சனி வரமா? சாபமா?
பன்னீர் செல்வம் Jc.S.M on Dec 2015
ஏழரை நாட்டுச் சனி என்பது இன்றல்ல, என்றும் பலரது புலம்பலாகவே உள்ளது. இது என்ன? இதனால் நமக்கு வரும் நன்மை, தீமை என்ன என்பதைத் தெரிந்து கொள்வோம்.
வானியல் (ASTRONOMY) வானியல் என்பது வானத்தைப் பற்றிய தகவல்கள் ஆகும். இதை வானசாஸ்திரம் என்றும் சொல்கிறோம். அந்தரத்தில் மிதந்து கொண்டு, தன்னைத் தானே சுற்றிக் கொண்டுள்ள சூரியன், சில கோள்களையும் (PLANTS) சேர்த்துப் பிடித்துக் கொண்டுள்ளது.
தன்னோடு அந்த கிரகங்களையும் இழுத்துக் கொண்டே சுற்றுகிறது. சூரியன் 25 நாட்களுக்கு ஒருமுறை தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது. இதுபோல் பல சூரியன்கள் வானத்தில் உள்ளன. அவைகள் வெகு தூரத்தில் இருப்பதால், நமக்கு நட்சத்திரங்களாகக் காட்சியளிக்கின்றன.
சூரியனை நீள்வட்டப்பாதையில் முறையே புதன் (மெர்க்குரி), சுக்கிரன் (வீனஸ்), பூமி (எர்த்) அங்காரகன் (செவ்வாய் or மார்ஸ்), குரு (ஜூபிடர்), சனி ஆகியன சுற்றி வருகின்றன.
இவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட கால அவகாசத்தில் தன்னைத் தானே சுற்றிக் கொள்வதுடன், சூரியனையும் சுற்றி வருகின்றன.
இவற்றின் சுழற்சி, இதனால் உண்டாகும் சூரிய உதயம், அஸ்தமனம், சூரிய-சந்திர கிரஹணங்கள் முதலியவைகள் சிறிதும் பிசகாமல் சரியாக நடைபெறுவதைக் கணக்கிட்டுக் கூறுவதுதான் வானசாஸ்திரம்.
பூமியும் சனியும் : பூமியானது சூரியனிலிருந்து சுமார் ஒன்பது கோடி மைல் தொலைவில் நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. தன்னைத் தானே 24 மணி நேரத்துக்கு ஒருமுறை சுற்றிக் கொள்கிறது. சூரியனை மையமாக வைத்துச் சுழல்வதால் 12 மணி நேரம் சூரியனைக் காண்கிறோம். இதுதான் பகல். அடுத்த 12 மணி நேரம் நாம் இருக்கும் பூமிப்பகுதியின் பின்புறம் சூரியன் இருப்பதால் இருட்டில் இருக்கிறோம்; இதுதான் இரவு.
இதே பூமி ஒன்றுக்கு 15 1/2 இலட்சம் மைல்கள் சூரியனைச் சுற்றி ஓடி ஓடி, ஒருமுறை முழுதாகச் சுற்றி வர 365 நாட்களை எடுத்துக் கொள்கிறது. இதை வருடம் என்று கூறுகிறோம்.
பூமியிலிருந்து சனி சுமார் 79 கோடி மைல் தொலைவில் உள்ளது. சூரியனிலிருந்து இத்தூரம் சுமார் 88 கோடி மைல்களாகும். சனி சூரியனை ஒருமுறை சுற்றிவர எடுத்துக் கொள்ளும் காலம் 30 ஆண்டுகளாகும்.
0 comments Posted in Articles