S.D. சரவணகுகன்
CEO, Green Kitchen Multi Specialty Food, Theni
M.D. GThree Business Assoaites Private limited, Mumbai
நான் எதையும் சாதிக்கும் ஆற்றல் பெற்றவன், என்று தினமும் சொல்லி வாருங்கள் எவ்வளவு பெரிய துன்பமும் ஓடிவிடும் என்பார் விவேகானந்தவர், அவரின் சொல்லின் படி வாழ்ந்து வரும் ஆற்றல் உடையவர்.
உண்மைக்குச் சற்றும் புறமில்லாமல், கடின உழைப்பின் கண்ணாடியாய் எந்நேரமும் மாற்றத்தை மட்டும் சிந்தித்துக் கொண்டிருப்பவர்.
எந்தப் பணியாக இருந்தாலும் தன்னுடைய தேவைக்கு ஏற்றார் போல் மாற்றிக் கொண்டு செயல்பட்டால் அதில் நிச்சியம் வெற்றி பெறலாம் என்ற சித்தாந்ததின் படி தேவையை அமைத்துக் கொண்டு சாதித்து வருபவர்.
பல உலக நாடுகளுக்குச் சென்று, அங்குள்ள திட்டங்களை வரையறுத்துக் கொண்டு நம் நாட்டிற்கும் நம்மால் ஆன துறையில் பல மாறுதல்களைக் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்.
மெக்டொனல்ட்ஸ், ரிலையன்ஸ் ரீடைல் போன்ற நிறுவனத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி தன் பெயரையும் புகழையும் சென்ற இடமெல்லாம் சிறப்பு என்ற வாக்கையினை மெய்பித்து வரும் கிரின் கிச்சன் தேனி, மற்றும் GThree Business Assoaites Private limited, Mumbai நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் S.D. சரவணகுகன் அவர்களின் நேர்முகம் இனி உங்களோடு…
கே: உங்களைப் பற்றி ?
தேனி மாவட்டம் ஸ்ரீரெங்காபுரம் என்னும் குக்கிராமத்தில் தான் பிறந்தேன். அப்பா தேசபத்து அவர்கள் தலைமை ஆசிரியர், அம்மா அலமேலு அம்மாள் இல்லத்தரசி. அப்பா ஆசிரியர் என்பதால் அப்பகுதியில் பிரபலம். அனைவரிடமும் அன்பாகப் பழகும் குணம் கொண்டவர். அவரின் பெயரை அறியாதவர்கள் யாருமில்லை என்றே சொல்ல வேண்டும்.. அவர் பணியாற்றிய அரசு உயர்நிலைப் பள்ளி தமிழ்வழிக் கல்வியில் தான் பயின்றேன். நான் படிக்கின்ற காலத்தில் கிராமப்புறத்தில் படிக்கும் மாணவர்கள் 4 பேருக்கு தாலுக்கா அளவில், 9 வது முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கொடுப்பார்கள், நான் தாலுக்கா அளவில் இரண்டாம் இடம் பெற்று அப்போது கிடைத்த கல்வி உதவித்தொகை பெரும் உறுதுணையாக இருந்தது.
பிறகு 11 ஆம் வகுப்பு திருவேடகத்திலுள்ள விவேகானந்தர் ஆசிரமத்தில் படித்தேன். ஆசிரமக் கல்வி என்பதால் சற்று கண்டிப்பு மிகுந்திருக்கும், அதே வகையில் கல்விக்கும் ஒழுகத்திற்கும் பெரிதும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். அந்தப் பள்ளியில் படித்தது பெரிதும் எனக்கு உதவியது. அதன் பிறகு 12 ஆம் வகுப்பு கோவை ரங்கம்மாள் பள்ளியில் படித்தேன். நான் கிராமப்புற பள்ளியில் படித்து அந்த சூழ்நிலையிலேயே வளர்ந்ததால் வேளாண்துறையில் மிகவும் ஈடுபாடு வந்தது, அதனால் எனக்கு பொறியியல் படிக்க இடம் கிடைத்தும் வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு கால்நடைத் துறையைப்படிக்க வாய்ப்பு கிடைத்து, அதில் சில வாரங்கள் மட்டும் பயின்றேன். அதன் பிறகு கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் இளங்கலை விவசாயம் நான்கு வருடம் படித்தேன்.
