– 2018 – May | தன்னம்பிக்கை

Home » 2018 » May (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    நரையும் திரையும்

    அன்பு நண்பர்களே! நான் இதுவரை சொன்னது எல்லாம் உங்களுக்குப் பிடித்திருக்கிறதோ இல்லையோ. ஆனால், இப்பொழுது உங்களுக்கு நான் சொல்லப்போவது மிகவும் பிடிக்கும். காரணம், நான் உங்கள் நரைத்த முடியை நிரந்தரமாக இயற்கையான வழியில் கருமையாக்க அல்லது நரைப்பதைத் தள்ளிப்போட வழி சொல்லப் போகிறேன். இப்பொழுது என் கைகளை குலுக்க ஆசைதானே? எனக்கும் இதை எழுதுவதில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. அதற்கு முன் உங்கள் நரைக்குத் திரையாகப் பூசும் இரசாயனத்தின் அபாயத்தைத் தெரிந்து கொள்வோம்.

    நரைப்பருவம் வருமுன்னரே நரைத்துவிட்ட முடிக்கு அடிக்கும் இரசாயன கருப்பிற்கு பின்னால் ஒரு பயங்கரம் இருக்கிறது. அது என்னவென்றால் நம் ஆயுளை அதிரடியாக குறைக்கும் புற்றுநோய் ஆபத்துதான். இரசாயன முடிச் சாயத்தின் கருமை நிறமியானது நம் வழுவழுப்பான முடியில் ஒட்டுவதற்காக மிகத் தீவிரமான இரசாயன ஒட்டுப்பொருளை சேர்த்துள்ளனர். இந்த இரசாயன ஒட்டுப்பொருளே நம் உடல் செல்களை எதிர்வினை யாக்கமாக (Reaction) செயல்பட்டு சிதைவை உண்டாக்கு கின்றன. இப்படி அடிக்கடி நிகழும் எதிர்வினையாக்கமே நீடித்த காலத்தில் புற்று வளர்வதற்கு அடிப்படைக் காரணமாகிவிடுகிறது. அன்பு நண்பர்களே!  இளமையிலேயே வந்துவிட்ட நரையை இப்படி திரைபோட்டு மறைக்கத்தான் வேண்டுமா? அப்படி மறைத்து நமக்குள்ளே மறைவாக வளரும் புற்றுநோய் வேண்டுமா? ஆகவே, முடியின் நரையை இயற்கையான முறையில் கருப்பாக்க முனைவதே நல்லது என்று புரிகிறதா?

    அடுத்து, நாம் முடி நரைப்பதை எப்படி குறைப்பது அல்லது தள்ளிப்போடுவது என்று பார்ப்போம். நம் முடி நரைப்பதற்குக் காரணம். நம் கல்லீரலின் நீர்த்துப்போன பித்தமே காரணம். போதிய சத்தும் சக்தியும் இல்லாத நிலையில் கல்லீரலால் தரமான பித்தத்தைச் சுரக்கமுடியாமல் திணறும். நீர்த்துப்போன பித்தநீரால் மலைபோல் இருக்கும் புரதம் மற்றும் கொழுப்பைச் செரிக்கமுடியாமல்  தடுமாறும். இந்தச் சூழலில் நம் மூளையானது நம் கல்லீரலை இன்னும் அதிகமாக பித்தத்தைச் சுரக்கச் சொல்லி கட்டளையிடும். இப்படிச் சுரக்கும் பித்தமும் போதிய ஊட்டமில்லாமையால் வீணாகத்தான் போகும். இப்படி அதிகமாகத் தேங்கி விட்ட நீர்த்துப்போன பித்தப் பொருள்தான் நம் முடி வழியாக வெள்ளி வெளுப்பாக வெளிப்படுத்தப்படுகிறது. ஆக, நம் கல்லீரலை உயிர்ப்புப் பெற வைத்தால் நம் முடி நரைப்பது குறையும்.[hide]

    அடுத்து இயற்கையான முறையில் நம் முடியை கருமையாக்குவது பற்றி இனி பார்ப்போம். நுனா (Morinda tinctoria) பழத்திலிருந்து எடுக்கப்படும் நோனிச் சாறு (Noni extract), காட்டு ஜின்சங் (Ginseng), காட்டு காளான் (Ganoderma lucidum) மற்றும் சில சீன மூலிகைகளை உள்ளடக்கிய நோனி முடிக் கருமை மூலிகைக் கலவையை (Noni Black Hair Magic) பத்து நாட்களுக்கு ஒரு முறையாக மாதத்தில் மூன்று நாட்கள் பயன்படுத்தினால் நம் முடி இயற்கையான கருமையைப் பெறும். மூலிகை கலவையை கையுறை அணிந்து ஈரப்படுத்திய தலையில் தடவி முடியின் வேர் கால்களில் ஒரு 5 நிமிடங்கள் மஸாஜ் செய்ய வேண்டும். பின்னர் தலைமுடியைக் கழுவிக் கொள்ளலாம். முடியின் கருமை பழுப்பு நிறத்திற்கெல்லாம் மாறாமல் அப்படியே இருக்கும். இரசாயன சாயம் அடித்த மாதிரியெல்லாம் அட்டைக் கரியாகவெல்லாம் இருக்காது. இயற்கையான கருமையாக இருக்கும். அப்புறம் தேவைப்பட்டால் பத்து நாட்களுக்கு ஒருமுறை இதனைப் பயன்படுத்தலாம்.

    அடுத்து முடியை ஆரோக்கியமாக வைத்துக் கொண்டால் முடி நரைக்காது. நாம் பயன்படுத்தும் எண்ணெய்யானது நெல்லிக்காய் சேர்த்ததாக இருப்பது சிறப்பு. முடியின் பித்தத்தை அது குறைக்கும். அப்புறம் இரசாயன ஷாம்பு கூடவே கூடாது. முற்றிலும் இயற்கையானதும் முடியை போஷாக்காக்கும்  செரமைடு புரதத்தைக்  கொண்ட  ஷாம்புவைப் பயன்படுத்தினால் நம் முடி எப்போது குழந்தை முடியின் மென்மையோடும், ஆரோக்கியமாகவும் இருக்கும். இதுதான் என் முடி ஆரோக்கியத்தின் இரகசியமும் கூட. அப்ப உங்களுக்கு இது வேண்டாமா?

    முடி நரைக்காமல் இருக்க நாம் கல்லீரலை உயிர்ப்பாக

    வைத்துக்கொள்ள வேண்டும்.

    முடி மீது வைக்கப்படும் எதுவும்

    இயற்கையான உயிர்ப்பானதாக இருக்க வேண்டும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    நம்பிக்கை இழக்காமல் இருப்போம்

    சமீபத்தில் ஒரு நண்பரைச் சந்திக்க காஞ்சிபுரம் சென்றிருந்தேன். நான் மூன்று வருடங்கள் காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் படித்திருக்கிறேன். காஞ்சிபுரம் எனக்கு மிகவும் பிடித்தமான ஊர். காரணம் நிறைய கோயில்கள். மற்ற ஊர்களைக் காட்டிலும் விலைவாசி குறைவு. நானும் எனது நண்பன் இராமமூர்த்தியும் விடுமுறை நாட்களில் கோயில்களுக்குச் செல்லுவோம். நண்பனுக்கு வெளிநாட்டுக்காரர்களிடம் பேசி அவர்களின் நாணயங்களை சேகரிப்பது பொழுது போக்கு. படிக்கும்போதே நிறைய வெளிநாட்டு நாணயங்களை சேகரித்து வைத்திருந்தான். எனக்கு அதிலெல்லாம் பெரிதாக ஆர்வமில்லை. படிக்க வேண்டும் என்ற ஆர்வமே பத்தாம் வகுப்பிற்கு வந்த பின்னால்தான் தோன்றியது.

    என் நண்பரைச் சந்தித்து முடித்து கோயிலுக்கெல்லாம் சென்று தரிசனத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்தேன். நல்ல பசி. ஏதாவது ஒரு நல்ல ஓட்டலுக்குச் சென்று சாப்பிட்டே ஆகவேண்டும் என்று தோன்றியது. காஞ்சிபுரத்தில் இருந்த பிரபலமான அந்த ஓட்டலுக்குள் நுழைந்து அமர்ந்தேன். உணவை ஆர்டர் செய்து விட்டுக் காத்திருந்தேன். அந்த ஓட்டலில் ஸ்வாமி கிருபானந்த வாரியரின் புகைப்படத்தை மாட்டி வைத்திருந்தார்கள்.

    கிருபானந்த வாரியர் மீது எனக்கு எப்போதுமே ஒரு பெரிய பற்று உண்டு. நான் காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்த போது எங்கள் பள்ளி ஆண்டு விழாவிற்கு அவரைத்தான் சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள். வழக்கம்போல் பிரமாதமாகப்பேசி எங்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார். எனது முதல் கவிதைப்புத்தகத்தை அவருக்குத்தான் சமர்ப்பணம் செய்தேன். பழைய நினைவுகளில் மூழ்கி எழுந்தபோது ஒரு சம்பவம் நினைவிற்கு வந்தது.

    ஒருநாள் சிறுவன் ஒருவன் தனது வீட்டில் உட்கார விரும்பினான். அவன் உட்கார விரும்பிய இடத்தில் தூசுகள் படிந்திருந்தன. உடனே அதை சுத்தம் செய்துவிட்டு அந்த இடத்தில் உட்கார்ந்தான். இதை கவனித்துக் கொண்டிருந்த அவனது தாயார் மகனிடம் விசாரித்தார்.

    சற்று முன்னர் நீ என்ன காரியம் செய்தாய்?

    அம்மா, தரை தூசியாக இருந்தது. அதனால் அந்த தூசியை தட்டிவிட்டு உட்கார்ந்தேன்                 இப்போது அந்த அம்மையார் தனது மகனிடத்தில் சொன்னார்.[hide]

    இறைவனுக்கு அப்படித்தானப்பா. நம்முடைய மனசுக்குள் அழுக்கு இருந்தால் அவர் அங்கே வந்த உட்காரமாட்டார். நாம் நம்முடைய மனத்தினுள் நிறைந்திருக்கும் பொறாமை மற்றும் பல தீய எண்ணங்களை துடைத்து சுத்தம் செய்து மனத்தை மிகத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் இறைவன் அங்கே வந்து உட்காருவார்.

    தாயார் சொன்ன இந்த அறிவுரை அந்த சிறுவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த அறிவுரையை பின்பற்றி வாழ ஆரம்பித்தான் அந்த சிறுவன். அச்சிறுவன் பிற்காலத்தில் ஆன்மீகத்தில் மிக உயர்ந்த நிலையை அடைந்த திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்.

    தாயார் சொன்ன ஒரு சிறிய விளக்கம்தான். அதையும் முழுமையாக நம்பி பின்பற்றியதாலேயே வாரியார் சுவாமிகள் உய்ந்த நிலையை அடைந்தார். அம்மாவையும் அப்பாவையும் நாம் எப்போதும் மறக்கக் கூடாது. அவர்கள் சொல்வதை நாம் அப்படியே கேட்டு நடக்க வேண்டும். தற்காலத்தில் பணமிருந்தால்தான் அம்மா அப்பாவை கொஞ்சமாவது மதிக்கிறார்கள். அதையும் எழுதிக் கொடுத்துவிட்டால் அந்நியராக்கி விடுகிறார்கள்.

    நான் ஆர்டர் செய்த உணவு வந்தது. பசி அதிகமாக இருக்கவே மடமடவென்று சாப்பிட ஆரம்பித்தேன்.

    இரண்டு மூன்று காய்கறிகளை வைத்திருந்தார்கள். அதில் ஒரு காயை எடுத்துச் சாப்பிடும்போது திடீரென்று லால் பகதூர் சாஸ்திரி ஞாபத்திற்கு வந்தார்.

    நம்முடைய முன்னாள் பாரத பிரதமர் லால் பகதூர் சாஸ்தூரி அவர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவம் இது. சாஸ்திரி இந்தியாவின் ரயில்வே துறை அமைச்சாராக பணியாற்றிக் கொண்டிருந்த சமயத்தில் அரியலூரில் மிகப்பெரிய ரயில் விபத்து ஒன்று நடைபெற்றது. அதற்கு தார்மீது பொறுப்பேற்று தனது ரயில்வே அமைச்சர் பதவியை சாஸ்திரி ராஜினாமா செய்துவிட்டார்.

    வீட்டிற்குத் திரும்பியதும் தனது துணைவியாரை அழைத்தார். அவர் வீட்டில் எப்போதும் இரண்டு காய்கறிகள் செய்வது வழக்கம்.

    “நான் எனது பதவியை இராஜினாமா செய்துவிட்டேன். நமது குடும்பச் செலவை குறைத்தாக வேண்டும். எனவே இனி ஒரு காய்கறியை செய்தால் போதும்”

    இந்த காலத்தில் இப்படி யாரையாவது ஒருவரை நாம் பார்க்க இயலுமா? யோசித்துப் பாருங்கள்.

