– 2018 – October | தன்னம்பிக்கை

Home » 2018 » October

 
  • Categories


  • Archives


    Follow us on

    Betfair On-line On Line Casino Evaluation

    Betfair On-line On Line Casino Evaluation

    We advise you to learn these rigorously as they contain essential info. The more Tier Points you earn, the farther alongside you advance in the loyalty scheme. You’ll begin at the Iron level and can go all the way up to the Platinum stage. Like every respectful on line casino operator, Betfair’s VIP program entails special methods to change ranges. Here you should gather Betfair points, which can elevate you to the next place on the loyalty ladder. Betfair has one of many highest RTP percentages within the enterprise. .

    In our Betfair Casino review, we cowl every little thing you should know concerning the on-line casino. Our reviewers often register at new casinos, so we are nicely conscious of all the little titbits that gamblers have to check before depositing their money. You can discover a clear clarification in regards to the bonus system, an in depth overview of the extensive game catalogue, and all the information about the firm.

    Any web losses incurred during that period might be subject to a full refund from Betfair – up to $200. Make certain you keep up to date with the latest model for one of the best experience. You should be 18 or older and have a legitimate Betfair account to use this app. Its commitment to offering players with all the information they need about every game on the positioning is especially laudable. Gamers involved chiefly with the value of recent customer enroll provides will find some opponents are extra beneficiant than Betfair Casino in this regard. One area during which Betfair Casino does stand out is that of jackpots, with a wealth of various progressive jackpots rising before your eyes on the devoted “Jackpots” tab.

    The software for the Live Casino is as soon as once more provided by Playtech and the dealers are very friendly, professional and welcoming for model spanking new players. Most gaming providers have made their services cellular or are heading in that course. It is unsurprising as people spend extra time accessing the web from their cellular system than from a desktop or laptop computer.

    தன்னம்பிக்கை அலுவலகத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்ட ஆயுதபூஜை

    கமலம் கந்தசாமி, செந்தில் நடேசன், கலைசெல்வி செந்தில், சுரேஷ், சசி, விக்ரம், மிருதுளா ,
    செல்வகுமார், விஷ்ணுபிரியா, சங்கீத் பிரசாத், அபர்ணா, அருள்தேவி, விஜயகுமார், விஜயலட்சுமி,
    தனலட்சுமி, சிவராமலட்சுமி, மீனா

    சின்ன சின்ன மாற்றங்கள் பெரியமாறுதல்கள்

    – திருமதி. பிரியா செந்தில்

    மாற்றங்களையும் மாறுதல்களையும் ஏற்றுக் கொள்ள நாம் என்றும் தயாராகவே இருக்கிறோம்.. நாம் உண்ணும் உணவில் மாற்றம், உடுத்தும் உடையில் மாற்றம் பேசும் மொழியில் மாற்றம், கற்கும் கல்வியில் மாற்றம் காணும் விதத்தில் மாற்றம், கேட்கும் விதத்தில் மாற்றம்…

    பல மாற்றங்களுக்கு உட்படுத்திக் கொண்ட நாம் ஏன் பேசும் விதம் மற்றும் வார்த்தைகளில் சில மாற்றங்களை நாம் ஏன் கொண்டு வரக்கூடாது? நாம் பேசும் வார்த்தைகளில் ஒரு சிலமாற்றத்தை கொண்டு வருவதன் மூலம் நம்வாழ்க்கையில், நம் அணுகுமுறையில், நம் கனவுகளில், நம் குழந்தைகளிடத்தில், நம் குடும்பத்தில் பெரியமாறு தலைகொண்டு வரமுடியும்.

    இது எப்படி சாத்தியம்?உதாரணத்திற்கு நம்மில் பலர் சொல்ல கேட்டிருக்கிறோம். எனக்கு office-ல Problem,  Business-ல Problem, Personal life-ல Problem, இப்படி சொல்வதால் நம் மனம் மற்றும் மூளை இரண்டும் அந்த பிரச்சனையை பற்றியே வட்டமிடுமே ஒழிய, அதற்கு தீர்வை யோசிக்க முடியாது அந்த விஷயத்துலயே உழன்று கொண்டு இருக்கும் ஆக அதற்கு தீர்வுகாண்பது என்பது நம் ஆழ்மனதின் சக்தியில் உள்ளது. நம் ஆழ்மனதில் உள்ளசக்தியை வெளிகொண்டுவந்து அதை செயல்படுத்த நம்மிடம் உள்ள ஆயுதம் வார்த்தைகள் Problem என்பதை Challenge என்று கூறிப்பாருங்கள். இந்த சொல் பாசிட்டிவ் எனர்ஜியை கொடுக்கும். மனதை வலுப்படுத்தும்.  தீர்வுகாண ஒரு மனதைரியத்தை கொடுக்கும்.

    உங்கள் கேள்வி எனக்கு புரிகிறது. வார்த்தைகளை மாற்றுவதன் மூலம் நம்வாழ்க்கையை மாற்றிவிடலாம். ஆம்மாற்றத்திற்கான ஆரம்பமாக நிச்சயம் இருக்கும். வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடுத்து பேசுவதால் நம் ஆழ்மனதில் சக்தியை ஆக்கப்பூர்வமாக மாற்றவும் முடியும்; மேம்படுத்தவும் முடியும்; மனதை நாம் சொன்னபடி கேட்கவைக்கும் முடியும். ஏனெனில் நம் மூளைக்கு எது நல்லது எது கெட்டது என்று பிரித்து பார்க்கும் சக்தி இல்லை. நாம் என்ன சொல்கிறோமோ அதை அப்படியே கேட்கும். கேட்டுநடக்கும் அறிவியலும் உளவியலும் இப்படி இருக்கும் போது நாம் ஏன் இந்த மாற்றத்தை கொண்டுவர கூடாது?

    வார்த்தைகளை உணர்ந்து பேசுங்கள் அவையே எண்ணங்களாக மாறும். எண்ணங்களே செயல்வடிவம் பெரும். நாம்செய்யும் செயல்களே நம்வெற்றிக்கு வழிவகுக்கும்.

    பேசும் போது கவனித்து பேசுங்கள் உணர்ந்து பேசுங்கள் ஆத்மார்த்தமாக பேசுங்கள் அளப்பரியசக்தி பெறுங்கள். 

    எண்ணம் போல் வாழ்வு!

    திருமுறை கண்ட சோழன் பேரரசர் ராஜராஜன் 1033-வது பிறந்த நாள் சதய திருவிழா

    எதிர்வரும் அக்டோபர் 20-ம் நாள் ஐப்பசி திங்கள் 3-ம் தேதி சனிக்கிழமை மாமன்னர் இராஜராஜ சோழனின் 1033-வது பிறந்த நாள் விழா விவேகானந்தர் நற்பணி மன்றம் – தமிழ் வளர்ச்சிப் பிரிவு சார்பாக சிறப்புடன் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. நிகழ்வின் ஒரு பகுதியாக வரும் 15.10.2018 திங்கட்கிழமை கல்லூரி மாணவ மாணவியருக்காக பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பேச்சு போட்டிக்கான தலைப்புகள்

    1. சங்க தமிழ் காட்டும் சமாதன நெறி
    2. ஆழ்வார்கள் வளர்த்த தமிழ்
    3. நாயன்மார்கள் வளர்த்த தமிழ்
    4. தமிழ் வளர்த்த தேசியம்
    5. விவேகானந்தரும் தமிழகமும்
    6. அறிவியலும் தமிழும்
    7. இராஜராஜ சோழனின் பன்முக தன்மை

    கட்டுரைப்போட்டி தலைப்புகள்

    1. மாமன்னர் இராஜராஜன்
    2. இராஜராஜ சோழனின் பன்முக தன்மை
    3. கம்பர், வள்ளுவர் காட்டும் சமயநெறி
    4. பாரதியின் பார்வையில் தமிழ்
    5. இயல், இசை, நாடகம், அறிவியல், தமிழ்

    நாள்: 15.10.2018 திங்கட்கிழமை நேரம்: முற்பகல் 11.00 மணி

    இடம்: மாரியம்மாள் மகாலிங்கம் அரங்கம்

    கல்லூரி வளாகம், பொள்ளாச்சி

    நிகழ்ச்சியில் பங்கேற்க விழையும் பொள்ளாச்சி பகுதி கல்லூரி மாணவ, மாணவியர் மேலும் விபரங்களுக்கு கீழ்காணும் எண்களில் தொடர்பு கொள்ளவும், கட்டுரைப் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் தங்களது படைப்புகளை மேற்கண்ட அரங்க வளாகத்தில் சமர்ப்பிக்கவும்.

