– 2016 – February | தன்னம்பிக்கை

Home » 2016 » February

 
  • Categories


  • Archives


    Follow us on

    கல்லறையா வகுப்பறையா

    வாழ்க்கையில் நிச்சயிக்கப்பட்ட தருணங்கள் இரண்டு. அவை ஒன்று பிறப்பு. மற்றொன்று இறப்பு. எப்பொழுது பிறப்பு நிகழ்கிறதோ அப்பொழுதே இறப்பு என்ற ஒன்று நிகழப் போவது உறுதியாகிறது. பிறப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. இறப்பு துக்கத்தைக் கொடுக்கிறது. பிறப்பைக் கொண்டாடி மகிழ்கிறோம், இறப்பை அழுது தீர்க்கிறோம். மகிழ்ச்சி தரும்; ஒன்றை திரும்ப திரும்ப நினைவுத்திரைக்கு கொண்டு வருகிறோம். துக்க நிகழ்வுகளை நினைவுகளில் இருந்து விலக்க முயற்சிக்கிறோம். எனவேதான் பிறந்த நாளை, திருமண நாளை கொண்டாடுகிறோம், புகைப்படங்கள் எடுத்து முகநூலில் பகிர்ந்து கொள்கிறோம். துக்க நிகழ்வுகளுக்கு இதுபோல் செய்வதில்லை, விரும்புவதுமில்லை. இறப்பு என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்ற எதார்த்த உண்மையைத் தாண்டி, தாமும் ஒரு நாள் இறந்து விடுவோம் என்றசிந்தனை தோன்றும்போது அது ஒரு நொடிப் பொழுதாவது நம்மை உலுக்கத்தான் செய்கிறது.

    “நாம் ஒரேயடியாக மரணம் அடைவதில்லை, ஒவ்வொரு நாளும் மரணம் அடைகிறோம்” என்று ரோசி பிலிப் என்பவர் கூறுகிறார். நம் அன்பை ஒருவர் புறக்கணிக்கும் போது நாம் கொஞ்சம் செத்து போவதில்லையா! நம்மை ஒருவர் அலட்சியப்படுத்தும் போது நாம் சிறிது சிதைந்து விடுவதில்லையா! நமக்கு நெருக்கமானவர் ஒருவர் இறக்கும்போது நமக்குள் ஒரு பகுதி அவரோடு இறந்து போவதில்லையா!  ஓரிடத்தைவிட்டுப் பிரிகிறபோதும், நட்பைவிட்டு நகருகிறபோதும், நெருங்கியவர்கள் தளர்கிறபோதும் ஏற்படும் வெற்றிடம் “இறப்பு” எனும் வகையைச் சார்ந்தது என்று கூறுகின்றார் டாக்டர் வெ.இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்கள்.

    ஒவ்வொரு பருவம் முடிகிறபோதும் நாம் மரணம் அடைகிறோம் என்பதை நம் பண்டைய இலக்கியமான குண்டலகேசி அழகாக இயம்புகிறது.

    “பாளையாம் தன்மை செத்தும்

    பாலனாம் தன்மை செத்தும்

    காளையாம் தன்மை செத்தும்

    காமுறும் இளமை செத்தும்

    மீளும் இவ்வியல்பும் இன்னே

    மேல் வரும் மூப்புமாகி

    நாளும் நாம் சாகின்றோமால்

    நமக்குநாம் அழாதது என்னோ”

    பிறர் சாவதற்காக நாம் அழுகிறோம்.  ஆயின் தாயின் வயிற்றில் கருவான நிலை செத்து, பின் குழந்தையான நிலை செத்து, பின் இளைஞனான நிலை செத்து முடிவில் மூப்பெய்தி இவ்வாறு நாளும் நாளும் சாகின்றோம்.  இப்படியிருக்க நமக்கு நாமே அழாதது ஏன்? என்னும் சிந்தனையைக் குண்டலகேசி முன்வைக்கிறது.  உறங்குவது போன்றது இறப்பு, உறங்கி விழிப்பது போன்றது பிறப்பு என்றகருத்தை வள்ளுவர் ‘உறங்குவது போலுஞ் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு’ என்கிறார். ஆகவே பிறப்பினை எவ்வாறு மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறோமோ அதனைப் போலவே இறப்பினையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    ஆட்டிசம்

