– 2011 – June | தன்னம்பிக்கை

Home » 2011 » June (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    நகரும் நதிகள்

    நதிகள் நகர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. கங்கை நதியைப் பார்க்க வேண்டுமானால் தூரப்பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கின்றது. அந்நதி வாகனத்திலேரி பயணம் செய்யுமானால் வரவேற்கின்றவாய்ப்பும் இருக்கின்றது. அறிவியல் பூர்வமாக நதிநீர் இணைப்பு குறித்தெல்லாம் நூற்றுக்கணக்கான கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன. இந்தக் கட்டுரை உணர்வும், உளவியலும் கலந்ததாக அமைகின்றது. அறிவியலில் இதுவும் ஒரு வகையே இருநதி நீரை ஒன்றாக இணைத்துவிட்டால் பிரிப்பது சிரமம்தான். சிறுவாணி நீர் குடிக்க ஆசைப்படாத ஆட்கள் குறைவு. மற்றநதி நீர்களைக் குடிக்க நிறைய தைரியமெல்லாம் தேவைப்படுகின்றகாலகட்டம் இது. அறிவியல் பூர்வமாக, சமுதாயவியல் பூர்வமாக மிக நீண்ட நெடிய விமர்சனங்கள் நதி நீர் மாசுபடாமலிருக்க மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனையும் நாம் தொடப்போவதில்லை…
    எதையும் செய்யப் போவதில்லை… என்று முடிவு செய்துவிட்டால் வாழ்க்கை தெளிவு மிக்கதாகிவிடுகின்றது. ஏதாவதொரு வேலையை செய்துகொண்டு இருக்கின்றோம்… என்றாலே, ஏதாவதொரு மற்றவேலையை செய்யாமல் இருக்கின்றோம் என்றுதானே அர்த்தம். அதனால் கட்டுரை நாம் காட்டுகின்றதிசையிலேயே நதி மாதிரி பயணப்படவிருக்கின்றது என எளிதாக முடிவு செய்யலாம்.
    ‘வில் டுராண்ட்டின்’ பொன்மொழிகளில் கடந்த இருபத்தி நான்கு மணி நேரங்களைப் பற்றி மட்டும் ஆழ்ந்து யோசிக்கின்றமனிதர்கள் கடந்த ஆறாயிரம் ஆண்டுகளில் நடந்ததைப் பற்றி அதிகம் கவலைப்படுவதாகத் தெரியவில்லை?! என்று சொல்லிய விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வாழ்க்கை ஏற்கனவே எல்லா வழிகளிலும் வாழப்பட்டு இருக்கக்கூடுமோ? என்னவோ?
    நாம் நதிகளின் நீரைப் போல மனிதர்களின் மனதைக் கொள்ளலாம். நீரோடுவது போல மனம் ஓடுகின்றது. ரிக்கி மார்டினின் ‘விவின் லா விட லோகா’ (விசித்திர வாழ்க்கை வாழ்வது) என்றொரு ஆங்கில ஆல்பம் கேட்டுக் கொண்டிருந்தேன். திருச்சி நண்பன் சித்து தான் வழக்கம்போல அறிமுகப்படுத்தி வைத்தான். ‘அவள் என் மனதில் வலியை, மூளையைத் துளைத்துச் செல்லும் புல்லட்போல இல்லாமல் செய்கின்றாள்’ என்று பாடியிருக்கின்றார். இசை எவ்வளவு தூரம் உபயோகரமாக இருக்கின்றது. ஒன்றிரண்டு பாடல்கள் வெற்றிபெற்றால் போதும், அதே வேலையாக உலகம் சுற்றத் தொடங்கி விடுகின்றார்கள். ஆங்கிலப் பாடகர்கள் என்றான், சித்து.
    நடந்தாய் வாழி காவிரி! என்றொரு புத்தகம் பற்றி நந்தகுமார் சொன்னது போல ஒகேனக்கல்லிருந்து உள்நோக்கி நகர்ந்தால் பிலிகுண்டுலு தாண்டி இராசி மணல் என்றொரு இடம் வருகின்றது. ஜேக்கப் ஆசீர்வாதம் உடன், முதலைகள் ஆழத்தில் தான் இருக்கும். அவை நம்மை ஒன்றுமே செய்வதில்லை என்று உணர்ந்து கொண்டே பரிசலில் பயணித்தோம். முனியப்பா மசாஜ் என்றபெயரில் சித்துவை பிளந்து ஒட்டவைத்து அனுப்பியிருந்தார். அடுத்த நாளின் கிரிக்கெட் மேட்ச்சில் பக்கவாட்டில் பந்து வீசிக் கொண்டிருந்தான்.
    நதிகளின் ஆழம் தெரிவதில்லை. சில இடங்களில் கற்கள் வழுக்கி விட கீழே விழுதல் சுகமாகத்தான் இருக்கின்றது. அடுத்த வேளை உணவிற்கு ஏற்பாடு செய்யாமல் கிடைத்த உணவை உண்டு மகிழ்வது இயற்கையோடு இயைந்த வாழ்க்கை என்று தோன்றியது. பசித்தவன்தான் மிகவும் இனிப்பான ரொட்டியைப் புசிக்கின்றான் என்றார் பெரியவர். பெண் பார்த்து திரும்பியிருந்த நந்து எவ்வளவோ மசாஜ் அடிவாங்கியும் மூளை குழம்பாமல் எந்த விஷயத்தையும் வெளியே சிந்தாமல் இறுக்கமான உதடுகளுடன் இளகலான விஷயங்களுடன் தொடர்ந்து சிரிக்க முயற்சி செய்து கொண்டே இருந்தான்.
    எண்ணெய் திப்பி திப்பியாக படர்ந்து பச்சை நீரின் மீது மிதந்துகொண்டு இருந்தது. ஆழம் அதிகம் ஆகும்பொழுது நதியின் ஆர்ப்பாட்டம் குறைந்து விடும் போல் உள்ளது. நகரும் நதிகள் என்றால் மனிதர்களைத்தான் குறித்துச் சொல்கின்றேன். அவர்களுடைய அனுபவ ஆழம் உயர உயர ஆரவாரம் குறைத்துக் கொள்ளப்படுகின்றது போலும். வில் டுராண்ட் சொல்வது போல மனதிற்கும் வயதாகிவிடுகின்றது என்பது உண்மைதான். நதியொன்று மலர்வனம் வழியாகப் புகுந்து வெளிவந்தால் தேனும் நறுமணமும் சேகரித்து வருவதில்லை?! அதுபோலவே கடந்த முறை நூலகம் சென்றபொழுது சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட ‘ப்ராடிஜி’ வெளியீடு புத்தகங்களைப் பார்க்க நேர்ந்தது. அவற்றில் பெரும்பாலானவை சுயசரிதை குறித்த வெளியீடுகள். அதில் ‘வான்கோ’ என்கின்ற ஓவியமேதை, ‘பிக்காஸோ’ குறித்த புத்தகங்களைப் புரட்டினேன்.
    வாழும்பொழுது ‘வான்கோ’ என்கின்ற’நதி’ குறித்து எதுவுமே புரிந்துகொள்ள இயலவில்லை. அவருடைய தம்பியின் மனைவிதான் இருவருமே இறந்த பிறகு வான்கோவின் ஓவியங்களில் அடங்கியிருக்கும் சிறப்புக்குறித்து பெருமைபட பேசி மக்களை புரிந்துகொள்ள வைத்து உலகப்புகழை தேடிக்கொடுத்தார். முன்பு ‘வான்கோ’ தனது காதலிக்காக காதை அறுத்துக் கொண்டவர் என்று படித்திருந்தேன். ஆனால் சுயசரிதை வழியாக வான்கோவோடு வாழ்ந்து பார்த்ததில், அவருடைய நண்பரோடு தனியாக சென்று வாடகை வீட்டில் ஒரு கிராமத்தில் தங்க வைக்கப்படுகின்றார். அங்கே அவர்களுக்குடனான கருத்து மாறுபாட்டில் கத்தி குத்துவரை சூடு பறக்கின்றது. அதிர்ஷ்டவசமாக எந்த அசம்பாவிதமும் நடந்துவிடவில்லை. ஆனால் சற்று நேரம் கழித்து தன் காதையே அறுத்துக் கொள்கிறார். அதன்பிறகு காதில் பாண்டேஜ் உடன் தன்னைத் தானே வரைந்து கொண்ட ஓவியம், உலகப் புகழ் பெற்றிருக்கின்றது. தொடர்ந்து வந்ததொரு நாளில் தன்னைத்தானே நெஞ்சில் சுட்டுக் கொண்ட வான்கோ இரண்டொரு நாளில் இறைவனடி சேர்கின்றார். தன்னை மனநல மருத்துவமனையில் சேர்த்துவிடுமாறு தம்பியிடம் கோரிக்கை வைக்குமளவு ‘தன்னம்பிக்கை’ கொண்டு வாழ்ந்த ‘வான்கோ’ என்பவரை நகரும் நதியெனக் கொண்டால் அந்நதியில் நிறைய சுழல்களை காண வாய்ப்பு இருக்கின்றது. இதுபோன்றதிருப்பங்களை சில நதிகளில் மட்டுமே காண இயல்கின்றது.
    நதிகள் மீன்களுக்கு அடைக்கலம் கொடுக்கின்றன. நிறம் வெளியிலிருந்து பார்க்கும்பொழுது ஒரே மாதிரியாகத் தெரிகின்ற மீன்கள் வேக வேகமாக வளைந்தோடிக் கொண்டிருந்தன. எண்ண அலைகளும் மனதிற்குள் அப்படித்தான். வளைவதும் நெளிவதுமாய்…. முன்பிருந்த இடத்திற்கே மீண்டும் வந்து நிற்பதும், பின்னர் மீண்டும் சுற்றி அலைவதுமாய் எத்தனை சுற்றோட்டங்கள். இரமண மகரிஷி சொல்வதுபோல் நதி தன்னை நதியென உணர்கையில் நதியாகின்றது. நீர் என உணர்கையில் நீரோட்டமாகின்றது. மனிதர்களும் தன்னை யாரென உணர முயற்சித்தல் வேண்டும். ஓட்டத்திலேயே கவனம் செலுத்தினால் இருப்பு நினைவு வருவதில்லை. அமைதியான நதியில் கல் விழுந்தால் கவனிக்க முடிகின்றது. நீர்வீழ்ச்சியில் ஆளே விழுந்தாலும்-அவ்வளவுதான்!? என்றாகிவிடுகின்றது. ஒரு நதியின் பயணத்தில் எல்லாப் பருவங்களும் காண கிடைக்கின்றது. மனிதர்களும் பயிற்சி எடுத்துக் கொள்ள, கொள்ள பக்குவம் அடைகின்றனர். மழை நதிக்கு புத்துயிர் கொடுப்பது போல் படிப்பும், நினைப்பும், மனதை வளமாக்குகின்றது.

