– 2017 – November | தன்னம்பிக்கை

Home » 2017 » November

 
  • Categories


  • Archives


    Follow us on

    கொழுப்பும் ஆயுளும்

    நம் உடலில் கொழுப்பு அதிகமானால் உடல் ஆரோக்கியமும், ஆயுளும் குறையும் என்று ஒரு பொதுவான நம்பிக்கை இருக்கிறது. அதில் பாதி உண்மைதான் இருக்கிறது. உண்மையில் கெட்ட கொழுப்பு அதிகமானால் தான் நம் உடல் கெடும், ஆயுள் குறையும். நம் உடலில் நல்ல கொழுப்பு அதிகமிருந்தால் தான் நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தி இருக்கும். நம் தோல் ஆரோக்கியமாகச் சுருங்கி விரிந்து உடல் பாதுகாப்பையும்  கொடுக்கும். அதே போல், நம் இரத்தக் குழாய்கள் மற்றும் நரம்புகளும் இலகுவாகச் சுருங்கி விரிந்து செயலாற்றி நம் ஆயுளை நீட்டிக்கச் செய்யும். நம் உடலில் கெட்ட கொழுப்புச் சேர்வது இருவிதமாக நிகழ்கிறது. ஒன்று, கெட்ட கொழுப்பைக் கொண்டுள்ள உணவுகளை நாம் உட்கொள்ளும் போது. மற்றொன்று, கல்லீரல் செரிமானம் கெடுவதால் ஏற்படுவது. கெட்ட கொழுப்பு உணவுகளைப் பற்றிப் பின்னர் பார்ப்போம். இப்பொழுது கல்லீரல் செரிமானம் கெடுவதால் ஏற்படும் கொழுப்பு பாதிப்புகளைப் பார்ப்போம்.

    அன்பு நண்பர்களே! நம் உடலில் கொழுப்பு என்பது புரதமும் (Protein) கொழுப்பும் (Lipid) இணைந்த அமைப்பாகவே (Lipoprotein) உடல் பகுதிகளில் சேமிக்கப்படுகிறது. இதில் புரதம் அதிகமாகவும்  கொழுப்பு குறைவான விகிதமும் கொண்ட கொழுப்பை உயர் அடர் நல்ல கொழுப்பாகவும் (HDL), புரதம் குறைவாகவும் கொழுப்பு அதிகமான விகிதத்தில் இருப்பவைகளை கெட்ட கொழுப்பாகளாகவும் (VLDL மற்றும் LDL) பிரிக்கின்றனர். இங்கு நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் கெட்ட கொழுப்போடு புரதம் சேரும்போது அது நல்லக் கொழுப்பாக மாற்றம் ஆகும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆக, நம் உடலில்  கொழுப்புச் செயல்பாடு நல்லபடியாக இருக்க வேண்டுமாயின் கல்லீரலின் புரதம் மற்றும் கொழுப்புச் செரிமானம் சிறப்பாக இருக்க வேண்டும். அது எப்படி என்று விவரமாகப் பார்ப்போம்.

    நம் உடலில் சேமிக்கப்பட்டுள்ள கொழுப்புச் சக்தியாக உருமாற போதிய கொழுப்புச் செரிமான நொதிகள் வேண்டும். அவ்வித நொதிகள் புரதத்தால் உருவாக வேண்டியிருப்பதால் நம் உடலில் புரதச் செரிமானம் சரியாக இருக்க வேண்டும். நம் உடலில் உள்ளக் கெட்ட கொழுப்புகள் யாவையும் குறைவான புரதத்தைக் கொண்டுள்ளதால் அவைகள் சக்தியாக மாறுவதில்லை. அதனால்தான் நம் உடலில் அளவுக்கதிகமாகக் கெட்ட கொழுப்பு இருந்தும், நாம் விரதமிருந்தாலும், உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி செய்தாலும் அவைகள் கழல்வதில்லை. ஆக நம் உடலில் கொழுப்புச் செயல்பாடு தரமாக இருக்க வேண்டுமாயின் நாம் கீழ்க்கண்ட முறைகளைக் கையாள வேண்டும்.

    இந்த இதழை மேலும்

    சிந்தனை மாற்றமே வாழ்க்கையின் முன்னேற்றம்

    அமைதியாக அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தாலும், புத்தகங்கள் வாசித்துக் கொண்டிருந்தாலும், குழந்தைகளின் ஆர்ப்பாட்டைத்தை ரசித்துக் கொண்டிருந்தாலும் அல்லது தொழில் மற்றும் வேலையில் ஈடுபட்டிருந்த போதும், மனம் அதற்கு உள்ள வேலையான, பல வித சிந்தனைகளை உருவாக்கும் கடமையை தவறாமல் நிறைவேற்றுகிறது.

    அவ்வாறான சிறு வயதிலிருந்து வளர்ந்த சிந்தனைகள், பள்ளி, கல்லூரி மற்றும் தொழிலில் பெற்ற வெற்றிகளின் தாக்கம் நேர்மறை எண்ணங்களை உருவாக்குகின்றன.தற்போதுள்ள பல சிக்கல்களைத் தீர்க்க அவற்றின் தாக்கம் மிக அதிகமாக உதவுகின்றன. மனதை அமைதிப்படுத்தும் சிறந்த சிந்தனைகளை இவ்வாறான எண்ணங்கள் விதைக்கின்றன.

