ஆமாம்..
பகவத் கீதையில் “யத்பாவம் தத்பவதி” என்ற ஒரே வரியில் மொத்த பிரபஞ்ச வாழ்க்கையும் அடங்குவது போல,‘உள்ளத்திலே உள்ளதுதான் உலகம்’ என்ற ஒற்றை வார்த்தையில்தான் ஒட்டு மொத்த மனிதர்களின் 100 வருட வாழ்க்கையும் ஆடுகிறது. அடங்குகிறது..
எதை எப்படி பாவிக்கிறாயோ, அப்படியே ஆகும் என்பதுதான் இதன் விளக்கம்! அப்படித்தான் இந்தப் பிரபஞ்சமும் படைக்கப்பட்டுள்ளது. அதாவது, அதிக வலிமை கொண்ட விந்தணு, எப்படி கரு முட்டையைத் துளைத்துக் கொண்டு உள்ளே சென்று உருவமாகிறதோ, அதேபோல், அதிக ஆதிக்கம் கொண்ட எண்ணமானது. ஆழ்மனதை அடைந்து செயல் வடிவம் பெறுகிறது.
நாம் வாழ்கின்ற இந்தப் பிரபஞ்சத்தில் பல விதமான விதிகள் உண்டு. நாம், நல்லவரோ, கெட்டவரோ யாராக இருந்தாலும் நெருப்பு சுடும். அது போல நாம் நல்லது நினைத்தாலும் கெட்டது நினைத்தாலும், அதை நிச்சியம் அனுபவித்தாக வேண்டும், என்பது நியதி. அப்படியிருக்க வருகின்ற எண்ணத்திற்கெல்லாம் வலிமை சேர்த்தால் வாழ்க்கை வலிமை இழந்து விடும். இதுவரை எதை பதிய வைத்திருக்கிறீர்களோ..அதுவே இன்றைய நம் வாழ்க்கை அனுபவமாகிவிடும். அதனால் எண்ணஅணுக்கள் பதிவதை மனதில் கொண்டு நல்லதை மட்டுமே நினைக்க வேண்டும். கவனமாக விழிப்புணர்ச்சியுடன் எண்ணங்களை நினைக்க வேண்டும்.
‘லைப்’ எப்படி போய்கிட்டிருக்கு.?”-என்று கேட்டதும் நாம் சொல்லும் உடன் பதில்,
“கஷ்டந்தான் என்னை மாதிரி கஷ்டப்படறவங்க உலகத்திலெ யாருமில்லே”
“எனக்கு வந்த வாழ்க்கை மாதிரி, யாருக்கும் அமையக்கூடாது.”
“என் நிலைமை எதிராளிக்கும் வரவே கூடாது,ரொம்ப கொடுமையாக இருக்கு” என்றுதான், மற்றவர்களுக்கு நம் வாழ்க்கையை அறிமுகப்படுத்தி வருகிறோம்.
நம் ஆழ்மனத்தின் தகவல்களால் நம் வாழ்க்கை எப்படி போற்றப்படுகிறதோ?அல்லது தூற்றப்படுகிறதோ?அப்படியே வாழ்க்கை சம்பவங்கள் அமையும்.
அதே போல், ஏழைகள் ஏழைகளாகவே பிறப்பதில்லை. இருக்கவேண்டிய அவசியமுமில்லை. “நான் ஒரு ஏழை” என்ற பதிவும்,“நான் பணக்காரன்”; என்ற எண்ணப்பதிவுதான், அவர்களை அதே இடத்தில் வைத்திருக்கின்றது.
இதுபற்றி,மகான்கள் சொல்வது,
வாழ்க்கை துக்கம் என்று நினைத்தவுடன், துக்கமான சம்பவங்கள் மட்டுமே பார்ப்பீரகள்! இதுதான் ‘இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டும் மனோபாவம்’
உதாரணமாக…!
ஒரு பிரபலமான பாடலை பாடிய பாடகரை நம் மனதில் கொண்டு வந்து, அந்தப் பாடலை நாம் பாடினால், நமக்கு அதே குரலில், பாவனையில் பாடுவது போலவே தோன்றும்!.
இந்த மனோபாவம்!‘நாம் நன்றாகப் பாடுகிறோம்’ என்ற எண்ணத்தை உருவாக்கும். ஆனால், வெளியே நம் பாட்டைக் கேட்பவர்களுக்கோ, கேட்க பிடிக்காது. போட்டிகளில் பாடவந்து, பாடியவிதம் சரியில்லையென்று நிராகரிக்கப்படுவதும் இப்படித்தான்.
