– 2011 – June | தன்னம்பிக்கை

Home » 2011 » June

 
  • Categories


  • Archives


    Follow us on

    மு. மேத்தா கவிதை….

    களவும் கற்பும்
    காலை விடிந்து
    கண் விழித்தால்
    குழந்தைக்கு முத்தம்
    கொடுத்துக் கொண்டே
    இருப்பான்
    எதிர்வீட்டுக்காரியின்
    கணவன்
    இவளைப் பார்த்தபடி

    வீட்டு வாசலைக்
    குனிந்து வளைந்து
    கூட்டும்போது
    மாடியின்
    ஜன்னல் வழியே
    கிழட்டு விழியிரண்டு
    கீழே விழும்

    ஏறிட்டுப் பார்த்தால்
    உதிர்ந்த விழிகள்
    உடனே சென்று
    ஒட்டிக் கொள்ளும்

    நகரப் பேருந்து
    நிறுத்தத்தை நோக்கி
    நடக்கும்போது
    தரிசனம் கேட்கும்
    வழியில் சில
    தடிமாடுகள்

    அலுவலகம் போய்
    அடைந்தால்
    மின்விசிறி சுழல
    வீற்றிருக்கும்
    மேலதிகாரியின்
    கண் விசிறி சுழல…
    இளமைக்
    காகிதம் படபடக்கும்

    உடன் பணியாற்றும்
    உத்தமக் கொக்குகளோ
    ஓடும் வாய்ப்பு ஓட
    உற்ற வாய்ப்பு
    வரும் வரைக்கும்
    வாடியிருக்கும்…
    விரல் களையாவது
    உரசி விடுவதற்கு.

    கனவில் வரும்
    இராஜகுமாரர்களாம்
    இராமர்களோ
    தசரதத் தந்தைமார்களே
    தந்தனுப்பிய
    வலிமை பொருந்திய
    வரதட்சணை விற்களைத்
    தூக்கி வருவார்கள்

    முறிப்பதற்கு அல்ல
    இவளால்
    சுமக்க முடியுமா என்று
    சோதித்துப் போவதற்கு

    கவிதை

    மனம் தளரா தன்னம்பிக்கை
    பொன்னி பெ. சித்தையன்
    தன்னம் பிக்கைக் கொண்டு என்றும்
    தளரா முயற்சி எனும்வழி நடந்தால்
    உன்முன் இருக்கும் வெற்றி இலக்கும்
    உன்னை நோக்கி வந்திடும் உறுதி

    கடந்த பாதையில் கல்லும் முள்ளும்
    காயம் செய்ததை எண்ணி மயங்கி
    நடக்கும் நடையில் தொய்வும் கொண்டு
    நனவைக் கனவாய் மாற்றி விடாதே

    சிகரம் தொட்டவன் முதலில் டென்சிங்
    சிலிர்ப்பைக் கொடுக்கும் பள்ளம் கண்டும்
    நிகரிலா சாதனை செய்தும் முடித்தான்
    நிலைத்த மனிதரில் ஒருவனும் ஆனான்

    கண்டங் கள்பல கண்டது எப்படி?
    கால்தடம் நிலவில் பதித்தது எப்படி?
    மாண்டும் மடியினும் மனிதன் துணிவால்
    மனதில் கொண்ட தன்னம் பிக்கையால்

    உன்னுள் இருக்கும் ஆற்றல் உணர்ந்து
    உலகம் பயனுற வெளியில் கொணர்ந்து
    என்றும் நிலைக்கும் செயட்கள் செய்து
    ஏறு போலும் செல்வாய் நிமிர்ந்து

    மனிதநேயம் மலரட்டும்
    ‘கவிச்சுடர்’ அழகுதாசன்
    உழைத்தே வாழ்வது சிகரநிலை அதில்
    ஊழல் செய்வது நரக நிலை
    களைத்திடும் வரையில் உழைத்திடுக என்றும்
    கனிபோல் மனிதம் வளர்த்திடுகÐ
    ஏழை என்பதை மாற்றிடுவோம் நாம்
    எதிலும் உழைப்பைச் சேர்த்திடுவோம்
    மறையாம் திருக்குறள் பரப்பிடுவோம் உண்மை
    மக்கள் ஆட்சி வரவழைப்போம்
    தமிழா தமிழா ஒன்றுபடு நம்பிக்கைத்
    தளரவிடாதே ஒன்றுபடுÐ
    ‘நாடும் மொழியும் இருகண்கள்’ இவற்றை
    நாமே மறந்தால் வெறும்புண்கள்
    மேடும் பள்ளமும் இல்லாத நம்முள்
    மனிதநேயம் மலரட்டும்

    சுவடுகள்….
    “கவிஞர் நம்பிக்கை” நாகராஜன்
    சொல்லு கின்ற பாதை எல்லாம்
    சிறந் திருக்க வேண்டும் நாம்
    சொல்லு கின்ற வார்த்தை எல்லாம்
    சுகம் கொடுக்க வேண்டும்

    பள்ளம் மேடு பார்க்கும் நிலை
    நமக்கு மட்டும் அல்ல உலகம்
    பயன் பெறவும் நலம் பெறவும்
    பாதை தெரிந்து செல்ல

    தள்ளு கின்ற எண்ணம் தோன்றும்
    தள்ளி ஒதுக்க வேண்டும் அதை
    வெல்லு கின்ற நல்ல செயலை
    விழிகள் பார்க்க வேண்டும்

    நினைத்துப் பார்த்து நினைத்துப் பார்த்து
    நோகும் மனதை மாற்று இனி
    நேர மில்லை நோ வதற்கு
    என்ற நிலையைப் போற்று

    அலை அடிக்கும் கடலில் படகு
    நிலை இல்லாமல் ஆடும் அதை
    அடக்கும் துடுப்பு என்பது போல்
    அறிவில் ஞானம் தேடுÐ

    வந்து வாழ்ந்து மறைந்து போகும்
    வாழ்க்கை வாழ்க்கை அல்ல நாம்
    நின்று நிறுத்தும் “சுவடுகள்” தான்
    நினைவில் நிறைந்து வெல்லும்Ð