    பயம் கலந்த சிந்தனைகள், நிகழ்ந்து கொண்டிருக்கும் மோசமான சூழ்நிலைகள்; மற்றும் நண்பர்கள், உறவினர்கள் கூறிய, அவர்களுக்கு ஏமாற்றமளித்த சம்பவங்கள் ஆகியவை அமைதியான மனதில் ஒரு புயலைக் கிளப்பி, சிந்தனைகளை மோசமாக்கி, அந்த நிமிடங்களில் பாதுகாப்பற்ற உணர்வு  ஏற்பட்டு, இதை இழந்தால் எண்ண செய்வது, இப்படி நடந்தால் என எதிர்மறையாக சிந்தித்து, பல மணித்துளிகளை அமைதியின்மையில் கழிக்க தூண்டுகின்றன. இதனால் பல மணி நேரங்கள் நிம்மதியில்லாமல் தவிக்கக் கூடிய சூழ்நிலை உருவாகின்றன.

    நமக்குத் தெரிந்தோ, தெரியாமலோ உருவாகும் சில நிமிட எதிர்மறை மற்றும் நேர்மறை சிந்தனைகள, பல மணிநேர வாழ்வை அமைதியற்றதாகவோ அல்லது மகிழ்ச்சி நிறைந்ததாகவோ மாற்றுகின்றன. இந்தச் சிந்தனைகள் உருவாவதற்கான காரணங்களில் பயம், பொறாமை, மற்றும் போதுமென்ற மனம் இல்லாமை என பல்வேறு காரணங்களைக் கூறலாம்.

    ஒருவரது மனதில் தோன்றும் பயம், அவரது வியாபாரம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய அனைத்தையும் சிரழித்து, அவற்றை நாசமாக்குகின்றன.

    “மாபேரும் இத்தாலிய நடிகர் டூஸாவை, அவரின் மகள் ‘வாழ்க்கை என்றால் என்ன’ என்று வினவிய பொழுது, ‘துணிவைச் சோதித்துப் பார்ப்பது’ என்று பதில் கூறினார்.

    இந்த மாதிரியான சோதனைதான் வாழ்க்கை என்று புரிந்து கொண்டால், பயத்தை எதிர் கொள்வதற்கான துணிவு தானாக மனதில் தோன்றி, பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிகள், சூழ்நிலைகள் தோற்றமளித்து சிந்தனையை அமைதியளித்து, தைரியமான சிந்தனையைக் கொண்ட மனநிலையை தோற்றுவிக்கின்றன.

    அப்போது உருவாகும் தீர்விற்கான வழிமுறைகள் எதிர்மறை சிந்தனைகளை மாற்றி, தற்போது நடக்க வேண்டிய சிறந்த மற்றும் இயற்கைக்குப் பொருத்தமான முடிவுகளை எடுத்து, குழப்பம் தரக்கூடிய அந்த சூழ்நிலையில், அதை சிறப்பாக மாற்றுவதற்கான சிந்தனைகளை செலுத்தி மனதினை இலகுவாக வைத்திருக்கப் பழக்கினால், அப்பயத்திற்கான பிரச்சினைகளை சுலபமாக தீர்க்க முடியும்.

    இந்த இதழை மேலும்

    நவம்பர் மாத உலக தினங்கள்

    1. உலக கழிப்பறை தினம் (World Toilet Day) நவம்பர் – 19

    ஆண்டுதோறும் பல்வேறு நாட்கள் உலக தினங்களாகக் கடைப்பிடிக்கப்படுகின்றன.  ஆனால் கழிப்பறைக்காகவும் ஒரு உலக தினம் கடைப்பிடிக்கப்படுகிறது என்பது வியப்பாக இருக்கும். கழிப்பறை என்பது அவ்வளவு முக்கியமானதா? என்று நினைக்கலாம்.  ஆம், கழிப்பறைப் பிரச்சனை சர்வதேச அளவில் ஒரு பெரிய சவாலாக உள்ளது,  உலகம் முழுவதும் சுமார் 260 கோடி மக்கள் இந்த நெருக்கடியை நாள்தோறும் சந்தித்து வருவதாக ஐ.நா.வின் அறிக்கை தெரிவிக்கிறது,

    கழிப்பறைப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் 2001ம் ஆண்டு நவம்பர் மாதம் 19ம் தேதி தோற்றுவிக்கப்பட்டதுதான் உலக டாய்லெட் கழகம் (World Toilet Organisation) என்ற சர்வதேச அமைப்பு,  சிங்கப்பூரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பில் பல்வேறு நாடுகளின் கழிப்பறை மேம்பாட்டு அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன.  இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்ட நவம்பர்  19ம் தேதி அன்று அனைத்து நாடுகளிலும் ‘உலக கழிப்பறை தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது,  கழிப்பறை சுகாதாரத்தின் முக்கியத்துவத்தையும் அது தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதுதான் இந்த தினத்தின் முக்கிய நோக்கமாகும்,

    கழிப்பறை வசதி என்பது ஆரோக்கியத்தின் அடிப்படை.  இயற்கையின் அழைப்பிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது,  விழித்ததிலிருந்து படுக்கைக்குச் செல்லும் வரை, ஏன்? தூக்கத்திற்கு இடையிலும் கூட இயற்கை உபாதைகளுக்குப் பதில் சொல்லியே ஆக  வேண்டும்.  வீடு, அலுவலகம், பயணம் என்று எங்கே வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் இயற்கையின் அழைப்பு வரலாம்.  இன்று முடியாது, நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று ஒத்திப் போட முடியாது,  ஆனால் இதைப்பற்றிப் பேசுவதற்குக் கூட யோசிக்கிறோம். அது ஏதோ கூடாத செயல் போல எண்ணுகிறோம்,  இயற்கை உபாதைகள் ஏற்பட்டால், வெளிப்படையாகச் சொல்ல பலர் கூச்சப்படுகிறார்கள்.

