முயன்றேன் வென்றேன்
Dr.S அருண் M.D.S
அருண் டெண்டல் கேர்
கோவை
திருப்பூருக்கு அருகில் உடுமலைப்பேட்டையில் பிறந்தேன். அப்பா திரு.சோமசுந்தரம் எங்களுக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் பார்க்கிறார். அம்மா திருமதி. லலிதா இல்லத்தரசி.
எனது பள்ளி படிப்பு முழுவதும் உடுமலைப்பேட்டை மற்றும் அதன் சுற்றுப் புறத்திலேயே அமைந்தது. சின்ன வயதிலிருந்தே என்னை ஒரு மருத்துராக்கிப் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய பெற்றோரின் கனவாகவே இருந்தது. இதனால் படிப்பின் மீது ஆர்வமும், ஈடுபாடும் ஏற்பட்டது. பெற்றோர்களுக்கு ஒவ்வொரு பிள்ளைகளும் செய்யும் கடமைகள் என்னவென்றால் அவர்களின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான். அவ்வாறு ஒரே லட்சியத்தோடு படித்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். அதுபோலதான் எனது மதிப்பெண்ணும் அமைந்தது.
எழுதிய அனைத்து தேர்வுகளிலும் முதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றேன். அதன்மூலம் மருத்துவத்துறையைத் தேர்தெடுத்தேன். எம்..ஜி.ஆர் அரசு பல் மருத்துவக் கல்லூரியில் முதுகலைப்படிப்பை முடித்தேன். அதன்பிறகு ஒரு கிளினிக் ஆரம்பித்து இப்பிரச்சனையால் வருபவர்களை முறையாக சிகிச்சையை செய்து அவர்களை குணப்படுத்த வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாக கொண்டிருந்தேன்.
பல்லும் அதன் அவசியமும்:
- மனிதன் உயிர் வாழ உணவு உட்கொள்ளுதல் மிகவும் அவசியம். உட்கொள்ளுவதற்கு பல்லும் வாயும் அதிகளவில் துணைப் புரிகிறது. இதை முறையாக கவனிக்கவில்லை என்றால் பல்லில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாக வேண்டியிருக்கும்.
- வலி வந்தவர்களுக்கு தான் தெரியும் அந்த வலி சார்ந்த வேதனை, இதனால் சுகாதாரத்தில் மிகவும் அக்கறை அவசியம்.
- அதிலும் குறிப்பாக வாய் மற்றும் பல்லிற்கு கூடுதல் அக்கறை தேவைப்படுகிறது.
கிளினிக் சிறப்பம்சங்கள் :
- இங்கு வரும் ஒவ்வொரு நோயாளிகளும் முழு திருப்திவுடன் செல்ல வேண்டும் அதுதான் இந்தக் கிளினிக்கின் முதன்மையான நோக்கம்.
- இங்கு பயன்படுத்தப்படும் அனைத்து சிகிச்சை இயந்திரங்களும் விலையுயர்ந்தாகவும், நோயாளிகளுக்கு எவ்வித பின்விளைவும் ஏற்படாதவாறுதான் சிகிச்சை செய்யப்படுகிறது.
- வாய் சார்ந்த பிரச்சனைகள் என்று வந்துவிட்டால் இங்கு இதற்கு சிகிச்சை அளிக்க முடியாது. வேறு இடத்திற்கு கொண்டு சொல்லுங்கள் என்று ஒருவரையும் நாங்கள் அனுபவதில்லை. அந்தளவிற்கு எல்லா சிகிச்சைகளும் இங்கேயே செய்யப்படுகிறது.
- அது மட்டுமல்லாமல் என்னுடைய தனிச்சிறப்பான பணி பல்லே இல்லாத இடத்தில் புதிதாக பல்லை கட்டுவதே ஆகும்.
- எலும்புகளில் சிறிய அளவு (Serew) திருகு வைத்து பல் கட்டுவது, அதன் பிறகு அருகிலுள்ள பல்லைக் கொண்டு இல்லாத இடத்தில் பல்லைக் கட்டுவது போன்ற சிகிச்சைகள் செய்யப்படுகிறது.
பல்லினால் வரும் இதரப் பிரச்சனைகள் :
மனித உடலில் ஒவ்வொரு உறுப்பும் ஒவ்வொரு உறுப்புடன் நெருக்கிய தொடர்புடையதாகவே இருக்கிறது. அந்த வகையில் பல்லில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதன் விளைவாக பல பிரச்சனைகளுக்கு அடிகோடிடும்.
- இதயத்திற்கு அதிகளவு பாதிப்பு ஏற்படுத்துதல்.
- கால், கைகள் இடையே உள்ள மூட்டுகளில் தளர்வு ஏற்படுத்துதல்.
- வாய் புற்றுநோய் பிரச்சனை ஏற்படுதல்.
பல் பிரச்சனைக்கு பல் எடுத்தல்தான் தீர்வா?
பல்லை நான்கு முறைகளாகப் பிரிக்கலாம் அதில் ஒருவகை வெண்மை நிற பற்கள் மற்றும் எவ்வித பிரச்சனையும் இல்லாத பற்கள்.
பல் கூச்சம், பல்தேய்மானம், பல் துலக்கும் பொழுது ஈறுகளில் இரத்தம் வருதல் போன்ற எவ்வித பிரச்சனையும் இல்லையென்றால் அவர்களின் பல் திடமான இருக்கிறது. இவர்கள் எதிர்காலத்தில் பிரச்சனையும் வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
0 comments Posted in Articles