– 2019 – June | தன்னம்பிக்கை

Home » 2019 » June

 
  • Categories


  • Archives


    Follow us on

    வாகை சூடும் வாழ்க்கை

    கவிச்சுடர் அழகுதாசன்

    கோவை

    வாழ்க்கை என்பது பெரும்வானம் – அதில்

    வளர்பிறை யாக வாழுங்கள்!

    வாழ்க்கை என்பது பெரும்பயணம் – அதில்

    வரையறை செய்து ஓடுங்கள்!

    வாழ்க்கை என்பது ஓர்நூலகம் – அதன்

    வாசலில் உலகம் பாருங்கள்!

    வாழ்க்கை என்பது நம்பிக்கை – அதை

    வயிர மாகத் தீட்டுங்கள்!

     

    வாழ்க்கை என்பது ஓர்இலக்கியம்

    வரிவி டாமல் படியுங்கள்!

    வாழ்க்கை என்பது ஓர்புதுமை – அதை

    வரவில் வைத்துப் பழகுங்கள்!

    வாழ்க்கை என்பது ஓர்வள்ளுவம் – அதை

    வாழ்வில் படித்து வணங்குங்கள்!

    வாழ்க்கை என்பது பெரும்தவம் – அதை

    வரமாய் ஏற்று உழையுங்கள்!

     

    வாழ்க்கை என்பது எதிர்நீச்சல் – அதை

    வென்று சிகரம் அடையுங்கள்!

    வாழ்க்கை என்பது பெரும்சோகம் – அதை

    வசந்தச் சிரிப்பால் விரட்டுங்கள்!

    வாழ்க்கை என்பது பெரும்புரட்சி – அதை

    வரலா றாகாப் பதியுங்கள்!

    வாழ்க்கை என்பது போர்க்களம் – அதில்

    வாகை சூடி மகிழுங்கள்!

    முடியும் வரை முயற்சி…! தினந்தோறும்  தரும்  மகிழ்ச்சி…!

    மு.மாரிராஜன்

    நிறுவனர், REMINGO – Reminder on the GO,

    MKSG Solutions PVT.LTD, நவி மும்பை.

    வாழ்க்கையில் தன்னம்பிக்கை இருந்தால்

    எல்லாம் வந்துவிடும்…என்னும் வார்த்தை தான் இவரின் வர்த்தக வரிகள்..

    ஒவ்வொரு நாளும் ஏதேனும் புதுமையை படைக்க வேண்டும், அந்தப் புதுமைகள் எல்லோருக்கும் ஒரு புத்துணர்வு கொடுக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு நாளும் புதுமையைப் படைத்து வரும் மனிதர்.

    கணினித் துறையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றும் இவர் கணினித் துறையில் பல்வேறு மாற்றங்களையும், சமுதாயத்திற்குத் தேவûயான தொழில் நுட்பத்தையும் தனது அசாத்திய திறமையால் கொண்டு வந்தவர்.

    கணினித் துறையில் இந்திய மற்றும் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களாகிய Motorola, Anderson Consulting, ONGC, Cibatul, Airfreight, DHL மற்றும் சிங்கப்பூர் தொலைத் தொடர்பு நிறுவன குழுமம் ஆகியவற்றில் இணைந்து பணியாற்றிய அனுபவம் மிக்கவர். அரசு மற்றும் அரசு சாரா துறைகளில் பணிபுரிந்து அனுபவம் பெற்ற இவர் ரோபாட்டிக்ஸ் ஆட்டோமேஷன், டிஜிட்டலேசன் போன்ற துறைகள் ஆழ்ந்த  அனுபவம் மிக்கவர்.

    VHNSN கல்லூரியில் இளங்கலை இயற்பியல் துறையில் பட்டம் பெற்றவர், பின்னர் முதுகலை டிப்ளமோ படிப்பை முடித்த அவர் ஆஸ்திரேலியாவிலுள்ள கர்டின் பல்கலைக்கழகத்தில் தகவல் தொழில் நுட்பத்துறையில் எம்பிஏ பட்டமும் பெற்றிருக்கிறார்.

    இவரின் முன்னோடியான கல்விக்கண் திறந்த காமராஜரின் வழி பல குழந்தைகளுக்கு கல்வி பயில உதவி செய்து கொண்டிருக்கிறார்.

    தான் பிறந்த சமுதாயத்தில் தன்னால் ஆன கடமைகளை தனக்கும் உகந்து தன் தாய் நாட்டிற்கும் உதவ வேண்டும் என்று கணினித் துறையில் பல மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.

    உலக நாடுகள் பலவற்றிற்கு பயணம் செய்து, அங்கெல்லாம் தனது திறமையால் புகழ்கொடி நாட்டியவர் REMINGO – Reminder on the GO நிறுவனர் மு.மாரிராஜன் அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு…

    கே: உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

    நான் பிறந்தது ஸ்ரீவில்லிப்புத்தூர். தந்தை திரு. வீ. முத்துகிருஷ்ணன் விவசாய பின்னணி உடைய குடும்பம்.. அவர் சுயத்தொழில் செய்து விட்டு பின்னர் இந்திய தபால் தந்தித் துறையில் வேலை செய்து கொண்டிருந்தார்.  ஆனாலும் எங்கள் பள்ளி காலம் முழுவதும் விருதுநகரில் தான் இருந்தது. என் தாயார் திருமதி. கோவிந்தமாள் இல்லத்தரசி. என்னுடன் பிறந்தவர்கள் ஒரு அண்ணன்,  ஒரு அக்காள், ஒரு தங்கை. என்னுடைய படிப்பு விருதுநகரிலுள்ள திருவள்ளுவர் வித்யா சாலை மற்றும் சத்திரிய வித்யா சாலை ஆகிய பள்ளிகளில் படித்தேன். பள்ளியில் படிக்கும் போது நன்றாகப் படிக்கும் மாணவன் தான் ஆனாலும் குறும்புக்கும் துறுதுறுக்கும் சற்றும் குறைவில்லாமல் இருந்தேன்.  கால்பந்து விளையாட்டின் மீது எனக்கு அளப்பரிய ஆசை நன்றாக விளையாடுவேன். அது மட்டுமின்றி என்சிசி யிலும் இருந்தேன்.   படிப்பின் மீது இருந்த  பற்றுதலால் என்னுடைய  பள்ளிப் படிப்பை வெற்றிகரமாக முடித்து VHNSN கல்லூரியில் பி.எஸ்.சி. இயற்பியல் துறையைத் தேர்ந்தெடுத்துப் படித்தேன்.  மூன்று ஆண்டுகள் சென்றதே தெரியவில்லை. ஒரு புறம் படிப்பு, விளையாட்டு, நண்பர்கள், மறுபுறம் சமூக சேவைகளான என்எஸ்எஸ் யிலும் இருந்தேன். இப்படி பல  மறக்க முடியாத தருணங்களுடன் என்னுடைய பள்ளி மற்றும் கல்லூரிப் பருவம் இனிதாகச் சென்றது.

    கே: கல்லூரிப்படிப்பை முடித்தவுடன் உங்களின் பயணம் எப்படியிருந்தது?

    கல்லூரிப் படிப்பை முடித்தவுடன் மேலும் படிப்பதற்கு முதுகலை இயற்பியல் துறையில்  இடம் கிடைக்கவில்லை. இதனால் மும்பை செல்ல அறிவுறுத்தப்பட்டேன். நெடு தூர இரயில் பயணம், முதன் முறையாக குடும்பத்தை விட்டு சென்றது மனதிற்கு மிகவும் வருத்தத்தையும் சலனத்தையும் கொடுத்தது. கல்லூரி வாழ்க்கையில் மறக்க முடியாத தருணங்களுடன் பயணப்பட்டேன்.  ஆனாலும் சாதிக்க வேண்டுமென்று புறப்பட்டு விட்டேன் இனி, சங்கடம் படுவதில் எவ்வித பயனும் இருந்துவிடாது என்று என் மனதை நானே தேர்த்திக் கொண்டேன். ஒரு வழியாக மும்பை சென்று விட்டேன் முற்றிலும் மாறுபட்ட  முகங்கள், ஒவ்வொருவரின் முகத்திலும் ஒரு தேடுதல் இருந்தது. இங்கு தான் இனி என்னுடைய வாழ்க்கை அமையப் போகிறது என்று அப்போது எனக்குத் தெரிவில்லை.

    பொது அறிவு மற்றும் வங்கித் தேர்விற்கான தயாரிப்புகளுடன் நேர்காணல் செல்ல முயன்றேன். Puma Carona, Bhabha Atomic Research Centre, Bajaj, Indian Airforce, Indian Rare Earths ஆகிய நிறுவனங்களில் முயற்சித்து தோல்வியுற்றேன். பின்னர் கணினித் துறையில் ஒரு வாய்ப்பு கிடைக்கப் பெற்றேன்.

    கே: படித்தது இயற்பியல் துறை பணியாற்றுவது கணினித் துறை இது எப்படிச் சாத்தியமானது?

    நான் படிக்கின்ற காலத்தில்  பொது அறிவு மற்றும் வங்கிப் பணிக்கான தேர்வுக்கு செய்த பயிற்சியின் உதவியால் கணினித்துறையில் பணி கிடைத்தது. அந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொண்டேன்.

    1986 ஆம் ஆண்டு ஐ.டி துறை வளர்ந்து வரும் காலமாகும். அப்போது இணையதள வசதி இல்லை என்றே கூறலாம். ஆனாலும் பெரிய வணிக நிறுவனங்கள் கணினியைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆகையால்  கணினித் துறையில் அதிக வேலை வாய்ப்பு வந்து கொண்டிருந்தது.  அப்படியிருக்கும் போது அத்துறையில் நான் பணியாற்றியது புதுமையாக இருந்தது.

    எனக்கு ஏழு நாள் அவகாசத்தில் ஒரு புரோகிராம் செய்து தரும் படி வலியுறுத்தப்பட்டு ஒரு புத்தகம் கொடுக்கப்பட்டது, அந்த நிறுவனத்தில் இரு கணினிகள் இருந்தன. அப்போது தான் கணினியை முதன் முதலாகப் உபயோகப்படுத்தும் வாய்ப்பைப் பெற்றேன். கடின முயற்சி, உடன் பணிப்புரிபவர்களின் ஆலோசனையின் பேரில் கொடுக்கப்பட்ட காலத்திற்குள் புரோகிராம் செய்து கொடுத்து எனது பணியை தக்கவைத்துக்  கொண்டேன். இதன் பிறகு தான் எனக்கே என் மீது நம்பிக்கை வந்தது. இதனால் இந்நிறுவனத்திற்கு என் மீது மரியாதையும் நம்பிக்கையும்  வந்து மேலும் அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு புரோகிராம் செய்யப் பணிக்கப்பட்டேன்.  அப்போது கிடைக்கப் பெற்ற புதிய சிறப்பான அனுபவமும் உந்துதலும் இன்று வரை என்னுள் இணைந்திருக்கிறது.

    நான் பணிபுரியும் நிறுவனத்திற்கு மும்பை மற்றும் குஜராத்தில் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள்.  அவர்களுக்கு வேலை செய்ய பணிக்கப்பட்டு  கணினித்துறையில் நிறைய கற்றுக் கொண்டேன்.

    கே: கம்யூட்டர் மேனேஜ்மென்ட் படித்த அனுபவத்தைச் சொல்லுங்கள்?

    குஜராத்தில் உள்ள வல்சாத் நகரில் வேலை செய்யும் பொழுது  கணினித்துறையில்  திறன்களை மேலும் வளர்ப்பதற்காக மும்பையில் டிப்ளமோ படிப்பில் சேர்ந்தேன். நான் பணியாற்றும் இடத்திலிருந்து மும்பையை அடைய 4 முதல் 5 மணி நேரம் பயணம் மேற்கொள்ள வேண்டியிருந்தது படிப்பைத் தொடர இது பெரும் சவாலாக இருந்தது, வார இறுதி நாட்களில் மட்மே என்னால் படிப்பதற்கு நேரத்தை செலவிட முடிந்தது. மேலும்  குஜராத் மற்றும் மும்பையில் வேலை பார்த்தால் பிற மொழி கற்கும் வாய்ப்பும் கிடைத்தது. இதனால் புதிய விசயங்கள் கற்றுக் கொள்ளவதில் ஆர்வமும் உந்துதலும் மேன்மேலும் அதிகரித்தது.

    கே: உங்கள் வாழ்வில் ஏற்பட்ட திருப்புமுனை சம்பவம் பற்றிச் சொல்லுங்கள்?

    மும்பையிலுள்ள எனது இரண்டாவது வேலைக்கான நேர்காணலுக்கு போயிருந்த போது தேர்வு எழுதப் பணித்தார்கள் தேர்வு முடிந்தவுடன் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டேன். அப்பொழுது அந்நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர் நீங்கள் தேர்வில் தோற்றுவிட்டீர்கள் ஆனால் உங்களுடைய அனுபவத்திற்கு சிறப்பாக செய்திருக்கலாம் என்று கூறினார்.

    சற்று யோசனைக்குப் பின் நான் தேர்வாகவில்லை  அது உண்மை தான். ஆனால், அடிப்படையில் உங்களின் வினாக்களில் பிழைகள் நிறைய இருக்கிறது என்று சொன்னேன். இதைக் கேட்டவுடன் அவர் அதிர்ந்து விட்டார். தவறை உங்களால் சுட்டிக்காட்ட முடியுமா என்று கூறினார். நிச்சயம் முடியும் என்று கூறி அதை அவருக்கு விளக்கிக் கூறினேன். அவரும் விசாரித்தப் பின்னர் என்னுடைய கருத்தை ஏற்றுக் கொண்டதோடு இல்லாமல் எனக்கு பணி ஆணையும் வழங்கினார். இந்த கம்பெனி ஒரு பெரிய கார்ப்ரேட் நிறுவனம். இவர்களுக்கு இந்தியா முழுவதும் 60 கிளைகள் இருந்தன.  இங்கு பணியாற்றும் போது நிறைய நுணுக்கங்களைக் கற்றுக்  கொண்டேன். இது என் வாழ்வில் திருப்பு முனை என்று சொல்லலாம்.     .

