– 2013 – September | தன்னம்பிக்கை

Home » 2013 » September

 
  • Categories


  • Archives


    Follow us on

    இடை குறைப்பு -எடை குறைப்பு இரகசியங்கள்

              அன்பர்களே! உடலை பலவீணப்படுத்தாமல், வேலைப் பிழைப்பு கெடாமல், இலட்சங்களை இழக்காமல், உடலை வலுவேற்றி, அதிகப்படியான எடையைச் சீராக குறைக்க வழி சொல்லப் போகிறேன். இந்த எடை குறைப்புக்காக விடுப்பு எடுத்து, படுக்கை விரித்தெல்லாம் ஓய்வெடுக்க வேண்டியதில்லை. உங்கள் அன்றாட வாழ்க்கைச் செயல்களைக் குறைத்துக்கொள்ள வேண்டாம். இன்னும் சொல்லப்போனால், உங்கள் அதிகப்படியான எடை குறையக் குறைய, உங்கள் உயிர்ச் சக்தியானது அதிகப்பட்டுகொண்டே இருக்கும் அற்புதத்தை உணரமுடியும். அன்பர்களே! உண்மையான ஆரோக்கியமான எடை குறைப்பு என்பது உடலை வலுவைக் குலைக்காமலும் உயிர்ச் சக்தியை குறைக்காமலும், உடற் கழிவையும், கெட்டக் கொழுப்பையும் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களுக்கு சேதாரம் ஏதுமின்றி வெளியேற்ற வேண்டும். இதற்காக சில ஆயிரங்கள் செலவாகலாம். ஆனால் பின்னாளில் பல இலட்சங்களை இழக்காமல் பார்த்துக் கொள்ளலாம். அப்படிப்பட்ட வழி முறைகளை இன்று பார்ப்போம்.
    1. சமச்சீர் புரதம் எடுத்துகொண்டால் எடை குறைவது நிச்சயம்: எல்லா அத்தியாவசிய அமினோ அமிலங்களை உள்ளடக்கிய சமச்சீர் புரதமானது கெட்டக் கொழுப்பை (புரதம் குறைவாகவும், கொழுப்பு அதிகமாகவும் உள்ளLDL) நல்லக் கொழுப்பாக (புரதம் அதிகமாகவும், கொழுப்பு குறைவாகவும் உள்ளHDL) மாற்றி, உடல் இயக்கத்திற்குச் சக்தியளிக்கும் விதமாக பயன்பட்டு, எடை குறைக்க உதவுகிறது,
    2. நல்லக் கொழுப்பு விகிதாச்சாரம்: நல்லக் கொழுப்புகளான ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 ஆகியவை 1:5 என்ற விகிதாச்சாரத்தில் அமையும்போது உடல் இலகுவாகவும், சக்தியளிக்கவல்ல கொழுப்புச் சேமிப்பாகவும் அமையும். இதனால், நரம்பு சூட்டிகையாகவும், மூளை விழிப்புணர்வாகவும் செயல்பட்டு, உடலில் கழிவு தேங்காமல் பார்த்துக் கொள்ள உதவும். உடல் பருமனாவது நிகழாது. நமது உணவுப் பழக்கத்தால் இந்த நல்லக் கொழுப்பு விகிதாச்சாரம் 1:70 முதல் 1:100 வரை இருக்கிறது. இதை 1:5 என்ற விகிதத்தில் கொண்டுவர ஒமேகா-3 கொழுப்பை அதிகப்படுத்த வேண்டும்.
    3. நீரில் கரையக்கூடிய நார்ச் சத்து அவசியம் தேவை: நீரில் கரையாத சாதாரன நார்ச் சத்தானது குடலை மட்டும்தான் சுத்தப்படுத்தும். இது ஓரளவு பரவாயில்லைதான். ஆனால், நீரில் கரையும் நார்ச் சத்தானது நமது உடல் செல்களை சுத்தப்படுத்தி, உடலை புத்துணர்வாக்கி சக்தியாக வைக்க உதவும்.
