– 2015 – July | தன்னம்பிக்கை

Home » 2015 » July

 
  • Categories


  • Archives


    Follow us on

    கர்ம வீரரின் தன்னம்பிக்கைத்தடங்கள்

    தஞ்சாவூர் தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மற்றும் தஞ்சை கீழவாசல் சோலை அம்மாள் டிரேடர்ஸ் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 19.7.2015; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10 மணி முதல் 1 மணி வரை

    இடம் : பெசன்ட் அரங்கம் AC ஹால், தஞ்சாவூர்

    தலைப்பு: கர்ம வீரரின் தன்னம்பிக்கைத்தடங்கள்

    சிறப்புப் பயிற்சியாளர்: பேராசிரியர் திரு கு. சின்னப்பன்

    கல்வியல் துறை, தமிழ்பல்கலைக்கழகம், தஞ்சை

    தொடர்புக்கு:

    திரு. அப்துல்சலாம் (எ) பள்ளியூர் பாபா  93453 53113

    திரு. டோமினிக் சேகர்  94870 29494

    முதலில் வருகை தரும் கல்லூரி மாணவர்கள் இந்த தலைப்பில் சிறப்புரையாற்றலாம்… பரிசு உண்டு

    மகிழ்ச்சி

    சேலம் தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் JCI சேலம் மெட்ரோ இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 19.7.2015; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.30 மணி

    இடம் : லட்சுமி அரங்கு, சாமுண்டி காம்ப்ளெக்ஸ்

    4 ரோடு, சேலம்-7.

    தலைப்பு: மகிழ்ச்சி

    சிறப்புப் பயிற்சியாளர்: Jc. H.G.F ராஜேந்திர தான்ஜி

    JCI மண்டல பயிற்சியாளர் & சுயமுன்னேற்றப் பயிற்சியாளர்,

    சேலம்

    போன்: 98427 48208

    தொடர்புக்கு:

    Jc. G. தாமோதரன், M.Com., M.Phil. – 93601 22377

    தண்ணீர்! தண்ணீர்!

    கும்பகோணம் தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் சோழ மண்டல மாணவர் முற்றம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 26.7.2015; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10 மணி முதல் 1 மணிவரை

    இடம் : இதர தொடர்புக்கு

    தலைப்பு: தண்ணீர்! தண்ணீர்!

    (நீர் பராமரிப்பு, மழைநீர் சேகரிப்போம்)

    சிறப்புப் பயிற்சியாளர்: பேராசிரியர் முனைவர் வீரசிகாமணி M.A., BEd.,M.Phil.,

    தொடர்புக்கு:

    திரு. பள்ளியூர் பாபா  95972 85160

    திரு. தர்மர்  97880 41089

    உங்களின் கனிவான கவனத்திற்கு

    பள்ளிபாளையம் கிளை (ஈரோடு), தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 10.7.2015; வெள்ளிக்கிழமை

    நேரம் : மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை

    இடம் : M.G.V. மெட்ரிக்பள்ளி (G.V. மஹால் அருகில்)

    திருச்செங்கோடு ரோடு, பள்ளிபாளையம்

    தலைப்பு: உங்களின் கனிவான கவனத்திற்கு

    சிறப்புப் பயிற்சியாளர்: Jc. ரேவதி வெங்கடேஷ்வரா B.A., .Lit.,

    ஈரோடு,

    போன்: 98428 02575

    தொடர்புக்கு: தலைவர் – திரு. D.S. ஜெயசீலன்: 94432 44850

    PRO – திரு. M. ராதா கிருஷ்ணன்: 99657 95856

    ஒருங்கிணைப்பாளர் – திரு. சீனிவாசன்: 98435 45986

    திருப்பூர் தன்னம்பிக்கை வாசகர்வட்டம், திருப்பூர் அரிமா சங்கம் மற்றும் செல்வக்குமார் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், திருப்பூர் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    திருப்பூர் தன்னம்பிக்கை வாசகர்வட்டம், திருப்பூர் அரிமா சங்கம் மற்றும் செல்வக்குமார் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்,  திருப்பூர் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள், நேரம், இடம், பயிற்சியாளர், தலைப்பு விபரம் அறிய தொடர்பு கொள்ளவும்:

    திரு. A. மகாதேவன் 94420 04254

    திரு. S. வெங்கடேஸ்வரன் 94423 74220

    திரு. S. மாரப்பன் 95242 73667

    யோகா உடலுக்கு நல்லதா…? உள்ளத்திற்கு நல்லதா…?

    சென்னை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் இணைந்து வழங்கும் தன்னம்பிக்கை சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள்  : 12.7.2015; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : மாலை 6.00 மணி முதல் 8.30 மணி வரை

    இடம் : இடத்திற்கு தொடர்பு கொள்ளவும்

    தலைப்பு: யோகா உடலுக்கு நல்லதா? உள்ளத்திற்கு நல்லதா?

    சிறப்புப் பயிற்சியாளர்: டாக்டர் இளங்கோவன், Ph.D.,

    Head of the Department Yoga,Tamilnadu Physical and Sports University, Chennai.

