துணிச்சல்…
குதிரையேற்றம் சிக்கலான விளையாட்டுத்தான்! வாழ்வில் கூட எதிர்பாராத தருணங்கள் வருகின்றன! குதிரை மீது அமர்ந்திருக்கிற எல்லா வினாடிகளும் எதிர்பார்க்காதவையே! அதன் கண்களுக்கு பிளிங்க்கர்ஸ் மாட்டி இருந்தார் மகிழன்பன். மகிழன்பன் ஏறிய குதிரையின் பெயர் பாண்டியன். பாண்டியன் ஐந்தாறு வயதான ஆண்மகன். அவன் ரோஷனைப் பார்த்து… கிளர்ச்சியடைந்து கொண்டு கால்களைத் தூக்கிப் பாய்ந்துவிடுவானாம். அதனால் மகிழன்பனை ஏற்றி தனியாக அனுப்பிவிட்டார் சீராளன். சீராளன் மகிழன்பனின் நண்பர் மகன். மகிழன்பனுக்கு ரிஸ்க் எடுப்பது ரஸ்க் சாப்பிடுவது மாதிரி! ஆனால் உயிரில்லாத வாகனங்கள் மீது ஆர்வம் குறைவு கார், பைக் இத்யாதி வகையறாக்களை சொல்கிறேன்.
மகிழன்பனின் மகளை குதிரை மீதேற்றி படம்பிடிப்பதற்குள்… போதும்… போதும் என்று ஆகிவிட்டது. புதிதாக ஒரு விஷயத்தை பரிசீலித்துப்பார்க்க… தைரியம் வேண்டும்தான்.
அசட்டுத் துணிச்சல்… அவ்வளவு நல்லதல்ல…
துணிச்சலுக்கும் அசட்டுத்துணிச்சலுக்கும் அவ்வளவு எளிதில் வித்யாசம் சொல்லிவிட முடிவதில்லை. எனக்கு தெரிந்த மகிழன்பனின் நண்பர் மகள் யாழினி இ.ஆ.ப தேர்வு எழுதுவதற்காக… பல ஆயிரம் இலட்சம் ரூயாய்கள் சம்பளம் தரும் ‘டிலாய்ட்’ நிறுவன பணியை விட்டுவிட்டு வந்து சென்னையில் இறங்கினாள். தி ஃபிக் ஃபோர் (The Big Four) என்று சொல்லப்படும் நான்கு கணக்கு தணிக்கை மற்றும் நிதி சேவை, கலந்தாலோசனை நிறுவனங்களில் ஒன்று ‘டிலாய்ட்’, மற்ற மூன்று என்ன என்று கேள்வி எழுகின்றதல்லவா? எழட்டும்…
இப்படித்தான் மகிழன்பனுக்கு… கேள்வி எழுந்தது… என்ன கேள்வி என்பது இருக்கட்டும்… என்ன சூழ்நிலையில் கேள்வி எழுந்தது என்பது… குறிப்பிடத்தக்கது… கிட்டத்தட்ட மணிக்கு ஐம்பது கிலோமீட்டர் வேகத்தை ஐந்து விநாடித்துளிகளில் அடைந்தபொழுது… குதிரை பாண்டியன்… நான்கு கால் பாய்ச்சலில்… வேகத்தை அதிகப்படுத்திக்கொண்டே இருந்தான்.
பார்த்திபனும், பிரபாகரனும்… மகிழன்பனை வீடியோ எடுக்கலாம் என்று கூட கிளம்பி ஒரு பைக்கில் வந்துகொண்டு இருந்தனர். மெதுவாக ட்ராட் செய்திருந்தால் அழகாக சென்ற ஆண்டு பிடித்தது போல ஒரு வீடியோ எடுத்திருப்பார்கள். பிரபாகரன் கியர் மாற்றுவதற்குள் முப்பது அடிதூரம் முன்னால் போயிருந்தான் பாண்டியன்… இவ்வளவு வேகம் வேண்டாம் என்று தோன்றியது. பாண்டியன் கேட்டால் தானே… செம்மண் பாதையில்… கிட்டத்தட்ட முன்னூறு மீட்டர்… புழுதி கிளம்ப மேடுபள்ளத்த்தை ட்டக் ட்டக் ட்டக்… ட்டக்…. ட்டக்ட்டக்… என்று கேட்ரிங்கில் (மூன்றுகால் ஓட்டம்) ஆரம்பித்து… பின்னர் கேல்லப்பில் பாய்ந்து… தார் ரோட்டை எட்டிப்பிடித்த பொழுது… மகிழன்பன் மனதில் லேசாய் அபாய மணி அடிக்கத் தொடங்கி இருந்தது அவருக்கு எழுந்த கேள்வி… தார் ரோட்டில்…. இன்னும் சில வினாடிகள் கழித்து எழுந்தது.
