என் பள்ளி
திரு. இளங்கோ
தலைமை ஆசிரியர்,
கணேசபுரம் அரசு தொடக்கப்பள்ளி,
கணேசபுரம்
நான் ஓடிக்கொண்டிருக்கிறேன் எங்கே இருக்கிறது என்னுடைய சிகரம் என்று லேன்ஸ் ஆம்ஸ்ட்ராங் என்ற அயல் நாட்டு அறிஞர் கூறுவார்.
வெற்றி என்னும் சிகரத்தை அடையும் வரை ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும். தடைகள் வரும் , இடையூறுகள் வரும் அதை கண்டு சற்றும் மனம் தளராமல் மனஉறுதியோடு போராடி வெற்றி பெற வேண்டும். போராட்டத்திற்கும் வெற்றிக்கும் இடையில் தான் வாழ்க்கையின் தன்னம்பிக்கை தெரியும். இங்கு கண்ணிருந்தும் குருடர்களான வாழும் பல பேர் மத்தியில் தன் கண் பார்வை இழந்தும் ஒரு வரலாறாக வாழ்ந்து வரும் குறிச்சி தொடக்கப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. இளங்கோ அவர்களை நேரில் சந்தித்தபோது அவரின் அனுபவ பகிர்வை நம்மோடு பகிர்ந்து கொண்டார். அவரோடு இனி நம் பயணம்.
நான் கோவை மாவட்டம் சுந்தராபுரத்தில் ஒரு சாதாரண ஏழைக்குடும்பத்தில் சுப்ரமணி மரகதமணி தம்பதினருக்கு மூத்த மகனாகப் பிறந்தேன். எனக்கொரு சகோதிரி இருக்கிறார். சின்ன வயதிலிருந்தே ஏழ்மையை அனுபவித்தவன் நான், பிறக்கும் போது வானம் தெரிந்தன வானம்பாடி பறவைகள் தெரிந்தன, ஆறு குளம் தெரிந்து, அரண்மனை தெரிந்தது மக்கள் தெரிந்தன மகான்கள் தெரிந்தார்கள் இப்படி எல்லாத்தையும் பார்த்து ரசித்துக் கொண்டு தான் இருந்தேன். எல்லோருக்குள்ளும் இருந்த எதிர்கால கனவு எனக்குள்ளும் இருந்தது. கனவை நினவாக்க கல்வி கற்க வேண்டும் அல்லவா?
கல்வி மட்டுமே ஒரு மனிதனை சான்றோனாக்கும்,என்பதை என் பெற்றோர்கள் புரிந்து கொண்டவார்கள். இதனால் அருகிலிருந்த செங்கோட்டை அரசினர் பள்ளியில் சேர்ந்தார்கள். படிப்பு என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். எல்லா வகுப்பிலும்நல்ல மதிப்பெணுடன் தேர்ச்சிப் பெற்றேன். வகுப்பில் நன்றாகப் படிக்கும் பிள்ளைகளை எப்பொழுதும் ஆசிரியர்கள் மிகுந்த அக்கரை செலுத்துவார்கள் அதுபோல தான் எனக்கும் ஆசிரியர்களின் அரவணைப்பு ஒவ்வொரு வகுப்பிலும் கிடைத்தது.
நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் பொழுது ஒரு நாள் கடைசி வரிசையில் அமர்ந்து கொண்டுயிருந்தேன். அப்போது கரும்பலகையில் எழுதப்பட்ட எழுத்துக்கள் எனக்கு சரியாகத் தெரியவில்லை. அதுபோலவே தூரத்தில் இருக்கும் எதையும் என்னால் சரியாகப் பார்த்துத் தெளிவு பெற முடியவில்லை. ஆனால் அருகில் சென்று பார்த்தால் புரிந்து கொள்ள முடிந்தது. அப்போது தான் புரிந்தது தூரப்பார்வை எனக்கு இல்லை என்று. இந்தக் குறையை என் பெற்றோரிடம் சொன்னேன். மிகவும் கவலைவுற்ற நிலையில் கண் மருத்துவரிடம் கிகிச்சைக்காகக் கூட்டிச் சென்றார்கள். அப்போது மருத்துவர் கண்ணிற்கும் செல்லும் சில நரம்புகள் பாதிக்கப்பட்டுள்ளது, என்றும் கண்ணாடி அணிந்து கொள்ளுங்கள் என்றும் சொல்லி சில வைட்டமீன் மாத்திரைகளையும் கொடுத்தார். மருத்துவரின் ஆலோசனைப்படி மாத்திரைகளையும் சாப்பிட்டேன் எனினும் கண் பார்வைக் குறைபாட்டை என்னால் சரி செய்ய முடியவில்லை.