    பில்லுக்கான பணத்தைக் கொடுத்து விட்டு வெளியே வந்து நின்று கொண்டிருந்தேன். சற்று நேரம் அங்கேயே நின்று ஓய்வெடுக்க வேண்டும் என்று என் மனசு கட்டளையிட்டது. அதை ஏற்று நானும் அங்கேயே நின்று கொண்டு வருவோர் போவோரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

    நான் பச்சையப்பன் பள்ளியில் படித்த நாட்கள் என் நினைவிற்கு வந்து மனதுள் நிழலாடின. எவ்வளவு இனிமையான நாட்கள் அவை. எத்தனை நண்பர்கள் எல்லாருமே வேறு வேறு மாதிரியான மனநிலையில் இருப்பார்கள். ஆனால் இப்போது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அனைவருமே ஒரே மாதிரியான மனநிலையில்தான் இருக்கிறார்கள். அது அவர்களின் பெற்றோர் அவர்கர்களுக்குச் செய்த போதனை. ஒன்று ஐஐடி இல்லையேல் டாக்டர் மற்ற படிப்பெல்லாம் வேஸ்ட். எல்கேஜியில் இருந்தே பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கும் ஒரு விஷயம் என்னவென்றால் அமெரிக்காவிற்கு சாஃப்ட்வேர் கம்பெனிகளில் வேலைக்குச் சேர்ந்து இலட்சலட்சமாய் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான். எப்போது நம் பிள்ளைகள் எடுத்த எடுப்பிலேயே நாம் இப்போது வாங்கும் சம்பளத்தைவிட ஐந்து மடங்கு அதிகம் சம்பாதிக்க ஆரம்பிக்கிறார்களோ அப்போதே அவர்கள் நம்மைவிட்டு விலகிச் செல்ல ஆரம்பிக்கிறார்கள் என்பதை பெரும்பாலான பெற்றோர்கள் உணர்தவே இல்லை. நம் அப்பா இத்தனைக்காலம் குப்பை கொட்டி என்ன பிரயோஜனம். இருபது வருடங்களாக குப்பை கொட்டியும் வெறும் இருபதாயிரம் தானே சம்பாதிக்கிறார். நான் எடுத்த எடுப்பிலேயே எண்பதாயிரம் சம்பாதிகிறேனே என் அப்பாவை விட நான் தானே உயர்ந்தவன். இந்த நினைப்பு ஒவ்வொரு மகனுக்கும் மகளுக்கும் வருவது இயற்கை. இதுதான் மனித மனசு. அந்த இருபதாயிரம் சம்பளத்தில்தானே அப்பா பலப்பல தியாகங்களைச் செய்து தன்னை படிக்க வைத்து இந்த அளவிற்கு உயர்த்தியிருக்கிறார் என்பதை ஒருகணம் நினைத்துப் பார்க்க மறந்து போகிறது மனசு.

    நாங்கள் பள்ளியில் படித்த காலத்தில் எங்களுக்கென எந்த கொள்கையும் கிடையாது. அப்போதெல்லாம் ஊரில் யாரோ நான்கு அல்லது ஐந்து மாணவர்கள் மட்டுமே எஞ்சினியரிங் அல்லது மருத்துவம்  படிப்பார்கள். மற்றவர்கள் பள்ளிப்  படிப்பை முடித்ததும் டைப்ரைட்டிங் ஷார்ட் ஹேண்ட் கற்றுக் கொள்ள வேண்டும். முடிந்தவர்கள் கல்லூரிக்குச் சென்று டிகிரி முடித்து விட்டு எம்ப்ளாயிண்ட்மென்ட் எக்ஸ்சேஞ்சில் பதிவு செய்து விட்டு காத்திருக்க வேண்டும். எப்போதாவது நடத்தப்படும் சர்வீஸ் கமிஷன் பரிட்சையை எழுதிவிட்டு நிச்சியம் வேலை கிடைக்காது என்று தெரிந்தும் காத்திருக்க வேண்டும். சாமர்த்தியம் உள்ளவர்கள் சிபாரிசு அல்லது பணம் கொடுத்து வேலையை வாங்கி விடுவார்கள்.

    மூதறிஞர் இராஜாஜிக்குப் பழக்கமான ஒருவர் தன் பையனை அழைத்துக் கொண்டு வந்தார்.

    “இவன் என்னோட பையன். பி.எஸ்.சி படிச்சிருக்கேன். ஒரு இன்டர்வியூ வந்திருக்கு. நீங்க ஒரு வார்த்தை சொன்ன இவனுக்கு வேலை குடுத்துடுவாங்க”

    இதைக் கேட்ட இராஜாஜி அந்த பையனை அருகில் அழைத்து ஒரு விஷயத்தைச் சொன்னார்.

    “உங்களுக்கு உன் மேலேயோ உன்னோட படிப்பு மேலேயோ நம்பிக்கை இல்லை. அதனாலேதான் சிபாரிசை நம்பறாரு. நீ இனி எங்கே வேலை தேடிப் போனாலும் உன்னோட படிப்பையும் திறமையையும் மட்டும் நம்பிப் போ நிச்சயம் உனக்கு வேலை கிடைக்கும்”

    இராஜாஜியின் பேச்சைக் கேட்ட அந்த இளைஞனின் மனதில் புதிய நம்பிக்கை பிறந்தது.

    அந்த காலத்திலேயே அந்த நிலை என்றால் இப்போது கேட்கவே வேண்டாம். இராஜாஜியைப் போன்ற தலைவர்களை இப்போது பார்பது அபூர்வம். இராஜாஜியின் பேச்சைக் கேட்டு நடந்த அந்த நம்பிக்கை இளைஞனனும் இப்போது இருப்பதாய் தெரியவில்லை.  எது எப்படி இருந்தாலும் நாம் நம்பிக்கை இழக்காமல் இருப்போம். நாட்டில் இன்னமும் நல்லவர்கள் நடமாடிக் கொண்டுதான் இருகிறார்கள்.

    இப்படியெல்லாம் யோசித்தபடி ஓட்டல் வாசலில் நின்று கொண்டிருந்தேன். அப்போது என்னிடம் பிச்சை கேட்டு ஒரு நடுத்தர வயதுக்காரன் வந்து நின்றான். பார்ப்பதற்கு உடலில் எந்த குறையும் இல்லை. நன்றாகத்தான் இருந்தான். பின் எதற்காக இந்த புரொபஷனைத் தேர்ந்தெடுத்தான் என்று எனக்குப் புரியவில்லை. ஒரு வேளை இது சுயதொழில் என்பதால் இந்த புரொபஷனைத் தேர்ந்தெடுத்தான் என்று எனக்குப் புரியவில்லை. ஒரு வேளை இது சுயதொழில் என்பதால் இருக்கலாம் என்று தோன்றியது.

    இந்த சமயத்தில் எனக்கு ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வந்தது.

    தன்னிடம் பிச்சை கேட்டு வந்த ஒரு இளைஞனை நோக்கினார் நபிகள் நாயகம். அந்த இளைஞன் நல்ல உடல் பலத்தோடும் ஆரோக்கியத்தோடும் இருப்பதை அறிந்தார். நபிகள் அந்த இளைஞனிடம் உன் வீட்டில் பொருட்கள் ஏதாவது இருக்கிறதா என்று விசாரித்தார். அதற்கு அவன் தன்னிடம் ஒரு பாத்திரம் போர்வையும் இருப்பதாய் பதில் சொன்னான். சரி உடனே சென்று அவற்றைக் கொண்டுவா என்று அனுப்பி வைத்தார். சற்று நேரத்தில் அந்த இளைஞன் இரண்டு பொருட்களையும் எடுத்துக் கொண்டு வந்தான்.

    நபிகள்  அங்கிருந்தவர்களிடம் அந்த இரண்டு பொருட்களையும் ஏலத்தில் விடுவதாய் கூறினார். இதன்மூலம் இரண்டு திர்ஹம் நாணயத்திற்கு உணவைச் சாப்பிடுமாறு கூறினார். மற்றொரு நாணயத்தை அவனிடம் கொடுத்து நல்ல கோடாரி ஒன்றை வாங்கி வரும்படியும் கூறினார். அந்த இளைஞன் நபிகள் சொன்னது போலவே செய்தான்.

    “இந்த கோடாரியை வைத்து காட்டிற்குச் சென்று மரங்களை வெட்டி விற்று பிழைத்துக் கொள். பத்து நாட்கள் கழித்து வா”

    நபிகள் சொன்னது போலவே செய்தான். பத்துநாட்கள் சென்ற பின்னர் ஒருநாள் அவன் நபிகளை வந்து மகிழ்ச்சியோடு சந்தித்தான்.

    “தாங்கள் சொன்னது போலவே செய்தேன். பத்து திர்ஹம் நாணயங்கள் இப்போது என்னிடம் இருக்கின்றன. யாரிடமும் பிச்சை கேட்டுப் பிழைக்கும் நிலை இப்போது இல்லை. எனவே மகிழ்ச்சியோடு நான் வாழ்க்கையை நடத்துகிறேன்”

    இரந்து உண்பவர்களை இறைவன் ஒருபோதும் விரும்பமாட்டான். உழைப்பிற்குத் தகுந்த பலனை அவன் எப்போதும் நமக்குத் தர தயாராய் இருக்கிறான்.

    நபிகள் நாயகம் அந்த இளைஞனை வாழ்த்தி அனுப்பி வைத்தார்.

    நானும் அந்த இளைஞனுக்கு நபிகள் சொன்னதைப் போல அறிவுரை சொல்லாமா என்று ஒருகணம் யோசித்தேன். எதற்கு வம்பு. நல்லதைப் சொன்னால்தான் யாருக்கும் பிடிக்கமாட்டேன் என்கிறதே. இவனிடம் வாயைக் கொடுத்து எதற்கு வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டும் என்று நினைத்து அவனைப் பார்க்காதது மாதிரியே அங்கிருந்து மெல்ல நழுவினேன். வெளியே வந்தேன். ஒரு ஷேர் ஆட்டோ தயாராய் இருந்தது. ஏறி பேருந்து நிலையத்திற்கு வந்து இறங்கினேன்.[/hide]

    இந்த இதழை மேலும்

    தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு

    (Persistent diarrhea)

    வரையறை

    ஒரு குழந்தைக்கு 14 நாட்களுக்கு மேல் தொடர்ச்சியாக பேதி இருந்தால் அதை நாம் தொடர்ச்சியான வயிற்றுப்போக்கு என்று கூறுகிறோம்.

    நீண்ட வயிற்றுப்போக்கு (Protracted Diarrhea)

    வயிற்றுப்போக்கு இரண்டு வாரங்களுக்கு மேல் வந்து, குழந்தை வாய் வழியாக உணவு எடுக்காமல் ஊட்டச்சத்து குறைந்து இரத்தக்குழாய் வழியாக ஊட்டச்சத்து கொடுத்தால் அது Protracted Diarrhea என கூறப்படும்.

    நாள்பட்ட வயிற்றுப்போக்கு (Chronic Diarrhea)

    உணவு ஒழுங்காக ஜீரணம் ஆகாததாலும் ஓழுங்காக உறிஞ்சப்படாததாலும் திடீரென்று எந்த ஒரு தொற்றலும் இல்லாமல் வயிற்றுப் போக்கு 14 நாட்களுக்கு மேல் இருந்தால் அதை நாள்பட்ட வயிற்றுப்போக்கு என்று கூறப்படுகிறது.

    நோய் தொற்று காரணங்கள்

    • பாக்டீரியா ( ஷிஜெல்லா)
    • ஒட்டுண்ணி ( என்டமிபா ஹிஸ்டாலிட்டிகா)
    • வைரஸ்
    • ஹச்.ஐ.வி
    • ஊட்டச்சத்துக் குறைபாடு
    • பாரம்பரியம்
    • மாட்டுப்பாலினால் ஏற்படும் ஒவ்வாமை
    • லேக்டோஸ் ஒத்துக் கொள்ளாததால்

    அறிகுறிகள்

    • தொடர்ச்சியாக வயிற்றுப்போக்கு
    • சோம்பிக் காணப்படும்
    • ஊட்டச்சத்து குறைபாடு
    • நீர் பற்றாக்குறை
    • ஜிங்க் (Zinc) பற்றாக்குறையால் ஏற்படும் வீக்கம்

    கண்டறியும் முறை

    • முழு இரத்தப் பரிசோதனை
    • மலப்பரிசோதனை
    • இரத்தத்தில் சர்க்கரையின் அளவு மற்றும் யூரியா, கிரியேட்டினின் தாது பொருட்கள், முதலியவை கண்டறிய வேண்டும்.
    • எண்டோஸ்கோப்பி (Endoscopy)
    • கொலனோஸ்கோப்பி (Colonoscopy)சில சமயங்களில் நாம் இந்த நோய்க்கான காரணத்தைக் கண்டறிய முடியாது.[hide]

    சிகிச்சை முறை

    தொடர்ச்சியான வயிற்றுப்போக்கை மூன்று நிலைகளாகப் பிரித்து சிகிச்சையளிக்க வேண்டும்.