    உணவும் உடல் நலனும்

    சூரிய சக்தியினால் (ஒளியினால்) சமைக்கப்படுகின்ற எல்லாம் பொருட்களிலும் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் உள்ளன. குறிப்பாக எல்லா விதமான பழங்களிலும் புதிதாக அறுவடை செய்யப்பட்ட காய்கறிகளிலும் இவை அதிகம் உள்ளன. சர்க்கரை வள்ளிக்கிழங்கு, நெல்லிக்காய், தேநீர், உலர்ந்த பழங்களாகிய பேரீச்சம்பழம், பாதாம் பருப்பு, முந்திரிப்பருப்பு, வால்நட், ஏப்ரிகாட், கிஸ்மிஸ் மற்றும் பப்பாளி, தக்காளி, கேரட், பீட்ரூட், முள்ளங்கி, முருங்கை, எல்லா வகையான கீரைகள் (குறிப்பாக ஸ்பைநாட்ச்), கொத்தமல்லி, கறிவேப்பிலை, மஞ்சள், சீரகம், கசகசா, பெருங்காயம், வெந்தயம், வெள்ளைப்பூண்டு, வெங்காயம், தேன், எலுமிச்சம்பழம், இஞ்சி, சுக்கு, கடுக்காய், சுண்டைக்காய், பாகற்காய், சுரைக்காய், பூசணிக்காய், வெண்டைக்காய், தர்பூசணி, நாவல்பழம் உள்ளிட்ட உணவுப் பொருட்களில் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் மிக அதிக அளவில் உள்ளது.
    மேற்கூறிய உலர்ந்த பழங்கள், கொட்டைகள், புதிதாக அறுவடை செய்யப்பட்ட பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றைப் போதிய அளவில் உணவில் சேர்த்துக் கொண்டால் ஃப்ரீ ரேடிகல்ஸ் உண்டாவதைத் தடுக்கலாம். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாவதுடன் திடமான ஆரோக்கியத்தைப் பெறலாம்.
    இட்லி எவ்வாறு சிறந்த சமச்சீர் உணவோ அதைப்போலவே நம்முடைய தமிழக உணவும் மிகவும் சிறந்தது. உலகிலுள்ள அனைத்து உணவுகளைப் பற்றிய ஆராய்ச்சியின் வெளிப்பாடு என்னவெனில் தமிழக உணவுதான் தலைசிறந்தது என்பதாகும். வாழை இலையில் பரிமாறப்படும் நம்முடைய சாப்பாட்டில் சாதம், பருப்பு, நெய், தயிர் அல்லது மோர், ஊறுகாய், இரண்டு விதமான காய்பொரியல்கள், கூட்டு, அப்பளம், ஒரு இனிப்பு ஆகியவை உள்ளன. இவை அனைத்தும் கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு, வைட்டமின்கள், மினரல்கள், என்ஸைம்கள் ஆகியவற்றைக் கொண்டு சமச்சீர் உணவாக அமைகின்றது. அரிசியை மட்டும் (சாதத்தை) கொஞ்சமாக எடுத்துக் கொண்டு, மற்றவற்றைக் கொஞ்சம் தாராளமாகவே எடுத்துக் கொள்ளும் பொழுது அது மிகச்சிறந்த உணவாகிறது. உணவை உண்டபின் அது செரிப்பதற்காக வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு தரப்படுகிறது. வெற்றிலையில் மருத்துவ குணங்கள் பல உள்ளன. பாக்கு இரத்தம் உறைவதற்கு உதவுகிறது. சுண்ணாம்பு உடலுக்குக் கால்சியம் சத்தைக் கொடுக்கிறது.
    அரிசியைக்கூட நம் முன்னோர்கள் கைக்குத்தல் அரிசியாகத்தான் பயன்படுத்தினார்கள். அதில் வைட்டமின் ‘பி’ சத்து உள்ளது. அரிசியைத்தவிர தமிழகத்தில் முழு தானியங்கள் பல உணவாக உட்கொள்ளப்படுகின்றன. அவைகளில் முக்கியமானவை இராகி, கம்பு, சோளம், மக்காச்சோளம், தினை, வரகு, சாமை போன்றவை. இவை அனைத்தும் நார்ச்சத்து மிகுந்தவை. செலினியம், துத்தநாகம் போன்ற உடலுக்கு அத்தியாவசியமான மினரல்களும் இவற்றில் உள்ளன. கோதுமை, ஓட்ஸ், பார்லி ஆகியவற்றிற்குப் பதிலாகத் தமிழ்நாட்டில் மில்லட்ஸ் என்று சொல்லப்படுகின்ற சிறுதானியங்கள் பல பயன்படுத்தப்படுகின்றன. தற்காலத்தில் மேலை நாடுகளில் உபயோகத்தில் உள்ள சீரியல்ஸ் (இங்ழ்ங்ஹப்ள்) என்று சொல்லக்கூடிய வகையில் கோதுமை, ஓட்ஸ், பார்லி ஆகியவையும் பயன்படுத்தப்படுகின்றன.
    நம்முடைய ரசம் மிகச்சிறந்த உணவும், மருந்தும் ஆகும். ரசத்தில் பருப்பு, சீரகம், மஞ்சள், மிளகு, கசகசா, வெந்தயம், பெருங்காயம், கடுகு, கொத்தமல்லி ஆகியவை சேர்க்கப்படுகின்றன. சீரகம் என்பது சீர் ‘ அகம். அகம் என்பது உடலின் உள் பாகத்தைக் குறிக்கும். உடலை சீர் ஆக வைத்துக் கொள்ள உதவுவது சீரகமாகும். மிளகுக்குப் பல மருத்துவக் குணங்கள் உள்ளன. “பத்து மிளகு கைவசம் இருந்தால் பகைவன் வீட்டிலும் விருந்துண்ணலாம்” என்பது பழமொழியாகும். அதாவது பகைவன் வீட்டில் விஷத்தை உணவுடன் கலந்து கொடுத்தாலும் அந்த விஷத்தை முறிக்கும் சக்தி மிளகுக்கு உள்ளது. மேலும் சளி, இருமல் போன்ற பல விதமான தொல்லைகளிலிருந்து நிவாரணம் அளிக்க மிளகு உதவுகிறது. மஞ்சள் மிக்க மருத்துவ குணம் நிறைந்தது என்பது அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு. மஞ்சள் கேன்சர் வராமல் தடுக்கக்கூடியது. ஒரு சிறந்த கிருமி நாசினியாகப் பயன்படுகிறது. நம் தமிழகத்துப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதற்குக் காரணமே மஞ்சள் ஒரு சிறந்த காஸ்மெட்டிக்ஸ் என்பது ஆகும். மஞ்சள் முகத்திற்கும் உடலுக்கும் அழகையும் பொலிவையும் தரக்கூடியது.
    எந்தெந்த உணவுப் பொருட்களில் கசப்புச் சுவை உள்ளதோ அவற்றல் கால்சியம், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. உதாரணம், வெந்தயம், முருங்கைக்காய், முருங்கைக்கீரை, பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை, கசப்புச் சத்து இனிப்பு நோயைக் கட்டுப்படுத்தும். நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பாகற்காய், பாகல் இலைச்சாறு, வெந்தயம் ஆகியவை சிறந்த மருந்தாகும்.
    எத்தனையோ வகைகளான கனிகள் இருந்தும் ஒளவைப்பாட்டியார் அதியமானுக்கு அவன் நீண்ட நெடுங்காலம் நலமுடன் வாழ நெல்லிக்கனியைக் கொடுத்தார் என்பது செய்தி. நெல்லிக்கனியில் வைட்டமின் மிக அதிகமாக உள்ளது மட்டுமின்றி உயிர்சத்தும், வயதாகும் பொழுது ஏற்படும் மாற்றங்களைக் கட்டுப்படுத்தி இளமையுடன் வைத்திருக்கவும் ஆயுளை நீட்டிக்கவும் உதவும்.
    நம்முடைய முன்னோர்கள் மிகச்சிறந்த நுண்அறிவுடையவர்களாகவும் ஆற்றல் உடையவர்களாகவும் விளங்கியுள்ளனர். அவர்கள் கூறிச்சென்ற எல்லாப் பழமொழிகளையும் கூர்ந்து ஆராய்ந்தால் அவை ஒவ்வொன்றிலும் விஞ்ஞான அறிவு நிறைந்திருப்பது தெரியவருகிறது. தமிழக கோவில்களில் தரப்படும் பிரசாதங்களில் கூட ஊட்டச்சத்தும், மருந்துச் சத்தும் கொண்டுள்ளன. உதாரணமாக நம்முடைய (விநாயகர்) பிள்ளையார் திருத்தலங்களில் பொரி, கடலை, சுண்டல் தரப்படுகின்றன. பொரி வயிற்றுப் பொருமலைச் சீராக்கக்கூடியது. சுண்டல் கடலையில் உள்ள புரதம் இரத்தத்தில் கொலஸ்டிராலைக் குறைக்க வல்லது. முருகன் கோவிலில் தரப்படுகின்ற பிரசாதம் தேனும் தினைமாவும், பஞ்சாமிர்தம் ஆகும். தேன் ஒரு சிறந்த உணவும் மருந்தும் ஆகும். தினையில்தான் மற்ற எல்லா தானியங்களையும் விட அதிகமான தரமான புரதம் உள்ளது. பஞ்சாமிர்தத்தில் வாழைப்பழம், பேரீச்சம்பழம், தேன், கற்கண்டு, நெய் ஆகியவை உள்ளன. இவையனைத்தும் ஊட்டச்சத்தும் மருந்துச்சத்தும் கொண்டவை. திருமால் அல்லது பெருமாள் கோவில்களில் பிரசாதமாக துளசித் தீர்த்தம் தரப்படுகிறது. துளசித் தீர்த்தம் என்பது தேங்காய்த் தண்ணீரையும், துளசி இலையையும் சேர்த்து தாமிரப்பாத்திரத்தில் (பஞ்சாமிர்தம்) ஊற்றி இரவோடு இரவாக வைத்திருந்து காலையில் எடுத்து இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்துக் கொள்ளப்படுவதாகும். தேங்காய்த் தண்ணீர் அல்லது இளநீரில் வைட்டமின்கள், என்சைம்கள், ஹார்மோன்கள், மினரல்கள், குளுகோஸ் ஆகியவை நிறைந்துள்ளன. பழங்காலத்தில் காலரா போன்ற நோய்கள் ஏற்பட்ட பொழுது இளநீர் அல்லது தேங்காய்த் தண்ணீர் அவர்கள் உயிரைத் தக்க வைத்துக்கொள்ளப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்பொழுதுள்ள இன்டிராவீனஸ் குளுகோஸ் அல்லது சலைன் இன்ஜக்ஷனுக்குப் பதிலாக, இளநீர் வாய் வழியாகத் தரப்பட்டிருக்கிறது. இளநீர் சிறிது அமிலத்தன்மை கொண்டிருப்பதால், அது தாமிரப்பாத்திரத்தில் இரவில் வைக்கப்பட்டிருக்கும் பொழுது நமது உடலுக்குத் தேவையான அளவு (மிகச்சிறிய அளவு) தாமிரச்சத்தைக் கரைத்து நம்முடைய உடலுக்கு அளிக்கிறது. துளசி நுரையீரல் சம்பந்தப்பட்ட பல நோய்களைப் போக்கவல்லது.
    தொடரும்…

    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?

    தமிழ்நாடு மருத்துவச் சேர்க்கை 2011

    உயர்கல்வியில் எங்கும் எப்பொழுதும் முதலிடத்தில் இருப்பது மருத்துவப்படிப்பாகும். பெரும்பாலான பெற்றோர்களின் முதல் கனவு தனது மகனையோ, மகளையோ ஒரு சிறந்த மருத்துவராக்கி அதன் மூலம் சமுதாயத்தில் தன் குடும்பத்தின் தனித்தன்மையை ஏற்படுத்துவதாகும். மருத்துவப்படிப்பு ஓர் பொருளீட்டும் படிப்பாக மட்டுமல்லாது, அதன் மூலம் மக்களுக்கு ஓர் சிறந்த சேவையை அளிப்பதும் ஆகும்.
    தற்போதைய உலகத்தில் புதிய புதிய நோய்களும், அதன் மூலம் மனிதர்கள் படும் அல்லல்களும் மருத்துவர்களை தெய்வத்திற்கு இணையாக நோயாளிகள் கருதுகின்றனர்.
    2009ம் ஆண்டின் கணக்கீட்டில் உலகளவில் அதிகமாக 289 கல்லூரிகளும், அதன் வாயிலாக 33,000 மருத்துவபட்டதாரிகளும் இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் வெளிவருகின்றனர்.
    110 கோடி இந்திய மக்கள் தொகையில் உலக சுகாதார அமைப்பின் கணக்கீட்டின்படி தேவைப்படும் 16 லட்சம் மருத்துவர்களுக்குப் பதிலாக நமது நாட்டில் வெறும் 6.75 இலட்சம் மருத்துவர்களும், 3 இலட்சம் பல் மருத்துவர்களும் மாறாக 73,000 பல் மருத்துவர்களும், இந்தியாவிற்கு தேவைப்படும் 26 இலட்சம் மருத்துவ செவிலியர்களுக்கு மாறாக 10 இலட்சம் செவிலியர்கள் மட்டுமே உள்ளனர். இந்தக் கணக்கீட்டின் மூலம் இந்தியாவில் மருத்துவப் பணியாளர்களின் தட்டுப்பாடு அறியப்படுகின்றது.
    உலக சுகாதார அமைப்பின் கணக்கீட்டின்படி இந்தியாவில் உடனடித் தேவையாக 9.75 இலட்சம் மருத்துவர்களும், 2.27 இலட்சம் பல் மருத்துவர்களும், 16 இலட்சம் மருத்துவ செவிலியர்களும் உணரப்படுகின்றது. குறிப்பாக 28% மக்கள் வசிக்கும் நகரங்களில் 74% மருத்துவர்களும், 72% மக்கள் வசிக்கும் கிராமங்களில் வெறும் 26% மருத்துவ பணியாளர்கள் மட்டுமே தங்களது சேவைகளைத் தொடர்கின்றனர்.
    MBBS சேர்க்கை
    தமிழ்நாட்டில் தற்போதைய நிலவரப்படி 17 அரசு மருத்துவக் கல்லூரிகளும், அவற்றில் 1,653 மருத்துவ சேர்க்கை கலந்தாய்வு இடங்களும், 8 தனியார் மருத்துவக் கல்லூரிகளும், அவற்றில் 635 இடங்களும் உள்ளன. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.2.30 இலட்சமும், ஆண்டு கட்டணமாக வசூலிக்கும் நிலையில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் வெறும் ரூ.10,495யை ஆண்டு கட்டணமாக OC, BC மற்றும் MBC மாணவர்களிடமிருந்தும், ரூ.8,500I SC / ST மாணவர்களிடம் இருந்தும் பெறுகின்றனர்.
    ஆண்டுக்கு ஆண்டு மாணவர்களைக் காட்டிலும் மாணவிகளிடம் அதிகரிக்கும் ஆர்வம் காரணமாக இன்ற்-ர்ச்ச் ஙஹழ்ந்ள் எனப்படும் சேர்க்கை மதிப்பெண்களும் அதிகரிக்கின்றன.