    கே: நீங்கள் எதிர்கொண்ட சவாலான நிகழ்வுகள் பற்றிச் சொல்லுங்கள்? 

    நேரம் கிடைக்கும் போது பொழுதுப் போக்காக UNIX மற்றும் scripting சுயமாகக் கற்றுக்கொண்டேன். அந்தக் காலக்கட்டத்தில் இணையதள வசதிகள் இல்லை. இதனால் புத்தகத்தைப் பார்த்து கணினியில் முயற்சி செய்து கற்றுக்கொண்டேன். பின்நாளில் இது உதவும் என்று எதிர்பார்க்கவில்லை.  எனக்கு PDP11, PSI Omni போன்ற கணினிகளில் சிறப்பான அனுபவம் உண்டு. பெரிய நிறுவனங்கள் இது போன்ற கணினிகளை தங்கள் சேவைக்குப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட ஒரு இடரைத் தீர்வுகாண்பதற்கு பொழுது போக்காக நான் கற்ற வழி முறையில் தீர்வு காண முயற்சி செய்தேன்.

    அதன் படி மேனேஜரிடம் நேரடியாகச் சென்று இதை நான் சரி செய்யலாமா என்று அவரிடம் கேட்டேன். நாளைக்குச் சொல்கிறேன் என்று அவர் கிளம்பி விட்டார். சில நாட்களுக்குப் பின் என்னிடம் இந்த வேலையைச் செய்யும் படி சொன்னார். உடனே ஆர்வத்தோடு மொத்தம் இருந்த  60 புரோகிராம் களை சோதனை செய்து நிவர்த்தி செய்து கொடுத்தேன். அனைத்தையும் சரிசெய்தது மூலம் மேலும் மேனேஜருக்கு என் மீது நம்பிக்கை அதிகரித்தது. பின்னாளில் தான் எனக்கு இந்த புரோகிராமங்களை சரி செய்வதற்காக தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுக்கப் பெற்று அவர்களால் 50 சதவீதம் மட்டுமே சரி செய்ய முடிந்தது என்பதை அறிந்தேன். அதன் பிறகு நிறைய வாய்ப்புகள் எனக்கு கிடைத்தது.  இது என்னுடைய வாழ்வில் ஒரு சவாலான நிகழ்வாகக் கருதுகிறேன்.

    கே: கார்கோ நிறுவனத்திற்கு செய்த புரோகிராமிங் பற்றிச் சொல்லுங்கள்?

    நான் வேலை பார்த்த நிறுவனம், அனைத்து வகையான சரக்கு மற்றும் கூரியர் வியாபாரத்தில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனமாகும். இங்கு புதிதாக டோர் டு டோர் கார்கே டெலிவரி சேவைக்கு வியாபார பிரிவு தொடங்கப்பட்டது. அடிப்படையில்  இந்தப் பிரிவு Hub & Spoke மாதிரியை தழுவியது. இதில் கணினியின் மூலம் தகவல்களை தொலைபேசியின் வாயிலாகப் பரிமாறிக்கொள்ளும் திறனை முதன் முதலாக அறிமுகப்படுத்தினோம்.

    இப்போது இருப்பதைப் போல 80களில் இணையதள வசதிகள் இல்லை.  ஆகையால் இரவு பத்து மணிக்கு மேல் தொலைபேசி வாயிலாக  மிகவும் குறைவான கட்டணத்தில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் வசதிகள் செய்யப்பட்டுத் திறம்பட நிர்வாகம் செய்யப்பட்ட வியாபார பிரிவு இது. இந்தியாவின் முன் மாதிரி  கார்கோ டெலிவரி சேவையில் முழுமையாக ஈடுபட்ட அனுபவம் மேலும் என்னுடைய ஊக்கத்தையும் ஆர்வத்தையும் வளர்த்தது. இதில் எண்ணற்ற சவால்கள் இருந்தது. அதை எல்லாம் நாங்கள் சரியாக கையாண்டோம்.[hide]

    கே: சொந்தமாக நிறுவனம் தொடங்கியது பற்றி?

    30 ஆண்டுகால கணினித்துறையில் அனுபவத்திற்கு பின் சொந்தமாக நிறுவனம் தொடங்க விரும்பினேன். இதனால் 2017 ஆம் ஆண்டு என்னுடைய வேலையை விட்டு வெளியேறினேன். எனது ஆவலை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டு ஆலோசனைப் பெற்றேன்.  குடும்பம், நண்பர்கள், உறவினர்கள், திருவிழா, திருமணம் என ஒரு மாத காலம் எந்த ஒரு வேலைப் பளுவும் இல்லாமல் சுதந்திரப் பறவையாய் சுற்றினேன். முடிவில் குடும்பத்தினர் ஆதரவுடன் மும்பை மற்றும் சிக்கப்பூரில் நிறுவனம் தொடங்கினேன்.  தொடங்கியவுடன்  என் நண்பர்கள் சிலர் ஊக்கமளித்து தங்கள் ஆதரவைத் தந்தனர். இதில் என் குடும்பத்தினரின் பங்கு மிகப் பெரியது.

    கே: ரேமிங்கோ ரிமைண்டர் ஆன் தி கோ நிறுவனத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

    இது என்னுடைய முதல் வெற்றிகரமான திட்டம். ஏதேனும் ஒரு தொழில் தொடங்க வேண்டும் என்று  நான் நினைக்கவில்லை. நான் தொடங்கும் தொழில் எல்லா தரப்பு மக்களுக்கும் பயன்படும் அளவில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன் அதன் படி ரேமிங்கோ ரிமைண்டர் ஆன் தி கோ என்ற ஆப் பை தொடங்கினேன். சந்தையில் கிடைக்கின்றதை விட பயனுள்ளதாகவும் வேறுபட்டும் இருக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். இதனால் வெவ்வேறு ஆப்களை சோதனை செய்து பார்த்தேன். பல்வேறு வாடிக்கையாளர்களிடம் கள ஆய்வு செய்து கருத்துக்களைப் பெற்று முற்றிலும் மாறுப்பட்ட வடிவத்தில் ஆப் பை உருவாக்க முயற்சி செய்தேன்.

    உலகம் தற்போது உள்ளங்கைக்குள் சுருங்கி விட்டது. எல்லோரும் ஒரு எல்லையை அடைய தீவிரமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். குடும்பத்தில்  கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்கிறார்கள். அவர்களுக்கு எல்லாமும் நினைவுக்குள் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. எழுதி வைத்தாலும் அதைப் பார்ப்பதற்கு அவர்களுக்கு நேரம் இல்லை. சிறிது கவனக்குறைவால் பெரிய அளவில் அவர்களுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம். இதை எல்லாம் கருத்தில் கொண்டு தான் அவர்களுக்கு நினைவூட்டும் வகையில் இந்த ஆப் பைக் கொண்டு வந்தேன். இதை முதலில் குடும்பத்திற்குத் தேவையான நினைவூட்டல் மட்டும் செய்ய வேண்டும், இது அவர்களின் வாழ்நாள் முழுவதும் மனஅழுத்தம் இன்றி இருக்கவும், கையடகத்தில் தகவல்களைப் பெறவும் அது உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய லட்சியமாக இருந்தது. பெயர் வைப்பதிலிருந்து ஆப் பை சந்தைப் படுவது வரை பல்வேறு சவால்களை சந்தித்து அதில் வெற்றி கண்டேன்.

    ஒரு குடும்பத்திற்கு ஒரு REMINGO ஆப் மட்டுமே தேவை என்பது தான் இந்த ஆப் பின் சிறப்பு.

    கே: இது போன்று வித்தியசமான ஆப் பை உருவாக்க வேண்டும் என்ற ஆர்வம் உங்களுக்குள் எப்படி வந்தது?

    இதற்கு நிறைய நிகழ்வுகளை என் கண் முன்னே பார்த்தேன். இதை நிறைய பேர் விரும்புவதை என்னால் உணர முடிந்தது.  சில உதாரணங்கள் இங்கு:

    குடும்பத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களான Comprehensive, family sharing கூடிய ஆப் இல்லை.

    குடும்பத்தில் பிள்ளைகள் வெளிநாடுகளிலும், பெற்றோர் இங்கும் இருப்பார்கள். தகவல்களை கையடகத்தில் தெரிந்து கொள்வதற்கு சிரமங்கள் இருக்கிறது.

    இன்சூரன்ஸ் போன்ற காப்பீட்டுத் திட்டத்தில் பணம் போட்டு விடுவார்கள், ஆனால் குடும்ப சூழலின் காரணமாக அதைப் பின்பற்ற முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

    வீடு மற்றும் நிலத்திற்கு வரி கட்டிவிட்டு அதை பின்பற்ற மறந்து விடுவார்கள்.

    இது போன்ற நிகழ்வுகள் தான் என்னை இதை செய்வதற்கு பெரிதும் துணைபுரிந்தது.

    கே: ரிமிங்கோ உள்ள சிறப்பு அம்சங்கள் பற்றிச் சொல்லுங்கள்?

    இயந்திரமயமான இவ்வுலகத்தில் உலகமே உறவுகளாகிவிட்டது. இதற்கு இணையமும் தொலைபேசியும் ஒரு பெரும் காரணமாக இருக்கிறது. தற்போது கைப்பேசி இல்லாமல் யாரும் இல்லை. அப்படியிருக்கும் போது எல்லாம் அதில் வந்து விடுகிறது, எதையும் தேடி செல்ல தேவையில்லை. அதனால் REMINGO என்ற பெயரில் ஒரு ஆப்பை நிறுவினேன். அதில் ஒன்பது  விதமான படிநிலைகள் இருக்கும் படி செய்தேன்.  ஒவ்வொன்றும் குடும்பத்திற்கு பெரிய அளவில் பயன் உள்ளதாக இருக்கும் படி பார்த்துக் கொண்டேன்.

    இந்த ஆப் ஆப்பிள் மற்றும் ஆண்ட்ராய்ட் செயலில் பதவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    இதில் உள்ள சிறப்பம்சங்கள்

    • எங்கும் எப்போதும் பயன்படுத்தலாம்.
    • குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்தல்;
    • இயற்கை பேரழிவு மற்றும் களவிலிருந்து தகவல்கள் பாதுகாக்கப்படும்.
    • விளம்பரங்களின் தொந்தரவின்றி உபயோகப்படுத்தலாம்.
    • ஆப் பின் உள் எளிதாக உதவிகள் பெறலாம்.
    • கையடக்கத்தில் தகவல்கள்களைப் பெற முடியும்.

    REMINGO Reminder on the Go உங்களின் நேரம், முயற்சி மற்றும் சொத்து ஆவணங்களைப் பாதுகாக்க ஒரு சிறந்த ஆப்.

    கே: இதில் வரும் அறிவிப்புகளை எவ்வாறு தெரிந்து கொள்வது?

    கீழ்காணும் முறையில் நீங்கள் எளிதாகத் தெரிந்து கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளதால் கண்டிப்பாக இது அனைவருக்கும் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

    • அப்ளிகேஷன் தொடக்கத்திலேயே எண்ணிக்கையை அறிந்து கொள்ளலாம்.
    • ஒவ்வொரு படிநிலைகளிலும் அறிந்து கொள்ளலாம்.
    • வண்ண மாற்றத்தை வைத்து அறிந்து கொள்ளலாம்.
    • கைபேசி அறிவிப்பின் வழி தெரிந்து  கொள்ளலாம்.

    கே: மக்களிடையே இதன் பயன்பாடு எப்படி இருப்பதாக உணர்கிறீர்கள்?

    பிப்ரவரி 2019 யில் தான் சந்தைப்படுத்த தொடங்கினேன். மக்களுக்கு எதையும் கொண்டு சேர்ப்பது அவ்வளவு எளிதல்ல, அப்படியிருக்கும் போது சிறிது சிறிதாக மக்கள் இது பற்றியான விழிப்புணர்வு பெற்று கொண்டு வருகிறார்கள்.

    அதன் தேவையை அவர்கள் பெரிதும் உணர்கிறார்கள். கொண்டு சேர்ப்பதில் கொஞ்சம் சவால்கள் இருந்தாலும், இதன் உண்மை தன்மையை உணர்ந்து விட்டால் அவர்கள் இதை ஏற்றுக் கொண்டு மற்றவர்களுக்கும் அறிமுகம் படுத்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

    வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி ஆகிவிட்டது என்பதை அவர்கள் அனுப்பும் தகவல்களைக் கொண்டு என்னால் உணர முடிகிறது.

    கே: ஊடகம் மற்றும் சமூக வலைதளங்களில் REMINGO இருக்கிறதா?

    www.remingoreminder.com  என்ற வலைதளத்தில் தகவல்களைப் பெறலாம்.

    REMINGO சேனல் youtube மற்றும் instagram போன்றவற்றிலும் காணலாம்.

    கே: எதிர்காலத்தில் எதுமாதிரியான புதுமைகள் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

    REMINGO யிலேயே மேலும் எளிமையான நடைமுறை மற்றும் சிறப்பு அம்சங்கள் கொண்டு வருவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். எங்களின் சமூக வலைதளங்களில் இது பற்றி அறிவிப்பு வெளியாகும்.

