– 2019 – July | தன்னம்பிக்கை

Home » 2019 » July

 
  • Categories


  • Archives


    Follow us on

    தன் திறமைகளை உச்சபட்ச மேன்மைக்கு உயர்த்திக் கொள்ளுவது எப்படி?

    இப்போதைய   பொருளாதார  அமைப்பில் உங்களுடைய வருமானம்  3  காரணிகளில் தீர்மானிக்கப்படுகிறது.

    1)  என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

    2) எவ்வளவு திறமையாகச் செய்து கொண்டிருக்கிறீர்கள்?

    3) உங்களுக்கு மாற்றாக  வேறு யாரும் இல்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளீர்களா?   இந்த மூன்றும் தான் உங்கள் எதிர்கால வளர்ச்சியை நிர்ணயிக்கின்றன.

    வாழ்வின் உச்சத்தை தொட்டவர்கள் எல்லாரும் தங்களது திறமைகளை மேம்படுத்தி, மேம்படுத்தி தன்னை உச்சபட்ச நிலைக்கு உயர்த்திக் கொண்டதால் தான்  அவர்கள் எதிர்பார்த்த வளர்ச்சி அடைய முடிந்தது, அதை  அடைய அவர்கள் எந்த விலையைக் கொடுக்கவும் தயங்கவில்லை,எந்த தியாகத்தைச் செய்வதற்கும்   அவர்கள் தயங்கவில்லை, நேரம் முழுவதையும் முதலீடு செய்யவும்  தயங்கவில்லை.

    நம்மை விட யாரும் சிறந்தவர்கள் இல்லை,  நம்மை விட  யாரும் சுறுசுறுப்பானவர்கள் இல்லை. நமக்கு மாற்று யாரும் இல்லை என்ற நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.எல்லா திறமைகளும், வியாபார நுணுக்கங்களும் கற்றுக் கொள்ளக் கூடியவை ஒரு திறமையோடு இன்னொரு திறமையை இணைத்துக் கொண்டு அதனையும்   அது சேர்த்து  வளர்க்கும்.

    உங்களது துறையில் முதல் 10 இடத்தில்   உள்ள சிறப்பானவர்கள் பட்டியலில் உங்களது பெயரை பதிவு செய்ய வேண்டும் என்று கடுமையாக உழைத்தால் அது நடந்தே தீரும், அதைத் தடுக்க யாராலும் முடியாது. இது உடனடியாக  நடந்துவிடக்கூடிய காரியம் அல்ல. இதற்கு சில ஆண்டுகள்  கூட ஆகலாம். இது வரை சாதிக்காததை நீங்கள் சாதிக்க வேண்டும் என்றால், இதுவரை இல்லாத அளவு உங்களை முற்றிலுமாக மாற்றிக்  கொள்ள வேண்டும். கடுமையான உழைப்பும், அர்ப்பணிப்புடன் கூடிய ஈடுபாடும், உங்கள் திறமைகளை மெருகூட்டும்.

    தங்களிடம் மறைந்துள்ள எந்தத்  திறமையை  இன்னும்  மேம்படுத்தக் கொள்ள வேண்டும்?  எந்த தொழில் நுணுக்கத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும்?  தொழில் பற்றிய எந்த ஆழமான செய்திகளைத்  தெரிந்து கொள்ள வேண்டும்? என்பதை   உணர்ந்து  அதன்படி செயல்பட  வேண்டும்.

    இதன் காரணமாக  உங்களது  திறமைகள்  ஒரு குறிப்பிட்ட  அளவு வளர்ச்சியைப் பெற்று இருக்குமேயானால்  நீங்கள்  ஒரு கேள்வியைக் கேட்டுக் கொள்ள வேண்டும். நாம் மேன்மைப்படுத்திக் கொண்ட  திறமைகளில்  எந்தத் திறமை நமக்கு இந்த அளவுள்ள நல்ல பலனைத் தந்தது? என்று   கேளுங்கள், இதற்கான பதிலை நீங்கள் கண்டு பிடிக்க முடியாவிட்டால், “என்னிடமுள்ள எந்த திறமை என்னை இந்த அளவு உயர்த்தியது?  என்று, உங்கள் மேலாளரைக்  கேளுங்கள். அல்லது  உங்களுடன் பணிபுரிபவர்களை அல்லது உங்களுக்கு கீழ் பணியில்  இருப்பவர்களை கேளுங்கள், நண்பர்களிடமும்  அல்லது  உங்களது மனைவியிடமும்  கேளுங்கள்  அவர்கள் இதற்கான சரியான பதிலைத் தருவார்கள்.

    கேள்விக்கு விடை  கிடைத்து  விட்டால் உங்களது  முழு  சக்தியையும் அந்தப் புள்ளியில் குவித்து அதை மேலும் வளர்த்துக் கொள்ளமுயற்சி செய்யுங்கள். உங்களுடைய ஒரு பலவீனமான பகுதிகளை பலப்படுத்திக் கொண்டால் மற்ற பலவீனங்களை எளிதாக பலமாக்கிக் கொள்ள வாய்ப்பு  கிடைக்கும்.

    ஒன்றை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும். சிலர்   பிறக்கும் போதே திறமையுடன்  பிறக்கிறார்கள். சிலர் முயற்சியின் மூலம்  திறமை அடைகிறார்கள்.   ஒரு ஆங்கில பழமொழி ஒன்று “எந்த திசையில் குதிரை ஓடுகிறதோ, அந்த திசையில், அதன் போக்கில்  பயணித்து, குதிரை ஓட்டம்  பழகுவது தான் சிறந்த   வழி” என்று சொல்வார்கள்,அதைப் போல உங்களிடம் புதைந்துள்ள  இயற்கைத் திறமை எதுவோ, அதை வைத்துக் கொண்டு  அதன் வழியிலேயே பயணித்துப் பழகுங்கள்,   வெற்றிகள் தானாக வந்து சேரும்.

    இயற்கையாக அமைந்துள்ள திறமையை வளப்படுத்துங்கள். அதில் நுணுக்கங்களை மேன்மைப் படுத்த கடின உழைப்பு தேவைப்படுகிறது. சில திறமைகளும், நுணுக்கங்களும்  உங்களது உழைப்பாலும், நீங்கள் கற்றுத் தெளிந்த வழிமுறைகளினாலும்  உங்களை  வந்தடைகிறது.

    உங்களுடைய வெற்றியை இரட்டிப்பாக்க அதற்குரிய  நுணுக்கத்தைப்  பெற முயற்சிசெய்யுங்கள். ஒவ்வொரு தொழில் நுணுக்கமும் கற்றுக் கொள்ளக் கூடியவை தெரிந்து கொள்ளக் கூடியவை, அறிந்து கொள்வதன் மூலமும், அனுபவத்தின் மூலமும் அதை மெருகேற்ற முடியும்.[hide]

    உங்கள் துறையில் நீங்கள் நிபுணராக கீழ்காணும் 12 வழிமுறைகளை  நீங்கள் பின்பற்றியாக வேண்டும்.

    1)  எந்தத் துறையில்  நீங்கள் மின்ன வேண்டும் என்று  எண்ணுகிறீர்களோ  அந்தத் துறையில், ஆர்வத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

    2) உங்களுடைய தனிப்பட்ட வளர்ச்சிக்கு இன்றிலிருந்து என்னென்ன பயிற்சிகளை நம்பிக்கையுடன் மேற்கொள்கிறீர்களோ  அந்தப் பயிற்சிகள் நம்மை ஜெயிக்க வைக்கும் என்று முழுமையாக நம்ப வேண்டும், தளராத தன்னம்பிக்கையும் வேண்டும்.

    3) இப்பொழுது நீங்கள் எந்த நிலையில்  இருக்கிறீர்கள்?  எந்த அளவு உயர விரும்புகிறீர்கள்,எந்த வழியில் உயரப் போகிறீர்கள் என்று நினைப்பதையெல்லாம்   வரிசைப்படுத்தி  ஆவணப்படுத்துங்கள்.

    4) எதில் பலமாக உள்ளீர்கள்?  எதில் பலவீனமாக உள்ளீர்கள் என்பதையும்  ஆராயுங்கள்.

    5) எந்தத் துறையில்  உச்சத்தைத் தொட வேண்டும் என்று எண்ணுகிறீர்களோ அதில் எந்தப் பகுதியை எந்த வழியில்  மேம்படுத்திக் கொள்ள வேண்டும்  என்பதை உறுதிப் படுத்திக்  கொள்ளுங்கள்.

    6)உச்சத்தைத் தொட காலக்கெடுவை நிர்ணயித்துக் கொள்ளுங்கள்.

    7) இதை அடைவதற்கு தடையாக இருப்பது எது என்பதையும் அடையாளம் காணுங்கள்,  தடைகளை உடைத்தெறிய  வழி காணுங்கள்.

    8) வெற்றியைத் தொட இன்னும் என்னென்ன திறமைகளை, என்னென்ன நுணுக்கங்களை,எந்தெந்த புத்தகங்களில், எந்த ஆடியோ  புரோகிராமில்,எந்த கருத்தரங்கில், எந்த  விவாதங்களில்  தெரிந்து   கொள்ள முடியும்  என்று கண்டு அதன்படி தெளிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

    9) இதற்காக யாரிடமிருந்து உதவி பெற வேண்டும்? யாரிடம் ஒத்துழைப்பு  பெற  வேண்டும், யார்  மூலம் நுணுக்கத்தைக் கற்றுக் கொள்ள முடியும்  என்பதைக் கண்டறிந்து  அதற்குரிய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

    10) முறையான காலக் கெடுவுடன் கூடியபயிற்சிகள் எங்கு, எப்படி,எத்தனை மணிநேரம் அல்லது எவ்வளவு  நாள்  பெற வேண்டும் என்ற திட்டத்தைத்  தயார் செய்து கொள்ளுங்கள்.

     11) உங்கள் எதிர்காலத்தை, அந்தத் துறையில் உன்னதம் பெறுவதை, மேன்மையில் உயர்ந்து நிற்பதை திரைப்படம் போல மனக்கண் முன்னால் படமாகப்  பாருங்கள்.

    12) எந்த முயற்சியும் எக்காரணம் கொண்டும் கைவிட்டு விடாதீர்கள், நீங்கள்   வெற்றிக் கோட்டைத் தாண்டும் வரை தளராத மனமும், இடைவிடாத முயற்சியும், இடையில் கைவிடாத குணத்தையும், வெற்றிக் கோட்டைத் தாண்டுவேன் என்ற வைராக்கியத்தையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.

    இந்த  முயற்சிக்கு   உதாரணமாக, எனது நண்பர்  உடுமலையைச்  சேர்ந்த  ஓய்வு பெற்ற பொறியாளர்  திரு. அரிமா  அ. நீலகண்டன் அவர்களை எடுத்துக் கொள்ளலாம், வாழ்க்கை என்பது ஐஸ்கீரிம் மாதிரி, அதை  உருகுவதற்கு முன் சுவைக்க வேண்டும் என்று  நினைப்பவர்கள் ஒரு வகை. வாழ்க்கை என்பது  மெழுகுவர்த்தி போல, உருகும் முன்பு பிறருக்கு ஓளி கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இரண்டாம் வகை. இந்த இரண்டாம்  ரகம் தான்  எனது நண்பர் நீலகண்டன்.

    அளந்து வைத்த சிரிப்பு, அழகான கண்கள், ஆரோக்கியமான உடல் வாகு  ,ஆனந்தமான நெஞ்சம், அளவு சற்று குறைவான உயரம் என்றாலும்  நிறைவான  எண்ணம் இவருக்கு அழகு சேர்க்கிறது, அன்பு எனும் தென்றல் காற்று நுழைந்து, உறவாட எப்பொழுதும் இதயக் கதவை திறந்து வைத்திருக்கிற நல்ல பண்பாளர். துயரத்தில் வாழும் மனிதர்களுக்கு அன்பையும், ஆறுதலையும் அளிப்பதுதான் நற்குணம் என்று பெரியவர்கள்  சொல்வார்கள். அந்த  நற்குணம் இவரிடம் அபரிதமாக இருக்கிறது.

    உணர்ச்சி வசப்படுவதால் வலி ஏற்படுவது சகஜம்,  அதைக் தாங்கும் வலிமையும், அதைத் தாண்டி செயல்படும் திறமையும் வளர்த்துக் கொள்வது பொறுமையின் அடையாளம் என்று சொல்வார்கள். அந்தப் பொறுமை இவரிடம் நிறைந்து  பொங்கி  வழிகிறது.

    கடுஞ்சொல் ஒன்று கூட இவரிடம் காண முடியாது. பல  மடங்கு தன் குடும்பத்தை நேசிப்பவர். இவர் தன் மனைவிக்குத் தருகிற மரியாதையும், அன்பும், தான் பெற்ற மகள்களுக்குக் காட்டும் பாசமும், நண்பர்களிடம் காட்டும் நன்றியும், ஈடு இணையில்லாதது, மனைவியின் மந்திரச் சொல்லுக்கு இவரிடம் மிகுந்த  மரியாதை உண்டு. மற்றவர்களின் தந்திரச்சொற்களுக்கு இவர் மயங்குவது இல்லை.

