– 2018 – November | தன்னம்பிக்கை

Home » 2018 » November

 
  • Categories


  • Archives


    Follow us on

    விதைகளின் விருட்சங்களைத் தேடி…

    இவ்வுலகம் தோன்றிய விதம், இவ்வுலகில் உள்ள உயிர்த்தொகைகள் பிறந்த விதம் இவைகளைப் பற்றி இரண்டு விதமான கருத்துகள் உண்டு. ஒன்று மதங்களும் புராணங்களும் கூறும் கருத்து. மற்றொன்று விஞ்ஞானிகள் கூறும் கருத்து. புராணக்காரர்கள், “இவ்வுலகம் இன்றுள்ள உருவிலேயே கடவுகளால் ஆக்கப்பட்டது. கடவுள் மக்களையும் பறவை, விலங்கு, செடி கொடி, நீர் வாழ்வன சூரிய சந்திர நட்சத்திரங்கள் யாவற்றையும் படைத்தார். மக்களுக்குரிய ஒழுக்கங்களையும் அவர்கள் கடைப்பிடித்து வாழவேண்டிய வழிமுறைகள், சாஸ்திரங்கள் யாவற்றையும் இறைவனே ஆக்கித்தந்தான்” என்பது இவர்களது கொள்கையாகும்.

    உலகத் தோற்றத்தை ஆய்ந்து கண்ட அறிஞர்கள் வேறுவிதமாகக் கூறுகின்றனர். “சூரியனிடமிருந்து பிரிந்து தெறித்து விழுந்த நெருப்புக்கோளமே உலகமாயிற்று. இஃது சுமார் 200 கோடி ஆண்டுகட்கு முன்பு நடந்திருக்கலாம். மேலும் 100 கோடி ஆண்டுகட்கு முன்புதான் உலக உயிரினங்கள் தோன்றி இருக்கக் கூடும் என்ற கணிப்பு உருவாகியது.”

    முதலில் தோன்றிய உயிர்கள் ஒரு பையுள்ள கிருமிகள். அவைகள் பல பைகளைக் கொண்ட கிருமிகள் மாறின. இந்த மாற்றம் நிகழ்ந்த ஐம்பது அறுபது ஆண்டுகட்குப் பின்னர்தான் புழுக்கள் தோன்றின. இப்புழுக்களிலிருந்து மீன்கள், மீன்களிலிருந்து நீர்வாழ் உயிரினங்கள் அவற்றிலிருந்து ஊர்வன, ஊர்வனவற்றிலிருந்து பறவைகள், தங்கள் பிள்ளைகளுக்குப் பால் கொடுத்து வளர்க்கும் விலங்குகளும் தோன்றின. விலங்கினங்களில் ‘தேவாங்கு’ எனும் பிராணி தோன்றியது. தேவாங்கிலிருந்து வாலுடைய குரங்கு பிறந்தது. வாலுடைய குரங்கிலிருந்து வாலில்லாக் குரங்கு தோன்றியது. வாலில்லாக் குரங்கிலிருந்து மனிதக்குரங்கு தோன்றியது. அம்மனிதக்குரங்கிலிருந்தே மனிதன் தோன்றினான்.

    இப்படித் தோன்றிய மனிதனே இன்று வளர்ச்சியடைந்து உலகத்தை ஆட்டிப்படைக்கும் வளர்ச்சியடைந்து உலகத்தை ஆட்டிப்படைக்கும் சகல சக்திகளையும் பெற்றிருக்கிறான். மனித வளர்ச்சி இதோடு நின்று விடாது. எதிர்காலத்தில் மனித உருவத்திலும் மாறுபாடு ஏற்படலாம். அந்த மாறுபாடு நாகரிக வளர்ச்சியிலும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதே விஞ்ஞானிகளின் கருத்து ஆகும்.

    இவ்விரு சாரார் கொள்கையும் ஆராய்ந்து நோக்கும் போது விஞ்ஞானிகளின் கூற்றே ஏற்புடையதாக அமைகின்றது. பன்டைக்கால மக்களின் சிந்தனைகளையும் இன்றைய மக்களின் வாழ்வியல் கூறுகளையும் ஆராய்ந்து பார்த்தால், பண்டைக்கால மக்களின் சிந்தனை, செயல், வாழ்வு இவைகளைவிட இக்கால மக்களின் செயலும் சிந்தனையும் அபரிமிதமான வளர்ச்சி அடைந்துள்ளது.

    தற்பொழுது எந்தத்துறையை எடுத்துக் கொண்டாலும் மக்கள் முன்னேறியிருப்பதைக் காண்கிறோம். கல்வி, அரசியல், தொழில், கலை, சிந்தனை, சமூக வாழ்வு, ஆடை அணிகலன்கள், செல்வப் பெருக்கம் போன்ற இன்ப வாழ்வுக்குத் தேவையான சாதனங்களைக் கண்டுபிடித்தல் போன்ற பல துறைகளில் மக்கள் வளர்ச்சியடைந்துள்ளனர்.

    அரசியல்:

    மக்கள் தாம் செய்யும் பயிர்களை அழிப்பதற்கு வரும் விலங்குகளை விரட்டியடிக்கக் காவலர்களை ஏற்படுத்தினர். இக்காவலர்களை மக்களே தேர்ந்தெடுத்தனர். இவர்களுக்குத் தங்களது பயிரிட்டு அறுக்கும் தானியங்களில் பங்கு கொடுத்து வந்தனர். இவர்களே பின்னாளில் அரசன் எனப்பட்டான்.

    மன்னர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பதற்குச் சான்றாக,

    “கழுமலத்தில் யாத்த களிலும் கருவூர்

    விழுமியோன் மேல்சென் றதனால் – விழுமிய

    வேண்டினும் வேண்டா விடினும் உறற்பால

    தீண்டா விடுதல் அரிது”.

    எனும் பழம்பாடல் வழி அறியலாம்.

    நாளடைவில் மன்னர்கள் பரம்பரையாக ஆளும் உரிமை பெற்றவர்களானார்கள். மக்களும் மன்னன் துணையில்லாமல், மன்னன் ஆதரவில்லாமல் வாழ முடியாது என்று நம்பி வந்தனர். இதனால் மக்களின் உயிராக மன்னன் மதிக்கப்பட்டான்.

    இதனையே,

    “மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம்” என்று போற்றினர்.

    பேரரசனாக இருப்பினும் பெரியோரின் பொன்னுரையை வழித்துணையாகக் கொள்ளாவிடின் தானே அழிவான் என்பதையே,

    “இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்

    கெடுப்பார் இலானும் கெடும்”

    என்று அறிவுறுத்துகிறது. மேலும் நீதிமுறை தவறி ஒன்றையும் ஆராயாமல் ஆட்சி புரியும் அரசன் உணவையும் நாட்டையும் ஒருசேர இழந்து விடுவான் என்பதை,

     “கூழும் குடியும் ஒருங்கிழக்கும்; கோல்குடிச்

    சூழாது செய்யும் அரசு” என்று உணர்த்துகிறது.

    பண்பட்ட நிலை:

    வாழ்வியலைக் காட்டும் இலக்கியங்களும் சமயங்களும் பண்பாட்டை மறந்தில என்பதை மேலும் திருஞான சம்பந்தர் தேவாரமும் தாயுமானவர் பாடல்களும் வள்ளலாரின் அருட்பாக்களும் நினைவூட்டுகின்றன.

    “வாழ்க அந்தணர்; வானவர் ஆன்இனம்;

    வீழ்க தண்புனல்; வேந்தனும் ஓங்குக;

    ஆழ்க தீயது எல்லாம்; அரசன் நாமமே;

    சூழ்க வையமும் துயர் தீர்கவே”

    எனும் சம்பந்தர் தேவாரம் நினைவூட்டுகின்றன.

    இவ்வுலகில் வாழும் மனிதர்களுக்கெல்லாம் சோறு போடவும் வேண்டும். பல கலைகளையும் கற்றுக் கொடுக்கவும் வேண்டும் என்ற உயரிய நோக்கில் பாரதியும்,

    “வயிற்றுக்குச் சோறிட வேண்டும், இங்கு

    வாழும் மனிதருக்கெல்லாம்

    பயிற்றிப் பலகல்வி தந்தே-இந்தப்

    பாரை உயர்த்திட வேண்டும்” என்கிறார்.

    நல்லறம்:

    பண்டைத் தமிழர்கள், மனிதத் தன்மையைக் காப்பதிலே முனைந்து நின்றனர். மனித சமுதாயத்தை ஒன்றெனக் கருதினர். உயர்ந்த நிலையில் ஒன்றுபட்டு வாழவேண்டும் என்றும் இதற்காக உழைப்பது தமது கடமை என்றும் கருதி வாழ்ந்தனர்.

    “உண்டால் அம்ம இவ்வுலகம்; இந்திரர்

    அமிழ்தம் இயைவது ஆயினும் இனிதெனத்

    தமியர் உண்டலும் இலரே; முனிவுஇலர்

    துஞ்சலும் இவர்பிறர் அஞ்சுவது அஞ்சி

    புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்; பழி எனின்

    உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்வு இலர்

    அன்ன மாட்சி அனையர் ஆகித்

    தமக்கென முயலா நோன்தாள்

    பிறர்க்கென முயலுநர் உண்மை யானே”

    எனவே ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழர்கள் பண்பில் பண்பட்டு வாழ்ந்தனர் என்பதற்கு இஃதே சான்று.

    பிறர்க்கு உதவி செய்யும் குணமே சிறந்த குணம். மனிதத் தன்மையுமாகும். நன்றி மறவாது நல்லறத்துடன் வையத்துள் வாழ்வாங்கு வாழ நம் தமிழரின் வாழ்வியலை வேதமெனக் கொண்டு ஒழுகின் வாழ்வின் ஏற்றமே அன்றித் தாழ்வில்லை.

    ப. தனலட்சுமி

    உதவிப் பேராசிரியை

    தமிழ்த்துறை

    வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மைக் கல்லூரி

    கரூர் – 3.

    துணிந்தவருக்கில்லை துயர் – நீங்கள் துணிச்சல் மிக்கவரா?

    தி. சுவாமிநாதன்,

    நாமக்கல்.

    துணிச்சல் என்பது எந்த சுழ்நிலையிலும் அச்சமோ, பயமோ இல்லாமல் மனிதன் தைரியமாக செயல்படுவதை குறிக்கிறது. உனக்கு துணிச்சல் இருந்தால் என்னோடு மோதிப்பார் என்பர். அவர் துணிச்சல் நிறைந்த புதுமைப்பெண் என்பர்.

    பொதுவாக, நேர்மையாக இருந்தால் யாருக்கும் பயப்படத் தேவையில்லை. நேர்மையானவர்களுக்கு துணிச்சல் சற்று அதிகம்தான். திமிரானவர்களிடம் சுயநலம் சற்று குறைவுதான். துணிச்சல் என்பது முன்னேறிப் போகும் பலமல்ல. பலம் இல்லாத போதும் முன்னேறும் மனஉறுதி. தவறானவர்களின் செயல்பாட்டை தட்டி கேட்பதற்கு தைரியம் துணிச்சல் தேவை. நாம் சரியானவர்களாக இருந்தால்தான் தவறானவர்களை தட்டிக் கேட்க முடியும். நேர்மையற்றவர்களால் துணிச்சலாக இருக்க முடிவதில்லை.

