வெற்றி உங்கள் கையில்
என்னால் முடியுமா?
மற்றவர்களை நல்லவர்களாக்க முயற்சி செய்வர்கள்,
முதலில் தங்களை நல்லவர்களாக மாற்றிக் கொள்ள
முயற்சிகளை மேற்கொள்வது நல்லது.
வாழ்க்கையில் பெரிய வெற்றி என்பது ஒரேநாளில் ஒருவருக்குக் கிடைப்பதில்லை. ஒருவர் செய்கின்ற சின்னஞ்சிறிய செயல்களில் கிடைக்கும் வெற்றிதான் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தருகிறது.
“இதுவெல்லாம் என் சக்திக்கு மிகச்சிறியது” என்று எண்ணி எந்தவொரு நல்ல செயலையும் ஒதுக்கிவிட முடியாது. மிக கவனமாக நல்ல செயல்களைத் தேர்தெடுத்து, நாள்தோறும் செய்வதன் மூலம்தான் வெற்றி ஒருவருக்கு உறுதியாக் கிடைக்கிறது.
ஒரு செய்கின்றசெயல் மற்றவருக்கு வீணான செயலாகத் தோன்றலாம். ஆனால், அந்த செயல் மற்றவர்களின் உயிரைக் காக்கவும், அவர்களின் வாழ்க்கைக்கு மனமகிழ்ச்சியும் கிடைக்கிறது. இதனால், “மற்றவர்கள் என்ன நினைப்பார்கள்?” என்று நினைத்து நல்ல செயலில் ஈடுபடாமல் ஒதுங்கி நிற்க இயலாது அல்லவா.
இந்த நாட்டில் லஞ்சம் அதிகமாகி விட்டது. ஊழல் பெருகிவிட்டது. அநியாயம் அதிகமாகிவிட்டது. ஏமாற்று வித்தைகள் ஏராளமாகி விட்டது என்றசிலரின் கூக்குரல் நமக்குக் கேட்கத்தான் செய்கிறது. அது சரியில்லை. இது சரியில்லை என்று சொல்லி ஒவ்வொன்றையும் தரக்குறைவாக விமர்சித்தும் நேரம் கழிக்கிறார்கள்.
புதிதாக யாராவது பிறந்து வந்தால்தான் இந்த நாட்டை திருத்த முடியும் என்று தனக்குத்தானே சமாதானம் செய்துகொள்கிறார்கள். நான் மட்டும் நல்லவனாக இருந்தால் போதுமா? இந்த நாட்டு மக்கள் அனைவரும் எப்போது திருந்துவார்கள் என்று சொல்லியும் தேனைப்படுகிறார்கள்.
மற்றவர்களை நல்லவர்களாக்க முயற்சி செய்வர்கள், முதலில் தங்களை நல்லவர்களாக மாற்றிக் கொள்ள முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. வாழ்க்கைக்கு உதவும் நல்ல செயல்களை அடையாளம் கண்டு, அதனை நடைமுறைப்படுத்த இளமைக் காலம் முதல் ஒவ்வொருவரும் முயற்சிகளை மேற்கொள்வது சிறந்ததாகும்.
அது ஒரு காலை நேரம்.
கடற்கரையின் மணற்பரப்பில் ஒருவர் நடந்து கொண்டிருந்தார். கடலின் அலைகள் வேகமாக வந்து அவரது கால்களை நனைத்தன. அதிகாலை வேளையில் அந்த அலைகள் அவருக்குள் மேலும் மகிழ்வை அள்ளித் தந்தன. அப்போது அந்த அலைகளோடு கரை ஒதுங்கிய சில நட்சத்திர மீன்கள் (Star Fish) அவர் கண்களில் பட்டன. கூர்ந்து கவனித்தார்.
கடல் அலைகள் வேகமாக கரைக்கு வரும்போது, அந்த அலைகளோடு சேர்ந்து சில நட்சத்திர மீன்கள் கடற்கறையில் ஒதுங்கின. கடலை நோக்கி அலை உள்செல்லும் போது ஒரு சில மீன்கள் கடலுக்குள் அலை இழுத்துச்சென்றன. ஆனால் நட்சத்திர மீன்களில் சில கடலுக்குள் செல்ல இயலாமல் கரையில் ஒதுங்கி சூரிய ஒளியில் தவித்தன. உயிருக்குப் போராடிய நட்சத்திர மீன்களைப் பர்ôத்த அவர், அந்த மீன்களில் சிலவற்றைஎடுத்து கடலுக்குள் விட்டார்.
மீண்டும் அலைகள் கரைக்கு வரும்போதெல்லாம், சில நட்சத்திர மீன்கள் கரையில் ஒதுங்கத் தொடங்கின. பொறுமையாக அந்த மீன்களை மீண்டும் எடுத்து கடல் நீரில் விட்டார் அந்த மனிதர். இவரின் விநோத செயலை அவருக்குப் பின்னால் வந்துகொண்டிருந்த ஒருவர் பார்த்து ஆச்சரியப்பட்டார். “நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? கடலில் இருந்து நூற்றுக்கணக்கான நட்சத்திர மீன்கள் பெரிய அலையால் கரையில் ஒதுங்குகின்றன. அந்த நட்சத்திர மீன்கள் அனைத்திற்கும் உங்களால் உதவ முடியுமா? ஒரு சில நட்சத்திர மீன்களை மட்டும் காப்பாற்றுவதால் உங்களுக்கு என்ன இலாபம் என்று கேட்டார் அவரைக் கவனித்த வழிபோக்கன்.
இந்த இதழை மேலும்
0 comments Posted in Articles