– 1998 – July | தன்னம்பிக்கை

Home » 1998 » July

 
  • Categories


  • Archives


    Follow us on

    கோபத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது?

    நாம் உணர்ச்சி வயப்பட்டு கொந்தளிப்பு அடையும் போது நம்முடைய உடலும் மனமும் பாதிக்கப்படுகின்றன. பிறருடைய எதிர்ப்புக்கும் ஆளாகிறோம். ஆகவே அதைக் கட்டு படுத்த சில வழிகளைக் கையாளலாம்.

    1. மனம் கொந்தளிப்படையும் போது படுத்துக் கொள்ளலாம். படுத்த நிலையில் உடலும் மனமும் சற்று தளர்வடைகிறது.

    2. நீண்ட மூச்சு இழுத்து அடக்கி, வைத்து மெதுவாக வெளிவிடும் பயிற்சியை செய்யலாம். இதைச் சுமார் ஐந்து நிமிடங்களுக்கோ அல்லது கோபம் தணியும் வரையிலோ செய்யலாம்.

    3. கோப மூட்டியவரை என்னவெல்லாம் சொல்லித் திட்டுவதற்கு எண்ணுகிறீர்களோ அத்தனையும் ஒரு தாளில் எழுதுங்கள். இது ஒரு வகையில் ஆவேசத்தை குறைக்கும்.

    4. கிறிஸ்த்துவ மதத்தில் confession என்ற முறை உண்டு. நமது மனதில் வெளியில் சொல்ல முடியாத தாங்க முடியாத குறை அல்லது குற்ற உணர்வு இருந்தால், அதை பாதிரியாரிடம் தனிமையில் எல்லாவற்றையும் சொல்லி மனபாரத்தை இறக்கிவிடுதல். இதனால் அமைதியான மனம் உண்டாகிறது.

    5. நம்மை கோபப் படுத்திய சம்பவங்கள், மனிதர்கள் எதுவானாலும் அவற்றை அறவே மறந்து விடுதல் சிறந்த வழியாகும். இன்னும் ஒரு படி சென்று அவர்களை மன்னித்து விடுதல் உயர்ந்த செயலாகும். அதற்கு மனோதிடம் அவசியம். மேலே உள்ளவற்றில் அவரவர் மனநிலை ஏற்படும் வழியைப் பின்பற்றலாம்.

    அவர்களும் நீயும்

    பொய் பல்லாக்கல்
    புறப்பட்டுப் போனவர்
    அதோ

    வார்த்தைகளின் உலகில்
    வழிதவறியவர்கள்

    Continue Reading »

    மனிதனின் துயரங்களும் வாழ்வின் அர்த்தமும்

    – டாக்டர் எம்.ஆர். விஜயகுமார்

    ஆசைதான் மனிதனின் துயரங்களுக்கெல்லாம் மூல காரணம் என்று அனைவரும் கூறிக்கொண்டிருப்பது நம் அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால் நம்மை வாழவைத்துக் கொண்டிருப்பதும் அந்த ஆசைதான் என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. அதனால் ஆசை என்பதை மிகச் சரியாகப் புரிந்து கொள்வது அவசியமாகிறது.

    Continue Reading »

    பத்து ஆண்டுகளில் 1,00,00,000 ரூபாய் சம்பாதிப்பது எப்படி?. . .

    – சக்சஸ் ஜெயச்சந்திரன் எம்.ஏ

    இறைவன் நமக்குத் தந்துள்ள மூளை மனமாகச் செயல்படுகிறது. மனம் என்று அழைக்கப்படும் மூளைப் பகுதி அமைப்பில் ஒன்றாக இருந்தாலும் செயல் பாட்டில் மூன்றாக அமைந்துள்ளது.

    Continue Reading »

    இதோ! வெற்றிக்கு ஓர் முன் உதாரணம்

    – டாக்டர். இல.செ.கந்தசாமி

    அவர் கடையில் மட்டும் வியாபாரம் ஆகிறதே என்ன காரணம்?

    அங்கே பாருங்கள் ! அருகருகே இரண்டுபேர் இளநீர் வியாபாரம் செய்கிறார்கள். தெருவோரக் கடைகள்தாம். ஒருவர் கடையில் நீங்கள் இளநீர் குடிக்கிறார்கள், அந்தக் கடையைத் தேர்ந்து எடுத்ததற்கு என்ன காரண்ம ?