    • தமிழ் பணியில்

    சுவாமி விவேகானந்தவர் நற்பணி மன்றம்

    அழைக்கவும் 94894 28074, 93621 38074, 96552 91575

    Sport Betting

    Sport Betting

    Shell did a pull back to assist, it’s now above the 200 ma line when you purchase it and set stoploss, just under previous low, you get a risk/reward of 1/1.3 good to purchase. We did not end up profitable something worth withdrawing, different websites documenting BetGuardian experiences reveal that the guide has a great popularity for getting punters their money. Things obtained higher when we went through the desktop web version of BetGuardian. If this route is taken, the guide accepts Person to Person transfers, financial institution wires, Neteller, Click2Pay, Ukash, and others. Dealing with American punters means that monetary restrictions might be in place for BetGuardian. While you must know this before dipping in, it actually isn’t a foul mark in opposition to the site. Through the app, we were in a position to deposit using our Visa card solely. .

    Sorry you cannot access this sportsbook as a result of state restrictions. Based on earlier break and pullback to help, it is a good moment to buy once more. A clear previous break of the 4h chart of resistance, then back to that resistance and set assist, now up again in direction of earlier high, with a possible break off. Here we see a pleasant assist zone, hit 3x instances and we had a nice positive candlestick 2 days in the past.

    And when you do, it often will get put to bed swiftly and effectively. BetGuardian is a leisure book and that’s the sort of participant they focus on. BetGuardian has everything that you just need for day-to-day betting they usually have one of many bigger bonuses in the industry to boot. It’s an general strong store and is really helpful for an excellent betting experience.

    Read our BetGuardian sportsbook evaluate below & learn about this top notch sportsbook. We purpose to earn your trust so that you’ll proceed rely on us for all of your sports betting needs. All major US sports activities are properly and actually lined as you would expect. Soccer is a rising marketplace for US books as with longer seasons it’s available most of the 12 months spherical and BetGuardian have all the most important leagues lined.

    Overall, our impression of this software is that it is first rate, but lacks the options and bets which are contained on Betguardian’s main website. Just as in the case of JustBet, future or prop bets are missing, which was an actual shame for us. Some of our favourite types of bets are the props, and being unable to bet on the winner of the Stanley Cup or Superbowl was a big ding for us. This is a problem that could be resolved if BetGuardian wishes, and we actually hope that’s the case. Using the identical software suite as other Costa Rica based books similar to JustBet, we are able to honestly say that we’ve seen this pony earlier than. The software program itself is nice enough, however lacks the polish we have seen from different sportsbooks such as Bovada or Bookmaker.eu. Each bonus additionally comes with Wager Warranty (which is two 10% free plays twice a year based mostly in your net losses of every six-month period) and a 10% casino chip bonus as nicely.

    புதியதோர் கண்டுபிடிப்பு புற்றுநோயாளிகளுக்கு அர்ப்பணிப்பு

    ஜேம்ஸ் ஆலிசன், டசுகு ஹோஞ்சோ

    மருத்துவத் துறை

    2018 ஆம் ஆண்டிற்கான

    நோபல் பரிசு பெற்றவர்கள்

     

    நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

    வாய்நாடி வாய்ப்பச் செயல்

    என்ற குறளில் வள்ளுவர் நோயின் தன்மையை ஆராய்ந்து, அந்நோயின் காரணத்தை ஆராய்ந்து, அதைத் தீர்க்கும் வழியை ஆராய்ந்து, உடலுக்கேற்ப மருத்துவம் செய்ய வேண்டும், அதுவே சிறந்த மருத்துவரின் கடமை எனக் குறிப்பிட்டுள்ளார். இதை தற்போது மருத்துவத் துறையில் நிகழ்த்திகாட்டியிருக்கிறார்கள் இருவர்.

    உலகளவில் பெரிதும் மதித்துப் போற்றப்படும் பரிசு நோபல் பரிசாகும். தலை சிறந்த ஆய்வு மேற்கொண்டதற்கும், இச்சமுதாயத்திற்கு பெரிதும் மாற்றம் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிசார் கண்டுப்பிடிப்பவர்களைப் போற்றும்  விதமாக இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.

    இவ்விருது உலகின் தலைசிறந்த விருது என்பதால் கண்டுபிடிப்பாளர்களுக்கும், ஆய்வாளர்களுக்கும் இது ஒரு இலட்சிய விருது என்று சொன்னால் அது மிகையாகாது. ஆனால் எல்லா ஆண்டும் இவ்விருது வழங்கப்படவில்லை. விருதுக்குத் தேர்ந்தெடுத்தவர்களும் இவ்விருதை வாங்க மறுத்திருக்கிறார்கள். இதுபோன்ற எத்தனையோ சுவாரசியங்கள் நிறைந்து இருக்கிறது. அந்த வகையில் மருத்துவத்துறையில் இந்த ஆண்டிற்கான விருதை அமெரிக்காவை சேர்ந்த ஜேம்ஸ் ஆலிசன் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த டசுகு ஹோஞ்சோ அவர்கள் பரிசைப் பெற்று சாதித்திருக்கிறார்கள்.

    நோபல் பரிசு உருவாக்கிய விதம்

    ஆல்ஃபிரட் நோபல் சுவீடனிலுள்ள ஸ்டாக்ஹோம் என்ற நகரில் பொறியாளர் பின்னணியுடைய குடும்பத்தில் பிறந்தார். இவர் சின்ன வயதிலேயே பன்முகத்திறமைக் கொண்டவராக விளங்கினார். அதிலும் குறிப்பாக இராணுவம் பயன்படுத்தும் ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் தொடர்பான கண்டுபிடிப்புகளும் அடங்கும். மேலும் வேதியியலாளர், பொறியியலாளர், ஆயுதத் தயாரிப்பாளராகவும் இருந்தார். மேலும் போபர்ஸ் ஆயுத உற்பத்தி நிறுவனத்தின் உரிமையாளராகவும் இருந்தார்.  இவர் 350க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித் துள்ளார்.

    ஒரு நாள் புகழ் பெற்ற பிரெஞ்ச் செய்தித்தாளில் மரண வியபாரி இறந்துவிட்டார் என்ற தலைப்பில் நோபல் இறந்ததாக செய்தி வந்தது. அச்செய்தியைப் பார்த்த நோபல் அதிர்ந்து போனார். ஆனால் அன்று இறந்தது அவரின் சகோதரர். பெயரையும் படத்தையும் தவறாகச் சித்தரித்து வெளியிட்டது. ஆனால் அந்தச் செய்தி அவரை பெரிதும் சிந்திக்க வைத்தது. மரணத்திற்குப் பின்னர் தன்னை எவ்வாறு சித்தரிப்பார்கள் என்பதை மரணத்திற்கு முன்னே அறிந்து கொண்ட நோபல் தான் இறந்த பின்னர் தன்னை மதிக்க வேண்டும் என்று யோசித்து நோபல் பரிசு என்னும் விருதை உருவாக்கினார்.

    இவ்விருது எல்லாத்துறைகளுக்கும் வழங்காமல் மனித இனம் முன்னேற்றத்திற்கு எந்தெந்த துறைகள் பயனுள்ளதாக இருக்கிறதோ அதையெல்லாம் ஒன்று சேர்த்து வழங்கப்பட வேண்டும் என்று உயிலில் எழுதினார். அந்த வகையில்

    இயற்பியல்

    வேதியியல்

    மருத்துவம்

    இலக்கியம்

    அமைதி

    என ஐந்து துறைகளில் பரிசு வழங்கலாம் என்றும் அதற்கு தன்னுடைய சொத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று உயிலில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் அதன்பிறகு பொருளாதாரத்துறைக்கும் இவ்விருது வழங்கப்படலாம் என்றும் முடிவெடுத்தது. அதன் பிறகு வேறு எந்த புது துறைக்கும் விருதுகள் வழங்கப் போவதில்லை என்று  நோபல் அறக்கட்டளை முடிவெடுத்தது. அவரின் சொல்லின் படி நோபலின் நினைவு தினமான டிசம்பர் 10 தேதி அன்று ஸ்டாக்ஹோமில் நடக்கும் நிகழ்ச்சியில் இவ்விருது வழங்கப்படும். இவ்விருதின் மதிப்பு ரூ. 8 கோடி ஆகும்.

    நோபல் பரிசு வென்ற தமிழர்கள்:

    1930 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான பரிசை சர்.சி. இராமன் அவர்கள் பெற்றார்.

    1983 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான பரிசை சுப்பிரமணியன் சந்திரசேகர் அவர்கள் பெற்றார்.

    2009 ஆம் ஆண்டு வேதியியலுக்கான பரிசை வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் அவர்கள் பெற்றார்.

    நோபல் பரிசு வென்ற இந்தியர்கள்

    இரவீந்திரநாத் தாகூர் இலக்கியத்திற்கும், அன்னைதெரசா, கைலாஷ் சத்தியார்த்தி ஆகியோர் அமைதிக்கான பரிசைப் பெற்றவர்கள்.

