கொழுப்பும் ஆயுளும்
நம் உடலில் கொழுப்பு அதிகமானால் உடல் ஆரோக்கியமும், ஆயுளும் குறையும் என்று ஒரு பொதுவான நம்பிக்கை இருக்கிறது. அதில் பாதி உண்மைதான் இருக்கிறது. உண்மையில் கெட்ட கொழுப்பு அதிகமானால் தான் நம் உடல் கெடும், ஆயுள் குறையும். நம் உடலில் நல்ல கொழுப்பு அதிகமிருந்தால் தான் நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தி இருக்கும். நம் தோல் ஆரோக்கியமாகச் சுருங்கி விரிந்து உடல் பாதுகாப்பையும் கொடுக்கும். அதே போல், நம் இரத்தக் குழாய்கள் மற்றும் நரம்புகளும் இலகுவாகச் சுருங்கி விரிந்து செயலாற்றி நம் ஆயுளை நீட்டிக்கச் செய்யும். நம் உடலில் கெட்ட கொழுப்புச் சேர்வது இருவிதமாக நிகழ்கிறது. ஒன்று, கெட்ட கொழுப்பைக் கொண்டுள்ள உணவுகளை நாம் உட்கொள்ளும் போது. மற்றொன்று, கல்லீரல் செரிமானம் கெடுவதால் ஏற்படுவது. கெட்ட கொழுப்பு உணவுகளைப் பற்றிப் பின்னர் பார்ப்போம். இப்பொழுது கல்லீரல் செரிமானம் கெடுவதால் ஏற்படும் கொழுப்பு பாதிப்புகளைப் பார்ப்போம்.
அன்பு நண்பர்களே! நம் உடலில் கொழுப்பு என்பது புரதமும் (Protein) கொழுப்பும் (Lipid) இணைந்த அமைப்பாகவே (Lipoprotein) உடல் பகுதிகளில் சேமிக்கப்படுகிறது. இதில் புரதம் அதிகமாகவும் கொழுப்பு குறைவான விகிதமும் கொண்ட கொழுப்பை உயர் அடர் நல்ல கொழுப்பாகவும் (HDL), புரதம் குறைவாகவும் கொழுப்பு அதிகமான விகிதத்தில் இருப்பவைகளை கெட்ட கொழுப்பாகளாகவும் (VLDL மற்றும் LDL) பிரிக்கின்றனர். இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் கெட்ட கொழுப்போடு புரதம் சேரும்போது அது நல்லக் கொழுப்பாக மாற்றம் ஆகும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆக, நம் உடலில் கொழுப்புச் செயல்பாடு நல்லபடியாக இருக்க வேண்டுமாயின் கல்லீரலின் புரதம் மற்றும் கொழுப்புச் செரிமானம் சிறப்பாக இருக்க வேண்டும். அது எப்படி என்று விவரமாகப் பார்ப்போம்.
நம் உடலில் சேமிக்கப்பட்டுள்ள கொழுப்புச் சக்தியாக உருமாற போதிய கொழுப்புச் செரிமான நொதிகள் வேண்டும். அவ்வித நொதிகள் புரதத்தால் உருவாக வேண்டியிருப்பதால் நம் உடலில் புரதச் செரிமானம் சரியாக இருக்க வேண்டும். நம் உடலில் உள்ளக் கெட்ட கொழுப்புகள் யாவையும் குறைவான புரதத்தைக் கொண்டுள்ளதால் அவைகள் சக்தியாக மாறுவதில்லை. அதனால்தான் நம் உடலில் அளவுக்கதிகமாகக் கெட்ட கொழுப்பு இருந்தும், நாம் விரதமிருந்தாலும், உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி செய்தாலும் அவைகள் கழல்வதில்லை. ஆக நம் உடலில் கொழுப்புச் செயல்பாடு தரமாக இருக்க வேண்டுமாயின் நாம் கீழ்க்கண்ட முறைகளைக் கையாள வேண்டும்.
இந்த இதழை மேலும்
0 comments Posted in Articles