– 2018 – June | தன்னம்பிக்கை

Home » 2018 » June (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    வாழ்வை வளப்படுத்தும் தத்துவங்கள்

    வாழ்க்கை என்பது கடல் மாதிரி. அதில் நம் வெற்றி கடலுக்கடியில் நிர்ணயிக்கப்பட்ட ஒன்றாகும். அதை அடையும் வரை அது நம் கண்களுக்குத் தெரியாது. ஆனால் கனவுகளுக்குத் தெரியும்.

    உலகம் எனும் பூமியில் பல கரடு முரடான பாதைகளுக்குள் புதைந்தும், ஒழிந்தும் கிடப்பவைதான் வெற்றி எனும் வாசகம். இவ்விலக்கைத் தொட எண்ணற்ற இடையூறு களையும், துன்பங்களையும், கஷ்டங்களையும் எதிர்கொண்டாக வேண்டும்.

    கடலுக்கடியில் கிடக்கும் வெற்றியை, சாதனையை எடுக்க வேண்டுமானால் நீரில் மூழ்கி மடியாமல் பயணித்தால் மட்டுமே எடுக்க இயலும். இப்போராட்டத்தில் நீ மாய்ந்தால் உன் இலட்சியமும் இத்துடன் மாய்ந்துவிடும்.

    இதயத்திற்குள் இலக்கை வைத்துக் கொண்டு விபத்துக்கள் எதையும் சந்திக்காமல் செல்ல மனித வாழ்வுத் தத்துவங்களைத் தெரிந்து கொண்டு எதையும், எதிலும், செய்யத் துவங்குங்கள்.

    இப்படி செயல்படும் போது வேதனைகள் சாதனைகள் ஆகும்.

    சவால்கள் சரித்திரமாகும்; கஷ்டங்கள் கல்வெட்டாகும்; சோகம் சுகமாகும்; உழைப்பு உயர்வாகும்; நோக்கம் ஆக்கமாகும்; துன்பங்கள் இன்பங்களாகும்; கனவுகள் நனவாகும்; படிப்பு படைப்பாகும்; நஷ்டங்கள் நன்மைகளாகும்; வாழ்க்கை வசந்தமாகும். தோல்வி வெற்றியாகும்.

    செயல்படும்முன் வெற்றியின் ரகசியத் தத்துவங்களைத் தெரிந்து கொண்டு செயலாற்றத் தொடங்குங்கள்.

    போராட்டத்தின் முடிவில் வெற்றி என்ற கனியைப் பறிப்பது உறுதிதான்.

    கொஞ்சம் ஆழமாகச் சிந்தித்துப் பாருங்கள்.

    அப்பொழுது தான் வாழ்க்கை என்றால் என்னவென்று தெரியும். உங்களை நீங்களே அறிய முடியும்.

    சிந்திக்கும் பொழுது எப்போது உங்களைமறந்துவிட்டுச் சிந்திக்கின்றீரோ அப்பொழுது தான் நீங்கள் ஆழமாகச் சிந்திக்கின்றீர்கள் என்று அர்த்தம்.

    எனது தத்துவங்கள் என்ற தலைப்பில் நான் எழுதி வைத்துள்ள தனிப் புத்தகத்திலிருந்து இதோ சில தத்துவங்கள்.

    படித்துப் பயனடையுங்கள். இத்தத்துவங்கள் படிப்பவர்களின் வாழ்க்கையை கண்டிப்பாகப் பக்குவப்படுத்தும்; மனிதனை பலப்படுத்தும்.

    எனது தத்துவங்கள்

    • இருபதுக்குத் துறையழகு அறுபதுக்கு நரையழகு
    • தீண்டாமை என்பது நமக்கு வேண்டாமையாகும்.
    • பல தோல்விகளைக் கடந்தால் தான் வெற்றி என்ற மாளிகையை அடையமுடியும்.
    • எல்லாம் தெரிந்தவன் எவனுமில்லை ஒன்றும் தெரியாதவன் உலகிலில்லை.
    • கடின உழைப்பால் மட்டுமே உனது நோக்கத்தை (இலட்சியத்தை) முழுவதுமாக எட்டமுடியும்.
    • இளைஞர்களே!  உங்களுக்குள் ஒரு நோக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.  ஏக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள்.[hide]
    • இளைஞர்களே!  நீ நினைத்தது எதையும் சாதிக்கும் சக்தி உன் இளமைக்கு உண்டு.
    • மற்றவர்களிடத்தில் கௌரவம் பார்ப்பதனாலேயே நமது கௌரவத்தை இழக்கின்றோம்.
    • துரோகங்களில் மிகப்பெரிய துரோகம் நம்பிக்கைத் துரோகம்.
    • தீய சிந்தனைகளே உன்னைத் (ஒருவனை) தீயவனாக்குகிறது.
    • நம்மிடம் ஒருவர் நாணயமாக நடக்கவேண்டும் என்று நினைப்பது நாணயமல்ல.
    • நாம் ஒருவரிடம் நாணயமாக நடந்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பதுதான் நாணயம் ஆகும். நம்பிக்கை ஆகும்.
    • உலகில் ஒருவரை உருவாக்குவதன் மூலமாகவும் உருவாக்கியவன் உருவெடுக் கின்றான்.
    • சிந்தனைகள் இல்லாத வெற்றி என்பது உலகில் எதுவுமில்லை.
    • இப்பூமியில் நல்லவர்களாக மடிவதே நாம் பிறந்த மண்ணிற்குச் செய்யும் நன்றிக் கடனாகும்.
    • பகையுணர்வு உனது நிம்மதியைக் கெடுத்துவிடும்.  நட்புறவு உனது நிம்மதியைக் கொடுத்துவிடும்.
    • ஆழமாகச் சிந்திக்கின்ற மனிதனுக்கு மட்டுமே ஆறறிவு சொந்தம்.
    • மூடநம்பிக்கை உனது முன்னேற்றத்தை கெடுத்துவிடும் (குறைத்துவிடும்). தன்னம்பிக்கை உனது முன்னேற்றத்தை கொடுத்துவிடும்.
    • நாணயம் என்பது நமது (ஒருவனது) நாளைய வாழ்க்கையாகும்.
    • நாணயத்தை (நேர்மை) சம்பாதிக்கக் கற்றுக்கொள்.  இதுதான் உனது மதிப்பீடு.
    • உன்னை  ஆக்கவும், அழிக்கவும் உன்னொருவனால்தான் முடியும்.
    • எப்பொழுதெல்லாம் நீ பிறரை நினைக்கின்றாயோ அப்பொழுதெல்லாம் இறைவன் உன்னை நினைக்கின்றான்.
    • கடவுளிடம் இருக்கின்ற சக்தியின் அளவும், இளைஞர்களிடம் இருக்கின்ற சக்தியின் அளவும் ஒன்றுதான்.
    • வசதியானவர்களைக் கண்டால் பணிவதும், வறியவர்களைக் கண்டால் எதிர்ப்பதும், எளியவர்களை கண்டால் மீசையை முறுக்குவதும் ஒன்றும் என்றும் வீரமாகிவிடாது.
    • உன்னை நம்பிய ஒருவரை நீ ஏமாற்றும்பொழுது நீ நம்பிய இறைவன் உன்னை ஏமாற்றிவிடுகிறார்.
    • யாருக்கும் தெரியாமல் ஒன்றை செய்து விட்டோம் என்று சந்தோசப் படுகின்றாயோ, அந்த ஒன்று இறைவனுக்குத் தெரிந்ததாகும்.
    • அச்சம் உனக்குள் இருக்கும் வரை நீ இறந்த மனிதனுக்குச் சமமானவன் தான்.
    • முழுமனதுடன் ஈடுபடும் காரியமே முடிவில் வெற்றி அடையும்.
    • நமக்கு வருவதையும் யாராலும் தடுக்க முடியாது; நம்மை விட்டுப் போவதையும் யாராலும் நிறுத்த முடியாது.
    • திறமையானவர்களை திறமையானவர் களால் மட்டுமே அடையாளம் காண முடியும்
    • நாளை உயிருடன் நீ இருப்பாய் என்பதற்கான ஆதாரம் உன்னிடம் எதுவுமில்லை.
    • வாழ்க்கை என்பது புரிந்தவர்களுக்குப் புனிதமானது.  புரியாதவர்களுக்குப் புதிரானது.
    • உண்மை தட்டினால் திறக்காத கதவுகள் ஒன்றுமில்லை.
    • உண்மையாக, நேர்மையாக, நியாயமாக, தன்னலமற்று வாழ்ந்தவனையும் வாழ்கின்ற வனையும் கேட்டுப்பார்.  வாழ்வின் அர்த்தங்கள் புரியும்; தத்துவங்களின் உண்மைகள் தெரியும்.
    • பிறர் புகழ்ந்து பேசும்படி வாழ்பவர்கள் அவர்கள் உயிருடன் இருக்கும் பொழுதே கடவுளாக மதிக்கப்படுகின்றனர்.
    • உண்மையானவனாக, நேர்மையா னவனாக, நியாயமானவனாக ஒரு நாள் வாழ்வதும் ஒன்றுதான்; உண்மையற்றவனாக பொய்யான வனாக ஒரு ஜென்மம் வாழ்வதும் ஒன்றுதான்.
    • எல்லோரும் முட்டாள், நான் மட்டும்தான் அறிவாளி என்று நினைப்பதுதான் ஒருவன் முட்டாளாகக் காரணம் ஆகும்.
    • அடுத்தவர்களை அழிக்க நினைப்பதனா லேயே ஒருவன் அழிகின்றான்.
    • இளமையில் கசக்கின்ற வாழ்க்கை முதுமையில் இனிக்கும். முதுமையில் கசக்கின்ற வாழ்க்கை இளமையில் இனித்திருக்கும்.
    • எந்த ஒரு கொள்கையும் இல்லாதவன் மனிதன் அல்ல.
    • உன்னைப் பற்றி அதிகம் பேசாதிருத்தலே உன்னை உயர்த்திவிடும். உன் மதிப்பை அதிகப்படுத்திவிடும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    எங்கிருந்து வர வேண்டும் மாற்றம்

    என்னை மன்னித்து விடுங்கள்.  உங்களை பற்றி உங்களுக்கு தெரியாத சிலவற்றை நான் பட்டியல் போட்டு வைத்திருக்கிறேன்.  அவை சற்று முகம் சுளிக்க வைக்கலாம்.  “வேளைக்கு சோறு இல்லை, நாளைய சோற்றுக்கு வேலை இல்லை” என்ற புலம்பும் சாதாரண இந்திய பிரஞையின் மனநிலையில் இருந்ததுதான் நான் இதை எழுதுகிறேன் என்பதை முதலில் உங்களுக்கு தெளிவுபடுத்திக் கொள்கிறேன்.

    “டீ யா இது இதெல்லாம் மனுஷன் குடிப்பான, நீயெல்லாம் எப்போ மாறப்போறானே தெரியல”  என்று காலையில் மனைவியிடம் ஏற்படும் வாக்குவாதம் இரவில் அரசியல்வாதிகள் பங்கேற்கும்  தொலைக்காட்சி விவாதங்களை பார்த்துவிட்டு “இந்த நாடு எப்போ மாறப்போதோ” என்று ஏக்கத்தோடு முடிகிறது ஒவ்வொரு தனிமனிதனின் ஒவ்வொரு நாளும்.

    மாற்றம் அன்றாட வாழ்வில்  இந்த சொல்லை பல இடங்களிலும் பலதரப்பட்ட மக்களிடமும் நான் கேட்டிருக்கிறேன்.  ஒரு நாள் காற்றோடு கதை பேசவும், மண்ணையும் மனிதர்களையும் திரும்பி பார்க்கவும் என கணினி உலகத்தை விட்டு வெளியே வந்தேன்.  மக்கள் கூடும் இடங்களில் ஒரு காட்சி, ஒரு குழு எம்மக்களிடம் “உங்கள் நாடு முன்னேறயாரிடம் மாற்றம் வேண்டும்?” என்ற கேள்வியை பலதரப்பட்ட மக்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார்கள்.  நான் கவனித்தேன்.  அவர்கள் பதில்களின் வந்த வார்த்தைகள் அரசியல்வாதிகளிடத்தில், அதிகாரிகளிடத்தில், பொதுநலவாதிகளிடத்தில், போலீஸ்காரர்களிடத்தில், பண்பாடு மறந்த மாணவர்களிடத்தில், எழ மறுக்கும் இளைஞர்களிடத்தில் என்று பட்டியல் நீண்டுகொண்டே போனது.