    பன்னிரண்டாம் வகுப்பிற்குப் பிறகு தனக்கு எந்த மாதிரியான மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கப்பெறும் என்பன போன்ற விபரங்களை மாணவர்கள் கல்வி ஆலோசனை மையத்தினை அணுகி பெற்றுக்கொள்ளலாம். அதனைத் தவிர்த்து அவரசப்பட்டு வேறு எந்தவொரு வெளிஆட்களையும் நம்பி ஏமாறவேண்டாம் என்று பெற்றோர்களையும், மாணவர்களையும் கேட்டுக் கொள்கின்றோம்.
    ஆஈந சேர்க்கை
    ஙஆஆநல் இடம் கிடைக்கப்பெறாதவர்கள் அடுத்த இலக்காக வைப்பது ஆஈந என்பபடும் பல் மருத்துவப்படிப்பாகும். தமிழ்நாட்டில் பல் மருத்துவப் படிப்பிற்கு ஒரு அரசு பல்மருத்துக் கல்லூரியும், அதில் 85 இடங்களும், 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளும், அவற்றில் அரசு ஒதுக்கீட்டிற்கு 965 இடங்களும் உள்ளன.
    அரசு கல்லூரியில் ஆண்டு கட்டணமாக ரூ.8,495ஐ OC, BC மற்றும் MBC மாணவர்களும், ரூ.7,500I SC / ST மாணவர்களும் செலுத்த உள்ளனர். அதே நேரம் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டிற்கு ரூ.82,000I ஆண்டு கட்டணமாக நிர்ணயம் செய்துள்ளனர்.
    டஹழ்ஹம்ங்க்ண்ஸ்ரீஹப் – துணை மருத்துவப்படிப்புக்கள்
    (ஆடப, ஆஞப, ஆ. டட்ஹழ்ம், ஆ.நஸ்ரீ. சன்ழ்ள்ண்ய்ஞ்)
    புதிய புதிய நோய்கள், அதிகரிக்கும் மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் மருத்துவ உதவி ஆகியவை மருத்துவ துறையின் வேகமான வளர்ச்சிகளை உணர்த்துகின்றன. மருத்துவப் படிப்பிற்கு ஏற்றாற் போல் துணை மருத்துவப் படிப்பிற்கும் அதிக அளவிலான வல்லுனர்களின் தேவைப்பாடு நிலவுகின்றது.
    ஆடப, ஆஞப, ஆ.நஸ்ரீ. சன்ழ்ள்ண்ய்ஞ் போன்ற துணை மருத்துவ படிப்புகளுக்கு அரசு கல்லூரிகளில் ஆண்டு கட்டணமாக ரூ.1,200ஐ மட்டும் வசூலிக்கின்றனர்.
    கடந்த ஆண்டுகளில் BPT மற்றும் BOT படிப்புகளில் அதிக அளவிலான மாணவர்கள் ஆர்வம் காட்டாத காரணத்தினால் அந்தத் துறை சார்ந்த மருத்துவர்களின் எண்ணிக்கை பொது மருத்துவர்களுடன் ஒப்பிடும்பொழுது குறைவாக உள்ளது. இதன் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் BPT Uற்றும் BOT படித்த துணை மருத்துவர்களின் தேவைப்பாடு அதிகரிக்கும். இதனால் மாணவர்கள் இத்துறையை தேர்வு செய்வதன் மூலம் தங்களின் தேவைப்பாடு அதிகரிக்கப்பட்டு, அதன்மூலம் தங்களின் வேலைவாய்ப்புகள் உறுதி செய்யப்படும் என்பதனை இக்கட்டுரை மூலம் தெறியப்படுத்துகிறோம்.
    ஜூலை முதல் வாரத்தில் தொடங்கவிருக்கும் தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை கலந்தாய்வின் விபரங்கள் அடுத்த இதழில் …
    இந்தக் கட்டுரையில் அனைத்து விபரங்களையும் அளிக்க இயலாத நிலையில், மாணவர்களின் நலன் கருதி தொலைபேசி (0424 2500073) வாயிலான உயர்கல்வி ஆலோசனை நிகழ்ச்சிகளை செல்வக்குமரன் கல்வி ஆலோசனை மையம் அனைத்து நாட்களிலும் இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை நடத்துகின்றது. மாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    குழப்பம் தீர வழி

    நம் எல்லோருடைய வாழ்விலும் பௌர்ணமி நிலவும் உண்டு; அமாவசையும் உண்டு. நிலவு வளர்ந்து தேய்வது போல, நமக்கும் பல பிரச்சனைகள், இன்ப துன்பங்கள், லாப நஷ்டங்கள், ஏற்றஇறக்கங்கள் வரத்தான் செய்யும். சக்கரவட்டம் போல வந்துவந்து போய்க் கொண்டே இருக்கும்.
    இதைப்புரிந்து கொள்வதில்தான் வாழ்க்கையின் சுவாரஸ்யமே இருக்கிறது.
    ருபச்சாளர்களுக்குத் தர்ம சங்கடம், பல மேடைகளில் பல்வேறு கருத்துக்களைப் பற்றிப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், சொன்னதையே சொல்லிக் கொண்டிருந்தால், கேட்பவர்களுக்கு சலிப்பு ஏற்படும். புதிது புதிதாக ஏதாவது சொல்லித்தான் ஆக வேண்டும். இது பேச்சாளரின் தர்ம சங்கடம்.
    டாக்டரிடம் சிகிச்சைக்காக நோயாளி வருகிறார். ஒரு சிறந்த டாக்டராக இருந்தால் ‘பேஷண்ட்’ (நோயாளி) சொல்வதை ‘பேஷண்டாக’ (அமைதியாக) கேட்டுக் கொண்டிருப்பார். பதில் ஏதும் சொல்லமாட்டார். நோயாளி ஒரு பெரிய பட்டியலையே டாக்டரிடம் காண்பிப்பார். அதை டாக்டர் படித்துப் பார்த்துவிட்டு, நோயாளியின் பிரச்சனை என்னவென்று, தெளிந்தறிந்து சிகிச்சை அளிப்பார்.
    நோயாளி டாக்டரிடம், “சார்Ð எனக்கு ஓயாத் தலைவலி” என்று சொன்னால், “கண் டெஸ்ட் செய்தீர்களா?” கண்கோளாறாக இருக்கலாம். அதனால், தலைவலி வரலாம் என்பார் டாக்டர். “அதெல்லாம் இல்லை சார். கண்களில் எந்தக் கோளாறும் இல்லை”.
    அஜீரணத்தால் தலைவலி வரலாம். சரியாக தூங்கினீர்களா? சளித் தொந்தரவு இருக்கலாம். தலையில் ஏதாவது அடிபட்டதா? கட்டி (டியூமர்) ஏதாவது உள்ளதா என்று பார்த்தீர்களா? என்று டாக்டர் கேட்டால், அதெல்லாம் இல்லை டாக்டர் என்று நோயாளி பதில் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
    டாக்டர் சற்றுநேரம் எதுவும் சொல்லாமல் மௌனமாக யோசிப்பார். சட்டென்று அவருக்குப் புலப்படும். என்ன சார்Ð காலரை இறுக்கிப் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். போதாக்குறைக்கு ‘டை’ வேறு. காலரை ஓபனாக விடுங்கள் சார்Ð சரியாகிவிடும் என்பார் டாக்டர். ஆÐ இதுதான் நோயாளியின் பிரச்சனை. தீர்வு கிடைத்துவிட்டது.
    டாக்டர் குறிப்பிட்ட பத்து விஷயங்களில், தீர்வு இல்லை என்றால், தீர்வு வேறு எங்கோ தான் இருக்கிறது. அதைக் கவனித்தால் குழப்பம் தீர்ந்துவிடும். பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும்.
    முதலிலேயே டாக்டர் இந்தத் தீர்வை சொன்னால், நோயாளி ஏற்றுக் கொள்ள மாட்டார். அவர் குழப்பம் எல்லாம் தீர்ந்து, மனம் அமைதி அடைந்து, புரிந்து கொள்ளும் நிலையில் தான் தீர்வு கிடைக்கிறது.
    அனுபவமிக்க வீட்டு புரோக்கர் வாடகைக்கு, விற்க அல்லது வாங்க பலவீடுகளைப் பார்த்துவிட்டு வந்து சொல்வார். அவர் நடுவர் தான். ஒருவர் சொல்வதை மற்றவரிடம் சொல்லி ஒரு முடிவுக்கு வர உதவுவார். இரண்டு பார்ட்டியும் சம்மதித்தால்தான் பேரம் முடியும். பேசி முடிப்பார். ஒன்றும் அமையவில்லை என்றால், புரோக்கர் “கூலாக” அதனால் என்ன சார்Ð வேறு வீடு பார்ப்போம் என்பார். அவர் சற்றும் அலட்டிக் கொள்ளமாட்டார். அவருக்கு வேண்டியது கமிஷன். இரண்டு பார்ட்டிகளுக்கும் இடையில் நடையாக நடந்து, சற்றும் சலிப்படையாமல், குழப்பத்துக்கு ஆளாகாமல் பேரத்தைப் பேசி முடிப்பார்.
    குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முடியாதல்லவா? இது புரோக்கருக்கு நன்றாகத் தெரியும்.
    மிக தேர்ந்த வியாபாரி. பல துறைகளில் அவர் வணிகத்தில் முதல் போட்டு வியாபாரம் செய்து கொண்டிருப்பார். ஏதாவது ஒன்றில் நஷ்டம் ஏற்பட்டாலும் கவலைப்படமாட்டார். மற்றதில் ஈடுகட்டி சரிசெய்து விடுவார். தமக்கு ஏற்பட்ட நஷ்டம் புத்திக்கு கொள்முதல் என்று சொல்லி, ஏன் நஷ்டம் ஏற்பட்டது, எப்படி அதனைச் சரி செய்வது என்று ஆலோசித்து முடிவு செய்வார். இது தான் சிறந்த வியாபாரியின் தொழில் நுணுக்கம்.
    ஆனால், புதிதாக முதல் போட்டு வியாபாரம் செய்பவர்தான், ஏதாவது நஷ்டம் ஏற்பட்டால், துவண்டு போய்விடுவார். குழப்பமும், கவலையும் அவரை வாட்டும். அவ்வளவு தான். எனக்கு அதிர்ஷ்டமே இல்லை. போட்ட பணமும் போச்சு என்று வருத்தத்தில் ஆழ்ந்து விடுவார்.
    நமக்கு ஏற்பட்ட பல அனுபவங்கள் இந்தக் குழப்பமான சூழ்நிலையிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள உதவுகிறது. நடந்து போனவற்றையே எண்ணிப் புலம்புவதால் வாழ்க்கையில் எப்போது முன்னேறுவது? என்ன செய்வது, என்ன செய்வது என்று மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொண்டால் தீர்வு காண முடியாது. அதிலிருந்து சற்று விலகி, வெளியே வரவேண்டும்.
    அதனால் தான் பெரியவர்கள் “பிழைத்துக் கிடந்தால் நாளை பார்த்துக் கொள்ளலாம்” என்பார்கள். குழப்பமான சூழ்நிலையில் நம்மால் எந்தத் தீர்வையும் காணமுடியாது. ஆறப்போட்டால் குழம்பிய தண்ணீர் தெளிந்து, வண்டல் எல்லாம் கீழே படிந்து, தெளிவான நீர் மேலே இருப்பது போல நமக்கு விடை தெரியும்.
    நம் மனமானது எதையும் விரைவில் ஏற்றுக்கொள்ளாது. ஏகப்பட்ட சமாதானங்கள், கேள்விகள், விமர்சனங்கள் என்று அலைபாய்ந்து கொண்டே தான் இருக்கும். மனம் சலித்து, சோர்வடையும் போது, சற்றுநேரம் மனதிற்கு “ரெஸ்ட்” (ஓய்வு) கொடுத்துவிட்டால் நமது பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியும்.
    ஆர்க்கிமிடிஸ் தத்துவம் என்பது இதுதான். அரசனின் ஆணையை ஏற்று, அவரது கேள்விக்கு விடை காணமுயன்றார். ஒருநாள் தொட்டியில் குளித்துக் கொண்டிருந்தபோது, புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானோதயம் பிறந்தது போல, அவருக்கு பொட்டில் அடித்தது போல, தீர்வு கண்டார். அப்படியே “யுரேகா” கண்டுபிடித்துவிட்டேன் என்று குதூகலமாக ஓடினார் என்பது அவருடைய வரலாறு.
    எதையும் ஆறப்போடும்போது, தண்ணீரை கொதித்து ஆறவைத்தால், சற்று நேரத்தில் கசடுகள் எல்லாம் கீழே படிந்து, தெளிவான தண்ணீர் கிடைப்பதுபோல, பிரச்சனைக்கு விடை தானே கிடைக்கும்.
    தியானப் பயிற்சி நமக்கு இந்தத் தெளிவைத் தருகிறது. நமது மனதில் ஏற்படும் குழப்பங்கள், பிரச்சனைகள், வாத பிரதிவாதங்கள், எண்ண ஓட்டங்கள் இவற்றைச் சற்றுநேரம் கவலைப்படாமல் வேடிக்கை பார்க்கத் தொடங்கும்போது, மனதில் ஓர் அமைதி ஏற்படுகிறது. தெளிவு பிறக்கிறது. பாசி படர்ந்து தண்ணீரைச் சற்றேவிலக்கிவிட்டால், தண்ணீர் தெளிவாக இருப்பது போல மனதின் பாசியை விலக்கப் பழகுவதே தியானம்.
    பிரச்சனைக்குத் தீர்வு வெளியே இல்லை. நம்மிடமே தான் இருக்கிறது என்பதை அப்போது நாம் புரிந்து கொள்ள முடியும். தியானப் பயிற்சியில் தொடர்ந்து ஈடுபட நமக்கு இந்த ஆற்றல் வளரும்.