    இரண்டாவதாக Lookme Today என்ற மென்பொருள் தொழில் நுட்பத்தை இந்திய அளவில் முதன் முறையாக அறிமுகப்படுத்த இருக்கிறோம். இது போலிகளை கண்டறிவதற்கும், சான்றிதழை உடனடியாக அங்கீகாரம் செய்வதற்கும் (இணைதள உதவியின்றி) உதவும். இது முற்றிலும் மாறுபட்ட மல்டிபர்பஸ் தொழில்நுட்பம். இது அரசாங்கம், வங்கிகள், பல்கலைக் கழகங்கள், பொருள் உற்பத்தி நிறுவனங்களுக்கு எளிதாக போலிகளைக் கண்டறிய உதவும்.

    கே: தன்னம்பிக்கை மாத இதழுக்கு நீங்கள் கூறுவது?

    தன்னம்பிக்கை மாத இதழை தொடர்ந்து வாசித்து வருபவர்களில் நானும் ஒருவன்.  இதில் நிறை சாதனையாளர்களின் நேர்காணல் படித்திருக்கிறேன். அந்த வகையில் இந்த மாதம் என்னுடைய நேர்காணல் இடம்பெற்றிருப்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. உலக வாசகர்கள் அனைவரும் இது போன்ற இதழுக்கு தொடர்ந்து தங்களின் பங்களிப்பை கொடுத்து உதவ வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

    தொடர்புக்கு: mksgsolutions@gmail.com[/hide]

    இந்த இதழை மேலும்

    சாதிப்பின் சங்கமம் சேரன் விளையாட்டுக் குழு

    த. ரவிச்சந்திரன்

    தலைவர், சேரன் விளையாட்டுக் குழு

    உடுமலைப்பேட்டை.

    நதிகள் சங்கமித்துக் கடலாவது போல அனைத்து விளையாட்டுகளும் சங்கமித்து ஒரு குழுவாக உருவானதுதான் சேரன் விளையாட்டுக் குழு. அந்தக் குழு தோன்றி வளர்ந்த வரலாற்றினைக் கூறுகிறார், அந்தக் குழுவின் தலைவர் ரவிச்சந்திரன் அவர்கள்.

    எங்கள் ஊர் இயற்கையின் ரம்மியம் சற்றும் குறையாத உடுமலைப்பேட்டையிலுள்ள எஸ்.வி.புரம். இருபுறமும் ஓடும் திருமூர்த்தி அணை மற்றும், அமராவதி அணைகள் கோடை காலத்திலும் வற்றாத அணைகள். விவசாயமும், மில் தொழிலும் இங்கு பெரும் பங்கு வகிக்கும் ஊர். எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும் இவ்வூரில் தான் சேரன் விளையாட்டுக் கழகம் இருக்கிறது. இங்கு விளையாட நேரம் கிடைப்பது அதிசயம் தான். நான் என்னுடன்  என் நண்பர்கள் சிலர் சிறு வயதில் இருந்த காலத்தில் 1989-ல் இக்குழு ஆரம்பிக்கப்பட்டது. முதலில் ஆர்வத்துடன் வெகுவிரைவாக 20 பேர் 30 பேர் என்று துடிப்புடன் செயல்பட்டோம். பின்னர் எங்களின் ஆர்வத்தைப் பார்த்து வீட்டிலும் பெரியவர்களிடமும் ஆதரவு கிடைத்தது. ஒரு சிலர் குறை கூறினார்கள். சிலர் வேலை வாய்ப்பின் காரணமாக இங்கிருந்து சென்றுவிட்டனர். மீதி இருந்தவர்கள் சற்று சோர்வு அடைந்தனர். பின்னர் ஊர் பொதுமக்களின் உதவியும் எங்களின் கூட்டு முயற்சியும் இருந்ததால் தான் தற்பொழுதுவரை திறமையாக செயல்பட்டு வருகிறோம்.

    இக்குழுவின் சார்பாகக் கபடி, ஹாக்கி, போன்ற விளையாட்டுக்கள் விளையாடப் படுகிறது. இதற்கெனத் தனி அரங்கங்கள் அமைத்துத் தனித்தனிப் பயிற்சியாளர்களையும் அமைத்து விளையாட்டுக்களை நடத்துகிறோம். இதற்கெல்லாம் எங்களுக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பும் ஊக்குவிப்பும் அளித்தவர்கள் எங்கள் ஊர்ப் பொதுமக்கள்தான். கிராமத்தில் இருந்து இப்படி ஒரு குழு முன்னேறி இருக்கிறது என்றால் அதற்கு முழுமையான காரணம் எங்கள் ஊர்ப் பொதுமக்கள் மட்டுமே எங்கள் குழுவில் நிறைய விளையாட்டுக்கள் இருந்தாலும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவது கபடி தான்.

    குழுவின் சார்பாக விளையாடக்கூடிய அனைவருமே மிகத் திறமை வாய்ந்தவர்கள். பற்பல கஷ்டங்களைத் தாண்டித்தான் இத்தகைய வெற்றிகளை அவர்கள் தக்கவைத்துக் கொண்டார்கள். எங்கள் குழுவில் இருந்து முதலில் மாவட்ட அளவிற்குச் சென்றனர். பின்னர் அதிக உழைப்பு மற்றும் கடினப் பயிற்சியின் காரணமாக  மாநில அளவிலான போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டு வெற்றிவாகை சூடினோம். நாங்கள் அத்துடன் எங்கள் முயற்சியை நிறுத்திவிடவில்லை மேலும் முயன்று கபடியில் தேசிய அளவிலான கோப்பையையும் வென்றிருக்கிறோம்.

    நாங்கள் பெண்களுக்கும் தனியாகக் குழு தொடங்கியுள்ளோம். எங்கள் ஊர் கிராமம் என்பதால் ஆரம்பத்தில் பெண்களை விளையாட அனுமதிக்கவில்லை. இத்தகைய எதிர்ப்புகளையும் மீறிப் பெண்கள் குழுவினை ஆரம்பம் செய்தோம். ஆரம்ப காலத்தில் பெண் என்பதால் சரியாக பயிற்சிகளை மேற்கொள்ள முடியாத போதிலும் அதனையும் மீறிக் கடினப் பயிற்சிகளைச் செய்து பெண்கள் சாதனை படைத்தார்கள். பெண்கள் குழுவில் ஒரு அணியும் ஆண்கள் குழுவில்  ஜீனியர், சப்-ஜீனியர் அணியும் இருக்கிறது. பெண்கள் குழு 2013-ல் தொடங்கப்பட்டது. தற்பொழுது நன்றாகச் செயல்பட்டு வருகிறது. நாங்கள் போட்டிகளை நடத்துவது மட்டுமின்றி பயிற்சிகளையும் அளித்து வருகிறோம். தினமும் காலை மாலை இரண்டு நேரங்களிலும் பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் பல இடங்களுக்கும் சென்று போட்டிகளில் விளையாடி வருகிறோம்.

    எங்களது குழுவின் சார்பாக அதிக இடங்களில் போட்டிகள் நடத்தியது என்று பார்த்தால் கபடிதான். குழு ஆரம்பித்தது முதலாக இன்றுவரை மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றது கபடி மட்டுமே வருட வருடம் மே மாதம் எப்பொழுது வரும் என்று மக்களை எதிர்பார்க்க வைப்பது கபடி. கபடியில் பெண்கள் அணியின் சார்பில் இருவரும் ஆண்கள் அணியின் சார்பில் ஒருவரும் தேசிய அளவிலான கோப்பையைப் பெற்றிருக்கிறார்கள். சேரன் விளையாட்டுக் குழு என்ற பெயரில் கபடிக்கென்று போட்டிகளை வருட வருடம் மே மாதத்தில் நடத்துகிறோம். பொருளாதார அடிப்படையில் உதவியவர்கள் எங்களுக்கு அதிகம். ஊர்ப்பொதுமக்களின் உதவியும் மற்றும் போட்டிகளின்போது அரங்கங்கள் அமைப்பது மற்றும் உணவு, பொருள் உதவிகளை அரசியல்வாதிகள் சிலர் செய்து கொடுத்தனர்.

    குறிப்பாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் மே மாதத்தைத் தேர்ந்தெடுக்கிறோம். மேலும் மழையின் தாக்கம் குறைந்த மாதம் என்பதாலும் நாங்கள் இந்த மாதத்தைத் தேர்ந்தெடுத்தோம். இந்த ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் காரணமாக மட்டுமே ஜீன் மாதத்தில் விளையாட்டினை நடத்துகின்றோம்.

    ஹாக்கி விளையாட்டிற்குச் செலவு மிகவும் அதிகம். இந்தக் குழு ஆரம்பித்த பொழுது ஹாக்கி விளையாட்டானது பஞ்சுத் தொழிற்சாலைகளுக்காக விளையாடப்பட்டது. ஆனால் தற்பொழுது அதிக அளவு ஹாக்கி விளையாடப்படுவதில்லை.  உடுமலைப்பேட்டையில் தான் ஹாக்கி அதிகம் விளையாடப் பட்டது. பெண்கள் அணியில் கல்லூரி அணி மட்டுமே ஹாக்கியில் விளையாடிக் கொண்டிருக்கிறது.[hide]

    எங்கள் குழு மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. நிறைய அரசியல் கட்சித் தலைவர்களும் எங்கள் குழுவிற்குத் தங்களின் ஆதரவினை அளிக்கிறார்கள்.

    ஆரம்பித்து 31 ஆண்டுகள் ஆகிறது. இடையில் நான்கு வருடம் மட்டுமே நடத்தவில்லை. அதனைத் தொடர்ந்து தற்பொழுதுவரைப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதன் முதலாக 1989-ம் ஆண்டு 301 ரூபாய்க்கு ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது 20001 ரூபாய் வரை போட்டிகளை நடத்துகிறோம். பெண்கள் அணிக்கு 15001 ருபாய் வரை கொடுக்கப் படுகிறது. போட்டியில் பங்கேற்கும் அனைத்து அணிகளுக்குமே குழுசார்பாக பரிசுகள் வழங்கப் படுகிறது.

    பெண்கள் அணியில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் ரூபிகா மற்றும் திலகா இருவரும் கபடியில் தேசிய அளவில் கலந்து கொண்டார்கள். சென்ற ஆண்டு ஆண்கள் அணியில் கபடியில் சிவ கணபதி தேசிய அளவிலான கோப்பையைப் பெற்றிருக்கிறார். வருடா வருடம் திருப்பூரில் நடத்தப்பட்டு வரும் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு எங்கள் குழு தொடர்ந்து ஐந்து ஆண்டுகாளாக தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக எங்கள் ஆணி வெற்றி வாகை சூடியிருக்கிறது. அதற்கு இவர்களின் கடின உழைப்பும், விடாமுயற்சியுமே காரணமாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.

    குழுவில் 50-க்கும் மேற்பட்ட நபர்கள் இருக்கிறோம். குறிப்பாக ரவிச்சந்திரன், ரமேஷ் என்கிற ரங்கநாதன், மற்றும் ஆண்கள் அணிப் பயிற்சியாளர் M.தென்றல் பாலு, பெண்கள் அணிப் பயிற்சியாளர்கள் R.K. செந்தில் குமார், A.கணேசன் ஆகியோரைக் கூறலாம்.

    எஸ்.வி.புரம் சேரன் கபாடிக்குழு நடத்தும் 31-ம் ஆண்டு மாநிலம் தழுவிய மாபெரும் கபடிப் போட்டி ஆண்கள் மற்றும் பெண்கள் வருகிற ஜீன் 29 மற்றும் 30 சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை நடைபெறவிருக்கிறது. போட்டியில் வெற்றி பெறும் ஆண்கள் அணிக்கு முதல் பரிசு ரூபாய் 20001 மற்றும் இரண்டாம் பரிசு ரூபாய் 15001 மற்றும் மூன்றாம்  பரிசு  ரூபாய்  10001 மற்றும் நான்காம் பரிசு ரூபாய் 7001 மற்றும் நினைவுக் கோப்பைகள் வழங்கப்படுகிறது. வெற்றிபெரும் பெண்கள் அணிக்கு முதல் பரிசு ரூபாய் 15001 மற்றும்  இரண்டாம் பரிசு ரூபாய்  10001 மற்றும் மூன்றாம் பரிசு ரூபாய் 7001  நான்காம் பரிசு ரூபாய் 5001 மற்றும் நினைவுக் கோப்பைகள் வழங்கப்படுகிறது. போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களுக்கு தங்கும் இடம் மற்றும் உணவு வசதிகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டியினைக் காண அனைவரையும் எங்கள் குழுவின் சார்பாக வருக வருக என அன்புடன் வரவேற்கிறோம்.[/hide]

    இந்த இதழை மேலும்

    புறப்பட ஆயத்தமாகுங்கள்

    Your problem is to bridge the gap between

    Where you are now and the goals you intend to reach.

    – Earl Nightingale

    நீங்கள் நாடு முழுவதும் ஒரு சுற்றுப்பயணம் போக முடிவு செய்திருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். பயணப்பட்டியலை முன்கூட்டியே திட்டமிட்டு, பயணம் போகும் முறையும், பயணநேரமும், தங்கும்  இடமும்,தேவையான முன்பதிவுகளும்,வேண்டிய அனுமதிகளும் கொண்ட ஒரு முறையான பயணப்பட்டியல் தயாரித்தப்  பின்புதான் பயணம் தொடங்குவீர்கள்.

    இது போலத்தான் வாழ்க்கையையும், தொழிலையையும்    திட்டமிட்டு    அமைத்துக் கொண்டால்தான்  அது  வளர்ச்சியும், வளமும் உடையதாக அமையும்.