அப்போது இல.செ. கந்தசாமி ஐய்யா அவர்களின் அறிமுகமும் மிகவும் நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர்கள் எப்போதும் மாணவர்களிடையே ஊக்கம் தரும் வார்த்தைகளை மட்டுமே பேசிக் கொண்டேயிருப்பார். அதனால் தான் என்னால் கதை கட்டுரை, மேடைப் பேச்சு, மேடை நாடகம் போன்றவை இயற்ற முடிந்தது. தமிழ்ப் பற்று வருவதற்கு பெரிதும் காரணமாக இருந்தது. நான்கு ஆண்டு சென்றதே தெரியவில்லை. பின்னர் தான் மதுரை வேளாண் கல்லூரியில் எம். எஸ். சி படிக்கச் சென்றேன். அப்போது படிக்கின்ற போதே மதுரை அகில இந்திய வானொலி நிலையத்தில் விவசாயத்துறைப்பகுதியில் பகுதி நேர அறிவிப்பாளராக பணியாற்றியிருந்தேன். ஏதேனும் புதியதாக சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் என்னை தூங்க விடாமல் செய்து கொண்டிருந்தது.
கே: படித்த முடித்தவுடன் நீங்கள் செய்த பணிகள் பற்றி?
நான் வேளாண்மை முதுகலைப்பட்டம் பெற்றியிருந்த காலக்கட்டத்தில் மிகவும் எளிதாக வேளாண் இடுப்பொருட்கள் விற்பனை செய்யும் அலுவலகத்தில் எளிதாக வேலை கிடைத்துக் கொண்டிருந்தது. ஆனால் அதில் விருப்பமில்லாததால் வேறு வாய்ப்புக்காக காத்திருந்தேன். நான் தினமும் செய்தித்தாள் படிப்பேன். அப்போது ஒரு நாள் தி இந்து செய்தித்தாளில் ஒரு விளம்பரம் வந்தது. அதில் தி இந்து செய்தித்தாளின் அலுவலகத்திலிருந்து விவசாயிகளிடம் நேரடியாக காய்களை வாங்கி அதை நுகர்வோரிடம் விற்பனை செய்ய வேண்டும் என்று வந்தது. திரு. கஸ்துரிரங்கன் அவர்களின் மகன் திரு. வேணுகோபால் அவர்கள் இதன் இயக்குநராக இருந்தார். அதே வகையில் வேளாண் பல்கலைக்கழகத்தில் பயன்றவர்களும் அதில் உறுப்பினர்களாக இருந்தார்கள். இதனால் நான் இதற்கான நேர்காணலுக்குச் சென்றியிருந்தேன்.
அடிப்படையில் நான் விவசாயத்துறைப் படித்ததால் இதில் பணியாற்றுவதற்கு எவ்வித தயக்கமும் இல்லாமல் இருந்தது. இதனால் நானும் பணியில் சேர்ந்தேன். என்னுடைய வேலை நிமிர்த்தமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் விவசாயிகளைப் பார்த்து அவர்களிடம் விலைவித்த காய்கறிகளை நேரடியாக கொள்முதல் செய்து சென்னையிலிருந்த தி இந்து Just picked கடைகளுக்கு அனுப்ப வேண்டியிருந்தது. விவசாயிகளுக்கும் மற்றும் அருகிலுள்ள் விலை நிலங்களில் கிடைக்காத காய்கறிகளை காலை 3 மணிக்கெல்லாம் எழுந்து கொத்தவாசாவடி சந்தைக்குச் சென்று வாங்க வேண்டியிருந்தது. நிறைய பேர் என்னைப் பார்த்து கேட்பார்கள் எம். எஸ். சி விவசாயம் முடித்துவிட்டு இப்படி காய்கறிகளை வாங்கிக் கொண்டுயிருக்கிறீர்கள் என்று, அதற்கு நான் ஒருபோதும் வருத்தம் கொண்டதில்லை, பிடித்து செய்யும் எந்த வேலையும் தவறில்லை என்பதை நாம் மதிப்பவன்.
கே: ஊட்டியில் பணியாற்றிய அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்?