    அலட்சியப்படுத்தாதே… இலட்சியப்படுத்து

    நம்மை மனிதனாக உருவாக்க வேண்டும் என்பதுதான் இறைவனுடைய இலட்சியம். அவருக்கு நம்மை படைக்க வேண்டும் என்ற இலட்சியம் இருக்கின்றபோது, அவரால் தோற்றுவிக்கப்பட்ட நமக்கு எப்படி இலட்சியம் இல்லாமல் இருக்க முடியுமா?
    உயிர் இல்லாத மனிதனைக் காணமுடியாதது போல இலட்சியம் இல்லாத மனிதனைக் காண முடியாது.
    எந்தவிதமான இலட்சியத்தைக் கொண்டு இருக்கிறோமோ அந்த விதமாகவே வாழ்க்கை அமையும். நாம் எப்படிப்பட்ட இலட்சியத்தை மேற்கொள்ளப் போகிறோம்.
    வெற்றி வீரர்களாக, அறிஞர்களாக, மேதையாக மாறப் போகிறோமா? அல்லது வெந்த சோத்தைச் சாப்பிட்டு நொந்துப் போகப் போகிறோமா? எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். நாம் எடுத்துக்கொள்ளும் இலட்சியம் தான் வாழ்க்கையை வளமுடன் வாழ வழிகாட்டும்.
    வாழ்க்கைக்கு வழிகாட்டியாக உயர்ந்த ஓர் இலட்சியம் இல்லாவிட்டால் மனிதன் மிருகமாகிவிடுவான் என்கிறார் விவேகானந்தர்.
    உயர்ந்த இலட்சியவாதிகள் மூலம்தான் நிலையான வாழ்க்கையை நிறுவ முடியும் என்று கூறுகிறார் எமர்சன்.
    இலட்சியத்தை நேசிக்கிறோம் என்பதற்கு அடையாளம் என்னவென்றால் அதற்காக வாழ்ந்து காட்டுவதுதான்.
    நம்முடைய இதயத்தில் எந்த இலட்சியத்தைக் கொண்டு இருக்கிறோமோ அதற்கு ஏற்றபடிதான் வாழ்க்கை அமையும்.
    உயரமான மலைகளின் மீது ஏறிச்சென்று இதுவரை மனிதனது அடிச்சுவட்டையே காணாத நாடுகளை ஆராய்ந்தவர்களுடைய இலட்சியத்திற்கு முன் குறுக்கே எதுவும் நிற்க முடியாது.
    கிரீன்லாந்தில் விஞ்ஞான ஆராய்ச்சி நடத்துவதற்காக நண்பருடன் புறப்பட்டார் எரிக்ஸன். சில மாதங்களுக்குள் இவர்களிடம் இருந்த உணவுமுடிந்து போயிற்று. காலில் அணிந்திருந்த காலுறைகளும் கிழிந்துவிட்டன. பட்டினியோடும் வெறுங்கால்களுடனும் கடுங்குளிரில் நடந்தனர்.
    நடக்கச் சக்தியற்ற நிலை வந்தும் எரிக்ஸன் நெடுந்தொலைவிற்கு நடந்தும், ஊர்ந்தும் சென்றார். தாங்கள் இறப்பது உறுதி என்ற நிலைக்கு ஆட்பட்டனர். ஆராய்ச்சிக்குறிப்புகளைத் தகுந்த பாதுகாப்பான முறையில் வைத்துவிட்டார் எரிக்ஸன். பனிக்கட்டியின் மீது ஊர்ந்து சென்றார்.
    நவம்பர் மாத பனியும், குளிரும் இவரை வாட்டியது. இறுதியில் பனிப்புயலில் சிக்கி உயிரைவிட்டார்.
    ஒரு ஆண்டு சென்ற பிறகுதான் எரிக்ஸனது சடலமும், அவர் நண்பரது சடலமும் கிடைத்தன. இவருடைய ஆராய்ச்சிக் குறிப்புகளும் கிடைக்கப் பெற்றன.
    மரணத்தை முக மலர்ச்சியுடன் வரவேற்ற அவருடைய இலட்சியத்தால்தான், சமுதாயம் அறியாமல் இருந்த நாடுகளைப் பற்றிய உண்மைகளை உணரமுடிந்தது.
    ஒரு நாட்டைப்பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு இவருடைய உயிரையே கொடுக்க வேண்டி இருந்த போதிலும் எரிக்ஸன் சோர்ந்துவிடவில்லை. தன்னுடைய உயிர் போனாலும் கவலைப்படாமல், தன்னுடைய இலட்சியம்தான் பெரியது என்று எண்ணிச் செயல்பட்ட எரிக்ஸனின் செயல்மிகவும் உயர்வானது.
    விஞ்ஞான முறையில் ஆராய்ந்து முடிவுகள் புரட்சிகரமானவையாக இருந்தாலும் கூட, அக்காலத்திற்கு ஏற்றபடி இருந்த கருத்துகளுக்கு முரண்பட்டதாக அமைந்தாலும், அதற்காக விஞ்ஞானி தான் கண்டு அறிந்த உண்மைகளுக்காக உலகையே எதிர்த்துப் போராடவும் தயங்கியது இல்லை.
    விஞ்ஞானி செய்யும் ஆராய்ச்சிகளாலும் வெளியிடும் கருத்துகளாலும், தங்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும், விஞ்ஞானி தான் மேற்கொண்ட இலட்சியத்தை எப்பொழுதும் விட்டுவிட மாட்டார்.
    இலட்சியத்துடன் தொடங்கப்படும் எந்த செயலும் தோல்வி அடைந்ததாக வரலாறு இல்லை. இலட்சியம் தான் ஒரு செயலை உருவாக்கும். இது இல்லாவிட்டால் உலகத்தின் இயக்கமே இருக்காது.
    இலட்சியத்துடன் செயல்பட்டால் எதிர்க்க வரும் எதுவும் இருக்கும் இடம் தெரியமால் ஓடிப்போய்விடும்.
    வாழ்க்கை என்ற புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே நம்மிடம் இலட்சியம் இடம் பெற்றிருக்க வேண்டும். உயர்வான இலட்சியம் இருப்பது அவசியம்.
    இலட்சியம் என்று ஒன்று இருந்தால் தான் வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் சென்று கொண்டிருக்கும்.
    இலட்சியத்தை நிறைவேற்றுவதற்குத் திடமான மனவலிமை வேண்டும். எவ்வளவு இடையூறு ஏற்பட்டாலும் இதனை விட்டுவிடக் கூடாது.
    சில மதங்களில் துறவிகளாக வருவதற்குப் பயிற்சி பெறும்பொழுது தங்களுடைய இலட்சியத்திலிருந்து தவறாமல் இருக்கிறார்களா என்பதற்குப் பல சோதனைகளை வைப்பார்கள். அதனை வென்றால் தான் அவர்கள் துறவியாக முடியும்.
    நம்முடைய வாழ்க்கையிலும் இலட்சியத்தை அடையும் பொழுது பல சோதனைகள் குறுக்கிடும். சோதனையில் துன்புறும் போது இலட்சியத்தை விட்டுவிடக் கூடாது.
    இலட்சியத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருந்தால் நம்முடைய வாழ்க்கை பயனற்றதாகிவிடும். சிறு துன்பத்திற்காக அஞ்சி தன் இலட்சியத்தை கைவிட்ட மனிதன், தானே பெருந்துன்பத்தைத் தழுவிக்கொள்கிறான் என்கிறார் அறிஞர் வில்லியம்ஸ்.
    கை அளவு கொண்ட இதயத்தில் என்ன இலட்சியத்தை உருவாக்குகின்றதோ அதற்கேற்றபடிதான் வாழ்க்கை அமையும். இலட்சியம் என்ற பாகம் சரியாக இருந்தால் தான் உடல் என்ற இயந்திரம் சரியாக இயங்க முடியும்.
    நாம் என்ன இலட்சியம் கொண்டு செயலாற்றி வருகிறோம் என்பதை நம்மை நாமே கேட்டுக் கொள்வோம். இதுவரை இலட்சியம் இல்லாமல் வாழ்ந்துவிட்டோம் என்பதனைப் புரிந்துகொள்ள முடியும். இனிமேலும் இந்தநிலை தொடர வேண்டாம்.
    நாம் ஒரு இலட்சியத்தை மேற்கொள்வோம். அந்த இலட்சியத்தை முன் வைத்து செயலாற்றுவோம்.