    அரசு ஊழியராக இருந்து ஓய்வு பெற்ற பின்பு. அரிமா சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு. அரும் பெறும் அறச் செயல்களை மனம் கோணாமல் செய்து வருபவர்,

    தன் திறமையை  மேம்படுத்திக் கொள்ள யாரிடமிருந்து  அந்த நுணுக்கங்களைப் பெற வேண்டும்என்பதும், அவரிடம்  நட்புணர்வை எப்படி வளர்த்துக் கொள்வது என்றும் கண்டறிந்து, தன்னை வைரம் போல செதுக்கிக் கொள்ளும் சிறந்த குணமும் இவரை உயர்த்தியுள்ளது.

    இவரின்  அன்பான பேச்சும், ஆதரவான மொழிகளும் உன்னதமான நட்புணர்வும், உயர்ந்த பழக்கங்களும், உன்னதத்தைப் பெற வேண்டும் என்ற முயற்சியும் இவரின்   தனித்துவத்தைக் காட்டுகிறது.

    ஆயிரக்கணக்கான    மைல்கள்  கொண்ட பயணம் கூட

    ஒரு  சின்ன அடியில்தான் தொடங்குகிறது

    ஒரு நீளமான காவியம் கூட

    ஒரு முதல் எழுத்தில்தான் ஆரம்பமாகிறது

    ஒரு அழகிய சிற்பம்   கூட

    ஒரு   உளியின் முதல் ஓசையில் தான் தொடங்குகிறது

    பெரு வெள்ளம்  கூட

    ஒரு சிறு துளியில் தான்  ஆரம்பமாகிறது

    உரு  ஒன்று கூட

    சிறு கரு ஒன்றில் தான் தொடங்குகிறது,

    திறமையின் உன்னதங்கள் கூட  அதைப் பெற   வேண்டும்

    என்ற சிறு ஆர்வத்தினால்  தான்  ஆரம்பமாகிறது.[/hide]

    இந்த இதழை மேலும்

    எளிமை+ வலிமை= வெற்றி

    யானையினுள் எளிதாய் பாயும் வேலின் வலிமை மென் பஞ்சினில் பாயாது, என்பதும், வலிய இரும்பு கடற்பாறையால் பிளக்காத பாறை, எளிய மரத்தின் வேரினால் பிளவு படும் என்பதையும், எளிமையின் வலிமைக்கு சாரம் அம்சமாகவும் சான்றாகவும் கூறப்படும் உண்மை.

    எளிமையான வரிகளையோ, வார்த்தைகளையோ, விளக்கங்களை யோ, எதையும் எளிதாய் புரிந்து கொள்ளும் புரிதலுக்கும் எளிமை தான் மிக முக்கியமாகிறது. ஆக, எளிமை என்பது, வாழ்க்கையை மிக எளிமையாக்கிறது. என்பது தான் வாழ்வியல் சக்தியம். ஆனால் எளிமை என்றதும்., நம் மனக்கண் முன் நிற்பது..

    வறுமையின் பிரிதிபலிப்பு, வலிமையற்ற நிலையை சார்ந்தது. வரியவருக்கு உரியது.சமூக அந்தஸ்த்து இல்லாதது அனுபவிக்கத் தெரியாதவர்களின் அடையாளம் என்று தான். நமக்குள் எளிமையைப் பற்றிய அபிப்ராயமாக, தோன்றுகிறது. ஆனால் எளிமையால் வரும் வலிமை தரும் வெற்றி. நிலைத்தத் தன்மை கொண்டது என்பது, நமக்கு தெரியாத உண்மை. ஆனால் அனுபவப்பட்டவர்களுக்கோ சாத்தியம் இதற்கு சான்றுகளும், சான்றானவர்ளும் ஏராளம். எளிமை என்பது ஏளத்திற்குரியதல்ல. ஏற்றத்திற்கு ஏதுவானது. எதிர்ப்பு வரும் போது, வலிமையாவது. வெற்றியின் சாவியாக விடுதலையின் இனிமை இலக்கணமாக இருப்பது எளிமை.

    வசதியற்று, பல இன்னல்களை கடந்து, பற்று, காசம், என்பவற்றை முழுமையாக புரிந்து கொண்டதன் மூலமே உள்ளார்ந்த எளிமையாக இருந்து பல திட்டங்களை, சீர்த்திருத்தங்களை  கொண்டு வர முடியும்.

    எளிமை என்பது சிக்கனமல்ல. தேவையற்ற விரயத்தை தடுப்பது குறைந்த வசதியில், நிறைந்த திருப்தி அடைவதோடு, கர்வமில்லாது மற்றவர்களுக்கு நிறைந்த மனதோடு தருவது எளிமையின் உண்மை நிலைபாடு. அந்த அடிப்படையில் தான் காந்தியடிகளின் எளிமை அஹிம்சையை ஊட்டியது. சுதந்திரத்தை நாட்டியது. வள்ளலாரின் எளிமை அன்பைக் கூட்டியது. கர்ம வீரர் காமராஜர், கக்கன் அவர்களின் எளிமை, ஏழைகளுக்கு நல்வழி காட்டியது. அப்துல் கலாம் ஐயாவின் எளிமை ஆக்கப்பூர்வமான அறிவையும், மக்கள் அனைவரின் மனங்களையும் ஈர்த்து ஒற்றுமையைச் சேர்த்தது.

    யாருக்காகவும், எதற்காகவும் வேஷம் போடாமல், தன்னிச்சையாக சுதந்திரமாக செயல்பட்டு சுய கௌரவம், சுயமரியாதை தன் மானம் இழக்காமலும், மற்றவர்களின் பார்வைக்கும் பாராட்டுக்கும், பகட்டுக்கும், போலி எளிமைத்தனம் இல்லாமலும் இருப்பதே, ஆக எளிமையின் அம்சங்கள் எளிமையாக இருக்க எந்த வித முயற்சியும், தேவையில்லாத போதும், சமுதாய மதிப்பை மனதில் கொண்ட எல்லோராலும் எளிமையை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. எளிமை என்பது எளிதானது, இயல்பானது, பணிவானது அகங்காரமற்றது, குற்ற உணர்வற்றது அப்படிப்பட்ட எளிமையை மறைத்து, அதன் மீது பூசப்படும் மேல் பூச்சுதான் பகட்டு.

    அந்த நிலையற்ற பகட்டை காப்பாற்றிக் கொள்ளத்தான். அதிக முயற்சியும், பயமும், போராட்டமும் தேவைப்படுகிறது. அந்தப்பகட்டை காப்பாற்றிக் கொள்ளும் முயற்சிதான் இன்றைய வாழ்க்கை முறையாகவே மாறிவிட்டது. அதே சமயம், நாம் பகட்டாய் வாழ்க்கை வாழ்வதற்கே  விரும்புவதாலும், எதிர்ப்பதாலூம் பிறரின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியால் தான், அதில் எவ்வளவு சிரமங்கள், கஷ்டங்கள் இருந்த போதும் எளிமையின் வலிமையை நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை.[hide]

    ஆக, எளிமை என்பது கடினமானதா? என்றால் நிச்சயம் கடினமானது தான் ஏனென்றால் எளிமையின் அடையாளமே, உண்மையான நிலையைக் காட்டுவது தான். ஆனால் எந்த நிலை வந்தாலும், மாறாத குணத்தோடு நம்மால் இருக்க முடியாததாலும் உண்மைக்குப் புறம்பாக, இருப்பதாலும் ஆக எளிமை என்பது கடினமானது என்கிறேன். எளிமையின் வெளிப்பாடுகள் தான் புற எளிமை. அக எளிமை அகங்காரத்தின் எதிரி தனக்கும் பிறர்க்கும் தீங்கு தராதது.

    பனிக்கட்டியை உள்ளடக்கிய பாத்திரத்தின் வெளிப்புறத்தில் நீர்த்திவலைகள் வெளிப்படுவது போல் எளிமையின் தன்மை புறத்தில் இயல்பாகவே, அகத்தின் அழகு முகத்தில் தெரிவது போல் வெளிப்படும் இதுதான் உண்மையான புற எளிமையும் கூட.  ஒளவை தன் ஆத்திச்சூடியில், இயல்பு அலாதன செய்யேல் என்று, தன் இயல்புக்கு ஒவ்வாதவைகளை செய்ய வேண்டும். அது  நல்லொழுக்கத்திற்கு எதிரானது என அறிவுறுத்துகிறார்.

    ஒருவர் எளிமையாக வாழ்ந்து மக்களிடையே நல் மதிப்பையும் பாராட்டையும் பெற்றுவிட்டால், அவரைப் போலவே எளிமையாக இருக்க வேண்டும் என நடந்து கொள்வதால் பாதிக்கப்படுவது எளிமை தான். அப்படி நடந்து கொள்பவர்களின் செயல்களை யாரும் உண்மையாக எடுத்துக்  கொள்ள மாட்டார்கள்.

    இன்று ஒரு சிலர், தங்கள் சுயநல மதிப்புக்காக, தங்களை மக்களிடையே எளிமையாகக் காட்டிக்கொள்ள, நடிக்கிறார்கள் அது சுய நல பகட்டின் மீது பூசப்படும் செயற்கைத்தனமான புற எளிமை வேஷம்.

    யாருக்கு, அகத்தில் வலிமையற்ற எளிமை இருக்கிறதோ? அவர்கள் புறத்தில் எளிமை என்ற வேஷமிட்டு ஏமாற்றுவர்களாக மாறுகிறார்கள்.

    அரசியல் பதிவியில் இருக்கும் சிலர், கிராமத்தில் மழை சேற்றில் நடந்து செல்வதும், டீ குடிப்பதையும் வைத்து இவர் எளிமையானவர் என்று புது பொய் இலக்கணம் எழுதி விடுகிறார்கள். பிறகு. வேஷம் கலையும் போது இவரா… இப்படி என்ற கேள்வியின் நாயகர்களாகி விடுகின்றனர். மாறாக இருக்கும் சிறிதளவு இயல்பான எளிமையும் விலகிவிடும்.

    இது போல் மற்றவர்களை ஈர்க்கும், ஈடுபாட்டைக் காட்டவும் பகட்டாக நடிக்கவும், காட்டிக்கொள்ளவும் எல்லோராலும் முடியும் ஆனால் எளிமையாக அதிக நாட்கள் காட்டி நடிக்க முடியாது புரிந்து கொள்ளுங்கள்.

    புற எளிய செயலுக்கு பெயர் எளிமையல்ல அகவலிமைக்கு பெயர் தான் எளிமை. மனிதன் அறிவால் உயர்ந்தாலும் அந்த உயர்வு நிரந்தரமாக இருக்க எளிமை மிகவும் உதவி செய்கிறது. ஆக எளிமையில் உயர்ந்தவர்களே, புற எளிமையிலும் மக்கள் மதிப்பிலும் உயர்த்தப்படுவார்கள் என்ற பாடத்தைத்தான் அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கை நமக்கு கற்றுத்தருகிறது.

    வாழ்வியலில் எளிமையும் ஒரு குணம் நன்றாக உழைத்து, பொருள் ஈட்டி, நிம்மதியான தூக்கத்தில் வாழ்ந்திருந்த நாம் இதையெல்லாம் இழந்ததெல்லாம், ஆகஎளிமையின் இயல்பை இழந்த பின்பு தான். எளிமையானவர்களுக்கு, பகட்டு பகையாகும்.

    நடந்து போய், இயல்பாய் முடிக்க வேண்டிய வேலைகளையெல்லாம், வாகனங்களைக் கொண்டு முடிக்க பழகிக் கொண்டோம். பின்பு ஆரோக்கியம் கெட்ட பின்பு நடக்க முடியாமல் மீண்டும் வாகனங்களைத் தேடுகிறோம். மீண்டும் வாகனங்களைத் தெடுகிறோம் என்பதை உணர்ந்தால், எளிமையின் வலிமையும் மேன்மையும் புரியும்.

    எளிமைக்கே உரித்தான மென்மை உணர்வு இல்லாமல் எளிமையில் வலிமை அடைய முடியாது. மனமும், இதயமும் மென்மையாக, எளிமையாக இருக்கும் போது, நம்மை எதிர்கொள்ளும் பல பல பிரச்சனைகளை தீர்க்க முடியும் இதற்கு தன்னையறிதல் என்பது அவசியம்.[/hide]

    இந்த இதழை மேலும்

    குழந்தைகளுக்கான கண் சிகிச்சை

    தங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சி யாகவும் இருக்கிறார்களா? என்பதை உறுதி செய்து கொள்வதே பெற்றோருக்கு முழு நேர வேலையாக இருக்கிறது. பெற்றோர்கள் தமது குழந்தைகளை வெற்று உடம்புடன் எந்தப் பாதுகாப்பும்  இல்லாமல் வெயிலில் திரிய அனுமதிப்பது இல்லை.

    ஆனால் “கண்” என்று வரும் போது மட்டும் அவர்கள் கோட்டை விட்டு விடுகிறார்கள். குழந்தைகளின் கண்களுக்குப் பாதுகாப்பு அவசியம் என்பதை அவர்கள் ஏனோ உணர்வதில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே குழந்தைகளின் கண்களைப் புற ஊதாக்கதிரியக்கம் (UV rays) பாதிக்கும் என்ற உண்மை தெரிந்திருக்கிறது.