    பலம் வாய்ந்தவரை விமர்சிக்க துணிச்சல் தேவை. வலிமையானவர்கள் கொடுக்கும் சங்கடங்களை கண்டு அஞ்சாமல் நியாயம் என்று மனதில்படுவதை தயக்கம் இன்றி வெளிப்படுத்தும் துணிச்சல் மிக்க குணம் உடையவர்கள்தான்  தலைவர்களாகிறார்கள்.

    துணிச்சல் என்பது பயத்தை துறப்பது அல்ல. அது பயத்தைத் தாண்டிய பார்வை.

    நேர்மையான மனிதனின் அழமான புரிதல் துணிச்சலை தருகிறது. துணிச்சல்மிக்கவர்களை அடிமையாக்க முடியாது. ஆடும், சிங்கமும் கடவுளால் படைக்கப்பட்ட உயிர்கள்தான். ஆட்டை வெட்டி சாப்பிடுகிறார்கள். சிங்கத்தை வெட்டி சாப்பிடுவதில்லை. விரல் நகமாய் இருந்தால் வெட்டிவிடுவார்கள். விரலாய் இருந்தால்,  மோதிரம் அணிவிப்பார்கள். இதுதான் உலகம்.

    சார்பு காரணமாக மனைவி கணவனுக்கு பயந்து அடங்கிப் போகிறார். (சில குடும்பங்களில்). அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது துணிச்சல் மனிதனுக்கு தானாகவே வரும். துன்பத்திலும், சோகத்திலும் தவிக்கும்போது துவண்டுவிடாமல் இருக்க துணிச்சல் தேவை. இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற நிலையில் மனிதனுக்கு துணிச்சல் அதிகமாகிறது. இதுதான் சாதனையாளர்களின் பின்புலம். எல்லாவற்றையும் இழந்தபின் வரும் துணிச்சல் அதீத பலம் வாய்ந்தது.

    எதிர்பாராத இக்கட்டான சூழலில், செய்வதியறியாமால் திகைக்காமல், திருடனை எதிர்த்து போராடுவது, நீரில் விழுந்து விட்டவர்களை காப்பாற்றுவது, தீயில் சிக்கிக் கொள்பவர்களை பத்திரமாக மீட்பது போன்றவை துணிவான செயல்களே.

    உண்மையைச் சொல்ல பயப்படத் தேவையில்லை. விமர்சனத்தை எதிர்கொள்ளும் நேர்மையோ, துணிச்சலோ, இல்லாதவர்கள் சரித்திரத்திலும் நினைவிலும் நிலைக்க வாய்ப்பில்லை. முற்போக்குவாதியாக இருப்பதற்கு ஏராளமான துணிச்சல் தேவை. நம்மை சீண்டிப் பார்ப்பவர்களுக்கு நாம் யார் என்று காட்ட வேண்டிய நிலை வாழ்வில் வரத்தான் செய்கிறது. விண்வெளிப் பயணத்திற்கு ஆயத்தமாகிறவர்கள் கடினமாக பயிற்சிகளை மேற்கொண்டு விண்வெளிக்கு பறக்கத் தயாராகிறார்கள். செவ்வாய்கிரகத்திற்கு செல்வதற்கு துணிச்சல் வேண்டுமல்லவா?. மனிதனுக்கு சிக்கல் அதிகமாகும் போது எல்லோரும் அவமானப்படுத்துவார்கள். ஒரு கட்டத்தில் துணிச்சல் வந்து விடும்.

    துணிவு மிகுந்தவர்களால்தான் லஞ்சம் வாங்குபவர்களை வலை விரித்து பிடிக்க அரசுக்கு உதவ முடிகிறது. சிறையில் லஞ்சம் கொடுத்து  குற்றவாளிகள் சொகுசாக இருந்ததை கண்டு பிடித்து வௌல்ச்சத்துக்கு கொண்டு வந்த துணிச்சல் மிக்க பெண் உயர் அதிகாரிக்கு பாராட்டு குவிந்த செய்திகளை படித்து இருப்பீர்கள்.

    துணிவே துணையான காவலர்கள் ரவுடிகளை கூட்டமாக கைது செய்கிறார்கள். தனி ஆளாக வாழ்வில்; சில சிக்கல்களை சந்திக்க துணிச்சல் வேண்டும். அநீதியை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெறுபவர்கள் உள்ளனர். கைப்பையை பறித்துச் சென்ற திருடனை பெண் ஓருவர் தனியாளாக துரத்திச் சென்று பிடித்து போலீசிடம் ஒப்படைத்த பத்திரிக்கை செய்தி வியப்பைத் அளித்தது.

    காண்டாலிஸா ரைஸ் அமெரிக்க நாட்டின் செயலராக இருந்த போது துணிச்சல்மிகு பெண்களை உலகறியச் செய்ய வேண்டும் என ஒரு விருதை ஏற்படுத்தினார். இவ்விருதுக்காக ஒவ்வொரு வருடமும் உலகின் பல்வேறு நாடுகளில் பல்வேறு இன்னல்களுக்கும் இடையே பலருக்காகத் துணிச்சலாகப் பணிபுரியும் பெண்களை அமெரிக்க அரசு தெரிவு செய்கிறது.

    கோலாலம்பூரைச் சேர்ந்தவர் இந்திராகாந்தி. தனது பிள்ளைகள் ஒருதலைப்பட்சமாக மதம் மாற்றப்பட்டதை எதிர்த்து துணிகரமாக, நீண்ட நாள் சட்டப்போராட்டம் நடத்தினார். பாலர்பள்ளி ஆசிரியையான இந்திரா காந்தி “அனைத்துலக துணிச்சல்மிகு பெண்” என்ற அமெரிக்காவின் விருதுக்கு தேர்வானார். அமெரிக்கத் துட்தர் மாளிகையில் ஆசிரியை இந்திரா காந்திக்கு விருந்து அளித்து கௌரவித்தனர்.

    தனது மூன்று பிள்ளைகளும் தன்முன்பாக தனது முன்னால் கணவரால் மதமாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து 8 ஆண்டுக்காலம் சட்டப் போராட்டம் நடத்திய இந்திரா காந்தி கடந்த ஜனவரியில் நீதி மன்றத்தில் வெற்றி பெற்றார்.முஸ்லீம் அல்லாத பிள்ளைகள்இஸ்லாத்திற்கு மதம் மாற்றம் செய்வதற்கு பெற்றோர்களின் இணக்கம் கண்டிப்பாக பெறப்பட வேண்டும் என்று இவருக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பளித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை அண்ணா நகரில் பெண் டாக்டர் ஒருவரிடம் நோயாளி போல வந்த திருடன் அவரின் தங்கச் செயினை பறித்து விட்டு தப்பினார். டாக்டரின் அலரல் சத்தம் கேட்டு திருடனை தனியொருவனாக விரட்டிச் சென்று அண்ணா நகரைச் சேர்ந்த சிறுவன் சூர்யா மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தார். இந்த தகவலை அறிந்த போலீஸ் கமிஷனர் சூர்யாவை நேரில் அழைத்து பாராட்டினார். அப்போது சூர்யாவிற்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டது. சம்பந்தப்பட்ட பெண் டாக்டரும் சிறுவன் சூர்யாவை பாராட்டியதோடு வெகுமதியும் கொடுத்தார். நிரந்தர வேலை எதுவும் இல்லாமல் சிரமப்பட்ட சூர்யாவுக்கு சுந்தரம் மோட்டார்ஸ் நிறுவனத்தில் ஏ.சி மெக்கானிக் வேலைக்கான பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ரோட்டரி கிளப் மற்றும் தனியார் கல்விக்குழுமம் சார்பில் சாசோலை வழங்கப்பட்டது.

    முன்னாள் பாரதப்பிரதமர் இந்திரா காந்திக்கு கட்டுப்பாடுகள் நிறைந்த வாழ்க்கை. ஆனாலும் துணிச்சல் என்பது பிறவிக்குணம் இதுதான் அரசியலில் அவர் அபரிதமான வெற்றியை பெற்றதற்க்கும் தோல்வியின் அதளபாதாளத்தில் இருந்து மீண்டதற்க்கும் காரணம். எமர்ஜென்சி என்ற பெயரில் அவர் எற்படுத்திய பிரமிப்பு இன்னமும் அடங்கவில்லை. அதன் எதிரொலியாக இனிமேல் மீளவே முடியாது என்று எதிரிகள் அடித்துச் சொன்ன போது “முடியும்” என்று சொல்லி  ஜெயித்து காட்டியவர் திருமதி இந்திரா காந்தி. நம்ப முடியாத வெற்றிகள். நினைத்து பார்க்க முடியாத திருப்பங்கள். காட்டாற்று வெள்ளம் போல் பாய்ந்தோடும் துணிவு மிகுந்த வாழ்க்கை அவருடையது.

    ஒரு சிப்பாயின் மகனான  சத்ரபதி சிவாஜி தனது சர்வ வல்லமையால் மகாராஷ்டிரத்தில் மாமன்னராக உருவெடுத்தார். வீரதீரத்தோடு மகாராஷ்டிரத்தையே ஒர் இந்து சாம்ராஜ்யமாக மாற்றிக் காட்டினார். தன்னை எதிர்த்து வந்தவரையெல்லாம் புறமுதுகிட்டு  ஒடச் செய்தார். தான் வாழ்ந்த காலத்தில் தன்னைவிட படையிலும் வீரத்திலும் பலம் மிகுந்த பேரரசர் ஔரங்கசீப்பையே எதிர்த்த துணிச்சல்காரர் மாமன்னர் சத்ரபதி சிவாஜி.

    மாணவர் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத் அவர்களை  குடியரசுத்தலைவர் அளவுக்கு உயர்த்தியது அவரது துணிச்சல் குணம்தான். வழக்கறிஞர் வேலைக்குப் போகாவிட்டால் குடும்பத்துக்கு சிரமம் என்று தெரிந்தும் தைரியமாக  சுதந்திரப் போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். நொடிக்கொரு போராட்டம். நிமிடத்திற்கு ஒரு ஆர்ப்பாட்டம். இளமை முழுக்க  கோஷமிட்டடே கழிந்தது. பூகம்பம் என்றாலும் சரி. போராட்டம் என்றாலும் சரி. களத்திற்கு வா -என்றால்  அடுத்த கணம் களப்பணியில் இருப்பார். அந்த துணிச்சல் மிகுந்த ஆற்றல்தான் காந்திஜியை கவர்ந்தது. அதுதான் அவருடைய தளபதியாகவும் உருமாற்றியது. சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். தேர்ந்த ஆளுமை, துணிச்சல், தன்னம்பிக்கை முக்கியமாக நேர்மை இந்த குணங்களே திரு.ராஜேந்திர பிரசாத்தின் அடையாளங்கள்.

    பசுபிக் பெருங்கடலில் துணிச்சல் மிகுந்த ஆய்வுப்பணி மேற்கொண்டதால்தான்  கேப்டன் ஜேம்ஸ் குக் உலக வரலாற்றில் இடம் பிடித்தார்.