    முயன்றேன் வென்றேன்

    பெயர் : ஜீவானந்தம்
    மனைவி : கீதா
    குழந்தைகள் : லலிதா, ப்ரஷாந்தி
    இதுதான் என் குடும்பம் என்று தேநீர் ஊற்றிக்கொடுத்துக் கொண்டே சுருக்கமாய் வெற்றியின் ரகசியத்தை பகிர்ந்துகொண்டார்.
    குடும்ப சூழ்நிலையால் ஒன்பதாம் வகுப்பு வரை படித்ததே பெரிய விஷயம். தனியார் மில்களில் வேலை பார்த்து படிப்படியாய் உயர்ந்தேன். நான் உயர்ந்து கொண்டிருந்த சமயம் பல மில்கள் மூடப்பட்டுக் கொண்டிருந்தது. எதிர்காலம் கேள்விக்குறியாய் இருந்தபோது, மில்களில் உணவு இடைவேளையில் உணவு, தேநீர் இரண்டு சக்கரவாகனத்தில் வந்து கொடுப்பதை பார்த்திருக்கிறேன். அதை மனதில் வைத்து வீட்டிலேயே தரமான தேநீர் தயாரித்து பல கம்பெனிகளுக்கு நேரடியாகச் சென்று விற்பனை செய்தேன். தேநீருடன், சுண்டலும் சேர்ந்து அமோகமாக விற்பனையானது.
    படித்த படிப்புக்கே வேலை கிடைக்காத சூழ்நிலையில், பத்தாம் வகுப்புவரை கூட படிக்காத நான், தேநீரில் பணம் சம்பாதிப்பது எளிதாக இருந்தது.
    ஆரம்பத்தில் பாதை ஓரங்களில் நின்று தேநீர் விற்பதை கேவலமாக நினைத்திருந்தால் நான் இந்த அளவுக்கு முன்னேறி இருக்கமாட்டேன்.
    நான் என் குழந்தைகள் கஷ்டப்படாமல் முன்னேற வேண்டும் என்பதற்காக அவர்களைத் தகுந்த பள்ளியில் கல்விக்கு ஏற்பாடு செய்துள்ளேன். என்னைப் போல சுயகவுரவம் பார்க்காமல் வேலை செய்ய இளைஞர்கள் முன் வந்தால் அவர்களுக்கு வழிகாட்ட நானிருக்கிறேன் என்கிறார் தன்னம்பிக்கையுடன் ஜீவானந்தம்.

    மனநிலை மேலாண்மை(ATTITUDE MANAGEMENT)

    டாக்டர் க. அருள் எம்.பி.ஏ., எம்.பில்., பி.எச்.டி.
    முதல்வர், ஸ்ரீ வித்யா மந்திர் கலை அறிவியல் கல்லூரி, ஊத்தங்கரை

