வெற்றியின் முகவரி நீ !
கோபி பயிலரங்கம்
ஒரு ஊரில் ஒரு கையை இழந்திருந்த ஊனமுற்ற மனிதன் அவ்வூரில் குத்துச் சண்டை கற்பிக்கும் ஆசிரியரிடம் மாணவர்கள் பயிற்சி பெறுவதைக் காண்கிறான். தானும் குத்துச் சண்டை வீரனாக ஆசைப்படுகிறான் அந்த ‘ஒரு கை மனிதன்’. ஆசிரியரிடம் ஆசையைக் கூற அவனுக்கு ஆசிரியர் நடப்பு சாம்பியனை வெல்ல ஒரே ஒரு குத்து வித்தையை மட்டும் கற்றுத்தந்து களத்தில் மோதவிட்டார். போட்டி துவங்கியதும் ஒரு கை மனிதன் ஓங்கி ஒரு குத்தை நடப்பு சாம்பியன் மீது குத்த, அவனால் எழமுடியவில்லை. ஒரு கை மனிதன் வென்றான். இக்குத்திலிருந்து எதிராளி தப்பிக்க குத்தியவனின் மற்றொரு கையைப் பிடித்து திருகியிருந்தால் மட்டுமே முடியும். ஆனால், எங்கே திருகுவது? குத்தியவனுக்கோ இருப்பது ஒரு கை மட்டுமே. ஆசிரியர் எதிர்மறை என்ற ஊனத்தை நேர்மறையாக்கி வெல்ல வைத்தார்.
இன்றைய இளைய தலைமுறையும் இதுபோல தன்னிடமுள்ள குறையை நிறையாக மாற்றி தம் வாழ்வை மேம்படுத்திக் கொள்ள தன்னம்பிக்கை மாத இதழ் தனது விற்பனையில் ஒரு மைல்கல்லை அடைந்திருக்கும் கோபிசெட்டிபாளையத்தில் இலவச சுயமுன்னேற்றப் பயிலரங்கை நடத்த தீர்மானித்தது.
இதன்படி தன்னம்பிக்கை மாத இதழ், பசுமை நகராம் கோபியில் பல்துறை கல்வியை பல்லாண்டுகாலம் நாட்டின் எட்டுத்திக்கு மாணவ, மாணவியருக்கு திறமையான நிர்வாகிகளால் அனுபவ ஆசிரியர்களைக் கொண்டு கல்விக் கண்ணை ஊற்றாக வழங்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்கள், கோபியுடன் இணைந்து, கடந்த 20.08.2019 அன்று கல்லூரி கலையரங்கில் ‘வெற்றியின் முகவரி நீ’ என்ற தலைப்பில் சுயமுன்னேற்றப் பயிலரங்கை நடத்தியது.
பயிலரங்கில் கல்லூரி முதல்வர் டாக்டர் P.தங்கவேல் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். அவர் தம் உரையில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் Additional Director General of Police திரு. சந்தீப் ராய் ரத்தோர் IPS அவர்கள், மறைந்த பத்மஸ்ரீ M.P.நாச்சிமுத்து அவர்களின் மகளான திருமதி.C.லோகநாயகி, மருமகனும் நீல்கிரீஸ் நிறுவன முன்னாள் சேர்மனுமான திரு.M.செல்லையா, மகன் திரு.P.N.பாலசுந்தரம் ஆகியோரையும் கல்லுரியின் டிரஸ்டி திரு.K.R.கவியரசு, துணைமுதல்வர் டாக்டர்.S.பிரகாசம் உள்பட ஆசிரியர்கள், மாணவ, மாணவியர், தன்னம்பிக்கை மாத இதழின் மக்கள் தொடர்பு அலுவலர் திரு.M.நம்பிராஜன் ஆகியோரையும் தனித்தனியே வரவேற்றுப் பேசி சிறப்பான வரவேற்புரை நிகழ்த்தினார்.
மேலும் அவர் தம் உரையில் ADGP அவர்கள், புகழாரம் பெறும் மறைந்த பத்மஸ்ரீ M.P.நாச்சிமுத்து அவர்களின் சிறப்புக்களை குறித்துப் பேசினார்.
அடுத்து, தன்னம்பிக்கை மாத இதழின் மக்கள் தொடர்பு அலுவலர் திரு.M.நம்பிராஜன் விருந்தினர் அறிமுக உரையில், திரு. சந்தீப் ராய் ரத்தோர் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பைப் பின் வருமாறு கவிதை வடிவில் பேசினார்.
வாழ்க்கையில் படித்து முன்னுக்கு வந்தவர்கள் ஏராளமாய் உள்ளனர். ஆனால், வாழ்க்கையைப் படித்து முன்னுக்கு வந்தவர்கள் ஒரு சிலரே உள்ளனர். ஐயா அதில் நீங்களும் ஒருவர்.