    உதாரணமாக, உங்கள் எடையை குறைக்க  விரும்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம், முதல் வேலை தற்போது தங்கள் எடை எவ்வளவு  என கணக்கிட்டுக் கொள்வதுதான், செய்ய வேண்டிய  உடற்பயிற்சி என்ன?  ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் செய்வது? பயிற்சிகளை எப்படி மேற்கொள்வது? என்று திட்டமிடுவீர்கள் அல்லவா? அது போல் தான் உங்கள் முன்னேற்றத்திற்கும் மாதவாரியாக திட்டமிடல் வேண்டும்,  காலக் கணக்குப் போட்டு வைத்து  கொண்டு அதைப் பின்பற்றவேண்டும்.

    ஒரு தொழிலை தொடங்க முடிவு செய்து விட்டீர்கள்,  எங்கு, எப்போது  ஆரம்பிப்பது  என்றும் முடிவு செய்து   விட்டீர்கள், முதலீடுகள் பற்றியும் முடிவு செய்து விட்டீர்கள்,  யார்  நிர்வகிக்கப் போகிறீர்கள் என்பது பற்றியும் முடிவு செய்து விட்டீர்கள்,   தொழில் தொடங்கினால் வருமானம் எவ்வளவு இருக்க வேண்டும், செலவு எவ்வளவு இருக்க வேண்டும்  என்ற எதிர்பார்ப்பு (Expected)  நிதிநிலை அறிக்கையும் கணக்கிட்டு விட்டீர்கள்,  பிறகு என்ன?  புறப்பட ஆயத்தமாகுங்கள்.

    தொழில் தொடங்கிய பின்பு, முதல் ஆண்டு வரவும் செலவும் சமமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும் (Break Even Point), நஷ்டம்   இல்லாமல் நிர்வாகம் செய்ய  வேண்டும்,  தொழில் நிலையான பிறகு ஆண்டுக்கு இவ்வளவு வருமானம், இவ்வளவு நிகர லாபம்  என்பதைக் கணக்கிட்டு லாபகரமாக தொழிலை நடத்த வேண்டும்.

    ஆண்டு ஒன்று  கழிந்த பின்பு, மாதம்  ஒன்றுக்கு நிகர லாபம் எவ்வளவு  என்பதைக் கணக்கிட்டு    மாதம்  ஒரு முறைஒப்பிட்டுப் பார்த்து  கொள்ள வேண்டும்.

    ஆண்டு மொத்த நிகர லாபம் பார்த்ததைப் போல, மாதம் ஒரு முறை நிகர லாபம் கணக்கிட்டுப் பார்ப்பதைப் போல, ஒரு நாளைக்கு எவ்வளவு  வருமானம்  என்பதையும், நிகர லாபம் எவ்வளவு நிற்கும் என்பதையும், ஒவ்வொரு நாளும் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

    அது போல  ஒரு ஆண்டு வருமானம், ஒரு மாத வருமானம், ஒரு நாள் வருமானம்  பார்த்து தொழில் நடத்துவது போல்,  ஒரு மணிக்கு  எவ்வளவு   வருமானம்,  எவ்வளவு  நிகர லாபம்  என்பதை கணக்குப்  பார்க்க வேண்டும், “ஒரு மணி நேர வருமான” ஒப்பீடுதான், நீங்கள் எந்த உயரத்தில் இருக்கிறீர்கள் என்பதை அது  காட்டும். இன்னும் எந்த அளவு உயர வேண்டும் என்றஎதிர்பார்ப்பைக் கூட்டும்,  அதற்கு இன்னும் என்ன என்ன தேவைகள் வேண்டும் என்பதையும் ,எதில் எதில், என்ன என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதையும் அது சுட்டிக் காட்டும்.

    மேலை நாடுகளில் மிகப்பெரிய நிறுவனங்களில்  தற்போது  “ ஒரு மணி நேர வருமானம்” கணக்கீடு முறைதான் பின்பற்றப்படுகிறது, காலக் கணக்குத்தான் மிக முக்கியமானது.

    இந்த ஒரு மணி நேர நிகர லாபம் கணக்கு ஒப்பீடு தான், ஆரோக்கிய வளர்ச்சிக்கு வித்தாகும், இதை உயர்த்துவதற்கேற்ப முயற்சியும், உழைப்பும் அதிகமாக தேவைப்படும், தொழில்நுட்ப அறிவும், நுணுக்கங்களும், அனுபவ சாலிகளின் ஆலோசனையும் இப்போது உங்களுக்கு அதிகம் தேவைப்படும்,

    5 ஆண்டுகள் கழித்து நிறுவன விரிவாக்கத்திற்கு  முயற்சித்தல்  ஆரோக்கியமான வளர்ச்சிக்கு அடித்தளமாக அமையும்.           உங்களுடையதற்போதை சொத்தின் மதிப்பையும் கணக்கிடுங்கள், அடுத்து வரும் ஆண்டுகளில்  உங்களுடைய   சொத்து மதிப்பு  எவ்வளவு உயர  வேண்டும் என்பதையும்  கணக்கிடுங்கள். அதை  அடைவதற்குரிய  முயற்சியை  ஆரம்பியுங்கள்.

    முன்னை விட தற்போது உள்ள, உங்களது  திறமைகளின் வளர்ச்சி பற்றியும், தொழில்  நுணுக்க  மேம்பாடு  பற்றியும் ஆராயுங்கள்,  எந்தத் துறையில் பலமுள்ளவராக இருக்கிறீர்கள் ? எந்த  துறையில் பலவீனமாக இருக்கிறீர்கள்?குறைகள் என்ன? அதை  நிவர்த்திக்க வேண்டிய  வழிகள் என்ன? பலவீனத்தை பலமாக மாற்றிக் கொள்ள வேண்டிய வழிகள் என்ன?  என்பதை ஆராய்ந்து  அதற்குரிய   நிவாரண முறைகளை பின்பற்றுங்கள்.[hide]

    அந்த ஒரு மணி நேர  வருமான  உயர்விற்கு வரும் மாதங்களில் எந்தெந்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென்று    யோசித்து   அதைச் செய்யுங்கள்,

    சுற்றுலா பயணத்திட்டம் தயாரிப்பதைப் போல, எடையை குறைக்க உடற்பயிற்சித் திட்டம் தயாரிப்பதைப் போல, வருமானம் உயர வளர்ச்சித் திட்டங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

    ஜெயிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும், தளராத மன உறுதியும், இடைவிடாத முயற்சியும்,கடின உழைப்பும், சரியான திட்டமிடுதலும், தவறாத தொலைநோக்குப்பார்வையும், முடியும் என்ற நேர்மறை எண்ணங்களும்  உங்களை உச்சத்திற்கு இட்டுச்செல்லும், நிதானம், அமைதி, பொறுமை,  செயலாற்றும் திறன்  உங்கள் வெற்றிக்கு வழி காட்டும்.

    இதற்கு உதாரணமாக எனது பாசத்திற்கினிய நண்பர் உடுமலையைச் சேர்ந்த எஸ், குமரன் அவர்களைச் சொல்லலாம், தானத்திற்கு சமமானது நிதானம் என்று சொல்வார்கள், அந்த நிதானம் இவருக்கு அணிகலன்,

    “ பொறுத்தார் பூமி ஆள்வார்” என்பது பழமொழி, அந்தப்

    ‘பொறுமை’ இவரின் அழகு.

    இங்கிதமாகப் பேசும் பழக்கம் இவருக்கு நெற்றிப் பொட்டு, அமைதியாகவும், அடக்கமாகவும்  இருப்பது இவருக்கு ஆதார சுருதி.

    “விவாதங்கள்   பிரச்சனைகளை ஆரம்பித்து வைக்கும், மௌனம்  பிரச்சனையை நிறுத்தி வைக்கும், புன்னகை பிரச்சனையை தீர்த்து வைக்கும்”   என்பார்கள்,  இவரின் மௌனமும், இவருடைய  புன்சிரிப்பும்  பல பிரச்சனைகளைத் தீர்த்து வைத்திருக்கின்றன.

    பேச வேண்டிய நேரம் எது?  அமைதியாக இருக்க வேண்டிய நேரம் எது?  என்பதை நன்கு அறிந்தவர்,  யோசித்துப் பேசுவதும், நிதானமாகப்  பேசுவதும், தேவையறிந்து பேசுவதும், அவையறிந்து பேசுவதும் இவருடைய பழக்கங்கள்,  விட்டுக்கொடுக்கும் குணமும், அனுசரித்துப் போகும் பண்பும், சமாதானங்களை ஏற்றுக் கொள்ளும் பாங்கும் சமுதாயத்தில் இவரின் மதிப்பை பெரிய அளவு உயர்த்தி உள்ளது. வெற்றியையும், தோல்வியையும் சமமாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும், எதையும் தாங்கும் இதயமும், கள்ளம் கபடமில்லாத  மனமும்,  மென்மையான பேச்சும், மேன்மையான பண்பு நலன்களும் இவருக்குரிய மிகப் பெரிய பலங்கள்,  இவை அனைத்தும் இவருக்கு பெற்றோர் தந்த  வரங்கள்.

    மகிழ்ச்சியின் போது ஒரு  குறுஞ்சிரிப்பும், யாரையும் பகைத்துக் கொள்ளாத நேர்த்தியும் இவரை ஒரு தனித்துவமாகக் காட்டுகிறது. உடுமலை வியாபாரிகள் சங்கத்தின் செயலராக 30 ஆண்டு காலமாக இருந்து வருகிறார், மேலும்  தமிழ்நாடு  வணிகர்  சங்கப்   பேரமைப்பின், திருப்பூர் மாவட்ட பொருளாளராகவும், தேவி கௌரி அம்மன் கோயில்  நிர்வாகக்குழு ஒருங்கிணைப்பாளராகவும்  இருந்து வருகிறார்,

    இவர்  அதிர்ந்து பேசாத  அன்பு நண்பராக,

    உளமார்ந்த நட்புக்கு உதாரணப் புருஷராக

    உயர்ந்த பட்ச நம்பிக்கைக்கு உரியவராக

    உழைத்து  முன்னேறிய  உண்மையாளராக –  இருப்பது பெருமைக்குரியது,

    ஒரு வாழ்வியல் தத்துவப் பேராசிரியர் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார், ஒரு கண்ணாடி  ஜாடியை மேஜையின்  மீது வைத்தார் , அதில் 4  ஸ்ரீம் அகலம் உள்ள பெரிய பெரிய கற்களை உள்ளே  ஜாடி முழுவதும் போட்டார்,

    ஜாடி முழுவதும் நிறைந்து  விட்டதா?   என்று மாணவர்களைக் கேட்டார், மாணவர்கள்  ‘ஆம் நிறைந்து விட்டது ‘  என்றார்கள்,

    அடுத்து பேராசிரியர்  2  ஸ்ரீம் அகலமுள்ள சிறு கற்களை உள்ளே போட்டார், பெருங்கற்களுக்கு இடையே உள்ள சந்துகளில் இந்த கற்கள் போய்  நிறைந்தன,

    இரண்டாம் முறையாக மாணவர்களிடம ; “ஜாடி நிறைந்து விட்டதா ?  ”என்று கேட்டார்,

    ‘ஆமாம் நிறைந்து விட்டது’  என்றார்கள் மாணவர்கள்,

    அடுத்து ஒரு குறிப்பிட்ட அளவு மணல் எடுத்தார், ஜாடிக்குள்  இந்த மணலைக் கொட்டினார், கற்களுக்கிடையேயுள்ள சந்துகளில்  மணல் நிறைந்தது, மூன்றாம் முறையாக மாணவர்களிட;  “ஜாடி நிறைந்து விட்டதா ?  ”என்று கேட்டார்,

    “ஆமாம் நிறைந்து விட்டது’  என்றார்கள் மாணவர்கள்,

    அப்பொழுது அவர் சொன்னார், நான் கடைசியில் போட்ட மணல் நம்மால் முடியாது என்ற தாழ்வு மனப்பான்மையும், அவநம்பிக்கைகளும் ஆகும்.

    பெரிய கற்களும், சிறிய கற்களும் ஜெயிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையும், நம் திறமைகள் மீது கொண்டுள்ள நேர்மறை எண்ணங்களும் ஆகும். ஜாடிக்குள் முதலில் மணலைப்போட்டால் மணலால் நிரம்பி விடும்.  பெரிய கற்களுக்கும், சிறிய கற்களுக்கும் இடம் இல்லாமல் போய்விடும்,  அது போல்தான் ஜாடி என்பது நமது மனம். ஜாடிக்குள் மணலை முதலில் போடுவது போல் தாழ்வு மானப்பான்மையும், அவநம்பிக்கைகளையும் நம் மனதில்  நிறைத்துக் கொண்டால் தன்னம்பிக்கைக்கும், நேர்மறை எண்ணங்களுக்கும் இடம் இல்லாமல் போய்விடும்.

    நமது மனம் முழுவதும் ஜெயிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையால்  நிரப்பிக் கொள்ள வேண்டும், ஜெயிப்பதற்கு இது தான் முதல் படி, நெஞ்சிலே நம்பிக்கை நிறைய வேண்டும் நிகழ்வுகளில் சரியான திட்டம் வேண்டும் தன்பலம் என்ன? அது பெருக வழி என்ன? என்று தெளிவு வேண்டும், கால கணக்கு ஒன்று கட்டாயம் இருத்தல் வேண்டும் மணிக் கணக்கில் வருமானம் உயர வேண்டும் அது உயர விடை ஒன்று கிடைக்க வேண்டும் வெற்றிக்கு அந்த விடை பதிலாக அமைய வேண்டும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    பெண்ணிய உரிமைகள்

    ஒரு பெண் இரவில் தனியாக பாதுகாப்பாக எப்பொழுது செல்ல முடியுமோ அப்போது தான் நாம் சுதந்திரம் பெற்றதற்கான அடையாளம் என்றார் மகாத்மா காந்தியடிகள்.