    தொடர்புக்கு: தலைவர் R. பாலன் – 94442 37917

    செயலாளர்  L. கருணாகரன் – 98419 71107

    PRO – யமுனா கிருஷ்ணன் – 94440 29827

    இந்தியா – நேரங்கள்

    ஈரோடு தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 26.7.2015; ஞாயிற்றுக்கிழமை

    நேரம்: மாலை 5.30 மணி முதல் 8.00 மணி வரை,

    இடம்: மாயாபஜார் A/C ஹால்,

    Opp. E.B. அலுவலகம் எதிரில், E.V.N. ரோடு, ஈரோடு.

    தலைப்பு: இந்தியா – நேரங்கள்

    சிறப்புப் பயிற்சியாளர்: திரு KS. சண்முகசுந்தரம்,

    JCI பயிற்சியாளர், ஹெல்த் ஹேர், ஈரோடு.

    கைபேசி: 94879 27963.

    தொடர்புக்கு:

    Prof. P. பூபதி – 99446 99196

    Jc. S. சையது ஜைனுலாபுதீன் – 99942 29080

    கைவிளக்கே கலங்கரை விளக்கு

    திருச்செங்கோடு தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் JCI திருச்செங்கோடு டெம்பிள் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 19.7.2015; ஞாயிற்றுக்கிழமை

    நேரம்     : மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை,

    இடம் : ஹோட்டல் சித்தார்த்தா கான்பிரன்ஸ் ஹால்

    ஜோதி தியேட்டர் அருகில்,

    திருச்செங்கோடு.

    தலைப்பு: கைவிளக்கே கலங்கரை விளக்கு

    சிறப்புப் பயிற்சியாளர்: கவிஞர் மார்ஷல் முருகன்

    பட்டிமன்ற பேச்சாளர், தன்னம்பிக்கை திறவுகோல் மதுரை,

    போன்: 93441 13378.

    தொடர்புக்கு:

    தலைவர்: JCI. Sen. G. கோவிந்தசாமி  98427 96868

    செயலாளர்: Jc. A. திருநாவுக்கரசு – 99429 66554

    PRO  Jc. HGF. K. பூபதி – 98651 94904

    இருக்குது ஆனா இல்லை!

    நாள் : 19.7.2015; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.00 மணி

    இடம் : கன்னிகா காம்பளக்ஸ் மீட்டிங் ஹால் (நியூ வாசவி & கோ)

    ராஜவீதி சார்பதிவாளர் அலுவலகம் எதிரில்,

    தேர்முட்டி, கோவை  1.

    தலைப்பு: “இருக்குது ஆனா இல்லைங!

    சிறப்புப் பயிற்சியாளர் : S. பாரதி B.Sc., M.A.M.A.,

    மனவளக்கலைப் பேராசிரியர், ஈரோடு

    போன்: 9443304845

    தொடர்புக்கு: தலைவர் திரு. A.G. மாரிமுத்துராஜ் 98422 59335

    செயலாளர்  திரு. E. விஜயகுமார்  94426 10230

    பொருளாளர் திரு. AD. A.  ஆனந்தன்  74026 10108

    PRO விக்டரி விஸ்வநாதன்  97877 44533

    என் பள்ளி

    மோகன்ராஜ்
    அக்குபஞ்சர் கிளினிக்
    திருப்பூர்

    ஒவ்வொருவரின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் மிகப்பெரிய பொறுப்பு பள்ளி கல்விக்கு தான் இருக்கிறது. பள்ளியில் கற்றபாடம், கற்பிக்கப்பட்ட ஆசிரியர்கள், கற்றுக்கொள்ளப்பட்ட ஒழுக்கநெறிகள் ஒவ்வொருவரையும் உன்னதமாய் மாற்றும் என்பதில் சற்றும் ஐயமில்லை. இப்படி கற்றவர்கள் தான் வாழ்க்கையில் மேன்மை அடைகிறார்கள்.

    நான் பிறந்தது வளர்ந்தது எல்லாமே சேலம் மாவட்டத்தில் தான். அப்பா நாகராஜன் அரசு ஊழியர். அம்மா நாகரத்தினம். அப்பா மின்வாரியத் துறையில் இருந்ததால் அடிக்கடி பணிமாற்றம் ஏற்படும். பணிமாற்றம் காரணமாக சேலத்திலிருந்து திருச்செங்கோடு செல்ல வேண்டியதாக இருந்தது. இதனால் என் ஆரம்பக்கல்வி சொந்த ஊரில் அமையாமல் போய்விட்டது.

