– 2001 – July | தன்னம்பிக்கை

Home » 2001 » July

 
  • Categories


  • Archives


    Follow us on

    பொதுவாச் சொல்றேன்

    நண்பரைப் ஒருத்தரைப் பார்க்கப் போனேன். அவர் வீட்டிலே, துணி துவைக்கிற சப்தம் கேட்டது. வசதியான ஆளாச்சே, வாஷிங் மெஷின் வைச்சிருக்காரே அப்படீன்னு யோசிச்சேன். ஆச்சர்யம் என்னன்னா, துணி துவைக்கிற கல்லு வேற அம்மா அப்பா அப்படீன்னு அலறுச்சு. போய்ப் பார்த்தேன். கணவனும் மனைவியுமா குந்தையை

    Continue Reading »

    உறவுகள் உணர்வுகள்…

    உறவுகள் மாறும், ஆனால் உணர்வுகள் தொடரும் என்பதைக் கடந்த இதழில் பார்த்ததால் உறவுகளின் ஆணிவேர் என்ன? இவை எங்கே எப்படி துவங்குகின்றன? மனிதன் மண்ணில் பிறந்தவுடன்தானா? இல்லை அதற்கும் முன்னே தாயின் கருவறையில் இருக்கும் போதா? இது வரையில் நாம் யோசித்திருப்போம். இதற்கும் மேல் ஒரு படி உள்ளதே!

    Continue Reading »

    வணக்கம் தலைவரே

    பேச்சாற்றல் – வார்த்தை ஜாலங்கள் இவையெல்லாம் தலைவர்களுக்கான அடையாளங்கள் தானே தவிர இவையே தகுதிகளாகி விடுவதில்லை.

    சிறந்த தலைவர்கள் என்றாலே, செயல்படுபவர்கள் என்று தான் அர்த்தம். “அய்யா நம்ம தெருவிலே குடிஞ்சை தீ பிடிச்சிருச்சு” என்றால் “கவலைப் படாதீங்க நம்ம தேர்தல் அறிக்கையிலேயே சொல்லியிருக்கோம் ஏழைகளுக்கு தீப்பிடிக்காத வீடுகள் கட்டித் தருவோம்னு. நம்ம ஆட்சி வரட்டும்! பொறுங்க!” என்று சொல்வது தலைதவருக்கு

    Continue Reading »

    விட்டு விடுதலையாவோம்

    (27-05-2001 அன்று தன்னம்பிக்கை மாத இதழும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்சும் இணைந்து நடத்திய “விட்டு விடுதலையாஓம்” நிகழ்ச்சியில் பிரபல மனவியல் நிபுணர் டாக்டர்ருத்ரன் பங்கேற்றார். அவரது உரையின் சில பகுதிகள் இவை.

    கூட்டத்தில் நடந்த கேள்வி பதில் பகுதிகள் “தன்னம்பிக்கை”யில் தொடர்ந்து வெளிவரும்.)

    “விட்டு விடுதலையாவோம்” என்று இந்த நிகழ்ச்சிக்குப் பெயர் வைத்திருக்கிறீர்கள்.

    Continue Reading »

    உள்ளத்தோடு உள்ளம்

    வேகம் – வெறி, முனைப்பு – மூர்க்கம், இலட்சியம் – கற்பனை இவற்றுக்கு இடையில் இருப்பது மிக மெல்லிய கோடு. வேகமாய் போகும் பந்தயக்குதிரைக்கு போதை மருந்தேற்றி வெறிபிடித்தாற்போல் ஓடச் செய்வது, தகுதி இழக்கச் செய்து போட்டியிலிருந்தே தள்ளிவைக்கும் அளவுக்குப் போகும்.

    Continue Reading »

    உள்ளத்தோடு உள்ளம்

    உள்ளத்தோடு உள்ளம்

    புதிய யுகம் புலர இருப்பதன் அறிகுறியாய் அடுத்த குடியரசுத்தலைவர் தேர்தல் அமைந்திருக்கிறது. உழைப்பின் உருவமாய், தன்னம்பிக்கையின் வார்ப்பாய், விளங்கும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் குடியரசுத் தலைவராகிறார்.