    குழப்பமான மனதுடனும், சோர்ந்த உடலுடனும் வீட்டை அடைந்தேன்.  உதவாக்கரை,  ஒரு வேலைய உருப்படியா செய்றதில்ல,  உன்ன யாரு மாத்தப்போரான்னு தெரிய” என்று தம்பியை நொந்துகொண்டிருந்தார் அப்பா.

    கொஞ்சம் சிரித்துக் கொண்டு, அதை மறைத்துக் கொண்டு என் அறையை அடைந்தேன்.  அறைக்கதவினை தாளிட்டு மனக்கதவினை திறந்தேன்.  எப்போதோ ஓய்வு பெற்ற என் நாட்குறிப்பை தேடி எடுத்தேன்.  இப்போதுதான் என் நாட்குறிப்பில் உள்ள வெள்ளை பக்கங்களுக்கு மறுமணம் நடந்தது.  என் எழுத்தாணியின் மைத்துளிகளால் அந்த பக்கங்களில் நான் எழுதியது இது தான்.[hide]

    “இந்த இந்தியாவில் எல்லோரும் மாற்றத்தை விரும்புகிறார்கள் ஆனால் யாரும் மாறத் தயாராக இல்லை”.   காந்தியும் பகத்சிங்க்கும் மீண்டும் பிறப்பார்களா என்று ஏங்குகிறார்கள் தம்முள் இருக்கும் காந்தியையும் பகத்சிங்யும் மறந்து போய் 10 ஆண்டுகளுக்கு முன் ஜப்பானில் கல்லுடைக்கும் தொழிலாளி ஒருவன் இன்று தொழிலதிபராக இருக்கிறார்.  100 ஆண்டுகளுக்கு முன் ஒன்றுமில்லாமல் போகும் என உலகம் நினைத்து கியூபா இன்று தனித்து நின்று ஜெய்திருக்கிறது.  காரணம் அவர்கள் மாற்றத்தை வெளியில் இருந்து எதிர்பார்க் கவில்லை தம்முள் இருந்து வெளிக் கொணர்ந்தார்கள்.  ஆனால் நம் இந்தியாவில் ஏழை எப்போதும் ஏழை தான் காரணம் நாம் எல்லோரும் மாற்றத்தை எதிர்பார்க்கின்ற நேரத்தில் அதை உருவாக்க மறந்துபோகிறோம்.

    உலகம் மாறவேண்டுமெனில் நாடுகள் மாறவேண்டும்,  நாடு மாறவேண்டும் எனில் சமுதாயம் மாறவேண்டும்.  சமுதாயம் என்பது தனிமனிதர்களின் கூட்டமைப்பின்றி வேறென்ன.

    ஓ உறங்கிபோன இந்தியர்களே! விழித்துக் கொள்ளுங்கள்.  ஒவ்வொரு இந்தியனும் தன் வாழ்க்கையை சீரமைக்க தன்னைத்தானே பரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது.  உங்களுக்குள் ஒரு லெனின், லிங்கன், காந்தி உறங்கிக்கொண்டிருக்கின்றனர். அவர்களை  நீங்கள் எழுப்பும் வரை இந்த தேசத்தின் தூக்கத்தையும் துக்கத்தையும் குலைக்க முடியாது.  எல்லா தரப்பினரையும் குறைகூறிக் கொண்டிருக்கும் உன் எண்ணத்தில் வேண்டும் மாற்றம்!!

    தானுண்டு தன் வேலையுண்டு என்று நினைக்கின்ற உன் சிந்தனையில் வேண்டும் மாற்றம்…!

    “நாமாவது இந்த நாட்ட மாத்திரவதாவது”  என்றவரிகள் பொய்க்க உன் நம்பிக்கையில் வேண்டும் மாற்றம்…!

    ஒரு தலைவன் பிறக்க மாட்டானா என்ற ஏக்கத்தில் வேண்டும் மாற்றம்…!

    நம் வாழ்க்கை நிலை இப்படி தான் என்றஉன் குருட்டு நம்பிக்கையை மண்ணோடு புதைத்து விருட்சமாக உந்தி எழ வேண்டும் மாற்றம்…!

    துருப்பிடித்த போன உன் நாடி நரம்புகளில் லட்சிய வெறி ஏற்றஉன் மனதில் வேண்டும் மாற்றம்…!

    தோழர்களேÐ என் வார்த்தைகள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.  இந்த உலகத்தில் எல்லாமே மாறுதலுக்குட்பட்டவை தான்.   இந்த சமுதாயம் உங்களுக்கே தெரியாமல் உங்களை உங்களுக்குள்ளேயே ஆழமாக புதைத்துவிட்டது.  இப்போது இருக்கும் நீங்கள் நீங்கள் அல்ல.  சமுதாயத்தின் நாடகத்தில் சிறந்த நடிகன் விருத்திற்காக நீங்கள் நடித்துக்கொண்டிருக்கீர்கள்.  உங்களுக்குள் புதைக்கப் பட்ட உங்களை தோண்டி எடுங்கள்,  தேசத்தின் மாற்றத்திற்கான முதல் விதை உங்களுடையதாக இருக்கட்டும்.

    நான் என்பதை நீங்கள் மாற்றியவுடன், நீ என்பதை மாற்றுவதற்கான சக்தி பிறக்கிறது உங்களிடம்.  நீயும், நானும் சேரும் போது சமுதாயத்தை மாற்றுவதற்கான சக்தி பிறக்கிறது.

    மாறுவோம், மாற்றுவோம்!!![/hide]

    இந்த இதழை மேலும்

    வாழ்வின் இலக்கு

    “பாதை திரும்பும் திசையெல்லாம்

      மலர் இல்லை, முட்கள்

      மட்டும் வாழ்வில்லை

      மலர்கள் உன்னை

     குத்தாது இருப்பது இல்லை.

     முட்கள் உன்னை வருடாது

     விடுவதும் இல்லை”

    வாழ்வு என்னும் பாதை பல கோணங்களிள் திரும்பும். அதன் எண்ணம் என்ன? அதன் பாதை தான் என்ன? துவக்கம் நம்மை உயிர் கொள்ள வைத்தால் முடிவு நம்மை நிறைவடைய வைக்கும். ஆனால் பயணம் நம்மை எதன் அடிப்படையில் அழைக்கின்றது. நாம் நடந்த பாதையில் நடந்தவர் இலர். ஆனால் நாம் எங்கும் நம்மை பிறருடன் என்றும் ஒப்பிடுகின்றோம் எதற்கு? வாழ்வு தரும் புரிதல் தான் என்ன? பாதை தரும் மாற்றம் தான் என்ன?

    தோல்விகளை எல்லாம் சந்தித்தவன் வாழ்க்கை அவனுக்கு நம்பிக்கை என்னும் புரிதலை தரும். வெற்றியை மட்டும் பார்த்தவன் பாதை அவனுக்கு தன்னடக்கம் என்னும் மாற்றத்தை தரும். ஆனால் இது அனைவருக்கும் சமமானதாய் அமையுமா? இறைவன் அனைவருக்கும் ஒரு குணத்தை தந்தான். பொறாமை பலருக்கும் பலவிதங்களில் வரும். சிலருக்கு பெற்றுவிட்டானே என்று வரும், சிலருக்கு பெற்றேவிட்டானே என்று வரும். ஆனால் எதற்கு அது? படைத்தவன் இவனுக்கு இது தான் என்று படைத்தவிட்டான் அல்லவா? பிறகு எதற்கு?

    நம் வாழ்வு திரும்பும் திருப்பத்தில் நாம் அடையும் முதல் தொல்லை இந்த பொறாமை தான். இல்லையே என்று எண்ணும் அனைவரும் ஒன்றை எண்ண வேண்டும். நமக்கு அதனை பார்க்க முடிகின்றது என்று.  திரும்பும் திருப்பங்களில் எல்லாம் நாம் பொறாமைக்கு அடிமையானால் நாம் எண்ணும் இலக்கு நம்மை  பல தொலைவிற்கு அழைக்கும். இன்னும் நாம் அடையும் தூரம் வெகு தொலைவில் உள்ளது.

    பிறந்த குழந்தை பார்க்கும் அடுத்த பாதை, பார்த்த குழந்தை தவழும் பாதை, தவழ்ந்தவன் நடந்த பாதை, நடந்தவன் பள்ளி சென்ற பாதை, பள்ளி கல்லூரி ஆன பாதை, கல்லூரி தொழிலோ, வேலையோ ஆன பாதை, இறுதியில் அவன் அடைவது மரணம் என்னும் பாதை. அப்பாதைகளின் அவன் அடைந்த தத்துவம் தான் என்ன? புரிதல் தான் என்ன? அடைந்த இலக்கு தான் என்ன? இதனை சிந்திக்கவே அவன் வாழ் நாட்கள் போதுமானதாய் அமையுமோ? என்னவோ?

    இந்த வாழ்க்கைக்கு அவன் கொண்ட அழுக்குகள் தான் எத்தனையோ? அழுக்காய் படிந்த மனம் இறுதியில் ஒன்றை என்னும் இதுவரை தான் செய்தது என்ன? ஒன்றும் இல்லை! இதற்கு மேல் தன்னால் செய்ய முடிவது என்ன? அதுவும் ஒன்றும் இல்லை.!

    “கணிச்சிக் கூர்ம்படைக் கடுந்திறல் ஒருவன்

    பிணிக்கும் காலை, இரங்குவிர் மாதோ நல்லது

    செய்தல் ஆற்றீர் ஆயினும், அல்லது

    செய்தல் ஓம்புமின்” என்றது புறநானாறு அன்று, இந்நிலை இன்று நிலைத்து தான் நிற்கின்றது. வாழ்க்கை கூறும் உண்மை தான் என்ன? நாம் அடையும் நன்மை தான் என்ன? நன்மை செய்வதாய் கிடைக்கும் பயன் தான் என்ன? தீமை செய்வதால் வரும் விளைவு தான் என்ன? பலனாலும் விளைவாலும் நாம் இறுதியில் பெறுவது தான் என்ன? நற் பெயர் இல்லை அவப்பெயர் ஒன்று தான்.[hide]

    ஒருவருக்கு நன்மையாய் தோன்றுவது ஒருவருக்கு தீமையாய் தோன்றும். நாம் ஒன்று செய்து விட்டோம் என்று எண்ணி மகிழும் போது தான் ஒன்றை உணர்வோம். அந்த செயல் இன்னும் முடியவில்லை என்று. எந்தவொரு செயலுக்கும் துவக்கம் இருக்கலாம் முடிவென்பதே இல்லை. முடிந்து விட்டது என்று நாம் என்னும் காரியம், மீண்டும் எடுத்த இடத்தில் முளைத்து நிற்கும். இது தான் வாழ்வின் திருப்பம். பள்ளி படிப்பை முடித்தோம் என்று திரும்பும் போது கல்லூரி படிப்பு வரும். முடித்தோம் என்றால் தொழில் படிப்பு வரும், அதனுடன் இதுவரை நாம் காணாத வாழ்க்கை படிப்பு வரும் இரண்டும் நாம் மண்ணை அடையும் வரை நம்மை பலவிதங்களில் திருப்பும்.

    நாம் என்றும் புதிய கோணங்களில் சிந்திக்க பழக்கப்பட்டவர்கள். எதையுமே வேறு எண்ணத்தில் பார்த்தே பழகியவர்கள். பள்ளி முடிந்ததும் பொற்றோர் நம்மை அடுத்த பள்ளி(கல்லூரி)யில் சேர்ப்பதாய் எண்ணுவர், ஆனால் நாமோ வாழ்வையே நிர்ணயிக்கும் வயது வந்ததாய் இறுமாப்பு கொள்வோம். இதுவே நாம் கொண்ட கோணம். வாழ்க்கை என்னும் பாதைக்கு இன்னும் தெளிவாக வரைபடம் இல்லாத சூழலால் தான் பலர் தடம் மாறுகின்றனர். ஏன்? வழி கூறுபவர்களை நிராகரிப்பதால் தான் இன்னும் பலர் தடமற்று போகின்றனர்.

