– 2019 – November | தன்னம்பிக்கை

Home » 2019 » November

 
  • Categories


  • Archives


    Follow us on

    Парі Матч Ігрові Автомати ᐈ Грати Онлайн В Паріматч Казино З України

    Таким чином, можна регулювати азартність гри, підвищуючи або знижуючи розмір мінімальної та максимальної ставки. Це азартний ресурс, де можна грати на гривні, долари або обирати з переліку доступних іншу підходящу валюту та швидко отримувати виграші зручним способом. Тут цінують кожного відвідувача, а проявом піклування є гарантія анонімності, безпечність здійснення платіжних операцій та повна прозорість взаєморозрахунків.

    book of ra онлайн без реєстрації

    Інтернет-клуби, що увійшли в ТОП, пропонують якісний сервіс, вигідні бонуси та широкий вибір ігрових автоматів. Звичайно, розраховувати на виграші в безплатних автоматах також не варто. Нереально виграти гроші, не ризикуючи при цьому власними коштами. Це єдиний недолік тестових версій апаратів онлайн.

    Символи Слота Бук Оф Ра: Спеціальні Та Базові

    В такому разі коефіцієнти підсумовуються, після чого виграш множиться на сформовану суму. Основна мета гри для максимального виграшу – зібрати на барабанах комбінацію із п’яти однакових символів. Усі комбінації формуються зліва направо. Розробники Book of Ra online повний опис зробили максимально простий функціонал гри, щоб у ній розібралися навіть гемблери-початківці. Усі кнопки підписані, тому навіть новачок зрозуміє, які функції вони виконують. А русифікований інтерфейс максимально спростить геймплей для гравців з України.

    Як Грати У Лоти Казино Безкоштовно?

    Потрібно вивчити список провайдерів, новинок та додаткових ігор. Потім рекомендується видалити в розділі “Download” завантажувальний файл, щоб він не займав місце. Промокоди від Parimatch Casino на даний момент не видаються. Промокод — код, вводячи котрий, гравець отримує бонусні кошти.

    Смачний та соковитий слот від компанії Groosoft. RTP ігрового апарату на рівні 90 відсотків. Призові комбінації складаються з трьох і більше знаків і можуть бути зібрані з обох боків (як з крайнього лівого, так і крайнього правого барабана).

    Игровой Автомат Aztec Treasure Играть Бесплатно Бесплатно Без Регистрации

    Ацтеки – одна из любимых цивилизаций всех творцов игровых приложений. Кроме того, именно ацтеки сделали человечеству целый ряд важных подарков в виде сельскохозяйственных культур, астрономических лінк открытий и календаря. Величественные пирамиды этого народа волнуют исследователей и искателей приключений до сих пор, и их можно встретить по всей Центральной Америке.

    aztec treasure автомат

    Они путешествуют во времени и по множеству параллельных… Не единожды любители азарта убедятся в щедрости аппарата Aztec Treasure. Запускайте слот и каждый удачный ход будет сказываться на состоянии счета. Частые начисления обеспечат бонусные функции, щедрые множители и бесплатные спины.

    Обзор Игрового Автомата Aztec Treasure

    Несмотря на огромные возможности, GTA 5 будет интересна только первое время – уже спустя час любой геймер найдет массу багов, недоработок и моментов, которые хотелось бы изменить. В этом случае выход очень прост – нужно найти подходящий мод для GTA 5, установить его и кардинальным образом перевернуть весь игровой процесс. Помимо модов и сборок, у нас вы сможете найти самые последние новости про GTA 5, статьи с описанием и прохождением интересных или трудных моментов, различные читы и трейнеры.

    • Шансы пятьдесят на пятьдесят, поэтому просто доверьтесь своей фортуне и сделайте выбор.
    • Для этого не потребуется собирать экспедицию и приобретать билет на самолет.
    • Их размер зависит от величины ставки в основных вращениях.

    Он обладает яркой графикой и уникальным дизайном, отличающим слоты и игровые автоматы компании Betsoft. По своей конфигурации этот аппарат из Eldorado casino довольно стандартен. Он основан на пяти барабанах, каждый из которых размещает three символа в поле зрения. По умолчанию вы получите 20 линий и сможете играть любым числом вплоть до 1. Со сложенными «дикими» символами рекомендуется придерживаться всех 20 линий.

    Aztec Treasures Rtp

    Игровой автомат Aztec Treasure – одна из самых популярных моделей компании Novomatic. Азартные игроки не упускают возможности отправиться навстречу виртуальным приключениям. Отыскать сокровища древних цивилизаций мечтают геймеры и в наши дни. Очередной шанс проявить себя предоставляет слотхантерам увлекательный аппарат, посвященный легендам об ацтеках.

    Испокон веков легенды о несметных сокровищах будоражат умы искателей приключений. Например, больше пяти веков назад испанские конкистадоры отправились на край света, чтобы найти золото таинственной цивилизации Ацтеков. И стоит отметить, что они в этом преуспели, о чем рассказывает нам история средних веков.

    மரத்தை நடுவோம்…

    நாளும் அதிகரித்து வரும்
    புவியின் வெப்பத்தைப் போக்க…
    நாமும் ஒரு மரத்தை நடுவோம்
    நலமான சுவாசக் காற்றைப் பெறுவோம்…
    மரம் நடுவதில் தன்னலம் இருக்காது

    அது சமூக நலன்; உலக நலம்…
    இன்று நாம் நடும் மரம்
    நாளை வரும் எதிர்கால சந்ததியினருக்கு
    அட்சய பாத்திரமாய் அமுத சுரபியாய் திகழும்..
    மரம் காற்றும் கனியும்

    பழமும் உடலுக்கு நல்ல நலமும் தரும்…
    வீதியில் ஒரு மரம் இருந்தால்
    விளையாட குழந்தைகள் கூடுவர்
    பெரியவர்கள் அமர்ந்து பேசுவர்
    அசதியாய் வருபவர் ஓய்வெடுப்பர்
    காட்டில் ஒரு மரம் இருந்தால்
    பறவைகள் விலங்குகள் கூடும்
    மகிழ்ச்சியாய் பாடும் அங்கும் இங்கும் ஓடும்
    பட்டுப்போகும் வரை நிழலையும் நிம்மதியையும்
    கொடுக்கும் மரத்தை நாமும் நடுவோம்….

    நம்பிக்கையை மகிழ்ச்சியாக்கு..! நாளை உலகை உனதாக்கு…!

    Dr.N. நாகரத்னம் M.B.B.S.,M.D.,(O.G).,FRM.,DRM(GERMANY)

    இயக்குநர், ரத்னா மருத்துவமனை

    (பெண்கள் மகப்பேறு மற்றும்

    குழந்தையின்மைக்கான சிறப்பு மருத்துவமனை)

    செக்காலை, காரைக்குடி.

    இலட்சியங்கள் கனவுகள் மலரட்டும், அவை

    செய்யும் பணியில் மணக்கட்டும்

    புதிய முயற்சிகள் தொடரட்டும், அவை

    புத்துணர்வாய் நெஞ்சில் துளிர்க்கட்டும்

    என்னும் தன்னம்பிக்கை வரிகளை தன்னகத்தே கொண்டு தான் கொண்ட மருத்துவத்துறையில் சாதித்து வரும் சாதனைப் பெண்மணி.

    தான் பிறந்த மண்ணிற்குப் பெருமை சேர்க்கும் விதமாக கற்ற மருத்துவத்தை சொந்த ஊரிலே செய்ய வேண்டும் என்று தன்னால் முடிந்த மருத்துவ சேவையை செய்து வருபவர்.

    குழந்தையில்லா தம்பதியினர் யாரும் இருந்திட கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, பல மருத்துவ புதுமைகளைப் புகுத்தி வரும் மருத்துவர்.

    மருத்துவமனை தொடங்கி குறுகிய ஆண்டுகளே ஆனாலும் தான் தொடும் அனைத்தையும் சாதனைகளாகவே முடிக்கும் குணம் கொண்ட ரத்னா மருத்துவமனையின் இயக்குநர் திருமதி. Dr. N. நாகரத்னம் அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு.

    கே: உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

    செட்டிநாட்டுப் புகழ் என்று அழைக்கப்படும் காரைக்குடியில் தான் பிறந்தேன். என்னுடைய தந்தை டாக்டர் நாகப்பன், தாயார் திருமதி. தெய்வானை. எனக்கு ஒரு சகோதரி. எனக்கு சிறு வயதிலிருந்தே மருத்துவராக வேண்டும் என்பது தான். அது தான் என்னுடைய ஆசையும் கனவாகவும் இருந்தது. அதற்கு காரணம் என்னுடைய தந்தை தான்.  என் தந்தை ஒரு கண் மருத்துவர். எங்கள் பகுதியில் மிகவும் பிரபலமானவர். அனைவரிடத்திலும் அன்பாகப் பழகும் குணம் கொண்டவர். தன்னிடம் வருபவர்களை ஒரு நோயாளியாய் பார்க்க மாட்டார், ஒரு உறவினர் போல் அனுசரணையோடு பழகுவார். இதையெல்லாம் சிறு வயதிலிருந்து பார்த்து வளர்ந்ததால் நாமும் ஒரு மருத்துவராக வேண்டும் என்று நினைத்தேன். என்னுடைய பள்ளிக் கல்வி என்று பார்த்தால் மதுரையில் உள்ள மகாத்மா மெட்ரிக் பள்ளி. தொடக்கக் கல்வியிலிருந்து பத்தாம் வகுப்பு வரை படித்தேன். பத்தாம் வகுப்பு முடித்தவுடன் காரைக்குடியிலுள்ள முத்தையா அழகப்பா பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பை முடித்தேன்.

    எம்.பி.பி.எஸ் படிப்பை கோவையில் புகழ்பெற்ற மருத்துவக் கல்லூரியான பி.எஸ்.ஜி மெடிக்கல் கல்லூரியிலும், M.D(O.G) யை சிதம்பரத்திலுள்ள ராஜா முத்தையா ஆய்வு மையத்திலும் படித்தேன்.

    கே: மகப்பேறு மருத்துவராக வர வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குள் எப்படி வந்தது?

    திருமணம் ஆன எல்லா தம்பதியனர்களும் நினைப்பது நமக்கு ஒரு குழந்தை வேண்டும் என்பது தான். அவ்வாறு குழந்தையில்லாத போது அது குடும்பம் மற்றும் சமுதாய பிரச்சனையாகிவிடுகிறது. ஒரு பெண் எப்போது முழுமை அடைகிறார் என்றால் அது அவரின் தாய்மையின் போது தான். தாய்மை உணர்வைத் தாண்டி இவ்வுலகில் பரிசுத்தமான உறவு எதுவும் இல்லை என்று சொல்லக்கூடிய அளவுக்கு தாய்மைக்கு பெருமை உண்டு.

    ஒவ்வொரு முறையும் குழந்தைப்பிறக்கும் பொழுதும் அந்த பெண் மறுஜென்மம் அடைகிறார். தாய் மற்றும் குழந்தைக்கு நடுவே நாமும் ஒரு பகுதியாக இருக்கிறோம் என்பதை எண்ணும் போது மனதிற்கு மிகவும் மகிழச்சியாக இருக்கும். அந்தக்குடும்பம் மற்றும் அந்தக் குழந்தை காலம் முழுவதும் சொல்லிக் கொள்ளும் இந்த மருத்துவமனையில் தான் பிறந்தேன் என்று இந்த மருத்துவர் தான் நம் பிறக்கும் போது உடன் இருந்தார்கள் என்று சொல்லிக் கொள்ளும். இது போன்ற இன்னும் எத்தனையோ சிறப்புகள் மகப்பேறு மருத்துவத்தில் இருக்கிறது.

    கே: ரத்னா மருத்துவமனை உதயமானது பற்றிச் சொல்லுங்கள்?

    நான் படித்த முடித்து சில ஆண்டுகள் மருத்துவப் பயிற்சி மேற்கொண்டிருந்தேன். அப்போது என்னைப் பார்க்க வரும் நிறைய பெண்களின் ஏமாற்றமான எதிர்பார்ப்பு திருமணம் ஆகி இத்தனை ஆண்டுகள் ஆகிறது எங்களுக்கு குழந்தையில்லை என்பது தான். அப்போது  தான்  என் மனதில் உதயமாயின, நாம் ஏன் முழுவதுமாக ஒரு மகப்பேறு சம்மந்தமான மருத்துவம் கொடுக்ககூடாது என்று. இதனால் இதை மென்மேலும் தெரிந்து கொள்ள நினைத்தேன். இதனால் இந்திய முழுவதும்  இத்துறை சார்ந்த தேடுதலை தீவிர படுத்தினேன். பல பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டேன்.

    கேரளாவில் Fellowship in Reproduction என்னும் துறையை ஒரு ஆண்டு படித்தேன். மேலும் ஜெர்மனியில் கீல் யுனிவர்சிட்டியில் Diploma in Reproductive medicine முடித்தேன். இங்கெல்லாம் படித்த அனுபவம் என்னை மிகவும் வலிமைபடுத்தியது. எதுவும் சாதாரணமாக தொடங்குவதில் எனக்கு ஒரு போதும் உடன்பாடு இருக்காது. ஒன்றை தொடங்குகிறோம் என்றால் அது சார்ந்த அத்துனை தேவைகளையும் நம்மால் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்பதால் அனைத்து உபகரணங்களுடன் தொடங்கியது தான் இந்த ரத்னா மருத்துவனை.

    கே: குழந்தையில்லா தம்பதியினருக்கு டெஸ்ட்டியூப் பேபி முறை இறுதி தீர்வா?

    தற்போது சூழலில் மக்களின் மனநிலை எப்படி மாறியுள்ளது என்றால், திருமணம் முடிந்து ஒரு ஆண்டுகள் ஆனவுடன் குழந்தையில்லை என்றால் அது  டெஸ்ட்டியூப் பேபி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று தவறான புரிதல்கள் இருக்கிறது.

