காலத்தின் காதலர்கள்
பலருக்கு இந்த தலைப்பைப் பார்த்ததும் சற்றேவியப்பாக இருக்கும். இருந்தாலும் கொஞ்சம் ஆராய்ந்து நோக்குங்கள் அதிலுள்ள அர்த்தத்தைப் புரிந்து கொள்ளலாம்.
வாழ்க்கையில் ஒரு பகுதி வரை பெற்றோர்ள் நமக்குத் துணையாக வருவார்கள். பின்பு இன்னொரு நிலையில் அந்தப் பொறுப்பை மனைவி வகிப்பார். அதே போலத்தான் அவரவர் வாழ்க்கையிலும் ஒரு கட்டம் வரை தோல்வியே துரத்திக் கொண்டு வரும். ஒரு நிலையில் அதை எதிர்த்து நிமிர்ந்து நன்னடை போட்டால், வழிதெயறியாமல் வரும் தோல்வியானது, வழியறிந்து செல்லும். வெற்றியை நமக்கு காட்டிவிடும். ஆகவேதான், என்னைப்பொறுத்தவரையில் காலத்தின் காதலர்கள் என்றால் அது வெற்றியும், தோல்வியும்தான்.
ஒருமுறைபிறக்கும் தோல்வியானது, மறுபிறவியில் வெற்றியாகத்தான் அவதரிக்கும். ஆனால், அந்த மறுபிறவியை அடைவது என்பது எளிதான வஷயமல்ல. அதற்கு உண்டான பங்களிப்பை அளித்தால் மட்டுமே நாம் மறுபிறவிக்குத் தகுந்தவர்களாக விளங்க முடியும்.
இவ்விடத்தில் ஒரு உதாரணத்தைச் சொல்கிறேன். இன்று பலரும் பயன்படுத்தக்கூடிய கார்களில் ஹோண்டா காரும் முக்கியமான இடத்தை பிடித்துள்ளது. அதனுடைய வளர்ச்சியைக் கண்டு பலரும் வியந்து போயிருக்கிறார்கள். ஏன், படித்தும் பார்த்தும் நானே அதிர்ந்து விட்டேன்.
ஹோண்டா (Honda) என்பவர் முதலில் காரைப் பழுது பார்க்கும் ஒரு நபராக மோட்டர் துறையில் உள்ளே நுழைகிறார். பின்பு, தனது கடின உழைப்பால் மேலே வளர்ந்து ஒரு நிலையை அடைந்தது. வங்கியின் மூலம் கடன் வாங்கி ஒரு தொழிற்சாலையை நிறுவுகிறார். ஆனால், விதி விளையாட ஆரம்பிக்கிறது. ஜப்பான் நிலநடுக்கத்தால் அதிகம் பாதிப்படையும் நாடு என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அந்த நிலைநடுக்கமும், சுனாமியும் இரவருடைய தொழிற்சாலையைக் குறிவைத்தது. பின்பு, அவருடைய கனவான தொழிற்சாலையும், நீரோடு கலந்த மண்போல் வெள்ளத்தோடு கலந்து ஒன்றாக மாறியது.
இது அவருடைய வாழ்வில் ஏற்பட்ட முதலாவது அடி, இப்பொழுது அவரின் முன், இரண்டு சாவல்கள் ஒன்று தொழிற்சாலையை மீண்டும் உருவாக்க வேண்டும். அதற்கு தகுந்தாற்போல் வங்கியில், பாக்கிக்கடனையும் செலுத்த வேண்டும். என்ன செய்வது, என்றே தெரியாமல் இருந்த அவரை, முயற்சி என்னும் சக்தி மீண்டும், மீண்டும் ஒன்றையே அவரிடம் ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தது. “மீண்டும் ஒருமுறைமுயற்சி செய்”
எதற்கும் கலங்கவில்லை, துணிந்தார். வங்கியில் மீண்டும் கடன் வாங்கி தொழிற்சாலையை உருவாக்கினார். ஆனால், போதுமான அளவு விளைச்சல் இல்லாத காரணத்தால், வருமானம் குறைந்தது. “மீண்டும் ஒருமுறை முயற்சி செய்” என்றொரு வாசகம் மீண்டும் ஒருமுறைஒலித்தது. தோல்வியின் இரண்டாவது அடியையும் கடக்க முயற்சித்தார். அதாவது, புதுப்புது தொழில்நுட்பங்களை வடிவமைத்தார். ஆனால், கார்களின் வரத்து ஹோண்டாவில் அதிகரிக்கத் தொடங்கியது. இப்பொழுது, தோல்வியின் எல்லையை கடந்து, வெற்றியின் பகுதியை அடைந்ததும், இன்னொரு வாசகம் ஒலித்தது. “மீண்டும் ஒருமுறை முயற்சி செய்” என்று. இவற்றில் கவனிக்க வேண்டிய என்னவென்றால், தோல்வியில் இருக்கும் ஒருவரிடம், வெற்றியை அடையாளப்படுத்தி அறிமுகப்படுத்த வேண்டும். அதுவே, ஒரு வெற்றியில் இருப்பவரிடம், வெற்றியைக் கொண்டுடம், இன்னொரு வெற்றியை அடையாளப்படுத்தி அறிமுகப்படுத்த வேண்டும். இதைத்தான் ஹோண்டாவின் வாழ்க்கை அவருக்கு கற்றுக்கொடுத்த பாடம்.
