– 2015 – June | தன்னம்பிக்கை

Home » 2015 » June

 
  • Categories


  • Archives


    Follow us on

    கடவுள் ரேகை!

    சேலம் தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் JCI சேலம் மெட்ரோ இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 21.6.2015; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.30 மணி

    இடம் : லட்சுமி அரங்கு, சாமுண்டி காம்ப்ளெக்ஸ்

    4 ரோடு, சேலம்-7.

    தலைப்பு :“கடவுள் ரேகை!

    சிறப்புப் பயிற்சியாளர்: ஒஸ்ரீ.ச. சிவக்குமரன்

    JCI மண்டல பயிற்சியாளர் & சுயமுன்னேற்றப் பயிற்சியாளர், சேலம்

    போன்: 94878 24368

    தொடர்புக்கு:

    Jc. G. தாமோதரன்,M.Com.,M.Phil. – 93601 22377

     

    தேனீக்களிடம் கற்க வேண்டிய தன்னம்பிக்கை விதிகள்!

    தஞ்சாவூரில் தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 21.6.2015; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10 மணி முதல் 1 மணி வரை

    இடம் : பெசன்ட் அரங்கம் A/C ஹால், தஞ்சாவூர்

    தலைப்பு: “தேனீக்களிடம் கற்க வேண்டிய தன்னம்பிக்கை விதிகள்!”

    (தேன் தேனீ  தேனீ வளர்ப்பு)

    பயிற்சியாளர்: சிறப்பு தேனீ வளர்ப்பு நிபுணர் பற்றிய தொடர்புக்கு:

    திரு. அப்துல்சலாம் (எ) பள்ளியூர் பாபா  93453 53113

    திரு. டோமினிக் சேகர்  94870 29494

    கும்பகோணம் தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் சோழ மண்டல மாணவர் முற்றம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    கும்பகோணம் தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் சோழ மண்டல மாணவர் முற்றம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    சிறப்புப் பயிற்சியாளர் : முனைவர் A. முகம்மது முஸ்தஃபா, Msc.,Ph.D.

    பேராசிரியர்

    அல்ஜூபைல் பல்கலைக்கழக கல்லூரி, K.S.A

    நாள், நேரம், இடம், தலைப்பு முதலிய விபரங்களுக்கு

    திரு. பள்ளியூர் பாபா  95972 85160

    திரு. தர்மர்  97880 41089

    1+1=1

    பள்ளிபாளையம் கிளை (ஈரோடு), தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 12.6.2015; வெள்ளிக்கிழமை

    நேரம் : மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை

    இடம் : M.G.V மெட்ரிக்பள்ளி (G.V மஹால் அருகில்)

    திருச்செங்கோடு ரோடு, பள்ளிபாளையம்

    தலைப்பு          :“1+1=1

    சிறப்புப் பயிற்சியாளர்: Jc. எ. தனவேல்

    JCI மண்டல பயிற்சியாளர், ஈரோடு

    போன்: 90951 52625

    தொடர்புக்கு: தலைவர் – திரு. D.S. ஜெயசீலன்: 94432 44850

    PRo – திரு. M. ராதா கிருஷ்ணன்: 99657 95856

    ஒருங்கிணைப்பாளர் – திரு. சீனிவாசன்: 98435 45986

    வெற்றி தரும் மனக்காட்சிகள்

    திருப்பூர் தன்னம்பிக்கை வாசகர்வட்டம், திருப்பூர் அரிமா சங்கம் மற்றும் செல்வக்குமார் டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ், திருப்பூர் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள்  : 14.6.2015; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.30 மணி

    இடம் : அரிமா சங்க அரங்கம்,

    குமரன் சாலை, திருப்பூர்

    தலைப்பு : வெற்றி தரும் மனக்காட்சிகள்

    சிறப்புப் பயிற்சியாளர்: திருமதி. Jc. குஹப்ரியா விஜயகுமார் வாழ்வியல் பயிற்றுனர், திருப்பூர்

    போன்: 97861 49094

    தொடர்புக்கு:

    திரு. A. மகாதேவன் 94420 04254

    திரு. S. வெங்கடேஸ்வரன் 94423 74220

    திரு. S. மாரப்பன் 95242 73667

    சென்னை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் பதஞ்சலி யோகா சமிதி, சென்னை இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    சென்னை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் பதஞ்சலி யோகா சமிதி, சென்னை இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள், நேரம், பயிற்சியாளர், தலைப்பு விபரம் அறிய தொடர்பு கொள்ளவும்:

    தலைவர் R. பாலன்  94442 37917,

    செயலாளர்  L. கருணாகரன்  98419 71107

    PRO யமுனா கிருஷ்ணன்  94440 29827

    உன்னால் முடியும்!