    ஜேம்ஸ் ஆலிசன் :

    அமெரிக்காவைச் சேர்ந்த இவர் தற்போது எம்.டி ஆண்டர்ஸன் புற்றுநோய் மைய இயக்குநராக இருக்கிறார். புற்றுநோய் சிகிச்சையில் இவர் ஆற்றிய பங்களிப்புக்கு 10 க்கும் மேற்பட்ட விருதுகள் பெற்று இருக்கிறார். இவரின் மனைவி பத்மானி சர்மா இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். இவர் கயானா நாட்டில் பிறந்தவர். இவரும் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தந்தை இந்தியர், தாயார் கயானா. பத்மானி அவர்கள் சின்ன வயதிலேயே கயானாவிலிருந்து அமெரிக்காவிற்கு சென்று விட்டார்கள்.

    ஜேம்ஸ் ஆலிசனின் தாயார் மற்றும் இவரது இரண்டு மாமாக்கள் ஆகியோர் புற்றுநோயால் மரணம் அடைந்தவர்கள். எவ்வளவு போராடியும் இவர்களைக் காப்பாற்ற முடியவில்லை அதுவே இவரின் சாதனைக்கு மூலக்காரணமாக அமைந்தது என்று சொல்லலாம். அதன் பிறகு புற்றுநோய் பற்றிய ஆராய்ச்சியை அதிகப்படுத்திக் கொண்டார்.

    நோபல் பரிசு அக்டோபர் 1 ஆம் நாள் இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு அறிவிக்கப்பட்டது. அப்போது அமெரிக்காவில் இரவு நேரம். பரிசு  அறிவித்தவுடன் சிலர் அவரைத் தொடர்பு கொள்ள முனைந்தார்கள். ஆனால் அவரின் தொலைபேசி எண் கிடைக்கவில்லை. இதனால் அவரின் மகனிற்கு அழைத்து விருது கிடைத்தது பற்றி சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அந்நேரம் நடு இரவு என்பதால் செய்திதை உடனே சொல்ல முடியவில்லை. அதன் பிறகு தொலைக்காட்சி செய்தியைப் பார்த்து தான் தெரிந்து கொண்டுள்ளார்.

    இவர் பல வருடங்கள் அல்லும் பகலும் அயராது ஆய்வு செய்து நோய் எதிர்ப்பு சக்தியைப் பற்றிய இவ்வாய்வை மேற்கொண்டு தற்போது சாதித்துள்ளார்.

    டசுகு ஹோஞ்சோ:

    ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர். நோய் எதிர்ப்புத்துறை வல்லுநரான இவர், அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாதெமியின் வெளிநாட்டு உறுப்பினராக இருந்தவர். 2017 ஆம் ஆண்டு முதல் இவர் ஜப்பானிலுள்ள கியோட்டோ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றி வருகிறார்.[hide]

    புற்றுநோய்

    மனித உடலுக்கு அடிப்படையாக உள்ள உயிரணுக்களைப் பாதிக்கும் நோயைத்ததான் புற்றுநோய் என்கிறோம். இப்புற்று நோய்க்கு ஆண்டுதோறும் இலட்சக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர். மனித வாழ்க்கைக்கு இந்நோய் பெரும் சவாலாகவே இருக்கிறது. காரணம் இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது என்பது தான். 200  வகையான புற்று நோய்கள் இருக்கிறது. பரம்பரை வழியாக வரும் புற்று நோய்கள் வெறும் 3% மட்டுமே, மீதி 97% நாம் வாழும் வாழ்க்கை  முறையில் தான் இருக்கிறது. புற்று நோய் என்றாலே மரணம் தான் என்ற நிலையில் இத்தகைய கண்டுபிடிப்பு மனதிற்கு ஒரு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

    இருவரின் கண்டுபிடிப்புகள் பற்றி:

    ஜேம்ஸ் ஆலிசன், டசுகு ஹோஞ்சோ இருவரின் கண்டுபிடிப்புகளும் புற்றுநோய் சம்பந்தமானது. மனித உடலில் நேரடியாக அணுக்களை அழிக்கும் சிகிச்சை முறைக்கு மாற்றாக, நமது உடலில் இயற்கையாக அமைந்துள்ள நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டே அந்த அணுக்களை அழிப்பதற்கான சிகிச்சை முறையை உருவாக்கியுள்ளார்கள்.

    1995 ஆம் ஆண்டு மனித உடலின் நோய் எதிர்ப்பு செயல்பாடுகளுக்கு தடை விசை போல் செயல்படும் மிக முக்கியமான மூலக்கூறு ஒன்றை ஆலிசன் முதலில் கண்டறிந்தார். இரத்ததின் வெள்ளைஅணுக்களில் உள்ள சிடிஎல்ஏ 4 என்ற மூலக்கூறுதான் இதற்குத் தடை விசையாக இயங்குகிறது என்பதை அவர் கண்டறிந்தார்.

    இதைப் போலவே, நோய் எதிர்ப்பு அணுக்களில் உள்ள பி.டி.1 என்ற புரதமும் எதிர்ப்பு செயல்பாடுகளுக்கான தடை விசைகளாகப் பயன்படுகின்றன என்பதை ஏறத்தாழ அதே ஆண்டில் டசுகு ஹோஞ்சோ கண்டறிந்தார்.

    இந்த இருவரின் கண்டுபிடிப்பை அடிப்படையாகக் கொண்டு புற்று நோய் அணுக்களைக் கொல்லும் மருந்துகள் உருவாக்கப்பட்டது.

    கண்டுபிடிப்பின் மகத்துவம் :

    ஜேம்ஸ் ஆலிசன், டசுகு ஹோஞ்சோ ஆகியோர் புற்று நோய்க்கான புதிய சிகிச்சை என்னவென்றால் இவ்வளவு காலம் தடுப்பூசிகள் மூலம் அனுப்பி புற்று நோய்க்குச் சிகிச்சை அளிக்க  முடியும் என்ற நிலையிருந்தது.

    இந்நிலைக்கு அடுத்த நிலையாக சென்று, இயல்பாகவே நமது  உடலில் இருக்கும் தடுப்பு மண்டலத்திலிருலுந்து குறிப்பிட்ட புரத மூலக்கூறு ஒன்றை வெளியேறச் செய்தால், அது புற்றுநோய் செல்களைச் சென்றடைந்து அவற்றை அழித்து விடுகிறது என்பது தான் இவர்களின் புதிய கண்டுபிடிப்பு.

    ஜேம்ஸ் ஆலிசன் ஒரு புரத மூலக்கூறு மூலம் புற்றுநோய் செல்களை அழிக்க முடியும் என்ற அடிப்படை அறிவியல் கருத்தை முதலில் கண்டுபிடித்தார். இவரின் கண்டுபிடித்துள்ள தியரிக்கு தணிக்கைப் புள்ளி தியரி இதை ஆங்கிலத்தில் இட்ங்ஸ்ரீந்ல்ர்ண்ய்ற் ற்ட்ங்ர்ழ்ஹ் என்பர்.

    அத்தியரியை நிரூபிக்கும் விதமாக டசுகு ஹோஞ்சோ அந்தப் புரத மூலக்கூற்றை நம் உடலின் தடுப்பு மண்டலத்திலேயே வெளியேற்றுவது என்பதையும், அது எவ்வாறு புற்றுநோய் செல்களை வளர்வதைத் தடுக்கிறது என்பதையும் மொத்தத்தில் சொல்ல வேண்டுமென்றால் ஒரு வகை புற்றுநோய் கட்டியை எவ்வாறு தடுத்த நிறுத்த முடியும் என்பதைக் கண்டறிந்து வெற்றி பெற்றுள்ளார்.

    இக்கண்டுபிடிப்புகளின் மூலம் புற்றுநோய் சிகிச்சையில் புதிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. இதுவரை புற்று நோய் செல்களை அழிக்க செயற்கைப் புரதங்களை அனுப்பும் வழிதான் இருந்தது. ஆனால் தற்போது உடலில் இயற்கைப் புரதங்களைப் பயன்படுத்தி புற்றுநோய் செல்களை அழிக்க முடியும் என்பது தெளிவாகியுள்ளது. இனி வரும் புற்று நோய் கண்டுபிடிப்புகளுக்கு இவ்வாராய்ச்சி ஒரு வழிகாட்டியாக இருக்கும் என்பதில் எவ்வித மாற்றமும் இல்லை.

    இத்தகைய சரித்திர சாதனை நிகழ்த்திய ஜேம்ஸ் ஆலிசன், டசுகு ஹோஞ்சோ ஆகியோர் இவருரையும் வாழ்த்துவதில் தன்னம்பிக்கை மாத இதழ் பெருமை கொள்கிறது.[/hide]

    இந்த இதழை மேலும்

    வெற்றி உங்கள் கையில் – 58

    நமக்குள் ஓர் ஆயுதம்

    அவர் ஒரு மிகச்சிறந்த குரு.

    அவரிடம் பலர் சீடர்களாக இருந்தனர்.

