– 2013 – January | தன்னம்பிக்கை

Home » 2013 » January (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    நமக்கு நாமே

    இடம் : சிபி பயிற்சி கல்லூரி
    3/182 P.R. வளாகம், முதல் தளம்
    ப்ரொபசனல் குரியர் மாடி
    பேங்க் காலனி, மதுரை -14

    சிறப்புப் பயிற்சியாளர் : Dr.செ.குகசீலரூபன், M.A,B.L,M.Phil,M.Ed,D.G.T.,P.hD.
    கண்காணிப்பாளர்
    இந்து அறநிலையத் துறை

    தொடர்புக்கு
    தலைவர் – திரு. எ. எஸ். இராஜராஜன்: 94422 67647
    செயலர் – கவிஞர். இரா. இரவி: 98421 93103
    ஒருங்கிணைப்பாளர் – திரு. திருச்சி சந்தர்: 94437 43524

    ஆழ்மனதின் அதிசயம்

    இடம் : இன்டக்ரல் யோகா இன்ஸ்டியூட்,
    139/86, மேற்கு சம்பந்தம் சாலை,
    ஆர்.எஸ். புரம் (மேற்கு),
    பெண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரில்,
    கோவை.
    சிறப்புப் பயிற்சியாளர் : டாக்டர் S. ராதாகிருஷ்ணன்
    Director, SKITRAC
    போன்: 94432 93269

    இடம் பற்றிய தொடர்புக்கு:
    தலைவர் திரு. A.G. மாரிமுத்துராஜ் – 98422 59335
    துணைத்தலைவர் திரு. M. மணிகண்டன் – 90036 56567
    செயலாளர் திரு. A. சரவணகுமரன் – 90920 92080

    புனித யாத்திரை – கயிலயங்கிரி

    அன்பளிப்பு (இனாம்):
    சைனாவில் திபேத் பகுதியில் சுமார் 900 கி.மீ. சாலைப்பயணம், தங்குமிடங்களில் மக்கள் வறுமைநிலை தெரிகிறது. அங்குள்ளோர் நம்மூர் ஸ்டிக்கர் பொட்டு, வளையல்கள், மாணவர்கள் பென்சில் போன்ற எழுதுபொருட்கள் கேட்கின்றனர். உடன் சாக்லேட் வைத்துக்கொள்வதும் நன்று.
    பரிக்ரமா முடித்தபின் உடன்வந்த சுமை தூக்கிய அன்பருக்கு ஏதாவது பொருட்கள் கொடுத்தால், அவர்களது முகத்தில் உண்டாகும் மகிழ்ச்சியைக் கண்டு நாமும் மகிழலாம்.

    மக்கள் வாழ்க்கை:
    நேபாள நாடு பெரும்பாலும் மலைப் பகுதிகளாயிருப்பதால், விளை நிலங்கள் குறைவு. சுமாரான வசதியுள்ள நாடு. சுற்றுலா பயணிகளை வெகுவாக எதிர்பார்த்துக் காத்துள்ளது.
    சைனாவிலும் மக்கள் ஆடம்பரமின்றியே வாழ்கின்றனர். வழியில் பல இடங்களில் ஒரு வீடு, எருமைக்கான பட்டி இதுபோல் பல பார்த்தோம். துணிகள் துவைப்பதை வீட்டு முன்புறத்தில் அமர்ந்து செய்கின்றனர். ஷாக்ஸ், ஷூ, உல்லன் ஆடைகள் கட்டாயம் தேவை. அவ்வப்போது எல்லாவற்றையும் தூய்மைப்படுத்துகின்றனர்.

    ஷாப்பிங்:
    நேபாளத்தில் ருத்ராட்சம், ஸ்படிகம், முத்து, பவளம் போன்றவைகள் விற்கப்படுகின்றன. தரம் என்ற ஒன்றைக் கூறி விலை வேறுபாட்டை நியாயப்படுத்துகின்றனர். ஒரு முக ருத்ராட்சம் ஓரிடத்தில் ரூ. 250, மற்றோரிடத்தில் ரூ. 400. இதிலேயே நல்ல தரமுள்ளதை ரூ. 3000 என வாங்கினோம். இன்னும் அதிக விலையிலும் கிடைக்கும் என்றனர்.
    சைனாவில் நம்மூர் விலையை விடச் சிறிது கூடுதலாக அல்லது சமமாகப் பொருட்கள் கிடைக்கின்றன. குழந்தைகளுக்கான ரெடிமேட் ஆடைகள் சிலர் வாங்கினர். நான் ரூ. 180க்கு ஒரு மடக்கு வாக்கிங் ஸ்டிக் வாங்கினேன். அங்கு என்ன விலை என்று சைகையால் கேட்டால் கால்குலேட்டரில் 10, 20 என அடித்துக் காண்பிக்கின்றனர். அத்தனை சீன யுவான் என்று அர்த்தம். நாம் பேரம் பேசியும் வாங்கலாம்; வாய்திறக்காமலேயே.
    அதே கால்குலேட்டரில் நாம் கேட்கும் விலையை அடித்துக் கொடுக்கலாம். கட்டுபடியானால் கொடுப்பார். இல்லாவிட்டால் மேலும் குறைக்க நாம் ஏற்ற எப்படியோ வாங்கிவிடலாம்.
    இனி காத்மாண்டுவில் முக்கிய இடங்களுக்கு பயணிப்போம்.