ஆதனால்,, ஒரு முறை வாழ்க்கை என்பது, ஏமாற்றம், துக்கம், துயரம் நிறைந்தது என்று முடிவுசெய்து விட்டோம் என்றால், நம் மனம் வாழ்க்கையை அப்படியே துக்கமாகவே பார்க்கும். அதேசமயம். ஆதிர்ஷ்டவசமாக ஒரு அதிசயம், அற்புதம் நடந்து விட்டால்;, அதை அனுபவிக்காமல்,ஏற்றுக் கொள்ளாமல்“இது ஏதோ ஆறுதலுக்கு வந்தது’ என்று புறந்தள்ளி விடுகிறோம்.
உதாரணமாக.. நடந்த உண்மை சம்பவம்
ஒரு நண்பருக்கு கவிதை எழுதும் திறமை இருந்தது. ஆனால், அவரின் கவிதைகள் ஒன்று கூட பிரசுரமாகவில்லை. ஒரு முறை என்னிடம், தன் கவிதைகளை பத்திரிக்கையில் வருவதற்கு ஏதாவது உதவி செய்யுங்கள் என்றார்.
நானும் எனக்குத் தெரிந்த பத்திரிக்கையில், அவரைப் பற்றி சொல்லி, கவிதையை வெளியிட உதவி செய்தேன்.
கவிதை பிரசுரமும் ஆனது. பலர் கவிதையைப் பாராட்டியும் இருந்தனர். ஆனால்…அந்த நண்பர் தொடர்ந்து எழுதுவதை விட்டுவிட்டார். ஒருமுறைநேரில் சந்தித்து, காரணம் கேட்ட போது..,“ என்னதான் என் கவிதை பிரசுரமானாலும், அது உங்களுக்காகத்தானே பிரசுரித்தார்கள். என் கவிதைக்காக இல்லையே, அதனால் நான் எழுதுவதை விட்டு விட்டேன்” என்றார். அதுமட்டுமின்றி இன்றுவரை எதற்கும் யாருடைய சிபாரிசும் தேவையில்லை என்ற முடிவில் இன்று வரை சந்தாஷமாக இருக்க முடியாமல் கஷ்டப்படுகிறார்.’
இந்தா மனோபாவம் உள்ளவர்களால், எப்படி முன்னேற முடியும்?. இப்படித்தான் இன்னும் பலர்பேர் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் தனக்கு மதிப்பு, தானாக வர வேண்டும் என்று நினைத்து, அவர்கள் நிலையைத்தாண்டி வராமல், வாழ்க்கையை எதிர்மறை எண்ணத்திலேயே கொண்டு செல்கிறவர்கள். எத்தனை திறமை இருந்தாலும் வாய்ப்பு என்பது, வாய்க்காதவரை திறமைகள் ஜெயிப்பதில்லை! வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளாதவர்கள், வாழ்க்கையில் வளர்ச்சியடைவதும் சிரமம்.
நாம் நேசிக்கும் நபரைத் தவிர வேறுயார் நல்லவர்களாக, சிறந்தவர்களாக இருந்தாலும், மனம் நாம் நேசிப்பவரைதான் நாடும். அதுபோல.. நாம், துக்கத்தை நேசிப்பதால், இடையில் வரும் எந்த ஒரு சந்தோஷத்தையும், வாய்ப்பையும் ஏற்கவோ, அனுபவிக்கவோ முடியாது.! துக்கத்தை எதிர்பார்க்கின்ற மனநிலை இருப்பதால், துக்கத்தையே எதிர்பார்க்கிறோம். கருவாட்டு கடையில் நின்று கொண்டு,அங்கிருந்து வெளிவராமல், அங்கேயே பூவாசத்தை எதிர்பார்ப்பதுப் போல, நாம் சில விஷயங்களிலிருந்து வெளி வராமல், விரும்பும் அனைத்தும், நாம் நினைக்கும் வட்டத்தக்குள் அடங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இது நடக்க கூடிய காரியமல்ல.
தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சி வேண்டுமோ, அதை மனம் நினைத்தால்;, கையில் உள்ள ‘ரிமோட்டை’ இயக்கி, மாற்றி, நாம் விரும்பிய காட்சியை கொண்டு வருவது போல, வாழ்க்கையில் எது நடக்க வேண்டும் என்று மனம் எதிர்ப்பார்க்கிறதோ, அதுதான் நடக்கும்.. துக்கத்தை, கக்கத்தில் வைத்துக் கொண்டு பக்கத்தில் பால், பலகாரம் வைத்தாலும், கசப்பாக, வேண்டா வெறுப்பாகத்தான் மனம் நினைக்கும். இந்த பாலே விஷமாக இருந்தாலாவது, குடித்து விடலாம் என்று, நல்ல பாலையும் விஷமாக்க நினைக்கும்.. மிரண்டவனுக்கு, இருண்டதெல்லாம் பேயாக தெரிவதுபோல,‘கஷ்டப்படவே நான் பிறந்தேன்’,என்று தன் வாழ்க்கையை நிர்ணயிப்பவருக்கு, வாழ்க்கையில் சொர்க்கமான மாற்றங்கள் ; வந்தாலும்,கூட நரகமாக மாற்றிக் கொள்வார்கள்.