    4. இயற்கையான சி மற்றும் ஈ-உயிர்ச் சத்துக்கள்: நீரில் கரையக்கூடிய கழிவுகளை, இயற்கையான சி-உயிர்ச் சத்தும், கொழுப்பில் கரையக்கூடிய கழிவுகளை இயற்கையான ஈ-உயிர்ச் சத்தும் நீக்க உதவும். இப்படி இயற்கையான உயிர்ச் சத்துப் பொருள் கொண்டு வெளியேற்றும் போது சிறுநீரகங்கள் பழுதாகாமல் இருக்கும்.
    5. பக்குவ பூண்டு இருந்தால் மிகவும் நல்லது: ஆயுர்வேத முறையில் பக்குவப்படுத்தப்பட்ட பூண்டானது இரைப்பையில் வீணாகாமல், பதமாகி, சிறுகுடலுக்கு வந்து கெட்ட எண்ணைக் கொழுப்பையும் (Triglyricides) வாய்வையும் நீக்க உதவும். இதனால், குடல் சுத்தமாகி சத்துக்களை எடுத்துகொள்ள (Assimilation) வழி பிற்க்கும்.
    6. உயிர் மற்றும் தாதுச் சத்து: உயிர்ச் சத்துக்கள் (Vitamins) மற்றும் தாதுச் சத்துக்கள் (Minerals) உடல் ஆக்கத்திற்கு (Metabolism) கிரியா ஊக்கியாக (Catalyst) செயல்பட்டு, உடலைச் சுறுசுறுப்பாக்கி, கழிவு நீக்க உதவியாக இருக்கும்.
    7. மிளகு மற்றும் எலுமிச்சை மந்திரம்: பச்சை மிளகாய்க்கு பதில் மிளகையும், புளிக்கு பதில் எலுமிச்சையையும் உணவில் பயன்படுத்தினால் கெட்டக் கொழுப்புச் சேர்மானம் நிகழாது. அசைவ மற்றும் கொழுப்பு உணவுகளுடன் மிளகு சேர்த்துக்கொண்டால், கொழுப்புச் செரிமாணம் முழுமையாக நடைபெற்று, கெட்ட கொலஸ்ட்ரால் சேராமல் தடுக்கும். மிளகு உடலின் விஷங்களை வெளியேற்றும் அற்புத மருந்தாகும். அசைவ உணவு சாப்பிட்டபின், எலுமிச்சை சாறு அருந்தினால், வாய்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும். பச்சை மிளகாய் மண்ணீரலையும், அதிகப்படியான புளி கல்லீரலையும் கெடுத்து கெட்டக் கொழுப்புச் செரிமானத்திற்கு வழி வகுக்கும்.
    8. நிம்மதியான தூக்கம்: நிம்மதியான ஆழ்ந்த தூக்கம், உடல் உள்ளுறுப்புகளைப் புதுபிக்க உதவும். இரவு 12 மணியிலிருந்து அதிகாலை 1.30 வரை மண்ணீரல் புதுப்பிக்கப்படும் நேரமாகவும், அதிகாலை 3 மணி முதல் 4.30 வரை கல்லீரல் புதுப்பிக்கப்படும் நேரமாகவும் விளங்குகிறது. இந்த நேரங்களில், நாம் ஆழமாக தூங்கினாதான் மண்ணீரலும் கல்லீரலும் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு, புத்துணர்வாக ஆகும். அடிக்கடி தூக்கத்தையும், நிம்மதியையும் கெடுத்து கொள்பவர்கள் செரிமானச் சக்தியை இழந்து, கெட்டக் கொழுப்புச் சேர வழிவகுப்பர்.