    நேபாளம்:
    டெல்லியிலிருந்து விமானம் மூலம் நேபாளத்தின் தலைநகர் காத்மண்டு நகரின் திரிபுவன் சர்வதேச விமான நிலையம் செல்ல சுமார் ஒரு மணிநேரமானது. இறங்கி எமிச்ரேசன் முடித்து, வெளியே வந்தோம். சுற்றுலா ஏற்பாட்டாளர் யாத்ரிகர்கள் அனைவருக்கும் ஒரு ருத்திராட்ச மாலை அணிவித்து வரவேற்றார். மினி பஸ், வேன் போன்ற வாகனங்களில் நகருக்குள் சென்றோம்.
    ஓட்டல் மனாஸ்லு என்ற லாட்ஜில் தங்கினோம். மதிய உணவு சாப்பிட்டு, ஓய்வு, குளியல், பொருட்கள் எடுத்து வைத்தல் என நேரம் கரைந்தது. மாலை கூட்டம் ஒன்று நடத்தி, மேற்கொள்ள உள்ள கைலாஷ் யாத்திரைக்கான பயண விபரம், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றவைகளைக் கூறினர். ஒரு பெரிய துணிப்பை கொடுத்து, அதில் கைலாயப் பயணத்துக்கான உடைமைகளை எடுத்து வைக்கச் சொன்னார்கள்.
    உடன் வந்தவர்களுடன் அறிமுகம், உரையாடல் எனப் பொழுது முடிந்தது.
    பசுபதிநாத் ஆலயம்:
    மறுநாள் இரு மினி பஸ் போன்ற வேனில் எல்லோரும் பசுபதி நாதர் ஆலயம் சென்றோம். வழி மோசமாக உள்ளது. நம்மூரில் கோயிலுக்கு நான்கு வாயில்கள் இருக்கும். இங்கோ மூலஸ்தான்ததுக்கே நான்கு வாயில்கள் உள்ளன. நான்கு முகங்கள். நான்கு திசைகளிலிருந்தும் தரிசிக்கலாம். ஐந்தாவது முகம் வான்நோக்கி உள்ளதாய் கூறுகின்றனர்.
    முதன்மையான சிவ ஆலயங்களுள் இதுவும் ஒன்று. கயிலை மலைக்குக் கீழே அமைந்துள்ள முதல் ஆலயம் புராதன ஆலயம். மூலவருக்கு அணிவித்து கொடுக்க ருத்திராட்ச மாலைகளைப் பலர் கொடுத்து வாங்கிச் செல்கின்றனர். சந்தனம் பிரசாதமாய் கொடுக்கின்றனர்.
    இந்த ஆலயம் பகுமதி என்ற நதிக்கரையில் உள்ளது. கோவை பேரூரில் நொய்யலாற்றங்கரை இருப்பது போன்றதே இந்த நதி. இப்போது இந்த நதிக்கரைகளை மேம்படுத்தி சுற்றுலாத்தலமாக்கித் தூய்மைப் பகுதியாக வைத்துக் கொள்ள வெளிநாட்டு நிதி உதவியை சமீபத்தில் பெற்றுள்ளனர்.
    இந்த ஆலயத்தைச் சுற்றிலும் பல கடைகள் உள்ளன. ருத்திராட்சம் தனியாக, மாலையாக, ஸ்படிகத்தில் பல தெய்வச் சிறு சிலைகள், முத்துமாலை, பவள மாலை மற்றும் வளையல்கள் எனப் பலவும் பேரம் பேசி வாங்கலாம். சுற்றுலா ஏற்பாட்டாளர் தரம் நல்லவை என ஒரு கடைக்கு அழைத்துச் சென்றார். அங்கே வாங்கினோம்.
    குய்யேஸ்வரி ஆலயம்:
    64 சக்தி பீடங்களுள் ஒன்று இது. உடலின் நடுப்பாகமே இத்தலத்தில் எழுந்தருளியுள்ளதாய் கூறினர். சுயம்புவாக அம்பாள் தரை மீது படுத்த நிலையில் காட்சியளிக்கிறாள். இந்தக் கோயிலும் பாகுமதி நதிக்கரையில் தான் உள்ளது. சுமார் 20 படிகள் ஏறி மேலே சென்று, கோயிலுக்குள் நுழையுமுன் காலணிகளை அகற்றிவிட்டுச் செல்ல வேண்டும்.
    தரைக்குழியிலிருந்து மொண்டு தீர்த்தம் கொடுத்தனர். நாற்றம் வீசியது. என்ன காரணம்? சரியான பராமரிப்பில்லாதது தான். தினமும் சுத்தம் செய்வதே இப்பிரச்சனைக்குத் தீர்வு. குரங்குகள் வழக்கம் போல் தான்.
    புத்த நீலகாந்தர்:
    இது விஷ்ணு ஆலயம். நடுவில் குளம். அதில் சுமார் 20 அடி நீளம் 10 அடி அகலத்தில் மகாவிஷ்ணு பாம்புப் படுக்கையில் பள்ளி கொண்டிருப்பது போல் சுதைச் சிற்பமாக அமைத்துள்ளார்கள். ஆனால் பல புத்தகங்களில் 100 அடி நீளமும் 20 அடி அகலமும் என பக்திப் பரவசத்தில் எழுதியுள்ளனர். அந்தக் குளத்தைச் சுற்றிலும் சில சிறு கோயில்கள் உள்ளன. அங்கு ருத்திராட்ச மரம் பார்த்தோம்.
    சுயம்புநாத் என்னும் புத்தர் ஆலயத்துக்கு நான் செல்ல இயலவில்லை. அது சிறுமலை மீது உள்ளது. படிகளில் ஏறிச்செல்ல வேண்டும். மேலிருந்து காத்மாண்டு நகரைப் பார்க்க டெலஸ்கோப் வசதி செய்துள்ளனர்.
    புறப்பாடு:
    மறுநாள் நேபாளத்தில் அரசியல் கட்சிகள் ‘பந்த்’ (முழு கடையடைப்பு) என்றதால், பயணத்தில் தடை ஏற்படாவண்ணம் முன்னெச்சரிக்கையாக முதல் நாளே மாலை 4 மணியளவில் இரு மினிபஸ் போன்ற வேனில் நேபாள எல்லை ஊரான கோதாரிக்கு பயணமானோம். சுமார் 115 கி.மீ. தூரம். பயண நேரம் 5 மணி. வழியில் ஏழு இடங்களில் காவல்துறை உள்ளிட்ட பல அலுவலர்கள் சோதனை நடத்தினர். மழையும் பெய்தது.
    நேபாளத்தில் நம்மூர் போல சிட்டி (டவுன்) பஸ்கள் இல்லை. ஆட்டோ, கார், வேன், மினி பஸ் இவைதான் நகருக்குள் ஓடுகின்றன. கூவிக்கூவி அழைத்துப் பயணிகளை ஏற்றிச் செல்கின்றனர். நானும் ஒரு மினி பஸ்ஸில் ஏறிச்சென்று வந்தேன்.
    எவரெஸ்ட் சிகரம்:
    காத்மாண்டு விமான நிலையத்தில் இருந்து பல தனியார் விமானங்கள் “எவரெஸ்ட் சிகரம் நோக்கி” என்ற பயணத்தை நடத்துகின்றன. சுமார் 45 நிமிடப் பயணம். சிறு விமானங்கள் சுமார் 14/20 பேர் பயணிக்கலாம். கட்டணம் ரூ. 6000.
    காலை நேரம் நம்மை ஓட்டல் ரூமிலிருந்து அழைத்துச் சென்று, காண்பித்து, திருப்பிக் கொண்டுவந்து விடுகின்றனர். டெல்லியிலிருந்து நேபாளத்தை நெருங்கும்போதே விமானத்திலிருந்து வெளியே பார்த்தால், பனி மூடிய பல மலைச் சிகரங்கள் தெரிகின்றன.
    இச்சிறு விமானங்கள் அன்னபூரணி மலைத்தொடர்களின் மீது பறந்து, தொலைவில் பனி மூடிய மலைச் சிகரத்தை இதுதான் ‘எவரெஸ்ட் சிகரம்’ என்க் காண்பிக்கின்றனர். இது சுமார் 32,000 அடி உயரத்தில் உள்ளது. ஒவ்வொருவரும் டெலஸ்கோப் வழியாகப் பார்க்கும் வசதி அந்தச் சிறு விமானத்திலேயே உள்ளது. சென்று வந்தபின் சான்றிதழ் ஒன்று தருகின்றனர்.
    சில தகவல்கள்:
    கைலாஷ் செல்பவர்கள் தவிர பல வெளிநாடுகளிலிருந்தும் பயணிகள் நேபாளத்தைச் சுற்றிப்பார்க்க வருகின்றனர். நாங்கள் சென்றிருந்த சமயம், மலேசியாவிலிருந்து பல குழுக்கள் வந்திருந்தன. மேலே கூறிய ஆலயங்கள், எவரெஸ்ட் சைட் சீயிங், மலைகள் இவை போன்றவை தான் அவர்கள் பார்ப்பவை.
    சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் அனைவருமே காத்மாண்டிலிருந்து, எல்லை ஊரான கோத்தாரிக்கு டீலக்ஸ் பஸ்ஸில் அழைத்துச் செல்வதாய் கூறுவர். ஆனால் எந்த வாகனம் கிடைக்கிறதோ, அதில் அழைத்துச் செல்கின்றனர்.
    நேபாள எல்லை:
    எல்லையில் ‘பேட்டி கோஷி’ என்ற ஆறு ஓடுகிறது. ஆற்றின் ஒருபுறம் நேபாளம்; மறுபுறம் சைனா. ஆற்றின் மீது ஒரு பாலம் கட்டியுள்ளனர். நட்பு பாலம் (Friendship Bridge) என்று பெயர். மலைப்பகுதி; நேபாளத்தில் வறுமை நிதர்சனமாய் கண்களுக்குத் தெரியும். அதேசமயம், சைனாவில் செழிப்பான நிலை தெளிவாகத் தெரிகிறது.
    நேபாளத்தில் ரோடு மோசம், வீடுகள் ஓட்டு / சிமெண்ட் சீட் போட்ட வீடுகள், சில மாடிகள் இந்த மக்கள் சீன எல்லைக்குள் சென்று தினமும் கூலி வேலை செய்து வருகின்றனர். சீனாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களை (எவ்வளவு பெரியதாக இருந்தாலும்) சுமந்து வருகின்றனர். நம்மிடம் குழந்தைகள் இனாம் கேட்கின்றனர்.
    ஆனால் சீனாவுக்குள் சாலைகள் மிகவும் அற்புதமாக உள்ளன. அடுக்கு மாடி வீடுகள், வாகனங்கள், கடைகள் என செழிப்பைக் காட்டும் வகையில் உள்ளன. மக்களும் செழிப்பாகவே உள்ளனர்.
    இந்தப்பாலத்தை போட்டோ எடுக்கக்கூடாது மீறி எடுத்தால் கேமராவைப் பிடுங்கிக் கொள்வார்கள். எல்லையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் ‘காஷா’ என்ற நகரம் உள்ளது. கடைவீதி உள்ளது.
    சில நேபாளக் கடைகளில் சாயா கிடைக்கும். மற்றபடி அவர்களது சீன உணவுகள் தான் ஓட்டல்களில் கிடைக்கும்.
    மக்கள் இரு குச்சிகளின் உதவியால் நூடூல்ஸ் போன்ற உணவுகளை எடுத்து உண்ணுகின்றனர். அதிகாலையிலேயே பிரெட்டை ஏதோமாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு வேக வைத்து சாப்பிடுகின்றனர். நீர்வசதி நன்றாக உள்ளது. மலைப்பகுதி என்பதால் மலை ஊற்று நீரை ஒரு சிறு பைப்பில் விழுமாறு ஏற்பாடு செய்துள்ளனர்.
    பேட்டிகோஷி நதியில் தண்ணீர் ஓடியது. ஒட்டியுள்ள மலை உயரமாயுள்ளது. அந்த மலை தான் எல்லை அரண் போல் உள்ளது.
    சைனாவில் மிலிட்டரி சிப்பாய்கள், போலீஸ்கள் குள்ளமாக, சிவப்பாக உள்ளனர். பொம்பை போல் விறைப்பாக நின்று கொண்டுள்ளனர். இவர்களைத் தாண்டிப் பயணிப்போம்.
    தொடரும்

    நகரத்தை நோக்கி நடந்தாலும் இனிக்கும் பொங்கல்

    பொங்கல் என்றால் அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது பொங்கல், புது வேம்பு, காப்புகட்டு என்று கிராமங்கள் தோறும் கோலாகல காட்சியாக இருக்கும். கிராமத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் வளர்க்கும் கால்நடைகளைக் குளிக்கவைத்து, வண்ணப்பூச்சு போட்டு, மாடுகளானால் கொம்புகளைச் சீவி, புதிய கயிறுகளை அணிவித்து புத்தாடை அணிவித்து, வர்ணச்சாயம் பூசி விவசாயிகள் அழகுபார்ப்பதில் ஆனந்தப்படுவார்கள்.