எனக்கு மட்டும் ஏன் இப்படி?
எனது நண்பர், தன் தந்தையின் மரண செய்தி கேட்டு, வாகனம் ஓட்டிச் சென்றார். திடீரென்று செல்லும்; வழியில் சிறு விபத்து ஏற்பட்டு விட்டது. எந்த வித காயமோ, சேதமோ இல்லைதான். ஆனால் அவர்,‘எங்க குடும்பத்துக்கே கெட்ட நேரம் ஆரம்பமாயிடுச்சு’ என்று புலம்பி தீர்த்தார்.
ஆறுமாதமாகியும்,அந்த ‘கெட்ட நேர எண்ணத்திலிருந்து வெளிவராமல்(வெளி வர முடியாமல்;) பயத்தில் கோவில், கோவிலாகச் சென்று வருகிறார். காய்ச்சல், தலைவலி என்று வந்தாலும், அவர் குழந்தை விளையாடும் போது கீழே விழுந்தால் கூட துடித்து போகிறார். இதனால் வீட்டிலுள்ளவர்களுக்கும் கட்டுப்பாடுகள் அதிகரித்து விட்டது.
இவர் கொஞ்சம் சிந்தித்து…
“தனக்கு ஏற்பட்ட விபத்தில் சிறு காயமின்றி தப்பியதை, தெய்வாதீனமாகவோ, புண்ணியமாகவோ, அதிர்ஷ்டமாகவோ நல்ல வேளையாகவோ எண்ணத்தை வளர்த்திருந்தால்…தொடர்ந்து வரும் எதிர்பாராத துர்சம்பவங்களில் தடுமாறாமல், தானும் இருந்து, குடும்பத்தவர்களையும், தண்டிக்காமல் இயல்பாக இருந்திருக்க முடியுமே!
அவரைப்போல இருப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டியது
“நம் வாழ்க்கையின் அமைப்பே, நல்லது, கெட்டது அதிசயம், அதிர்ச்சி, அபாயம் என்று, மாறி மாறித்தான் நடக்கும். இரண்டுமே எதிர்பாராத நிகழ்வுகள்.அதை எப்படி பார்க்கிறோம்? என்பது நம் மனதை பொறுத்தது. துக்கம் உள்ள மனதில், சந்தோஷம் நுழையாது. ஆனால் பால் அடைத்த பாக்கெட்டில், தயிர் நுழைய இடம் அனுமதித்தால்..அத்தனை பாலும்…தயிராவது போல, நமது நிர்ணயம், அபிப்ராயத்தால் அடைபட்ட எண்ணங்களில் கொஞ்சம்,வலிமையான நேர்மறை எண்ணத்தை அனுமதித்தால் போதும், பொய் கண்ணோட்டங்கள் காணாமல் போகும்.. துக்கமும், துச்சமாகும்.. ஆனால் நம்மில் பலர், “நீ மாறு.. “நான்; இப்படித்தான் எனை மாற்றிக் கொள்ள முடியாது. மாற்ற வேண்டிய தேவையில்லை” என்று பிடிவாதமாக, தனக்கென்று ஒரு வட்டத்தை வரைந்து கொண்டு, அந்த வட்டத்துக்குள் மற்றவர்கள் வரட்டும் எனக்காத்திருப்பார்கள். மற்றவர்கள் ‘இவர்’ வரட்டும் என காத்திருக்கிறார்கள்’இதன் முடிவென்ன?
வாழ்க்கையில் அனுபவிக்க முடியாத அவலம்தான் தொடரும்; அதுமட்டுமின்றி! உடல் ரீதியாக பெரும் வியாதிகளையும் உண்டு பண்ணி விடும். ஒரு சிலருக்கு எந்த விதமான கெட்;;ட பழக்கங்களும் இருக்காது. ஆனால் பெரிய கொடிய வியாதிகளில் மாட்டிக் கொள்வார்கள்.பிறகு,‘எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்குது?’ என்ற கேள்விதான் பதில் தெரியாமல் நிற்கும். காரணம் என்ன?
புரிந்து கொள்ள வேண்டியது!