    நாம் சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் ஆனாலும் நாம் உண்மையான சுதந்திரம், குறிப்பாக பெண்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்பது அன்றாட செய்திகளை காண்பவர்களுக்குத் தெரியும்.

    இந்தியாவில் பல்வேறு இடங்களில் பெண்கள் கடத்தப்பட்டு, அல்லது தனியாகச் சென்றால் மானபங்கப்படுத்தி கொலை செய்வது எதைக் காட்டுகிறது.

    நேதாஜி படையில் பெண்கள் படைக்குத் தலைமை தாங்கிய தமிழ்ப் பெண் லட்சுமி முதல் பன்னாட்டு நிறுவனமான பெப்ஸியின் நிர்வாகத் தலைவர் நூயி, விண்வெளி வீராங்கனை சாவ்லா, புரட்சி வீராங்கனை சல்மா மற்றும் விளையாட்டுத்துறையில் உலகப் புகழ் பெற்ற வீராங்கனைகள் நாட்டிற்கு புகழ் சேர்த்தாலும் அவர்களுக்கு என்ன கைமாறு செய்கிறோம்.

    பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் தான் அதிகம். பணிக்குச் செல்லும் இடங்களில் பாலியில் தொந்தரவு, வரட்சனைக் கொடுமை. ஈவ்டீசிங், பிரசவ காலங்களில் அரசு மருத்துவமனைகளில் போதிய கவனிப்பு இல்லாமை, வீட்டில் தனியாக உள்ள பெண்களிடம் நகைக் கொள்ளை ஆகியவை முக்கியமாக கவனிக்கப் பட வேண்டியவை.

    இந்தியாவில் குடியரசு தின விழாவில்  பங்கேற்று உரையாற்றிய அமெரிக்க அதிபர் ஒபாமா இந்திய பெண்களைப்பற்றி உயர்வாக ஆற்றிய உரையின் ஒரு பகுதி.

    எனது இந்திய பயணத்தில் எனக்குப் பிடித்த விஷயம் ராணுவத்தில் பெண்களைப் பார்த்தது தான். ஜனாதிபதி மாளிகையில் எனக்கு அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதைக்கு தலைமை தாங்கியவரும் ஒரு பெண் தான்.

    இந்தியாவில் ஆட்சி நடத்துவது உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தங்களால் சாதிக்க முடியும் என்று பெண்கள் காண்பித்துள்ளனர். தலைவர்களில் பலர் பெண்கள் தான்.

    இந்தியாவின் முன்னேற்றத்தில் இளம் பெண்கள் முக்கிய பங்கு வகித்து வருகிறார்கள்.

    பெண்கள் முன்னேறினால் தான் அந்த நாடும் முன்னேறும், என்பதை நாம் அனுபவ பூர்வமாக உணர்ந்து இருக்கிறோம். ஒரு நாடு முன்னேற விரும்பினால், பெண்களின் திறமைகளை புறக்கணிக்கக் கூடாது.

    பெண்களுக்கு சுதந்திரமும், உரிமையும் கிடைப்பதில் ஆண்களுக்கு பங்கு உண்டு என்பதை அவர்கள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

    நமது மகன்களுக்கு கிடைக்கும் அதே வாய்ப்புகள் மகள்களுக்கும் கிடைக்க வேண்டும், பெண்கள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும்.

    இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான பெண்கள் வேலைக்குச் செல்வதால் குழந்தைகள், கணவன் ஆகியோருக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்து விட்டு, அவசரமாகப் பணிக்கும் செல்ல வேண்டும்.

    குடும்பம், அலுவலகம் ஆகிய இருவேறு சூழ்நிலைகளால் மகளிர் தாய்மை என்பதில் முழுமை அடையவில்லை. ஏனென்றால் குழந்தைகளை வளர்க்கப் புட்டிப்பால், குழந்தைகள் காப்பகங்கள் ஆகியவற்றை நாட வேண்டும்.

    இயல்பாகவே குழந்தை வளர்ப்பு பெண்களைச் சார்ந்துள்ளது. மொத்ததில் பெண்கள் குடும்பத்தில் சம்பளத்துடன் கூடிய உயர்தர வேலைக்காரியாகவும், அலுவலகத்தில் வேளைப்பளு நிறைந்த அலுவலராகவும் உள்ளனர்.

    ஒன்றைப் பெறவேண்டுமாயின் ஒன்றை இழந்தாக வேண்டும் என்ற நிலையினை பெண்கள் உடைத்தெறிய வேண்டும்.[hide]

    சங்கப் பெண்பாற் புலவர் பொன்முடியார் கூறியது போல “ஈன்று புறந்தருதல் என் தலை கடனே” என நின்று விடாமல் பெற்றபிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி படிக்க வைத்து சமுதாயத்தில் நல்ல நிலைக்கு கொண்டு வருவது வரை பெண்களின் பங்குள்ளது.

    இன்று மகளிர்க்காகவே பல பத்திரிக்கைகள் உள்ளன. அவற்றின் மூலம் பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அலசி, ஆராய்ந்து தீர்க்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல், ஊடகங்களும் பெண்களுக்கான தீர்வுகளை, வெளி உலகத்திற்கு கொண்டு வந்து, மற்றவர்களும் விழிப்புணர்வு அடைய உதவுகின்றன.

    மேலும் சில ஊடகங்கள் வெவ்வேறு துறையில் சிறப்பு பெற்றசாதனை பெண்களை கண்டறிந்து, அவர்களைப் பாராட்டி விருது வழங்கி கௌரவம் செய்கின்றன.

    சகல துறைகளிலும் ஆண்களுக்கு நிகராக பெண்கள் முன்னேறி இருக்கிறார்கள். ஆண் பெண்களுக்கு எதிரி அல்லர். ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள் என்பது போல ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னாலும் ஒரு ஆண் இருப்பான் என்பது நியதி.

    எந்த செயலையும் செய்வதற்கான அதீத சக்தி ஆண் பெண் இருவரிடமும் உள்ளது. தாய் ஆவதும், மனைவி ஆவதும், கணவனுக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் நண்பனாவதும் அவளுக்கு எளிதான செயலாகும்.

    ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் உதவினால்  இன்று உலகில் காணும் அமைதியின்மை, சமாதானமின்மை, போராட்டம், யுத்தம் ஆகியவற்றைஎளிதாக ஒழித்து விடலாம்… பெண்ணும் இச்சமுதாயத்தில் சாதித்து விடலாம்…

    “பெண்மை ஒளிருட்டும்

     பெண்ணினம் மலருட்டும்”[/hide]

    இந்த இதழை மேலும்

    தடுப்பணை

    சிம்ரனுக்கு இன்றைக்கு கார் புக் பண்ணி கொடுத்தேன் என்றேன்.  சாப்பிட்டுக் கொண்டிருந்த தீபிகா… ஒரு நிமிடம் தட்டை விட்டு… கண்ணை நிமிர்த்தி என்னைப் பார்த்தாள்… ஏதோ யோசனையோடு, வித்யா… தோசைத் கல்லில்… தோசை அதிகமாக சூடாகி கருகவிடுவது போல தோன்றியது… கையில் தோசை திருப்பியோடு என்னை திரும்பி பார்த்தார்.

    கோபிகா தான் அதிக ஆச்சரியத்தை என் மீது காட்டியவள்… என்னப்பா சொன்னீங்க…

    சிம்ரனா!

    என்று கேட்டாள்…

    எங்கள் வீட்டு சாப்பாட்டு வேளை கலந்துரையாடல்கள் ஸ்டீவன் ஹாக்கிங் முதல் ஸ்ரீதேவி வரை ஷேக்ஸ்பியரில் இருந்து ஷேமநலநிதி வரை பல சப்ஜெக்ட்டுகள் அலசப்படும்… ‘310 பர் YUMA’ என்ற திரைப்படத்தில் இருந்து எடுக்கப்பட்ட ‘Grace’ என்று சொல்லக்கூடிய துதி சொற்களை குழந்தைகள் சொன்ன பிறகு சாப்பிட தொடங்குவது வழக்கம்.  03.10 மணிக்கு வருகின்ற இரயிலில் கதாநாயகனை ஏற்றி அனுப்புவது தான் படமே.  அது ரஸ்ஸல் க்ரோவ் நடித்த படம்.  அருமையாக இருக்கும். திரைப்படங்களை குறித்தும் பேச்சு போய் வருவது வழக்கம்.  தமிழ் ஆங்கிலம் என்று மொழி பேதமின்றி பல திரைப்பட கதைகளை பேசி அலசுவோம்.   வழக்கமாக காணப்படும் உற்சாகம் இல்லையே தீபிகா… என்ன யோசனை? என்று கேட்டேன்… ஆமாம்பா கொஞ்சம் அழுதேன் என்றாள்.

    அடடா… ஏன் என்றேன்…

    கணக்கு வரவே மாடேன் என்கிறது அப்பா?  என்றாள்.

    வாஸ்த்தவமான பேச்சு.

    கணக்கு வரவில்லை என்றால் அழவேண்டியதுதான்!

    சரிதானே!  அழுதால் கணக்கு வந்துவிடுமா?

    உனது பலம் நம்பிடு கண்ணே

    கனவை நனவாக்கிடு பெண்ணே!

    யாரென்ன சொன்னால் என்ன

    ஏளனம் செய்தால் என்ன

    தூற்றுவோர் தூற்றட்டும் அங்கே

    மாற்றம் ஓர் நாள் வரும் இங்கே

    உனக்கென காலம் வந்தாலே

    தீராத கடனை தீர்த்திடுவாயே!…

    உழைப்பும் வேர்வையும் உயர்வை தருமே

    வென்றால் விதியும் தலைவணங்கிடுமே!

    கருவரை முதலாய் கல்லறை வரையில் போராட்டமே அதை வென்றிடுவோமே!  யுத்தம்!  யுத்தம்!

    யுத்தம்!  யுத்தம்!

    வாகை சூடுவோம்!  ஏ…  வானம் தாண்டுவோம்!  என்று நான் பாடும்பொழுது, கூட பாட தொடங்கினாள் தீபிகா…

    இந்தப் பாடல் நவீன திரை இசைப் பாடல்தான்.   இந்தக் கட்டுரையை… சென்னை… மதுரை இடையிலான…  விமான பயணத்தின் பொழுதுதான், எழுதிக்கொண்டிருக்கிறேன்… விமான பைலட்டின் பெயர்

    சிம்ரன் பார்மர்… என்று விமான பணிப்பெண் தகவல் தெரிவித்தார்.

    அதற்கு முன்பு அறிவிப்பில் பேசும் பொழுது… பைலட் ஆண்குரலில் பேசியதாக ஞாபகம்… சிம்ரன் என்கிற பெயரில் ஆண்களும் உண்டு போல.

    தீபிகா… பாடிய பாடல்…

    அவளுடைய அப்பா தொடங்கி அவளும் சேர்ந்து பாடிய பாடல்… சமீபத்தில் வெளியாகி…. சீனாவில் கூட வெற்றிப்படமாக ஓடி சாதனை படைத்த ‘தங்கல்’ படத்தினுடைய தமிழ் தழுவலில் வந்த பாடல் ஆகும்.  தீபிகா… உன்னால் கணக்கு போட முடியும் என்று நம்ப வைப்பதற்காக இந்தப்பாடல் உதவிக்கு வந்தது.  உண்மையில் தங்கல் படத்தில் மல்யுத்தம் போடுவதற்காகத்தான் பெண்களை அப்பா ஊக்கப்படுத்தி பயிற்சி கொடுத்து தயார் செய்து போட்டியில் வெற்றி பெற செய்வார்.  தமிழில் உணர்வு மங்காமல், உருவம் வழுவாமல்…  திரு. இராஜேஷ் மலர்வண்ணன் – மொழி மாற்றம் செய்துள்ளார்.  அவரது பேட்டி ஒன்றை யு ட்யூபில் பார்த்தேன்.  சினிமா மொழி பெயர்ப்பில் எவ்வளவு நுணுக்கங்கள் உள்ளன என்று தெளிவாக கூறியிருக்கிறார். உதட்டசைவுக்கு ஏற்ற வார்த்தைகளை தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும் அவருக்கு.

    அன்றைக்கென்று பார்த்து தொலைக்காட்சியில் காமன்வெல்த் போட்டிகள் ஒளிபரப்பாகி கொண்டு இருந்தன.  இது 21 ஆவது காமன்வெல்த் போட்டிகள்.  மல்யுத்தத்தில் வெல்ல வேண்டி, கீதா, பபிதா என்கின்ற தன் பெண்களுக்கு பயிற்சியளித்த மஹாவீர் பொஹாட் என்னும் பெரியவர் உடைய வேடத்தில் அமீர்கான் நடத்த படம் தான் தங்கல்.  அதில் தன்னுடைய உடல் வலிமையை, பொலிவை தோற்றத்தை ஏற்றியும் இறக்கியும் காட்டிய அமீர்கான் அவர்களது சாதனை குறித்தும், பட வசூல் சாதனை குறித்தும் ஏராளமாக கட்டுரைகள் வந்துள்ளன.  நானும் வேறு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன்.  ஆனால்… இந்தக்  கட்டுரை அந்த நோக்கத்தில் படைக்கப்பட்டதல்ல… பெற்றோர்களின் வழிகாட்டுதல்… பள்ளிகளின் வழிகாட்டுதல் மாணவ மாணவியர் மற்றும் குழந்தைகளுக்கு எவ்வளவு தூரம் கூட வர வேண்டும்… எவ்வளவு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் என்பது பற்றி கொஞ்சம் அலசலாம் என்று உத்தேசம்.