    திருமணம் ஆகி ஒரே ஆண்டில் குழந்தைப் பிறந்தவர்கள் இருக்கிறார்கள். இரண்டு  மூன்று ஆண்டுகளும் ஆகலாம். சிலருக்கு இரண்டு மூன்று ஆண்டுகள் குழந்தை இல்லை என்றதும் எங்களை அணுகுவார்கள். அவர்களை சோதித்து பார்த்து அவர்களின் உடலின் சாதாரண பிரச்சனைகள் தான் இருக்கும், மருந்து மாத்திரை மூலமே சரி செய்து விடலாம். மேலும் சிலர் விழிப்புணர்வு இன்றி இருப்பார்கள், அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுப்பதன் மூலமே அவர்கள் கருத்தரித்திருக்கிறார்கள். இப்படி நிறைய தம்பதியினர்கள் நம் மருத்துவமனையில் கருவுற்று இருக்கின்றனர். டெஸ்ட்டியூப் பேபி சிகிச்சை அனைவருக்கும் பொதுவான தீர்வல்ல.

    கே: நம் முன்னோர்களின் காலத்தில் இயற்கையாகவே கருதரித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது, ஆனால் தற்போது அந்த நிலை மாறியுள்ளதே அது பற்றி சொல்லுங்கள்?

    உலகம் முழுவதும் இந்த நிலை மாறியுள்ளதாக சில ஆய்வுத்தகவல்கள் நம்மை எச்சரிக்கிறது. இதற்கு முக்கிய காரணங்கள் காலம் தாழ்த்தி திருமணம் செய்வது உணவுப் பழக்கங்கள், வேலைபளு ஆகியவை.

    நம் முன்னோர்கள்  சரியான வயதில் திருமணம் செய்தார்கள், சரியான வயதில் குழந்தைகள் பெற்றெடுத்தார்கள். சில குடும்பத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பதைக் கூட பார்த்திருக்கிறோம். அப்போது தேவைகள் குறைவாக இருந்தது, குறுகிய வருமானம் இருந்தாலே குடும்பத்தை நடத்திக் கொள்ள முடியும் என்ற நிலை இருந்தது.

    ஆனால் தற்போது அப்படியில்லை. பட்டங்கள், பணிகள்,சேமிப்புகள் என தங்கள் தேவைகளை பூர்த்தி செய்த பின்னர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்குள் அவர்களுக்கு வயது ஆகிவிடுகிறது. திருமணம் ஆனப்பின்னரும் அவர்கள் உடனே குழந்தைப் பெற்றுக் கொள்வதில்லை, அதற்கும் வருடங்களைத் தள்ளிப் போடுகிறார்கள்.

    ஆண், பெண் இருவரும்  வேலைக்கு போகிறார்கள், அவர்கள் வீட்டிற்கு வருவதற்கு கால தாமதம் ஆகிவிடும், வீட்டில் சமைப்பதில்லை, இதனால் கடையிலிருந்து துரித உணவுகள் வாங்கி வந்து உண்கிறார்கள். இதனால் ஆண், பெண் இருவருக்கும் உடல் பருமன் ஏற்படுகிறது, பெண்களுக்கு சரியான மாதவிடாய் ஏற்படுவதில்லை.  வேலை செய்யும் இடத்தில் மனஅழுத்தம் போன்றவை குழந்தையின்மைக்கு பெரும் காரணமாக இருக்கிறது.

    கே:  டெஸ்ட்டியூப் பேபி செய்யப்படுவதற்கான காரணம்?

    டெஸ்ட்டியூப் பேபி முறைக்கு போக வேண்டும் என்றால் அதற்கான காரணங்களை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஆண்களுக்கு அணுக்கள் மிக குறைவாக அல்லது விந்தணு வெளிப்படாமல் போனால்.

    பெண்களுக்கு கருமுட்டை உருவாகாமல் இருந்தால். வயது கூடும் போது பெண்களுக்கு கருமுட்டையின் தன்மை குறைய தொடங்கும். அப்போது முட்டை தானம் பெற்று டெஸ்ட்டியூப் பேபி செய்யப்படும்.

    கருக் குழாயில் அடைப்பு இருத்தல் போன்ற காரணங்களால் டெஸ்ட்டியூப் பேபி செய்யப்படுகிறது.

    கே: திருமணம் ஆன எல்லோராலும் தாய்மை நிலை அடைய முடியுமா?

    இது தான் எங்களின் தளராத முயற்சி. எல்லோரும் தாய்மை நிலையை அடைய வேண்டும் என்பது தான் எங்களின் நோக்கமும் குறிக்கோளும். அதனால் எங்கள் மருத்துவமனையில் இத்துறை சார்ந்த அதிநவீன இயந்திரங்கள், மருத்துவ உபகரணங்கள் எல்லாம் வைத்திருக்கிறோம்.

    எல்லோருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை கொடுப்பதில்லை. ஒவ்வொரு தம்பதியனரும் பல விதமான பிரச்சனைகளில் வருவார்கள், அவர்களின் பிரச்சனையை அறிந்து அவர்களுக்கு ஏற்றார் போல் அதை சரி செய்ய வேண்டும்.

    கர்ப்பப்பையில் இரத்த கசிவு ஏற்படும், இவ்வாறு இருப்பவர்கள் கர்ப்பம் தரிப்பது மிகவும் கடினம், அவ்வாறு தரித்தாலும் கரு கலையும் சூழல் எற்பட்டுவிடும். அப்படிப்பட்டவர்கள் வரும் போதுகூட அவர்களின் உடலை அறிந்து அவர்களுக்கு சிகிச்சை அளித்து குழந்தைப்பேற்றை உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம்.[hide]

    கே: பொதுவாக டெஸ்ட்டியூப் பேபியின் மூலம் பிறக்கும் குழந்தைகள் சுகப்பிரசவமாகப் பிறப்பதில்லையே அதற்கான காரணம் என்ன?

    கிடைக்காத ஒரு பொக்கிஷம் கிடைக்கப் போகிறது என்பதால் இயற்கையாய் கருத்தரிப்பவர்களை விட அதிக அக்கரையாளர்களாக இருப்பார்கள்.

    டெஸ்ட்டியூப் பேபியின் மூலம் கருத்தரிப்பவர்கள் பொதுவாக ஓய்விலேயே இருப்பார்கள். அவ்வாறு இருக்கும் போது உடல் அசைவின்றி அமர்ந்தே படுத்துக்கொண்டோ இருப்பார்கள். அவர்களுக்குள் ஒரு வித பயஉணர்வு இருக்கும். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கருத்தரித்திருக்கிறோம் ஏதேனும் செய்து எதாவது ஆகிவிடும் என்று என்று நினைப்பதால் தான் இது போன்ற பிரச்சனைகள்.

    நாங்கள் நிறைய உடல் சார்ந்த பயிற்சிகள் கொடுக்கிறோம், ஆனாலும் அவர்கள் அதற்கு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. மனதளவிலும் அவர்கள் தயார்நிலையில் இருப்பதில்லை. அதனால் தான் சுகப்பிரசவத்தில் குழந்தையைப் பெற்றெடுக்க முடியவில்லை.

    கே: உங்களின் மருத்தவப் பயணத்தில் உங்களால் மறக்க முடியாத நிகழ்வு பற்றி?

    நான் பார்க்கும் ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு விதத்தில் மறக்க முடியாதவர்களாக தான் இருக்கிறார்கள். குறிப்பிட்டு சொல்ல ஒரு சிலவற்றைக் கூறலாம்.

    ஒரு ஐம்பது வயதுடைய மாதவிடாய் நின்று போன பெண் ஒருவர் எங்களிடம் டெஸ்ட்டியூப் பேபி மூலம் கருத்தரித்திருந்தார், அவர் மிகவும் கிராம பின்னணியை உடையவர், படிக்காதவரும் கூட, அவர்களுக்கு ஒவ்வொன்றையும் புரிய வைத்து, விழிப்புணர்வு கொடுத்து சரியாக கையாண்டு அவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்து அவர்கள் கையில் கொடுத்தோம்.

    மாதவிலக்கு ஆன பின்பும் கருத்தரித்து ஆரோக்கியமான பத்து மாத குழந்தையை பெற்று எடுத்த அவரின் கண்ணீர் துளிகளை என்னால் என்றும் மறக்க முடியாது.

    அது போலவே பிறப்பிலே இரட்டை கர்ப்பபை இருந்த ஒரு பெண் பல இடங்களில் சிகிச்சை செய்தும் தனக்கான பிரச்சனை என்னவென்று தெரியாமல் எங்களை நாடி வந்தார்கள். இரண்டு கருக்குழாயிலும் அடைப்பு இருந்தது. இது மிகவும் சவாலான விஷயம். அவர்களை பரிசோதித்து, இரண்டு கர்ப்பபையை கண்டறிந்து ஒன்றாக்கி, கருக்குழாய் அடைப்பை நீக்கி இயற்கையான முறையில் சிகிச்சை அளித்து அவர்களுக்கும் ஆரோக்கியமான குழந்தைப் பிறந்தது. இது போன்ற நிகழ்வுகள் மறக்கமுடியாதவை. இன்னும் பல.

    கே: நகரப் பகுதியில் தொடங்குவதை விட காரைக்குடி போன்ற டவுண் பகுதியில் தொடங்கியதன் காரணம் என்ன?

    செட்டிநாடு என்றாலே உணவு பாரம்பரியமிக்க ஊர் என்பது அனைவரும் அறிந்ததே.  அது போல எங்கள் மருத்துவமனையும் இந்த பகுதியில் பெயரெடுக்க வேண்டும். என்னுடைய ஒரே நோக்கம் ஏழை எளிய மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பது தான். அவர்களுக்கு இந்த சிகிச்சை எட்டாக்கனியாக இருந்துள்ளது, அதை மாற்றி அவர்களும் குழந்தை செல்வம் பெற்று பயனடைய வேண்டும் என்பது தான்.

    ஏதேனும் பிரச்சனை என்றால் நகரப் பகுதிக்கு செல்லும் சூழலில் இன்று நகரத்தில் இருப்பவர்கள் கூட எங்களை நாடி வருகிறார்கள் அதற்கெல்லாம் காரணம் எங்களின் சிகிச்சை முறையும் அணுகுமுறையும் தான்.

    மதுரை, திருச்சி  போன்ற நகரங்களில் இருந்து நிறைய பேர் வருகிறார்கள். அது மட்டுமின்றி துபாய், அந்தமான், சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்தும் வந்து எங்களிடம் சிகிச்சை பெற்று குழந்தைப்பேறுடன் மகிழ்ச்சியாக செல்கின்றனர்.

    கே: உங்கள் மருத்துவமனையின் தனித்தன்மைகள் பற்றி?

    குழந்தையின்மை பிரச்சனைக்கு வருபவர்கள் அதிகபடியான மன அழுத்ததில் இருப்பார்கள். அவர்களின் பிரச்சனைகளை நன்றாக கேட்டறிவோம். கேட்டறிந்து உடன் நேரடியாக மருத்துவம் செய்வதில்லை. அவர்களுக்கு புரியும் படி கவுன்சிலிங் கொடுப்போம், கவுன்சலிங் கொடுக்கும் போது அவர்களுக்கு கொடுக்கப்படும் மருத்துவம் பற்றி நன்றாகப் புரிய வைப்போம்.

    ஆண், பெண் என தனித்தனியே பிரச்சனைகள் கேட்டறிந்து அவர்களின் உடல் தன்மைக்கு ஏற்றவாறு சிகிச்சை அளிக்கப்படும்.

    எங்கள் மருத்துவமனையில் கட்டணம் மிகவும் குறைவு, எல்லாத் தரப்பு மக்களும் பயன்படக்கூடிய அளவில் தான் கட்டணங்கள் வாங்கப்படுகிறது.  இங்கு அதிநவீன ICSI- IMSI, PICSI செய்யப்படுகிறது

    ஆண்களுக்கு விந்து வெளிப்படாத தன்மையில் (OBSTRUCTIVE AZOOSPERMIA) இருப்பவர்களின் உடலில் ஊசியின் மூலம் உயிருள்ள விந்தணுக்களை (TESA, PESA) எடுத்து அதன் மூலமே அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. Donor விருப்பம் இல்லாதவர்கள் இந்த நவீன சிகிச்சையில் குழந்தைப் பெற்றுக் கொள்ள வாய்ப்புள்ளது.

    All in one Roof குழந்தையின்மை பிரச்சனைக்காக வரும் தம்பதியருக்கு தேவையான அனைத்து சிகிச்சை வசதிகளும் நம் மருத்துவமனையில் உள்ளது.

    கே: கர்ப்ப காலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி?

    கர்ப்பகால பெண்கள் எப்போதும் மகிழ்ச்சியான மனநிலையில்  இருக்க வேண்டும். ஆரோக்கியமான  உடற்பயிற்சி, சத்தான உணவுப் பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும்.

    துரித உணவுகளை முழுவதுமாக தவிர்த்திடுதல் நல்லது.

    மருத்துவர் கூறும் அறிவுரைகளை பின்பற்றி சுகமாக கர்ப்பக் காலத்தில் மகிழச்சியுடன் இருக்கலாம்.

    கே: குடும்பத்தினரிடையே நேர செலவழிப்பு என்பது எப்படி இருக்கிறது?

    என்னுடைய கணவர் டாக்டர் அருணாச்சலம் அவர்கள்.  அவர் எலும்பு முறிவு அறுவை சிகிச்சையாளராக இருக்கிறார், என்னுடைய வெற்றிக்கு முதுகெழும்பாகவும், உந்து சக்தியாகவும் இருந்து செயல்படுகிறார். மருத்துவப் பணியைப் பற்றி நன்கு அறிந்தவர். எனது இந்தப் பயணத்திற்கு முழு உதவியும் தூண்டுகோலாகவும் இருப்பவர். நேரத்தை நாங்கள் சரியாகப் புரிந்து கொண்டு இருக்கிறோம். எனக்கு ஒரு மகள் திவ்யதர்ஷினி பள்ளிப்படித்து வருகிறார். இவர் எங்கள் வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். எங்களை மிக நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறார். எங்கள் பணியில் நான் முழுமையாக ஈடுபட நன்முறையில் ஒத்துழைப்பு கொடுத்து, என் சிகிச்சையின் வெற்றியில் பிறக்கும் அனைத்து குழந்தைகளையும் கண்டு மிக்க மகிழ்ச்சி அடைந்து நன்கு ஊக்குவிப்பார்.

    நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்பார்கள், அது எங்கள் குடும்பத்திற்கு மிகப் பொருத்தமாக இருக்கும். திருமணமாகி குழந்தைப் பிறந்தவுடன் தான் என் மேற்படிப்புகளை தொடர்ந்தேன்.  இதற்கு பெரிதும் காரணமாய் இருந்தவர்கள், என் பெற்றோர் மற்றும் என் கணவர், கணவரின் பெற்றோர் என அனைவரின் ஒத்துழைப்பும், ஊக்கமும், புரிதல் தன்மையும் தான் என்னை இன்று வரை இத்துறையில் நீண்ட பயணம் மேற்கொள்ள உதவியது.

    மருத்துவர் என்றாலே நேர செலவழிப்பு என்பது மருத்துவமனையில் தான் இருக்கும். என்னை பொறுத்தவரையும் அப்படித்தான் நான் எப்போதும் மருத்துவமனை என்றே இருப்பேன்.

    கே: மருத்துவமனை தொடங்கிய தன் நோக்கம் நிறைவேறி விட்டதாக நினைக்கிறீர்களா?

    மருத்துவசேவை என்பது ஒரு தொடர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கவே முடியாது. ஒவ்வொரு சிகிச்சையும் ஒரு வெற்றி தான். அந்த வெற்றி அதோடு நிற்பதில்லை. புதிய புதிய தேடுதலை நோக்கி நாங்கள் பயணம் செய்து கொண்டே தான் இருக்கிறோம்.

    கருத்தரித்த நாள் முதல் அப்பெண்களை முறையாக கவனித்து, குழந்தை வளர்ச்சியை ஒவ்வொரு மாதமும் பரிசோதித்து, அக்குழந்தைகளை முழுமையாகப் பாதுகாத்து அவர்களின் பெற்றோர்களின் கையில் குழந்தையை கொடுக்கும் பொழுது அவர்கள் அடையும் ஆனந்தத்தை வார்த்தையால் சொல்லி விட முடியாது.

    கே: எதிர்காலத்திட்டம் பற்றி?

    எந்த வேலையாக இருந்தாலும் அதில் வெற்றி தோல்வி என்பது இயல்பான ஒன்று தான் யாரும் தோல்வியை தேடி வாங்கிக் கொள்வதில்லை.

    வெற்றிக்கு நேர்மறை தோல்வி, மருத்துவத் துறையிலும் இது இயல்பு தான் என்றாலும் தோல்வி சதவீதத்திலிருந்து வெற்றி சதவீதத்தை அதிகரிக்க வேண்டும்.

    இதுவரை 500 க்கும் மேற்பட்ட டெஸ்ட்டியூப் பேபி சிகிச்சை கொடுத்திருக்கிறோம். அதில் 75 சதவீதம் வெற்றியில் முடிந்திருக்கிறது. மேலும் இதை எதிர்காலத்தில் அதிகரிக்க வேண்டும்.

    வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் அனைத்து சிகிச்சை முறைகளும் இங்கு வந்து விட்டது.

    நம் துறை சார்ந்த புதிய புதிய கண்டுபிடிப்புகளை எல்லாம் நம் மக்களுக்கு கொடுக்க வேண்டும்.

    எல்லோரும் தாய்மை நிலையை அடைய

    எங்களால் ஆன முயற்சியை மகிழ்ச்சியாய் கொடுப்போம்…

    நேர்காணல்: விக்ரன் ஜெயராமன்[/hide]

    இந்த இதழை மேலும்

    தன்னம்பிக்கை மேடை

    நேயர் கேள்வி…?

    NEET ஆள்மாறாட்டம் குறித்து தங்களின் கருத்தைக் கூறவும்?

    ஜெயபாலன்,

    புதுக்கோட்டை.

    ரயில் டிக்கட் பரிசோதகர் (டி.டி.இ) ஒருவர் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் பல மாதங்களாகப் பணியாற்றுகிறார். இவரது நடவடிக்கை மீது ஒரு ரயில்வே காவலருக்கு சந்தேகம் வருகிறது. ஏனென்றால் இவர் பிளாட்பாரத்தில் மட்டும் நின்று கொண்டிருக்கிறார், ரயிலில் ஏறி பயணிப்பதில்லை. பிடித்து விசாரித்தால் இவர் உண்மையான டிக்கெட் பரிசோதகர் இல்லை, ஒரு போலி ரயில் டிக்கட் பரிசோதகர், ஆள்மாறாட்டம் செய்து சில அப்பாவி பயணிகளிடம் அபராதக் கட்டணம் வசூல் செய்து சில ஆயிரம் ரூபாய் தினமும் சம்பாதித்திருக்கிறான். இந்த 26 வயது வேலையில்லாப் பட்டதாரி, ரயிலில் டி.டி.இ என்று பொய் கூறி நம்பவைத்து திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்திக் கொண்டிருப்பதும் தெரிய வந்தது.

    ஆள்மாறாட்டம் என்பது மூன்று ஆண்டுகள் சிறை தண்டனைக்குறிய குற்றமாகும். தன்னை இன்னொருவராகக் கூறிக்கொண்டு ஒரு மோசடி செயலை செய்து, அதனால் ஆதாயம் தேடுவதுதான் இந்தக் குற்றத்தின் சாராம்சமாக இருக்கிறது.

    ஆள்மாறாட்டம் அன்றாடம் நடத்தப்படும் குற்றம் என்பதிலும், அது பல விதங்களில் அரங்கேற்றப்படும் குற்றம் என்பதிலும் சந்தேகமில்லை. ஆனால், தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கும் NEET தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் நமக்கு அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியது. நீட் தேர்வு எழுதியது ஒருவர், கல்லூரியில் சேர்ந்து மருத்துவப் படிப்பு படிப்பவர் இன்னொருவர். நுழைவுத் தேர்வே எழுதாமல் மருத்துவம் படித்தவர், பின் ஒரு நாள் பலரின் உயிருடன் அல்லவா விளையாடுவார்? அரும்பாடு பட்டு படித்தப் பிள்ளைகளுக்கு இடம் மறுக்கப்பட்டு, ஒன்றும் படிக்காதவனுக்கு மருத்துவக் கல்லூரியில் இடமா? என்ற கேள்விகள் பொதுமக்களின் மனசாட்சியை உலுக்கியிருக்கிறது, அவர்களை ஆத்திரமடையச் செய்திருக்கிறது.

    இந்த ஆள்மாறாட்ட குற்றத்தை அரங்கேற்றி மருத்துவக் கல்லூரியில் படித்த மூன்று மாணவர்களும் அவர்களது பெற்றோரும் கைது செய்யப்பட்டுள்ளார்கள், இவர்களுக்கும், இவர்களுக்குத் துணையாக இந்த மோசடி நாடகத்தை அரங்கேற்றிய அனைவருக்கும் சரியான தண்டனைகள் கிடைத்துவிடும் என்றும் எதிர்பார்க்கலாம்.

    ஆள்மாறாட்ட குற்றத்தின் மைய தத்துவம், இதில் சிலருக்கு இழப்பும் சிலருக்கு தவறான ஆதாயமும் ஏற்படுவதுதான். ஒருவர் தான் அல்லாத இன்னொருவராகப் பொய்த் தோற்றம் அளித்து ஒரு செயலை செய்ததால் இன்னொருவருக்கு இழப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அதே வேளையில் ஆள்மாறாட்ட குற்றம் புரிந்தவரும் அவர் தரப்பினரும் தவறான லாபம் அடைந்திருக்கிறார்கள். NEET வழக்கில் போட்டித்தேர்வு எழுதிய உண்மையான போட்டியாளர்களுக்குப் பேரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.

    போலி டாக்டர்களும், போலி வழக்கறிஞர்களும், போலி காவலரும், போலி ஆசிரியர்களும் கூட இதே சட்டத்தின்படி தண்டிக்க கூடியவர்கள்தான். இவர்கள் இன்னொரு குறிப்பிட்ட நபரின் பெயரில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை தான். இருந்தாலும் ஒரு கற்பனை நபர் என்று அடையாளப்படுத்தியிருப்பதால் இந்த ஆள்மாறாட்ட குற்றம் புரிந்துவிட்டார்கள் என்று பொருளாகிறது. அதாவது கற்பனை மனிதர்களான ஒரு டாக்டர், ஒரு வழக்கறிஞர், ஒரு போலீஸ் அதிகாரி, ஒரு ஆசிரியர் என்று அவர்கள் மற்றவர்களை நம்ப வைத்ததால் ஆள்மாறாட்டம் என்ற குற்றத்தைப் புரிந்துவிட்டனர், எனவே அவர்கள் தண்டனை பெற தகுதியானவர்கள் ஆகிவிட்டனர்.[hide]

    முந்தைய கால தமிழ் திரைப்படத்தில் ஒருவர் மன்னார் அன் கம்பெனியில் வேலை பார்ப்பதாக மனைவியிடம் டூப் விடும் ஒரு காட்சி வரும். அதை கெட்டிக்கார மனைவி கண்டுபிடித்து அவரின் முகத்திரையை கிழித்து விடுவார். அந்த வேடிக்கை காட்சியில் அரங்கமே சிரித்தது. இது ஒரு ஆள்மாறாட்ட குற்றம் என்றாலும் இதில் யாரும் ஏமாற்றப்படவில்லை அல்லது யாருக்கும் பெரிய இழப்பு ஏற்படவில்லை. ஆனால் தன்னை, பெரிய பதவியில் இருப்பவர்களிடம் தொடர்பு உள்ளவர் என்றும், தன்னால் மருத்துவக் கல்லூரி இடம் அல்லது அரசு வேலை அல்லது பணி மாறுதல் வாங்கித் தந்துவிட முடியும் என்றும் பொய்யாகக் கூறிக்கொண்டு ஏமாற்றுபவர்கள் ஏராளம் உண்டு. இவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் காவல் நிலையத்திற்கும், நீதிமன்றங்களுக்கும் பல ஆண்டுகள் நடயாய் நடப்பதைப் பார்க்கிறோம்.

    இது போன்ற ஆள்மாறாட்ட கும்பல்களிடம் கொடுத்த பணம் திருப்பி வருவதும் கடினம், ஏனென்றால் இந்தக் குற்றத்தில் ஈடுபடுபவர்கள் தனிநபர் அல்ல. இவர்கள் ஒரு குழுவாக (Syndicate) செயல்படுவார்கள். கிடைக்கும் பணத்தை உடனே பிரித்துக் கொள்வார்கள். அந்தப் பணத்தை உடனே ஆடம்பர செலவு செய்தும் விடுவார்கள். போலீஸ் விசாரணை துவங்கினால் உடனே தலைமறைவாகி விடுவார்கள், அப்படியே முன்ஜாமீன் வாங்கி விடுவார்கள். இவர்களிடமிருந்து பணம் மீட்டெடுக்க முயன்றால், அவர்களிடம் பணமும் இருக்காது. வாங்கி குவித்தப் பணத்தை வேறு சிலரின் பெயரில் பாதுகாப்பார்கள். இவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வது சுலபமான காரியம் அல்ல, அதற்கு பல ஆண்டுகள் ஆகும். அதற்குள் போலீஸ் அதிகாரிகள் பலர் அந்தக் காவல் நிலையத்திற்கு மாறுதலில் வந்து சென்றிருப்பார்கள்.

    ஆள்மாறாட்டம் செய்து பெரிய இழப்புகள் ஏற்படுத்தும் கொடிய குற்றவாளிகள் பலரும் வலம் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். NEET தேர்வு ஆள்மாறாட்டம் போன்ற செயல்களையும் இந்தக் கொடியவர்கள் செய்வார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் குற்றச்செயல்களில் ஈடுபட வழிவகுத்து தருபவர்கள், இந்தக் குற்ற நிகழ்வால் பாதிக்கப்பட்டு பணத்தை இழந்து தவிப்பவர்கள்தான். அதே வேளையில் NEET தேர்வு ஆள்மாறாட்டம் போன்ற நிகழ்வுகளில் இவர்களும் குற்றத்தில் சமபங்கு உண்டு என்ற நிலை உருவாகிறது.

    குறுக்கு வழியில் இலக்கை அடையவே சிலர் இந்தச் செயலை செய்யத் துணிகிறார்கள், இது போன்ற ஆள்மாறாட்ட கும்பலிடம் சிக்கிக் கொண்டு சீரழிகிறார்கள். எனவே, மோசடி மன்னர்களிடம் சிக்காமலும், அந்த மோசடியில் பங்கு பெறாமலும், அதனால் அவமானப்படாமலும், பெரிய இழப்புக்கு உள்ளாகாமலும் தங்களைத் தாமே காத்துக் கொள்வது சட்டத்தை மதிக்கும் அனைவரின் கடமையாக உள்ளது.

