– 2011 – November | தன்னம்பிக்கை

Home » 2011 » November (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    மாறிவரும் வேளாண்மை

    பல துறைகளில் பொருளாதார வளர்ச்சி என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறுபட்ட வண்ணம் உள்ளது. ஒருவர் புதிய தொழில் தொடங்க வேண்டுமானால் அந்தத் துறையில் உள்ள பல்வேறு மாற்றங்களைப் பற்றி நன்கு தெரிந்துகொண்டு தொழிலை ஆரம்பித்தால், அவரால் வெற்றிகரமாக அத்தொழிலை நடத்த முடியும்.
    உதாரணமாக, விவசாயத்தைத் தொழிலாக எடுத்துக்கொண்டு அதில் முன்னேற வேண்டுமானால், உலகிலுள்ள தற்போதைய தொழில்நுட்ப மாற்றங்கள், இந்தியாவில் அதற்கு ஏற்ப நடைபெரும் பொருளாதார மாற்றம் இவற்றைக் கருத்தில் கொண்டு விவசாயத்தில் ஈடுபட வேண்டும்.
    அன்று
    இந்தியா இப்போது அனைத்து துறைகளிலும் வேகமாக முன்னேறி வருகிறது. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது 85 சதவிகித மக்கள் விவசாயத்தை நம்பி இருந்தனர். அதனால் அன்று விவசாயப் பணிகளான களை எடுத்தல், நீர் பாய்ச்சுதல் மற்றும் நடவு, அறுவடை போன்ற வேலைகளுக்குத் தேவையான ஆட்கள் வசதி இருந்ததால் அதிகமாக பண்ணைக் கருவிகள் இல்லாமலேயே அனைத்துப் பணிகளையும் செய்ய முடிந்தது.
    இன்று
    இந்தியப் பொருளாதாரம் மிக வேகமாக முன்னேறி வருவதால் 85 சதவிகிதம் விவசாயத்தை நம்பியிருந்த மக்கள் இப்போது மற்ற தொழிலில் வாய்ப்புகள் இருப்பதால் தற்போது 64 சதவிகிதம் மட்டுமே இந்தத் துறையை நம்பி இருக்கிறார்கள். எனவே விவசாயத்தில் அன்றாட பணிகளைச் செய்ய ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இந்தப் பற்றாக்குறை, விவசாயத்தில் இருந்து மக்கள் மற்ற துறைக்கு மாறுவது மட்டுமல்லாமல், மற்ற துறைகளில் உள்ள வளர்ச்சி மேலும் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இந்தியப் பொருளாதார வளர்ச்சி வருடத்திற்கு சராசரியாக 8 சதவிகிதம் என்ற அளவில் உள்ளது. இதுவே விவசாயத் துறையில் இதன் வளர்ச்சி சுமார் 2 சதவிகிதம் தான். எனவே இந்தியாவில் பொறியியல், கணிப்பொறி, கட்டுமானம், Service Sector போன்ற துறைகளில் உள்ள அபரிமிதமான வளர்ச்சி மக்களை மற்ற துறைகளுக்குச் செல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. இது ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் மாற்றத்தினால் நிகழும் நிகழ்வுகள் ஆகும்.
    இந்நிகழ்வுகள் வரவேற்கத்தக்க மாற்றங்கள் தான். இருப்பினும் வேளாண்மையில் உள்ள குறைந்த வளர்ச்சிக்கு என்ன செய்வது?
    இனியும்
    வேளாண்மையை நம்பியிருக்கும் ஆட்களின் எண்ணிக்கை கண்டிப்பாக இனிவரும் காலங்களில் இன்னும் குறையத்தான் போகிறது. இது காலத்தின் கட்டாயம், பொருளாதார வளர்ச்சியின் வெளிப்பாடு. என்றாலும் விவசாயத்தை நம்பி இருப்பவர்கள் விவசாயத்தை விட்டு வேறு தொழிலுக்குச் செல்ல வேண்டியது இல்லை. ஆனால் விவசாயத்தை மற்ற தொழில்கள் போல ஒரு தொழிலாக செய்ய வேண்டிய கட்டாயத்தில் இனிவரும் காலங்கள் இருக்கும்.

    •  புதிய தொழில் நுட்பங்களைக் கடைப்பிடித்து அதிக மகசூல் எடுக்க முயற்சிக்க வேண்டும்.
    •   விவசாயத்தில் அன்றாட பணிகளுக்கு ஆட்களை நம்பி இருக்காமல் முடிந்தவரை இயந்திர மயமாக்க முயல வேண்டும். இது கண்டிப்பாக செய்ய வேண்டிய சூழ்நிலையில் உள்ளார்கள்.
    •   சந்தையின் நிலவரத்தை அறிந்து அதற்கு ஏற்றாற்போல் அதிக லாபம் தரும் பயிர்களைக் காலத்திற்கு ஏற்ப மாற்று பயிர்களைத் தேர்ந்தெடுத்துப் பயிர் செய்ய வேண்டும்.
    •   விளைவித்த பொருட்களைப் பதப்படுத்த அதிக விலைக்கு விற்க உங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
    •   விளைவித்த பொருட்களை மதிப்புக்குட்பட்ட பொருள்களாக சந்தைக்குக் கொண்டு செல்வதன் மூலம் அதிக வருவாயைப் பெருக்க முடியும்.

    இனியும் விவசாயம் செய்ய இளைய தலைமுறைகள் வருவதற்கு வாய்ப்புகள் குறைவுதான். இந்தியாவில் விவசாயிகளின் சராசரி வயது தற்போது 40ஆக உள்ளது. இதுவே தற்போது ஜப்பானில் 65ஆக உள்ளது. ஜப்பானைப்போல் இந்திய விவசாயிகளின் சராசரி வயது இன்னும் 10 ஆண்டுகளில் 50 ஆக மாறிவிடும்.
    விவசாயத்தை நம்பியிருக்கும் தற்போதைய மக்கள் எண்ணிக்கை கண்டிப்பாக இனிவரும் காலங்களில் அதிகரிக்க வாய்ப்புகள் குறைவு.
    எனவே, வயதான விவசாயிகளைக் கொண்ட நாடாக இந்தியா மாறும் போது விவசாயம் பெரும் மாற்றத்தை சந்திக்க நேரிடும்.
    “மாற்றங்கள் ஒன்றே நிலையானது” என்ற வரிகளுக்கு ஏற்ப மாற்றங்களுக்காக நம்மை மாற்றிக் கொண்டால் நாம் செய்யும் தொழில் லாபகரமாக இருக்கும் என்பதில் ஐயம் இல்லை.