உங்களுக்குப் பின்னால் காவலர்கள் அணிவகுப்பதைப் போலவே உங்கள் பெயருக்குப் பின்னால் பட்டங்களும், விருதுகளும் அணிவகுக்கின்றன. அழுகோ அழகு…
பன்முகத் திறமை கொண்ட தங்களைத் தேடித் தேடி விருதுகள் ஓடி வந்து என்னை ஏற்றுக்கொள் ஏற்றுக்கொள் என ஏங்கியல்லவா வந்துள்ளன.
மனிதர்களைப் பிடிக்கும் ஏழரைச்சனி அவர்கள் முன்னேற்றத்தைத் தடுக்கின்றது. ஆனால், தோல்வியே அறியா தொடர் வெற்றியாளராக உள்ள தங்களைக் கண்டால் குற்றவாளி போல் ஏழரைச்சனியும் ஓடியல்லவா ஒளிந்துள்ளது.
தேசத்தின் வருங்காலத்திடம் பாசத்துடன் அளாவிய பெருமகனார் மேதகு அப்துல்கலாம் அவர்கள். அவர் வழியில் கேட்டதும் சட்டென ஒப்புதல் கொடுத்து ‘வெற்றியின் முகவரி நீ’ என எழுச்சி உரை ஆற்ற உள்ள தங்களுக்கு என் பணிவான வாழ்த்துக்கள் ஐயா எனக் கூறி முடித்தார்.
அடுத்து M.நம்பிராஜன் அவர்கள் பத்மஸ்ரீ M.P.நாச்சிமுத்து அவர்களுக்கு கவிதை வடிவில் புகழாரம் சூட்டினார்.
நாடு போற்றும் நற்றமிழர் M.P.நாச்சிமுத்து ஐயாவை வணங்குகிறேன்.[hide]
பூமணமும், புத்துணர்வும் பொழுதுவரை தானிருக்கும் என்பதால் பாவோட்டும் கைத்தறி நெசவுக்கு புகழ் சேர்த்த அண்ணலுக்கு பாமாலை அணிவித்து புகழாரம் சூட்டுகின்றேன்.
மானம் தான் பெரிதென்று மனித இனம் கருதுவதால் ஊனுடம்பை மறைக்கின்ற உடையின்றி யார் இருப்பார்? அம்மானத்தை காக்கின்ற மகத்தான நெசவுதனில் மனதாரப் பாடுபட்டு… காலியக்கி…கையியக்கி… கச்சிதமாய் நூலியக்கி… கிடைக்கின்ற சொற்பக் கூலியிலே காலமெல்லாம் வாழ்வியக்கி கவலையிலே மெலிந்திருந்த கைத்தறி நெசவாளர் வாழ்வில் ஒளியேற்றிய கலங்கரை விளக்கமன்றோ நாச்சிமுத்து அவர்கள்.
கூட்டுறவாம் சென்டெக்ûஸ நிறுவி வளர்த்தெடுத்து சென்னிமலை நகருக்கு சிறப்புச் சேர்த்தவரே!.
பாரதத்தின் உயர் விருதாம் பத்மஸ்ரீ பெற்றவரே! தன் குடும்பத்திற்கு நேரம் தராமல் எந்நேரமும் கைத்தறிக்கு காவல் தந்தவரே!.
குஞ்சக் கயிறிழுத்த கைத்தறியாளருக்கு நெஞ்சக் கனவு நனவாக வாதிட்ட வழக்கறிஞரே!.
குண்டேந்தி பீரங்கி வந்தாலும் குன்றாத் துணிவோடு கைத்தறி உரிமைக்குப் போராடிய கைத்தறிக் காவலரே!.
உன் குடும்பமும், உன் பெயரும் பல்லாண்டு பல்லாண்டு பெருவாழ்வு வாழட்டும்! பல கோடி நூற்றாண்டு புகழோடு வாழட்டும்!! என்று கூறினார்.
மேலும் அவர், மத்திய அரசு ஆகஸ்ட் 7 ஆம் தேதியை ‘தேசிய கைத்தறி தினம்’ என அறிவிக்க முக்கிய காரணமாக இருந்தவர் நாச்சிமுத்து அவர்கள். மத்திய அரசால் கைத்தறி ரக ஒதுக்கீட்டுச் சட்டப்பிரிவு 3 (1) ன் படி இந்திய அரசின் துணி நூல் அமைச்சகத்தில் இருந்து வெளியிடப்பட்ட ஆணையின் படி கைத்தறியில் மட்டுமே நெசவு செய்ய வேண்டும் என பதினொரு ரகங்களை அறிவிக்க முக்கியக் காரணமாக இருந்தவர் நாச்சிமுத்து அவர்கள். மேலும் நாச்சிமுத்து அவர்கள் பல பொறுப்புகளையும் பொதுநலச் சேவைகளையும் திறம்பட ஆற்றியுள்ளார் எனக் கூறினார்.
