– 2015 – November | தன்னம்பிக்கை

Home » 2015 » November

 
  • Categories


  • Archives


    Follow us on

    என் பள்ளி

    அ. சுப்பிரமணியம்,

    பி.ஏசி, எம்.ஏ, எம்.எட், எம்ஃபில், டி.ஏ.பி. ஜி.சி.டி.இ

    மாவட்டக்கல்வி அலுவலர் (ஓய்வு)

    நாமக்கல்.

    கொங்கு மண்டலம் புகழ் காஞ்சிக்கூவல் நாட்டின் நடுவூராய்த் திகழும் கூவலூரில் ஏழை மாணாக்கர் விடுதியோடு அண்ணல் மறைந்த ஆண்டு நினைவாக, சாந்தமூர்த்தியின் சத்தியம் அன்பு மார்க்கமுடன், மாந்தருக்குள் சேவை செய்யும் வாழ்வினையும் புகட்டிடும் பெரு நோக்கத்துடன், 02-06-1948 இல் எம்பள்ளி உருவாகியது. காந்தீயச் செம்மல்     K.K சுப்பண்ணகவுண்டர், அவர் திருமகன் முன்னாள் மத்திய அமைச்சர் K.S. இராமசாமி முன்னின்ற நிர்வாகத்தில் வைர விழா நடைபோட வரும் பள்ளியே “”கூவலூர் காந்தி கல்வி நிலைய மேனிலைப் பள்ளி.”

    1950 – 1962 கால கட்டத்தில் கோபியைச் சுற்றி 10 கி.மீ சுற்றளவில் பள்ளிகள் இல்லாத சூழ்நிலையில் எம்மைப் போன்ற மாணவர் பெற்ற தவப்பயனாக 60 ஏக்கர் நிலக் கொடையில் ஆரம்பமானது.

    இப்பள்ளியால் எம் போன்று பல ஆயிர மாணவர்கள் பெற்ற பயன் சொல்லிமாளாது. காலை வழிபாட்டுடன் சிவபுராணமும், வார வழிபாட்டில் ஆன்மீக போதனையும், ஆண்டுதோறும் காந்தி ஜெயந்தி உள்ளிட்ட விழாக்களில் தக்களியில் நூல் நூற்றலும், தியானப் பயிற்சியும், தேசியப் புகழ் பெற்ற சான்றோர் பேருரைகளும் குறிப்பாக எம்மை வாழ்வில் சைவ உணவு மன உறுதியையும், ஒப்பற்ற நல் பண்பாட்டையும் வளர்த்தன.

    பள்ளிக்கு வருகை தரும் பெரியோர்களில் திரு. காமராஜர், சி.எஸ், கி.வ.ஜ, வாரியார், நெ.து. சுந்தரவடிவேலு, ம.ரா.போ. குருசாமி, க.கு. கோதண்ட ராமன், சாந்தலிங்க அடிகள் ஆகியோர் ஆற்றிய பேருரைகள் கல்வியொடு நல்ல ஒழுக்க ஈடுபாட்டை வளர்க்க உதவின.

    ஈராண்டுகள் எமக்குத் தலைமை ஆசிரியராய் வழிகாட்டிய எளிய தோற்றமுடன் பள்ளிக்கு நடந்தே வரும் கதர்ஜிப்பா, கோவண வேட்டி, குடை, குடுமி சகிதமாய் மாணவருடன்  வரும் O.S. துரைசாமி அய்யர் அவர்களின் மிடுக்கும் கண்டிப்பும் இன்றைய ஆசிரியர்க்கு முன் மாதிரி.

    அடுத்து 4 ஆண்டுகள் தலைமை ஆசிரியர் திரு S.V. வெங்கடரமணன் கற்பித்த கணிதம் எமக்கு சிறப்புப் பாடமாகவும், இளநிலைப் பட்ட பாடமாகவும் கணிதத்தைப் பயிலவும், எமது ஆசிரியப் பணியில் சிறந்த கணிதம் போதிக்கக் கூடிய திறன் பெறவும் பெரிதும் உதவின. அவர் கற்பித்த ஆங்கிலப் பாடமும், இலக்கணமும் (Formal Grammar) ஆங்கில முதுகலைப் பட்டம் பெறவும், P.G. ஆசிரியராக மேல்நிலையில் முத்திரைப் பதிக்கவும் பல வழிகளில் முன் மாதிரிப் பணியாற்ற பேருதவி செய்ததை எப்படி மறக்க முடியும்.

    9, 10 வகுப்புகளில் தமிழ்  போதித்த “அண்ணாமலை’ ஆசிரியர் பாடல் பாடி நடத்தி முடித்தவுடன் மாணவர் அனைவரும் மனப்பாடமாக ஒப்பித்து விடுவர். இன்றும் அவர் போதித்த தமிழ் பாடல்கள் நினைவில் வெளி வருகின்றன.

    விவேகம் விடியலைத் தருகிறது

    விவேகம் என்பதற்கு பகுத்தறிவு, புத்திக்கூர்மை, மதிநுட்பம், ஞானம் அறிவு, சாமர்த்தியம் என்று பொருள் கொள்ளலாம் விலங்கினங்கள் எதற்குமே அடிமையாவதில்லை. ஆனால் மனிதனே, பணத்தாசை பிடித்தவனாக, பாசத்தால் பலவீனமானவனாக உயிருக்கு பயப்படுவனாக, முரடனாக, அப்பாவியாக, பல்வேறு பட்ட குணம் படைத்தவனாக இருக்கிறான். இதனால் அன்றாட வாழ்வில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. இத்தகைய சூழலில் விவேகம் என்பது தீமையை குறைத்து நன்மையை நாடுவதாகும்.

    கடும்போட்டிகள் சவால்கள் நிறைந்த இன்றைய உலகில் வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய அம்சங்களில் ஒன்று விவேகம். அடுத்து என்ன செய்வது? என்று எல்லா காலகட்டங்களிலும் தெளிவாக அறிந்து இருப்பதுதான் விவேகம். நான் இன்று, இங்கு இந்த நொடி என விவேகத்துடனும், துடிப்புடனும் செயல்பட துடிக்கும் இளைஞர்களின் எதிர்காலம் நிச்சயம் பிரகாசமாக இருக்கும். இன்றைய இளைஞர்கள் வேகமாக சிந்திக்கிறார்கள்.

    தெரிந்ததை தெரியாததிலிருந்து பிரிக்கிறது விவேகம். அறிய வேண்டியதை அறியும். செய்யத்தக்க செயல்களையே செய்யும். கடலின் ஆழத்தில் முத்தைக் கண்டுபிடிப்பது போல பிரச்சனைகளின் ஆழத்தில் முடிவை, தீர்வைக் கண்டுபிடிக்கிறது விவேகம். ஒரு மனிதன் தான் செய்யும் செயலை, எப்போது? எப்படி? எங்கே? ஏன் செய்கிறோம் என முதலில் சிந்திக்க வேண்டும். இந்த அறிவே விவேகம்.