    பாதை எவருக்கும் ஒரு கருத்தை கூறும், பயணம் என்றும் ஒரு அனுபவத்தை கூறும். நல் திறமை உள்ளவர்கள் ஒவ்வொரு சிக்கல்களையும் ஓர் வாழ்க்கை தத்துவமாய் எடுத்துக் கொள்வர். மற்றோர் தானே துரதிஷ்டசாலி என்பார். வாழ்க்கை என்றும் ஒரு தேடலை முன் நிறுத்தும். என்ன தேடல் அது? எதனை தேடும் பாதை அது? எதனால் அவன் அதனை தேடுகின்றான்? எதற்காக அவன் தேடி அழைகின்றான். அது அவன் மட்டுமே அறிந்த உண்மை. ஆனால் தேடலற்ற பாதை நெருடலற்று போதும். நெருடல் இல்லை என்றால் நாம் வாழ்ந்ததே வாழ்வில்லை.

    ஒரு நாள் வாழும் ஈசலுக்கே கூடு அவசியம், அதற்கு விளக்கு என்னும் நெருடல் உள்ளது. நாம் குறைந்தது இறைவன் விதித்த வரை வாழ்வோம். அதற்கு நம் வாழ்வு என்ற கூடு வேண்டாமா? நெருடல் என்ற வாழ்க்கை தத்துவம் வேண்டாமா? நாம் திரும்பும் திருப்பம் எல்லாம் ஒரு நெருடல் இருக்கும். இன்பம் துன்பம் என்ற உணர்வை அனுபவிக்காதவன் மனிதன் இல்லை. நீ வாழ வேண்டுமா விதி இழுக்கும் இழுப்பிற்கு அசையாதே? உன் ஆசை கூறும் பாதையை தேடாதே? உன் எண்ணம், செயல், உன் மனம், உன் இலக்கு கூறும் பாதையை தேடு. அதற்கு பாதை இல்லை என்றால் நீ பாதையை உருவாக்கு. அந்த பாதை நீ நிறைவடையும் வரை உன்னை உன்னதமாய் அழைத்து செல்லும். வாழ்க்கை அழைக்கும் பாதை அல்ல நீ வாழ்வது, நீ அழைக்கும் பாதையில் வாழ்வு வர வேண்டும். இது தான் நீ வாழ்க்கையில் எடுக்கும் பெரும் இலக்கு.[/hide]

    இந்த இதழை மேலும்

    தேர்வும் பேராறும் நட்பும் பாலமும்

    1. கடமையும் பலனும்:

    இந்திய ஆட்சிப்பணித் தேர்விற்கு தயாராகிக் கொண்டிருக்கும் இளைய தலைமுறையினரை இக்கட்டுரை மூலம் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி. தேர்வுக்கு படித்த பத்து வருடங்கள் மிக சுவராஸ்யமாக கழிந்தது என்று என் நண்பர் ஒருவர் இன்று பேசிக்கொண்டிருக்கும் பொழுது கூறினார். அவரும் நானும்  பதினெட்டு வருடங்களுக்கு முன்பு ஒன்றாகப் படித்துக் கொண்டு இருந்தோம். எனக்கு பாடப் புத்தகங்கள் பரிச்சை எழுதும் ஐடியாக்கள், கேள்வி பதில் அலசல்கள் குறிப்புதவி புத்தகங்கள் என்று பல விதங்களில் உதவி செய்தார். நண்பர் பலமுறை நேர்முக தேர்வு வரை முன்னேறினார். அவர் இ.ஆ.ப ஆகாவிட்டாலும், நாங்கள் இணைந்து மிரட்டிய, படித்த காலங்களின் பயன் இருவரது எதிர்கால ரிசல்டிலும் வெளிப்பட்டது. நம்மில் யார் வென்றாலும் நாம் வென்ற மாதிரிதான், என்று மகிழக்கூடிய நெகிழ வைக்கக்கூடிய நண்பர் அவர்.

    1. அது ஒரு கனாகாலம்:

    சிவில் சர்வீஸ் தேர்வுகள் மிக நீளமான தயாரிப்பு காலத்தைக் கொண்டுள்ளன. அவற்றை தாக்குப் பிடிக்கிற மன வலிமை, படிக்கின்ற காலத்திலேயே, பண்பில் ஒரு பக்குவத்தை வரவழைத்து விடுகின்றது. பரிச்சை எழுதி விட்டு தேர்விற்கு காத்திருக்கும் காலம் அது ஒரு கனா காலம். எனக்கு நான்கு முறை  அது ஏற்பட்டது. எமது நண்பருக்கு ஏழு முறை. இந்தக்காலக்கட்டத்தில் அவர் நம்மைத் தவிர இன்னும் பலருக்கும் நெஞ்சார்ந்த உதவி செய்திருக்கின்றார். இப்படியெல்லாம் படித்து பதினைந்து வருடங்கள் ஆன பின்பும் படிக்கின்ற போட்டித் தேர்வர்களை மாணவ மாணவியரை சந்திக்கும் பொழுது… சில அடிப்படையான படிப்பிற்குத் தேவையான விஷயங்கள், காலப்போக்கில் அவ்வளவாக மாறிவிடவில்லை என்றே தோன்றுகின்றது. நண்பர்கள் வாழ்வை வண்ணமயம் ஆக்குகின்றார்கள். தேர்வுக்குப் படிப்பது போருக்குத் தயராவது போல சீரியஸான மேட்டரென்றாலும், அதை ஒரு சிரமந்தெரியாத சீரான பயிற்சியைப் போல மாற்றிக் கொள்வது நிச்சயம் பலனளிக்கும்.

    1. பரிச்சை ஹாலில் பாயும் புலி:

    கேள்வித்தாள் கிடைத்தவுடன் மடைதிறந்த வெள்ளம் போல் சீறி வருகின்ற சிந்தனைகளை ( அப்படி எங்க சார் வருது? என்று அங்கலாய்ப்பவர்களை அடுத்து தனியாக சந்திப்போம்) ஒரு முறைப்படுத்தி வரிசைப்படுத்தி பதில் தாள்களை நிரப்ப பயன்படுத்த வேண்டியது அவசியம். ஒரு ஐந்து நிமிடத்தை அனைத்துக் கேள்விகளையும் படித்துப்பார்க்க உபயோகப்படுத்துவது நல்லது. இப்படியாக எழுதும்பொழுதெல்லாம் நான் எழுதிய படிப்படியாய் படி ( விகடன் பிரசுரம்) படித்தாலே இனிக்கும் (நியு செஞ்சுரி புக் ஹவுஸ்) முதலான புத்தகங்களில் சொல்லாத புது விஷயத்தை சொல்ல வேண்டும்.

    1. சொல் புதிது பொருள் புதிது:

    அப்படி படிக்கிற விஷயத்தில் அல்லது எந்த ஒரு விஷயத்திலாவது காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் எழுதிய தனிமையின் நூறு ஆண்டுகள் புத்தகத்தில் வந்திருப்பதைப் போல எல்லாமே ஏற்கனவே எழுதப்பட்டுவிட்டது என்பது நிஜம் தான். படிப்பதற்கான டெக்னிக்குகளை பல காலமாக பள்ளிகளும் கல்லூரிகளும், கோச்சிங் சென்டர்களும் ஒவ்வொரு வருடமும் படித்துப் படித்துச் சொல்லிக் கொண்டு தான் இருக்கின்றார்கள். அவற்றில் இல்லாத ஒரு மேஜிக்கல் ரியலிஸம் இக்கட்டுரையில் என்ன வந்துவிடப் போகின்றது? என்று கேட்டீர்களே ஆனால் அரதப்பழசான விஷயங்கள் கூட மீண்டும் ஒருமுறை புதிய கோணத்தில் பார்க்கும்பொழுது புதுமையாக படும். அது மனதில் பதியும் என்கின்ற ஒரே நம்பிக்கை சிக்னலை கொண்டுதான் நம் மனதுகள் கருத்துகளை பரிமாறிக் கொள்ளப் போகின்றன.[hide]

    1. அதே சந்தேகங்கள் தான்:

    சமீபத்தில் ஒரு கிரிகெட் போட்டி நடந்தது. அதற்காக உடற்பயிற்சி செய்ய வேண்டி வந்தது. பந்து வீச்சும் மட்டை வீச்சும் வேண்டுமானால் கிரிகெட்டுக்கு குறிப்பாக தேவைப்படலாம். மணிக்கணக்கில் நின்றிருக்கிற ஸ்டமினாவிற்கு தனிப்பட்ட ஓட்டப்பயிற்சி அவசியம் என்றார் எங்கள் பயிற்சியாளர். அது கபில் தேவ் காலத்திலிருந்து அப்படித்தான் இருக்கின்றது. மாறவே இல்லை. அதை போல இன்றைய இளைஞர்கள் புதிய தேர்வு முறையை சந்தித்தாலும் அடிப்படையான மன ஊக்குவிப்பு விந்தைகள் அப்படியே தான் இருக்கின்றன. நம்பு தம்பி நம்மால் முடியும் என்று பொதுவாக ஏற்றமூட்டுவதில் இருந்து ஒவ்வொரு நாளும் என்ன படிக்க போகின்றோம் என்று நேரப்பட்டியில் இட்டுப்கொள்வதும், மறுபடி பலமுறை, பழைய படித்து முடித்த பாடத்தை மீண்டும் படித்த நினைவில் இருக்கின்றதா? என்று சரிபார்த்து வைத்துக் கொள்வதும், திரும்ப திரும்ப படித்த விஷயங்களை குறித்து சிந்தித்து பார்த்து அது தேர்வில் வருமா? எப்போது கேள்வியாக கேட்டிருக்கிறார்கள்? இதே பொருள் குறித்த மற்ற புத்தகங்கள் என்ன கூறுகின்றன. ஒரு குறிப்பிட்ட அறிவியல் அல்லது இலக்கிய தத்துவத்தை வேறு வேறு எழுத்தாளர்கள் என்ன வகையில் எடுத்துக்காட்டுகள் அல்லது வேறு வேறு  வேறு கருத்துக்கள் அல்லது படவிளக்கங்கள் மூலம் தெளிவாகக் கூற முயன்றுள்ளனர், என்று பார்த்து, தெரிந்து வைத்துக் கொள்வது மிகவும் உதவும்.

    1. படிப்பது ஒன்று மனக்கண்ணில் பார்ப்பது நன்று.

    இவர் எதைக் கேட்டாலும் விரல் நுனியில் விவரங்களை வைத்திருப்பார் என்று பலரை நாம் பாராட்ட கேட்டிருப்போம். அதற்கான முதற்படி முயற்சி, நககண்ணில் அல்ல முகக்கண்ணில் இருந்து தொடங்குகின்றது. அதன் பின்னர், மனக்கண்ணால் படிப்பது முகக்கண்ணால் பார்ப்பது முடிந்ததும் தொடங்குகின்றது. மனது படிக்கின்ற விஷயங்களை நன்றாக அலசி ஆராய்ந்து துவைத்து தொங்கப் போட்டு விடுவது அந்தப் பொருளை புரிந்து கொள்ளவும், அது குறித்த கேள்விகள் வேறு கோணத்தில் கேட்கப்பட்டாலும் பதில் சொல்லவும் உதவும். உதாரணமாக ஒரு நாட்டின் எதிர்காலம் அதன் வகுப்பறையில் தீர்மானிக்கப்படுகின்றன. என்னும் தலைப்பில் ஒரு 1000-1200 வார்த்தைகளில் ஒரு கட்டுரை வரைக என்று ஒரு கேள்வி… ஆஹா இவ்வளவு எளிதாக இருக்கிறதே வகுப்பறைதானே கல்விக்கண்ணை திறந்துவிடுகின்றது. ஒரு வகுப்பறை கதவு திறக்கும் பொழுது சில சிறைச்சாலைகள் மூடப்படுகின்றது. என்று எராள சிந்தனைகள் உங்கள் மனசிலிருந்து இறக்கை கட்டி பறக்கின்றதல்லவா இது ஒரு ஈஸியான கேள்விதானே. இதற்கு 125 மதிப்பெண்கள் தருகின்றார்கள் என்றால் இன்னும் இனிமை தான.. அதுவும் இது, இந்திய ஆட்சிப்பணித் தேர்வுக்கான முதன்மைத் தேர்வு 2017 ல் இடம்பெற்றுள்ள மத்திய பணியாளர்கள் தேர்வாணைய கட்டுரை கேள்விக்கான தேர்வு என்றால் இன்னும் ஏராள சந்தோஷம் தானே. இதுபோல சின்னச்சின்ன சந்தோஷங்களால் தான் பெரிய நம்பிக்கைகள் கட்டமைக்கப்படுகின்றன என்றால் மிகையாகாது. எது நம்மை உற்சாகப் படுத்துகிறதோ அது நம் உயரத்தை தீர்மானிக்கின்றது..

