சாதனையாளர்களின் மூன்று குணங்கள்
சாதனையாளர்களின் 3 குணங்கள்
வாழ்க்கையில் எதையாவது சாதிக்க வேண்டும் என்பது எல்லோருடைய மனதின் தாகம் எனலாம்.
படிப்பதில் முதல் மதிப்பெண்கள் பெற்ற பலர், வாழ்க்கையில் சாதனையாளர்களாக முடிவதில்லை.
கடினமாக உழைக்கும் பலர் பெரியதாக எதையும் சாதிக்காமல் அப்படியே வாழ்கிறார்கள்.
பணவசதி படைத்தவர்களில் பலரும் சாதனைகளில் பின்தங்கி விடுகிறார்கள்.
அப்படியாயின், சாதனையாளர் ஆவதற்குத் தேவையான மூலக்காரணங்களைப்பற்றிய தெளிவு தேவை.
பொதுவாக, சாதனையாளராவதற்கு, மூலமாக விளங்குவது:
1. எண்ணங்கள்
2. சொற்கள்
3. செயல்கள்
இம்மூன்றையும் சரிவர செயலாக்கும்போது சாதனையாளர் உருவாகிறார்.
எண்ணங்கள்
எண்ணங்களை உருவாக்குவது மனமே. ஒவ்வொருவருக்கும் இரண்டு வகை மனங்கள் உண்டு. ஒன்று வெளிமனம் (Conscious mind); மற்றொன்று உள்மனம் அல்லது ஆழ்மனம் (Subconscious mind).
பிறரிடம் உரையாடும்போது, வெளிமனம் தான் செயல்படுகிறது.
நம்முடைய சொற்கள், செயல்கள் மற்றும் தோற்றம் எல்லாம் உள் மனத்தின் பிரதிபலிப்பு எனலாம். நம் வாழ்க்கையில் நடக்கின்ற ஒவ்வொரு சம்பவமும், அதனால் உண்டான பிரதிகிரியை (Reaction)களும், பதிவேடுகளாக உள்மனதில் அமைகின்றன. அவைகளுக்கேற்ப நம் எண்ணங்கள் உருவாகின்றன.
Continue Reading »
0 comments Posted in Cover Story