    வீதிக்கு வீதி வகை வகையான உணவகங்கள், கடைகள் எல்லாம்  இருக்கின்றன.  ஆனால் கழிப்பறை மட்டும் நாம் தேடும் இடத்தில் அல்லது தேவைப்படும் இடத்தில் இருப்பதில்லை. வீட்டைவிட்டு புறப்படுவதற்கு முன்பே எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு புறப்பட வேண்டிய கட்டாய நிலை உள்ளது. பல நேரங்களில் அவசரத்துக்கு இடம் கிடைக்காமல் உரிய இடம் தேடி அலைந்து அல்லல்படுகின்றனர்,  அன்றாடம் கோடிக்கணக்கான  மக்களின் வாழ்க்கை இப்படித்தான் கழிகிறது.

    உலக அளவில் சுகாதாரமான கழிப்பறை வசதி இல்லாத 260 கோடி மக்களில் 180 கோடி மக்கள் தெற்காசிய நாடுகளில் வசிக்கிறார்கள்.  இந்தியாவைப் பொறுத்தவரை 28 சதவிகித மக்கள் மட்டுமே நல்ல கழிப்பறை வசதியோடு வாழ்கிறார்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது.  ஆப்பரிக்காவில் உள்ள காங்கோ, உகாண்டா,தான்சானியா போன்ற நாடுகள் இந்தியாவைவிட மேம்பட்ட சுகாதார வசதியோடு இருப்பதாக ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது,

    போதிய கழிப்பறை வசதி இல்லாத காரணத்தால் ஏரிகள், குளங்கள், சாலை ஓரங்கள், வயல்வெளிகள், கண்மாய்கள் போன்ற இடங்களில் காலைக்கடன்களை முடித்துக் கொள்ள வேண்டிய துர்பாக்கிய நிலை உள்ளது.  அதிலும் குறிப்பாகப் பெண்களின் நிலை மிகவும் வேதனைக்குரியது,  இருள் பிரியாத அதிகாலை நேரத்தையும், இருள் கவியும் மாலை நேரத்தையும் மட்டுமே அவர்கள் பயன்படுத்த வேண்டிய நிலை இருக்கிறது.  இதனால் அவர்கள் தொற்றுநோய், பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர்.

    சரியான கழிப்பறை வசதியில்லாத காரணத்தால் பெண்களின் கல்வி, ஆரோக்கியம், கௌரவம் போன்றவையும் பாதிப்புக்குள்ளாகின்றன,  குறிப்பாகப் பள்ளிகளில் பயிலும் மாணவிகள் தங்கள் படிப்பைத் தொடராமல் இடைநிறுத்தம் செய்வதற்கு தாங்கள் பயிலும் பள்ளியில் போதிய கழிப்பறை வசதிகள் இல்லாததும் ஒரு முக்கியக் காரணம் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

    இந்த இதழை மேலும்

    கரும்பின் தோற்றமும் வளர்ச்சியும்

    கரும்பின் பிற பெயர்கள்:

    பொதுவான பெயர்    – கரும்பு

    குடும்ப பெயர்         – கமினெசியே (Gaminaceae)

    சமஸ்கிருத பெயர் – க்சு (Iksu)

    அறிவியல் பெயர்   – சக்ரம் அஃபிஸிநேரம் (Saccharum officinarum)

    (Gana) என்னும் பெயரால் இந்தியாவில் அழைக்கப்படுகின்றது.

    கரும்பு முதன்முதலில் கண்டறியப்பட்ட இடம் தெற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகள் ஆகும்.

    இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட கரும்புவகை சக்ரம்பார்பொரி (Saccharum Barberi).

    நியு கிநியாவில் (New Guinea) கண்டுபிடிக்கப்பட்ட கரும்பு வகை சக்ரமெடூல் (Sacchurum Medule)

    பிற நாடுகளில் கரும்பின் வளர்ச்சி

    8 – ஆம் நூற்றாண்டில் மத்திய தரைக்கடல், மெசபடோமியா, எகிப்து, வடஆப்ரிக்கா, மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு அரேபியர்களால் அறிமுகம் செய்யப்பட்டது.

    10 – ஆம் நூற்றாண்டில் மெசபடோமியாவில் கரும்பு பயிர் செய்யாத இடமே இல்லை என்று கூறுமளவுக்கு மாறியது.

    ஸ்பெயின் நாட்டினரால் அமெரிக்காவிற்கு முதல் விவசாயப் பயிராக கரும்பு அறிமுகம் செய்யப்பட்டது.

    இந்தியாவிலிருந்து கரும்புப் பயிரினை, பெர்சியா மற்றும் அரேபிய நாட்டினர் எடுத்துச் சென்றனர்.