    குழந்தைகள் வீட்டுக்கு வெளியே நிறைய நேரத்தைச் செலவழிக்கிறார்கள். அவர்கள் கண்கள் தொடர்ந்து புற ஊதாக்கதிர்களால் பாதிக்கப்படும் வாய்ப்பு அதிகம், பெரியோரை விட மூன்று மடங்கு அதிக கதிர்வீச்சில் 80 சதவீதம் கதிர் வீச்சை அவர்கள் 18 வயதுக்கு முன்ன தாகவே சந்தித்து விடுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

    சூரிய ஓளியில் அதிகமாகத் திரிவதால், குழந்தைகளுக்கு கண்புரை, மாகுலர் டிஜெனரேசன் (Macular degeneration) ஆகிய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. உலகம் முழுவதும் ஓர் ஆண்டுக்கு கண்புரையால் பார்வை இழப்போர் 1.6 கோடி என உலக சுகாதார நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. (இதில் 20 சதவீதம் புற ஊதாக் கதிர்களின் தாக்கத்தால் ஏற்படுபவை)

    கண்களைக் கூசச் செய்யும் பிரகாசமான ஓளி பார்வையைப் பாதிக்கும், கண்களில் அசதி, அசவுகரியம் ஆகியவை ஏற்படும். ஒரு குழந்தையின் பார்வை சிறப்பாக அமைய, இந்த கண்களைக் கூசும் பிரகாசமான ஓளியில் இருந்து காப்பது அவசியம். அப்போது தான் தினசரி வேலைகளை வீட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் சிறப்பாகச் செய்ய முடியும்.

    பிரகாசமான ஓளி வகைகளையும், அதில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் வழிமுறைகளையும் இங்கே பார்க்கலாம்.

    கண்ணைக் கூசச் செய்யும் ஒளி வகையில் சிதறடிக்கும் ஓளிக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இந்த வகையானது கண்ணின் லென்சில் பிரதிபலிக்கிறது. கணினியைப் பயன்படுத்தும்போது லென்சுக்கு முன், பின் பிரதிபலிக்கும் ஓளி கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    இதில் லென்சின் வெளிப்பரப்பில் வெளிச்சம் பிரதிபலிப்பது மங்கலான பார்வைக்கு வழி வகுத்துவிடும். இரவில் “ஹெட்லைட்” அல்லது தெரு விளக்குகள் மூலம் கண்ணின் லென்சுக்குள்ளேயே இரட்டை பிரதிபலிப்பு ஏற்படக்கூடும். இந்த பாதிப்பில் பார்க்கும் பொருட்கள் இரண்டாகத் தெரியும்.

    அனுதினமும் பிரகாசமான வெளிச்சத்தை கண்கள் சந்திக்கும் போது அது கண்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதாக அமைந்து விடுகிறது. பைக்கில் செல்லும் போது, பள்ளியில் விளையாடும் போது, விளையாடு வதைக் கவனிக்கும் போது மிகவும் வெளிச்சமான சூழலைக் கண்கள் எதிர்கொள்ள வேண்டியதாகிறது. இதனால் கண்கள் அதை இயல்பாக ஏற்றுக் கொள்ளாத நிலைக்குள்ளாகிறது.

    மதிய வேளையில் பள்ளிக்கு குழந்தைகள் வீட்டுக்கு நடந்து வரும்போது, உச்சியில் இருக்கும் சூரியனின் கடுமையான வெப்பக் கதிர்களின் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும்.

    கடற்கரை அல்லது குளத்தில் விளையாடுதல், பனியில் விளையாடுதல் போன்ற சூழ்நிலையில் கண்களைக் கூச வைக்கும் அளவுக்கு ஓளியின் ஆக்கிரமிப்பு ஊடுருவுகிறது. இந்த நிலை முடிவில் கண்ணில் பார்வையிழப்பு என்ற விபரீத நிலையில் கொண்டு விட்டு விடும்.

    வெளிச்சம் மூலம் நேரும் பாதிப்புக்கேற்ற விதத்தில் அதற்கான லென்ஸ்கள் அணிந்து கண்களைப் பாதுகாத்துக் கொள்ள முன் வர வேண்டும். பாலிகார்பனேட் கொண்டு தயாரிக்கப்படும் போட்டோ குரோமிக் லென்ஸ்கள் (PhotoChromic Lens) குழந்தைகளுக்கு ஏற்றவை. இவை எடை குறைவானது. எந்த பிரேமுக்கும் இதைப் பொருத்த முடியும். புற ஊதாக் கதிர்களின் அளவுக்கு ஏற்ப போட்டோ குரோமிக் லென்ஸ் சாதாரணக் கண்ணாடியாகவும், குளிர் கண்ணாடியாகவும் தம்மை மாற்றிக் கொண்டு சிறப்பாகச் செயல்படும். மிக மிக இருட்டான பகுதிக்குப் போகும் போது சாதாரண கண்ணாடியாகவும், கண்ணைக் கூசும் பிரகாசமான ஓளியில் குளிர் கண்ணாடியாகவும் மாறி, ஒளியின் பாதிப்பைக் குறைத்துத் தெளிவாகப் பார்க்க இவ்வகை போட்டோ குரோமிக லென்ஸ்கள் உதவுகின்றன.[hide]

    உங்கள் குழந்தையின் கண்களை வெயில் நாட்களின் போது மட்டுமல்லாமல் மழைக் காலங்களிலும் பாதுகாக்க வேண்டியது அவசியம். வருடம் முழுவதும் புற ஊதாக் கதிர்களிலிருந்து காப்பதற்கு முன்னுரிமை தர வேண்டும். ஆகவே போட்டோ குரோமிக் லென்ஸ்களைப் பயன்படுத்துவது தான் அதற்கு மிகச்சிறந்த வழி.

    எந்த வயதில் கண் பரிசோதனை செய்ய வேண்டும்

    பல பெற்றோர்களிடம் குழந்தைகள் வளர்ந்து ஏழு, எட்டு வயதான பின்னர் தான் கண் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற தவறான கருத்து நிலவுகின்றது. இதனால் பல குழந்தைகளின் பார்வை சிறுவயதிலேயே பாதிக்கப் பட்டு அவர்களின் எதிர்காலமே பாழாகி விடுகின்றது. ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்கூடம் செல்லும் முன்பாகவே கண்டிப்பாக கண்பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பெற்றோர்களின் கவனத்திற்கு.

    பார்வைக் குறைபாடுகள் (Refractive Errors)

    பள்ளி செல்லும் குழந்தைகளில் 4 முதல் 5 சதவீதம் வரை பார்வைக் குறைபாடுகள் இருக்கின்றன. பார்வைக் குறைபாட்டை மூன்று வகையாக பிரிக்கலாம்.

    • தூரப்பார்வை (Long Sight ),
    • கிட்டப் பார்வை (Short Sight) மற்றும்
    • சமச்சீரற்ற பார்வை (Astigmatism).

    பார்வைக்குறைபாடுகளின் அறிகுறிகள்

    • கரும்பலகை, தொலைக்காட்சி ஆகியவற்றை அருகில் சென்று பார்த்தல்
    • புத்தகத்தை முகத்துக்கு அருகில் வைத்துப் படித்தல்.
    • கண்களைச் சுருக்கிப் படித்தல்
    • தலைவலி அல்லது கண்வலி

    போன்றவை பார்வைக் குறைபாடுகளின் அறிகுறிகளாகும். இந்த அறிகுறிகள் குழந்தைகளிடம் தெரிந்தால் உடனே கண் மருத்துவரிடம் செல்வது நல்லது.

    மாறுகண் (Squint)

    மாறுகண் அதிர்ஷ்டத்தின் அறிகுறி என்று நாம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது ஒரு குறைபாடு. இது குழந்தையின் பார்வை மற்றும் தோற்றத்தைப் பாதிக்கும். இந்தக் குறைபாடு உள்ளவர்களை எட்டு அல்லது ஒன்பது வயதுக்குள் உரிய சிகிச்சை அளித்தால் மட்டுமே குணமாகும். இல்லா விட்டால் மாறுகண் நிரந்தர பார்வைக் குறைபாட்டை ஏற்படுத்தும்.

    சோம்பலுற்ற கண் (Amblyopia)

    சாதாரணமாக இரண்டு கண்களும் இணைந்து ஒரு பொருளைப் பார்க்கும் போது, ஒரே மாதிரியான உருவம் மூளையைச் சென்றடையும். அப்படி இல்லாமல், இரண்டு வேறுபட்ட உருவங்கள் தெரிந்தால் குழந்தையின் மூளை, நல்ல பார்வையுள்ள கண்ணிலிருந்து வரும் உருவத்தை மட்டும் ஏற்றுக்கொண்டு, பாதிக்கப்பட்ட கண்ணிலிருந்து வரும் உருவத்தை ஒதுக்கக் கற்றுக் கொள்கிறது. இதனால் அந்த கண்ணின் செயல்பாடு குறைகிறது. இதை சோம்பலுற்ற கண் என்று மருத்துவ நிபுணர்கள் அழைக் கின்றனர்.

    சோம்பலுற்ற கண் ஏற்படக் காரணங்கள்

    • மாறுகண்
    • பிறவியிலேயே ஏற்படும் கண்புரை
    • கருவிழியில் தழும்பு
    • குறைமாதக் குழந்தை
    • இரண்டு கண்களிலும் வேறுபட்ட பார்வைத் திறன் இருந்தும், ஆரம்பத்திலேயே உரிய கண்ணாடி அணியாமல் இருத்தல்.

    இந்த குறையை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து உரிய சிகிச்சை அளித்தால் மட்டுமே குணப்படுத்த முடியும். இல்லாவிட்டால் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படும்..

    கண்புரை (Cataract)

    கண்புரை என்பது பெரியவர்களுக்கு மட்டுமின்றி, பிறந்த குழந்தைக்கும் ஏற்படலாம். கண்களில் அடிபடும்போதும் கண்புரை ஏற்படும். கண்புரையைக் கண்டறிந்தால், உடனே அறுவை சிகிச்சை செய்வது அவசியம். இல்லாவிட்டால் பார்வை இழப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். எனவே, குழந்தைகள் பள்ளிக்கு அனுப்புவதற்கு முன்பு, ஒரு முறை கண் பரிசோதனை செய்வது அவசியம்.[/hide]

    இந்த இதழை மேலும்

    கூடைப்பந்தும் சாதனைப் பெண்களும்

    கோயம்புத்தூர் துணிவணிகர் சங்க அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி  மிகவும் பழமை வாய்ந்த பள்ளி. பள்ளியின் சார்பிலிருந்து விளையாட்டிற்கு மிகுந்த உதவிகளைச் செய்து வருகிறார்கள். நிறைய விளையாட்டுக்களுக்குப் பள்ளி முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஒவ்வொரு விளையாட்டுக்கும் தனித்தனியாகப் பயிற்சியாளர்களை அமர்த்தி விளையாட்டினை மேம்படுத்தி வருகிறது. இப்பள்ளியானது கல்வியை மட்டுமே முதன்மை நோக்காகக் கொண்டு செயல்படாமல் விளையாட்டிற்கும் முக்கியத்துவ மளிப்பது கருதக்கூடிய ஒன்றாகும்.  முன்னாள் தலைமை ஆசிரியராக இருந்த திரு. சந்திரசேகர் மற்றும் தற்பொழுது தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வரும் திருமதி. மணியரசி அவர்களும் நிறைய உதவிகளை இப்பள்ளிகளுக்கு செய்து கொடுத்திருக் கிறார்கள்.

    மாணவிகளின் கூடுதல் உழைப்பின் காரணமாக கூடைப்பந்தில் மாநில அளவிலான கோப்பையினை வென்று தற்பொழுது தேசிய அளவிலான கோப்பையை வெல்வதற்காகத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய வெற்றி வாய்ப்பைத்  தொடர்ந்து முழு நேர உழைப்பில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் 9 மற்றும் 10-ம் வகுப்பு பயின்றுவரும் மாணவிகள் ஸ்ரீலட்சுமி, தனுஸ்ரீ, சந்தியா இவர்களின் கூடுதல் முயற்சியால் கிடைத்த வெற்றி, அந்த வெற்றிக்காக அவர்கள் உழைத்த கடின உழைப்பு. அவர்களால் பள்ளிக்கு கிடைத்த பெருமைகள் போன்றவற்றை நம்மிடையே பகிர்ந்துகொண்டனர்.