    தொடரும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    வாழநினைத்தால் வாழலாம்- 17

    கடன் (முதல் பாகம்)

    வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே

    கடன் அன்பை முறிக்கும் என்ற அறிவிப்புப்பலகை சில கடைகளில்.

    இன்று ரொக்கம், நாளை கடன் என்ற அறிவிப்பு பல தேநீர் விடுதிகளில்.

    கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்- என்று கவிதையில் சொல்லும் கம்பன்.

    என்கடன் பணி செய்து கிடப்பதே என்று உழைப்பை உண்மையாக அறிவிப்பவனின் பெருமை வாசகம்.

    பெற்றகடன் இருப்பதால் தான் முடியவில்லை என்ற போதும் என் குழந்தைகளுக்கு என்னால் முடிந்ததை செய்கிறேன்- எனும் தந்தையின் புலம்பல்.

    போன  ஜென்மத்தில் பெற்ற கடனே- இந்த ஜென்மத்தில் நான் படும் துன்பம் எனும் நடுத்தர வர்கத்தின்  நடுக்கம்.

    ஆனந்தமாக கடலை ரசிக்கலாம் என்றால்- கடன் எனும் அலைகள் நமது காலில் மீண்டும் மீண்டும் மோத- குழப்பங்கள் நெஞ்சில் கூடாரமாய்.

    சிறு வயதில் பள்ளியில் கணித ஆசிரியர் கடன் வாங்கி கழித்தல் கற்றுக்கொடுத்தது பலருக்கு இன்னும் மறக்காத பாடமாக மாறிப்போனது வேதனை. அவர்கள் தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்ற நடைமுறை பழமொழியின் நடமாடும் சான்றுகள்.

    கடன் அமைதியைக் கெடுக்கும் அரக்கன்

    கடன் துன்பத்தில் சிக்கவைக்கும் தூண்டில்

    கடன் வளமையை கெடுக்கும்

    கடன் வாழ்க்கை பயணத்தின் பாதையில் போடப்பட்ட பாறை

    கடன் உங்கள் ஆனந்தத்தை எரிக்கும் அமிலம்.

    கடனே வாங்காமல் வாழ முடியுமா? என்ற ஆச்சிரியமான குரலில் உங்கள் அறிவு கேள்வி கேட்பது என் காதுக்குள் விழுந்து கொண்டு தான் இருக்கிறது. அந்நிய நாட்டு பொருளாதாரம், இந்திய நாட்டு பொருளாதாரம் மட்டுமல்ல, ஒவ்வொரு குடும்பத்தின் பொருளாதாரமும் கடன் தவறில்லை என்றே சொல்லி வந்திருக்கிறது.

    உண்மையில் அது உண்மையில்லை.

    இந்தியக்குடிமகன்கள் ஒவ்வொருவரும் கடன்காரர்களே என்று அரசாங்கம் அவ்வப்போது அறிவித்துக்கொண்டு தான் இருக்கிறது.ஒவ்வொரு கால கட்டத்திலும் உங்கள் பேரின் பக்கத்தில் எழுதப்படும் எண்ணிக்கைதான் மாறுபடும். இதில் ஆச்சிரியம் என்னவென்றால் ஜனத்தொகை கூடக்கூட உங்கள் தொகையும் கூடிக்கொண்டே போதுவது தான் புரியாத புதிராக இருக்கிறது என்று கணித வல்லுனர்களே கவலைப்படுகின்றனர்.

    கடன்  தேவை தான் என்று ஒப்புக் கொண்டாலும் தேவையான கடன் எது என்ற தெளிவு இருந்தால் தான், வாழ்வுப்பாதையின் திசைகள் தெரியும்.

    தேவையான கடன் தேவையற்ற கடன் குறித்த ஒரு வரைபடத்தை வரையும் முயற்சியே  என் வார்த்தைகள்.

    ஒரு பெரிய புகழ்பெற்ற, திறமைசாலியான, அனுபவசாலியான வக்கீல் எந்த வழக்காக இருந்தாலும் வெற்றிக்கு குறைவாக எதையும் அவர் பெறவில்லை. அவர் பெயரைக் கேட்டாலே நீதிமன்றமே நடுக்கும்.

    அவரிடம்  ஒரு  தொழில் பழகி வந்தான். தனக்கு அனைத்து விந்தைகளும், தொழில் ரகசியங்களும், நுணுக்கங்களும் எதுவும் வாங்காமல் கற்றுக் கொடுத்தார். பணம் கொடுக்க விழைந்தும் முற்றிலுமாக மறுத்தார். ஒரு கட்டத்தில் நான் உங்களிடம் கடன் பட்டிருக்கிறேன். அந்த கடனை அடைக்க சந்தர்ப்பம் கொடுங்கள் என்றான். கவலைப்படாதே காலம் வரும் என்று கூறினார் வக்கீல்.

    சில காலங்கள் கடந்தன. இனி கற்றுக் கொடுப்பதற்கும், கற்றுக் கொள்வதற்கும் எதுவும் இல்லை என்ற நிலையில் வக்கீல் சொன்னார் இனி நீ தனியாக செய்யலாம். நீ ஜெயிக்கும் முதல் வெற்றியின் காணிக்கையாக எனக்கு ரூ 10 லட்சம் தர  வேண்டும். இதுவே நீ எனக்கு தீர்க்க வேண்டிய கடன் இது தான் குரு காணிக்கை இதை நீ மீறக்கூடாது என்றார். அதிர்ச்சியாக இருந்தாலும் ஒத்துக் கொண்டார்.[hide]

    வக்கீல் அல்லவா சிந்தித்தான். ஜெயித்தால் தானே 10 லட்சம் தர வேண்டும் என்ற எண்ணத்தில் தான் வாதாடும் அனைத்துகளிலும் தோற்றுக் கொண்டே வந்தான். உன் குருவின் பெருக்கும் புகழுக்கும் களங்கம் என்று பலர் பலவிதமாக கேலிப் பேசினர். ஆனாலும் அவன் கவலைப்படவில்லை.

    காலங்கள் சில கடந்தன. இவனது நோக்கம் வக்கீலுக்கு தெரிந்தது. தானே அவன் மீது வழக்குத் தொடர்ந்தார்.

    சாரம்சம் இது தான் என் ஆக இருந்து தொழில் பழகி, இதுவரை ஒன்றிலுமே வெற்றி பெறாமல் என் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தி என்னை தலைகுனிய வைத்துவிட்டான்இ ஒப்பந்தத்தையும் மதிக்கவில்லை. இது என் மான பிரச்சனையாகிவிட்டது. எனவே மான நஷ்ட வழக்காக தொடருகிறேன். 10லட்சம் அவன் எனக்குத் தர வேண்டும் என்றார்.

    பணம் தர வேண்டும் என்று வக்கீலும், பணம் தரத்தேவை இல்லை, வழக்கையே தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வாதிட்டனர்.

    இப்போது விசாரணைக்கு வந்து விட்டது நீங்கள் தான் நீதிபதி.

    வக்கீல் ஜெயித்தால் சட்டப்படி 10 லட்சம் தர வேண்டும் (ஆனால்  அவர்களின் ஒப்பந்தப்படி முதலில் ஜெயிப்பவர்கள் தான் 10லட்சம் தர வேண்டும்.  ஆனால் இப்போது அவன் தோற்றுவிட்டனான்.

    உங்களுடைய தீர்ப்பு என்?

    இந்த வழக்கு செல்லுபடியாகுமா?  இல்லை தள்ளுபடியாகுமா?

    வக்கீல் பத்து லட்சம் கேட்பது சரியா? தவறா?

    தர மறுப்பது சரியா? தவறா?

    கடன் வக்கீலிடன் சொன்னதால் இது தேவையான கடனா? இல்லை தேவையற்ற கடனா?

    சமார்த்தியசாலி வக்கீல்களை சங்கடத்தில் ஆழ்த்தும் கேள்வி சாமானியன் என்ன செய்வான்.

    சரி கடன்கள் குறித்து நம் எதார்த்த வாழ்வோடு ஒவ்வொன்றாக ஒப்பிட்டு பார்ப்போம். தேவையற்ற கடன்கள் பற்றி ஒரு தேடல்.

    நீங்கள் படிப்பதற்கு வாங்கிய ஒரு புத்தகம் கண்ணதாசனாக இருக்கட்டும், சுஜாதாவாக இருக்கட்டும், படித்துவிட்டு தருவதாக  சொல்லி வாங்கிச் சென்ற நண்பர் சில நாட்கள் கழித்து புத்தகம் தொலைந்து விட்டது என்கிறார். வருத்ததோடு நீங்கள் எழுந்திருக்கும் போது பக்கத்து வீட்டு சிறுமி கையில் 2 கோப்பைகளுடன் வந்து  அம்மா கொஞ்சம் காப்பித்தூளும், சக்கரையும் வாங்கி வர சொன்னார்கள் என்கிறாள்.

    பகட்டான வாழ்வுக்கு ஆசைப்பட்டு எடுத்து பரிதவிக்கும் அன்பர்கள் அநேகம்.

    கடன் உங்களுடைய சூழலல்ல-சுழல்

    1. எத்தனை அடைத்தாலும் எப்போதும் கடன்காரனாகவே இறுதி வரை இருக்க வைக்கும்.
    2. நீங்கள் எழுதிக் கொடுக்கும் ஒவ்வொரு காசோலைக்காகவுமே கடைசி வரை வாழ்வீர்கள் கவலையோடு.
    3. மகிழ்ச்சியான வாழ்க்டிகை மனதுக்குள் கனவாக

    இந்தப் பாதையில் தான் இப்போது உங்கள் பயணம் என்றால் மாறுங்கள் பாதையை மாறுங்கள் மாற்றுங்கள் உங்கள் வாழ்க்கை சூழலை மாற்றுங்கள். சீக்கரமே சிறப்பான வாழ்வு சித்தமாகும்.

    தேவையான கடன்கள் எவை என்ற புரிதலையயும் கடன் பற்றி அம்மா சொல்வது இருக்கட்டும் அனுபவசாலிகள் சொல்வது என்னென்ன என்பதை அடுத்த இதழில் ஆராய்வோம்.

    அதுவரை திடமான தெளிவு கிடைக்கும்வரை கடன் வாங்க மாட்டோம். என்று உறுதியுடன் இருங்கள்.

    இருந்தால் வாழ்வில் மகிழ்ச்சியும் இருக்கும்

    வையகம் யாவும் உன் புகழ் பேசும் கைவசமாகும் எதிர்காலம்

    வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்[/hide]

    இந்த இதழை மேலும்

    முயற்சியே முன்னேற்றம்

    வாசக அன்பர் ஒருவர் தொலைபேசியில் பேசினார் “முயற்சி என்பது எது வரை இருக்க வேண்டும்?”

    ஒரே பதில்:

    “முயற்சி என்பது மூச்சு உள்ளவரை இருக்க வேண்டும்” என்றேன்.

    அதற்கு அவர் “முயன்று வென்று விட்டோம். அதன் அனுபவம் நம்மிடம் உள்ளது. மீண்டும் ஏன் முயல வேண்டும்” என்று கேட்டார்.

    இனிய வாசகர்களே! ஒன்றை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.

    அகோரப்பசி. நாம் சுவையான உணவை வேண்டுமளவிற்கு சாப்பிட்டு சந்தோசப் படுகின்றோம். சாப்பிட்ட உணவு சீரணமடைந் தவுடன் மீண்டும் பசிக்கின்றது. இந்தப் பசிப்பிணியைப் போக்க உழைத்து, பொருளீட்டி உண்கிறோம்.

    இது போன்றது தான் முயற்சியும். ஒலிம்பிக் போன்றஎல்லாப் போட்டிகளிலும் வென்றவர்கள், அடுத்த போட்டிகளுக்கு சில நாட்களுக்கு முன்பிருந்தா தங்களைத் தயார் செய்கின்றனர்?

    இடைவிடாமல் ஒவ்வொரு நாளும் அல்லவா கடுமையான பயிற்சியில் ஈடுபடுகின்றார்கள். எனவே முயற்சி என்பது நம் வாழ்நாள் முழுதும் தேவை.