    உனக்குள்ளே உலகம்

    மாற்று ஏற்பாடுகள்

    பிளஸ் 2 முடிவுகள் வெளியாகிவிட்டது. மாணவ – மாணவிகள் பலருக்கு கொண்டாட்டம்.
    வாழ்க்கையின் திருப்புமுனையாக அமையும் பிளஸ் 2 தேர்வு, பலருக்கு வாழ்க்கையில் உயர்வைத் தந்திருக்கிறது. ஆனால் அதேவேளையில் சிலருக்கு அதிர்ச்சியைத் தந்து அவர்களது வாழ்க்கையைத் திருப்பிப் போட்டிருக்கிறது.
    இளம்வயதில் பள்ளியில் படிக்கும் மாணவ – மாணவிகளுக்கு விதவிதமாய் கனவுகள் மனதில் பூக்கத்தான் செய்யும்.
    “நான் டாக்டர் ஆகவேண்டும்.”
    “நான் இன்ஜினியர் ஆக வேண்டும்”.
    “நான் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றிபெறவேண்டும்”. – என விதவிதமாய் ஆசைகள் அவர்களது மனதில் உருவாகும்.
    ஆடிட்டராக வேண்டும், மேனேஜராக வேண்டும், நர்ஸ் பணியில் சேர வேண்டும் – எனவும் ஆசைக்கனவுகளோடு பல்வேறு மாணவ – மாணவிகள் படித்து வருகிறார்கள். அவர்கள் ஆசைகளெல்லாம் நிறைவேறுகிறதா? இல்லையா? என்பது அந்த மாணவ – மாணவிகளுக்கும், அவர்களைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே தெளிவாகத் தெரியும்.
    இந்த ஆண்டு (2011) பிளஸ் 2 தேர்வு முடிவு பல மாணவ – மாணவிகளுக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது. பிளஸ் 2 தேர்வில் கணிதப் பாடத்தில் 2,720 பேரும், இயற்பியல் பாடத்தில் 646 பேரும், வேதியியல் பாடத்தில் 1,243 பேரும், 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள். உயிரியல் பாடத்தில் 615 பேர் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இப்படி சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அதிகமாக உள்ளது.
    ஒருபுறம் – பிளஸ் 2 தேர்வின் வெற்றி பலருக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது.
    ஆனால் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் அரவிந்த்குமாருக்கு பிளஸ் 2 தேர்வு முடிவு அதிர்ச்சியைத் தந்திருக்கிறது. பிளஸ் 2 தேர்வில் 2 பாடங்களில் அவர் தோல்வி அடைந்ததால் தஞ்சை – ஆலக்குடி இடையே தென்றல் நகர் என்றஇடத்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த நிகழ்வு அவரது குடும்பத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது தந்தை கும்பகோணத்தில் பொறுப்பான பதவியில் உள்ளார். இருந்தபோதும் “பிளஸ் 2 தேர்வில் வெற்றிபெறமுடியவில்லையே” என்றஏக்கத்தில் அரவிந்த்குமார் தற்கொலை முடிவுக்கு வந்திருக்கிறார். 17 வயதான அரவிந்த்குமார் அவசரமாய் இந்த முடிவு எடுப்பதற்குக் காரணம் என்ன?
    “நினைத்ததெல்லாம் எனக்கு கிடைக்க வேண்டும்” – என இன்றைய இளைய உள்ளங்களில் பலர் எண்ணுகிறார்கள். தாங்கள் எதிர்பார்த்ததெல்லாம் நிறைவேறாவிட்டால் உடனே சோர்ந்துபோய்விடுகிறார்கள். வெற்றி வந்தால் துள்ளிக் குதிக்கிறார்கள். தோல்வி வந்துவிட்டால் துவண்டு போய்விடுகிறார்கள். வெற்றி பெற்றதும் அதிகமாய் மகிழ்வதும், தோல்வியைச் சந்திக்கும்போது சோகமாய்த் திரிவதும் நல்ல வாழ்க்கைக்கு அழகல்ல.
    தேர்வில் வெற்றி பெறமுடியவில்லை என்பதற்காக தற்கொலை செய்யும் இளம் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டு வருகிறது என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சாதாரண தேர்வு முடிவுகளைக்கூட ஏற்றுக்கொள்ள இயலாத மனநிலை கொண்டவர்கள் வாழ்க்கையில் எதிர்பாராத முடிவுகளை எடுத்துக்கொள்கிறார்கள்.
    தோல்விகள் ஏற்படும்போது அதனை எளிதாக ஏற்றுக்கொள்ளாத மனநிலை கொண்டவர்கள் வாழ்க்கையில் நிம்மதியை இழக்கிறார்கள். தன்னுடன் படிக்கும் மாணவ – மாணவிகளின் தேர்வு முடிவுகளையும், மதிப்பெண்களையும் ஒப்பிட்டுப் பார்த்து மற்றவர்களைவிட தனக்குக் குறைந்த மதிப்பெண்கள் கிடைத்துவிட்டால் தாங்கிக்கொள்ள முடியாத மனநிலை கொண்டவர்கள்தான் இந்த முடிவுக்கு வருகிறார்கள். மதிப்பெண்கள் குறைவாக எடுத்தால் தங்கள் குடும்பத்தின் கவுரவம் பாதிக்கப்படும் என்றஎண்ணத்தினாலும் சில இளைஞர்கள் தவறானப் பாதையைத் தேர்ந்தெடுத்து உயிரை போக்கிக் கொள்கிறார்கள்.
    பிளஸ் – 2 தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக எடுத்தவர்கள் ஏற்கனவே மனதளவில் காயப்பட்டிருப்பார்கள். பதற்றத்தோடு காணப்படுவார்கள். தனது எதிர்காலத்தை நினைத்து பயப்படுவார்கள். இரவில்கூட தூக்கமில்லாமல் பதற்றஉணர்வுடன் இருப்பார்கள். எந்தவொரு செயலிலும் அக்கறை காட்டாமல் கவனமின்றி செயல்படுவார்கள். அவர்களது முகம் இறுக்கமாக காணப்படும். ஒரு சொல்லமுடியாத சோகத்தை விழுங்கியவர்கள்போல அவர்களது பார்வை வெறிச்சென்று காணப்படும். பேசுவதைக் குறைத்துக்கொண்டு மவுன விரதத்தைக் கடைபிடிப்பார்கள்.
    “அடுத்ததாக என்ன செய்ய வேண்டும்?, எங்கு படிக்கலாம்?, என்ன படிக்கலாம்?, என்று மனதிற்குள் கேள்வி எழுப்பி அதற்கு விடைகாண முடியாமல் திண்டாடுவார்கள். ஏற்கனவே குழம்பிப்போயிருக்கும் இவர்களைச் சந்திப்பவர்கள், இவர்களின் மனக்காயத்திற்கு மருந்துபோடாமல் அந்தக் காயத்தில் வெந்நீர் ஊற்று வார்கள்.
    “இந்தக் காலத்தில் பிளஸ் – 2 தேர்வில் நல்ல மார்க் எடுக்கவில்லை என்றால் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும். நீ 1200க்கு 750 மார்க் – தான் எடுத்திருக்கிறாய். இது ரொம்பக் குறைவு”
    “நீ எடுத்த மார்க்குக்கு ஒரு காலேஜிலேயும் இடம்கிடைக்காது”
    “நீ படிச்சுதான் நம்ம குடும்பத்தைக் கரையேற்றுவாய் என்று நம்பியிருந்தேன். நீ நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டாய்”
    “என்னால்தான் ஒரு டாக்டராகவோ, இன்ஜினியராகவோ முடியவில்லை. உன்மூலம் என் கனவை நனவாக்க நினைத்தேன். என் நினைப்பில் நீ மண்ணைப் போட்டுவிட்டாய்”. இப்படி எத்தனையோ வார்த்தைகள் காயத்தின்மீது கத்தியாய் விழும். மனக்காயத்திற்கு மருந்து போடுவதற்குப்பதில், தீயின் தூறல்களை வார்த்தைகளாக்குவது இளைய உள்ளங்களை கருகச் செய்துவிடும் அல்லவா!
    மதிப்பெண்கள் குறைவாக எடுத்தாலும் அவன் நம் பிள்ளைதானே! என்று எண்ணி, பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக எடுத்தவர்களையும் உற்சாகப்படுத்துவதற்கு அனைவரும் முன்வரவேண்டும்.
    அது ஒரு திடீர் விபத்து.
    சாலையைக் கடந்துவிடலாம் என்று சென்றகல்லூரி மாணவன் பார்த்தீபன்மீது வேகமாக வந்த ஒரு வேன் திடீரென்று மோதியது. பார்த்தீபன் தலையில் அடிபட்டு ரத்தம் ஓடத்தொடங்கியது. ஆஸ்பத்திரிக்கு அழைத்துவந்து சிகிச்சை செய்தார்கள்.
    “இவனுக்கு கொஞ்சம்கூட மூளை கிடையாது. கவனக் குறைவாகப்போய் காருக்குள் விழுந்திருக்கானே” என்றார் அப்பா.
    “டேய் நீ பார்த்து நடந்துபோயிருந்தால் இப்படி அடிபட்டிருக்காது” என்று நண்பர்கள்கூட ஆலோசனை என்றபெயரில் குத்திக்காட்டினார்கள்.
    “ஏற்கனவே இவன் படிப்புக்கு ரொம்ப செலவுசெய்துவிட்டோம். போதாதக் குறைக்கு ஆஸ்பத்திரி செலவு வேறவந்துட்டுது” மருத்துவமனையிலும் வரவு செலவுக் கணக்கை வாசித்தான் அண்ணன்.
    விபத்தினால் உருவான காயம் தந்த வருத்தங்களைவிட, உறவினர்கள் உருவாக்கிய வார்த்தைக் காயங்கள் பார்த்திபனை நிலைகுலைய வைத்தது.
    விபத்தினால் ஏற்பட்ட காயத்திற்கு மருந்துபோடும் ஒரு டாக்டரால்தான் அந்தக் காயத்தைக் குணமாக்க முடியும்.
    இதைப்போலவே பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண்கள் குறைவாக எடுப்பது என்பது ஒரு விபத்துதான். அந்த விபத்தில் காயம் பட்டவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டும்விதத்தில் அனைவரும் செயல்பட வேண்டும்.
    “ராஜேஸ்வரி…… நீ மார்க் குறைவாக எடுத்ததினால் வருத்தப்படாதே. உன்னை உன் மார்க்குக்கு தகுந்தபடி நான் மேற்படிப்பு படிக்க வைப்பேன்”.
    “நாங்களெல்லாம் உன்னோடு இருக்கிறோம் நீ ஏன் கவலைப்படுகிறாய். அடுத்தமுறை நன்றாக முயற்சிசெய். வெற்றி நிச்சயம்”.
    “தோல்வி என்பது ஒரு பின்னடைவு. அந்தத் தோல்வியிலிருந்து நாம் பாடங்களைப் படித்துக்கொள்ள வேண்டும்”.
    “எந்தச் சூழலிலும் நீ கவலைப் படக்கூடாது. உனது மகிழ்ச்சிதான் எங்கள் மகிழ்ச்சி”
    – என பெற்றோர்கள், ஆசிரியர்கள், நண்பர்கள் அனைவரும் “ஆதரவுக்குரல்” எழுப்பி மதிப்பெண் குறைந்த மாணவ – மாணவிகளை உற்சாகப்படுத்த வேண்டும்
    உற்சாக வார்த்தைகள்தான் இளம் உள்ளங்களை இனிமைப்படுத்தும். அவர்கள் இதயத்தில் உற்சாகத்தை உருவாக்கி செயல்பட வைக்கும்.
    முன்பெல்லாம் – ஒரு பஸ் “பிரேக் டவுன்” ஆகிவிட்டால் பஸ்ஸில் இருக்கின்றபயணிகள் அனைவரும் பஸ்சை விட்டு கிழே இறங்கிவிடுவார்கள். பின்னர் அந்த பஸ் எப்போது பழுதுபார்க்கப்பட்டு சரிசெய்யப்படுகிறதோ அதுவரை அந்த பஸ்ஸின் அருகே காத்திருப்பார்கள். ‘பஸ்’ சீராக்கப்பட்ட பின்னர் அந்த பஸ்ஸில் மீண்டும் தங்கள் பயணத்தை தொடர்வார்கள். ஆனால் இப்போது அந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஒரு பஸ் ‘பிரேக் டவுன்’ ஆகிவிட்டால் அடுத்த நிமிடமே அடுத்த பஸ்ஸில் ஏறி பயணத்தை நிறைவுசெய்வதற்கு எல்லோரும் தயாராகிவிடுகிறார்கள்.
    இதைப்போலத்தான் – பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண்கள் குறைந்துவிட்டால் உடனே அடுத்தகட்ட நடவடிக்கைகள்பற்றி சிந்திக்க வேண்டும். மாற்று ஏற்பாடுகளை ஏற்படுத்திக்கொண்டு சிறந்த முறையில் செயல்படுவதற்குப் பழகிக்கொள்ள வேண்டும். “ஒன்று கிடைக்கவில்லை யென்றால் இன்னொன்று இருக்கிறது” என்றமன நிலையோடு செயல்பட்டவர்கள் வாழ்க்கையில் தன்னம்பிக்கையோடு காணப்படுவார்கள். “விரும்பியது கிடைக்காவிட்டால், கிடைத்ததை விரும்பக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்பது பெரியோர்கள் வழங்கிய அறிவுரை ஆகும். விரும்பிய மதிப்பெண்கள் கிடைக்காவிட்டால் கிடைத்த மதிப்பெண்களுக்குஏற்ப, மேற்படிப்பைத் திட்டமிட்டுக்கொண்டால் சிறந்த நிலையை அடையலாம். அப்போதுதான் வாழ்க்கை வசந்தமாகும்.