    9. இயற்கையான அகிம்சை எனிமா: எடை குறைக்கும் வைத்திய முறையில், வெளிப்படும் அதிக கழிவுகளை வெளியேற்ற அதிகச் சக்தி தேவைப்படும். ஆக, உடல் வலுவாகப் பயன்பட வேண்டிய சக்தியானது, கழிவு வெளியேற்றத்திற்கு அதிகம் செலவானால், குணம் பெறுவது தாமதமாகும். இதைத் தவிர்க்க இயற்கை வைத்தியமுறை அகிம்சை எனிமா உதவும். இதன் மூலம் மிக குறைந்த சக்தி செலவில் குடல் கழிவுகள், வாய்வு மற்றும் உடல் உஷ்ணம் வெளியேற்றப்படுகிறது. இதனால், எடை குறைப்பு சுமூகமாக நடைபெறுகிறது.
    10. சத்து +சக்தி +உடற்பயிற்சி + நேர்மறை மனோபாவம்: நண்பர்களே! எந்த ஒரு எடை குறைப்புச் செயலும் ஒரு கூட்டு முறையில் (Package) இருக்க வேண்டும். அதில், கொழுப்பு கழிவை அகற்ற சக்தி தரும் சக்தி மருத்துவம், கழிவு நீக்கிய இடத்தில் சத்தை நிரப்பத் தினிவான சத்துணவு மருத்துவம், உடல் செயலாக்கத்தை தூண்ட உடற்பயிற்சி மற்றும் மனதை நேர்மறையாக இயக்க மலர் மருத்துவம் அல்லது யோகப்பயிற்சி உள்ளிட்டவைகளை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். நம்மில் பலர், வெறும் சக்தி மருத்துவத்தால் (அக்குபங்சர், ஹோமியோபதி, மலர் மருத்துவம் உள்ளிட்ட மாற்று மருத்துவ முறைகள்) முழுமையாக முடியும் என்றோ அல்லது சத்து மருத்துவத்தால் மட்டுமே முடியும் என்றோ கூறுவதில் பாதி உண்மைதான் உள்ளது. ஆனால், கூட்டு முயற்சியால் சுலபமாக எடை குறைப்பு சாத்தியமாகும். மேலும், எடை குறைப்பு செய்வதில் மனோபாவமும் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்களுக்கு தன்னம்பிக்கையும், சரியான வழிகாட்டுதலும் இருக்குமாயின் எடை குறைப்பு என்பது இலகுவான விஷயமாக இருக்கும்.
    11. மலர் மருத்துவத்தின் பங்கு:
    நிலைப்பாடு மலர் மருந்து
    வாயைகட்டி, ருசிக்கு பதில் நல்லதைச் சாப்பிட செர்ரி பிளம்(Cherry Plum)
    ஆழ்ந்த தூக்கம் பெற்று புத்துணர்வு பெற்று எடை குறைப்புக்கு உதவ வைட் செஸ்நட் (White Chestnut)
    உடல் குப்பைகளை விரைவாக வெளியேற்ற கிராப் ஆப்பிள் (Crab Apple)
    துர்நீரை உடலில் இருந்து வெளியேற்ற ராக் ரோஸ் (Rock Rose)
    எடை குறைக்க நம்மாலும் முடியும் என்று தன்னம்பிக்கை பெற லார்ச் (Larch)
    நமக்கு விமோசனமே இல்லை என்ற நினைப்பிலிருந்து விடுபட ஸ்வீட் செஸ்நட் (Sweet chestnut)
    உடல் ஒழுக்க நெறியை கடைபிடித்து எடை குறைப்பை நிகழ்த்த பீச் (Beach)
    மன அழுத்தங்களில் இருந்து விடுபட்டு எடை குறைய அக்ரிமனி (Agrimony)
    எடை மிகுதியால் உண்டான அபாயங்களில் இருந்து மீள ரெஸ்கிவ் ரெமடி(Rescue Remedy)
    உடல் எடையை குறைத்து, நோயைக் குறைப்போம்!
    உடல் வளம் பெற்று, ஆயுளை நீட்டிப்போம்!