அடுத்து நாச்சிமுத்து அவர்களின் மருமகனும், நீல்கிரீஸ் முன்னாள் சேர்மனுமான திரு.M.செல்லையா அவர்கள், நாச்சிமுத்து அவர்களின் மருமகன் என தன்னை பெருமையாகக் கூறியதோடு, நீல்கிரீஸ் நிறுவனத்தை தனது தந்தை வெற்றிகரமாக நடத்தியதைக் குறித்துப் பேசினார்.
அடுத்து பயிலரங்கின் நாயகர் திரு. சந்தீப் ராய் ரத்தோர் அவர்கள் தன் எழுச்சி உரையில் மாணவ, மாணவியர் இந்தியப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் குறித்து தங்களின் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அத்தோடு நில்லாமல் இந்தியப் பொருளாதார மேம்பாட்டிற்கு நம்மால் ஆன பணிகளைச் செய்ய வேண்டும். இன்று வேலை தேடி அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு இந்தியர் செல்கின்ற நிலைமாறி புதுப்புது தொழில்நுட்ப முன்னேற்றம் காரணமாக வருங்காலத்தில் இந்தியாவில் வேலைவாய்பு அதிகமாகும். ஆகவே, மாணவர்கள் எந்தெந்த துறை எதிர்காலத்தில் வேலைவாய்ப்பைக் கொடுக்கும் ; எந்தத் துறையில் சாதனைகள் புரிய முடியும் என்பதை கவனித்து தங்கள் இலக்கைத் தீர்மானிக்க வேண்டும்.
அடுத்ததாக இந்தியாவின் பொது சுகாதாரம் தொடர்பான முன்னேற்றங்கள் பிரம்மாண்டமாக இருக்கும். மனிதர்கள் வெளியேற்றும் கழிவுகளை ஆராய கழிவறையில் சிப்கள் பொருத்தப்பட்டு இருக்கும். அச்சிப்கள் உடனுக்குடன் அவர் உடல்நிலையை ஆராய்ந்து அவருடைய குடும்ப மருத்துவருக்கு தகவலை அனுப்பும். அதைப் பார்க்கும் மருத்துவர், அம்மனிதனின் உடலில் உள்ள நோய்களை அறிந்து அதற்கான மருந்துகளை கம்யூட்டரில் பதிவு செய்வார். கம்யூட்டர் அதை மருந்தகத்திற்கு அனுப்பி மருந்துகளை பழ்ர்ய்ங் மூலமாக அவர் வீட்டிற்கே அனுப்பும். இது போன்ற தொழில் நுட்பங்கள் தற்போது பரிச்சாத்தமாக அமெரிக்காவில் செயல்படுகிறது. இன்னும் சில ஆண்டுகளில் இது இந்தியாவில் செயல்பட வாய்ப்புண்டு. ஆகவே இது போன்ற துறைகளில் கவனம் செலுத்திப் படித்தால் வருங்காலத்தில் மிகப்பெரிய முன்னேற்றத்தை வேலைவாய்ப்பில் அடையலாம்.
அடுத்தாக நமது செல்போன் தொழில் நுட்பம் பல மடங்கு அதிகரிக்கும். செல்பேன் நமது மனதில் சிந்திக்கக்கூடிய விஷயங்களைப் புரிந்து கொண்டு எல்லா பணிகளையும் செய்து முடிக்கும். இத்துறையில் வேலைவாய்ப்பு பிரகாசமாக உண்டாகக்கூடும். போக்குவரத்திலும் பிரமிக்க வைக்கும் முன்னேற்றம் காணலாம்.
மாணவ, மாணவியர் திரு. சந்தீப் ராய் ரத்தோர் உரையை மிகவும் ஆவலாக கேட்டிருக்க, அடுத்து அவர் மாணவர் மத்தியில் கேள்வி பதிலாக சாதனை இந்தியர்களான இந்திராநூயி, சுந்தர்பிச்சை, சத்யநடேலா ஆகியோர் கடந்து வந்த பாதைகளை விளக்கிக்கூறி தன்னம்பிக்கையை ஊட்டினார்.
இலன்மஸ்க் என்பவரின் திட்டங்கள் உலகில் தேவையான நல்ல மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும். இது போன்ற துறையில் மாணவ, மாணவியர் சேர்ந்து பயனடைய தங்களை தயார் செய்து கொண்டு வெற்றியின் முகவரியாக நீங்கள் திகழ என் வாழ்த்துக்கள் எனக்கூறி தன் உரையை நிறைவு செய்தார்.
முடிவாக திரு.N.சுகுமார் ASP/Chemistry/SVHEC அவர்கள் நன்றி உரை நிகழ்த்த பயிலரங்கம் இனிதே நிறைவு பெற்றது.[/hide]
இந்த இதழை மேலும்
0 comments Posted in Articles