    மாணவச் செல்வங்களே…

    உங்களின் எதிர்காலச் சிந்தனைக்கு…
    அடுத்து வரவிருக்கும் வருடங்களில் உங்களின் கல்லூரி வாழ்க்கை தொடங்கிவிடும். அதைத் தொடர்ந்து ஒரு வேலை தேடுவதும் வெளி நாட்டில் உயர்கல்விக்கோ அல்லது வேலை தேடியோ செல்ல வாய்ப்புகள் உண்டு. எல்லா மாணவர்களுக்கும் கல்வி முடிந்ததும் ஒரு நல்ல வேலை கிடைக்கிறதா? வளமான வாழ்வு அமைகிறதா? தன் தேவைகளைத் தியாகம் செய்து தஙகள் குழந்தைகள் வளமான வாழ்க்கையை அடைவதைக் கனவு காண்கிறார்கள் பெற்றோர். அவர்களில் எத்தனை பெற்றோரின் கனவுகள் நனவாகின்றன?
    முதல் வகை மாணவர்கள்
    கல்லூரியில் படித்து முடித்தவுடன் சிலருக்கு உடனே ஒரு வேலை கிடைத்துவிடும். பெற்றோரும் உற்றோரும் மகிழ்வார்கள். இப்படிப்பட்ட மாணவர்களில் அதிகம் பேர், நகரங்களில் பிறந்து வளர்ந்தவர்களாக இருப்பார்கள். இவர்களின் தந்தை தாயும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். பள்ளிக்காலத்திலேயே ஓரளவுக்கு ஆங்கிலத்தில் படிக்க, பேச பழகியிருப்பார்கள். இது இவர்கள் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறவும், வேலைக்கான நேரடி பேட்டிகளில் அதிக மதிப்பெண் பெறவும் மிகவும் உதவியாகிறது.
    பிறகு என்ன? வெளிநாட்டுப்பயணம், வேறுமாநிலத்தில் வேலை. திருமணம் என்று தொடங்கி, பிள்ளை குட்டிகளை நல்ல பள்ளிக்கூடம் தேடி,…. டியூஷன் வைத்து ….. வழக்கமான வாழ்க்கை தொடர்கிறது. இந்த மாணவர்களின் பெற்றோர் கொடுப்பினை உள்ளவர்கள்.
    இரண்டாம் வகையினர்
    வேறு சில மாணவர்களோ, படிப்பு முடிந்து அடுத்த ஒரு வருடம் பெங்களூர் சென்னை தெருக்களில் அலைவார்கள். மாண்ஷன்கள், பி.ஜி. ஹாஸ்டல்களில் தங்குவார்கள். அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று பல பயன் தராத பயிற்சி மையங்களுக்குப் படையெடுப்பார்கள். இப்படிப்பட்ட கால கட்டத்தில் தனது ஏழை தாய் தந்தையரை படு ஏழையாகவும் பரம ஏழையாகவும் மாற்றுவதும் தப்பாது.
    இந்த வகை மாணவர்களில் சிலர் விடா முயற்சி என்பதை மனதில் ஏற்றி, கடுமையாக உழைத்து ஓரிரு வருடங்களில் சிறிய வருமானத்தில் ஒரு வேலை பிடித்து படிப்படியாக மற்றவர்கள் 2 வருடங்களில் அடைந்த இடத்தை 5 அல்லது அதிகமான வருடங்களில் அடைவதுண்டு. இவர்களும் பரவாயில்லை.
    மாணவர்களில் மூன்றாம் வகை
    சில வருடங்களை வீணாக்கி கல்வி பெற்ற துறையில் ஒரு வேலையும் கிடைக்காமல் வேறு துறைகளில் மிகச் சிறிய வருமானத்தில் ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து தாய் தந்தையர் கனவுகளைக் கருகவைத்து, அவர்கள் செய்த தியாகங்களைப் பயன் இல்லாமல் செய்யும் புத்திர செல்வங்களே அதிகரித்து வருகிறார்கள். ஆசிரியர்கள் இந்த உண்மை நிலமையை மாணவர்கள் மனதிலே பதியவைத்து ஓரளவு சரி செய்ய முடியும்.
    ஆபத்திற்கு ஆதரவாக எத்தனை உதவிகள்?
    எல்லாச் சிறுவர் சிறுமியர்களுக்கும் கல்விப் பருவம் மிகவும் முக்கியமானது மட்டுமல்ல, மிகுந்த ஆபத்தானதும் ஆகும். முதலில் அறியாத பருவம், புரியாத உண்மைகள், தெரியாத எதிர்காலம், சிந்தனைகள் சிதறும் சூழ்நிலைகள். தவறான வழியை காட்டும் நண்பர்கள், சினிமா உலகம் வெளிச்சம் போட்டுக் காட்டும் பொய்கள். எல்லாமே சிறுவர்களின் பிற்காலம் சீரழிய உதவும்.
    கிராமப்புறச் சிறுவர்களில் பெரும்பாலோர், நகர மற்றும் பெருநகரத்தில் வளரும் சிறுவர்களைவிட ஏன் பின் தங்கியுள்ளார்கள்?
    எனது கடந்த 14 வருடங்களை பொறியியல் போன்ற கல்வி பெற்றும் வேலை கிடைக்காமல் சுற்றிவந்த சுமார் 500 மாணவர்களுடன் செலவழித்த அனுபவத்தால் சொல்கிறேன்.
    (1) கிராமப்புற மாணவர்களிடையே வரவிருக்கும் வாழ்க்கையைப் பற்றி சிந்தனைகள் குறைவு.
    (2) பெற்றோர் தன் நல்வாழ்விற்காக செய்யும் தியாகங்களை உணர்வதில்லை.
    (3) மாணவர் பருவத்தில், கேளிக்கைளை ஒதுக்கி வைத்து, நாம் கற்பதில் எத்தனை அதிகம் தீவிரம் காட்டுவது அவசியம்.
    இந்த தீவிரத்தின் அளவுதான், கல்வி முடிந்த உடன் தொடரும் வேலை வாய்ப்பு, வருமானம், வசதியான வாழ்க்கை என்ற எல்லாவற்றையும் தீர்மானிக்கும்.
    மாணவர், இந்தப் பருவத்தில் கல்வியில் காட்டும் தீவிரம், வாழ்வு என்னும் புதிய உலகத்தில் வெற்றிகளைக் குவிக்க உதவும். தோல்விகளை மாத்திரம் சுமக்கும் மாணவர்கள் கல்லூரியில் கால்வைத்ததும் உல்லாசம் கேளிக்கை என்று கல்வியைப் புறக்கணித்து, காலத்தை வீணாக்குவது ஒரு முக்கிய காரணம். இதை எல்லாம் தானாக உணரும்போது காலம் கடந்துவிடுகிறது.
    கல்விக் காலத்தில் இந்த உண்மையை மனதில் இருத்தி உழைத்தால் வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சி அடையலாம். ஆசிரியர்கள் இந்த உண்மையைத் தங்கள் மாணவர்களை உணர வைத்தும், பின்னர் அதை ஆழமாக அவர்கள் மனதில் பதியவைத்தால் பல ஏழைப் பெற்றொரின் கனவுகள் நினைவாகும். நாடும் நாமும் பயன் பெறுவோம். இதற்காக பல உத்திகளைக் கையாளலாம். வகுப்பறை பட்டிமன்றங்கள். பழைய மாணவர்களை வரவழைத்து அவர்களின் அனுபவங்களைத் தற்கால மாணவர்களுடன் பகிர்ந்து கொள்வது போன்றவை பயன் தரும்.

