கல்லீரல் காப்போம்
நாம் கல்லீரலைத் தரமாகக் காத்தால், நாம் விரும்பும் காலம் வாழ்ந்து முடிக்கும் வரை காலன் காத்திருப்பான். நம் கல்லீரலைக் காக்க நாம் நம் கல்லீரல் செரிமானத்தை தரமாகக் கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.கல்லீரல் செரிமானம் தரமாக நிகழ நான்கு முக்கிய அம்சங்கள் தேவை. அவை முறையே,
1. பசி வெப்பம் தணிந்த நிலை: நம் மண்ணீரல் செரிமானத்திற்கு பசி வெப்பம் தேவை என்பது நமக்குத் தெரியும். ஆனால், நம் கல்லீரல் செரிமானத்திற்கு பசி வெப்பம் தணிந்திருக்க வேண்டும். பசியெடுத்து நாம் சாப்பிடும்போது மண்ணீரலானது மாவுச் சத்தை தரமாகச் செரித்து தனக்கு, உடலுக்கு மற்றும் கல்லீரலுக்கு உடனடிச் சக்தியை அளித்தவுடன் நம் பசி அளித்தவுடன் நம் பசி அனத்தல்( பசி வெப்பம்) அடங்கிவிடுகிறது. இந்த வெப்பம் தணிந்த சூழ்நிலையில்தான் நம் கல்லீரல் நொதிகள் சிறப்பாக வேலை செய்கின்றன. நமக்கு பசியின்மை இருப்பின், பசியை தூண்ட மசாலா அதிகம் சேர்ந்த உணவுகளை எடுக்கும் போது அது பசி உணர்வைத் தூண்டி மண்ணீரல் செரிமானம் நடக்கிறது. ஆனால், மண்ணீரல் செரிமானத்தைத் தாண்டி மிச்சமிருக்கும் மசாலா அமிலம் நம் கல்லீரல் செரிமானத்தை பதம் பார்க்கும்இ ஆகவே, பசித்து புசிக்க வேண்டும் என்பது கல்லீரல் செரிமானத்திற்கு பொருந்தும்.
முழுமையான தூக்கமின்மையும் உடலை உஷ்ணப்படுத்தும். இதனாலும், நம் கல்லீரல் செரிமானம் கெடும். அமிலத்தன்மை அதிகம் உள்ள மசாலா உணவுகள், பச்சை மிளகாய், புளிப்பு அதிகம் உள்ள உணவுகள், இரசாயனம் கலந்த உணவுகள் மற்றுமும் ஆங்கில இரசாயன மருந்துகள் யாவையும் நம் உடலை வெப்பமாக்கி கல்லீரல் செரிமானத்தை கடுமையாக பாதிக்கும். சொல்லவே வேண்டாத குடிப்பழக்கம் நம் உடலை அமிலமாக்கி, வெப்பமாக்கி கல்லீரல் செரிமானத்தை பதம் பார்க்கும். கவலை, கோபம், வஞ்சம் மற்றும பொறாமை உணர்வுகளும் நம் வயிற்று அமிலம் உஷ்ணத்தை அதிகரித்து கல்லீரல் செரிமானம் கெடும்.
இந்த இதழை மேலும்
0 comments Posted in Articles