    அத்தனைக்கும் ஆசைப்படு

    ஆசை இல்லையெனில் வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லை. முதலில் ஆசைப்பட வேண்டும். பின்னர் அதனை அடைய முயற்சி செய்ய வேண்டும்.
    ஒரு பெண்ணைப் பார்த்து ஆசைப்படுகிறோம். அவளிடம் விருப்பத்தைக்கூற வேண்டும். அவளோடு சேர்ந்து வாழ வேண்டும். அவளை சந்தோஷமாக வைத்துக் காப்பாற்ற வேண்டும். அதற்கு நிறைய சம்பாதிக்க வேண்டும். நன்றாக சம்பாதிக்க நல்ல வேலை வேண்டும். நல்ல வாழ்க்கை அமைய ஆசை.
    இந்த ஆசையை அடைய நிறைய பணம், முயற்சி எடுப்பதற்கு நேரம், இவை இரண்டும் முக்கியமானவை.
    நேரம்
    ‘நேரம்’ என்பது நமது கையில் உள்ளது என்பதற்கு உதாரணங்களைப் பார்ப்போம். ஒரு ‘Software Engineer’-ஐ எடுத்துக் கொள்வோம்.
    காலை 8 மணிக்கு அலாரம் வைத்து 9 மணிக்கு எழுவார். அவசரமாகக் குளித்து, அரைகுறையாகச் சாப்பிட்டும் சாப்பிடாமலும் 10.30 மணிக்கு ஆபீஸிற்குச் செல்வார். மதியம் 3 அல்லது 4 மணிக்கு வேண்டாத எதையாவது சாப்பிடுவார். இரவு 8 மணிக்கு வீடு திரும்புவார். 9 மணிக்கு சாப்பிடுவார் பிறகு 11 மணி வரை டி.வி. அல்லது படம் பார்ப்பார். பிறகு 1 மணிவரை இண்டர்நெட்.
    இவர் சரியாக சாப்பிடுவது இல்லை. யாருடனும் சரியாக பேசுவது இல்லை. ஆபிஸ் வேலையே கதி என்று இருப்பார். இதனால் பல உடல் உபாதைகள் ஏற்படுகிறது. நேரமின்மையால் தன்னுடைய மனைவியுடனும், குழந்தையுடனும் நேரம் செலவிட முடிவதில்லை.
    இப்படி ஒரு வாழ்க்கை அவசியமா?
    ஒரு வருடத்தின் பயனை, அந்த வருடம் தோல்வி அடைந்த மாணவனிடம் கேட்க வேண்டும்.
    ஒரு மாதத்தின் பயனை குறை மாதக் குழந்தையைப் பெற்ற தாயிடம் கேட்க வேண்டும்.
    ஒரு வாரத்தின் பயனை ஒரு வார இதழின் ஆசிரியரிடம் கேட்க வேண்டும்.
    ஒரு மணி நேரத்தின் பயனை காத்திருந்த காதலியிடம் கேட்க வேண்டும்.
    ஒரு நிமிடத்தின் பயனை விமானத்தைத் தவறவிட்டவனிடம் கேட்க வேண்டும்.
    ஒரு நொடியின் பயனை விபத்தில் உயிர் பிழைத்தவனிடம் கேட்க வேண்டும்.
    ஒரு மில்லி செகன்டின் பயனை ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தை வென்றவனிடம் கேட்க வேண்டும்.
    அம்பானிக்கும் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் தான், டாடாவிற்கும் 24 மணி நேரம்தான், நாட்டின் பிரதமருக்கும் 24 மணிநேரம் தான். ஒரு சிலரால் மட்டும்தான் அவர்களது ஆசையை நிறைவேற்ற முடிகிறது.
    அந்த ஒரு சிலர் நேரத்தை சரியாக பயன்படுத்துவதால் அவர்களால் வெற்றி அடைய முடிகிறது.
    செந்திலும், அவருடைய மனைவி கீதாவும் இன்று இரவு அவர்களுடைய சொந்த ஊரான கோயமுத்தூருக்குக் கிளம்புகிறார்கள். காலையில் சாப்பிடும்போது கீதா கூறுகிறார், ‘டிக்கெட் இன்டெர்நெட்டில் இருக்கிறது, பிரிண்ட் அவுட் எடுத்துவரவும்’ என்று. அதே சமயம் மேனேஜர் தொலைபேசியில் அழைத்து ‘Promotion Recommendation List’-ஐ, மூன்று நாட்களாக கேட்கிறேன். இன்று கட்டாயம் அனுப்பு’ என்று கூறுகிறார்.
    செந்தில் காரில் போகும்போதுதான் ஞாபகம் வருகிறது. Mobile Bill இன்றும் கட்டவில்லை என்று. காரில் சென்று கொண்டிருக்கும்போதே மனைவி கீதா அலைபேசியில் அழைத்துக் கூறுகிறார். குழந்தைக்கு School Fees கட்ட இன்று கடைசிநாள், நான்கு நாட்களுக்கு முன்பே கூறினேனே என்று சொல்கிறாள். இதற்கிடையில் நண்பன் அழைத்து மதியம் வெளியில் சாப்பிடப் போவோம் என்று சொல்கிறான்.
    இவை அனைத்தையும் எப்படிச் செய்யப் போகிறோம் என்ற யோசனையில் காரை ஓட்டியதால் Accident நடக்கிறது. கையில் காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறான் செந்தில்.
    இவை அனைத்திற்கும் காரணம் என்ன? செந்தில் தனது நேரத்தைச் சரியான முறையில் கையாளத் தெரியாததால் நடந்தவை.
    ‘Time Management’ அதாவது நேரத்தை திட்டமிடுதல் என்பது மிகவும் முக்கியம்.
    1. அவசியம், அவசரம்
    2. அவசியம், அவசரம் இல்லை
    3. அவசியம் இல்லை, அவசரம்
    4. அவசியம் இல்லை, அவசரம் இல்லை
    காரியங்களை மேற்கூரிய நான்கு பிரிவுகளுக்குள் கொண்டு வந்து அதை நிறைவேற்ற வேண்டும்.
    உதாரணத்திற்கு, உடம்பு சரியில்லை ஆஸ்பத்திரி செல்ல வேண்டும். வெளியில் கிளம்பும்போது Car Repair, முதலாளி கூறும் அவசர வேலை போன்றவை அவசியமானது, அவசரமானது.
    தினமும் உடற்பயிற்சி, குழந்தைகளோடு நேரம் செலவிடுவது, Health Checkup செய்வது, Passport போன்றவை எடுப்பது போன்றவை அவசியமானது, அவரசம் இல்லாதது.
    நண்பனிடம் பேசுவது, டி.வி.யில் நல்ல படம் பார்ப்பது, நண்பன் படத்திற்கு டிக்கெட் எடுத்துவிட்டு அழைப்பது போன்றவை அவசரமானது, அவசியமில்லாதது.
    டி.வி.யில் சீரியல் பார்ப்பது, ஒரு படத்தை பல தடவை பார்ப்பது, யாரென்றே தெரியாதவர்களிடம் வெட்டி அரட்டை அடிப்பது, பகல் தூக்கம் போன்றவை அவசியமும் இல்லை. அவசரமும் இல்லை.
    இதுபோல நம் காரியங்களை அட்டவணைப்படுத்தி எதை முதலில் செய்ய வேண்டும். எதைக் கடைசியாக செய்ய வேண்டும் என்று தீர்மானித்துச் செய்தால் நாம் ஆசைப்பட்டதை சுலபமாக அடையலாம்.
    செந்திலின் விசயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். குழந்தைக்கு Fees கட்டுவது, Mobile Bill கட்டுவது போன்றவை நான்கு நாட்களுக்கு முன்னால் அவசியம், அவசரம் இல்லை என்ற நிலையிலேயே செய்திருந்தால் அது அவசியம், அவசரம் என்ற நிலைக்கு வந்திருக்காது.
    மேல் கூறிய அட்டவணைப்படி நம் காரியங்களை செயல்படுத்தினால்,
    வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்.

    வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை

    உலகம் ஒரு மைதானம். இதில் வெற்றி பெறுபவர்களையும், தோல்வி பெறுபவர்களையும் விமர்சனம் செய்கிறார்கள். தோல்வி பெறுபவர்கள் மேலும் மேலும் முயற்சியால் வெற்றியும் பெற்று விடுகிறார்கள். ஆனால், தோல்வி பெற்றவர்களை முதலில் தாழ்த்திப் பேசிய விமர்சகர்கள், அவர்கள் வெற்றி பெற்ற உடன் உயர்வாகப் பேசுகிறார்கள். அடுத்தவர்களைப் பற்றிப் பேசியே பொழுதைக் கழிக்கும் பெரும்பாலனவர்களுக்கு, அந்த சமயத்தில் தன்னுடைய வாழ்நாளின் நேரம் வீணாகக் கழிகிறதே என்று கூடத் தெரிவதில்லை.
    ஒருவரைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் குறைசொல்லுபவர்கள், முதலில் சுயமரியாதையை இழக்கிறார்கள். பேசப்பட்டவருக்கு அந்த விசயம் தெரியவரும் போது, பிறர்தம் மேல் வைத்திருக்கும் நன்மதிப்பைத் தாங்களாகவே குறைத்துக் கொள்கிறார்கள். தாம் பேசிய வார்த்தைகள் உண்மை இல்லை என்று தெரியவரும்போது மனதளவில் வறுத்தப்படுபவர்கள் தாம் மனிதர்கள்.
    ‘ஒருவர் நம்மைப் பார்த்து பாவம் என்று சொல்வதை விட, பொறாமைப்படுவதே மேல்Ð’ என்று சொல்லியிருக்கிறார் சுவாமி விவேகானந்தர். ‘பழுத்த பழத்திற்குத் தான் அடி விழும்Ð’ என்பது பழமொழி. ஒருவர் நம்மைப் பற்றி விமர்சனம் செய்கிறார் என்றால், ஏதாவது ஒரு விசயத்தால் நம்மால் அவர் தூண்டப்பட்டிருக்கிறார் என்பது அர்த்தம். அவரது எண்ணங்களுக்கு நமது பதிலை, செயல்களால் உணர்த்தினாலே போதும். நாம் சரியான பாதையில் சென்று கொண்டிருந்தோமானால் பிறரது கருத்துக்களுக்குச் செவி கொடுக்கத் தேவையில்லை. போற்றுவார் போற்றட்டும்; தூற்றுவார் தூற்றட்டும். நமது கடமையை முழுமையாக செய்து அதில் நிம்மதி அடைவோம்.
    பொதுவாக, வாக்குவாதத்தில் ஈடுபடும்பொழுது அப்போதைக்கு அந்த வாக்குவாதத்தில் வேண்டுமானால் ஜெயித்துவிடலாம். ஆனால் அச்சமயத்தில் அதனினும் மேலான மனிதர்களை இழக்க நேரிடுகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சில சமயங்களில், உலக மொழியான ‘மௌன மொழி’ மிகப்பெரிய பிரிவுகளைத் தவிர்த்துவிடும் என்பது அறிஞர்கள் கூறிய உண்மை.
    ஒருவருக்கு அறிவுரை கூறும்பொழுது நிச்சயம் நேரம் பார்த்து தான் பேச வேண்டும். ‘தவறு செய்த கையோடு புத்தி சொல்லக்கூடாது; குத்திக்காட்டுவது போல அறிவுரை இருத்தல் கூடாது’ என்றிருக்கிறார் வேதாத்திரி மகரிஷி. அன்பான வார்த்தைகள் எப்பொழுதும் மனதிற்கினிய மருந்தாகும்.
    எனது தந்தை அதிக அளவில் புத்தகங்களைப் படித்ததில்லை. ஆனாலும் அனுபவ அறிவால் அவர் கூறிய வார்த்தைகள், பேரறிஞர்களின் அறிவுரை வாக்காக அமைந்திருக்கிறது. எனது தந்தைக்கு பிடித்தமான, அடிக்கடி எங்களிடம் கூறும் குறள், “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்”. அக்குறளின் வழி நடைபிறழாமல் வாழ்ந்தவர். அனைவரிடமும் அன்பாகப் பேசும் குணமுடையவர். திருமணம் முடித்து நான் பிறந்த வீட்டிற்கு வந்தபோதும் கூட என்னை மடியில் உட்கார வைத்துக் கொள்வார். ஏதாவது, அறிவுரை கூறும்பொழுது அதை அலட்சியப்படுத்தினால், ‘நான் சொல்லும்போது உங்களுக்குத் தெரியாது. நான் இல்லாதபோது தான் அப்பா அன்றைக்கே சொன்னாரே என என் போட்டோவைப் பார்த்து வருத்தப்படுவீர்கள்’ என்பார். பெரும்பாலான நம்மவர்கள் அறிவுரை கூறுபவர்களை அப்போதைக்கு கண்டுகொள்வதில்லை. பிறகுதான் யோசிக்கிறோம். ஒருவர் வாழ்ந்த நாளின் சிறப்பும், மதிப்பும் அவரது இறந்த நாளில் தான் அறியமுடியும் என்று கூறுவார் என் தந்தை. உண்மைதான், அவரது இறந்தநாளில் வீதியே நிறையும் அளவிற்கு கூட்டம் இருந்தது. அவரது அன்பான நெஞ்சம் கடவுளுக்கும் பிடித்துப் போகவே, தன்னிடம் அழைத்துக் கொண்டார்.
    உயர்ந்த எண்ணங்களையே எப்போதும் எண்ண வேண்டும். எண்ணங்கள் தான் செயல்களாக வெளிப்படும். நமது செயல்களால் எப்போதும் பிறருக்கு நன்மையே கிடைக்க வேண்டும். ‘நல்லெண்ணெய் தீபச் சுடருக்கு ஆதாரமாக இருப்பது போல, நல்லெண்ணம் தான் மனிதனின் வாழ்விற்கு ஆதாரமாக அமையும்’.
    நம்மால் முடிந்தவரை கோபத்தை அடக்கிக் கொண்டு கனிவாகப் பேசப் பழகுவோம். குழந்தைகளிடம் கண்டிப்பாக இருக்கிறேன் பேர்வழி என்று சதா அவர்களை அதட்டிக் கொண்டே இருப்பதால் பெற்றவர்களைப் பார்த்தால் கூட மிலிட்டரியைப் பார்த்தது போல் பயப்படுகிறார்கள் குழந்தைகள். இதனால் அவர்களுக்கு வெறுப்பு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. ‘அம்மா’ என்று அன்புடன் அழைக்கும் குழந்தைகளை அடித்து ‘மம்மி’ என்று சொல்லவைக்கும் அம்மாக்களும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
    குழந்தைகளிடம் மிரட்டி வேலை வாங்க முற்பட்டால், வேண்டா வெறுப்பாக அரைகுறையாகத்தான் அந்த வேலையைச் செய்வார்கள். மாறாக, தோள்தட்டி அன்புடன் சொன்னால் அந்த வேலையை ஈடுபாட்டுடனும், விருப்பமுடனும் செய்வார்கள். பெற்றவர்களிடம் நட்புறவுடன் நெருங்கிப் பழகும் குழந்தைகளிடம் எந்தவித ஒளிவு மறைவும் இருக்காது.
    கடுஞ்சொற்கள் நமது நெருங்கிய நெஞ்சங்களையும் நம்மிடமிருந்து விலக்கிவிடும். நமது வருகைக்காக பிறர் காத்திருக்க வேண்டுமே தவிர; ‘அவர் இந்தப் பக்கமாக வருகிறார்; நான் அந்தப் பக்கமாக சென்றுவிடுகிறேன்’ என்று பிறரை பயந்தோடச் செய்யக் கூடாது.
    எவ்வளவு நண்பர்களுக்குத் தெரியும், தமது சக நண்பனின் ஆர்வம் என்ன? திறமை என்ன? என்று. அவ்வாறு தெரிந்திருந்தால், அதை வெளிக்கொணர ஏதாவது விதத்தில் உறுதுணையாக இருந்திருக்கிறார்களா? பெரும்பாலான நண்பர்கள் வெட்டியாக பொழுதைப் போக்க மட்டுமே ஒன்றுகூடுகிறார்கள். நட்பிற்கு உதாரணமாக, கோப்பெருஞ்சோழனையும், பிசிராந்தையாரையும் மட்டுமே இன்னும் முன்வைத்துக் கொண்டிருக்கிறோம்.
    இன்றைய இளைஞர்களில் சிலர் தமது பெற்றோரின் அறிவுரையை ஒரு காதில் வாங்கி மறுகாதில் விட்டுத்தள்ளுகிறார்கள். அதே அறிவுரையைத் தனது அபிமான நட்சத்திரம் ‘கண்ணா! என் அம்மா அப்பவே சொல்லீருக்காங்க’ என்றால், அதை தனது மனதில் நிறுத்தி வாழ்நாளின் மந்திரச் சொல்லாக கடைபிடிக்கிறார்கள். சோப்பு டப்பா முதல் லேப்டாப் வரை பிரபலங்கள் விளம்பரப்படுத்தினால் தான் அதை பிரபலப்படுத்த முடிகிறது.
    எப்போதும் தமக்காகவே சிந்தித்துக் கொண்டிருக்காமல், தன்னுடன் இருப்பவர்களையும், தனது சுற்றுப்புறத்தையும் மேம்படுத்துவது பற்றியும் சிந்திப்போமானால் மற்றவர்களுடனான நல்லுறவு மேம்படும்.
    தனது வாழ்நாளைச் சிறப்பித்துக் கொள்ளும் உறுதிமொழி எடுக்க, ‘No Worry from January’ என்று புத்தாண்டிற்காக காத்திருக்காமல், இன்றே தன்னம்பிக்கையுடன் செயல்படுவோம். ஒரு கை இல்லாமல் கூட வாழலாம். ஆனால் ‘தன்னம்பிக்கை’ இல்லாமல் வாழமுடியாது. வருடத்தின் ஒவ்வொரு விடியலையும் இன்பமாக வரவேற்று, நம்முடைய வேலைகளை சிறப்பாக செய்வதோடு, நம்மைச் சார்ந்தவர்களையும் மகிழ்வோடு வைக்க முயற்சி செய்வோம். ‘வாழ்வது ஒருமுறை; வாழ்த்தட்டும் தலைமுறை’.

    வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை

    உலகம் ஒரு மைதானம். இதில் வெற்றி பெறுபவர்களையும், தோல்வி பெறுபவர்களையும் விமர்சனம் செய்கிறார்கள். தோல்வி பெறுபவர்கள் மேலும் மேலும் முயற்சியால் வெற்றியும் பெற்று விடுகிறார்கள். ஆனால், தோல்வி பெற்றவர்களை முதலில் தாழ்த்திப் பேசிய விமர்சகர்கள், அவர்கள் வெற்றி பெற்ற உடன் உயர்வாகப் பேசுகிறார்கள். அடுத்தவர்களைப் பற்றிப் பேசியே பொழுதைக் கழிக்கும் பெரும்பாலனவர்களுக்கு, அந்த சமயத்தில் தன்னுடைய வாழ்நாளின் நேரம் வீணாகக் கழிகிறதே என்று கூடத் தெரிவதில்லை.
    ஒருவரைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் குறைசொல்லுபவர்கள், முதலில் சுயமரியாதையை இழக்கிறார்கள். பேசப்பட்டவருக்கு அந்த விசயம் தெரியவரும் போது, பிறர்தம் மேல் வைத்திருக்கும் நன்மதிப்பைத் தாங்களாகவே குறைத்துக் கொள்கிறார்கள். தாம் பேசிய வார்த்தைகள் உண்மை இல்லை என்று தெரியவரும்போது மனதளவில் வறுத்தப்படுபவர்கள் தாம் மனிதர்கள்.
    ‘ஒருவர் நம்மைப் பார்த்து பாவம் என்று சொல்வதை விட, பொறாமைப்படுவதே மேல்Ð’ என்று சொல்லியிருக்கிறார் சுவாமி விவேகானந்தர். ‘பழுத்த பழத்திற்குத் தான் அடி விழும்Ð’ என்பது பழமொழி. ஒருவர் நம்மைப் பற்றி விமர்சனம் செய்கிறார் என்றால், ஏதாவது ஒரு விசயத்தால் நம்மால் அவர் தூண்டப்பட்டிருக்கிறார் என்பது அர்த்தம். அவரது எண்ணங்களுக்கு நமது பதிலை, செயல்களால் உணர்த்தினாலே போதும். நாம் சரியான பாதையில் சென்று கொண்டிருந்தோமானால் பிறரது கருத்துக்களுக்குச் செவி கொடுக்கத் தேவையில்லை. போற்றுவார் போற்றட்டும்; தூற்றுவார் தூற்றட்டும். நமது கடமையை முழுமையாக செய்து அதில் நிம்மதி அடைவோம்.
    பொதுவாக, வாக்குவாதத்தில் ஈடுபடும்பொழுது அப்போதைக்கு அந்த வாக்குவாதத்தில் வேண்டுமானால் ஜெயித்துவிடலாம். ஆனால் அச்சமயத்தில் அதனினும் மேலான மனிதர்களை இழக்க நேரிடுகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். சில சமயங்களில், உலக மொழியான ‘மௌன மொழி’ மிகப்பெரிய பிரிவுகளைத் தவிர்த்துவிடும் என்பது அறிஞர்கள் கூறிய உண்மை.
    ஒருவருக்கு அறிவுரை கூறும்பொழுது நிச்சயம் நேரம் பார்த்து தான் பேச வேண்டும். ‘தவறு செய்த கையோடு புத்தி சொல்லக்கூடாது; குத்திக்காட்டுவது போல அறிவுரை இருத்தல் கூடாது’ என்றிருக்கிறார் வேதாத்திரி மகரிஷி. அன்பான வார்த்தைகள் எப்பொழுதும் மனதிற்கினிய மருந்தாகும்.
    எனது தந்தை அதிக அளவில் புத்தகங்களைப் படித்ததில்லை. ஆனாலும் அனுபவ அறிவால் அவர் கூறிய வார்த்தைகள், பேரறிஞர்களின் அறிவுரை வாக்காக அமைந்திருக்கிறது. எனது தந்தைக்கு பிடித்தமான, அடிக்கடி எங்களிடம் கூறும் குறள், “இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்து விடல்”. அக்குறளின் வழி நடைபிறழாமல் வாழ்ந்தவர். அனைவரிடமும் அன்பாகப் பேசும் குணமுடையவர். திருமணம் முடித்து நான் பிறந்த வீட்டிற்கு வந்தபோதும் கூட என்னை மடியில் உட்கார வைத்துக் கொள்வார். ஏதாவது, அறிவுரை கூறும்பொழுது அதை அலட்சியப்படுத்தினால், ‘நான் சொல்லும்போது உங்களுக்குத் தெரியாது. நான் இல்லாதபோது தான் அப்பா அன்றைக்கே சொன்னாரே என என் போட்டோவைப் பார்த்து வருத்தப்படுவீர்கள்’ என்பார். பெரும்பாலான நம்மவர்கள் அறிவுரை கூறுபவர்களை அப்போதைக்கு கண்டுகொள்வதில்லை. பிறகுதான் யோசிக்கிறோம். ஒருவர் வாழ்ந்த நாளின் சிறப்பும், மதிப்பும் அவரது இறந்த நாளில் தான் அறியமுடியும் என்று கூறுவார் என் தந்தை. உண்மைதான், அவரது இறந்தநாளில் வீதியே நிறையும் அளவிற்கு கூட்டம் இருந்தது. அவரது அன்பான நெஞ்சம் கடவுளுக்கும் பிடித்துப் போகவே, தன்னிடம் அழைத்துக் கொண்டார்.
    உயர்ந்த எண்ணங்களையே எப்போதும் எண்ண வேண்டும். எண்ணங்கள் தான் செயல்களாக வெளிப்படும். நமது செயல்களால் எப்போதும் பிறருக்கு நன்மையே கிடைக்க வேண்டும். ‘நல்லெண்ணெய் தீபச் சுடருக்கு ஆதாரமாக இருப்பது போல, நல்லெண்ணம் தான் மனிதனின் வாழ்விற்கு ஆதாரமாக அமையும்’.
    நம்மால் முடிந்தவரை கோபத்தை அடக்கிக் கொண்டு கனிவாகப் பேசப் பழகுவோம். குழந்தைகளிடம் கண்டிப்பாக இருக்கிறேன் பேர்வழி என்று சதா அவர்களை அதட்டிக் கொண்டே இருப்பதால் பெற்றவர்களைப் பார்த்தால் கூட மிலிட்டரியைப் பார்த்தது போல் பயப்படுகிறார்கள் குழந்தைகள். இதனால் அவர்களுக்கு வெறுப்பு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. ‘அம்மா’ என்று அன்புடன் அழைக்கும் குழந்தைகளை அடித்து ‘மம்மி’ என்று சொல்லவைக்கும் அம்மாக்களும் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும்.
    குழந்தைகளிடம் மிரட்டி வேலை வாங்க முற்பட்டால், வேண்டா வெறுப்பாக அரைகுறையாகத்தான் அந்த வேலையைச் செய்வார்கள். மாறாக, தோள்தட்டி அன்புடன் சொன்னால் அந்த வேலையை ஈடுபாட்டுடனும், விருப்பமுடனும் செய்வார்கள். பெற்றவர்களிடம் நட்புறவுடன் நெருங்கிப் பழகும் குழந்தைகளிடம் எந்தவித ஒளிவு மறைவும் இருக்காது.
    கடுஞ்சொற்கள் நமது நெருங்கிய நெஞ்சங்களையும் நம்மிடமிருந்து விலக்கிவிடும். நமது வருகைக்காக பிறர் காத்திருக்க வேண்டுமே தவிர; ‘அவர் இந்தப் பக்கமாக வருகிறார்; நான் அந்தப் பக்கமாக சென்றுவிடுகிறேன்’ என்று பிறரை பயந்தோடச் செய்யக் கூடாது.
    எவ்வளவு நண்பர்களுக்குத் தெரியும், தமது சக நண்பனின் ஆர்வம் என்ன? திறமை என்ன? என்று. அவ்வாறு தெரிந்திருந்தால், அதை வெளிக்கொணர ஏதாவது விதத்தில் உறுதுணையாக இருந்திருக்கிறார்களா? பெரும்பாலான நண்பர்கள் வெட்டியாக பொழுதைப் போக்க மட்டுமே ஒன்றுகூடுகிறார்கள். நட்பிற்கு உதாரணமாக, கோப்பெருஞ்சோழனையும், பிசிராந்தையாரையும் மட்டுமே இன்னும் முன்வைத்துக் கொண்டிருக்கிறோம்.
    இன்றைய இளைஞர்களில் சிலர் தமது பெற்றோரின் அறிவுரையை ஒரு காதில் வாங்கி மறுகாதில் விட்டுத்தள்ளுகிறார்கள். அதே அறிவுரையைத் தனது அபிமான நட்சத்திரம் ‘கண்ணாÐ என் அம்மா அப்பவே சொல்லீருக்காங்க’ என்றால், அதை தனது மனதில் நிறுத்தி வாழ்நாளின் மந்திரச் சொல்லாக கடைபிடிக்கிறார்கள். சோப்பு டப்பா முதல் லேப்டாப் வரை பிரபலங்கள் விளம்பரப்படுத்தினால் தான் அதை பிரபலப்படுத்த முடிகிறது.
    எப்போதும் தமக்காகவே சிந்தித்துக் கொண்டிருக்காமல், தன்னுடன் இருப்பவர்களையும், தனது சுற்றுப்புறத்தையும் மேம்படுத்துவது பற்றியும் சிந்திப்போமானால் மற்றவர்களுடனான நல்லுறவு மேம்படும்.
    தனது வாழ்நாளைச் சிறப்பித்துக் கொள்ளும் உறுதிமொழி எடுக்க, ‘No Worry from January’ என்று புத்தாண்டிற்காக காத்திருக்காமல், இன்றே தன்னம்பிக்கையுடன் செயல்படுவோம். ஒரு கை இல்லாமல் கூட வாழலாம். ஆனால் ‘தன்னம்பிக்கை’ இல்லாமல் வாழமுடியாது. வருடத்தின் ஒவ்வொரு விடியலையும் இன்பமாக வரவேற்று, நம்முடைய வேலைகளை சிறப்பாக செய்வதோடு, நம்மைச் சார்ந்தவர்களையும் மகிழ்வோடு வைக்க முயற்சி செய்வோம். ‘வாழ்வது ஒருமுறை; வாழ்த்தட்டும் தலைமுறை’.