    வணக்கம். என் பெயர் பா. ஸ்ரீலட்சுமி. நான்  9-ம் வகுப்பு பயின்று வருகிறேன். என் அப்பா தங்கப்பட்டறையில் கூலி வேலை செய்து வருகிறார். என் அம்மா கவிதா இல்லத்தரசியாக உள்ளார். எனக்கு உடன் பிறந்த ஒரு தங்கை இருக்கிறாள். அவள் பெயர் ஸ்ரீராஜலட்சுமி. ஏழாம் வகுப்பு படித்து வருகிறாள். எங்கள் குடும்பம் பொருளாதார அடிப்படையில் மிகவும் பின்தங்கிய குடும்பம். இத்தகைய சூழ்நிலையில் இருந்து நான் வெற்றி பெற்றதைப் பெருமையாகக் கொள்கிறேன். நான் கடந்த மூன்று வருடங்களாக கூடைப் பந்தின் மீது ஆர்வம் கொண்டு தொடர்ந்து விடா முயற்சியுடன் விளையாடி வருகிறேன். நான் தற்பொழுது  மாநில அளவில் கலந்து கொண்டு கோப்பையை வென்றிருக்கிறேன். தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள என்னைத் தயாராக்கிக் கொண்டிருக்கிறேன். நிச்சயம் தேசிய அளவிலும் கலந்து கொண்டு வெற்றி பெறுவேன் என்று நம்புகிறேன். நான் தனியாக வீட்டில் பயிற்சி எதுவும் மேற்கொள்வதில்லை. அதற்கான வசதிகளும் எங்களிடம் இல்லை. நான் முழுக்க முழுக்க பள்ளியிலேயே என் பயிற்சியை முடித்து விடுவேன். தினமும் காலை 6 மணிமுதல் 9 மணி வரையிலும் மாலை 3 மணியிலிருந்து 5 மணி வரையிலும் பயிற்சி செய்வேன். என்னை முழுவதும் ஊக்குவித்தவர்கள் எனது பயிற்சியாளர் பிரபு மற்றும் எனது பெற்றோர். இந்த தருணத்தில் அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் தற்பொழுது இந்தியன் பி பிரிவில் தேர்வு செய்யப்பட்டதும் கூடுதல் மகிழ்ச்சியினை அளிக்கிறது.[hide]

    என் பெயர் தனுஸ்ரீ. எனக்கு கூடைப்பந்தில் 3-ம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே ஆர்வம் மிகுந்திருந்தது எனக்கு முன்னர் விளையாடிக் கொண்டிருந்த என் மூத்த சகோதரிகள் விளையாடுவதைப் பார்த்து நானும் விளையாடப் பழகிக் கொண்டேன். எங்கள் அணியில் 14 முதல் 17 வயதைச் சார்ந்தவர்கள் 12 பேர் உள்ளோம். அனைவரும் நன்றாக விளையாடுவோம். நான் தற்பொழுது கோயமுத்தூர் மாவட்டத்திற்காக விளையாடி வெற்றி பெற்றிருக்கிறேன். மேலும் நான் டெல்லி அணியில் விளையாடுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டேன். இருப்பினும் எனது மாவட்டத்திற்கு முதலிடம் தரவேண்டும் என்ற என் ஆசையினால் டெல்லி அணிக்குச் செல்லாமல் கோவை மாவட்டத்திற்காக விளையாடினேன். நான் டெல்லி அணியில் சேர்ந்து வெற்றியடைந்திருந்தால். நிறைய பயன்கள் கிடைத்திருக்கும். அதன் பின்னர் அமெரிக்கா அளவில் சென்று விளையாடவும் எனக்கு வாய்ப்புக்கள் கிடைத்திருக்கும். இருப்பினும் அது ஒரு தனிப்பட்ட அமைப்பே. எனது மாவட்டத்திற்காக நான் விளையாடுவதுதான் எனக்குப் பெருமை என்பதால் நான் டெல்லி செல்லவில்லை.

    என் பெயர் சந்தியா. நான் 1-ம் வகுப்பிலிருந்து 5-ம் வகுப்பு வரை பேரூரில் உள்ள ஞானாம்பிகா பள்ளியில் பயின்றேன். ஆறாம் வகுப்பில் சேர்வதற்காக இப்பள்ளிக்கு வந்தேன். நான் முதல் நாள் இப்பள்ளியில் சேர வரும் போதே இங்கு என் மூத்த சகோதரிகள் விளையாடுவதைப் பார்த்து எனக்கு கூடைப்பந்தில் ஆர்வம் ஏற்பட்டது. பள்ளியில் சேர்ந்த அடுத்த நாளில் இருந்தே விளையாட்டிலும் சேர்ந்து பயிற்சி எடுக்க ஆரம்பித்தேன். நான் என் கவனத்தை முழுவதுமாக விளையாட்டில் செலுத்தி முடிந்தவரை வெற்றியை மட்டுமே எதிர் பார்த்தேன். ஒரு நாளைக்கு காலையில் மூன்று மணிநேரமும் மாலையில் இரண்டு மணிநேரமும் பயிற்சியெடுப்பேன். மாவட்ட அளவில் கலந்துகொண்டு கோப்பையை வென்றிருக்கிறேன். நான் மாநில அளவில் செல்லும் தருணத்தில் கை உடைந்து விட்டது. இது ஒரு சிறிய தடையானதால் என்னால் அந்த அணியில் விளையாட முடியவில்லை. பெரம்பலூர் , நீலகிரி போன்ற மாவட்டங்களின் அணிகளின் சார்பாக விளையாடி அந்த அணிகளுக்கு வெற்றியைப் பெற்று தந்திருக்கிறேன். இது எனக்கும் எங்கள் அணிக்கும் பெருமை சேர்த்தது. எங்கள் திறமைகளைக் கண்டறிந்து பிற மாவட்டங்களில் விளையாட எங்களை அழைத்தது மிகவும் பெருமையாக உள்ளது.

    எனது பெயர் பிரபு. கடந்த ஆறு வருடங்களாக இப்பள்ளியில் சேவையாற்றி வருகிறேன். இது போன்ற குழந்தைகளுக்கு சேவையாற்றுவதையே தலையாய கடமையாகக்கொண்டு நான் செயல் படுகிறேன். இங்கு உள்ள குழந்தைகளைப் போன்று நானும் பின் தங்கிய தங்கிய குடும்பத்தைச் சார்ந்தவன் என்பதால் அந்த நிலையில் இருந்து முன்னேறிய நான் என்னைப் போன்றே இவர்களும் கஷ்டப்படுவதை விரும்பவில்லை. எனவே நான் எனது பயிற்சியை முற்றிலும் சேவையாகவே வழங்குகிறேன். மாணவர்களை இலவசமாக கல்லூரிகளில் சேர்த்துவதற்கு உதவியிருக்கிறேன். விளையாட்டிற்கான சீருடைகள், பிற மாவட்டங்களுக்கு சென்று வருவதற்கான வசதிகளை ஏற்படுத்தித் தருவது மற்றும் என்னால் முடிந்த ஒரு நல்ல ஊக்குவிப்பு இவற்றை மாணவிகளுக்கு அளித்து அவர்களுக்கு உதவி வருகிறேன். இது போன்ற சேவையை என் வாழ்நாள் கடமையாகக் கருதி நான் செய்து வருகிறேன். மேலும் இது போன்று மாணவிகள் சாதிக்க என் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  [/hide]

    இந்த இதழை மேலும்

    தடம் பதித்த மாமனிதர்கள் – 5

    ஆயக்கலைகள் அறுபத்து நான்கு என்பர். இவற்றில் ஓவியக்கலையும்  ஒன்று. கவிஞன் என்பவன் ஒரு மந்திரவாதி போன்றவன், தன் மந்திரக்கோலால் அவனுடைய கவிதைகளை வாசிப்பவர்கள் மனதில் தான் சொல்ல வந்த விபரங்களை உருவாக்கி விடுவான். ஆனால் ஒரு ஒவியன் அவற்றை தன் தூரிகையால் ஓவியமாய் உருவாக்கி அவை என்றென்றும் அனைவரும் தன் கண்களால் பார்த்து உயிரோவியமாய் இருக்கும் படி செய்து விடுகின்றான். உலகின் மிகச்சிறந்த ஓவியர்களில் ஒருவர் ரவிவர்மா ஆவார்.

    ரவிவர்மா அவர்கள் ஏப்ரல் மாதம் 29 ம் தேதி 1848 ம் ஆண்டு கேரளாவின், திருவாங்கூரில் கிளிமானூர் அரண்மனையில் பிறந்தார்.இவரது தந்தை நீலகண்ட பட்ட திரிபட், இவரது தாயார் உமாம்பா தம்புராம்டி ஆவார். இவர் சமஸ்கிருதம், மலையாளம் மொழிகளைக் கற்றதோடு, ஓவியம் வரைவதிலும்  அதிகம் நாட்டம் கொண்டார். அவர், அங்கிருந்த அரண்மனை சுவரில் கரித்துண்டு ஓவியம் வரைவதை கவனித்த அவருடைய ராஜா ராஜா வர்மா, அவரை திருவாங்கூர் அரண்மனை ஓவியர் ராமசாமி நாயுடுவிடம் அழைத்துச் சென்றார் அவர்,ரவிவர்மாவிற்கு தண்ணீர் ஓவியம் கற்றுத் தந்தார். பின் 1868ல் ரவிவர்மா ஆங்கிலேய ஓவியர் தியோடா ஜென்சன் மூலம் எண்ணெய் ஓவியம் கற்றுக்கொண்டார். இவருக்கு ராஜா என்ற அடைமொழி அப்பொழுது அங்கு வைஷ்ராயாகவும், கவர்னர் ஜெனரலாக இருந்த ஆங்கிலேயர் அளித்த பட்டமாகும். அவர் தனது 18 ம் வயதில் 12 ம் வயது பாகீரதியை மணந்து கொண்டார். இவர் வழித் தோன்றியவர்கள் இன்றும் திருவாங்கூர் அரண்மனையில் வாழ்ந்து வருகின்றனர். மூன்றாம் பலராமவர்மா, மூன்றாம் மார்த்தாண்ட வர்மன், ஏழாம் ராம வர்மா ஆகியோர் ரவிவர்மாவின் வழித்தோன்றியவர்களே.

    இவரது ஓவியத்தின் சிறப்பு என்னவென்றால், தம்முடைய பாரம்பரிய முறையுடன் ஐரோப்பிய ஓவியக்கலையையும் கலந்து உருவாக்கியதால் உலக அளவில் பாராட்டப்பட்டது. இவர் தென் இந்தியப் பெண்களை, இந்து மதத் தெய்வங்கள் வடிவில் ஓவியம் வரைந்தார். தன்னுடைய சகோதிரிகளையும் ஓவியமாக வரைந்துள்ளார். மும்பையில் வசித்த மகாராஷ்டிரப் பெண்களையும் ஓவியங்களாக வரைந்துள்ளார். இவர், மகாபாரதம், இராமாயணம் ஆகிய இதிகாசங்களில் உள்ள சில முக்கியமான ஓவியங்களாக வரைந்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். அவற்றில் குறிப்பிடத்தக்க ஓவியங்கள் முறையே

    பெண் தன் நினைவுகளில் தொலைந்த ஓவியம்

    தமயந்தி அன்னப்பட்சியுடன் உறவாடும் ஓவியம்

    சகுந்தலாவிற்கு துஷ்யந்தன் கடிதம் எழுதும் ஓவியம்

    யசோதா கண்ணனை அலங்காரம் செய்யும் ஓவியம்

    கிருஷ்ணன் தூதுவனாகச் செல்லும் ஓவியம்

    திரௌபதியின் அபயக்குரலில் மன்றத்தில் இருக்கும் ஓவியம் ஆகும். இவற்றின் மூலம் இவர் வீரஸருங்கலா என்ற பட்டத்தைப் பெற்றார். 1873 ல் சென்னையில் நமந்த ஓவியக்கண்காட்சியில் இவரது ஓவியம் முதல்பரிசைப் பெற்றது. 1873 ல் வியன்னாவில் நடந்த ஓவிய கண்காட்சியில் இவரது ஓவியம் சிறந்த ஓவியமாகக் கருதப்பட்டதால் இவரது புகழ் உலகமெங்கும் பரவும் படியானது.

    கேரள அரசாங்கம் கலைகளில் சிறந்தவர்களை ஒவ்வொரு ஆண்டும் ராஜாரவிவர்மா புரஸ்காரம் என்று அவர் பெயரில் விருதை வழங்கி அவரை நினைவு கொள்கின்றது. மவேளிகராவில், ரவிவர்மா அவர்களின் பெயரில் கலைக்கூடம் உள்ளது. பலகலாச்சார அமைப்புகளும், பள்ளிகளும் இவரது பெயரில் இன்றும் இயங்கி வருகின்றது. இவரது 65 வது நினைவு நாள் அன்று இந்தியாவின் தபால் துறை இவருடைய உருவத்தையும் அவர் தீட்டிய தமயந்தியும் அன்னப்பறவையும் ஓவியத்தையும் தபால் தலையாக வெளியிட்டு அவரைப் பெருமைப்படுத்தியது. 1904 ம் ஆண்டு வைஷ்ராய் ஹர்சன் ஆங்கிலேய பேரரசரின் பெயரில் கெய்சர் ஹிண்ட் தங்க பதக்கத்தை வழங்கிப் பெருமை படுத்தினார். வர்மா அவர்கள் அக்டோபர் 2, 1906 ல் தனது 58 வது வயதில் இயற்கை எய்தினார்.[hide]

    இன்றும் இவரது புகழ் எங்கும் பரவிக் கொண்டுதான் உள்ளது. ஜனவரி 2008 ம் ஆண்டு சென்னை சில்க்ஸ் என்ற புகழ் பெற்ற ஆடை நிறுவனம் ரவிவர்மாவின் 11 ஓவியங்களைக் கொண்ட பட்டுப்புடவையை தயார்செய்து மிக விலையுயர்ந்த பட்டுப்புடவை என கின்னஸ் உலக பதிவேட்டில் இடம் பெற்றது. அதன் பெயர் விவாகப்பட்டு விலை சுமார் 40 லட்சம். அதன் கணம் சுமார் எட்டுகிலோ. மேலும் இப்புடவை வர்மாவின் பெண் இசை ஓவியம் என்ற பெயரில் பிரபலமானது.