    குருவுக்கு அழகில் சிறந்த ஒரு மகள் இருந்தாள். அந்தப் பேரழகிக்கு திருமணம் செய்ய முடிவு செய்தார் குரு.

    திருமண ஏற்பாடுகளை குரு செய்துகொண்டிருந்தபோது, அந்தப் பேரழகியை மணம் முடிக்க ஏராளமானபேர் முன்வந்தார்கள். “இவர்களில் யாரைத் மணமகனாகத் தேர்வு செய்வது?” என்பதில் குருவுக்கு குழப்பம் ஏற்பட்டது.

    “ஏதாவது ஒரு போட்டிவைத்து, அந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தனது மகளை திருமணம் செய்து கொடுக்கலாம்” என்று அவர் முடிவு செய்தார்.

    “என்ன போட்டி வைக்கலாம்?” என்று முடிவு செய்வதற்குள் அவர் குழம்பிப்போனார். முடிவில், போட்டியாளர்கள் அனைவரையும் ஒரே இடத்திற்கு அழைத்தார்.

    “என் மகளை திருமணம் செய்ய நீங்கள் எல்லோரும் ஆசைப்படுகிறீர்கள். உங்களுக்கு நான் ஒரு போட்டி வைக்கப்போகிறேன். போட்டி மிக எளிதான ஒன்றுதான். உங்கள் அனைவரிடமும் இரண்டு கேள்விகள் கேட்பேன். அந்த இரண்டு கேள்விகளுக்கும் சரியான பதிலை சொல்பவர்களுக்கு எனது மகளை மணம் முடித்துத் தருவேன்” என்றார் குரு.

    “போட்டி எப்படி அமையும்? என்பதை நாளை உங்களுக்குத் தெரிவிப்பேன். இன்று நீங்கள் போகலாம். விருப்பப்பட்டவர்கள் போட்டியில் கலந்துகொள்ளலாம்” என்றும் சொன்னார்.

    குருவின் அறிவிப்பைக் கேட்ட இளைஞர்கள், அடுத்தநாள் குருவின் வீட்டின்முன்பு பெருங்கூட்டமாகக் கூடினார்கள். குரு அந்தக் கூட்டத்தினரைப் பார்த்து, முதல் கேள்வியைச் சொன்னார்.

    “இந்த உலகத்தில் மிகவும் இனிமையான பொருள் எது? அந்தப் பொருளை நாளைக்கு நீங்கள் இங்கே கொண்டு வாருங்கள்” என்றார்.

    மறுநாள், சிலர் இனிக்கும் கரும்போடு வந்தார்கள். வேறுசிலர், அதிகமாய் இனிக்கும் சர்க்கரையோடு வந்து நின்றார்கள். இன்னும்சிலர், இனிப்புப் பலகாரங்களைக் கொண்டுவந்து ‘இதுதான் இனிப்பான பொருள்’ என்று சொன்னார்கள். வேறுசிலர், தேனைக் கொண்டு வந்தார்கள். ஆனால், வந்திருந்த கூட்டத்தில் ஒரேயொரு இளைஞன் மட்டும் மூடப்பட்ட ஒரு சிறு பெட்டியோடு வந்து நின்றான். அவன் குருவின் சீடர்களில் மிக ஏழ்மையான சீடன்.

    குரு அவனைப் பார்த்து ஆச்சரியப்பட்டார்.

    “நீயும் இந்தப் போட்டிக்கு வந்திருக்கிறாயே? உனக்கு என்ன தகுதி இருக்கிறது?” – என்று கேட்டார்.

    “குருவே… நான் உங்கள் மகளை அதிகம் விரும்புகிறேன். அவளைக் காதலித்து வருகிறேன். அதனால்தான், போட்டியில் கலந்துகொண்டேன்” என்றான்.[hide]

    “நீ இந்தப் பெட்டியில் இனிமையான பொருளை கொண்டு வந்திருக்கிறாயா?” – என கேட்டார் குரு.

    “ஆமாம்” என்றுசொல்லிக்கொண்டே பெட்டியைத் திறந்தான் சீடன்.

    பெட்டியினுள் இருந்த பொருளைப் பார்த்து திகைத்து, திடுக்கிட்டுப் போனார் குரு. அந்தப் பெட்டிக்குள் ஒரு ஆட்டின் நாக்கு மட்டும் இருந்தது.

    “இந்த ஆட்டின் நாக்கை ஏன் இங்கே கொண்டு வந்திருக்கிறாய்?” என்று குரு கேட்டார்.

    “இந்த உலகத்திலேயே இனிமையான பொருளை கொண்டுவரச் சொன்னீர்கள். உலகிலேயே இனிமையான நல்ல பொருள் நாக்குதான். மனிதனின் நாக்கை வெட்டி எடுத்து வர முடியவில்லை. அதன் அடையாளமாக ஒரு ஆட்டின் நாக்கை வெட்டிக் கொண்டு வந்திருக்கிறேன். இந்த நாக்குதான் பல அற்புதங்களைச் செய்கிறது. நாக்கிலிருந்துவரும் இனிமையான சொற்கள்தான் நோயாளியை உற்சாகப்படுத்துகிறது. வாடி, வருத்தத்தில் இருப்பவர்களுக்குக்கூட வாழ வழி சொல்கிறது. இனிமையையும், மனநிறைவையும் மற்றவர்களுக்கும் தருகிறது. எனவே, உலகத்தில் இனிமையான பொருள் நாக்குதான்” என்றான் சீடன்.

    போட்டியில் கலந்துகொண்டவர்களை அழைத்து, குரு இரண்டாவது கேள்வியைச் சொன்னார்.

    “இந்த உலகத்தில் கசப்பான பொருள் எது? என்பதை கண்டுபிடித்துக்கொண்டு நாளை இங்கே வாருங்கள்” என்று கூறினார்.

    மறுநாள் வந்த போட்டியாளர்களில் சிலர் வேப்பங்காயைக் கொண்டுவந்தார்கள். இன்னும்சிலர் கடுக்காய் கொண்டுவந்தார்கள். வேறுசிலர் எட்டிக்காயைக் கொண்டுவந்து காட்டினார்கள். ஆனால், அந்த ஏழை சீடன் மட்டும், முதல்நாள் கொண்டுவந்த பெட்டியைத் திறந்து மீண்டும் காட்டினான். அந்தப் பெட்டிக்குள் அதே ஆட்டின் நாக்கு இருந்தது.

    குருவுக்கு கோபம் வந்தது.

    “நேற்று, இனிப்பான பொருளை கொண்டு வா என்று சொன்னேன். நீ ஆட்டின் நாக்கை கொண்டு வந்தாய். உலகிலேயே கசப்பான பொருளைக் கொண்டு வா என்று சொன்னபோதும் அதே ஆட்டின் நாக்கைக் காட்டுகிறாய். உனக்கு என்ன கிறுக்கு பிடித்துவிட்டதா?. ஏன் இப்படி நடந்து கொள்கிறாய்?” – என்று எரிச்சலோடு கத்தினார் குரு.

    சீடன் அமைதியாக பதில் தந்தான்.

    “குருவே… இந்த உலகத்தில் எவ்வளவோ இனிப்பான செய்திகளை சொல்வதற்கு நாக்கு இருந்தாலும், பலவேளைகளில் தீய சொற்களைப் பேசி கசப்பான உணர்வை மற்றவர்களிடம் ஏற்படுத்துவது இந்த நாக்குதானே? நல்ல நண்பனைக்கூட கொடும் பகைவனாக மாற்றுவதும், சந்தோஷமாக இருப்பவரை துக்கத்திற்குள் பிரவேசிக்கச் செய்வதும் இந்த நாக்குதானே? எனவேதான், இந்த உலகத்திலேயே கசப்பான பொருள் நாக்கு என்று முடிவு செய்தேன்” என்றான் சீடன்.

    சீடனின் விசித்திரமான பதிலைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப்போன குரு, “என் மகளுக்கு ஏற்ற மணமகன் நீதான்” என்று உடனே முடிவு செய்தார். திருமணத்தை நடத்தி வைத்தார்.

    இந்த உலகத்தில் நல்லதை கெட்டதாக மாற்றுவதும், கெட்டதை நல்லதாக மாற்றுவதும் நாக்குதான். இந்த ‘நாக்கு’ உருவாக்கும் சொற்கள்தான் சிலரை காயப்படுத்துகிறது. சிலநேரங்களில் காயத்திற்கு மருந்தாகவும் அமைகிறது.

    மனித உடலில் அமைந்துள்ள அற்புதமான பொருளாக நாக்கு கருதப்படுகிறது. சிலவேளைகளில், “அவர்கள் எலும்பில்லாத நாக்கினால் எதையும் பேசுகிறார்கள்” என்று சொல்லும் அளவுக்கு சிலருக்குள் மன வருத்தத்தையும் உருவாக்கிவிடுகிறது.