    விவேகம் ஏட்டு சுரைக்காய் அல்ல. வாழ்வில் பல நெருக்கடிகளைச் சந்தித்து விவேகத்துடன் எதிர்கொண்டு கடந்து வந்தவர்களே இன்றைய வெற்றியாளர்கள். நமக்கு ஒரு சிக்கல், துன்பம் பிரச்சனை வருகிறது. நாம்தான் முடிவெடுக்க வேண்டும். சிலர் எல்லோரிடமும் புலம்புகிறார்கள். சிலர் நேரம் சரியில்லை என நொந்து கொள்கின்றனர். சிலர் பொறுத்துக் கொள்கின்றனர். சிலர் மாற்று வழியை விவேகத்துடன் தேடுகின்றனர். எது சரி, எது தவறானது என சிந்தித்து முடிவு செய்வதே விவேகமாகும். இருள் தடுமாறச் செய்கிறது. விவேகம், ஞானம் என்கிற வெளிச்சமோ உற்சாகம் தருகிறது. அபரிதமான நம்பிக்கையைத் தருகிறது. விடியலைக் காண்கிறது.

    இராமன் மிக மென்மையானவன், அறம் தவறாதவன், கைகேயி மீது ஏராளமான பிரியம் அன்பு வைத்திருப்பவன். ஆனால், கைகேயி இராமனிடம் கூறியது என்ன? நீ அரண்மனையை விட்டு காட்டுக்குச் செல்ல வேண்டும். என் மகன் பரதன் நாட்டை ஆள்வான் என்று, எத்தனை குரூரம்? எவ்வளவு சுயநலம்? எவ்வளவு வஞ்சகமாக சொல்கிறாள். அப்படி சொல்லும்படி ஆகிறது. அப்படித்தான் வாழ்க்கையில் எல்லாம் நடந்து விடுகிறது. அதுதான் மனித அனுவம். நடைமுறை வாழ்க்கையில் பலருக்கு இந்த அனுபவம் ஏற்படுகிறது.

    தலைமைக்குக் தேவை விவேகம் :

    வளைகுடாப் பகுதியில் சமீப காலங்களில் ஏற்பட்டு வரும் சிக்கல்கள் உலக நாடுகளை செய்வதறியாது திணறடித்துக் கொண்டிருக்கையில் இந்திய அரசு ஏமன் நாட்டிலிருந்து இந்திய குடும்பங்கள் அனைவரையும் மிகப் பத்திரமாக தாயகம் திரும்ப ஏற்பாடு செய்திருந்தது. இப்படி அதிரடியாய் மீட்புப் பணிகளை மேற்கொண்ட இந்திய கப்பற்படையை மற்ற நாடுகள் தொடர்பு கொண்டு தங்கள் நாட்டு பிரஜைகளையும் அழைத்துவர உதவ முடியுமா? என்று கோரிக்கை வைக்கவும் செய்தது. ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டிய விசயம்.

    சில ஆண்டுகளுக்கு முன் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட மழை வெள்ளப் பெருக்கின் போது அந்த கரடுமுரடான மலைப்பிரதேசத்தில் காட்டாற்று வெள்ளம் சாலைகளைப் பியத்து எடுத்திருந்த வேளையில், அங்கு சிக்கிக் கொண்ட பல ஆயிரம் குடும்பங்களை விவேகத்துடன் செயலாற்றி காப்பாற்றிய பெருமை நம் இந்திய விமான படைகளுக்கு உண்டு.

    திட்டமிட்டு

     

    ஒரு செயலை நினைத்தவுடன் தொடங்குவதும், மனம் போனபோக்கில் அதனை செய்து முடிப்பதும், அந்த செயல் ஏற்படுத்தும் விளைவுகளைப்பற்றி கவலைப்படாமல் இருப்பதும் செயலின் முடிவுகள் எப்படி அமைய வேண்டும்? என்பதைப்பற்றி நினைக்காமல் இருப்பதும் – எந்த ஒரு செயலையும் திறம்பட செய்ய இயலாத நிலையை உருவாக்கிவிடும்.

    “எதையாவது தொடங்கி, எப்படியாவது செய்து முடிக்க வேண்டும்” என்ற சிந்தனையோடு சிலர் தங்கள் செயல்களில் ஈடுபடுவார்கள். ஆனால், செய்யும் செயலைத் திட்டமிட்டு, எவ்வாறு செய்ய வேண்டும்? என்பதை முன்கூட்டியே சிந்தித்து செயல்படுபவர்கள், அந்தச் செயலை மிகவும் சிறப்பாக செய்து முடித்து வெற்றியைக் காண்கிறார்கள்.

    எந்தவொரு நிகழ்ச்சியை நடத்தினாலும் அதற்கு “திட்டமிடல்” (டப்ஹய்ய்ண்ய்ஞ்) என்பது அவசியமாகிறது. செயல்திட்டத்தை முறைப்படி வடிவமைக்கத் தெரியாதவர்கள் பலர் தங்கள் வாழ்க்கையில் எதிர்பார்த்த நிலையை அடைய இயலாமல் சிக்கலில் சிக்கித் தவிக்கிறார்கள்.

    எனவே – திட்டமிட்டு செயலாற்றும் பண்பு இளமைப் பருவத்திலிருந்தே வளர்க்கப்பட வேண்டிய பண்பு ஆகும்.

    மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் இளம்வயதில் கற்ற பண்புகள்தான் அவரது வெற்றிக்கு அடித்தளமாக அமைந்தது. எந்தச் செயலையும் திட்டமிட்டு செயலாற்றவும் அவருக்குத் துணையாக நின்றது.

    சிறுவனாக இருந்தபோது ராமேஸ்வரம் பள்ளியில் படித்த டாக்டர் அப்துல்கலாம் அதிகாலை 4 மணிக்கே எழுந்து, குளித்து உற்சாகமாக இருக்கும் பண்பை பழகிக்கொண்டார். அதன்பின்னர்தான், அவர் கணிதப் பாட வகுப்புக்குச் செல்லும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொண்டார். “தனது வகுப்புக்கு வரும் மாணவர்கள் காலையில் குளிக்காமல் கணிதப்பாட சிறப்பு வகுப்புக்கு வரக்கூடாது” என கணித ஆசிரியர் இட்ட கட்டளையை நிறைவேற்றுவதற்காக அந்தப் பழக்கத்தை பழகிக்கொண்டார் அப்துல்கலாம். இதனால்தான், டாக்டர் அப்துல்கலாம் தனது படிப்பில் மிகுந்த அக்கறையோடு கவனம் செலுத்தத் தொடங்கினார். இளம் வயதிலேயே கற்றுக்கொண்ட இந்த பண்புதான் திட்டமிட்டு செயலாற்றவும், குறிப்பிட்ட காலத்திற்குள் ஆய்வுகளை செய்துமுடிக்கவும் அவருக்குப் பக்கபலமாக இருந்தது.