    தனியே உலகைச் சுற்றும் துணிச்சல் பெண்கள் உள்ளனர். மும்பைக் கல்லூரி ஒன்றில் கணினியில் முதுநிலைக் கற்கும் 22 வயது மாணவி பிரிசில்லா மதன் என்பவர் எந்த வழிமுறைக் குறிப்புகளும் இல்லாமலே மும்பையிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பன்வெலில்  என்ற இடத்தில் இருந்து கன்னியாகுமரி வரை சைக்கிளில் பயணித்தவர் தூரத்தைப் பற்றியும், சாலையின் சரிவுகளைப் பற்றியும், வழியில் தனக்கு உதவும் மனிதர்களைப் பற்றியும் மட்டுமே தான் நினைத்துக் கொண்டே இருந்ததாக சொல்கிறார். தனது 1800 கி.மீ பயணத்தின் போது இரவுகளில் ஹோட்டல்களில் தங்காமல் தான் முதன் முறையாக சந்தித்த மக்களின் வீடுகளில் தங்கியிருக்கிறார். மேற்குத் தொடர்ச்சி மலைகளின் தனிமையான பகுதிகளை கடக்க நேர்ந்த போதும் எந்த விதமான அச்சுறுத்தலுக்கும் ஆளானதில்லை என்கிறார்.

    எதையும் நேராக கேட்கும் துணிச்சல் பலருக்கு இருப்பதில்லை. கார் ஒட்ட முறையான பயிற்சி பெற வேண்டும். பயிற்சியின்றி கார் ஒட்ட இறங்கினால் அது துணிச்சல் இல்லை அசட்டுத்தனம், முட்டாள்தனம், மூடத்தனம்.

    அசட்டுத்துணிச்சல்: அசட்டுத்துணிச்சல் என்பது விஷயங்களைப் பற்றிய அறிவு இல்லாமல் பாதுகாப்பு இல்லாமல் திட்டமிடாமல்  இறங்குவது. அது நமக்கு பல சமயங்களில் பண நஷ்டங்களையும் தோல்வியையும் ஏற்படுத்துவதோடு  உயிருக்கே ஆபத்தாய் முடிந்து விட வாய்ப்புள்ளது. அசட்டுத் துணிச்சலை கைவிடுவோம். வன்முறை துணிச்சல் தவறானது. பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். எந்த பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் வெறும் கையால் பிடிப்பவர்கள் உள்ளனர். பாம்புகளை துணிச்சலாக கையில் பிடிப்பவர்களை பார்க்கிறோம்.

    தொடர்ச்சியான தோல்விகள் நிரந்தரமான நிராகரிப்புகள் நம்பிக்கையற்ற உறவுகளென எவர் சூழ்ந்து நின்றாலும் உனக்கான உன்னை மட்டும் நம்பிக் கொண்டேயிரு வீரனுக்குத் தேவை நம்பிக்கையை விடவும் துணிச்சல்தான். ஒருவனின் உண்மையான நண்பன் துணிச்சல்தான். அஞ்சி நடுங்கிக் கொண்டிருப்பவர்களால் ஒரு குட்டையை கூட தாண்ட முடியாது. என்னால் சாதிக்க முடியும், என்னால் வேலை பெற முடியும் என்று சொல்லக்கூடிய துணிச்சல் வேண்டும்.

    தோல்வியின் அடையாளம் தயக்கம். வெற்றியின் அடையாளம் துணிச்சல். துணிந்தவர் தோற்றதில்லை. தயங்கியவர் வென்றதில்லை. தன் மீது குற்றம் சாட்டுபவர்களை துணிவிருந்தால் நேருக்குநேர் வாருங்கள் என சவால் விடுப்பவர்கள் நேர்மையானவர்கள்.

    மாற்றங்களை கொண்டு வர துணிச்சல் தேவை. வாழ்நாள் முழுவதும் ஆடாக இருப்பதைக் காட்டிலும் வாழ்வு ஒரு நாளே என்றாலும் சிங்கமாக இருப்பதே மேலானது.

    நம் கனவுகளை நனவாக்கும் மந்திரம்தான் துணிச்சல். பல நேரங்களில் கொத்தில் உள்ள பல சாவிகளில் கடைசி சாவிதான் எப்போதுமே பூட்டைத் திறக்கிறது. கூட்டத்தில் ஒருவராக நிற்பது எளிது. தனியாக நிற்பதற்குத்தான் துணிச்சல் தேவை. சிங்கங்களின் கூட்டத்திற்கு  ஆடு ஒரு போதும் தலைமை தாங்க முடியாது.

    ஒருவரின் துணிச்சலின் அளவைப் பொறுத்துத்தான் அவரது வாழ்வு விரிவடைவதும், சுருங்குவதும் அடங்கியுள்ளது. கடற்கரை காட்சிகளை இழக்கத் துணிவிருந்தால்தான் சமுத்திரத்தைக் கடக்க முடியும். துணிவே துனை. துணிவை இழந்து விடாதீர்கள்.

    பாரதியார் பல்கலைக்கழக தமிழ்த்துறை ஆய்வு மாணவர் தெருக்கூத்தில் புதியமுயற்சி

    கணபதி தமிழ்ச் சங்கம் – பசுமை காப்பகத்தின் திருக்குறள் பயிற்சி வகுப்பின் 800 வது வார நிறைவு மற்றும் 16 ஆம் ஆண்டு திருக்குறள் பன்முகப் போட்டி விழா நடைபெற்றது.

    திருக்குறள் திருவிழாவில் திருக்குறள் ஒப்பித்தல், எழுதுதல், ஓவியம், கதை, கவிதை மற்றும் புதுக்கவிஞர் மகிழினி மேகலா அவர்களின் “பூகம்பத்தில் பூ” கவிதை நூல் வௌpயிடப்பட்டது.

    பாரதியார் பல்கலைக்கழக தமிழ்த்துறை முனைவர் பட்ட ஆய்வு மாணவர் பெ.வெங்கடேஷ் அவர்கள் தெருக்கூத்தில் இதுவரை புராணக் கதைகள், இதிகாசங்கள், இனவரைவியல், நாட்டுப்புறக்  கதைகள் மட்டுமே நிகழ்த்தப்பட்டு வந்தது. அதனை நவீன உலகிற்கு புதுப்பிக்கும் வகையில் தமிழர் அற இலக்கியமான திருக்குறளை மையப் பொருளாகக் கொண்டு தெருக்கூத்து வரலாற்றில் முதல் முறையாக வள்ளுவமே வாழ்க்கை என்கின்ற ஏலேல சிங்கன; தெருக்கூத்தினை எழுதி இயக்கி தெருக்கூத்தின் பரிணாமத்தில் புதியதோர் தடம் பதித்து நலிந்து வரக்கூடிய தெருக்கூத்தி;னை மீட்டுருவாக்கம் செய்தார். வள்ளுவமே வாழ்க்கை தெருக்கூத்துக் கதையினை அ.காளிதாஸ், ரா.செந்தாமரை, ப.கோபி, ர.பொன்னுசாமி, செ.அஸ்வின்ராஜா, செ.அரவிந்தராஜா, செ.ஆகாஸ், கோ.அப்பு (எ) பாலகிருஷ்ணன், கு.ராம்குமார், கோ.சக்திபிரபு, ஆ.சின்னதுரை ஆகிய   தெருக்கூத்துக் கலைஞர்கள் நிகழ்த்தினார்கள்.

    தெருக்கூத்தினை நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் மாண்புமிகு எஸ்.பி.வேலுமணி அவர்களின் அண்ணன் அன்பரசு அவர்கள் தெருக்கூத்து கலைஞர்களுக்கு சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.

    தெருக்கூத்தினை சிரவையாதீனம் முனைவர் குமரகுருபர சுவாமிகள் துவங்கி வைத்தார். விழாவினை கணபதி தமிழ்ச்சங்க நிறுவனத் தலைவர் ந.நித்தியானந்த பாரதி ஏற்பாடு செய்து முன்னிலை வகித்தார். தெருக்கூத்தினை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் ஆர்வமுடன் கண்டுக்களித்தார்கள்.

    Hello world

    Hello world

    வெல்லும் சொல்!

    கவிஞர் இரா. இரவி

    வெல்லும் சொல்லை எப்போதும் பயன்படுத்துங்கள்

    வெல்வார்கள் சாதிப்பார்கள் வளரும் குழந்தைகள் !

    அவச்சொல் என்றும் எப்போதும் சொல்லாதீர்கள்

    அதிர்வலைகளை ஏற்படுத்தும் தோல்வியில் வீழ்த்தும் !

    ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும்

    என்பது பொன்மொழி மட்டுமல்ல உண்மையாகும்!

    மனதார வாழ்த்துங்கள் மற்றவரைப் பாராட்டுங்கள்

    மனதில் நல்லதை மட்டுமே எப்போதும் நினையுங்கள்!

    எதிர்மறை எண்ணமும் சொல்லும் வேண்டாம்

    எதிலும் உடன்பாட்டுச் சிந்தனையே இருக்கட்டும் !

    உன்னால் முடியாது என ஒருபோதும் சொல்லாதீர்கள்

    உன்னால் முடியுமென்று உடன் ஊக்கப்படுத்துங்கள் !

    உருப்பட மாட்டாய் என்று உச்சரித்தல் கூடாது

    உருப்பட வழி சொல்லி பயிற்றுவியுங்கள் !

    எதற்கும் இலாயக்கு இல்லை என்று என்றும்

    யாரையும் திட்டுடதல் கூடவே கூடாது !

    முயன்றால் முடியாதது உலகில் எதுவுமில்லை

    முயற்சி செய்திட ஊக்கம் தாருங்கள்!

    வளமாக வருவாயென வாயார வாழ்த்துங்கள்

    வையகம் போற்றும் வண்ணம் சிறப்பார்கள் !

    நல்ல சொற்கள் நல்ல அதிர்வை உண்டாக்கும்

    நல்ல பலன் தரும் அறிவியல் உண்மையாகும் !

    விழித்தெழுக என் தேசம்

    – வித்யாசாகர்

    உலகின் வெவ்வேறு நிலங்களில் விழும் மழைத்துளிகளைப் போல, ஆங்காங்கே அந்தந்த நிலத்தின் நீதிக்கேற்ப ஒரு புரட்சியும், அந்தப் புரட்சியை நிலமெங்கும் பரப்பி வெற்றியை நாட்ட ஒரு கூட்டமும், அந்தக் கூட்டத்திற்கு கண்ணியம் மிக்க ஒரு தலைவனும், அந்தத் தலைவனிலிருந்து தொண்டன் வரை போராட உந்துசக்தியைப் பாய்ச்சும் பல உணர்வுப்பூர்வமான படைப்பாளிகளும், அந்த படைப்பாளிகளின் எழுத்திலிருந்து நெருப்புக்குஞ்சாக எழுந்துநின்று உண்மைதனை உறக்கக் கத்திச்சொல்ல ஒரு சில சொற்களும், சொல்லுள் நின்று இந்த சமுதாயத்தையே புரட்டிப்போட சில எழுத்துக்களும், எழுத்துக்களை ஆயுதமாய் ஏந்தியே தனது வாழ்நாட்களை இந்த மண்ணிற்காகவும் தனது மக்களுக்காகவும் வாழ்ந்தது தீர்க்கும் சில கவிஞர்களும் எழுத்தாளர்களும் காலங்காலமாய் நமக்காக பிறந்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

    எழுத்தென்பது விதைநெல்லை போன்றது. ஆலமரத்தின் ஆயிரம் விழுதுகளைத் தாங்கிக்கொண்டிருக்கும் ஒரு சிறு விதையினைப் போலத்தான் எழுத்தும் தனக்குள்ளே பல வீரிய வெற்றி மரங்களையும், காடுகளையும், எத்தனைப் பேர் வந்து திறந்தாலும் தீர்ந்திடாத பல மர்மங்களையும் உள்ளடக்கிகொண்டுள்ளது.