    “நாக்கு” ஒரு அற்புத சக்திகொண்ட ஆயுதமாகத் திகழ்கிறது. வாழ்க்கையில் மற்றவர்களோடு இணைந்து செயல்படுவதற்கும், சூழலுக்கு ஏற்ப வளைந்து கொடுப்பதற்கும், சிலவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வதற்கும் இந்த நாக்கு பழகிக்கொள்வதால் அது தன்னை பாதுகாத்துக் கொள்கிறது. தன்னைப் பாதுகாக்கும் முறையை நாக்குமூலம் நாம் கற்றுக்கொள்ளலாம்.

    32 பற்களுக்கு நடுவில் நாக்கை பத்திரமாக இறைவன் படைத்திருக்கிறார். இந்தப் பற்கள் அனைத்தும் பாதுகாக்கும் படைவீரர்கள்போல நாக்கை பாதுகாக்கின்றன. இந்த நாக்கு விதவிதமாய் வளைகிறது. எதைஎதையோ பேசுகிறது. பேசும்போது சரியான முறையில் வளைந்து கொடுக்கவில்லையென்றால், பற்களால் கடிக்கப்பட்டு காயம் அடைகிறது. தன்னைப் பக்குவமாக பாதுகாத்துக்கொண்டு வாழப் பழகும் நாக்கு, பேசுபவரைப் பாதுகாக்க சிலநேரங்களில் தவறிவிடுகிறது.

    தவறான பேச்சைக் கேட்டவர்கள் “உன் பல்லை உடைத்துவிடுவேன்” என்றுதான் பதிலுக்கு சண்டையிடுகிறார்கள். ஆனால், தவறு செய்யும் நாக்கு தண்டணையிலிருந்து தப்பிவிடுகிறது.

    இதனால்தான், திருவள்ளுவர் “காக்க வேண்டிய எதையும் நீங்கள் காக்காவிட்டாலும், உங்களது நாக்கை கட்டுப்பாட்டுக்குள் வைத்து காத்துக்கொள்ள வேண்டும். இல்லையென்றால், உங்கள் நாக்கு தவறாகப் பேசி உங்களை சொற் குற்றத்தில் அகப்படச் செய்து தீராத சோகத்தை தந்து நிற்கும்” என்கிறார். இதனை,

    “யாகாவார் ஆயினும் நாகாக்க காவாக்கால்

     சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு”

    – என்னும் குறள்மூலம் நாம் உணரலாம்.

    “தீயினால் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

     நாவினால் சுட்ட வடு”

    – என்னும் குறள் “தீயினால் ஏற்படும் புண்ணைவிட, நாக்கு ஏற்படுத்தும் புண் ஆறாத வடுவாக மாறிவிடுகிறது” என்பதை சுட்டிக்காட்டுகிறது.

    நாம் பேசுகின்ற பேச்சு பிறருக்கு நன்மை விளைவிப்பதாகவும், மகிழ்ச்சி தருவதாகவும் அமையும்படி பார்த்துக்கொள்வது நாக்குக்கும் நல்லது. நமக்கும் நல்லது.

    இனிப்பைத் தடவிய வார்த்தைகள் இதயத்திற்கு இன்பம் சேர்க்கிறது. இனிமை நிறைந்த மனதில் மனநிறைவையும் அள்ளித் தருகிறது. வாழ்க்கையில் மனமகிழ்வும், மனநிறைவும்தான் ஒருவருக்கு வெற்றியைப் பெற்றுத்தருகிறது என்பதை புரிந்துகொண்டால் வாழ்க்கை வசந்தமாக மாறும். நாக்கு நமக்குள் இருக்கும் ஒரு நல்ல ஆயுதம் அல்லவா?

    தொடரும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    வாசியுங்கள்! வாகை சூடலாம்

    (வெற்றிச் சிந்தனைகள் நூல்களின் அறிமுகம்)

    தன்னம்பிக்கை மாத இதழின் வாசிப்பாளர்களுக்கு எனது வணக்கங்கள். நான் இந்தத் தொடரில் ஒவ்வொரு மாதமும் வெற்றிச் சிந்தனைகள் குறித்து மேல்நாட்டு அறிஞர்களால் எழுதப்பட்ட ஏதேனும் ஒரு நூலை அறிமுகம் செய்ய இருக்கின்றேன். இத்தொடரை நீங்கள் தொடர்ந்து படிக்கும்போது வாசிக்கும் பழக்கத்தால் ஒருவர் எப்படி வெற்றி பெறும் ஆற்றலுடையவர் ஆகிறார் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள முடியும்.

    வாசிக்கவும் மற்றும் வாழ்வை வளமாக்கவும் (Read and get Rich)

    இந்த நூல் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த பர்க் ஹெட்ஜஸ் (Burker Hedges) என்பவர் எழுதியது. (இதனை மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் எனும் நிறுவனம் தமிழில் வெளியிட்டுள்ளது. தமிழில் ஆலிரத் அசோக்குமார் என்பவர் மொழியாக்கம் செய்துள்ளார்.) சரியான நேரத்தில் சரியான புத்தகம் உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடும். இதற்கு நானே ஒரு ஆதாரமாக இருக்கின்றேன் என்று இந்த நூலின் ஆசிரியரே தன்னை உதாரணமாகக் காட்டி, அவர் வாழ்க்கையை மாற்றிய உலகிலேயே மிகச் சிறந்த விற்பனையாளர் (The Greatest Salesman in the world) என்ற புத்தகம் பற்றி வாசகர்களுக்கு அறிமுகம் செய்கிறார். அதுவரை தான் ஒரு சாதாரண வேலையில் குறைந்த சம்பளத்திற்கு வேலைசெய்து வந்தேன். இந்த நூலைப் படித்ததும் செல்போன், தொலைபேசி விற்பனை நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து, மிக விரைவில் செல்போன் தொலைபேசி தயாரிக்கும் தொழில் நிறுவனம் தொடங்கி வெற்றிகரமான தொழில்முனைவராக ஆனதாகச் சொல்கிறார்.

    வாசிக்கும் பழக்கம் மற்ற எந்தவொரு செயல்பாட்டைக் காட்டிலும் நமது உள்ளார்ந்த ஆற்றலை வெளியிடக்கூடிய சக்தி உடையது. ஒரு சிறந்த புத்தகமானது ஒரு வங்கியைக் காட்டிலும் மேலும் அதிக உண்மையான செல்வத்தைக் கொண்டிருக்கிறது. பெரும்பாலானவர்களின் வெற்றி மற்றும் தோல்வியை அவர்கள் தேர்வு செய்யும் விருப்பத் தேர்வுகளே முடிவு செய்கின்றனவேயன்றி வாய்ப்புக்கள் அல்ல என்பதை பர்க்ஹெட்ஜஸ் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்.

    வாழ்க்கையை மாற்றிய புத்தகங்கள்

    எந்த புத்தகம் உங்கள் வாழ்க்கையை மாற்றும் என்பது உங்களுக்கே ஒருபோதும் தெரியாது. அதுவே வாசிப்பதில் இருக்கும் அழகாகும்; அது, அற்புதமான உள்நோக்கும் நுண்ணறிவுகள் ஊடாக. உங்கள் வாழ்க்கையில் உடனடி நிலை மாற்றங்களை எடுக்கும் ஆற்றலை தன்னுள் கொண்டிருக்கிறது. சாதாரண ஏழைக்குடும்பத்தில் பிறந்த ஆபிரகாம் லிங்கனை அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஆக்கியது அவர் படித்த புத்தகங்களே என்று அடித்துச் சொல்கிறது இந்தப் புத்தகம். இந்த உலகத்தில் முன்னேறுவதற்கு உதவும் மிகச் சிறந்த கருவி வாசிக்கும் பழக்கமே என்பதை லிங்கன் தனது இளம் வயதிலேயே புரிந்துகொண்டார். அதனால்தான் ஏழ்மையான நிலையில் இருந்து வரலாற்றில் இடம்பிடிக்கும் அளவுக்கு மாபெரும் மனிதராக உயர்ந்தார். அதுமட்டுமல்ல வாசித்தல் பழக்கமே அவரை சிறந்த மேடைப் பேச்சாளராக மாற்றியது என்றும் அவரது வரலாற்றைப் படிப்பதன் மூலம் தெரிகிறோம். அதேபோன்று அமெரிக்காவின் மூன்றாவது ஜனாதிபதியான ஹாரி ட்ரூமன் கல்லூரிப் படிப்புக் கூட இல்லாத நிலையில்; அவருக்கு இப்படியொரு வெற்றி கிடைக்கக் காரணமாக அமைந்தது அவரது வாசிப்புப் பழக்கமே என்று சொல்லப்படுகிறது. முதல் தர தலைவர் ஒருவருக்கு வாசிக்கும் பழக்கம் ஒரு மைல் என்பதைத் தெரிந்திருந்தார். அவரின் சொற்களில் சொல்வது எனில், ஒவ்வொரு வாசிப்பாளரும் ஒரு தலைவராக இருப்பது இல்லை, ஆனால் ஒவ்வொரு தலைவரும் நிச்சயம் ஒரு வாசிப்பாளரகத்தான் இருப்பார். இந்தியாவின் முதல் ஜனாதிபதி சர்வ பள்ளி டாக்டர் இராதாகிருஷ்ணன் எப்போதும் படித்துக்கொண்டே இருந்த ஒரு கல்வியாளர் என்பது நாம் அறிந்ததே. அதேபோன்று பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி போன்ற தலைவர்கள் எப்போதும் புத்தகங்களை வாசித்துக்கொண்டே இருந்தவர்கள் என்பது இங்கு நினைக்கத்தக்கது.