    உதாரணத்துக்கு நாடிசுத்தி என்னும் ஒரு பிராணாயாமப் பயிற்சியை எடுத்துக் கொள்வோம். திருமூலர் தன் திருமந்திரத்தில்

    “ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும் காற்றைப் பிடிக்கும் கணக்கறிவாளர்

    கூற்றை உதைப்பர்”

    என்று கூறியதை நினைவு கூறுவோம்.

    மூச்சை இழுத்து, நிறுத்தி, வெளியே விட்டு, நிறுத்தி சுவாசிக்கும் பழக்கம் மரணத்தைத் தள்ளி வைக்கும் என்பது பொருள்.

    “எனக்குத் தான் தெரியுமே! எதற்கு தினமும் செய்ய வேண்டும்” என்று கேட்கின்றார் ஒருவர்.

    அதற்கு பயிற்சி அளிப்பவர் “கடந்த மூன்று ஆண்டுகளாகச் தினமும் செய்து விட்டேன். இன்னும் எதற்குச் செய்ய வேண்டும் என்று கேட்கிறாய். ஆரம்பித்த புதிதில் நீ ஒரு நிமிடத்துக்கு எத்தனை முறைமூச்சு விட்டாய்?”

    “எட்டு முறை” என்றார்.

    “இன்று நீ ஒரு நிமிடத்துக்கு எத்தனை முறைமூச்சு விடுகின்றாய்?” இந்தக் கேள்விக்கு பயிற்சி செய்பவர் கூறினார் நான்கு முறை என்று.

    பயிற்சி அளிப்பவர் சொன்னார்; “முயற்சி என்பது பயிற்சியாகி முந்தைய நிலையுடன் இன்றைய நிலையை ஒப்பிடுவதாகும். அதில் முன்னேற்றமிருக்க வேண்டும்” என்றார்.

    மேலும் சிறு உதாரணம் மூலம் தெளிவாகத் தெரிந்து கொள்ளவாம்.

    பிறந்த குழந்தை வளரும் போது அதன் தேவைகளைப் பெறுவதற்குப் பேச இயலாத நிலையில், அழுகையின் மூலம் தெரிவிக்கும்.

    அக்குழந்தை மலம் கழித்தபின் தாய் சுத்தம் செய்து விடுகிறார். மூன்று வயதுக்கு மேலாகும் போது சுத்தம் செய்யக் கற்றுத் தருகின்றார். இப்பயிற்சி சில வருடங்கள் கூட நீடிக்கும்.

    குழந்தை தெரிந்து கொண்டாலும் தன் தாயை அழைத்து, காட்டி சரியா என உறுதி செய்து கொள்வதை நாம் வீடுகளில் பார்க்கின்றோம்.[hide]

    இது போன்றது தான் முயற்சி. முயற்சியின் வெளிப்பாடான செயல்கள் தரும் விளைவுகள் எதிர் பார்ப்பதற்கு மாறாக அமைவதும் சகஜம்.

    இந்நிலையில் அனுபவசாலிகளிடம் விளக்கம் பெறுவது அவசியம். நாம் செய்யும் வேலையானாலும், நடத்தும் தொழிலானாலும் பிரச்சனைகள் வரும் போது தெளிவான மனநிலையில் கையாண்டால் வெற்றி தான். குழந்தை நடந்து பழகும் போது பல முறைகீழே விழுவதைப் பார்த்திருக்கின்றோம்.  விழுந்து ஒவ்வொரு முறையும் முன்னை விட வேகமாக உற்சாகமாக எழுந்து நடப்பதையும் பார்க்கிறோம் இது தான் நம் சக்தி, ஆற்றல்; எந்த முயற்சியிலும் இறக்கங்கள் வரும். அதனைத் தொடர்ந்து கட்டாயம் ஏற்றம் உண்டு என்பது தான் வரலாறு.

    வேறு வார்த்தைகளில் “கீழே விழுவது என்பது எழுவதற்கு தான்” என்று சொல்லலாம்.

    ஆங்கிலத்தில், “We Fall To Rise” என்று கூறலாம். இன்று நாம் எல்லோரும் ஏதோ ஒரு பழக்கத்திற்கு அடிமையாகி வாழ்ந்து வருகிறோம்.

    சிலர் டீ; காபிக்கு;  சிலர் மதுவுக்கு; சிலர் புகைக்கு; சிலர் போதைக்கு; சிலர் மாமிச உணவுக்கு; சிலர் சைவ உணவுக்கு; சிலர் இயற்கை உணவுக்கு; சிலர் நடைப் பயிற்சிக்கு; சிலர் உடற் பயிற்சிக்கு; சிலர் தியானத்துக்கு; என சொல்லிக் கொண்டே போகலாம். அந்த நேரமானால் அது இல்லாவிடில் எதையோ இழந்தது போன்ற உணர்வும், தலைவலி போன்றபாதிப்பும் இருக்கும்.

    இதைத் தான் அடிமைத் தனம் என்று கூறுகின்றோம்.

    இந்த பழக்கங்கள் நமக்கும் பிறருக்கும் துன்பம் தருமானால் நாம் அந்தப் பழக்கத்தை விட்டு வெளிவர வேண்டும். மாறாக நல்லதே நடக்கும் என்றால் அதனைத் தொடர்ந்து செய்து கடமையாக மலரச் செய்ய வேண்டும்.

    இதற்குப் பொறுமை தேவை. இப்போது பெறுகின்றவிளக்கம் நமது பழக்கத்தில் தேவையில்லாதவைகளை நீக்குவதற்குத் தான்.

    பொறுமைக்கும் அன்றாட வாழ்வின் நிகழ்ச்சியில் ஒன்றைக் கூறலாம்; மீன் சாப்பிடுவதற்கு காட்டும் பொறுமை தான் வேண்டும். மீன் சாப்பிடாதவர்கள் சாப்பிடுபவர்களைப் பாருங்கள். எந்த அளவுக்கு பொறுமையாக இருகிறார்கள் என்பது தெரியும்.

    மேலும் சிறு உதாரணம் மூலம் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

    மாற்றம் என்பது நிரந்தரமானது என்பதை அறிவோம். அது மனிதனுக்கு மட்டுமல்ல தாவரங்கள் உள்ளிட்ட எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும். மரங்கள் பல வருடங்கள் வாழ்கின்றன. பலமுறைதம்மை புதுப்பித்து கொள்கின்றன. இதற்கு வேர்களையோ, இடங்களையோ மாற்றுவதில்லை. மாற்றவும் இயலாது. தம்மால் இயலும் இலைகளை உதிர்த்து தளிர்களை உருவாக்குகிறது.

    இதேபோல் தான் நாம்முடைய வாழ்வில் நம்மைப் புதுப்பித்து கொள்ள வேண்டும். அதனால், புத்துணர்ச்சி, சுறுசுறுப்பு, இளமை உணர்வு கூடி நம் முன்னேற்றத்துக்குகான செயல்பாடுகளில் நம்மை ஆர்வத்துடன் ஈடுபடவைக்கும்.

    நமக்குத் தேவையில்லாத, கடந்த கால கசப்பான அனுபவங்களை, தோல்விகளை நாம் அவ்வப்போது சுய அலசல் (SELF ANALYSIS) எனும் தற்சோதனை மூலம் நீக்கிவிட்டு புதிய சிந்தனைகளைப் பெற்றுச் செயல் படவேண்டும்.

    இது சிரமமான காரியம் தான். விதைகளைப் பூமியில் விதைக்கின்றோம். பூமி அவ்விதைகளை வெளியே வரவிடாமல் அனைத்து வித ஆற்றலையும் உபயோகித்துத் தடுக்கிறது. ஆனால் விதைகளோ மண்ணின் ஆற்றல் அனைத்தையும் எதிர்த்துப் போரிட்டு முளைத்து செடியாக வெளிவருகின்றது. செடியாக விதை மண்ணைத் துளைத்து வெளி வந்த பின் இதே மண் இந்தச் செடி வளரத் தேவையான எல்லா உதவிகளையும் செய்கிறது. செடியின் வேர்கள் மண்ணிற்குள் ஆழமாகச் செல்ல வழிவிடுகின்றது. நீரைத் தேக்கி வைத்து, வளர உதவுகிறது. நன்கு வளர உரங்களைத் தக்க வைத்துத் தருகிறது.

    இது போன்றதே நம் ஆழ்மன ஆற்றலும். ஆரம்பத்தில் பூமி விதைகளை வெளியே வரச் செய்யாமல் தடுப்பது போல் பல பிரச்சனைகளை இயற்கை தரும். பொறுமையுடன், இடைவிடா முயற்சியுடன் செயல்படும் போது நம் ஆழ்மனமானது:

    முளைத்த செடி வளர மண் பலவகையாலும் உதவுவது போல, நம் முயற்சிகளை  வெற்றி பெறச் செய்யும்.

    வழிகளுக்கு காத்திருப்போம்!

    முயற்சியே முன்னேற்றம்!

    – தொடரும்[/hide]

    இந்த இதழை மேலும்

    மனிதத்தை புனிதமாக்கும் ஸ்டெம் செல் தானம்

    புற்றுநோய் போன்ற நோய் உள்ளவர்களை காக்க இறைவனால் மட்டும் என்பது அறிவியல் யுகத்திற்கு அப்பாற்ப்பட்டது. இவர்களது உயிரை ஸ்டெம் செல் தானம் வழங்குபவராலும் காக்க முடியும். ஸ்டெம் செல் தானம் வழங்குவதால் மனிதன் புனிதனாகின்றான். ஸ்டெம் செல் தானம் பெற்றவனுக்கு இறைவனாகின்றான்.

    ஸ்டெம் செல் தானம் என்பது மேலைநாடுகளி வெல்லாம் இரத்ததானம் போன்று சாதாரணமான ஒன்று. இந்தியாவைப் பொருத்தமட்டில் ஸ்டெம் செல் தானத்தைக் குறித்து போதிய விழிப்புணர்வு இன்மையால் ஸ்டெம் செல் தானம் என்பது அசாதாரணச் செயலாகவே நம்மிடையே சித்திரிக்கப்படுகின்றது.

    இரத்தப் புற்றுநோய் இரத்த சிவப்பணுக்கள் குறைபாட்டால் உருவாகும். தாலசீமியர் இரத்த வெள்ளையணுக்கள், சிவப்பணுக்கள், தட்டையணுக்கள் ஆகியவற்றின் குறைபாட்டால் ஏற்படும். ஏபிளாஸ்டி அநிமியா போன்ற நோய்யுடையவர்களின் உயிரை ஸ்டெம் செல் தானம் செய்வதன் மூலம் காக்க முடியும்.

    ஸ்டெம் செல் தானம் ஒரு சாதாரணச் செயலே; இதனால் ஸ்டெம் செல் தானம் வழங்கியவர்களின் உடலில் எந்த உடற்பலவீனங்களும் ஏற்பட வாய்ப்பு இல்லை. ஸ்டெம் செல் மாற்று சிகிச்சைக்கு தானம் வழங்குவோரின் ஸ்டெம் செல் HLA வும் (HLA- Human Leukocyte antigen ) நோய்வாய்ப்பட்டவரின் ஸ்டெம் செல் HLA வும் ஒத்திருக்க வேண்டும். ஸ்டெம் செல் இங்கே தேவையான HLA  இலட்சத்தில் ஒருவருக்குத்தான் பொருந்தி இருக்கும். சில சமயங்களில் HLA  பொருந்தினாலும், சில உயிர் இவ்வுலகை பிரிகின்றது. HLA பொருந்தினாலும் ஸ்டெம் செல் தானம் வழங்க தயாராக இருப்பது இல்லை. இதன் காரணமாகதான் பல உயிர் பறிக்கப்படுகின்றது.

    ஸ்டெம் செல் தானம் என்பது உடலிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு உடலிறப்பை தானம் செய்வது போன்றதல்ல தேவையான அளவு இரத்தம் எடுக்கப்பட்டு அதிலிருந்து ஸ்டெம் செல் பிரித்தெடுக்கப்படுகின்றது. மீண்டும் இரத்தம் எடுத்தவர் உடலில் செலுத்தப்படுகின்றது. பிரித்தெடுக்கப்பட்ட ஸ்டெம் செல் தேவையானவரின் உடலில் செலுத்தப்பட மரணிக்கக் காத்திருந்த உயிர் காக்கப்படுகின்றது.

