![]() |
Author: கௌசிகாதேவி ம
|
வயலின் பச்சை நிற அசைவுகளை அந்தக் கருமேகங்களும் கடன் கேட்கின்றது. மின்னலின் ஒளிக்குச் சிறது இயற்கையின் வண்ணம் பூச, சின்னஞ்சிறு உயிர்களுக்கும் வீரம் பிறக்கிறது இந்த மண்ணின் வலிமையில் வாழ்ந்து.
வளர்ந்திருக்கும் மரங்களும் உரசி உரசி காதல் செய்கிறது காற்றின் மெல்லிசையால் ; மௌனத்தின் விழியோடு வயலின் மேட்டில் இருகாகங்கள் இயற்கையின் சிறப்புகளை இரசித்துக் கொண்டிருந்தது ; அந்த காகங்கள் மாற்றத்தைத் தேடி, வேறு ஒரு இடம் செல்ல விரும்பியது. அப்போது, கலங்கிய வெண்மையில் நேற்று உலையில் கொதித்த இந்த மண்ணின் அரசியான அரசி பழையசாதமாக வரப்பு வெட்டிய கைகளைத் தொட்ட, வெயிலில் சுருங்கிய வயிற்றில் நிரம்புகிறது.
காகங்கள் பறந்து சென்று அந்தப் பெரியவரின் அருகில் அமர்ந்தது அவர் பசியில் துடிக்கும் தன் வயிற்றை காக்க வைத்து விட்டு, காணவந்த காகங்களுக்கு உணவு கொடுக்கிறார். அந்த அழகிய காகங்கள் வெண்ணிலவின் ஒளியில் பிறந்தது போல, இவர் யார் இப்படி இருக்கிறார்? இந்த உணவு வேண்டாம் நண்பா ! வேறு இடத்திற்குச் சென்று நல்ல உணவை உண்ணலாம் என்று பறந்து சென்றது.
தன் இறக்கைகளின் வலிமையை காற்றின் வலியோடு மோதவிட்டது அந்தக் காகங்கள் சிறிது நேரத்தில் பல இடங்கள் கடந்து நகரத்தின் நடுதிசையில் ஒரு வீட்டு மாடியில் அமர்ந்தது.
எந்த திசையிலும் மனிதனுமில்லை, மரங்களுமில்லை ; மின்னலின் சூட்டைவிட அந்தக் கருகிய கால்களை கருகவைக்கும் மின்கம்பங்களே இருந்தது, அப்போது பசியின் பஞ்சத்தில் காகங்கள் இருந்தன. வாகனத்தின் ஓட்டத்தை விட மனிதன் வேகமாக ஓடுகிறான் ; சூறைக்காற்றின் ஓட்டத்தால் கூட இந்த விஞ்ஞான உலகத்தை நிறுத்த முடியாது போல என்று அந்தக் காகங்கள் சிந்தித்தது.
அப்போது எதிர்திசையில் பெண்களின் விடுதி ஒன்று இருந்தது. பாதுகாப்பு என்ற வலையத்தில் பெண்களின் அழகு கம்பிகளால் மூடப்பட்டு அந்தக் கம்பிகளுக்குள்ளே கைப்பேசியில் சுதந்திரமான பெண்கள் இருந்தனர்.
அந்தக் கம்பியின் அருகில் ஒரு பகுதியில் சிறிய நெகிழிக் கூடையில் பலவகையான உணவுகளை கொட்டி வைத்திருக்கிறார்கள். உணவுக்காக பசியில் துடித்த அந்த ஒரு இதயங்கள் மருமுறை வேகமாக துடிக்கிறது. அந்த நாற்றம் பரவும் உணவுகளைக்கின்றி அந்தத் துடிப்பு ருசிக்காக அல்ல, பசிக்காக, ஆனால் ஆனந்தத்தின் வளர்ச்சியில் வேலி போட்டது போல, கம்பிகளால் மூடப்பட்டு இருந்தது.
அந்தக் கம்பியின் முன் அங்கும் இங்கும் உள்ளே வரமுடியாமல் பறக்கிறது அந்தக் காகங்கள். அந்த விடுதியின் பெண்கள். அதை கண்காட்சி போல் பார்த்துவிட்டு மீண்டும் உணவை கொட்டுகிறார்கள்.
அந்த ஒரு காகங்களில் ஒரு காகம் என்ன செய்வது நண்பா. நம் பசியால் நாம் முன்பு இருந்த இடத்திற்குச் செல்ல முடியவில்லை ; வேறு எங்கும் உணவு தென்படவில்லை ; உணவு தரக்கூடிய மரங்களை இந்த விஞ்ஞான மனிதர்கள் வளர்க்கவில்லை ; ஓடிக்கொண்டே இருக்கும் இவர்களின் பாதையில் பறவைகளாகிய நாம் தான் பாவப்பட்டவர்களோ? என்றது.
இரண்டு நாட்கள் கழித்தன. அனைத்து இடங்களையும் சுற்றிவிட்டு தண்ணீரின் தாகம் கூட தயங்கி நிற்கிறது. இந்த அறிவற்ற மனிதர்களிடம் சிறிது நீர்தாருங்கள் என்று கேட்க வேறு வழியின்றி அந்த விடுதிக்கே மீண்டும் சென்றன அந்தக் காகங்கள்.
உணவின் கூடையையே பார்த்து ஏக்கத்தோடு கலங்கிய நிலையில் அந்தக்காகங்கள் இருந்தன. அங்கு ஒரு பெண்கள் நின்று கொண்டிருந்தார்கள் ; நீங்கள் வீணாக்கும் உணவில் சிறிது தாருங்கள். நானும் என் நண்பனும் பசியோடு இருக்கிறோம். அந்த உணவின் பருக்கையில் நாங்கள் உயிர் வாழ முடியம். என்று கரைந்து சொல்கிறது காகங்கள். அந்தக் காகங்களை பார்த்தவாரே அந்தப் பெண்கள் சென்று விட்டனர். பசியின் உச்சத்தில் நண்பா நாம் தவறு செய்துவிட்டோம். இயற்கையின் அழகை அலட்சிய படுத்திவிட்டு வளர்ந்த இந்த விஞ்ஞான உலகை காணவந்தால் நம் நிலைமை இப்படி ஆகிவிட்டதே, அந்த வயலில் வெயிலோடு போட்டிப்போட்டு நம் மண்ணிடம் ஆசிபெற்று, நிலவின் மடியில் உறங்கிய அந்த உழவனை இல்லை… நமக்கு உணவுகொத்த அந்தக் கடவுளை நாம் காண வேண்டும் இறுதியாக என்று ஒரு காகம் கூற மற்றொரு காகம் மயகத்தின் மறுமொழிகூற முடியாமல் கலங்கி நின்றது.
இந்த இதழை மேலும்


November 2019



















No comments
Be the first one to leave a comment.