    எழுத்தை வெறும் ஒரு புத்தகமாக கடந்துப்போதல் தீது. அறிவின் பொக்கிஷம் புத்தகம் என்ற்றிதல் வேண்டும். உணர்வின் மொத்த கலைவடிவமாகவும் இலக்கிய வெளித்தோன்றல்களாகவுமே புத்தகங்களைப் பார்க்கவேண்டும். எல்லாவற்றிக்கும் மேலாக எழுத்தென்பது அனுபவங்களின் கூட்டுச் சோறு. நடந்த வரலாற்றின் சுவடுகள் பதிந்ததும் நடக்கவிருக்கும் எதிர்காலத்து கற்பனையுமாய் நமக்கு கிடைக்குமொரு அரிய பொக்கிஷம் தான் ஒவ்வொரு புத்தகமும் எனும் மதிப்பு நமக்குள் மேலோங்கி நிற்கவேண்டும்.

    அவ்விதத்தில், இதுவரை இங்கிருந்து ஒருவர் வந்துவிடமாட்டாரா எனும் நம் போன்றோர்களின் ஏக்கத்தை ஒட்டுமொத்தமாய் தீர்க்கும் பொருட்டு தமிழிலக்கியத்தின் வரப்பிரசாதமாக வந்தவொரு படைப்புதான் இந்த “விழித்தெழுக என் தேசம்” எனும் ஐயா திரு. ஜெயபாரதனின் கவிதைத் தொகுப்பு.

    நிலா என்பதைப் பெண்ணாகவும், நதி என்பதை காதலியாகவும், மழை என்பதை கதைகளோடும் கண்ட நமக்கு, மழையை மழையாகவும் நிலவை நிலவாகவுமே அறிவியல் கண்கொண்டுப் பார்க்கும் ஒருவரின் சிந்தனைக்கு தமிழால் வாரித்தந்த பரிசுக் குவியல்கள் தான் இப்படைப்பு. எரிமலையை கவிதையினால் குடையும் சக்தியும், அதன் மூலத்தை தேடும் அறிவும், கடகரேகை மகரரேகைகளை காதல் போலவும் காதலியினுடைய முத்தத்தின் இனிப்பினோடும் பார்க்கும் தெளிவு இப்படைப்பின் அதிகார உச்சமாகும்.

    இணையங்களில் கவிஞர் திரு. ஜெயபரதன் அவ்வப்பொழுது அறிவியல் பற்றிய ஏதோவொரு படைப்பைக் கொண்டுவந்து “இது நியுட்ரின்” “அது பாஸ்டரின்” “இது மூலக்கோடு” “அது முதல்சுற்று” “இங்கே பூமி இப்படி இருக்கும்” “அங்கே நட்சத்திரங்கள் அப்படி இயங்கும்” என்றெல்லாம் அறிவியல் சார்ந்த புதிரான பல கட்டுரைகளை கவிதைகளை பதிவிடும்போதெல்லாம் எங்கோ நீரின்றி பாலைவனங்களில் திரிபவனுக்கு திடீரென வானம் பிளந்து மழை சோவெனப் பெய்ததைப் போலவொரு ஆதிமொழியின் அறிவியல் வளங்கண்ட பெருமை மனதுள் நிறைவதுண்டு. அப்படிப்பட்ட அவருடைய இப்படைப்பிற்கு அணிந்துரை எழுதுவது என்பதே ஆங்கிலம் பயின்ற யானையிடம் சென்று தமிழில் உன் பெயரென்ன என்று கேட்பதற்குச் சமம் தான். என்றாலும், அத்தனை அறிவிற்கு வலிக்காமல், மிக எளிமையாகப் படித்து நகர்ந்துகொள்ள, சீராக அறிவியல் கூறுகளைப் பற்றி புரிந்துக்கொள்ள ஏதுவாகவே எண்ணற்ற கவிதைகள் அமைந்துள்ளது என்பதும் இத்தொகுப்பின் இன்னொரு சிறப்பாகும்.

    அணு ஆயுதம் சக்தி, தேய்பிறை கோலம், அக்கினிப்பூக்கள், தொடுவானம், அழகின் விளிப்பு என கவிதைகளின் தலைப்புக்களை மிக அழகாக தேர்ந்தெடுத்துள்ளார் கவிஞர் திரு. ஜெயபாரதன். ஒவ்வொரு கவிதைக்குள்ளும் தான் தேடிய விஞ்ஞான அறிவை குளோப்ஜாமூனுள் கரைந்த இனிப்பாக கரைத்துள்ளார் என்பதும் மிகையில்லை.

    ஷேக்ஸ்பியர், ரூமி, வால்ட் விட்மன், பாப்லோ, உமர் காயம், அன்னை தெரசா மீராவின் கவிதைகள் என நீண்டு இரவீந்திர நாத் தாகூர் வரை ஒரு கவிதைப் பயணத்தையே மேற்கொண்டிருக்கிறார் கவிஞர். பேராசையிலிருந்து விடுப்பு, நிரந்தரமாய் கண்மூடும் நேரம், வாழ்வியல் கட்டுப்பாடு என பல தத்துவார்த்த கவிதைகளும் புத்தகத்திற்கு பலம் சேர்கிறது.

    “பிரபஞ்சப் பெரு வெடிப்பில் சிதறி
    பொரி உருண்டை ஒன்று
    பரமாணுக்களாகி, அணுவாகி,
    அணுவுக்குள் அணுவாகி,

    துண்டுக் கோள்கள் திரண்டு
    அண்டமாகி,
    அண்டத்தில் கண்டமாகித்
    கண்டத்தில்
    துண்டமாகி பிண்டமாகி,
    பிண்டத்தில் பின்னமாகிப்
    பிளந்து, பிளந்து தொடர்ப் பிளவில்
    பேரளவுச் சக்தி யாகி
    சீராகி சேர்ந்து
    சின்னஞ் சிறு அணுக்கருக்கள்
    பிணைந்து பேரொளி யாகிப்
    பிரம்மாண்டப் பிழம்பாகி,
    பரிதியாகி,
    பரிதியின் பம்பரப் பந்துகளாகி,
    பாசபந்த ஈர்ப்பில்
    அணைத்து
    அம்மானை ஆடினாள் என் அன்னை”

    என்று முடிக்குமாறு கவிதை இந்தப் பிரபஞ்சத்தின் சூழ்ச்சுமத்தை தனக்கானதொரு அறிவின்படி சொல்வதாய் அமைந்துள்ளது. அதுபோல, இன்னொரு கவிதையில் பொங்கல் விழாவைப் பற்றிச் சொல்கிறார் பாருங்கள், இவர் உண்மையிலேயே தமிழ்மண்ணின் வாசம் மறக்காத ஆங்கில தேசத்து அற்புத விஞ்ஞானி என்பதற்கு இந்த கவிதை தான் சான்று,

    “பொங்கல் வைப்போம்
    புத்தரிசிப்
    பொங்கல் வைப்போம்
    சர்க்கரைப்
    பொங்கல் வைப்போம்
    வீட்டு முற்றத்தில்
    மாட்டுப்
    பொங்கல் வைப்போம்
    முன் வாசலில்
    கோல மிட்டு, பெண்டிர்
    கும்மி அடித்து
    செங்கரும்புப் பந்த லிட்டு
    சீராய்த் தோரணம்
    கட்டிப் பால்
    பொங்கல்வைப்போம் !”

    அதுபோல், இன்னொரு கவிதையில் –

    “ஓரிடத்தில் எரிமலை கக்கி
    உலகெலாம் பரவும்
    கரும்புகைச் சாம்பல் !

    துருவப் பனிமலைகள்
    உருகி
    உப்பு நீர்க் கடல் உயரும்!

    பருவக் கால நிலை
    தாளம் மாறி
    வேளை தவறிக் காலம் மாறும்,
    கோடை காலம் நீடிக்கும்,
    அல்லது
    குளிர்காலம் குறுகும்; பனிமலைகள்
    வளராமல்
    சிறுத்துப் போகும்
    துருவ முனைகளில் !

    நிலப்பகுதி நீர்மய மாகும்
    நீர்ப்பகுதி நிலமாகிப் போகும்
    உணவுப் பயிர்கள் சேத மாகும்
    மனித நாகரீகம் நாசமடைந்து
    புனித வாழ்வு வாசமிழந்து
    வெறிபிடித் தாடும்
    வெப்ப யுகப் பிரளயம்”

    என உலக அழிவு பற்றி கூறுகிறார். பல கவிதைகள் வசனக் கவிதைகளாக இருப்பினும், உள்ளிருக்கும் விளக்கங்கள் யாவும் வேறொருவர் சொல்ல இயலாதவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. வீட்டு விளக்கில் நாட்டுக்கெனப் படித்த பல விஞ்ஞானிகள் நம்மில் இருப்பினும், கோள்கள் பற்றியும், கொதிநீர் ஆழத்தின் சூழல் குறித்தும் பேசும் எண்ணற்ற கவிதைகளின் வழியே இப்படைப்பு தனியிடத்தைப் பெற்றுக் கொள்கிறது.

    பொதுவாக எழுதுபவர்கள் அத்தனைப் பெரும் கண்ணதாசனாகவே இருக்கவேண்டும் என்று நம் தமிழன்னை விரும்பியிருப்பின் அவருக்குப் பின்னொரு வாலியும், வைரமுத்துவும், அறிவுமதியும், பழனிபாரதியுமென, யுகபாரதி வரை பல பாவலர்களை இம்மண் இன்று காலத்திற்கு நிகராகப் பெற்றிருக்காது.

    வெளியே புகழ்மணக்க இருக்கும் பல கவிஞர்களை இலகுவாய் சொல்லமுடிகிற நமக்கு, ஐயா இலந்தை சு ராமசாமி போலவும், சந்தர் சுப்பிரமணியத்தைப் போலவும், புலவர் ராமமூர்த்தி போலவும், புலவர்கள் மா வரதராசன், அழகர் சன்முகமென ஒரு பெரிய பட்டியல் நீண்டு கவிஞர் வள்ளிமுத்து வரை, கவிஞர் இசாக், கவிஞர் அலியார், கவிஞர் சேவியர், கவிஞர் சாதிக், கவிஞர்கள் விக்டர் தாஸ், ருத்ரா, வரையென தமிழ் உலகெங்கும் பரவியிருக்கும் எண்ணற்ற அரிய பல கவிஞர்களை அறியமுடியாமல் தானே ஒரு சூழல் நம்மண்ணில் இன்றும் இருக்கிறது. அத்தகைய சூழலை மாற்றுவோம். எழுதும் புனிதர்களை மனதுள் பட்டுக்கம்பளம் விரித்து வரவேற்போம். என்றோ குப்பைகளை குவித்த ஒரு கிறுக்கனின் அறிவிலிருந்து தான் பல புரட்சிகளை உடைத்த விடுதலையின் குரல்கட்டுகள் அவிழ்கின்றன.