    ஆட்டிசம் என்பது மன இறுக்கம் ஆகும். இது இருபாலரையும் தாக்கக்கூடிய மனவளர்ச்சி சம்பந்தப்பட்ட கோளாறாகும். இது நோய் அல்ல. இப்படி ஒரு கோளாறு உள்ளதாக குழந்தைகளிடம் முதன் முறையாக கண்டுபிடித்தவர்

    லியோ கண்ணர் (வருடம் 1943). மூளையின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு பேச்சு மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ தன்னைச் சுற்றியுள்ள உலகத்துடன் தொடர்பு கொள்ள இயலாது செய்யும் ஒரு குறைபாடு. இப்பாதிப்பு பிறந்த மூன்று வருடங்களுக்குள் ஒரு குழந்தையிடம் தென்பட துவங்கும். ‘ஆட்டிசம்’ என்ற இந்த குறைபாட்டிற்கு உடல்ரீதியான அறிகுறிகள் கிடையாது. பாதிக்கப்பட்ட குழந்தைகள் தங்களைச் சுற்றி இருக்கும் எதைப் பற்றிய சிந்தனையுமே இல்லாது தங்களுக்கென்று ஒரு தனி உலகத்தை உருவாக்கிக் கொண்டு அதில் அமிழ்ந்து கிடப்பார்கள். இன்னதென்று வகைப்படுத்த இயலாத பலவித அசாதாரணமான பாதிப்புகளை உண்டாக்கும். தூய தமிழில் இது ‘தற்புனைவு ஆழ்வு’ என குறிப்பிடப்படுகிறது.

    ஆட்டிசத்தினால் பாதிக்கப்படுபவர்கள் யார்?

    இன, மத, மொழி வேறுபாடுகள் இன்றி காணப்படும் ‘ஆட்டிசம்’ பெண்களை விட ஆண்களையே பெரும்பாலும் தாக்குகிறது. குடும்ப வருமானம், வாழ்க்கைத் தரம், கல்வி என்ற எந்தப் பாகுபாடும் அதற்குக் கிடையாது. இன்று சுமார் 20 இலட்சம் இந்தியர்கள் ஆட்டிசத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது பரவலாகக் காணப்படுகிறது என்றாலும், பல துறைகளிலுள்ள படித்தவர்கள் கூட ‘ஆட்டிசம்’ பற்றியோ, அந்தக் குறைபாடுள்ள நபர்களைக் கையாளும் முறை பற்றியோ அறியாதவர்களாக இருக்கிறார்கள். அறிகுறிகளைக் கவனித்து முறையான பரிசோதனைகளுக்குப் பின் அதற்கான சிகிச்சை முறைகளின் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்விற்கு வழி செய்வது பற்றி யாரும் எண்ணிப் பார்ப்பதில்லை.

    அறிகுறிகள் (ஆரம்ப காலக்கட்ட அறிகுறிகள்)

    இளைய தலைமுறையின் தற்போதைய ஒழுக்கக் குறைவுக்கு காரணம் என்ன?

    தற்போதைய காலகட்டத்தில் இளைய தலைமுறையினரின் ஒழுக்கக் குறைபாடுகள் பற்றி நாளிதழ்களிலும், ஊடகங்களிலும் செய்திகள் தினம் வந்த வண்ணம் இருக்கின்றன.