கேள்வி… என்றவுடன்
பிறந்தநாள் கேக்கை… வித்யாசமான இடத்தில் வைத்து வெட்டலாமா?
என்கின்ற கேள்விகூட எழுந்தது… அதன் பலன் ஒரு இனிமையான அனுபவமே! மகிழன்பன் பிறந்தநாள் கொண்டாடுவதில் ஆர்வம் காட்டுவதில்லை. வேல்விழிக்கு பிறந்தநாள் என்று சீராளனின் பண்ணையில் வைத்துத்தான் தெரியவந்தது. அவள் தங்கை விழாமலர் சொல்லிவிட்டாள்.
சீராளன் எங்கிருந்தோ கேக் கொண்டுவந்து சேர்த்திருந்தான். அவன் தந்தை திருப்பதி… மிகவும் கண்டிப்பானவர். ஆனால் மகிழன்பன் வருகையில் மட்டும் நெகிழ்ந்து போய் சிறு குழந்தையாக மாறிவிடுவார். அதனாலேயே மகிழன்பனை முன்னிறுத்தி சீராளனின் திருமண பேச்சுக்கள் நிகழ்ந்தன. அந்த மகிழ்ச்சிகரமான இல்லத்தில் நிறைய குழந்தைகள், பெரியவர்கள் என பத்து பேருக்குப் பக்கம் கூடியிருந்தனர். அது ஒரு கிராமம்… காஞ்சிபுரம் அருகேயிருந்தது. தோட்டத்திற்கும் வீட்டிற்கும் மூன்று கிலோமீட்டர்கள் இருக்கும்… திருப்பதி… தன் இல்லத்தினர் மற்றும் ஊர்க்காரர்களுக்காக ஒரு பெருமாள் கோவில் எழுப்பியிருந்தார்… அதிலிருந்த தாமரைகளின் சிரிப்பைச் கண்டதால்… முதன் முதலில் தாமரைகள் பூத்த தடாகம் ஒன்றில் இறங்கி மலர்களை ஸ்பரிசிக்கும் வாய்ப்புப் பெற்றார் மகிழன்பன். சந்தோஷத்திற்கு அளவேயில்லை. குழந்தைகள் சற்றே தயங்கித் தயங்கி ஒவ்வொரு அடியாக சாய்ந்து வளைந்து ஆச்சரியக் குரல்களை எழுப்பிக்கொண்டு… வீல்… வீல் என்று பயத்தில் கத்திக்கொண்டு… உள்ளே…. தத்தக்கா பித்தக்கா என அலைபாய்ந்து நடந்தனர்.[hide]
மகிழன்பனுக்கு 41 வயது முடிந்துள்ளது. முதல்முறை தாமரைக் குளத்துள் நடக்கிறார். இவ்வளவு வருட கனவு கனவுகள் மிகவும் முயற்சி செய்யும்பொழுதோ… ஆயாசத்தின் உச்சகட்டத்தில் இருக்கும் பொழுதோ… முயற்சியினுடைய முழுமூச்சைக் கொடுக்கும் பொழுதோ… எதிர்பார்ப்பின் விளிம்பில் திமிறித் துடிக்கும் பொழுதோ… பலிப்பதில்லை… அவை திடீரென பளீரிடுகின்றன! மகிழன்பனின் நெருங்கிய நண்பர் ஒருவர் கால்நடை மருத்துவர். நான்குமுறை இ.ஆ.ப தேர்வு எழுதி… நான்காவது முறை வென்றார்…
நான்காவது முறையை நெருங்கிய பொழுது… பக்குவப்பட்டுப் போயிருந்தார்…தோல்வியடைந்தால் இழக்க ஒன்றுமில்லை என்ற நிலை…தாமரை குளங்கள் அபாயமானவை. படகில் சென்று பறிக்க வேண்டுபவை. காலில் சுற்றினால் தாமரை வேர்களும் தண்டுகளும் நீச்சல் அடிக்க முடியாமல் செய்துவிடும் சேற்றில் ஒரு வேளை கால் புதைந்துவிட்டால் என்று… பல தயக்கக் குரல்கள் நாற்பது வருடங்களாய் குளத்தினுள் இறங்கவிடாமல் செய்துவிட்டன.