எனவே, பாடத்தை எப்படி வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். குரு இருந்தும், அர்ஜூனனால் காண்டீபம் சரியாக எய்த முடியவில்லை. ஆனால், குருவின் தோற்றத்தை மட்டும் தனது மனதில் அடையாளப்படுத்திய ஏகலைவனால் காண்டீபம் சரியாக எய்த முடிந்தது. காரணம் ஏகலைவனிடம் இருந்த குருபக்தியும், அஞ்சா நெஞ்சமும்தான். தோல்வியை தாங்கும் உறுதிநிலையை பெற்று இருப்பவர்கள் என்றால், அவர்கள் 100ல் 10பேராகத்தான் இருக்க முடியும்.
மீதமுள்ள 90-பேரின் நிலைமை, அதாவது தோல்வியை தாங்கிக்கொள்ளாத அல்லது அதிகரித்துக் கொள்ளாத தன்மை. சமூகம் நம்மை மதிக்காது என்றொரு எண்ணம். வாழ்க்கையே வெறுப்பாக்கி கொள்ளுதல், இறுதியில் யாரோ, எவரோ விட்ட வழி என்று வழியறியாமல் திசைமாறி போனவர்கள், ஆயிரம், ஆயிரம் ( இதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் பெரியவர்களை விட இளமையின் நாயகர்கள்தான் அதிகம்)
இதுபற்றி மற்றுமொரு கோஷ்டி உள்ளது. அதுதான், காதலில் தோல்வி என்று தாடி வளர்க்கும் கோஷ்டி. இப்படிப்பட்டவர்களிடம் ஒன்றைகூறிக்கொள்கிறேன். காதலர்களே, காதலை விட காதல் உணர்ச்சி மிகவும் உணர்வுப்பூர்வமான ஒன்றாகும். எனவே, அந்த ஒன்றைதாடி வளர்த்து, மது அருந்தி வெளிப்படுத்த வேண்டும் என்றொரு எண்ணம் கொண்டிருந்தால், அதை கானல் நீராய் எண்ணி, உங்களுக்காகவே காத்துக்கொண்டிருக்கும் வாழ்க்கை புனித நீரை சற்றேதெளித்த பாருங்கள்.
பின்பு, அவற்றில் என்னாளும் வளரும் நம்பிக்கைக்கு இடமளித்து, வாழ்வு கொடுத்துப்பாருங்களேன். நீங்களே உங்களை அறியாத ஒரு புது மனிதனாய் இந்த பூமியில் அவதரித்தாய் எண்ணிக்கொள்வீர்கள். தோல்வியை யாரும் பொறுத்துப் பார்க்காதீர்கள். வாழ்க்கையும், வெறுப்பாகி விடும். ரசித்துப்பாருங்கள் அப்பொழுது நீங்கள் உணர்வீர்கள் தோல்வியிலும் ஒரு ரசனை உள்ளது. ஏனென்றால் நான் அதை உணர்ந்தேன்.