    எல்லா மாணவர்களுக்கும் இந்தக் குறை இருக்கிறது என்று கண்டிப்பாக சொல்லிவிட முடியாது. படிக்கும் பருவத்தில் 10 சதவீதம் அல்லது 15 சதவீதம் மட்டும்தான் இந்தக் குறைபாடுகள் காணப்படுகிறது. இந்தச் சதவீதத்தினுடைய அளவு அதிகமாகக் கூடாது என்பதுதான் கல்வியாளர்களின் கவலை.
    மாணவர்களுடைய ஒழுக்க குறைவிற்கு பல காரணங்கள் இருக்கின்றன. தவறான பாதைகளின் மீது தடையில்லா ஆர்வம், தன்னம்பிக்கையின்மை, மனோத்திடக்குறைவு, மனஅழுத்தத்தின் காரணமாக பிரச்சனைகளை எதிர்கொள்ள தயக்கம் அல்லது பயம், கூடா நட்பு, போதைக்கு அடிமையாதல், குடிப்பழக்கம், பிஞ்சிலே பழுத்துப்போதல், மூத்தவர்களையும், பெற்றோர்களையும், ஆசிரியர்களையும் அவமதிக்கும் செயல்கள், கீழ்படியாமை, எதிர்த்துப் பேசுதல், பாலியல் கவர்ச்சி, ஊடகங்களின் தாக்கம், சினிமா மோகம், கலாச்சார மாறுபாடு, மாற்றுச் சிந்தனைகள், அலைபேசியின் தாக்கம், புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளின் தாக்கம், எல்லாத்தரப்புகளிலும் பொறுப்பின்மை, பொறுப்பைத்தட்டிக்கழித்தல், நல்லவைகள் மேல் ஆர்வக்குறைவு, தீயன பற்றி தீராத ஆர்வம் இவையெல்லாம் இன்றைய இளையதலைமுறையை மாசுபடுத்திக் கொண்டிருக்கின்றன.

    இதற்கான காரணிகள் என்னவென்று பார்த்தால்…?

    குடும்பச்சூழல், பெற்றோரின் கவனக்குறைவு, நண்பர்களின் ஆளுமை, சுற்றுப்புறச் சூழல், ஊடகங்களின் தாக்கம், அரசின் கண்டிப்பின்மை, சமுதாயத்தின் கவனமின்மை, ஆசிரியர்களின் அச்ச உணர்வு, பள்ளிகள் பொறுப்புக்களை ஒதுக்கும் தன்மை, கட்டுப்பாடுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலை, கல்வியாளர்களுடைய மனோபாவம், சகிப்புத்தன்மை குறைந்து போதல், எல்லாத்தரப்பு பொறுப்புகளையும் தட்டிக்கழித்தல்.
    போன்றவைகள் இதற்கு காரணமாக அமைகின்றன.

    குடும்பச்சூழல்…

    பருவ வயதில் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் திசைமாறி செல்வதற்குக் காரணமாக அமைவது, அவனது குடும்பச்சூழல். தந்தையும், தாயும் பிரிந்திருக்கின்ற நிலை அல்லது தாயோ, தந்தையோ இல்லாத நிலை. இவர்கள் இருவரும் இல்லாமல் பாதுகாவலர்கள் கண்காணிப்பில் வளர்கின்ற நிலை. கட்டுப்பாடுகள் இல்லாத நிலை. நல்லது கெட்டது சொல்லித்தர பெரியவர்கள் இல்லாமை. கூட்டுக்குடும்பங்கள் இல்லாது போதல். இவைகளெல்லாம் மாணவர்களுடைய மனநிலை மாறுபாட்டிற்கு காரணிகளாக அமைகின்றன.

    வெற்றி உங்கள் கையில்-26

    மனித வாழ்க்கையில் குழந்தைப் பருவம்முதல் முதுமை பருவம்வரை நெருக்கமான தொடர்புகொண்டிருப்பது படிப்பு ஆகும்.

    காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு
    கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
    மாலை முழுவதும் விளையாட்டு – என்று
    வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா
    – என பாட்டுக்கொரு புலவர் பாரதியார் குறிப்பிடுவார்.

    “அதிகாலை நேரத்தில் எழுந்து படிக்கின்றபொழுது படிக்கின்ற கருத்துக்கள் நமது மனதில் ஆழமாகப் பதியும். அதனால் காலை நேரத்தில் படிப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்” என்பது பாரதியாரின் கருத்து ஆகும்.

    “குறைந்தபட்சம் ஒரு ஆண்டில் 24 புத்தகங்களையாவது படிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு படிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார் புகழ்பெற்ற டாக்டர் ஹெர்பர்ட். இந்த 24 புத்தகங்களை படிப்பதற்கு நேரத்தை எப்படி ஒதுக்க வேண்டும்? என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

    ஒரு நாளைக்கு 15 நிமிடங்கள் படியுங்கள்.வாரத்திற்கு 1 3/4 மணி நேரம் கிடைக்கிறதுமாதத்திற்கு 7 மணி நேரம் கிடைக்கிறது.