    To buy this book click below……

    b4buy now

    சித்திரைக்கனி-நாதன்

              காலந்தோறும் மனிதன் ஏதேனும் ஒருவகையில் மாற்றம் அடைந்தே வருகிறான். ஒரே நேர்க் கோட்டில் நடப்பது போல் இருப்பவனைக் கூடச் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் மாற்றி விடுகின்றன.

    Continue Reading »

    சுகப்ரசவ சூசமங்கல்-திருமணப் பரிசு

            உண்மையான பரிசு என்பது, வாழ்க்கைக்குப் பயன் படுவதாகவும் இருக்க வேண்டும், அந்தப் பரிசைப் பெறுபவர் உண்மையில் கொடுத்து வைத்தவராக உணரவும் வேண்டும். அப்பொழுதுதான் பரிசுக்கு மதிப்பு இருக்கும். அந்தப் பரிசும் திருமணப் பரிசாக இருக்கும் பட்சத்தில், இன்னும் சிறப்பானதாக இருக்க வேண்டுமல்லவா?. நான் இங்கு கொடுக்கப் போகும் பரிசும் அத்தகைய மதிப்பு வாய்ந்ததுதான். கொடுப்பவரே பெருமை பேசலாமா? கூடாதுதான். ஆனால், நான் கொடுக்கப் போகும் பரிசுக்கு ஈடு இணை கிடையாது. ஆகையால், இந்தப் புகழாரம் தேவைதான். அப்படி என்ன அபூர்வமான பரிசு என்கிறீர்களா? ஒவ்வொரு திருமணப் பெண்ணிற்கும் அவசியமாக கொடுக்க வேண்டிய பரிசுதான். அது என்னவென்றால் போலேட் உருவில் இரும்புச் சத்துணவு கொடுப்பதே ஆகும். இதில் என்ன விஷேசம் என்கிறீர்களா? விஷேசம் இருக்கிறது. அது பற்றிதான் நாம் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
    அன்புத் தோழியர்களே! மாதவிடாய் சுழற்சியின் 9வது நாள் முதல் 20வது நாள் வரை (அதிலும், 13 முதல் 16நாட்களில்) தாம்பத்திய உறவு கொண்டால் கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம் என்று ஏற்கனவே பார்த்தோம் (கடவுளின் பரிசு கட்டுரை). அப்படி கருத் தரிக்கும் வாய்ப்பு அதிகமாக இருந்தாலும், கருத்தரிக்கவும், தரித்த கருவானது ஒரு செல் நிலையில் இருந்து 2, 4, 8, 16, 32, 64 என்று பல்லணு கருவாக பெருகவும், பெருகிய கரு சினைக் குழாயில் நீந்தி, கருப்பையை அடைந்து, கருப்பையின் உட்சுவரில் ஒட்ட போலிக் அமிலமும் இரும்புச் சத்தும் அவசியம் தேவை. இவையெல்லாம் கருத்தரித்த ஏழு நாட்களில் நடந்து விடுகிறது. அந்த ஏழு நாட்களில் போலிக் அமிலமும் இரும்புச் சத்தும் குறைபாடாக இருந்தால், கரு செல் பிரிதலில் தவறு நிகழ வாய்ப்பிருக்கிறது. இந்தத் தவறுகளால், பிறக்கின்ற குழந்தையானது பிறவிக் குறைகளைக் கொண்டிருக்க வாய்ப்பு அதிகம் ஏற்படுகிறது. தவமிருந்து பெற்றப் பிள்ளையானது பிறவி ஊணத்துடன் இருப்பதை எத்தாயும் விரும்ப மாட்டார்கள். அப்படிப்பட்ட நிலையை, வரும் முன் தடுக்காமல், வந்த பின், ஒன்றும் செய்ய முடியாமல் ஏற்றுக் கொள்வதா வேண்டும்?. ஆகவே, இந்த போலிக் அமில இரும்புச் சத்து அவ்வளவு முக்கியமானது. இது திருமணமானதும் ஏன் கொடுக்க வேண்டும் என்று சற்று விளக்கமாகப் பார்ப்போம்.