    திருச்செங்கோட்டில் உள்ள ஔவைக்கல்வி நிலையம் என்றபள்ளியில் சேர்ந்தேன். சில காரணங்களால் இப்பள்ளியிலிருந்து மாறும் சூழல் ஏற்பட்டு அங்கேயே MGV மெட்ரிக் பள்ளியில் 6ம் வகுப்பு சேர்ந்தேன். மீண்டும் அப்பாவிற்கு சேலத்திலேயே பணி, சேலம் சென்றோம். அடுத்து ஏழாம் வகுப்பை ‘கோகுல்நாத இந்து மகாஜன’ என்றபள்ளியில் படித்தேன். பள்ளி அடிக்கடி மாறியதால் பாடத்தில் அவ்வளவாக என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. படிப்பில் மிகவும் குறைவாகவே கவனம் செலுத்த முடிந்தது. அப்பொழுது ஒன்பதாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்துவிட்டேன்ன. இந்தத் தோல்வி என்னை பெரிதும் பாதித்தது. மீண்டும் ஒன்பதாம் வகுப்பையே படிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. என் கஷ்டத்தை என் பெற்றோர்கள் புரிந்துகொண்டு எனக்கு நல்லதொரு ஊக்கம் கொடுத்தார்கள். இந்த ஊக்கம் தான் என்னை வெற்றி பெறவேண்டும் என்று தூண்டியது. அதன்பிறகு ஒன்பதாம் வகுப்பை முடித்து பத்தாம் வகுப்பை அதே பள்ளியில் படித்தேன்.

    அப்பொழுது அந்தப் பள்ளியில் எனக்கு தமிழாசிரியராய் இருந்தவர் வெ. இறையன்பு ஐ.ஏ.எஸ். அவர்களின் தாயார். இவரிடம் கற்றபாடம் என்னையும், என் வாழ்வையும் மாற்றியது என்று வெளிப்படையாகவே சொல்வேன். அந்த அளவிற்கு பாடத்தை எளிமையாக நடத்துவார்.

    பாடத்தையும் பாடம் நடத்தும் ஆசிரியர்களையும் பிடித்துவிட்டாலே நிச்சயம் தேர்வாகிவிடலாம் என்று அப்பொழுது எனக்கு தெரியவில்லை. வகுப்பிற்கு வந்த அனைத்து ஆசிரியர்களும், எங்களின் தேர்ச்சியிலும், ஒழுக்கத்தில் வெகு ஈடுபாட்டோடு நடந்து கொண்டார்கள். இதனால் பத்தாம் வகுப்பு தேர்வை முறையாக கையாண்டு தேர்வு பெற்றேன்.

    மதிப்பெண் அடிப்படையில் தான் ஒவ்வொருவரும் அடுத்த கட்டத்திற்கு செல்வார்கள் என்பதை நான் தெரிந்து கொண்டேன். பத்தாம் வகுப்பை முடித்த பின்னர் டிப்ளமோ படிப்பைப் படிக்கலாம் என்று நினைத்து சேலம் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்தேன். பாடத்தை ஆசிரியர்கள் நன்றாக நடத்தினாலும் படிப்பின்மீது ஆர்வம் வரவில்லை. தொழில் சம்பந்தமான வேலைகளைச் செய்யும் அளவிற்கு படிப்பின் மீது அவ்வித ஈடுபாடு இல்லை.

    இதனால் பல சிரமங்களுக்கு மத்தியில் டிப்ளமோவை முடித்து திருப்பூருக்கு வேலைக்கு சென்றேன். நிறைய நிறுவனங்கள் சென்றேன். அதன்பிறகு ஒரு நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தேன்.

    வேலை சேர்ந்த சில மாதங்களில் என் உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. இந்நேரத்தில் பல போராட்டங்களைச் சந்திக்க நேர்ந்தது. எத்தனையோ மாத்திரை மருந்துகள் என் உடல்நிலை தேறிய பாடில்லை. இதனால் இம்மருந்து முறைகளை தூரம் தள்ளிவிட்டு இயற்கை மருந்துகளைத் தேடினேன்.

    அப்பொழுது தான் அக்குபஞ்சர் என்ற மருத்துவ முறையைப் பற்றி தெரிந்து கொண்டேன். இம்மருந்து என்னை மிகவிரைவில் குணப்படுத்தியது. குணம் அடைந்தவுடன் இம்மருத்துவமுறையை பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் வந்தது. இதனால் இந்த அக்குபஞ்சர் சார்ந்த பாடங்களைப் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் என்னுள் தோன்றியது. ஒரு செயலைப் பற்றி புரிதல் இருந்தால் அதை நாம் முழுமையாக கையாள முடியும் என்பதை நம்புபவன் நான்.

    படிப்பு என்றாலே வெறுத்து ஒதுக்கிய நான் எனக்கு ஒரு பிரச்சனை என்றவுடன் என்னை குணப்படுத்திய மருத்துவ முறைகளைச் சரியான முறையில் தேர்ந்தெடுத்து படித்ததால் இன்று ஒரு கிளினிக் வைத்து அதை சரியான முறையில் நடத்தி வருகிறேன்.

    எத்தனை முறை தோல்வி அடைந்தாலும், துவண்டுவிடாமல் துணிந்து எழுந்து வா… கல்வியையும் வெல்வாய்; வாழ்வையும் வெல்வாய் என்று தனது வாழ்க்கை அனுபவத்தை பகிர்ந்த திரு. மோகன்ராஜ் அவர்களை வாழ்த்துகிறோம்.