    இந்திய திரைப்பட உலகில் 2014 ல் ரங்ரசியர் என்ற பெயரில் ரவிவர்மாவின் வாழ்க்கை படமாக இயக்குநர் கேட்டன் மெகடாவில் எடுக்கப்பட்டது. ரன்தீப் கூடா வர்மாவாக நடித்துள்ளார்.

    மலையாளத்திரை உலகில் 2016 ல் லெனின் ராஜேந்திரனால் இயக்கப்பட்ட மகரமன்ஜீ என்ற படத்தில் ரவிவர்மாவின் வாழ்க்கையில் நடைபெற்ற சில நிகழ்வுகள் எடுக்கப்பட்டன. சந்தோஷ் சிவன் வர்மாவின் பாத்திரத்தை திறம்படச் செய்திருந்தார்.

    மகாராஷ்ராவில், மாநிலப்பள்ளிகளின் பாடத்திட்டத்தில் அபூர்வமான சந்திப்பு என்ற பாகத்தில் ரவிவர்மாவும் விவேகானந்தரும் சந்தித்ததைப் பற்றிய விரிவான செய்திகள் உள்ளன. மேலும் ரஞ்சித் தேசாய் எழுதிய ராஜாரவிவர்மா என்ற நாவல் வர்மா பற்றிய பல்வேறு விபரங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. இவ்வாறு அவருடைய ஓவியங்களில் மட்டும் அல்லாது, புத்தகங்கள், திரைப்படங்கள், மற்றும் அவர் பெயரில் உள்ள பல்வேறு நிறுவனங்கள் மூலம் உலகப்புகழ் பெற்ற ராஜா ரவிவர்மா என்ற ஓவியர் வாழ்ந்து கொண்டே உள்ளார் என்று பெருமிதம் கொள்வோமாக.[/hide]

    இந்த இதழை மேலும்

    அறிவுபூர்வமான வீரமே அவசியத் தேவை

    இலட்சிய வீரர்களே

    கடமை கசந்து விட்டதுவிட்டதா செயல்பாட்டில் ஈடுபாடில்லையா?

    உலகில் எத்தனை கோடி பேர் வந்தார்கள்? எத்தனை பேர் வரலாற்றில் உள்ளார்கள். வந்தவரெல்லாம் வரலாற்றில் நிலைத்து நின்றிருந்தால் இந்த வரலாறு தான் என்னாவது? இந்த சரித்திரத்திற்கு சக்தி ஏது? மதிப்பேது? வந்தவரெல்லாம் வென்றிருந்தால் வெற்றிக்கு மதிப்பேது.

    உடனடியாக -விரைவில்- எளிதில் கிடைத்துவிடுவது வெற்றியல்ல. வெற்றி அவ்வளவு எளிதாக இதுவரை யாருக்கும் கிடைத்ததில்லை.

    அறிவும், தெளிவும், துணிவும், தெரிவும், வீரமும், விவேகமும், விழிப்பும், திறமையும் எந்த ஒரு இளைஞனிடம் ஸ்தம்பிக்கின்றதோ அந்த இளைஞனால் எதையும் சாதிக்க முடியும். அவனிடம் பல வெற்றிகள் காணப்படும். அந்த இளைஞனால் சாதிக்க முடியாதது எதுவும் உலகில் இல்லை இருக்காது. இருக்கவும் முடியாது.

    ஒவ்வொரு இளைஞனுக்குள்ளும் (ஒவ்வொரு துறைக்கான) படைப்பாற்றல் உள்ளது. (அதைத் தெரிந்து கொண்டு – புரிந்து கொண்டு) அதைச் சரியாக- முறையாகப் பயன்படுத்துபவர்களே முன்னேறுகின்றனர்- வாழ்வில் சாதனை படைக்கின்றனர்; வரலாற்றில் இடம் பெறுகின்றனர்.

    உன்னிடம் ஒரு திறமை இருக்கின்றது. என்பதை நீ கண்டறி. இப்படிக் கண்டறிந்தால் போதும், உலக அரங்கில் உன் திறமை ஒரு நாள் கண்டிப்பாகப் பேசப்படும்.

    கல்வெட்டாக வரலாற்றில் பதிந்து கிடக்கும் சாதித்தவர்களின் வரலாறை தெரிந்து கொள்ளாத எவனுக்கும் சாதிக்கின்ற அந்த நம்பிக்கை வராது சாதிக்கவும் முடியாது.

    அன்பு மிக்கவனே

    நீ எதையும் சாதிக்கப் பிறந்தவன்

    நீ எதையும் சந்திக்கப் பிறந்தவன்

    நீ எதையும் சிந்திக்கப் பிறந்தவன்

    நீ எதையும் முந்திக்கப் பிறந்தவன்

    நீ எதையும் போதிக்கப் பிறந்தவன்

    எதிலும் வெற்றி வாகை சூட வந்தவன்

    நீ, எதற்கும் நாதியற்றவன் அல்ல.

    இதுவரை உலகில் தோன்றி மறைந்தோர் எத்தனை கோடி பேர்,  தோன்றிய எல்லோருக்கும் வரலாறு  என்று ஒன்று இல்லை. இதில் சிலருக்கே உண்டு.

    இந்த சரித்திரப்பட்டியல் நீதி- அநீதி என இருவகைப்படும். இதில், எதில் நீ இடம்பெறப் போராடிக் கொண்டிருக்கிறாய்? காந்தி இருக்கும் பெயர்ப் பட்டியிலிலா? கோட்சே இருக்கும் பெயர்ப் பட்டியலிலா?

    உன்னைப் போன்றுள்ளவர்களின் சாதனைகளைச் கேசரிஇ அதுவே உனக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுக்கும். அந்த நம்பிக்கையே உனது முன்னேற்றதுக்குத் தேவையானதாகவும், வாழ்வுக்கு அவசியமானதாகவும் இருக்கும்.

    முடியாது என்கிற பேச்சசுக்கு இடம் கிடையாது என்று எப்பொழுதும் உன் இதயம் சொல்கிறதோ அப்பொழுதுதான் நீ நினைத்ததை முடிப்பவனாகத் திகழ முடியும்- திகழ்வாய். அப்படித் திகழும் போது தான் உலகம்  உன்னைப் புகழும்.[hide]

    வீரன் என்பவன் யார்? எதற்கும் அஞ்சாமல் தைரியத்துடன் எதையும் எதிர்கொள்பவன் தான் வீரன்.

    மாவீரன் என்பவன் யார்? இப்பொழுது சாகிறோம் என்று தெரிந்தும் எவன் ஒருவன் போர்க்களத்தில் கண்ணீர் வடிக்காமல் தைரியத்துடன் செயல்படுபிறானோ அவனே மாவீரன்.

    மண்ணில் இப்பொழுது மடிகிறோம் என்று தெரிந்தும் அந்த மரணத்தை சந்தோஷத்துடன் ஏற்று உயிரை இழந்தாலும் கொள்கையை இழக்கக்கூடாது என்று போர்க்களத்தில் எதிரி என்கிற எமனுடன் இறுதிவரை படுபயங்கர துணிச்சலுடன் எதிர்கொண்டு எழுந்து நின்று எவன் போரிடுகின்றானோ அவனும் மாவீரன் தான்.

    துப்பாக்கியை வைத்துக்கொண்டு எதிரே இருப்பவர்களை சுட்டு வீழ்த்துவது வீரமாகிவிடுமா? ஆகிவிடாது.

    ஒரு கோழையின் கையில் துப்பாக்கி கிடைத்தாலும் துப்பாக்கியைக் கொடுத்து சுடச் சொன்னால் கூட தன் எதிரே நிற்கும் பல வீரர்களை நொடியில் சுட்டு வீழ்த்திவிடுவான். அதற்காக அவனை வீரன் என்று சொல்லிவிட முடியுமா? சொல்வது சரியா? இதனால் அவன் வீரன் ஆகிவிடமுடியுமா? முடியாது. அதே சமயம் இவனால்- இந்தக் கோழையால் சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த வீரர்களை இந்தக் கோழையுடன் போரிட முடியாமல்- எதிர்த்துத் தாக்க இயலாமல் கடும் தோல்வியுற்ற கோழைகள் என்று சொல்லிவிட முடியுமா? முடியாது.

    குதிரை, வில்,அம்பு,வாள்,கேடயம் என்ற அந்தக்கால போர் முறை இதற்குச் சான்றாகும்.

    முறைப்படிச் சொன்னால்- ஒற்றைக்கு ஒற்றை மோதுவதுதான் வீரம் என்பது. மற்றபடி, துப்பாக்கி என்பதெல்லாம் இயந்திர வீரம். வில் அம்பு என்பது தான்  மனிதனது வீரம்.

    தீரன் சின்னமலையும், வீரபாண்டிய கட்டபொம்மனும், நேதாஜியும், திப்பு சுல்தானும் இவர் போன்றுள்ளவர்களும் எதனால் மடிந்தனர்? இவர்கள் வீரம் இல்லாததனால் தான் எதிரியிடம் வீழ்ச்சியுற்றனரா? இல்லை இல்லை இல்லை இயந்திரம்  இல்லாததினால் தான் எதிரியிடம் வீழ்ச்சி அடைந்தனர்.

    ஆங்கிலேயன் துப்பாக்கி முனையில் பயமுறுத்தி 200 ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்தி ஆண்டான். அதற்கா அதை வீரம் என்று சொல்லிவிட முடியுமா?

    வெள்ளையன் வீரத்தைக் கொண்டா நம்மை ஆண்டான்? 200 ஆண்டுகள் வரை ஆங்கிலேயனை எதிர்த்து அழித்தொழிக்க முடியாத இந்தியர்களிடம் அன்று வீரம் இல்லை என்று சொல்வது நியாயம் இல்லை. துப்பாக்கி இல்லை என்று சொல்வது நியாயம்.

    அறிவுபூர்வமான வீரனாக இரு; உன்னை யாரும் அவ்வளவு எளிதில் வெல்ல முடியாது.

    ஒரு வீரனை வென்று விடலாம். ஏனென்றால் இன்னொரு மாவீரன் இருக்கிறான். அறிவு பூர்வமான வீரனை யாராலும் அசைக்க இயலாது.[/hide]

    இந்த இதழை மேலும்

    அவசர நிலை சிகிச்சை

    நம் பயணங்களில் ஏற்படும் எதிர்பாராத நிகழ்வுகளைச் சமாளிக்க நம்மிடம் பொக்கிஷமான சில விஷயங்கள் இருக்கின்றன. அவைகளை நான் என் பயணங்களில் பயன்படுத்தி பலன் கண்டதை உங்களுக்கும் பயன்படும் என்று தெரிவிக்க இக்கட்டுரையை வரைகிறேன்.

    நம் மலர் மருத்துவத்தில் ரெஸ்கிவ் ரெமடி (Rescue remedy) என்ற மலர் மருந்து நம் அவசரகால சூழல்களுக்கு நிவாரணியாக விளங்குகிறது. இந்த மலர் மருந்தானது ஐந்து மலர் மருந்துகளின் கலவையாகும். அந்த ஐந்து மலர் மருந்துகளின் பெயரும் அதன் பயன்பாட்டையும் முதலில் நாம் பார்ப்போம்.

    செரி பிளம் (Cherry plum): இது நம் உடலின் வெப்பத்தைத் தனிக்கும் குணம் கொண்டது. தீக்காயங்கள் விரைவாக குணமாகவும் இது உதவியாக இருக்கும். தீ விபத்துக்கள் நம்மை பாதிக்காவண்ணம் பாதுகாக்கும் இறையாற்றலாக இது விளங்கும்.

    கிளமேட்டிஸ் (Clematis): இது நம்மை மயக்கத்திலிருந்து மீட்டெடுக்கும். விபத்துக் காலங்களில் ஏற்படும் அதிர்ச்சியால் நாம் மயங்கி விழாது விழிப்பாக இருந்து செய்ய வேண்டியவற்றைச் செய்ய இம்மருந்து உதவும். நம் பயணங்களில் உணவு மூலம் அல்லது சுவாசம் மூலம் நம்முள் வரும் நச்சுக்களை வெளியேற்றி மயக்கம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்.

    மிமுலஸ் (Mimulus): பயணங்களில் ஏற்படும் காரணம் சார்ந்த பயங்களிலிருந்து நம்மை காக்கும் இறை சக்தியாக மிமுலஸ் மலர் மருந்து விளங்கும். விபத்து காலத்தில் ஏற்படும் உயிர் பயத்தை இம்மருந்து கணிசமாகப் போக்கி பயணங்களில் நம் உயிரைக் காக்கும்.

    ராக் ரோஸ் (Rock Rose) : முந்தைய அத்தியாயத்தில் கூறியுள்ளதுபோல் எதிர்பாராது ஏற்படும் பேராபத்துக் களிலிருந்து நம்மைக் காக்கும் இறை சக்தியாக ராக் ரோஸ் விளங்கும். எதிர்பாராமல் நம் உடலில் சேரும் கடுமையான விஷங்களை வெளியேற்றும் சக்தி இம்மருந்திற்கு உண்டு.