பத்தாம் வகுப்பு வரை என்னால் புத்தகத்தைப் பார்த்துப் படிக்க முடிந்தது. அதன் பிறகு பகலும் இரவானது பார்வையும் இருளானது. என் கண்முன்னே நடக்கும் அசைவுகள் அனைத்தும் மறைந்தன, அனுதினமும் ரசித்து பார்த்த எதுவும் எனக்குத் தெரியவில்லை. திசை மாறிய பறவை போலவும், வழி மாறிய ஆடுகள் போலவும் என் வாழ்க்கை மாறிவிட்டது.
இனி என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டுயிருந்தேன். இவ்வுலகில் பார்வை பறிபோன முதல் ஆள் நான் இல்லை என்பதை உணர்ந்தேன். இங்கு பார்வை இல்லாமல் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள், அவர்கள் எல்லோரும் வாழும் போது நம்மால் வாழ முடியாத என்ற தன்னம்பிக்கை எனக்குள் தோன்றியது. இதனால் அடுத்த நிலையை அடைய வேண்டும் என்றால் என்ன செய்யலாம் என்று யோசித்தேன். என்னால் புத்தகத்தை படிக்க தான் முடியாது ஆனால் படிப்பதைக் கேட்டு அதற்கு ஏற்றார் போல் மனப்பாடம் செய்து என்னை நானே தயார் படுத்திக் கொண்டேன்.
அப்போது சி.ஏஸ்.சி பள்ளியில் பார்வையற்றோருக்கான ஒருங்கிணைந்த கல்வித்திட்டம் என்ற ஒரு திட்டத்தை நடைமுறைப்படுத்தினார்கள். இத்திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால் மற்றப் பிள்ளைகளைப் போலவே பார்வையற்றவர்களும் ஒரே பள்ளியில் படிக்கலாம் என்பதே ஆகும். இதனால் நான் இப்பள்ளியில் சேர்ந்தேன். இத்திட்டம் பெரிதும் எனக்கு உறுதுணையாக இருந்தது. மற்றவர்களை போல ஒரே மாதிரியான பாடத்திட்டம் என்பதால் படிப்பதற்கு எளிமையாக இருந்தது. ஆனால் தேர்வு எழுதும் போது மட்டும் ஒருவரின் துணைத் தேவைப்பட்டது. அப்படி படிப்பதை நன்கு உள்வாங்கி படித்து ஒருவரின் உதவியோடு பன்னிரெண்டாம் வகுப்பை சிறந்த முறையில் தேர்வில் வெற்றி பெற்றேன்.
பள்ளிப் படிப்பை முடித்த கையோடு பி.ஏ ஆங்கிலத்துறையை பி.எஸ்.ஜி கல்லூரியிலும், பி.எட் படிப்பை இராமகிருஷ்ணா கல்வியில் கல்லூரியிலும் படித்தேன். படித்து முடித்தவுடன் 1997 ஆம் ஆண்டு செங்கோட்டை அரசு பள்ளியில் ஆசிரியாராகப் பணியில் சேர்ந்தேன். சேர்ந்த பிறகு எம். ஏ ஆங்கிலமும் படித்த முடித்தேன். செங்கோட்டை பள்ளியில் 6 ஆண்டுகளாகப் பணியாற்றினேன். இப்பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி இது நிரந்தர பணி கிடையாது. இப்படி தான் முதலில் பணியாற்றினேன்.