    பொருள்கள் பேசவேண்டும்

    பார்த்தவுடன் கண்ணுக்குப் படும் படி பசுமையான, குளிரிச்சியான பெரிய பெரிய இளநீர்களாகப் பார்த்து அடுக்கி வைத்துள்ளார். அதுதான் முதல் கவர்ச்சி. இரண்டாவது, அவரது கடைக்கு முன்னால் நின்று குடிப்பதற்கு ஏற்ற வகையில் நிற்கும் இடம் சுத்தமாக இருக்கிறது. மூன்றாவது, இளநீர் வெட்டிக் கொடுக்கின்ற ஆளும் சுத்தமாக, தாடி வளர்த்துக் கொண்டு சோம்பலாக இல்லாமல், எவ்வளவு சிரமம் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் சிரித்த முகத்துடன் இருக்கிறார். நான்காவது, வழிந்த மட்டைகளை உடனே பொறுக்கிச் சேர்த்து அடுக்கி, கடையையும் சீராக ஒழுங்குபடுத்தி, சில பச்சைத் தென்னை மட்டை இளநீர் கடை என்பதைத் தூரத்திலிருந்து வரும்போதே காட்டிவிடும். சைக்கிள் டயரை கடையின் முன்னால் மாட்டி வைத்தால் அது சைக்கிள் கடை என்பதை தூரத்திலிருந்து வரும் போதே தெரிவித்து விடுவதைப்போல. ஐந்தாவது, விரைவாக வெட்டி ஒரு ஸ்ட்ரா போட்டுக் கொடுக்கிறார். இளநீரைக் குடித்ததும் தேங்காயை நம்மையே தோண்டி எடுத்துச் சாப்பிடுங்கள் என்று சொல்லாமல், அவரே கை படாமல் தோண்டித் தருகிறார். பார்த்ததும் நம்மைக் கவருவது இந்த அமைப்புகள்தாம். அதனால்தான் முன்பின் அறியாத அந்த ஒரு கடைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க, பார்வையில் படுகின்ற காட்சிதான் முதற்காரணம். அதனால் உங்கள் கடையை, கூடையிலுள்ள பொருள்களைப் பார்த்தும் வாங்குவோர் வருகின்ற மாதிரி அமைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கடையும், கடையிலுள்ள பொருள்களும் தான் பேச வேண்டுமே ஒழிய பேச வேண்டியது நீங்கள் அல்ல.

    இரண்டாவது, ஒருமுறை வந்தவர் தொடர்ந்து வர என்ன வழி ?

    1. பொருள்களின் தரம்தான் வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து வரவழைக்கச் சிறந்த வழியாகும். கடை எங்கிருந்தாலும் தேடிக் கொண்டு வருவார்கள்.

    2. பொருள்களை விரைவாகக் கொடுப்பதும் அவசியமாகும். அதனால் அவசரப்பட்டு வாடிக்கையாளர்களின் முன்னால், கடையில் வேலை செய்யும் ஆட்களைத் திட்டுதல் பெருந்தீங்கு விளைவிக்கும். கடையில் பணியாற்றுகின்றவர்களின் குறையை வாடிக்கையாளர்கள் இல்லாதபோது தனியாகத்தான் தீர்த்துக்கொள்ள வேண்டும். பல கடைகளில் முதலாளி என்ற தோரணையில் வாடிக்கையாளர்கள் அதை விரும்பாமல் அடுத்த கடையை நாடுவதும் உண்டு. பணியாளர்களின் பொறுமையாகவும், அன்பாகவும் பேசுவது வாடிக்கையாளர்களை மகிழச் செய்யும்.

    3. பொருளின் உரிமையாளர் வாடிக்கையாளர்களைத் தெரிந்து வைத்துக்கொண்டு அவர்கள் வரும்போதெல்லாம் ஓரிரு வார்த்தைகள் நேரடித் தொடர்புடன் ( Per – sonal Touch) பேசுவதும் ஒரு சிறந்த முறையாகும். அதிகமாகப் பேசுவது நமது தொடர்பைக் குறைக்கும் என்பதை எப்போதும் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.

    4. வாடிக்கையாளர்களுக்குத் தேவையான, நம் விற்பனைப் பொருளோடு தொடர்புடைய பிற பொருள்கள் பற்றியும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். பேச வேண்டிய அவசியம் நேர்ந்தால் அவர்களின் தேவை உணர்ந்து நாம் பேச வேண்டும். எல்லாம் ஓரிரு வார்த்தைகளுள் முடிந்துவிட வேண்டும். மேடைப் பிரசங்கம் ஆக்கி விடக்கூடாது.

    இரண்டு ரொட்டிக் கடைகள்

    ஒரு தெருவில் இரண்டு ரொட்டிக் கடைகள் இருக்கின்றன. ஒன்று பழம்பெருமை வாய்ந்தது. மற்றொன்று புதிதாக வந்தது. புதிதாகக் கடை வைத்தவர் மக்களைக் கவர்வதற்கு என்ன வழி பார்த்தார். அன்றன்று புதிது புதிதாகக் கொடுத்தால் மக்கள் விரும்பி வாங்குவார்கள என்ற உண்மையைக் கண்டு பிடித்தார். மாலை 3 மணியிலிருந்து இரவு கடை அடைக்கும்வரை மிக மெதுவான, மிகவும் புதிதான ரொட்டியை விற்பனை செய்யத் தொடங்கினார். வியப்பான செய்தி மக்கள் வரிசையில் நின்று (Queue) வாங்கிப் போகின்ற காட்சியை இன்று பார்க்க முடிகின்றது.

    ஒருவரைக் கேட்டேன், ஏன் நீங்கள் அந்தக் கடையை விட்டு இந்தக் கடையில் வாங்கத் தொடங்கினீர்கள் என்று.