இந்த இடத்தில் அவர் எழுதியதை கொடுத்தால்தான் பொருத்தமாக இருக்கும் 1957 முதல் 1961 வரை அவர், தமிழ் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும் போது அரங்கேறிய ஒரு சம்பவம். படித்த 4 ஆண்டுகளிலும், அவர் பெரும்பாலும் முதல் அல்லது இரண்டாவது மதிப்பெண் எடுத்து வந்தார். பின்பு, இறுதித்தேர்வில் எப்படியேனும் மாநில முதன்மை பெறவேண்டும் என்றகுறிக்கோளுடன் படித்தார். அதற்கு, தகுந்தாற்போல் அவரின் பேராசிரியர்களும், அவரை ஊக்குவித்தனர். அதேபோல், இறுதித்தேர்வான தமிழ்நாடு அனைத்து தமிழ்க்கல்லூரி மாணவர்கள் எழுதும் புலவர் மாணவர் மன்றத்தேர்விலும் மாநில முதன்மை பெற்றுவிடுகிறார். ஒருநாள் கல்லூரி இறுதி தேர்வை எழுதிவிட்டு முடிவுக்காக காத்துக்கொண்டிருக்கிறார். அப்பொழுது, எதிர்பாராத விதமாக எவரோ ஒருவரிடமிருந்து அவருக்கு அழைப்பு வருகிறது. அதில் உனக்கு மாநில முதன்மை கிடைக்கும், அதற்கு 1000 ரூபாய் பரிசும் உண்டு, அதையும் மன்னரே கொடுத்துவிட வேண்டும் என்று சொல்கிறார்கள்.
உடனே இவர், எனக்கு வந்தால் நேர்மையாக வரட்டும், இல்லாவிட்டால் அத்தகைய பரிசு எனக்கு வேண்டாம் என்று சொல்லி விடுகிறார். அழைத்தவர் கூறுகிறார் எனக்கு 60 வயது ஆகிறது. எனவே, நேர்மையை எனக்கா கற்றுத்தருகிறாய்…? கொஞ்சம் பொறு உன்னை எப்படி கவனிக்க வேண்டுமோ, அப்படி கவனித்துக்கொள்கிறேன் என்று எச்சரித்து விடுகிறார்.
எதற்கும் கலங்கவில்லை, அதேபோல் அவர் எதிர்பார்த்தபடியே மாநில முதன்மையும் கிடைக்கவில்லை. ஆனால், எதற்கும் கோபம் கொள்ளாமலும், தோல்வியை நினைத்து வருத்தப்படாமலும், முயல்கிறார். ஒரு வேலை கிடைத்து விடுகிறது. அதன் மூலம் ஒரே குறிக்கோளுடன் பி.யூ.சி., பி.ஏ.எம்., ன்று தனிப்பட பல தேர்வுகளை எழுதி 1970ல் எம்.ஏ., தேர்வில் சென்னை பல்கலைக்கழகத்தில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்று தங்கப்பதக்கமும், பரிசுகளும் பெறுகிறார். அப்பொழுது அவருள் ஒரு எண்ணம் எழுகிறது. அதாவது 1961ல் நடந்த வித்வான் தேர்வில் தேர்ச்சியாகி இருந்தால், நாம் எம்.ஏ., வரை பயின்று இருப்போமா…? என்று, தனக்காகவே தோல்வியை கொடுத்து, வெற்றியை தன்னிடமே வசப்படுத்திய நம்பிக்கைக்குரியவர் யார் என்பதை இத்தனை தூரம் படித்தவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொண்டிருப்பார்கள்.
எனினும், அவர்தான் விவசாயிகளின் மனதையும், பசியையும் அறிந்தவராகவும், மேலும், 20,000 த்திற்கும் மேற்பட்ட குடும்பங்களில் “தன்னம்பிக்கை விளக்கேற்றி” வரும், இளைஞர்களின் வாழ்வை அவர்களின் போக்கிலேயே எழுதி வசப்படுத்தியவரும், 5 லட்சம் இளைஞர்களை சிந்திக்க வேண்டும் என்றகுறிக்கோளும், பற்றும் கொண்டவரான மதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய டாக்டர் இல.செ. கந்தசாமி ஐயா அவர்கள்தான் ( எந்நாளும் அவர் ஏற்றிவைத்த “தன்னம்பிக்கை விளக்குகளில்” நானும் ஒருவன் என்பதை பெருமைபட கூறிக்கொள்கிறேன். ) ஒன்றைஇத்தருணத்தில் கூறுவதுதான் சிறந்தது. தோல்வியை மட்டும் எண்ணாதீர்கள், அதனுடன் வரும் வெற்றியை எண்ணுங்கள் வாழ்வே உங்களிடம் வசப்படும்.
“இலை உதிர்ந்து காய்ந்து போன மொட்டை மரத்தின் நம்பிக்கைக்குப் பின்னால் ஆயிரம் வசந்தங்கள்” அடுத்து உங்களை அறியாமல், உங்களிடம் இருக்கும் ஒன்றைகூறுகிறேன். அதுவும் உங்களுக்குள்ளாகவே கேளுங்கள்….
இன்னும் இளமை மாறாத இளமையுடன்….
0 comments Posted in Articles