்பதை விட, விடுதி மாணவர்களுக்குக் கொடுத்துவிடுங்கள் என்று சொன்னேன்.

கே: முத்தமிழ் விழா தொடங்கியது பற்றிச் சொல்லுங்கள்?

நான் எது செய்தாலும் மாணவர்களின் எதிர்கால வாழ்விற்கு மிகவும் பயன் உள்ளதாக இருந்தால் மட்டுமே அதை நடை முறைப் படுத்துவேன். அப்படிக் கொண்டு வந்த பல திட்டங்கள் ஏராளமாக இன்றளவிலும் அக்கல்லூரிரியில் நினைவு கூறத் தக்க வகையில் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த முத்தமிழ்விழா முதல்நாள் தொடக்க விழாவில்  ஒரு மாணவன் என்னை அறிமுகம் செய்து வைக்கும் பொழுது KKK என்பது அவரின் பெயர் சுருக்கம் மட்டுமல்ல கடமை, கண்ணியம் கட்டுப்பாடு என்பதின் சுருக்கம் என்று சொன்னார். மேலும் நீங்கள் வெண்மைப்புரட்சி, நீலப்புரட்சி, பசுமைப்புரட்சி போன்றவற்றைப் பார்த்திருப்பீர்கள், இந்தக் கல்லூரியில் முதல்வர் அய்யா செய்வதே அன்புப் புரட்சி என்று கூறி என்னை நெகிழ வைத்தார்கள்.

கே: நீங்கள் எழுதிய நூல்கள் பற்றி?

எண்ணங்களும் வாழ்க்கையும், அமைதியைத் தேடி, உலக மதங்களும் உன்னத நோக்கும், வாழ்வில் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை, Organic Agriculture for Sustainability போன்றவை.

கே: பணி ஓய்வுக்குப்பின் ISCOP தொடங்கலாம் என்று உங்களுக்கு எப்படித் தோன்றியது?

மனமே சொர்க்கத்தையும் நரகத்தையும் தீர்மானிக்கிறது.  ஓய்வெடுத்தால் மனமும் உடலும் துருப்பிடித்துவிடும். மேலும் நீங்கள் குளங்குட்டையாகவும் இருப்பதை விட நதியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான்.  நதி ஓடும் இடமெல்லாம் பசுமையைத் தந்து விட்டுச் செல்லும். இறுதியாகக் கடலில் கலக்கும், அதுபோலத் தான் மனிதனும் இருக்கும் வரை மற்றவர்களுக்கு உதவி புரிந்து இறுதியாக இறைவனை அடையவேண்டும்

யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று நான் எப்போதும் நினைப்பதுண்டு. நான் கற்ற கல்வி மற்றவர்களுக்கு ஏதேனும் ஒரு வகையில் போய்ச் சேர வேண்டும் என்று எண்ணித் தொடங்கியது தான் இந்த ISCOP நிறுவனம்.[hide]

கே: ISCOP நிறுவனத்தின் நோக்கங்கள் என்ன?

இஸ்காப் நிறுவனம் இயற்கை வழிச் சான்றிதழ் வழங்குகிறது. இதற்குரிய ஆய்வாளர்களுக்கு பயிற்சி அளிக்கிறது. இஸ்காப்பில் சான்றிதழ் மட்டுமே தர முடியும்.

இந்நிறுவனத்தில் நான்கு விதமாக சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அவை

  1. பயிர் உற்பத்தி செய்தல் (CROP PRODUCTION)
  2. பதனிடுதல் சான்றிதழ் (PROCESSING)
  3. கணக்கிடுதல் சான்றிதழ் (TRANSACTION)
  4. விற்பனை சான்றிதழ்( TRADE)

உதாரணமாக நீங்கள் நாளை ஆர்கானிக் (ORGANIC) விவசாயம் செய்கிறீர்கள் என்றால் இன்றே நீங்கள் இராசயன இடுபொருட்கள் எதுவும் பயன்படுத்தக்கூடாது. இயற்கை இடு பொருட்ககளைத் தான் இடவேண்டும்.

ஆர்கானிக் முறையில் விவசாயம் செய்பவர்களுக்கு என்று எங்களிடம் ஒரு விண்ணப்பம் இருக்கிறது. அந்த விண்ணப்பத்தில் அவர்களுக்கு சொந்தமாக நிலம் எவ்வளவு இருக்கிறது. பட்டா, சிட்டா , நிலம் வரைப்படம் போன்றவற்றை அதில் குறிப்பிட வேண்டும். இதைப் போன்ற பல தகவல்கள் கேட்கப்பட்டிருக்கும் ஒரு விரிவான படிவத்தை அவர்கள் நிரப்பி எங்களுக்கு அனுப்ப வேண்டும்

அதன் பிறகு எங்கள் நிறுவன விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் விவசாயிகளின் நிலத்திற்குச் சென்று நேரடியாகப் பார்வையிடுவார்கள், அவர்கள் பார்த்து ஆய்வறிக்கை கொடுப்பார்கள் அதை மதிப்பிடுவார், மதிப்பிட்ட பின்னர் அதை தரக்கட்டுப்பாடு அதிகாரிக்கு அனுப்பி வைப்போம், அதன்பிறகு எல்லாமே சரியாக இருக்கிறதா என்று பார்ப்பார்கள். இறுதியாக என்னிடம் வரும். அதை நான் சரிபார்த்த பின்னர், தகவல்களை டெல்லிக்கு அனுப்பி வைப்போம். அவர்கள் அதைச் சரிபார்த்து சான்றிதழ் கம்யூட்டர் மூலம் அனுப்புவார்கள் அதில் நான் கையொப்பமிட்ட பிறகு சான்றிதழ் வழங்கப்படும்.

இச்சான்றிதழை ஒரு ஆண்டுக்கு மட்டும் தான் பயன்படுத்த முடியும், ஒரு ஆண்டு முடிந்ததும் மீண்டும் அதைப் புதுப்பிக்க வேண்டும். முதல் ஆண்டு சான்றிதழை சி1 என்றும், இரண்டாமாண்டு சி2 என்றும், மூன்றாமாண்டு சி3 என்றும் சான்றிதழ் தருகிறோம். மூன்று ஆண்டுகள் இப்படி சான்றிதழைப் பெற்று விட்டால், மூன்றாம் ஆண்டு முடிவில் இது ஆர்கானிக் விவசாயம் தான் என்று சான்றிதழ் கிடைத்துவிடும்.

எங்களிடம் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் இருக்கிறார்கள். அனைவரும் சரியாக ஆர்கானிக் முறையைப் பின்பற்றி வருகிறார்கள்.

கே: KIADEF யில் நீங்கள் இணைந்து  கொண்டது பற்றியும் அதன் நோக்கங்கள் பற்றியும் சொல்லுங்கள்?

இந்த KIADEF (Krishnamurthi International Agricultural Development Foundation) நிறுவனம் என்னுடைய குருவும் வழிகாட்டியாகவும் விளங்கியபேராசிரியர் முனைவர் S. கிருஷ்ணமூர்த்தி அவர்களால் துவங்கப்பட்டது. Dr.S.K அவர்கள் தனக்குப் பின்னர் நான் தான் பொறுப்பேற்று நடத்த வேண்டும் என்று பெரிதும் விரும்பினார். அவரின் வேண்டுதலாலும் வழிகாட்டுதலாலும் நான் இந்நிறுவனத்தில் என்னுடைய பொறுப்பில் எடுத்து நடத்தி வருகிறேன்.

கிடாஃப் நிறுவனத்தின் மூலம் தேவையானவர்களுக்கு நிலத்தை மேம்படுத்தவும், பால்பண்ணைண பராமரிக்கவும் மற்றும் வேளாண்மை சம்மந்தப்பட்ட பல விதமான ஆலோசனைகளும் உத்திகளும் தரப்படுகின்றன. இதற்கு வேண்டிய புராஜெக்ட் தயார் செய்து கொடுக்கப்படுகிறது. மேலும் வேளாண்மை சார்ந்த பல தொழில் நுணுக்கங்கள் போன்ற பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. உதாரணமாக ஒரு நாள் காளான் வளர்ப்புப் பயிற்சி போன்றவை.

கே: இந்த நிறுவனங்கள் வேளாண் விஞ்ஞானிகள்,எந்தெந்த துறையில் எத்தனை பேர் பணியாற்றுகிறார்கள்? அவர்களின் பணி குறித்து?

வேளாண்மையில் பலதுறைகள் உள்ளன. மண்ணியல், உழவியல், தாவரவியல், பயிர்ப்பூச்சி இயல், பயிர் நோயியல், பொருளாதாரம், வேளாண்மை விரிவாக்கம் போன்றவை. இதில் ஒவ்வொரு துறையிலும் பல்லாண்டு காலம் பணியாற்றி ஓய்வு பெற்ற வல்லூநர்கள் 18 பேர் இஸ்காப்பில் பணிபுரிகிறார்கள்.

கே: வேறு நாடுகளில் இயற்கை வேளாண்மை உள்ளதா?

உலகத்தில் சுமார் 138 நாடுகளில் இயற்கை வழி வேளாண்மை பின்பற்றப்படுகிறது. இதில் முதன்மையில் இருப்பது கியூபா, ஆஸ்ட்ரியா, ஆஸ்திரேலியா, பூடான் போன்ற நாடுகள்.

கே: இயற்கை வேளாண்மை செய்து, நமது இந்தியாவின் உணவு வேளாண் உற்பத்தி இலக்கை எட்டி விட முடியுமா?

எல்லா விவசாயிகளும் பெரிய அளவில் இயற்கை வழி வேளாண்மையை மேற்கொண்டால் நம்முடைய உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியும் என்பது திண்ணம். இதற்கு அரசின் துணையும் நிதி உதவியும் தேவை.

கே: ஹோமியோபதி, பிராண சிகிச்சை போன்றவற்றிலும் தாங்கள் அறிவாற்றல் மிக்கவராக விளங்குகிறீர்கள். அதில் எப்படி தங்களுக்கு ஆர்வம் உண்டானது?

நான் மக்கள் நல்ல உடல்நலம் பெற்று ஆரோக்கியமாக நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்பதில் அதிக அக்கறை கொண்டுள்ளேன். நான் முதலில் கூறியது போல மெடிக்கல் கல்லூரியில் சேர முடியவில்லை என்றாலும் என்னுடைய ஆழமான எண்ணம் ஹோமியோபதி, பிராண சிகிச்சை ஆகியவற்றைக் கற்றுக் கொள்ள என்னை என்னுடைய உள்ளுணர்வு இறை உணர்வு தூண்டியதன் மூலம் நான் மற்றவர்களின் நலனுக்காகவே இதை மேற்கொண்டுள்ளேன்.

கே: சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து, வேளாண் துறையில் மிக உயர்ந்த நிலைக்கு வந்துள்ளீர்கள்? அதற்கு எவை காரணமாக இருக்கும் என்று நம்புகிறீர்கள்?

தன்னம்பிக்கை, தளராத உழைப்பி நல்லெண்ணம், கனிவு, கருனை, பிறர்நலத்தில் மிகுதியான நாட்டம் இவற்றுடன் இறையருளும் சேர்ந்து என்னை உயர்த்தியிருக்கின்றது என்பதை அனுதினமுமத்  உளமார உணர்கிறேன்.

கே: குடும்பம் குறித்துச் சொல்லுங்கள்?

மனைவியார் திருமதி. சௌந்தரம் இல்லத்தரசி. எங்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். ஒரு ஆண் பிள்ளை இருக்கிறார்கள். முதல் பெண் டாக்டர் சாந்தி அவரின் கணவர் டாக்டர் தேவராஜ், இவர்களுக்கு விவேக் தேவராஜ், நிவேதிதா தேவராஜ் என்ற குழந்தைகள். விவேக் திருமணமாகி அமெரிக்காவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். நிவேதிதா எம்.டி பட்டம் பெற்றுள்ளார். இவர்களும் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். இரண்டாவது பெண் சக்தி பொறியியலாளர் இவர் கணவர் செந்தில் இருவரும் பொறியியல் துறையைச் சார்ந்தவர்கள். அவர்களுக்கு சவிதா என்ற மகள் இருக்கிறார்கள். எனது மகன் கிருஷ் சிவக்குமார் அவரின் மனைவி ஹேமலதா இவர்களின் குழந்தைகள் நிலா சிவக்குமார் மற்றும் ஆதவ் சிவக்குமார் இவர்களும் அமெரிக்காவில் வசிக்கிறார்கள்.

கே: தன்னம்பிக்கை இதழின் நிறுவனர் இல.செ.க அவர்கள் தங்களோடு பணியாற்றியவர். அவரைப் பற்றி ஓரிரு வார்த்தைகள்?

திரு.இல.செ.க அவர்கள் மிகச்சிறந்த அறிவாற்றலுடையவர். தான் நினைத்ததை அப்படியே சொல்பவர். செயலாற்றுபவர், நேரம் உயர் போன்றது எனக் கருதுபவர். வேளாண்மையில் வித்தகராகிப் பல நூல்கள் எழுதியுள்ளார். மற்றவர்கள் நலம் கருதி சர்வ சதாகாலமும் உழைப்பவர். குறிப்பாக இளைஞர்களை நல்வழிப்படுத்துவர், நல்ல நண்பர்.

கே: தன்னம்பிக்கை வாசகர்களுக்கு நீங்கள் கூறும் ஆலோசனைகள்?

ஆக்கம் அதிர்வினாய்ச் செல்லும் அசைவிலா

ஊக்க முடையா னுழை.

இக்குறளின் வழி பத்து வகை உடைமைகளை கடைபிடித்தால் நீங்கள் மிகச்சிறந்த மனிதர்களாக வாழ்ந்து வளமைப் பெற முடியும்.[/hide]

இந்த இதழை மேலும்

முடியும் வரை முயற்சி…! தினந்தோறும்  தரும்  மகிழ்ச்சி…!

மு.மாரிராஜன்

நிறுவனர், REMINGO – Reminder on the GO,

MKSG Solutions PVT.LTD, நவி மும்பை.

வாழ்க்கையில் தன்னம்பிக்கை இருந்தால்

எல்லாம் வந்துவிடும்…என்னும் வார்த்தை தான் இவரின் வர்த்தக வரிகள்..

ஒவ்வொரு நாளும் ஏதேனும் புதுமையை படைக்க வேண்டும், அந்தப் புதுமைகள் எல்லோருக்கும் ஒரு புத்துணர்வு கொடுக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு நாளும் புதுமையைப் படைத்து வரும் மனிதர்.

கணினித் துறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் இவர் கணினித் துறையில் பல்வேறு மாற்றங்களையும், சமுதாயத்திற்குத் தேவûயான தொழில் நுட்பத்தையும் தனது அசாத்திய திறமையால் கொண்டு வந்தவர்.

கணினித் துறையில் இந்திய மற்றும் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களாகிய Motorola, Anderson Consulting, ONGC, Cibatul, Airfreight, DHL மற்றும் சிங்கப்பூர் தொலைத் தொடர்பு நிறுவன குழுமம் ஆகியவற்றில் இணைந்து பணியாற்றிய அனுபவம் மிக்கவர். அரசு மற்றும் அரசு சாரா துறைகளில் பணிபுரிந்து அனுபவம் பெற்ற இவர் ரோபாட்டிக்ஸ் ஆட்டோமேஷன், டிஜிட்டலேசன் போன்ற துறைகள் ஆழ்ந்த  அனுபவம் மிக்கவர்.

VHNSN கல்லூரியில் இளங்கலை இயற்பியல் துறையில் பட்டம் பெற்றவர், பின்னர் முதுகலை டிப்ளமோ படிப்பை முடித்த அவர் ஆஸ்திரேலியாவிலுள்ள கர்டின் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில் நுட்பத்துறையில் எம்பிஏ பட்டமும் பெற்றிருக்கிறார்.

இவரின் முன்னோடியான கல்விக்கண் திறந்த காமராஜரின் வழி பல குழந்தைகளுக்கு கல்வி பயில உதவி செய்து கொண்டிருக்கிறார்.