    “எதுவும் எப்படியும் நடந்துவிட்டுப் போகட்டும்” என்று திட்டமிடாமல் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு வெற்றிக்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது.

    திட்டமிடாமல் செயல்படுபவர்களின் வாழ்க்கை, துடுப்பு இல்லாத படகைப் போன்று நிலைகுலைந்து போய்விடுகிறது. எனவே, வாழ்க்கையில் வெற்றி காண விரும்புபவர்கள் வாழ்க்கையின் நிகழ்வுகளை சரியாகத் திட்டமிட்டு, தங்களின் எதிர்காலம் பற்றிய செயல் திட்டங்களை உருவாக்கிக்கொண்டு செயல்பட வெண்டும்.

    செயல் திட்டங்களை உருவாக்குவது எப்படி? என்பது சிலருக்குப் புரியாத புதிராகவே அமையும். செயல் திட்டங்களை அமைப்பதில் குழப்பம் வரும்போது கீழ்க்கண்ட கேள்விகளை மனதிற்குள் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.

    1. இந்தச் செயலை நான் ஏன் செய்ய வேண்டும்?
    2. எப்படிச் செய்ய வேண்டும்?
    3. எப்போது செய்ய வேண்டும்?
    4. செயலில் ஈடுபடுபவர்கள் யார்?
    5. இந்தச் செயலை யாரால் வெற்றிகரமாக செய்துமுடிக்க முடியும்?
    6. செயலைச் செய்வதற்கு எத்தகையச்சூழல் தேவையானதாக அமைகிறது?
    7. செயல் ஏற்படுத்தும் விளைவுகள் எவை?
    8. செயலின் விளைவுகளை எதிர்கொள்வது எப்படி?

    இதுபோன்றசில கேள்விகளையெல்லாம் மனதில் எழுப்பி, அந்தக் கேள்விகளுக்கான சரியான பதிலைத் தெரிந்துகொண்டால் ‘திட்டமிடுதல்’ எளிதாகிவிடும்.

    கல்வியும் கலையும்

    சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக விளங்கிய மௌலானா அபுல் கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த தினமான நவம்பர் 11ம் தேதி, 2008 முதல்  தேசிய கல்வி தினமாக கொண்டாடப்படுகிறது.

    கல்வித்துறைக்கு இவர் ஆற்றிய பணியை நினைவு கூறும் வகையில் இவரது பிறந்த நாள் ‘தேசிய கல்வி தினமாக’ கொண்டாடப்படுகிறது.  அபுல்கலாம் ஆசாத் 1888ம் ஆண்டு அரேபியாவில் உள்ள மெக்கா நகரில் பிறந்தார்.

    சிறந்த இந்திய தேசியவாதியாகவும், சுதந்திரப் போராட்ட தியாகியாகவும் திகழ்ந்தவர் ஆசாத். 1992ம் ஆண்டு இவருக்கு இந்தியாவின் உயரிய குடிமை விருதான ‘பாரத் ரத்னா’ அவரது மறைவுக்குப் பின் வழங்கப்பட்டது.  நமது நாட்டின் கல்வித்துறையை வடிவமைத்ததில் இவருக்கு பெரும் பங்குண்டு.

    சாகித்திய அகாடமி (1954), லலித்கலா அகாடமி, கலாச்சார உறவுகளுக்கான இந்திய கவுன்சில் உள்ளிட்ட பல பிரபல அமைப்புகளை ஆசாத் உருவாக்கினார்.  கல்விக்கான மத்திய ஆலோசனை குழு வாரியத்தின் தலைவராக இருந்த ஆசாத், பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட மத்திய மாநில கல்வி முறைகளில் சீர்திருத்தங்கள் செய்ய பரிந்துரைத்தார்.

    பெண்கல்வி, தொழிற் பயிற்சி, வேளாண் கல்வி, தொழில்நுட்ப கல்வி உள்ளிட்ட பல சீர்திருத்தங்களை பரிந்துரைத்தார்.  பல்கலைக்கழகங்களுக்கு கல்வித்துறைசார்ந்த பணிகள் மட்டுமல்லாமல் சமூகப் பொறுப்பும் உள்ளது என்று கூறினார்.  வயது வந்தோருக்கான கல்வித் துறையில் ஆசாத் ஒரு முன்னோடியாக இருந்தார்.  ஆரம்பக் கல்வி தாய் மொழியிலேயே இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இன்றைய மாணவர்கள் நாளைய அரசியல் தலைவர்கள், அவர்களுக்கு முறையான பயிற்சிகளை அளிக்காவிட்டால் தேசத்திற்கு தேவையான தலைமைத்துவம் கிடைக்காமல் போய்விடும் என்றகருத்தினைக் கொண்டிருந்தார்.  1951ல் காரக்பூரில் இந்திய தொழில்நுட்ப பயிலகம் (ஐஐடி) அமைக்கப்பட்டது.  அதைத் தொடர்ந்து மும்பை, சென்னை, கான்பூர், தில்லி ஆகிய நகரங்களிலும் ஐஐடிக்கள் அமைக்கப்பட்டன.

    ஆசாத் அவர்கள்தான் தேசிய கல்வி முறைக்காக முதலில் குரல் எழுப்பியவர்.  ‘National Education Policy’ எனப்படும் தேசிய கல்வி கொள்கைக்கு  (1986) இதுதான் அடிப்படையாக விளங்கியது.  அனைத்து மாணவர்களுக்கும் சாதி, மத பாகுபாடின்றி தரமான கல்வியை குறிப்பிட்ட நிலை வரை அளிக்க வேண்டும் என்று ஆசாத் வலியுறுத்தினார்.  10’2’3  என்றபொதுவான கல்வி முறைக்கு வித்திட்டவரும் இவர்தான்.

    1905ல் வங்கப் பிரிவினையின் போது ஆசாத் அரசியலில் நுழைந்தார்.  1920ல் திலகரையும், மகாத்மா காந்தியையும் சந்தித்தார்.  இச்சந்திப்பு அவரது வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது.  இந்தியா ஒன்றுபட்ட நாடாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.  அதற்கு பிறகு இந்தியா சுதந்திரத்தை வெல்கிறது (India Wins Freedom) என்றபுகழ்பெற்றநூலை எழுதினார்.  சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட ஆசாத் சிறையில் பல ஆண்டுகளைக் கழித்தார்.  தனது எழுபதாவது வயதில் 1958ம் ஆண்டில் இவர் காலமானார்.