    லோக்பால் மசோதா

    லோக்பால் என்றசொல்லுக்கு ‘மக்கள் மன்றம்’ அல்லது ‘மக்கள் நீதிமன்றம்’ என்று பொருள் கொள்ளலாம், தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் முன்மொழியப்பட்டதுதான் இந்த லோக்பால் மசோதா. இந்தியாவில் அனைத்து மட்டங்களிலும் மலிந்திருக்கும் ஊழலை அறவே ஒழிக்கும் வகையிலும், அடிமட்ட ஊழியர் முதல் பிரதம மந்திரி வரை ஊழல் புரியும் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தும் வகையில் லோக்பால் சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதுதான் இப்போது எழுந்துள்ள கோரிக்கை.
    இந்த கோரிக்கையை வலியுறுத்திதான் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்தார் சமூக சேவகர் அண்ணா ஹசாரே அவர்கள். அவரது முக்கியமான கோரிக்கை என்னவென்றால் லோக்பால் சட்டத்தின் திருத்த வடிவை உண்டாக்க ஒரு கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்பதும், அந்தக் கூட்டுக்குழுவில் பாதிபேர் மக்களின் பிரதிநிதிகளாக இருக்க வேண்டும் என்பதுவும்தான். வரும் ஆகஸ்டு 15ம் தேதிக்குள், அதாவது சுதந்திர தினத்திற்குள், லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டு லோக்பால் சட்டம் கொண்டுவரப்படும் என்று அரசு உறுதி கூறியுள்ளது.
    அரசுத்துறை அதிகாரிகள் மீது சுமத்தப்படும் ஊழல், மெத்தனம், பாரபட்சம் போன்றகுற்றச்சாட்டுகளை விசாரிக்கும் கோர்ட் போன்றஅமைப்புதான் லோக்பால் என்பது. லோக்பாலின் செயல்பாடுகள், அதிகாரங்கள் போன்றவற்றை நிர்ணயிக்கும் சட்டம்தான் லோக்பால் சட்டம். லோக்பால் சட்டம் என்பது இன்று நேற்று முளைத்த பிரச்சனை அல்ல, பல்லாண்டு கால பிரச்சனை. 1966-ல் முதன்முதலாக நிர்வாகச் சீர்திருத்த கமிஷன் சில பரிந்துரைகளை அரசுக்கு அளித்தது. அந்தப் பரிந்துரையில் மத்திய அரசுக்கு லோக்பால் அமைப்பும் மாநில அரசுகளுக்கு லோக் ஆயுத்தா என்றஅமைப்பும் தேர்தல் ஆணையம் போல சுயேச்சையாக செயல்பட்டு ஊழல் புகார்களை விசாரிக்க ஏற்படுத்தப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டது. லோக் ஆயுக்தா என்பது மாநில அளவில் லோக்பாலுக்கு இணையான அமைப்பு. 1968ல் லோக்பால் மசோதா மக்களவையில் கொண்டு வரப்பட்டது. அது சட்டமாக மாற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட வேண்டும். ஆனால் அந்த மசோதா கிடப்பில் போடப்பட்டது. அதன் பிறகு 1971, 1977, 1985, 1989, 1998, 2001 ஆண்டுகளில் 8 முறை தாக்கல் செய்யப்பட்ட மசோதா இதுவரை சட்ட வடிவம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    ஹசாரேவின் உண்ணாவிரதத்துக்கு முந்தைய சட்ட வடிவில் உள்ள மசோதாவில் பல குறைபாடுகள் உள்ளன. பொதுமக்களிடமிருந்து நேரடியாக புகார்களை பெறஅதிகாரம் இல்லை, புகார்களை பெறுவதற்கென நியமிக்கப்படும் எம்,பி,-க்கள் மூலமாகத்தான் புகார்களை பெறவேண்டும். புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க முடியாது, சிபாரிசு மட்டுமே செய்ய முடியும். ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டு, சிறைத் தண்டனைப் பெற்றாலும், ஊழல் செய்தவர் ஊழல் மூலமாக சம்பாதித்த சொத்துக்களை அனுபவிக்க தடை ஏதும் விதிக்கப்படவில்லை.
    ஆனால் உண்ணாவிரதத்தின் வாயிலாக வலியுறுத்தப்படும் லோக்பால் சட்டம் உருவானால் ஊழல் செய்யும் அரசு அதிகாரிகள் மீது பொதுமக்கள் புகார் கொடுக்கலாம். அந்தப் புகாரை விசாரித்து லோக்பால் விரைந்து நடவடிக்கை எடுக்கும். யாரிடமும் அனுமதி பெறவேண்டிய அவசியம் இல்லை. ஊழல் நிரூபிக்கப்பட்டால், ஊழலில் சம்பந்தப்பட்ட அனைவரிடமிருந்தும் இழப்பீடு பெறப்பட்டு, அரசுக்கு ஏற்பட்ட இழப்பை சரிகட்ட முடியும்.
    தற்போது அரசு அதிகாரிகள் மீதான ஊழல் வழக்குகளில் ‘இந்திய தண்டனை சட்டம் 1860’ மற்றும் ‘ஊழல் தடுப்பு சட்டம் 1988’ ஆகியன பயன்படுத்தப்படுகின்றன. ஊழல் புரிந்தோர் மீது காவல் துறையோ, வேறு புலனாய்வுத்துறையோ நடவடிக்கை எடுக்க மாநில மற்றும் மத்திய அரசுகளிடமிருந்து அனுமதி பெறவேண்டும். அரசின் நிர்வாகத்துறையைப் பொறுத்தவரை மத்திய புலனாய்வு துறை மற்றும் ஊழல் கண்காணிப்பு துறை ஆகிய இரண்டு மட்டுமே ஊழல் வழக்குகளை கையாள்வதில் பிரதானமாக செயல்படுகின்றன.
    இந்த லோக்பால் சட்டம் நிறைவேற்றப் பட்டால், இச்சட்டம் அரசின் சட்டத்துறை மற்றும் நிர்வாகத்துறையின் கலவையாக இருக்கும். புகார்களைப் பெற்று விசாரணை நடத்துவதில் நிர்வாகத் துறையைப் போன்றும், தண்டனைக் கொடுப்பதில் நீதித் துறையைப் போன்றும் செயல்படும். காலதாமதம், அலைக்கழிப்பு ஏதும் இல்லாமல் ஒரே இடத்தில் தீர்வு கிடைக்கும்.
    இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், லோக்பால் அமைப்புக்கு காவல்துறை அந்தஸ்து வேண்டும் என்று ஹசாரேயின் வரைவு மசோதா வலியுறுத்துகிறது. ஒருவர் மீது குற்றம்சாட்டி, கைது செய்து, அவர்கள் மீது வழக்கு தொடுக்க இந்தியாவில் இரண்டு அமைப்புகளிடம்தான் அதிகாரம் உள்ளது. ஒன்று மாநில காவல் துறை, மற்றொன்று மத்திய சி.பி.ஐ. லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டால் லோக்பால் இந்த வரிசையில் மூன்றாவது அமைப்பாக இருக்கும்.
    லோக்பால் மசோதா தயாரிப்புக்காக கூட்டுக்குழு அமைக்கப்பட்டு உள்ளது. அரசு தரப்பில் ஐந்து பேரும், பொதுமக்கள் தரப்பில் ஐந்து பேரும் அங்கம் வகிப்பர். அரசு தரப்பில் அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜி (தலைவர்), சிதம்பரம், வீரப்ப மொய்லி (ஒருங்கிணைப்பாளர்), கபில்சிபில், சல்மான் குர்ஷித் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். பொதுமக்கள் பிரதிநிதிகளாக அன்னா ஹசாரே, சுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி சந்தோஷ் ஹெக்டே, முன்னாள் சட்ட அமைச்சர் சாந்தி பூஷன் (இணைத்தலைவர்), வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மற்றும் தகவல் உரிமை சட்ட ஆர்வலர் அர்விந்த் கெஜ்ரிவால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக்குழு ஜுன் மாதம் 30ம் தேதிக்குள் மசோதா தயாரிப்பு பணிகளை முடிக்கும்.
    ஒரு சராசரி இந்தியக் குடிமகனின் மனக்குமுறலை அண்ணா ஹசாரே வெளிப்படுத்தியிருக்கிறார். மக்கள் குரலே மகேசன் குரல். அந்த வகையில் பார்த்தால் அண்ணா ஹசாரேவின் குரல் மக்கள் குரலே. அண்ணா ஹசாரே மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்தவர். இந்திய ராணுவத்தில் ஓட்டுனராக பணிபுரிந்தவர். ராணுவத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்று முழு நேர சமூக சேவகராக உள்ளார். ‘ஊழலுக்கு எதிராக மக்கள் இயக்கம்’ என்றஅமைப்பை ஏற்படுத்தி பல போராட்டங்கள் நடத்தியவர். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை செயல்படுத்த அரும்பாடுபட்டவர். இவருக்கு சொத்து இல்லை, வங்கியில் சேமிப்பு இல்லை.
    இந்தியாவின் ஊழல் வரலாறு சுதந்திரம் பெற்றசில மாதங்களிலேயே அதாவது 1948ம் ஆண்டே தொடங்கிவிட்டது. ராணுவத்திற்காக ஜீப் வாங்கியதில் முறைகேடு நடந்ததாக இங்கிலாந்தில் இந்தியத் தூதராக இருந்த வி,கே,கிருஷ்ணமேனன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அந்தக் குற்றச்சாட்டு விசாரிக்கப்படவேயில்லை. அவரை 1956ல் மத்திய அமைச்சரவையில் இலாகா இல்லாத மந்திரியாக நியமித்தது இந்திய அரசு. அன்று முதல் இன்று வரை 1981 போபர்ஸ் பீரங்கி பேர ஊழல், 1990 ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தை ஊழல், 1996 கார்கில் சவப்பெட்டி ஊழல், 2ஜி அலைக்கற்றை ஊழல், காமன்வெல்த் போட்டிகள் ஊழல், ஆதர்ஷ் வீடு ஒதுக்கல் ஊழல் என ஊழல் தொடர்கதையாகி விட்டது.
    இந்தியா விடுதலை பெற்று 60 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஊழலுக்காக தண்டனை பெற்றஅமைச்சர்கள், உயர் அதிகாரிகள், நீதிபதிகள் ஒரு சிலர் மட்டுமே. பெரும்பாலான அமைச்சர்கள் அடிப்படையில் ஏழ்மையிலிருந்து அரசியலுக்கு வந்தவர்கள். ஆனால் இன்று அவர்கள் பல கோடி ரூபாய் சொத்துக்கு அதிபதிகள். இவ்வளவு சொத்துக்கள் எப்படி வந்தது என்பதை கேட்கவோ, தடுக்கவோ முறையான சட்டம் தற்போது இல்லை. ஊழலில் ஈடுபடுபவர்களைத் தட்டிக் கேட்கவும் வழியில்லாமல், தண்டிக்கவும் முடியாமல் போனால் ஜனநாயகம் கேள்விக்குறியாகி விடும்.
    இந்தியாவை ஒரு ஜனநாயக நாடாக வடிவமைத்த நேரு அப்போது சொன்னார், “ஜனநாயகம் என்பது மிகச் சிறந்த தேர்வு என்று நாங்கள் நினைக்கவில்லை. ஆனால் இருப்பதிலேயே இதுதான் பலவீனங்கள் குறைந்த தேர்வு. இந்த நாட்டை உலகின் வலுவான ஜனநாயக நாடாக மாற்றுவது இனி இந்த நாட்டின் மக்களிடம்தான் இருக்கிறது” என்று. அவரின் கருத்து இந்த இடத்தில் சுட்டிக் காட்டுவது மிகவும் பொருத்தமானது. லோக்பால் மசோதா என்பது வரலாற்று சிறப்பு மிக்க ஒன்று. பொதுமக்கள் தரப்பும், அரசு தரப்பும் லோக்பால் மூலம் இணைந்து செயல்படுவது ஜனநாயகத்துக்கு வலிமை சேர்க்கக் கூடிய ஒன்றாகும். ஊழலுக்கு எதிரான இந்தப் பயணம் வெற்றி பெற்றால் இந்திய நாட்டுக்கு நிச்சயம் ஒரு விடிவுகாலம் பிறக்கும்.

    கல்விக்கடன் என்பது என்ன?