    அங்ஙனம், இப்பேரண்டமும் ஒரு நாள் நல்ல பல சிந்தனைகளால் விழித்துக்கொண்டு, அறிவு பெருகி, மனது விசாலமடைந்து, இருப்போர் இல்லார்க்கு விட்டுக்கொடுத்து, அன்பினால் அனைவரும் கட்டியணைத்து, ஏற்றத்தாழ்வில்லா ஒரு சமுதாயத்தை அமைத்துக்கொள்ளுமென்று நம்புவோம். அதற்கு துணையாயிருக்கும் அத்தனைப் படைப்பாளிகளோடு’ ஐயா அணுவிஞ்ஞானிக் கவிஞர் திரு.ஜெயபாரதன் அவர்களின் புகழும் நிலைத்து நிற்கட்டுமென வாழ்த்தி, இந்த “விழித்தெழுக என் தேசம்” எனும் கவிதைத் தொகுப்பு தமிழ்கூறும் நல்லுலகில் தனக்கானதொரு அரிய இடத்தை பெற்றுக்கொண்டு, அடுத்தடுத்து பல நல்ல படைப்புக்களை தர மூல விதையாக அமையட்டுமென்று வேண்டி விடைகொள்கிறேன். நன்றி.

    வணக்கம்

    நோபல்பரிசு – 2018

    நோபல் பரிசு என்பது உன்னத கண்டுபிடிப்புகளை கண்டறியும் விஞ்ஞானிகளுக்கு வழங்கப்படும் ஒரு புகழ்மிக்க விருது என்பது பலரும் அறிந்ததே. 2018-ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உடலியல் அல்லது மருத்துவம் துறைக்கான 2018-ஆம் ஆண்டு நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த பேராசிரியர் ஜேம்ஸ் அலிசன் (James P.Allison) மற்றும் ஜப்பான் நாட்டின் கியோத்தோ பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் தசுகு கொஞ்சொ (TasukuHonjo) இருவரும் கூட்டாகபெறுகின்றனர். அலிசன் மற்றும் கொஞ்சொ புற்றுநோயை (Cancer) குணப்படுத்தும் புதுமையான வழி முறைக்கு வழிவகுத்ததால் இந்தபரிசை பெறுகின்றனர். இவர்களின் கண்டுபிடிப்பின் பின்னணி மற்றும் அதன் மகத்துவத்தை இந்த இதழில் காண்போம் .

    புற்றுநோய்களை பற்றிய அறிமுகம் நம்மில் பலருக்கும் தேவை இல்லை. ஏனெனில், நம்சிறுவயதிலிருந்து புற்றுநோய்களை பற்றி பல திரைப்படங்களிலும், நாளிதழ்களிலும் கண்டு புற்றுநோய் என்றாலே அவரின் வாழ்கை முடிந்து விட்டது என்ற எண்ணமே நம்மில் மேலோங்கி நிற்கும்.

    புற்றுநோய் ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்களைக் கொன்று மனித இனத்திற்கு மிகப்பெரும் சவாலாக விளங்குகிறது பொதுவாக, அனைத்து உயிரினங்களும் செல் (Cell) என்றழைக்கப்படும் உயிர் அணுக்களால் கட்டமைக்கப்பட்டது. இந்தசெல்களில் அதன் இயல்புநிலைக்கு அப்பாற்பட்டு (abnormal cells) பெருகி அதுமற்ற உடல் உறுப்புகளுக்கும் (organs),திசுக்களுக்கும் (Tissues)பரவும்திறன் கொண்டவையாக மாறும் நிலையை தான் நாம் புற்றுநோய் என்று சொல்கிறோம். இதுவே பலவகையான நோய்களுக்கு வழிவகுத்து உயிரைபறிக்கிறது.

    புற்றுநோயை குணப்படுத்துவதற்கான பலவகையான வழிமுறைகள் தற்கால நடைமுறையில் உள்ளது. உதாரணமாக, ஹார்மோன் (Hormone)சிகிச்சைமூலம்சுரப்பிபுற்றுநோய் (Prostate cancer), கீமோதெரபி (Chemotherapy)மற்றும்எலும்புநஞ்சைமாற்று (bone marrow transplantation)மூலம் ரத்தப்புற்று நோய் (leukemia) போன்றவற்றை குணப்படுத்தலாம். இருந்தாலும் அட்வான் சுடுஸ்டேஜ் (advanced stage) என்று சொல்லப்படும் புற்றுநோய் முற்றிய நிலையில் குணப்படுவது மிகவும் கடினமான ஒன்று.

    உயிரினங்கள் அனைத்திலும் நோயை எதிர்த்து தாக்கும் நோய் எதிப்பு அமைப்பு அல்லது மண்டலம் உள்ளது. இதை ஆங்கிலத்தில் இம்யூன்சிஸ்டம் (Immune system) என்றழைக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்த இம்யூன்சிஸ்டத்தை செயலூக்கம் (activation) செய்வதன் மூலம் புற்றுநோய் செல்களை அழிக்க முடியும் என்னும் கருத்தியல் உருவாகியது. ஆரம்ப காலகட்டத்தில், பாக்டீரியாக்களை உடலில் செலுத்தி இம்யூன்சிஸ்டத்தை செயலூக்கம் செய்தனர். ஆனால் இதனால் மிகப்பெரும்பலன் எதுவும் எட்டப்படவில்லை. எனவே உலகில் உள்ள பல ஆராய்ச்சியாளர்கள் இந்த இம்யூன்சிஸ்டத்தை ஆழமாக ஆராயதொடங்கினர்.

    அடிப்படையில், இம்யூன்சிஸ்டம் உடலில் உருவாகும் செல்களையும் (self),உடலின் மூலம் அல்லாமல் வேறு உயிரினிகளால் (non-self or foreign) உதாரணமாக பாக்டீரியா, வைரஸ் மற்றும் வேறு நுண்ணுயிரிகளால் உருவாகும் ஆபத்தான செல்களை அல்லது மூலக்கூறுகளை பிரித்தறியும் திறன் கொண்டது. இதனாலேயே, இம்யூன்சிஸ்டம் நன்றாக உள்ளவர்களுக்கு எளிதில் காய்ச்சல் போன்ற நோய்கள் அண்டுவதே இல்லை.  இந்த பிரித்தறியும் வேலையை செய்வதில் T-செல்(T Cell) என்றழைக்கப்படும் இரத்த வெள்ளையணு முக்கிய பங்காற்றுகிறது. இந்த T-செல்லில் ரெசெப்டர்ஸ் (Receptors) என்றழைக்கப்படும் உணர்வேற்பி மூலம் உடலுக்கு சொந்தமில்லாத அல்லது இயல்பு நிலைக்கு அப்பாற்பட்ட செல்களை கண்டறிந்து அவைகளுடன் பிணைத்து அதன் செயல்பாட்டை முடக்கும் பணியை செய்வதன் மூலம் மனத உடல் நோய்களின் பிடியிலிருந்து தப்பித்து கொள்ள முடிகிறது.

    மேலும், இம்யூன்சிஸ்டம் முழுமையாக செயல்பட T- செல்லை வினையூக்கம் (acceleration) செய்யும் புரத (Protein) மூலக்கூறுகளும் அவசியம். அதேநேரத்தில், அளவுக்கு அதிமாக வினையூக்கம் செய்தால் அது இம்யூன்சிஸ்டத்தை அழிக்கவும் நேரிடும். இதனாலேயே, T-செல்லின் செயலை தடை செய்யும் (Inhibition) புரதமூலக்கூறுகளும் கண்டறியப்பட்டுள்ளன. இவைகளை பிரேக் (Brake) என்றழைக்கப்படுகிறது. ஆகவே, புற்றுநோயை குணப்படுத்தவேண்டுமெனில்,  T-செல்லை வினையூக்கம் செய்வதிலும், சரியான நேரத்தில் அதன் செயல்பாட்டை தடை அல்லது பிரேக் செய்வதிலும் நுட்பமான சமநிலையை (Balance) பின்பற்றுவதன் மூலம் இம்யூன்சிஸ்டம் மூலம் நம் உடலை சாரதா செல்களை அல்லது நுண்ணுயிரிகளை நம்உடலில் பெருகுவதை கட்டுப்படுத்த முடியும்.[hide]

    1990-களில், அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் அலிசன் அவர்களின் ஆராய்ச்சி குழுமத்தில் CTLA-4 எனும் புரதமூலக்கூற்றை ஆராய தொடங்கினர். இவர்களின் முயற்சியில், இந்த CTLA-4 ஆனது T-செல்லின் செயல்தடைசெய்யும் (brake) பணியை செய்கிறது என்று கண்டறிந்தனர். மேலும், அலிசன் இந்த CTLA-4 செயலை கட்டுப்படுத்தும் anti-CTLA-4 ஆன்டிபாடி (Antibody) எனப்படும் எதிர்ப்புபுரதம் ஒன்றை உருவாக்கினார். பிறகு, இந்த anti-CTLA-4  ஆண்டிபாடி மூலம் CTLA-4 புரதத்தை தடைசெய்து இம்யூன்சிஸ்டம் மூலம் புற்றுநோய் செல்களை தாக்கும் யுத்தியை சோதனை செய்து பார்த்தார். இந்த சோதனையின் முடிவுகள் அனைவராலும் மிகவும் ஈர்க்கப்பட்டது. இந்த சோதனையை ஒருசிகிச்சையாக கொண்டு புற்றுநோயால் தாக்கப்பட்ட எலிகளை உட்படுத்திய போது இதன் வெற்றிஉறுதி செய்யப்பட்டது.

    இதே மாதிரியான சோதனை பல்வேறு ஆரய்ச்சியாளர்களால் செய்து நம்பகத்தன்மையும் பெற்றது. 2010-ஆம் ஆண்டு இந்த சிகிச்சை முறை முற்றிய நிலையில் உள்ள மெலனோமா (Melanoma) எனப்படும் தோள் புற்றுநோய் கொண்ட ஒரு நோயளிக்கு அளித்தபோது அவர் குணமடைந்தார். அது பலரையும் ஆச்சிரியத்தில் திளைக்கவைத்தது. இத்தகைய நிகழ்வு ஒருவரலாற்று நிகழ்வாகவே அமைந்தது.இதே போல், 1992-இல், அல்லிசனின் கண்டுபிடிப்பிற்கு பிறகு சிலவருடங்களில், தசுகுகொஞ்சொ, ஜப்பானில் கியோத்தோ பல்கலைக்கழக்தில் PD-1 எனும் மற்றோரு புரத மூலக்கூறை கண்டறிந்து அது CTLA-4 போல செல்லை பிரேக் அல்லது தடை செய்யும் செயல் விளக்கத்தை வெளியிட்டார். 2012-ஆம் ஆண்டு இவரது கண்டுபிடிப்பு மெட்டாஸ்டாடிக் (metastatic cancer) எனப்படும் புற்றுநோய் செல்களை உடலின் பல்வேறு பாகங்களுக்கு பரப்பும் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவரின் கண்டுபிடிப்புக்கும் அங்கிககாரம் கிடைக்கப் பெற்றது. இவர்களின் இத்தகைய சிகிச்சை முறை இம்யூன்செக்பாயிண்ட்தெரபி (Immune checkpoint therapy) என்றழைக்கப்படுகிறது. இந்த சிகிச்சை முறையிலும் பக்கவிளைவுகள் இருப்பினும் அவைகளை சரிசெய்ய கூடியவைகளே. இது சம்பந்தமாக மேலும்பல ஆராய்ச்சிகள்மேலும் முடுக்கிவிடப்பட்டுள்ளன. எனவே, புற்றுநோயை பற்றிய அச்சம் கூடியவிரைவில் நம்மை விட்டும்மறையு ம்என்பதில் எந்த ஐயப்பாடும் தேவையில்லை. புற்றுநோய்குறைவான அல்லது அற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்கான அடிக்கல் நாட்டிய இத்தகைய விஞ்ஞானிகளை நாமும்வாழ்த்துவோம். நன்றி.[/hide]