    கி.மு.1766 – இல் சீனர்கள் இந்தியாவில் இருந்து கரும்பினை தங்களது நாட்டிற்கு எடுத்துச் சென்று பயிரிட்டு வளர்த்தனர். மேலும், இந்தோனேசியாவில் இருக்கும் ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளில் கரும்பு உற்பத்தி செய்வதற்கு இது வழிவகை செய்தது.

    உலகில் கரும்பு உற்பத்தி செய்யும் நாடுகள்

    கரும்பு உற்பத்தியில் பிரேசில் முதலிடத்திலும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாம் இடத்தில் சீனாவும் வகிக்கின்றன.

    இந்தியாவில் கரும்பு உற்பத்தியில் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக மாநிலங்கள் முதல் மூன்று இடத்திலும், தமிழகம் நான்காவது இடத்திலும் உள்ளது.

    இந்திய வேளாண்மை உற்பத்தியில் கரும்பு இரண்டாம் இடம் வகிக்கிறது.

    இந்தியாவில் அதிகமாக கரும்பு உற்பத்தி செய்வதால் பூர்வீகம் இந்தியாவாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. உலகளவில் கரும்பு உற்பத்தி 5 சதவிகிதம் என்றால் இந்தியாவின் பங்கு 1 சதவிகிதம் ஆகும்.

    சுமார் 40 மில்லியன் கரும்பு உற்பத்தியாளர்கள் இத்தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனார் மேலும், கரும்பு ஆலைகளில் அதைச்சார்ந்த தொழில்களின் மூலம் 3.5 இலட்சங்களுக்கு மேலான வேலைவாய்ப்புக்களை இத்தொழில் ஏற்படுத்தித்தருகிறது.

    இந்தியாவில் கரும்பு உற்பத்தி பணப்புழக்கத்திற்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்றாக அமைகிறது.

    2014 – 15 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் இருந்து சூடான், சோமாலியா, அமெரிக்கா, ஸ்ரீலங்கா போன்ற பல நாடுகளுக்கு  சர்க்கரை ஏற்றுமதி செய்யப்படுகின்றது.

    தமிழக அளவில் விழுப்புரம், புதுக்கோட்டை, மதுரை, ஈரோடு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் அதிகளவு கரும்பு பயிரிடப்படுகிறது.

    இந்த இதழை மேலும்

    பாம்புக்கடி

    பாம்பு கடித்தவுடன் உடனடியாக முதலுதவி செய்வது அவசியமானது. முதலுதவி செய்யும்பொழுதே மருத்துவமனைக்குச் செல்ல ஒரு போக்குவரத்து வசதியைப் போனிலோ, வேறொரு முறையிலோ தொடர்புக்கொண்டு உடனடியாக வரவழைக்க வேண்டும்.

    பாம்பு கடித்தவரைப் பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்த வேண்டும். கடலில் வைத்து பாம்பு கடித்தால் உடனடியாக கரைக்கு அழைத்து வரவேண்டும். இல்லையெனில் தண்ணீரில் மூழ்க வாய்ப்பிருக்கிறது.

    • பாம்பு கடித்த நபரை அமைதிபடுத்தி பயத்தை நீக்க வேண்டும்.
    • பாம்பு கடித்த இடத்தில் அணியப்பட்டுள்ள இறுக்கமான ஆடைகள், வளையல்கள், மோதிரம், காலணிகளைக் கழற்றவேண்டும்.
    • பாம்பு கடிக்கப்பட்ட காலை அசைக்க கூடாது. ஏனென்றால் பாம்பு கடிக்கப்பட்ட காலை அசைப்பதால், அதன் விஷத்தன்மை இரத்த ஓட்டத்தின் மூலம் மற்ற உறுப்புகளுக்கு பரவ வாய்ப்பு உள்ளது.
    • பாம்பு கடிக்கப்பட்ட நபரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். பாம்பு கடிக்கப்பட்ட நபரை ஸ்டெட்சரிலோ, வாகனத்திலோ, சைக்கிளிலோ உட்கார வைத்து மருத்துவமனைக்கு அழைத்து செல்லலாம்.
    • மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்படும் கால தாமதத்தைத் தவிர்க்கவும்.
    • பாம்பு கடித்த இடத்தைக் கத்தியால் கீறுதல், பாம்பு கடிக்கப்பட்ட விரலை உடனடியாக வெட்டுதல், வாய்வழி உறிஞ்சுதல் அல்லது பொட்டாசியம் பெர்மாங்கனேட், மற்றும் ஜஸ் கட்டியைப் பாம்பு கடித்த இடத்தில் வைத்தல் ஆகியவற்றைக் கண்டிப்பாகச் செய்யக்கூடாது.
    • பாம்பு கடித்த இடத்தை இறுக்கி கட்டக்கூடாது. இது பாம்பு கடித்தவரின் இறப்பு விகிதத்தை அதிகப்படுத்தும். இவ்வாறு பாம்பு கடித்த இடத்தை இரண்டு மணி நேரத்திற்கு மேல் இறுக்கமாக கட்டி வைத்தால் திசுக்களுக்குப் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
    • கடித்த இடத்தை தேய்க்கவோ, அழுத்தவோ கூடாது. இப்படி செய்வதன் மூலம் விஷத்தன்மை மற்ற இடத்தில் பரவுவதைத் தடுக்கலாம்.
    • பாம்பு கடித்தவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது, கடித்த பாம்பு கொல்லப் பட்டிருந்தால் அதனையும் எடுத்து செல்ல வேண்டும். அவ்வாறு அல்லாத நேரத்தில் பாம்பைத் தேடி நேரத்தை வீணாக்க கூடாது. பாம்பு இறந்துவிட்டால் வெறுங்கையால் அதனை தொடக் கூடாது. மாறாக ஏதேனும் ஒரு பையில் போட்டு எடுத்துச் செல்ல வேண்டும்.