    ஒரு நல்ல புத்தகத்தைப் படிப்பதற்கு 3 மணி நேரம் போதும். எனவே மாதத்திற்கு சுமார் 2 புத்தகங்களைப் படிக்கலாம். மொத்தம் ஆண்டிற்கு 24 புத்தகங்களைப் படிக்கலாம்.டாக்டர் ஹெர்பர்ட் கூறிய கருத்து மிக முக்கியமான ஒன்றாகும்.

    பிரி.கே.ஜி. முதல் பட்டப் படிப்புவரை சுமார் 18 ஆண்டுகள் செலவழித்து பள்ளிகளிலும் – கல்லூரிகளிலும் படிப்பது எப்படி? என்பதை இளம் பருவத்தினர் கற்றுக்கொள்கிறார்கள். சுமார் 18 ஆண்டுகள் பாடங்களைப் படித்தபின்பும் “நீங்கள் என்ன படித்தீர்கள்?” என்று கேட்டால் அதற்கான விளக்கமான பதிலை சொல்வதற்கு இன்று பலர் தயங்குகிறார்கள். “எதைப் படித்தோம்? எப்படிப் படித்தோம்?” என்பதை முழுமையாக அறியாமலேயே பட்டம் பெற்றவர்களும் உண்டு.

    அறிவைப் பெருக்குவதற்கும், திறமைகளை வளர்ப்பதற்கும் படிப்பு ஒரு அடித்தளமாக அமைகிறது. சிறந்த முறையில் படித்தவர்கள் தங்களது நற்பண்புகளை நல்லமுறையில் வளர்த்துக்கொள்கிறார்கள். பள்ளி – கல்லூரிகளில் படிக்கும்போதே அறிவைப் பெருக்குவதற்கு உதவும் பல நல்ல நூல்களைக் கண்டறிந்து படிப்பது ஒரு மனிதனுக்கு அவசியத்தேவையாகும். இதனால்தான் – கல்வி நிலையங்களில் நூலகங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

    அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு ஊரிலும் பொதுநூலகம் ஏற்படுத்தப்பட்டு, அங்கு எல்லாவிதமான புத்தகங்களும், வார மாத இதழ்களும் வரவழைக்கப்பட்டு அனைவரின் பயன்பாட்டிற்காக வைக்கப்பட்டிருக்கின்றன. மேலும் மாவட்டந்தோறும் பொதுநூலகம் என மிகப்பெரிய நூலகத்தை அரசு ஏற்படுத்தி, லட்சக்கணக்கான புத்தகங்களை மக்கள் பயன்படுத்திக் கொள்வதற்காக வைத்திருக்கிறார்கள்.

    ஒரு பானை சோற்றுக்கு

    பெற்றோர்கள் தம் குழந்தைகளுடன் போதிய அளவு நேரம் செலவிட்டு, நல்ல பண்புகளைத் தாம் வாழும் முறையால் போதிக்கும் நிலை இன்று மிகமிகக் குறைந்து விட்டது. இருவரும் சம்பாதிக்கச் செல்வதால் போதிய கால அவகாசம் இல்லை என்பதும், அப்படிச் சம்பாதிப்பதும் அவர்களது வாரிசுகளின் கல்விச் செலவுக்கே என்பதும் பெற்றோர் தரப்பு நியாயம்.

    எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவார். கல்வி கற்பிப்பவர்களைக் குரு எனக்கூறி, தெய்வமாக வழிபட்ட நிலை இன்று கடந்த காலமாகி விட்டதோ…? கல்வி நிலையங்களில் பணிபுரியும், ஆசிரியப் பெருமக்கள், அங்கு பயிலும் மாணாக்கர்களைத் தம் குழந்தைகளாக பாவித்து பாடங்களுடன், நல்ல பழக்கம் மற்றும் நற்பண்புகளை அன்று சொல்லிக் கொடுத்தனர்.