தான் பிறந்த சமுதாயத்தில் தன்னால் ஆன கடமைகளை தனக்கும் உகந்து தன் தாய் நாட்டிற்கும் உதவ வேண்டும் என்று கணினித் துறையில் பல மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

உலக நாடுகள் பலவற்றிற்கு பயணம் செய்து, அங்கெல்லாம் தனது திறமையால் புகழ்கொடி நாட்டியவர் REMINGO – Reminder on the GO நிறுவனர் மு.மாரிராஜன் அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு…

கே: உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

நான் பிறந்தது ஸ்ரீவில்லிப்புத்தூர். தந்தை திரு. வீ. முத்துகிருஷ்ணன் விவசாய பின்னணி உடைய குடும்பம்.. அவர் சுயத்தொழில் செய்து விட்டு பின்னர் இந்திய தபால் தந்தித் துறையில் வேலை செய்து கொண்டிருந்தார்.  ஆனாலும் எங்கள் பள்ளி காலம் முழுவதும் விருதுநகரில் தான் இருந்தது. என் தாயார் திருமதி. கோவிந்தமாள் இல்லத்தரசி. என்னுடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணன்,  ஒரு அக்காள், ஒரு தங்கை. என்னுடைய படிப்பு விருதுநகரிலுள்ள திருவள்ளுவர் வித்யா சாலை மற்றும் சத்திரிய வித்யா சாலை ஆகிய பள்ளிகளில் படித்தேன். பள்ளியில் படிக்கும் போது நன்றாகப் படிக்கும் மாணவன் தான் ஆனாலும் குறும்புக்கும் துறுதுறுக்கும் சற்றும் குறைவில்லாமல் இருந்தேன்.  கால்பந்து விளையாட்டின் மீது எனக்கு அளப்பரிய ஆசை நன்றாக விளையாடுவேன். அது மட்டுமின்றி என்சிசி யிலும் இருந்தேன்.   படிப்பின் மீது இருந்த  பற்றுதலால் என்னுடைய  பள்ளிப் படிப்பை வெற்றிகரமாக முடித்து VHNSN கல்லூரியில் பி.எஸ்.சி. இயற்பியல் துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்தேன்.  மூன்று ஆண்டுகள் சென்றதே தெரியவில்லை. ஒரு புறம் படிப்பு, விளையாட்டு, நண்பர்கள், மறுபுறம் சமூக சேவைகளான என்எஸ்எஸ் யிலும் இருந்தேன். இப்படி பல  மறக்க முடியாத தருணங்களுடன் என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரிப் பருவம் இனிதாகச் சென்றது.

கே: கல்லூரிப்படிப்பை முடித்தவுடன் உங்களின் பயணம் எப்படியிருந்தது?

கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் மேலும் படிப்பதற்கு முதுகலை இயற்பியல் துறையில்  இடம் கிடைக்கவில்லை. இதனால் மும்பை செல்ல அறிவுறுத்தப்பட்டேன். நெடு தூர இரயில் பயணம், முதன் முறையாக குடும்பத்தை விட்டு சென்றது மனதிற்கு மிகவும் வருத்தத்தையும் சலனத்தையும் கொடுத்தது. கல்லூரி வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களுடன் பயணப்பட்டேன்.  ஆனாலும் சாதிக்க வேண்டுமென்று புறப்பட்டு விட்டேன் இனி, சங்கடம் படுவதில் எவ்வித பயனும் இருந்துவிடாது என்று என் மனதை நானே தேர்த்திக் கொண்டேன். ஒரு வழியாக மும்பை சென்று விட்டேன் முற்றிலும் மாறுபட்ட  முகங்கள், ஒவ்வொருவரின் முகத்திலும் ஒரு தேடுதல் இருந்தது. இங்கு தான் இனி என்னுடைய வாழ்க்கை அமையப் போகிறது என்று அப்போது எனக்குத் தெரிவில்லை.

பொது அறிவு மற்றும் வங்கித் தேர்விற்கான தயாரிப்புகளுடன் நேர்காணல் செல்ல முயன்றேன். Puma Carona, Bhabha Atomic Research Centre, Bajaj, Indian Airforce, Indian Rare Earths ஆகிய நிறுவனங்களில் முயற்சித்து தோல்வியுற்றேன். பின்னர் கணினித் துறையில் ஒரு வாய்ப்பு கிடைக்கப் பெற்றேன்.

கே: படித்தது இயற்பியல் துறை பணியாற்றுவது கணினித் துறை இது எப்படிச் சாத்தியமானது?

நான் படிக்கின்ற காலத்தில்  பொது அறிவு மற்றும் வங்கிப் பணிக்கான தேர்வுக்கு செய்த பயிற்சியின் உதவியால் கணினித்துறையில் பணி கிடைத்தது. அந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொண்டேன்.

1986 ஆம் ஆண்டு ஐ.டி துறை வளர்ந்து வரும் காலமாகும். அப்போது இணையதள வசதி இல்லை என்றே கூறலாம். ஆனாலும் பெரிய வணிக நிறுவனங்கள் கணினியைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆகையால்  கணினித் துறையில் அதிக வேலை வாய்ப்பு வந்து கொண்டிருந்தது.  அப்படியிருக்கும் போது அத்துறையில் நான் பணியாற்றியது புதுமையாக இருந்தது.

எனக்கு ஏழு நாள் அவகாசத்தில் ஒரு புரோகிராம் செய்து தரும் படி வலியுறுத்தப்பட்டு ஒரு புத்தகம் கொடுக்கப்பட்டது, அந்த நிறுவனத்தில் இரு கணினிகள் இருந்தன. அப்போது தான் கணினியை முதன் முதலாகப் உபயோகப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றேன். கடின முயற்சி, உடன் பணிப்புரிபவர்களின் ஆலோசனையின் பேரில் கொடுக்கப்பட்ட காலத்திற்குள் புரோகிராம் செய்து கொடுத்து எனது பணியை தக்கவைத்துக்  கொண்டேன். இதன் பிறகு தான் எனக்கே என் மீது நம்பிக்கை வந்தது. இதனால் இந்நிறுவனத்திற்கு என் மீது மரியாதையும் நம்பிக்கையும்  வந்து மேலும் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு புரோகிராம் செய்யப் பணிக்கப்பட்டேன்.  அப்போது கிடைக்கப் பெற்ற புதிய சிறப்பான அனுபவமும் உந்துதலும் இன்று வரை என்னுள் இணைந்திருக்கிறது.

நான் பணிபுரியும் நிறுவனத்திற்கு மும்பை மற்றும் குஜராத்தில் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.  அவர்களுக்கு வேலை செய்ய பணிக்கப்பட்டு  கணினித்துறையில் நிறைய கற்றுக் கொண்டேன்.

கே: கம்யூட்டர் மேனேஜ்மென்ட் படித்த அனுபவத்தைச் சொல்லுங்கள்?

குஜராத்தில் உள்ள வல்சாத் நகரில் வேலை செய்யும் பொழுது  கணினித்துறையில்  திறன்களை மேலும் வளர்ப்பதற்காக மும்பையில் டிப்ளமோ படிப்பில் சேர்ந்தேன். நான் பணியாற்றும் இடத்திலிருந்து மும்பையை அடைய 4 முதல் 5 மணி நேரம் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது படிப்பைத் தொடர இது பெரும் சவாலாக இருந்தது, வார இறுதி நாட்களில் மட்மே என்னால் படிப்பதற்கு நேரத்தை செலவிட முடிந்தது. மேலும்  குஜராத் மற்றும் மும்பையில் வேலை பார்த்தால் பிற மொழி கற்கும் வாய்ப்பும் கிடைத்தது. இதனால் புதிய விசயங்கள் கற்றுக் கொள்ளவதில் ஆர்வமும் உந்துதலும் மேன்மேலும் அதிகரித்தது.

கே: உங்கள் வாழ்வில் ஏற்பட்ட திருப்புமுனை சம்பவம் பற்றிச் சொல்லுங்கள்?

மும்பையிலுள்ள எனது இரண்டாவது வேலைக்கான நேர்காணலுக்கு போயிருந்த போது தேர்வு எழுதப் பணித்தார்கள் தேர்வு முடிந்தவுடன் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டேன். அப்பொழுது அந்நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர் நீங்கள் தேர்வில் தோற்றுவிட்டீர்கள் ஆனால் உங்களுடைய அனுபவத்திற்கு சிறப்பாக செய்திருக்கலாம் என்று கூறினார்.

சற்று யோசனைக்குப் பின் நான் தேர்வாகவில்லை  அது உண்மை தான். ஆனால், அடிப்படையில் உங்களின் வினாக்களில் பிழைகள் நிறைய இருக்கிறது என்று சொன்னேன். இதைக் கேட்டவுடன் அவர் அதிர்ந்து விட்டார். தவறை உங்களால் சுட்டிக்காட்ட முடியுமா என்று கூறினார். நிச்சயம் முடியும் என்று கூறி அதை அவருக்கு விளக்கிக் கூறினேன். அவரும் விசாரித்தப் பின்னர் என்னுடைய கருத்தை ஏற்றுக் கொண்டதோடு இல்லாமல் எனக்கு பணி ஆணையும் வழங்கினார். இந்த கம்பெனி ஒரு பெரிய கார்ப்ரேட் நிறுவனம். இவர்களுக்கு இந்தியா முழுவதும் 60 கிளைகள் இருந்தன.  இங்கு பணியாற்றும் போது நிறைய நுணுக்கங்களைக் கற்றுக்  கொண்டேன். இது என் வாழ்வில் திருப்பு முனை என்று சொல்லலாம்.     .

கே: நீங்கள் எதிர்கொண்ட சவாலான நிகழ்வுகள் பற்றிச் சொல்லுங்கள்? 

நேரம் கிடைக்கும் போது பொழுதுப் போக்காக UNIX மற்றும் scripting சுயமாகக் கற்றுக்கொண்டேன். அந்தக் காலக்கட்டத்தில் இணையதள வசதிகள் இல்லை. இதனால் புத்தகத்தைப் பார்த்து கணினியில் முயற்சி செய்து கற்றுக்கொண்டேன். பின்நாளில் இது உதவும் என்று எதிர்பார்க்கவில்லை.  எனக்கு PDP11, PSI Omni போன்ற கணினிகளில் சிறப்பான அனுபவம் உண்டு. பெரிய நிறுவனங்கள் இது போன்ற கணினிகளை தங்கள் சேவைக்குப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட ஒரு இடரைத் தீர்வுகாண்பதற்கு பொழுது போக்காக நான் கற்ற வழி முறையில் தீர்வு காண முயற்சி செய்தேன்.

அதன் படி மேனேஜரிடம் நேரடியாகச் சென்று இதை நான் சரி செய்யலாமா என்று அவரிடம் கேட்டேன். நாளைக்குச் சொல்கிறேன் என்று அவர் கிளம்பி விட்டார். சில நாட்களுக்குப் பின் என்னிடம் இந்த வேலையைச் செய்யும் படி சொன்னார். உடனே ஆர்வத்தோடு மொத்தம் இருந்த  60 புரோகிராம் களை சோதனை செய்து நிவர்த்தி செய்து கொடுத்தேன். அனைத்தையும் சரிசெய்தது மூலம் மேலும் மேனேஜருக்கு என் மீது நம்பிக்கை அதிகரித்தது. பின்னாளில் தான் எனக்கு இந்த புரோகிராமங்களை சரி செய்வதற்காக தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுக்கப் பெற்று அவர்களால் 50 சதவீதம் மட்டுமே சரி செய்ய முடிந்தது என்பதை அறிந்தேன். அதன் பிறகு நிறைய வாய்ப்புகள் எனக்கு கிடைத்தது.  இது என்னுடைய வாழ்வில் ஒரு சவாலான நிகழ்வாகக் கருதுகிறேன்.

கே: கார்கோ நிறுவனத்திற்கு செய்த புரோகிராமிங் பற்றிச் சொல்லுங்கள்?

நான் வேலை பார்த்த நிறுவனம், அனைத்து வகையான சரக்கு மற்றும் கூரியர் வியாபாரத்தில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனமாகும். இங்கு புதிதாக டோர் டு டோர் கார்கே டெலிவரி சேவைக்கு வியாபார பிரிவு தொடங்கப்பட்டது. அடிப்படையில்  இந்தப் பிரிவு Hub & Spoke மாதிரியை தழுவியது. இதில் கணினியின் மூலம் தகவல்களை தொலைபேசியின் வாயிலாகப் பரிமாறிக்கொள்ளும் திறனை முதன் முதலாக அறிமுகப்படுத்தினோம்.

இப்போது இருப்பதைப் போல 80களில் இணையதள வசதிகள் இல்லை.  ஆகையால் இரவு பத்து மணிக்கு மேல் தொலைபேசி வாயிலாக  மிகவும் குறைவான கட்டணத்தில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வசதிகள் செய்யப்பட்டுத் திறம்பட நிர்வாகம் செய்யப்பட்ட வியாபார பிரிவு இது. இந்தியாவின் முன் மாதிரி  கார்கோ டெலிவரி சேவையில் முழுமையாக ஈடுபட்ட அனுபவம் மேலும் என்னுடைய ஊக்கத்தையும் ஆர்வத்தையும் வளர்த்தது. இதில் எண்ணற்ற சவால்கள் இருந்தது. அதை எல்லாம் நாங்கள் சரியாக கையாண்டோம்.[hide]

கே: சொந்தமாக நிறுவனம் தொடங்கியது பற்றி?

30 ஆண்டுகால கணினித்துறையில் அனுபவத்திற்கு பின் சொந்தமாக நிறுவனம் தொடங்க விரும்பினேன். இதனால் 2017 ஆம் ஆண்டு என்னுடைய வேலையை விட்டு வெளியேறினேன். எனது ஆவலை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டு ஆலோசனைப் பெற்றேன்.  குடும்பம், நண்பர்கள், உறவினர்கள், திருவிழா, திருமணம் என ஒரு மாத காலம் எந்த ஒரு வேலைப் பளுவும் இல்லாமல் சுதந்திரப் பறவையாய் சுற்றினேன். முடிவில் குடும்பத்தினர் ஆதரவுடன் மும்பை மற்றும் சிக்கப்பூரில் நிறுவனம் தொடங்கினேன்.  தொடங்கியவுடன்  என் நண்பர்கள் சிலர் ஊக்கமளித்து தங்கள் ஆதரவைத் தந்தனர். இதில் என் குடும்பத்தினரின் பங்கு மிகப் பெரியது.

கே: ரேமிங்கோ ரிமைண்டர் ஆன் தி கோ நிறுவனத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

இது என்னுடைய முதல் வெற்றிகரமான திட்டம். ஏதேனும் ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று  நான் நினைக்கவில்லை. நான் தொடங்கும் தொழில் எல்லா தரப்பு மக்களுக்கும் பயன்படும் அளவில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன் அதன் படி ரேமிங்கோ ரிமைண்டர் ஆன் தி கோ என்ற ஆப் பை தொடங்கினேன். சந்தையில் கிடைக்கின்றதை விட பயனுள்ளதாகவும் வேறுபட்டும் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இதனால் வெவ்வேறு ஆப்களை சோதனை செய்து பார்த்தேன். பல்வேறு வாடிக்கையாளர்களிடம் கள ஆய்வு செய்து கருத்துக்களைப் பெற்று முற்றிலும் மாறுப்பட்ட வடிவத்தில் ஆப் பை உருவாக்க முயற்சி செய்தேன்.

உலகம் தற்போது உள்ளங்கைக்குள் சுருங்கி விட்டது. எல்லோரும் ஒரு எல்லையை அடைய தீவிரமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். குடும்பத்தில்  கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்கிறார்கள். அவர்களுக்கு எல்லாமும் நினைவுக்குள் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. எழுதி வைத்தாலும் அதைப் பார்ப்பதற்கு அவர்களுக்கு நேரம் இல்லை. சிறிது கவனக்குறைவால் பெரிய அளவில் அவர்களுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம். இதை எல்லாம் கருத்தில் கொண்டு தான் அவர்களுக்கு நினைவூட்டும் வகையில் இந்த ஆப் பைக் கொண்டு வந்தேன். இதை முதலில் குடும்பத்திற்குத் தேவையான நினைவூட்டல் மட்டும் செய்ய வேண்டும், இது அவர்களின் வாழ்நாள் முழுவதும் மனஅழுத்தம் இன்றி இருக்கவும், கையடகத்தில் தகவல்களைப் பெறவும் அது உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய லட்சியமாக இருந்தது. பெயர் வைப்பதிலிருந்து ஆப் பை சந்தைப் படுவது வரை பல்வேறு சவால்களை சந்தித்து அதில் வெற்றி கண்டேன்.