    உங்கள் குழந்தை எப்படி…?

    முந்தா நேற்று சேலத்தில் மருத்துவமனைக்குச் சென்றபோது ஒரு குழந்தையைச் சந்தித்தேன். அது ஒரு பெண் குழந்தை; ஆறு அல்லது ஏழு வயதிருக்கும். பார்வையாளர் கூடத்துக்கும் வெளியே செருப்புகள் வைக்கும் இடத்துக்கும் இடையில் ஓடிக் கொண்டே இருந்தாள். அவள் வயதுக்குக் கொஞ்சம் வளர்த்தியான பெண்.
    என் மகள் தியானாவை பார்த்ததும், ஆசையாக கொஞ்ச ஆரம்பித்துவிட்டாள். நான் உள்ளே நுழைந்து அமர்வதற்குள் ஒரு நூறு வார்த்தையாவது பேசியிருப்பாள் அந்தச் சிறுமி. “அங்கிள், உங்க பொண்ணா? ரொம்ப க்யூட்டா இருக்கா…எனக்கு இந்த மாதிரி சின்னக் குழந்தைங்கன்னா ரொம்பப் பிடிக்கும். விளையாடிக்கிட்டே இருப்பேன். எங்க ஸ்கூல்லயே நான் தான் ரொம்பப் பிரில்லியன்ட். என்னைத் தான் எங்க க்ளாஸ்ல லீடர் ஆக்கி இருக்காங்க எங்க மிஸ்…”
    சுவாரசியமாகவும் ஆசையாகவும் அந்தப் பெண்ணைப் பார்த்துக் கொண்டிருந்தேன். திடீரென்று அவள் அம்மாவிடம் திரும்பி, “அம்மா, நம்ப விஷயத்தை இந்த அங்கிள் கிட்ட சொல்லிடலாமா….அது இல்லம்மா… அந்த இன்னொரு விஷயம்..” என்று எதையோ ரகசியமாகக் கேட்டாள்.நம்பினால் நம்புங்கள், நான் சென்று அமர்ந்து இரண்டு நிமிடம் கூட ஆகவில்லை. அவர்களை முன்பின் பார்த்தது கூடக் கிடையாது. அவள் அம்மாவின் முகம் அடைந்த தர்மசங்கடத்தைப் பார்த்து நான் அதை விட சங்கடத்துக்குள்ளானேன். எதையோ சொல்லிப் பேச்சை மாற்றினேன். அவள் அம்மா நன்றியுடன் ஒரு புன்னைகை பூத்தார்.
    ஒரு நிமிடம் உட்காரவில்லை. அங்கு நான், அவள் அம்மா, ஒரு ஆயா மட்டும் தான் இருந்தோம். ஆனாலும் “அங்கிள் நான் டான்ஸ் ஆடிக் காட்டவா” என்று அவள் பாட்டுக்குத் தொம் தொம் என்று குதித்து ஆடியதும், வந்து என் கையிலிருந்த பையை என்னைக் கேட்காமலே எடுத்துப் பார்த்ததும், நான் ஃபோன் செய்யும் போது, ‘யாருக்கு அங்கிள் ஃபோன் பண்றீங்க?’ என்று நெருங்கி உட்கார்ந்ததும் ஏனோ கொஞ்சம் கலக்கத்தை உண்டுபண்ணியது.
    நான்கு அல்லது ஐந்து வயதுக் குழந்தைகள் இப்படி இருப்பது இயல்பு தான்.ஆனால் ஏழு வயது மதிக்கத்தக்க சிறுமி? புரியவில்லை. நான் செய்வதறியாமல் திகைத்து அவர் அம்மாவைப் பார்க்கும் போது தான் அவர் லேசாக, “ஏய், இங்கே வா” என்றாரே ஒழிய, மற்றபடி பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்றே அந்தக் குழந்தைக்குப் புரியவைக்கப் படவில்லை என்பது புரிந்தது. குழந்தையின் நலனுக்காக இதைச் செய்திருக்க வேண்டியது அவசியமில்லையா?
    பெரியமனுஷி போல் வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தவள், அவள் அம்மா, ‘கொஞ்சம் இவளைப் பாத்துக்கங்க’ என்று என்னிடம் விட்டுவிட்டு டாக்டரைப் பார்க்க உள்ளே சென்ற போது சின்னக் குழந்தை போல் கத்தி அழ ஆரம்பித்து விட்டாள். அதுவும் எப்படி, கண்களைக் கசக்கி வலிய வரவழைத்த ஒரு அழுகை! அதுவும் ஒரு நிமிடம் தான். திடீரென்று கண்ணைத் துடைத்துக் கொண்டு முன்போல குதியாட்டம் போடத் துவங்கி விட்டாள். அவ்வப்போது, “உங்க பொண்ணு மாதிரி ஸ்மார்ட்டான ஒரு குட்டியை நான் பாத்ததே இல்லை அங்கிள் “என்று பெரிய மனுஷி போல் ஐஸ் வைக்கவும் தவறவில்லை! அடக்கமாட்டாத சிரிப்புடன், “உங்க அம்மா இப்படிக் குதிக்கக் கூடாதுன்னு சொன்னாங்க இல்ல. இங்கு வந்து பாப்பா கூட உட்காரும்மா.” என்றேன். அவள் கேட்டால் தானே? இவள் போடும் ஆட்டத்தில் பயந்து தியானாவே பயந்து போயிருந்தாள்.!
    அவள் அம்மா வெளியில் வரும் போது,டாக்டரும் கூடவே வெளியில் வந்தார். டாக்டர் இவள் குரலைக் கேட்டு, “யாரு உங்க பொண்ணா?” என்று கேட்டார். தன்னைப் பற்றித் தான் கேட்கிறார்கள் என்று அறிந்ததும் யாரும் அழைக்காமலே உள்ளே போனவள், பதவிசாக டாக்டர் அருகில் போய் கைகட்டி நின்று கொண்டாள். அவர்கள் கேட்டதற்குச் சமர்த்தாகப் பதிலளித்தவள், “தேங்க்யூ மேம்” என்றபடியே வெளியில் வந்தாள்.
    உண்மையில் அந்தப் பெண் படு சுட்டி. குழந்தையிடம் அவள் கொஞ்சியதிலும் விளையாடியதிலும் உண்மையான அன்பு தெரிந்தது. ஆனால் எங்கும் எப்போதும் தன்னை முன்னிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற உந்துதலா, இல்லை அதிகப்படி கவனம் கொடுக்கப்பட்ட காரணமா, இல்லை அதற்கு முற்றிலும் மாறான சூழலா, என்ன காரணமெனத் தெரியவில்லை. ஆனாலும் அவளது செயல்கள் அங்கு இருந்த எல்லாருக்குமே கொஞ்சம் விசித்திரமாகத் தான் இருந்தன.