    கால்நடைகளுக்குப் புதிய பொருட்கள் வைத்து மாலை, தோங்காய், பழங்கள் போன்றவற்றைப் படைத்து புது பொங்கலை உண்ணக்கொடுத்து அனைவரும் கொண்டாடுவதுதான் மாட்டுப் பொங்கல். பெரும்பாலான கிராமங்களில் இன்றும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
    இந்தியாவின் பல பகுதிகளிலும் இன்றும் இந்த அறுவடை திருநாள் பல பெயர்களில் கொண்டாடப்படுகிறது. வடகிழக்கு மாநிலங்கள் “பிகு” என்ற பெயரால் அறுவடை திருநாள் அழைக்கப்படுகிறது. இந்த அறுவடை திருநாள் சந்தோச திருநாளாக இன்றும் கொண்டாடப்பட்டு வருவதற்கான காரணம் ஆடி மாதத்தில் உழவர்கள் நெற்பயிரை நடவுசெய்து, மார்கழி மாதத்தில் அறுவடை செய்து தை மாத பொங்கலுக்கு புது நெல்லாக படைப்பதால் சிறப்பு பெறுகிறது.
    அறுவடை காலத்தில் உழவர்கள் தாங்கள் பெற்ற விளைச்சலைக் கொண்டு தேவையான பொருட்களை வாங்கவும், தமக்கு உதவி செய்த கால்நடைகளுக்கு நன்றி சொல்வதுமான மிகவும் சந்தோசமான திருவிழாவாகும்.
    தற்போது இளைய தலைமுறையினர் பொங்கல் திருநாளில் தொலைக்காட்சிப் பெட்டியின் முன்பு அமர்ந்து, குக்கரில் செய்த பொங்கலைச் சாப்பிட்டு, சினிமா நட்சத்திரங்களின் வாயிலாக உழவர்கள் பண்டிகையைப் பற்றிச்சொல்லும்போது தான் சர்க்கரை பொங்கலின் சுவை தெரிகிறது. அந்த ஒருநாள் மட்டுமே உழவர்களைப் பற்றி ஞாபகப்படுத்திக் கொள்கின்றனர்.
    பொங்கல் போன்ற பழம்பெரும் பண்டிகைகளைக் கொண்டாடிக் கொண்டு இருப்பதால் தான் இந்திய கிராமங்கள் இன்றும் தனித்தன்மை கொண்டதாக விளங்கிவருகிறது.
    கிராமத்து இளைஞர்கள் நகரத்தை நோக்கி நகர்ந்த வண்ணம் இருக்கிறார்கள். தற்போது 60 சதவிகிதத்திற்கு மேல் கிராம மக்கள் கிராமத்தில் இருந்து நகரத்தை நோக்கி குடிபெயர்ந்து கொண்டு இருக்கிறார்கள். இதற்குக் காரணம் நகரத்தில் உள்ள நல்ல வேலைவாய்ப்பு, அதிக வருமானம், குழந்தைகளுக்கு வேண்டிய கல்வி, நவீன தொழில்நுட்பங்கள் போன்ற காரணங்கள் பல உள்ளன.
    எனவே தற்போது கிராமத்தில் இருந்து விவசாயத்தைப் பார்த்து கொண்டு வரும் விவசாயிகளின் வயது சராசரியாக 40 வயதைத் தாண்டியவர்களாகவே இருக்கிறார்கள். மேலும் நகரத்தை நோக்கிய இதுபோன்ற பயணம் இன்னும் 10 ஆண்டுகளுக்குத் தொடருமானால் இந்தியாவில் விவசாயிகள், ஜப்பானைப் போல 60 வயதைத் தாண்டியவர்களாகவே இருப்பார்கள்.
    நமது குழந்தைகள் அனைவரும் நன்கு கல்வி பெற்று, நகரத்தில் நல்ல வேலை செய்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்று கிராமத்து பெற்றோர்கள் விருப்பப்படுகிறார்கள். இதனால் நகரத்தை நோக்கிய பயணம் தொடரும் என்பதில் சந்தேகமில்லை.
    நகரத்தில் கிடைக்கும் அனைத்து வகையான வசதிகளும், வாய்ப்புகளும் கிராமத்தில் கிடைப்பது இல்லை. மேலும் விவசாயத் தொழிலை நம்பி இருக்கும் தொழிலாளர்களுக்கு இதில் பெருமளவில் இலாபமும் கிடைப்பதில்லை. பருவ மழை மாற்றத்தால் விளைச்சலில் பாதிப்பு, விளைபொருட்களுக்கு ஏற்ற விலை கிடைக்காதது போன்ற காரணத்தால் விவசாயிகள் தங்கள் சந்ததியினரை இத்தொழிலைத் தொடர ஊக்குவிப்பதில்லை.
    கிராமத்தில் உள்ள கால்நடைகளின் எண்ணிக்கை பெரும்பாலும் குறையத் தொடங்கிவிட்டன. ஒரு நடுத்தர விவசாயி குடும்பத்தில் குறைந்தது 10 முதல் 20 ஆடு, மாடுகள் இருந்த காலம் மாறி, தற்போது 1 அல்லது 2 மாடுகள் வைத்து குடும்பத்திற்கு போக மீதமுள்ள பாலை சந்தைக்கு அனுப்புகிறார்கள். பாக்கெட் பால் வருகையால் இந்த இயற்கை பாலை மக்கள் எதிர்பார்ப்பதும் இல்லை.
    கால்நடை எண்ணிக்கை அதிகமாக இருந்தால், அதை பராமரிக்க தேவையான வேலையாட்கள் கிடைப்பதில்லை. தங்கள் குழந்தைகளை நகரத்திற்கு அனுப்பி விடுவதால் கணவன், மனைவி மட்டுமே கால்நடைகளை பராமரிக்கின்றனர். விவசாயத்தை மட்டுமே நம்பியிருந்த வேலையாட்கள், மற்ற துறைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தால் அதை சார்ந்து நகரத் தொடங்கி நகரவாசிகளாக மாறிவிட்டார்கள். மீதம் இருந்த விவசாயிகளும் ராஜீவ்காந்தி கிராம வேலை வாய்ப்பு திட்டம் போன்றவற்றில் வேலைக்கு சென்றுவிட்டார்கள்.
    ஆகவே தற்போது கிராமத்தில் நடைபெறும் பொங்கல் திருநாள் அப்பொழுது போன்று உள்ளுணர்வுடன் அல்லாமல், ஏதோ சம்பிரதாய விழாவாக மட்டுமே கொண்டாடப்படும் நிலை உருவாகி வருகிறது. அன்று விவசாயத்தில் துடிப்புடன் ஈடுபட்ட இளைய சமுதாயம் இன்று இல்லை. கிராமத்து பொங்கல் தற்போது, நகரத்தில் இருந்து வரும் தனது மகன், மருமகள், பேரன், பேத்திகள் போன்றவர்களை எதிர்பார்த்து வரவேற்று, கிராமத்து வாசனை என்று பெயரளவில் மட்டுமே சொல்லிக்கொண்டு முதியவர்களின் துணையோடு பொங்கல் நகர்ந்து கொண்டு செல்கிறது.
    மாறிவரும் பொருளாதார சூழ்நிலையில், விவசாயத்திற்கு ஆட்கள் குறைந்துவரும் நிலையில் பொருளாதாரத்தை ஈடுகட்ட முண்டியடிக்கும் இன்றைய இளைஞர்கள், பொங்கலின் சிறப்பை உணர விவசாய மாற்றத்தையும் கருத்தில் கொண்டு விவசாயத்திற்குத் தேவையான தொழில்நுட்பங்களுடன் கூடிய விதத்தில் இத்துறையையும் வளமாக்க முன்வந்தால் மட்டுமே விவசாயம் துளிர்விடும். பொங்கல் சிறப்பு பெறும்.
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    ஜனவரி மாத முக்கிய தினங்கள்

    தேசிய இளைஞர் தினம் – ஜனவரி 12

    உலகிற்கே ஒரு விடிவெள்ளியாகத் திகழ்ந்த வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 150ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா இந்த 2013ம் ஆண்டு நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ‘உலக இளைஞர் ஆண்டு’ உலகெங்கும் கொண்டாடப்பட்ட 1985ம் ஆண்டு முதல் பாரதத் திருநாட்டின் புகழைப் பாரெல்லாம் பரவச் செய்த ஆன்மீகச் செம்மல் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாளான (1863) ஜனவரி 12ம் தேதி தேசிய இளைஞர் தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    விவேகானந்தர் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம், அவரது உலகப் புகழ் பெற்ற சிகாகோ சொற்பொழிவு இந்தியர்களின் இறை உணர்வையும், ஒழுக்க நெறிகளையும் உலகுக்கு எடுத்துக் காட்டியது. அந்த சர்வதேச அனைத்து சமய மாநாட்டில் ‘சகோதரர்களே, சகோதரிகளே’ என்று அவர் விளித்துப் பேசியது உலக சரித்திரமாகி விட்ட ஒன்று.

    மனவலிமையும், உடல் உரமும் கொண்ட இளைஞர்களால்தான் புதிய இந்தியாவை படைக்க முடியும் என்பது அவர் நம்பிக்கை. ‘எனது வீரக் குழந்தைகளே! நீங்கள் மகத்தான பணிகளைச் செய்யப் பிறந்தவர்கள் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். சிறிய நாய்க்குட்டிகளின் குரைப்பைக் கேட்டு நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை. ஆகாயத்தின் இடியோசைகளைக் கேட்டும் நீங்கள் அஞ்ச வேண்டாம்” என்று இளைஞர்களுக்கு எழுச்சி ஊட்டியவர்.

    இன்றைய இளைஞர்கள் ஒருவரைப் பின்பற்றும்போது நல்ல குணங்களை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை விவேகானந்தர் அழகாகக் கூறுகிறார். ‘ஒரு விதையை நிலத்தில் போடுகிறோம். அதன் வளர்ச்சிக்கு தேவையான எரு, தண்ணீர் ஆகியவற்றை அளிக்கிறோம். அவ்விதை எருவாகவோ, தண்ணீராகவோ மாறாமல் தன் இயல்பிலேயே வளர்ந்து தனக்கு வேண்டிய எரு, தண்ணீர் ஆகியவற்றையே எடுத்துக் கொண்டு பிரம்மாண்ட மரமாகிறது’. அதுபோல கற்றுக் கொள்ள வேண்டியதை மட்டும் கற்றுக் கொண்டு வாழ்க்கையில் முன்னேற வழி காட்டியவர்.

    அளவற்ற தன்னம்பிக்கை உடையவர்களாக இருங்கள். நான் இளமையில் அத்தகைய நம்பிக்கை உடையவனாக இருந்தேன். அதுதான் பெரிய காரியங்களை செய்யக்கூடிய சக்தியை எனக்களித்து இருக்கிறது. இளமையும், சக்தியும், நம்பிக்கையும் இருக்கும் காலத்தில்தான் உங்கள் எதிர்கால லட்சியத்தை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். வயதாகி சலித்துப் போன பிறகு உங்களால் எக்காரியத்தையும் செய்ய முடியாது’ என்று கூறி தன்னம்பிக்கையை விதைத்தவர்.

    இளைஞர்களுக்கு கல்வி என்பதன் பொருள் கூறுகையில் கல்வி என்பது ஒருவனுடைய மூளையில் பல செய்திகளை திணிப்பதன்று. வெறும் செய்திகளைச் சேகரிப்பதுதான் கல்வி என்றால் புத்தகச் சாலைகள் மகான்களாக மாறியிருக்கும். அகராதிகள் மகரிஷிகளாக ஆகி இருக்கும். கற்ற கல்வி மற்றவர்களுக்கு உயிர் ஊட்டுவனவாய், ஊக்கம் அளிப்பனவாய், மனிதத் தன்மை தருவனவாய் இருக்க வேண்டும் என்கிறார் சுவாமி விவேகானந்தர்.