ஒரு குடும்பத்திற்கு ஒரு REMINGO ஆப் மட்டுமே தேவை என்பது தான் இந்த ஆப் பின் சிறப்பு.

கே: இது போன்று வித்தியசமான ஆப் பை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குள் எப்படி வந்தது?

இதற்கு நிறைய நிகழ்வுகளை என் கண் முன்னே பார்த்தேன். இதை நிறைய பேர் விரும்புவதை என்னால் உணர முடிந்தது.  சில உதாரணங்கள் இங்கு:

குடும்பத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களான Comprehensive, family sharing கூடிய ஆப் இல்லை.

குடும்பத்தில் பிள்ளைகள் வெளிநாடுகளிலும், பெற்றோர் இங்கும் இருப்பார்கள். தகவல்களை கையடகத்தில் தெரிந்து கொள்வதற்கு சிரமங்கள் இருக்கிறது.

இன்சூரன்ஸ் போன்ற காப்பீட்டுத் திட்டத்தில் பணம் போட்டு விடுவார்கள், ஆனால் குடும்ப சூழலின் காரணமாக அதைப் பின்பற்ற முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

வீடு மற்றும் நிலத்திற்கு வரி கட்டிவிட்டு அதை பின்பற்ற மறந்து விடுவார்கள்.

இது போன்ற நிகழ்வுகள் தான் என்னை இதை செய்வதற்கு பெரிதும் துணைபுரிந்தது.

கே: ரிமிங்கோ உள்ள சிறப்பு அம்சங்கள் பற்றிச் சொல்லுங்கள்?

இயந்திரமயமான இவ்வுலகத்தில் உலகமே உறவுகளாகிவிட்டது. இதற்கு இணையமும் தொலைபேசியும் ஒரு பெரும் காரணமாக இருக்கிறது. தற்போது கைப்பேசி இல்லாமல் யாரும் இல்லை. அப்படியிருக்கும் போது எல்லாம் அதில் வந்து விடுகிறது, எதையும் தேடி செல்ல தேவையில்லை. அதனால் REMINGO என்ற பெயரில் ஒரு ஆப்பை நிறுவினேன். அதில் ஒன்பது  விதமான படிநிலைகள் இருக்கும் படி செய்தேன்.  ஒவ்வொன்றும் குடும்பத்திற்கு பெரிய அளவில் பயன் உள்ளதாக இருக்கும் படி பார்த்துக் கொண்டேன்.

இந்த ஆப் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் செயலில் பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதில் உள்ள சிறப்பம்சங்கள்

  • எங்கும் எப்போதும் பயன்படுத்தலாம்.
  • குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்தல்;
  • இயற்கை பேரழிவு மற்றும் களவிலிருந்து தகவல்கள் பாதுகாக்கப்படும்.
  • விளம்பரங்களின் தொந்தரவின்றி உபயோகப்படுத்தலாம்.
  • ஆப் பின் உள் எளிதாக உதவிகள் பெறலாம்.
  • கையடக்கத்தில் தகவல்கள்களைப் பெற முடியும்.

REMINGO Reminder on the Go உங்களின் நேரம், முயற்சி மற்றும் சொத்து ஆவணங்களைப் பாதுகாக்க ஒரு சிறந்த ஆப்.

கே: இதில் வரும் அறிவிப்புகளை எவ்வாறு தெரிந்து கொள்வது?

கீழ்காணும் முறையில் நீங்கள் எளிதாகத் தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதால் கண்டிப்பாக இது அனைவருக்கும் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

  • அப்ளிகேஷன் தொடக்கத்திலேயே எண்ணிக்கையை அறிந்து கொள்ளலாம்.
  • ஒவ்வொரு படிநிலைகளிலும் அறிந்து கொள்ளலாம்.
  • வண்ண மாற்றத்தை வைத்து அறிந்து கொள்ளலாம்.
  • கைபேசி அறிவிப்பின் வழி தெரிந்து  கொள்ளலாம்.

கே: மக்களிடையே இதன் பயன்பாடு எப்படி இருப்பதாக உணர்கிறீர்கள்?

பிப்ரவரி 2019 யில் தான் சந்தைப்படுத்த தொடங்கினேன். மக்களுக்கு எதையும் கொண்டு சேர்ப்பது அவ்வளவு எளிதல்ல, அப்படியிருக்கும் போது சிறிது சிறிதாக மக்கள் இது பற்றியான விழிப்புணர்வு பெற்று கொண்டு வருகிறார்கள்.

அதன் தேவையை அவர்கள் பெரிதும் உணர்கிறார்கள். கொண்டு சேர்ப்பதில் கொஞ்சம் சவால்கள் இருந்தாலும், இதன் உண்மை தன்மையை உணர்ந்து விட்டால் அவர்கள் இதை ஏற்றுக் கொண்டு மற்றவர்களுக்கும் அறிமுகம் படுத்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகிவிட்டது என்பதை அவர்கள் அனுப்பும் தகவல்களைக் கொண்டு என்னால் உணர முடிகிறது.

கே: ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் REMINGO இருக்கிறதா?

www.remingoreminder.com  என்ற வலைதளத்தில் தகவல்களைப் பெறலாம்.

REMINGO சேனல் youtube மற்றும் instagram போன்றவற்றிலும் காணலாம்.

கே: எதிர்காலத்தில் எதுமாதிரியான புதுமைகள் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

REMINGO யிலேயே மேலும் எளிமையான நடைமுறை மற்றும் சிறப்பு அம்சங்கள் கொண்டு வருவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். எங்களின் சமூக வலைதளங்களில் இது பற்றி அறிவிப்பு வெளியாகும்.

இரண்டாவதாக Lookme Today என்ற மென்பொருள் தொழில் நுட்பத்தை இந்திய அளவில் முதன் முறையாக அறிமுகப்படுத்த இருக்கிறோம். இது போலிகளை கண்டறிவதற்கும், சான்றிதழை உடனடியாக அங்கீகாரம் செய்வதற்கும் (இணைதள உதவியின்றி) உதவும். இது முற்றிலும் மாறுபட்ட மல்டிபர்பஸ் தொழில்நுட்பம். இது அரசாங்கம், வங்கிகள், பல்கலைக் கழகங்கள், பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு எளிதாக போலிகளைக் கண்டறிய உதவும்.

கே: தன்னம்பிக்கை மாத இதழுக்கு நீங்கள் கூறுவது?

தன்னம்பிக்கை மாத இதழை தொடர்ந்து வாசித்து வருபவர்களில் நானும் ஒருவன்.  இதில் நிறை சாதனையாளர்களின் நேர்காணல் படித்திருக்கிறேன். அந்த வகையில் இந்த மாதம் என்னுடைய நேர்காணல் இடம்பெற்றிருப்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. உலக வாசகர்கள் அனைவரும் இது போன்ற இதழுக்கு தொடர்ந்து தங்களின் பங்களிப்பை கொடுத்து உதவ வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

தொடர்புக்கு: mksgsolutions@gmail.com[/hide]

இந்த இதழை மேலும்

எண்ணத்தை தூய்மைப்படுத்து ஏற்றத்தை மேன்மைப்படுத்து

S. தங்கவேல்

தலைவர் மற்றும் தாளாளர்

ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும்  தொழில்நுட்பக்  கல்லூரி

கோவை

இன்று புதிதாய் பிறந்தோம்

என்று நீவிர் எண்ணமதைத்

திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்று விளையாடி

இன்புற்று இருந்து வாழ்வீர்…

என்ற பாரதியின் வரிகளில் நாம் ஒவ்வொரு நாளும் புதிதாய் பிறந்தவர்கள் என்ற நம்பிக்கையை நம்முள் விதைக்கின்றன. இந்த நம்பிக்கை வரிகள் தான் இவரின் நடைமுறை வாழ்க்கையின் உத்வேக வரிகளாகும்.

வெற்றியைத் தலைக்கும், தோல்வியை இதயத்திற்கும் எடுத்துச் செல்லாத எளிய மனிதர்.

ஒரு செயலை செய்ய முடிவெடுத்து விட்டால் அதை முடிக்கும் வரை எங்கும் முற்றுப்புள்ளி வைக்காமல் தொடர்ந்து பயணித்து வரும் மாமனிதர்.

ஆசான் என்பவர் வெறுமனே அதட்டுபவராக மட்டுமே இல்லாமல் அன்பானவராய், அரவனைப்பாளராய், அக்கரையாளராய் இருந்திடல் வேண்டும் என்று மாணவர்களிடம்  நட்புறவுடன் பழகி வருபவர்.

இயற்கை நேசிப்பாளர், தன்னம்பிக்கையாளர், பொறியாளர், வேளாண் வித்தகர். தொழில் வல்லூநர், சிறந்த பண்பாளர் என பன்முகத்திறமையுடைய ஸ்ரீ சக்தி பொறியியல் கல்லூரியின் தாளாளர் S. தங்கவேல்  அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு…

கே: உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

நாமக்கல் மாவட்டத்திலுள்ள திருச்செங்கோடு வட்டாரத்திற்குட்பட்ட செங்கோடம்பாளையம் என்ற ஒரு சிறு கிராமத்தில் பிறந்தேன். விவசாயக் குடும்பம், எங்களுக்குச் சொந்தமான நிலத்தில் என்னுடைய தந்தையார் விவசாயம் பார்த்து வந்தார். இரண்டு ஏக்கர் நிலத்திற்கு மூன்று கிணறுகள், அந்தக் கிணறுகளையும் ஆண்டு தோறும் ஆழப்படுத்தினால் தான் ஒரு ஏக்கர் அளவிற்காவது பயிர் செய்ய முடியும் என்ற நிலை. என்னுடன் பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள். என்னுடைய தந்தையார் எங்கள் எல்லோரையும் அவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் படிக்க வைத்தார். எங்களை எல்லோரையும் ஆசிரியராக்கி பார்க்க வேண்டும் என்பதே அவரின் விருப்பமாக இருந்தது.  அரசுப்பள்ளயில் தமிழ்வழியில் தான் அனைவரும் படித்தோம்.

நான் படிக்கின்ற காலத்தில் அவ்வளவாக ஆங்கில வழிக் கல்விக்கூடங்கள் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாகவே இருந்தது. மிகவும் வசதிப்படைத்தவர்கள் மட்டுமே இப்பள்ளியில் படித்தார்கள். படிக்கின்ற காலத்தில் எல்லாப் பாடத்திலும் முதல் மதிப்பெண் மட்டுமே எடுத்தேன். அப்படிப்பட்ட சூழலில் பள்ளிப்படிப்பை முடித்து ஈரோட்டில் மிகவும் பிரபலமான கல்லூரிகளில் ஒன்றான கிக்கய நாயக்கர் கல்லூரியில் பியுசி பட்டத்தை முடித்தேன்.

அதன் பிறகு கோவையிலுள்ள வேளாண் கல்லூரியில் வேளாண் பொறியியல் படிப்பைத் தேர்ந்தெடுத்துப் படித்தேன். இக்கல்லூரி தொடங்கிய இரண்டாவது பேஜ் மாணவர்கள் நாங்கள். அங்கு எங்களுக்கு கல்வி போதித்த ஆசிரியர்கள் மிகவும் கல்வித்துறையில் கற்றுத்தேர்ந்தவர்கள். 1978 ஆம் ஆண்டு பி.இ பட்டப்படிப்பை முடித்தேன். முடித்த கையோடு எனக்கு அதே கல்லூரியில் வேலையும் கிடைத்தது.  வேலை செய்து கொண்டே எம்.இ. மற்றும் பிஎச்டி ஆகிய பட்டங்களைப் பெற்றேன். 1978 முதல் 2006 ஆம் ஆண்டு அக்கல்லூரியில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்று விட்டேன்.

கே: பேராசிரியராய் பணியாற்றிய நீங்கள் ஒரு கல்லூரி தொடங்கியது பற்றிச் சொல்லுங்கள்?

என்னுடைய தந்தையார் மேலே கூறிய கடினமான சூழலில் விவசாயத்தையும் பார்த்துக் கொண்டு கால்நடை தீவினகடை ஒன்றை நடத்தி வந்தார். அதில் அவ்வளவாக வருமானம் இல்லை. இதனால் நெல் வியபாரம் செய்து வந்தார். அவ்வாறு செய்யும் பொழுது பல இடங்களுக்கு வாடகை லாரியின் மூலம் சென்று  நெல் கொள்முதல்  செய்து வந்தார். நாம் ஏன் சொந்தமாக ஒரு லாரி வாங்கக்கூடாது என்று எண்ணி இருக்கும் பணத்தை வைத்து ஒரு லாரியை வாங்கி அவரே லாரியின் ஓட்டுநராகவும் உரிமையாளராகவும் இருந்தார். எங்கள் கிராமத்திலிருந்து முதன் முதலாக லாரி வாங்கியவர் அவர் தான். “லாரிக்காரர் வீடு ” என்று தான் எங்கள் வீட்டை அடையாளப்படுத்துவார்கள்.

இன்று கல்லூரி தொடங்குவதற்கு என் தந்தை தான் காரணம். அவருக்கு ஆசிரியர் தொழிலின் மீது இருந்த பற்றுதல்  தான் என்னை இந்தளவிற்கு உயர்த்தியது என்று சொல்லலாம். என்னுடன் பிறந்த மூன்று சகோதரிகளும் ஆசிரியராகவே இருந்தார்கள். நான் பொறியியல் படிக்கும் பொழுது கூட நீ படிப்பை முடித்தவுடன் வேறு வேலைக்கு செல்லாமல் ஆசிரியர் தொழிலுக்கு மட்டும் செல் என்று என்னிடம் கூறினார். அவர் அன்று கூறிய வார்த்தை தான் என்னுடைய வாழ்வில் ஒரு பசுமரத்தாணி போல் பதிந்தது. நான் பணியாற்றிய காலத்தில் ஒரு பகுதியை கோவைப் பகுதியில் ஒரு நிலத்தை வாங்கினேன். அதில் ஒரு கல்லூரி கட்ட வேண்டும் என்று தீர்மானித்தேன். இதனால் வேளாண் கல்லூரியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றேன். அதன் பிறகு என்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டேன்.

கே: பொறியியல் கல்லூரி தொடங்க வேண்டும் என்ற ஆர்வம் எப்படி எழுந்தது?

நான் படித்தது வேளாண் பொறியியல் துறை என்பதால் இத்துறை சார்ந்த அத்துனை நுணுக்கங்களும் எனக்கு நன்றாகத் தெரியும். இத்துறை ஒரு தொழில் சார்ந்தது. படித்து முடித்தவுடன் பணி என்ற நிலையில் இருக்கும் துறை. பொறியியல் துறை மூன்று துறைகளைக் கொண்டது, அது மெக்கானிக்கல், சிவில், எலட்ரிக் ஆகிய துறைகளை உள்ளடக்கியது. இந்த மூன்று துறைகளில் எல்லா வேலைகளும் வந்து விடும்.

நான் படிக்கின்ற காலத்திலும், தற்போதும் பொறியில் படிப்பு என்று  வேலைவாய்ப்பு சம்மந்தமான படிப்பு என்பதால் பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளிடம் இதைத் தான் எதிர்பார்க்கிறார்கள். தன் பிள்ளை நன்றாகப் படித்து நல்லதொரு வேலைக்கு சென்று குடும்பத்தை அவன் காப்பாற்ற வேண்டும் என்று ஆவல் கொள்கிறார்கள். அந்த ஆவலை பொறியியல் துறை வெகு விரைவாகக் கொடுத்து விடுகிறது. இப்படிப்பட்ட காரணத்தால் தான் இத்துறை சார்ந்த கல்லூரியைத் தொடங்கினேன்.

கே: கோவை மாவட்டத்தைத் தேர்ந்தெடுத்தன் காரணம் குறித்துச் சொல்லுங்கள்?

தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தப் படியாக வளர்ந்த மாவட்டம் என்றால் அது கோவை மாவட்டம் தான்.  நான் படிக்கும் பொழுது தமிழகத்தில் ஒன்பது பொறியியல் கல்லூரி மட்டுமே இருந்தது. அதில் சென்னையில் இரண்டு கல்லூரியும், கோவையில் மூன்று கல்லூரியும் இருந்தது. அப்போதே பொறியியல் கல்லூரியின் வளர்ச்சி கோவை போன்ற தொழில் நகரங்களுக்கு தேவையாக இருக்கிறது. இங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் தொழில் செய்து வருகிறார்கள். அவர்களின் பிள்ளைகளுக்கு அத்தொழில் படிப்பு பழகியதாக இருக்கும். ஆனால் விவசாயப் பின்னணியிலிருலுந்து வரும் பிள்ளைகளுக்கு இத்தொழில் கல்வி புதுமையாக இருக்கும். அவர்களுக்கு சற்று கூடுதலாகச் சொல்லிக் கொடுத்தால் அவர்கள் நன்றாகப் புரிந்து கொள்வார்கள். என்னை பொருத்தவரை பொறியியல் கல்லூரிக்கு ஏற்ற மாவட்டம் கோவை தான்.

கே: நீங்கள் படித்த காலத்திலும், தற்போது வளர்ந்து வரும் காலத்திலும் பொறியியல் கல்வியின் வளர்ச்சி எவ்வாறு உள்ளது?

நாங்கள் படிக்கின்ற காலத்தில் குறைந்தளவு பொறியியல் கல்லூரிகள் தான் இருந்தது. அதிகபட்சமாக ஆயிரம் பேர் மட்டுமே பொறியியல் பட்டப்படிப்பு படிக்க முடியும். ஆர்வம் இருந்தாலும் படிக்க முடியாத சூழல் தான் இருந்தது. ஆனால் தற்போது தமிழ்நாட்டில் மட்டும் 2 இலட்சம் மாணவர்களுக்கு மேல் பொறியியல் படிக்கும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமல்லாமல் ,  1972 ல் ஆண்டுதோறும் 1 இலட்சம் மாணவர்கள் SSLC தேர்வு எழுதினார்கள். அதில் 1000 பேருக்கு தான் பொறியியல் படிக்கும் வாய்ப்பு (1 % மட்டுமே) இருந்தது.

தற்பொழுது ஆண்டுதோறும் சுமார் 8.5 இலட்சம் மாணவர்கள் +2 தேர்வு எழுதிகிறார்கள். அதில் 2 இலட்சத்திற்க்கு மேற்ப்பட்ட மாணவர்களுக்கு (25%) பொறியியல் படிக்கும் வாய்ப்பு உள்ளது.

நமது மாணவர்கள் அமேரிக்கா உட்பட அனைத்து வளர்ந்த நாடுகளிலும் மிக உயர்ந்த நிலையில் இருப்பதற்க்கும் , .டி துறையில் அபரிவிதமான வளர்ச்சிக்கும் பொறியியல் கல்லூரிகள் பெறும் பங்கு வகுகின்றன.

கே: ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு பொறியியல் துறையின் பங்கு எந்தளவிற்கு இருக்கிறது?

பொறியியல் துறையின்றி ஒரு நாட்டின் வளர்ச்சி இருக்க முடியாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். காரணம், நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து பொருட்களையும், பொறியாளர்கள் தான் உருவாக்குகிறார்கள். குறிப்பாக வரும் காலத்தில் நமது நாடு மின்னனுவியல் துறை மற்றும் எரிசக்தி துறை ஆகிய இந்த 2 துறைகளிலும் மிக பெரிய வளர்ச்சி பெறுவதற்கான வாய்ப்புள்ளது.

தற்பொழுது நாம் ஆண்டுதோறும் 70 பில்லியன்  டாலர் (ரூ. 4,90,000 கோடி) அளவிற்கு  மின்னனு சாதனங்களை இறக்குமதி செய்து கொண்டு இருக்கிறோம். அடுத்த 10 ஆண்டுகளில் இந்த இறக்குமதியை குறைத்து மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவிற்கு உயர வேண்டும்.

அடுத்தாக ஆற்றல் துறையை எடுத்து கொண்டால், தற்பொழுது ஆண்டுதோறும் நாம் சுமார் 350 GW அளவிற்கு மின்சார உற்பத்தி செய்கிறோம். ஒட்டு மொத்த மின்சார உற்பத்தியில் 80 சதவீததிற்கு மேல் அனல் மின்சாரமே.

தற்பொழுது சுமார் 5 சதவீதம் அளவிற்கு  சூரிய சக்தி முலமூம் , மேலும் 6 சதவீதம் அளவிற்கு  காற்றாலை  முலமூம் மின்சார உற்பத்தி செய்கிறோம். அடுத்த 10 ஆண்டுகளில் குறைந்தபட்சம் 50 சதவீத அளவிற்கு காற்றாலை மற்றும் சூரிய சக்தியை பயன்படுத்தி மின் உற்பத்தி செய்ய வேண்டும்.

இத்துடன் நீரிலிருந்து ஹைட்ரஜனை பிரித்து எடுத்து அதனை எரிபொருளாக பயன்படுத்தி அனைத்து வாகனங்களையும் இயக்கும் தொழில்நுட்பத்தையும் மேம் படுத்த வேண்டும்.                    இதுமட்டுமல்லாமல், அடுத்த பத்து ஆண்டுகளில் டீசல் மற்றும் பெட்ரொல் இல்லாமலேயே அனைத்து இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் இயங்கும் நிலை ஏற்படும் அதையும் பொறியாளர்களே சாதிப்பார்கள். தற்போதைய நம் வாழ்வில் பிளாஸ்டிக் என்பது தவிர்க்க முடியாத பொருட்களில் ஒன்றாகி விட்டது. அரசாங்கம் இதை தவிர்க்க எத்தனையோ திட்டங்களை வகுத்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனாலும் அதை முழுமையாக தவிர்க்க முடியவில்லை. இதை ஒரு பொறியாளர் மறுசுழற்ச்சி செய்ய பல வழிகளைக் கண்டுபிடிப்பார்.                      திருப்பூர் போன்ற தொழில் நகர்களில், சாயக்கழிவுகளை எவ்வித சுத்திகரிப்பும் செய்யாமல் வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள். அது அருகிலுள்ள ஆறு, ஏரிகளில் கலந்து சுற்றுப்புற சூழலை மிகவும் மாசுபடுத்தியது. தற்போது சாயக்கழிவுகளை முற்றிலும் சுத்திகரிப்பு செய்து, அந்த நீரை அவர்களே மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் தொழில்நுட்பத்தை பொறியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். பெரும்பாலான சாயப்பட்டறைகள் இந்த நுட்பத்தை பயன்படுத்துகின்றன.

கே: தங்கள் கல்லூரி குறிகிய காலத்தில் தன்னாட்சி பெற்றது பற்றி ?

நான் ஏற்கனவே கூறியது போல் எதையும் திட்டமிட்டு செயல்படுகிறோம். 8 ஆண்டுகளில் , நான்கு துறைகளுக்கு NBA சான்றிதழ் பெற்றோம். NAAC அமைப்பின் “A” தர சான்றிதழ், ஒட்டு மொத்த கல்லூரிக்கும் பெற்றோம். தரமான ஆசிரியர்கள், உயர் தர  வேலை வாய்ப்பு, மாணவர்களின் தேர்ச்சி விகிதம், ஆராய்ச்சி கட்டுரைகள் சமரிப்பித்தல்  ஆகிய அனைத்தையும் கணக்கிட்டுத் தான் தன்னாட்சி வழங்கபட்டது. இதன் மூலம் தொழில்கூடங்களுடன் இணைந்து,  தொழில்பயிற்ச்சியுடன் கூடிய கல்வியை வழங்க இயலும். 4 ஆண்டுகளில் 6 மாதம் முதல் 1 ஆண்டு வரை அயல் நாட்டு பல்கலைகழகங்களுக்கு மாணவர்களை அனுப்பி வைத்து அவர்களின் திறன் உலகத்தரத்திற்கு உயர்த்தப்படும்.

கே: உங்கள் கல்லூரியின் தனிச்சிறப்புகள் பற்றி?

இக்கல்லூரிக்கான தனிச்சிறப்புகள் ஏராளம் இருக்கிறது. அதில்…

இங்கு படிக்கும் அத்துனை மாணவர்களுக்கும் வேலை வாய்ப்பினை வாங்கிக் கொடுக்கிறோம்.

ஒரு மாணவன் தனது பட்டப்படிப்பின் இறுதியாண்டில் அவனுக்கு எதிர்கால தேவை என்ன என்பதைக் கேட்டறிந்து அதற்கு ஏற்றார்போல் பயிற்சி அளித்து வருகிறோம்.

ஜப்பான், கொரியா போன்ற நாடுகளில் பணியாற்ற விரும்பும் மாணவர்களுக்கு அம்மொழியைக் கற்றுக் கொடுக்கிறோம், அதற்கான பிரத்யோக ஆசிரியர்களை நியமித்து அவர்களுக்கு அந்நாட்டு மொழியை 1 ஆண்டு காலம் கற்றுக் கொடுக்கிறோம்.

கெரியர் டெவலப்மெண்ட் என்ற ஒரு துறை இருக்கிறது. இதில் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தகுதி சார்ந்த பயிற்சியினை வழங்கி வருகிறார்கள். எங்கள் கல்லூரியிலேயே அதிக ஆசிரியர்கள் பணியாற்றும் ஒரு துறை இது தான்.

எங்கள் கல்லூரியில்          பன்மொழி பேசும் மாணவர்கள் படித்து வருகிறார்கள். அவர்களுக்கு ஆங்கில மொழியை விட அவரவரின் தாய் மொழியை முறையாக எழுதவும் படிக்கவும் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறார்கள்.

இங்கு படித்து முடித்த மாணவர்களில் 20 சதவீதம் பேர் வெளிநாடுகளில் நல்ல சம்பளத்துடன் பணியாற்றி வருகிறார்கள்.

பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் 195 த்திற்கும் மேல் கட்டப் எடுக்கும் மாணவர்களுக்கு கல்விக்கட்டணம், பேருந்து கட்டணம் படிப்பு முடியும் வரை இலவசம் தான்.

190 க்கும் மேல் எடுக்கும் மாணவர்களுக்கு கல்லூரிக் கட்டணம் எதுவும் இல்லை. பேருந்து மற்றும், விடுதிக்கட்டணம் செலுத்தினால் போதும்.

விளையாட்டு மற்றும் ஒவ்வொரு பருவத்திலும் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு பல உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறோம்.

கே: உங்களின் கனவுத்திட்டம் நிறைவேறிவிட்டதாக நினைக்கிறார்களா?

நான் எந்தச் செயலை செய்ய வேண்டும் என்றாலும் நன்றாக யோசித்து, முறையாகத் திட்டமிட்டு, எதிர்கால நலனில் கருத்தில் கொண்டு தான் செய்வேன். திட்டம் சரியாக இருந்தால் தான் வெற்றி இலகுவாக இருக்கும் என்று நம்புகிறேன். அப்படியிருக்கும் போது நல்லதொரு எண்ணத்துடன் தொடங்கிய இக்கல்லூரி மிகச்சிறப்பாக பெற்றோர்கள் மத்தியிலும், மாணவர்கள் மத்தியிலும் நல்லதொரு பெயரை எடுக்கிறது என்பதை பெருமையாகச் சொல்லிக் கொள்கிறேன்.

நம்முடைய பயணம் என்பது பல்வேறு படிநிலைகளை அடியொற்றியது. ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாக செயல்பாடுகளை மாணவர்களுக்கு கொடுத்து கொண்டு இருக்கிறோம்.

மாணவர்களில் எதிர்கால வாழ்க்கைக்கு எது தேவையோ, அதை முறையாக அவர்களுக்கு கொடுத்து வருகிறோம்.

திறமையான ஆசிரியர்கள் கொண்டு தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் இக்கல்லூரியில்  250 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் தகுந்த பயிற்சி கொடுத்து வருகிறோம்

கே: புதிதாக பொறியியல் கல்லூரி தொடங்குவதில் உள்ள சவால்கள் என்ன?

பொறியியல் கல்லூரியின் மீது செயற்கையான சில முரண்பாடுகளை தற்போது சிலர் உருவாக்கி வருகிறார்கள். இது என்ன வென்றால் பொறியியல் படித்தால் வேலை கிடைப்பதில்லை என்பது தான் அது.

மாணவர்களின் சேர்க்கைக்கு அக்கரை கொள்ளும் நிறுவனங்கள் அவர்களின் திறமையின் மீது அக்கரை கொள்வதில்லை என்பது ஒரு குற்றச்சாட்டு.

தற்போது தொழிற்துறையில் நாடு 7 சதவீதம் வளர்ச்சிப் பெற்றிருக்கிறது. ஆனால் வேலைவாய்ப்பு வெறும் 2 சதவீதம் தான் உயர்ந்து இருக்கிறது. இதை அவ்வாறு குற்றம் சாட்டுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பொறியியல் படித்தவர்களுக்கு ஏராளமான வேலைகள் இருக்கிறது, இதை புதிதாக கல்லூரி தொடங்குபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

புதிய புதிய சிந்தனைகள், நுணுக்கங்கள், எதிர்கால தேவைகள், படித்தவுடன் வேலை எவ்வாறு கொடுப்பது போன்றவற்றை கல்லூரிகள் தெரிந்து கொள்ள வேண்டும்.

பொறியியல் துறை என்பது வாழ்க்கைக்கு உயிரியியல் துறை என்பதை கல்லூரிகள் மாணவர்களிடமும், பெற்றோர்களிடம் விளக்கிச் சொல்லுதல் வேண்டும்.

இத்துறை படித்தால் இத்தகைய வேலைகள் இருக்கிறது, சுயமாக தொழில் தொடங்க என்னென்ன வழிமுறைகள் இருக்கிறது என்பதை நீங்கள் சொல்லி கொடுக்க வேண்டும்.

கே: ஆசிரியர் மாணவரின் தொடர்பு எப்படியாக இருத்தல் வேண்டும்?

ஆசிரியர் பணி அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி என்று முன்னோர்கள் வெறும் வாய் வார்த்தைக்காக சொல்லி விடவில்லை. ஆசிரியர்  என்பவர் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு ஏணிப்படியாக இருத்தல் வேண்டும்.

நான் நன்றாகத் தான் சொல்லிக் கொடுக்கிறேன், ஆனால் மாணவன் சரியாகப் புரிந்து கொள்ள மறுக்கிறான் என்று கூறினால் அவர் நல்லாசிரியர் அல்ல. புரியாத ஒரு பாடத்தை புரிந்து கொள்ள முடியாத ஒரு மாணவனுக்கு புரியும் படி நடத்துவது தான் ஒரு சிறந்த ஆசிரியர்.

ஆசிரியர்கள் ஒவ்வொரு மாணவனுக்கும் அடிப்படையிலிருந்து சொல்லிக் கொடுக்க வேண்டும். உதாரணமாக ஒரு வகுப்பில் ஒரு பாடத்தை நடத்தும் ஆசிரியர் ஒரு மணி நேரம் பாடத்தை நடத்தினால் அவர் சிறிதேனும் சக்தி இழந்தாக கருதக்கூடாது மாறாக அன்று முழுவதும் பணியாற்றுவதற்கு சக்தி பெற்றதாக கருத வேண்டும்.

ஆசிரியர்கள் தங்களிடம் பயிலும் மாணவர்கள் மீது அன்பும் நேசமும் வைத்திருந்தாலே அவர்கள் வெற்றி பெற்ற ஆசிரியர்களாக மாறிவிடுகிறார்கள். மாணவர்களின் பிரச்சனையை அதட்டிக் கேட்காமல் அன்பாகச் சொன்னால் அவன் வாழ்நாள் முழுவதும் தவறு செய்ய மாட்டான்.

கே: மாணவர்களிடம் தங்களின் அணுகுமுறை?

நான் ஒரு நாளும் இக்கல்லூரியின் தாளாளராய் என்னை தகவமைத்துக் கொண்டதில்லை. ஒவ்வொரு நாளும் வகுப்பிற்குச் செல்வேன். நான் கற்றதைப் பெற்றதை அவர்களிடம் போதிப்பேன்.