    குடும்பச் சொத்தை அபகரிக்க ஆள்மாறாட்டம் செய்து, ஒருவரின் கையெழுத்தை இன்னொருவர் போடுவது போன்ற குற்ற வழக்குகள் அரவமின்றி சிவில் நீதிமன்றங்களில் நடந்து வருகின்றன. இது அந்தக் குடும்பப் பிரச்சனை என்று சொல்லலாம். இணையதள பாலியல் குற்றவாளி ஒருவன் கல்லூரி மாணவனாகத் தன்னை அறிமுகம் செய்து கொண்டு பள்ளி மாணவியை வீட்டிற்குச் வரச்சொல்லி, அவளது நிர்வாண புகைப்படங்கள் எடுத்து, பின்னர் மிரட்டி பாலியல் குற்றத்தில் ஈடுபடுகிறான். அந்தப் புகைபடங்களை வைத்துக் கொண்டு மாணவியைத் துன்புறுத்துகின்றான். தனிநபர் துன்பம் இந்தக் குற்றத்தில் மேலோங்கி நிற்கிறது. ஆனால் NEET மோசடி போன்ற ஆள்மாறாட்டத்தில் சமுதாயத் தாக்கம் இருக்கிறது. சில ஆள்மாறாட்ட குற்றத்தால் பாதிப்பு தனி நபர்களுக்கு மட்டுமல்ல, சமுதாயத்திற்கே ஏற்படுகிறது. எனவே ஆள்மாறாட்ட குற்றங்கள் தரம் பிரிக்கப்பட்டு புதியதாக வரையறுக் கப்பட்டு, அவற்றிற்க்கான தண்டனைகள் அதிகப்படுத்துவது காலத்தின் கட்டாயமாகி விட்டது. இது குறித்து விவாதங்கள் நடத்துவதும், சட்ட வல்லுநர்கள் ஆய்வதும் பொருத்தமாக இருக்கும்.

    வாய்மையே வெல்லும்;

    வாய்மை மட்டுமே இறுதிவரை வெல்லும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    எனக்கு அல்ல – உங்களுக்காக ஒரு நொடி

    ஒரே ஒரு நொடி இரக்க உணர்வுடன், மனதில் தோன்றிய எண்ணத்தை செயல்படுத்த பரிசீலனை செய்தால் பின்னாளில், ஆயிரம் மன்னிப்புகள் கோருவதை தவிர்த்து விட முடியும்.

    நம்மை சுற்றியுள்ள மற்றவர்களையும் கருத்தில் கொண்டு ஒரு சிறிய அளவில் நேர்மறையாக செயல்படும் போது சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடிகிறது.

    மத்திய-மாநில அரசு  அலுவலகங்களுக்கு செல்கிறோம். அங்கு பிரதானமான இடத்தில் அண்ணல் காந்தி, டாக்டர் அம்பேத்கர் படங்களை பார்க்கிறோம். அவர்கள் சமுதாயத்திற்க்காக தங்கள் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்தவர்கள். அவர்கள் அளவுக்கு மலையளவு இல்லாவிட்டாலும், துளியளவுக்கு நமக்கு மற்றவர்களை பற்றி சிந்திக்கும் எண்ணம் ஏற்பட்டால் அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

    நல்ல வாழ்க்கையின் அடிப்படை என்பதே  சக மனிதர்களை கருத்தில் கொண்டு  சிந்திப்பதே ஆகும். மற்றவர்களின் உணர்வை கருத்தில் கொள்வது மூலமாக, சக மனிதன் மீது நாம் செலுத்தும் பொதுவான மரியாதையும், அக்கறையும்தான் நமது வாழ்வை அர்த்தமுள்ளதாக்குகிறது.

    பல உறவுகள் கசந்து போவதற்கு, பிரிந்து போவதற்கு, அறுந்து போவதற்கு இயற்கையான காரணங்கள் ஏதும் இல்லை. உறவுகள் கொல்லப்படுவதற்கு சுயநலம், புறக்கணிப்பு, கருத்தில் கொள்ளாதது, பொய்கள் மற்றும் ரகசியங்களே காரணமாக உள்ளன.

    மற்றவர்களின் உணர்வுகளையும் கருத்தில் கொள்ள வாழ்வில் கற்றுக்கொள்ள வேண்டும். மிகப்பெரிய தலைவர்களின் முக்கிய அம்சமே மற்றவர்கள் மீதான உண்மையான அக்கறைதான்.

    சித்தார்த்தன் அரண்மனை சுகபோகத்தை விட்டு வெளியேறி சக மனிதர்களின் துன்பத்திற்கு காரணத்தை அறிய முற்பட்ட போதுதான் உலகப்புகழ் பெறுகிறார். புத்தர் அளவுக்கு இல்லாவிட்டாலும் நம்மால் முடிந்த அளவுக்கு சிறு பங்களிப்பையாவது தந்து நமது வாழ்வை அர்த்தமுள்ளதாக்க முனைவதுதான் இக்கட்டுரையின் நோக்கம்.

    பேருந்து பயணத்தில் ஒரு நொடி:

    பேருந்து பயணத்தில் ஒரளவு கூட்டம். வயதான ஒரு முதியவர் இருக்கை கிடைக்காததால் நின்று கொண்டு இருக்கிறார். ஒரு இளைஞர் எழுந்து தன் இருக்கையை அவருக்கு விட்டுக் கொடுத்து தான் நின்றபடியே பயணம் செய்தார். அது மனதை நெகிழச் செய்தது. “அவர் மரியாதைக்குரியவர்” என்று நடத்துநரிடம் நான் தெரிவித்தேன். அதற்கு பதிலளித்த நடத்துநர், யாராவது எப்போதாவது அரிதாக அப்படி எழுந்து முதியவர்களுக்கு, உடல் ஊனமுற்றவர்களுக்கு, கர்ப்பிணி பெண்களுக்கு இடம் தருவார்கள். அப்படி செய்ய முடியாவிட்டாலும் பரவாயில்லை. சரியான சில்லறை கொண்டு வருவது, மகளிரை இடிக்காமல், சீண்டாமல் இருப்பது, தவறாமல் பயணச்சீட்டு எடுப்பது, படிக்கட்டில் பயணிக்காமல் இருந்தால் அதுவே எனக்கு போதும் என்றார்.

    பண்டிகை கொண்டாட்டத்தில் ஒரு நொடி:

    ஒரு கிராமத்தில் ஒரே நேரத்தில் இரண்டு “கிரகபிரவேஷ” நிகழ்ச்சி நடந்தது. மதிய விருந்து முடிந்ததும்  சாப்பாடு மீதமாகி விட்டது. மற்றவருக்கு கொடுக்க மனமில்லையோ என்னவோ, ஒரு வீட்டில் மீத சாப்பாடு வீணாகி மறுநாள் குப்பையில் கொட்டப்பட்டது. மற்றொரு வீட்டில் அந்த வீட்டின் அம்மணி விருந்து முடிந்து மீதம் சாப்பாடு இருக்கிறது. அந்த நகரில் தங்கியிருந்த கட்டிட தொழிலாளிகள், அந்த நகரில் வசித்த அக்கம்பக்கத்தினரிடம் சொல்லி மீதமான  உணவை வீணாக்காமல் பகிர்ந்து கொடுத்தார். நன்றாக நினைவு இருக்கிறது. மீத உணவை வீணாக்காமல் பகிர்ந்து கொடுத்த குடும்ப உறுப்பினர்கள் நன்கு செழிப்புடன் பல மடங்கு முன்னேறி சீராக தற்போது வாழ்கிறார்கள். மீத சாப்பாட்டை மற்றவர்களுக்கு கொடுக்க மனமின்றி தன்னாலும் உண்ண முடியாமல் வீணாக்கியவர்கள் பற்றி விசாரித்தேன்.

    அவர்கள் பின்னாளில் தொழிலில் நஷ்டமாகி, நொடித்து கடன்பட்டு வீட்டை விற்று விட்டு சென்று விட்டதாகவும் கூட்டுக் குடும்பம் பிரிந்து விட்டதாகவும் கேட்டறிந்த போது மனம் வலித்தது. ரம்ஜான் நோம்பில் உள்ள சிறப்பம்சமே மற்றவர்களுடன் பகிர்ந்து உண்ண வேண்டும் என்பதேயாகும். நாம் வயிராற உண்ணுகிறோம். புத்தாடை அணிகிறோம்.

    நம்மை சுற்றியுள்ள, நமக்கு பரிச்சயமான யாரேனும் உணவு, உடையின்றி இருக்கலாம். அவர்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு சிறிய அளவில் கிடைக்கச் செய்தால் அது நமக்கு சாதாரண விஷயம். அவர்களுக்கு அது பெரிய விஷயமாகும்.[hide]

    விடுதியில் ஓரு நொடி:

    ஒரு நகரத்தில் ஓரு பெரிய விடுதி இருந்தது. திரைப்பட படபிடிப்பு குழு  அங்கு தங்கியது. மரியாதை நிமித்தமாக படத்தயாரிப்பாளர் விடுதி உரிமையாளரை சந்தித்து படபிடிப்பு குழுவினருக்கு இரவு நிறுவன சாப்பாடு தயாராகிவிட்டது தாங்களும் சாப்பிட வர வேண்டும் என்று அழைத்தார்.

    அதற்கு விடுதி  உரிமையாளர் “எனக்கு என்ன தர விரும்புகிறிர்களோ அதை இவருக்கு தாருங்கள்” என்று ஏழ்மை நிலையில் இருந்த தனது விடுதி மேலாளரை சுட்டிக்  காட்டினார். சுமார் ஒரு மாத காலத்திற்கு அந்த விடுதியில் தங்கியிருந்த திரைப்பட குழுவினர் அந்த விடுதி மேலாளருக்கு நிறுவன சாப்பாட்டை தவறாமல் வழங்கினர். வீடுகளில் சாப்பாடு மீதமாகி விடும். அதை மறுநாள் காக்கைக்கு வைப்பவர்கள் உள்ளனர். உணவு உடையின்றி தவிப்பவர்களுக்கு நம்மிடம் மிதமிஞ்சி உள்ளதை தேவைபடுபவர்களுக்கு கொடுத்து உதவும் கரங்கள் வணங்கத்தக்கவை.

    மாளிகை வாசத்தில் ஓரு நொடி:

    அண்ணன்-தம்பி இருவர். அண்ணன் சிறுவயதில் படிப்பில் கெட்டி. நல்ல வேலை கிடைத்தது. பெற்றோர் பார்த்து வைத்த பெண்ணை மணந்து கொண்டார். தம்பி அண்ணனுக்கு நேர்-எதிர். நல்ல அறிவாற்றல் இருந்தும் படிப்பில் அலட்சியம். வெளிநாட்டு வேலைக்கு முயற்சித்து தோல்வி. குடும்பத்தை எதிர்த்துக் கொண்டு காதல் திருமணம். பிரிவு. தொழிலில் தொடர் நஷ்டம். அன்றாட வாழ்க்கை தேவைகளுக்கே அல்லல்படும் நிலை. காலம் ஒடியது. அண்ணன் நாலு குடும்பம் வசிக்கத்தக்க அளவில் பெரிய  மாளிகையை கட்டினார். குடிபுகுந்தார். தம்பியோ பழுதடைந்த பழைய வீட்டில் வசிக்கிறார். கழிப்பறை பழுதாகி விட்டது. பழுது பார்க்க முடியாத கஷ்ட நிலை. இதை அறிந்த அண்ணனுக்கு குறைந்த பட்சம் கழிப்பறையை பழுதுநீக்கி தர மனதளவில் எண்ணம் இருந்தது. அவர் மனைவியோ அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. மனைவியை எதிர்த்துக் கொண்டு அண்ணனால் தம்பிக்கு உதவ முடியவில்லை. பணம் இருந்தது. மனம் இல்லை.

    விஷேச நாட்களில் ஒரு நொடி:

    விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம். அலுவலகம் விடுமுறை. நண்பர் தன் குடும்பத்தினரோடு மகிழ்வாக, நிறைவாக கொண்டாடி மகிழ்கிறார். அவரது அலுவலக சக பணியாளரோ, குடும்ப தகராறு காரணமாக மனைவி குழந்தைகளை பிரிந்து தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி கொண்டு உணவகங்களில் சாப்பிட்டு கொண்டு மனவேதனையோடு சோகமாக இருக்கிறார். நண்பரோ, வீட்டில் படையலுக்கு தயாரிக்கப்பட்ட கொழுக்கட்டை, சுண்டல், பொறி கடலை மற்றும் பழ வகைகளை எடுத்துக் கொண்டு சக பணியாளரின் அறைக்கு செல்கிறார். தனிமையில் சோகமாக இருந்த நண்பருக்கு ஆறுதல் சொல்லி எல்லாம் சரியாகி விடும் என்று அவரை  தேற்றி தான் கொண்டு வந்தவைகளை கொடுத்து உண்ணச் செய்தார். பாருங்கள். அடுத்த வருடம் நண்பரின் குடும்பம் ஒன்றாகி விட்டது. மேலும், உறவினர் இல்லங்களில் சுப நிகழ்ச்சிகளுக்கு சென்றால்  தனது  மகிழூந்து ஒட்டுநருக்கு சிற்றுண்டி கொடுத்து கவனிக்குமாறு கேட்டுக் கொள்வார். உடன் பிறந்த தம் சகோதரிகளுக்கு நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தவறாமல் சீர் செய்து வருபவர். நெருங்கிய ஏழை உறவினர் குழந்தைகளுக்கு பள்ளிக்கட்டணம் செலுத்த உதவுபவர். அற்புதமான மனிதர். சின்ன சின்ன விஷயங்கள்தான். அதில் அக்கறை, அன்பு, மனிதநேயம் உள்ளது.

    வாகன பயணங்களில் ஒரு நொடி:

    சாலைகளில் வாகனங்கள் செல்வதைப் பார்க்கலாம். குறைந்த வருமான பிரிவினர் எளிய இரு சக்கர வாகனங்களில் பயணிப்பதை பார்க்கலாம். சற்று விலை உயர்ந்த வாகனங்களில் நடுத்தர பிரிவினரும், மேல்தட்டு வகுப்பினர் காரில் பயணிப்பதை பார்க்கலாம். இதில் இரண்டு விஷயங்களை கவனிக்கலாம். இரு சக்கர வாகனத்தை, மகிழூந்து ஒட்டுபவர்கள் பெரும்பாலும் ஆண்களாகவே இருப்பார்கள். வாகனம் ஒட்டும் பெண்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும். மகிழூந்திலும் இரு சக்கர வாகனங்களிலும் இருக்கைகள் காலியாகவே இருக்கும். இரு சக்கர வாகனத்தில் கூடுதலாக ஒருவர் பயணிக்கலாம். மகிழூந்தில்; நான்கு அல்லது ஜந்து பேர் பயணிக்கலாம். வாகன எரிபொருள் செலவு ஒன்றுதான். சாலையில் யாராவது “லிப்ட்” கேட்டால் நிறுத்தச் சொல்லி கைக்காட்டினால் பெரும்பாலும் நிறுத்தவோ, லிப்ட் தரவோ பலரும் தயங்குவர். காரணம் சக மனிதன் மீதான நம்பகமற்ற பார்வை, திருட்டு பயமாகவும் இருக்கலாம். பேருந்துக்காக காத்திருப்பவர்களில் பெண்கள் அதிகம் இருப்பதை பார்க்கலாம். டாக்டர் அப்துல்கலாம் பெரிய பொறுப்பில் இருந்தவர். பேருந்துக்காக காத்திருக்கும் சக ஊழியர்களை பேருந்து நிறுத்தத்தில் கண்டால் மகிழூந்தை நிறுத்தச் சொல்லி அவர்களை அழைத்துச் செல்லும் பழக்கம் உடையவர். மேன்மையானவர்.