சென்னை மற்றும் கொத்தவாசாவடியில் இதே வேலை 14 மாதங்கள் செய்தேன். அதன் பிறகு 8 மாதம் காலம் ஊட்டியில், 1994 ஆம் ஆண்டு பணியிடம் மாற்றம் செய்தார்கள் அப்போது புதுவிதமாக காய்கறிகளைஆர்கானிக் முறைப்படி உற்பத்தி செய்து அங்கியிருந்து சென்னை அனுப்பி விற்பனை செய்தோம். இக்காய்கறிகளை அங்குள்ள விவசாய அமைப்பின் மூலம் உற்பத்தி செய்தோம். அங்கு வேலை செய்யும் பணியாளர்களுக்கு விவசாய சாகுபடி சம்மந்தமாக நிறைய பயிற்சிகள் கொடுத்தோம். அவர்களும் பயிற்சிகளின் படியே வேலை செய்தார்கள்.[hide]
இரயில் மற்றும் கனரக வாகனத்தின் மூலம் தேவையான பகுதிக்கு காய்கறிகளை கொண்டு செல்வதற்கு பயன்ப்படுத்திக் கொண்டோம்.
கே: மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியது பற்றி?
மெக்டொனால்ட்ஸ் என்பது உலகத்தில் மிகப்பெரிய துரித உணவு விற்பனை செய்யும் பெரிய நிறுவனம் . அவர்கள் 100 நாடுகள், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகள் மூலம் ஒரு நாளைக்கு 6.3 கோடி வாடிக்கையாளர்களுக்கு உணவினை கொடுத்து வருகிறார்கள். பர்கர், உருளைக்கிழங்கு சிப்பஸ், ஐஸ்கிரீம், மில்க்சேக் போன்றவை மிகவும் பிரபலம். அவர்களின் பர்கரில் நடுவில் வைப்பற்கு Icebereg Lettuce என்ற காய்கறி மிகவும் அவசியம். அதுகுளிர்சார்ந்த பகுதிகளில் வளரக்கூடிய காய்கறி. Icebereg Lettuce என்கிற பயிர் இந்தியாவில் அப்போது இல்லாதானால் அதை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கு ஒரு விவசாய நிபுணரை மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் தேடிக் கொண்டியிருந்தது. இது ஒரு பெரிய நிறுவனம் என்பதால் விவசாய நிபுணருக்கான தேர்வு செய்வதில் மிகப்பெரிய வரையறைகளை வைத்திருந்தார்கள். என்னவென்றால் இத்துறை சார்ந்த பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும், அத்துறைச் சார்ந்த பணியில் ஈடுபட்டியிருக்க வேண்டும், இடம் சார்ந்த புரிதல்கள் இருத்தல் வேண்டும் போன்றவற்றை சொல்லியிருந்தார்கள், அவர்கள் கேட்ட அத்துனை தகுதிகளும் என்னிடம் இருந்ததாக நான் உணர்ந்தேன். நானும் அவர்களின் நேர்காணலுக்குச் சென்றேன்.
நேர்காணல் ஹைதராபாத்தில் நடைப் பெற்றது. மூன்று நிலையாக நடைபெற்ற இதில் முதல் நேர்காணிலில் என்னுடைய தகுதியை வெளிகாட்டினேன். எனக்கு மிகவும் நம்பிக்கையாக இருந்தது. அகில இந்திய அளவிலிருந்து நிறைய பேர் இதில் கலந்து கொண்டார்கள் . இறுதியாக 5 பேரை மட்டுமே தேர்ந்தெடுத்தார்கள் அதில் நானும் ஓருவர்.
அடுத்த நேர்காணல் மும்மையில் நடைப்பெற்றது. இடமும் புதுமை மனிதர்களும் புதுமை இதனால் முந்தைய நாளே அங்கு சென்று விட்டேன். மும்மை என்றாலே கூட்ட நெரிசல் பகுதி என்பதால் நேரமாக செல்ல வேண்டும் என்று திட்டம் தீட்டிச் சென்றேன். 9.30 மணிக்கு நேர்காணல் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால் 8.30 மணிக்கே சென்றுவிட்டேன். எனக்கு முன்னால் வர வேண்டிய நபர் வராத முடியாத காரணத்தால் என்னுடைய நேர்காணல் 9 மணிக்கு நடைப்பெற்றது. நேர்காணல் நடைபெற்ற எல்லோருக்கும் அரை மணி நேரம் மட்டுமே நடைபெற்றது, ஆனால் எனக்கு மட்டும் 1.30 மணி நேரம் நடைபெற்றது. காரணம் நான் இத்துறையில் அனுபவம் மிக்கவர் என்பதால் அத்துறைச் சார்ந்த அத்துனை தகவல்களையும் என்னால் சொல்ல முடிந்தது.