    1. உடனடி அவசர சிகிச்சை முறை

    (Phase of Resuscitation)   இந்த நிலையில், குழந்தையின் உடலில் உள்ள நீர்ச்சத்தைக் கண்டறிந்து அதற்குகேற்றாற் போல் நீர்ச்சத்து அளிக்க வேண்டும். அமீபியாசியஸிஸ், ஜியார்டியாசிஸ் – இவற்றிற்கு மெட்ரோனிடசோல் மாத்திரை அளிக்க வேண்டும். காலரா இருந்தால் டாக்சிசைக்கிளின் மாத்திரை அளிக்க வேண்டும்.

    1. சத்தான உணவு முறை (Phase of Renourishment)
    • கைக்குழந்தை 6 மாதத்திற்குக் கீழ் இருந்தால் தாய்ப்பாலைத் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.
    • தாய்ப்பால் கொடுக்காத குழந்தைகளுக்குத் தாய்ப்பால் ஆரம்பிக்க வேண்டும்.
    • தொடர்ச்சியாக வயிற்றுப்போக்கு இருக்கும் குழந்தைகளுக்கு லேக்டோஸ் ஒத்துக்கொள்ளாமல் இருக்கும். ஆகையால் அக்குழந்தைகளுக்கு லேக்டோஸ் இல்லாத உணவுகள் அளிக்க வேண்டும்.

    ஆறு மாதத்திற்கு மேல்

    • ஆறு மாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்குப் பருப்பு, தானியம், மற்றும் தயிர் கொடுக்க வேண்டும்.
    • தாய்ப்பால் இருந்தால் அதைத் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.
    • தானியங்களில் அரிசியே சிறந்தது. இவை எளிதாக ஜீரணமாகும்.

    உணவு ஊட்டும் முறைகள்

    நாம் கொடுக்கும் உணவு 1 கிராமிற்கு 1 கிலோ கலோரியாக இருக்க வேண்டும். இவை குழந்தையின் எடைக்கு ஏற்ப ஒரு கிலோவிற்கு 110 கிலோ கலோரிஸ் சக்தி அளிக்க வேண்டும். பின்பு இதை 150 கிலோ கலோரியாக உயர்த்த வேண்டும். உணவுக்குச் சுவை கூட்டுவதற்குக் காய்கறி எண்ணெயும் சேர்க்க வேண்டும். குழந்தைக்கு இதன் மூலம் முன்னேற்றம் இருந்தால் மேலும் ஒரு வாரத்திற்குத் தொடரலாம்.

    நுண்சத்துக்களைக் கொடுக்க வேண்டும் (Micro nutrient Supplementation)

    முதலில் இயற்கை முறையில் கொடுக்கலாம் அல்லது வைட்டமின், இரும்பு சத்து, ஜிங்க் முதலியவற்றை மாத்திரையாகத் தர வேண்டும். இரும்புச்சத்து முக்கியமானது. இது ஒரு நாளைக்கு 3 மிகி/கிலோ தர வேண்டும்.

    வைட்டமின் ஏ – வாய்வழி

    <6 மாதம் – 50,000, 6 – 12 மாதம் 1 லட்சம் யூனிட்ஸ். >12 மாதங்கள் 2 லட்சம் யூனிட்ஸ்.

    வைட்டமின் கே – ஒரு முறை 5 – 10 மி.கி., தசை (அ) இரத்தக்குழாய் மூலமாக.

    ஜிங்க் – 2 மி.கி. /கிலோ/நாள்

    இரும்புச்சத்து – 3 மி.கி. /கிலோ/நாள், வயிற்றுப்போக்கு நின்றபின் கொடுக்க வேண்டும்

    காப்பர் – 0.3 மி.கி. /கிலோ/நாள்

    சிகிச்சை தோல்வியடைதல்

    இதை எப்படி கண்டறிவது என்றால் நீர்ச்சத்து குறைபாடு திரும்ப உருவாகும். மலம் கழிக்கும் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 6 முறைக்கு மேல் இருக்கும். தேவையான உணவு கொடுத்தாலும் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு உடல் எடை கூடாது. ஒரு வகைப்பாடு படி உணவு கொடுத்தால் அதை ஏழு நாட்களுக்குக் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அந்த சிகிச்சை தோல்வியில் முடியும்.

    சிகிச்சை வெற்றியடைந்ததற்கான அறிகுறிகள்

    • மலம் கழிக்கும் முறை குறைதல்
    • தேவைக்கேற்ப வாய்வழி உணவு எடுப்பது
    • எடை அதிகரித்தல்
    • காய்ச்சல் குறைதல்

    ஊட்டச்சத்து குறைந்த குழந்தைகளுக்கு நாள்பட்ட வயிற்றுப்போக்கு (Chronic diarrhoea) ஏற்படும் போது அளிக்கும் உணவு அடிப்படையிலான சிகிச்சை

    • உணவு அடிப்படையில் தொடர் வயிற்றுப்போக்கிற்கு சிகிச்சை அளிப்பது சிக்கலான ஒன்று.
    • இந்த குழந்தைகளால் அனைத்து வகையான உணவுகளையும் உட்கொள்ளும் சக்தி இருக்காது.
    • புரதச்சத்து இரத்தத்தில் குறையும் போது ஆல்புமின் இரத்தக்குழாய் வழியாக கொடுக்கப்படும்.
    • மாவு சத்து மற்றும் குறைந்த அளவு புரதச்சத்தை முதலில் கொடுக்க வேண்டும். அதன் பின்னர் புரதச்சத்தின் அளவை அதிகரிக்க வேண்டும்.

    நாள்பட்ட வயிற்றுப்போக்கிற்கான சிகிச்சை

    உணவுப்பொருட்களினால் ஏற்படும் ஒவ்வாமை

    மாட்டுப்பால் ஒவ்வாமை குழந்தைகள் மத்தியில் 2 முதல் 5 சதவிகிதம் பரவலாக காணப்படுகிறது.

    இந்தியாவில் 13 சதவிகித குழந்தைகள் இரண்டு வயதிற்கு குறைவானவர்களுக்கு நாள்பட்ட வயிற்று போக்கு ஏற்படுகிறது.

    முட்டை, கோதுமை, மீன், கடலை போன்றவற்றால் ஒவ்வாமை சில குழந்தைகளுக்கு ஏற்படுகிறது.

    மாட்டுப்பாலினால் ஒவ்வாமை ஏற்படும் குழந்தைகளுக்கு மாட்டுப்பாலிற்குப் பதில் வேறு பால் கொடுக்கலாம்.

    1. புனரமைப்பு முறை (Phase of Rehabilitation)

    குழந்தைகளின் உணவு முறையைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

    குழந்தையின் வளர்ச்சியைக் கவனித்து அதற்கேற்றார் போல் உணவு முறையை மாற்றி அமைக்க வேண்டும்.

    தொடர்ச்சியான வயிற்றுப் போக்கைத் தடுக்கும் முறை

    • சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும்.
    • சரியான முறையில் உணவு ஊட்ட வேண்டும்.
    • கைக் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும், மாட்டுப்பால் கொடுக்கக் கூடாது.
    • பிறந்த குழந்தைக்கு முதல் 6 மாதத்திற்குத் தாய்ப்பால் மட்டும் கொடுக்க வேண்டும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    வெற்றியை நோக்கிப் பயணம் செய்யுங்கள்!

    நீங்கள் எந்தச் செயலிலும் வெற்றி பெற வேண்டுமானால், “வெற்றி பெற வேண்டும்” என்ற குறிக்கோளை மனதில் கொண்டு, அந்த எண்ணத்திலேயே ஆழ்ந்திருக்க வேண்டும். அந்த எண்ணத்தை நீங்கள் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும். முதலை, ஒரு விலங்கைப் பற்றிக் கொண்டால், அவ்வளவுதான்!  அதன் வாயில் மாட்டிக் கொண்ட விலங்கு தப்பிக்கவே முடியாது. முதலை தான் பிடித்த பிடியையும் விடாது. அதுவோல நீங்களும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருக்க வேண்டும்.

    உங்களுடைய வெற்றி உங்களால் உண்டு பண்ணப்படுகின்றது. மற்றவர்களால் அல்ல என்பதை நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். “இந்தச் செயலில் நான் வெற்றி பெறுவேன்” என்று நீங்கள் கூறுவதோடு உங்களை நீங்கள் நம்ப வேண்டும். நம்பிக்கை ஒன்றுதான் உங்களுடைய வெற்றியின் படிக்கட்டுகளாக அமையும்.

    வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தை நிறைவேற்றுவதற்கு இடைவிடாமல் முயற்சி செய்யுங்கள்!  கடுமையாக உழையுங்கள், உங்களைத்தேடி வெற்றி என்ற காதலி ஓடோடி வருவாள். “வெற்றி மகத்தானதுதான். ஆனால் தோல்வி அதை விட மனத்தானதாக இருக்கும்” என்று கூறுகிறான், வால்ட் வில்மன் ஏனென்றால் அனுபவங்களை நமக்குக் கற்றுத் தருகின்ற ஆசானாகத் தோல்வி விளங்குகிறது.

    நீண்ட காலமாக ஒருவர் உழைத்துக் கொண்டே இருக்கிறார். ஆனால் அவர் எதிர்பார்த்த வெற்றிகிட்டவில்லை. காரணம் என்ன என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் செக்குமாடு  போல ஓயாமல் உழைத்துக் கொண்டிருந்தாரே தவிர அவரிடம் திட்டமிட்ட உழைப்பு இல்லை. திட்டமிட்ட உழைப்பு அவரிடம் இருந்திருந்தால், வெற்றிக்கன்னி அவரை வட்டமிட்டு வளைத்துக் கொண்டிருப்பாள்![hide]

    நீங்கள் மிகவும் விரும்பும் தொழில் மீது நாட்டம் கொண்டால், அதிலேயே கண்ணுங்கருத்துமாக இருக்க வேண்டும். “இந்தத் தொழிலில் நான் வெற்றிக் கொடி நாட்டியே தீருவேன்! என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டு, அந்தத் தொழிலை அக்கறையோடு செய்து முயன்று முன்னேற வேண்டும். ஆயிரம் பேர்கள், நீங்கள் மேற்கொண்ட முயற்சிகளை அசைப்பதற்கும், அழிப்பதற்கும், கெடுப்பதற்கும் முன்வருவார்கள். இதற்கெல்லாம் நீங்கள் அசைந்து கொடுக்காமல், எவருடைய கேலிப் பேச்சுக்களுக்கும் மனம் வருந்தாமல், மிகவும் பிடிவாதக் குணத்தோடு இருந்து, அந்தத் தொழிலில் வெற்றி காண வேண்டும். எனவே சலிப்படையாமல், நீங்கள் உழைத்துக் கொண்டே இருங்கள். சோம்பலைக் கடலில் தள்ளி விட்டுச் சோர்வடையாமல் பாடுபடுங்கள். வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும். தளர்ச்சியில்லாமல் உழைத்தால் மட்டுமே உங்களுக்கு வருங்காலத்தில் நல்ல வளர்ச்சி கிட்டும். இதன்மூலம் உங்களுடைய மனம் மிகுந்த மலர்ச்சியைப் பெறும். “நான் விரும்பிய துறையில் வெற்றி பெற்றே தீருவேன்!” என்று சங்கல்பம் எடுத்துக் கொண்டு, மெய்வருத்தம் பாராமல் உழைத்துக்கொண்டே இருங்கள். உங்களுக்கு வெற்றி எப்படி கிடைக்காமல் போகும்? வெற்றி வெற்றி என்று முழங்கிக் கொண்டே முன்னோக்கிச் சொல்லுங்கள். நீங்கள் கட்டாயம் வெற்றி பெறுவீர்கள்

    நீங்கள் மிகச்சிறந்த தடகள வீரனாக வரவேண்டும் என்று மிகவும் விரும்புகிறீர்கள். சும்மா ஆசைப்பட்டால் போதுமா? அதில் தீவிரம் காட்ட வேண்டும். ஒலிம்பிக் போட்டிகளில் உலக சாதனை நிகழத்தும் போட்டிகளில் நீங்கள் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வாங்க வேண்டுமென்று கனவு காண்கிறீர்கள். அந்தக் கனவை நனவாக்க நீங்கள் இடைவிடாமல் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மிகச் சிறந்த பயிற்சியாளரை அணுகி, அவரிடம் பயிற்சி பெற வேண்டும். பயிற்சியாளர் கூறும் அறிவுரைகளைத் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். நீங்கள் முத்தாண்டல் போட்டியிலும், நீளத்தாண்டல் போட்டியிலும், 400 மீட்டர், 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கிறீர்கள். இவைகளுக்குத் தகுந்த பயிற்சிகளை, உங்கள் பயிற்சியாளர், முறையாகச் சொல்லிக் கொடுப்பார். நீங்கள் நல்ல சக்தியைப் பெற ஊட்டச்சத்துள்ள உணவுகளை உண்ண வேண்டும்.