    ‘நமது நாட்டின் செல்வம் வங்கிகளில் இல்லை, ஆரம்பப் பள்ளிகளில் உள்ளது’ என்று குறிப்பிட்ட அபுல்கலாம் ஆசாத் அவர்களின் பிறந்த தினத்தை தேசிய கல்வி தினமாகக் கொண்டாடும் வேளையில் கல்வி மற்றும் கலைச் செல்வத்தின் சிறப்புகள் குறித்து சிந்திப்போம்.

    உங்களுக்காக சில உண்மைகள்

    எதிர்பாராத கோணத்தில், ஒன்றை எண்ணிப் பார்க்கின்றபோது,      புதிய போக்கு புலப்பட்டு, நம்மை புல்லரிக்க வைக்கும். மனமானது எந்த அளவு கவனம் சிதறாது ஒரு புள்ளியில் குவிகிறதோ, அந்த அளவு அற்புத ஆற்றலானது அவ்விடத்திலிருந்து வெளிப்படும்.

    அறிவின் வட்டத்துக்குள்ளே அகப்பட்டுக் கொண்டவர்கள்         புதிய எல்லையைப் புறக்கணித்து விட்டவர்களாவர்கள். இயல்பு நிலையைக் கடந்து, செல்லுகின்றவர்களே புதிய இடத்தைக் கண்டுபிடிக்கின்றார்கள். வழியில்லாத இடத்தை எந்தவித வலியில்லாமல் அடைய முடியாது!

    இறகுகள் இருந்தும் அதை விரித்து பறக்கத் தெரியாத பறவையாக! நம்மில் எத்தனைபேர் தகுதிகள் இருந்தும் அதை உபயோகித்து முன்னேறத் தெரியாதவர்களாக முடங்கிக் கிடக்கின்றோம்.

    தீவிரத்தனமான பொறுப்புக்குள்ளே யார் நுழைந்தாலும் அவர் உடனே அதுவாக மாறிவிடுவார். அதுவரை அவரே நினைத்துப் பார்த்திராத புதிய கண்ணோட்டம், புதிய முயற்சியை செய்வது கண்டு வியந்து போவார்.

    நமக்குள்ளே குடியிருக்கும் எதிர்மறை எண்ணத்தை காலி செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தி, அங்கே நேர்மறை எண்ணத்தைக் குடியிருக்க செய்வது நம் பொறுப்பு. ஏன் என்றால் வீடு நம்முடையது! அங்கே வாடகைக்கு இருப்பவர் நல்லவராக இருக்க வேண்டியது நியதி!

    நெல்லோடு வளரும் புல்லைப் புடுங்கி எறிவதுபோல, நல்லதோடு வரும் அல்லதை அறுத்தெறி! உள்ளம் தெளிவாகும்! எல்லாம் மகிழ்வாகும்! கூட்டத்துடன், கூட்டமாக, ஒரேவழியில், பின்செல்கின்ற செம்மரியாடுகள் என்றைக்கும், எதையும் சாதிக்கப் போவதில்லை.

    தனிவழியில் பயணிக்க துடிப்பவருக்கு தைரியம் நிறைய வேண்டும்.  அதன் தொடக்கத்தில் வரும் கிண்டலை கேலியை கடந்து செல்லுகின்ற துணிச்சலுடன், இடையில் வரும் தடைகளை, தகர்த்தெறிந்து இலக்கை எட்டிப்பிடிக்கும் வைராக்கியம் வேண்டும்!

    தனிவழியில் நீ சாதித்து விட்டால், அதுவரை உன்னை தளர்வடையச் செய்து, தள்ளிவிடத் துடித்தவர்கள் துள்ளிக் குதித்து வந்து உன்னை தோள்மீது தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடத் தயங்க மாட்டார்கள்.

    ஆகையினால் உடனே புறப்படு! புதிய வழியில்! மாற்றி யோசித்த பல மனிதர்களால் உருவாக்கப்பட்ட இம்மாநிலம் புதுமையாய் இன்று பூத்துக் குலுங்குது போதாதா! நீ! சிந்திப்பதிலும், செயல்படுவதிலும் தக்க இடைவெளி இருக்குமானால் நிச்சயம் புதிய ஒளி உன்னிலிருந்து வெளிப்படும்!

    நாம் கடமையாக கருதும் நல்லது, இன்னொருவருக்கு கொடுமையாகத் தோன்றுகிறது! ஒரு செயலுக்கு எப்போதும் இரு கருத்து இருந்து கொண்டே தான் இருக்கும் என்ற தெளிவிருக்கும் வரை நம்மீது வீசப்படும் விமர்சனங்கள் மீது கோபம் ஏற்படாது!

    கோபம் ஏற்படாதபோது, நம் குணத்தின் மீது மாற்றம் ஏற்படாது! நம்மில் மாற்றம் ஏற்படாதபோது, நம் இயல்பு பாதிப்புக்குள்ளாகாது! நம் இயல்பு பாதிப்பிற்குள்ளாகாதப்போது! நம் அமைதி, ஆனந்தம் என்றும் குறையாது!

    சோம்பலக் கிடப்பவனுடனே, சுற்றிக் கொண்டிருக்கும், எதிர்மறை எண்ணம் சுறுசுறுப்புடையவனுடனே சென்று கொண்டிருக்கும் நேர்மறை எண்ணம் வாழ்க்கைக் கடலில் கல்வி படகே, கரையேற்றி விடும். தினம், தேவையைத் தேடி ஓடும் கூட்டத்திலிருந்து, நீ துணிச்சலுடன் விலகி, புதியதை நோக்கிப் புறப்படு!

    இடைவெளி விட்டு இயங்கும்போது தடைகளைத் தூண்டும் தைரியம் கிடைக்கும். ஓடிக் கொண்டே இருக்காதே! அவ்வப்போது உன்னை மறந்து உல்லாசமாய் ஓய்வெடு! பல முறையில் சோதித்துப் பார்த்து ஒரு முடிவுக்கு வாருங்கள்! அந்த முடிவைக் கூட சிறிது காலம் தாமதித்து செயல்படுத்த விளையுங்கள்!

    நட்பின் நெருக்கத்தை பேணி காப்பது எப்படி?