    எழுமின்! விழிமின்! உழைமின்! என்று இளைய சமுதாயத்தை தட்டி எழுப்பிய விவேகானந்தர் இளைஞர்களுக்கெல்லாம் ஒரு கலங்கரை விளக்கம்.

    பொங்கல் திருவிழா – ஜனவரி 13 – 16

    தமிழர் திருநாளான தைப்பொங்கல் சங்க காலம் தொட்டே கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் என்ற சொல்லுக்கு நான்கு எழுத்து. பொங்கல் விழா நடக்கும் நாட்களும் நான்கு.

    முதல் நாள் போகிப் பொங்கல;. இது மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று கொண்டாடப்படுவது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதற்கேற்ப அன்றைய தினம்தான் வீட்டில் உள்ள வேண்டாத பொருட்களை குப்பைக் கூளங்களோடு தீயிட்டுப் பொசுக்குவார்கள். மார்கழி மாத குளிரில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை சூரிய உதயத்திற்கு முன்பு நீராடி, நம்மைப் பிடித்த பீடைகள் ஒழிய இறைவனை வழிபட்டு மங்கள வாழ்வுதனை மகிழ்ச்சியோடு துவங்கும் நாள் போகித் திருநாள்.

    இரண்டாம் நாள் தைப் பொங்கல். தை மாதத்தின் முதல்நாள் பொங்கல் திருநாளாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்பது அறுவடைத் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. ஆண்டு முழுவதும் வேளாண் பெருமக்களுக்கு உதவி புரியும் இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி தெரிவிக்கும் நாளாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்;கல் என்றால் பொங்கி வழிதல் என்பது பொருள். அதுபோல நம் வாழ்வும் பொங்கி சிறக்கும் என்பது தொன்றுதொட்டு நிலவும் நம்பிக்கை. புதிதாக விளைந்த நெல்லை அரிசியாக்கி பொங்கலிட்டு ‘பொங்கலோ பொங்கல்’ என்று உற்சாக குரலில் உரக்கச் சொல்லி பொங்கல் தயாரித்து அக்கம் பக்கத்தில் உள்ளோருக்கு வழங்கி உற்றார் உறவினரோடு உண்டு மகிழும் தினம்.

    மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல;. உழவர்களின் உற்ற நண்பர்களான கால்நடைகளை கௌரவிக்கும் வகையில் மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் கால்நடைகளை குளிப்பாட்டி சுத்தம் செய்து, நெற்றியில் திலகமிட்டு,; கொம்புகளை சீவி வண்ணம் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் கட்டி, கழுத்தில் சலங்கை கட்டி அழகு படுத்துவார்கள். உழவுக் கருவிகளை, அது டிராக்டராக இருந்தாலும், மரக்கலப்பையாக இருந்தாலும் சுத்தம் செய்து சந்தனம், குங்குமம், திருநீறு இட்டு மகிழ்வார்கள்.

    நான்காம் நாள் காணும் பொங்கல;. இந்த தினத்தில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் என்று பல்வேறு வீர சாகசப் போட்டிகள் நடைபெறும். இரவில் இசைக் கச்சேரி, தெருக்கூத்து, கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் என்று ஊருக்கு ஏற்றவாறு நிகழ்ச்சிகள் இருக்கும். மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக் கட்டு நடைக்ஷறும். ரேக்ளா ரேஸ் எனப்படும் ஒற்றை மாடு பூட்டப்பட்ட வண்டிப் பந்தயம் நடைபெறும். சேவக்கட்டு என்றழைக்கப்படும் கோழிச்சண்டைகளும் நடைபெறும்.

    திருவள்ளுவர் தினம் – ஜனவரி 15

    ‘உலக மகாகவி’ என்று போற்றப்படுபவர் திருவள்ளுவர். ‘உலகப் பொதுமறை’ என்று புகழப்படுவது அவர் படைத்த திருக்குறள். மதநூல் வரிசையில் இடம்பெறாத ஒரு மறை நூல் திருக்குறள். அது வாழ்வியல் நெறிகளை வகுத்துக் காட்டுவது, ஆட்சியாளர்களின் பண்பு நலன்களை பட்டியலிட்டுக் காட்டுவது, தனிமனித, ஒழுக்கத்தையும், அறச்சிந்தனைகளையும் அறிவுறுத்துவது.

    இறைவன் மனிதனுக்குச் ஙசொன்னது பகவத்கீதை. மனிதன் இறைவனுக்குப் பாடியது திருவாசகம். மனிதன் மனிதனுக்கு வழங்கியது திருக்குறள். ‘வள்ளுவரின் குறளை அவர் எழுதிய தமிழ் மொழியில் படிப்பதற்காகவே நான் தமிழ் கற்க விரும்புகிறேன்’ என்றார் மகாத்மா காந்தியடிகள். ‘திருவள்ளுவரின் சிந்தனைகள் இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகிற்கே பொருந்தக் கூடியது’ என்கிறார் ரவீந்திரநாத் தாகூர். ‘வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு’ என்று மனநிறைவோடு பாடுகிறான் மகாகவி பாரதி. எக்காலத்தவரும், எந்நாட்டவரும், எம்மொழியினரும், எம்மதத்தவரும் ஏற்றுப் போற்றும் பொதுமறையாய் விளங்கும் திருக்குறள் 90க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

    பொதுமை நோக்கு: வள்ளுவர் ‘கருவி’ என்ற சொல்லை பல இடங்களில் பயன்படுத்துகிறார். ஆனால் என்ன கருவி என்று எந்த இடத்திலும் கூறவில்லை. கருவி என்று சொல்லி அத்துடன் விட்டுவிட்டார். கருவி என்ற இடத்தில் அன்றைய கலப்பையைக் கூறலாம். அல்லது இன்றைய கணிப்பொறியைக் கூறலாம். அல்லது நாளை வரக்கூடும் இன்னொன்றைக் கூறலாம். ஆக எக்காலத்துக்கும் ஏற்ற வகையில் பொருள் கொள்ளும் வகையில் இடம் வைத்து விட்டுப் போனதுதான் வள்ளுவரின் சிறப்பு.

    கல்வி: எத்தனையோ நூற்றாண்டுகளுக்குப் பிறகு இன்றைய காலகட்டத்தை ‘கல்வி யுகம்’ என்கிறோம். 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த பேகன் ‘அறிவே ஆற்றல்’ என்றார். ஆனால் பத்தொன்பது நூற்றாண்டுகளுக்கு முன்பே ‘அறிவே அனைத்தும்’ என்று கூறியிருக்கிறார் வள்ளுவர். அறிவைப் பற்றிக் கூற வந்த வள்ளுவர் ‘அறிவுடையார் எல்லாம் உடையார் அறிவிலார் என்னுடைய ரேனும் இலர்’ என்கிறார்.

    அறிவியல்: அறிவியல் அணுகுமுறைக்கு இலக்கணமே வகுக்கிறார் வள்ளுவர். ‘எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு‘, ‘எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு‘. உண்மைகளை அறிவதுதான் அறிவியல். திருக்குறளில் காண்கின்றபடி வாழ்வில் செம்மையுற நடந்தால் அறிவியலான் வெற்றி பெறுவான், அறிவியலும் வளர்ச்சி பெறும்.

    திட்டமிடுதல-: இந்தப் பணியை, இந்தக் கருவியால், இவர் முடிக்கிற வல்லமை உடையவரா என்று ஆராய்ந்து, அந்தப் பணியை அவரிடம் ஒப்படைந்தால் அப்பணி சிறப்பாக நடக்கும் என்பதை ‘இதனை இதனால் இவன் முடிக்கும் என்றுஆய்ந்து அதனை அவன்கண் விடல்’ என்கிறார்.

    ‘வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்’ என்ற தன் குறளுக்கே இலக்கணமாய் வாழ்ந்த வள்ளுவப் பெருந்தகையின் ஒப்பற்ற திருக்குறளை பெருமிதத்தோடு நினைவு கூர்ந்து தமிழர் ஒவ்வொருவரும் உள்ளம் மகிழ்ந்து போற்ற வேண்டிய நாள் இது.

    குடியரசு தினம் – ஜனவரி 26

    நம் பாரத நாடு ஒரு குடியரசு நாடாகத் திகழ்கின்றது. விடுதலைக்குப் பின் இந்தியத் திருநாடு தனக்கென்று ஒரு அரசியல் சாசனத்தை வகுத்துக் கொண்டு 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி குடியரசு நாடானது. அதனைத் தொடர்ந்து ஆண்டுதோறும் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    நம் நாட்டில் பண்டைக் காலத்தில் முடியாட்சியே நிலவியது. மன்னன் ஒருவன் நீதிநெறி வழுவாமல் மக்கள் நலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு ஆட்சி செய்வான். அவனுக்குப் பின் அவன் மகன் ஆட்சி பீடத்தில் அமர்வான். இவ்வாறு வழிவழியாக ஆட்சிமுறை அம்மன்னன் மரபுக்கே உண்டு. ஆற்றல் மிக்க மன்னர் சிலர், மெலியவர் சிலரை வென்று ஆட்சியைக் கைப்பற்றுவதும் உண்டு. எந்நிலையிலும் ஆட்சி, மன்னர் கைக்கு மாறுமே தவிர மக்கள் கைக்குக் கிட்டாது. இவ்வாட்சி முறையில் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு.

    ஒரு புறாவிற்காகத் தன் இன்னுயிர் ஈந்த சிபியும், பசுவின் கன்றுக்காக தன் அரும்பெறல் புதல்வனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்ற மாமன்னன் மனுநீதிச் சோழனும் இந்நாட்டு நீதிமுறை தவறா நல்லாட்சிக்கு எடுத்துக்காட்டு.

    தனித்தே செயல்புரிய இயலுமெனினும் அறிவுசான்ற அமைச்சரவை கூறும் அறிவுரையை மேற்கொண்டு அறம் பிறழாமல் ஆட்சிபுரிந்த அசோகன், சிவாஜி, நெடுஞ்செழியன், கரிகாலன் போன்ற மன்னர்களை மறக்கஇயலாது. எனினும் காலம்மாற கருத்துவளர ஆட்சி மக்கள் கைக்கு மாறி விட்ட நிலையைக் காண்கிறோம்.