    ஒரு மனிதனின் உயர்வும், தாழ்வும் அவரவருடைய எண்ணத்தின் இயக்கத்தைப் பொறுத்தே அமைகிறது. எண்ணம், செயல், நடத்தை ஆகியவற்றை ஆழமாக ஆராய்வதன் மூலம் மனதைப் பற்றித் தெரிந்துகொள்ளலாம். எனவே, இந்த மூன்று அம்சங்களிலும் சமூகத்தின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் மனதை மேம்படுத்தவேண்டும். சமூகத்தின் எதிர்பார்ப்புக்கு ஏற்றவகையில் மனம் இல்லை என்றால், அது இயல்பு மீறியதாகக் கருதப்படும். இதிலிருந்து மாறவேண்டும் என்றால் எண்ணத்திலும், நடத்தையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்யவேண்டும். தமிழில் நாம் இதனை ‘மனநிலை’, ‘மனோபாவம்’ மற்றும் ‘மனப்பான்மை’ என்கிறோம். இதனை ஆங்கிலத்தில் Attitude என்று கூறுவார்கள்.
    ஒருவருடைய மனநிலையை நிர்ணயிக்கும் காரணிகள்:
    ஒரு செயலைச் சிறப்பாகச் செய்து முடிக்கவேண்டும் என்ற எண்ணம், ஆரோக்கியமான போட்டி மனப்பான்மை, பாதகச் சூழலை எதிர்க்கும் திறன், சரியான முன்மாதிரியைத் தேர்ந்தெடுத்தல், தன்னம்பிக்கை, தடைகளைத் தகர்த்தெறியும் திறன், கொள்கைகளில் நிலையாக இருத்தல், கஷ்டங்களைத் தாங்கும் மனம் போன்றவைகள் மனநிலையை நிர்ணயிக்கும் காரணிகள் ஆகும்.
    நமது எண்ணம், நமது உடம்பை எப்படிப் பாதிக்கிறது என்பதற்கான உதாரணம் இது. சில சமயம் நமது உடம்பேகூட எண்ணங்களைப் பாதிப்பது உண்டு. ஒர் இளைஞன் காலையில் புத்துணர்ச்சியோடு அலுவலகம் கிளம்பும்போது பக்கத்து வீட்டுக்காரர் வந்து, “என்ன தம்பி டல்லா இருக்கீங்க? உடம்பு சரி இல்லையா?” என்று அக்கறையோடு கேட்கிறார். வீதியில் அவன் நண்பன் எதிர்ப்படுகிறான். அவனும் “என்னடா ஆச்சு உனக்கு? முகம் இத்தனை சோர்வா இருக்கு” என்று அன்போடுதான் கேட்கிறான். அலுவலகத்தில் நுழைகிறான் இளைஞன். இவனைப் பார்த்த ரிசப்ஷனிஸ்ட், “என்ன சார் ஜுரமா? கண் எல்லாம் உள்ளே அடங்கிப்போய்க் கிடக்குது. ஆபிஸீக்கு லீவுனா போன் பண்ணியே சொல்லியிருக்கலாமே” என்கிறாள் அக்கறையோடு.
    தற்போது இளைஞனின் உடம்பிலிருந்த சக்தியெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக வற்றி, உண்மையிலேயே தனக்கு உடம்பு சரியில்லை என்று நம்பி, அலுவலகத்திற்கு விடுப்பு போட்டு விட்டு வீட்டிலேயே போய்ப் படுத்துக் கொள்கிறான்.
    ஒரு விஷயத்தை நாம் நேர்மறையாகப் பார்க்கிறோமா? எதிர்மறையாகப் பார்க்கிறோமா? என்பதை பொறுத்தே வாழ்வில் அத்தனை விஷயங்களும் நடக்கின்றன. உதாரணமாக பாதி தண்ணீர் உள்ள ஒரு டம்ளரைப் பார்த்து, “டம்ளரில் பாதி நீர் உள்ளது” என்று சொல்வதும், “டம்ளரில் பாதி நீர் இல்லை” என்று சொல்வதும் அவரவர் மனநிலையை பொறுத்தது தான்.
    பொதுவாக மனதை இரண்டாகப் பிரித்து பார்க்கிறோம். அவை:
    1. நேர்மறை (Positive Attitude)
    2. எதிர்மறை (Negative Attitude)
    நேர்மறை மனநிலை (Positive Attitude):
    நேர்மறை மனநிலை என்பது காந்தம் போன்றது. வெற்றிகளைத் தன்னை நோக்கி ஈர்க்கும் வல்லமை வாய்ந்தது. நாம் நேர்மறை மனநிலையுடன் விளங்க சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டும். மனதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள விரும்புபவர்கள் தங்களுடைய மனங்களில் நம்பிக்கை, தைரியம், ஊக்கம், ஆர்வம், வெற்றி நோக்கு, போதுமென்ற மனம், சுயக்கட்டுப்பாடு, உறுதிமனப்பான்மை, எப்போதும் உற்சாகத்துடன் இருப்பது, பணிவு, தன்னம்பிக்கை, மனஅழுத்தம் இல்லாமல் இருத்தல், பிறர் குறைகளை பேசாமல் இருத்தல், பொறுமை, வெளிப்படையாக நடந்து கொள்ளுதல், நகைச்சுவை உணர்வு, சமாளிக்கும்திறன், போன்றவைகள் நிரந்தரமாக நம் மனதில் தங்கியிருக்கும்படி பார்த்துக்கொள்ளவேண்டும். நேர்மறை மனநிலையாளர்கள் கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டாலும், அவற்றைப் பாடமாக எடுத்துக்கொண்டு அவற்றிலிருந்து கடந்து செல்கிறார்கள். மீண்டும் அதுபோல் அனுபவங்கள் வந்தால் கூட அவர்களுக்குத் தாங்கள் கற்றுக்கொண்ட பாடமே மனதில் நிற்கின்றது. அதைக்கொண்டு இப்போது கிடைக்கும் அனுபவத்தை எளிதாகச் சமாளிக்கின்றனர்.
    எதிர்மறை மனநிலை (Negative Attitude):
    எந்நேரமும் தேவையற்ற ஏக்கங்கள், கவலைகள், அளவற்ற ஆசைகள், கோபம், குழப்பம், சுயநலம், பொறாமை, உலகையே குறைசொல்வது, உற்சாகமின்மை, சந்தேகம், பாரபட்சத்தோடு நடந்துகொள்ளுதல், திமிர், விரக்தி, தற்பெருமை, நம்பிக்கையின்மை, சுயகௌரவம், கர்வம், நேர்மையின்மை, மனஅழுத்தம் ஆகிய எதிர்மறை மனநிலையை வளர்த்துக்கொண்டவர்கள் சிறிதுகூட இன்பத்தைக் காணாமல் தன் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருக்கிறார்கள். எதிர்மறைச் சிந்தனைகள் கசப்பான அனுபவங்களை எதிர்கொண்டு அவற்றிலேயே வாழ்கின்றார்கள். அதிலிருந்து மீண்டுவர முடியாமல் அங்கேயே தேங்கிவிடுகிறார்கள்.
    மாற்றவேண்டிய மனநிலைகள்:
    நீங்கள் விரும்பும் மாற்றமாக நீங்களே இருங்கள் மேலும் உங்களுக்கு ஒன்று பிடிக்கவில்லையென்றால் அதனை மாற்றுங்கள். அதை உங்களால் மாற்ற முடியவில்லை என்றால் உங்களின் மனநிலையை மாற்றிக் கொள்ளுங்கள்.
    கவலைப்படும் மனநிலையை மாற்றுங்கள்:
    இன்றைய உலகம் எப்படி என்றால் நீங்கள் கவலைப்படும்போது மற்றவர்கள் உங்களைப் பார்த்துச் சிரிப்பார்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது வாழ்க்கை உங்களைப்பார்த்து சிரிக்கிறது. நாம் ஒரு விஷயத்திற்காகக் கவலைப்படுவதால் எவ்வித மாற்றங்களும் ஏற்படப்போவதில்லை.
    குறைசொல்வதை/குறைகாண்பதை நிறுத்துங்கள்:
    இருப்பதிலேயே மோசமான மனநிலை, எப்பொழுதும் எதிலாவது குறைகண்டு கொண்டிருப்பது அல்லது எதைப்பற்றியாவது குறை சொல்வதாகும். அதற்கு மாறாக பிறரின் நல்ல குணங்களைக் கண்டறிந்து பாராட்டும் முயற்ச்சியில் ஈடுபடுங்கள். அது உங்களுக்கு நேர்மறை மனநிலையை உருவாக்கும்.
    பிறரோடு ஒப்பிடும் பழக்கம்:
    உங்களை நீங்கள் மற்றவர்களுடன் எந்த தருணத்திலும் பிறரோடு ஒப்பிட்டுப்பார்க்காதீர்கள் அப்படி ஒப்பிட்டால் உங்களை நீங்களே தாழ்த்திக்கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.
    வளர்க்க வேண்டிய மனநிலை:
    நேர்மறைச் சிந்தனைகள், நேர்மறைப் பார்வை, நேர்மறைச் செயல்கள், நேர்மறை ஆற்றல், நேர்மறைத் தொடர்புகள், சுயமதிப்பு, இந்த ஆறு விஷயங்கள் மூலமாகவே நாம் பெரும்பாலும் நம்முடைய நேர்மறை சிந்தனையை வெளிப்படுத்துகிறோம். நேசிக்கும் மனநிலை, பாராட்டும் மனநிலை, ஆர்வ மனநிலை, தன்னம்பிக்கை மனநிலை, உதவும் மனநிலை போன்றவற்றை வளர்த்துக்கொள்ளுங்கள்.
    எதிர்மறை மனநிலையைப் போக்குவதற்கான ஒரு சிறந்த உத்தி, நீங்கள் உங்களுடன் பேசிப்பாருங்கள். இன்றைக்குக் காலையில் எழுகிறீர்கள் என்றால் என்னென்ன எதிர்மறை மனநிலைகள் உள்ளன என்பதை பட்டியல் எடுத்துக்கொள்ளுங்கள். அந்தப் பட்டியல் அருகே சிறிது மாற்றி எழுதுங்கள். இது உங்களுக்குள் பேசும் முறையாகும்.
    உதாரணமாக: உனக்குத் திறமை இருக்குடா! வேறு எவரை விடவும் இந்த வேலையை உன்னால் சிறப்பாகச் செய்ய முடியும்!’ என்பது போல நாமே நம்மிடம் பேசிக்கொள்ளும்போது நமது மனதில் உற்சாகம் பிறக்கும். நம் உடம்பிலும் உற்சாகம் தானாக ஊறும். நாம் உற்சாகமாக இருந்தால், நம் உடம்பிலிருந்து வெளிப்படும் ஒலி அலைகள் நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் உற்சாகப்படுத்திவிடும்.
    தொடரும்…

    எனக்குப் பேச வராது…?

