பழைய கருத்துக்கள், பழமொழிகள் ஆகியவற்றிலிருந்து காலத்தைப் பொறுத்து புதுப்புதுச் சிந்தனைகள் பிறப்பதைப்போன்றே, நமக்கு முன்பு தோன்றி வாழ்ந்து வருபவர்களின் வாழ்க்கை நேரடி முன்னுதாரணமாகவோ, மறைமுகமான வழிகளிலோ பயனளிக்கிறது என்பது உண்மை. புதுத்துறை, புதிய தொழில், புதிய செயல்பாடு ஆகியவற்றை நாம் தொடங்கும்போது, இவை நாம் போக இருக்கும் வழியை நெறிப்படுத்தப் பெரிதும் உதவுகிறது. சின்னச் சின்ன தடைகள் கூடப் பல சமயங்களில் நம்மைச் சிறைப்படுத்திவிடும் தருணங்களில் அத்தகைய மனிதரும் அவர்களின் வாழ்க்கைச் சம்பவங்களும் பெரிதும் கைகொடுக்கின்றன. மேலும், அக்கரை மட்டுமே பச்சையல்ல; இக்கரையும் தான். எங்கிருந்தாலும் நம் சிந்தனை; செயல்பாடுகளுக்குத் தகுந்தாற்போல் நம் வளர்ச்சி இருந்துகொண்டு தானிருக்கும் என்பதை நமக்கு உணர்த்துகின்றன.
Continue Reading »