இறுதியாக 3 பேரை டெல்லிக்கு அனுப்பி வைத்தார்கள். இந்த நேர்காணல் மூலம் நான் கற்றுக் கொண்டது என்னவென்றால் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னே செல்ல வேண்டும், மிகச் சரியான அளவில் பேசி மிக அளவான பதில்களை தெள்ளத் தெளிவாக கொடுக்க வேண்டும். ஆடைகளை சரியாக அணிய வேண்டும் என்பது தான். ஒருவரைப் பற்றி முதல் மதிப்பீடு தான் அவரின் வெற்றியைத் தீர்மானிக்கும் என்பதை அறிந்து கொண்டேன். டெல்லியிலும் சிறப்பாக முடித்தேன். வேலையும் கிடைத்தது. வேலை கிடைத்தவுடன் முதன் முறையாக அமெரிக்காவிற்கு மூன்று வாரங்கள் பயிற்சிக்காக அனுப்பப்பட்டேன்
கே: இத்துறையிலுள்ள சவால்கள் பற்றிச் சொல்லுங்கள்?
விவசாயம் செய்வது என்பது சாதாரண காரியம் அல்ல. அதிலும் குறிப்பாக இப்படிப்பட்ட காய்கறிகளை உற்பத்தி செய்யும் பொழுது நிறைய சவால்களை சந்திக்க வேண்டும். அதனால் நான் காஷ்மீர் முதல் கொடைக்கானல் வரை மகாபலிஸ்ரர் முதல் கேங்டாக் வரை எங்கெங்கு மிதமான தட்பவெட்ப சூழ்நிலை உள்ளதோ அங்கெல்லாம் 18 மாதங்கள் பயணம் செய்து கடைசியாக ஊட்டிப் புனா, நைணிடால், சிம்லா, முசிறி, புதுடெல்லி போன்ற இடங்களைத் தேர்வு செய்து Icebereg Lettuce பயிரை விவசாயிகளுடன் சேர்ந்து விளைவித்தேன் அன்று இந்தியாவில் பூஜ்ஜியமாக இருந்த Ice- bereg இன்று வருடத்திற்கு 5000 டன் வரை உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த நிலையை அடைவதற்கு 1995 யிலிந்து 2005 வரை விவசாயிகளுடன் எனது நேரத்தை செலவிட்டு விவசாயிகளின் இடையிறுகளான ஆலங்கட்டி மழை, வறட்சி, காலநிலைமாற்றம் போன்ற சீற்றங்களுக்கு தகுந்த மாதிரி விவசாய தொழில் நுட்பங்களை மாற்றி, இந்தியாவிலேயே முதன் முறையாக விவசாயத்திற்கான குளிர்பதன ஆலையை அமைத்து இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு நாடுகள் வரை ஏற்றுமதி செய்தது இப்போதும் என் நினைவுக்கு வருகிறது. இந்தியாவில் மட்டும் மல்லாதது தென் கிழக்கு ஆசிய நாடுகள் ஐக்கிய அரபு நாடுகள் போன்ற நாடுகளுக்கெல்லாம் செயல் பட்டு எனது ஆற்றலை வளர்த்துக் கொண்டதும் ஞாபகத்திற்கு வருகிறது.
இன்று உலக அளவில் பல இடங்களில் Ice bereg lettuce பரவலாக இருந்தாலும் இதற்கு இந்தியாவில் விதைப் போட்டவன் நான் என்று சொல்லிக் கொள்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன்.
இது ஒரு கடினமான பயிர் என்பதில் எவ்வித ஐய்யமுமில்லை ஆனால் ஒரு செயலில் கமிட்மெண்ட் செய்துவிட்டால் அதில் மட்டுமே முழு கவனம் செலுத்தி அதனுடன் உண்மையும் நேர்மையும் கலந்தால் எந்த ஒரு சாதனையாக இருந்தாலும் சாதித்து விடலாம்.
நான் இதுவரை 30 க்கும் மேலான வெளிநாடுகளுக்கு மேல் சென்றுவிட்டேன். எங்கெல்லாம் நான் சென்றோனோ அங்கெல்லாம் விவசாயம் மற்றும் உணவுத்துறை சார்ந்த பணிகள் செய்கிறார்களோ அதை நன்றாக உற்று நோக்கி நமது நாட்டிற்கு எது தேவையோ அதை இங்கு அறிமுகம் செய்து வைப்பேன். அதற்கு உண்டான பலன் இன்று நமது நாட்டிற்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது.
கே: இத்துறையில் உங்களுக்கு ஏற்பட்ட திருப்புமுனையான சம்பவம் பற்றிச் சொல்லுங்கள்?