    கருத்தரித்த ஏழு நாட்களுக்குள் கருவின் செல் பிரிதல்கள் உருவாகி, சிசுவின் உறுப்புகளை நிர்ணயம் செய்து விடுகின்றன. உதாரணமாக ஒரு செல் தலையாகவும் மற்றொரு செல் இருதயமாகவும் இன்னபிற உறுப்புகளாகவும் தீர்மாணிக்கப்படுகின்றன. இந்த விதமாக வளரும் கருவின் செல்களின் தலை விதியை தீர்மானம் செய்வதில் (Determination) போலிக் அமிலம் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதில் கவனிக்க வேண்டியது என்ன வென்றால், கருத்தரிப்பு நிகழ்வு நடப்பது மாத விடாயின் மத்திம நாட்களில். ஆனால், கருத்தரித்த விஷயம் நமக்குத் தெரிய வருவது 8 முதல் 14 நாட்கள் கழித்து, மாதப் போக்கு வராத போதுதான். மாதப் போக்கு சில சமயங்களில் ஒன்று இரண்டு நாட்கள் தள்ளி வரவும் வாய்ப்பு இருப்பதால், உறுதிப்படுத்த இன்னும் சில நாட்கள் கூட ஆகலாம். அப்புறம்தான் மகப்பேறு மருத்துவரை பார்க்கிறோம், அல்லது கருத்தரிப்பை உறுதி செய்யும் பரிசோதனையைச் செய்கிறோம். இவையெல்லாம் நடந்த பின்னர்தான் நாம் கரு வளர்ச்சிக்கு பொறுப்பு கொள்கிறோம். அதன் பிறகு எடுக்கப்படும் போலிக் அமிலம் ஒன்றுக்கும் உதவாது. குறைபாடு ஏதேனும் இருப்பின், போலிக் அமிலத்தால் ஒன்றும் செய்ய முடியாது. காலத்தால் பயிர் செய் என்பதன் அர்த்தம் வேளாண்மையில் புரிகிறதோ இல்லையோ, கருவாக்கத்தில் அவசியம் புரிய வேண்டும். வேளாண்மையில் மாற்று ஏற்பாட்டிற்கு ஏதேனும் வாய்ப்பு இருக்கலாம், ஆனால், கரு வளர் தீர்மானத்தை மாற்ற முடியாது. அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். ஆகவே போலிக் அமிலக் குறைபாடு கரு உருவாக்க குறைபாட்டை ஏற்படுத்தும். இதனைக் கையாளும் விதம் பற்றி இனி பார்ப்போம்.
    1. குடிநீர்: நாம் அருந்தும் குடிநீரின் தன்மைக்கு ஏற்ப போலிக் அமில தேவை மாறுபடுகிறது. நான் இப்பொழுது கூறப்போகும் விஷயம் உண்மையில் ஆச்சரியமாகத்தான் இருக்கும். காரணம், நாம் குடிக்கும் தண்ணீர் பற்றி நாம் கொண்டுள்ள கருத்து அப்படி. உண்மையில் நம் வீட்டுத் மேல் நிலைத் தொட்டியில் பாசிப் பிடித்துள்ள நீரில் போலிக் அமிலம் கணிசமாக இருக்கிறது. இவ்வித நீரைக் கொதிக்க வைக்காமல் குடித்தால், நமக்குக் கனிசமான போலிக் அமிலம் கிடைக்கப் பெறுவோம். ஆனால், நமக்கு அவ்விதமாகக் குடிக்க மனசுதான் வராது. உண்மையில் இயற்கையாக எல்லா வித நுண்கிருமிகளையும் சம அளவில் கொண்டிருக்கும் இருக்கும் நம் மேல் தொட்டி நீர் அல்லது சுகாதாரமான குளத்து நீர் நம் நோய் எதிர்ப்புச் சக்திக்கும், உயிர்ச் சத்து (Vitamins) மற்றும் தாது (Minerals) சத்துகளுக்கும் மிகவும் நல்லது. நாம் அதிகமாக சுத்தகரிக்கப்பட்ட பாட்டில் தண்ணீரில் தாதுச் சத்துக்களும் குறைவு, போலிக் அமிலம் உள்ளிட்ட உயிர் தாதுக்களும் குறைவு. ஆக, சுத்தம் சுத்தம் என்று மினரல் வாட்டர் பருகுபவர்கள்தான், உயிர் மற்றும் தாதுச் சத்துகளின் குறைபாட்டிற்கு ஆளாக நேரிடுகிறது. இவர்கள் கண்டிப்பாக இயற்கையான போலிக் அமிலம் மற்றும் இரும்பு உள்ளிட்ட இயற்கையான தாதுக்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.
    2. சத்துணவுகள்: போலிக் அமிலத்தோடு சமச்சீர் புரதமும் சேர்த்து எடுக்கும் போது கரு வளர்ச்சி தரமாகவும் வலுவாகவும் இருக்கும். அதோடு, நாம் இரும்புச் சத்தை எடுத்துக் கொள்ளும் போது அதனுடன் போலிக் அமிலமும் இருந்தால் இரும்புச் சத்து கிரகிப்பு மிக அதிகமாக இருக்கும். இரத்தச் சோகை உள்ளவர்கள் போலிக் அமில உருவில் இரும்புச் சத்தெடுக்கும் போது விரைவாக, சோகை நீங்கி குணம் கிடைக்கும்.
    3. போலிக் அமில உணவுகள்: போலிக் அமிலம் அதிகமாக உள்ள கீரைகளான பசலைக் கீரை, புளிச்சைக் கீரை, அசைவ உணவுகளான முட்டை, ஈரல், பால், நெய், வெண்ணை, உலர்ந்த திராட்சை, பீன்ஸ், துவரை, சோயா, தேங்காய், முளைக் கட்டிய பயறுகள், ஆறு மணி நேரம் ஊறிய நிலக்கடலை, பீட்ரூட், காரட், முட்டைக் கோஸ், புருக்கோலி, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, வாழைப் பழம், ஆரஞ்சு, பீச், முழு தானிய உணவுகள், பாதாம், பிஸ்தா ஆகியவற்றில் கனிசமான போலிக் அமிலங்கள் இருக்கின்றன.
    4. போலிக் அமிலத்தை திருடும் உணவுகள்: இரசாயன குளிர் பானங்கள் (Soft Drinks), பனிப்பாகு (Ice Creams), பாலாடை இனிப்பு (Chocolate), துரித உணவுகள் (Fast Foods) தேனீர் (Tea), குழம்பி (Coffee) உள்ளிட்ட உணவு வகைகள் நம் உணவிலும் இரத்தத்திலும் உள்ள போலிக் அமிலத்தை திருடிக் கொள்ளும். இந்த வேண்டாத விஷயத்திற்குப் பணம் செலவு செய்து பாதிப்பை வாங்க வேண்டுமா?
    அன்பான தோழியர்களே! போலிக் அமிலக் குறைபாடு இருப்பதை அறிந்து கொள்ள கீழ் கண்ட அறிகுறிகள் உள்ளனவா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
    1. கை கால்கள் சில்லிட்டுப் போதல்.
    2. கை கால்களில் சிறு உதறல் ஏற்படுதல்
    3. குதிக்கால் வலி பிரதாணமாக இருத்தல்.
    4. தோல் வெளுப்பாக இருத்தல்.
    5. ஞாபக மறதி அதிகமாக இருத்தல்
    6. சதைப் பிடிப்பும், வாய்வுப் பிடிப்பும் அதிகமாக இருத்தல்
    7. நரம்புத் தளர்ச்சி ஏற்படுதல்.
    8. இரத்தச் சோகை அதிகரித்தல்
    9. மத்தியம் சாப்பிட்ட பின், கொஞ்சமாவது தூங்கினால்தான் அடுத்த வேலையைச் செய்ய முடியும் என்ற நிலை ஏற்படுதல்.