    கல்விக்கடனுக்கான வட்டி விகிதம் எவ்வளவு? இதற்கு வருமான வரிச் சலுகை உண்டா? அதை நான் எப்படிப் பெறுவது?
    வட்டி விகிதம்:
    கல்விக் கடனுக்கான வட்டி விகிதம் 10% முதல் 15% வரை வசூலிக்கப்படுகிறது. இது நீங்கள் தேர்ந்தெடுக்கும் படிப்பு / வங்கியைப் பொறுத்து மாறும்.
    வருமான வரிச் சலுகை:
    இந்திய வருமான வரிச் சட்டத்தின்படி நாம் நமது கல்விச் செலவுகளுக்கு இரண்டு வகைகளில் சலுகை பெறலாம். அவை:
    1. 80C பிரிவின்படி ஒருவர் தன்னுடைய குழந்தைகளுக்குச் செலுத்தும் பயிற்சிக் கட்டணத்துக்கு (டியூஷன் ஃபீஸ்) ரூ.1 லட்சம் வரை வருமான வரிச் சலுகை உண்டு.
    2. ஒருவர் தானோ அல்லது தன் கணவர் / மனைவி / குழந்தைகளோ படிப்பதற்காகக் கல்விக்கடன் வாங்கியிருந்தால், அதற்குச் செலுத்தும் வட்டித் தொகைக்கு 80உ பிரிவின்படி எந்த வரம்புகளும் இல்லாமல் வரிச் சலுகை உண்டு.
    3. மற்றபடி கல்விக் கடன்களுக்கு நேரடி வரிச் சலுகை எதுவும் இல்லை.
    சமீபத்தில் அறிமுகமாகியுள்ள ஒரு புதிய சட்டத்தின்படி, கல்விக் கடனுக்குச் செலுத்தும் வட்டித் தொகை ஒருவருடைய வருமானத்திலிருந்து கழித்துக்கொள்ளப்படும், அதன்பிறகே வரி கணக்கிடப்படும். இதற்கு அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது. அதேசமயம் நீங்கள் எடுத்துள்ள கடனின் அசல் தொகைக்கு வரிச் சலுகை எதுவும் வழங்கப்படுவதில்லை. நீங்கள் எடுத்துள்ளது நீண்ட காலக் கடன் என்றால், எட்டு வருடத்துக்குள் அதனைத் திரும்பச் செலுத்திவிடுவது நல்லது. அதன்பிறகு உங்களுடைய வட்டித் தொகைக்கும் வரிச் சலுகை கிடைக்காது. இதேபோல் நீங்கள் உங்களுடைய நிறுவனம், குடும்பத்தினர் அல்லது நண்பர்களிடமிருந்து பெறும் கடனுக்கும் வரிச் சலுகைகள் இல்லை.
    ஒருவேளை நீங்கள் வீட்டையோ, நகையையோ, வேறு சொத்துகளையோ வைத்துக் கடன் வாங்கியிருந்தால், அப்போதும் வரிச் சலுகை உண்டு. ஆனால் இந்தக் கடன் உங்களுடைய சொந்த, அல்லது மனைவி / கணவர் / குழந்தைகளுடைய படிப்புக்குதான் பயன்படுத்தப்படவேண்டும். உங்களுடைய சகோதரர் / சகோதரிக்குப் பயன்படுத்தியிருந்தால் வரிச் சலுகை கிடையாது.
    கடன் பெறுவதற்கு நான் ஏதாவது சொத்தையோ பத்திரங்களையோ அடமானம் வைக்கவேண்டுமா?
    4 லட்சம் வரையிலான கல்விக்கடன்களுக்கு இது தேவையில்லை. அதேசமயம் கடன் ஆவணங்களில் மாணவர், அவருடைய பெற்றோர் அல்லது காப்பாளர் கையெழுத்திடவேண்டும்.
    ஒருவேளை நீங்கள் 4 லட்சத்துக்கு மேல், 7.50 லட்சத்துக்குள் கடன் பெற்றால், இந்த ஆவணங்கள்மட்டும் போதாது. கூடுதலாக, நீங்கள் கடனைத் திரும்பச் செலுத்திவிடுவீர்கள் என்று உத்திரவாதம் அளித்து ஒருவர் கையெழுத்திடவேண்டும்.
    7.5 லட்சத்துக்குமேல் உள்ள கடன்களுக்கு நீங்கள் ஏதேனும் சொத்து அல்லது முதலீட்டுப் பத்திரங்களை வங்கிக்குத் தரவேண்டியிருக்கும். உதாரணமாக: National Savings Certificates (NSC), காப்பீட்டு (இன்சூரன்ஸ்) பத்திரங்கள், கிஸான் விகாஸ் பத்ரம், மற்றபத்திரங்கள், வங்கி முதலீடுகள், அரசாங்க முதலீடுகள், பங்கு (ஷேர்) முதலீடுகள் (வங்கி அதனை ஏற்றுக்கொண்டால்), வாகனம், வீடு, நிலம், தங்கம், மற்றசொத்துகள்.
    இப்படி நீங்கள் வழங்கும் சொத்து அல்லது முதலீட்டுப் பத்திரம்தான் வங்கிக்கான உத்திரவாதம். நீங்கள் கடனைத் திரும்பச் செலுத்தாவிட்டால் அவர்கள் அதனை விற்றுத் தங்களுக்குச் சேரவேண்டிய தொகையைத் திரும்பப் பெற்றுக் கொள்வார்கள். 4 லட்சத்துக்கு மேற்பட்ட கடன்களுக்கு வங்கிகள் தனி நபர் உத்திரவாதம் கேட்கலாம், சொத்து / முதலீட்டுப் பத்திரங்களைக் கேட்கலாம், அல்லது இரண்டையும் கேட்கலாம். நீங்கள் கடனைத் திரும்பச் செலுத்தாவிட்டால் வங்கி அந்தத் தொகையை உங்களுக்கு உத்திரவாதம் வழங்கியவரிடமிருந்து பெறலாம், அல்லது அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.
    நான் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தைச் சேர்ந்தவன். என் தந்தை வேலைக்குச் செல்வதில்லை. எங்களுக்குத் தொடர்ச்சியான வருமானம் என்று எதுவும் இல்லை. சொத்துகளோ, வேறு முதலீடுகளோ இல்லை. நான் கல்விக்கடன் பெறஏதேனும் வாய்ப்பு உள்ளதா?
    நிச்சயமாக வாய்ப்பு உள்ளது. கல்விக்கடன் என்பது உங்களுடைய படிப்புத் திறமையைப் பொறுத்து வழங்கப்படுகிறது. அந்தக் கடன் சரியான நேரத்தில் திரும்பச் செலுத்தப்பட வேண்டும். அதை உறுதி செய்யவேண்டியது உங்கள் பொறுப்பு. திறமை உள்ள எவருக்கும் படிப்பதற்கான வாய்ப்பு தரப்பட வேண்டும் என்றநோக்கத்துடன் வங்கிகள் பலவிதங்களில் உதவுகின்றன.
    கல்விக் கடனில் எந்தெந்தச் செலவுகள் அடங்கும்? கல்விக்கடன் பெற்றபின்னர் மற்றசெலவுகளுக்காக எனக்குக் கூடுதல் பணம் தேவைப்பட்டால் என்ன செய்வது?
    கல்விக்கடன் உங்களுடைய ட்யூஷன் ஃபீஸுடன் முடிந்துவிடுவதில்லை. படிப்பு சம்பந்தமான மற்றசெலவுகளுக்கும் அது பொருந்தும். இதை உங்களுடைய வங்கியிடம் கேட்டு உறுதி செய்து கொள்ளுங்கள். ஒவ்வொரு வங்கிக்கும் இந்த விதிமுறைகள் மாறும். பொதுவாக இதில் இடம்பெறும் செலவுகள்:

    • கல்லூரி / பள்ளி கல்விக் கட்டணம்
    • விடுதிக் கட்டணம்
    • தேர்வுக் கட்டணம், நூலகம் / ஆய்வகக் கட்டணம்
    • டெபாசிட் தொகை (திரும்பப் பெறுவது அல்லது திரும்பப் பெற முடியாதது). கட்டடக் கட்டணம் மற்றும் இவற்றிற்கு ரசீது வழங்கப்பட்டால் மட்டுமே வங்கி ஏற்றுக்கொள்ளும்
    • புத்தகங்கள், சீருடைகள், உபகரணங்கள், கம்ப்யூட்டர் போன்றவற்றை வாங்குவதற்கான செலவுகள்
    • கல்விச் சுற்றுலா, ப்ராஜெக்ட் / ஆய்வு வேலை தொடர்பான செலவுகள்
    • உங்களுடைய படிப்புக்குக் கம்ப்யூட்டர் தேவைப்பட்டால் அதை வாங்கும் செலவையும் சில வங்கிகள் ஏற்றுக்கொள்கின்றன
    • வெளிநாட்டுப் படிப்புக்கான பயணச் செலவுகள்

    உங்களுடைய வங்கியைத் தொடர்புகொண்டு அவர்கள் எந்தெந்தச் செலவுகளுக்குக் கல்விக்கடன் வழங்குகிறார்கள் என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.
    கல்விக் கடனுக்கு வட்டி விகிதம் அதிகம் என்பதால், எனக்கு வேலை கிடைத்தவுடனேயே நான் அந்தத் தொகையைத் திரும்பச் செலுத்திவிட விரும்புகிறேன். இதற்கு ஏதாவது அபராதம் விதிக்கப்படுமா?
    மற்றகடன்களுக்கும் கல்விக் கடனுக்கும் இடையே ஒரு முக்கியமான வித்தியாசம், பெரும்பாலான வங்கிகள் இதனை முன்கூட்டியே திரும்பச் செலுத்துகிறவர்களிடம் அபராதம் எதையும் வசூலிப்பதில்லை. இருந்தாலும் உங்களுடைய வங்கியிடம் இதைப்பற்றி விசாரித்துவிடுவது நல்லது. சில வங்கிகளில் நீங்கள் படிப்பை முடித்து, அல்லது வேலை கிடைத்து 6 முதல் 12 மாதங்களுக்குள் கடனைத் திரும்பச் செலுத்தி விடலாம் என்று நிபந்தனை வைத்திருக்கலாம்.

    நான் கல்விக்கடன் பெற்ற பின்னர் இன்னொரு வங்கி எனக்கு அதே கடனைக் குறைந்த வட்டி விகிதத்தில் வழங்க முன்வருகிறது. நான் என் கல்விக் கடனை இங்கிருந்து அங்கே மாற்றிக்கொள்ள முடியுமா?
    முடியும். ஆனால் இதற்கு உங்களுடைய இப்போதைய வங்கி ஏதேனும் கூடுதல் கட்டணங்களை விதிக்கும் (Refinance Charge – உதாரணமாக 1%). இப்போது உங்களுடைய இரண்டாவது வங்கி இப்போதைய வங்கியைவிட 1% குறைவான வட்டி விகிதத்தில் கடன் வழங்க முன்வந்தால் உங்களுக்கு லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை. ஆகவே நன்கு யோசித்து, கணக்கிட்டு அதன்பிறகு முடிவெடுங்கள்.
    என்னுடைய பெற்றோர் இருவருமே வேலை செய்கிறார்கள். எங்களிடம் போதுமான சேமிப்பு உள்ளது, அதனால் என்னுடைய படிப்புச் செலவுகளைத் தாராளமாக ஏற்றுக்கொள்ளமுடியும். ஆனாலும் நான் கடன் பெறுவதுதான் நல்லது என்று என் நண்பர் சொல்கிறார். உண்மையா?
    இல்லை. நீங்களே சொந்தமாகச் செலவழித்துப் படிக்கமுடியும் என்றால், அதுதான் நல்லது. காரணம், ஒரு கடன் பெறுவது என்றால் அதில் நிறைய பராமரிப்பு வேலைகள் உள்ளன. முடிந்தால் அவற்றைத் தவிர்த்துவிடுங்கள். நிஜமாகவே உங்களுக்குத் தேவை இருந்தால் மட்டும் கல்விக் கடனுக்கு விண்ணப்பம் செய்யுங்கள். இந்தத் திட்டத்தின் நோக்கமே படிப்புக்காகச் செலவழிக்க முடியாத ஏழை மாணவர்களுக்கு உதவுவதுதான்!
    நான் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவன். எங்கள் ஊரில் வங்கிகள் எவையும் இல்லை. நான் எங்கே கல்விக் கடனுக்கு விண்ணப்பம் போடுவது?
    உங்கள் ஊருக்கு அருகில் உள்ள நகரத்தில் வங்கிகள் நிச்சயம் இருக்கும். அவற்றை அணுகுங்கள்.
    என்னுடைய கல்விக்கடன் நிராகரிக்கப்பட்டுவிட்டது. அது ஏன் என்று நான் தெரிந்து கொள்ளமுடியுமா? இது போன்ற பல கேள்விகளுக்கான பதில்கள் அடுத்த இதழில்…