    இன்று, ஆசிரியத் தொழில் என்பது குறிப்பிட்ட நேரத்தில் செய்யும் பணி போலாகிவிட்டது. ஒதுக்கப்பட்ட பாடங்களில் மாணாக்கர்கள் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவதற்கே இலக்குகள் இன்று கல்வி நிலையங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன.
    எல்லா ஆசிரியர்களும் தவறானவர்கள் அல்ல, ஆனாலும், இன்றைய செய்திகள் ஆண் ஆசிரியர்கள் சிலர் பிஞ்சுக் குழந்தைகள், சிறுமிகள், மாணவிகள் என வயது வித்தியாசமின்றி வக்கிர புத்தியுடன் செயல்படுவதாய் தெரிவிக்கின்றன.

    என்ன காரணம்…?
    1. ஒழுக்கமில்லாதவர்கள், ஆசிரியப் பணிக்குத் தேர்வு செய்யப்படுகிறார்களா…?
    2. பாலியலுக்குத் தூண்டும் வண்ணம் பெண் குழந்தைகளின் நடவடிக்கைகள் உள்ளதா…?
    3. ஆண்களின் குடும்பத்தில் அவர்கள் திருப்தி அடைவதில்லையா…?

    இதுபோன்ற பல கேள்விகள் மனதில் ஊசலாடுகிறது.

    மரியாதைக் குறைவாய் மாணாக்கர்களை நடத்தவில்லை. ஒவ்வொரு மாணாக்கரின் குடும்பநிலை, பெற்றோர் வருமானம் போன்றவைகளைத் தெரிந்து வைத்திருந்தனர். மாணாக்கர்களிடம் ஒழுக்கக் குறைபாடு கண்ட இடத்திலேயே கடுமையான தண்டனை வழங்கினர். இது, பெற்றோர்களுக்கு, அவர்களது கடமையை நினைவூட்டியதுடன், மற்ற மாணாக்கர்களுக்கும் எச்சரிக்கையாக அமைந்தது.

    ஆசிரியர்களுக்கு சமுதாயம் சிறப்பான அங்கீகாரத்தை அளித்தது. நல்ல ஆலோசனைகள் சொல்பவராக அன்றைய ஆசிரியர்கள் வாழ்ந்தனர். ஒவ்வொரு மாணாக்கரின் எதிர்கால வாழ்விலும் தனி அக்கறை செலுத்தினர்.

    கல்வி நிலையங்கள் எல்லாமே அரசாங்கம் நடத்துவதாய் அமைந்தன. அன்றைய தனியார் கல்வி நிறுவனங்கள் நல்ல பண்பாளர்களால் சமுதாய சிந்தனையோடு ஆரம்பிக்கப்பட்டாலும், அரசாங்கம் நிதி உதவி செய்தது. எனவே, வாணிபம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

    கல்விப்பணியில் தனியாக ஈடுபடலாம் என்று எப்போது விதி தளர்த்தப்பட்டதோ, அப்போது தொழிலாக இது மாற்றப்பட்டு விட்டது.

    இதற்குக் காரணம் அரசாங்கம் என்றுதான் சொல்ல வேண்டும். கல்விக்கூடங்களை நடத்த தனியாருக்கு அனுமதி அளித்ததில் ஊழல் ஆரமிபித்தது. இன்று புரையோடிய நிலையில் உள்ளது. தனியார் கல்வி நிலையங்கள், அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி நீண்ட தூரம் சென்று விட்டதைப் பார்க்கிறோம்.

    சொல்வெட்டு

    தலைப்பு குறித்து  முகப்பில்…

    தலைப்புகள் சிலநேரங்களில் மின்னல் வெட்டுவதைப்போல அமைந்து விடுகின்றன. தலைப்புகள் சொல்லவந்த எல்லாவற்றையும் வெட்டிப் பிளந்த மாதுளை போல எடுத்துக்காட்டி விடுகின்றன. ஒவ்வொரு மாதமும் தலைப்பினை எப்படி வைக்கலாம் என்று நண்பருடன் விவாதம் நடத்துவது உண்டு. இந்த மாதம் தலைப்பு கேட்காமலேயே “சொல்வெட்டு” என்று வந்த உடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

