வாழ்வை வளப்படுத்தும் தத்துவங்கள்
வாழ்க்கை என்பது கடல் மாதிரி. அதில் நம் வெற்றி கடலுக்கடியில் நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாகும். அதை அடையும் வரை அது நம் கண்களுக்குத் தெரியாது. ஆனால் கனவுகளுக்குத் தெரியும்.
உலகம் எனும் பூமியில் பல கரடு முரடான பாதைகளுக்குள் புதைந்தும், ஒழிந்தும் கிடப்பவைதான் வெற்றி எனும் வாசகம். இவ்விலக்கைத் தொட எண்ணற்ற இடையூறு களையும், துன்பங்களையும், கஷ்டங்களையும் எதிர்கொண்டாக வேண்டும்.
கடலுக்கடியில் கிடக்கும் வெற்றியை, சாதனையை எடுக்க வேண்டுமானால் நீரில் மூழ்கி மடியாமல் பயணித்தால் மட்டுமே எடுக்க இயலும். இப்போராட்டத்தில் நீ மாய்ந்தால் உன் இலட்சியமும் இத்துடன் மாய்ந்துவிடும்.
இதயத்திற்குள் இலக்கை வைத்துக் கொண்டு விபத்துக்கள் எதையும் சந்திக்காமல் செல்ல மனித வாழ்வுத் தத்துவங்களைத் தெரிந்து கொண்டு எதையும், எதிலும், செய்யத் துவங்குங்கள்.
இப்படி செயல்படும் போது வேதனைகள் சாதனைகள் ஆகும்.
சவால்கள் சரித்திரமாகும்; கஷ்டங்கள் கல்வெட்டாகும்; சோகம் சுகமாகும்; உழைப்பு உயர்வாகும்; நோக்கம் ஆக்கமாகும்; துன்பங்கள் இன்பங்களாகும்; கனவுகள் நனவாகும்; படிப்பு படைப்பாகும்; நஷ்டங்கள் நன்மைகளாகும்; வாழ்க்கை வசந்தமாகும். தோல்வி வெற்றியாகும்.
செயல்படும்முன் வெற்றியின் ரகசியத் தத்துவங்களைத் தெரிந்து கொண்டு செயலாற்றத் தொடங்குங்கள்.
போராட்டத்தின் முடிவில் வெற்றி என்ற கனியைப் பறிப்பது உறுதிதான்.
கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள்.
அப்பொழுது தான் வாழ்க்கை என்றால் என்னவென்று தெரியும். உங்களை நீங்களே அறிய முடியும்.
சிந்திக்கும் பொழுது எப்போது உங்களைமறந்துவிட்டுச் சிந்திக்கின்றீரோ அப்பொழுது தான் நீங்கள் ஆழமாகச் சிந்திக்கின்றீர்கள் என்று அர்த்தம்.
எனது தத்துவங்கள் என்ற தலைப்பில் நான் எழுதி வைத்துள்ள தனிப் புத்தகத்திலிருந்து இதோ சில தத்துவங்கள்.
படித்துப் பயனடையுங்கள். இத்தத்துவங்கள் படிப்பவர்களின் வாழ்க்கையை கண்டிப்பாகப் பக்குவப்படுத்தும்; மனிதனை பலப்படுத்தும்.
எனது தத்துவங்கள்
- இருபதுக்குத் துறையழகு அறுபதுக்கு நரையழகு
- தீண்டாமை என்பது நமக்கு வேண்டாமையாகும்.
- பல தோல்விகளைக் கடந்தால் தான் வெற்றி என்ற மாளிகையை அடையமுடியும்.
- எல்லாம் தெரிந்தவன் எவனுமில்லை ஒன்றும் தெரியாதவன் உலகிலில்லை.
- கடின உழைப்பால் மட்டுமே உனது நோக்கத்தை (இலட்சியத்தை) முழுவதுமாக எட்டமுடியும்.
- இளைஞர்களே! உங்களுக்குள் ஒரு நோக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். ஏக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்.[hide]
- இளைஞர்களே! நீ நினைத்தது எதையும் சாதிக்கும் சக்தி உன் இளமைக்கு உண்டு.
- மற்றவர்களிடத்தில் கௌரவம் பார்ப்பதனாலேயே நமது கௌரவத்தை இழக்கின்றோம்.
- துரோகங்களில் மிகப்பெரிய துரோகம் நம்பிக்கைத் துரோகம்.
- தீய சிந்தனைகளே உன்னைத் (ஒருவனை) தீயவனாக்குகிறது.
- நம்மிடம் ஒருவர் நாணயமாக நடக்கவேண்டும் என்று நினைப்பது நாணயமல்ல.
- நாம் ஒருவரிடம் நாணயமாக நடந்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதுதான் நாணயம் ஆகும். நம்பிக்கை ஆகும்.
- உலகில் ஒருவரை உருவாக்குவதன் மூலமாகவும் உருவாக்கியவன் உருவெடுக் கின்றான்.