    இந்த இதழை மேலும்

    சின்ன சின்ன மாற்றங்கள் பெரிய மாறுதல்கள்

    மாற்றங்களையும் மாறுதல்களையும் ஏற்றுக்கொள்ள நாம் என்றும் தயாராகவே இருக்கிறோம்.. நாம் உண்ணும் உணவில் மாற்றம், உடுத்தும் உடையில் மாற்றம், பேசும் மொழியில்  மாற்றம், கற்கும் கல்வியில் மாற்றம் காணும் விதத்தில் மாற்றம், கேட்கும் விதத்தில் மாற்றம்…

    பல மாற்றங்களுக்கு உட்படுத்திக்கொண்ட நாம் ஏன் பேசும் விதம் மற்றும் வார்த்தைகளில் சில மாற்றங்களை நாம் ஏன் கொண்டுவரக்கூடாது ? நாம் பேசும் வார்த்தைகளில் ஒரு சில மாற்றத்தை கொண்டுவருவதன் மூலம் நம் வாழ்க்கையில், நம் அணுகுமுறையில், நம் கனவுகளில், நம் குழந்தைகளிடத்தில், நம் குடும்பத்தில் பெரிய மாறுதலை கொண்டு வர முடியும்.

    இது எப்படி சாத்தியம்? உதாரணத்திற்கு நம்மில் பலர் சொல்ல கேட்டிருக்கிறோம். எனக்கு office – X Problem,  Business – ல டழ்ர்க்ஷப்ங்ம், Personal life – X Problem, இப்படி சொல்வதால் நம் மனம் மற்றும் மூளை இரண்டும் அந்த பிரச்சனையை  பற்றியே வட்டமிடுமே  ஒழிய, அதற்கு தீர்வை யோசிக்க முடியாது  அந்த விஷயத்துலயே உழன்று கொண்டு இருக்கும் ஆக அதற்கு தீர்வு காண்பது என்பது நம் ஆழ்மனதின் சக்தியில் உள்ளது. நம் ஆழ்மனதில் உள்ள சக்தியை வெளி கொண்டுவந்து அதை செயல்படுத்த நம்மிடம் உள்ள ஆயுதம் வார்த்தைகள் Problem என்பதை Challenge என்று கூறிப்பாருங்கள். இந்த சொல் பாசிட்டிவ் எனர்ஜியை கொடுக்கும். மனதை வலுப்படுத்தும்.  தீர்வு காண ஒரு மன தைரியத்தை கொடுக்கும்.[hide]

    உங்கள் கேள்வி எனக்கு புரிகிறது. வார்த்தைகளை மாற்றுவதன் மூலம்  நம் வாழ்க்கையை மாற்றிவிடலாம். ஆம்  மாற்றத்திற்கான ஆரம்பமாக நிச்சயம் இருக்கும். வார்த்தைகளை கவனமாக தேர்ந் தெடுத்து  பேசுவதால் நம் ஆழ்மனதில் சக்தியை ஆக்கப்பூர்வமாக மாற்றவும்  முடியும்; மேம்படுத்தவும் முடியும்; மனதை நாம் சொன்னபடி கேட்கவைக்கும் முடியும். ஏனெனில் நம் மூளைக்கு எது நல்லது எது கெட்டது என்று பிரித்து பார்க்கும் சக்தி இல்லை. நாம் என்ன சொல்கிறோமோ அதை அப்படியே கேட்கும். கேட்டு நடக்கும் அறிவியலும் உளவியலும் இப்படி இருக்கும்போது நாம் ஏன் இந்த மாற்றத்தை கொண்டுவர கூடாது ??

    வார்த்தைகளை உணர்ந்து பேசுங்கள் அவையே  எண்ணங்களாக மாறும். எண்ணங்களே செயல் வடிவம் பெரும். நாம்  செய்யும் செயல்களே நம் வெற்றிக்கு வழிவகுக்கும்.

    பேசும் போது கவனித்து பேசுங்கள் உணர்ந்து பேசுங்கள் ஆர்மார்த்தமாக பேசுங்கள் அளப்பரிய சக்தி பெறுங்கள்

    எண்ணம் போல் வாழ்வு! [/hide]

    இந்த இதழை மேலும்

    வெற்றி உங்கள் கையில்-59

    பணிவு தரும் பெருமை

    “நான்தான் பெரியவன்; நானே தலைசிறந்தவன்” (Superiority Complex) என்ற எண்ணத்தோடு சிலர் வாழ்கிறார்கள் – இது ஆணவத்தின் அஸ்திவாரம்.

    “நீங்கள்தான் சிறந்தவர். நான் ஒரு உதவாக்கரை” (Inferiority Complex) என்ற எண்ணத்தை மனதில்தேக்கி சிலர் வாழ்க்கையை நகர்த்துகிறார்கள் – இது தன்னம்பிக்கையற்றவர்களின் தனிப்பெரும் அடையாளம்.

    தன்னை மிகப்பெரியவனாக எண்ணி, உயர்ந்த நிலையில் இருப்பதுபோன்று, சிந்திப்பது தவறல்ல. ஆனால், “உங்கள் யாருக்கும் ஒன்றும் தெரியாது. நான் மட்டும்தான் எல்லாம் தெரிந்தவன்” – என்று மார்தட்டுவதுதான் வீணாய்ப் போவதற்கான அறிகுறியாய் மாறுகிறது.

    “மற்றவர்களும் அறிவில் சிறந்தவர்கள், அனுபவம் நிறைந்தவர்கள்” என்று எண்ணும்போதுதான் வெற்றியை நோக்கிய நமது பயணம் எளிதாக அமைகிறது.

    இன்று –

    “நீங்கள் படிக்கவில்லை. உங்களுக்கு ஒன்றும் தெரியாது. நான் காலேஜில் படிக்கிறேன்” என்றுசொல்லி தனது பெற்றோர்களையே பதம்பார்க்கும் சில கத்திகளும் இளையோர் வடிவில் நடமாடுகிறார்கள்.

    “கையில் நாலு காசு இல்லை. நீ எல்லாம் ஒரு மனுஷனா” என்று பணத்திமிரில் அடுத்தவர்களின் சுயமரியாதையை சுட்டெரிக்கும் நெஞ்சங்களும் உண்டு.

    – இப்படி வீண்பெருமை பேசி, வாழ்க்கைப் படகில் ஏறி, திசை தெரியாமல் அலைபவர்களும் உண்டு.

    இந்த ‘வீண்பெருமை’ என்பது அகம்பாவம், ஆணவம், செருக்கு – என பல்வேறு வார்த்தை வடிவங்களில் பலரிடம் வலம்வருகிறது. வளர்ந்து செழிக்கிறது.

    “தன்னைவிட்டால் இந்த உலகத்தில் யாரும் விவரம் தெரிந்தவர்கள் அல்ல” என்று நினைக்கும் ‘மனப்பாங்கு’ இன்று பலரிடம் காணப்படுகிறது. சமுதாயத்திலுள்ள பலரின் உதவியைப் பெற்றபின்பும், “நான்தான் இதைச் செய்தேன். என்னால்தான் இந்த வெற்றி வந்தது” – என்று தேவையில்லாமல் மற்றவர்களை மட்டம்தட்டி தானாய் முளைத்த காளானாய் மாறிப்போனவர்களும் உண்டு.

    இந்த சமுதாயத்தில் வெற்றி பெற நினைப்பவர்கள், எல்லோரிடமும் பணிவுடனும், அன்புடனும், பண்புடனும் நடந்துகொள்வது அவசியமாகும்.

    இதனால்தான், திருவள்ளுவர் “பெருமைகொண்ட பண்பு எந்தக்காலத்திலும் பணிந்து செயல்படும். பெருமைமிக்க பண்பு கொண்டவர்கள் எந்தக்காலத்திலும் பணிந்து நடந்துகொள்வார்கள். ஆனால், தன்னைத்தானே அதிசயித்துப் பாராட்டிக் கொள்பவர்கள் சிறுமையான பண்பு கொண்டவர்கள்” – என்கிறார்.

    இதனை,

    “பணியுமாம் என்றும் பெருமை; சிறுமை

    அணியுமாம் தன்னை வியந்து” – என்னும் திருக்குறளில் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

    மிகப்பெரிய பதவிகள் கிடைத்தாலும், புகழின் உச்சிக்குச் சென்றாலும், தனது உண்மையான நிலைமையை உணர்ந்து, எளிமையாகவும், இனிமையாகவும் மற்றவர்களோடு பழகும் தன்மையை வளர்த்துக்கொண்டவர்கள், இந்த உலகில் எல்லோராலும் மதிக்கப்படுகிறார்கள். வாழும் காலத்திலேயே மிக உயர்ந்த நிலையில் இருந்தாலும், அனைவரும் போற்றும்வகையில் செயல்களை இனிமையாகவும், எளிமையாகவும் அமைத்துக்கொள்ள வேண்டும்.

    “உயர்ந்த நிலையில் இருக்கும்போது

    உலகம் உன்னை மதிக்கும்

    உன்நிலைமை கொஞ்சம் இறங்கிவந்தால்

    நிழலும்கூட மிதிக்கும்”

    – என்ற கண்ணதாசனின் வரிகள், “எந்த நிலையில் இருந்தாலும், தனது உண்மைநிலையை புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். அகம்பாவத்தை அகற்ற வேண்டும்” என்பதை மனிதர்களுக்குச் சுட்டிக்காட்டுகிறது. [hide]

    அவர் ஒரு மன்னர்.

    வீதி உலா செல்வதற்காக ஒருநாள் அவரது அமைச்சரோடு அலங்கரிக்கப்பட்ட தேரில் புறப்பட்டார்.

    வரும்வழியில், எதிரே ஒரு முனிவர் நடந்து வந்துகொண்டிருப்பதைக் கவனித்தார். அவரைப் பார்த்ததும், தேரைவிட்டு இறங்கினார். பின்னர், முனிவரது காலில் தலைவைத்து வணங்கினார்.

    முனிவர் மன்னரை ஆசி வழங்கி வாழ்த்தினார். பின்னர், மன்னர் தேரில் ஏறி அரண்மனைக்குப் புறப்பட்டார். இந்த நிகழ்வைக் கவனித்த அமைச்சருக்கு வருத்தமாக இருந்தது.

    “இந்த நாட்டையே ஆளுகின்ற மன்னர், ஒரு முனிவரின் காலில் விழுந்து வணங்குவது எப்படி முறையாகும்? இது ராஜ பரம்பரைக்கே இழுக்கு அல்லவா? பலர் முன்னிலையில் மண்டியிட்டு மன்னர் முனிவரை வணங்கினால், இந்த மக்கள் மன்னரை மதிப்பார்களா?” – என கவலைப்பட்டார் அமைச்சர்.