    இறைநிலையின் தாக்கத்தால், வாய் பேச முடியாதவர்களை ஊமை என்று கூறுகிறோம். வாய் இருந்தும் ஊமையராய், கண் இருந்தும் குருடராய், காது இருந்தும் செவிடராய் மனிதர்கள் இருக்கக் கூடாது என்று பல கவிஞர்கள் பாடியுள்ளதை அறிவோம். மனிதனுடைய சிறப்பே சிந்திக்கும் பகுத்தறிவு; இதுவே ஆறாவது அறிவாகும். சிந்தனையைப் பிறர் தெரிந்து கொள்ளத் துணைபுரிவது பேச்சு.
    பேச்சை ஒரு கலை என்ற அளவிலே உயர்த்தி ‘பேச்சுக்கலை’ என்றும் கூறுகிறோம். ஆசை இருந்தாலும் எல்லோராலும் ஓவியம் வரைய இயலாது; பாட்டுப் பாட முடியாது; நடனம் ஆட முடியாது. ஆனால், பயிற்சி எடுத்து, ஆர்வத்துடன் கற்றுக்கொண்டால், இந்தக்கலைகளில் எவர் வேண்டுமானாலும் உயர்ந்த நிலையை அடைய முடியும்.
    இவை போன்றது தான் பேச்சுக்கலையும், அழ்ற் என்பதற்கு கலை என்றும், திறமை (நந்ண்ப்ப்) என்றும் பொருள் கூறப்படுகிறது. ஒரு காரியத்தை மிகச் சிறப்பாகச் செய்வது தான் திறமை (Ability to do a thing well). மனிதராய் பிறந்துவிட்டு, பேசாமல் இருக்கச் சொன்னால் பைத்தியம் பிடித்துவிடும் அல்லது மண்டை உடைந்துவிடும் என்று கூறுவதைக் கேட்டிருக்கிறோம். எல்லோரும் எப்போதும் எதையாவது, யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறோம். ஒருவரும் கிடைக்காவிட்டால் தனக்குத் தானே வாய்விட்டோ, மனதுக்குள்ளோ பேசிக்கொள்கிறோம்.
    “பேச்சு என்பதை எல்லோரும் விரும்புகிறோம்; நேசிக்கிறோம்”. சாதாரணமாக, மிக நல்ல முறையில் பேசும் பலரும், எழுந்து நின்று கூட்டத்தின் முன் பேசுமாறு கூறினால்,
    “எனக்குப் பேச வராது”Ð என்று கூறுகின்றனர்.
    இது என்னங்கÐ கூட இருக்கும்போது, மிகவும் அருமையாக, புத்திசாலித்தனமாகப் பேசும் பலரும், எழுந்து நின்று கூட்டத்தின்முன் பேசப் பயந்து கொள்கின்றனர்.
    பள்ளி, கல்லூரித் தேர்வுகளில் மொழி (Language) என்ற அளவில் அதிக மதிப்பெண் பெற்றவர்களும், பேச்சு என்று வருகின்றபோது தயங்குகின்றனர். காரணம் தயக்கம், பயம், சங்கோஜம் போன்று பல கூறலாம். நன்கு படித்தும், நிறைய மதிப்பெண்கள் பெற்றும் ஙசஇ எனப்படும் சர்வதேச நிறுவனங்களால் பணிமறுக்கப்பட்ட பலருக்கும் இந்தக் குறைதான் முதலிடத்தில் உள்ளது. உரையாடல் (இர்ய்ஸ்ங்ழ்ள்ஹற்ண்ர்ய்) என்பது இன்று பணிபெறுவதில் மிக முக்கியமானதாகக் கணக்கில் எடுக்கப்படுகிறது.
    2000 ஆண்டுகட்கு முன்பே திருவள்ளுவர் தமிழ்மறையாம் திருக்குறளில்,
    “சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
    சொல்லிற் பயனிலாச் சொல்” – குறள் 200
    பொருள் : பயனுள்ள சொற்களைக் கூறுமாறு சொல்லிவிட்டு அந்தச் சொற்களும் இனிய கனிகள் போல் இருக்க வேண்டும் என்கிறார்.
    “நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
    யாநலத்து உள்ளதூஉம் அன்று” – குறள் 641
    பொருள் : ஒருவகைச் செல்வமான பேச்சு தனிச்சிறப்புடையது. இது மற்ற எல்லாச் செல்வங்களிலும் அடங்காமல் தனித்த, உயர்ந்த சிறப்புடையது.
    தகுதிகள், திறமைகள் பல இருந்தும், இந்தப் பேச்சுக்கலைப்பயிற்சி இல்லாத காரணத்தால் பணியின்றிப் பலரும் ஏங்கிப் பெருமூச்சு விடுவது காதில் விழுகிறது தானேÐ பேசுவது இருக்கட்டும். சந்தேகம் கேட்கவாவது முடிகிறதா? என்றால், பலருக்கும் பயமாக உள்ளது.
    காரணங்கள்
    மனதில் ஆழப்பதிந்துவிட்ட எதிர்மறை எண்ணம், தாழ்வு மனப்பான்மை, பயம், மற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற கற்பனை, முயற்சி செய்யாமை, வாய்ப்பே கிடைக்காதது, தயக்கம், தேவையில்லாத ஒப்பீடு (இர்ம்ல்ஹழ்ண்ள்ர்ய்) ஆகியவை தான் பேச அழைத்த உடனே “எனக்குப் பேச வராது” என்ற பேச்சாக வெளிவருகிறது.
    தடைகளைத் தகர்ப்போம்
    எல்லோரும் பேசிக் கொண்டுதானே இருக்கிறோம். சமீபத்தில் மாணவர்களிடையே, நிறுவனத்தின் பணியாளர்களிடையே, பொது மக்களிடையே பயிற்சியின்போது பெற்ற அனுபவங்களின் வெளிப்பாடுதான் இக்கட்டுரை.
    முதலில் தேவை துணிச்சல். ஒவ்வொருவரும் தாய்மொழியில் மிக அருமையாகப் பேசும் துணிச்சல் நிரம்பியவர்களாகவே இருக்கிறோம். பழக்கமில்லாமை தான் பலர் முன் பேச முடியாமைக்குக் காரணம். “என்னால் சிறப்பாகப் பேச முடியும்” என்ற மந்திரச் சொற்களைத் தினமும் காலையில் கண்ணாடி முன் நின்று பலமுறை உரக்கச் சொல்ல வேண்டும். இப்பயிற்சியால் உடலிலுள்ள ஒவ்வொரு செல்களிலும் அபரிமிதமான புத்துணர்ச்சியும் தைரியமும் உண்டாகும்.
    அடுத்து ஏதேனும் ஒரு பொருளைப்பற்றி (உதாரணமாக பேனா, கைக்குட்டை, குடை, மழை, வெயில் போன்றவை) சிந்தித்து, சில கருத்துக்களைத் தேர்வு செய்ய வேண்டும். அதைத்தாளில் எழுதிப் பார்க்க வேண்டும்.
    அதைச் சப்தமாய், நிறுத்தி, ஏற்றஇறக்கங்களுடன் படிக்க வேண்டும். பலமுறை படிக்கும் போது, “என்னாலும் பேச முடியும்” என்ற உறுதி உள்ளத்தில் உண்டாகும். தொடர்ந்து நம் நலனில் அக்கறையுள்ள நண்பர்கள், குடும்ப உறுப்பினர்கள் முன் அதைப் பேசிக்காட்ட வேண்டும். அவர்களது ஆலோசனைகளை ஏற்றுக்கொள்ளும் மனநிலையும் தேவை.
    நாப்பழக்கம்
    ‘சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்’ என்ற பழமொழி மூலம் பேசிப் பழகுவதன் அவசியத்தை அறியலாம். MNC நிறுவனங்களில் ஆங்கில மொழிப் பேச்சல்லவா கேட்கின்றனர்? அதற்கு என்ன செய்வது?
    மிக எளிமையாக, சுலபமாக ஆங்கிலப்பேச்சிலும் திறமை பெற முடியும். தப்போ, சரியோ முதலில் ஆங்கிலத்தில் நண்பர்களுடன் பேச வேண்டும். பேசும்போது தயக்கம், பயம் மறைந்து துணிச்சல் அதிகரிக்கும். தேவைப்பட்டால், உரக்கப்பேசி அதை டேப்ரிக்கார்டரில் பதிவுசெய்து, திரும்பக் கேட்க வேண்டும்.
    அகக்காட்சி
    மிகச்சிறப்பாகப் பேசுவது போன்றும், கூட்டத்தினர் எழுந்துநின்று கரவொலி எழுப்புவதாகவும், பலரும் வந்து கை குலுக்கி பாராட்டுவதாகவும் மனதில் சித்திரமாய் பார்க்க வேண்டும். தினமும் உறங்கச் செல்லுமுன், இக்காட்சியை நினைத்துக்கொண்டால், ஆழ்மனதில் பதிந்துவிடும். பேச வேண்டுமென்ற துணிச்சலும், ஆர்வமும் பெருகும். வாய்ப்புக்காக காத்திருக்காமல், வாய்ப்பை உருவாக்கிப் பேசும் வல்லமை வந்துவிடும்.
    சில உதாரணங்கள்
    பேசவே முடியாத ஹெலன் ஹெல்லர் என்ற மாது, வாயினுள் கூழாங்கற்களைப் போட்டு, பயிற்சி மேற்கொண்டு, மிகச்சிறந்த பேச்சாளரானார். சுவாமி விவேகானந்தர் மிகச்சிறந்த முறையில் அமெரிக்காவில் பேசியதால் இந்தியாவின் மதிப்பு உயர்ந்தது. இன்றைய காலகட்டத்தில் பட்டிமண்டபப் பேச்சாளர்கள் குறுகிய நேரமே பேசி, சொல்ல வேண்டிய கருத்துக்களை ஆணி அடித்தாற்போல சொல்லி விடுகிறார்கள். அரட்டை அரங்கங்களிலும் புதியவர்கள் பலர் மிகவும் உணர்ச்சிகரமாகப் பேசுகின்றனர். சமுதாய சிந்தனையுள்ள அரசியல் தலைவர்கள் பலரது பேச்சுக்களும் தெளிந்த நீரோடை போல உள்ளன. பயம் நீக்கி, துணிச்சலுடன் ஓரிரு கருத்துக்களை மட்டும் வலியுறுத்தி, எங்கும் எந்தச் சூழ்நிலையிலும் பேச முடியும் உங்களால்Ð