    அரசியலில் அவருகு அனுபவம் இல்லை என்றுசிலர் அங்கலாய்க்கிறார்கள். இது குறித்த தனி கட்டுரை இந்த இதழில் வெளியாகியுள்ளது.

    எதிர்கால இந்தியா குறித்து உள்மன வரைபடம் ஒன்றை உருவாக்கி,அதற்கு Visison india 2020 என்ற பெயர்சூட்டினார். அவரது கரங்களில் இன்று இந்தியா அளிக்கப்படுகிறது.

    அப்துல்கலாம், இந்தியாவின் அடையாளங்களில் ஒருவராகவே அறியப்படுகிறார். இராமேஸ்வரத்தின் கரையோர மனிதர்கள் தொடங்கி, செங்கோட்டையின் செல்வாக்கு நிறைந்த மனிதர்கள் வரை அனைவரும் அவருக்கு சமம்தான்.

    தேச விடுதலைக்குத் தியாகம் செய்த மதிப்பிற்குரிய பெண்மணி ஒருவரை, அவர்தோற்பார் என்று அறிந்தே எதிர்வேட்பாளராக நிறுத்தியிருப்பது அந்தப் பெண்மணிக்கு உரிய பெரும் மரியாதைக்கு பங்கம் விளைவிக்கக் கூடுமோ என்கிற கவலை நமக்குள் எழுகிறது.

    எனினும் திரு. ஏ.பி.ஜே. அப்துல்கலாம் குடியரசுத் தலைவராய் பொறுப்பேற்பது.. நிச்சயம் நடக்கும்!

    எல்லோரும் அமரநிலை ஏய்துகிற நன்னாளை
    இந்தியா உலகிற்கு அளிக்கும்! ஆம்

    Continue Reading »

    அடையாள அட்டை

    உதிர்த்து விடும்
    சிறகுகள்தான்
    இருப்பினும்
    வண்ணத்துப்பூச்சி
    ஒய்யாரமாய்ப் பறக்கிறது!

    Continue Reading »

    சிரிப்போம் சிந்திப்போம்

    மனிதர்களில் சிலபேர்… எதைச் சொன்னாலும், செய்தாலும் சிரிப்பாகத்தான் இருக்கும் நமக்கு

    எனதக்குத் தெரிந்த ஒரு கிராமத்துப் பெரியவர் 70 வயது. இன்னும்கூட, கேலிதான், கிண்டல் பாட்டுத்தான்.

    Continue Reading »

    சத்குரு பதில்கள்

    “விட்டு விடுதலையாவோம்” நிகழ்ச்சியில் வாசகர்களின் கேள்விகளுக்கு சத்குரு வாசுதேவ் அவர்கள் தந்த விடைகளின் தொடர்ச்சி)

    ஒரு மனிதனின் வெற்றிக்கும், தோல்விக்கும், ஜாதகம் காரணமாக அமையுமா? எண் கணிதப்படி பெயர்களை மாற்றி வைத்துக்கொள்வது பலன் தருமா?

    Continue Reading »

    மனித சக்தி மகத்தான சக்தி

    மனிதன் மேல் நிலைக்குச் செல்ல முற்படும்போது, அவன் உயர்வுக்கு பெரிய உறுதுணையாக இருக்கிற கருவி உடல். உடலைப் பேணிப் பாதுகாத்தல் என்பது, ஆன்ம வளர்ச்சிகான அடிப்படைகளில் ஒன்று.

    யோகம், தியானம் போன்றவை பற்றி நாம் விரிவாகப் பேசத் தொடங்கும் முன்னால், அதற்கு இசைவான வகையில் நம் உடல் நலனை வகைப்படுத்திக் கொள்வது எப்படி? என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

    Continue Reading »