    ஈரோடு தன்னம்பிக்கை வாசகர்வட்டம் வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 28.6.2015; ஞாயிற்றுக்கிழமை

    நேரம்: மாலை 5.30 மணி முதல் 8.00 மணி வரை,

    இடம்: மாயாபஜார் A/D ஹால்,

    Opp.E.B. அலுவலகம் எதிரில், E.V.N ரோடு, ஈரோடு.

    தலைப்பு:“உன்னால் முடியும்!

    சிறப்புப் பயிற்சியாளர்: திரு. ஆர். மணிகண்டன்

    சுயமுன்னேற்றப் பயிற்சியாளர் சத்தியம் பவுன்டேசன்,

    கோவை போன்: 90036 56567

    தொடர்புக்கு:

    Jc. S. சையது ஜைனுலாபுதீன் – 99942 29080

    Prof. P. பூபதி – 9944699196

    உத்தமவில்லன்!

    திருச்செங்கோடு தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் JCI திருச்செங்கோடு டெம்பிள்

    இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 21.6.2015; ஞாயிற்றுக்கிழமை

    நேரம்: மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை,

    இடம்: ஹோட்டல் சித்தார்த்தா கான்பிரன்ஸ் ஹால்

    ஜோதி தியேட்டர் அருகில்,

    திருச்செங்கோடு.

    தலைப்பு :“உத்தமவில்லன்!

    சிறப்புப் பயிற்சியாளர்: JFM.P. தமிழரசன், MBA

    சுயமுன்னேற்றப் பயிற்சியாளர், சேலம்

    போன்: 96596 88000

    தொடர்புக்கு:

    தலைவர்: JCI. Sen. G. கோவிந்தசாமி  98427 96868

    செயலாளர்: Jc. A. திருநாவுக்கரசு – 99429 66554

    PRO Jc.HGK.K.பூபதி – 98651 94904

    வாழ்வது இனியது வாருங்கள்!

    கோவை தன்னம்பிக்கை வாசகர்வட்டம் மற்றும் வாசவி கிளப் நட்சத்திரா, கோவை

    இணைந்து வழங்கும் 318-வது சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 21.6.2015; ஞாயிற்றுக்கிழமை

    நேரம் : காலை 10.00 மணி

    இடம் : கன்னிகா காம்பளக்ஸ் மீட்டிங் ஹால் (நியூ வாசவி & கோ)

    ராஜவீதி சார்பதிவாளர் அலுவலகம் எதிரில்,

    தேர்முட்டி, கோவை  1.

    தலைப்பு :“வாழ்வது இனியது வாருங்கள்!

    சிறப்புப் பயிற்சியாளர் : திரு. சிவக்குமார்

    Educare(Academy of Training & Development), சென்னை

    போன்: 99621 63122 / 99621 87272

    தொடர்புக்கு: தலைவர் திரு. A.G.மாரிமுத்துராஜ் 98422 59335

    செயலாளர்  திரு. E. விஜயகுமார்  94426 10230

    பொருளாளர் திரு.AD.A.  ஆனந்தன்  74026 10108

    PRO விக்டரி விஸ்வநாதன்  97877 44533

    முதல் மதிப்பெண் சாதனை மங்கைகள்

    வாழ்கையில் சாதிக்க வேண்டும் என்று ஆர்வத்தோடு போராடுபவர்களே  வாழ்வில் சாதனை புரிகிறார்கள். அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற வாய்மொழி ஆரம்ப காலத்தில் பெண் பிள்ளைகள் பிறந்த ஒவ்வொரு வீட்டிலும் ஒலித்துக் கொண்டே இருந்த காலம் வேறு. ஆனால் இன்றைய நிலையில் பெண்கள் தொடாத சாதனைகளே இல்லையென்றே சொல்லலாம். அந்த வகையில் இந்த ஆண்டு பனிரெண்டாம் வகுப்பில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள் செல்வி பவித்ரா, செல்வி நிவேதிதா அவர்கள்.

    என் பெயர் நிவேதா. நான் கோவை மாவட்டத்திலுள்ள செல்வபுரம் என்னும் பகுதியில் வசிக்கிறேன். பெற்றோர் திரு. லட்சுமி நாராயணன், அருணாதேவி. தங்கை அக்ஷயா. அப்பா சொந்தமாகத் தொழில் செய்து வருகிறார். அம்மா இல்லத்தரசி.