    பெண்களுக்கான வாழ்வியல் நுட்பங்கள்

    2. பெண்மையின் மலர்ச்சி
    அன்புத் தோழியர்களே! ஒரு பெண் எப்பொழுது மலர்கிறாள் என்று உங்களுக்குத் தெரியுமா?. “பெண்ணாக வாழும் எங்களுக்கு இது தெரியாதா?” என்று சொல்வது எனக்கு கேட்கிறது. ஆனால் உங்கள் பதில் “வயதுக்கு வரும் போது மலர்கிறாள்” என்பதாக இருக்குமாயின் கண்டிப்பாக அது தவறான பதிலே ஆகும். என் அன்புச் சகோதரிகளே! தோழியர்களே! ஒரு மொட்டு பூவாக விரிவதை மலர்வதாகக் கொள்வது சரியில்லை. ஒரு செடியானது தழை வளர்ச்சியில் (Vegetative Growth) இருந்து, இனவிருத்தித் தன்மைக்கு (Reproductive Growth) மாறுவதே மலர்ச்சியாகக் கொள்ள வேண்டும். இப்படித் தழைத் தன்மைச் சுருங்கி இனவிருத்தி தன்மைக்கு மாறியதன் வெளிப்பாடுதான் பூவின் காம்பும், அல்லியும் (Calyx) பச்சையாகவும், பூவின் மற்ற பாகங்கள் பல வண்ணத்துடனும் இருப்பது ஆகும்.
    பாசத் தோழியர்களே! ஒரு பெண்ணின் பெண்மை மலரும் தருனம் என்பது உண்மையில் அவள் தாயின் கருப்பையில் இரண்டாவது மாதம் தொடங்கி ஏழாவது மாதத்திற்குள் படிப்படியாக நிகழ்கிறது. இந்த ஐந்து மாத காலத்தில்தான் (2ஆம் மாதம் முதல் 7ஆம் மாதம் வரை) ஒரு பெண்ணின் எதிர்காலக் கருப்பையின் தன்மை உறுதி செய்யப்படுகிறது. ஆக, தாய் கருவுற்றிருக்கும் இந்தக் காலம் சக்தியுள்ள, சத்துள்ள மற்றும் ஆரோக்கிய மிக்க காலமாக இருக்க வேண்டும் என்பதை உணர வேண்டும். அது பற்றி பின்னர் விரிவாக பார்ப்போம். அன்பு தோழியர்களே! பிறப்பதற்கு முன் பெண்மையை உருவாக்கிய சூழ்நிலையை இப்பொழுது நாம் மாற்றி எழுத முடியாதுதான். ஆனால், பெண் பிறந்த பின் வாழும் சூழல் மற்றும் தன்மையை மாற்றியமைத்து வாழ்வாங்கு வாழ முடியும் ஆகையால் அது பற்றி இனி பார்ப்போம்.
    அன்புத் தோழியர்களே! ஒரு பெண் ருதுவாகும் தன்மை என்பது அவளின் ஆரோக்கியத்தைச் சார்ந்திருக்கிறது. அவை பற்றியும் அவற்றுக்கான தீர்வுகளையும் இனி பார்ப்போம்.
    அன்புத் தாய்மார்களே! உங்கள் பெண் குழந்தைகள் வலுவாகவும் உயிர்ப்புடனும் இருந்தால் மட்டுமே அவர்கள் ருதுவாகும் போதும், ருது ஆன பின்பும் மாதவிடாய் சிக்கல்களில் சிக்காமல் ஆரோக்கியமாக வாழ்வார்கள். ருதுவாகத் தேவைப்படும் ஊட்டமும், சக்தியும் இல்லாத நிலையில் அவர்கள் வெளிச் சூழலால் (பாலுணர்ச்சியைத் தூண்டும் இன்றைய சினிமா, தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகள்) தூண்டப்பட்டு, தயாராகாமல் ருதுவாகி, மாதவிடாய் சுழற்சிக்கு ஆட்பட்டு, எண்ணம், சொல் மற்றும் செயல்களில் மாறுபட்டு, பெண்மையின் மகத்துவமும் புரியாமல் வாழ முற்பட்டு, திருமணம் நடக்கும் போது இல்லற மேன்மையையும் உணராமல் இருந்துவிட்டு, பெண் ஜென்மம் கொடியது என்று முடிவெடுத்து, தானும் வாழாமல் வாழ வந்தவனையும் வாழவிடாமல் மாறுபட்டு இருப்பார்கள்.