    விஷமுள்ள மற்றும் விஷமற்ற பாம்புக்கடியை வித்தியாசப்படுத்துதல்

    • கடித்த பாம்பு கொல்லப்பட்டிருந்தால் அதனை கண்டு அறியலாம்.
    • பாம்பு கடித்த இடத்தில் தோன்றும் பல்லின் தடத்தினை (fang marks) பார்க்க வேண்டும். ஆனால் இது பல விஷமற்ற பாம்புகளிலும் தோன்றலாம். விஷமுள்ள பாம்புகளில் இல்லாமலும் இருக்கலாம் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
    • வலியும், வீக்கமும் அதிகமாகிக் கொண்டே இருந்தால் விஷமுள்ள பாம்புக்கடியாக இருக்கும்.

    விஷமுள்ள பாம்புக்கடியினால் ஏற்படும் அறிகுறிகள்

    –    வலி

    –    வீக்கம்

    –    இரத்தக்கசிவு

    –    வாந்தி

    –    வயிற்றுவலி

    –    இரத்த அழுத்தம் குறைதல்

    –    சிவப்பு நிறத்தில் சிறுநீர் கழித்தல்

    –    சிறுநீர் கழித்தல் குறைவது

    –    நரம்புத் தளர்ச்சி

    இந்த இதழை மேலும்

    நெஞ்சம் குளிர்ந்த நிறைவான வாழ்த்து !

    உலகமைந்தன சூரியக் கதிர்கள் !

    உயிரமைந்தன இறை தரும் வரங்கள் !

    கடலமைந்தன வெண்ணிற முத்துகள் !

    கதிரமைந்தன நெல்மணி வித்துகள் !

    நாவமைந்தன ஆயிரம் பாடல்கள் !

    நமக்கமைந்தன இரு  பெண்மையின் ஜோதிகள் !

    ஒன்று   இன்று மலர்ந்த  திருவளர் செல்வி   ஸ்ரீஷா  மீனா

    பின்னொன்று அன்றலர்ந்த தாமரைச் செல்வி ஸ்ரீ வர்ஷா

    அலைமகள்  வடிவே  ஸ்ரீஷா  மீனா!

    அழகின்   அழகே   ஸ்ரீஷா  மீனா!

    அன்பின்  உருவே   ஸ்ரீஷா  மீனா!

    அறிவின்  தெளிவே  ஸ்ரீஷா  மீனா!

    சித்திரைப்  பௌர்ணமி நிலவே!  வாழ்க!

    பத்திரைமாற்றுப்   பொன்னே வாழ்க!

    வார்த்த  தங்கச்சிலையே ! வாழ்க!

    வடித்த  சந்தன உருவே ! வாழ்க!

    கவிகள்  எழுதாத  காவியமே!  வாழ்க!

    கலைகள் வரையாத ஓவியமே!  வாழ்க!

    இந்த இதழை மேலும்

    பயமும் பணிவும்

    பயம் வேறு பணிவு வேறு. தனக்குள் உள்ள அனைத்து வல்லமைகளையும் கீழே கழற்றி வைத்துவிட்டு ஒன்றுக்கு- ஒருவருக்கு தலை வணங்குவதுதான் பணிவு என்பது. ஆனால் பயம் என்பது அப்படியல்ல, ஒருவருக்கு கோழையாகப் பயந்து கொண்டு தலை வணங்குவதாகும். இப்பணிவு சில நேரங்களில் அநீதிக்குத் தலை வணங்கவும் செய்து விடும்.

    இன்னொரு வகையில் சொன்னால் பணிவு என்பது நல்ல செயல்களுக்கும், நீதிக்கும் தலை வணங்குவதாகும்.

    முறையற்ற செயல்களுக்கு பணிந்து போவதே தன்மானம் இன்மை. இம்மானத்தை இழப்பதென்பதாகும்.

    நாங்கள் இளைஞர்கள். நாங்கள் சாதிப்போம்; ஆனால் சந்தர்ப்பம் கிடைக்க வேண்டும். அதற்குத் தகுந்த சந்தர்ப்பம் கிடைத்தால் நாங்கள் கண்டிப்பாக சாதிப்போம்; சாதித்தே காட்டுவோம் என்று இருங்கள். அச்சந்தர்ப்பம் கைக்குக் கிடைக்கும் வரை அதைத்தேடி அலையாய் அலைந்து கொண்டும் இருப்போம் என்று சத்திய சபதத்துடன் வாழுங்கள்.

    வரிகளுக்கு வேண்டுமானால் முற்றுப்புள்ளிகள் உண்டு. ஆனால் எம் சாதனைக்கு முற்றுப்புள்ளி என்பதில்லை என்கிற ஆழ்ந்த கோட்பாடுடன் செயல்படுங்கள்.