    பள்ளியில் தான் செய்த சாதனைகளைக் குழந்தைகள் பகிர்வது அழகு தான். முன்பின் அறிமுகமில்லாதவர்களிடம் கூட சட்டென்று நெருங்கி அன்யோன்யமாவதும் சில குழந்தைகளின் அழகான இயல்பு தான். எங்க ஸ்கூல்லியே நான் தான் ப்ரில்லியன்ட், என்பதும் அவள் அம்மாவுக்கும் அவளுக்குமான ஏதோ ரகசியத்தை அப்போது தான் பார்த்த ஒருவரிடம் சொல்லட்டுமா என்றதையும் எந்த ரகத்தில் சேர்ப்பது? உண்மையில் அவள் ‘பள்ளியிலேயே ப்ரில்லியன்ட்’ என்று ஆசிரியர்களால் பாராட்டப்பட்டிருக்கலாம். ஆனாலும் என் பத்து வயதில் நான் அறிமுகமற்ற யாரிடமாவது இப்படிச் சொல்லி இருந்தால் (நான் அப்படி உண்மையாகச் சொல்ல வாய்ப்பே இல்லை என்றாலும்!) என் அம்மா நன்றாகக் கொடுத்திருப்பார்கள்.
    அவளைப் பார்த்தவுடன் ஏற்பட்ட பரவசமும், மகிழ்ச்சியும் நேரம் செல்லச் செல்ல சற்றே அயர்ச்சியாக மாறியது உண்மை! உங்களுக்கு என்ன தோன்றுகிறது? Am I over reacting, just because she is some stranger’s kid?
    இது பற்றி சிந்தித்த போது நினைவுக்கு வந்த ஒரு விஷயம்: அதிகக் கோபம், முரட்டுத்தனம், இவையெல்லாம் பிரச்னைகள் என்பதைவிட வேறு பிரச்னைகளின் symptoms என்று தான் தோன்றுகிறது. மாற்று ஈடுபாடுகளின் மூலம் இவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குணப்படுத்தி விடலாம்.
    ஆனால் இரண்டு மூன்று வயதில் இயல்பாக இருக்கும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் பாங்கு, எந்த இடத்திலும் தான் தான் முக்கியம் என்ற நினைப்பு இவையெல்லாம் (Attention Seeking) வளரவளரக் குழந்தைகளிடம் குறைய வேண்டும். அதற்குப் பெற்றோர் துணை புரியவேண்டும் என்று நான் நம்புகிறேன். ஆனால் அப்படி இல்லையோ? Is modesty no longer a worthy virtue?
    Little women என்கிற புகழ்பெற்ற நாவலில் ஒரு சம்பவம் வரும். நான்கு மகள்கள் கொண்ட அம்மா தன் சுட்டியான கடைசி மகளிடம் பேசுவதாக: “கண்ணா உனக்கு நிறைய அறிவும் திறமைகளும் இருக்கு. அதுக்காக அதையெல்லாம் எப்போதுமே எல்லாரும் கொண்டாடிக்கிட்டு இருக்கணும்னு அவசியம் இல்லை. உன் அறிவும் திறமையும் நீ வளர்த்துகிட்டே போனா, உன் பேச்சிலயும் உன் செய்கைகளிலுமே அது இயல்பா வெளிப்படும். நீயா வெளிச்சம் போட்டுக் காட்டறது அழகில்லை’ என்று.
    அப்போது அவளது அக்கா ஜோ (கதையின் நாயகி) அம்மாவுடன் சேர்ந்து கொண்டு சொல்வாள், “ஆமாம், உன் கிட்ட ஏழெட்டு தொப்பி, பத்து பட்டுச் சட்டைகள் இருக்குனு காமிக்க எல்லாத்தையும் ஒண்ணு மேல ஒண்ணு போட்டுக்கிட்டு வெளிய போனா எப்படி இருக்கும்? அதே மாதிரி தான்” என்பாள்.
    உண்மை தான். சில குழந்தைகளின் பிடிவாத குணங்கள், ஓவர் ஆக்டிங் இவையெல்லாம் மற்றவர்களுக்கு ஒரு எரிச்சலை உண்டு பண்ணி விடும். இனி அந்த குழந்தைகளை பார்க்க கூட கூடாது என முடிவே கட்டி விடுவார்கள். அந்த குழந்தைகளை ஒரு சாத்து சாத்தி விடலாமா என்று கூட தோன்றும்.
    என்ன சார் குழந்தை தானே… அப்படித்தான் இருக்கும், அதுக்காக கோபப்படலாமா..? என்று உங்கள் மனதில் இப்போது கேள்வி ஒன்று எழும். உண்மையைச் சொல்லுங்கள் .. உங்கள் குழந்தையை மற்றவர்கள் விரும்பும் வகையில் உருவாக்க ஆசையா? இல்லை குழந்தையைக் கண்டாலே ஏதாவது சாக்கு போக்கு சொல்லி மற்றவர்கள் ஓடக்கூடிய சூழ்நிலையை உருவாக்க ஆசையா?
    உங்கள் குழந்தை யின் குறும்பு உங்களை ரசிக்க வைக்கும்…ஆனால் மற்றவர்களை..? யோசித்துப் பாருங்கள். அந்தக் குழந்தைகள் அப்படி வளர்வதற்கு பெற்றோரும் முக்கிய காரணமாக அமைந்து விடுகிறார்கள். சில வீடுகளில் மிகுந்த செல்லம் கொடுத்து கொடுத்தே தன் குழந்தைகளைத் தாமே கெடுத்து வைத்திருப்பதை நீங்களும் பார்த்திருக்கலாம்.
    எனவே, அதற்கான நல்ல விசயங்களைக் குழந்தைக்கு சொல்லி கொடுங்கள். பெரியவர்களிடம் எப்படி பேசுவது? எந்த இடத்தில் எப்படி நடந்து கொள்வது? மரியாதை என்றால் என்ன? மற்றவர்களை புண் படுத்தாமல் இருப்பது எப்படி, ஒழுக்க முறையைக் கற்பிப்பது; நடைமுறைப்படுத்துவது போன்ற அடிப்படை விசயங்களை இப்போது கத்துக் கொடுக்காமல் எப்போது சொல்லிக் கொடுக்க போகிறீர்கள்? அதே சமயம் சில நேரங்களில் அந்த மாதிரியான குழந்தைகளுக்கு ஹைபர் ஆக்டிவிட்டி என்ற நோயும் இருக்கலாம். அந்தக் குழந்தைகள் மிகவும் பிடிவாதக் குணத்தோடு இருப்பார்கள். யார் எதைச் சொன்னாலும் கேக்க மாட்டார்கள். எப்பொழுதும் எதையாவதைப் போட்டு உடைத்து கொண்டே இருப்பார்கள். மொத்தத்தில் ஒரு குறும்பு உலகமாகவே இருப்பார்கள். அது நல்ல விசயமில்லை. அதற்கு கண்டிப்பாக மருத்துவத்தை நாட வேண்டும்.அதனால் குழந்தைகளின் மற்றும் குழந்தை சார்ந்த பெரியவர்களின் மன நிலையில் மாற்றத்தை கொண்டு வர முடியும். இது மிகவும் அவசியம்.
    (குழந்தைகளின் தன்னம்பிக்கையை வளர்ப்பது எப்படி? அடுத்த இதழில்)