நான் ஏற்கனவே கூறியபடி மெக்டொனால்ட்ஸ் நிறுவனம் உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் அமைந்திருக்கிறது. அதில் என்னைப் போன்ற வேளாண் நிபுணர்கள் நான்கு பேர் மட்டுமே இருந்தார்கள். வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, யூரோப் போன்ற நாடுகளில் மற்றவர்களும், மற்றும், நான்காவதாக இந்தியாவில் நான் இருந்தேன். இந்தியாவில் மட்டும் மல்லாது அண்டைய நாடுகளையும் கவனித்துக் கொண்டியிருந்தேன்.
மெக்டொனால்ட்ஸ் நிறுவனத்தில் உருளைக்கிழங்கு சிப்பஸ் பிரன்ச் பிரைஸ் மிகவும் பெயர் பெற்றது. அவர்கள் இந்தியா நாட்டிற்கு வரும் பொழுது அதை உற்பத்தி செய்வதற்கு அமெரிக்காவிலிருந்து ஒரு நிறுவனத்தை அழைத்துப் கொண்டு வந்தார்கள். அவர்கள் ரூ. 30 கோடி முதலீடு செய்து நீள நீளமாக இருக்கும் குளிர் பதனிட்ட உருளைக்கிழங்கு பிரன்ச் பிரைஸ் செய்யும் ஆலையை வட இந்தியாவில் அமைத்தார்கள். அதற்குத் தேவையான உருளைக்கிழங்கை வாங்கிய பொழுது அவர்கள் எதிர்பார்த்த மாதிரி பிரன்ச் பிரைஸ் வரவில்லை. இதற்கு காரணம் இந்திய உருளைக்கிழக்கில் Dry Matter content குறைவாகவும் water content அதிகமாகவும் இருந்தது. இதற்கு காரணம் இந்திய உருளைக்கிழங்கு விதை வகைகள், தட்பவெட்ப சூழ்நிலைதான். அந்த நாட்களில் பிரன்ச் பிரைஸ் இறங்குமதி செய்ய அனுமதிக்கப்படாத நிலையில், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் 100 உருளைக்கிழங்கு tubersயை (கிழங்குகளை) அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வந்து, அதிலிருந்து tissue culture முறைப்படி multifly செய்து இன்று இந்தியாவின் அருகிலுள்ள இலங்கை, நேபாளம், பூட்டான், வங்காளதேசம் போன்ற நாடுகளுக்கு இந்தியாவில் மிக உயரிய முறையில் தயாரிக்கப்பட்ட பிரன்ச் பிரைஸ் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு எனது தனிப்பட்ட அனுபவமானது ஒரு ஏக்கரில் 5 டன் உருளை உற்பத்தி செய்து விவசாயிகளின் நிலத்திலிருந்து 12 டன் உருளை உற்பத்தியானது சாத்தியமானது. இது எங்களின் மெருகூட்டப்பட்ட விவசாய சாகுபடி முறைகள் மற்றும் இறங்குமதி செய்யப்ட்ட உருளை விதைகளால் சாத்தியமாயிற்று. இதன் மூலம் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் தானாக உயர்ந்தது. இதை எனது 10 வருட மெக்டொனால்ட்ஸ் அனுபவங்களின் உயர்வாகக் கருதுகிறேன்.
கே: ரிலையன்ஸ் ரீடைல் இணைந்த அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்?
ஒரு மாலை வேளை எனக்கு தொலைúசி அழைப்பு வந்தது. அவ்வழைப்பினை விடுத்தவர் என்னிடம் ரிலையன்ஸ் நிறுவனத்திலிருந்து அகில இந்திய அளவில் மிகப்பெரிய நுகர்வோர் வர்த்தக துறையில் இறங்க இருப்பதாகவும் அதற்கு என்னைப் போன்ற விவசாயத்துறை மற்றும் உணவுத்துறையில் சாதித்தவர்கள் அதில் மேலதிகாரிகளாக வர வேண்டும் என அழைப்பு விடுத்தனர். அழைப்பு விடுத்த மறுநாளே திரு. முகேஷ் அம்பானியின் அலுவலகத்திற்குச் சென்றேன்.
சென்ற ஒரு வாரத்திற்குள்ளேயே வேலைக்கான உத்தரவை எனக்கு அனுப்பி வைத்து விட்டார்கள். நான் வேலையில் சேர்ந்த அடுத்த நாளே முகேஷ் அம்பானியைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன். அவராக என்னருகில் வந்து மிகவும் எளியவராக என்னிடம் கைக்குலுக்கிப் பேசினார். அவர் அருகில் அவருடைய நெருங்கிய நண்பரும், கல்லூரியின் வகுப்புத் தோழரான திரு. மனோஜ் மேடி உடனிருந்தார். அவர் தான் ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் பொறுப்பாளாராக இருந்தார். அவர் கீழ் தான் நான் பணியாற்றினேன்.