    ஸ்டார் ஆப் பெத்தலஹாம் (Star of Bethlam): இம்மலர் மருந்தானது எதிர்பாராத அதிர்ச்சியிலிருந்து நம்மைக் காக்கும் இறை சக்தியாக விளங்கும். விபத்துக்களால் ஏற்படும் அதிர்ச்சியிலிருந்து நம்மை மீட்டெடுக்கவும் இது உதவியாக இருக்கும்.[hide]

    ஆக, இந்த ஐந்து மலர் மருந்துகளின் கலவையாக இருக்கும் ரெஸ்கிவ் ரெமடி மலர் மருந்தானது எல்லாவித அவசர கால நிகழ்வுகளையும் சமாளிக்க மிக உதவியாக இருக்கும். இன்னும் சொல்லப்போனால், இம்மருந்தை நாம் நம் பிரயாணங்களில் எடுத்துக்கொள்ளும்போது நம் பிரயாணம் இறைசக்தியின் பாதுகாப்பில் நிகழும். அதேபோல் நம் பயணங்களில் உடல் நிலை பாதிப்படையும்போதும் ரெஸ்கிவ் ரெமடியை எடுத்துக்கொள்ளும்போது நம் உடல் நிலையில் நல்லதொரு முன்னேற்றத்தை காணமுடியும். பிரயாணங்களில் நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்கவும் ரெஸ்கிவ் ரெமடி உதவும்.

    அப்புறம், பிரயாணக் காலங்களில் நம் கண்களுக்கு ஏதேனும் தூசால் மாசு ஏற்பட்டால், ஒரு டம்ளர் நிறையத் தண்ணீரில் கண்களை வைத்து சிமிட்டினால் தூசு வெளியேறிவிடும். பிறகு சினராரியா மரிட்டிமா (Cinararia maritima) என்ற ஹோமியோ மருந்து உதவியாக இருக்கும். அதேபோல் காது சார்ந்த பிரச்சனைகளுக்கு முலன் ஆயில் (Mulen oil) ஹோமியோ மருந்து மிகவும் உதவியாக இருக்கும்.  பயணங்களில் ஏற்படும் பொதுவான காயங்களுக்கு காலண்டுலா (Calendula) என்ற ஹோமியோபதி களிம்பு  தழும்பின்றி விரைவாக ஆற்றும். அதேபோல் தீக்காயங்களுக்கு காந்தாரிஸ் (Cantharis) ஹோமியோபதி களிம்பு உதவும். பயண காலத்தில் வயிற்றுப் போக்கு ஏற்பட்டால் மாதுளை பிஞ்சு அல்லது கொய்யா இலைக் கொழுந்தின் சாற்றைக் குடித்தால் விரைவாக கட்டுப்படும். தொடர்ந்து உடல் தெளியும் வரை பழங்களை மட்டுமே சாப்பாடாக எடுக்க வேண்டும். அப்புறம் பித்த வாந்தி எடுத்தால், இஞ்சி மரப்பான் உதவும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    நமது கனவுகளை வலுப்படுத்தும் ஆன்மிகம்

    ஆன்மிகம் என்பது ஆன்மாவுடன் தொடர்புடைய  விஷயங்களைக் குறிக்கிறது.  நமது வாழ்வில் ஆன்மீகத்தைப் பின்பற்றுதல் ஒரு பயனுள்ள செயல்பாடு ஆகும். சாத்தியமற்றதாக தோன்றும் அடைய முடியாத இலக்கை நிர்ணயிக்கும் போது இறைவனின் சந்நிதானத்திற்கு செல்கிறோம். பிரார்த்திக்கிறோம். வெற்றி வசப்படுமா? என்பது புரியாத புதிராக இருக்கிறது.

    ஆன்மிக நம்பிக்கையுடன் களத்தில்  நிற்கிறோம். நம்மை வீழ்த்த நம்மைச் சுற்றி உள்ளவர்களே நமக்கு எதிராக நிற்கிறார்கள். அவர்களது வியூகங்களை எதிர் கொள்கிறோம். இடையூறுகளை தவிடு பொடியாக்குகிறோம். வெற்றியால் நாம் தலை நிமிரும் போது, அவர்கள் தலைகுனிகிறார்கள். தூரத்தில் பல்லாயிரம் பேர் கரவொலி எழுப்புகிறார்கள். நாம் வென்றாலும் தோற்றாலும் அவர்கள் அப்படித்தான்.

    கனவை நனவாக்கிய இறைவனுக்கு நேர்த்திக்கடன் செய்கிறோம். மதம் வேறானதாக இருக்கலாம். கடவுள் வேறானதாக இருக்கலாம். வழிபாட்டு முறை வேறானதாக இருக்கலாம். சமய நூல்கள் வேறானதாக இருக்கலாம். நாம் செல்லும் பாதையோ ஆன்மிகம். நம்மைப் போன்றவர்கள் வழிபடுவதற்க்காகத்தான் உலகமெங்கும் ஆலயங்கள் புனிதத்தலங்கள் வியாபித்து இருக்கிறது.

    இறை வழிபாடு மற்றும் ஆன்மிகம் புனிதமானது. நம் மனதில் உள்ள தீய எண்ணங்களை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. பிறருக்கு நன்மை செய்யா விட்டாலும், ஏன் தீமை  செய்ய வேண்டும் என வினாக்களை நம்மிடையே எழுப்புகிறது. நம் மனதில் உள்ள மாசுக்களை சுத்திகரிக்கிறது.

    மனதில் வேறு பல சிந்தனைகளுடன் தினம் பல மணி நேரம் பூஜை செய்வதைக் காட்டிலும், வாரம் ஒரு முறையோ, அல்லது மாதம் இரு முறையோ, தவறாமல் குறிப்பிட்ட தினத்தில், குறிப்பிட்ட நேரத்தில் ஆலயம் செல்வது, இறைவனிடம் நமது கனவுகளை மனதிற்க்குள் உரக்கச் சொல்வது ஒரு நாள் மிகவும் பலனளிக்கிறது. கனவு நனவாகிறது.

    இறைவனது சந்நிதானத்தில் எவ்வித சிந்தனையுமின்றி அனைத்தும்  நீயாக இருக்கிறாய். இந்த உடலை நீயே வழிநடத்தி  செல் என சரணடைகிறோம். நமது கடமைகளை மிகச் சரியாக செய்வது மட்டுமே நமது பணி. பலனை இறைவனிடம் விட்டு விடுவதாகும்;.

    எந்த செயல் செய்தாலும், அது அவனால்தான் செய்யப்படுகிறது என்ற நினைவுடன் செய்து அந்த செயலின் பலனை இறைவனுக்கு சமர்ப்பனம் செய்து வாழ்ந்து வந்தால் அதுவே உச்சக்கட்ட ஆன்மிகமாகும்.

    கடவுள் அனைத்திலும் இல்லை. ஆனால், அனைத்துமே கடவுளாக இருக்கிறார்;. பிரச்சனை, கஷ்டங்கள், சிக்கல்கள் இல்லாத மனிதர்களே இல்லை. அவற்றிற்கு தீர்வு புலப்படாத போது, ஆலயத்திற்கு செல்கிறோம். எவ்வித பிரதி பலனும் பாராமல் நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியை செய்து,  வாழ்ந்து வந்தால் மிகச்சரியான பாதையில் இறைவனை நாம் நெருங்கிக் கொண்டு இருக்கிறோம் என்று பொருள்.

    நமது நற்பண்புகளை வெளிக்கொணர்வதற்கு ஆன்மிகம் உதவியாக உள்ளது. நமது இலக்கை அடைவதற்கு, நமது கனவு நனவானதற்கு, நம் லட்சியம் கைகூடியதற்கு, நமது இன்னல்கள் களைந்ததற்கு ஆன்மிகம் தான் காரணம் என்கிறோம். அதை ஆதாரப் பூர்வமாக நீருபிக்க இயல்வதில்லை.[hide]

    நம்பிக்கையற்றவர்களுக்கு அதை நீருபிக்க வேண்டிய அவசியமும் இல்லை. கண்ணுக்குப் புலப்படாதவற்றை உணர்வது தான் ஆன்மிகம். உயிர்ப்புத் தன்மையுடன், மனிதத் தன்மையுடன் வாழ அது மிகவும் தேவையாக உள்ளது. உடல் கண்களுக்குத் தெரிகிறது. உயிர் கண்களுக்குத் தெரிவதில்லை.

    இந்தியாவில் ஆன்மிகத் தலைவர்களில் முதலிடம் வகிப்பவர் சுவாமி விவேகானந்தர். மனித மனம் வலிமை பெற ஆன்மிக வழிபாடு  தேவையாய் உள்ளது. ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவன் இறைவன் என்கிற பூரண நம்பிக்கையுடன் நீயே சரணம் என்று பற்றுவதே உண்மையான பக்தி. அது எப்படி முடியும்? அது என்ன நடக்கிற காரியமா? என்று கேட்பவர்கள் எல்லாம் இருந்தும் நிம்மதியின்றி வாழ்கிறார்கள். நமது கனவு சாத்தியப்படும். கடவுளே நம்முடன் இருக்கையில் அற்ப மானிடர்கள் நம்மை என்ன செய்து விட முடியும் என்ற தைரியம் ஏற்படுகிறது.

    அன்புதான் ஆன்மிகம். நாம் சாப்பிடும் உணவில் ஒரு கைப்பிடி அடுத்தவருக்கு வழங்கும் போது, எரிச்சல், கோபமின்றி பிறருடன் இதமாய் பேசும்போது, பிறர் வளர நாம் இடையூறாக இல்லாமல், உதவியாக இருக்கும் போது ஆன்மிகம் நம்முள் துளிர்க்கிறது.

    ஆன்மிகம் என்பது நாம் யார் என்பதை நம்முள்ளே தேடுவதாகும். இங்கு ஆன்மா என்பது மனநிறைவைக் குறிக்கிறது. இகம் என்பது இவ்வுலக வாழ்வைக் குறிக்கிறது. மனநிறைவான வாழ்வை எப்படி வாழ்வது என்று தெரிந்து கொண்டு அதன்படி வாழ்வது ஆன்மிகமாகும்.

    மனதில் அன்பு சுரக்கும் போது மனம் விசாலம் ஆகிறது. ஒரு செல் உயிரியாய் ஜனித்து பல்கி பெருகி விசுவரூபமெடுத்து  மனிதனாய் வளர்ந்திருப்பது எப்படி சாத்தியமாயிற்று.

    ஆன்மிகம் மகா சக்தியைத் தருகிறது. அது மதத்தின் அடையாளம் அல்ல. மனதின் அடையாளம். எது நம்மை இயக்குகிறதோ, அது எதுவென தேடி அறிவதே ஆன்மிகம்.

    ஆசை, கோபம், களவு செய்து மிருகமாக உலா வரும் மானிடர் நடுவில், அன்பு, நன்றி, கருணை கொண்டு மனித வடிவில் தெய்வமாக உலாவச் செய்வது ஆன்மிகம்.

    எந்த குடும்பத்தில்  பெண்மை கொண்டாடப்பட வில்லையோ, அந்த வீடும் பாழ். அந்த நாடும் பாழ் என்கிறார் விவேகானந்தர். சேவையே முக்கிய குறிக்கோளாக கொண்டது ஆன்மிகம்.

    குடிகாரனிடம் ஏன் இப்படி இருக்கிறாய் என்று கேட்டால் அதை நியாயப்படுத்த ஆயிரம் கதை சொல்வான். திருடனிடம் ஏன் இப்படி திருடுகிறாய் என்று கேட்டால் அதை நியாயப்படுத்த ஆயிரம் கதை சொல்வான். நாம் செய்வது தவறு. அதை மாற்றிக் கொள்வோம் என நம்மை உணரச் செய்வது ஆன்மிகம்.

    கடலில் வாழும் மீன் கடலைத் தேடுவது போன்றது. நாம் ஆன்மிகத்தை தேடுவது. வலியை உணர்கிறோம். கண்களுக்கு வலி புலனாவதில்லை. உள்ளம் கண்களுக்கு புலனாவதில்லை. புவி    உருண்டையானது. ஆனால், நம் கண்களுக்கு தட்டையாகத் தெரிகிறது. புவி தன்னைத் தானே சுற்றிக்கொள்கிறது. நாம் உணர்வதில்லை. இங்கு நாம் பகல் என்று சொல்லும் போது அமெரிக்காவில் இரவு என்கிறார்கள்.

    நம்மால் உணர முடியாதது எவ்வளவோ உள்ளது. நாம் யார்? நமக்கும் மற்ற உயிரினங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? அதை உணரும் வழிமுறையே ஆன்மிகம். பிறரை அடக்கி ஒடுக்குவது அல்ல. அன்பால் அரவணைப்பதுதான் ஆன்மிகம்.

    நாம் சந்திக்கும் சவால்களில் எல்லாம் நாம் வெற்றி பெற்று விடுவதில்லை. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நாம் தோல்வியையே தழுவுகிறோம். ஒரு சிறு ஓட்டைத்தான் மிகப்பெரிய கப்பலையே மூழ்கச் செய்கிறது. நம்மிடம் உள்ள சிறு சிறு குறைபாடுகள்தான் நமக்கு தடைக்கல்லாக இருக்கிறது. அந்த குறைப்பாட்டை உணரச் செய்வதுடன் அதை நம்மிடம் இருந்து அகற்ற உறுதுணையாக இருக்கிறது ஆன்மிக வழிபாடு.