    இவைகளெல்லாம் முறையாக நடக்கும் போதே, உங்கள் உள்ளத்தில் வெற்றி வெற்றி பெறுவேன்” என்ற வைராக்கிய விதையை விதைக்க வேண்டும். முறையான பயிற்சிகளும், இடைவிடாத முயற்சிகளும், உழைப்பும், மன உறுதியும் இருக்குமானால், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் நீங்கள் கலந்து கொண்டு, முதலிடத்தைப் பெறுவது மட்டுமின்றி, சிறந்த சாதனைகளையும் படைத்துக் காட்டுவீர்கள். நான்கு தங்கப்பதக்கங்களை வென்ற“மாபெரும் வீரர்” என்ற பெருமையையும் பெறுவீர்கள் இத்தனை வெற்றிகளும், பாராட்டுக்களும் நீங்கள் சும்மா இருந்திருந்தால் வந்திருக்குமா? சும்மா இருந்திருந்தால், ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் இடத்தின் வாசலைக்கூட நீங்கள் மிதித்திருக்க முடியாது. உறுதியான நெஞ்சம், கடுமையான உழைப்பும், இடைவிடாத முயற்சியும், தொய்வில்லாத முறையான பயிற்சியும், எவராலும் அசைக்க முடியாத நம்பிக்கையும் உங்களிடத்தில் இருந்தால் நீங்கள் மிகச்சிறந்த வெற்றிகளைப் பெறுவீர்கள்

    நீங்கள் முயற்சிகளையும், பயிற்சிகளையும் மேற்கொள்ளும்போது, பல இடையூறுகள், எதிர்ப்புகள் ஆகியவைகள் வரத்தான் செய்யும். அவைகளைக் கண்டு நீங்கள் பயப்படவே கூடாது. தேவையில்லாத அச்சம், பதட்டம், உங்களுடைய ஆற்றலையும், சக்கதியையும் வீணாக்கி உங்களைத் துன்பத்தில் ஆழ்த்திவிடும்.

    நீங்கள் மேற்கொள்ளும் செயலில் பல இடையூறுகள் வரத்தான் செய்யும் அந்த இடையூறுகளை நீங்கள் துச்சமாக மதித்து, முன்னேறுவதிலே நாட்டம் கொள்ளுங்கள். ஆயிரம் இடையூறுகள் உங்களுக்கு வரட்டுமே அவைகளைக் கடந்து நீங்கள் முன்னேற வேண்டும்.

    நீங்கள் அருமையான குறிக்கோளைமனதிலேவைத்திருந்து, அதைச் செயல்படுத்துவதற்குத் தீவிரம் காட்டுவீர்கள்! பலபேருக்கு உங்களுடைய குறிக்கோள் பிடிக்காமலிக்கலாம். அதற்காக நீங்கள் மேற்கொண்ட குறிக்கோளைக் கைவிட்டு விட வேண்டுமா, என்ன? ஒரு போதும் உங்களுடைய குறிக்கேளைக் கைவிட்டு விடாதீர்கள். இந்த விஷயத்தில் நீங்கள் மிகவும் பிடிவாதமாக இருங்கள். பலரும் உங்களை விமர்சனம் செய்வார்கள். “இவர் வறட்டுப் பிடிவாதக்காரராக இருக்கிறார். இவருடைய கொள்கை சரியில்லை என்று இவரிடம் சொன்னால் அதை ஏற்றுக் கொள்ள இவர் மறுக்கிறார்”. என்று பலரும் சொல்லத்தான் செய்வார்கள். கொள்கையில் மிகுந்த நாட்டம் கொண்டு அந்தக் கொள்கையில் வெற்றி பெறுவதற்கு மிகுந்த பிடிவாதமுள்ளவராக இருக்க வேண்டும். நன்மையைத் தரக்கூடிய இந்தப் பிடிவாதம் மட்டுமே ஒரு மனிதனுக்குக் கட்டாயம் வேண்டும்.

    நீங்கள் வறட்டுப் பிடிவாதமுடையவராக இருந்து, முரட்டுப் பிடிவாதமுடையவராக இருந்து, நீங்கள் எந்தக் குறிக்கோளில் மிகுந்த நாட்டம் கொண்டிருக்கிறீர்களோ, அந்தக் குறிக்கோளை நிறைவேற்றுவதற்குப் பாடுபடுங்கள்.

    இந்தக் குறிக்கோள் வெற்றி பெற்றால், உங்களைப் பலவாறு விமர்சனம் செய்த உத்தமர்கள், உங்களைத் தேடி வந்து உங்களைப் புகழ்ந்து தள்ளுவார்கள்.

    என்னால் வெற்றி பெறமுடியாது என்று நீங்கள் நினைத்தால் எந்தக் காலத்திலும் நீங்கள் வெற்றி பெறவே முடியாது. வெற்றி பெறுவேன் என்று நீங்கள் எண்ணுங்கள். உங்களுடைய எண்ணங்களுக்கு எவராலும் தகர்க்க முடியாத வலிமை உண்டு என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எனவே நிறைவேறக் கூடிய ஆசைகளை மட்டுமே எண்ணுங்கள். அந்த ஆசைகள் கண்டிப்பாக நிறைவேறும், உங்களுடைய தளராத உழைப்பின் மூலம்.

    “உலகிலேயே மிகச் சிறந்த பணக்காரனாக விளங்க வேண்டும்” என்று நீங்கள் நினைத்தால் அதைத்தவறு என்று சொல்ல முடியாது. முயற்சியும், கடினமான உழைப்பும், இருந்தால் நீங்கள் சிறந்த பணக்காரராக விளங்க முடியும். டாடா, பிர்லா, அம்பானியைப் பின்னுக்குத் தள்ளி விட்டு நீங்கள் முன்னுக்கு வர முடியும் “இந்த உலகத்தை ஆட்டிப் படைக்கும் கடவுளாக நான் மாற வேண்டும்” என்று நீங்கள் நினைத்தால் இது நடக்கிற காரியமா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். தேவையில்லாத இந்த எண்ணங்களை வெட்டியெறிந்து விட்டு உண்மையான வெற்றியைப் பெறுவதற்கு முழுமுயற்சியோடு உழையுங்கள்.

    மிகுந்த இலட்சியத்தோடு நீங்கள் பாடுபடும் போது எவருமே எதிர்பார்க்காத வெற்றி உங்களுக்குக் கிடைக்கும். உங்களுக்குப் பல இடையூறுகள் வந்த போதிலும், மனதில் உறுதி கொண்டு, வெற்றியை நோக்கிப் பயணம் செய்யுங்கள்! எல்லோரும் பாராட்டும்படி முழு வெற்றி உங்களுக்குக் கிடைக்கும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    உலகில்லை உழவனின்றி

    இந்திய இளைஞர்களே உழவன் என்பவன் அவனுக்காக மட்டும் உழைப்பவன் அல்ல.

    இந்த உலகத்துக்காக வியர்வை சிந்தி உழைப்பவன் ஆவான். உழவனது உழைப்பு உழவனுக்கு மட்டும் பயன்படுவதில்லை.

    இந்த உலகத்துக்கும் பயன்படுகிறது.

    இப்படி இருக்கையிலும் உழவன் மனித சமுதாயத்தாலும், அரசாங்கத்தாலும் மதிக்கப்படுவதில்லை. மாறாக மிதிக்கப்படுகிறான்.

    உலகின் உயிர்த்தொழிலான பயிர்த்தொழில் இன்றைய சூழ்நிலையாலும், தவிர்க்க முடியாத பல காரணங்களினாலும் நாளுக்கு நாள் நலிவடைந்து கொண்டே வருகிறது.

    விவசாயத்தைக் கண்டுகொள்ள சரியான சட்டமும் இல்லை; முறையான திட்டமும் இல்லை.

    தான்  உற்பத்தி செய்த பொருள்கள் பல்வேறாகப் பின்னப்பட்டு, வடிவமைக்கப்பட்டு நம் முன் இருக்கின்ற நவீனப் பொருட்கள் எல்லாம் விவசாய உற்பத்தியின் பிரதிபலனாக உருவானவையாகும்.

    மதிக்கப்பட வேண்டிய உழவன் ஏன் மிதிக்கப்படுகின்றான்? இதற்கெல்லாம் காரணம் என்ன? உழவனுக்குள்ளும் உழவுக்குள்ளும் இருக்கும் மகிமையையும், சிறப்பையும், பெருமையையும், அவசியத்தையும், இதுவரை யாரும் அறிந்ததில்லை அதனால் தான்.

    உழவனின் பெருமையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

    அவ்வாறு நாம் அனைவரும் தெரிந்து கொண்டோமானால், உழவனையும், உழவுத் தொழிலையும் வணங்கத் தொடங்கி விடுவோம்.

    உழவுக்குள் எத்தனை விசயங்கள் மறைந்துள்ளன; அடங்கியுள்ளன.

    தாழ்வு மனப்பான்மையுடன் உழவர்கள் தொழில் செய்யக்கூடாது.

    முதலில் இவ்வுலகத்திற்கும், உலக வளர்ச்சிக்கும், உழவுத் தொழிலுக்கும் என்ன தொடர்பு என்பதையும், இதன் தேவையையும் முதலில் உழவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

    அப்படித் தெரிந்து கொண்டு, உங்கள் தொழிலை நீங்கள் செய்யும் போது தான் உங்களுக்குள் இருக்கும் ஆர்வம் அதிகரிக்கும், தாழ்வு மனப்பான்மை ஒழியும். உழவுத் தொழிலே உலகில் உயர்ந்தது என்பதை நாம் அனைவருமே அறிந்து கொள்ள முடியும்.

    விவசாயத்தில் எத்தனை எத்தனை சிறப்பம் சங்கள் அடங்கியுள்ளன.

    உலகையும் உழவையும் உழவனையும் மனதில் கொண்டு, உழவனின்றி உலகில்லை என்ற தலைப்பில் யாம் எழுதிய தனிப் புத்தகத்திலிருந்து இதோ ஒரு சில பக்கங்களை உங்களுக்குக் காண்பிக்கின்றேன்.

    உலகின் முதுகெலும்பாக விவசாயம் தான் அன்று முதல் இன்று வரை இருக்கின்றது என்பதைப் பெரும்பாலானோர் உணர்ந்து கொள்ளவில்லை.

    கம்ப்யூட்டரிலும், இன்டர்நெட்டிலும் நாமெல்லாம் வேலை பார்த்து வாழ்க்கையை நாகரீகமாக நடத்துகிறோம், காட்டிலும் சேற்றிலும், மேட்டிலும் அநாகரீகமாகத் தொழில் செய்து வாழ்கிறார்கள் உழவர்கள் என்ற நகரவாசிகள் விவசாயிகளை அலட்சியமாக எடுத்துக் கொள்கின்றனர்.[hide]

    நகரக்காரர்கள் எல்லாம்,  என்று கொஞ்சம் ஆழமாகச் சிந்திக்கின்றனரோ அன்று தான் தெரியும். இந்த உழவும், உழவனும் இல்லையென்றால் தாம் பயன்படுத்தும் கம்ப்யூட்டரும், இன்டர்நெட்டும் வாழும் இந்த உலகமும் இல்லை என்று.

    அப்படித் தெரிந்துகொண்ட பின்பு உழவுக்கும் உழவனுக்கும் வந்தனை செய்வார்கள்.

    தமிழின உழவனே ஒரு கணம் யோசி

    உழவும் தமிழும் உலகிற்கு உயிர்

    உலகம் இயங்க உழவனின் பங்கு அதிகம். உழவனே இந்த உலகம் நிலைத்து நிற்க நீ மிகமிக அவசியம்.

    உலகம் உன்னைச் சுமக்கவில்லை; உலகத்தை நீ சுமக்கின்றாய்.  உழவனே உனது உற்பத்திகளால் உலகம் செழிப்பினிலே.

    உனது ஏர்ப்படை நின்றால் பாரதத்தின் பார்ப்படை கூட நின்று விடுமடா! உனது ஏர்ப்படையால் நாட்டின் பல தடைகள் தகர்க்கப்படுகின்றன.

    உலகத்தில் உள்ள வளங்கள் அனைத்தும் இப்பூமியில் இருந்தே எடுக்கப்படுபவை தான்.

    அப்பேர்ப்பட்ட அனைத்து வளங்களும் அடங்கிய பூமி உழவனாகிய உன் கையில். உனது உற்பத்தி நின்றுவிட்டால் உலகம் இயங்குவதில் கூடத் தடை ஏற்பட்டுவிடும்.

    அரசியல்வாதிக்கு அன்று மட்டும் உண்ணாவிரதம் தானடா! ஏழை மக்களுக்கு என்றும் உண்ணாவிரதம் ஏனடா?

    கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை வாழும் ஏழை மக்களுக்கு கஞ்சிக் கலயம் தானடா?

    ஆண் பெண்ணைச் சார்ந்தோ,

    பெண் ஆணைச் சார்ந்தோ,

    தாய் பிள்ளையைச் சார்ந்தோ,

    பிள்ளைகள் தாயைச் சார்ந்தோ,

    பூமி சூரியனைச் சார்ந்தோ,

    சூரியன் பூமியைச் சார்ந்தோ,

    தலைவன் தொண்டனைச் சார்ந்தோ,

    தொண்டன் தலைவனைச் சார்ந்தோ,

    உயிர் உன்னைச் சார்ந்தோ,

    உன்னை உயிர் சார்ந்தோ இல்லையோ…

    ஆனால் உலகம் உன்னைச் சார்ந்தது தானடா!

    ஒரு கணம் சிந்தித்தால் வைரத்தின் மதிப்பை விட  உன் வயலின் மதிப்பு அதிகமடா!

    வங்கக் கடலில் புயல் நின்றும் நாட்டில் வறுமை ஏனடா? பாபிலோனிலுள்ள தொங்கும் தோட்டத்தைவிட நமது விவசாயியின் தோட்டம் அதிசயமானதடா!

    உனது வயல் வெளிப் பயணம் நின்று விட்டால் அனைவரும் பட்டினியால் சொர்க்கரதப் பயணம் தானடா!

    உனது வயல் வெளிப் பயணம் நின்றிருந்தால் இந்தியனின் அயல்வெளிப் பயணம் ஏதடா?

    பாரினில் உனது பங்கு அதிகமடா!

    உலகம் சுற்ற உழவனின் கைகள் தேவையடா! விஞ்ஞானத்தை விட விவசாயம் தான் நாட்டிற்கு முதல் தேவையடா!

    இப்படியிருந்தும் உனக்குள் ஒரு அஞ்ஞானம் ஏனடா?

    இரயில் வரத் தாமதம் ஆகுதடா! உனது பயிர் வரப் பாரினில் தாமதம் இல்லையடா?

    காந்தி விரும்பிய கதராடை இளைஞன் நீயடா!

    விவேகானந்தர் கேட்ட விஞ்ஞான இளைஞன் நீயடா!

    கார் பிடிப்பவனது கை சுகாதாரக் கேடு விளைவிக்குதடா!

    ஏர் பிடிக்கும் உனது கை சுற்றுலா மையம் அமைக்குதடா!

    நாட்டிலுள்ள மரம், செடி, கொடி, மலைகளை விட நமது இனம் அதிகமடா!

    நாட்டில் உள்ள மலைகளைவிட உயர்ந்து நிற்பது நமது தமிழினம் தானடா!

    இமயம் தொடுவது நமது தமிழனம் தானடா!

    நாம் ஒன்றாகக் கூடி நின்றால் எவரெஸ்ட்டும் நம்மிடம் நம் இனத்திடம் தோற்றுவிடுமடா!

    உலகளவு உள்ளதும் உலகில் எங்கும் உள்ளதும் நமது தமிழ் இனம் ஒன்று மட்டும் தானடா!

    உலகெங்கும் உள்ளதும் உலகில் அனைத்து நாட்டவர்களும் செய்யக் கூடிய செயலும், பணியும் விவசாயம் ஒன்று மட்டும் தானடா![/hide]

    இந்த இதழை மேலும்

    சிறுநீரக கற்களுக்கு உணவு பழக்கம் காரணமா?

    மனித உடலில் சிறு நீரகங்களின் பங்கு அபரிமானதாகும். அவை உடலில் சேரும் கழிவுகளை சுத்திகிரித்து ஆரோக்கிய வாழ்வை தருகிறது. இந்த சிறுநீரகங்களில் கற்கள் ஏற்பட என்ன காரணம்? என்பது தொடர்பாக டாக்டர் கௌரி சங்கர் செந்தில்வேலிடம் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    சிறுநீரகங்கள் எந்த பகுதியில் உள்ளன?

    எல்லோருக்கும் 2 சிறுநீரகங்கள் செயல்படுகின்றன. சிறுநீரகம் முதுகுதண்டின் இருபுறமும் விலா எழும்பின் கீழ் பகுதியில் அமைந்துள்ளது. ரத்தத்தில் உள்ள நட்சுப்பொருட்கள் மற்றும் உடலில் உள்ள தேவைக்கு அதிகமான நீரை வெளியேற்றுகிறது.

    சிறுநீரக கற்கள் உருவாவதற்கான காரணங்கள் என்ன?

    கால்சியம் ஆக்சலேட், யூரிக் அமிலம் போன்ற பொருட்களின் அளவு சிறுநீரில் அதிகமானால் கற்கள் உருவாக வாய்ப்பு உள்ளது. இவை படிக உருவம் பெற்று, பெரிதாகி சிறுநீரக கற்களாகிவிடுகிறது.

    சிறுநீரக கற்களுக்கான அறிகுறிகள் யாவை?

    சிறுநீரக கல் சிறுநீர்க்குழாய் நோக்கி (UR-WTER) நகரும் போது துடிக்க வைக்கும் வலி, விட்டு விட்டு வரும். வலி, ஒற்றை முதுகு வலி மற்றும் கற்கள் நகர்கவதை பொருத்து விலா எலும்புகளின் நடுவிலோ, வயிற்று பகுதியின் கீழோ, பிறப்பு உறுப்புகளின் பக்கமாகவோ ஏற்படலாம். சிறுநீரில் ரத்தம் கழிதல், வலி அதிகமானால் வாந்தி ஆகியவை ஏற்படும். சிலருக்கு வலி இல்லாமல் வேறு பரிசோதனையின்போதும் தெரிய வரலாம்.

    சிறுநீரக கற்கள் உள்ளதா? என்பதை உறுதி செய்வது எப்படி?

    சி.டி ஸ்கேன் அல்லது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மற்றும் சிறப்பு எக்ஸ்ரே மூலமாகவும் கண்டு பிடிக்கலாம்.

    அறுவை சிகிச்சை இல்லாமல் சிறுநீரக கற்களை அகற்ற முடியுமா?

    முடியும். 5-7 மி.மீ. அளவிலான கற்கள் வேறு சிகிச்சையின்றி வெளியேறிவிடும். 9 மி.மீ மேலான கற்கள் சிறுநீர்க்குழல் வழியாக வெளியேறுவது கடினம். அப்போது மின் அலைகளை செலுத்தி கல் நொறுக்குதல் சிகிச்சை (Eswl -லித்தோடிரிப்ஸி) கற்கள் சிறுநீரகம் மற்றும் சிறுநீர்க்குழல் (மேல்பகுதி)யில் இருக்கும் போது பரிந்துரைக்கப்படலாம்.[hide]

    சிறுநீரக கற்கள் ஏற்படுவதை தடுப்பது எப்படி?

    ஒரு நாளைக்கு 1.5-2 லிட்டருக்கு மேலான சிறுநீரைக் கழிப்பதற்கான அளவு நீரும், பழசாறுகளையும் குடிக்கவும். புரதச்சத்துள்ள உணவுகளை (இறைச்சி, மீன், பருப்பு, முட்டை) குறைத்துக் கொள்ள வேண்டும். போதுமான அளவு மட்டும் கால்சியம் எடுத்துக் கொள்ளவும். கருப்பு தேநீர், பச்சை கீரைகள், சோயாக்கள் மற்றும் சாக்லேட்டுகள் போன்ற ஆக்ஸலேட் உடைய உணவுகளை தவிர்க்க வேண்டும்.

    சிறுநீரக கற்களுக்கான சிகிச்சை என்னென்ன?

    அறுவை சிகிச்சை இல்லாமல் சிறுநீரக கல் அகற்றுதல், (ESWL), நீர்க்குழல் உட்காட்டி (URE-TEROSCOPY) சிறுதுளை வழியாக சிறுநீரை கற்கள் அகற்றுதல் (PNCL), 8 செ.மீ வரையிலான கற்களையும் சிறுதுளை வழியாக எடுத்துள்ளோம்.

    மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு சிறுநீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகையால், சிறந்த உணவு பழக்கத்தை பின்பற்றுவதன் மூலமாக சிறுநீர் சம்பதமான உபாதைகளில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமான வாழ்க்கை வாழலாம். இவ்வாறு அவர் கூறினார்.[/hide]

    இந்த இதழை மேலும்

    சாதுர்யம்

    அப்பா

    என்னை பேஸ்கட்பாலில் சேர விடுங்கப்பா

     என்று சிணுங்குகிறாள் செல்ல மகள்.. ‘

    இங்கே பார் ஒழுங்கா தர்சாதம் எல்லாம் சாப்பிட்டு கொஞ்சம் சதைப்பிடி கொஞ்சம் பலமாயிரு உடனே சேர்த்துக்கலாம்.. பேஸ்கட் பாலில் வேகம் ரிஃபளக்ஸ், எனர்ஜி எல்லாமே தேவைப்படும்.. நீங்க காலை நேரத்தில் பி.வி. சிந்து மாதிரி முனரைக்கெல்லாம் எழுந்திரிக்காட்டியும் அட்லீஃஸ்ட் ஐந்தரைக்காவது தானா கண் விழிச்சு உடற்பயிற்சி செய்ய போலாம்ங்க அப்பானு நாம பயிற்சி செய்யலாம். அதன்பிறகு உனக்கு ரிப்ஃளக்ஸ் கூடும்.. இல்லைன்னா அக்கா மாதிரி ரிஸ்ட்ல( மணிக்கட்டு) ஃபராக்சர் ( எலும்பு முறிவு) ஆகிடும் என்று அப்பா சைன்ஸ் ( அறிவியல் ) கலந்து மகளின் உணர்வுகளோடு மோதுகின்றார். இது நிறைய வீடுகளில்  நிகழ்கின்ற சமாச்சாரங்கள் தான்…

    ரீஃப்ளக்ஸ் (உடன் பிரதி செயல் வினை ஆற்றல்- என்று ஒரு முழத்திற்கு தயக்கத்தோடு தமிழ்படுத்தி திருப்தி அடையலாம்.) ரிஃப்ளக்ஸ் என்பது நமது உடலின் மீது மூளை செலுத்தும் ஆதிக்கம். மூளை  நினைக்கும் வேகத்தில் உடலால் செயல் புரிய வைக்கும் ஆற்றல். மகாகவி பாரதியோட நல்லதோர் வீணை செய்தே பாட்டில் விசையறு பந்தினை போல மனசு சொல்ற இடம் நோக்கி பாய்கின்ற உடல் வேண்டும் என்று சொல்லி இருப்பார் அது விளையாட்டு வீரர்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

    தொடர்ந்து பயிற்சி அத்தகைய ஆற்றலை உடல்மன காம்போ (இணை)க்கு கொடுக்கின்றது. கிரிக்கெட்டில் வீராட்கோலியை ப்ரண்ட் புட் ஆஃப் ட்ரைவ் ஆடுவது மாதிரி ஒரு கச்சிதமான ரிஃப்ளக்ஸ் வர.. பலமுறை ஆடிய நினைவாற்றல் அப்புறம் அதைத் தொடர்ந்து இது அப்படி பிரில்லியண்ட் என்று சொல்லப்படும் மெச்சப்படும் அதி அற்புதமான மெமரி லாஜிக் காம்பினேஷன் இதைத்தான் சமயோஜிதம் என்று பாராட்டுகின்றார்கள் பெரியோர்கள்.

    மிச்சிகன் பல்கலைக்கழகத்திலே ஆராய்சியாளர்கள் மெமரிஸ்டர் அப்படீன்னு ஒரு சிலிக்கான் அடிப்படை யிலான எலக்ட்ரானிக் பொருளை கண்டு பிடிச்சிருக்காங்க.. இதை கொள்கலன் கணினி செயல்பாட்டு முறையின் புத்தம் புது வெளியீடு என்று சொல்லலாம். இந்தக் கொள்கலன் கணினி முறைகள் தகவல்களை சேகரித்து நினைவகமாக மாறி கிட்டத்தட்ட மூளை நரம்புமாதிரி மாறி இயந்திரங்களை மனுசங்க மாதிரி யோசிக்க கத்துக் கொடுக்கின்றதாம்.[hide]

    உதரணமாக இப்போ ஒருத்தர் பேசிகிட்டிருக்கார்னு வெச்சுப்போம். பத்தி வாக்கியங்களிலே.. அவர் அடுத்து இந்த சொற்றொடரைத்தான் சொல்வார் என்று எந்திரமே யூகிச்சி சொல்லிவிடுமாம். லாஜிக் என்பதை தர்க்கம் என்று மொழி பெயர்த்தால் இப்படியானவர்கள் இப்படித்தான் ஏற்றஇறக்கங்களோடு பேசுவார்கள். ஆற்றலோடு எழுதுவார்கள் என்று தர்க்க முறைப்படி நரம்பு வலைப்பின்னல்களைப் போன்ற மின்னனு மெமரிஸ்டர்கள் உத்தேசமாக இயந்திரகதியில் சிந்தித்து சொல்லிவிடுமாம், அமெரிக்காவில், உதரணமாக நெத்திலி மீன் கருவாடு என்றால் என்று சொன்னால்.. பூனை பொம்மைக்கு உமிழ்நீர் சுரக்கும் அளவும் சப்புக்கொட்டும் அளவும் இயந்திர புத்திசாலித்தனம் உயர்ந்து கொண்டு போக உள்ளது என்று கற்பனை செய்யலாம்.