    அரண்மனைக்கு வந்தபின்பு தனது எண்ணத்தை மன்னரிடம் பகிர்ந்துகொண்டார்.

    “முனிவரின் காலில் நான் விழுந்ததற்கு நீர் வருத்தப்பட வேண்டாம்” – என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார் மன்னர்.

    மன்னரின் இந்தச் செய்கை அமைச்சருக்கு புரியாத புதிராக இருந்தது.

    “மன்னர் ஏன் இப்படி விசித்திரமாக நடந்துகொள்கிறார்?” – என்று தனக்குள் கேள்வி எழுப்பிக்கொண்டு விடை தெரியாமல் தவித்தார்.

    அமைச்சருக்கு பதில் சொல்லும் வகையில் மன்னர் உடனே ஒரு ஆணையிட்டார்.

    “மிகவும் அவசரமாக எனக்கு மூன்று பொருட்கள் வேண்டும். அவற்றை உடனே எனக்கு கிடைக்குமாறு செய்ய வேண்டும். ஒரு மனிதனின் தலை, ஒரு புலியின் தலை, ஒரு ஆட்டின் தலை – ஆகிய மூன்றையும் உடனே இங்கே கொண்டுவருவதற்கு வேண்டிய எல்லா ஏற்பாடுகளையும் செய்யுங்கள்” – என்று மன்னர் கட்டளையிட்டார்.

    மன்னரின் ஆணை பலரையும் திகைக்க வைத்தது. மன்னர் இட்ட கட்டளை என்பதால், அதனை எதிர்த்துப் பேசவும் வழிதெரியாமல் அரசப் பணியாளர்கள் திகைத்தார்கள்.

    நாடு முழுவதும் இந்த மூன்று தலைகளையும் தேடும்பணி தொடங்கியது.

    முதலில், ஆட்டுத்தலையைத் தேடுவதற்கான பணியில் ஈடுபட்டார்கள். மிக எளிதாக ஆட்டுத்தலையை இறைச்சி கடைக்குச்சென்று வாங்கிவிட்டார்கள்.

    அடுத்து, “புலியின் தலையை எங்கே வாங்குவது?” – பணியாளர்கள் திட்டம் தீட்டினார்கள்.

    காட்டில் வேட்டையாடும் வேட்டைக்காரர்களிடம் “மன்னருக்கு புலியின் தலை தேவை” என்பதைத் தெரிவித்தார்கள். மிகுந்த சிரமத்தோடு ஒரு புலியின் தலையை வேட்டைக்காரர் கொண்டுவந்துவிட்டார்.

    இனி மனிதத் தலையை எவ்வாறு கொண்டுவருவது?

    மன்னரின் கட்டளையை மீற முடியாமல் இடுகாடு, சுடுகாடு என அலைந்து திரிந்து முடிவில், ஒரு மனிதப் பிணத்தின் தலையைக் கொண்டுவந்தார்கள்.

    ஆட்டுத்தலை, புலித்தலை, மனிதத்தலை – என மூன்று தலைகளையும் வரிசையாக ஒரு மேஜையின்மீது வைத்தார்கள். பின்னர், அமைச்சர் மன்னரிடம் வந்தார்.

    “மன்னா! உங்கள் சொற்படி நாங்கள் இந்த மூன்று தலைகளையும் கொண்டுவந்துவிட்டோம். இனி நாங்கள் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார் அமைச்சர்.

    மன்னர் சிரித்துக்கொண்டே பதில் சொன்னார்.

    “இந்த மூன்று தலைகளையும் எடுத்துக்கொண்டு சந்தைக்குச் சென்று விற்று பணம் கொண்டு வாருங்கள்” என்றார்.

    சந்தைக்கு அரசப் பணியாளர்கள் சென்றார்கள்.

    ஆட்டுத்தலை அதிக பணத்திற்கு உடனே விலைபோனது. ஆனால், புலித் தலையை வாங்க எல்லோரும் பயந்தார்கள். நெருங்கிவந்து வேடிக்கைப் பார்த்தவர்களும் விலகிப்போனார்கள். வீட்டில் அழகுக்காக புலித் தலையை மாட்டி வைக்கலாம் என்ற எண்ணத்தில், ஒரே ஒருவர் மட்டும் அதனை வாங்கிச் சென்றார்.

    ஆனால், கடைசிவரை மனிதத் தலை விலைபோகவில்லை. தலையைப் பார்த்தவர்களெல்லாம் பயந்து தலைதெறிக்க ஓடினார்கள். மனிதத் தலையை நீண்டநேரம் சந்தையில் வைத்திருக்கவும் முடியாமல், அரண்மனைக்கு திரும்பக் கொண்டுவந்துவிட்டார்கள்.

    அமைச்சர் மீண்டும் மன்னரை சந்தித்தார்.

    “மன்னா… உங்கள் ஆணைப்படியே நாங்கள் சந்தைக்குச் சென்றோம். ஆட்டுத்தலையை வாங்க போட்டிப்போட்டார்கள். அது உடனே விலைபோனது. புலித் தலையை வாங்க யாரும் தயாராக இல்லை. இருந்தாலும் முடிவில், ஒரு வேட்டைக்காரர் தனது வீட்டை அழகுபடுத்துவதற்காக வாங்கிச்சென்றார். ஆனால், மனிதத் தலையை மட்டும் விலைகொடுத்து வாங்க மக்கள் யாரும் முன்வரவில்லை. அடுத்த அறையில் உள்ள மேஜையில் அந்த மனிதத் தலையை வைத்திருக்கிறோம்” – என்றார் அமைச்சர்.

    “பரவாயில்லை அமைச்சரே! யாராவது இலவசமாக கேட்டால்கூட அதனை கொடுத்துவிட்டு வாருங்கள்” – என்று மீண்டும் அமைச்சரை சந்தைக்கு அனுப்பினார். மனிதத் தலையை இலவசமாக வாங்கக்கூட யாரும் தயாராக இல்லை.

    மனிதத் தலையோடு திரும்பி வந்தார் அமைச்சர்.

    “அமைச்சரே… இப்போது உங்களுக்குப் புரிகிறதா? நமது உடலிலுள்ள உயிர் போய்விட்டால், நமது உடல் யாருக்கும் பயன்படாது. இலவசமாகக் கொடுத்தால்கூட வாங்கமாட்டார்கள். நாம் இறந்துபோனபிறகு நமது உடலை யாரும் மதிப்பதில்லை. ‘பிணம்’ என்றுசொல்லி ஒருநாள் இரவுகூட வீட்டில் தங்கவைக்க உறவினர்களே விரும்புவதில்லை. இந்தநிலையை உயிரோடு இருக்கும்போதே நன்றாக அறிந்து, வாழ்க்கையை உணர்ந்தவர்கள், முற்றும் துறந்த முனிவர்கள். உயிரோடு இருக்கும்போது உடலுக்கு மதிப்பில்லை, உயிருக்குத்தான் மதிப்பு என்பதை உணர்ந்த அந்த முனிவர்கள் காலில் விழுந்து வணங்குவதுதான் ஞானம் பெறுவதற்கு சிறந்த வழி. நான் ஞானம் பெறுவதற்காக உயிரோடு இருக்கும்போதே உரியவர்களுக்கு மரியாதை செலுத்தி, பணிந்து நடக்கிறேன்” – என்றார் மன்னர்.

    இதைக்கேட்ட அமைச்சர் அதிர்ந்து திகைத்து நின்றார்.

    மேலே குறிப்பிட்ட நிகழ்வு நமக்கு ஒரு முக்கியமான உண்மையை உணர்த்துகிறது.

    வாழும் காலத்தில் எந்தநிலையில் இருந்தாலும், அனைவருக்கும் மரியாதை கொடுத்து, இனிமையாகப் பேசி, பணிவோடு வாழப் பழகிக்கொள்வதுதான், வாழ்க்கையின் சிறப்புக்கும், சீரான வெற்றிக்கும் துணைநிற்கும்.

    தொடரும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 2

    இரகசியம் (Secret)

    இரகசியம் என்ற இந்த ஆங்கில நூலின் ஆசிரியர் ரோன்டா பைர்ன் (Rhonda Byrne) ஆவார். (தமிழில் மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் வெளியிட்டுள்ளது. தமிழில் PSV குமாரசாமி மொழியாக்கம் செய்துள்ளார்) இந்த நூலின் ஒட்டுமொத்தமான கருத்து எது என்று பார்த்தால் “மனித மனம் எதை இடையறாது நினைக்கிறதோ அதை அடைந்துவிடுகிறது” அதாவது “நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே நீ ஆகிறாய்” என்ற சிந்தனையை அறிவியல் நெறியில் நிறுவிட முற்படுகின்றது.

    இந்த உலகத்தை தனது சிந்தனைகளால் மாற்றியமைத்த பிளாட்டோ ஷேக்ஸ்பியர், கலிலியோ, பித்தோவன், எடிசன், கார்னெகி, ஐன்ஸ்டீன், லிங்கன் ஆகிய எல்லோருமே நம்மால் எதுவும் முடியும் என்று நம்பியவர்களே ஆவர். இவர்களின் வெற்றிக்குக் காரணமாக அமைந்தது “மனம் எதை நம்புகிறதோ அதை உறுதியாக அடைந்துவிடுகிறது” என்ற இரகசியத்தை இவர்கள் அறிந்திருந்ததுதான் என்று இந்த நூலாசிரியர் குறிப்பிடுகிறார். இந்த வாக்கியத்தை நாம் அடிக்கடி பலர் சொல்லக் கேட்டிருக்கிறோம்; நாமே பல நூல்களில் அடிக்கடி படித்திருக்கின்றோம். ஆனால் நம் வாழ்க்கையில் அதைக் கடைப்பிடித்து வெற்றிபெற வேண்டுமென்று சிந்தித்ததில்லை; இந்த நூல் அத்தகைய வெற்றிச் சிந்தனையை நம்முள் உறுதியுடன் விதைக்கிறது. இந்த நூலில் பல வெற்றியாளர்களின் சிந்தனைகள் வரிசையாகச் சொல்லப்பட்டு; அவர்கள் வெற்றி பெற்ற விதம்; அவர்கள் இரகசியம் எனும் இந்தக் கோட்பாட்டை அறிந்திருந்ததே ஆகும் என்று ரோன்டா பைர்ன் உறுதிபடக் கூறுகிறார்.

    இரகசியம் என்பதன் விளக்கம்

    • இரகசியம் நீங்கள் விரும்பும் எதையும் உங்களுக்கு அளிக்கும்; மகிழ்ச்சி, ஆரோக்கியம், செல்வம் என்று எதுவென்றாலும்.
    • நீங்கள் விரும்பும் எதையும் பெறலாம், எதையும் செய்யலாம்; எதுவாகவும் ஆகலாம்.
    • நாம் தேர்ந்தெடுக்கும் எதை வேண்டுமானாலும் நாம் பெறலாம்; அது எவ்வளவு பெரிதாக இருந்தாலும் அது ஒரு பொருட்டல்ல.
    • உங்களது ஒவ்வோர் எண்ணமும் உண்மையில் ஒரு மெய்யான பொருள்தான். அது ஒரு சக்தி.