    ஒரு புத்தகத்தை எப்படி வாசிப்பது

     இந்தப் புத்தகத்தின் முக்கியமான பகுதி இதுதான்.

    1. புத்தகத்தின் முக்கிய பகுதிகளை முதலில் வாசிக்கவும்,
    2. சுறுசுறுப்பாக வாசித்து குறிப்புகள் எடுக்கவும்,
    3. உங்கள் குறிப்புகளை மதிப்பாய்வு செய்யவும்

    என்று பரிந்துரைக்கும் பர்க் ஹெட்ஜஸ்; இவை ஒவ்வொன்றையும் விளக்குகிறார். ஒரு வீட்டை வாங்க விரும்புபவர் அந்த வீட்டின் புகைப்படத்தைப் பார்த்து உடனே வாங்கி விடுவதில்லை. நேரில் சென்று வீட்டின் அனைத்துப் பகுதியிலும் நுழைந்து எல்லாப் பகுதிகளையும் ஆய்வு செய்து அதன் பின்னரே வாங்க முடிவு செய்வார். இது போன்றதே புத்தக வாசிப்பும். ஒரு புத்தகத்தை வாசிப்பதற்கு முன்னதாக, அந்தப் புத்தகத்தின் ஒட்டுமொத்த அம்சங்களையும் பார்க்க நீங்கள் ஒருசில நிமிடங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்பின்பு பொருளடக்கம், முக்கியமான அத்தியாயங்கள் என்று முக்கிய பகுதிகளை முதலில் வாசிப்பதால் பிரமிக்கத்தக்க  முக்கியமான அனுபவம் கிடைக்கக்கூடும்.[hide]

    சுறுசுறுப்பாக வாசித்தல் என்பது தகவல்களை சேகரிக்கவும், நமது புரிந்து கொள்ளுதலை அதிகரிக்கவும் வினாக்களைக் கேட்டு விடை அளிக்கும் ஒரு மனரீதியான செயல்முறையே அன்றி வேறொன்றும் இல்லை. வாசித்து வாழ்வை வளமாக்க வேண்டுமெனில் நாம் அதிகமாக வினாக்களைக் கேட்கத் தொடங்க வேண்டும். அதேவேளையில் உங்களுக்கு முக்கியமெனப்படுவதை அடிக்கோடிட்டும், குறிப்பு எடுத்துக் கொண்டேவும் படிக்கலாம்.

    மூன்றாவது படிநிலையாகச் சொல்லப்படும் குறிப்புகளை மதிப்பாய்வு செய்தல் என்பது வாசித்தலின் கடைசிப் படிநிலை ஆகும். ஒரு நூலைப் படித்ததும் படித்த எல்லாம் நினைவில் நிற்பதில்லை. அதேவேளையில் குறிப்புக்களைப் பார்க்கும்போது நமக்கு மறந்து போனது போல தெரிந்தவை எல்லாம் பளிச்சென்று நம் கண் முன்னால் வந்து நிற்பதைக் கண்டு நாம் பெரிதும் வியந்துபோவோம். நாம் அடிக்கோடிட்டு வைத்துள்ள வரிகளில் உள்ள உள் நோக்கும் நுண்ணறிவும் மதிப்பாய்வு செய்யும்போது மடை திறந்த வெள்ளம் போல நம் கண் முன்னால் கரை புரண்டு ஓடுவதைக் காணமுடியும்.

    வாசித்தல் தரும் பயன்கள்

    புத்தக வாசிப்பின் அளப்பரிய பயன்கள் இந்நூல் முழுமையும் நிரம்பி வழிகின்றன. அவற்றில் சில.

    • வாசிக்கும் பழக்கம் நம்மை பல துறைகளிலும் வளம் அடையச் செய்கின்றது.
    • வாசிப்பாளர்கள் உலக அளவிலான தகவல்களை தங்கள் விரல் நுனியில் வைத்திருக்கின்றனர்.
    • வாசிக்கும் பழக்கமானது தடைகளை உடைத்து வெற்றியை அளிக்கிறது.
    • வாசித்தலும், எழுதுதலும் நம்முடைய மன ஆற்றல்களை விரிவாக்குகின்றன.
    • உடலுக்கு உடற்பயிற்சி எப்படியோ, மனதிற்கு வாசித்தலும் அப்படியே.
    • நீங்கள் என்ன வாசிக்கிறீர்களோ அதுபோலவே இருக்கிறீர்கள்.
    • புத்தகங்கள் நமக்கு சிறகுகள் கொடுக்கின்றன.
    • புத்தகங்களின் சிறந்த அம்சம் என்னவெனில் மாபெரும் மனிதர்கள் நம்மிடம் பேசுகின்றனர். தங்களின் பொன்னான எண்ணங்களை நமக்கு வழங்குகின்றனர்.
    • வாசிப்பதன்மூலம் நமது உலகத்தை, நமது வரலாற்றை மற்றும் நம்மையே நாம் கண்டறிகிறோம்.
    • வாசிக்கக் கூடியவர்கள் இருமடங்கு சிறப்பாக பார்க்கவும் செய்கின்றனர்.

    வாசித்தலே வாழ்தல்

    தாமஸ் ஜெஃபர்சன் என்ற அறிஞன் சொல்லுவான் புத்தகங்கள் இல்லாமல் என்னால் வாழமுடியாது என்று; ஆம் நாம் வாழ வேண்டுமென்றால் புத்தகங்களை வாசித்துத்தான் ஆகவேண்டும். இந்த உலகில் பெரிய வெற்றி வாகை சூடியவர்கள் எல்லாம் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் வாசித்துக்கொண்டே இருந்தவர்கள்தான் என்பதை நாம் மறுப்பதற்கில்லை. மாவீரன் அலெக்ஸாண்டர் தன்னுடன் எப்போதும் அதாவது போர்முனையில் கூட ஹோமர் எழுதிய இடியத்; ஓடிசியை வைத்திருப்பாராம். இந்தியாவின் சிற்பி என்று அழைக்கப்படும் ஜவஹர்லால் நேரு எப்போதும் படித்துக்கொண்டேயிருந்தவர்தான். இந்தியாவின் சட்ட நூல்களை எழுதிய டாக்டர் அம்பேத்கர் தனது வீட்டில் பெரிய நூலகத்தையே நிறுவி படித்த வரலாறு நாம் அறிந்ததே. லார்ட் பைரன் ஒரு துளி மை, பல இலட்சம் பேரை சிந்திக்கத் தூண்டும் என்பார். ஆமாம் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வரியில் வள்ளலாரின் இரக்கத்தையும், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற வரியில் கனியன்பூங்குன்றனின் உலக ஒருமையையும் “அன்பே கடவுள் என்ற வரியில் திருமூலரின் கடவுள் கொள்கையையும் நாம் வாசித்தல் அனுபவத்தால் பெறுகின்றோம். வாசித்தல் என்பது வெறுமனே படிப்பதல்ல! வாசித்தல் என்பது வாழ்தல் ஆகும். வாசிப்பு மன இறுக்கத்தைக் குறைத்து இளைப்பாறுதலைத் தரும். வாசித்தல் என்பது வெறுமனே தகவலை மட்டும் பெறுவதாகாது! வாசித்தால் வாழ்க்கையே மாறும் என்பதே வாசித்தல் தரும் பயன்.

    நல்ல புத்தகங்கள் அதன்

    அனைத்து ரகசியங்களையும்

    ஒரே நேரத்தில் கொடுத்து

    விடாது என்பார்கள். ஒரு

    நூலை தொடர்ந்து வாசிப்பதும்

    வாசித்தலை வாழ்க்கையில்

    பயன்படுத்திட முயல்வதும்

    வாசிப்புக் கலையில் உள்ள

    பெரிய வாய்ப்பு என்றே சொல்ல வேண்டும்.

    வாசிப்பதால் நாம் வாகை சூடிடலாம். வாருங்கள் நாம் தொடர்ந்து வாசிப்போம்.

    – வாசிப்பு தொடரும்…[/hide]

    இந்த இதழை மேலும்

    உன்னால் முடியும் போராடு உலகை வென்று பூச்சூடு….