இம்முறை திருப்பதி…
அட நீங்க வேற… இந்தக் குளம் மொத்தமே நாலடி ஆழந்தான்… நான்
குழந்தையா இருந்தப்ப இருந்து இதில் இறங்கி அலசியிருக்கேன்
என்றவாறு மளமளவென உள்ளே இறங்கி கொத்துக் கொத்தாக
பூக்களை அள்ளிப் பறித்தார். இலைகளையும் சேகரித்துக் கொடுத்தார்.
அவர் வீட்டில் இருந்த இரண்டு நாட்களும்… அந்த இலைகளில்தான் சாப்பிட்டார் மகிழன்பன் … மற்றும் எல்லோரும்…
இலைகளின் மீது துளி… தண்ணீர் விழுந்தால் உருண்டு திரண்டு… ஓடியது… பாதரசம் போல காணப்பட்டு மின்னியது… முத்துக்களாய் மாறி பளபளத்தது…
வாழ்வில் தோல்விகளோடு ஒன்றிப்போய்
ஒட்டிப்போய் நின்றுவிடக்கூடாது… என்று
தோன்றிது…
யாழினி…
டி லாய்ட் நிறுவனத்தை விட்டு வந்த முதல் முயற்சியில் பிரிலிம்ஸை இழந்தான்…
அடுத்த முயற்சியில்… அவள் நேர்முகத் தேர்வு வரை சென்று திரும்பினாள்… பணி எதுவும் கிடைக்கவில்லை… அதற்கடுத்த முயற்சியில்…தாமரைக் குளத்திற்குள் தடுமாறும் வேல்விழிக்கு ஐடியா கொடுத்தார் மகிழன்பன் … ஒரு காலை நகர்த்து, உயர்த்து… கீழே வை… அழுத்து… ஸ்திரமாக்கு… ஊன்று… கொஞ்சம் புதையும், அதன்பின்பு, நிற்கும்…
அவ்வளவுதான்
அடுத்த காலடி வைக்கலாம்…
நிதானமாக நகர்… ஆழம்பார்த்து… நகர்…
என்று அறிவுரை வழங்கி கண்காணித்தார்…
வேல்விழியும் விழாமலரும் அடுத்த நாள்… பிறந்தநாள் கொண்டாட உள்ளே சளக்… தளப்… என்று நடந்து… திருப்பதி ஐயாவோடு… தாமரை இலைகளை சேகரித்து அதன்மீது கேக்கை வைத்து நீருக்குள்… மலர்களின் வாழ்த்துக்களோடு பிறந்தநாள் பாடல் பாடினர். அதை வீடியோ எடுத்த மகிழன்பனின் செல்போன் தவறி தண்ணீரில் விழுந்தது…
அது நீர் புகாதது அல்ல…
சீராளன், தனது மகிழ்வுந்தின் சூடாக்கும் கருவிக் காற்றால் அந்த செல்போனை குணமாக்க முயற்சித்தான்.
அதை மீண்டும் சார்ஜ் செய்தால் வெடித்து விடும் அபாயம் இருப்பதாக சிலர் கவலை தெரிவித்தனர்.
இப்பொழுது… காய்ந்த பிறகு ஆனது ஆகட்டும் என சார்ஜரில் போட்டார் மகிழன்பன்
அது…
குதிரை பாண்டியன்… தார் ரோட்டில் திரும்பியதும்… எழுபது எண்பது கிலோமீட்டர் வேகத்தில்… இவ்வளவு நாள் இப்படி ஒரு ஆள் என் மேல் ஏறியதில்லை என்று மொத்த ஆற்றலைக் காட்டுவது போல காற்றில் பறந்தான்.
தார் ரோட்டில் லாடம்… அடித்து அடித்து எழும் ஒலி… பட்டாசு போல தெரித்தது…
கொஞ்சம் பயம் வந்தபோது மகிழ்நன் நினைத்தான்… அச்சம்… வந்துவிட்டால் அது பாண்டியனுக்கு தெரிந்துவிடும்… துணிவு உண்டு! நெஞ்சம் உண்டு! நில்லு பாண்டியன்! என்று கடிவாளத்தை இழுத்தான்…
பாண்டியன் என்ன நினைத்தான் என்று தெரியவில்லை… இன்னும் வேகத்தை அதிகப்படுத்தி கேன்டரை… கேல்லப் ஆக்கினான்…
பயத்துடனேயே நுனிக்கரும்பை சுவைபார்த்தார் மகிழன்பன் பயம் தலை காட்டியது என்றும் சொல்லலாம்… டூ வீலரில் வந்த பார்த்தி… ஒரு வழியாக முறுக்கி முன்னேறி குதிரைக்கு முன்னால் வர முயற்சித்தார்…[/hide]
இந்த இதழை மேலும்
0 comments Posted in Articles