    A  true friend is one soul and two bodies Aristotle

    Sincerity , truth , faithfulness, come in to the

    very essense of friendship          – William Ery

    Be gracious to all men

    but choose the best to be your friends- Isocrates

    உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே

    இடுக்கண் களைவதாம் நட்பு.

    உடையை  இழந்தவனது மானத்தைக் காக்க அவன் கை உடனே சென்று.

    உடையை சரி செய்வது  போல  நண்பனின் துன்பத்தை விரைந்து

    உடனே நீக்குவதுதான் நல்ல நட்பாகும்.

    முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

    அகநக நட்பது நட்பு

    உள்ளத்தில் மாற்று எண்ணத்தை வைத்துக் கொண்டு, முகத்தில் மட்டும் மகிழ்ச்சியைக் காட்டி, நட்பாக நடிப்பது நல்ல நட்பாகாது. நெஞ்சத்தின்  ஆழத்திலே இருந்து உள்ளன்போடும், மகிழ்ச்சியோடும் நட்புக் கொள்வது தான் நல்ல நட்பு.

    புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்

    நட்பாம் கிழமை தரும்

    நட்போடு  இருப்பதற்கு ஒருவரோடு ஒருவர் கலந்து பேசி பழகுதல் வேண்டியதில்லை. இருவரிடமுள்ள  ஒத்த உணர்ச்சிகளே நட்பு என்றஉரிமையைத் தந்து விடும்.

    நகுநற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்

    மேற்சென்று இடித்தற் பொருட்டு

    நட்புக் கொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டுமல்ல

    அவர் மிகுதியாக தவறு செய்யும் போது அவரை கடிந்து திருத்து வதற்குமாகும்.

    – திருக்குறள்

    நட்பு என்பது மிகவும் புனிதமானது,   தெய்வீகமானது,  நட்பு அமைவதெல்லாம் அவரவர் நல்வினைகளையும், முன்வினைகளையும் பொருத்ததாகும்.  நல்ல நட்பு என்பது ஆன்மாவின் சொர்க்கம் எனப்படும்.  நட்பு என்பது  ஒரு நிழல் தரும் விருட்சத்திற்கு ஒப்பானது.  இது துயரத்தைப்  பங்கிட்டு மகிழ்ச்சியைப் பெருக்கும். பெரியோர்களுடைய நட்பு  வலிமையை  சேர்க்கும்.  நண்பன் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையாக கருத முடியாது.  ஒருவனுடைய   ‘விலை மதிப்பு’   ( Worth )  என்ன என்று பார்க்க விரும்பினால்  அது அவருடைய  நண்பர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அது அமையும்.

    உன் நண்பனை சொல்!  உன்னை யாரென்று சொல்கிறேன் என்பது பழமொழி. நண்பனை வைத்து நாம் நல்லவர்களா? கெட்டவர்களா? என்பதை அடையாளம் காண முடியும். பெற்றோர்களிடமும், உறவினர்களிடமும், மனைவியிடமும் சொல்ல முடியாத ரகசியங்களை  நண்பர்களிடம் மட்டுமே  பகிர்ந்து கொள்ள முடியும்.  நட்பு அந்த அளவு நம்பிக்கையானது.

    பொதுவாக நீண்ட நெடு நாட்கள் நண்பர்களை தக்கவைத்துக் கொள்வது ஒரு தவம்.  25 ஆண்டுகள் தொடர்ந்து நட்போடு  இருப்பவர்கள் நட்பிற்கு வெள்ளி விழா காண்பவர்கள் மிகக் குறைவு. தொடர்ந்து 50 ஆண்டு காலம் நட்பின் நெருக்கத்தோடு பொன்விழா காண்பவர்கள் மிகவும் அரிது,  அபூர்வமும்கூட.

    உறவுகளை விட நட்பு மேலானது.  உறவுகள் ஒரு வித எதிர்பார்ப்புகளோடு இருந்து அது கிடைக்காத போது அதிருப்தி அடையும். அதனால்  உறவுகளில் விரிசல் உண்டாகும். ஆனால் நட்பு எந்த எதிர்ப்பார்ப்புகளும் இல்லாதது. அன்பு ஒன்று மட்டும் அதன் அடித்தளமாக அமைகிறது.  ஆதலின் நட்பில் எதிர்பார்ப்புக்கோ, ஏமாற்றத்திற்கோ இடமில்லை.

    மனதளவில்  விரிசல்களும்,   வருத்தங்களும் வருவது நல்ல நட்பிற்கு  அழகல்ல.  நட்பினுடைய ஆழத்தை அதிகப்படுத்திக் கொள்வதும் மேம்படுத்திக் கொள்வதும் ஒரு மிகப்பெரிய கலை.

    நண்பர்களை நாம் பல வகையாக வகைப்படுத்தலாம்.

    எதிர் மறை மனிதர்கள்

    வாழ்வில் வெற்றிக் காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே !

    மனிதர்களின் பல குணங்களுக்குள் முக்கியமான 2 குணங்கள் நேர் மறை (Positive Attitude) மற்றும் எதிர் மறை (Negative Attitude).

    ஒவ்வொரு மனித எண்ணத்துக்கும், அதை உருவாக்கும் மனதுக்கும் கிடைத்திருக்கும் விசுவாச ஊழியர்கள் தான் இவர்கள் இருவரும். கூப்பிட்ட குரலுக்கு ஓடிவந்து, காரணங்களை அடுக்கும் காரிய கர்த்தாக்கள்.

    இவர்களது பெயர் Mr. Success மற்றும் Mr. Failure.

    ஒரு வலையைச் செய்ய வேண்டும் என்ற தேவை உங்களுக்குள் எழுகிறது.

    அதற்கு உங்களுக்கு சில தகவல்கள், Ideas, தைரியம், தெளிவு – தேவைப்படுகிறது.   மனதை கேட்கிறீர்கள் ! அது எண்ணத்துக்கு கட்டளை இடுகிறது.

    உங்கள் எண்ணம் 2 விசுவாசிகளையும் அழைக்கிறது.

    Mr. Failure – வருகிறார்.  இந்த வேலையை சரியாக செய்ய முடியாது, முடிப்பதற்கு மிகவும் சிரமம், இதனால் துன்பமே கடைசியில் வரப்போகிறது. இதற்கு முன்னால் இந்த செயலைச் செய்தவர்கள் எல்லோரும் கஷ்டபட்டவரகளே மற்றும் நஷ்டப்பட்டவர்களே – என்ற ஒரு நீண்ட பட்டியலைத் தருகிறது.

    இப்படி எதிர்மறையான விஷயங்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி, உங்களை பயம் காட்டி, செயலில் இருந்து பின்வாங்க வைத்துவிடுகிறது.