    “தோல்விகளை சந்தித்தவன்

    வெற்றியாளன்    ஆகிறான்

    அவமானத்தை தாங்கியவன்

    சாதனையாளன் ஆகிறான்.”

    என்பதை மட்டும் உள் வாங்கிக் கொள். உனக்கும் சாதனை நிச்சயம். “இளமையில் படி.’ என்பதை மாற்றி “இளமையில் சாதிக்க வேண்டும்’ என  மனஉறுதியுடன் ஒவ்வொரு இளம் பட்டாளமும் வலம்வர வேண்டும்.

    ஏன் நாங்கள் வாழ்வில் கஷ்டப்பட்டு சாதிக்க வேண்டும்?   என பல பேர் கேட்கலாம். வாழ்க்கை என்பது வாழ்வதற்குதானே, கஷ்டப்பட்டு சாதிக்க வேண்டுமா?  என்ன அவசியம்?  என எல்லாரும் நினைக்கலாம். நண்பர்களே, நாம் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் “சினிமா பிரபலங்கள் பின்னாடியோ, கிரிக்கெட் வீரர்கள் பின்னாடியோ’ சென்று அவர்களுடன் “செல்ஃபி’  எடுத்துக் கொள்வது, அதனையே பெரிய சாதனை போல் “வாட்ஸ் ஆப்’ பிலும், “பேஸ்புக்’கிலும், நண்பர்களுக்கு  பகிர்ந்து மகிழ்ச்சி அடைவது. எப்போது நாம் பிரபலங்கள் பின் செல்வதை விட்டுவிட்டு சாதனயாளராக மாறப் போகிறோம்? சற்று சிந்தியுங்கள் நண்பர்களே.

    நாம் ஆயிரம் காரணம் சொல்லலாம், “என்னுடைய குடும்பம் ரொம்ப  ஏழ்மையில் இருக்கு, அப்பா, அம்மா யாரும் என்னை  ஊக்கப்படுத்தவில்லை. “நண்பர்கள் வழிகாட்டுவதற்கு யாரும் இல்லை’ என ஆயிரம், ஆயிரம் காரணம் சொல்லலாம். ஆனால், உன் சாதனை  நீ இறந்த பிறகும் உலக மக்களால் சொல்லப்பட்டு கொண்டே இருக்கும். வயதும், சூழ்நிலையும் எப்போதும் ஒரு சாதனையாளருக்கு பொருட்டல்ல.

    ஒரு வாழ்வியல் சம்பவத்தை நான் உங்களிடம் பகிர்ந்துக் கொள்கிறேன்:

    1987ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்      போட்டியின் போது, மைதானத்திற்கு வெளியே நின்று பந்துப் பொறுக்கிப்போட்டான் 13வயது சிறுவன். அவனது ஆசை அடுத்த உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்று. மிக வலுவான குறிக்கோளுடன், விடாமுயற்சியுடன், போராடி 1991 அடுத்த உலக கோப்பை போட்டியில்… தனது 16 வயதில் மைதானத்திற்குள் வீரராக நுழைந்து, பின் பல சாதனைகளுக்கு நாயகனாகவும் திகழ்ந்தார். அவர் தான் “மாஸ்டர் ஆஃப் கிரிக்கெட்’ சச்சின் டெண்டுல்கர். இது பழமையான செய்தி என்றாலும், இன்னொரு செய்தி சொல்கிறேன்.[hide]

    நம் ஊரில், பிறக்கும் போது குடும்பம் மிக ஏழ்மை. சிறுவயதில் ஏற்பட்ட விபத்தின் போது, தன் வலது முழங்கால் பெரிதும் பாதிக்கப்பட்ட போது, நடக்கவே பெரிய சிரமம் தான். இருத்தாலும் விடாமுயற்சியுடனும், தன்னபிக்கையுடனும் பல போராட்டங்களை கடந்து. மாற்றுத்திறனாளிகளுக்கான  ஒலிம்பிக்கில் “உயரம் தாண்டுதல்’ போட்டியில் கலந்து கொண்டு தனது 21வயதில் தங்கம் வென்ற தங்க மகன்  உலகளவில் மிக குறைந்த வயதில் தங்கம் வென்றவர்களுள் மிக முக்கியமானவர்    நம்ம  ஊர்க்காரர் “மாரியப்பன் தங்கவேலு’   ஆவார்.

    யாராக இருந்தாலும்   குடும்பத்தையும், வாழ்க்கையையும் முடிச்சுப் போட்டுப்    பேசாதீர்கள். அப்படி நினைத்தால், இன்று “திருபாய் அம்பாணி’ இல்லை அவர் உருவாக்கிய சாம்ராஜ்யம் இல்லை. நாம் சிறுவதில் அல்லது இளம் பருவத்திலே நம்முடைய சாதனை குறிக்கோளை வலுவாக நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். அப்படி 13-வயது சிறுவனாக இருந்த போதே சாதனையின் இலக்கை நோக்கி, ஓடி ஆங்கில கால்வாயை நிச்சல் அடித்து கடந்து உலக சாதனை படைத்தார் குற்றாலீஸ்வரன். நம் இலக்கை அடைவதற்கு, இப்போதே நாம் திட்டமிடுதல் வேண்டும். எத்தனை தடைகள் வந்தாலும் நாம் தாண்டி   வரவேண்டும், சோர்வடைந்து விடக் கூடாது. நம்மைப் பார்த்து “இவன் தோற்றுப் போனவன் என்று கூட சொல்லிவிடலாம், ஆனால் பயந்து ஓடிப் போயிட்டான் என யாரும் சொல்லிவிடக் கூடாது’  இதை மனதில் கொண்டு செயல்ப்படுங்கள் வெற்றி நிச்சயம் …நிச்சயம் …

    “சிறந்த எண்ணம்

    கொண்ட மனிதரே,

    சாதனை மனிதராக

    மாறுகிறார்கள்

    “நமக்கு என்ன தெரிகிறதோ,

    என்ன வருகிறதோ, அதுவே போதும்.

    சற்று, அதை நேர்த்தியாக செய்யுங்கள்.

    வாழ்வில் வெற்றி பெறுவீர்கள்.[/hide]

    இந்த இதழை மேலும்

    பெண்ணீயமே பெருமை கொள் உன்னை எண்ணி கர்வம் கொள்

    பெண்ணறத்தினை ஆண் மக்கள் வீரம் தான்

    பேணுமாயின் பிறிதொரு தாழ்வில்லை

    என்று சொன்ன பாரதி தான்

    ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்

    அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்

    பெண்ணுக்கு விடுதலை என்று இங்கோர்

    நீதி பிறப்பித்தேனே; அதற்குரிய வெற்றி கேளீர்

    மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்மென்றால்

    மனையாளும் தெய்வமன்றோ?

    விண்ணுக்குப்பறப்பது போல் கதைகள்

    சொல்வீர் விடுதலை என்பீர் கருணை வெள்ளம் என்பீர்

    பெண்ணுக்கு விடுதலை இங்கில்லை என்றால் பின்

    இந்த உலகினிலே வாழ்க்கை என்பதே இல்லை என்று சொன்னார்.

    பாரதி பெண்ணின் பெருமையையும் அவர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதையும் ரத்தினச் சுருக்கமாக விளக்கியுள்ளார். அவர் பெண்ணின் பெருமைக்கு பெரும் பங்கு ஆற்றியவர்.  பெண்ணின் சிறப்புகளையும் பெண் என்பவள் எவ்வாறு இருக்க வேண்டும் தனக்குள் ஓளிந்து இருக்கும் திறமையை எவ்வாறு வெளிக்கொணர வேண்டும் என்பதைக் காண்போம்.

    பெண்ணின் பெருமையை எந்த ஒரு உயர்த்துகின்றதோ அந்த நாடே இந்த மண்ணுலகில் உயர்ந்துள்ளது. தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்துள்ள இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பல்வேறு துறைகளில் ஆணுக்கு சமமாகவும் ஆண்களைவிட அதிமாகவும் முன்னேறி வருகின்றனர். சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்த தருணத்தில் பெண்களின் பெருமையையும், அவர்களின் முன்னேற்றத்திற்கு பலரும் ஆற்றிய பங்கினையும் அறிந்து கொள்வோம்.

    பெண்களின் பெருமையை பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே அறிந்து கொள்ளலாம். புராண காலத்திலே காரைக்கால் அம்மையார், நளாயினி, சாவித்திரி, சந்திரமதி, தாரா, மண்டோதரி, சீதா தேவி, திரௌபதி போன்ற  பெண்களை இன்றும் பல சான்றோர்கள் போற்றுகின்றனர்.

    செய்யாதே! எனில் கேட்பாள் செய்தால் என்ன?