    செய்நன்றிக்கு ஓரு நொடி:

    நமக்கு மிகவும் நெருக்கடியான தருணத்தில் அரிதான உதவியை யாரேனும் நமக்கு செய்திருக்கக் கூடும். நமக்கு மிகப்பெரிய உதவி செய்த நபரே, பின்னாளில் நமக்கு பிடிக்காததை செய்யவும் நேரிடலாம். அதனால் ஏற்பட்ட கோபத்தில் அவருக்கு பதிலுக்கு தீமை செய்ய துடிப்பவர்கள் அற்ப உள்ளம் படைத்த சாதாரணமானவர்கள். நமக்கு செய்த நல்லதை நினைத்துப் பார்த்து எதிர்வினையாற்றாமல் இருப்பவர்கள் மேன்மையானவர்கள்.

    நமக்கு செய்த நுட்று நல்ல விஷயங்களை எளிதில் மறந்து விடுபவர்கள். ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, புரிதல் இன்றி தவறுதலாக செய்த ஓரு கெட்ட விஷயத்தை மறக்காமல் மன்னிக்காமல் பழி வாங்க துடிப்பவர்கள் அற்பமானவர்கள். எல்லோருடனும் நுட்று சதவீதம் ஒத்து போவது இயலாத விஷயம். எல்லோர்க்கும் எல்லோர் மீதும் வருத்தம், கோபம், குற்றச்சாட்டுகள் இருக்கும். அதைக் கடந்துதான் உறவை பேண வேண்டும்.

    நமக்கு பிடித்தமானவர்கள் நன்மை செய்தாலும், தீமை செய்தாலும் அது பெரிதாக தெரியாது. நமக்கு பிடிக்காதவர்கள் நல்ல எண்ணத்தோடு ஓரு செயல் செய்தாலும் அதை நல்லதாக பார்க்கும் மனநிலை பலருக்கும் இருப்பதில்லை.

    மற்றவர்கள் வாழ்வில் நாம் ஏற்படுத்தும் தாக்கத்தால் ஆக்கத்தை உண்டாக்க முடிகிறது. சமுதாயத்தின் துன்பத்தை போக்கிய மாமனிதர்கள் கால எல்லை இன்றி வணங்கப்படுகிறார்கள்.

    நாம் சிக்கலில் சிக்கி தவித்த போது, கஷ்டப்பட்ட போது, நெருக்கடியில் தினறியபோது, உறுதுணையாய் நின்றவர்களை பட்டியலிட்டு நினைவுப்படுத்தி நன்றி செலுத்த வேண்டும். அவர்கள் உறவை துண்டித்துக் கொள்ளக் கூடாது.

    மழை தனக்கு என்ன கிடைக்கும் என்று எதிர்பார்த்து பொழிவதில்லை. மழை பொழிவதால்தான் பூமி செழிக்கிறது. பிரதிபலன் எதிர்பாராமல் செய்பவர்கள் மாமனிதர்கள். மேன்மையானவர்கள். உன்னதமானவர்கள். வணங்கத்தக்கவர்கள்.

    ஓரு நொடி கவனிக்கத் தவறுவதால் அடுப்பில் பால் பொங்கி வழிந்து வீணாகிறது. ஒரு நொடி கவனிக்கத் தவறுவதால், அடுப்பில் உணவு தீய்ந்து போய் அடி பிடிக்கிறது. ஒரு நொடி கவனிக்கத் தவறுவதால் வாகனம் கட்டுப்பாட்டை மீறி விபத்தாகிறது. சாப்பிட்டாயா? என்று அன்புடன், அக்கறையுடன், நம்மை சுற்றியுள்ள உறவுகளிடம் ஓரு நொடி கேட்கத் தவறுவதால் உறவுகள் கசந்து விடுகிறது. நமக்காக அல்ல. நம்மை சுற்றியுள்ள பிறருக்காகவும் ஓரு நொடி அக்கறை செலுத்தும்போது வாழ்க்கை அழகாகிறது. நமக்கு யாருமில்லை என்ற வெறுமை மறைகிறது. தொலைக்காட்சி, மடிக்கணினி, கணினி, அலைபேசி நமது நேரத்தை விழுங்கிக் கொண்டு இருக்கிறது. பெற்ற குழந்தைகளையே மறக்க செய்கிறது.

    நமக்கு தேவையில்லை என்று கருதுவது நம்மை சுற்றி இருப்பவர்களுக்கு தேவைப்படலாம். குறைந்தபட்சம் அதை வீசி எறியாமல் தேவைப்படுபவர்களுக்கு கொடுத்து உதவலாமே.[/hide]

    இந்த இதழை மேலும்

    வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 14

    மழுப்பல்களை நிறுத்துங்கள்

    (Stop the Excuses) 

    இந்த நூலினை ஆங்கிலத்தில் வேய்ன் டையர் (Wayne Dyer) எழுதியிருக்கின்றார். ( இந்நூலை தமிழில் அகிலா இராம சுப்ரமணியன் மொழிபெயர்த்துள்ளார். இதனை கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது) இந்நூல் ஒரு வகையில் மனித வாழ்வில் நிரந்தரமாக இடம்பிடித்துள்ள என்னால் முடியாது நான் எதற்கும் லாயக்கற்றவன் என்பது போன்ற சிந்தனைகளை கேள்விக்குள்ளாக்கி அதிலிருந்து விடுபடுவது எப்படி என்று கூறுகிறது. நாம் ஆழ்மனதில் கொண்டுள்ள தனிப்பட்ட நம்பிக்கைகள் அதாவது நம்முடைய சோகம், ஆரோக்கியமின்மை, ஏழ்மை, துன்பம், அதிர்ஷ்டமின்மை, கோபம், கேட்டது கிடைக்காது போன்ற சிந்தனைகள் ஆகியன நமது மரபுவழிப்பட்டது என்று நம்பி வருகின்றோம். இன்றைய அறிவியல் ஆய்வு 95சதவிகிதம் பேருக்கு மரபியல் காரணங்கள் அவர்களைக் கட்டுப்படுத்துவதில்லை; அவர்களாகவே அதற்குள் கட்டுண்டு போனால் தவிர என்று சொல்வதாக வேய்ன் டையர் குறிப்பிடுகின்றார். என்னால் செய்யமுடியாது என்று ஏதேனும் சாக்குப் போக்குகள் சொல்வதைத்தான் வேயன் டையர் மழுப்பல்கள் (Excuses) என்று கூறுகின்றார். ஒருவர் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமானால் மழுப்பல்களை முதலில் விட்டொழிக்க வேண்டும். மழுப்பல்களை எப்படி விடுவது என்பதை ஆராய்ந்து இந்நூல் ஒரு தத்துவ நோக்கில் சொல்கிறது. இந்த நூலில் சொல்லப்பட்டுள்ள பெரும்பாலான சிந்தனைகள் தாவே எனும் கடவுள் சிந்தனைகளைத் தழுவிச் சொல்லப்பட்டுள்ளது.

    பிரபஞ்ச விதிக்கேற்ப செயல்படுங்கள், மாறுதல் என்பது தானே நடக்கும் என்பது தாவேவின் கொள்கை. தாவ் என்பது கடவுளைக் குறிக்கும். கடவுள் நம்மோடு எப்போதும் இருக்கின்றார். மனித மனம் என்பது கடவுளின் எல்லையே இல்லாத ஆற்றலின் ஒரு பகுதி. இந்தச் சிந்தனை இந்நூல் முழுவதும் இருக்கின்றது.

    நல்லதே செய்யுங்கள் – கெடுதல் செய்யாதீர்கள்

    உங்கள் எண்ணங்களுக்கு ஓர் உயர்ந்த நோக்கத்தை அறிந்துகொள்ளுங்கள்; நல்லதையே செய்யுங்கள், கெடுதல் செய்யாதீர்கள், கெட்ட சிந்தனைகள் உங்களைக் கட்டுப்படுத்தும் செயல்களையே செய்யத் தூண்டும். மாறாக நல்ல சிந்தனைகள் உங்களை மேன்மையுறச் செய்து மகிழ்ச்சியையும், வெற்றியையும் அளிக்கும். நல்லது செய்தல் என்ற இக்கருத்தை வலியுறுத்தும் சீன நாட்டில் வழங்கும் ஒரு கதையை வேய்ன் டையர் தம் நூலில் எடுத்துக்காட்டுகின்றார்.

    பல காலத்திற்கு முன் ஒரு சீன ஞானி இருந்தார். அவர் தினமும் தியானம் செய்ய ஒரு மரத்தில் சாய்ந்துகொள்வதைப் பழக்கமாகக் கொண்டிருந்தார். என்ன புயலடித்தாலும் மரத்தின் ஒரு கிளையில் வசதியாக உட்கார்ந்து கொள்வதால் அவரை பறவைக் கூடு என்று கிராமத்தினர் அழைத்தனர். அம்மரத்தின் வழியாக வேட்டையாடவும், சுள்ளி பொறுக்கவும் பலர் சென்றனர். சிலர் தங்கள் கவலைகளை அந்த ஞானியிடம் பகிர்ந்து கொண்டனர். அவருடைய கருணை மிகுந்த சொற்களால் அம்மக்களிடையே அவர் புகழ்பெற்றார்.

    பக்கத்திலிருந்த கிராமங்களிலும் அவர் புகழ் பரவியது. நெடுந்தூரத்திலிருந்து அவரைப் பார்க்க மக்கள் வந்தனர். அம்மாநிலத்தின் ஆளுநரும் அவரைப் பார்த்து ஆசி பெற நினைத்து, அவரைத் தேடி வந்தபோது பறவைக் கூடு ஒரு மரத்தின் மேல் வசந்தகாலப் பறவைகளின் இனிய ஓசைகளை அனுபவித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தார். ஆளுநர் அவரைப் பார்த்து நான் இந்த மாநிலத்தின் ஆளுநர், நெடுந்தொலைவிலிருந்து உங்களைப் பார்க்க வந்திருக்கிறேன். ஒரு முக்கியமான கேள்வி கேட்கப் போகின்றேன் என்று கூறினார். பின்னர் இதுவரை வந்த ஞானிகளின் முக்கிய போதனை என்ன? புத்தரின் போதனை என்ன? என்று கேட்டார். சற்று நேரம் அங்கு அமைதி நிலவியது. இலைகளின் சலசலப்பு மட்டும் கேட்டது. பறவைக்கூடு சற்று நேரம் கழித்து அளித்த பதில் நல்லதே செய்யுங்கள் – கெடுதல் செய்யாதீர்கள் இதுவே புத்தரின் போதனை. இது மிக எளிதான தத்துவமாகத் தோன்றவே ஆளுநர் எரிச்சலடைந்தார். இதற்காகவா நான் இரண்டு நாட்கள் நடந்தேன். என் மூன்று வயதிலிருந்தே இது எனக்குத் தெரியுமே என்று கூறினார். உடனே அந்த ஞானி கூறினார். ஆம்! மூன்று வயது பாலகர்களுக்குக் கூடத் தெரியும், ஆனால் எண்பது வயது முதியவர் கூட செய்வது கடினம் என்று கூறினார்.

    நல்ல செயல்களைச் செய்ய முடியாமல் போகும்போதும் கதையில் வரும் மூன்று வயதுக் குழந்தையை உங்களுக்குள் தேடுங்கள். அதன் அறிவுரையைக் கேட்கும் வாய்ப்பை உங்களுக்கு நீங்களே அளித்துக் கொள்ளுங்கள் என்கிறார் இந்நூலாசிரியர். 

    பொதுவான சாக்குப்போக்குகள்

    மனித வாழ்க்கையில் பொதுவாக அனைவரும் சொல்லும் சாக்குப் போக்குகளும் அவற்றைத் தவிர்க்க பயில வேண்டிய தீர்மானங்களின் சாராம்சமும் வேய்ன் டையரால் வருமாறு சொல்லப்படுகிறது.

    • ரொம்ப கஷ்டமப்பா : நான் மனம் வைத்தால் என்னால் எதையும் செய்து முடிக்க முடியும்.
    • இதில் ஆபத்துக்கள் இருக்குமே : நான் நானாய் இருப்பதில் எந்த ஆபத்தும் இல்லை. அதனால் பயமில்லை.
    • இதற்கு நெடுங்காலம் ஆகும் : என் இலட்சியத்தை அடையும் பொறுமை எனக்கு உண்டு.
    • நான் அதற்குத் தகுதியானவன் அல்ல : நான் ஒரு தெய்வப் பிறவி. ஆகையால் எல்லாவற்றிற்கும் எனக்குத் தகுதி உண்டு.
    • எனக்குச் சக்தியில்லை: என் வாழ்வைப் பற்றிய ஆர்வம் எனக்கு இருக்கிறது. அது என்னை உற்சாகப்படுத்துகின்றது.
    • நான் ரொம்ப பிஸி : நான் என் சுபாவத்தை ஒட்டி, எனக்குப் பிடித்தவற்றைத் தேர்ந்தெடுத்தால் அவற்றை முடிக்க நேரம் கிடைக்கும்.
    • அது ரொம்பப் பெரிய வேலை : என்னால் என்ன செய்ய முடியுமோ அதை மட்டுமே செய்வேன். சிறுகக் கட்டி பெருக வாழ்வேன்.
    • எனக்கு வயதாகிவிட்டது : உண்மையில் நான் முடிவற்றவன். வயது உடலுக்கே. என் வயதுக்கும் நான் என்ன செய்கிறேன் என்பதற்கும் சம்பந்தம் கிடையாது.