    வழக்கம்போல எந்த முடிவுக்கும் வந்துவிடப் போவதில்லை… சிந்திக்க வைப்போம் என்பதை தவிர.

    ஒரு கல்யாண வீட்டில் நடனமாடிக் கொண்டு இருக்கிற பெண் குழந்தைகளை மஹாவீர் பொஹாட்… சட்டென, பட்டென அறைவது போல ஒரு காட்சி அமைத்திருப்பார்கள்.  எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர், அவருடைய அப்பா, படிக்கிற காலத்தில் ஒழுங்காக படிக்கவில்லை என்பதற்காக… அவ்வப்போது தேவையான போது… அடித்து… படிக்க வைத்த கதைகளைச் சொல்லுவார்.

    அடியாத புள்ளை படியாது என்று பழமொழி வேறு! உதாரணமாக சில கதைகளைச் சொல்வதற்கு நிறையப் பேர் வீட்டில்… சொந்தக் கதைகள் சோகக் கதைகள் இருக்கலாம்.  அப்படி அடி வாங்கிப் படித்த, படிக்காத இரண்டு நண்பர்கள் IAS  ஆகி இருந்தார்கள் அவர்கள் கதையை எனக்கு கூறினார்கள்.  சுவாரஸ்யமாக இருந்தது.  அதற்காக இந்தக் கட்டுரையை படிக்கின்ற அப்பாக்கள் எல்லாரும் தத்தம் பிள்ளைகளை வெளுத்து வாங்கிவிட கிளம்பி விட முடியாது.  அதற்கு பல காரணங்கள்.  முக்கியமான காரணம்… காலம் மாறிவிட்டது… அமெரிக்காவில்… அடித்தால்… அப்பாவே ஆனாலும், போலீஸ் அள்ளிக்கொண்டு… போய்… முட்டிக்கு முட்டி தட்டுவார்களாம்… இந்தியாவில் அதே நிலைமை, வெளியில் தெரியாமல் நிலவுகின்றது.  பள்ளி ஆசிரியர்கள் படும் பாடு கேட்க வேண்டியதில்லை.  பக்குவமாக… சொல்லித்தரும் பக்குவத்தை அடைந்து கொண்டு இருக்கிறார்கள்.  ஆசிரியர் மீது மாணவர் வன்முறையும் மாணவர் மீது ஆசிரியர் பலப்பிரயோகமும் அடிக்கடி செய்தித் தாள்களில் வந்து ஆச்சரியமும் அதிர்ச்சியும் கொடுத்துக் கொண்டு இருக்கின்றன. அரசு பள்ளி ஆசிரியர்கள் பலர் எனக்கு நண்பர்கள், உறவினர்கள். [hide]

    நிலைமை… ஒன்னும் சொல்றதுக்கு இல்லை சார்…

    என்று புன்னகைத்துக் கொள்கின்றார்கள்.

    இந்தக் கட்டுரையில்… இதற்கு மேல் அந்த திசையில் பயணிப்பது உசிதமில்லை.  அந்த வகுப்பறை நிகழ்வுகள் குறித்து ஆயிரம் கட்டுரைகள் பல கோணங்களில் படிக்க கிடைக்கின்றன. செய்வது என்ன? செய்ய வேண்டியது என்ன என்று சிந்திக்க கருத்துக் களுக்குப் பஞ்சமில்லை.

    எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் வீட்டில் வித்தியாசமான தண்டனை ஏற்பாடு செய்திருந்தார். அதை சொல்வதுதான் நோக்கமே!  அவர் பெயர் கந்தவேல்.  வேல்விழி அவர் மகள்.

    முழு நிகழ்ச்சி கீழே தரப்பட்டுள்ளது

    – முழங்காலுக்கு கீழே அடிக்கலாம்

    – இரப்பர் குச்சி பயன்படுத்தலாம்.

    – பிக் ஷாப்பர்களின் கைப்பிடியில் இருக்கும்… குச்சி இரப்பர் பிளாஸ்டிக் கலந்த காயப்படுத்தாத ஆனால் வலி ஏற்படுத்தக் கூடிய ஒன்றாக அமையும்.

    இந்தத் தருணத்தில் கந்தவேலின் அப்பா அவருடைய பள்ளி ஆசிரியர்களிடம் சொல்லப் போவதாக அடிக்கடி சொன்ன சொற்கள் நினைவிற்கு வந்தன.

    சார்… இவன… குறும்பு செஞ்சான்னா?…

    கண்ணு ஒன்னை மட்டும் விட்டுட்டு…

    தோல உரிச்சுப்புடுங்க சார்… அதுல

    உப்புத் தடவிடுங்க சார்… நான் எதும்

    கேட்கமாட்டேன்!”

    கேட்கவே அதிபயங்கரமாக இருக்கிறது – இல்லையா.

    அப்படித்தான்… சொல்லியிருக்கிறார்…

    இராணுவ எதிரிகளைக் கூட இப்படி சித்திரவதை செய்ய… மனித உரிமைகள் குழுவினர் அனுமதிக்கமாட்டார்கள்…  பெற்ற குழந்தையை எப்படி இப்படி தண்டனை கொடுத்து திருத்த முடியும்…

    திருவள்ளுவரை துணைக்கு அழைத்துத்தான் இதனை விளக்க முடியும்…

    “கடிதோச்சி மெல்ல எறிக…”

    என்பது இதுதான் போலும்…

    அப்பா வேகமாக தாக்குவது போல… ஓங்க கூட இல்லையே… வெறும் சொற்களில்தானே மிரட்டி இருக்கின்றார்.  கந்தவேலுடைய தோல் எந்த பாதிப்பும் அடையவில்லை… கண்கள் தாக்குதல் பட்டியலில் இல்லாத காரணத்தால் மட்டுமன்றி பிற காரணங்களாலும் நன்றாகவே இருந்தன… இருக்கின்றன…   கை… கால்களின் வெளியே தெரிகிற இடத்தில் இரப்பர் தடிகொண்டு வீறிட்டால்… கீற்றுப் போல… இரத்தம் பாய்ந்து அந்த இடம் தடித்துப் போய் காணப்படுகின்றது…

    அதனால் முதுகின் குறுக்கே அடித்துவிட்டு

    சட்டை போட்டுக்கொள்ளலாம்…

    சின்ன வதம்பச்சேரியின் 1980 – 90 களில் நடக்கும் சௌடேஷ்வரியம்மன் திருவிழாவில்…

    தீஷ்கோ… பராசக்தி… தீஷ்கோ…

    தீஷ்கோ… தாயே… தீஷ்கோ…

    தீஷ்கோ… அம்மா… தீஷ்கோ…

    என்று கன்னட மொழியில்… கத்தியால் தம்மைத் தாமே… தாக்கிக்கொள்கிற போது… கத்திக்கொண்டே உணர்ச்சி வசப்பட்டு…

    இரு தோள்பட்டையின் சற்றுக் கீழே உள்ள…

    ட்ரைசெப்ஸ் தசையின் கீழ்பகுதியில்…  கத்தியால் பட்டென பலமுறை அடித்துக்கொண்டு, துளிர்த்து வருகின்ற இரத்த துளிப்பூக்களின் மீது… விபூதியை பூசி தூவி விட்டு திரும்ப வருவார்கள்… இதை ‘கத்தி போடுதல்’  என்று ஒரு சடங்காக செய்வார்கள்…

    கந்தவேல் அதைப் பார்த்திருக்கலாம்…

    இரத்தம் சிந்துமளவு அடிப்பது… கர்ண கொடுரமானது அது நடக்கவில்லை.

    நிற்க…

    இங்கே அடி வாங்கியது யார்?

    அங்கேதான் ஒரு திருப்பம்…

    வேல்விழி இல்லை… அடிவாங்கியது கந்தவேல்தான்…

    அழுவது… வேல்விழி… ஏன்?

    அடிக்கிறவள் ஏன் அழவேண்டும்!

    மாறாக வலிக்கிறவர் தானே அழ வேண்டும்!

    இரண்டாவது… சரியாகத்தான் நடக்கிறது…

    வலிப்பது வேல்விழிக்குத்தான்!

    எப்படி?

    என்று விளக்கும்பொழுதுதான் புரியும்!

    முன்பெல்லாம் அவ்வப்போது கந்தவேல்…

    வேல்விழிக்கும்… விழாமலருக்கும்… (இரண்டாவது பெண்) அவ்வப்போது அடி கொடுப்பதாக மிரட்டுவது உண்டு… சில வேலைகளில் அடிப்பதும் உண்டு.  அது அவருக்கே வருத்தம் தந்தது.

    அதற்குப் பிறகு இத்தனாம் தேதி…

    இத்தனை மணிக்கு

    இன்ன தவறுக்காக

    இவ்வளவு அடிகள்

    கொடுக்கப்படும் என்று அறிவிப்பு கொடுத்துவிட்டு… (சற்று இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு) அந்த நாளில் வேல்விழியும் கந்த வேலும் ஒரு தனி அறைக்குள் சென்றுவிடுவார்கள்.  பெரும்பாலும் அவர்களுக்கு அடி கொடுப்பது அக்கா தங்கைகள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொண்டதை தொடர்ந்து அவ்வாறு போடக்கூடாது என்று சொல்வதற்காக இருக்கும்… இவள் அவளை அடித்திருப்பாலாம் அல்லது அவள் இவளைப்போட்டு தாக்கி இருப்பாள்…   இதற்காக ஒரு டயரி (நாள்குறிப்பு) ஆரம்பித்து தவறுகளும்… திருத்தங்களும்… என்றென்று நடந்தன என்று அவர்கள் கைப்பட எழுதுவார்கள்…[/hide]

    இந்த இதழை மேலும்

    உயிருக்கும் உடம்புக்கும் உள்ள தொடர்பு

    உயிர் குடியிருக்கும் கருவிதான் நமது உடம்பு. இந்த உடம்பெனும் கருவி அவரவர் இலக்குக்குப் போராடவும்  பாடுபடவும்  அடையவும்  செயலாற்றவும்  ஒர முக்கிய கருவியாக அமைந்துள்ளது. இந்த உடம்பைவிட்டு உயிர் பிரியும் (உடம்புக்கும் உயிருக்கும்) இடைப்பட்ட காலத்தில்தான் ஒவ்வொரு மனிதனின் ஆட்டமும், பாட்டமும், ஓட்டமும், சாதனைப் பட்டமும் அடங்கியிருக்கின்றது. இந்த இடைப்பட்ட காலத்தில் உண்மையாகவும், நுண்மையாகவும் போராடியவர்கள் உயர்ச்சியடைந்து விடுகிறார்கள். அப்படிப் போராடாதவர்கள் தாடிச்சியடைந்து விடுகிறார்கள். பின்பு வீழ்ச்சியுற்றவனை உலகம் இகழ்கிறது; எழுச்சியுற்றவனை உலகம் புகழ்கிறது! உயர்ச்சியடைந்தவனுக்கு புகழ்ச்சியுமாக; தாழ்ச்சியடைந்தவனுக்கு இகழ்ச்சியுமான வரலாறுகள் சொந்தமாகிவிடுகிறது.

    நம் உடம்பைவிட்டு உயிர் பிரியும்போது உடம்புதான் இறந்துவிடுகிறது; உயிர் இறப்பதில்லை.

    சூரியன் அதிகாலையில் தோன்றி அந்திமாலையில் மறைவதைப்போல உயிர் உடலைவிட்டுப் பிரிந்து மறைந்துவிடுகிறது. உயிர் பிரிந்தவுடன் உடல் இறக்கிறது. இவ்விருவகையான நிகழ்வுகளைத்தான் ஒருவன் இறந்து விட்டான் என்று நாம் சொல்கிறோம். இவ்விரு நிகழ்வுகளும் இயற்கை நிகழ்வுகளாகும். அந்த நிகழ்வை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. யாராலும்  எதுவாலும் தடுத்து நிறுத்த முடியாத இந்நிகழ்வை வேண்டுமானால் மருத்துவ ரீதியாக கொஞ்சம் தள்ளிக்போடலாம்.

    அன்று செயற்கை விபத்துக்களால் மனிதனுக்கு பெரிதாக ஏற்படும் விபத்துக்களைத் தடுத்து நிறுத்தி உயிரினைக் காப்பாற்றமுடியாது. ஏனென்றால் அக்கால மருத்துவத்தின் வளர்ச்சி அவ்வளவுதான். அக்கால மருத்துவத்தின் மூலம் அன்று அவ்வளவுதான் செய்யமுடிந்தது. தோல் பிய்ந்து விடுதல், ரத்தக் காயங்கள், தலைவலி. காய்ச்சல் போன்றமிகவும் சாதாரண மேலோட்டமானவியாதிகளுக்கும் – விபத்துகளுக்கும்தான் சிகிச்சைதர முடிந்தது. ஆழமான மிகவும் பெரிய வியாதிகளுக்கும் விபத்துக்களுக்கும் சிகிச்சை அளிக்க அன்று முடியவில்லை. ஏனென்றால் அன்றைய விஞ்ஞானம்  அதுவும் மருத்துவ விஞ்ஞானம் அவ்வளவுதான். அந்த மருத்துவத்திற்கு அவ்வளவு சக்திதான் இருந்தது. ஆனால் இன்றோ அப்படியல்ல. கை, கால் ஓடிதல், எலும்பு முறிதல், துண்டு துண்டாக கால்  கை வெட்டப்படுதல் போன்றசெயற்கை விபத்துக்கள் எதுவாக இருப்பினும் அதைச் சரி செய்துவிடும் அளவுக்கு விஞ்ஞானம் முன்னேறியுள்ளது. இதன் மூலம் உயிர்போகும் இயற்கை நிகழ்வை இக்கால மருத்துவ ரீதியாக தள்ளிப்போடலாம்  போடமுடியும்.