    இல்லறப் பெண்களே! போலிக் அமிலம் எடுப்பீர்!
    வளமான, தரமான கரு வளர்ச்சியை பெறுவீர்!

    To buy this book click below…

    b2buy now

    எண்ணம் அறிவோம் எதையும் வெல்வோம்

    திருச்சி வாசகர்வட்டம் மற்றும் Jc. திருச்சி இணைந்து வழங்கும்
    சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 15.9.2013 ; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை

    இடம் : ரவி மினி ஹால் (மீட்டிங் ஹால் A/C)
    கரூர் பை-பாஸ் ரோடு
    சத்திரம் பேருந்து நிலையம், திருச்சி

    பயிற்சியாளர் : திரு. S.P. மாரிமுத்து, MBA
    Right Learning System
    Perambalur – CEO
    Ph: 98946 55079

    தொடர்புக்கு : மண்டல அமைப்பாளர் Er. K. நாகராஜன் – 95784 08301
    திரு. தங்கவேலு மாரிமுத்து – 93603 27848
    திரு. நல்லதம்பி – 90921 77006
    திரு. புக் செந்தில் – 98650 17950

    அனுமதி இலவசம்

    நல்ல நண்பன் புத்தகமே

    தொழுதூர் தன்னம்பிக்கை வாசகர்வட்டம் – மாணவர் பிரிவு
    சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 6.9.2013, வியாழக்கிழமை

    நேரம் : காலை 10 மணி

    இடம் : டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன்
    பொறியியல் கல்லூரி, தொழுதூர் – 606303
    கடலூர் மாவட்டம்

    சிறப்புப் பயிற்சியாளர் : திரு. அ. டோமினிக் சேகர்
    வரலாற்றுத் துறை பேராசிரியர்
    தஞ்சாவூர்
    போன்: 94870 29494

    தொடர்புக்கு : தலைவர் முனைவர் P. பழனிசாமி 98420 53919
    ஒருங்கிணைப்பாளர் திரு.G. சுரேஷ் 94436 78709

    அனுமதி இலவசம்

    வாழ்க்கை இனிதே

    சென்னை தன்னம்பிக்கை வாசகர்வட்டம்
    சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 22.9.2013; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.00 மணி முதல் 12 மணி வரை

    இடம் : ‘வுமன்ஸ் கிளப்’ / ஆனந்த விநாயகர் ஆலயம்
    57A, 8வது வீதி, சவுத்ரி நகர், வலசரவாக்கம்
    சென்னை-87
    (வலசரவாக்கம் கேசவர்த்தினி பஸ் ஸ்டாப்,
    உமா மெடிக்கல்ஸ் எதிரில்)

    சிறப்புப் பயிற்சியாளர் : ‘வெற்றி விடியல்’ ஸ்ரீனிவாசன்
    தன்னம்பிக்கை பயிற்சியாளர்
    சென்னை

    செயல்முறை விளக்கம்
    தலைப்பு – “தானியங்களும் அதன் பலன்களும்”
    வழங்குபவர் – செல்வி M. அன்புமலர், M.Sc., M.Phil., Ph.D. PSG College, Coimbatore

    இடம் பற்றிய தொடர்புக்கு: தலைவர் – R. பாலன் – 94442 37917
    செயலாளர் – L. கருணாகரன் – 98419 71107
    PRO யமுனா கிருஷ்ணன் – 94440 29827