முதல் சந்திப்பிற்குப் பிறகு எத்தனையோ முறைகள் முகேஷ் அம்பானியுடன் மிகப்பெரிய சந்திப்பில் கலந்து கொண்டு பேசியது இப்போதும் நினைவுக்கு வருகிறது. அவர் எப்போதும் எதாவது ஒரு துறையின் வளர்ச்சியினைப் பற்றி யோசித்துக் கொண்டேயிருப்பார். மிக முக்கியமான நம் நாட்டின் வேளாண்மைத் துறையின் வளர்ச்சியைப் பற்றி அதிகமாக யோசித்துக் கொண்டேயிருந்தார். வேளாண்மைத்துறையின் வளர்ச்சியானது நமது இந்திய பொருளாதாரத்தில் மிக முக்கியமான வளர்ச்சியைக் கொடுக்கக்கூடியது என்று அதீத நம்பிக்கை வைத்திருந்தார். அவர் விவசாயிகளுக்காக ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் கொண்டிருந்தார்.
நான் மெக்டொனால்ட்ஸ் உருளைக்கிழங்கில் விவசாயிகளுக்கு மகசூலை அதிகப்படுத்திய செய்தியினைக் கேட்டு தெரிந்து கொண்டு அதுபோல் செய்ய வேண்டும் என எங்கள் அனைவரிடமும் கூறிக் கொண்டேயிருப்பார்.
நான் ரிலையன்ஸ் ரீடைல் உணவுத்துறையில் முதல் வேலையாளராக அதுவும் மிகக்குறைந்த வயதில் செனரல் மேனேஜராகத் தேர்வு செய்யப்பட்டேன். அதனால் அவர்கள் எனக்கு நிறைய வேலைகளைக் கொடுத்ததினால் என்னால் அதற்குத் தகுந்த மாதிரி கற்றுக் கொண்டு சாதிக்க முடிந்தது. அவர்கள் என்னிடம் நம்பிக்கையாகக் கொடுத்த எந்த வேலையையும் நான் ஒரு போதும் செய்யத் தவறியதில்லை மற்றும் செய்தாலும் அதை சென்மையாக செய்தபடியால் அவர்களுக்கு என்மேல் நம்பிக்கை நாளுக்கு நாள் கூடியது. அது என்னுள் மிகப்பெரிய தன்னம்பிக்கையை ஊட்டியது. என்றால் அது மிகையாகாது.
10 வருடங்கள் ரிலையன்ஸ் ரீடைல் அமைப்பானது எனக்கு கார்ப்பரேட் வாழ்க்கை மற்றும் சொந்த வாழ்க்கையில் மறக்க முடியாது. கடின உழைப்பிற்கு நிச்சயம் ஒரு அங்கீகாரம் உண்டு என்று எனக்கு உணர வைத்தது ரிலையன்ஸ் ரீடைல். அந்தக் கடின உழைப்பின் மூலமாகத்தான், முகேஷ் அம்பானிக்கும், மனோஜ் மேடிக்கும் சரவணனாக அறியப்பட்டேன். அந்த அங்கீகாரம் இன்றளவும் அவர்களிடம் எனக்கு இருந்து கொண்டுதான் இருக்கிறது.
முகேஷ் அம்பானிடமிருந்து நான் கற்றுக்கொண்டது என்னவென்றால் தொழிலைப் பற்றி மிகப் பெரிய கனவு காண்பது. அதை ஆரம்பிக்கும் பொழுதே பெரிய அளவில் ஆரம்பித்து எப்படி அதை மிக சமார்த்தியமாக அதே வேலையில் மக்களிடம் எடுத்து செல்வது என்று.
கே: இரு புகழ் பெற்ற நிறுவனத்தில் பணியாற்றி, நீங்கள் சொந்தமாகத் தொழில் தொடங்கியது பற்றி?