    நம்மை சக்தி நிறைந்தவராக மாற்றுகிறது ஆன்மிகம். நமது எண்ணங்களை, குறிக்கோள்களை கடவுளிடம் பகிர்ந்து கொள்கிறோம். நமது மனம் இலகுவாகிறது. நமது எண்ணங்களுக்கு ஆன்மிகம் ஒரு வடிகால். மனம் தேறுதல் அடைகிறது. சந்நிதானத்தில் இறைவனிடம் நாம் பேசுகிறோம். புத்தி பேதலித்தவர்கள் தங்களுக்குள்ளேயே பேசிக் கொள்கிறார்கள்.

    ஆன்மிக வழிபாட்டால் மனம் ஆரோக்கியமாகிறது. மனம் வீரியப்பட்டு அதன் சக்தி அதிகரிக்கிறது. உற்சாகம் பிறக்கிறது. நம்மில் பலர் பேசாது மௌனமாக இருக்கிறோம். வாய் பேசாது இருக்கலாம். மனம் இறைவனின் சந்நிதியில் பேசிக் கொண்டே இருக்கிறது. ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றார்கள். நமது மனதிற்கு அமைதி கிடைக்கிறது.

    இருளில் இரவு நேரத்தில்தான் நட்சத்திரங்கள் பிரகாசிக்கின்றன. நமது துன்பங்கள், துயரங்கள் ஆழமாகும் போதுதான் நாம் இறைவனிடம் நெருங்குகிறோம்.

    நெருப்பு இன்றி மெழுகு எரிவதில்லை. அது போலத்தான், ஆன்மிகம் இன்றி மனிதன் வாழ்வு நிறைவு பெறுவதில்லை.

    நமக்கு அவமானம் ஏன் ஏற்பட்டது? நம்மை ஏன் விழ வைத்தார்கள்? நம் அழகு மங்கத் தொடங்கியது ஏன்? இனி நம்மால் முன் போல வலுவானவனாக வலம் வர முடியுமா? தவறை உணரும் போது, அதை சரி செய்ய முனையும் போது, இழந்ததை பெற பாதை பிறக்கிறது. அது பரிகாரத்தின் மகத்துவம். மீண்டும் நம்மிடம் அழகும் செல்வமும் பெருகுகிறது.

    ஆன்மிகத்தில் தொடர்ந்து வழிபடும் போது, அழகு, செல்வம், நீண்ட ஆயுள், குழந்தைகள்,வீடு ஆகிய வளங்கள் நம்மை அடைகின்றன.

    நன்மைகளை அனுபவிக்கும் போது, மகிழ்ந்து திளைக்கும் மனித மனம் துன்பங்களை அனுபவிக்கும் போது வாட்டம் அடைகிறது. நமது சிறு தவறுகளால் வாழ்வு இருளாகிறது. எண்ணற்ற துன்பங்கள் சூழ்ந்து கொள்கிறது. நம் கடமைகளை மறந்து செயல்பட்டதால் அது ஏற்பட்டது. வழி புலப்பட வில்லை. இறைவனை சரணாகதி அடைகிறோம். நல்ல மனிதர்கள் வருகிறார்கள். நல்வழி காட்டுகிறார்கள். காலப்போக்கில் பாதை சீராகிறது. இழந்தவைகளை மீளப் பெறுகிறோம். துன்பங்கள் மாறி இன்பங்களாகின்றன.

    நீரில் இருக்கின்ற முதலைக்கு வலு அதிகம். அது பெரிய யானையை புரட்டிப் போட்டு அடித்துக் கொன்று விடும் ஆற்றல் மிக்கது. யானை அதிலிருந்து விடுபடவே முடியாது. வாழ்வில் உயர்நிலையில் இருப்பவர்கள், உன்னத நிலையில் இருப்பவர்கள் பலவீனத்தால் பாதை தவறும் போது நீரில் இருக்கும் முதலையிடம் யானை சிக்கி சீரழிவது போலாகி விடுகிறார்கள்.

    இறைவன் சந்நிதியில் மனம் சிந்திக்கிறது. இது சரியல்ல என்று உங்கள் மனம் வேறு பக்கம் போக வேண்டும் என்று நிமிர்கிறது. காமத்தை, கோபத்தை, பொறாமையை ஆன்மிகம் அழிக்கிறது.

    இழந்தவனுக்கு ஏமாற்றமும், பரிதவிப்பும் ஏற்படுகிறது. அது அவனிடமிருந்து கபடமாய் பொருளைப் பெற்றவனை நிச்சயமாய் பாதிக்கிறது. கடின உழைப்பின்றி முயற்சியின்றி குறுக்கு வழியில் செல்வம் தேடுபவர்கள் ஒரு நாள் குறுகி போய்விடுகிறார்கள். நிலையான, நிச்சயமான, நிரந்தரமான உயர்வு கடின உழைப்பிலும் தெய்வ நம்பிக்கையிலும் உள்ளது.[/hide]

    இந்த இதழை மேலும்

    தாவர மூலக்கூறு இனப்பெருக்கத் துறையில் சிறந்த ஆராய்ச்சியாளருக்கான விருது

    கோவை வேளாண் பல்கலைக்கழகத்தின் 49 ஆம் ஆண்டு நிறுவன தினத்தை முன்னிட்டு வேளாண் விஞ்ஞானிகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதில் மூலக்கூறு இனப்பெருக்கத் துறையில் பணியாற்றி வரும் பேராசிரியர் டாக்டர் செந்தில் நடேசன் தாவர மூலக்கூறு அறிவியல் உதவியுடன் புதிய ரகங்களை உருவாக்கியதன் மூலம் அவருக்கு இவ்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டன.

    இவர் 1995 ஆம் ஆண்டிலிருந்து இத்துறையில் பணியாற்றி வருகிறார், பல்வேறு சிறுதானிகளின் புதிய ரகங்களை உருவாக்குவதில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு இத்துறையில் பல்வேறு சாதனைகள் புரிந்து வருகிறார். மூலக்கூறு இனப்பெருக்கத் துறைக்காக ஜப்பானில் பயிற்சி பெற்றவர். மேலும் முதுமுனைவர் (POST DOCTORAL FELLOWSHIP) பட்டத்தையும் ஜப்பானில் பெற்றவர்.  மூலக்கூறு இனப்பெருக்கத் துறையில் ஆராய்ச்சி செய்ய ஜெனோமிக் ஆய்வகத்தை நிறுவினார்.

    வைட்டமீன் ஏ குறைபாடு பிரச்சனையைத் தீர்க்க பீட்டா கரோடீன் மக்காச்சோள கலப்பினங்களை உருவாக்கும் நோக்கத்தில் பயோஃபோர்டிஃபிகேஷன் என்னும் திட்டத்தில் பணியாற்றி வருகிறார்.

    மதுரை வேளாண் கல்லூரியில் 50 வது ஆண்டு நிறைவு முன்னிட்டு நிறைவு போது உயிர்தொழில் நுட்ப துறையின் தலைவராகவும், புத்தாக்க மையத்தின் திட்ட இயக்குநராகவும் பணியாற்றினர்.  இவர் தாவர மூலக்கூறு உதவியுடன் புதிய ரகங்களை கண்டுபிடித்தார். இந்த தனித்துவமிக்க சாதனையை பாராட்டி பல்கலைக்கழக நிறுவன தினத்தின் அன்று இவருக்கு இவ்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவ்விழாவில் தேசிய மானாவாரி ஆணையர் டாக்டர் அசோக் தல்வாய் மற்றும் வேளாண் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் என். குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற இவ்விழாவில் 25 வேளாண் விஞ்ஞானிகளுக்கு விருது வழங்கப்பட்டது.

    வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 10

    ஏன் ஆண்கள் பொய் சொல்கிறார்கள் & பெண்கள் அழுகிறார்கள்?

    (Why men Lie and Women Cry) 

    இந்த நூலை ஆலன் மற்றும் பார்பராபீஸ் (Allan & Barbara Peace) ஆகிய இருவர் எழுதியிருக்கிறார்கள். (இந்நூலினைத் தமிழில் ஜார்கினா குமார் மொழிபெயர்த்துள்ளார். கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.) இந்நூலாசிரியர்கள் இருவரும் உளவியலில் மருத்துவப் பட்டம் பெற்ற கணவன் மனைவி ஆவர். இவர்கள் உலகம் முழுவதும் 20 ஆண்டுகளுக்கு மேல் சுற்றிவந்து ஆண், பெண் உளவியலை ஒரு கோட்பாடாக்கித் தந்துள்ளனர். இந்நூல் முன்வைக்கும் கருத்துக்கள் முழுவதும் அறிவியல் ரீதியானதாகும். இந்நூலில் முன் வைக்கப்படும் கருத்துக்கள்.

    • ஆண்கள் ஏன் காதலைப் பற்றி மிகவும் குழப்பமடைகிறார்கள்?
    • ஏன் பெண்கள் பேசிக்கொண்டேயிருக்கிறார்கள்?
    • ஏன் பெண்கள் சுற்றி வளைத்தே பேசுகிறார்கள்?
    • ஏன் பெண்கள் அழுதுகொண்டே இருக்கிறார்கள்?
    • ஆண்கள் ஏன் பொய் பேசுகிறார்கள்?
    • உறவுகளில் உறுதியாக ஒன்றைச் சொல்ல ஆண்கள் ஏன் தயங்குகிறார்கள்?

    போன்ற கருத்துக்களை ஆய்வுநோக்கில் அலசிப் பார்த்து ஆண், பெண் இருவரின் மனநிலை என்ன? என்பதை இந்நூல் மிக அற்புதமாக விவரிக்கின்றது. இந்நூல் முன்வைக்கும் முதல் கருத்து ஆண் வேறு, பெண் வேறு என்பது மட்டுமல்ல. இருவரும் வேறுபட்ட சிந்தனையுடையவர்கள். இவர்களுக்குள் ஒத்த சிந்தனை என்பது எப்போதும் ஏற்படாது. ஆணின் மூளை வேறு? பெண்ணின் மூளை வேறு? ஆணின் மூளை உணர்வுகளின் அடிப்படையில் இரண்டு பகுதிகளாக வலது மூளை, இடது மூளை என்ற பிரிவு மட்டுமே உண்டு. இடது மூளை பேசுவதையும், வலது மூளை அதற்கான தீர்வுகளை ஆராய்வதையும் செய்யும். பெண்களைப் பொறுத்தவரை இடது, வலது என்ற இரண்டு மூளைகளிலுமே 20 பகுதிகள் உள்ளன. ஒரு அஞ்சறைப் பெட்டி போன்று; அவள் ஒரே நேரத்தில் பேசவும், அழவும், உணர்ச்சிவசப்படவும், சிரிக்கவும் என்று உணர்வுகளை மாற்றி மாற்றி தன்னை வெளிப்படுத்த முடியும். ஆண் அப்படி அல்ல! அவனால் ஒரு நேரத்தில் ஒன்றை மட்டுமே செய்ய முடியும். ஒரு பெண்ணால் ஒரே நேரத்தில் சுய நினைவுடன் ஒன்பது வேலைகளைச் செய்ய முடியுமென்று இந்நூலாசிரியர்கள் சொல்கிறார்கள். ஒரு பெண் மூளையால் ஒரு நாளைக்கு 6000 முதல் 8000 வரை சொற்களைப் பேசி வெளியிட முடியும். ஒரு ஆனால் அதிகபட்சம் 2000 முதல் 4000 வரை சொற்களைத்தான் பேச முடியும். பெண்ணின் பேச்சுத்தனம் மூளையில் பெரியது; ஆணின் பேச்சுத்தனம் மூளையில் சிறியது. இரண்டு பெண்கள் ஒன்றாக ஒரு நாள் முழுவதும் தொடர்ந்து அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்துவிட்டு, வீட்டுக்குச் சென்று மீண்டும் தொலைபேசியில் தாம் விட்டதிலிருந்து பேசத் தொடங்குவார்கள். ஒரு ஆண் இதனைப் பார்த்துக்கொண்டே இருந்துவிட்டு இவ்வளவு நேரமா நீங்கள் இருவரும் பேசிக்கொண்டுதானே இருந்தீர்கள். மறுபடியும் என்ன? போனில் பேச்சு? என்று கேட்டு விட முடியாது. காரணம் அவளால் ஒரு நாளைக்கு 8000 க்கு மேலான சொற்களையும், உரையாடல்களையும் பேசாமல் இருக்க முடியாது. ஏனென்றால் அவர்களின் மூளை வடிவமைப்பு ஆதிகாலந் தொடங்கியே அப்படியாகிவிட்டது.