    வாழ்வின் அர்த்தம் மற்றும் தத்துவம் அறியாத பிஞ்சு குழந்தைகளுக்கும் புற்றுநோய் ஏற்பட்டு தவிக்கின்றன. வாழ்வின் அர்த்தத்தை காட்டிட மருத்துவம் ஆயிரம் முயற்சிகளை செய்யும். இம்முயற்சிகள் வெற்றியை தருவதில்லை. ஆனால் ஒருவர் செய்யும் ஸ்டெம் செல் தானம் இக்குழந்தைகளின் வாழ்வில் வர்ணங்களை தீட்டிக் காட்டும்.[hide]

    ஸ்டெம் செல் தானம் செய்வது எப்படி;

    “தாத்ரி” என்ற ஸ்டெம் செல் தானப் பதிவக அமைப்பு இந்தியாவில் இயங்கி வருகின்றது. நோய்வாய்ப்பட்டவரின் ஸ்டெம் செல் HLA வுடன் பொருந்தும் ஸ்டெம் செல்லுடையவரை இந்த தளத்தில் தேடி அறியலாம். கோடிக்கணக்கில் மக்கள் வாழும் இந்தியாவில் 3,41,489 பேர் மட்டுமே ஒன்று. இந்த அகிலத்தில் கோடிக்கணக்கான மனிதர்கள் இருந்தும் மனிதம் இல்லாது போனது உண்மையானது (I see human. But ne humanity) என்றே எண்ணத் தோன்றுகின்றது. (18-50) வயது வரையே தாத்ரி தளத்தில் பதிவு செய்யும் வயது வரம்பாகும். datri.org என்ற இணையத்தின் பக்கத்தில் சென்று பதிவு செய்யலாம்.

    தாத்ரியில் பதிவு செய்தவுடன் அவர்களே பதிவு செய்தவர் ஸ்டெம் செல் தானம் செய்ய தகுதியானவரா என்று பரிசோதனை செய்து முடிவையும் தெரிவிப்பர். இந்தியாவை பொருத்தமட்டில் பதிவு செய்தோர் அதீத விருப்பத்துடனும், மனித தன்மையுடன் ஸ்டெம் செல் தானம் செய்ய கூறி எப்போது அழைப்பு வரும் என்று காத்திருகின்றனர். மறுபுறம் நோய்வாய்ப்பட்டவர்கள் தனக்கு பொருந்தும் HLA வுடைய ஸ்டெம் செல் தாத்ரி தளத்தில் கிடைக்காததால் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை மர்ணிக்கின்றனர்.

    தாத்ரி தளத்தில் ஸ்டெம் செல் கொடையாளியாக நாமும் பதிவு செய்வோம். ஒரு வேலை நமக்கு ஸ்டெல் செல் தேவைப்படும் பொழுது நம்முடைய ஸ்டெம் செல் HLA வுடன் பொருந்தும் கொடையாளியையும் தேடிப்பெறலாம். தாத்ரியில் நாம் பிறர் உயிரையும் காக்கலாம். தேவையேற்படுகையில் நம் உயிரையும் காத்துக் கொள்ளலாம். [/hide]

    இந்த இதழை மேலும்

    வெற்றி உங்கள் கையில் 54

    சிறந்த தலைவர் யார்

    வாழ்க்கையில் வெற்றி பெறவேண்டும் என்ற ஆசை எல்லோரிடமும்  இருக்கிறது. அந்த வெற்றியைப் பெறுவதற்கான முயற்சிகளில் பலரும் பல்வேறு விதங்களில் இயக்குகிறார்கள்.

    உலக அளவில் புகழ்பெற்ற பலரும் சிறந்தத் தலைவர்களாக வாழ்ந்திருக்கிறார்கள்.  தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் வெற்றிக்கொடி நாட்டி வளரும் சமுதாயத்திற்கு வழிகாட்டியாக- வே தங்கள் வாழ்க்கையை பெருமையுடன் வியக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது.

    மிகப் பெரிய அமைப்பின் தலைவராக பதவி வகித்தால்தான் வெற்றி கிடைக்கும்  என்று சிலர் நினைக்கிறார்கள்.  அரசியல் களத்தில் புகுந்து விளையாடினால்தான் புகழ் என்னும் வெற்றி கிடைக்கும்  என்ற எண்ணத்தில் சிலர் மயங்குகிறார்கள்.  மதங்களையும் சாதிகளையும் பக்கபலமாக வைத்து தலைவரானால் தனிப்பெருமை கிடைக்கும் என்றும் சிலர் நம்புகிறார்கள்.  அதிகாரம் தூள் கிளப்பினால்தான் குடும்பத்தில்கூட தலைவனாக முடியும் என்ற உறுதிப்பாட்டில் உழல்பவர்களும் உண்டு.

    நேர்மையற்ற குறுக்கு வழியில் பணத்தை திரட்டி சொத்துகளை வாங்கிக் குவித்து எந்தக் கூட்டத்திலும் தலைவனாக முடியும் என்ற நம்பிக்கையில் அலைபவர்களும் உண்டு.  யார் எதைச் சொன்னாலும் ஆமாம் சாமி போட்டு பல்லைக்காட்டி தலைமைப் பதவியை எட்டிப் பிடித்து கட்டி அணைக்கவும் சிலர் காத்திருக் கிறார்கள்.

    யார் வேண்டுமானாலும் தலைவர் ஆகலாம்.  எங்கு வேண்டுமானாலும் முதன்மைப் பெறலாம்.  எப்படி வேண்டுமானாலும் முன்னணி வகிக்கலாம்.  ஆனால் அந்தத் தலைவரை மற்றவர்கள் உள்ளம் மகிழ்ந்து பாராட்டவும் பின்பற்றவும் தயாராக இருக்கும்படி பார்த்துக்கொள்வது அந்தத் தலைவரின் முக்கியக் கடமையாகும்.

    அச்சுறுத்தல்களும் அதிகாரத் திமிரும் தன்னை சுற்றியிருப்பவர்களை பணிய வைக்கும் என்றநம்பிக்கையில் சிலர் தலைவராகி பின்னர் தத்தளிக்கிறார்கள்.  நிம்மதி இழக்கிறார்கள்.  சொத்துக்கள் இருந்தும் சோகக்குழியில் விழுந்து அழுந்தி புலம்புகிறார்கள்.

    எனவே  தலைமை  என்பது மற்றவர்களை வழிநடத்துவதற்கான பொறுப்பு என்பதை தலைமைக்கு ஆசைப்படுபவர்கள் கண்டிபாக உணர்ந்துக்கொள்ள வேண்டும்.

    தலைமைப் பதவி தரும் வசதிகள் வாய்ப்புகள் சுகங்கள் ஆகியவற்றை எண்ணி தலைமைப் பதவியை அடைய விரும்புபவர்கள் அந்தப் பதவிக்குப் பின்னால் இருக்கும் பிரச்சினைகளைப் பற்றி சிந்திப்பதில்லை.

    ரோஜாக்களோடு இருக்கும் முட்களைப் போல தலைமைப்பதவியோடு இணைந்து சில சிக்கல்களும் உருவாகத்தான் செய்யும்.  கார் பங்களா அதிகாரம், பதவி, பணம், காவலாளிகள், சொத்து, போன்றவைகள் தான் வாழ்க்கையின் வெற்றிக்கு பின்னணியாக இருக்கிறது என்பதை நம்புபவர்கள் தலைமைப் பதவியைப் பிடிக்கவும் தக்கவைக்கவும் முனைப்போடு இயங்குகிறார்கள்.[hide]

    எந்தத் துறையாக இருந்தாலும் அங்குள்ள தலைமைப் பதவிக்குப் பின்னால் சொல்லமுடியாத சில சோகங்கள் ஒட்டிக் கொள்ளத்தான் செய்யும்.

    அவமானங்கள், அசிகங்கள் வீண் அலைச் சல்கள், சந்தேகங்கள், சதிகள், பழிவாங்கல்கள், பாரபட்சங்கள் ஏற்றத் தாழ்வுகளும் உண்மையை மறைத்து உறவாடும் நிலைகள்  என எத்தனையோ வாழ்வியல் நெறிகளை கொலைசெய்யும் சூழல்களும் உருவாகிவிடுகின்றன.  இவற்றையெல் லாம் வென்றெடுத்து நேர்மையான தலைவராக வருபவர்கள்தான் உண்மையான வெற்றித் தலைவர்களாகப் போற்றப்படுகிறார்கள்.

    மேடு பள்ளங்கள் நிறைந்த வாழ்க்கைப் பாதையில் வெற்றிகரமாக பயணிக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே சிறந்தத் தலைவர்களாக மாறுகிறார்கள். இதனால்தான் இளமைப் பருவத்திலேயே தலைமை ஏற்பதற்கான தகுதிகளை வளர்த்துக்கொள்வது இளைய வயதினர்களின் முக்கியக் கடமையாகக் கருதப்படுகிறது.

    ஒரு தலைவருக்கு வேண்டிய நேர்மை, சொல்வன்மை, தியாகமனப்பான்மை,  பிறரோடு பழகும் தன்மை, செயலாற்றல், கடமை உயர்வு, நேரந்தவறாமை நட்பு பாராட்டல் போன்ற பல்வேறு நல்ல குணங்களை இளம் வயதிலேயே வளர்த்தெடுப்பதில் ஆர்வமும் அக்கறையும் கொள்ள வேண்டும்.

    இதற்கான முறையான பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். எந்தத் துறையில் தலைவராக வேண்டும் என்று ஒருவர் இளம்வயதிலேயே திட்டமிட்டபின்பு அந்தத் துறைப்பற்றிய அனைத்துத் தகவல்களையும் சேகரித்து அந்தத் துறையில் நிலவும் சூழல்கள் உருவாகும் பிரச்சினைகள் அதற்கான தீர்வுகள் போன்றவற்றை முன்கூட்டியே  திட்டமிட்டுக் கொள்வது நல்லது.  அப்போதுதான் அந்தத் துறையில் ஒருவர் சிறந்து விளங்கி தலைவராக முடியும்.

    இது ஒரு ஜென் கதை.

    சீனாவிலுள்ள ஒரு பல்கலைக்கழக மதத்துறையின் தலைவர் பதவிக்கு சரியான நபரைத் தேர்ந்தெடுக்க பல்கலைக்கழகத் தலைவர் விரும்பினார்.அறிவோடும் ஆற்றலோடும் விளங்கும் ஒருவர் தலைவரானால் அந்தத் துறைசிறப்பாக செயல்படும் என்பது அந்தத் தலைவரது நம்பிக்கை.  சீனாவிலுள்ள மிகப்பிரபலமான ஜென் குரு ஒருவரை அந்தத் துறையின் தலைவராக நியமித்தால் மதம் சம்பந்தப்பட்ட அந்தத் துறைசிறந்து விளங்கும் என்றும் நம்பினார்.

    எனவே ஜென் குருவின் மடாலயத்திற்குச் சென்றார்.  ஜென் குருவை சந்தித்துப்பேசி பல்கலைக்கழக மதத்துறையின் தலைவராக்க முடிவு செய்தார்.  அவர் அங்கு சென்றபோது ஜென் குரு வெளிநாட்டிற்குச் சென்றுவிட்டார். தான் வந்த நோக்கத்தை அங்கிருக்கும் சீடர்களிடம் தெரிவித்தார்.   மேலும் ஜென் குரு பற்றிய சில தகவல்களை சேகரிக்க அங்கிருந்த தலைமை சீடரை சந்தித்தார்.

    உங்கள் குரு திறமைமிக்கவர்.  ஆழ்ந்த அறிவுகெண்டவர்,  கல்வி ஞானத்தில் சிறந்து விளங்குபவர்,  இந்த மடாலயத்தில் உங்கள் குரு இருப்பதால் அது உங்களுக்கு மட்டும்தான் நன்மை.

    ஆனால் பல்கலைக்கழக மதத்துறையின் தலைவராக இவர் இருந்தால்பல்வேறு மாணவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறஉதவ முடியும் என்று தனது கருத்தைத் தெரிவித்தார்.

    இதைக் கேட்ட தலைமைச் சீடர் சிரித்தார்.

    பல்கலைக்கழகத்தின் முதன்மைத் தலைவராக நீங்கள் இருப்பது மகிழ்ச்சி.  எங்கள் குரு இன்னும் நிறைய ஞானத்தை தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைத்து பல இடங்களுக்குச் சென்று வருகிறார்.  ஞானத்தை பெற்றுக்கொள்ளஅலைந்து திரியும் ஒருவரால் ஞானத்தை கற்றுக்கொடுக்க முடியாது.  நாங்கள்கூட அவரிடம் இருந்து ஞானத்தைப் பெற்றுக்கொள்கிறோம்.