இரண்டு நிறுவனங்களிலும் 20 ஆண்டுகள் பணியாற்றி உலகில் 30 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணம் செய்து ஏற்பட்ட அனுபவத்தினால் நானும் எனக்கான ஏதாவது ஒரு துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தலைதூங்க ஆரம்பித்த பொழுது, 2015 ஆம் ஆண்டு எனது சொந்த ஊரான தேனியில் கிரின் கிச்சன் மல்டி ஸ்பெஸôலிட்டி என்கின்ற நிறுவனத்தை எனது மாமனாருடன் இணைந்து ஆரம்பித்து அதன் மூலம் கிரின் கிச்சன் குடும்ப உணவகத்தைத் திறந்தேன்.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் பெரிய நகரங்களில் ரெஸ்டாரண்ட் சயின்ஸ், (அண்ணபூர்ணா, சரவணபவன், அடையார் ஆனந்தபவன் இன்னும்…) அதிகம். ஆனால் 2015 ல் தமிழ்நாட்டில் நெடுஞ்சாலைகளில் மிகவும் குறைவான உணவகங்கள் தான் இருந்தது. அவைகளும் சுவை, சுத்தம் மற்றும் சுகாதாரம் குறைந்தும் சரியான கழிப்பிட வசதியின்றியும் பார்க்கிங் வசதியின்றியும் இருந்ததைப் பார்த்த பொழுது நான் ஏன் நெடுஞ்சாலை கான்செப்டில் சைவ உணவகத்தை ஆரம்பிக்கக் கூடாது என்ற எண்ணம் உதித்தது. அதில் ஆரம்பிக்கப்பட்டது தான் இந்த கிரின் கிச்சன் குடும்ப உணவகம்.
எங்கள் உணவகத்தில் வனஸ்பதி, சோடாஉப்பு போன்றவற்றை உபயோகப்படுத்துவதில்லை. சுத்தரிக்கப்பட்ட சூரியகாந்தி மற்றும் கடலை எண்ணெய் வகைகளையே உபயோகிக்கிறோம். அதே போல் 30 நிமிடங்களுக்கு ஒரு முறை எங்களின் உணவகத்தின் உட்புறத்தை சுத்தம் செய்து சுகாதார முறையில் உணவினைத் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகிறோம்.
கே: உங்களின் ரோல் மாடல்?
என்னுடைய தந்தை தான் எனக்கு முதல் ரோல் மாடல். அவரிடம் நான் கற்றுக் கொண்டது ஏராளம்.
மெக்டொனால்ட் நிறுவனத்தில் என்னுடன் பணியாற்றிய Ragvinder Rekhi அவர்கள் என்னை நன்றாக செதுக்கியவர்.
அடுத்து ரீலையன்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி கொண்டிருந்த மனோஜ் மேடி, மற்றும் முகேஷ் அம்பானியைச் சொல்லியாக வேண்டும்.
கே: தன்னம்பிக்கை வாசகர்களுக்கு நீங்கள் கூறுவது.?
மனிதன் உடலுக்கு எப்படி உடல் உறுப்புகள் தேவையோ, அது போல மனதுக்கு தன்னம்பிக்கை மிகவும் தேவை.
வாழ்க்கையில் எல்லோருடைய வெற்றியும் ஒன்றைப் போலவே இருப்பதில்லை. ஒவ்வொரு வெற்றியிலும் எத்தனை இன்பத்துன்பங்கள், ஏற்ற இறக்கங்கள், நிகழ்வுகள் திருப்புமுனைகள் இருக்கும் என்பதை அவர்களின் வாழக்கை வரலாற்றை படிக்கும் பொழுது தான் தெரிந்து கொள்ள முடிகிறது.
அந்த வகையில் தோல்விகளை நினைத்து துவளாமல், உங்கள் இலக்கை அடைய முயற்சி எடுங்கள் வெற்றி நிச்சயம் பெறலாம்.
கே: குடும்பம் பற்றி?
மனைவி சுபாஷினி, என்னுடைய வெற்றியின் மறுபக்கம் என்று சொல்லலாம். அவர் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் எனக்கு இரண்டு மகன்கள் மூத்த மகன் கோகுல் 9 வது படிக்கிறார், இளைய மகன் திரிணாப் 7 வகுப்பு படிக்கிறார். தற்போது மும்மையில் வசித்தாலும், ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறைகளிலும் தேனியில் தான் இருப்போம்.
கே: எதிர்காலத்திட்டம்.
மும்பை, டெல்லி, கொல்கத்தா போன்ற மெட்ரோ சிட்டிகளில் தமிழர்களின் உணவினைக் கொண்டு செல்ல வேண்டும்.
மற்றும் உலக நாடுகள் பலவற்றில் எங்களின் உணவுக் கிளைகளை ஆரம்பிக்க வேண்டும்.