    இவ்வாறு எதை எடுத்தாலும் முடியாது, போதாது, வயதாகிவிட்டது, நேரமில்லை என்று ஏராளமான மழுப்பல்கள் நமக்குள் இருக்கின்றன. இதனை நாம் தவிர்ப்பது என்பது அவ்வளவு எளிதானதல்ல. ஹிட்லர் சொல்வது இங்கு பொருந்தும். நம்மால் முடியாது என்பதில்லை; நாம் செய்வதில்லை என்பதே உண்மை. ஆமாம் எல்லாரிடமும் ஒரு தனித்தன்மை இருக்கின்றது. அதனை வளர்த்தெடுத்தால், நாம் சாக்குப்போக்குகளைச் சொல்லமாட்டோம். உண்மையில் நாம் செய்வதில்லை என்பதுதான் உண்மை.[hide]

    மழுப்பல்களை நிறுத்தும் கொள்கைகள்

    சாக்குப்போக்குகளை எப்படி நிறுத்துவது என்பதை வேய்ன் டையர் ஏழு கருத்தாக்கங்களின் வழி ஏழு கொள்கைகளாக வகுத்துத் தருகின்றார். அவை,

    1.விழிப்புணர்வு, 2. இணைவது, 3. நிகழ்காலம், 4. ஆழ்ந்த சிந்தனை, 5. தன்னார்வம், 6. பேரார்வம், 7. கருணை என்பதாகும். இவைகளைத் தனித்தனியே வருமாறு விளங்கிக்கொள்ளலாம்.

    1. விழிப்புணர்வு

    உணர்வின்றி யோசிப்பதே மனித இனத்தின் மிகப்பெரிய இயலாமை – எகார் டோலே.

    எப்படி மாட்டிக் கொண்டிருக்கின்றீர்கள் என்பதை உணர்வதே அதிலிருந்து மீள்வதற்கு வழி – ப்ரிட்ஸ் பேர்ள்ஸ்.

    இந்த மேற்கோள்களுடன் இந்தக் கொள்கை தொடங்குகின்றது. வெகு காலமாக ஒரே மாதிரி யோசனை செய்வதே நீங்கள் முன்னேறாமல் இருப்பதற்கு (பெரும்பாலும் இதை நீங்கள் உணர்வதே இல்லை) முதல் காரணம், இந்த மனப்பான்மை உங்களை வழிநடத்தாது. ஆகையால் சாக்குப் போக்குகளிலிருந்து வெளிவர முதலில் நீங்கள் இதை உணர்வது அவசியம். பழைய எண்ணங்களிலிருந்து விடுபட உணர்வே உங்கள் வழிகாட்டி என்பதை நினைவில் நிறுத்துங்கள். இதனால் உயர்ந்த ஆதார சக்தியுடன் தொடர்பு கொள்வீர்கள். இந்தப் புதிய அணுகுமுறையால் எல்லா வழிகளும் திறக்கும்.

    1. இணைவது

    மனிதர்கள் தங்களின் அகங்காரங்களை விட்டொழித்து; அவர்களிடம் உள்ள தெய்வீகத்தன்மையை உணரும்போது இந்தப் பிரபஞ்ச சக்தியோடு நாம் இணைகிறோம். அப்பொழுது அகந்தையிலிருந்து பிறக்கும் சாக்குப்போக்குகளுக்கு இடமே இல்லாமல் போய்விடுகின்றது. எல்லா நேரமும் என் எல்லா எண்ணங்களிலும் கடவுளுடன் நான் இணைந்திருக்கின்றேன் என்று உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். என்னால் முடியும் என்பதைத் தொடர்ச்சியாக எவ்வளவு நேரம் முடியுமோ அவ்வளவு நேரம் தியானம் செய்யுங்கள். திரும்பத் திரும்ப இதைச் செய்தால் அதுவே பழக்கமாகி, சாக்குப்போக்குகள் உங்கள் வாழ்விலிருந்து விடைபெறும்.

    1. நிகழ் காலம்

    நிகழ்காலத்தில் வாழுங்கள். நிகழ்காலம் ஒன்றுதான் நிஜம். கடந்த காலத்தை மறந்துவிடுங்கள். இன்று மட்டுமே உண்மை. இப்படிச் சொல்வது எளிது. செயலில் காட்டுவது மிகக் கடினம். நிகழ்காலத்துடன் நம் தொடர்பே நம் வாழ்க்கை. இந்த நிமிடத்தைத் தடங்கலாகப் பார்ப்பதைவிட ஒரு அதிசயமாகப் பாருங்கள். இந்த ஒரு நொடிதான் உனக்கானது என்று செயல்படத் தொடங்குங்கள். ஒவ்வொரு நொடியிலும், நிமிடத்திலும், மணிநேரத்திலும் வாழுங்கள். ஈடில்லாத பல நொடிகளைக் கொண்டதே நிகழ்காலம். கடவுளை நேற்றோ, நாளையோ உணர முடியாது. இந்த நிமிடத்தில்தான் அது முடியும்.

    1. ஆழ்ந்த சிந்தனை

    ஆழ்ந்த சிந்தனையே உயர்நிலைச் செயல் என்று அரிஸ்டாடில் சொல்லுவார். எல்லாப் புதிய கண்டுபிடிப்புக்களும் ஆழ்ந்த சிந்தனையால் பிறந்தவையே. ஆழ்ந்த சிந்தனையே மனித இனத்தின் கலாச்சார, அரசியல் மற்றும் சமூக வளர்ச்சிக்கு அடிகோலுகின்றது. நீங்கள் எதனைக் கவர விரும்புகிறீர்களோ அதில் தீவிர சிந்தனையைச் செலுத்துவதன் மூலம் உங்கள் வாழ்வை நீங்கள் விரும்பும் வண்ணம் அமைத்துக்கொள்ள முடியும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். இதில் தேர்ந்தவர்களானால் அநாவசிய சாக்குப்போக்குகளில் உங்களை வீணடிக்கமாட்டீர்கள். மாறாக எது நடக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களோ அதில் கவனம் செலுத்துவீர்கள்.

    1. தன்னார்வம்

    இதுவரை இருந்த உங்களைப் பற்றிய கருத்தை மாற்றி புதிய கணிப்பிற்குத் தயாராகுங்கள். நான் வளமையைக் கவரும் வல்லமை உள்ளவன். நான் மரியாதைக்குரியவன், அன்பிற்குரியவன், சந்தோஷமாக இருப்பவன் போன்ற எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். முடிவில் நீங்கள் தன்னம்பிக்கை கொண்ட மழுப்பல்களை தவிர்த்து வாழும் வெற்றியாளராக மாறுவீர்கள்.

    1. பேரார்வம்

    ஒரு மனிதன் ஆர்வமாகவும் விழைவோடும் இருக்கும்போது அவனுடன் கடவுள் இணைகின்றார் என்று ஆஷ் சைலஸ் சொல்லுவது போன்று ஒருவரிடம் காணப்படும் பேரார்வம் சாக்குப்போக்குகளைத் தடுக்கின்றது. பேரார்வம் என்பது அளவில்லாத உற்சாகம் என்று பொருள்படும். இது உங்களுக்குள் இருந்துகொண்டு உங்களை ஊக்குவிக்கும் சக்தி. எது சரியோ அதைச் செய்யும்போது பீறிடும் உற்சாக ஊற்று. இதற்காகத்தான் நான் பிறந்தேன் என்று கும்மாளமிட வைப்பது.

    1. கருணை

    கருணை என்பது பிச்சைக்காரருக்குக் காசை விட்டெறிவது அல்ல. பிச்சைக்காரர்களை உருவாக்கும் இந்த சமுதாயத்தின் அடித்தளம் மாறவேண்டும் என்று புரிந்துகொள்வது என்று மார்டின் லூதர் கிங் ஜூனியர் சொல்லுவார். கருணை என்பது தன்னைப் பற்றியே சிந்திப்பதிலிருந்து வௌல்வந்து உலகத்தைப் பற்றிய சிந்தனையை வளர்த்துக்கொள்வது. எப்பொழுதும் எந்தவிதமான சுயநலமும் இன்றி அடுத்தவர் நலனைப் பற்றி நினைப்பீர்களானால் கருணையில் வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். அப்போது சாக்குப்போக்குகள் இல்லாமல் போய்விடும். முடிவில் நீங்கள் கடவுளாகிவிடுவீர்கள்.

    இந்த நூலை நீங்கள் ஆழ்ந்து படித்தால் சாக்குகளே ஓடிவிடுங்கள். இனிமேல் உங்களுக்கு இங்கு இடமில்லை என்று சத்தமாகக் கூவ வேண்டும்போல் உணர்வீர்கள்.

    –   வாசிப்புத் தொடரும்…[/hide]

    இந்த இதழை மேலும்

    உணவை வீணாக்காதீர்….

    வயலின் பச்சை நிற அசைவுகளை அந்தக் கருமேகங்களும் கடன் கேட்கின்றது. மின்னலின் ஒளிக்குச் சிறது இயற்கையின் வண்ணம் பூச, சின்னஞ்சிறு உயிர்களுக்கும் வீரம் பிறக்கிறது இந்த மண்ணின் வலிமையில் வாழ்ந்து.

    வளர்ந்திருக்கும் மரங்களும் உரசி உரசி காதல் செய்கிறது காற்றின் மெல்லிசையால் ; மௌனத்தின் விழியோடு வயலின் மேட்டில் இருகாகங்கள் இயற்கையின் சிறப்புகளை இரசித்துக் கொண்டிருந்தது ; அந்த காகங்கள் மாற்றத்தைத் தேடி, வேறு ஒரு இடம் செல்ல விரும்பியது. அப்போது, கலங்கிய வெண்மையில் நேற்று உலையில் கொதித்த இந்த மண்ணின் அரசியான அரசி பழையசாதமாக வரப்பு வெட்டிய கைகளைத் தொட்ட, வெயிலில் சுருங்கிய வயிற்றில் நிரம்புகிறது.

    காகங்கள் பறந்து சென்று அந்தப் பெரியவரின் அருகில் அமர்ந்தது அவர் பசியில் துடிக்கும் தன் வயிற்றை காக்க வைத்து விட்டு, காணவந்த காகங்களுக்கு உணவு கொடுக்கிறார். அந்த அழகிய காகங்கள் வெண்ணிலவின் ஒளியில் பிறந்தது போல, இவர் யார் இப்படி இருக்கிறார்? இந்த உணவு வேண்டாம் நண்பா ! வேறு இடத்திற்குச் சென்று நல்ல உணவை உண்ணலாம் என்று பறந்து சென்றது.

    தன் இறக்கைகளின் வலிமையை காற்றின் வலியோடு மோதவிட்டது அந்தக் காகங்கள் சிறிது நேரத்தில் பல இடங்கள் கடந்து நகரத்தின் நடுதிசையில் ஒரு வீட்டு மாடியில் அமர்ந்தது.

    எந்த திசையிலும் மனிதனுமில்லை, மரங்களுமில்லை ; மின்னலின் சூட்டைவிட அந்தக் கருகிய கால்களை கருகவைக்கும் மின்கம்பங்களே இருந்தது, அப்போது பசியின் பஞ்சத்தில் காகங்கள் இருந்தன. வாகனத்தின் ஓட்டத்தை விட மனிதன் வேகமாக ஓடுகிறான் ; சூறைக்காற்றின் ஓட்டத்தால் கூட இந்த விஞ்ஞான உலகத்தை நிறுத்த முடியாது போல என்று அந்தக் காகங்கள் சிந்தித்தது.

    அப்போது எதிர்திசையில் பெண்களின் விடுதி ஒன்று இருந்தது. பாதுகாப்பு என்ற வலையத்தில் பெண்களின் அழகு கம்பிகளால் மூடப்பட்டு அந்தக் கம்பிகளுக்குள்ளே கைப்பேசியில் சுதந்திரமான பெண்கள் இருந்தனர்.

    அந்தக் கம்பியின் அருகில் ஒரு பகுதியில் சிறிய நெகிழிக் கூடையில் பலவகையான உணவுகளை கொட்டி வைத்திருக்கிறார்கள். உணவுக்காக பசியில் துடித்த அந்த ஒரு இதயங்கள் மருமுறை வேகமாக துடிக்கிறது. அந்த நாற்றம் பரவும் உணவுகளைக்கின்றி அந்தத் துடிப்பு ருசிக்காக அல்ல, பசிக்காக, ஆனால் ஆனந்தத்தின் வளர்ச்சியில் வேலி போட்டது போல, கம்பிகளால் மூடப்பட்டு இருந்தது.

    அந்தக் கம்பியின் முன் அங்கும் இங்கும் உள்ளே வரமுடியாமல் பறக்கிறது அந்தக் காகங்கள். அந்த விடுதியின் பெண்கள். அதை கண்காட்சி போல் பார்த்துவிட்டு மீண்டும் உணவை கொட்டுகிறார்கள்.

    அந்த ஒரு காகங்களில் ஒரு காகம் என்ன செய்வது நண்பா. நம் பசியால் நாம் முன்பு இருந்த இடத்திற்குச் செல்ல முடியவில்லை ; வேறு எங்கும் உணவு தென்படவில்லை ; உணவு தரக்கூடிய மரங்களை இந்த விஞ்ஞான மனிதர்கள் வளர்க்கவில்லை ; ஓடிக்கொண்டே இருக்கும் இவர்களின் பாதையில் பறவைகளாகிய நாம் தான் பாவப்பட்டவர்களோ? என்றது.