    உடல் உள் உறுப்பு நோய்கள் எதுவானாலும் அன்று செய்ய முடியாததை இதனடிப்படையில் இன்று செய்ய இயலும். இன்றைய மருத்துவ விஞ்ஞானமும் இமய மலைபோல் முடிவில்லாமல் முன்னேறிக் கொண்டே சென்று நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

    அன்றிருந்தவனிடம் ஒரு திறமை இருந்தது. இன்றுள்ளவர்களிடம் ஒரு திறமை உள்ளது. நாளை வருபவர்களிடமும் ஒரு திறமை இருக்கும்.

    ஐயாயிரம் ஆண்டுகளில் நீள்சிதான் மனிதன் என்பவன் என்று ஒரு ஏட்டுக் குறிப்புசாட்சியுடன் சொல்கிறது. இன்று இப்படி வளர்ந்துள்ள இந்த உலகம் திடீர் என்று வளர்ந்ததல்ல. மனித நீள்சியால் வளர்ந்ததுதான்.[hide]

    உணவுமுறை, மிகவும் கடின உழைப்பு, வேலைப்பளு, புறச் சுற்றுச்சூழலால் நோய் நாடாமை, சுத்தமான காற்று, அனைத்திற்கும் மேலாக சுற்றுப்புறசுகாதாரம், நோய் எதிர்ப்பு சக்தி, விந்தணுவின் வீரியம் போன்றவர்கள் அன்றைய சமுதாயத்திற்குள் உள்ளிருந்ததனால் அக்காலத்தவர்கள் உடல் சக்தி வாய்ந்தவர்களாக விளங்கியிருந்தார்கள்.

    இன்றைக்கோ இவைகளெல்லாம் நேர் எதிராகவும், மாறாகவும் உள்ளதனால் தேகத்தில் சக்திமிக்கவர்களாக நம்மால் ஜொலிக்க இயலவில்லை. இயற்கை சூழலால் அவர்களுக்கு அந்த சக்தி எவ்வளவு சாதகமாக அவர்களுக்கிருந்ததோ அவ்வளவு பாதகமாக இயற்கைச் சூழல்கள் நமக்கு இருக்கின்றன.

    உடல் வலு நன்றாக இருக்கும்வரை ஆடுகிறான். ஓடுகிறான். ஓடுகிறபாம்பை மிதிக்கிறான். உடலை வேகமாக இயக்கி இன்னும் என்னென்னமோ செய்கிறான். அப்படியிருந்தவன் இடத்தைவிட்ட நகர்ந்து இடம்பெயராமல் ஒரே இடத்தில் கிடையில் இருக்கும் கட்டிலில் கிடை சேர என்ன காரணம்?  உடம்பிற்குத்தான் வலு இருக்கின்றது. உயிருக்கு வலு இல்லை.  என்றாலும் உயிர் உடம்பில் உள்ளவரைத்தான் வலுவான அந்த உடலிலுள்ள உடல் உறுப்புகள் செயலிழக்காமல் செயல்பட்டு இயங்கும்.

    தேக வலு குறைந்து கட்டிலில் கிடை விழுந்தவன் கொஞ்ச காலம் மிகவும் கசப்பான பட்டில் வாழ்க்கையை இளமையில் நடமாடிய இனிப்பான நினைவுகளை நினைத்துக் கொண்டு சாவு வராதா, எப்பொழுது சாவோம், செத்தால் பாரமில்லையே என்று கருப்புச் சொற்களுடன் கடந்த கொண்டிருக்கிறான். கடக்கக் கடக்க காலம் செல்கிறது. காலம் செல்லச் செல்ல உடல் வலு இன்னும், இன்னும் குறைந்துகொண்டே வருகிறது. உடம்பிலுள்ள வலு பூராவும் குறைந்து இறுதியில் மனிதன் இறந்துவிடுகிறான்.

    உடலைவிட்டு உயிர் பிரிந்துவிட்டது; பிரிவதற்குக் காரணம் உடம்பில் உயிர் உட்காந்திருக்க  குடியிருக்க உடலில் வலு சுத்தமாக இல்லை. அதனால்தான் உடல் இறந்துவிட்டது. உயிர் பிரிந்துவிட்டது.[/hide]

    இந்த இதழை மேலும்

    தடம் பதித்துச் சென்ற மாமனிதர்கள்- 4

    சர்தார் வல்லபாய் படேல்( 1875-1950)

    இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றபெருந்தலைவர்கள் வரிசையில் காந்தியடிகள், நேரு முதல் இரண்டு இடங்களில் இருந்தனர் என்றால் மூன்றாம் இடத்தில் வைத்து மக்களால் மதிக்கப்பட்டவர் சர்தார் வல்லபாய் படேல் ஆவார்.

    ஆக்கம் அதர்வனாய்ச் செல்லும் அசைவிலா

    ஊக்கம் உடையா னுனடி( குறள் 594)

    சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழிகேட்டுக் கொண்டு போய்ச் சேரும் என்ற கருத்துடைய வள்ளுவரின் குறளிற்கு ஏற்றபடி வாழ்ந்த வெற்றி கண்டவர் படேல் ஆவார். இவரது வெற்றியை பறைசாற்றும் வகையில் இவரது உருவச்சிலை, 182 அடி உயரம் கொண்டு குஜராத்தில் நர்மதை நதிக்கரையில் உலகிலேயே மிக உயரமான சிலை என்றபெரும் பேரைப் பெற்று எல்லோருடைய கவனத்தைக் கவர்ந்து கொண்டு உள்ளது. இவரது வாழ்க்கை வரலாறு பற்றியும் அவரது சாதனைகள் பற்றியும் தெரிந்து கொள்வது ஒரு ஆவலூட்டம் விஷயமாகக் கருதி அவற்றை இக்கட்டுரை விவரிக்கின்றது.

    வல்லபாய் படேல், குஜராத்தில் கரம் சாத் என்ற இடத்தில் பிறந்தார். சோமாபாய், நாசிபாய், விதால் பாய் என்றமூன்று மூத்த சகோதரர்களும், காசிபாய் என்ற இளைய சகோதரரும் தைபா என்ற இளைய சகோதரியும் இவர் உடன் பிறந்தவர்கள் ஆவர். இவரது தந்தை சுவாமி நாராயனின் சம்ப்ரதாயின் பக்தர். தந்தையோடு தினமும்  20 கி.மீ தூரம் வரை கால்நடையாகவே ஆக்கோவி|யிற்கு செல்வதன் மூலம் அவர் உடல் உறுதியானது. இரும்பு மனிதர் என்ற பெயர் அவருக்கு மிகவும் பொருந்தும். இவர் தன்னுடைய மெட்ரிகுலேசன் படிப்பை முடித்ததும், தான் ஒரு வக்கீல் ஆக வேண்டும் என்று விரும்பினார். வக்கீல் படிப்பற்கான புத்தகங்களை மற்றவர்களிடமிருந்து வாங்கிப்படித்து அந்தத் தேர்வுகளை குறைந்த மாதங்களிலேயே எழுதி பாரிஸ்டர் பெற்றார் என்பது அவரது சிறப்பாகும். பாரிஸ்டர் பட்டம் பெற்ற பின்பு தன்னைச் சுற்றியுள்ளவர்களின் பிரச்சனைகளை அறிந்து, அவர்கள் தன் பிரச்சனைகளிலிருந்து விடுவித்தார்.

    1917 ல் மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். குஜராத்தில், கேடா என்ற இடத்தில் பஞ்சம் ஏற்பட்டு விவசாயிகளால்  ஆங்கிலேயருக்கு வரிகட்ட இயலாமல் விவசாயிகள் போராட்டத்தில் இறங்கினர். அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆங்கிலேயருக்கு வரிகட்டமால் வெற்றி பெற்றது அவரது சிறப்பு இதே போல் பார்டோலி என்ற இடத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக விவசாயிகள் நடத்திய வரிகொடாமை போராட்டத்தில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இவரது தலைமை சர்தார் என்ற பட்டத்தைப் பெற்று இவர் சர்தார் படேல் என்று அழைக்கப்பட்டார். இவர் காந்திஜியை சந்தித்தப்பின், தன்னுடைய வக்கீல் தொழிலை புறக்கணித்துவிட்டு சுதேசி இயக்கத்தில் சேர்ந்து, உப்பு சத்தியா கிரகப் போராட்டம், வெள்ளையனே வெளியேறு என்று பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு பலமுறை சிறைசென்றார். ஆங்கிலேய அரசு இவரது திறமை கண்டு அவருக்கு பல்வேறு பதவிகளைத்தர முன் வந்தும் அவர் அவற்றை புறக்கணித்தார் அயல் நாட்டு பொருட்களை உபயோகிப்பது பாவம் என்று அவருடைய அந்நிய ஆடைகளை மற்றும் பொருட்களை நெருப்பில் இட்டுக் கொளுத்தினார். விவசாயிகளிடம் இவர் கொண்டிருந்த  அன்பை நினைவில் கொண்டு, இந்த ஒற்றுமைக்கான சிலையே உருவாக்கும் பல்வேறு கட்டத்தில் லட்சக்கணக்கான இந்திய விவசாயிகளிடமிருந்து அவர்கள் உபயோகித்த இரும்பினால் ஆன கருவிகள் வரவழைக்கப்பட்டு, அவற்றைஉருக்கி அவரது சிலையின் சில பாகங்கள் செய்ய பயன்படுத்தப்படப்பட்டது என்பது ஒரு சிறப்பு அம்சமாகும். இவர், ப்ளேக் என்ற தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட தன்னுடைய நண்பர்களுக்கு உதவியபோது அதனால் இவர் ஒரு கோவிலில் தனியாகத் தங்கி, தன்னுடைய முயற்சியால் தன்னை விடுவித்துக் கொண்டார் என்ற செய்தி அவரது மனஉறுதியை வெளிப்படுத்துகின்றது.[hide]

    சுதந்திர இந்தியா தோன்றியதும், முதல் பிரதமராய் அவர் பதவியேற்கும் வாய்ப்பு இருந்தும், காந்தியின் அறிவுரையின் படி நேரு முதல் பிரதமராய் பணியேற்க வழிவிட்டு, இவர் முதல் துணைப்பிரதமராகவும், முதல் உள்துறை அமைச்சராகவும் பதவி ஏற்றார். ஆங்கிலேயரின் பிடியிலிருந்து இந்தியாவை விடுவித்த பின், தலைவர்களின் எண்ணம், ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்குவதில் இருந்தது. நாடு முழுவதும் ஆங்காங்கே, துண்டு துண்டாக மன்னராட்சி நடந்து கொண்டிருந்த 565 ராஜ்யங்களை ஒன்றிணைத்து வி.பி. மேனனின் ஒத்துழைப்புடன் ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கிய சிற்பி என்னும் இந்தியாவின் பீஸ்மார்க் என்றும் பலராலும் பாராட்டை பெற்றவர் வல்லபாய் படேல் ஆவார். அகண்ட பாரதம் உருவான கதை சாதாரணமானது அல்ல. வல்லபாய் படேல் இந்தியாவை ஒருங்கிணைக்க சகல வழிகளையும் பின் பற்றினார்.

    சர்ச்சைகள் எதிர்ப்புகள் எழுந்தாலும் இரும்பு மனிராக நின்று சமாளித்தார். டிசம்பர் 15  ம் நாள் 1950 ஆண்டு இறந்த இவருக்கு 1991 ம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவரது 143 வது பிறந்த நாளின் போது இந்தியாவின் இன்றைய பிதரமர் திரு. நரேந்திர மோடியால் இந்த சிறப்பு மிக்க இரும்பு மனிதருக்கான சிலை திறந்து வைக்கப்பட்டது.  அதிகமான உலோகங்களும், கான்ரீடும் கலந்து செய்யபட்ட எத்தகைய இயற்கை பாதிப்பால் பாதிக்கப்படாத அளவு முன் எச்சரிக்கையுடன் உருவாக்கப்படாத அளவு முன்எச்சரிக்கையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இச்சிலைக்கு மேல் சீட்சாக்க வேலையை சினாவைச் சேர்ந்த நிறுவனம் தன் பங்கை செய்துள்ளது என்பது மற்றொரு சிறப்பாகும். குஜராத் அரசாங்கம் 2013 ம் ஆண்டிலிருந்து இதற்கான நிதியை ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கி சுமார் 3000 கோடி வரை இச்சிலை உருவாக்க ஒத்துழைப்பு தந்தது. அம்மண்ணின் மைந்தன் வல்லபாய் படேலின் சேவையை என்றென்றும் நினைவு கூறும் வகையில் உள்ளது என்று இக்கட்டுரையின் மூலம் பதிவு செய்வதில் பெருமை அடைவோம் நாம்.[/hide]

    இந்த இதழை மேலும்

    குழந்தை வளர்ச்சி

    குழந்தை தன்னுடைய ஒவ்வொரு வயதிலும் அடையும் வளர்ச்சி நிலைகள் குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியைச் சுட்டிக் காட்டும்.

    முதல் வருடத்தில் குழந்தையின் வளர்ச்சி

    முதல் வாரத்தில்

    • கை, கால்களைக் குறுக்கி படுத்திருக்கும்
    • தலையைப் பக்கவாட்டில் ஆட்டும்
    • தலை ஆட்டும்போது கண்களும் அதன் திசையிலே ஆடும்.