    இன்று உலகில் பல நாடுகளில் மக்களாட்சி மலர்ந்து உள்ளது. மக்களுக்காக மக்களால் நடத்தப்படும் மக்களின் அரசே குடியரசாகும். குடியரசில் ஆண்டான் அடிமை வேறுபாடு இல்லை. ‘எல்லோரும் ஒரு குலம் எல்லோரும் ஓரினம்’ என்ற அடிப்படையில் இயங்குவது. அனைவர்க்கும் சம உரிமை அளிப்பதே இவ்வாட்சியின் அடிப்படை ஆகும்.

    இந்திய அரசியல் சாசனத்தின் முகப்புரை, “நாம், இந்திய மக்கள், இந்தியாவில் பெருமை மிக்க தீர்மானறா;களை ஏற்படுத்தி அதன் வழியில் மக்களாட்சி சார்ந்த குடியரசை உருவாக்க வேண்டும். குடிமக்கள் அனைவருக்கும் நீதி, சுதந்திரம், சமத்துவம் ஆகியவற்றை வழங்கி எல்லோரிடமும் தோழமை உணர்வை ஏற்படுத்த வேண்டும்” என்று கூறுகிறது.

    நமது அரசியலமைப்பின்படி, இந்தியா குடியரசுத் தலைவரை முதன்மையாகக் கொண்ட குடியரசு நாடாகும். எல்லா நிர்வாக அதிகாரங்களும் குடியரசுத் தலைவருக்கே வழறா;கப்பட்டுள்ளன. இவர் பெயராலேயே எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. முப்படைகளுக்கும் இவரே தலைமை அதிகாரியாகவும் செயல்படுகிறார்.

    பிரிட்டிஷ் ஆட்சிமுறையின் அடிப்படையை பின்பற்றியே மத்தியிலும் மாநிலத்திலும் இந்திய அரசியலமைப்பு செயல்பட்டு வருகிறது. நீதிமன்றங்களின் அமைப்பைப் பொறுத்தவரை நாம் பிரிட்டிஷ் அமைப்பு மற்றும் அமெரிக்காவின் நீதிமன்ற அமைப்பு ஆகிய இரண்டு சட்ட வடிவங்களின் மையத் தொகுப்புகளையும் பின்பற்றுகிறோம். இந்தியாவில் நாடாளுமன்றமும், உச்சநீதி மன்றமும் அவற்றின் அதிகாரத்தில் மிக உயர்ந்த நிலையில் வைத்து மதிக்கப்படுகின்றன.

    தியாகிகள் தினம் – ஜனவரி 30

    இந்திய விடுதலைக்காக இன்னுயிரை சூந்த விடுதலைப் போராட்ட வீரத் தியாகிகளுக்கு அணு;சலி செலுத்தும் வகையில் தேசந்தந்தை மகாத்மா காந்தியடிகள் மறைந்த (1948) ஜனவரி 30ஆம் தேதி ஆண்டுதோறும் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. நாம் விடுதலைக் காற்றை சுவாசிக்கக் காரணமாக இருந்த ஒவ்வொரு தியாகியின் நினைவாகவும் தேசத்தந்தை மகாத்மாவின் நினைவு தினம் தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

    தேச விடுதலைக்காக உயிர் நீத்த லட்சக் கணக்கான ‘வீரத்தியாகி’களுக்கு அஞ்சலி செலுத்துவதோடு அவர்களின் வீரச்செயல்களை நினைவு கூர்ந்து விடுதலை வரலாற்றை இளம் நெஞ்சங்களில் விதைக்க வேண்டிய உன்னத தினம் தியாகிகள் தினம்.

    நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், மகாகவி பாரதி, பாலகங்காதர திலகர், தீரர் சத்தியமூர்த்தி, சுப்பிரமணிய சிவா, கோபால கிருஷ்ண கோகலே, பகத் சிங், அன்னிபெசன்ட் அம்மையார், தாதாபாய் நௌரோஜி, வல்லபாய் பட்டேல், மௌலானா அபுல்கலாம் ஆசாத், விபின் சந்திர பாலர், இரவீந்திரநாத் தாகூர், கவிக்குயில் சரோஜினி நாயுடு, வ.வெ.சு.ஐயர், டாக்டர் அம்பேத்கர், தந்தை பெரியார், கர்மவீரர் காமராஜர் போன்ற எண்ணற்ற தலைவர்களின் தியாகத்தால் விளைந்தது இந்திய தேசத்து சுதந்திரம்.

    விடுதலைப் போருக்கு ஆயுதம் எடுக்காமல் அகிம்சை என்னும் தியாகத் தத்துவத்தோடு புறப்பட்ட ஒரே நாடு இந்தியா. நல்ல நோக்கத்திற்காக, கைம்மாறு கருதாமல் செய்யும் அர்ப்பணிப்பே தியாகம். வாழ்வின் எல்லாத் தியாகங்களையும் விட இந்திய விடுதலைக்காக மக்கள் செய்த தியாகமே உயர்ந்தது, உன்னதமானது.

    ‘பெற்ற தாயும் பிறந்த நாடும் ஒன்று’ என்பதால் இரண்டையும் பாதுகாக்கத் தியாகம் புரிவது ஒவ்வொரு இந்தியனின் கருவோடு வளரும் கடமையாகிப் போனது. ‘உடல், பொருள், உயிர்’ என்று இந்திய விடுதலைக்காகத் தியாகம் செய்த ஒவ்வொரு தியாகியும் வீர வணக்கத்திற்குரியவர்கள்.

    உனக்குள்ளே உலகம்-32

    “நான் கஷ்டப்பட்டு தினமும் பல மணி நேரங்கள் படிக்கிறேன். ஆனால் என்னால் அதிக மதிப்பெண்கள் பெற இயலவில்லை. ஏன் என்றே தெரியவில்லை?” – என்று சில மாணவ – மாணவிகள் சலிப்படைந்து பேசுவதை நாம் இன்றும் கேட்கலாம்.

    “என் மகள் எப்போது பார்த்தாலும் புத்தகமும், கையுமாக இருக்கிறாள். ஆனால் அவளால் சிறப்பாக படிக்க முடியவில்லை” – என பிள்ளைகள் படிப்புக்காக வருந்தும் பெற்றோர்கள் இப்போது அதிகமாகிவிட்டார்கள்.

    “இவன் எப்போது பார்த்தாலும் கம்ப்யூட்டர், டி.வி., விளையாட்டு என்று நேரம் போக்குகிறான். படிப்பின்மீது அவனுக்கு வெறுப்பாகவே இருக்கிறது” – இப்படி சில தந்தைகள் தங்களின் மகன்கள் பற்றிய மன வேதனையைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

    “உங்கள் பையன் நல்லவன்தான். வகுப்பில் ஆர்வத்தோடு பாடத்தைக் கவனிக்கிறான். ஆனால் மார்க் மட்டும்தான் அவனால் எடுக்க முடியவில்லை. நீங்கள் வீட்டில் நன்றாக அவனை கவனித்துக்கொள்ளுங்கள்” – இப்படி சில ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்குகிறார்கள்.

    இப்போது பாடங்களை படிப்பது என்பது ஒரு பிரச்சினையாகவே சில மாணவர்களுக்குத் தோன்றுகிறது. உயிர்வாழ வேண்டுமென்றால் ஒரு மனிதன் எந்த சிரமமும் இல்லாமல் சுவாசிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த மனிதனின் உடல்நிலையும், மனநிலையும் சிறப்பாக அமையும். மூச்சு விடுவதற்கு கஷ்டப்படுகிறவர்கள், தங்கள் உடல்நிலையில் பிரச்சினைகள் இருக்கிறது என்பதை புரிந்துகொண்டு உரிய மருந்தை உட்கொள்ள வேண்டும். அதன்பின்னர் “சுவாசித்தல்” என்பது இயல்பாக மாறிவிடுகிறது.

    “நான் கஷ்டப்பட்டு மூச்சுவிடுகிறேன்” – என்று யாரும் தான் உயிர்வாழ்வதை பெரிய சாதனையாக வெளிப்படுத்துவதில்லை. உயிர் வாழ்வதற்கு “மூச்சுவிடுதல்” எவ்வளவு முக்கியமோ, அதைப்போலவே மனிதன் சிறந்து விளங்குவதற்கு “படித்தல்” என்னும் பழக்கம் மிக முக்கியமான செயலாகும். “நான் கஷ்டப்பட்டு படிக்கிறேன்” – என்று வெளியில் பிறரிடம் சொல்வது என்பது “நான் கஷ்டப்பட்டு மூச்சுவிடுகிறேன்” என்று பிறருக்கு தெரிவிப்பதைப் போலாகும். அப்படித் தெரிவித்தால் அது மற்றவர்களுக்கு வேடிக்கையாகத் தோன்றும்.

    “கஷ்டப்பட்டு” படிப்பதைவிட “இஷ்டப்பட்டு” (மனம் விரும்பி) படிப்பதுதான் சிறந்தது. ஏனென்றால் படிப்பது என்பது ஒரு சுகமான அனுபவம். ஒருவர் சுமார் 15 முதல் 20 வருடங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படித்து தனது பட்டப்படிப்பை முடிக்கிறார். தான் கற்ற கல்வியின்மூலம் அறிவை வளர்த்துக் கொள்கிறார். 15 ஆண்டுகளுக்கும் மேலாக கற்ற கல்வி பலருக்கு சிறப்பைத் தருகிறது. சிலருக்கு வெறுப்பைத் தருகிறது. இன்னும் சிலருக்கு நல்ல பொறுப்பைத் தருகிறது.

    படிக்கின்ற மாணவர்கள் ஒரே வயதுடைய மாணவ – மாணவிகளாக இருந்தாலும் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான மதிப்பெண்களைப் பெறுகிறார்கள். அவர்களது திறமைகளும் வெவ்வேறாகக் காணப்படுகிறது. ஒரே ஊரைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஒரே பள்ளியில் படிப்பவர்களாக இருந்தாலும், ஒரே விதமான ஆசிரியர்கள் அந்த மாணவர்கள் அனைவருக்கும் பாடங்கள் கற்பித்தாலும் மாணவர்களின் “படிப்புத்திறன்” (Study Skill) வேறுபட்டுக் காணப்படுகிறது.