    வார்த்தைகளும் வரிசையாக வந்து வெட்டி வைத்த வழியே வழிந்தோடும் நீர் போல கட்டுரையை நிறைத்து விட்டன. நல்ல தலைப்பாக வரும் ஒரு சொல்  முழு கட்டுரையையும் விஞ்சிய மனநிறைவைத் தந்துவிடும் என்பதற்கு உதாரணம் இந்த தலைப்பு. பொருள் அடக்கத்தில் இந்த வார்த்தையைப் பார்த்து கட்டுரையைத் தேர்ந்தெடுத்த நண்பர்கள் இதை வழிமொழிவார்கள். நண்பர்களுக்கும் நன்றி…

    திருவள்ளுவரும் சொல்வெட்டும்…

    அறுபத்தி ஐந்தாம் அதிகாரம் சொல்வன்மை ஆகும். ஊரில் உள்ள எல்லா நன்மைகளைக் காட்டிலும் முதலாவதாக வரும் நல்ல ‘நா’ அதாவது நாக்கு இருத்தல் ஆகும். திருமூலர் தனது திருமந்திரத்தில் “யாவருக்கும் பிறர்க்கு இன்னுரை தானே!” என்று உரைத்திருப்பது இத்தகைய இனிய சொற்களைப் பேசுகின்ற’நா’ அனைவருக்கும் அமைய வேண்டும் என்பதற்காகத்தான். சமீபத்தில் ஒரு கட்டத்தில் மூன்று பேரிடம் கோபமாக எதையாவது வாய்க்கு வந்ததை பேசிவிடுவோம் என்கிற அச்சம் வந்த பொழுது… மௌனமாக புன்னகை மாறாத முகம் மட்டுமே கொண்டு கலவரத்தை தவிர்க்க இயன்றது. வார்த்தைகள் முட்கள் கொண்டுள்ள மலரைப் போல. மலரை மட்டுமே நாம் மற்றவர்களுக்குத் தரவேண்டும் என்று கூறலாம். அறுநூற்று நாற்பத்தி ஒன்றாம் குறளில் ஒருவருக்கு உள்ள குணங்கள் அனைத்திலும் சிறந்த ஒன்று நல்ல சிறந்த சொற்களை பேசுவதாகும் என்றுள்ளது. வள்ளுவர் சொற்களின் முக்கியத்துவம் குறித்து ஒரு முழு அதிகாரம் பாடுவதற்கு முன்பே முன்னூற்றி எண்பத்து ஆறாவது குறளில் கடுஞ்சொற்கள் கூடவே கூடாது என்று சொல்லி இருக்கின்றார். அது மன்னருக்கு ஆகட்டும் மனிதருக்கும் ஆகட்டும். பேச்சும் எழுத்தும் கூர்ந்து தேர்ந்தெடுத்த இனிய சொற்களாக அமைவது ஒரு மரச்சிலையை வெட்டி செதுக்கி அழகுபடுத்துவது போன்றதாகும்.

    ஒரு மகனை பெற்ற தந்தையாய் உங்களிடம் இந்தக் கேள்வியை முன்வைக்கிறேன். நவநாகரீகம் என்றபெயரில் நிறைய பிள்ளைகள் வழிதவறியப் பாதையில் பயணம் செய்ய ஆசைப்படுகிறார்கள். இந்த நிலையை மாற்ற பெற்றோர்களான நாங்கள் என்ன செய்ய வேண்டும்…?

    இராமலிங்கம்

    சேலம் மாவட்டம்.

    பிள்ளைகள் பெற்ற சில பெற்றோரின் கவலை உங்களிடத்திலும் இருக்கிறது. இது நியாயமான கவலைதான் என்றாலும் நாகரீகம் என்ற பெயரில்தான் பிள்ளைகள் வழி தவறிய பாதையில் பயணம் செய்கிறார்கள் அல்லது பயணம் செய்ய ஆசைப்படுகிறார்கள் என்று நினைப்பது சரியாக இருக்காது என்று நினைக்கிறேன். நாகரீகம் என்பது நல்லது, அநாகரீகம் என்பது கெட்டது.