    செய்யென்று செப்பினாள் வினவுவாள் செய்யாயின் என்ன

    என்று எதிர்க் கேள்விக் கேட்டு

    எதிரிகளை மூழ்கடித்து பின் எதையும் செய்யும் திறம் படைத்தவர்

    என முழங்குபவர் பேதைப் பெண்களாம்

    ஐம்பெருங் காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி ஆகியவற்றில் உள்ள பெண் பாத்திரங்களின் வரலாறுகள் பெண்ணியத்திற்க்கு பெருமைத் தேடி தந்துள்ளன. சிலம்பில் கண்ணகி, மாதவி, கவுந்தியடிகள், தேவந்தி, போன்றவர்களின் வரலாறுகள் பல பண்புகளை உயர்த்தி நிற்கின்றன. கண்ணகி தெய்மாகியது, மணிமேகலையின் துறவு மேன்மையடைந்தது.

    பெண்களின் முன்னேற்றத்திற்காக முதன் முதலில் குரல் எழுப்பியவர் மாயூரம் நீதிபதி வேதநாயகம் பிள்ளை ஆவார்.  பெண் கல்வி வளர்ந்தது.  மகளிரும் தொழில் வாய்ப்பைப் பெற்றனர். எந்தக் காலத்திலும் பெண்கள் வேலைக்குச் செல்லாமல் இருந்ததில்லை. விவசாய வேலைகள் முதல் விண்வெளி ஆராய்ச்சிப் பணிகள் வரை ஆண்களுக்கு இணையாக மட்டுமல்ல அவர்களைவிட அதிக அளவில் உழைப்பைச் செலுத்துகிறார்கள் பெண்கள்.[hide]

    இப்படி பலதுறைகளிலும் தங்களை மேலும் மேலும் வளர்த்துக்கொண்டே சென்றாலும்கூட, பெண்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தில் மட்டும் பாரபட்சம் தொடர்ந்தவண்ணமே இருக்கிறது.  வயலில் நாற்று பறிக்கும் ஆணுக்குக் கொடுக்கப்படும் சம்பளம், அந்த நாற்றுகளை நாள் முழுவதும் நடும் பெண்ணுக்குத் கொடுக்கப்படுவதில்லை. இருப்பினும் நமது நாட்டில் பெண்களுக்கென்றே சில சிக்கல்கள் இருப்பதை முதலில் கவனத்தில்கொள்ள வேண்டும்.

    வேலைக்குச் செல்லும் பெண்கள் குறுகிய காலத்திலேயே வேலையை விட்டு தன்னை விடுவித்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதற்கு மிக முக்கிய காரணமாக கருதப்படுவது பாதுகாப்பு அற்ற நிலை, திருமணம், தன் கணவனை விட அதிக அளவு சம்பளம் ஈட்டுவது குழந்தைப் பராமரிப்பு, பெரியோர்களைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு, வேலையிடத்துக்கும் வீட்டுக்கும் உள்ள அதிகத் தொலைவு.  ஆனால் பெண்கள் இத்தடைகளை உடைத்து வர வேண்டும்.

    பெண்ணாய்ப் பிறந்தாலே கள்ளிப் பாலுக்கு கல்லறையாகும் காலம் மறைந்து மலையேறிவிட்டது.  இன்று அவள் சொல்லுக்காக நாடே வழிமேல் விழி வைத்து காத்துக் கொண்டிருக்கிறது.

    அகிலம் அறிய மனைவிக்கு பாதி உடலைத் தந்தான் ஈசன். அன்றே ஆணும் பெண்ணும் சரிசமம் என்று உணர்த்தினான். இல்லறம் அல்லது நல்லறம் அல்ல என்று கூறியவர் இல்லறத்தைத் துறந்த ஒளவையார். எனவே இல்லறத்தில்தான் ஒருவனுக்கு முக்தி கிட்டும் என்கிறது சாஸ்திரம். இல்லறத்தை இனிமையாக ஆள நல்ல இல்லாளின் துணை தேவை. நாட்டிற்க்கே ராணியாக இருப்பினும் அவள் வீட்டில் அன்பைப் புகுத்தி கணவன் மனதில் மென்மையாகப் புகுந்து தன்னையும் தன் சுற்றத்தையும் பேணிக் காக்கும் காவல் தெய்வங்களாக விளங்குகிறாள்.

    சமுதாய அமைப்பிலே பெண் சுதந்திரம், பெண் சமத்துவம், பெண் விடுதலை என் சொற்றொடர்கள் பல்வேறு இடங்களிலும் பேசப்படுகின்றன. ஆயினும் நடைமுறையில் பெண்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்படுகிறதா என்பது ஆய்வு செய்ய வேண்டியதாகும். பெண் பிள்ளை பிறந்தால் தனக்கு இழப்பு என்றும் ஆண் பிள்ளை பிறந்தால் அவன் ஈட்டித் தருவான் என்றும், இச்சமூகம் நினைக்கிறது. பெண்ணிற்க்குப் பெண்களே எதிரிகளாகின்றனர். பெண்களுக்கு ஏற்படும் அநீதி முற்காலத்திலிருந்தே உள்ளது.

    சிலப்பதிகாரத்தின் நாயகி கற்புக்கரசி கண்ணகி, தனக்கு துரோகமிழைத்த கணவனுக்கு அடங்கியொடுங்கிய மனைவியாகச் சித்தரிக்கப்படுகின்றாள்.

    சீதா தேவியின் கற்பு ஒழுக்கம் தீக்குளித்து நிரூபிக்கப்படுகின்றது.  கற்புக் கனல் தமயந்தி நடு இரவில் கானகத்தே தனித்து விடப்படுகின்றாள்.

    கற்பின் செல்வி திரௌபதி அரசவையில் துகிலுரியப்பட்டு காட்சிப் பொருளாகின்றாள். இவ்வாறு காவியங்களில் பெண்ணுக்கு நடைபெற்ற சோதனைகளும், வேதனைகளும் எத்தனையெத்தனையோ.  ஆனால் இதன் முடிவாக பாரத தேசம் அழிவையே சந்திக்கிறது.

    கண்ணகியின் கனல் மதுரையை எரித்தது, சீதையின் சீற்றம் பூமி பிளந்தது.  திரௌபதிக்கு இழைக்கப்பட்ட அநீதி மஹாபாரதப் போர் மூண்டது. எனவே பெண் என்பவள் நெருப்பைப் போன்றவள் அனைத்தையும் பஸ்பமாக்கும் திறன் உடையவள். அவளை பழி சுமத்தினால் பெரும் அழிவையே இவ்வுலகம் சந்திக்கும்.

    தற்காலத்தில் பெண்ணிற்க்கு இழைக்கப்பட்ட அநீதி அளவற்றவை. பள்ளி மாணவி முதல் பருவமடைந்த பெண்கள், முதியவர்கள் வரை பாதுகாப்பற்ற சூழ்நிலையே உள்ளது.  இந்த பாதிப்பு காப்பிய காலங்களிலிருந்தே இருக்கிறது.

    “நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்

    ஞான நல்லறம் வீரசுதந்திரம் பேணுதல்

    நற்குடிப் பெண்ணின் குணங்களாம்

    கற்பு நிலையென்று சொல்லவந்தால் இரு

    கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம் வற்புறுத்தி பெண்ணைக்

    கட்டிக் கொடுக்கும் வழக்கத்தைத் தள்ளி மிதித்திடுவோம் என்று

    அடித்துக் கூறினான் பாரதி.”

    சீறிவந்த புலியை முறத்தினால் அடித்த தமிழச்சி, வீரமங்கை வேலு நாச்சியார், ஜான்சி ராணி வழி வந்த பெண்ணினம் நம் பெண்ணினம் என்பதை மனதில் தீர்க்கமாக எண்ணிச் செயல்படவேண்டும். ஆண் பெண் என்கிற இருவேறு ஆளுமைகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால்தான் சமூகம் சீரடையும். ஆணும் பெண்ணும் முரண்பட்டு நிற்காமல் சமன்பாட்டு நிலையில் வாழ்தல் அவசியம். அதற்கு பெண் முன்னேற்றத்திற்கு பெருந்துணை புரிவோம்.  மேலும் வழி நெடுகிலும் உள்ள கற்களையும் முட்களையும் அகற்றுவோம். மேலும் பலப்பல ஜான்சி ராணி, முத்துலட்சுமிரெட்டி, கல்பனா சாவ்லா போன்றோரை உருவாக்குவோம்.

    ஜான்சி ராணி, முத்துலட்சுமி ரெட்டி, வேலு நாச்சியார் போன்றோர் முன்னேற்றப் பாதையில் முதல் அடியை எடுத்து வைத்த போது, வழியில் இருந்த தடைக் கற்களையும், முட்களையும், முட்புதர்களையும் களையெடுத்தார்கள். அவர்கள் முன்னேற முழக்கமிட்டவர்களின் சக்தியினால்தான் நாம் இன்று பெண்ணின் பெருமையும், பெண்ணியத்தையும் போற்றுகின்றோம். எனவே நாமும் பலர் நடக்கும் நடைப்பாதையை செப்பனிடுவோம்.[/hide]

    இந்த இதழை மேலும்