    1. இரண்டு முறை பழைய ரொட்டியாகப் போய் விட்டது. பழைய ரொட்டியைக்கூடப் பொறுத்துக் கொள்ளலாம். நெடுநாள் வாடிக்கையாளராகிய நம்மிடமே இப்படி நடந்து கொள்கிறார்களே என்ற வருத்தம்.

    2. இவர்கள் யாரும் கடைகளைச் சரியாகக் கவனிப்பதில்லை. வேலைகாரர்கள் தாம் இருக்கிறார்கள். அவர்கள் வாடிக்கையாளர்களின் தகுதி அறிந்து நடப்பதில்லை.

    3. சில சமயங்களில் நம்முடைய நேரத்தின் அருமை தெரியாமல் வேண்டாதவகைளைச் செய்துகொண்டு நம்மை நிறுத்தி வைத்து விடுகிறார்கள் என்றார்.

    இங்கு முதலாளியின் பழக்கம், நல்ல வரவேற்பு, விரைவாகப் பொருள்களைக் கொடுப்பது, தரமான பொருள் இதைவிட நமக்கு என்ன வேண்டும் என்றார். நான் இங்கு வாங்க வந்த காரணத்தையும் எண்ணிப் பார்த்தேன். அவர் சொன்னது சரியாகவே பட்டது.

    இது வியாபாரத்திற்குத்தான் பொருந்தும் என்பதில்லை. ஒரு மருத்துவருக்குப் பொருந்தும். ஒரு பொறியியல் வல்லுநருக்குப் பொருந்தும. ஒரு விவசாயிக்குப் பொருந்தும், என் அனைவருக்கும் பொருந்தும்.

    நாம் செய்கின்ற எந்தத் தொழிலாக இருப்பினும் இத்தகைய கருத்துக்களை ஒப்பிட்டுப் பார்த்து நமக்கு ஏற்ற ஒரு முறையை வெற்றிக்கு வழிவகுக்கும் முறையை நாம் தேர்ந்து கொள்ள முடியும்.

    ஒவ்வொரு மனிதனும் இளநீர்க்கடைக் காரரையும் ரொட்டிக் கடைக்காரரையும் எண்ணிப்பார்க்க வேண்டும். அவர்கள் படித்தவர்கள் அல்ல. தம் தொழிலில் வெற்றி பெற ஒரு வழியைத் தேர்ந்து கொண்டார்கள்.

    ஒரு மாணவன் தன் படிப்பையும், ஒரு இளம் மனைவி தன் குடும்பத்தையும் வெற்றிகரமான வழியில் செலுத்த தெளிவும் துணிவும் விரைவும் இன்றியமையாதவையாம்.

    உணர்ச்சிவசப்படுவதுதான் மனித நேயம் மறையக் காரணம்

    கோவை மேனேஜ்மென்ட் அசோசியேஷன் சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த நிகழ்ச்சியில் தென்கச்சி சுவாமிநாதன் ‘ மனித நேயம்’ என்ற தலைப்பில் பேசியதாவது :-

    கோவை எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் பிடித்தமான ஊர்.

    Continue Reading »

    வாசகர் கடிதம்

    டாக்டர் இல.செ.க.வின் ” அசைக்க முடியாத தன்னம்பிக்கை ” கட்டுரை படித்த அனைவரையும் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும் நல்ல வழிகாட்டியாக இருந்தது. பலருடைய வெற்றிக்குக் காரணம் அவர்களுடைய தன்னம்பிக்கை, முயற்சி என்பதை அழகிய

    Continue Reading »

    முன்னேற்றப்பாதை – தொடர்

    ” நேர நிர்வாகம் ”
    – டாக்டர் ஜி. இராமநாதன், எம்.டி.,

    10. முடிவு செய்யாமை

    ஒரே நேரத்தில் இரண்டு வகையான அபிப்ராயங்கள் தோன்றும் போது அவற்றில் எதைச்செய்வது என்று குழப்பத்தால் பல்வேறு சூழ்நிலைகளில் நேரத்தை வீணாக்குகிறோம்.

    Continue Reading »

    சிந்தனைத்துளிகள்

    அளவுக்கு மீறய செயல்முறைகளைச் சொல்லிக் கொண்டே போனால் கேட்பவர்கள் அதைச் செய்வார்களே ஒழிய புதிதாக எதையும் செய்ய மாட்டார்கள். சாதாரண ஒரு மாதிரி தொழில் புரிவோர்க்கு இது பொருந்தலாம். ஆனால் அறிவார்ந்தவர்களுக்கும்

    Continue Reading »

    '' தாழ்வு மனப்பான்மை ''

    முகில் தினகரன்

    இன்றைய சமுதாயத்தில் மக்கள் மத்தியில், குறிப்பாக இளைஞர்கள் மத்தியில், பெரிதாக வளர்ந்து நின்று, அவர்களது முன்னேற்றத்திற்கும், முன்னேற்றச் செயல்பாட்டிற்கும், முட்டுக் கட்டை போடுவது, அவர்கள் மனதில் அடிவரை சென்று ஒட்டிக்

    Continue Reading »