    மேற்சொல்லப்பட்ட சிந்தனைகளை இந்து மதம், புத்த மதம், யூத மதம், கிறித்துவ மதம், இஸ்லாம் போன்ற மதங்களும், பாபிலோனியா, எகிப்து போன்ற நாகரீகங்களும் தங்களுடைய எழுத்துக்களிலும், கதைகளிலும் பொதிந்து வைத்துள்ளன என்பதை நாம் தெரிந்திருக்கின்றோம்.

    உலகில் சம்பாதிக்கப்படும் மொத்தப் பணத்தில் தொண்ணூறு சதவீதத்தை, மக்கட் தொகையில் ஒரு சதவீதமே வகிப்பவர்கள் ஈட்டுவதற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள்? இது ஒரு விபத்தென்றா நீங்கள் கருதுகிறீர்கள்? அது அப்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஏதோ ஒன்றைப் புரிந்து இருந்தனர். அவர்கள் இரகசியத்தை அறிந்திருந்தனர். இப்போது அதே இரகசியம் இங்கே அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றது. அது வருமாறு.

    தங்களுடைய வாழ்வில் செல்வத்தை ஈர்த்தவர்கள் தெரிந்தோ தெரியாமலோ இரகசியத்தை உபயோகித்திருக்கின்றனர். அவர்கள் அபரிமிதமான செல்வச் செழிப்பான எண்ணங்களை எண்ணிக் கொண்டிருந்திருக்கின்றனர். அதற்கு முரண்பாடான எண்ணங்கள் முளைவிடாமல் பார்த்துக் கொண்டனர். அவர்களுடைய சிந்தனையை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த எண்ணங்கள் எப்போதும் செல்வச் சேகரிப்பு குறித்துத்தான் இருந்து வந்துள்ளது. அவர்கள் செல்வத்தை மட்டும்தான் அறிந்திருந்தனர்; அவர்களுடைய மனத்தில் வேறு எதுவும் நிலை கொண்டிருக்கவில்லை. அவர்களிடம் குடி கொண்டிருந்த செல்வச் செழிப்பு குறித்த ஆதிக்க எண்ணங்களே அவர்களுக்குச் செல்வத்தையும், செழிப்பையும் கொண்டுவந்து கொடுத்துள்ளன. அது ஈர்ப்பு விதியின் இயக்க விதி. ஈர்ப்பு விதி என்பது குறித்து; விளக்கும் ஒரு மேற்கோள் வருமாறு அமைக்கப்பட்டுள்ளது.[hide]

    “ஈர்ப்பு விதி என்பது, என்னைப் பொறுத்தவரை, நான் என்னை ஒரு காந்தமாக எண்ணிக்கொள்வதற்கு ஒப்பானது. காந்தம் ஈர்ப்பு சக்தி உடையது என்பதை நான் அறிவேன்” என்று சொல்லும் ரோன்டா பைர்ன் உலகிலுள்ள எல்லா மனிதர்களும் ஏதோ ஒரு வகையில் அதீத ஆற்றல் பெற்ற காந்தத்திற்கு இணையானவர்கள் என்கின்றார். பிரபஞ்சத்திலேயே மிகவும் சக்திவாய்ந்த காந்தம் நீங்கள்தான். உலகத்திலுள்ள மற்ற எல்லாவற்றையும்விட ஆற்றல் மிக்க இச்சக்தி உங்களினுள் உறைந்துள்ளது. இந்த அளவிட முடியாத காந்த சக்தி உங்களது எண்ணங்கள் மூலமாக வௌல்ப்படுத்தப்படுகிறது. அதாவது ஒத்தவை தன்னை ஒத்தவற்றையே கவர்ந்திழுக்கும் என்று ஈர்ப்பு விதி கூறுகிறது. ஆகவே நீங்கள் ஓர் எண்ணத்தை எண்ணும்போது அதை ஒத்த எண்ணங்களை நீங்கள் உங்கள்பால் ஈர்க்கிறீர்கள். இதற்கான சில உதாரணங்கள் வருமாறு.

    • நீங்கள் துன்பமான சூழலில் இருந்தால் அது தொடர்பான பல துன்பியல் எண்ணங்கள் தோன்றி நம்மை மேலும் துன்பப்படுத்தும். அதனால் நாம் மனக்கலக்கம் அடைவோம்.
    • நாம் ஒரு மகிழ்வான சூழலில் இருக்கும்போது; ஒரு பாடல் இசைக்கப்பட்டால் அப்பாடலில் நாம் இலயித்துப்போய் விடுவோம். இதுவெல்லாம் நமது எண்ணங்களை ஒருமுகப்படுத்துவதால் ஏற்படுவது.
    • இந்த எண்ண அலைகளையே இந்நூல் இரகசியம் என்கின்றது. உங்கள் மனக் கண்ணில் ஒன்றை உங்களால் பார்க்க முடிந்தால்; அது கண்டிப்பாக உங்கள் கைகளில் தவழும். இந்தக் கோட்பாட்டை மூன்றே வார்த்தைகளில் விவரிக்கலாம், அது “எண்ணங்கள் பொருட்களாகப் பரிணமிக்கும்” என்பதே ஆகும். மன ஆற்றலின் துடிப்புகள்தான் இருப்பதிலேயே மிகவும் சிறந்தவை; அதனால் அவை இருப்பதிலேயே அதிக சக்தி வாய்ந்தவையாக விளங்குகின்றன. நாம் எதை விரும்புகிறோமோ அது நமக்கும் கிடைக்கும் என்பதே இரகசியம் என்ற கோட்பாட்டின் எளிய விளக்கம் ஆகும்.

    இரகசியத்தைப் பயன்படுத்துவது எப்படி

     உங்களுக்கு அலாவுதீனும் அற்புத விளக்கும் கதை நினைவிருக்கிறதா? அலாவுதீன் விளக்கை எடுத்துத் தேய்த்தவுடன் அதிலிருந்து ஒரு பூதம் கிளம்பும், அப்பூதம் எப்போதும் ஒன்றே ஒன்றைத்தான் கூறும்.

    “தங்கள் கட்டளை என் பாக்கியம்”

    தற்போது கூறப்பட்டுவரும் கதையில் அது மூன்றே மூன்று கட்டளைகளைத்தான் நிறைவேற்றும். ஆனால் இக்கதையின் மூலம் வரை சென்று பார்த்தால்; கட்டளைகளுக்கு கணக்கில்லை என்பது புரியும்.

    இந்தக் கதையில் வரும் பூதம் பிரபஞ்சத்தின் குறியீடு; நீங்கள் பிரபஞ்சத்தின் எஜமான். பூதம் உங்களின் சேவகன். அப்பூதம் உங்களுடைய கட்டளைகளைக் கேள்வி கேட்காமல் ஏற்றுக் கொள்கிறது. நீங்கள் சிந்தித்தவுடனேயே அப்பூதம் உங்களுடைய கட்டளையை நிறைவேற்றுவதற்காக மக்கள், சந்தர்ப்பங்கள் மற்றும் நிகழ்வுகள் மூலமாகப் பிரபஞ்சத்தை உங்களுக்குச் சாதகமாக இயங்க வைக்கத் துவங்குகிறது. இரகசியத்தைப் பயன்படுத்த மூன்று படிகள் உள்ளன.

    முதற்படி – கேட்பது; பிரபஞ்சத்திற்கு ஆணையிடுங்கள். உங்களுக்கு என்ன வேண்டும் என்பது பிரபஞ்சத்திற்குத் தெரியட்டும்; உங்கள் எண்ணத்திற்குப் பிரபஞ்சம் செயல்விடை அளிக்கும்.

    நம்புவது; இரண்டாவது படி : நீங்கள் விரும்பியது எதுவோ அது ஏற்கனவே உங்களுடையதாகிவிட்டதென்று நம்புங்கள். நான் அதை, அசைக்க முடியாத நம்பிக்கை என்றழைக்கிறேன். கண்ணுக்குப் புலப்படாத ஒன்றின் மீது இருக்கும் நம்பிக்கை.

    மூன்றாவதான கடைசிப்படி – பெறுதல் ஆகும். நீங்கள் கேட்டது கிடைக்கும்போது உங்களுக்கு ஏற்படவிருக்கும் உணர்வு குறித்து அற்புதமாக உணரத்துவங்குங்கள். அது வந்து சேரும்போது எப்படி உணர்வீர்களோ அதே உணர்வை இப்போதே ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதை இக்கணத்தில் உணருங்கள். வேண்டியது கிட்டிவிட்டது போன்றே உணருங்கள். நீங்கள் அனைத்தையும் உங்களை நோக்கி இருக்கும் ஒரு காந்தம் என்பதை நினைவில் வைத்திருங்கள். உங்களுக்கு என்ன தேவை என்பதைத் தௌல்வாக உங்கள் மனத்தில் இருத்தும்போது அப்பொருட்களே உங்கள் வசம் ஈர்க்கும் காந்தமாக நீங்கள் மாறிவிடுவீர்கள்.

    ஈர்ப்பு விதியின் செயல்பாடு

    நாம் எதை விரும்பினாலும் அது உண்மையாகவும், வலுவாகவும் இருக்கையில் அது நமக்குக் கிடைத்தே தீரும் என்பதை இந்த இரகசியம் எனும் நூலில் ரோன்டா பைர்ன் வெற்றி பெற்ற ஏராளமானவர்களின் வாழ்க்கையைச் சான்றுகாட்டி விளக்கிச் செல்கின்றார். இந்த நூலைப் படிக்கப் படிக்க நாம் அதிர்ஷ்டசாலியானவராக ஆனதுபோல் உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியவில்லை. நினைத்தது நடக்கும், நினைத்ததை முடிப்பேன்; முடியாதது எதுவும் இல்லை: ஆனால் நாம் முயற்சிப்பதில்லை என்பது மட்டுமே உண்மை என்ற கருத்து இந்த நூலை வாசிக்கும் எல்லோருக்கும் ஏற்படும். இந்தப் பிரபஞ்சத்திலுள்ள வளம் அளப்பரியது; யாரெல்லாம் எது கேட்கிறார்களோ அதை வாரி வாரி வழங்கக் காத்திருக்கிறது என்பதை இந்த நூல் தனது செய்தியாக முன் வைக்கின்றது. செல்வம் வேண்டுமா? அதைப் பற்றி நினையுங்கள், மகிழ்ச்சி வேண்டுமா? அதைப் பற்றி நினையுங்கள், உறவு வேண்டுமா? அதைப் பற்றி நினையுங்கள், ஆரோக்கியம் வேண்டுமா? அதைப் பற்றி நினையுங்கள், கேட்பது எல்லாமே கிடைக்கும். இவ்விதி உங்களுக்காகச் செய்யக்கூடிய விஜயங்களுக்கு எல்லையே கிடையாது. நாம் சாதிப்பதற்கு ஏதாவது எல்லையிருக்கிறதா? இல்லவே இல்லை. நாம் எல்லையற்ற சக்தியுடையவர்கள், உச்சவரம்பு எதுவும் கிடையாது. உங்களால் முடியும் என்று சிந்தித்தாலும் சரி, முடியாது என்று சிந்தித்தாலும் சரி. இரண்டுமே சரிதான். அதே வேளையில் நீங்கள் இந்தப் பிரபஞ்சத்தின் சக்கரவர்த்தி என்பதை மறந்துவிடாதீர்கள்.

    – வாசிப்பு தொடரும்…[/hide]   

    இந்த இதழை மேலும்