    அனுமதி இலவசம்

    செயலும், வெற்றியின் ரகசியமும் (கர்மயோகம்)

    திருப்பூர் தன்னம்பிக்கை வாசகர்வட்டம், திருப்பூர் அரிமா சங்கம் மற்றும் செல்வக்குமார் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், திருப்பூர் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்ற பயிலரங்கம்

    நாள்: 8.9.2013; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10 மணி

    இடம் : அரிமா சங்க அரங்கம்
    குமரன் சாலை
    திருப்பூர்

    சிறப்பு பயிற்சியாளர் : திரு. யோகி ராஜேந்திராஜி
    சுயமுன்னேற்றப் பயிற்சியாளர்
    திருப்பூர்
    போன்: 98422 91345

    தொடர்புக்கு : திரு. மகாதேவன் – 94420 04254
    திரு. வெங்கடேஸ்வரன் – 94423 74220
    திரு. மாரப்பன் – 95242 73667

    குடும்பத்துடன் வருக அனுமதி இலவசம்

    சுயக்கட்டுப்பாடு

    ஈரோடு தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும்
    சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள்: 22.9.2013; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை

    இடம் : மாயா பஜார் A/C ஹால்,
    Opp. E.B. அலுவலகம் எதிரில்,
    E.V.N. ரோடு,
    ஈரோடு.

    சிறப்புப் பயிற்சியாளர் : திரு. M. கௌதமன்
    Vice President, Vision Diploma Courses, SKY
    Erode.
    Ph:77080 05234

    தொடர்புக்கு

    தலைவர் Jc. A. குப்புசாமி – 98432 69931
    செயலாளர் Jc. நூர்முகம்மது – 99945 00575
    பொருளாளர் Jc. S. சையது ஜைனலாபுதீன் – 99942 29080

    அனுமதி இலவசம்

    உள்ளத் துணிவு கொள்

    திருச்செங்கோடு தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் JCI திருச்செங்கோடு டெம்பிள்
    இணைந்து வழங்கும் சுயமுன்னேற்ற பயிலரங்கம்

    நாள் : 22.9.2013; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : மாலை 6.00 மணி முதல் 8.00 மணி வரை

    இடம் : ஹோட்டல் சித்தார்த்தா கான்பிரன்ஸ் ஹால்
    ஜோதி தியேட்டர் அருகில்
    திருச்செங்கோடு

    சிறப்புப் பயிற்சியாளர் : JFD. S. அருண் பிரசாத்
    JCI தலைவர், ஈரோடு
    போன்: 98430 20986

    தொடர்புகளுக்கு:
    தலைவர்: JCI. Sen. G.கோவிந்தசாமி – 98427 96868
    செயலாளர்: Jc. A. திருநாவுக்கரசு – 99429 66554
    ஒருங்கிணைப்பாளர்: Jc. Dr. S. சரவணகுமார் – 94423 83833

    அனுமதி இலவசம்

    தடைகள் தகர்ப்போம்

    கோவை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் இன்டக்ரல் யோகா இன்ஸ்டிடியூட்
    இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 15.9.2013; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.00 மணி

    இடம் : இன்டக்ரல் யோகா இன்ஸ்டிடியூட்,
    139/86, மேற்கு சம்பந்தம் சாலை,
    ஆர்.எஸ். புரம் (மேற்கு),
    பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில்,
    கோவை.

    சிறப்புப் பயிற்சியாளர் : திரு. N. நாசிர் ஹூசைன்
    HRD & Entrepreneurship Trainer, Erode
    Ph: 98427 03690

    தொடர்புக்கு:
    தலைவர் திரு. A.G. மாரிமுத்துராஜ் – 98422 59335
    செயலாளர் திரு. A. சரவணகுமரன் – 90920 92080
    பொருளாளர் திரு. ஆனந்தன் – 74026 10108

    அனுமதி இலவசம்
    குடும்பத்துடன் வருக