கவிச்சுடர் அழகுதாசன்

சுந்தராபுரம்

வாழ்வை ரசியுங்கள் – அது

வளர்ச்சியின் நூலகம்

ஆழ்ந்து படியுங்கள் – அது

அறிவின் உலகம்

தாழ்த்திக் கொள்ளுங்கள் – அது

தகுதியின் சான்று

வாழ்த்திப் பழகுங்கள் – அது

வளர்தலின் மாண்பு!

 

உண்மை பேசுங்கள் – அது

உயர்ந்தோர் இலக்கணம்

பெண்மையைப் போற்றுங்கள் – அது

பெருமையின் தனிக்குணம்

கனிவாய்ப் பேசுங்கள் – அது

கருணையின் மகத்துவம்

மனிதம் பேணுங்கள் – அது

மகானின் தத்துவம்!

 

பயிற்சி செய்யுங்கள் – அது

பட்டறிவுச் சுரங்கம்

முயற்சி செய்யுங்கள் – அது

முன்னேற்றச் சக்கரம்

நயவுரை கூறுங்கள் – அது

நல்லோரின் பொன்மொழி

செயலுடன் உழையுங்கள் – அது

வெற்றிக்கு நல்வழி!