    அன்புச் சகோதரிகளே! உங்கள் எதிர்கால இல்லறவாழ்க்கை சுபிட்சமாகவும், சுகமாகவும் இருக்க வேண்டுமாயின், உங்கள் இன்றைய வாழ்க்கை முறை முறையானதாக இருக்க வேண்டும். ருசிக்குச் சாப்பிடுவதை நிறுத்தி உடல் ஊட்டத்திற்குச் சாப்பிட வேண்டும். அநேக பள்ளி மற்றும் கல்லூரிப் பெண்கள் அவசரம் கருதி காலை உணவினைத் தவிர்த்து விடுகிறார்கள். இவர்கள் ஆண் பிள்ளைகள் போல் அல்லாமல், குளிப்பதற்கும் உடை மாற்றிக் கொள்வதற்கும் அதிக நேரம் ஆவதால், காலை உணவைத் தவிர்த்து விடுகிறார்கள். அவசரச் சகோதரிகளே! காலை உணவை பிரேக் பாஸ்ட் (Break Fast) என்று ஆங்கிலத்தில் கூறுவதன் அர்த்தம், முன் இரவு எட்டு மணி நேரம் இருந்த விரதத்தை (Fasting) காலையில் உடைக்க வேண்டும் (Break) என்பதற்காகத் தான். அன்புச் சகோதரிகளே! உங்கள் அவசரத்தால் உங்கள் விரதத்தை நீட்டித்து ஆரோக்கியத்தைக் குறைத்து விடாதீர்கள். அதற்கு பதிலாக இன்னும் கொஞ்சம் முன்னதாக எழுந்து கொள்ளுங்கள். இது உங்களை மேன்மைப் படுத்தும்.

    ருதுவாவதும், ருதுவான பின் மாதவிடாய் சுழற்சியும் சிக்கலாக இருக்குமாயின், மணமாவதும், தாயாவதும், பின் சேய்க்குப் பாலுட்டுவதும் சிக்கலாகவே இருக்கும்.