    பயம் எதற்கு? பயம் கொள்ளாதே

    பாதகம் செய்பவரைக் கண்டால் பயம் கொள்ளல் ஆகாது பாப்பா. மோதி மிதித்திடு பாப்பா, முகத்தில் உமிழ்ந்திடு பாப்பா என்ற பாரதியின் வாசக வரிகளை பயம் வரும் பொழுது உனக்குள் நினைவிற்குக் கொண்டு வா. அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே, உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்ற மகாகவியின் வரிகளை பயம் வரும் பொழுது ஐந்து முறை உச்சரியுங்கள்.

    இதைச் செய்தால் உனக்குள் இருக்கும் அச்சம் இறந்துவிடும். நீ உயிருடன் இருப்பாய், இல்லையேல் அச்சம் உயிருடன் உனக்குள் இருக்கும்- நீ இறந்து கிடப்பாய் கோழையாய்.

    முதலில் உன்னையறி; பின்பு உலகையறிவது மிக எளிது. உன்னையறிவது கடினமானாலும் அறிந்துவிட்டால் மண்ணையறிவது சுலபம். உலகத்தில் உன்னை நிலை நிறுத்த உனக்குள் உன்னை நிலை நிறுத்து. மண்ணை சுலபமாக அறிய உன்னைப் பகுத்தறி.

    அறிவைப் பெருக்கு! ஆசையைச் சுருக்கு! ஆவணத்தை நறுக்கு! நல்லதே நினை, நல்லவையே செய்! நன்மையே பிறக்கும்!.

    இலக்குக்காக எதையும் இழ, எதையும் செய் எங்கு சென்றாலும் நீ செல்லும் இடங்களுக்கெல்லாம் இலக்கை உன் இதயத்தில் எடுத்துச்செல்.

    காலத்தை வீணாக்காதே வீணாக்கிவிட்டால் உன் வாழ்க்கை வீண்.  இலட்சியத்திற்கு பல இடையூறுகள் வரும் அந்த நேரத்திலும் துணிச்சலோடு எதிர்கொண்டு செயல்படு. இறுதியில் வருத்தம் வரலாறாகிவிடும்.

    உண்மையுடன் உறவு கொள். பொய்மையுடன் பகை கொள். ஆசை, பேராசை, காமம் போன்ற எதற்குள்ளும் உன்னைத் தொலைத்து விடாதே. தொலைத்து விட்டுத் தேடாதே.

    இந்த இதழை மேலும்

    உள்ளே பார் உன்னை தெரியும்..

    பூத்த பூ உதிர்வதென்பது இயல்புதானே? மரணமொன்றும் புதிதில்லையே? ஆனால் வெறுமனே வாழ்ந்துவிட்டு வேண்டாமலே மரணித்துப்போக நாம் தகுதியுடையவர்களா? வாழும்போது நாம் எவ்வாறு வாழ்ந்தோமென்று இறக்கும்முன் எத்தனைப் பேரால் நினைக்கமுடிகிறது? நினைத்தாலும் கண்ணீரால் நனையுமந்த கடைசி தலையணையுள் பதிவாகும் நம் கவலைகளை யாரறிந்து தனை திருத்தி மீண்டும் நன்றாக வாழத்தனை பழகிக்கொள்ளப் போகின்றனர்? பின் யாருக்குமே நமை முழுதாகத் தெரியாமல் வாழ்ந்து மறைத்த பல ரகசியங்களோடு இறத்தலென்பது மனதை பாரப்படுத்தி மண்ணை கனக்கச் செய்யாதா? அதனால் தான் ரகசியங்களால் புதையுண்ட உடல்களை அரித்த மண் வெடித்து பூகம்பமாகவும் பொங்கும் எரிமலையாகவும் கனன்று கனன்று எஞ்சிய உலகை அழிக்க இயற்கை காத்து நிற்கிறதோ?

    பிறகு நாம் என்னதான் செய்வது?

    என்ன செய்வதென்பதை வாழும்போதே யோசிப்போம். இந்த உடல் வரம். இந்த உயிர் வரம். இந்த வாழ்க்கை இனிது. நம்மிடமிருக்கும் இந்த ஆற்றல் வலிது. உலகை மடித்து உள்ளங்கைக்குள் மூளையால் அடக்கிக் கொண்டது அறிவியல் எனில் ஒரு விரலால் தாங்கிநிற்கும் பலத்தை மனதால் உடலால் பெறமுடியும். அதெப்படி என்று சந்தேகிப்பீரெனில் ஒரு தீக்குச்சியை எடுத்து வெய்யிலில் போடுங்கள், அது உடனே எரியுமா? எரியாதுதானே? அதே ஒரு லென்ஸ் எடுத்து சூரியஒளியை அந்த தீக்குச்சியினுடைய மருந்தின்மீது குவியுமாறு காட்டிப்பாருங்கள், அந்த தீக்குச்சி உடனே தீப்பற்றி எரியும், காரணம், “எங்கு சக்தியானது ஒருமித்துக் குவிக்கப்படுகிறதோ அங்கிருந்து வேறொரு அதீத சக்தி விரைவாக வெளிப்படுகிறது”.

    ஆக, அப்படி, எண்ணத்தை குவித்து திறமையை வெளிக்கொண்டுவரல் என்பதொரு கலை. அந்தக் கலையைத்தான் தியானம் வழியே நிகழ்த்தி உடலைத் தனியாகப் பார்க்கவும், மனதை தனியாக அசைக்கவும் நம் பெரியோர் கற்றுத் தந்துள்ளனர்.