- சிந்தனைகள் இல்லாத வெற்றி என்பது உலகில் எதுவுமில்லை.
- இப்பூமியில் நல்லவர்களாக மடிவதே நாம் பிறந்த மண்ணிற்குச் செய்யும் நன்றிக் கடனாகும்.
- பகையுணர்வு உனது நிம்மதியைக் கெடுத்துவிடும். நட்புறவு உனது நிம்மதியைக் கொடுத்துவிடும்.
- ஆழமாகச் சிந்திக்கின்ற மனிதனுக்கு மட்டுமே ஆறறிவு சொந்தம்.
- மூடநம்பிக்கை உனது முன்னேற்றத்தை கெடுத்துவிடும் (குறைத்துவிடும்). தன்னம்பிக்கை உனது முன்னேற்றத்தை கொடுத்துவிடும்.
- நாணயம் என்பது நமது (ஒருவனது) நாளைய வாழ்க்கையாகும்.
- நாணயத்தை (நேர்மை) சம்பாதிக்கக் கற்றுக்கொள். இதுதான் உனது மதிப்பீடு.
- உன்னை ஆக்கவும், அழிக்கவும் உன்னொருவனால்தான் முடியும்.
- எப்பொழுதெல்லாம் நீ பிறரை நினைக்கின்றாயோ அப்பொழுதெல்லாம் இறைவன் உன்னை நினைக்கின்றான்.
- கடவுளிடம் இருக்கின்ற சக்தியின் அளவும், இளைஞர்களிடம் இருக்கின்ற சக்தியின் அளவும் ஒன்றுதான்.
- வசதியானவர்களைக் கண்டால் பணிவதும், வறியவர்களைக் கண்டால் எதிர்ப்பதும், எளியவர்களை கண்டால் மீசையை முறுக்குவதும் ஒன்றும் என்றும் வீரமாகிவிடாது.
- உன்னை நம்பிய ஒருவரை நீ ஏமாற்றும்பொழுது நீ நம்பிய இறைவன் உன்னை ஏமாற்றிவிடுகிறார்.
- யாருக்கும் தெரியாமல் ஒன்றை செய்து விட்டோம் என்று சந்தோசப் படுகின்றாயோ, அந்த ஒன்று இறைவனுக்குத் தெரிந்ததாகும்.
- அச்சம் உனக்குள் இருக்கும் வரை நீ இறந்த மனிதனுக்குச் சமமானவன் தான்.
- முழுமனதுடன் ஈடுபடும் காரியமே முடிவில் வெற்றி அடையும்.
- நமக்கு வருவதையும் யாராலும் தடுக்க முடியாது; நம்மை விட்டுப் போவதையும் யாராலும் நிறுத்த முடியாது.
- திறமையானவர்களை திறமையானவர் களால் மட்டுமே அடையாளம் காண முடியும்
- நாளை உயிருடன் நீ இருப்பாய் என்பதற்கான ஆதாரம் உன்னிடம் எதுவுமில்லை.
- வாழ்க்கை என்பது புரிந்தவர்களுக்குப் புனிதமானது. புரியாதவர்களுக்குப் புதிரானது.
- உண்மை தட்டினால் திறக்காத கதவுகள் ஒன்றுமில்லை.
- உண்மையாக, நேர்மையாக, நியாயமாக, தன்னலமற்று வாழ்ந்தவனையும் வாழ்கின்ற வனையும் கேட்டுப்பார். வாழ்வின் அர்த்தங்கள் புரியும்; தத்துவங்களின் உண்மைகள் தெரியும்.
- பிறர் புகழ்ந்து பேசும்படி வாழ்பவர்கள் அவர்கள் உயிருடன் இருக்கும் பொழுதே கடவுளாக மதிக்கப்படுகின்றனர்.
- உண்மையானவனாக, நேர்மையா னவனாக, நியாயமானவனாக ஒரு நாள் வாழ்வதும் ஒன்றுதான்; உண்மையற்றவனாக பொய்யான வனாக ஒரு ஜென்மம் வாழ்வதும் ஒன்றுதான்.
- எல்லோரும் முட்டாள், நான் மட்டும்தான் அறிவாளி என்று நினைப்பதுதான் ஒருவன் முட்டாளாகக் காரணம் ஆகும்.
- அடுத்தவர்களை அழிக்க நினைப்பதனா லேயே ஒருவன் அழிகின்றான்.
- இளமையில் கசக்கின்ற வாழ்க்கை முதுமையில் இனிக்கும். முதுமையில் கசக்கின்ற வாழ்க்கை இளமையில் இனித்திருக்கும்.
- எந்த ஒரு கொள்கையும் இல்லாதவன் மனிதன் அல்ல.
- உன்னைப் பற்றி அதிகம் பேசாதிருத்தலே உன்னை உயர்த்திவிடும். உன் மதிப்பை அதிகப்படுத்திவிடும்.[/hide]
இந்த இதழை மேலும்
0 comments Posted in Articles