    மெமரிஸ்டர்கள்..  இன்றைய தேதிக்கு நிஜம் (கிள்ளினால் வலிக்கும் பாருங்கள்) இவை நம் மேஜை மீது சாதுவாக  உட்கார்ந்திருக்கும் டெஸ்க் டாப் கம்ப்யூட்டருக்குள்ளே உள்ள மெமரி சிப் மாதிரிதான் வடிவமைக்கப் பட்டுள்ளது.. என்று ஒன்று.. இவை புள்ளி விவரங்களை சேமித்து வைப்பதோடு தர்க்கரீதியான லாஜிக் வேலையும் சேர்த்து செய்யுமாம் மெமரிஸ்டர்களை இனி நம் அன்றாட வாழ்க்கையில் பேசப்படப் போகின்றது. நாயர் கடை டீ மாதிரி..

    சமயோஜிதத்தை மெமரிஸ்டர்கள் கற்றுக்கொள்வதற்குள் மகள்கள் சாதுர்யமாகி விடுகின்றார்கள்.. இப்படித்தான் ஒரு நாள் ஆறுமணிக்கு மகளை எழுப்பிக் கொண்டு இருந்தோம்.. அப்பா முன்றரை மணிக்கெல்லாம் எழுந்து  நாலரை வரைக்கும் எக்ஸர்ஸைஸ் பண்ணிட்டு இப்போதாம்ப்பா மறுபடி தூங்கறேன் விடுங்களேன் என்று பதில் வந்தது போர்வைக்குள்ளிருந்து சாதுர்யம்..[/hide]

    இந்த இதழை மேலும்

    வெற்றி உங்கள் கையில் – 53

    தீர்வு எங்கே

    வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் பிரச்சினைகள் வந்து கொண்டு தான் இருக்கின்றது. “ஏழையாய் இருப்பதுதான் எனக்குப் பிரச்சினை. நோய் வந்தால்கூட தீர்க்க முடியவில்லை. நன்றாக சாப்பிட முடியவில்லை. படுத்தால் தூக்கம் வரவில்லை. குழந்தைகள் கேட்பதை வாங்கித் தர முடியவில்லை. சொந்தமாக வீடு இல்லை. உறவுக்காரர்களின் உதவி இல்லை” என ஒரு பக்கம் வறுமையில் வாடுபவர்களும், ஏழ்மை நிலையில் இருப்பவர்களும் கவலைக்கொள்கிறார்கள்.

    “வாழ்க்கையில் பணக்காரனாகி விட்டால் எந்தக் கவலையும் இல்லை. பிரச்சினைகளும் இல்லை” என்று அவர்களில் சிலர் நினைக்கிறார்கள்.

    பணக்காரனாகி விட்டால், பிரச்சினைகளும், கவலைகளும் ஓடிவிடுமா? இது சிலரது கேள்வி.

    இந்தக் கேள்விக்கு விடை காண உலகிலுள்ள முக்கிய உளவியல் வல்லுநர்கள் முயன்றுள்ளார்கள். அவர்களின் ஆய்வுப்படி “ஏழைகளுக்கு மட்டுமல்ல, பணக்காரர்களும் கண்ணீர் வடிக்கிறார்கள். கவலைப்படுகிறார்கள். பிரச்சினைகளோடுதான் வாழ்கிறார்கள்” என்று கண்டறியப்பட்டுள்ளது.

    “அக்கறைக்கு இக்கறை பச்சை” என்பதைப்போல மனிதர்களில் சிலர் ஒருவர் வாழ்வை எண்ணி பொறாமைப்படுகிறார்கள். ஏழையாய் இருப்பவர்களில் சிலர்,“பணக்காரர்கள் நிம்மதியாக இருக்கிறார்கள்” என்று நினைக்கிறார்கள். அதேவேளையில் பணக்காரர்களாக இருப்பவர்களில் பலர் “ஏழையாய் இருந்தால் இந்த தொந்தரவு இல்லை. பணத்தையும் பாதுகாக்க முடியவில்லை. உறவுகளையும் அரவணைத்துச் செல்ல முடியவில்லை. யாரையும் நம்ப முடியவில்லை” என்று வேதனைப்படுகிறார்கள்.

    எது சிறந்த வாழ்க்கை?.

    “பணக்கார வாழ்க்கையா?”“பரம ஏழை வாழ்க்கையா?” என்பது இப்போது விடை காண முடியாத கேள்வியாக மாறிவிட்டது. எந்த வாழ்க்கை வாழ்ந்தாலும், பிரச்சினை என்பது தவிர்க்க இயலாத ஒன்றாக மாறிவிட்டது. இதனால், பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது என்பதைப்பற்றிதான் நமது சிந்தனை அமைய வேண்டும். மாறாக,“ஐயோ எனக்குப் பிரச்சினை இருக்கிறது” என்று அலறி துடிப்பவர்களின் வாழ்க்கை பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுவிடுகிறது.[hide]

    எந்தப் பிரச்சினை வந்தாலும் எதிர்கொள்ளும் நம்பிக்கை கொண்டவர்கள் பிரச்சினைகளுக்கான தீர்வினை காண்கிறார்கள். நல்ல தீர்வை அவர்களால் இனம் கண்டு கொள்ள முடியாவிட்டாலும், ஆலோசனைகளை அனுபவமிக்கவர்களிடம் பெற்று வாழ்க்கைப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கிறார்கள்.

    அது ஒரு கார் தயாரிக்கும் நிறுவனம்.

    ஏராளமான பணியாட்கள் அங்கு வேலை செய்தார்கள். அவர்களில் ஒருவன் இளைஞன். சுறுசுறுப்பானவன். அதிக திறமை கொண்டவன். புத்திசாலி.

    புத்தம் புது வடிவங்களில் கார் தயாரிப்பதில் அதிக ஆர்வம் காட்டினான். அவனுக்கு வேண்டிய எல்லாவிதமான உதவிகளையும் நிறுவனம் வழங்கியது. ஆராய்ச்சியின் முடிவில் புதிதாக, நவீன வசதிகள்கொண்ட, சிறிய கார் ஒன்றைத் தயாரித்தான். பின்னர் தனது மேலதிகாரியிடம் அதனை காண்பிப்பதற்கு காரை ஓட்டிச் சென்றான்.

    புதிய வடிவத்தில் அமைக்கப்பட்ட அந்தக் காரை பார்த்த மேலதிகாரி மகிழ்ந்தார். பாராட்டினார்.

    “இந்தக் கார் வித்தியாசமாக உருவாக்கப் பட்டிருக்கிறது. இத்தனை வசதிகள் கொண்ட எந்தக் காரையும் இதுவரை நமது போட்டியாளர்கள் யாரும் தயாரிக்கவில்லை. எனவே, கம்பெனியின் சி.இ.ஓ. விடம் அனுமதி வாங்கி, இந்த வகை கார்களை நிச்சயம் தயாரிப்போம்” என்று உறுதி கூறினார் மேலதிகாரி.

    அவர் கூறியதுபோலவே அனுமதி வாங்கி, புதிய காரை தயாரிக்க ஆரம்பித்தார்கள். ஏராளமான காரை தயாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆயிரக்கணக்கான கார்களை தயாரித்து முடித்தபின்பு, அந்தக் கார்களை விற்பனை பிரிவுக்கு எடுத்துச்செல்ல முயற்சி செய்தார்கள்.

    அப்போதுதான் அங்கு ஒரு பிரச்சினை எழுந்தது.

    கார் தயாரிப்புப் பிரிவில் இருந்து விற்பனை பிரிவுக்கு காரை எடுத்துச்செல்லும் வழியிலுள்ள வாசலின் உயரம், காரின் உயரத்தைவிட குறைவாக இருந்தது. காரின் உயரம் அதிக இருந்ததால் அந்த வாசல் வழியாக கார்களை விற்பனைப் பிரிவுக்கு கொண்டுசெல்ல முடியவில்லை. அனைவரும் அதிர்ந்து போனார்கள்.

    ஒரு நல்ல செயலை தொடங்கிவிட்டு, ஒரு பிரிவிலிருந்து இன்னொரு பிரிவிற்கு காரை கொண்டுசெல்ல முடியவில்லையே? என்று வருந்தினார்கள். புதிய வகை காரைக் கண்டுபிடித்த இளைஞன் வருத்தத்துடன் காட்சியளித்தான்.

    உற்பத்தி பிரிவிலிருந்து விற்பனை பிரிவுக்கு எப்படி காரைக் கொண்டு வருவது? என்று சிந்தித்தவர்கள் அவரவர் பாணியில் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தார்கள்.

    “விற்பனை பிரிவின் வாசலை இடித்துவிட்டு அதன் உயரத்தைக் கூட்டினால் பிரச்சினை தீர்ந்தது” என்றார் ஒருவர்.

    “வாசலை உடைக்க வேண்டிய அவசியமில்லை. கொஞ்சம் அட்ஜெட்ஸ்ட் செய்து நேராக காரை ஓட்டினால் காரை வெளியே கொண்டுவந்துவிடலாம். சின்ன கீறல்கள் மட்டும் காரின் கூரையில் ஏற்படும். பிறகு,’பெயிண்ட்’ அடித்து அந்தக் கீறல்களை சரிசெய்துவிடலாம்” என்றும் ஆலோசனைகள் சொன்னார்கள்.

    வாசல் இடிப்பா? புதிய காரில் கீறலா? – இரண்டு விதமான கருத்துக்கள் களம் இறங்கி அவர்களைக் குழப்பியது. இதைக் கவனித்த வயதான ஒருவர், அங்கிருந்த மேலதிகாரியிடம் பேச வந்தார்.

    “ஐயா நான் படிக்காதவன். அவ்வளவாக விவரம் தெரியாது. ஆனால், எனக்கு ஒரு யோசனைத் தோன்றுகிறது. சொல்லாமா?”- என்று பவ்வியமாகக் கேட்டார் முதியவர்.

    “எடுபிடி வேலை செய்யும் இந்தக் கிழவனுக்கு என்ன தெரியப்போகிறது?” என்று ஏளனமாக அவரைப் பார்த்தார்கள்.

    முதியவர் தனது கருத்தைப் பணிவாகத் தெரிவித்தார்.

    “ஐயா நமது தொழிற்சாலையின் விற்பனை பிரிவின் வாசலைவிட, இந்தக் கார் ஒரு ‘இன்ஞ்’ உயரம்தான் அதிகமாக இருக்கிறது. இதனால், நாம் பிரச்சினையை எளிதாக சமாளித்துவிடலாம். காரில் உள்ள நான்கு டயர்களின் காற்றைதேவையான அளவு வெளியே எடுத்துவிட்டு, பின்னர், காரை வாசல் வழியாக வெளியே கொண்டுவந்துவிடலாம். கார் வெளியே வந்தபின்பு, நான்கு டயர்களிலும் போதுமான அளவுக்கு காற்று அடைத்துவிட்டால், கார் பழைய நிலைக்கு வந்துவிடும். இதனால், எந்த சேதாரமும் யாருக்கும் இல்லை பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்துவிடும்”- என்று சொல்லிவிட்டு அமைதியானார் வயதானவர்.

    அனைவரும் ஆச்சரியமாக அவரைப் பார்த்தார்கள்.

    புதிய காரின் பிரச்சினைக்குத் தீர்வு சொன்ன முதியவரைப்போல, பல பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்ல நம்மைச்சுற்றி பலர் இருக்கிறார்கள். “நமக்குத்தான் பிரச்சினை இருக்கிறது” என்று எண்ணி அந்தப் பிரச்சினையைப் பற்றி தனியாக சிந்திக்காமல், அனுபவம் உள்ளவர்களிடம் அனுபவ வழிகாட்டல்களை கேட்காவிட்டால் அதனால் ஏற்படும் இழப்பு பேரிழப்பாக மாறிவிடும்.

    எல்லா பூட்டிற்கும் சாவி இருப்பதுபோல எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வு இருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொருவரின் அனுபவத்திற்கு ஏற்ப அந்தப் பிரச்சினைக்கு அவர்கள் தீர்வு காண்கிறார்கள். அனுபவம் இல்லாதவர்கள் “எனக்கு போதிய அனுபவம் இல்லையே” என்று வருத்தப்படுவதற்கு பதில், சரியான நேரத்தில், சரியானவர்களின் வழிகாட்டுதல்களை பெறமுயற்சி செய்ய வேண்டும். ஒருவரின் அனுபவம் கலந்த வாழ்க்கைப் பாடங்கள் மற்றவர்களின் உயர்வுக்கு அடித்தளம் அமைப்பது மட்டுமல்ல, வாழ்க்கையின் சிகரத்தைத் தொடுவதற்கான முக்கிய காரணியாகவும் அமைந்துவிடுகிறது.