    இதை உண்மை என்று நம்பி, முயற்சியை விட்டு விடுகிறீர்கள், முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போட்டு தடுத்து விடுகிறீர்கள் !

    Mr. Success வருகிறார் !

    பிரமாதம் !  அருமையான சந்தர்ப்பம், வெற்றி பெற தேவையான அனைத்தும் இந்த வேலையில் இருக்கிறது, இதை செய்த பலர் பணம் மட்டுமல்ல, புகழும் சேர்த்தே அடைந்திருக்கிறார்கள் – என்று உற்சாகப்படுத்தி, எப்படி எல்லாம் செயல்பட்டால் சிறப்பாக வரும், Successful ஆக வரும் – என்ற ஒரு நீண்ட பட்டியலைக் கொடுக்கிறார்கள்.

    தூக்கமும் ஊக்கமும்

    தூக்கம் என்பது நாம் வேலை செய்த களைப்பு நீங்குவதற்காக இறைநிலை செய்த ஏற்பாடுதான் என்று நீங்கள் நினைப்பது கடவுள் சத்தியமாக உண்மையில்லை. உண்மையில் தூக்கத்தின் போது தன்னிச்சை நரம்பு மண்டலம் ஓய்விற்குப் போய், நம் தானியங்கி நரம்பு மண்டலம் விழிப்பு பெற்று நம் உள் உறுப்புகளைப் புத்துணர்வாக்கவே தூக்கம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. நாம் மிக துக்கமாக இருக்கும்போதும், மிக ஆனந்தமாக இருக்குபோதும் நமக்குத் தூக்கம் வருவதில்லை. முந்தைய சூழலில் நமக்கு அதிகமான உடல் சோர்வும்,  பிந்தைய ஆனந்தமான சூழலில் தூக்கம் இல்லாவிட்டாலும் நமக்கு சோர்வு தட்டுவதில்லை. இதற்குக் காரணம் தூக்கத்திற்கு சமமான புத்துணர்வை நம் சந்தோஷச் சூழல் அளிக்கிறது.

    நாம் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் என்னவென்றால், நமக்குத் தூக்கம் வராதபோது தூக்க மாத்திரை எடுப்பது. இதன்பின்னர் நாம் தூங்கி விழிக்குபோது நமக்கு முழுமையான புத்துணர்வு கிடைப்பதில்லை. இதிலிருந்து நமக்குப் புரிவது என்னவென்றால், நாம் வெறுமெனே உடலை கிடத்துவதாலோ அல்லது மூளையின் விழிப்பைத் தூக்க மாத்திரை மூலம் குறைத்துவிட்டுத் தூங்குவதாலோ நமக்கு புத்தாக்கம் கிடைப்பதில்லை. மாறாக, நம் ஆழ்நிலைத் தூக்கத்தின் மூலம் வெளி மனதை உறங்க வைத்து, ஆழ்மனதை விழிப்பு நிலைக்குக் கொண்டுவருவதால் மட்டுமே நமக்கு உள்ளுறுப்பு புத்தாக்கம் நடைபெறுகிறது. இது புரியாத ஞானமற்ற ஆங்கில மருத்துவம் தூக்கம் வராதவர்களுக்குத் தூக்க மாத்திரைகளைக் கொடுத்து தூங்க வைப்பதாகக் கூறிக்கொள்கிறது. ஞானமுள்ள மாற்று மருத்துவத்தில் தூக்க மாத்திரை என்ற ஒன்று கிடையவே கிடையாது. அவர்கள் தூக்கம் வராததன் காரணத்தை நீக்கும் செயலைச் செய்கிறார்கள். இதனால், நமக்கு நிம்மதியான தூக்க வரம் கிடைக்கிறது. ஆங்கில மருத்துவ தூக்க மாத்திரையால் மனச்சோர்வும் மன உளைச்சலுமே ஆரோக்கியமற்ற தன்மையுமே கிடைக்கின்றன.

    அன்பு நண்பர்களே! ஆழமான தூக்கத்தில்தான் நம் பித்தப்பை மற்றும் கல்லீரல் புத்துணர்வு பெறுகிறது. அப்படி கிடைக்காதபோது மறுநாள் பகல் முழுவதும் கல்லீரல் சோர்வும் உடல் வெப்பம் இருக்கத்தான் செய்யும்.  பகலெல்லாம் உடல் உழைப்போடு இதயமும் உழைத்து களைத்து பின் இரவு 11 மணி முதல் அதிகாலை 1 மணி வரையான கால கட்டத்தில் ஆழமான தூக்கத்தில்தான் தளர்ந்த நிலையில் ஓய்வெடுக்கிறது. இந்த நேரத்தில் ஆழமான தூக்கம் இல்லையென்றால் நம் இதயமும் உடலும் பலவீணப்படும்.

    வாழ்வாதாரத்தைப் பெருக்கு…! வாழ்க்கைத் தரத்தை உயர்த்து…!!

    திரு. கார்த்திகேயா சிவசேனாபதி

    சேவை மைய மேலாளர்

    சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி நிலையம், காங்கேயம்.

    • அரண்மனை பரம்பரைக் குடும்பத்தில் பிறந்தவர் என்றாலும் தனக்கும் பயன்கொடுத்து, பிறர்க்கும் பயன்கொடுக்கும் தொழிலையே செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து விவசாயத்தின் விசுவாசியாக, கால்நடைகளுக்கென தனி ஆராய்ச்சி நிலையத்தையே உருவாக்கி அதனை திறம்பட செய்து வருபவர்.
    • குறைந்து வரும் காங்கேயம் இன மாடுகளை காத்திடவும், பெருக்கிடவும் முயற்சிகளை மேற்கொண்டு வருபவர்.
    • அதிகம் இலாபம் பெற வேண்டும் என்பதற்காக நச்சுப் பொருளைக் கலந்து விவசாயம் செய்தல் கூடாது. இன்று நீங்கள் செய்யும் சிறிய தவறு நாளை உங்களின் சந்ததிகளை சோதிக்கும் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது எனக் குரல் கொடுத்து வருபவர்.
    • பலரின் வாழ்க்கைத்தரம் உயரவும், பண்பாடு, கலாச்சாரத்துடன் வாழவும் பள்ளி கல்லூரிகளில் தன்னம்பிக்கை விதைகளை விதைத்து வருபவர்.
    • இப்படி, பல்வேறு சிறப்புகள் பெற்ற திரு. கார்த்திகேயா சிவசேனாபதி அவர்களை நாம் நேர்முகம் கண்டதிலிருந்து இனி……

    உங்களைப் பற்றி?