    தியானம் என்பதில் பலர் பலவாறு சொன்னதும், அங்ஙனம் அவரவர் வென்றதுமாய் நிறையப் புத்தகங்களும் செவிவழி பாடமும் பயிற்சியும், உண்மையின் குறிப்புகளுமென ஏராளமுண்டு. அவைகளெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இங்கே நமக்கு மனதின் எண்ணத்தைக் குவித்து செயலை வெற்றியாக வெளிக்கொண்டுவர ஒரு இலகுவான பயிற்சி தேவைப்படுகிறது. ஆடும் மனதை அடக்கி அலைபாயும் எண்ணத்தை சீராக்கி ஒரே இடத்தில் நிறுத்தி, வேண்டுவதையெல்லாம் பெறும் சக்தி மனிதனிடம் உண்டென்பதை அறிய இத்தகையப் பயிற்சிகள் பெரிதும் உதவும்.

    தன்னை தானறியும் மனிதன், செருக்கோடு அலைந்தால் பூமி தாங்காதென்று எண்ணிய முன்னோர், உனக்கும் மேல் ஒருவன் உள்ளான் அவனை நம்பு எல்லாம் நடக்குமென்று இயற்கையின் சக்திக்கு நன்றியறிவிக்கும் விதமாக  கடவுள் நம்பிக்கையை முன்வைத்து, எல்லாம் அவன் செயலென்று கற்பித்ததன்பேரில்; நம்பிக்கையின் முதன்மை தன்மையென்பது இறையினிடத்து ஒன்றே என்றாகி, அது பின்னர் பலவாக மாறி, இன்று தனையே மறக்கும் நிலைக்கு நாம் வரப்பட்டுள்ளதையும் நாம் அறியவேண்டும்.

    ஒரு யானைக்குட்டியை யானைப் பாகன் மேய்ச்சலுக்கு கொண்டுபோய் திரும்பி வருகையில் ஒரு சிறிய கொம்பு நட்டு அதில் அந்த யானைக்குட்டியை கட்டிவைப்பானாம். சிலவேளை அவன் மேய்ச்சலுக்குப் போக தாமதமாகையில் யானைக்குட்டிக்கு பசியெடுத்து தனைக் கட்டப்பட்டுள்ள கயிற்றை  இழுத்து இழுத்து அறுத்துப்பார்க்க முயன்று அறுக்கமுடியாமல் தோற்றுப்போகுமாம். இப்படி எத்தனையோமுறைப் போராடியும் அந்தக் கயிற்றை அறுக்க முடியவில்லை என்பதால் அவன் வந்து அவிழ்த்து விடும்வரை அந்த யானை அந்த இடத்திலேயே பசியோடு காத்திருக்குமாம்.

    இந்த இதழை மேலும்

    விரும்பிய தருணங்களை திரும்பிப் பார்க்கிறேன்

    முனைவர் ப. சுந்தரராஜ்

    உதவிப் பேராசிரியர், விலங்கியல் துறை

    பாரதியார் பல்கலைக்கழகம், கோவை

    “பயிற்று பல கல்வி தந்து இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்” என்றார் பாரதி. அவரின் வாக்கிற்கிணங்க தான் கற்ற கல்வியின் மூலம் இன்று அறிவியல் துறையில் தனக்கென்று ஒரு களம் அமைத்து பல வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தி வையகம் போற்றும் ஒரு அறிவியல் விஞ்ஞானியாய் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டியிருக்கும் பாரதியார் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் துறையில் உதவிப் பேராசிரிராகப் பணியாற்றி வரும் முனைவர் ப. சுந்தரராஜ் அவர்களின் அழகிய தருணங்கள் இனி நம்மோடு…

    கோவை மாவட்டம், மதுக்கரை அருகிலுள்ள கருஞ்சாமிக் கவுண்டன்பாளையம் என்ற குக்கிராமத்தில் 1960 ஆம் ஆண்டு பிறந்தேன். பெற்றோர்கள்அப்பா பழனிச்சாமி அம்மா மயிலாத்தாள். இரண்டு சகோதிரிகள் மற்றும் ஒரு தம்பி. நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால் பள்ளிப் படிப்புக்காக வேறு நகரங்களுக்குச் செல்ல இயலாத நிலையால் எங்கள் ஊரின் அருகில் உள்ள குமாரபாளைத்தில் தொடக்கப்பள்ளி படிப்பு ஆரம்பமாயிற்று. ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பாலத்துறை நடுநிலைப்பள்ளியிலும் பின்னர் 9 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை மதுக்கரை மேல் நிலைப்பள்ளியிலும் பள்ளிப்படிப்பு தொடர்ந்தது.

    என்னுடைய வற்புறுத்தாலும் பெற்றோர்களின் விடாமுயற்சியாலும் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் 1977 ஆம் ஆண்டு புகுமுக வகுப்பில் சேர்ந்தேன். என்னுடைய கல்விக்குப் பெரியதோர் வித்திட்டது இக்கல்லூரியாகும். இதற்கு உதாரணம் நான் கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரியில் விலங்கியல் துறையில் பட்டப்படிப்பில் சேர்ந்தது முதல் அத்துறையில் முதல் மாணவனாகத் தேர்வு பெற்றதே தனிச்சிறப்பாகும்.