    அதிக அறிவு பெற்றிருந்தாலும், ஆராய்ச்சியின் முடிவுகளின் அடிப்படையில் செயல்பட்டாலும், நடைமுறைக்கு ஒவ்வாத செயல்கள் வெற்றியைத் தராது என்பதை இந்த “புதிய கார் வடிவமைப்பு அனுபவம்” நமக்கு உணர்த்துகிறது.

    சூழலுக்குஏற்ப மாற்றிக்கொள்ளவும், தேவைக்கு ஏற்ப மற்றவர்களின் வழிகாட்டல்களைப் பெறவும் மனத்தைப் பழக்கிக்கொண்டால், எந்தச் செயலிலும் எளிதில் வெற்றி பெறலாம். வீண் பிடிவாதமாக “நான் சொல்வதுதான் சரி” என்றஉணர்வோடு செயல்படும்போது, சில நேரங்களில் சறுக்கல்களும், சந்தோஷக் குறுக்கீடுகளும் வந்து சேர்ந்துவிடுகிறது.

    நமது கருத்துக்கு மாறாக மற்றவர்கள் கருத்துக்களைத் தெரிவித்தாலும், அதனை எதிர் கருத்தாகவும், எதிரிக் கருத்தாகவும் நினைப்பதை தவிர்த்துவிட்டு ஏற்றம் தரும் கருத்தாக நினைக்கப் பழகிக்கொண்டால், வாழும் நாளில் நாளும் சொர்க்கத்தைக் காணலாம்.[/hide]

    இந்த இதழை மேலும்

    வாழ நினைத்தால் வாழலாம் அறிவின் அர்த்தம்

    “பல்லாக்கை தூக்காதே பல்லாக்கில் நீ ஏறு”

    என்பதே உங்கள் வாழ்வை உயர்த்தும் ஒரே வழி.

    வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் வாசக நண்பர்களே !

    குருகுல காலம் தொட்டு ஆசிரியர்களும், ஞானிகளும் அறிவைப்பற்றி எத்தனையோ விஷயங்களை, விளக்கங்களை நமக்கு அளித்துள்ளார்கள்.  அவைகளில் பல அறிவுரைகளாகவும், போதனைகளாகவும் நம் கருத்துக்களத்தில் பொதிந்து கிடக்கின்றது.  சில படிப்பினைகளாகவும் நமக்கு அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

    அறிவாளியாக இருப்பது எப்படி என்று மட்டும் நாம் தெரிந்துகொள்ளாமல், சாமர்த்தியக்காரனாக இருப்பது எப்படி என்றும் நம் புத்திக்குப் புகட்டி இருக்கிறோம்.  அவற்றை சரியான விதத்தில் நமது வளர்ச்சிக்கு உதவும் வகையில் பயன்படுத்துகிறோமா? என்ற கேள்விக்கு ஒவ்வொருவரின் மனசாட்சியே பதில் சொல்ல முடியும்.

    கண்ணன் அர்ச்சுனனுக்கு போர்களத்தில் சொன்ன விஷயங்கள் – படிப்பினையா?

    சகுனி போர் நடக்கும் முன்பும், நடக்கும் போதும் சொன்ன விஷயங்கள் – படிப்பினையா?

    முன்னது, அறிவின் சரியான பாதை – பின்னது அறிவின் அழிவுப்பாதை!

    ஒருவரது புத்திக்கூர்மை – மற்றவரை ஏமாற்ற உதவும் ஒரு வழியாக இருந்தால் – அந்தப்பாதை அழிவுப்பாதை தான்.

    ஆயிரமாயிரம் ஆண்டுகால வரலாறு கொண்ட மனித இனத்தின் இன்றைய பிரஜைகளே நீங்களும் நானும். வரலாறு படைக்கும் பொறுப்பும் நமக்கும்  இருக்கின்றது.

    ஆதிவாசியாக, காட்டில் விலங்கோடு விலங்காக வாழ துவங்கிய மனித இனம், அதே விலங்கிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ள போராடியதும், விலங்கையே தனது உணவாக எண்ணினால் – ஆச்சரியம்தான் நமக்கு விடையாக.

    ஆக! ஆனந்தமான வாழ்வுக்கு “அறிவு” அவசியம் என்று அறிக!

    இன்றைய சூழலில் அறிவு எப்படிப்பட்டதாய் இருக்க வேண்டும்?

    “அறிவு” தனிமனித வாழ்க்கையின் தரத்தை உயர்த்துவதாய்

    “அறிவு” சிக்கல்களை தீர்க்கும் சிறப்பான யோசனையாய்

    “அறிவு” அவலங்களைப் போக்கும் அற்புத ஆசானாய்[hide]

    “அறிவு” வளர்ச்சிப்பாதையின் வழிகாட்டியாய்

    “அறிவு” தலைமுறைகளுக்கும் பயன்படும் தாரக மந்திரமாய்

    “அறிவு” தோல்விகளை தடுக்கும் கேடயமாய்

    “அறிவு” துரோகங்களை துளைக்கும் கூர்முனை ஊசிகளாய்

    “அறிவு” சூழ்ச்சிகளை வெல்லும் சேவகனாய் ! – இருப்பதே சரி.

    ஒருநாள், ஒரு வங்கியின் பரபரப்பான நேரத்தில் திருடர்கள் கூட்டமாக வந்து துப்பாக்கி முனையில் கொள்ளைடிக்க முற்பட்டனர்.  திருடர் தலைவன் மேலதிகாரியின் தனி அறைக்குள் அடியெடுத்து வைத்தான்.  Locker களின் சாவிக்கொத்தையும், பணத்தை பாதுகாக்கும் அறையின் சாவிக்கொத்தையும் தருமாறு மிரட்டினான்.  வேறு வழியில்லை.  மேலதிகாரி சாவிகளை எடுத்துக்கொண்டு கஜானா அறைக்குப்போனார்.

    சிலவற்றை திறக்க முடிந்தது, பலவற்றை திறக்க முடியவில்லை.  Password இருந்தால்தான் திறக்க முடியும் என்றும், இதை திறந்தால் Automatic Alarm ஒலிக்கும் என்றும், இதை திறந்தால் Main Gate lock ஆகி சுவற்றை உடைத்தால்தான் நாமே வெளியே வர முடியும் என்றெல்லாம் பல்வேறு காரணங்கள் கூறி – பல Locker களை திறக்க விடாமல் பாதுகாத்தார் அதிகாரி.  படிப்பறிவில்லாத திருடர்கள் பாவம்.  ஏமாற்றத்தோடு கிடைத்ததை மட்டும் எடுத்துக்கொண்டு தப்பினர்.

    எவ்வளவு கொள்ளை அடித்தோம் என்று எண்ணிப்பார்க்க ஆவல் கொண்டபோது திருடர் தலைவன் சொன்னான் – “வேண்டாம்.  அரசாங்கமே நாளை எவ்வளவு கொள்ளை போனது என்று அறிவிக்கும்.  அதுவரை அமைதியாக இருப்போம்.  பிறகு பங்கை பிரிப்போம்”  என்றான்.

    அடுத்தநாள் பத்திரிகைகள் “பத்து கோடி கொள்ளை” என்று செய்தி வெளியிட்டது.  பங்கு பிரிக்கும்போது பார்த்தால் வெறும் 5 கோடிதான் இருந்தது.  மீண்டும் மீண்டும் எண்ணிப்பார்க்க – 5 கோடிக்குமேல் அங்கே இல்லை.  அதிர்ச்சியும், ஆச்சரியமும் கொண்டார்கள் திருடர்கள்.  என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினார்கள்.

    உண்மையில் நடந்தது இதுதான்.

    திருடர்கள் தப்பி சென்றதும் Cashier Manager இடம் வந்து “5 கோடி போய்விட்டது.  நான் இதுவரை 1 கோடிவரை கையாடல் செய்திருக்கிறேன்.  அதனால் 6 கோடி என்று அறிவித்துவிடலாமா?  உங்கள் ஒத்துழைப்பு தேவை” – என்று கேட்டார்.  Manager சொன்னார், “சரி.  இன்னும் 4 கோடியை நாம் எடுப்போம்.  1 கோடி உனக்கு, மேலும் உன் பழைய கையாடல் கணக்கும் Tally ஆகிவிடும். இந்த விஷயத்தில் உனக்கு நான் உதவுவதால் எனக்கு 3 கோடி பங்கு. மொத்தம் கொள்ளை போனது 10 கோடி என்று அறிவித்து விடுவோம்” என்று சுமுகமாக முடிவெடுத்தார்கள்.

    இதுதான் அறிவாளிகளின் அறிவின் ஆளுமை.

    “உழைக்கத் தெரிந்தவனுக்கு பிழைக்கத் தெரியவில்லை – பிழைக்கத் தெரிந்தவன் உழைக்கத் தயாராக இல்லை.”

    இதுபோன்று அழிவை தரும் “அறிவு” சமூகத்தின் சாபக்கேடே.  அது நமக்கு தேவை இல்லை.

    “அறிவு” என்பது “அழிவு” என்பதாய் அர்த்தம் மாறத் துவங்கியது எப்போது?

    விஞ்ஞானிகளின் வடிவத்தில் இருந்த “அறிவு”, விவேகானந்தரின் வடிவத்தில் இருந்த “அறிவு”, கோவில்களின் வேலைப்பாடுகளிலும், சிற்பங்களிலும் இருந்த “அறிவு”, ஆறம் செய்ய விரும்பு என்ற ஆத்திச்சூடியின் வடிவத்தில்  இருந்த “அறிவு”, அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்று மதிப்பின் வடிவத்தில் இருந்த “அறிவு”, வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடும் இரக்கத்தின் வடிவில் இருந்த “அறிவு” – எங்கே போனது?

    “அறிவில்லாத மனிதர்களா நாம்? – இந்த “அறிவில்லாத மனிதர்களா நாம்?

    எப்போது மாறினோம்?  யார் மாற்றியது?“திறந்து பாருங்கள்.  அறிவுக்கண்ணை திறந்து பாருங்கள்.  உங்களோடு பலர் கண்கட்டுவித்தை விளையாடுகிறார்கள்.  அந்தக் கட்டினை அவிழ்த்துவிட்டு – திறந்து பாருங்கள்.

    ஒரு மொழியை மறுக்க போராடும் நேரத்தில் – மௌனமாக “கல்வியே” மறுக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.  கல்வி வியாபாரமாக மாறி வெகு காலமாகி விட்டது.  பணம் இருந்தால் தான் பள்ளிக்கூடமே போக முடியுமென்று மாறிவிட்டதை சிலரது “அறிவு” இன்னும் தெரிந்துகொள்ளவில்லை.

    தொழிற்சாலையை மூடும் போராட்டம்.  மூடப்படுவது தொழிலாளர்களின் வேலை வாய்ப்பையும்தான் என்பதை சிலரது “அறிவு” என்றைக்கு அறிந்து கொள்ளப் போகின்றது?

    நீர் நிலைகளையும், மழைத்துளிகளையும் சேமித்து வைத்தால் தீக்குளிக்க வேண்டாம், தினமும் குளிக்கலாம் என்பது சிலரின் “அறிவுன்” வாசலை அடையவில்லை அல்லவா?

    மதுவும், மாதுவுமே மகிழ்ச்சி என்று மூளைச்சலவை செய்யப்பட்ட கூட்டம்தான் இன்று மூலைக்கு மூலை மயங்கி விழுந்து கொண்டிருக்கின்றது.  விழுந்து கிடப்பது தான் மட்டுமல்ல, தன் குடும்பத்தின் எதிர்காலம் தான் என்று புரிந்துகொள்ளக்கூட முடியாத போதையில் இன்றைய இளவட்டம்.

    அழைப்பவர்கள் யாரோ – அல்லல் படுபவர்கள் யாரோ.

    இன்முகத்தோடு இருப்பவர்கள் யாரோ – இன்னல்பட்டு இழப்பவர்கள் யாரோ.

    உங்களுடைய திசை திருடப்பட்டுக் கொண்டிருக்கின்றது.  மூளை மெல்ல மெல்ல சிந்திக்கும் செயலை இழந்து கொண்டிருக்கின்றது.  ஒரு கண்ணில் காமமும், மறு கண்ணில் கோபமும் மிளிர்வதனால் – எதிர்கால எதார்த்தத்தை பார்க்கமுடியாத பார்வை குறைபாடுடன் நீங்கள் பரிதாபமாக பாதையின் ஓரத்தில் – குப்பைகளுக்கு துணையாய்.