    இன்று அதிகமாக கல்லூரிகள் வந்துவிட்டன. அதிலும் பொறியியல் கல்லூரிகளே 500க்கும் மேற்பட்ட கல்லூரிகள். கல்லூரியில் படிக்கும் மாணவ, மாணவியர்களில் பாதிப்பேர் பொறியியல் பட்டதாரிகள் என்பதுதான் உண்மை. ஆக பொறியியல் பட்டம் வாங்கி விட்டாலும் இவர்களுக்கெல்லாம் ஒரு நியாயமான வேலை கிடைக்குமா என்றால் அது கிடைக்காது என்ற பதிலைத்தான் வல்லூநர்கள் தருகிறார்கள். ஒரு சில கல்லூரிகளில் படிக்கும்  ஒரு சில மாணவ, மாணவியருக்குத்தான் அதிக சம்பளத்தில் வேலை கிடைக்கும். மற்றவர்களுக்கு வேலை கிடைக்கும் பட்சத்தில் குறைவான அளவு சம்பளம் கிடைக்கும். அனேகருக்கு வேலை கிடைக்காது என்பதுதான் வருத்தத்திற்குரிய உண்மை. ஏன் வேலை கிடைக்காது என்றால் அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. அது (அ) வேலைவாய்ப்புகள் குறைந்து விட்டன. (ஆ) இந்த மாணவர்களுக்கு வேலை தெரியாது என்பது. ஆக பிள்ளைகளுக்கு வேலை கிடைக்கவில்லை, சம்பளம் இல்லை, சுயமாக வேலை தொடங்கவோ அல்லது நடத்தவோ திராணி இல்லை என்பதை நினைத்து ஒரு தகப்பனார் கவலைப்படலாம் அல்லது பீதியடையலாம். அது நியாயமானது. இதுதான் உண்மையான பிரச்சனை.

    நாகரீகம் என்றபெயரில் பிள்ளைகள் வழிதவறிப் போய்விடுவார்கள் என்றகவலை நம்போன்ற பெற்றோருக்கு உண்டு. நாகரீகம் என்று எதைச் சொல்கிறோம்…? புகைப்பிடிப்பது அல்லது மது அருந்துவது போன்றவற்றைக் கூறுகிறோம். ஆனால், இவை அனைத்தும் நாகரீகத்தின் அடையாளங்கள் அல்ல…! இவை நமது சமுதாயத்தில் பல நூறு ஆண்டுகளாக இருந்த அநாகரீகம். வெற்றிலை பாக்கு சாப்பிட்டார்கள், கள் அருந்தினார்கள், குழந்தைகளுக்கு திருமணம் செய்தார்கள்; இவை அனைத்தும் நாகரீகம் இல்லாத காலத்தில் சாதாரணமாக நடந்தவைகள்தான். இன்னும் பல மோசமான பழக்கங்கள் கூட இருந்தது. ஆனால், அவற்றை சொல்வது நாகரீகம் ஆகாது என்பதால் நான் சொல்ல முன்வரவில்லை. ஆக, நீங்கள் கூறும் வழிதவறிய பாதை என்பது இன்றைய நாகரீகத்தால் ஏற்பட்டது என்று சொல்வது தவறானது. அது எல்லா காலத்திலும் இருக்கிறது. எல்லா நாடுகளிலும் இருந்திருக்கிறது.

    நாகரீகம் என்ற பெயரில் பல நல்ல காரியங்கள் நாட்டில் நடந்து கொண்டு இருக்கிறது. அவற்றை வரவேற்போம்.

    நாகரீகமானவர்கள் உலகில் எங்கு வேண்டுமென்றாலும் போக முடிகிறது; யாரையும் சந்தித்துப் பேச முடிகிறது. அவர்களோடு வியாபாரம் செய்ய முடிகிறது. உலக பிரஜைகள் ஆகிவிடுகிறார்கள்.

    நாகரீகமானவர்கள் கழிவறையை உபயோகிக்க கற்றுக்கொண்டோம். எனவே, நோய் நொடி இல்லாமல் சுகாதாரமாகவும், சுகமாகவும் வாழக்கற்றுக்கொண்டோம்.

    நாகரீகமானவர்கள் நோய் என்று வந்தால் விஞ்ஞான மருத்துவத்தை நாடி நோயை குணப்படுத்திக் கொள்கிறோம்.

    நாகரீகமானவர்கள் விஞ்ஞான விவசாயத்தைக் கற்றுக்கொண்டு அதிக விளைச்சலைப் பெறுகிறோம். 126 கோடி மக்களுக்கு உணவு உற்பத்தி செய்கிறோம். இன்னும் அற்புத நாகரீக விவசாயத்தை இஸ்ரேலியர்கள் செய்கிறார்கள்.