    அதன் பின் கோவை அரசு கலைக்கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படித்து அதிலும் முதல் மாணவனாகத் தேர்வு பெற்றேன். இது என் வாழ்வில் ஒரு முக்கிய நிகழ்வாகக் கருதுகிறேன். அப்போது பாரதியார் பல்கலைக்கழகம் தோற்றுவித்த முதல் ஆண்டில் விலங்கியல் துறையில் இளம் முனைவர் பட்டத்தைப் பெற்று பின்னர் முனைவர் பட்டத்தை இப்பல்கலைக்கழகத்தின் கீழ் இந்திய விவசாய ஆராய்ச்சிக்கழகத்தின் உறுப்பு நிறுவனமான இரும்பு நிறுவனத்தில் நூற்புழு விஞ்ஞானியான டாக்டர் உஷா மேத்தா அவர்களின் கீழ் ஆராய்ச்சி செய்து பெற்றேன்.

    எனது வாழ்க்கையில் மிக முக்கியமான ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியவர் டாக்டர் உஷா மேத்தா அவர்கள் ஒரு அரிதான மானுடப்பிறவி. அவருடைய கொடைத்தன்மைக்கு எடுத்துக்காட்டு இன்று அவர் பெயரில் அமைந்த அரங்கம். தனி ஒருவராக முயற்சி செய்து தன் சொந்த செலவில் அமைத்துக் கொடுத்த ஒரு வள்ளல் பெருந்தகை. ஒவ்வொரு முறையும் அந்தக் கட்டிடத்தைக் கடந்து செல்லும் போதும் அவருடன்  நான் ஆராய்ச்சி செய்த நாட்கள் பசுமையாய் மனதில் பதிந்து போகும். முனைவர் பட்ட ஆய்வுக்காக நான் மேற்கொண்ட ஆராய்ச்சி இந்திய வேளாண் நிறுவனத்தின் மிகச் சிறந்த விருதான ஜவஹர்லால் விருது நான் பெற்ற போது அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.

    முனைவர் பட்டம் பெற்ற பின்பு கோழிக்கோட்டில் உள்ள வாசனை திரவிய ஆராய்ச்சி மையத்தில் இரண்டு வருடங்கள் பணிபுரிந்து பின்னர் 1998 ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஐடகோ பல்கலைக்கழகத்தில் நூற்ப்புழு விஞ்ஞானியாக பணிபுரியும் வாய்ப்பு கிட்டியது. அதே பல்கலைக்கழகத்தில் 1998 ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை 12 வருடங்கள் பணியாற்றியது ஒரு மிகச்சிறந்த அனுபவம். கடந்த 2011 ஆண்டு முதல் இதுவரை பாரதியார் பல்கலைக்கழகத்தில் விலங்கியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றேன். கடந்த 2001 ஆம் ஆண்டு விலங்கியில் துறையில் முதுமுனைவர் பட்டத்தைப் பெற்றது மிகப் பெரிய சாதனையாகக் கருதுகிறேன்.

    ஐடகோ பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த போது உருளைக்கிழங்கில் நூற்புழு தாக்குதல் பற்றி ஆராய்ச்சி மேற் கொண்ட போது  புதிதாக ஒரு வித நூற்புழுவை முதன் முறையாக எங்கள் குழுவினர் கண்டுபிடித்தோம். அந்தக்கண்டுபிடிப்பு மிகப் பெரிய தாக்கத்தை அறிவியல் ஆய்வாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியது. இக்கண்டுபிடிப்பு மூலம் உருளைக்கிழங்கிற்கு நூற்புழுக்களால் ஏற்படும் பாதிப்பை முன் கூட்டியே கண்டுபிடித்து அது மேலும் பரவாமல் இருக்க தடுப்பு முறைகளை மேற் கொண்டோம்.. இப்புழு பற்றிய ஆராய்ச்சியை மேலும் தொடர அமெரிக்க அரசாங்கம் 65 மில்லயன் டாலர்களை ஒதுக்கியது.

    இந்த இதழை மேலும்

    சுவாமி விவேகானந்தரின் வெற்றிச் சிந்தனைகள்

    • அச்சமே நமக்குத் துயரத்தைத் தருவது. அச்சமே கேட்டை விளைவிப்பது. நமது உண்மை இயல்பை நாம் அறிந்து கொள்ளாமல் இருப்பதனால் தான் நமக்கு அச்சம் ஏற்படுகிறது.
    • அடக்கப்படாமல் உள்ள மனமும், அறவழியில் செலுத்தப்படாத மனமும் நம்மை எப்போதும் கீழ் நோக்கியே இழுத்துச் சென்று அழித்துவிடும்.
    • அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.
    • அதிகார ஆசை, பொறாமை இந்த இரண்டினிடமும் மிக எச்சரிக்கையாக இருங்கள்.
    • அமைதிக்காக உழைத்து அமைதியுடன் வாழ்பவர்களே பாக்கியசாலிகள்.
    • அமைதியும் தூய்மையும் கொண்ட ஆன்மீகத்தில், இரவும் பகலும் மூழ்கி வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள்.
    • அயல்நாட்டு உதவியை நீங்கள் நம்பியிருக்கக்கூடாது. தனி மனிதர்களைப் போலவே தேசங்களும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ள வேண்டும். இதுவே உண்மையான தேச பக்தி.

    இந்த இதழை மேலும்