    நீங்கள் “படம்” பார்த்தீர்கள்.  ஆனால் உங்களை அவர்கள் “பதம்” பார்க்கிறார்கள் என்று புரிந்து கொள்ளுங்கள்.  “எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் – நான் வாழ யார் பாடுவார்” என்ற கேள்வி உங்களுக்குள் உதிக்கட்டும்.

    உங்கள் ஆற்றல்கள் அத்தனையும் ஆர்பாட்டக்களத்தில் “அடகு” வைக்கப்பட்டதை அறிந்து கொள்ளுங்கள்.  முதலை அனுபவிப்பவன் எங்கோ இருக்க -“வாழ்க்கை இழப்பு” என்ற வட்டியை நீங்கள் தான் கட்டிக்கொண்டு இருக்கிறீர்கள் – என்று புரிந்து கொள்ளுங்கள்.  விடியலுக்கான தலைவன் என்று தன்னை விளம்பரப்படுத்தி கொள்பவர்களை ஓரக்கண்ணால் பார்த்து ஒதுக்குங்கள்.  எத்தனை தலைவர்கள், தொண்டர்கள் நமக்காக போராட இருக்கிறார்கள் என்று உடலால் அல்ல மனதால் மட்டும் மகிழுங்கள்.

    முட்கள் நிறைந்த வாழ்க்கை பாதையில் உங்கள் கவனம் எடுத்து வைக்கும் அடுத்த அடியில்தான் இருக்க வேண்டும்.  முள்ளில் படாமல், முள்ளும் படாமல் முன்னேறுவது தான் வெற்றியின் இலக்கை நெருங்கும் இரகசியம் என்று தெளிந்து நடை போடுங்கள்.

    கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வன்முறை, அராஜகம் என்று திசை திரும்பி செல்லும் கூட்டம் – பெருங்கூட்டம் தான்.  அவர்கள் யாருடைய “அறிவு”க்கு அடிமையாக இருக்கிறார்கள்.  தன் மீது, தன் குடும்பத்தின் மீது, தன் தலைமுறை மீது, தன் சமூகத்தின் மீது, தன் நாட்டின் மீதே – அக்கறையற்ற அறிவிலிகள்.

    இனி, நல்ல சமூகத்தை உருவாக்கும் பொறுப்பில் நாம்.  அதற்க்கு என்ன வேண்டும்?

    உண்மையை உணராமல், உணர்ச்சி வசப்பட்டு வீட்டினை கவனிக்காமல் வீதியில் போராடும் “அப்பாவிகள்” தனது அறிவை அறிய வேண்டிய கட்டாயத்தில் தான் இந்த நிமிடம்.  அறிவில்லாத மனிதனாக நீங்கள் இனியும் இருக்க வேண்டாம்.

    “ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டையாடினான், அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டை காட்டினான் – என்ற பெருமை “நாளை மனிதன் ஏழு உலகை ஆளப்போகிறான்” என்ற பெரும் நம்பிக்கை மனிதனின் மேல்.  அதை பொய்க்க விடக்கூடாது.

    “பறவையை கண்டு விமானம் படைத்தது, பாயும் மீன்களில் படகை கண்டு, எதிரொ| கேட்டு வானொலி படைத்த மனிதன் எத்தனை கண்டான்? – என்ற கவியரசரின் கவலை, இப்போதும் இன்றைய சூழலில் பொருந்தி வருவது மானிட இனம் தலை குனிய வேண்டிய வேதனையே.

    “பல்லாக்கை தூக்காதே பல்லாக்கில் நீ ஏறு” என்பதே உங்கள் வாழ்வை உயர்த்தும் ஒரே வழி.

    போலி தலைவர்களை புறக்கணிக்க பழகுங்கள்.

    “அறிவை” கொள்ளுங்கள்.

    விவேகானந்தர் கேட்ட நூறு இளைஞர்களில் நானும் ஒருவனாக இருப்பேன் – என்று “அறிவை” கொள்ளுங்கள்..

    மொழியும், கல்வியும் தான் வெற்றியை முன்மொழியும் – தெளிவும், ஞானமும் தான் வெற்றியை வழிமொழியும் – என்று “அறிவை” கொள்ளுங்கள்.

    “மாபெரும் சபைகளில் நான் நடந்தால் எனக்கு மாலைகள் விழுவது தான் மகிழ்ச்சி என்று “அறிவை” கொள்ளுங்கள்..

    கொண்டால், குறைந்தபட்சம் “உயர்ந்த பண்பும், குணமும் கொண்ட மனிதத்துவம் கொண்ட மனிதன்” என்று உங்கள் குடும்பத்தால் கொண்டாடப் படுவீர்கள்.  அதிகபட்சமாக, அடுத்த தலைமுறைமீது உண்மையான அக்கறை கொண்ட தலைவனாக அடையாளம் கொள்வீர்கள்.

    அதையே சுருக்கமாக சொல்வதென்றால்

    “வையகம் யாவும் உன் புகழ் பேசும் கைவசமாகும் எதிர்காலம்”

    “வாழ நினைத்தால் வாழலாம், வழியா இல்லை பூமியில்”[/hide]

    இந்த இதழை மேலும்

    முசோலினியின் செயல்பாடு

    முதல் உலகப்போரிலே தீவிரமாக ஈடுபட்ட இத்தாலிக்கு போரின் விளைவு கொடுமையாக இருந்தது. இந்தப் போரிலே நேச நாடுகள் வெற்றி பெற்றும் கூட்டாளியான இத்தாலிக்கு சரியான பங்கு தரவில்லை.

    தன்மானம் உணர்வு கொண்ட இத்தாலி மக்களுக்கு இந்த அவமானம் பெரிய வேதனையைத் தந்தது. ஒரு பக்கம் தொழிலாளர்கள் பொருளாதார நெருக்கடியால் வேலை நிறுத்தம் செய்தனர்.

    மறுபக்கம் போரில் ஈடுபட்டு வீடு திரும்பிய வீரர்கள் சலுகை கேட்டு கிளர்ச்சி செய்தனர். தொழிலாளர்கள் தொழிற்சாலைகளை கைப்பற்றிக் கொண்டு புரட்சி செய்தார்கள். தொழிற்சங்கங்கள் தொழிற்சாலைகளை நடத்த முடியாமல் திணறினார்கள்.

    இந்தச் சமயத்தில்தான் முசோலினி கருப்புச் சட்டை தொண்டர்களை உருவாக்கி வைத்திருந்தார். இந்த இயக்கத்திற்கு முதலாளிகள் ஆதரவு தந்தார்கள்.

    முசோலினி சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு தன்னுடைய இயக்கத்தை தீவிரப் படுத்தினார். ராணுவ வீரர்கள் முசோலினிக்கு ஆதரவு தந்தனர்.

    சமதர்மவாதிகளை இரும்புக்கரம் மூலம் நசுக்கினார் முசோலினி. அதன்பயன் பாஸிசவாதிகள் இத்தாலியில் ஆட்சியை கைப்பற்றினார்கள். முசோலினி ஏழைகளை பணக்காரர்களுக்கு எதிராகவும் மோதவிட்டு தன்னுடைய செல்வாக்கை அதிகரித்துக் கொண்டார்.[hide]

    பணக்காரர்களை ஏழைகளுக்கு எதிராகவும் மோதவிட்டு தன்னுடைய செல்வாக்கை அதிகரித்துக் கொண்டார் முசோலினி. இவர் நிலையான திட்டத்தை வைத்திருக்கவில்லை.

    சமய சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு கொள்கைகளை திருத்தியும், மாற்றியும் புது உருவம் கொடுத்துக் கொண்டே வந்தார்.

    பாசிசம், கம்யூனிசம், சமதர்மம், தாராள ஜனநாயகம் ஆகிய கொள்கைகளுக்கு எதிர்ப்புக் கொள்கையாக மட்டுமே இருந்தது. பொதுப்படையாக இத்தாலி நாட்டு மக்கள் நலனுக்கு பணியாற்றுவதே நோக்கம் என்று பாசிச இயக்கம் பறைசாற்றியது.

    புதிய சிந்தனைக்கும் பகுத்தறிவுக்கும் பாசிசய இயக்கம் இடம் தரவில்லை. வாதம் எதுவும் வேண்டாம். உத்தரவுக்கு பணிவதே லட்சியம் என்று முரசு கொட்டினார்கள்.

    முசோலினி, இத்தாலியின் பழைய பெருமைகளை எடுத்துக்காட்டினார். அத்தகைய நிலைக்கு இத்தாலியை மீண்டும் உயர்த்த ஆங்கார உணர்ச்சிகளைக் கிளறிவிட்டார்.

    தனி மனிதன் தன்னுடைய சுதந்திரத்தை நாட்டின் அதிகாரத்திற்காக தியாகம் செய்ய வேண்டிய கட்டாயத்தை உருவாக்கினார்.

    அந்த அரசாங்கத்தின் சர்வ அதிகாரத்திற்கும் மேலான தலைவராக தன்னை உயர்த்திக் கொண்டார் முசோலினி.

    முசோலினியை இத்தாலி மக்கள் எல்லோரும் நீங்கள் எங்களைச் சார்ந்தவர் என்று பாராட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள். இத்தாலி நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எதைச் செய்ய விரும்பினானோ அதையே செய்து முடித்தார் முசோலினி வெற்றிகரமாக.

    இத்தாலி செழிக்க வேண்டும். அதன் பெருமை ஓங்க வேண்டும். உலக அரங்கிலே இத்தாலி இடம் பெறவேண்டும். இதனை நான் தற்பெருமையில் பேசவில்லை. அடக்கத்துடன் தான் பேசுகிறேன் என்று முசோலினி முழக்கமிட்டார்.

    “என்னுடைய உணர்ச்சிகளைத் தடுக்கும் மனிதர்களிடமிருந்து என்னை விடுவித்துக் கொள்ள வேண்டும். நான் ஒரு பூனையைப் போல் நிதானமும் தந்திரமும் கொண்டவன். நான் குதிக்க விரும்பினால் எங்கு குதிக்க விரும்புகிறானோ அங்கேயே நிச்சயம் குதித்து விடுவேன்” என்று கூறினார்.

    கல்லை உடைக்க வேண்டுமானால் பலவீனமான இடத்திலே உளியை வைத்து தகர்க்க வேண்டும். மனிதனின் பலவீனமான உணர்ச்சியை நெம்பிவிட்டு புகழ்பெற்றார் முசோலினி. தோல்வியைக் கண்டு அஞ்சி நடுங்காமல் இருந்தார். அதனால்தான் தலைமை ஏற்று நடத்தினார்.

    கோழைத்தனத்தை பிறவிக்குணமாகக் கொண்டு இருந்து வீரம் கொண்ட தலைவனைப் போல் நடித்தாலும் நெருக்கடியான வேளையில் கோழைத்தனமும் பயமும் வெளியே தெரிந்துவிடும். பலவீனத்தை எத்தனை நாட்களுக்குத்தான் திரைபோட்டு மறைக்க முடியும்?

    தோல்வியைச் சமாளிக்கும் ஆற்றலை அளவுகோலாக தலைவனின் சிறப்பை சீர்தூக்கிப் பார்க்க முடியும். தோல் முற்றுகையைத் தாக்குப் பிடிக்காமல் அரசியலை விட்டே வெளியேறியவர்களும் இருக்கிறார்கள்.

    அலை அலையாக தோல்வி மோதியதும் முசோலினிக்கு பயம் இறுகப் பற்றிக் கொண்டது. எதைச் செய்யவும் திட்டமிடவும் அவருடைய மனம் இடம் தரவில்லை. நடைபிணமாக மாறிவிட்டார்.

    அவருடைய பரிதாப நிலையைப் பார்த்த ஒருவர் “முசோலினி செத்த மனிதனைப் போல் செயலற்று இருந்தார். எதையும் செய்ய முடியாத நிலையில் ஊமைப் பிணமாகி விட்டார்” என்று கூறினார்.

    இந்த கருத்தின் அடிப்படையில் தான், “என் அரசியல் வாழ்வு முடிந்துவிட்டது. நான் செத்துவிட்டேன். என்னைப் புதைத்து விட்டார்கள்” என்று முசோலினியே சொன்னார்.

    ஹிட்லர் முசோலினியிடம் எதிர்காலத் திட்டம் என்ன என்று கேட்டபோது, “நான் ஓய்வுபெற்று சொந்த வாழ்க்கையை கவனிக்கப் போகிறேன்” என்று பதில் சொன்னார்.

    பயத்தோடு இருந்த முசோலினியைப் பார்த்து அதிகாரத்தை இழந்த முசோலினி மிகச்சிறிய அற்ப மனிதராகிவிட்டார் என்று கூறினார்.

    மருத்துவர்கள் முசோலினியின் உடலைப் பரிசோதித்தபோது, ரத்த கொதிப்பு, நரம்புத் தளர்ச்சி, வயிற்றுவலி இவை எல்லாம் அதிகாரத்தை அலங்கரித்த நாளிலே இல்லாத புது வியாதிகள் அவரின் உடலில் வந்தன.[/hide]

    இந்த இதழை மேலும்