    இந்த வேறுபாடுகளுக்கு காரணம் என்ன?
    எப்படி படிக்க வேண்டும்? என்ற முறையைத் தெளிவாகத் தெரிந்துகொண்டவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுத் தங்கள் ஆற்றலையும் வளர்த்துக் கொள்கிறார்கள்.

    “படிப்பது” என்பதை ஒரு “திறமை” (Skill) என சொல்லுவார்கள். பள்ளிகளில் பயிலும் காலங்களில் மிகச்சிறந்த வெற்றியைப் பெறுவதற்கு “படிப்புத்திறன்” மிகவும் அவசியம். எனவே மாணவ – மாணவிகள் இந்த படிப்புத்திறன்பற்றி அறிந்துகொள்வதும், படிப்புத் திறமையை மேம்படுத்துவதற்கான பயிற்சிகளில் ஈடுபடவும் படிப்புத் திறனை வளர்ப்பதும் மிகவும் அவசியமாகும்.

    “சிறந்த படிப்புத் திறன் பயிற்சி” என்பது சில முக்கிய திறன்களை வளர்ப்பதற்கான பயிற்சியாகும். குறிப்பாக – நேர நிர்வாகம் (Time Management), சுய ஒழுக்கம் (Self Discipline), கவனம் செலுத்துதல் (Concentration), நினைவாற்றல் (Memorization), ஒழுங்குபடுத்துதல் (Organisation) – போன்ற பயிற்சிகளை உள்ளடக்கியதாகும். படிப்பில் வெற்றிபெற வேண்டும் என்ற ஆர்வம் இருந்தால் மட்டுமே ஒருவரால் தனது படிப்புத்திறனை சிறப்பான முறையில் வளர்த்துக்கொள்ள இயலும். “படிப்பில் சிறந்து விளங்க வேண்டும்” என்ற எண்ணம் எல்லா மாணவ – மாணவிகளுக்கும் இருக்கிறது. “சிறந்தமுறையில் படிக்க வேண்டும்” என எண்ணுபவர்கள் ஒரு முக்கியமான கேள்வியை தங்களுக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும்.

    “எதனை மிகவும் அதிகமாக நான் ஞாபகம் (நினைவில்) வைத்துக்கொள்கிறேன்?”

    (அ) நான் பார்க்கும் காட்சிகளையா?
    (ஆ) நான் கேட்கும் தகவல்களையா?
    (இ) நான் பெற்ற அனுபவங்களையா?
    (ஈ) நான் சுறுசுறுப்பாக ஈடுபட்ட செயல்களையா?

    இந்த கேள்விக்கான விடையை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த கேள்விகளுக்கான சரியான விடை மட்டுமே உங்களின் ஆற்றலை உங்களுக்கு உணர்த்தும். அதாவது, நீங்கள் எதை அதிகமாக ஞாபகம் வைத்திருக்கிறீர்களோ அதுதான் நீங்கள் எளிதாக படிப்பதற்கு உதவும் வழிமுறை (Method) என்று நீங்கள் முடிவுக்கு வரலாம்.

    பார்த்தல் (Seeing), கேட்டல் (Hearing), செயல்படுதல் (Doing) ஆகிய 3 முறைகளும் படிப்பதற்கான முக்கிய வழிமுறைகளாக அமைகின்றன. படிப்புத் திறனை வளர்க்க முயற்சி செய்பவர்கள் “பார்த்தல்”மூலம் படிப்புத் திறனை வளர்க்க கீழ்க்கண்ட பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

    படிக்கும்போதே நீங்கள் படிக்க வேண்டியவற்றை முதலில் நினைவில் கொண்டுவந்து மனதில் காட்சிப்படுத்துங்கள். அதாவது எந்தெந்த பாடங்களையெல்லாம் படிக்கவேண்டும் என்பதை நினைவில் கொண்டுவந்து அந்தப் பாடத்தைப் பற்றிய கருத்துக்களை சிந்திக்க வேண்டும்.

    பாடப் புத்தகத்திலுள்ள முக்கியக் கருத்துக்களை அடிக்கோடிட்டுக் கொள்ளலாம். அல்லது வண்ணமிட்டு அதனை மற்ற எழுத்துக்களைவிட வேறுபடுத்திக் காட்டலாம். உங்கள் ஆசிரியர் பாடம் நடத்தும்போது மிகவும் கவனமாக அவர் பேசுவதைக் கவனித்து அவர் சொல்லும் கருத்துக்களைப் பற்றியே சிந்திக்க வேண்டும்.

    தேவையான படங்களையும், வரை படங்களையும் தேவைக்கு ஏற்ப வரைந்துகொள்ள வேண்டும். குறுந்தகட்டில் (சி.டி.) பதிவு செய்யப்பட்ட உங்கள் பாட சம்பந்தப்பட்ட விளக்கங்களை அவ்வப்போது வீடியோவில் பார்த்தும் பாடங்களை புரிந்துகொள்ளலாம்.

    படிப்புத் திறனை வளர்த்துக்கொள்ள முயற்சி செய்பவர்கள், “கேட்டல்”மூலம் படிப்புத் திறனை வளர்க்க கீழ்க்கண்ட பயிற்சிகளை மேற்கொள்ளலாம். பாட சம்பந்தப்பட்ட தகவல்கள் அடங்கிய ஒலி நாடாக்களை பயன்படுத்தி டேப் ரிக்கார்டர்மூலம் பாடங்களை கேட்கலாம்.

    படிக்கின்ற பாடத்தை உரத்த குரலில் படித்து அதனை டேப் ரிக்கார்டரில் பதிவுசெய்து, மீண்டும், மீண்டும் கேட்டு பாடத்தை நினைவில் வைக்க முயற்சி செய்யலாம். தனி அறையிலிருந்து படிக்கின்றபொழுது உரத்த குரலில் படிப்பதன்மூலம் பாடங்கள் நினைவில் பதியும்.

    பாட சம்பந்தப்பட்ட கருத்துக்களை தன்னோடு படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கலந்துரையாடும்போது பாட சம்பந்தப்பட்ட விளக்கங்கள் தௌல்வாக நினைவில் நிற்கும். வகுப்பறையில் நடைபெறும் கலந்துரையாடல்களில் கலந்துகொள்வதன்மூலம் படிப்புத்திறனை வளர்க்கலாம்.

    படிப்புத் திறனை வளர்க்க முயற்சி செய்பவர்கள் சில “செயல்கள்”மூலம் படிப்புத் திறனை வளர்க்க கீழ்க்கண்ட பயிற்சிகளை மேற்கொள்ளலாம். தொடர்ந்து உட்கார்ந்து படிக்கும்போது இடையிடையே எழுந்து நின்றுகொள்ளலாம். அங்கும் இங்குமாக நடந்து களைப்பைப் போக்கலாம்.

    படிக்கும்போதே கைகளுக்கு வேலை கொடுக்கும்விதத்தில் படித்தவற்றை குறிப்பெடுக்கலாம். படிக்கின்ற பொழுது கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி மேலும் சில செய்திகளைக் கற்றுக்கொள்ளலாம்.

    வெளியில் நடந்துசெல்லும்போதும், உடற்பயிற்சிகள் செய்யும்போதும் படித்தவற்றை நினைவில் கொள்ளும்விதத்தில் திரும்பத் திரும்ப நினைத்துப் பார்க்கலாம். அறிவியல் பாடங்களை செய்முறைப் பயிற்சியின்மூலம் அடிக்கடி செய்துபார்த்து பாடங்களை நினைவில் நிறுத்தலாம்.

    தொடர்ந்து பல மணி நேரங்கள் படிப்பதைவிட இடையிடையே இடைவெளிவிட்டு படிப்பது நல்லது. படிப்பில் சிறந்து விளங்க வேண்டுமென்றால் பார்த்தல், கேட்டல், செயல்படுதல் ஆகியவற்றின் மூலம் சரியான முறையில் தகவல்களைப் புரிந்துகொள்ள வேண்டும். நன்றாகப் புரிந்த தகவல்கள் மட்டுமே சிறந்தமுறையில் நினைவில் பதியும். நினைவில் நிற்கும் தகவல்களை தேவையான நேரத்தில் வெளிக்கொணர்வதற்கு உரிய பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். தொடர் பயிற்சிகள்மூலம்தான் படிக்கும் திறனை வளர்க்க இயலும்.

    தேர்வு நேரத்தில் மட்டுமே புத்தகத்தைப் புரட்டும் பழக்கத்தை கைவிட்டு படிப்புத்திறனை வளர்ப்பதற்கான பயிற்சியை மேற்கொள்பவர்கள் படிப்பில் மட்டுமல்ல வாழக்கையிலும் வெற்றி பெறுகிறார்கள்.