    அவர் எங்களுக்குக் கற்றுத்தரவில்லை என்றார் தலைமை சீடர்.

    பல்கலைக்கழக முதன்மைத் தலைவர் அதிர்ந்துபோனார். ஞானத்தை பெற்றுக்கொள்ள பல இடங்களுக்கு அவர் சென்றாலும் எங்கள் பல்கலைக்கழக மதத்துறையின் தலைவராக இருந்தால் அவரைப் பார்த்து மாணவர்கள் கற்றுக்கொள்வார்கள் அல்லவா?.  அதனால் இவர்தான் எங்கள் பல்கலைக்கழகத்தின் மதத்துறையின் தலைவராக இருப்பதற்கு சரியானவர் என்றார் பல்கலைக்கழக முதன்மைத் தலைவர்.

    இதைக்கேட்ட தலைமைச் சீடர் உங்கள் கருத்து எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.  மிருகங்களைப் பற்றி படிக்கும் படிப்பிற்கு ஒரு சிங்கத்தை தலைவராக வைக்க முடியுமா?.  இதைப்போலவே மதம் சம்பந்தப்பட்ட படிப்பைப் படிப்பதற்கு மதத் தலைவரான எங்கள் ஜென் குருவை பல்கலைக்கழகத் துறைத் தலைவராக  நியமனம் செய்வது அமைந்துவிடும். எனவே நன்கு சிந்தனை செய்துகொள்ளுங்கள்.  எங்கள் குரு ஒரு சீடனைப்போல ஞானத்தை இன்னும் தேடுகிறார்.  அவர் தான் இன்னும் குருவாக மாறவில்லை என்றும் சொல்கிறார்.  இவரை நீங்கள் பல்கலைக்கழக மதத்துறையின் தலைவராக்கும்போது ஒரு சீடரால் எப்படி மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கமுடியும்?.  என்றார்.

    தலைமை சீடரின் பதிலைக் கேட்ட பின் பல்கலைக்கழக தலைவர் தனது முடிவை மாற்றிக்கொண்டார்.

    தான் பெற்றஞானத்தை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுப்பதைவிட தான் இன்னும் அதிக ஞானத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் எல்லா குருக்களும் விரும்புகிறார்கள்.  இதனால் கற்றுக்கொடுபவர்களை மட்டுமே  பல்கலைக்கழகத்தில் மதத்துறையின் தலைவராக நியமிக்க வேண்டும் என்றும் தீர்மானித்தார் பல்கலைக்கழகத் தலைவர்.

    இது ஜென் கதையாக இருந்தாலும் தலைவராக விரும்புபவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும். தலைமைப்பதவி தனக்கு எளிதாக கிடைக்கிறது என்பதற்காக அந்தப்பதவியை ஏற்றுக்கொள்வது நல்லதல்ல.  தலைமைப் பதவியில் இருந்துகொண்டு எப்படியும் செயல்படலாம் என்று எண்ணுவதும் நல்லதல்ல.  ஒரு தலைமைப் பதவியை  ஏற்பதற்கு முன்பு அந்தத் தலைமைப் பதவிக்குத் தேவையான பண்புகள்என்னென்ன?  கடமைகள் எவை? பொறுப்புகள் எவை?  என்பதைப்பற்றி தெளிவாக சிந்தித்து அதன்பின்னர் அதனை ஏற்றுக்கொள்வது நல்லது.  அந்தத் தலைமைப் பதவியில் இருந்து மற்றவர்களுக்கு எவ்வாறெல்லாம் உதவிசெய்யமுடியும்?  என்றும் சிந்தித்து அதன்பின்னர் தலைவராக பதவி ஏற்கலாம்.

    தகுதியும் திறமையும் இல்லாதவர்கள் தலைமைப் பதவியின் தன்மை தெரியாமல் அதனை ஏற்றுக்கொண்டு படுகுழியில் வீழ்வதைவிட அந்தப்பதவியைத் தவிர்த்துக்கொண்டு பணியாளராகவோ அல்லது தொண்டராகவோ பணியாற்றுவது மிகச்சிறந்த வெற்றியை தரும்.

    யார் வேண்டுமானாலும் தலைவர் ஆகலாம். ஆனால் சிறந்ததலைவருக்குரிய பண்புகளையும் நடத்தைகளையும் கொண்டவர்கள்  மட்டுமே மிகச்சிறந்த நல்ல தலைவராக திகழ முடியும் என்பது உலகம் ஏற்றுக்கொள்ளும் உண்மையாகும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    வெற்றியை வாழ்க்கையாக்கு

    வாழ்க்கையின் பெரும்பாலான தருணங்கள் இப்படித்தான் அமையும்  ஒரு தேர்வு வெற்றி நம் வாழ்க்கையைத் தீர்மானிப்பதில்லை ஒரு தேர்வில் பெறும் மதிப்பெண்கள்  நம் வாழ்க்கையை நிர்ணயம் செய்வதில்லை . அவை நமக்கு சிறிது ஊக்கத்தை வேண்டுமானால் தரலாம் ஆனால் அவை வாழ்க்கை முழுவதும் நம்முடன் வாரா.

    பத்தாம் வகுப்பில் தோல்வியடைந்தவர் தமிழகத்தின் முதல்வரான வரலாறெல்லாம்  நம் நாட்டில் நிறைய உண்டு. எனக்கு தெரிந்து பத்தாம் வகுப்பில் மூன்று முறைதோல்வியடைந்த ஒருவர் தற்போது கணிதப் பேரசிரியராக அரசு கல்லூரியில் பணியாற்றி வருகிறார். அவர் பத்தாம் வகுப்பில்  கணிதப் பாடத்தில் தோல்வியடைந்தவர். தோல்வியைக் கண்டு துவளாமல் படித்துத் தேர்ச்சியடைந்து எந்தப் பாடம் தனக்கு வரவில்லையோ அதே பாடத்தில் இளங்கலை , முதுகலை மற்றும் ஆராய்ச்சி பட்டங்கள் பெற்று தற்போது மாதம் ஒரு லட்சம் ஊதியம் பெற்று வருகிறார். தோல்வியால் துவண்டிருந்தால் இன்று அந்த கணித ஆசிரியரை நாம் காணமுடிந்திருக் காது.

    இது போன்றநிறைய உதாரண மனிதர்களை நாம் அடுக்கிக் கொண்டே போகலாம். நாமும் அந்த மனிதராக மாறமுயல வேண்டும். எது நம் குறிக்கோளோ அதில் விடாப்பிடியாக இருப்பது நல்ல விசயம் தான். .அதே நேரத்தில் அது ஏதோ ஒரு காரணத்தால் கை கூடாத போது வரும்  வாய்ப்புகளை நமக்கு சாமகமாக்கிக் கொள்ள வேண்டும்.

    எனக்கு தெரிந்த மற்றொரு நண்பர் பள்ளி கல்லூரி காலங்களில் நன்கு படிப்பவர். ஆசிரியர் பயிற்சியில் சிறந்த மாணவராகத் தேர்ச்சி பெற்று அமைச்சர் கைகளில் விருது பெற்றவர். ஆனால் அரசின் கொள்கை முடிவுகளால் அவருக்கு ஆசிரியர் பணி கிடைக்கவில்லை. தனியார் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிய போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத் தேர்வுகளை எழுதி இளநிலை உதவியாளராகப் பணியில் சேர்ந்தார். தற்போது பதவி உயர்வு பெற்று உயர் பதவியில் உள்ளார். ஆசிரியர் பெறும் ஊதியத்தைவிட அதிகம் பெறுகிறார். வரும் பணி எதுவெனினும் அதனை ஏற்றுக் கொண்டால் உயர்வு என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.[hide]

    விடாமுயற்சியே விஸ்வரூப வெற்றி என்பார்கள். தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் தெய்வருத்த கூலி தரும் என வள்ளுவரும், வெறுங்கை என்பது மூடத்தனம் விரல்கள் பத்தும் மூலதனம் என நவீனக் கவிஞர் ஒருவரும், முயற்சி திருவினையாக்கும் என்றும் முயலாதிருத்தல் இன்மை புகுத்திவிடும் என்றும் பொய்யில் புலவர் கூறியுள்ளார். வாழ்க்கையில் முன்னேறவிடா முயற்சி மிகவும்  அவசியம்.

    வருவதை ஏற்கும் மனப்பக்குவம் விடாமுயற்சியை விட மேலானது. முயற்சி செய்கிறோம் பலன் நாம் எதிர்பார்த்த  அளவு கிடைக்கவில்லை. உதாரணமாக தேர்வு எழுதுகிறோம் கடின உழைப்பு கொண்டு படித்து எழுதுகிறோம். தேர்வில் மதிப்பெண் நாம் எதிர்பார்த்த அளவு கிட்டவில்லை மதிப்பீடு செய்த ஆசிரியர் கூட கவனக்குறைவுடன் மதிப்பெண் குறைந்திருக்கலாம். அதற்காக நாம் சோர்வடைதலோ, விரக்தியடைதலோ கூடாது. அடுத்து என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்ய வேண்டும். அடுத்தக்கட்ட நகர்வுகளுக்குச் செல்ல வேண்டும். அடுத்த தேர்வை இன்னும் கூடுதல் கவனத்துடன் எதிர்கொள்ள வேண்டும். நிச்சயம் ஒரு நாள் பலன் கிட்டும்.

    நம்பிக்கையே வாழ்க்கை நாளை என்பது உண்டு என்று நம்பித்தான் இரவு தூங்கச் செல்கிறோம். வாழ்க்கை நிலையில்லாதது என்று தத்துவம் பேசிக்கொண்டால்  அது நம் வாழ்விலும் செயலிலும் எதிரொளிக்கும் நம்மால் முடியும் என்று எப்பொழுமும் நம்புவோம்.

    நம்மால் முடியாவிட்டால் யாரால் முடியும் இப்போது

    இல்லாவிட்டால் எப்போது முடியும்

    என்பன போன்ற வாசகங்களை நாம்  வசிக்கும் வீடு அலுவலகம் அறைகளில் நம் கண்களில் படும்படி ஒட்டி வைப்போம். தன்னம்பிக்கை  குறித்தச் செய்திகளை  பற்றி பேசுவோம். அது குறித்த வாசகங்களை நம் கண்களில் படும்படி வைத்திருப்போம் வாழ்வில் வெற்றி நிச்சயம்.

    அவநம்பிக்கை தரும் செய்திகளைத் தவிர்ப்போம். அவ நம்பிக்கை தரும் மனிதர்களை தவிர்ப்போம். வரும் விளைவுகளின் இரண்டு பக்கங்களையும் பார்ப்போம். இரண்டு பக்கங்கள்  வரும் போதும் எவ்வாறு அணுகலாம் என முன்கூட்டியே சிந்திப்போம். நாம் வாழ்வில் வெற்றி பெறவிடாமுயற்சி தன்னம்பிக்கை மற்றும் நேர்மறைஎண்ணங்களே…[/hide]

    இந்த இதழை மேலும்

    தன்னம்பிக்கை மேடை

    நேயர் கேள்வி…?

    நீட் தேர்வு பற்றி உங்களின் நிலைபாடு பற்றிச் சொல்லுங்கள்?

    கோபிகா, சென்னை

    மருத்துவக்கல்வி இந்த நூறு ஆண்டுகளில் ஒரு ஒப்பற்றஅறிவியல் கல்வியாக மாறி விட்டது. அதற்கு காரணம், அலோபதி மருத்துவத்தில் நடந்த பல புரட்சிகர அறிவியல் ஆய்வுகளும், அதனால் விளைந்த கண்டுபிடிப்புகளும் தான். இயற்பியல், வேதியியல், உயிரியியல் போன்ற பிரிவுகளில் ஆச்சரியப்படும் உண்மைகள் பல கண்டுபிடிக்கப்பட்டு கொடிய நோய்கள் தடுக்கும் முறைகளும் கண்டுபிடிக்கப்பட்டன. பொறியியல் துறை உருவாக்கிய நவீன கருவிகள், நோய்களை எளிதில் கண்டுபிடிக்கவும், அவற்றை குணமாக்கவும் உதவின. ரோபோக்கள் அறுவை சிகிச்சை செய்யும் புதுமையும் வந்து விட்டது.