ஆசிரியர்கள் மற்றும் முதல்வருக்கு கட்டுபடாத மாணவர்களை நானே நேரில் அழைத்துப் பேசுவேன். அவர்கள் என்னுடைய அறைக்கு வந்தவுடன் முதலில் அமரச் சொல்வேன் பிறகு நான் அமரும் இடத்தின் அருகிலேயே மாணவனை ஒரு நாற்காலி போட்டு அமர வைத்துப் பேசும் போது அவரின் பிரச்சனைகள் முழுவதும் சில சமயம் கண்ணீருடன் அவர்கள் சொல்லி விடுவார்கள்.

அது மட்டுமின்றி எங்கள் கல்லூரியில் பயிலும் அத்துனை மாணவர்களிடமும் என்னுடைய தொலைபேசி எண் இருக்கும். ஏதேனும் மாணவனுக்கு தேவை என்றால் வாட்ஸ்அப் வழியாக எனக்கு தகவலை அனுப்பி விடுவார்கள். அதற்கான தீர்வை உடனே கண்டு விடுவேன்.

கே: பிடித்த மனிதர்கள், படித்த புத்தகம் பற்றி?

எனக்கு பிடித்த மனிதர்கள் என்றால் அது பெரியாரும், காரல் மார்க்ஸ் இருவரும் தான். ஏனென்றால் அவர்கள் இருவரும் உண்மையை மட்டுமே சொல்லி அதன் படி வாழ்ந்தவர்கள்.

படித்த புத்தகம்  நேரு தனது மகளான இந்திராகாந்திக்கு எழுதிய கடிதங்கள், திருக்குறள், பாரதியின் கவிதைகள் ஆகியவை நான் எந்நாளும் பாதுகாத்து வைத்துக் கொண்ட புத்தகம். தற்போதைய இலக்கியங்களில் கவிப்பேரரசு திரு. வைரமுத்து அவர்களின் கள்ளிக்காட்டு இதிகாசம்.

கே: இந்நிறுவனம் பெற்ற பட்டம் பாராட்டுகள் பற்றி?

NBA என்று சொல்லக்கூடியதை கல்லூரித் தொடங்கிய எட்டு வருடத்திலேயே வாங்கினோம். இது இந்திய அளவில் மிகக் குறைந்த ஆண்டில் எங்கள் கல்லூரி தான் பெற்றிருக்கிறது.

கல்லூரித் தொடங்கி 12 ஆண்டுகளில் எங்கள் கல்லூரி தன்னாட்சி பெற்று விட்டது.

டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் சிறந்த கல்லூரிக்கான விருதைக் கொடுத்து எங்களை கௌரவித்தது.

கே: குடும்பம் பற்றிச் சொல்லுங்கள்?

என் தந்தை திரு. செங்கோடக் கவுண்டர்,தாயார் திருமதி. பழனியம்மாள். என்னுடைய துணைவியார் திருமதி. ராஜேஸ்வரி, எங்களுக்கு இரண்டு மகன்கள். மூத்தவர் தீபன் இவரின் மனைவி  மதுவந்தனி இவர்களின் ஒரு மகள் ஆதிரா. இளையமகன் சீலன் இவரின் மனைவி ஸ்ரீமதி இவர்களின் மகன் யுகன். இவர்கள் எல்லோரும் பள்ளி மற்றும் கல்லூரியை நிர்வகித்து வருகிறார்கள்.

கே: எதிர்காலத்திட்டம் பற்றி?

என்னுடைய எதிர்காலத்திட்டம் பெரிய அளவில் இருக்கிறது. அதை சிறிது சிறிதாக செய்து வருகிறேன்.

இந்தக் கல்லூரியை வெகு விரைவில் பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும். கிராமப்புற மாணவர்களுக்கு நல்லதொரு கல்வியைக் கொடுக்க வேண்டும்.

கே: தன்னம்பிக்கை வாசகர்ளுக்கு நீங்கள் கூறுவது?

இவ்விதழை தொடங்கிய இல. செ. கந்தசாமி அவர்கள்  என்னுடைய கல்லூரி ஆசிரியர்.. இவர் எப்போதும் மாணவர்களையும், இளைஞர்களையும் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டு இருப்பார். அப்படித் தொடங்கியது தான் இந்த இதழ்.

தன்னம்பிக்கை என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்க வேண்டும். இவையின்றி எதுவும் சாதிக்க முடியாது. தன்னம்பிக்கைக்கும், தற்பெருமைக்கும் இடையிலான வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும்.

தன்னம்பிக்கையோடு வாழ்வோம்…

தரணியில் தனித்துவமாய் வாழ்வோம்…

இந்த இதழை மேலும்

கல்விக்கு கரம் கொடு சரித்திரத்தில் பெயரெடு

கார்த்திக் முருகன்

மேலாண்மை இயக்குநர்

Amogha Overseas Educational consultant

கோவை

கனவுகளை விதைக்கின்ற இரவு வேண்டும்

கற்பனையில் மதிக்கின்ற கவிதை வேண்டும்

வைகறையில் மதிக்கின்ற பழக்கம் வேண்டும்

வாழும் வையகத்தை நினைக்கின்ற நெஞ்சம் வேண்டும்…!

என்ற வரிகள் வாழும் கவிஞர் ஒருவரின் தன்னம்பிக்கை மிக்க தத்துவ வரிகளாகும்.  அந்த வகையில் தான் பெறாத கல்வியை தன் எதிர்கால சமுதாயத்திற்கு எப்படியேனும் கொடுத்து விட வேண்டும்  என்ற உயரிய நோக்கத்திற்காக வாழ்ந்து வரும் உன்னத மனிதர்.

வாழ்க்கையில் ஒருமுறை ஒவ்வொருவரும் அவமானம் பட வேண்டும், அந்த அவமானமே நாளை உன்னை அதிகார அரியானையில் ஏற்றும் என்பதே இவரின்  உன்னத வாக்கு.

ஏழ்மையாய் பிறப்பது உன் தவறல்ல, ஆனால் ஏழ்மையாய் இறப்பது உன் தவறே என்பதை இதயத் துடிப்பாய் எண்ணி ஒவ்வொரு கணமும் ஓடோடி இயந்திரமாய் இயங்கிக் கொண்டிருக்கும் Amogha Overseas Educational consultant நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கார்த்திக் முருகன் அவர்களின் வெற்றியின் பகிர்வோடு இனி நாம்.

கே: உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

நான் பிறந்தது புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள ஆலங்குடி என்னும் குக்கிராமத்தில் மின்சார விளக்கே இல்லாத ஓலை  குடிசை வீட்டில் தான் பிறந்தேன். என் தந்தையார் முருகன், தாயார் கங்கா விவசாயப் பின்னணி உடைய குடும்பம். எனக்கொரு தம்பி சதிஸ். என்னுடைய மனைவி சுபாஷினி, மகள் அமோகா.  மிகவும் வறுமையான குடும்பம், மதிய உணவிற்காகவே பள்ளிக்குச் சென்ற காலம் அது. இன்று நினைத்தாலும் என் புத்தகப் பையில் அதிகம் புரண்ட என் சாப்பாட்டுத் தட்டு தான் நினைவிருக்கிறது. எங்கள் ஊரிலுள்ள அரசுப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரைப் படித்தேன். வறுமையும் பசியும் எனக்குக் கற்றுக் கொடுத்தப் பாடம் என்னவென்றால் நன்றாகப் படிக்க வேண்டும் என்பது தான். அதன்படி பத்தாம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்தேன்.

இதைப் பார்த்த என் மாமா திரு. கண்ணன் அவர்கள் இவனுக்கு சரியான இடமும் சூழலும் இதுவல்ல என்று என்னை சென்னைக்கு அழைத்துச் சென்று விட்டார். இவரே என் முதல் குரு என்று சொன்னால், அது மிகையாது. இதனால் சென்னையிலுள்ள ஒரு புகழ் பெற்ற பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு சேர்ந்தேன். என் மாமாவின் வேண்டுகொள்ளுக்கிணங்க சேர்ந்து விட்டேன். ஆனால் தமிழ்வழிக் கல்வியிலேயே ஆரம்பத்திலிருந்து படித்து திடீரென்று ஆங்கில வழிக் கல்வி கற்கச் சென்றது என்னை கண்ணிருந்தும் குருடனாய் மாற்றியது. ஆரம்பத்தில்  ஆங்கிலத்தைப் பார்த்து அதிர்ந்தேன். வாழ்க்கை இது தான் என்று தெரிந்த பின்னர் பயப்படுவதை விட்டுவிட்டு பழகிக் கொள்ள முனைந்தேன். அகராதி வைத்து ஆங்கிலத்தை கற்றுக் கொண்டேன். நேரத்தை ஆங்கிலத்திற்காக அதிகம் செலவழித்தேன். இதன் விளைவாக பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சிப்பெற்றேன். எனது பெற்றோர் மற்றும் என் மாமாவின் எதிர்பார்ப்பை நான் பூர்த்தி செய்தேன். இப்படித்தான் எனது பள்ளிக்கல்வி பல சவால்களுக்கு இடையே சென்றது.

கே: உங்களின் கல்லூரி வாழ்க்கைப் பற்றிச் சொல்லுங்கள்?

எனக்கு சின்ன வயதிலிருந்தே எம்.பி.ஏ படிக்க வேண்டும் என்ற தீராத ஆசை இருந்தது. அதற்கு ஏற்றார் போல்  பனிரெண்டாம் வகுப்பில் வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல் பாடத்தில் நல்ல மதிப்பெண் எடுத்ததாலே சென்னையில் மிகவும் புகழ்பெற்ற குருநானக் கல்லூரியில் மெரிட்டில் சீட் கிடைத்தது. அச்சூழலில் இக்கல்லூரியில் பி. காம் படிப்பது ஒரு வரம் என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட கல்லூரியில் சேர்க்கை கட்டணம் செலுத்த என் தந்தையிடம் பணம் இல்லை. எப்படியோ புரட்டி சேர்க்கை கட்டணப் பணமான 2500 ரூபாய் செலுத்தினார். அப்போது நான் நினைத்தது என்னவென்றால் இனி என் வீட்டில் பணத்தை வாங்கி படிக்கக்கூடாது என்பதை ஒரு சபதமாக எடுத்துக் கொண்டேன் அதை இன்று வரை கடைப்பிடித்து வருகிறேன். இதனால் படிக்கும் போது பகுதி நேர வேலைக்குச் செல்லலாம் என்று நினைத்து பல கடை வாசலில் ஏறி இறங்கினேன்.

அப்போது சென்னையில் புட்வேல்டு என்ற உணவகத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை என்று ஒரு விளம்பரத்தைப் பார்த்து வேலை கேட்க சென்றேன். ஒரு நாள் இரு நாள் அல்ல பதினைந்து நாள் விடாமல் அந்தக் கடைக்கு வேலை கேட்டு சென்றேன். என்னுடைய இந்த முயற்சியைப் பார்த்து கடையின் மேலாளர் வேலைக் கொடுத்தார் அப்போது என்னுடைய  சம்பளம் 700 ரூபாய். இது தான் என்னுடைய முதல் சம்பளம். ஆனால் இது மட்டும் எனக்கு போதுமானதாக இல்லை. இதனால் புரபெசனல் கொரியர், புரெவ்சிங் சென்டர், பிட்ஸா கார்னர் என எல்லா வேலைக்கும் இரவு பகல் பாராமல் உழைத்தேன். ஒரு நாளைக்கு 4 மணி நேர தூக்கம் தான் எனக்கு. 20 முதல் 25 கி.மீ வரை சைக்கிள் பயணம் செய்தேன். நானே சமைத்து சாப்பிட்டு வந்தேன்.   இப்படித்தான் என்னுடைய கல்லூரிப் பயணம் சென்றது.

கே: சென்னைக்குச் சென்ற பயண அனுபவங்கள் பற்றி?

சென்னைக்கு படிக்கச் செல்கிறேன் என்று என்னுடைய பெற்றோர்களிடம் சொன்னேன். எனது தாயார் மறுத்தார். ஆனால் என் தந்தையோ நீ சென்னை செல்வதாக இருந்தால் தாராளமாகச் செல், சென்னை ஒன்றும் சாதாரண  ஊர் அல்ல பல சரித்திர நாயகர்களை உருவாக்கி இடம் என்று என்னை அனுப்பி வைத்தார். ஊரிலிருந்து புறப்பட்டேன், எங்கு தங்குவது, உறங்குவது போன்ற எத்தனையோ கேள்விகள் என்னைச் சுற்றி படமாய் ஓடிக்கொண்டிருந்தது. சென்னைக்கு இரண்டு முகங்கள் உண்டு. அது பகல் நேரத்தில் ஒரு விதமாகவும், இரவு நேரத்தில் ஒரு விதமாகவும் தென்படும். நண்பர்கள் நிறைய உதவினார்கள் அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால்,  சண்முகம், அருண், திலீப், விஜய்பாபு, இளையராஜா அண்ணா, சதிஸ், சக்தி அண்ணா, கணேஷ், சிவா அண்ணன் அது மட்டுமின்றி எனது பள்ளிப் பருவ மற்றும் நான் பிறந்த ஊர் நண்பர்களான சதிஸ், ரியாஸ், பிரபு, சுரேந்தர், செந்தில் ஆகியோர்  என்னால் என்றும் மறக்க முடியாத நண்பர்களாகும்.  அப்போது  தான் என் நண்பனின் மாமா கணேஷ் அண்ணனின் அறிமுகத்தால் எஸ்.எஸ்.என் கல்லூரியில் எம். பி. ஏ படிக்கும் வாய்ப்பை பெற்றேன். அப்போது தான் திலிப் அவர்களின் முலமாக எனக்கு இந்தியன் வங்கியில் கல்வி லோன் வாங்கிக் கொடுத்து உதவினார். அவரின் உதவியால் எம்.பி.ஏ. முடித்தேன். படித்த கையோடு கேபஸ் இன்டர்யூ வந்தது. இதில் தேர்வாகி,  வேலையும் கிடைத்தது. என் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் ஓரே மகிழ்ச்சி, 11,500 சம்பளத்தில் வேலையில் சேர்ந்தேன். கல்லூரியில் எனக்கு ஊக்கமாக இருந்த நண்பர்கள் சுமித், லெட்சுமி, பிரகாஷ், கணேஷ், நந்தக்குமார், செந்தில், ஆனந்த் ஆகியோரை இத்தருணத்தில் நினைவுப்படுத்தியே ஆகவேண்டும்,

கே: அமோகா உதயமானது பற்றிச் சொல்லுங்கள்?

எனக்கு சின்ன வயதிலிருந்து வெளிநாடுகளில் சென்று பணியாற்ற வேண்டும் என்ற ஆசையும் கனவும் இருந்தது. அது என்னுடைய ஆசை மட்டுமல்ல என்னுடைய மாமாவின் ஆசையும் அது தான். அதனால் நான் அமெரிக்காவைத் தேர்ந்தெடுத்தேன். அதன் படி பாஸ்போர்ட் எடுத்து விட்டேன். விசா எடுக்கும் பொழுது உமக்கு 40 லட்சம் மதிப்பிலான சொத்து  இருக்க வேண்டும் என்று கூறிவிட்டார்கள். அப்போது என்னுடைய ஆசை நிறை வேறவில்லை. ஆனால் நான் அதை எதிர்மறையாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனாலும் என்னுடைய கனவை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை.

அப்போது தான் திடீரென்று ஒரு அழைப்பு வந்தது. அப்போது ஜலந்தர் அண்ணன்

அவர்களின் அறிமுகம் கிடைத்தது. இவரை என்னுடைய தொழில் குரு. இவரின் மூலமாக சுவீடன் என்ற நாட்டில் இலவசக் கல்விக் கொடுத்து வருகிறார்கள். உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் அங்கு சென்று படியுங்கள் என்று கூறினார். அதன் படி நானும் அங்கு சென்றேன். ஆனாலும் என்னால் அங்கு முழுமையாகப் படிக்க முடியவில்லை. இதற்காக நான் மிகவும் சிரமப்பட்டேன். இதை ஏன் நாம் எளிமைப்படுத்தி ஒரு சேவைத் தொழிலாகச் செய்யக்கூடாது என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. அதற்கு நாம் முதலில் இத்துறை சார்ந்த கள ஆய்வு செய்ய வேண்டும் என்று எண்ணி 15 நாடுகளுக்கு பயணம் செய்தேன். எனக்கு உறுதுணையாக இருந்த திரு. ஜலந்தர் அண்ணன் இருந்தார்கள். அவரின் ஊக்கமே என்னை அடுத்தடுத்த எல்லா நாடுகளுக்கும் செல்ல தூண்டியது. இவரை  போலவே சுபேர் அகமது சண்முகம்  வெள்ளிங்கிரி ஆகியோர் என்னுடைய வளர்ச்சிக்கு உற்ற துணையாக இருந்தவர்கள்.