அதன் பிறகு 2004 ஆண்டு கணேசப்புரத்திலுள்ள அரசு தொடக்கப்பள்ளியில் எனக்கு அரசு பணியில் நியமனம் கிடைத்தது. இது எனக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்தது. ஏழு ஆண்டுகள் இதே பள்ளியில் ஆங்கிலத்துறை ஆசிரியராகப் பணியாற்றினேன். 2011 ஆண்டு தலைமை ஆசிரியராகப் பதவி உயர்வு கிடைத்தது.
நான் பாடம் நடத்தும் போது வகுப்பில் நன்றாகப்படிக்கும் இரண்டு மாணவர்களை எழுந்து நிற்க சொல்லி படிக்க வைப்பேன். ஒரு மாணவன் படிப்பான் அதற்கான விளக்கத்தை நான் சொல்வேன். இன்னொரு மாணவன் வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களை கவனித்துக் கொள்வான்.
நான் கடந்து வந்த பாதையில் சந்திக்காத பிரச்சனைகளே இல்லை. இந்த இடம் வந்ததற்கு நான் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் போராட்டத்தை சந்தித்துக் கொண்டு தான் இருக்கிறேன். நான் ஒருநாள் கூட நான் ஒரு மாற்று திறனாளி என்று எண்ணியதே கிடையாது. மாணவர்களும் மற்ற ஆசிரியர்களும் என்னிடம் மிகுந்து அன்போடு பழகுவார்கள். அவர்களின் ஒத்துழைப்பும் தான் என்னை வழிநடத்துகிறது என்றே சொல்வேன்.
நான் வந்த இந்த 5 வருடத்தில் பள்ளிக்காக நிறைய திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறேன். நீண்ட நாட்களாக பழைய கட்டிடமாக இருந்த கட்டிடத்தை இடித்து புதிய கட்டிடம் கொண்டு வந்தோம்.
இப்பள்ளியின் முதன்மையான நோக்கமே அனைத்து மாணவர்களும் நன்றாகப்படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும், அவர்களின் முன்னேற்றத்தில் அவர்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்பது மட்டுமே எங்களுடைய நோக்கமும் ஆசையும். அது மட்டுமின்றி தொடக்கப்பள்ளியாக இருக்கும் இப்பள்ளி நடு நிலை பள்ளியாக உயர வேண்டும் அதுவே என்னுடைய லட்சியம்.
நான் பிள்ளைகளிடம் சொல்வது ஒன்று தான். நீங்கள் அனைவரும் விவசாயக்குடும்பத்திலிருந்து வந்தவர்கள். உங்களின் தந்தை வேலை செய்யும் இடத்தில் ஒருநாள் நேரடியாகச் சென்று பாருங்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள். அவ்வளவு கஷ்டப்பட்டு உங்களை வளர்க்கிறார்கள். அதைப்புரிந்து ஒவ்வொருவரும் வாழ்க்கை வாழக்கற்றுக் கொளள்ளுங்கள்.
என் வாழ்வில் எனக்குப் பெரிதும் உறுதுணையாக இருந்த எனது பெற்றோருக்கும், எனது சகோதிரிக்கும் இத்தருணத்தில் நான் பெரிதும் நன்றிக்கூற கடமைப்பட்டுயிருக்கிறேன். அது போல் இப்பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் என்னுடைய குரு திரு ஜெகநாதன் அவர்கள் என்னுடைய வழிகாட்டி நெறியாளர் நான் தளர்ந்து போதெல்லாம் எனக்கு தன்னம்பிக்கை வரிகளைக் கொடுத்து ஊக்கப்படுத்தியவர். அதன் பிறகு என்னுடன் பணியாற்றும் இதர ஆசிரியர்களான மங்கையர்க்கரசி, சுமதி, ஜெயசுவேதா, ஜெயசித்ரா போன்றவர்கள் எனக்குப் பள்ளியில் நிறைய உதவிகளைச் செய்து வருகிறார்கள். அது மட்டுமின்றி என்னுடன் பணியாற்றும் இதர ஆசிரியர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
0 comments Posted in Articles