    திருப்பூர் மாவட்டம் குட்டப்பாளையம் என்னும் சிற்றூரில்தான் பிறந்தேன்.   விவசாயம் எங்களின் குருதியோடு கலந்த தொழில். விவசாயத்தோடு கால்நடைகளை வளர்த்து வந்தோம். கால்நடைகளில் மிகவும் பிரசித்திப் பெற்ற காங்கேயம் காளைகளையும் கூடவே வளர்த்து வந்தோம். இது எங்களுக்கொரு நல்ல அங்கீரத்தைக் கொடுத்தது.

    எனது பள்ளிக்கல்வி கொடைக்கானல், சென்னை என்று பல ஊர்களில் அமைந்தது. எனினும் கல்வியை நான் மிகவும் நேசித்ததன் காரணமாக தங்குதடையின்றி வெற்றிகரமாக முடித்தேன். அதன் பின்பு பி.ஏ., மொழியியல் பாடத்தை சென்னையில் பயின்றேன்.

    கல்வி ஒரு புறம் இருந்தாலும், எனக்கு விவசாயத்தின் மீதும் கால்நடைகளின் மீதும் அளப்பறிய பற்றுதல் இருந்தது. ஒருமுறை எதாச்சையாக ஒரு புத்தகம் ஒன்றைப் படித்தேன். அந்தப் புத்தகம்தான் என் வாழ்க்கையின் மிகப்பெரிய திருப்புமுனை. அப்புத்தகத்தில் காங்கேயம் காளைகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் மிகவும் குறைந்து கொண்டே வருகிறது. இதே நிலையில் சென்றால் நாளை வெறும் புகைப்படத்தில் மட்டுமே பார்க்க முடியும் என்பதை படித்துணர்ந்தேன். 2006 ஆம் ஆண்டு மூன்று பேருடன் அறக்கட்டளையைத் தொடங்கினேன்.

    இந்த சேவை மையம் தொடங்கியதன் நோக்கம் குறித்து?

    இதன் நோக்கம் அழிந்து வருவதை நம்மால் ஆன முயற்சியைக் கொண்டு காக்கப்பட வேண்டும் என்பதுதான். உலகளவில் பாஸ் இண்டிகஸ், பாஸ் டாரஸ் என்ற இருமாட்டினங்கள் உண்டு. பாஸ் இண்டிகஸ் என்பது இந்திய துணைக் கண்டங்களான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இருக்கக்கூடியது.

    ஐரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் பாஸ் டாரஸ் என்ற மாட்டினம் இருந்தது.

    நாகரிகம் வளர்ச்சி அடைய அடைய காட்டினமாக இருந்த மாடு, நாய் போன்ற விலங்கினங்களை மனிதன் வளர்க்க ஆசைப்பட்டான். மக்களும் ஒரே இடத்தில் வாழாமல் வடக்கும் மேற்குமாக சென்றார்கள்.

    அதன்பிறகு மாடுகளின் வளர்ச்சியும் மாறுப்பட்டது. இப்பொழுது இந்தியாவில் மூன்று வகையான மாடுகள் இருக்கிறது. வடஇந்தியாவில் வளர்க்கப்படும் மாடுகளை (Milks Animals) பால் கொடுக்கும் மாடுகள் என்றும், நடு இந்தியாவில் இருக்கக் கூடிய மாடுகள் பால் கொடுப்பதாகவும் இருக்கும், மனிதனுக்கு வேலையும் செய்வதாக இருந்தது, தென்இந்தியாவில் இருக்கும் மாடுகள் வேலைகளை அதிகமாக செய்தாலும், பால் மிகவும் குறைவாக கிடைக்கும். இப்படி மாறுப்பட்ட மாட்டினங்கள் இருந்தது.

    மாடுகளின் வகைகள் பலவாறாக இருந்தாலும் மனிதனின் தேவையை எது அதிகமாகப் பூர்த்தி செய்கிறதோ அதைத் தேடிதான் செல்வார்கள்.

    உலகப் புகழ் பெறும் அளவிற்கு காங்கேயம் மாடுகள் வளர்ச்சி அடைந்ததன் காரணம் என்ன?

    மாடுகள் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்றார் போல் மாறுதல்கள் இருக்கும். குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் மைசூரு பகுதிகளில் அதாவது கர்நாடகாவில் அமிர்த்மஹால், கிருஷ்ணா, ஹாலிகர், தமிழ்நாட்டில் காங்கேயம், பர்கூர், புலியக்குளம், தஞ்சாவூர் உள்ள உம்பளச்சேரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஆலாம்பாடி போன்ற மாடுகள் இடத்திற்கேற்றார் போல் இருந்தது.

    தமிழ்நாட்டில் நாட்டினமாடுகளில் தகப்பன் இனமாக இருப்பது காங்கேயம் இன மாடுகள்தான். தஞ்சாவூர் பகுதிக்கு செல்லும் பொழுது உம்பளச்சேரி மாடுகள் என்றும், மதுரை பக்கம் செல்லும் பொழுது புளியக்குளம் மாடுகள் என்றும், அந்தியூர் பகுதியில் இருக்கும் பர்கூர் மலைமீது இருக்கும் மாடுகள் பர்கூர் மாடுகள் என்றும் பெயர் பெறுகிறது. இவற்றை பல ஆய்வுகள் கொண்டு வெளியிட்டுள்ளார்கள் டாக்டர் கந்தசாமி, டாக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர்..

    ஆரம்பக் காலக்கட்டத்தில் காங்கேயம் காளைகள் மிகச்சிறிய உருவத்தில்தான் இருந்தது. 100 ஆண்டுகளுக்கு முன்னர் என் குடும்பத்தின் மூதாதையர் ராவ்பகதூர் நல்லதம்பி சர்க்கரை மன்றாடியார் அவர்கள் காங்கேயம் காளைகளின் அழகை மேலும் மெருகேற்ற கர்நாடகாவிற்கு சென்று அமிர்த்மஹாலில் ‘பூரிணி மாடு’ என்ற மாட்டை வாங்கி வந்து இங்கிருக்கும் மாட்டோடு இனம் சேர்த்து இன்று இருக்கும் காங்கேயம் மாடுகளை உருவாக்கினார்.

    இன்று இந்தக் காங்கேய மாடுகள் அழகாகக் காட்சியளிக்கிறது, என்றால் அது இவரை மட்டுமே சாறும். அக்காலக்கட்டத்தில் இவர் 6000த்திற்கு மேற்பட்ட மாடுகளை தனது பண்ணையில் வளர்த்து வந்தார்.

    1960 ஆம் ஆண்டு “நில உச்சவரம்பு சட்டம்’ கொண்டு வரப்பட்டது. அன்றைக்கு மேய்ச்சலுக்கு நிலம் பற்றாக்குறை ஏற்பட்டது. அப்பொழுது தான் மாடுகளின் எண்ணிக்கை முதன் முதலில் குறைய ஆரம்பித்தது.