அப்போது தான் 2008 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில்  படி மாற்றி படி என்ற ஒரு நிகழ்ச்சியில் நான் பங்கேற்பாளராகக் கலந்து கொண்டு எங்கள் அமோகா நிறுவனத்தைப் பற்றிச் சொன்னேன். அந்த வருடமே  350 க்கும் மேற்பட்ட மாணவர்களை நாங்கள் வெளிநாட்டிற்குப் படிக்க அனுப்பி வைத்தோம். நான் மட்டும் தனியாக ஆலோசனைக் கூறி  150 க்கும் மேற்பட்ட மாணவர்களை அனுப்பி வைத்தேன்.  அதன் பிறகு என் வளர்ச்சியைப் பாராட்டி அன்றைய புகழ் பெற்ற பல தொலைகாட்சிகள் என்னை நேர்காணல் எடுத்து ஒளிப்பரப்பு செய்தது.

கே: உங்கள் ஆலோசனை படி வெளிநாட்டிற்குச் சென்று படிக்கும் மாணவர்களுக்கு நீங்கள் அளிக்கும் சிறப்புத் திட்டங்கள் பற்றிச் சொல்லுங்கள்?

எங்களிடம் ஆலோசனைப் பெற்று வெளிநாடு செல்லும் மாணவர்களில் நிறைய பேர் நடுத்தர மற்றும் ஏழை மாணவர்கள் தான். அவர்களால் அதிகளவில் பணம் கொடுத்து இங்கு படிக்க முடியாத சூழலில் இருப்பார்கள். இப்படிப்பட்ட மாணவர்கள் எங்களை நம்பி வரும் பொழுது அவர்களை மிகவும் அக்கரையுடன் அவர்களுக்கு ஏற்ற நாட்டிற்கு அனுப்பி வைப்போம், வெறும் அனுப்பி வைப்பதோடு இல்லாமல் அவர்களுக்கு வேலை வாய்ப்பு வாங்கும் வரை அவர்களுடன் நாங்கள் இருப்போம். மாணவர்களை ஒரு நாட்டிற்கு அனுப்புவதற்கு முன்பே நான் அந்த நாட்டிற்குச் சென்று விடுவேன்.

அக்கல்லூரி சார்ந்த அத்துனை தகவல்களையும் திரட்டி விடுவேன். கலாச்சாரம் நன்றாக இருக்க வேண்டும், பகுதிநேர வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும், இடம், காலசூழல், ஆங்கிலம் மொழி போன்றவற்றை அறிந்த பின்னரே தான் நான் அந்த நாட்டிற்கு அனுப்பி வைப்பேன். இதுவரை நான் அனுப்பிய மாணவர்களில் ஒருவர் கூட கல்லூரியையும், நாட்டையும் குறை சொல்லிக் கேட்டதில்லை.  இதுவரை 5,000 த்திற்கும் மேற்பட்ட மாணவர்களைப் படிக்க அனுப்பி வைத்துள்ளோம்.  என்னுடைய  மாணவர்கள் இன்று உலக நாடுகளில் பல இடங்களில் மருத்துவராகவும், பொறியாளராகவும் பணியாற்றி வருகிறார்கள். இது தான் எங்களுக்கு மிகப் பெருமையாகும்.

கே: கோவைப் பகுதியைத் தேர்ந்தெடுத்தன் காரணம் பற்றிச் சொல்லுங்கள்?

2008 ஆம் ஆண்டு கோவைக்கு வந்தேன். நான் எந்த ஊருக்குச் செல்கிறேன் என்றாலும் அந்த ஊர் பற்றிய அத்துனை தகவல்களையும் திரட்டி விடுவேன். ஒரு ஆறு மாத காலம் ஹோட்டலில் தங்கி கோவை சுற்றியுள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், மாணவர்கள், பெற்றோர்கள் போன்றவற்றை  நன்றாகத் தெரிந்து கொண்டேன். கல்விக்கு ஏற்ற சூழல் இங்கு அதிகளவில் இருப்பதாக உணர்ந்தேன்.

நான் இங்கே வரும் பொழுது கோவை மிகவும் குளிர்ச்சியாக இருந்தது. ஒருவர் ஒரு முறை கோவையில் வந்து  தங்கி விட்டால் அவர்களால் இவ்வூரிலிருந்து அவ்வளவு எளிதாக சென்று விடமுடியாது, அந்த அளவிற்கு இவ்வூர் அனைவருக்கும் பிடித்து விடும். நானும் இப்படித்தான் இந்த ஊரைத் தேர்ந்தெடுத்தேன். அதன்படி இங்கு அமோகா நிறுவனம் உதயமாயின. இன்று நான் கோவையிலுள்ள பல பள்ளிகளுக்கு கல்வி ஆலோசனை சார்ந்த விழிப்புணர்வு கொடுத்து வருகிறேன். மக்கள் பேசும் மொழியில் மிகவும் மதிப்பிருக்கும், இது போன்ற எண்ண மாறுதல்கள் தான் என்னை இங்கே தொழில் தொடங்க காரணமாக இருந்தது.

கே:  உங்களின் வளர்ச்சிக்கு ஊடகத் துறையின் எங்கு எந்தளவிற்கு இருக்கிறது?

சமூகத்தின் நான்கு பெரிய தூண்களில் ஒன்று தான் ஊடகம். இன்றைய காலக்கட்டத்தில் ஊடகத்தின் வளர்ச்சி மிக அதிகளவில் பெருகி இருக்கிறது. உலகத் தலைவர்கள் கூட ஊடகத்தை நம்பியே உறுதி மொழி எடுக்கிறார்கள். அந்த வகையில் என்னுடைய வளர்ச்சிக்கு ஊடகம் பெரும் அளவில் பங்கு வகித்திருக்கிறது. தமிழ்நாட்டில் ஒளிப்பரப்படும் பெரும்பாலான தொலைக்காட்சியில் என்றுடைய நேர்காணல் வந்திருக்கிறது.

அதிலும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் ஜெயாடிவி, சத்தியம் டிவி மாலை முரசு, மக்கள்டிவி,கலைஞர்டிவி,பாலிமர் டிவி, தந்திடிவி பொதிகை ஆகிய தொலைக்காட்சியில் என்னுடைய நேர்காணலை வெளியிட்டார்கள் இப்படி என்னுடைய வளர்ச்சிக்கு ஊடகம் பெரும் அளவில் துணைப்புரிந்து இருக்கிறது என்றால் அது மிகையல்ல.

கே: வெளிநாடுகளுக்குச் சென்று படிப்பதில் உள்ள நன்மைகளைப் பற்றிச் சொல்லுங்கள்?

ஒரு மாணவனுக்கு சின்ன வயதிலிருந்தே டாக்டராக வேண்டும் என்ற ஆர்வம் அவனுக்குள் இருக்கும்.  ஏதேனும் ஒரு சூழலில் அவனால் இந்தியாவில் படிக்க முடியாத நிலைக்கு சென்று விடலாம். இதனால் அம்மாணவனின் மனம் மிகவும் வேதனைக்குள்ளாகும், அப்படிப்பட்ட மாணர்கள் என்னிடம் ஆலோசனைக்கு  வரும் பொழுது உன்னுடைய இலக்கு மருத்துவர் அது இங்கே படித்தால் என்ன அல்லது வெளிநாடுகளில் படித்தால் என்ன உன்னுடைய இலக்கில் எப்படியேனும் நீங்கள் சாதித்து விடலாம் என்று அவர்களுக்கு ஆலோசனை கூறுவேன். அதற்கு முதலில் அவனுக்கு ஆர்வம் இருக்க வேண்டும்.

வெளிநாட்டுக் கலாச்சாரம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும். அவர்கள் அங்கு படிப்பதால் அங்குள்ள கலாச்சாரத்தை நன்கு கற்றுக்கொண்டு புரிந்து கொள்ள முடிகிறது.

இங்கு சுமாராக ஆங்கிலம் பேசும் பிள்ளைகள் வெளிநாடுகளுக்கு செல்வதன் மூலம் ஆங்கிலம் சரளமாகப் பேசுவதை விட இன்னும் பிற மொழிகளையும் அவர்களால் கற்றுக் கொள்ள முடிகிறது.

எதையும் புத்தகத்தின் மூலம் அவர்கள் பாடத்தை நடத்த மாட்டார்கள்., எல்லாமே ஆய்வுகள் மூலமாகத்தான் எதையும் சொல்லிக் கொடுப்பார்கள்.

தொழிற்நுட்பங்களை கற்றுக் கொடுக்கும் போது அதிலுள்ள நுணுக்கங்களைக் கற்றுக் கொடுப்பார்கள்.

கே: உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மறக்க முடியாத நிமிடங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

என் வாழ்க்கை ஒரு போராட்டக்களம். வறுமையின் வாசனையை மூச்சுக் காற்றாய் சுவாசித்த காலம். தெருவிளக்கில் படித்த நீங்காத நினைவுகள், ஒரு வேளை உணவு கிடைக்காத என்று ஏக்கத்தில் தெருவில் தூங்கி காலம், உறவினர்களின் பொய் போலிதனம், பண்டிகை காலத்தில் வீட்டிற்குச் சென்றால் என் பெற்றோர் புது ஆடை மகன் வாங்கி வந்திருப்பானா என்று தவித்த அத்தருணம்,  நண்பர்களின் எதிர்பாராத உதவிகள், பகுதி நேர வேலையை முடித்த நடு இரவு நேர சைக்கிள் பயணம், காதலித்து மணந்த மனைவி, எங்கள் அன்பிற்கு கிடைத்த மகள், ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த என் மகன் மருத்துவராகி விட்டான் என்று என்னிடம் நன்றி சொல்லும் தாய் தந்தையர்கள் என்று எல்லாமே என் வாழ்க்கையில் என்றும் நீங்காத நிமிடங்கள் தான்.

கே: உங்களிடம் வரும் பெற்றோர் மற்றும் மாணவர்களின் எதிர்பார்ப்பு என்னவாக இருக்கிறது?

எல்லோருக்குள்ளும் ஒரு பெரிய எதிர்பார்ப்போடு தான் எங்களைச் சந்திக்க வருகிறார்கள். என்னுடைய மகன் ஒரு மருத்துவராக, பொறியாளராக ஆக வேண்டும் என்று ஆசையோடு வருகிறார்கள், என்னுடைய பிள்ளை நன்றாகப் படித்து எங்களை பிற்காலத்தில் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே பெற்றோர்களின் அதிகப்படியான ஆசையாக இருக்கிறது, இதில் தவறு ஏதும் இல்லை. தாங்கள் பெற்ற பிள்ளைகளை அவ்வாறு எதிர்பார்ப்பது சரியான ஒன்று தான். இவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்திச் செய்யும் கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம்.

என்னிடம் ஒரு முறை மாணவர்கள் வந்து விட்டால் அவர்களின் மனதில் நம்பிக்கை பிறந்து விடும். அவர்களின் வாழ்க்கைக்கான நல்வழியை காட்டி விடுவேன். இவ்வழியில் அவர்கள் பயணம் செய்தால் நிச்சியம் வெற்றி பெற முடியும் என்பதை புரிய வைத்து விடுவேன்.

பெற்றோர்களுக்கு ஒரு வித பயம் இருக்கத்தான் செய்யும், தன் மகனோ, மகளோ வெளிநாட்டிற்கு அனுப்புவது  பற்றியான அத்துனை தகவல்களையும் முறையாக அவர்களிடம் சொல்லி புரிய வைக்க வேண்டும். நம்மை நம்பி வருபவர்களை ஒரு போதும் நம்பிக்கை இழக்கும் படி நடந்திடுதல் கூடாது.

கே: அமோகவின் தனிச்சிறப்புகள் பற்றிச் சொல்லுங்கள்?

சாதாரண விவசாயக் குடும்த்தில் பிறந்தவரும் மருத்துவர் ஆகலாம். இதை உண்மையாக்கும் விதத்தில் தான் 12 வருடங்களுக்காக இந்த சேவையை செய்து வருகிறோம்.

குறைந்த கட்டணத்தில் மாணவர்கள் விரும்பும் நாடுகளில் மருத்துவம், பொறியியல் படிக்கலாம்.

எங்களிடம் எம்.பி.பிஎ.ஸ், இன்ஜினியர், எம்.பி.ஏ எம். எஸ்  ஆகிய  படிப்புகள், வேலைவாய்ப்பு சார்ந்த தொழிற்படிப்புகள் ஆகிய துறைகளை நீங்கள் விரும்பும் நாட்டில் படிக்கலாம்.

நல்ல தரம் வாய்ந்த கல்லூரிகளான  உக்ரைன், ஜமைக்கா, அர்மோனியா, சீனா,போலந்து, சிங்கப்பூர், பிரான்ஸ், சுவிடன் போன்ற நாடுகளில் படிக்கலாம்.

மாணவர்களுக்கு பாஸ்போர்டு எடுத்துக் கொடுப்பதிலிருந்து, விமான கட்டணம், சேர்க்கை, விசா, பேங்க் லோன் என எல்லா உதவிகளையும் செய்வதோடு அவர்களை நேரடியாக கல்லூரியில் விட்டு அங்கும் எல்லாம் உதவிகளையும் செய்த பின்னரே வருகிறோம்.

உலக நாடுகளில் எங்கெங்கு என்ன பல்கலைக்கழகங்கள் இருக்கிறது, அங்கு கலாச்சாரங்கள் எப்படி இருக்கிறது என்று எல்லா நாடுகளுக்கும் நான் நேரடியாகச் சென்று ஆய்வு செய்த பின்னரே அங்கு மாணவர்களை அனுப்பி வைக்கிறோம்.

பணத்தை நாங்கள் ஒரு போதும் முக்கியமானதாக நினைத்ததில்லை, அது நாங்கள் இதுவரை அனுப்பிய மாணவர்களுக்கு தெரியும்.

எந்த நாட்டிற்கு மாணவர்களை அனுப்புகிறோமோ நானும் அவர்களுடன் சென்று அவனுக்குத் தேவையான அத்துனை உதவிகளையும் செய்த பின்னரே நான் வருவேன்.

எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் அனைவரையும் நான் பல வெளிநாட்டு கல்லூரிகளுக்கு அழைத்துச் சென்றிருக்கிறேன்.

ஒரு துறையை ஒரு மாணவன் தேர்ந்தெடுத்து படிக்கும் முன் அத்துறை சார்ந்த அத்துனை நன்மைகளையும் தீமைகளையும் சொல்லிய பின்னர் தான் அதில் பயில அனுமதிப்போம். அது மட்டுமின்றி எதிர்கால வாழ்க்கைக்கு இக்கல்வி எவ்வாறு துணைப்புரிகிறது என்பதையும் சொல்லி அவனுக்கு விழிப்புணர்வு கொடுப்போம்.

கே: வளரும் இளம் தலைமுறையினருக்கு நீங்கள் கூறும் ஆலோசனைகள்?

ஆலோசனை என்பதை விட அறிவுரை என்று கூறினால் மிகவும் பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

மாணவர்களே உங்கள் எண்ணம் போல் வாழ்க்கையை வாழுங்கள். உங்கள் நோக்கத்தை வளர விடுங்கள், இங்கு எதுவும் சாத்தியம் என்று புரிந்து கொள்ளுங்கள், இங்கு நிறைய வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கிறது, அதைத் தேடி ஓடுங்கள்.

முடியாது என்பது உன்னுடைய முயற்சியில் மட்டும் தான் இருக்கிறது. அதை சரியாகப் பயன்படுத்தினால் வானத்தையும் எட்டலாம், கடலையும் கடக்கலாம் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்.

கே : உங்களின் எதிர்காலத்திட்டம் ?