    வெற்றி பெரும் வித்தை இதோ

    வெற்றியை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவரவர்கள் நிலையில் அவர்கள் வெற்றியடைய நாளும் முயற்சித்துக்கொண்டே இருக்கின்றார்கள். முயற்சி செய்கின்ற அனைவருமே வெற்றியாளர்களாக உருவாவது இல்லை. சிலர் தோல்வியைத் தவிர்க்கமுடியாமல் அடைவதும் நிகழ்கின்றது. எல்லோரும் வெற்றியாளர்களாக ஆகவேண்டும் என்றால் அதற்கான வழிமுறைகளைப் பின்பற்றினால் போதும். அந்த வழிமுறையைப் பற்றிதான் இங்கே விரிவாகப்பார்க்கப் போகின்றோம்.
    சாதாரணமானவன் எப்படி சாதனையாளன் ஆகிறான்
    இதுவரை சாதித்தவர்களின் சரித்திரத்தைப் பார்த்தபோதும் சரி, இப்போது சாதித்துக் கொண்டு இருப்பவர்களை நோக்குகின்றபோதும் சரி, அதிலிருந்து நமக்குக் கிடைக்கக்கூடிய மையக்கருத்து என்னவென்றால் பெரும்பாலும் சாதாரண நிலையில் இருந்தவர்களே படிப்படியாக முன்னேறி சாதனையாளர்களாக மாறி இருக்கின்றார்கள்.
    ஊட்டியைப் போன்ற ஒரு ரம்மியமான சூழ்நிலை அமையப்பெற்றஅடர்ந்த காடுகள் கூடிய ஒரு மலைப்பிரதேசம். அதன் அடிவாரத்தில் மலைவாழ் மக்கள் சொற்ப எண்ணிக்கையில் குடியிருக்கும் பகுதி அமைந்திருக்கின்றது. அந்தக் கிராம மக்களின் வாழ்கையானது, மலைக்கு மேலே சென்று அங்கே கிடைக்கின்றகாய், கரி, கனிவகைகளைப் பறித்துக்கொண்டு வந்து, பக்கத்தில் இருக்கும் நகர்ப்புற மக்களிடம் கொடுத்து, அதற்கு ஈடாக கிடைக்கும் பணத்தை வைத்தே தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொண்டு இருந்தனர்.
    ஒரு நாள், ஒரு மலைவாசி, காய், கரிகளை பறித்துக் கொண்டு, மலையில் இருந்து கிழே இறங்கிக் கொண்டு இருந்தான். அப்போது ஒரு பாம்பு அவனை கடித்துவிட, அவன் பயத்தில் அலரி அடித்து ஒரு செடியின்மீது விழுகின்றான். அப்போது அந்தச் செடி ஒடிந்து அதிலிருந்து விழும் சாறு, பாம்பு கடித்த இடத்தில் பட்டு, விசத்தை முறித்து அவனை உயிர்பிழைக்கச் செய்கிறது. அதைப்பார்த்த அந்த மலைவாசி, ஆச்சரியப்பட்டு, ஆனந்தத்துடன் அடிவாரத்தை அடைந்ததும் அங்கு உள்ளவர்களிடம், தனக்கு நேர்ந்த விபத்து பற்றியும், அதிலிருந்து தான் காப்பாற்றப்பட்ட விதத்தையும், உணர்ச்சி பொங்க உரைத்தான். அத்தனைபேரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். அதில் ஒருத்தர் நாளை நீ மலைக்குச் சென்று வரும்போது அந்த மூலிகைச் செடியை ஒடித்துவா, எனக்கு வேண்டும் என்றார். அதேபோல் அவன் கொண்டுவந்து கொடுத்தான். பயன்படுத்திபார்த்து விட்டு, அதில் உண்மை உள்ளது என அவன் பத்து பேருக்குச் சொல்ல பத்து பேர், நூறுபேருக்குச் சொல்ல, நூறுபேர், ஆயிரம் பேருக்குச் சொல்ல, காட்டுத் தீபோல் விசயம் பரவியது. அந்த மலைவாசி ஒரு பையில் அம்மூலிகையை எடுத்து வந்தான். பின்பு இரண்டு பைகளில் கொண்டு வந்தான். அதன்பிறகு தோளில் மூங்கில் கம்பை வைத்து அதில் பல பைகளில் மூலிகைச் செடியைக் கொண்டுவந்தான் அவனுக்கு வருமானம் பெருகத் தொடங்கியது. இதைப் பக்கத்தில் இருந்தவர்கள் பார்த்து, பொறுக்காததால், தாங்களும் அந்த மலையில் இருந்து மூலிகைச் செடியை பிடிங்கிவந்து விற்க ஆரம்பித்தனர்.
    இதனால், முதன்முதலில் மூலிகைச் செடியைக் கொண்டு வந்தவனின் வருமானம், படிப்படியாகக்குறையத் தொடங்கியது. உடனே அவன் தன் வருமானத்தைப் பெருக்க மாற்று வழியை யோசிக்கத்தொடங்கினான். அதன் விளைவாக, அவன் மலையில் வளரும் மூலிகைச் செடியை, தான் இருக்கும் சமவெளிப் பகுதியிலேயே பயிரிட முனைந்தான், தோல்வியுற்றான். மலை சூழ்நிலையில வளரக்கூடிய பயிர், சமவெளி சூழ்நிலையில் எப்படி வளரும் என்பது தெரியாது போனதால், அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இருந்தபோதும் அவன் விடாமுயற்சி, வேறு ஒரு வழியை அவனுக்குக் காட்டியது. அது என்ன என்றால் மூலிகைச் செடியை மக்கள் வாங்கிச் சென்று பாடம் செய்து, பின்பு மருந்தாக தயாரிப்பதையே, நாம் செய்தால், அவர்களுக்கு எளிதாக இருக்குமே என்று அந்த முயற்சியில் இறங்கினான்.
    அதற்காக திட்டமிட்டு செயல்பட்டான். மூலிகைச் செடியை மருந்தாகத் தயாரிக்கும் இயந்திரங்களை வாங்கி தயாரித்து விற்பனைக்குக் கொண்டுவந்தான். மக்கள் அனைவரும் அவனைத் தேடிவந்து மருந்தை வாங்கிச் சென்றனர். நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்தது. இதனால் மலையில் இருந்து மூலிகைச் செடியை பிடிங்கி வருபவர்கள் எல்லோரும் அவனிடத்தில் மொத்தமாக கொடுத்து மருந்துகளை வாங்கிச் செல்லும் ஒப்பந்தக்காரர்கள் ஆனார்கள். இதனால் இப்போது இவன் வருமானம் பலமடங்கு அதிகரித்தது. உடனே அடுத்த கட்டத்திற்கு முன்னேறயோசித்தான். அதன் விளைவு, இந்த மருந்தை தன்னைத் தவிற யாரும் தயாரிக்கக்கூடாது என்கிற காப்புரிமையை உலக அளவில் வாங்கிவிட்டான், அதன் பின்பு தன்னுடைய நிறுவனத்தின் கிளைகளை, உலக அளவில் விரிவு படுத்தி விற்பனையை முடுக்கிவிட்டான் நல்ல பலன் கிடைத்தது. விற்பனை அமோகமாக  வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும், அதிகமாக, இப்போது அவன் வருமானம் பல கோடிகளைத் தாண்டிப் போய்க்கொண்டு இருந்தது.
    தற்போது வெளியிடப்படுவது போன்று, உலகத்தின் டாப் டென் கோடீஸ்வரர்கள் பட்டியலை, அன்றைக்கும் ஒரு பிரபல ஊடகம் வெளியிட்டது. அதில் முதல் இடத்தில் நம் சாதாரன மலைவாசியின் பெயர் இடம் பெற்றிருந்தது.
    இப்படித்தான் சாதாரணமானவர்கள், சாதாரண நிகழ்வில் இருந்தே, சாதனையாளர்களாக உருவாகி உள்ளனர். போதுமான அளவு ஊக்கமும், விடாமுயற்சியும் உழைப்பும் இருக்குமானால் எவரும் உயர்வை அடைய முடியும்.
    எல்லோராலும் ஆக முடியுமா:
    ஒருதாய் வயிற்றில் பிறக்கும் இரண்டும் குழந்தைகளில் ஒருவன் கட்டிடப் பொறியாளர்ராகவும் இன்னொருவர் கட்டிடக்கூலி தொழிலாளியாகவும் இருப்பதற்குக் காரணம் என்ன? ஒரு மலைப்பிரதேசத்திற்கு வலதுபுரம் செழிப்பான நீர்நிலையுடன் கூடிய பகுதி இருக்கிறது, அதே மலைப் பிரதேசத்திற்கு இடது, வரண்டு, புல், பூண்டு, புழு, பூச்சி ஏதும் சுற்றி இருக்கிறதே ஏன்? வரண்ட பகுதி வளமான பகுதியாக முடியாதா? என்றால் அது முடியும், எப்படி என்றால் வளமான பகுதியில் உள்ள நீர் நிலைகளை வரண்ட பகுதிக்குக் கொண்டு செல்லத்தடையாக இருக்கும், மலையைக் குடைந்து, பிளந்து, எடுத்துச் சென்று,  வறண்ட பகுதியில் சேர்ப்போமானால், அங்கும், புல், பூண்டு, புழு, பூச்சி, உற்பத்தியாகி அதுவும் செழிப்பான பகதியாக உருமாற முடியும். அதுபோல தோல்வியாளர்கள் எல்லோரும் வெற்றியாளர்களாக உருவாக முடியும். அவர்களுக்குத் தடையாக இருக்கும் மலையைப் பிளந்து, வெற்றிக்குத் தேவையான அத்தனை வழிமுறைகளையுமே பின்பற்றி முயலும் போது நிச்சயம் அவர்கள் அத்தனை பேரும் வெற்றியாளர்களாக வலம் வர முடியும்.
    தடைகளைத் தகர்த்தெரிவோம்:
    நம் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் சிலவற்றைப்பற்றி இனி பார்ப்போம்,
    1)    பரம்பரையின் மீது பழி சுமத்துவது
    2)    அறியாமை என்னும் எதிர்மறைக்கு ஆட்படுவது
    3)    மாறுதலுக்கு உடன்படாதது
    4)    தன் திறமையை விற்கும் அணுகுமுறை இல்லாதது
    5)    வேலையின் கணக்கை விளங்கிக் கொள்ளாதது
    6)    சுதந்திரத் தன்மையோடு இல்லாதது
    7)    இயல்பில் இருந்து விலகிச் செல்லுதல்
    8)    இலட்சியத்தின் இரகசியத்தை அறியாதது
    9)    வாய்ப்புக்களை வசீகரித்துக் கொள்ளாதது
    10)    பலவீனத்தைப் பலமாக்க தெரியாதது
    11)    மன உறுதியின் மகிமை அறியாதது
    12)    தன் நம்பிக்கை இன்மை
    மேலே உள்ள முக்கியத் தடைகளை நாம் கண்டறிந்து தகர்க்கின்றபோது, ஒருவர் எவ்வளவு மோசமான நிலையில் இருந்தாலும் அவர் அதிலிருந்து மீண்டும் உயர்வான உன்னதமான நிலையை எட்ட முடியும் என்பதில் சந்தேகம் இல்லை. எப்படி நாம் அந்தத் தடைகளைத் தகர்த்தெரிவது, ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.
    – தொடரும்…

    அனுபவத்தைப் பாடமாக்கு ஆனந்தத்தைப் பதவியாக்கு

    ‘சங்கர் IAS அகாடமி’, திரு. ஈ. சங்கர், சென்னை
    நேர்முகம் என். செல்வராஜ்

    • கல்வியில் சராசரி மாணவனாக இருந்து இன்று

      Continue Reading »