    இரண்டு நாட்கள் கழித்தன. அனைத்து இடங்களையும் சுற்றிவிட்டு தண்ணீரின் தாகம் கூட தயங்கி நிற்கிறது. இந்த அறிவற்ற மனிதர்களிடம் சிறிது நீர்தாருங்கள் என்று கேட்க வேறு வழியின்றி அந்த விடுதிக்கே மீண்டும் சென்றன அந்தக் காகங்கள்.

    உணவின் கூடையையே பார்த்து ஏக்கத்தோடு கலங்கிய நிலையில் அந்தக்காகங்கள் இருந்தன. அங்கு ஒரு பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள் ; நீங்கள் வீணாக்கும் உணவில் சிறிது தாருங்கள். நானும் என் நண்பனும் பசியோடு இருக்கிறோம். அந்த உணவின் பருக்கையில் நாங்கள் உயிர் வாழ முடியம். என்று கரைந்து சொல்கிறது காகங்கள். அந்தக் காகங்களை பார்த்தவாரே அந்தப் பெண்கள் சென்று விட்டனர். பசியின் உச்சத்தில் நண்பா நாம் தவறு செய்துவிட்டோம். இயற்கையின் அழகை அலட்சிய படுத்திவிட்டு வளர்ந்த இந்த விஞ்ஞான உலகை காணவந்தால் நம் நிலைமை இப்படி ஆகிவிட்டதே,  அந்த வயலில் வெயிலோடு போட்டிப்போட்டு நம் மண்ணிடம் ஆசிபெற்று, நிலவின் மடியில் உறங்கிய அந்த உழவனை இல்லை… நமக்கு உணவுகொத்த அந்தக் கடவுளை நாம் காண வேண்டும் இறுதியாக என்று ஒரு காகம் கூற மற்றொரு காகம் மயகத்தின் மறுமொழிகூற முடியாமல் கலங்கி நின்றது.[hide]

    பசியின் பஞ்சத்தில் பலவகையான உணவுகளை தன் கண்களால் கண்டு மயங்கு ஒரு காகம் சாலையில் விழுந்தது. மற்றொரு காகம் அங்கும் இங்கும் பறக்கிறது.

    அந்த விடுதியின் எதிர்வீட்டில் ஒரு சின்ன பெண்குழந்தை அந்தக் காகத்தை தொட்டு காக்க முயன்றது. அந்த விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் வந்து அந்தக் குழந்தைக்கு உதவி செய்தார். ஆனால் அந்தக் காலம் இறந்து விட்டது. அது நோயால் இறந்துவிட்டது என்று நினைத்தனர்.

    இறுதியில் தன் நண்பனின் இறப்பை தன் கண்களால் கண்டுவிட்டு, மற்றொரு காகத்தின் இறப்பையும் மறுநாள் இயற்கை கண்டது.

    வருடங்கள் கடந்த பிறகு தான் அந்த சின்ன பெண் குழந்தைக்குத் தெரிந்தது. அந்தக் காகம் நோயால் சாகவில்லை. பசியால் இறந்தது என்று, எனென்றால் அந்தக் காகங்களை கொன்ற இந்த நகரத்தின் வளர்ச்சி, இப்போது இந்த மனிதர்களை நோக்கி வந்துவிட்டது.

    காகங்களுக்கு உணவு கொடுத்த உழவர் கடனால் கல்லறை சென்றார். இயற்கையின் அன்பில் தவிழ்ந்து ஏங்கிய பல உயிர்கள்வ விஞ்ஞானத்திற்கு இறையாகி, இயற்கையை தவிக்க விட்டனர்.

    வளங்களை அழித்துவிட்டு விஞ்ஞானத்தில் விண்ணைத்தொட்டு உணவுகளையும், காற்றையும் தண்ணீரையும் இழந்து விட்டனர் மனிதர்கள்.

    ஒரு நொல்லில் பல வேர்வைத்துளிகள் நிறைந்திருக்கிறது. அதை சேமித்து உண்டால் இயற்கையின் அன்பில் மனிதன் பெருங்கடலாய் இருப்பான். மற்ற உயிர்களுக்கும் கடவுளாய் இருப்பான் என்பதையும் ;விடுதிகளில் வீணாகும் உணவுகளை பல உயிர்களின் ஆயுள் உள்ளது என்பதையும் அந்தப் பெண் குழந்தை பல வருடங்களுக்குப் பிறகு இந்தக் கட்டுரையின் மூலம் தெரிவிக்கிறேன்.

    நண்பர்களே ஆனால் ஒன்று உணர்வோம். அந்த காகம் தான் இந்த உலகில் இறுதியான காகத்தில் உயிராய் இருந்திருந்தால் என்ன செய்வது சிந்தியுங்கள்.

    உணவின் விழியில் பல உயிர்களின் பசி இருக்கிறது… உணவை வீணாக்காதீர்…[/hide]

    இந்த இதழை மேலும்

    சிசு பராமரிப்பு

    தடுப்பூசி

    அனைத்து குழந்தைகளுக்கும், பிறந்தவுடன், மருத்துவமனையிருந்து வீட்டிற்குச் செல்வதற்கு முன் அரசு விதிமுறையின்படி பிசிஜி தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும். மஞ்சள் காமாலை நோய்க்கானத் தடுப்பூசியைக் குழந்தை பிறந்தவுடன் போடுவதால், தாயிடமிருந்து குழந்தைக்கு மஞ்சள்காமாலை நோய் பரவுவதைத் தடுக்கலாம்.

    குழந்தையைக் குளிப்பாட்டுதல்

    தொற்றுநோயைத் தடுக்கவும், உடன் வெப்பநிலை குறைவதைத் தவிர்க்கவும் மருத்துவமனையில் வைத்துக் குழந்தையைக் குளிப்பாட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.

    தூங்கும் முறை

    குழந்தைக்கு பால் கொடுத்தபின் நேராக படுக்க வைக்க வேண்டும். குப்புற படுக்கவைப்பதால் எதிர்பாராத இறப்பு (SIDS) ஏற்பட வாய்ப்புண்டு.

    பாரம்பரிய பழக்கவழக்கங்கள்

    பலவிதமான பாரம்பரிய பழக்கவழக்க முறைகள் இந்திய கலாச்சாரத்தில் பின்பற்றப்படுகிறது. அதில் சில பாரம்பரிய பழக்கவழக்கங்களான எண்ணெய் தேய்த்தல், கண்ணுக்கு மை பூசுதல், காதுக்குள் எண்ணெய் ஊற்றுதல், மாட்டு சாணத்தைத் தொப்புள் கொடியில் பூசுதல், போன்றவைகளைத் தடுக்க வேண்டும்.

    குழந்தையை வீட்டிற்கு அனுப்பும் முன் கவனிக்க வேண்டியவை

    குழந்தை பிறந்த 72-96 மணிக்குள் குழந்தையை வீட்டிற்கு அனுப்பலாம். ஆனால் குழந்தை கீழ்க்கண்ட விதிமுறைக்குள் அடங்கியிருக்க வேண்டும். அவை,

    • குழந்தைக்கு எந்த விதமான நோய்நொடிகளும் இருக்க கூடாது.
    • குழந்தைக்குத் தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும்.
    • தேவைக்கேற்ப தாய்ப்பால் கொடுக்க வேண்டும். இதை எவ்வாறு அறிவது என்றால் குழந்தை பால்குடித்ததும் 2 – 3 மணி நேரம் நன்றாக தூங்க வேண்டும். குழந்தையின் எடை அதிகரிக்கும். குழந்தையின் உடல் எடை குறைவதன் மூலம் குழந்தைக்குத் தாய்ப்பால் சரியாக இல்லை என்பதை அறியலாம்.
    • குழந்தையின் தாய்க்கு எந்த விதமான நோயும் இல்லாமல் இருக்க வேண்டும். அப்போது தான் தாய் குழந்தையை நன்றாகப் பராமரிக்க முடியும்.

    சீக்கிரமாக வீட்டிற்கு அனுப்புதல்

    பொதுவாக, தாய்க்கு முதல் குழந்தை என்றால் 72 மணி நேரத்திற்குள் வீட்டிற்கு அனுப்பக் கூடாது. மாறாக தாய்க்கு இரண்டாம் மற்றும் மூன்றாம் குழந்தை என்றால் சீக்கிரமாக வீட்டிற்கு அனுப்பலாம்.

    மருத்துவமனையிருந்து வீட்டிற்குச் செல்லும் முன் பின்பற்றவேண்டிய முக்கியமான குறிப்புகள்

    • குழந்தையை வீட்டிற்கு அனுப்புவதற்கு முன் முழுமையாகப் பரிசோதிக்க வேண்டும்.
    • தாய்க்குக் குழந்தையின் உடல்நிலையைப் பற்றிய சந்தேகங்களை அறிந்து கொள்ள முழு உரிமையை அளிக்க வேண்டும்.
    • குழந்தையை வீட்டிற்கு அனுப்புவதற்கு முன்னர் குழந்தையின் உடல் எடையைப் பரிசோதிக்க வேண்டும். உடல் எடை குறைந்திருந்தால் தாய்ப்பால் கொடுப்பதில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா? என்பதை அறிய வேண்டும்.

    நோய் தடுக்கும் முறைகள்

    • குழந்தை பிறந்தவுடன் சீம்பால் கொடுக்க வேண்டும்.
    • குழந்தையைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
    • குழந்தைக்கு உபயோகமாகும் பொருட்களைத் தனியாக வைக்க வேண்டும். மற்றவர்கள் உபயோகிக்க கூடாது.
    • குழந்தையைக் கையாளுபவர்கள் குழந்தையைத் தொடுவதற்கு முன் கை நகங்களை வெட்டி அழுக்கில்லாமல் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். சோப்பு போட்டு கைகளை நன்றாக கழுவி சுத்தமான துணியால் துடைத்திட வேண்டும்.
    • தோல் சம்பந்தமான நோய், வயிற்றுபோக்கு, சளி, இருமல் இருப்பவர்களைக் குழந்தையைத் தொட அனுமதிக்க கூடாது.
    • தாயும் சேயும் தனி அறையில் இருப்பது நல்லது.
    • குடும்பத்தில் விருந்தினர் வருகையைக் குறைப்பது நல்லது.
    • குழந்தையைத் தாயை தவிர மற்றவர்கள் தொடாமல் இருப்பது நல்லது.
    • குழந்தையின் துணிகளைத் தனியாக துவைத்து அலசி, வெயிலில் கயிற்றில் காய வைத்து தனியாக எடுத்து வைக்க வேண்டும்.
    • மலம், சிறுநீர் கழித்த துணிகளைத் தனித்தனியே துவைப்பது நல்லது.[hide]

    கீழ்க்கண்ட அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை உடனே அணுகவும்

    • சிசு தாய்ப்பால் குடிக்காமல் இருத்தல்
    • வலிப்பு நோய்
    • சோம்பலாக இருத்தல்
    • வேகமாக மூச்சு விடுதல்
    • உடன் வெப்பநிலை 37.5 இ-க்கு மேல் இருத்தல்
    • தொடர்ந்து வாந்தி எடுத்தல்
    • காய்ச்சல்
    • தோல் நிறம் மஞ்சள் நிறமாக மாறுதல்.

    வைட்டமின் டி யின் முக்கியத்துவம்

    ஆராய்ச்சிகள் கூறுவது என்னவென்றால் முழுமை யான தாய்ப்பாலுடன்  வைட்டமின் டி 400 யூனிட்ஸ் தினசரி கொடுப்பதால் குழந்தையை வைட்டமின் டி சத்துக்குறைபாட்டில் வரும் நோய்களிலிருந்து பாதுகாக்கலாம்.

    • வைட்டமின் டி குழந்தையின் மூளைவளர்ச்சிக்கு உதவுகிறது.
    • நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.
    • குழந்தையின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கிறது.

    குழந்தை பிறக்கும் காலத்தின் வகைகள்

    • குறைப்பிரசவம் – குழந்தை 37 வாரத்திற்கு குறைவாக பிறத்தல்
    • நிறைமாத பிரசவம் – குழந்தை 37 – 40 வாரத்திற்குள் பிறத்தல்
    • காலம் கடந்து குழந்தை பிறப்பது – குழந்தை 42 வாரத்திற்கு மேல் பிறத்தல்

    குறைப்பிரசவம்  அல்லது முதிராநிலை பிரசவம்

    குறைப்பிரசவம் என்பது குழந்தை 37 வாரத்திற்குக் குறைவாகப் பிறப்பது.

    நிகழ்வுகள்

    அயல்நாடுகளில் 12 சதவீத குழந்தை குறைப் பிரசவத்தில் பிறக்கிறது. தற்போது குறைப்பிரசவத்தின் மூலம் குழந்தை பிறப்பது அதிகரித்து உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[/hide]

    இந்த இதழை மேலும்

    நில்! கவனி !! புறப்படு !!! – 9

    எளிமைப்படுத்துங்கள் ! (பாதை 8)

    வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் நண்பர்களே !

    அனைத்திலும் சிறக்கும் ஆறு லட்சம் குடும்பங்கள் – ஒரு ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்குவதே உங்கள் வண்ணமயமான வாழ்வுக்கு வழி காட்டும் வாழ்வியல் பயிற்சியாளரான  என் லட்சியம்.

    அந்த ஆனந்தக்குடும்பத்தில் உங்களையும் இணைத்துக்கொள்ள – இந்தத்தொடர் ஒரு இணைப்புப்பாலம்.

    எளிமைப்படுத்துங்கள் !

    எளிமை ‘ திறமை ‘ வளமை என்பது அனுபவ சூத்திரம். அதாவது, வளமையான வாழ்வுக்கு திறமையை விட மிகவும் அவசியமானது எளிமையான அணுகுமுறையே.