திட்டங்கள் நிறைய இருக்கிறது. ஒரு ஆதரவற்றோர் இல்லத்தைத் தொடங்க வேண்டும்.

முழுக்க முழுக்க இலவசமாக ஆங்கில வழிக்கல்வி கொடுக்கும் கல்விக்கூடத்தை தொடங்க வேண்டும்.

கிராமப்புற ஏழை எளிய நடுத்தர மாணவர்கள் அதிகளவில் வெளிநாடுகளுக்குச் சென்று  படிக்க உதவ வேண்டும்.

நேர்காணல்:  விக்ரன் ஜெயராமன்

இந்த இதழை மேலும்

அன்பான அனுசரிப்பு…! அகிலமெங்கும் உன் சிறப்பு…!

டாக்டர் எஸ். ராமகிருஷணன் M.B.B.S.,F.A.C.S( Austria),Dip.Card (Vienna)

Consultant Cardiologist

THE POLLACHI CARDIAC CENTRE

பொள்ளாச்சி.

அடுத்துவர் மனதை  நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுதும் சுபதினம் என்பார் கவிஞர் கண்ணதாசன். இவ்வரிகள் மருத்துவத்துறைக்கு மிகவும்  பொருத்தமான ஒன்று. அதிலும் குறிப்பாக இவருக்கு மிகவும் பொருந்தும்.

முயற்சியும் பயிற்சியும் தொடர்ச்சியாக இருந்தால்  சாதாரண மனிதனும் சாதனையாளன் ஆகலாம் என்னும் தாரக மந்திரத்தை தன் வாழ்நாளில் கண்ணாகப் போற்றி சாதித்து வரும் சாதனையாளன்.

கொங்குப் பகுதியில் தலை சிறந்த இதய நோய் சிகிச்சை மருத்துவர்களில் முன்னோடி.

தலைக்குள் கனமிருந்தும் தலைக்கனம் சற்றும் இல்லாதவர். அனைவரிடமும் அன்பாகவும் பண்பாகவும் பழகக்கூடியவர்.

முடிந்தவரை முயற்சிப்பதல்ல முயற்சி ஒரு செயலை திறம்பட முடிக்கும் வரை முயற்சிப்பது தான் சிறந்த முயற்சி என்னும் வாக்கிற்குச் சொந்தக்காரர்.

அயல்நாடுகளில் கற்ற நுண்ணறிவும், தன் அறிவால் கற்ற செயலறிவையும் கொண்டு இந்தியாவில் தன் பெயரை நிலை நிறுத்தி வரும் THE POLLACHI CARDIAC CENTRE  நிறுவனர் டாக்டர் எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு

கே: உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பத்தைப் பற்றியும் சொல்லுங்கள்? 

நான் கொங்கு பகுதிகளின் ஒன்றான பொள்ளாச்சியில் தான் பிறந்தேன். தந்தையார் திரு. சண்முக ரெட்டியார் சுதந்திரப் போராட்ட தியாகி, தாயார் காளியம்மாள். மிகச் சிறு வயதிலேயே தாயும், கல்லூரிப் பருவத்தில் தந்தையாரும் இறந்து விட்டனர்.  நாங்கள் மொத்தம் ஆறு சகோதரர்கள், இரண்டு சகோதரிகள். தற்சமயம் 4 சகோதரர்களும் ஒரு சகோதரியும் தான் இருக்கிறோம்.  மூத்த சகோதரர் திரு. ராதாகிருஷ்ணன் அவர்கள் கோபியில் உள்ளார். அடுத்த சகோதரர் திரு. முத்துகுமாரசாமி அவர்கள் எங்கள் மருத்துவமனையில் நிர்வாகப்  பொறுப்பைக் கவனித்துக் கொள்கிறார். இளைய சகோதரர் திரு. சுப்பராயன் ARVIND OPTICALS என்ற பெயரில் பொள்ளாச்சியில் தொழில் செய்கிறார். சகோதரி திருமதி. ராஜேஸ்வரி அவர்கள் SSLC படித்து ஆசிரியராக சேர்ந்து திருமணத்திற்குப் பின் அவர் கணவர் திரு. ஜெகன்நாதன் அவதர்கள் ஊக்கத்தின் பேரில் ஆசிரியப் பணியின் இடையே மேலும் M.A., M.Ed., படித்து, தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி, ஓய்வு பெற்று சென்னையில் வசிக்கிறார்.

எனது மனைவி டாக்டர் கீதா, ஆந்திராவில் பிறந்து கர்நாடாகாவில் வளர்ந்து, சிறு வயது முதல் பெருநகர் பெங்களூரில் வளர்ந்து வந்தாலும் கூட பொள்ளாச்சியில் வாழ்க்கைப்பட்டவுடன் இடத்திற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டார். தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம், துளு போன்ற பல மொழிகளைப் பேசும் பன்மொழி வித்தகர். இவர் ஒரு கண் சிகிச்சை மருத்துவர். எங்களுக்கு ஒரு மகன், ஒரு மகள். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.  மகன் சுஜய் நிக்கல் என்னைப் போல இருதய நோய் மருத்துவர். மருமகள் டாக்டர் சமீரா கண் மருத்துவர். மாமியார் டாக்டர் கீதாவை போல தற்சமயம் நாங்கள் அனைவரும் எங்களுது மருத்துவமனையில் தான் பணியாற்றுகிறோம். எனது மகள் நிவேதிதாவிற்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்தும், அவர்களை பொறியியல் படிக்க வைத்தேன். மருமகன் ஸ்ரீராம் அவர்களும் பொறியியல் பட்டதாரி. மகளும் மருமகனும் தற்போது அமெரிக்காவில் மேற்படிப்பு முடித்து, அங்கே பணியாற்றி வருகிறார்கள்.

கே: தங்கள் படிப்பைப் பற்றிச் சொல்லுங்கள்?

நான் பொள்ளாச்சி நகரில் உள்ள நகராட்சி பள்ளியில் ஆரம்பக்கல்வியும், நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தமிழ் வழிக் கல்வியில் தான் பயின்றேன். பின்னர் பொள்ளாச்சி NGM கல்லூரியில்  PUC  படித்தேன். பொதுவாக தமிழில் நல்ல ஆர்வம் இருந்ததால்தான் PUC தமிழ் படித்த வரைக்கும் நான் தான் தமிழ்ப் பாடத்தில் முதல் மதிப்பெண் எடுப்பேன்.

சென்னை நகரில் அதன்படி M.B.B.S படித்து முடித்தவுடன் நீலகிரியில் அரசாங்க மருத்துவமனையில் ஒரு மூன்று ஆண்டு காலம் பணியாற்றினேன். அதன் பிறகு அரசு ஒரு ஆணைப் பிறப்பித்தது. மத்திய கிழக்கில் உள்ள இரான் நாட்டில் பணியாற்ற நானும் சென்றேன். அங்கு ஒரு ஐந்து ஆண்டுகள் பணியாற்றினேன். பணியாற்றி முடித்தவுடன் மேற்படிப்பு முடித்து மீண்டும் இந்தியாவிற்கு வர வேண்டும் என்று நினைத்தேன். ஆதனால் இங்கிலாந்து நாட்டில் ஒரு  வருடமும் மேற்கு ஜெர்மனி நாட்டில் ஒரு வருடமும் பயிற்சி செய்யும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் ஆஸ்திரியாவின் தலைநகர் வியண்ணாவில் தான் கார்டியாலஜி சம்மந்தமான அத்துனை நுணுக்கத்தையும் கற்றுக் கொண்டேன். இப்படியே என்னுடைய பயணம் தொடங்கியது.

கே: தமிழ்நாட்டிற்கு வந்த உங்கள் முதல் மருத்துவப் பயணம் பற்றிச் சொல்லுங்கள்?

1974 யிலிருந்த 1984 ஆம் ஆண்டு வெளிநாடுகளிலேயே எனுடைய மருத்துவ பயணம் அமைந்தது.  அதன் பிறகு  1984 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தேன். வந்தவுடன் கோவை இராமகிருஷ்ண்னா மருத்துவமனையில் பணியாற்ற வாய்ப்புகள் கிடைத்தது.  அருட்செல்வர் மகாலிங்கம் அவர்களை நான் சின்ன வயதிலிருந்தே பார்த்து வளர்ந்தவன். என்னுடைய தந்தையும் அவருடைய தந்தையும் நெருங்கிய நண்பர்கள்.

அப்போது அருட்செல்வர் அவர்கள் ஒரு முறை நான் கோவையில் பணியில் சேர இருக்கும் சந்தர்ப்பத்தில் கோவைப் பகுதியில் மருத்துவம் சார்ந்த அத்துனை சிகிச்சை முறைகளும் இருக்கிறதா என்று கேட்டார். அதற்கு வெளிநாடுகளில் இருப்பது போல் அவ்வளவு வசதிகள்  இல்லை என்று கூறினேன். அதற்கு, அப்படியிருக்கும் போது நீங்கள் ஏன் இப்பகுதியில் ஒரு மருத்துவமனை தொடங்க கூடாது என்று கேட்டார்.  அவரின் வாக்கினை வேதவாக்காக ஏற்று எங்களுக்குச் சொந்தமான ஒரு வீட்டை மெருகேற்றி மருத்துவமனையாக மாற்றினேன்.

கோவைப் போன்ற பகுதிகளில் நிறைய மருத்துவமனைகள் இருந்தது. ஆனால் இங்கு அப்படி எதுவுமில்லை. ஆனால் சொந்த ஊரிலே மருத்துவமனை தொடங்கி அங்கே மருத்துவராக இருப்பது என் மனதிற்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது.

கே: வெளிநாடுகளில் மருத்துவராய் பணியாற்றுவதற்கும், ஒரு சின்னப்பகுதியில் பணியாற்றுவதற்கும் உள்ள வேறுபாடு எப்படியிருக்கிறது.

மாற்றங்கள் நிறைய இருக்கத்தான் செய்யும்.  இங்கு பணியாற்ற வந்துவிட்டோம்  இனி இங்கு எப்படி பணியாற்ற வேண்டும்  என்பதை மட்டுமே யோசிக்க வேண்டும். வெளிநாடு சிகிச்சை வேறுபாட்டிருந்தாலும் நோய் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. அதற்கு வெளிநாடு உள்நாடு என்று எதுவும் இல்லை.

மருத்துவருக்கு நோயை எப்படி குணம்படுத்த வேண்டும் என்பது மட்டும் தான் யோசிக்க வேண்டுமோ தவிர இடத்தைப் பற்றி யோசிக்க கூடாது. எல்லாத் துறையிலும் கடிமான சூழல் இருக்கத்தான் செய்யும் ஆனால் அங்கு தான் நாம் கற்றுக் கொண்ட பயிற்சிகளை முழுமையாக ஈடுபடுத்த வேண்டும்.

கே: கார்டியாலஜி துறையைத் தேர்ந்தெடுத்தன் காரணம் பற்றி?

மருத்துவத் துறையில் பல பிரிவுகள் இருக்கிறது. ஆனால் உயிர் கொடுக்கும் துறை என்றால் அது இத்துறை தான்.  அது மட்டுமின்றி இத்துறை மருத்துவத்திலே எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.  பிடித்த துறையில் பிடித்தார் போல் பணியாற்றுவதில் உள்ள மகிழச்சி வேறு எதிலும் இல்லை. அதிலும் நான் வெளிநாடுகளில் பணியாற்றும் போதும் இத்துறை சார்ந்த சிகிச்சை முறை பற்றி மட்டுமே பயிலும் வாய்ப்பு கிடைத்தது. அதானல் தான் இத்துறையை நான் தேர்ந்தெடுத்தேன்.

கே: கடந்து வந்த பாதையில் உங்களால் மறக்க முடியாத நோயாளிகள் பற்றி?

ஒரு மருத்துவருக்கு ஒவ்வொரு சிகிச்சையும் ஏதேனும் ஒரு விதத்தில் ஒரு மாற்றத்தையும் மறக்க முடியாத நிகழ்வையும் கொடுத்து கொண்டு தான் இருக்கும். அந்த வகையிலும் என் மனதில் நீங்காத நிகழ்வுகள் நிறைய இருக்கிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் என்னிடம் சிகிச்சை பெற்ற ஒரு ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மறைந்த திரு. அப்பாசாமி நாயுடு அவர்கள் இறக்கும் முன் மரண சாசனம் என்று ஒரு தாளில் என்னைப் பற்றியும் எனது சிகிச்சை பற்றியும் மிக மேன்மையாக எழுதி வைத்துச் சென்றது மிகவும் பெருமையாக இருந்தது. இன்றும் அக்கடிதம் என்னிடம் பத்திரமாக இருக்கிறது.

கே: வெளிநாடுகளில் நீங்கள் பணியாற்றும் போது அங்குள்ள மருத்துவர்களிடமிருந்து நீங்கள் கற்றுக் கொண்டது என்ன?

அங்கு எல்லோம் நேர மேலாண்மையை சரியாகப் பயன்படுத்துவார்கள். அவர்களுக்குள் காலதாமதம் ஒரு போதும் இருந்திடாது. ஒரு வேலை எடுத்துக் கொண்டால் அதை முடிக்கும் வரை  அதைப் பற்றி மட்டுமே தான் சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.

இவர்களுக்கு யாரும் ஒருவர்; சூப்பர்வைசராக இருந்து கொண்டு கண்காணிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.  அவரவர் வேலையை அவர்களே பார்த்துக் கொள்வார்கள்.

வேலை நேரத்தில் வீண் பேச்சு, வெட்டி விவாதம் போன்றவற்றை முற்றிலுமாக தவிர்த்து விடுவார்கள்.

சரியான நேரத்திற்கு உள்ளே வருவார்கள்.  சரியான நேரத்திற்குள் வெளியே சென்று விடுவார்கள்.

ஓய்வு நாட்களை ஓய்வுக்காக மட்டுமே தான் பயன்படுத்துவார்கள். இப்படி எண்ணற்றவைகளை அவர்களிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன்.

கே: தற்போது உணவு பழக்க வழக்கங்களில் நிறைய மாறுதல்கள் ஏற்பட்டிருக்கிறது, அது பற்றி?

கலாச்சாரம் என்ற பெயரில் நம்மில் நிறைய பேர் பழமையை மறந்து வருகிறோம்.  முன்பெல்லாம் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தான் ஹார்ட் அட்டாக் போன்ற இதயம் சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டது.. ஆனால் தற்போது 16 வயதுடைய கல்லூரியில் படிக்கும் பிள்ளைகளுக்கும் ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது என்றால் அதற்கு காரணம் அவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவு முறைகள்  மட்டுமின்றி மன உளைச்சலும் தான்.

Fast Food & Fast Life are to be Considered Double Edged Knife

அது மட்டுமின்றி முன்பெல்லாம் இளைஞர்கள் எல்லோரும் நன்றாக விளையாடுவார்கள். உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வார்கள். உடற்பயிற்சி, கால்பந்து, கைபந்து, கிரிகெட் , கபடி என நிறைய விளையாட்டுகள் விளையாடுவார்கள். உடல் பலமானதாக இருந்தது. அனால் தற்போதை உள்ள பிள்ளைகள் வெளியே சென்று விளையாடாமல் செல்போனில் விளையாடி அதிலே முழ்கி இருக்கிறார்கள். இதனால் அவர்களுககு எவ்வித உடல் அசையும் உடற்பயிற்சியும் செய்யாமல் இருப்பதால் அவர்களுக்கு இதயம் சார்ந்த பிரச்சனைகள் வருகிறது.

பெற்றோர்கள் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். தன் பிள்ளைகள் நன்றாக படித்தால் மட்டும் போதும் என்று நினைக்கிறார்கள். பள்ளி முடிந்தால் ட்யூசன், ட்யூசன் முடிந்ததும் வீட்டில்  படிக்க வைக்கிறார்கள். இது அவர்களின் உடலளவிலும் மன அளவிலும் பெரிதாக பாதிக்கப்பட்டு விடும். என்று சொல்லிக் கொள்கிறேன்.

கே: உங்கள் தந்தையிடமிருந்து நீங்கள் கற்றுக் கொண்டது?