    வேகமாய் வருகிறது வெற்றி – 3

    இதற்கு முன்னாள் இத்தொடரில் நான் எழுதியிருந்தவற்றைப் படித்த ஒரு நண்பர் என்னிடம் கேட்டார், “வெற்றி வேகமாய் வருமா ஐயாÐ வரும் எனில் அதற்கான குறுக்குவழி என்ன?” இது என் சிந்தனையைத் தூண்டியது. கலக்கமுறச் செய்தது. என்னை சற்றே தடுமாறவும் வைத்தது என்று சொல்லலாம்.
    “குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா” என்று பட்டுக்கோட்டையார் பாடிய கவிதை வரி நினைவுக்கு வந்தது. எதனையும் சுலபமாக, விரைவாக, பணிச்சுமை அதிகமின்றி பெற விரும்புகின்றோம். அதுதான் நமது பலவீனம். “வேகமாய் வருகிறது வெற்றி” என்று தலைப்பிட்டவுடனே படிக்கின்றவர்கள், “இவர் ஏதோ வெற்றியை விரைவாய் அடைய வழி சொல்கின்றார் போலிருக்கின்றதே” என்று நினைக்கத் தொடங்கிவிட்டார்கள். தவறில்லை. வெற்றிக்கான குறுக்கு வழியைத்தான் இதில் சொல்லப் போகின்றேன். கவலைப்படாதீர்கள். அதைத் தெரிந்து கொள்ளலாம். அதற்குமுன் தெரிந்து கொள்ள வேண்டிய சில குறிப்புகளைச் சற்றே அலசிப் பார்க்க வேண்டியுள்ளது. அவற்றைத் தெளிவாக்கிக் கொண்டபின் ‘குறுக்கு வழி எது’ என அறிந்து கொள்ளலாம்.
    முதலாவது ‘வெற்றி என்பது என்ன?’ என்பது, இரண்டாவது ‘எந்த வயதிற்குள் வெற்றியை அடையலாம்?’ என்பது, மூன்றாவது ‘வெற்றியை அடைய நாம் கைப்பற்ற வேண்யடி பண்புகள் என்னென்ன?’ இவை பற்றிய தெளிவான தீர்மானத்துக்கு வந்தபின் ‘வெற்றிக்கான குறுக்கு வழி’ பற்றி சிந்திக்கலாம்.
    முதலாவது, ‘வெற்றி என்பது என்ன?’ ஒரு துறையில் தக்க பயிற்சி பெற்று, திறமை பெற்று திறமையை தக்க இடத்தில் வெளிப்படுத்தி உலகின் வெளிச்சத்துக்கு உட்படுத்தினால் அதுதான் வெற்றி.
    நல்ல வேலைக்குப் போவதும், பணம் சம்பாதித்தலும், வீடு, கார், குளிர் சாதனம், தொலைக்காட்சிப் பெட்டி, விலை உயர்ந்த அலைபேசி என்று வாழ்வது மட்டுமே வெற்றி ஆக விடாது. கோடிகோடியாய் தன் தொழில் திறமை மூலம் செல்வம் சேர்த்த ஒருவர் கல்வியறிவு இன்மையால் மேடைப் பேச்சாற்றல் அற்றவராய், எழுத்தாற்றல் அற்றவராய், படிப்பாற்றல் அற்றவராய் சபைமுன் கூசிப்போகும் பண்பினராய் வாழ்வதை நான் அறிவேன். அவரது வாழ்க்கையை ‘வெற்றிகரமான வாழ்க்கை’ என்று நான் கூறமாட்டேன். அவரைப் பார்த்தும் அவரது செல்வத்தைப் பார்த்தும் எனக்கு பொறாமை ஏற்படவில்லை. மாறாக அவரது கூச்ச சுபாவம் கண்டு பரிதாபமே பிறந்தது. இளம்வயதில் கல்விகற்று பட்டப்படிப்பு படிக்காமல் போனதை குறையாகச் சொல்ல முடியாது. மேடைப் பேச்சாற்றலும், எழுத்தாற்றலும் எல்லோருக்கும் வராது. ஆனால் எட்டாம் வகுப்பு வரை படித்த அவர் திருக்குறள், கம்பராமாயணம், தன்னம்பிக்கை நூல்கள், கல்கி சாண்டில்யன் கதைகள் இவற்றைப் பார்த்துப் பார்த்தாவது தனது பொது அறிவைப் பெருக்கிக் கொண்டிருக்கலாம். அச்சமின்றி நாலு பேருடன் உரையாடும் ஆற்றலை வளர்த்துக் கொண்டிருக்கலாம். ஆனால் பொதுவாழ்க்கைக்கு அவரைத் தயார்செய்யும் எந்த பயிற்சியையும் மேற்கொள்ளாமலேயே அவர் காலம் கழித்துவிட்டார்.
    செல்வம் சேர்ப்பது ஒன்றை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு இயங்கியதால் அவரது பெயர் கூட சமுதாயத்திற்கு தெரியாமலேயே அவர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். அவரது தொழிலாகச் சுவர் தாண்டி வெளியே எங்கேயுமே அவர் அறியப்படவில்லை. 1000 கோடி வரை வருவாய் ஈட்டியுள்ள அவரது திறமையைப் பாராட்டுவீர்களா? அல்லது வேறு எந்த திறமையுமே இல்லாத அவர் நிலை கண்டு இறக்கப்படுவீர்களா?
    எனவே செல்வம் சேர்ப்பது ஒன்றே வெற்றி இல்லை என்றாகிவிட்டது. வேறு எது வெற்றி? ஒரு துறையில் சாதனை நிகழத்துவதுதான் வெற்றி. போட்டிகள் மிகுந்த இன்றைய நடைமுறை வாழ்வில் ஏதாவது ஒன்றில் தலையாய சாதனை ஒன்றை நிகழ்த்துவதே வெற்றி என்று அழைக்கப்படுகின்றது. எனவே ஒரு துறையில் ஏதேனும் சாதனை நிகழ்த்தி விருது வாங்கினால் பெற்றி என்று ஆகிவிடுமா? யோசிக்க வேண்டியுள்ளது.
    இங்கே எனக்கு தட்டுப்படும் ஓர் ஒப்பீடு குழப்பம் ஏற்படுத்தக்கூடியது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்கு இறுதிவரை ‘இந்தியாவின் சிறந்த நடிகர்’ என்ற மத்திய அரசு விருது கிடைக்கவே இல்லை. ஆனால் சிறு வயதிலேயே தனுஷ் அந்த பட்டத்தைப் பெற்றுவிட்டார். எனவே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களைவிட தனுஷ் அவர்களே இதை ஒப்புக்கொள்ள மாட்டார். அல்லது நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் திரைப்பட வரலாற்றில் பெற்ற இடத்தை தனுஷ் இப்போது வென்றுவிட்டார் என்று கூற முடியுமா? தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்பதில் எந்தவித ஐயப்பாடும் எனக்கில்லை. ‘ஆடுகளம்’ திரைப்படத்தில் அவர் வெளிப்படுத்திய இயல்பான நடிப்பு அற்புதமானது. ஆனால் நடிகர் திலகத்துடன் ஒப்பீடு என்று வரும்போது சற்றே தயக்கம் ஏற்படுகின்றது.
    ஆகவே ஒன்றை மற்றொன்றுடன் ஒப்பிடும்போது வெற்றிக்கான இலக்கணங்கள் மாறுபடலாம். வெற்றி என்பது ஏதேனும் ஒரு துறையில் சாதனை நிகழ்த்துவது அதற்கான விருதுகளைப் பெறுவது என்பதை ஓரளவு ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் விருதுகள் மட்டுமே வெற்றி ஆகிவிடாது என்பதையும் கவனத்தில் கொள்வோம். அதுபோலவே ‘ஒரு துறையில் நிகழ்த்தப்படும் சாதனை’ என்பதை மற்றொன்றுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய அவசியமில்லை என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்து கொள்வோம்.
    இரண்டாவது ‘வெற்றிக்கான வயதுவரம்பு என்ன?’ என்பது வெற்றியடைய வயத வரம்பு ஏதுமில்லை. 24 வயதான அபிநவ் பிந்த்ரா என்ற இளைஞர் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று 27 ஆண்டுகளாக இந்தியா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெற இயலவில்லை என்றிருந்த பழியைத் துடைத்தார். அதற்காக அவருக்கு ‘பத்ம விபூஷன்’ பட்டம் மத்திய அரசியால் வழங்கப்பட்டது. அதே மேடையில் எழுபது வயதான ஜெயகாந்தன் என்கின்ற தமிழின் சிங்கம் என்று போற்றப்படுகின்ற, அறுபது ஆண்டுகால எழுத்துப் பணிக்காக ‘பதம் விபூஷன்’ பட்டம் வழங்கப்பட்டது. 24 வயதும் 70 வயதும் ஒரே மேடையில் ஒரே விருதினைப் பெறுகின்றார்கள் என்றால் வெற்றிக்கான வயது வரம்பு எதுவென எப்படி நிர்ணயிக்க முடியும்? எனவே எந்த வயதிலும் சாதனை நிகழ்த்தலாம். புகழ் பெறலாம். எடுத்த பணியில் நாம் காட்டும் ஈடுபாடும் அர்ப்பணிப்பு உணர்வும் தான் முக்கியம்.
    மூன்றாவதாக நாம் சிந்திக்க வேண்டிய செய்தி எதுவெனில் ‘வெற்றியை அடைய நாம் கைக்கொள்ள வேண்டிய பண்புகள், தகுதிகள் என்னென்ன?’ என்பது.
    அடுத்த இதழில், இதனை ஆய்வுக்கு உட்படுத்தலாமா?

    சாதிக்கலாம் வாங்க…

    வெற்றிக்கனியை ருசிக்க வேண்டுமானால் தோல்விகளைத் தாங்கும் மனப்பக்குவம் அடைந்திருக்க வேண்டும். ஏனெனில், இந்த உலகில் தோல்வியே அடையாமல் வெற்றி பெற்றதாக எவருக்கும் சரித்திரம் இல்லை. தோல்விகளை நினைத்து புலம்புவதில் அர்த்தமில்லை என்றெண்ணி முதல் போட்டித் தேர்வில் தோல்வியைத் தழுவினாலும் முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து படித்து தான் கலந்துகொண்ட அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் வெற்றிபெற்று இன்று சாதனையாளராகத் திகழ்கிறார் ஈரோட்டைச் சேர்ந்த திருமதி. யசோதாமணி குமரவேல்.
    தேர்வில் ஜெயிக்கத் தேவையான குணம், விடாமுயற்சி, ஈடுபாடு, கடின உழைப்பு தான்… இவை யாரிடம் இருந்தாலும் ஜெயிக்கலாம் என்று சொன்ன திருமதி. யசோதவைப் பார்த்தால் 100 சதவீதம் அந்த குணங்களுக்குச் சொந்தக்காரர் போலத்தான் தெரிகிறார். தன்னுடைய அட்சரத்தில் இருந்து ஆரம்பித்தார் திருமதி. யாசோதாமணி.