    நான் படித்தது கோவையிலுள்ள ஸ்ரீ சவுடேஸ்வரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி. LKG முதல் 12ம் வகுப்பு வரை இதே பள்ளியில் படித்ததால் இப்பள்ளியைப் பற்றி என்னால் முழுமையாக உணர முடிந்தது. பள்ளியின் முதல்வர் Dr. அனுராதா அவர்கள் அனைவரிடமும் அன்பாகப் பழகும் ஆற்றல் கொண்டவர். இவரின் அணுகுமுறை அனைவருக்கும் பிடிக்கின்ற வகையில் இருக்கும். அதுபோல் என் வகுப்பு ஆசிரியர் சங்கீதா அவர்கள், வின்து, சுதா, சுஜித்தா, சிவக்குமார், கோகிலா ஆகிய அனைவரும் தங்களுக்குரிய பாணியில் அனைவருக்கும் புரிகின்ற வகையில் பாடத்தை மிகவும் எளிமையாக நடத்துவார்கள். அன்றாடம் நடத்தக்கூடிய பாடத்தை அன்றே படிக்கும் பழக்கத்தை எங்களுக்கு இவர்கள் கற்றுக்கொடுத்தார்கள். முக்கியமாக எனக்கும் என்னைப் போன்ற பிற மாணவிகளுக்கும் படிப்பில் அழுத்தம் கொடுக்கமாட்டார்கள். எப்பொழுதும் எந்த சந்தேகம் கேட்டாலும் உடனுக்குடனே தீர்வினைச் சொல்வார்கள்.

    படிக்கும்போது ஒரு திட்டம் வரையறுத்துக் கொண்டு படிக்க வேண்டும். நேரத்தை ஒருபோதும் வீணாக்காமல் படிக்க வேண்டும். அதிகாலையில் தான் நான் அதிகம் படிப்பேன். நான் படிக்கும் போதெல்லாம் என் பெற்றோர்கள் எனக்கு உறுதுணையாக உதவிகள் செய்து கொடுப்பார்கள். ஆர்வமும், ஊக்கமும் இருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றுவிடலாம்.

    30 ஆண்டுகளுக்குப் பின்னர் கோவைப் பகுதியில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றிருக்கிறேன் என்பதில் எனக்கு பெருமிதம் ஏற்படுகிறது. நான் B.Com. வணிகவியல் துறை எடுத்து இத்துறையில் பெரிதும் சாதிக்க வேண்டும் என்பதே என் எதிர்கால கனவாகும்.

    என் வெற்றிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    என் பெயர் பவித்ரா, நான் திருப்பூர் மாவட்டத்திலுள்ள பாப்பண்ணன் என்னும் கிராமத்தில் பிறந்தேன். பெற்றோர் ஜானகி ராமன், ராதா. அப்பா அருகிலுள்ள பனியன் நிறுவனத்தில் சூப்பர்வைசராக இருக்கிறார், அம்மா இல்லத்தரசி. எனக்கு இரு சகோதரிகள் நிகிதா, பிரித்தி.

     நான் படித்தது திருப்பூரிலுள்ள ஊத்துக்குளி ரோடு கூலிப்பாளையம் விகாஷ் வித்யாலயா மெட்ரிக் பள்ளியில். நான் பெற்ற இந்தச் சாதனை வெற்றிக்கு இப்பள்ளி  மிகவும் உறுதுணையாக இருந்தது. இப்பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் இப்பள்ளியில் பயிலும் ஒவ்வொரு மாணவர்களுடனும் ஒரே மாதிரியாக அன்புடன் நடந்து கொள்வார்கள். எல்லாத் துறை ஆசிரியர்களும் கொடுத்த ஊக்கம் தான் என்னை சாதிக்க வைத்தது என்றே சொல்லுவேன்.

    பள்ளியில் ஆசிரியர்கள் எந்தளவிற்கு முழு ஊக்கம் கொடுப்பார்களோ,  அதே அளவிற்கு என் வீட்டிலும் என் பெற்றோர் மற்றும் என் பாட்டி சகுந்தலா அவர்களும் மிகுந்த ஊக்கமும், ஒத்துழைப்பும் கொடுத்தார்கள்.

    நான் படிப்புக்கு என்று எந்த விதிமுறைகளும் வகுத்துக் கொள்ளவில்லை. ஆனால் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற வேண்டும் என்ற லட்சியம் மட்டுமே இருந்தது.

    அந்த இலட்சியம் தான் என்னை வெகுவாக முயற்சியுடன் உழைக்க வைத்தது. நான் எப்பொழுதும் நேரத்தை வீணாக்கவே மாட்டேன். கிடைக்கின்ற நேரகத்தை முறையாகப் பயன்படுத்திக் கொள்வேன்.

    அதிகாலை 3.30 மணிக்கு எழுந்து படிக்க ஆரம்பித்துவிடுவேன். அதிகாலை படிப்பு நன்றாக மனதில் நிற்கும். எனவே தூக்கத்தைப் புறந்தள்ளிவிட்டு இரவு நேரம் கண்விழித்துப் படித்தேன். பழைய வினாத்தாள்களைச் சேகரித்து வைத்து அதிலுள்ள வினாக்களையும் முழுவதுமாக படித்துப் பயிற்சிப் பெற்றேன்.

    என் எதிர்காலத் திட்டம் சி.ஏ. படித்து, அத்துறையில் நன்றாக சாதிக்க வேண்டும் என விரும்புகிறேன். இந்தச் சமயத்தில் என் பெற்றோருக்கும், என் பள்ளிக்கும், ஆசிரியர்களுக்கும், என் நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த இதழை மேலும்