    ஆதிகாலத்தில் பெண்கள் குகைகளில் வாழும்போது தங்கள் குழந்தைகளுடனும்; தங்கள் குழுக்களுடனும்; உணவு தேடச் சென்ற ஆண்கள் திரும்பி வரும்வரை அவர்கள் குறித்தோ! தங்கள் வாழ்க்கை குறித்தோ பேசிக்கொண்டேயிருந்தனர். ஓர் ஆண் உணவைத் தேடுபவன். பிரச்சினையைத் தீர்ப்பவன். அவன் உயிர் வாழ இவைதான் முக்கியமானவை. ஒரு பெண் கூட்டைக் காப்பவள், அடுத்த தலைமுறைக்காக உயிர் வாழ்வதை உறுதி செய்வதுதான் அவளது கடமை. ஒவ்வொரு சிறிய விஜயத்தைப் பற்றியும் அவள் தொடர்ந்து பேசுவதற்கான காரணம், அவளது வாழ்க்கையே அந்தச் சிறிய விஜயங்களின் ஒரு கூட்டுத் தொகுப்பாக ஆகிவிட்டதுதான். பிள்ளைகள், அவர்களின் பிரச்சினைகள், அவர்களின் எதிர்காலம், தன்நிலை, தனது எதிர்காலம் என்று அவள் ஆணைத் தூண்டுகிறாள். ஆண் அவளைப் போன்று பேசமுடியாமல்; தன் வேலை என்றே குறியாக இருக்கின்றான். ஆண் உணவு தேடுபவன் என்பதால் வேட்டையில் ஈடுபட்ட ஆண் குழுக்களுக்கிடையே பேச்சுக்கு இடமில்லை. அவர்கள் ஒரு விலங்கு அகப்பட நாள் கணக்கில் பாறை மீதோ, மரத்தின் மீதோ அமர்ந்து கண்காணித்து வேட்டையாட வேண்டும். இல்லையென்றால் அன்று அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்திற்கும் உணவு இல்லை. இதனடிப்படையில் ஆணின் பேச்சுத்தளம் மூளையில் குறைவாகவே அமைந்துவிட்டது. இங்கே ஆணுக்காகவும் சேர்ந்து பெண்ணே பேசுகின்றாள். போனவன் வருவானா? அவனுக்கு ஏதேனும் தீயது நடந்திடுமா? அப்படி நடந்தால் நம் கதி? குழந்தைகளின் கதி? என்று புலம்புகின்றாள். ஆண் இந்த நேரத்தில் வருவதாகச் சொல்லிச் செல்கின்றான். அவனால் தான் சொல்லிய நேரத்தில் உடனடியாக வீடு திரும்ப முடிவதில்லை. இதனால் ஆண் தாமதத்திற்கான காரணத்தை விளக்க நிறைய பொய் சொல்ல வேண்டியிருக்கின்றது. இவன் பொய் பேசுகின்றான் என்பதைப் பெண் அறிகையில் அவள் அழுகின்றாள். பெண் பேசுவதற்கும், அழுவதற்கும் காரணங்கள் தேவையே இல்லை. அவள் நினைத்தால் அழுதிட முடியும்.

    பெண்கள் ஏன் இவ்வளவு அதிகமாகப் பேசுகிறார்கள், அதுவும் பெரும்பாலும் நேரடியாகப் பேசாமல் சுற்றிவளைத்துப் பேசுகிறார்கள். அவள் குழந்தை பெறுபவளாகவும், கூடுகளைக் காப்பாற்றுபவளாகவும் பரிணமித்து உருவெடுத்துள்ளாள். இதன் விளைவாக, பெண்களின் மூளைகள், தம் வாழ்வில் உள்ளவர்களைக் கவனித்துப் பேணவும், உணவூட்டவும், அன்பும் அக்கறையும் செலுத்தவும் ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டு உள்ளன. ஆண்களோ ஒரு முற்றிலும் வேறுபட்ட பணிக்கென உருவெடுத்தனர். அவர்கள் வேட்டையாடுபவர்களாக, விரட்டுபவர்களாக, பாதுகாப்பவர்களாக, பொருள் ஈட்டித் தருபவர்களாக,, பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பவர்களாக வடிவெடுத்துள்ளனர்.

    ஒரு பெண் மூளை ஒரே சமயத்தில் பல்வேறு விஜயங்களில் ஈடுபடுவதற்கெனப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே சமயத்தில் நான்கு அல்லது ஐந்து பந்துகளை அவளால் காற்றில் வீசியெறிந்து விளையாட முடியும். ஒரு கம்ப்யூடடர் புரோகிராமை ஓடவிட்டுக் கொண்டே. தொலைபேசியில் பேசிட முடியும். அதேவேளையில் தனக்குப் பின்னால் என்ன உரையாடல் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்றும் கவனிக்க முடியும். ஒரே ஒரு உரையாடலில் பல தொடர்பற்ற விஜயங்களைப் பற்றி அவளால் பேச முடியும். அவ்வாறு பேசும்பொழுது விஜயங்களை மாற்றுவதற்கோ அல்லது தான் கூறும் கருத்தை வலியுறுத்துவதற்கோ அவளால் ஐந்து குரல் ஒலிகளை மாற்றி மாற்றிப் பயன்படுத்த முடியும். இவற்றுள் மூன்றே மூன்று ஒலிகளை மட்டுமே ஆண்களால் அடையாளம் கண்டுகொள்ள முடியும். இதன் விளைவாக, பெண்கள் பேசுவதைக் கவனிக்கும்பொழுது அவர்கள் மையக் கருத்தைப் பல சமயங்களில் ஆண்கள் கோட்டைவிட்டு விடுகின்றனர்.

    பெண் கேட்கும் கேள்விக்கு ஆண் ஆம் அல்லது இல்லை என்று பதில் சொல்வான். ஆனால் பெண்கள் விரிவான அவர்கள் எதிர்பார்க்கிற விளக்கங்களை ஆண் விவரிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கின்றனர். இது நடைபெறாமல் போகையில் பெண் அழுகின்றாள். ஆண் செய்வதறியாது திகைத்துப் போய் அமைதியாகி விடுகின்றான். இந்த நூல் முன்வைக்கும் கருத்து ஆண் வேறு பெண் வேறு என்பதே.

    ஆண் வேறு! பெண் வேறு!

    ஆண்களின் மூளைகள் தீர்வை மையம் கொண்டவை. பெண்களின் மூளைகள் செயல்பாட்டை மையம் கொண்டவை. ஒரு பெண் பேசுவதற்கான முக்கியக் காரணம் பேசுவது மட்டுமே. தனது அன்றைய தினத்தைப் பற்றி உங்களிடம் பேசுவதும், உங்களுடன் ஒரு பிணைப்பை ஏற்படுத்திக் கொள்வதும் தானே தவிர, அவள் பேசுவதற்குத் தீர்வு வேண்டி அவள் பேசுவதில்லை. ஆண் அங்கு என்ன பேசுகிறான் என்பது முக்கியமல்ல. அவன் பங்கு கொள்வது மட்டுமே முக்கியம். பெண்கள் சராசரியாக ஆண்களை விட ஏழு ஆண்டுகள் அதிகமாக வாழ்கிறார்கள். இதன் காரணம் அவர்களால் அழுத்தத்தை நன்றாகச் சமாளிக்க முடிவது தான். ஆண்கள், பெண்கள் இருவருமே மிகைப்படுத்துகிறார்கள். வேறுபாடு என்னவென்றால் ஆண்கள், உண்மைகள், புள்ளி விபரங்கள் இவற்றை மிகைப்படுத்துகிறார்கள். பெண்களோ உணர்ச்சிகளை மிகைப்படுத்து கிறார்கள். ஆண்களின் மூளைகள் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கென உருவானவை! பெரும்பாலான ஆண்கள் சொல்வதற்கு ஏதாவது இருந்தால் மட்டுமே பேசுவார்கள். இது பெண்களிடம் பேசும் பொழுது தீவிரமான பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. ஏனெனில் பெண்களின் ‘பேச்சு’ முற்றிலும் வேறுபட்டது. பெண்களின் பேச்சு, ஒரு பரிசாகவும், மற்றொரு நபருடன் தொடர்பும் பிணைப்பும் ஏற்படுத்திக் கொள்வதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. சாதாரணமாகச் சொல்வதானால் அவளுக்கு உங்களைப் பிடித்திருந்தால் அல்லது அவள் உங்களை நேசித்தால், நீங்கள் சொல்வது ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருந்தால், நீங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டவராக, முக்கியமானவராக இருப்பதாக உங்களை உணரச் செய்ய விரும்பினால், அவள் உங்களிடம் பேசுவாள். அவளுக்கு உங்களைப் பிடிக்கவில்லை என்றால், அவள் பேசமாட்டாள்.

    ஆண்கள் தெளிவான உத்தரவுகளை விரும்புகிறார்கள். ஆண்களைப் பொறுத்தவரையில் நேரடிப் பேச்சு மிகச் சரியானது. ஏனெனில் அவர்கள் அவ்வாறு தான் கருத்துத் தொடர்பு கொள்கிறார்கள். சுமார் நூறாயிரம் ஆண்டுகளாக ஆண்கள் காலையில் எழுந்து தமது குடும்பத்தினருக்கு உணவு தேடி வெளியில் சென்றுள்ளனர். மனித குலம் உயிர் வாழ்வதற்கு ஆணின் பங்களிப்பு வெகு தெளிவாகவும், எளிமையானதாகவும் இருந்து வந்துள்ளது. ஒரு உண்ணப்படக்கூடிய இலக்கைக் கண்டுபிடித்து அதை அடித்து வீழ்த்துவதாகும். இதன் விளைவாக அதை மட்டுமே வெற்றிகரமாகச் செய்வதற்காகச் சிறப்பாக உருவமைந்துள்ள சில பகுதிகளைக் கொண்டு அவனது மூளை வளர்ந்துள்ளது. அதற்கு காட்சி – இடைவெளிப் பகுதி என்ற பெயர். இது மேகங்கள், கோணங்கள், தூரங்கள் மற்றும் இடைவௌல் பற்றிய தொடர்பற்ற விஜயங்களை அளக்கப் பயன்படுகிறது. இதே பகுதிதான் நாகரீக ஆண்களால், காரைப் பின்னால் திருப்பி இணையாக நிறுத்துவதற்கும், வரைபடங்களை வாசிப்பதற்கும், ஒரு சாலையில் ஏற்கெனவே சென்று கொண்டிருக்கும் வண்டிகளுடன் இணைந்து கொள்வதற்கும், பந்து விளையாடவும், குறி வைத்து அடிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. சாதாரணமாகச் சொல்வதானால் இது மூளையின் வேட்டையாடும் பகுதியாகும். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரு ஆணின் பணி குறிப்பாக வேட்டையாடுவதாகும். பெண்கள் கூடுகளைப் பாதுகாப்பவர்களாகப் பரிணமித்து வளர்ந்துள்ளனர்.

    உணர்ச்சிவசப்பட்ட பெண் நிதானமாக அதைப் பற்றி பேசுவதையே விரும்புவாள். ஒரு பெண் உணர்ச்சியோடு பேசும் போது அவள் வெளிப்படையான முக பாவங்களை, உடல் அசைவை, பல்வேறு தொனிகளை வெளிப்படுத்துவாள். தன் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆண் ஒரு பாம்பைப் போல சீறுவான், வார்த்தைகளைக்கொட்டுவான், முரட்டுத்தனமாக நடந்துகொள்வான். ஒரு பெண் தன் உறவுகளில் சந்தோஷமின்றி இருந்தால் அவளால் தன் வேலையில் கவனம் செலுத்த முடியாது. ஓர் ஆண் தன் வேலையில் சந்தோஷமின்றி இருந்தால் அவளால் தன் உறவுகளில் கவனம் செலுத்தமுடியாது. உலகெங்கும் உள்ள ஆண்களில் 70-80% தங்கள் வேலைதான் தங்கள் வாழ்வின் மிக முக்கியமான பாகம் என்று கூறுகிறார்கள். 70-80% பெண்கள் தங்கள் குடும்பம் தான் தங்கள் வாழ்வின் மிக முக்கியமான பாகம் என்று கூறுகிறார்கள். இதன் பலனாக மன அழுத்தமுள்ள சிக்கலான சூழலில் தனது கணவனுடன் பேசி நேரம் செலவழிப்பதை ஒரு பரிசாக பெண் கருதுவாள். ஆனால் ஓர் ஆண் அதையே பிரச்சினையைத் தீர்க்கச் செய்யும் முயற்சியில் ஒரு தடையாகக் கருதுவான். பேசி, அணைக்க அவள் விரும்புவாள். அவன் கால்பந்து விளையாட்டை இரசிக்க விரும்புவான். அவனது மூளை ஒரு பிரச்சினையைத் தீர்க்கும் எந்திரம். அது எப்போதும் ஓய்வெடுப்பதில்லை. ஒரு மருத்துவமனைக் கட்டிலில் அவன் சாகக்கிடந்தால் கூட இயற்கையான வெளிச்சத்தைப் பெறவும் ஜன்னல் வழியே வயல்வெளியைப் பார்க்கவும் அறையை மாற்றி அமைக்கும் முறைகள் பற்றித்தான் யோசிப்பான். ஆணும் பெண்ணும் வேறு வேறு. மேலானவர்களோ கீழானவர்களோ அல்ல – வேறுபட்டவர்கள் அவ்வளவுதான். விஞ்ஞானத்திற்கு இது தெரியும் என்று இந்நூல் நிறைவுபெறுகிறது. ஆண், பெண் இருவரின் குணநலன்களைத் தெரிந்து நெளிவு சுளிவுடன் வாழ இந்நூல் கட்டாயம் துணைசெய்யும் என்று நான் உறுதி கூறுகின்றேன்.

    –    வாசிப்புத் தொடரும்…[/hide]

    இந்த இதழை மேலும்