    அன்றாட நடைமுறையில் நீங்கள் சந்திக்கும் அனைத்து விஷயங்களையும் உள்ளது உள்ளபடியே எடுத்துக்கொள்வது ஆபத்தான ஒரு செயல்.  Cut into Pieces – என்று ஆங்கிலத்தில் சொல்வது போல, உங்களுக்கு கிடைக்கும் அணைத்து அனுபவங்களையும் பிரித்து, பகுத்து எளிமைப்படுத்தும்போது கிடைக்கும் உணர்வு – தெளிவாக இருக்கும்.  தேர்ந்த புரிதல் சிறப்பான முடிவுகளை எடுக்க உதவும் ஒரு கருவி.

    உங்கள் மகன்/மகளின்  குறைந்த மதிப்பெண் என்ற வகுப்பு ஆசிரியரின் புகார் – அப்படியே மலைத்தால் அர்த்தம் இல்லை.  எந்த பாடத்தில், எவ்வளவு குறைவு, காரணம் – புரிந்து கொள்வதிலா அல்லது வெளிப்படுத்துவதிலா? என்ற ஆராய்ச்சி, தவறை திருத்திக்கொள்ள இருக்கும் பல்வேறு சாத்திய கூறுகளின் தேடல், அவற்றில் எதை எல்லாம் நம்மால் நடைமுறையில் செய்ய முடியும், கடைபிடிக்க முடியும் என்ற சுய எதார்த்த மதிப்பீடு, அவற்றை கட்டாயமாக கடைபிடித்தே ஆகவேண்டும் என்ற உறுதி – இப்படி ஒவ்வொரு படிகளையும் எளிமைப்படுத்துவது மட்டுமல்ல அவற்றை நூறு சதவீதம் உண்மையாக செயல்படுத்தும்போது – அவை சரியான திசைகளை தான் காட்டும்.

    பணிச்சுமை இல்லாத தொழிலாளர்களும் இல்லை.  பணிகளை முழுமையாக செய்து வாங்கிய முதலாளிகளும் இல்லை.  தனது முக்கியமான தேவைகளை எளிமைப்படுத்தும்போது இந்த கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

    இந்த கேள்விக்கு மட்டுமல்ல – எந்த கேள்விக்கும் விடை கிடைக்கும்.

    ஆகவே எளிமைப்படுத்துங்கள் !

    அபூர்வ ராகங்கள் எனும் திரைப்படத்தில் கதாநாயகி கூறும் ஒரு வசனம்  என்னுடைய அப்பா யாருக்கு மாமனாரோ அவருடைய மருமகளுக்கு அப்பா என் மகளுக்கு மாமனார்  அப்படியானால் அவங்களுக்கும் எனக்கும் என்ன உறவு? – என்று கேட்பார்.

    இந்த புதிருக்கான விடை தெரிந்தவர்கள் எனக்கு சொல்லலாம்.  ஆனால், என் கேள்வி – இது போன்ற குழப்பங்களுடனே நீங்களும் சென்று, அனைவரையும் உடன் அழைத்து செல்லும் பட்சத்தில் – அது சேரும் இடம் எது என்று தெரிந்த பயணமாக இருக்காது.  உண்மைதானே ?

    ஒரு சுவாரசியமான செய்தி.

    குளியல் Soap தயாரிக்கும் ஒரு நிறுவனத்திற்கு இப்படி ஒரு புகார் வந்தது.  “சென்ற வாரம் நீங்கள் அனுப்பிய பெட்டி ஒன்றில் Soap ஏ இல்லாமல் வெறும் அட்டைபெட்டி மட்டும் இருந்தது.  வாங்கிச்சென்ற அந்த வாடிக்கையாளர்  திரும்பி வந்து மிகவும் கோபமாக பேசிவிட்டார். இது நமது நிறுவனத்தின் நற்பெயருக்கு நல்லதல்ல.  நடவடிக்கை உடனே எடுக்கவும்” – என்று இருந்தது.  முதலாளியின் கவனத்துக்கு அது கொண்டு செல்லப்பட்டது.  Conference Hall ல் அனைத்து பொறுப்பாளர்களும் கலந்து கொண்ட Meetting ஏற்பாடு செய்யப்பட்டது.

    நூறு சதவிகிதம் கவனமாக இருப்பதாக Production Manager சொன்னார்.  தன் துறைக்கும் இந்த சிக்கலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று வாதிட்டார்.  Packing Department ல் நிறைய ஆட்களை நியமித்து Manual Checking செய்யலாம் என்றார் ஒரு Manager.  சம்பளம் அதிகம் செலவாகும் என்று சொல்லி நிராகரித்தார் முதலாளி.  CCTV Camera இருந்தால் Soap தயார் செய்வது முதல் Packing ஆவது வரை Monitor செய்வது – தவறுகளை தவிர்க்கும் என்றார் இன்னொரு Manager.  இதற்கு நிதி நிலை ஒத்துழைக்காது என்றார் முதலாளி.  பலரும் பல யோசனைகளை சொல்லியும் முடிவு காண முடியாத சூழலில் – தேநீர் இடைவேளை நேரத்தில் அலுவலகத்தில் தேநீர் கொண்டு வரும் சிறுவன் “நான் இதற்கு ஒரு உபாயம் சொல்லலாமா ? என்று கேட்டான்.

    மெத்தப் படித்த படிப்பும் பல வருட அனுபவமும் கொண்ட எங்களால் முடியாத ஒரு விஷயம் உன்னால் மட்டும் எப்படி முடியும்?  பேசாமல் தேநீர் கொடுக்கும் வேலையை மட்டும் பார் – என்று அனைவரும் கோபிக்க, சிறுவன் நேராக முதலாளியிடம் சென்று “எளிமையாக” முடிய வேண்டிய ஒன்றுக்கு ஏன் இத்தனை குழப்பம்?  செலவே இல்லாமல் இதற்கு ஒரு வழியை நான் சொல்கிறேன்.  சரியான தீர்வாக உங்கள் மனதுக்கு பட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள்.  இல்லையென்றால் விட்டு விடுங்கள்.  என் மனதில் பட்ட “எளிமையான” யோசனையை நான் சொல்கிறேன்” என்றான்.  முதலாளியும் அனுமதிக்க இப்படி சொன்னான்.

    “தயாரித்த அனைத்து நர்ஹல் களும் தனிப்பெட்டியில் போடப்பட்டு Packing Lock ஆகி Conveyar Belt மூலமாக வரும் இடத்தில் ஒரு பெரிய High Speed Pedastal Fan ஐ வைத்துவிடுங்கள்.  Soap இல்லாத காலி பெட்டியாக இருந்தால் அந்த Fan ன் காற்றின் வேகத்தில் அட்டை பெட்டி பறந்து விடும்.  Soap அதனுள் இருந்தால் பறக்காது.  இதற்கு பெரிய செலவு ஒன்றும் இல்லை.” – என்றான்.  முதலாளிக்கு இந்த யோசனை பிரமாதமாக பட்டது.  சிறுவனை வெகுவாக பாராட்டி – சம்பள உயர்வையும் கொடுத்தார்.[hide]

    “எளிமையான அணுகுமுறை – அருமையான தீர்வு” – இது தான் மந்திரம்.

    வாழ்க்கை பயணத்தில் எளிமையை கடைபிடிக்க எத்தனையோ இடங்கள்.

    அலுவலகத்தில் உங்கள் மேஜையை காகிதங்களின் கிடங்காக வைக்காமல் – எளிமையாக ஒழுங்கு படுத்தி வைக்கும்போது – தேவையான கடிதங்கள் தேடுவதற்கு முன்னாலேயே கிடைக்கும்.  இது காகிதத்துக்கு மட்டுமல்ல – உங்கள் அனைத்து அலுவலக பணிகளுக்கும் சேர்த்தே.

    உங்களது சொத்துக்கள், சேமித்த பணம், உங்கள் முதலீடுகள் – இப்படி அனைத்தும் உங்களுக்குபிறகு யாருக்கு என்ற உயில் – குழப்பம் இல்லாமல் எளிமையாக இருத்தல் – குடும்ப உறவுகளுக்கு ஒரு சுமுகமான சூழலை உருவாக்கும்.

    சின்னச்சின்ன விஷயங்களுக்கும் இந்த எளிமைப்படுத்துதல் சிறப்பே.

    உங்கள் E Mail Inbox ல் உங்களுக்கு தேவைப்படாத Mail களை Delete செய்வது தொடங்கி – அலவலக Report கள் தயார் செய்வது வரை இது பொருந்தும்.

    எதையும் எளிமைப்படுத்தி பார்க்கும் பழக்கம் உங்களுக்கு இயல்பாக இருக்கும் நிலையில் எப்போதுமே உங்களுக்கு பிரச்சினைகளும் இருக்காது – அப்படியே இருந்தாலும், இந்த தன்மை அந்த பிரச்சனைகளுக்கு தீர்வை தெளிவாக உங்களுக்கு தானாகவே தோன்றச் செய்யும்.

    சரி!  எளிமைப்படுத்தும் திறன் மேம்பட்டு இருக்க என்ன செய்ய வேண்டும் ?

    பயிர்ச்சி முறை :

    Step 1: De-clutter Yourself.   சுற்றி இருக்கும் குழப்பம்/அழுத்தம் தரும் மனிதர்கள், கண்டபடி அலைபாயும் உங்கள் மனத்தின் எண்ண ஓட்டம், சிந்திக்கவே விடாத ஆரவாரங்கள் – இவற்றில் இருந்து உங்களை விடுவித்துக்கொண்டு – நல்ல அமைதியான, ஆரோக்கியமான மன சக்தியும் உற்சாகமும் பெறுங்கள்.  முடியாத பட்சத்தில் – அதற்கு முயற்சி செய்யுங்கள்.

    Step 2: “என்னால் இதை சுலபமாக செய்ய முடியும்” என்று உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொள்ளுங்கள் .  எந்த செயல் செய்வதற்கு முன்பும் “இதை என்னால் சுலபமாக செய்து முடிக்க முடியும்” – என்ற எண்ணத்தை கொள்ளுங்கள்.  அது கண்கூடாக நடக்கும் என்றும் நம்புங்கள்.

    (இது மிக மிக முக்கியம் ஏனென்றால் நீங்கள் சுலபமாக முடியும் என்று சொல்லுவதையும் நம்புவதையும் உங்கள் ஆழ் மனது அப்படியே ஏற்றுக்கொண்டு அதனால் உங்கள் செயல்பாடுகளையும் அதை நோக்கியே நகர்த்தும்.   

    Step 3:    உங்களுடைய “PRIME TIME ல் உங்கள் அனைத்து முக்கியமான செயல்பாடுகளும் இருக்கட்டும்.  ஏனென்றால், 24 மணிநேரத்தில் ஒவ்வொரு மனிதர்களுக்கும் அவர்களுக்கான பிரத்தியேக நேரம் (PRIME TIME)  இருக்கிறது என்று உளவியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.  அந்த நேரத்தின் உங்களுடைய மொத்த செயல்பாடுகளும் இயல்பாகவே சிறப்பாகவே இருக்கும். உங்களுக்கான PRIME TIME எது என்று கண்டுபிடித்து (அதற்கான வழிமுறைகளுக்கு என்னை தொடர்பு கொள்ளலாம்) உங்கள் செயல்களை செம்மையாக செய்து வெற்றி கொள்ளுங்கள்.

    Step 4:     தினமும் உங்களுக்கான 1 மணி நேரத்தை ஒதுக்குங்கள்.      ஒரு தனி அறையில் யாருடைய தலையீடும் இல்லாமல், தொந்தரவும் இல்லாமல், தொலைபேசியின் தொல்லையான அழைப்புகளும் இல்லாமல் உங்களுடைய “MUST DO LIST” ல் உள்ள அனைத்து வேலைகளையும் செய்து முடிக்கவும்.

    தினமும் இந்த பயிற்சியை செய்யும்போது – எதையும் எளிமைப்படுத்தும் தன்மை சீக்கிரமே உங்கள் கைகளுக்கு வசப்படும்.

    அது வசப்பட என் வாழ்த்துக்கள்.

    Minutes with Mithran – கேள்விகளால் ஒரு வேள்வி

    1. உங்கள் கண்களால் நீங்கள் பார்த்த மிகச்சிறந்த, அற்புதமான, அதிசயமான, வியக்கத்தக்க பொருள்/விஷயம் என்ன? (உதாரணமாக) பசுமையான வயல்கள், பூனை அணில்களோடு விளையாடுவது, சிறு வயது குழந்தை அனைத்து திருக்குறள் கவிகளையும் ஒப்பிப்பது – இப்படி.
    1. கடைசியாக நீங்கள் எப்போது நன்றி என்று சொன்னீர்கள் ? – முக்கியமாக ஆத்மார்த்தமான ஒப்புதலுடன். 
    1. வாழ்வில் உங்களுடைய முன்னுரிமை கொண்ட முதன்மையான விஷயம் என்ன?

    இங்கே கேட்கப்படும் ஒவ்வொரு கேள்வியும் (100 கேள்விகள் இடம்பெறும்) உங்கள் வாழ்க்கைக்கான வழித்துணை.  இந்த கேள்விகளும், அதற்கான உங்கள் பதில்களையும் ஒரு வெள்ளைத்தாளில் எழுதி வையுங்கள்.  தட்டச்சு செய்து பாதுகாப்பது இன்னும் சிறந்தது.  இந்தக்கேள்விகள் உங்கள் வாழ்க்கை பயணத்துக்கான வரைபடம்.

    பத்து நாட்களுக்கு ஒரு முறை உங்கள் பதில்களை மீண்டும் சரிபாருங்கள்.  பதிலில் மட்டுமல்ல – உங்கள் வாழ்விலும் மிகப்பெரிய மாற்றங்கள் உருவாகி வருவதை நீங்களே கண்கூடாக காணலாம்.  மேலும் தெளிவுக்கு என்னையும் தொடர்பு கொள்ளலாம்.

    திசைகளை தீர்மானியுங்கள் !  திட்டமிடுங்கள் !  செயல்படுங்கள் !

    கேளாய் மகனே கேளொரு வார்த்தை !  நாளைய உலகின் நாயகன் நீயே ![/hide]

    இந்த இதழை மேலும்