    மாடுகள் வளர்ப்பதிலுள்ள சவால்கள் என்னென்ன?

    ‘மேப்புப்பாதி தோப்புப்பாதி’ என்று ஒரு பழமொழி உண்டு. இந்திய துணைக்கண்டத்திலுள்ள எல்லா மாடுகளுக்கும் மேய்ச்சல் தரைத்தேவைப்படுகிறது.

    சில மாடுகள் கட்டி வைத்து மேய்ச்சல் கொடுத்தால் மட்டுமே அது உண்ணும். மேலும் சில மாடுகள் சுதந்திரமாக மேய்ச்சலுக்கு விட்டால் நன்றாக உண்ணும், இந்த இரண்டாவது நிலை மாடுகளை நன்றாக வளர்த்து விடலாம்.

    இளைய தலைமுறை பற்றி இது விமர்சனமல்ல, ஆதங்கம்..

    நான் இங்கு நம் இளைய தலைமுறை பற்றி எழுத வரக் காரணம் நிறைய இருக்கிறது. ஏனென்றால் இதற்கு முன் பாரதி, விவேகானகாந்தர் மற்றும் அப்துல் கலாம் போன்ற மிகப்பெரிய கவிஞன், ஞானி மற்றும் விஞ்ஞானி போன்றவர்கள் சொன்னதை விட நான் ஒன்றும் புதிதாகச் சொல்லப் போவதில்லை. இருந்தாலும் எனக்குள் ஒரு சின்ன ஆதங்கம் அவ்வளவுதான்.

    நம் இளைய தலைமுறைக்கு நிறைய சிந்தனைகள் இருக்கிறது, அதற்கேற்றாற் போல் மாற்றங்களும் இருக்கிறது. ஆனால் அதை சற்று நல்வழிப்படுத்த வேண்டிய சமூகப் பொறுப்பு இருக்கிறது என்பதை அவர்களாகவே உணர வேண்டும். இளைஞர்களிடம் இருக்கும் குறுகிய பார்வை மற்றும் எண்ணம் மாற்றப்பட வேண்டும். அப்படி என்ன குறுகிய பார்வை மற்றும் எண்ணம் இருக்கிறது என்று தானே கேட்கத் தோன்றுகிறது.. வாருங்கள் பார்க்கலாம் என்னவென்று.

    ஒரு விசயம் பாரட்டப்பட வேண்டியது, ஏனென்றால் நம் திரு. அப்துல்கலாம் ஐயா அவர்கள் கனவு காணுங்கள் என்று சொன்னார். அதை தவறாமல் கடைபிடிக்கும் என் நாட்டு மன்னர்களுக்கு வாழ்த்துக்கள். ஆனால் அவர் சொன்ன விசயம் முழுவதுமாக புரிந்ததாக தெரியவில்லை. கனவு என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறார், நம்மை தூங்கவிடாமல் செய்வது தான் கனவு என்கிறார். ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு இது பொருந்தும் என்று நம்மக்குள் எண்ணிப் பார்க்க வேண்டும். முதல் நம்முடைய கனவில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். ஏனென்றால் நம்மை சுற்றியே கனவுத்திருடர்கள் இருக்கிறார்கள். அது நம் நண்பர்களாக இருக்கலாம், சொந்தங்களாக இருக்கலாம், ஏன் நம் பெற்றோர்களாகக் கூட இருக்க வாய்ப்பு இருக்கிறது. விப்ரோ அஜிம் பிரேம்ஜி சொன்ன மாதிரி “உன் கனவுகளை பார்த்து யாரும் சிரிக்கவில்லை என்றால் உன் கனவு மிகச் சிறியது’ என்கிறார். எங்கே என் ஒவ்வொரு இளைஞனிடமும் கேட்டுப் பாருங்கள் அப்போது உண்மை தெரியவரும்.

    கனவு காணும் இளைஞனிடம் அதை எப்படி செயல்படுத்துவது என்பது மட்டும் தான் இங்கு பிரச்சனை. பெரும்பாலான இளைஞர்களிடம் இருப்பது, ஒரு நல்ல படிப்பு, வேலை, கல்யாணம், குழந்தை இதுக்குள்ளாகவே முடிந்து விடுகிறது. இது மட்டும் போதாதா? என்று தானே கேட்கத் தோன்றுகிறது, உண்மை.

    முகநூலில் ஒரு சில வரிகளைப் படித்தேன். மிகவும் பெருமையாக இருந்தது. தொழில் செய்ய விரும்புகிறவர்கள், அடேங்கப்பா இவ்வளவு பேரா? ஏராளம்.. ஆச்சரியம் என்று நினைத்தேன். இத்தனை பேரும் தொழில் செய்தால், வெளிநாட்டினர் யாரும் இங்கு தொழில் செய்யவேண்டிய அவசியம் இல்லையே என்று எண்ண தோன்றியது. அதன் பின்தான் தெரியவந்தது. நம் இளைஞனுக்கு என்ன தேவை என்று, ஒரு சாதாரண இளங்கலை படித்த மாணவனின் எண்ணம் எப்படி இருக்கிறது என்றால் குறைந்த பட்ச சம்பளம் 4 இலக்கம் கொண்டதாக இருக்க வேண்டும். யாரும் தன்னை வேலை சொல்லக்கூடாது. ஒரு கணினி இன்டெர்நெட் வசதியுடன் வேண்டும். தன்னுடைய நேரத்தை சமூக வலைதளங்களில் செலவிட வேண்டும் என்ற எண்ணமும், நண்பர்களுடன் வெளியே சென்று வருவது (இதில் பல விசயங்கள் அடங்கும்). கனவை மட்டும் வைத்துக்கொண்டு அதற்கான சின்ன முயற்சிகள் கூட செய்யாமல் எப்படி முடியும் கனவை அடைய.

    கனவு என்பது ஒரு அகல்விளக்கைப் போன்று இல்லாமல், காட்டுத்தீயைப் போல இருக்க வேண்டும். அகல்விளக்கை ஒரு சிறு காற்றுகூட (யார் வேண்டுமானாலும் கனவை) அனைத்துவிட வாய்ப்பு இருக்கிறது. ஆனால் காட்டுத்தீயானது சிறு காற்றோ பெருங்காற்றோ அடித்தால் என்னவாகும், தீ வேகமாக பரவும். அதே போன்று நம் கனவானது அடுத்தவர் சீண்டியவுடன் காணாமல் போய்விடக்கூடாது. கனவை அடைவதற்குண்டான வேகம், செயல் அதிகமாக வேண்டுமேயொழிய, குறைய கூடாது.