    முதல் மாதத்தில்

    • கால்களை நீட்டும்
    • தலையைத் தூக்க முயற்சிக்கும்
    • பிறர் முகத்தினை உற்று நோக்கும்
    • நகரும் பொருட்களைப் பார்க்கத் தொடங்கும்,  சிரிக்கத் தொடங்கும்

    இரண்டாவது மாதத்தில்

    • கழுத்து நிற்கத் தொடங்கும்
    • ஒரு பொருள் இருந்த இடத்தில் இருந்து நகர்ந்த பின்பும் அவ்வெற்றிடத்தையே உற்று நோக்கும்.
    • கூ… போன்ற சத்தங்களை எழுப்பும்.
    • சத்தங்களைக் கேட்டு சிரிக்கும்.

    மூன்றாவது மாதத்தில்

    • தலையையும் கழுத்தையும் தூக்கும்
    • நிற்க வைக்கும் பொழுது தலை தளராமல் நிற்கும்.
    • பொம்மைகளைப் பார்த்து கையை ஆட்டும்
    • ‘ஆ’, ‘ங’ போன்ற ஒளிகளை எழுப்பும்
    • கைகள் இரண்டையும் ஒன்றாகக் கொண்டு வர முயற்சி செய்யும்
    • கிலுகிலுப்பை போன்றபொருட்களைக் கையால் பிடிக்கும்.

    நான்காவது மாதத்தில்

    • பொருட்களை எடுத்து வாய்க்குக் கொண்டு செல்லும்
    • நிமிர்த்தி நிற்க வைக்கும் பொழுது கால்களை உந்தும்.
    • சத்தமாகச் சிரிக்கும்           உணவைப்  பார்த்து மகிழ்ச்சியடையும்
    • தெரிந்தவர்கள் குழந்தையிடமிருந்து விலகும் பொழுது அழும்.
    • தன் கையை உற்று நோக்கும்.

    ஐந்தாவது மாதத்தில்

    • ஒரு கையில் இருந்து மற்றொரு கைக்கு பொருட்களை மாற்றும்.

    ஏழாவது மாதத்தில்

    • குப்புறவிழும்
    • தவழத் தொடங்கும்
    • சிறிது நேரம் கையை ஊன்றி உட்கார முயற்சிக்கும்
    • பொருட்களை நோக்கி கையை நீட்டி அவற்றை எடுக்க முயற்சிக்கும்
    • சிறிய உருண்டையான பொருட்களைக் கையில் எடுக்கும்.
    • ஒற்றைச் சொற்களைப் பேச ஆரம்பிக்கும்.
    • கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்த்துச் சிரிக்கும்
    • அம்மாவுடன் இருப்பதையே விரும்பும்

    பத்தாவது மாதத்தில்

    • எந்த பிடிமானமும் இல்லாமல் உட்காரும்
    • உட்கார்ந்த நிலையில் இருந்து எழ முயற்சிக்கும்
    • ஏதாவது ஒரு பொருளின் உதவியுடன் நிற்கும், தவழும்
    • கீழே விழும் பொருட்களை எடுக்கும்
    • பெருவிரல் மற்றும் ஆட்காட்டி விரல் உதவியுடன் பொருட்களை எடுக்கும்
    • பொருட்களைச் சுட்டிக் காட்டும்
    • மாமா, தாத்தா போன்ற சொற்களைக் கூறும்
    • மற்றவர்களை நோக்கி கைகளை அசைக்கும்.[hide]

    ஒரு வயதில்

    • தனியாக எந்தத் துணையுமின்றிச் சில தூரம் நடக்கும்
    • உட்கார்ந்த நிலையிருந்து தானே எழும்
    • புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டும்
    • அர்த்தமுள்ள ஒற்றைச் சொற்களைப் பேசும்
    • பந்துகளை வைத்து விளையாடும்

    ஒன்று வயது முதல் ஐந்து வயது வரை  குழந்தையின் வளர்ச்சி நிலைகள்

    15 மாதங்களில்

    • தனியாக நடக்கும்
    • படிகளில் தவழும்
    • நான்கு முதல் ஆறு வார்த்தைகள் பேசும்
    • காகிதங்களில் கிறுக்கும்
    • வண்ணப் பென்சிலை வைத்துக் கோடுகள் போடும்
    • பெற்றோர்களைக் கட்டி அணைக்கும்
    • தேவையானவற்றைக் கைகளை நீட்டி காண்பிக்கும்
    • மூன்று அடுக்குக் கட்டிகளை உண்டாக்கும்

    18-ஆவது மாதத்தில்

    • ஓடத் தொடங்கும்
    • கைப்பிடியைப் பிடித்துக் கொண்டு மாடிப்படியில் ஏறும், சிறிய நாற்காலியில் உட்காரும்
    • அலமாரிகளைத் திறந்து பார்க்கும்
    • பத்து முதல் பதினைந்து வார்த்தைகளைப் பேசும் ஒன்றிரண்டு உடல் உறுப்புகளைச் சுட்டிக்காட்டும்
    • படங்களை அடையாளம் கூறும்
    • நான்கு அடுக்கு கட்டிகளை உண்டாக்கும்
    • தானே உணவை உண்ணத் தொடங்கும்
    • அணிந்துள்ள துணிகள் ஈரமானால் தாயிடம் சுட்டிக்காட்டும்

    2 ஆவது வயதில்

    • நன்றாக ஓடும், படிகளில் ஏறி இறங்கும் . ஒவ்வொரு படிகளில் ஏறி இறங்க இரு கால்களையும் உபயோகிக்கும்
    • கதவைத் திறக்கும், குதிக்கும்
    • வட்ட வடிவங்களைக் காகிதத்தில் கிறுக்கும்
    • மூன்று சொற்களை ஒன்றிணைத்துப் பேசும்
    • கதைகளைக் கேட்கும்
    • கரண்டியில் உணவை உண்ண ஆர்வம் காட்டும்
    • 7 அடுக்கு கட்டிகளை உண்டாக்கும்

    30 ஆவது மாதத்தில்

    • தன்னை நான் என்று கூறும்
    • தன்னுடைய முழுப்பெயரையும் அறிந்திருக்கும்
    • ஒளிந்து விளையாடப் பிடிக்கும்.

    3 ஆவது வயதில்

    • ஒற்றைக் காலில் சிறிது நேரம் நிற்கும்
    • மூன்று சக்கர மிதிவண்டியை ஓட்டும்
    • 10 அடுக்கு கட்டிகளைக் கட்டும்
    • பெயர் மற்றும் பாலினத்தை அறியும்
    • மூன்று எண்களைத் திருப்பி கூறும்
    • ஆறு சொற்கள் உள்ள வாக்கியத்தைத் திருப்பி கூறும்
    • கைகளைத் தானே கழுவும்
    • காலணிகளை அணிந்து கொள்ளும்
    • உடைகளை அணியவும், அணிந்த உடைகளை அவிழ்க்கவும் முயலும்.

    4வது வயதில்

    • நொண்டத் தொடங்கும்
    • தலையின் மேல் கைகளைத் தூக்கிப் பந்தை வீசும்
    • கத்திரியைக் கொண்டு படங்களை வெட்டும்
    • கூட்டல் மற்றும் பெருக்கல் குறிகளை வரையும்
    • குட்டிக் கதைகளைக் கூறும்
    • தனியாகக் கழிப்பறைக்குச் செல்லத் தொடங்கும்
    • மற்றகுழந்தைகளுடன் இணைந்து விளையாடத் தொடங்கும்

    5 வது வயதில்

    • முக்கோண வடிவத்தைப் பார்த்து வரையும்
    • எடை அதிகமுள்ள 2 பொருட்களைச் சரியாகக் கூறும்
    • 4 வண்ணங்களை அடையாளம் கூறும்
    • 10 சொற்கள் உள்ள வாக்கியத்தைக் கூறும்
    • தானே உடையை அணியவும், அணிந்த உடைகளை அவிழ்க்கவும் செய்யும்.
    • சொற்களின் அர்த்தத்தைக் கேட்கும்

    குழந்தைகள் தூங்கும் நேரம்

    • முதல் வாரத்தில் 16 1/2 மணி நேரம் உறங்கும். அதில் பகல் 8 மணி நேரம் உறங்கும்.
    • முதல் மாதத்தில் 15 1/2 மணி நேரம் உறங்கும். இரவில் 8 1/2 மணி நேரமும், பகல் 7 மணி நேரமும் உறங்கும்.
    • 3 மாதத்தில் 15 மணி நேரம் உறங்கும்.
    • 9வது மாதத்தில் 14 மணி நேரம் உறங்கும். பகலில் தூங்கும் நேரம் இரவை விடக் குறைவாக இருக்கும்.
    • ஒரு வயதில் 13 3/4 மணி நேரம் உறங்கும்.
    • 2 வயதில் 13 மணி நேரமும், 3 வயதில் 12 மணி     நேரமும் உறங்கும்.
    • 3 வயதிற்குப்பின் பகல் உறக்கம் வெகுவாக குறைந்து பெரும்பாலும் இரவிலேயே                       உறங்கும்.
    • இதன்பின் உறங்கும் நேரம் படிப்படியாகக் குறையும்[/hide]

    இந்த இதழை மேலும்

    நான் ஏன் வாயே திறப்பதில்லை?

    வானிலை அறிக்கை கேட்டீங்களா அண்ணே?

    கேட்டேன். புயல் உருவாகி இருக்காம். 24 மணி நேரத்தில மழை இருக்கும்னு சொல்றாங்க. பலத்தக் கடல் காற்று வீசுமாம். மீன் பிடிக்கக் கடலுக்குப்  போக வேண்டாம்னு எச்சரிக்கை விடுத்திருக்காங்க. அதுக்கென்ன?

    ஒண்ணும் இல்லே… சூறாவளின்னு சொல்றாங்க… சரி! அப்புறம் எதிர்ச் சூறாவளின்னு சொல்றாங்களே… அப்டீன்னா என்னண்ணே?

    காற்றின் அழுத்தம் குறைஞ்சா சூறாவளி. காற்றின் அழுத்தம் அதிகமானா எதிர் சூறாவளி… அவ்வளவுதான்!

    புரியலியே… ஏதாச்சும் உதாரணத்தோடு சொல்லுண்ணே…

    அது சரி… வீட்டில உனக்கும் உம் பொஞ்சாதிக்கும் சண்டைன்னு வச்சுக்கோ…

    அய்யய்யோ… என்னண்ணே நீங்க? நான் வாயே தொறக்கமாட்டேன்… அவ காதுல கீதுல வுழுந்து தொலைக்கப் போறது…

    அட நான் ஒரு பேச்சுக்குச் சொன்னேன்டா! அதுவும் வேணாமா? சரி மெதுவா சொல்றேன்…

    வீட்ல உனக்கும் அவளுக்கும் சண்டை வருது. நீ அவளை கன்னாபின்னான்னு திட்றே… அவ வாயே தொறக்கல… பிற்பாடு அவள திட்றதோட இல்லாம இப்ப அவளுடைய அப்பன், ஆத்தா, அண்ணண், தம்பி எல்லாரையும் சேர்த்துத் திட்றே… அவ இப்ப என்ன பண்ணுவா?

    இதப்பாருங்க… என்னை என்ன வேணும்னாலும் திட்டுங்க… ஆன அவங்களப்பத்தி இனி ஒரு வார்த்தை சொன்னாலும் நான் மனுஷியா இருக்க மாட்டேன்னு எதிர்த்து பேசுறா… மொதல்ல நீ பேசினதை எல்லாம் அமைதியா சகிச்சுக்கிட்டா. நீ கத்தினே. அது சூறாவளி. பிற்பாடு அவ குடும்பத்தையே இழுத்தா, அவ எதிர்த்து நின்னா. இது எதிர் சூறாவளி. வேணும்னா வீட்டுல போய் டெஸ்ட் பண்ணேன்….

    ஏதேது குடும்பத்திலக் குழப்பத்த ஏற்படுத்தாம ஓயமாட்டீங்க போலிருக்கே… அண்ணே அண்ணே அங்கப் பாரேன்.. என்னவோ தீப்பிடிச்சி மளமளன்னு எரியுது.. இருவரும் அவ்விடம் நோக்கி ஓடி என்னாச்சி என்று கேட்டனர். பெட்ரோல் தீப்பிடித்துக் கொண்டது. தண்ணீர் ஊத்தி அணைக்கிறோம் என்றனர் கும்பலாக இருந்தவர்கள்.[hide]

    அடப் பாவிகளா… இப்படிச் செஞ்சா தீ இன்னும் கொழுந்துவிட்டு எரியும்.. மணலைக் கொண்டாந்துக் கொட்டுங்க… அணைஞ்சுடும்..

    சரிண்ணே தண்ணிய ஊத்தினா தீ இன்னும் மளமளன்னு எரியும்னு சொல்றீங்களே என்ன காரணம்?

    பெட்ரோலை விட தண்ணிக்கு அடர்த்தி அதிகம். அப்படி ஊத்தினா பெட்ரோல் தண்ணியில் மிதக்கும். பெட்ரோலில் ஏற்பட்ற தீயின் தாக்கம் அதிகமாகி தண்ணி ஆவியாகிப் போய்டும். தீ அணையாது…

    நல்லா சொன்னீங்கண்ணே! இப்ப நான் ஒண்ணு சொல்லட்டா?

    சொல்லேன்!

    நான் என் பொஞ்சாதி திட்டினா வாயை மூடிக்கிட்டு பேசாம இருக்கேன் தெரியுமா? அவளோட கோபம் பெட்ரோல் மாதிரி! நான் ஏதாவது பதிலுக்கு பேசப்போய் அது அவளோட கோபத்தை இன்னம் அதிகமாக்கிடும்கிற பயம்தான்வேற ஒண்ணுமில்லண்ணே…  [/hide]

    இந்த இதழை மேலும்