என் தந்தை ஒரு சுதந்திர போராட்ட வீரர். இரண்டு முறை சுதந்திரத்திற்காக சிறைச் சென்றுள்ளார். நாச்சிமுத்து கவுண்டர், சி. சுப்ரமணியம் ஆகியோருடன் நெருங்கி பழகக்கூடியவர். கோவை மாவட்டத்திலேயே முதல் கதராடை கடையை வைத்தவர் இவர் தான். எப்பொழுதுமே வெள்ளை நிற ஆடையை மட்டுமே அணிவார். பெரிய மீசை வைத்திருப்பார்.

எனது தந்தை மிகவும் கடவுள் பக்தி உள்ளவர். எங்களிடம் எப்போதும் ஒன்றை மட்டும் சொல்லிக் கொண்டிருப்பார். உண்மையும் உழைப்பும் மட்டும் உன்னை உயர்த்தும் வல்லமை கொண்டது என்று என் தந்தை கூறியதை இன்றும் என் வாழ்நாளில் கடைபிடித்து வருகிறேன். அதுமல்லாமல் ஒருவர் தன் வருமானத்தில் 10 % தானம், தர்மம் செய்து பிறருக்கு உதவ வேண்டும் என்பார். அதே போல் நானும் சுமார் 10 % மற்றவர்களுக்கு உதவ ஒதுக்கி வைப்பேன்.

இங்கு மருத்துவர் தொழில் ஆரம்பித்த நாட்கள் முதல் இன்று வரை என்னால் முடிந்த அளவிற்கு உளமாற நோயாளிகளுக்காக பணியாற்றி கொண்டு இருக்கிறேன். மேலும் எங்களுது இருதய நோய் அமைப்பில் நான் பல்வேறு பொறுப்புகளில் இருந்து விட்டேன். தற்போது இந்திய அளவில் உள்ள சிறந்த கார்டியாலஜி மருத்துவர்கள் அனைவரையும் எனக்கு நன்றாக தெரியும். நான் கோவை மாவட்ட  கார்டியாலஜி துறையின் தலைவராக இருந்திருக்கிறேன். தமிழ்நாடு  அளவில் இதே பிரிவில் துணை தலைவராக இருந்திருக்கிறேன். அதுமட்டுமின்றி அகில இந்திய அளவில் ஆலோசனை குழுவிலும் பணியாற்றி இருக்கிறேன். இருதய நோய் தொடர்புள்ள இந்திய மற்றும் சர்வதேச இயக்கங்களிலும் அங்கத்தினராக இருக்கிறேன்.

கே: தற்போதைய உள்ள இளம் மருத்துவர்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

மருத்துவம் என்பது மிகவும் மகத்துவம் நிறைந்தது. தற்போதைய உள்ள இளம் தலை முறை மருத்துவர்கள் அதிகளவில் ஆர்வமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.  ஒரே  நேரத்தில் பல வேலைகளை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதை சற்று மாற்றிக் கொள்ள வேண்டும். ஈடுபாடும், இணைப்புத்தன்மையும் சற்று குறைவாகத்தான் இருப்பது போல் தோன்றுகிறது.  அப்போதெல்லாம் நாங்கள் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை பார்ப்போம். பகல் இரவு பாராமல் வேலை செய்வோம். ஆனால் தற்போதைய இளைஞர்கள் இதை செய்வதாக தோன்றவில்லை.

எங்கள் காலத்தில் எங்களுக்கு என்று முன்னோடிகள் யாரும் இல்லை. அனைத்தையும் நாங்களே தான் கற்றுக் கொண்டோம். எவ்வளவு பெரிய சந்தேகங்கள் ஏற்பட்டாலும் அதை நாங்களே நிவர்த்தி செய்து கொண்டோம். ஆனால் தற்போது அப்படிப்பட்ட சூழல் இல்லை. ஏதேனும் துறை சார்ந்த சந்தேகம் என்றால் அதைப் போக்க நிறைய மருத்துவர்கள் இருக்கிறார்கள். வலைதளத்தல் இல்லாத விபரமே இல்லை.ஆனால் தற்போது இளம் மருத்துவர்கள் மத்தில் நல்ல நம்பிக்கை இருக்கிறது. என்பதை என்னால் உணர முடிகிறது. அவர்கள் நிறைய சாதிப்பார்கள்.

கே: பொதுவாக மருத்துவர் என்றாலே ஓய்வில்லா வேலை என்று சொல்வார்கள் அது பற்றி உங்களின் கருத்து?

அது உண்மை தான். மருத்துவம் என்பது மிகவும் மதிக்கப்பட வேண்டிய ஒன்று. அதிலும் பல்வேறு அழுத்தங்கள் இருக்கத்தான் செய்யும். அதை நினைத்து வருத்தம் கொள்ளாமல் அடுத்தடுத்த படிநிலைகளை நோக்கி பயணம் செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் நம்மால் வளர்ச்சி நிலையை அடைய முடியும்.

நான் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை எடுத்து விடுவேன். மனிதனுக்கு ஓய்வு என்பது ஒரு பரிசு. அது கிடைக்கும் போதெல்லாம் வாங்கி பயன் பெற்றுக் கொள்ள வேண்டும்.

நான் நிறைய புத்தகங்களைப் படிப்பேன், விளையாட்டிற்கு நேரத்தை ஓதுக்குவேன். அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று நான் ஒரு போதும் ஆசைக் கொண்டதில்லை. கிடைத்ததை வைத்து எந்தளவிற்கு மன மகிழ்வாய் இருக்க முடியிமோ அப்படி இருந்து விடுவேன்.

நம்மை விட வசதிப்படைத்தவனை நினைத்து அவருடன் நாம் ஒப்பிட்டுப் பார்க்க கூடாது. வசதியில் குறைந்தவனோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டால் வாழ்வு வளமாக இருக்கும். மனஅழுத்தம் இத்தகைய காரணத்தினால் தான் ஏற்படுகிறது.

கே: ஒரு புறம் நோயும் மறுபுறம் மருத்துவமனையும் பெருகிக் கொண்டு போகிறது. அது பற்றி சொல்லுங்கள்?

நோயின் பெருக்கதால் தான் மருத்துவமனையின் வளர்ச்சி அதிகளவில் வந்து விட்டது.  தற்போது மக்கள் இடையே விழிப்புணர்வு எவ்வளவு தான் இருந்தாலும் அதை புரிந்து கொள்ளும் பக்குவம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

வருமுன் காப்பது சிறந்தது என்பதை யாரும் புரிந்து கொள்ள முடியவில்லை.  நல்ல பழக்கங்களை யாரும் கடைபிடிப்பதில்லை. யோகா நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி போன்றவை செய்தாலே போதும் உடலும் மனமும் நன்றாக இருக்கும்.

நேரமின்மை என்று இங்கு எதுவுமில்லை. நேரத்தை நாம் தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  30 நிமிடம் நேரத்தை ஒதுக்கி யோகா செய்யாமல் இருப்பதால் தான் நோய் ஏற்பட்டு பல நாட்கள் மருத்துவமனையிலேயே தங்குகிறோம்.

இதைத் தவிர்க்க வேண்டும் . வந்தப்பின் எதிர்கொள்வதை விட வருமுன் காப்பது சிறந்தது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். உணவில் அக்கறை செலுத்துங்கள்.

யாகாவாராயினும் நாகாக்க வேண்டும்…

கே: இதயத்தின் மகத்துவம் பற்றிச் சொல்லுங்கள்?

இதயம் ஒரு கோயில் இது தான் என்னுடைய தாரக மந்திரம். கோயிலுக்குச் சொல்ல வேண்மென்றால் நம் எப்படி பயபக்தியோடு இருக்கின்றோமோ அது போல் தான் இதயத்தின் மேலும் பக்தியோடு இருக்க வேண்டும்.

நம் நன்றாக வாழ இதயம் எப்படி எப்போதும் துடித்துக் கொண்டே இருக்கிறதோ அதற்கு நாம் நன்றியை செலுத்த வேண்டும். என கடன் பணி செய்து கிடப்பது என்பது இதயத்திற்கு மிகவும் பொருத்தமான வரிகள்.

கொழுப்பு சத்துள்ள எண்ணைப் பண்டங்களை சாப்பிடுவதைத் தவிருங்கள். அப்படியே சாப்பிட்டாலும் அதற்கு ஏற்றார் போல் நன்றாக உடற்பயிற்சி செய்தாலே போதுமான ஆரோக்கியம் கிடைத்து விடும்.

உடல் பருமனே அத்துனை நோய்களுக்கு அஸ்திவாரம். அது தான் இதயத்தின் பாதிப்பிறகு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இதயம் நன்றாக இருக்க வேண்டும் என்றால் பருமனை தவிர்க்க வேண்டும்.

ஒரு தாய் கறுவுற்று 5 வது வாரத்திலிருந்து குழந்தைக்கு இதயம் துடிக்கத் தொடங்கி,  வாழ்நாள் முழுவதும் துடித்து கொண்டேயிருக்கும்.

நாம் தூங்கும் போது  மூளை முதற்கொண்டு எல்லா உறுப்புகளும் ஓய்வெடுக்கும் ஆனால் இதயம் அப்படி  இல்லை. ஓய்வெடுக்காமல் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு உறுப்பு. அதை நாம் சரியாகப் பாதுகாப்பது ஒவ்வொருவரின் பொறுப்பு.

கே: இந்திய மருத்துவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

இந்திய மருத்துவம்  என்பது மகத்துவம் மிகுந்தது. உலகத்திலேயே சிறந்த மருத்துவத்தை கடைபிடித்து வந்த நாடுகள் சீனாவும் இந்தியாவும் தான்.

ஆங்கிலேயர் வருவதற்கு முன்னர் நம் நாட்டில் இந்திய மருத்துவம் கொடிகட்டி பறந்தது. அவர்களின் வருகைக்குப் பின்னரே இந்திய மருத்துவம் முற்றிலுமாக அழிந்தது. தற்போதும் பாரம்பரியத்தை காக்கும் விதமாக சிலர் இந்திய மருத்துவத்தைத் திறம்பட செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களை சரியாக இனங்கண்டு அவர்களிடம் மருத்துவம் பார்க்க வேண்டும்.

இன்றும் கூட அமெரிக்கா, லண்டன் போன்ற நாடுகளில் நம் இந்திய பாரம்பரியத்தை காத்த மருத்துவர்களின் புகைப்படம் வைத்து காத்து வருகிறார்கள் என்பது கூடுதல் சிறப்பாக இருக்கிறது.

கே: தங்களது ஆசிரியர்கள் பற்றி?

எனது ஆசிரியப் பெருமக்களை நினைத்தாலே மிகப் பெருமையாக இருக்கிறது. ஒன்றாம் வகுப்பு முதல் கடைசி வரை நான் பயின்ற அத்துனை ஆசிரியர்களுக்கும் நான் மிகவும் கடன் பட்டிருக்கிறேன். எனது ஆசிரியர் பெருமக்களை நினைத்தாலே மிகவும் பெருமையாக இருக்கிறது. ஆறாம் வகுப்பு ஆசிரியர் திரு. வெங்கடாசலம், ஓன்பதாம் வகுப்பு ஆசிரியர் திரு. கிருஷ்ணமூர்த்தி, SSLC ஆசிரியர் திரு. ராமகிருஷ்ணன்,பியுசி யில் தனது சிம்மக்குரலால் வசீகரித்த திரு. பொன்ராஜ், செந்தமிழை தேனருவி போல் கொட்டும் சிற்பி பாலசுப்ரமணியம் போன்ற ஆசிரியர்கள் தன் வாழ்நாளில் மறக்க முடியாது.  ஏறக்குறைய எனக்கு கல்வி அளித்த அத்துனை ஆசிரியர்களுக்கும் மருத்துவம் பார்த்தேன். அதுவே எம் பாக்கியம்.

கே: உங்களுக்குப் பிடித்த மனிதர்கள் பற்றி?

நான் சிறுவயது முதல் பார்த்து பழகிய அருட்செல்வர் டாக்டர். N. மகாலிங்கம் ஐயா அவர்கள் முன்பு வசித்தது எங்களது வீட்டிற்கு சற்று எதிர் வீடு. அவர் ஒரு மகான். தீர்க்கதரிசியாக என்னை ஈர்த்தவர். பல வழிகளில் எனக்கு உதவி புரிந்திருக்கிறார். எனது படிப்பிற்கும், வாழ்க்கைக்கும் எப்போதும் வழிகாட்டியாக இருந்தவர். எனது வாழ்வில் ஒவ்வொரு காலகட்டத்திலும் தனது முத்திரையைப் பதித்தவர். அப்பெருமகானோடு பல செஸ் விளையாடிய நாட்களும், அவருக்கு ஒரு மருத்துவராக இருந்தது எனது பாக்கியம்.

மற்றும் அருட்செல்வரைப் போலவே காந்திய வழியையும் விவேகானந்த கொள்கைகளை இளம் தலைமுறையினருக்கு பரப்புவதை தனது குறிக்கோளாகக் கொண்டவர் அருட்செல்வரின் மருமகனும், பாரதிய வித்யா பவனின் தலைவருமான Dr. B.K. கிருஷ்ணராஜ் வாணவராயர் தமிழிலும், ஆங்கிலத்திலும் அழகாகப் பேசக்கூடியவர். தனது மிடுக்கான மெருகூட்டிய பேச்சாற்றலால் அனைவரையும் கவரக் கூடிய காலம் தவறாத சிந்தனையாளர். எங்களது ரோட்ரி சங்கத்தின் பட்டையத் தலைவர். அவருடன் நெருக்கமாகப் பழகி சேவைகள் பல செய்யும் போது சிறு சிறு விஷயங்களில் கூட அவர் காட்டும் ஈடுபாடு என்னை பிரமிக்கச் செய்யும்.

கே: தங்கள் மருத்துவ நண்பர்கள் பற்றிச் சொல்லுங்கள்?

நான் பெரிதும் மதிக்கும் உலகளாவிய பிரசித்தி பெற்ற காலம் சென்ற டாக்டர் K.P. மிஸ்ரா அவர்கள். அப்பல்லோ மருத்துவமனையின் தலைசிறந்த இருதய நோய் நிபுணர். அவர் எனக்கு நெருங்கிய நண்பர் மட்டுமல்லாமல், எனது வழிகாட்டியாகவும், ஆசானாகவும் விளங்கியவர்.

எனக்கு பல துறைகளிலும் நிறைய மருத்துவ நண்பர்கள் இருக்கிறார்கள். கோவை மாநகரில் உள்ள எல்லா இருதய நோய் மருத்துவர்களுமே எனது நெருங்கிய நண்பர்கள் குறிப்பாக Dr. J.K. பெரியசாமி, Dr.S. முரளிதரன், Dr.S. நடராஜன், Dr. P.R. வைத்தியநாதன், Dr.  தாமஸ் அலெக்ஸôண்டர், உடுமலை ஈழ். சந்திரபாலன், பொள்ளாச்சியில் ஈழ். முத்துக்குமாரசாமி, காலம் சென்ற ஈழ். ஜோதிலிங்கம் அனைவரும் எனது முன்னேற்றத்திற்கு உறுதுணையாக பெரிதும் உதவினார்.

கே: தாங்கள் பெற்ற விருதுகளைப் பற்றி?

பல்வேறு சேவா சங்கங்கள் எனக்கு மருத்துவச் செம்மல், மருத்துவ மாமணி, வாழ்நாள் சாதனையாளர் என்பது போன்ற பல விருதுகளையும், இந்திய மருத்துவ சங்கம் BEST DOCTOR AWARD என்ற விருதினையும், நான் படித்த  NGM கல்லூரி, மற்றும் மருத்துவக் கல்லூரியில் BEST ALUMNI AWARD போன்ற விருதுகளைப் பெற்றுள்ளேன்.                 எம்ஜிஎம் கல்லூயில் சிறந்த முன்னாள் மாணவன் விருதைப் பெற்றிருக்கிறேன். சிறந்த குடிமகன் விருது, மருத்துவ செம்மல் விருது, மருத்துவ மாமணி விருது இன்னும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறேன்.

பாரத நாடு பழம்பெருநாடு

நீரதன் புதல்வர், இந்நினைவகற்றீர்…

நேர்காணல் : டாக்டர் கலைச்செல்வி செந்தில்

நன்றி : திரு. K. வெள்ளிங்கிரி.

இந்த இதழை மேலும்