    முடியும் என்றே முன்னேறு! வெற்றி என்பதே உன்பேரு!!

    திரு. K. C. ஜெகதீஸ் சந்திரன்,
    இயக்குனர், JVM Networks மற்றும் வழிகாட்டி சிஸ்டம்ஸ் லிமிடெட், கோவை

    சந்தையில் யாரும் அறிமுகம் செய்யாத புதிய விசயங்களையே வெற்றிக்கான மூலதனமாக வைத்துக் கொண்டு தான் தேர்ந்தெடுத்த துறையில் புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்தி வெற்றி பெற்றவரும், தன் வாழ்வைக் கடவுள் ஏதோ ஒரு திட்டத்தோடு தான் படைத்திருக்கிறார்

    Continue Reading »

    தாய் மண்ணே வணக்கம்

    மாநிலங்கள் 30, 7 யூனியன் பிரதேசங்கள் கொண்ட நாடு. 1618 மொழிகள், 5 பெரிய மதங்கள், 6400 சாதிகள், 29 பெரிய விழாக்கள் – இவற்றுக்குச் சொந்தக்காரர்களாய் விளங்கும் 120 கோடி மக்கள். இந்தப் பன்மையிலும் ஒருமையைப் பேணும் உன்னத நாடுதான் நம் இந்தியத் திருநாடு.
    இந்த மண்ணுலகில் சிறந்த பண்பாடும் நாகரிகமும் கொண்ட முதல் மனித இனம் என்னும் பெருமை நம் முன்னோர்களைச் சாரும்.
    உலகப் பெரு மதங்களுள் ஒன்றான புத்த மதம் இந்தியாவில் தோன்றியது. நம் நாட்டில் வழிவழி வந்த சிந்தனை மற்றும் கலாச்சாரத்தின் அடிப்படையில் உருவான புத்த மதம் இன்று சீனா, ஜப்பான் மற்றும் தூரக் கிழக்கு நாடுகளில் இந்தியா தந்த கொடையாக நின்று ஆட்சி செலுத்துகிறது. நம் நாட்டின் இந்து மத மற்றும் ஜைன மதகருத்துகள் மேற்குறிப்பிட்ட நாடுகளில் வேறூன்றிக் கிடக்கின்றன. சுருங்கச் சொன்னால், பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இந்தியக் கலாச்சாரம் உலக நாடுகளில் பரவி விட்டது எனலாம்.
    போரில் தோற்றவர் அடுத்தடுத்துப் போர் செய்வதில் நாட்டம் கொள்ளாமல் இருப்பது உலக இயைபு. ஆனால், வென்றவர் தொடர்ந்து போர் செய்யவே விரும்புவர். விதி விலக்காக மாவீரன் அசோக மன்னன் கலிங்கத்து போரில் பெற்றமாபெரும் வெற்றிக்குப் பின்னால் போரைத் துறந்தான். கொள்ளாமை விரதம் ஏற்று நல்லாட்சி செய்தான். வட இந்திய மாமன்னன் ஷெர்சா மிகச் சிறந்த நிர்வாகத் திறன் மிக்க வெற்றியாளராகத் திகழ்ந்தான். மகாரானாப் பிரதாப் என்றமாமன்னன் அஞ்சாத சிங்கம் என ஆட்சி செய்தான். உலகப் பணக்கார பேரரசனான ஔரங்கசீப்பை ஆட்டங்காணச் செய்து தன் ஆட்சியை நிலைநிறுத்தினான் மராட்டிய மாமன்னன் வீர சிவாஜி.
    கணிதத்திற்கு அடிப்படையாக விளங்கும் பூஜ்யத்தைக் கண்டுபிடித்த கணித மேதை ஆரியபட்டா வாழ்ந்த நாடு நம்நாடு. சஷ்ருத்தர், போகர் போன்றமருத்துவ மேதைகளும், நோபல் பரிசு பெற்றசர்.சி.வி. இராமன், சுப்பிரமணியன் சந்திரசேகர், அமர்த்தியா சென் ஆகியோரும் தோன்றிய நாடு நம் நாடு.
    உலகிலேயே ஒரு விஞ்ஞானியைக் குடியரசுத் தலைவராகப் பெற்றநாடு, ஒரு பொருளாதார மேதையை பிரதமராகப் பெற்றநாடு நம் இந்திய தேசம்தான்.
    “எச்செயலையும் மாண்புறச் செய்யும் மகத்துவம் உன்னிடத்தில் உள்ளது. அதை முழுமையாக வெளிப்படுத்துவதே கல்வி” என்று உலகுக்குரைத்தவர் சுவாமி விவேகானந்தர். அமெரிக்க மக்களை இந்தியாவை நோக்கி அன்னாந்து பார்க்கச் செய்தவரும் அவரே. முதன் முதல் இளைஞர்களை ஒருங்கிணைத்து, நம் நாட்டின் பெருமைகளை அறிந்து அதன் புகழ்பாடச் செய்த மாமனிதரும் அவர்தான். அவருடைய பிறந்த நாளை (ஜனவரி 12) தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடுகிறோம். ஒரு செயலை மாண்புறச் செய்தல் என்னும் அவரது கருத்துக்கு விளக்க நூலாகத்தான் இந்த நூலை எழுதியுள்ளேன். இந்தியாவின் மற்றுமொரு மாமனிதர் மகாத்மா காந்தியாவார். அவரிடத்தில் படைவீரர் இருந்தார்களா, படைக்கருவி இருந்ததா? இல்லை. சத்தியம், அகிம்சை என்பன மட்டுமே அவரது படைக்கருவிகளாக இருந்தன. அவற்றைவைத்துதான் பிரிட்டிஷ் ஆட்சியை அடியோடு அகற்றினர். பிரிட்டிஷ் படையை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்த ஜான்சி இராணி இலட்சுமிபாய் வரலாற்று ஏடறிந்த, நாடறிந்த வீராங்கனை.