நம் செயல்பாடுகள் எல்லாம் நம் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளால் நடக்கிறது. அதாவது நம் மனதிலிருந்து உருவாகும் எண்ணங்களும், நம் வாழ்வில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும் உள்ள தொடர்பை நம் மனம்தான் நிர்ணயிக்கிறது. பல சமயங்களில், நம் வாழ்வில் வெவ்வேறு பருவங்களில் நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும் போது தான் “எனக்கு மட்டும் ஏன் இப்படி? என்ற கேள்வி எழுகிறது. பொதுவாக நமக்கு விருப்பமில்லாத எதிர்மறையான நிகழ்வுகள் நடக்கும் போது, மற்றவர்களையோ அல்லது கடவுளையோ குற்றம் சொல்வோம் ஆனால்; உண்மையில், நம் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளுக்கு யார் பொறுப்பாளி?
வெளியே நம்மை சுற்றியுள்ள மனிதர்களும் சூழ்நிலைகளும் காரணமா? இல்லை நாம்தான் காரணமா? நிச்சியமாக.. நம் வாழ்க்கையில் நடக்கும் அத்தனைக்கும் நாம்தான் முக்கிய பொறுப்பாளி! நம்மனதிற்கும்,வௌல் உலகிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மனது, வெளியுலகில் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. அது போலவே வெளி உலகம் மனதில் பாதிப்பை தருகின்றது. ஆனால் மனமோ.. மிகவும் சக்தி வாய்ந்தது. மனதிற்கு உருவாகும் சக்தி அதிகம்! இந்த உலகமே சில சட்ட திட்டங்களுக்கும், விதிமுறைகளுக்கும் உட்பட்டது. இதுவே மனித வாழ்க்கையின் அடிப்படையாகும் வெளியுலகிற்கு விஞ்ஞான ரீதியான விதிமுறைகள் எப்படியோ அப்படியே நம் வாழ்க்கையை செயல் விதிமுறைகளும் கட்டுப்படுத்துகிறது.. இதுதான் உலக நிதியும் கூட…
அதன்படி நம் உள்ளத்திலிருந்து வெளிப்படும், எண்ணங்களின் ஆதிக்கம்தான் இந்த உலகம். நாம் சந்திக்கும் மனிதர்கள், பிரச்சனைகள், பலவிதமான வாழ்க்கை அனுபவங்கள் அனைத்தும் நம் உள்ளத்தில் இருப்பதை பிரதிபலிக்கும் கண்ணாடிகள்! அதாவது நம்முடைய வாழ்க்கை நிகழ்ச்சிகளை நாம்தான் உருவாக்குகிறோம். நாம்தான் அதை உருவகப்படுத்துகிறோம். நம்முடைய அபிப்ராயங்களும், கண்ணோட்டங்களும், நம் வெளியுலகை வடிகட்டுகிறது. ஆகையால் நாம் என்ன நினைக்கிறோமோ நாம் அவைகளாகவோ மாறுகிறோம் என்பதுதான் இன்றளவும் நமக்குள் நடக்கிறது. இதை நாம் உணராததால்தான். ‘நாம்தான் உருவாக்குகிறோம்’ என்பதை நம்மால் உணரமுடியவில்லை.
நம் உலகை,பிரச்சனையை நாம்தான் உருவாக்குகிறோம். இதற்கு யாரும் காரணமல்ல. இந்த உலகம் நம் எண்ணங்களையும், உணர்ச்சிகளையும், பிரதிபலிக்கறது. மலை உச்சியில் நின்று உரக்க “நீ முட்டாள்” என்று கத்தினால் மலையும் “நீ முட்டாள்” என்று, மறு குரலாய் எதிரொலிக்கும்
உண்மையில் இதில் யார் முட்டாள்?
நாம் உள்ளே ஒருவிதமாக இருந்து கொண்டு, வெளியுலகை வேறு விதமாக அனுபவிக்க முடியாது.
உள்ளிருப்பதுதான் வௌல்யே எதிரொலிக்கிறது. “நீங்கள் நினைப்பது போலவே நடக்கிறது” என்பதற்கு இதுதான் அர்த்தம். நாம் விரும்புவதையும் வெறுப்பதையும்தான் நாம்
நேர்மறையாக சிந்திப்பவர்கள் எப்போதும்.‘வாழ்க்கையில் தனக்கு என்ன கிடைக்கவில்லை?’ என்று பார்க்காமல.; ‘என்ன கிடைத்திருக்கிறது?’ என்று தான் பார்ப்பார்கள். இவர்கள்,தங்கள் வாழ்க்கையை, ஒவ்வொரு வினாடியம் அனுபவிப்பதோடு வாய்ப்பு கொடுத்த கடவுளுக்கும் நன்றி சொல்வார்கள். ஆகவே! நம்முடைய பிரச்சனையிலிருந்து விடுபட உலகம் அமைதிபெற நமது உள்ளத்து உலகம் அமைதி பெற வேண்டும்.
இந்த இதழை மேலும்