    இன்று MBBS (Bachelor of Medicine and Bachelor of Surgery) படிக்க அதிகமாக இளைஞர்கள் விரும்புகிறார்கள். தலைசிறந்த மருத்துவர்கள் நோய்களை கண்டறிந்ததையும் குணப்படுத்தியதையும் இளைஞர்கள் பார்க்கத்தானே செய்கின்றார்கள்! அவர்களுக்கு அந்த டாக்டர்கள் மீது ஒரு ஈர்ப்பும், மதிப்பும், பிரமிப்பும் ஏற்படுகின்றது. கதாநாயகர்கள் ஆகிவிட்டனர் அலோபதி டாக்டர்கள். அவர்கள் கதாநாயகர்கள் தான். அவர்களை நாமும் மதிக்க வேண்டும்.

    மருத்துவக்கல்லூரிகளுக்கு தேர்வு மூலம் அனுமதி வழங்கும் முறை தமிழகத்திலும் இருந்தது. அதற்காக மருத்துவக்கல்லூரி நுழைவுத்தேர்வுக்கு பிளஸ்2 மாணவர்கள் தனியாக பயிற்சி எடுத்தனர். இந்த மதிப்பெண் 50 என்றும்,  பிளஸ்2 மதிப்பெண் 200 என்றும் கருதப்பட்டு மருத்துவக்கல்லூரிகளில் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் இந்த முறை தேவையற்றது, கிராமப்புற மாணவர்களையும், அரசு பள்ளி மாணவர்களையும் இது பாதிக்கும் என்று கருதி இந்த முறை கைவிடப்பட்டு, பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் சில ஆண்டுகளாக மருத்துவக்கல்லூரி அனுமதி நடந்து வந்தது.

    இந்த NEET (National Eligibility cum Entrance Test) தேர்வு முறை 2013 ஆண்டிலிருந்து அமல்படுத்தப்பட்டாலும் தமிழ்நாட்டில் சென்றஆண்டிலிருந்து நீட் தேர்வின் அடிப்படையில் அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் தனியார் மருத்துவக்கல்லூரிகளிலும் MBBS படிக்க அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இன்று இந்தியா முழுவதும் NEET (National Eligibility cum Entrance Test) தேர்வுகளின் அடிப்படையில் தான் மருத்துவக்கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.

    நீட் தேர்வுகள் வரும் முன்னரே இந்தியாவில் உள்ள மத்திய அரசால் நடத்தும் மருத்துவக்கல்லூரி இருக்கைகளுக்கும், அனைத்து மாநில மருத்துவக்கல்லூரிகளில் 15% இருக்கைகளுக்கும் AIPMT (All India Pre-Medical Test) என்ற தேர்வின் மூலம் அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இதில் தமிழ்நாட்டு மாணவர்கள் சிலர் தேர்வு எழுதி இந்தியாவில் பல மாநில மருத்துவக்கல்லூரிகளிலும் இடம் பிடித்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் 15% இட ஒதுக்கீட்டில் பெரும்பாலும் மாநிலத்தவர் இடம் பிடித்தனர் என்பது உண்மை தான்.  ஒஐடஙஉத (Jawaharlal Institute of Postgraduate Medical Education & Research) பாண்டிச்சேரி, AIIMS (All India Institutes of Medical Sciences) டில்லி, CMC (Christian Medical College and Hospital) வேலூர் போன்ற மருத்துவக்கல்லூரிகள் அவர்களுக்கான தனி நுழைவுத்தேர்வையும் நடத்தி வந்தன.

    உலகில் இன்று மருத்துவக்கல்வியில் முன்னணியில் இருக்கும் அமெரிக்க நாட்டில் ஒருவர் டாக்டராக என்னனென்ன தேர்வுகள் எழுத வேண்டும் என்று பார்ப்போம். ஒரு மாணவன் பிளஸ்2 படித்த பின்னர் 4 ஆண்டு அறிவியல் பட்டப்படிப்பு ஒன்றைப் படிக்க வேண்டும். அந்த பட்டப்படிப்பு முடித்தபின் மருத்துவ நுழைவுத் தேர்வு எழுத வேண்டும். இதற்கு MCAT (Medical College Admission Test) என்று பெயர். இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று நான்கு ஆண்டுகள் மருத்துவப் பட்டப்படிப்பு படித்து முடிக்க வேண்டும். அதற்கு பிறகு ஒரு பயிற்சி டாக்டராக ஒரு ஆஸ்பத்திரியில் நுழைய வேண்டும் என்றால், அதற்கு, USMLE (United States Medical Licensing Examination) என்றநுழைவுத் தேர்வினை எழுத வேண்டும். இந்த தேர்வு மூன்று நிலை தேர்வுகளாக எழுதி மூன்றாம் நிலையும் வெற்றி பெற்றபின்பு அந்த மருத்துவ மாணவன் பயிற்சி டாக்டராக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவார். இந்த பயிற்சிக்காலம் அவரது துறையை பொறுத்து 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரை நடக்கும். இந்த பயிற்சி காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் நாடு தழுவிய வருடாந்திர தேர்வு எழுதி வெற்றி பெறவேண்டும். இப்படியாக மூன்று அல்லது ஏழு ஆண்டுகளும் தேர்ச்சி பெற்றபின் அவருக்கு MD என்றபட்டப்படிப்பு கிடைக்கும். இந்த MD பட்டப்படிப்பை வைத்துக் கொண்டு வாழ்நாள் முழுவதும் டாக்டராக பணியாற்றமுடியாது. அந்த MD பட்டம் பத்து ஆண்டுகளுக்கு வைத்தியம் செய்ய மட்டுமே உரிமம் உண்டு. அந்த பட்டம் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மீண்டும் தேர்வு எழுதி புது உரிமம் பெற்றாக வேண்டும். இந்தியாவில் MBBS தேர்வில் வெற்றி பெற்ற நமது டாக்டர்கள் அமெரிக்கா சென்று மநஙகஉ என்றதேர்வு எழுதி வெற்றி பெற்று அதற்கு பிறகு, நான் விவரித்த அனைத்து தேர்வுகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அங்கு பத்து ஆண்டுகளுக்கு மருத்துவம் செய்ய முடியும்.[hide]

    இப்படி மருத்துவக்கல்லூரிகளில் சேர்வதற்கும், தேர்ச்சி பெறுவதற்கும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கும், பல கட்ட தேர்வுகள் எதற்காக வைக்க வேண்டும்? டாக்டர்கள் மனிதர்களின் உயிர்காக்கும் பணியை செய்பவர்கள். உயிரை விட பெரியது ஏதுமில்லை. எனவே அதிக திறமை, தீவிர ஆர்வம், நல்ல மனப்பான்மை, கடின உழைப்பு, தொடர்கல்வி முயற்சி உள்ளவர்கள் மட்டுமே இந்த துறைக்குள் நுழைய வேண்டும் என்பது தான் அந்த தத்துவம்.

    மருத்துவ அறிவும் மருத்துவ சாதனங்களும், மருத்துகளும், சிகிச்சை முறைகளும் அதிநவீனமாகும்போது அறிவார்ந்த இளைஞர்களால் மட்டும்தான் அவற்றை சரியாகக் கையாள முடியும். அப்படிப்பட்ட சிறந்த நிபுணர்கள் மட்டும்தான் நமது உடலை சோதிக்க வேண்டும். அப்படிப்பட்ட அற்புத நிபுணர்களாக அனைவரும் திகழ இது போன்றபலகட்ட தேர்வுகள் அவசியம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

    இப்படி நுழைவுத்தேர்வு வந்து விட்டதால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இடம் கிடைப்பதில்லை என்றும் எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. இதில், அரசு பள்ளி மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதில் உண்மை இருக்கிறது. இந்த நீட் தேர்வு இல்லாதபோது அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக்கல்லூரிகளில் சிலருக்கு இடம் கிடைத்தது. இப்போது இது இன்னும் குறைந்திருகின்றது. 2016-ஆம் ஆண்டு அரசு பள்ளிகளில் படித்த 30 பேருக்கு மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தது. ஆனால் இந்த நீட் தேர்வு வந்த 2017வது ஆண்டில் 5 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்தது. இது வருத்தத்திற்குரிய செய்தியாக இருக்கிறது. நானும் அரசு பள்ளியில் படித்தவன் என்பதாலும் மருத்துவக்கல்லூரியில் சேர எவ்வளவோ முயன்றும், அதிக மதிப்பெண் கிடைத்தும், அன்றைய தினம் இருந்த நேர்காணல் என்றஒரு நியாயமற்றதேர்வு முறையால் மருத்துவக்கல்லூரியில் சேரும் வாய்ப்பை இழந்து, ஏமாந்த ஒரு அரசு பள்ளி மாணவன் என்பதாலும் என்னால்  ஒரு அரசு பள்ளி மாணவர்களின் பரிதாப நிலையை உணர்ந்து கொள்ள முடிகிறது. இருந்தாலும் இந்த பிரச்சனைக்குத் தீர்வு, நமது அரசு பள்ளி மாணவர்களையும் தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிடும் அளவிற்கு அவர்களது கல்வி தரத்தை உயர்த்துவது சிறந்ததாக இருக்குமே தவிர மருத்துவக்கல்லூரிகளின் நுழைவுத்தேர்வை ரத்து செய்வது அல்ல. அரசு பள்ளியில் அறிவார்ந்த பிள்ளைகளும் உண்டு. ஆர்வம் உள்ள ஆசிரியர்களும் உண்டு. இவர்களால் இதை செய்ய முடியும் என்று நான் நம்புகின்றேன்.

    நீட் நுழைவுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தனியார் மருத்துவமனைகளில் அனுமதி வழங்க வேண்டும் என்றவிதி வந்ததில் குறிப்பாக ஒரு நன்மை ஏற்பட்டது. தனியார் மருத்துவக்கல்லூரிகளில் அதிகபட்ச பணம் நன்கொடையாக தருபவர்களுக்கும் இடம் என்றநிலை இப்போது இல்லை. எந்த தகுதியும் ஆர்வமும் இல்லாதவர்கள் மருத்தவராகி நமது உயிரோடு விளையாடுவது இதோடு ஓரளவு தவிர்க்கப்பட்டிருக்கிறது.

    மருத்துவ வல்லுநராக சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு ஒன்று கூற வேண்டும். போட்டித் தேர்வுகளைக் கண்டு மலைத்து நிற்காதீர்கள். அது கடினம்தான் என்றாலும் உங்களால் ஏறக்கூடிய மலைதான். மனிதர்கள் இமயமலையையே சாதாரணமாக ஏறிவிடுகிறார்கள். கண் தெரியாத Erik Weihenmayer என்பவரே இமயமலையை ஏறிவிட்டார். நமது பெற்றோர்களும், சமுதாய பெரியவர்களும் உங்களுக்கு சிரமம் இருக்கக்கூடாது என்று பார்க்கிறார்கள். அவர்கள் போராட்ட முயற்சி ஒருபுறம் இருக்கட்டும். நீங்கள் உங்கள் பாதுகாப்பு வளையத்திற்கு உள்ளிருந்து வெளியே வாருங்கள். போட்டித் தேர்வுகள் உங்களுக்கு விடப்பட்ட சவாலாக ஏற்றுக் கொண்டு, இதையும் ஒரு கை பார்த்துவிடுவோம் என்று கூறி சவாலை சமாளியுங்கள். நமது முன்னோர்கள் ஒன்றும் சொகுசாக வாழ்ந்தவர்கள் அல்ல. கடுமையான வெயிலிலும், பஞ்சத்திலும், பட்டிணியிலும் உழைத்து வாழ்ந்தவர்கள். அவர்கள் பட்ட சிரமத்தை ஒப்பிடும் போது, அறிவுப்போட்டித் தேர்வுக்கு தயார் செய்வது ஒன்றும் கடினமான வேலை இல்லை.

    உயிர்காக்கும் துறை அலோபதி மருத்துவம் என்பதாலும், இந்த மருத்துவம் மட்டும்தான் உயிர் காக்கும் என்பதாலும், அந்த மருத்துவக்கல்வி, தகுதி உள்ள மாணவர்களுக்கு மட்டும் தரப்பட வேண்டும். மருத்துவக்கல்லூரிகளில் சேர நுழைவுத்தேர்வுகள் இருப்பதும், மருத்துவப்பணி மேற்கொள்ள தகுதித்தேர்வுகள் இருப்பதும் நல்லதுதான் என்று எனக்குத் தோன்றுகின்றது.[/hide]

    இந்த இதழை மேலும்