    இத்தகைய மாவீரர்களின் வீராங்கனைகளின் அதிகாரப்பூர்வமான வாரிசுகள்தாம் நாம். இதனை நீ உணரவேண்டும்.
    இந்த மணித்திரு நாட்டில் மனிதராய்ப் பிறந்தோம் என்பதை பெருமையாக நினைப்போம். ஐயாயிரம் ஆண்டுகள் பழமையான பாரம்பரியம் கொண்டவர்கள் நாம் என்பதை நினைத்துப் பார். மிகப் பழமையான நாகரிகம், பண்பாடு மற்றும் வாழ்வியல் நெறிகளைக் கொண்டவர்கள் நாம்.
    அவற்றைஉலகிற்கு கொடையாகத் தந்தவர்களும் நாம். நம்நாட்டை ஒரு வல்லமை வாய்ந்த நாடாக ஆக்குவதில் ஒவ்வொரு குடிமகனுக்கும் பங்கு உண்டு. இதனைச் செய்ய நம்மால் முடியும்.
    இன்றைக்கு அமெரிக்க நாட்டில் அமெரிக்கரை விட அதிக வருவாய் வளத்தோடு வாழ்வோர் இந்தியர்கள்தாம். நாம் ஒவ்வொருவரும் வெற்றியாளராக மாறி, அறிவியல், தொழில்நுட்பம், ஆராய்ச்சி, கல்வி, வேளாண்மை விளையாட்டு போன்றதுறைகளில் சாதனைப் படைக்க வேண்டும். நம்மால் முடியும் என்பதை சாதித்துக் காட்டியிருக்கிறோம்.

    • உலகிலேயே பெரிய படைபலம் கொண்ட நான்காவது நாடு.
    •   அதிக அளவில் இரயில்பாதைகளைக் கொண்ட மூன்றாவது நாடு.மு அதிக மனிதவளம் கொண்ட நாடு.
    •   பொருளாதராத் துறையில் வளர்ச்சியடைந்த இரண்டாவது நாடு.
    •   அதிக அளவில் எல்லும், தேயிலையும் விளையும் இரண்டாவது நாடு.
    •   மைக்கா உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாடு.
    • மக்களாட்சியை நிலைபெறச் செய்த பெரிய நாடு.

    உலகளவில் நம் இந்தியர்கள் நிகழ்த்தியுள்ள சாதனைகளைச் சற்று எண்ணிப்பார்.
    அமெரிக்காவில் வாழும் மருத்துவர்களில் 38% பேர் இந்தியர்கள்.
    அங்கு வாழும் விஞ்ஞானிகளில் 12% பேர் இந்தியர்கள்.
    நாசா வின்வெளி ஆராய்ச்சி மையத்தில் 38% பேர் இந்தியர்கள்.
    மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 34% பேர் இந்தியர்கள்.
    இன்டல் நிறுவனத்தில் 17% பேர் இந்தியர்கள்.
    IBM நிறுவனத்தில் 28% பேர் இந்தியர்கள்.
    எனவே இந்தியர்கள் எங்கும் எப்போதும் சிறப்புக்குரியவர்கள். நாம் இந்தியர் என்பதில் பெருமைகொள்வோம். வல்லரசு நாடாகும் தகுதி நமக்குண்டு. இமயம் போல் என்றென்றும் நிலைத்து நிற்கும் நம் நாட்டை வணங்கி போற்றி பாதுகாப்போம். வாழ்க இந்தியா.

    உள்ளத்தோடு உள்ளம்

    வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது உள்ளாட்சித் தேர்தல்.
    ஊருக்கு நன்மை செய்யவே உள்ளாட்சித் தேர்தல் என சொல்லிக் கொண்டு தேர்தலில் களம் இறங்கிய எல்லோருமே ஒரே ஒரு விசயத்தில் ‘ஒற்றுமையாகவே’ இருந்தார்கள் என்று உறுதியாக சொல்லலாம். அது உடன் வந்தவர்களுக்கு, உடன் இருந்தவர்களுக்கு தவறாமல் ‘சரக்கு’ வாங்கி கொடுத்து உற்சாகப்படுத்தியதுதான்.

    Continue Reading »

    உடுமலைப்பேட்டை வாசகர் வட்டம்

    உடுமலைப்பேட்டை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 12.11.2011, சனிக்கிழமை
    நேரம் : மதியம் 2 மணி
    இடம் : R.K.R.Grks. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
    தாராபுரம் ரோடு,
    உடுமலைப்பேட்டை.
    தலைப்பு :’சந்திப்போம் – சிந்திப்போம் – சாதிப்போம்!’

    தொடர்புக்கு: உடுமலை P.S.K. செல்வராஜ் – 98430 87561

    சென்னை வாசகர் வட்டம்

    சென்னையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டம் மற்றும் சென்னை சிஸ்மேன்டெக் குழுமம் இணைந்து வழங்கும் சுயமுன்னேற்றப் பயிலரங்கம்

    நாள் : 13.11.2011, ஞாயிற்றுக்கிழமை
    நேரம் : காலை 10.30 மணி
    இடம் : P.S. மேல்நிலைப்பள்ளி
    இராமகிருஷ்ணா மடம் ரோடு
    இராமகிருஷ்ணா மடம் எதிரில்
    மைலாப்பூர், சென்னை 600 004
    தலைப்பு : “ஆரோக்கியமே மூலதனம்’
    சிறப்புப் பயிற்சியாளர் : Dr.P.. திருஞானசம்பந்தம்
    இயக்குனர் ரூமி ஹெர்பல்ஸ், சென்னை
    தொடர்புக்கு : M.S.M. சோமசுந்தரம் மாணிக்கம்
    94444 01906, 98404 85595