எங்களது கிரின் கிச்சன் உணவகத்தில் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு பகுதி நேர வேலை வாய்ப்பினை வழங்கி வருகிறோம். இதில் 12 மாணவர்கள் கல்லூரியில் படித்துக் கொண்டே எங்கள் கிளைகளில் வேலை செய்து கல்லூரிக்கட்டணத்தை தாங்களாகவே சம்பாதித்து செலுத்தி வருகின்றனர். இது போல் இன்னும் பல உணவகங்கள் திறந்து கல்லூரி மாணவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
இந்தியாவிலுள்ள நதிகளை இணைப்பதன் மூலம் நம்மால் 65 முதல் 75 மில்லியன் ஹெக்டர்வரை கூடுதலாக நீர்பாசன வசதியில் கொண்டு வர முடியும். இதன் மூலம் நமது உணவு உற்பத்தி திறனை இப்போது இருக்கும் நிலையிலிருந்து மூன்று மடங்குகள் கொண்டு செல்லலாம். இது சம்பந்தமான கருத்தரங்குகள், கூட்டங்கள் போன்றவற்றில் கலந்து கொண்டு முடிந்த அளவு குரலெழுப்பி உரியவரின் காதுகளுக்கு கொண்டு செல்ல வேண்டும்.
முடிந்த அளவு இயற்கை விவசாய முறைகளை இந்திய விவசாயிகளிடம் எடுத்துச் செல்வது, மற்றும் விவசாயிகளின் வருவாயியை அதிகப்படுத்துவது, உலக நாடுகளிலிருந்து சிறந்த பயிற்சியளராக விவசாயம் மற்றும் உணவுத்துறைகளில் கற்றவற்றை நமது இந்தியாவில் மற்றவர்களுக்கு கற்பிப்பது.
இப்போது மும்மையில் 45 நாட்களுக்குள் ஒரு தென்னிந்திய சைவ உணவகத்தை ஆரம்பிக்க வேண்டிய சூழ்நிலையில் பம்பரமாகச் சுற்றிக் கொண்டியிருக்கிறேன். இதை நிச்சயமாக மும்பையில் டாப் 10 ரெஸ்டாரண்டில் ஒன்றாகக் கொண்டு வந்துவிடுவேன் என்ற நம்பிக்கையில் ஓடிக்கொண்டியிருக்கிறேன்.
கே: உங்களுக்கும், உங்கள் நிறுவனத்திற்கும் கிடைத்த பட்டங்கள் பற்றிச் சொல்லுங்கள்?
நான் பள்ளியில் படித்திருந்த காலத்திலிருந்தே தாலுக்கா மாவட்ட மற்றும் மாநில அளவில கவிதை, கட்டுரை பேச்சு போன்ற போட்டிகளில் விருதுகள் பெற்றியிருக்கிறேன்.
அது போல் வேளாண் கல்லூரியில் படித்த 6 ஆண்டுகளில் இயல், இசை, நாடகம் சார்ந்த அத்துனைப் போட்டிகளிலும் பல விருதுகளை வென்றிருக்கிறேன்.
எனது 20 வருட இந்திய நுகர்வோர் வர்த்தகத்துறைக்கான சாதனைப் பாராட்டி மும்பையில் உள்ள ASIA RETAIL CONGRESS என்கின்ற மிகப்பெரிய நிறுவனம் 50 MOST TALENTED RETAIL PROFESSIONAL OF INDIA 2014 விருதை மும்மையில் வழங்கியது .
அதே ஆண்டில WORLD PRAND CONGRESS என்கின்ற நிறுவனம் எனது ஆசியா அளவிலான சாதனைகளைப் பாராட்டி, ASIA FOOD & CROCERY OUTSTANDING ACHEIVEMENT AWARD வழங்கி கௌரவித்து.
எங்களது கிரின் கிச்சன் குடும்ப உணவகம் 2016 ஆம் தென்னிந்திய அளவில் மிகச்சிறந்த உணவகமாகத் தேர்வு செய்யப்பட்டு புதுடெல்லியிலுள்ள Franchise india மூலமாக பெங்களுரில் இவ்விருதினைப் பெற்றது.
மீண்டும் 2017 ஆண்டு தென்னிந்திய அளவில் மிகச்சிறந்த நெடுஞ்சாலை உணவகமாக கிரின் கிச்சன் உணவகம் தேர்வு செய்யப்பட்டு Franchise india மூலமாக பெங்களுரில் இவ்விருதினைப் பெற்றது. [/hide]
இந்த இதழை மேலும்