    நாகரீகத்தால் எந்த உணவு எவ்வளவு தேவை என்பதை அறிந்து கொண்டு உடல் நலம் பேணுகிறோம். உடற்பயிற்சி செய்கிறோம்.

    நாகரீகம் வந்த பிறகு நரபலி, நோய் வந்ததும் உடலின் ஒரு பகுதியை வெட்டி எறிதல் போன்ற மோசமான பழக்கங்களைக் கைவிட்டு விட்டோம்.

    இருப்பினும் நாகரீகம் தழைத்தோங்கும் பல நாடுகளில் வாழும் மக்களின் நாகரீகத்தை நாம் இன்றும் புரிந்து கொள்ளவும் இல்லை. அவற்றை கடைப்பிடிக்கவும் இல்லை. அதென்ன…? நாகரீக மக்களின் பழக்கங்கள் நமக்கு தெரியாதவை அல்லது புரியாதவை என்று கேட்கிறீர்களா…? உலகில் முன்னேறி விட்ட மக்கள் பின்பற்றி, நாம் பின்பற்றாத சில நாகரீகங்களை இங்குப் பார்ப்போம்.

    உள்ளத்தோடு உள்ளம்

    உலகின் மாபெரும் சக்தி எது என்பது குறித்து விவாதம் எழுந்தது. ஒருவர் காந்த சக்தி தான் பெரியது என்கிறார்.

    இன்னொருவர் மின் சக்தி தான் பெரியது என்கிறார்.

    இன்னொருவர் இல்லையில்லை புவி ஈர்ப்பு சக்தி தான் மிகப்பெரியது என்கிறார்.

    இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு சக்தியைச் சொல்லி அச்சக்தி தான் பெரியது என்று வாதம் செய்து  கொண்டிருந்தார்கள்.

    அப்போது இளைஞன் ஒருவன் ஹீரோஷிமாவில் அணுகுண்டு வீசப்பட்ட போது சில வினாடிகளில் பல லட்சம் பேர் இறந்து போனார்கள் அதனால் அணுசக்தி தான் பெரியது என்றான்.

    இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த இன்னொரு புத்திசாலி இளைஞன் சொன்னான் அணுசக்திûயைக் கண்டுபிடித்தது விஞ்ஞானிகளின் மூளை அதனால் உலகில் மாபெரும் சக்தி வாய்ந்தது மனிதனின் அறிவு தான் என்றாôன்.

    எல்லா சக்திகளையும் மிஞ்சும் பேராற்றாலான அறிவை, எல்லை இல்லா அறிவை நன்கு வெளிப்படுத்தக்கூடியவர்களாக முன்னேறினாலே முன்னேற்றம் நம் எப்போதும் வாழ்வில்.

    நாகர்கோயிலில் தன்னம்பிக்கை வாசகர் வட்டம்

    நாகர்கோயிலில் தன்னம்பிக்கை வாசகர் வட்டம் விரைவில் துவங்க உள்ளது

    தொடர்புக்கு:

    திரு N. இதர்/ ராஜா ஸ்ரீ பூஜாலயம் கோட்டார் நாகர்கோயில், செல் : 9443109790.

    திரு R. சுரேஷ்குமார் ஆடிட்டர், நாகர்கோயில், செல் : 9443925818

    வாசிப்பை நேசி வாழ்க்கையை நேசி

    திருநெல்வேலி தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 21.2.2016; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.30 மணி

    இடம் : ஜட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளி, திருநெல்வேலி

    தலைப்பு   : “வாசிப்பை நேசி வாழ்க்கையை நேசி”

    சிறப்புப் பயிற்சியாளர்: கவிஞர்.கோ. கணபதி சுப்ரமணியம்

    செயலாளர், நெல்லை மாவட்ட மைய நூலக வாசகர் வட்டம், திருநெல்வேலி டவுன்

    தொடர்புக்கு:

    சண்முக சுந்தரம் 9944201914

    மணிகண்டன்  9487709734

    ஜானகி பால் வண்ணன் 9942359108