    மாணவனே… வெற்றி மீது பற்று வை

    வையத் தலைமை கொள்
    ஒரு போரின் வெற்றிக்குப் படைவீரர்களை விட
    படைத் தலைவனே முக்கியம்.
    – நெப்போலியன்
    நீ இன்றைய மாணவன், ஆனால் நாளைய விஞ்ஞானியாகவோ, மருத்துவராகவோ, பொறியாளராகவோ, தணிக்கையாளராகவோ, ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவோ வரக்கூடும். அப்போது தலைமை ஏற்பதற்கு இப்போதே தயாராக வேண்டும்.
    தலைமைப் பண்பு என்றால் என்ன?
    ஒரு நல்ல பொதுநோக்கத்திற்காக, ஒரு குழுவை வழி நடத்தும் பாங்கு தலைமைப் பண்பு எனலாம்.
    உன்னுடைய தலைமைப் பண்புகளை இனங்கண்டு மெருகேற்றவேண்டும். பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள் – இவர்கள் பொறுப்புகளைத் தரும்போது தட்டிக் கழிக்காதே வாய்ப்பாகக் கருதி ஏற்றுச் செயல்படு.
    வகுப்புத் தலைவன், மாணவர் பேரவைத் தலைவன், NCC, NSS, Scout, TRC போன்ற அமைப்புகளில் உன்னை இணைத்துக் கொள்; இணைந்து செயல்படு; இணைத்து செயல்படு. நாளை நீ மாவட்ட ஆட்சியராக, காவல்துறைஆணையராக வருவதற்கு இவையெல்லாம் பயிற்சிகள், ஒத்திகைகள் என்பதை மனதில் வை.
    நிமிர்ந்து நில்
    இருக்கையில் அமரும்போது நிமிர்ந்து உட்கார்; நடக்கும்போதும் நிற்கும்போதும் நிமிர்ந்து நட; நிமிர்ந்து நில். உன் பார்வையில் கம்பீரமும் தெளிவும் இருக்கட்டும். இவை நான் வெல்லப் பிறந்தவன் என்னும் மனப்பாங்கை ஏற்படுத்தும். அதனால்தான் பாரதியார், நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை வேண்டும் என்றார்.
    நிமிர்ந்து நிற்கையில் மனதில் தன்னம்பிக்கை மற்றும் மகிழ்ச்சி ஊற்றெடுப்பதை உணரலாம்.
    கூனிக் குறுகி நின்றால், இவன் இலக்கு இல்லாத சோம்பேறி என்று நினைப்பார்கள்.
    உன்னுடைய தோற்றத்தை வைத்தே உன்னை எடைபோடுவார்கள். தலைநிமிர்ந்து நிற்பதே தலைமைக்கு அழகு. உன் தோற்றப் பொலிவும், உன் உடல் உணர்த்தும் செய்தியும் பிறர் மதிப்பதாக, மகிழ்வதாக இருக்குமாறு எப்போதும் பார்த்துக் கொள்.
    நாம் பிறரால் மதிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே பிறர் நம்மை மதிப்பர். நாடகத்தில் கம்பீரமாக நடந்து வரும் இராஜாவைப் பார்த்து வியக்கிறோமே ஏன்? மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட நடை; வேறுபட்ட உடை. அது தான் காரணம். எனவே நீயும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு இருக்க வேண்டும். நூறு பேருக்கு நடுவே நின்றாலும் நீ அறியப்பட வேண்டும். உன்னுடைய இருப்பு மற்றவருக்குத் தெரிந்து கொண்டே இருக்க வேண்டும். பிறகு பார். நீ கொண்டாடப்படும் மனிதராக (Charismatic Personality) மதிக்கப்படுவாய். நீ தலைவனைப் போல மதிக்கப்பட வேண்டும் என நினைத்தால், தலைவனாகவே இரு.
    நீ உயர்ந்து நிற்கிறாயா, தாழ்ந்து நிற்கிறாயா என்பதை உன் மனதிடம் கேள்; பெற்றோரிடம், நண்பரிடம், உறவினரிடம் கேள். பல்வேறு சமயங்களில் உன்னை ஒளிப்படம் எடுத்திருப்பார்கள். அவற்றைத் தொகுத்துப் பார். நீ நிற்கும் விதம், நடக்கும் விதம், உட்காரும் விதம் ஒரு தலைவனுக்கு உரியதாக இல்லை என்றால், அவற்றைமாற்றிக் கொள். மற்றவர்களுடைய கவனத்தை ஈர்க்கும் வண்ணம், மற்றவர்கள் உன்னை ஏற்கும் வண்ணம், மற்றவர்களிடத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் உன் ஒவ்வொரு அசைவும் இருக்க வேண்டும். உன் ஒவ்வொரு செயலும் துணிவு, நேர்மை, அர்பணிப்பு, அறிவு, அன்பு இவற்றைப் பறைசாற்றவேண்டும். இந்த நிலைக்கு நீ உயர்ந்தால், பல நூறு இளைஞர்களுக்கு ஒரு முன் மாதிரியாக, நன்மாதிரியாக விளங்குவாய்.
    சுவாமி விவேகானந்தரைப் பார்த்து ஒருவர் கேட்டார். “ஏன் நீங்கள் வித்தியாசமான மனிதராய்த் தெரிகிறீர்கள்?” அவர் திருப்பிக் கேட்டார். “ஏன் நீங்கள் எல்லோரும் ஒரே மாதிரியாகக் காணப்படுகிறீர்கள்?”
    சுவாமி விவேகானந்தர் படத்தின் முன்னால் நின்று சற்று உற்றுப்பார். அவர் ஓங்கி உயர்ந்து கம்பீரமாக நிற்பதைப்பார். அவர் நிற்கும் விதமே அவர் குறிக்கோளைப் பறைசாற்றுகிறது. நம்முடைய பாரம்பரிய ஞானத்தைப் பற்றி பெருமை கொள்ளச் செய்தவர் அவர்தான். கருதிய செயல் கைகூடும் வரை விழிப்புடன் பணியாற்றுமாறு அறைகூவல் விடுத்தார்.
    சுயமரியாதையையும், நாட்டுப்பற்றையும் நம் குருதியில் கலக்கச் செய்தார். 1893-ல் நடந்த சிகாகோ சர்வமத மாநாட்டில் ஆற்றிய எழுச்சி உரை உலகப்புகழ் வாய்ந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த என் சகோதரிகளே, சகோதரர்களே – என்ற அவரது தொடக்க வரி, அவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. ஆம், அவர் எப்போதும் ஓங்கி உயர்ந்து நின்றார்; வென்றார்.
    செல்வாக்கு
    ஒருவனுடைய வெற்றியில் முக்கிய பங்கு வகிப்பது சொல்லும் திறன். வாயால் சொல்லுதலும், எழுத்தால் சொல்லுதலும் மிக முக்கியம். அதற்காக நீ ஒரு பெரிய பேச்சாளராகவோ, எழுத்தாளராகவோ இருக்க வேண்டியது அவசியமில்லை. குறைந்த அளவு நாம் சொல்ல நினைத்ததைப் பிறருக்குப் புரியும்படி சொல்லத் தெரிய வேண்டும். மொழி என்னும் ஊடகத்தை பேச்சிலும் எழுத்திலும் சரியாகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். இத்தகைய திறமை இல்லாதவரை மணம் வீசாத காகித மலருக்கு ஒப்பிடுவார் திருவள்ளுவர்.
    இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
    உணர விரித்துரையா தார். (குறள் 650)
    என்று உறைக்கும் படி உரைப்பார்.
    எனவே சொல்லும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். உலகத்தின் எந்த மூலைக்கும் செல்ல வேண்டிய கட்டாயம் உனக்கு ஏற்படும். ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளில் தேர்ச்சி கொள்.
    சொல்லும் திறன் மற்றும் செல்லும் திறன்
    சொல்லும் திறன் இல்லாதவர்க்குச் செல்லுந்திறனும் இருக்காது. அவர் போடும் விண்ணப்பம் கூட உரிய செய்தியை சொல்லாது, எனவே செல்லாது.
    கையெழுத்து
    கட்டுரை எழுதுதல் என்பது ஒரு கலை; ஒரு திறன். பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் நீ பெற்றமதிப்பெண் எழுதும் திறனுக்குக் கிடைத்தது என்பதே உண்மை. IAS / IPS தேர்வில் கூட கட்டுரை வினாக்களை எப்படி எழுதுகிறோம் என்பதைப் பொறுத்து தான் வெற்றியும் தோல்வியும் உறுதியாகிறது.
    எழுதும் திறனோடு கையெழுத்துத் தெளிவும் அழகும் முக்கியம். மோசமான கையெழுத்தில் என்னதான் சரியான விடையை எழுதினாலும் திருத்தும் ஆசிரியரால் சரியாகப் புரிந்து கொள்ள முடியாது. என்னதான் கணினியுகம் என்றாலும், எழுத்துமுறைதேர்வுகள் இருக்கும் வரையிலும் அழகான கையெழுத்து அவசியமே. எனவே நீ ஏதாவது குறுகியகால கையெழுத்துப் பயிற்சி இருந்தால், அதில் சேர்ந்து பயிற்சி பெறுவது நன்று.
    தொடர்ச்சி அடுத்த இதழில்…….
    “Be Ambitions Boys and Girls” ஆங்கில நூலிலிருந்து தமிழாக்கம்
    – திரு.கோவிந்தராஜன்.

    உள்ளத்தோடு உள்ளம்

    தமிழக மக்கள் அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த மாற்றம் தருமா மாற்றம் என்பது தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்ற அரசிடமிருந்து

    Continue Reading »