    கோவை மாவட்டம் பல்லடம் அருகில் உள்ள செலக்கரிச்சல் தான் என்னுடைய சொந்த ஊர். விவசாயக் குடும்பம் எங்களுடையது. என் அப்பா திரு. சாமிநாதன், அம்மா திருமதி வசந்தாமணி. விவசாயத்தையே முழுநேரத் தொழிலாக பார்த்துக் கொண்டிருந்தவர்கள். என் உடன் பிறந்தவர் பூபதி என்ற ஒரு தம்பி.
    நான் லட்சுமி நாயக்கன் பாளையத்தில் உள்ள எஸ்.ஆர்.என்.வி. மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு முடிய படித்தேன். எல்.ஆர்.ஜி. கல்லூரியில் இளங்கலைப் படிப்பை முடித்த நான் கோவை பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ. மற்றும் எம்.பில். படித்து முடித்தேன். படித்துக் கொண்டிருக்கும் காலகட்டத்திலேயே ‘நெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றேன்.
    படித்து முடித்தவுடன் புளியம்பட்டியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் உதவிப்பேராசிரியராக இரண்டாண்டுகள் பணியாற்றினேன். பின்னர் ஈரோட்டிலட உள்ள தனியார் கலைக் கல்லூரியில் கல்லூரியில் 5 வருடம் உதவிப் பேராசிரியராகவும் பணியாற்றினேன். அங்கு பணியாற்றும்போதே திருமணம் ஆனது. திருமணத்திற்குப் பிறகு பி.எட். படித்தேன்.
    கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் உதவிப் பேராசிரியராக வேலைபார்த்து முடித்த நிலையில், குழந்தை பிறந்த பின்னர் பி.எட். சேர்ந்து படித்தது புதிய அனுபவத்தைத் தந்தது.
    இந்நிலையில்தான், டி.என்.பி.எஸ்.ஸி. என்கிற வார்த்தை அடிக்கடி கேட்க ஆரம்பித்தது. எனது சகோதரன் திரு. சரவணக்குமார் மூலம் அந்தத் தேர்வு பற்றி முழுமையாக அறிந்தேன். அவரின் யோசனையின் பேரில் டி.என்.பி.எஸ்.ஸி. தேர்வு எழுதுவதென்று முடிவுசெய்து அதற்கான தயாரிப்புகளை மேற்கொண்டேன்.
    முதல் முறையாக வி.ஏ.ஓ. தேர்வை எழுதினேன். படித்த படிப்பை சரியாகப் பயன்படுத்தித் தேர்வை எழுதினாலும் என்னால் தேர்ச்சி பெற இயலவில்லை. இரண்டு மதிப்பெண்களில் வெற்றி வாய்ப்பை இழந்தேன். இத்தனையாண்டுகள் நான் படித்த படிப்பை என்னால் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லையே என்கிற கவலை ஏற்பட்டது. அந்த உணர்வு தான் எப்படியாவது போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று அரசுப்பணியில் சேர வேண்டும் என்று என்னைத் தூண்டியது. நான் படித்த படிப்பின் உதவியைக் கொண்டு என்னால் என்ன சாதிக்க முடியும் என்று சோதித்துப் பார்க்க விரும்பினேன்.
    முதன்முதலில் வி.ஏ.ஓ. தேர்வில் தோல்வியடைந்த போது, “எல்லாம் போச்சு, என் வாழ்க்கையே தோல்வியாகிப் போச்சு” என்று புலம்பவில்லை. இது ஒரு பாடம். இது ஒரு நல்ல அனுபவம். என்னுடைய மனவலிமையைச் சோதிக்க வந்த ஒரு சோதனை. என் திறமையை நிரூபிக்க ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என்றே நினைத்தேன். தேர்வில் தோல்வியடைந்ததற்கு நானே பொறுப்பு என்பதை ஏற்றுக்கொண்டேன். தேர்வுக்குப் பின்னர் “இதை இப்படிச் செய்திருக்க வேண்டும்”, “இதை மட்டும் நான் செய்திருந்தால்…” என்ற பல கேள்விகள் என்னுள் ஏற்பட்டது. “இன்றே உங்களால் செய்ய முடிந்ததை ஒருபோதும் நாளை வரை தள்ளிப்போடாதீர்கள்” என்ற பென்ஜமின் ஃப்ராங்கிளின் வார்த்தைகளை உள்வாங்கிக் கொண்டு முயற்சிகளைத் தள்ளிப்போடாமல் படித்தேன். வெற்றி மட்டுமே இலக்காக வைத்து, வீழ்வது தோல்வியல்ல என்பதைத் தெளிவாக அறிந்து தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெறத் தயாரானேன்.
    தொடர்ந்து வந்த பல்வேறு போட்டித் தேர்வுகளில் கலந்துகொண்டு வெற்றி பெறுவதன் மூலமே என்னை நிரூபிக்க முடியும் என்று நினைத்து கடுமையாக தேர்வுக்கான தயாரிப்புகளை மேற்கொண்டேன்.
    இந்தப் போட்டித் தேர்வுகள் தான் நம் வாழ்க்கையை மாற்றப்போகிறது என்பதை உணர்ந்து படித்தேன். எதிர்காலத்தில் எந்த மாதிரியான வேலை நம் வாழ்க்கையை மாற்றும் என்பதை முன் கூட்டியே தெரிந்து கொள்ளும் சாமர்த்தியம் இல்லாததால் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கலந்து கொண்டேன்.
    தமிழ் பாடத்தை முதன்மைப் பாடமாக எடுத்து படித்ததால் எவ்வளவு ஆண்டுகள் அனுபவம் இருந்தாலும் குறைந்த சம்பளமே கொடுக்கத் தயாராக இருந்தன பல கல்லூரிகள். அவர்கள் முன் தமிழில் படித்த நான் சாதித்துக்காட்டி தமிழுக்குப் பெருமை சேர்க்கவேண்டும் என்ற வைராக்கியத்தை ஏற்படுத்திக்கொண்டேன்.
    மனதில் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்று உறுதியுடன் 6ம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்பு வரையுள்ள பாடங்கள் அனைத்தையும் கவனமாக ஈடுபாட்டுடன் படித்தேன். என்னுடைய தோழிகள் 6 பேரும் சேர்ந்தே ஒன்றாக படித்தோம். நேர நிர்வாகத்தை கடுமையாக பின்பற்றினோம். ஒவ்வொரு நாளும் நாங்கள் ஏழு பேரும் இணைந்து படித்ததைப் பற்றிய குழு விவாதம் செய்வோம். குறிப்பாக பொது அறிவு பகுதிகளை இத்தகைய குழு விவாதம் மூலம் படித்ததால் எளிதில் மனதில் பதிந்தது. இதனால் எளிதாக டி.இ.டி.யில் வெற்றிபெற முடிந்தது.
    இப்படி தொடர்ந்து ஈடுபாட்டுடன் கூடிய என்னுடைய உழைப்பின் பயனைத் தேர்வு முடிவுகள் வெளிவந்த போது உணர்ந்தேன். குரூப் I முதல்நிலை, குரூப் II, முதுகலை டி.ஆர்.பி, டி.இ.டி. (TET), வி.ஏ.ஓ., குரூப் IV என்று நான் கலந்துகொண்ட அனைத்துத் தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றேன்.
    எந்த ஒரு வெற்றிக்குப் பின்னாலும் முயற்சிகளும், தோல்விகளும் நிச்சயமாக இருக்கும். இருந்தே ஆகனும். முயற்சி இல்லாதவன் என்றைக்கும் ஜெயிக்க முடியாது. என்னுடைய எல்லா வெற்றிகளுக்கும் எனது கணவர் திரு. குமரவேல் அவர்களின் ஒத்துழைப்பு அதிகளவில் இருந்திருக்கிறது.
    ஜெயிக்க வேண்டும், பெரிதாகச் சாதிக்க வேண்டும் என்ற உணர்வை சிறு வயதிலேயே எனக்கு ஊட்டி வளர்த்தவர்கள் என் பெற்றோர் மற்றும் என்னுடைய ஆசிரியர்கள். குறிப்பாக பள்ளியில் படிக்கும்போது உயிரியல் ஆசிரியையாக இருந்த திருமதி. ஜோசபின் அவர்களும், ஆங்கில ஆசிரியர் திரு. கிருஷ்ணசாமி அவர்களும், எல்.ஆர்.ஜி. கல்லூரியில் படிக்கும் போது எனக்கு தன்னம்பிக்கையூட்டிய பேராசிரியர் திருமதி. பானுமதி அவர்களும், தற்போதும் எனக்கு எந்த நேரத்தில் என்ன உதவி தேவைப்பட்டாலும் செய்து கொடுக்கும் சென்னை மாநிலக் கல்லூரியில் பேராசிரியையாக இருக்கும் திருமதி. பாக்யமேரி அவர்களும் என்னுடைய வெற்றியில் பங்களிப்பு எடுத்துக் கொண்டவர்கள்.
    உங்களிடம் ஒரு திறமை இருந்தால் அதை அனைத்து விதங்களிலும் பயன்படுத்துங்கள். கஞ்சத்தனமாக கொஞ்சமாகத் தராதீர்கள். திறமையைத் தாராளமாகச் செலவழியுங்கள் என்று என் திறமையை பல்வேறு தளங்களில் பயன்படுத்தத் தூண்டிய எனது சகோதரன் திரு. சரவணக்குமாரின் பங்களிப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது.
    மேலும் மிகப்பெரிய சொத்தாக நான் நினைக்கும் என் நட்பு வட்டாரத்தை சேர்ந்த என் நண்பர்கள், என் நலம் விரும்பிகள் என எல்லோரும் நான் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் தொடர்ந்து சொல்லி வந்திருக்கிறார்கள். அவர்களின் ஆலோசனையின்படி நடந்ததால் என்னால் சரியான பாதையில் தேர்வை எதிர்கொண்டு வெற்றி பெற முடிகிறது.
    குழந்தை பிறந்து ஆறு மாதத்தில் நான் பி.எட். படிக்க சென்றுவிட்ட போது என் குழந்தைகளை கவனித்துக்கொண்டு தொடர்ந்து நான் படிக்கவும், தேர்வுக்குத் தயாராகவும் தேவைப்படும் நேரத்தை எனக்களித்த என் மாமியாரின் பங்களிப்பும் என்னால் நிறைவுகூறத்தக்கது.

    ஆரோக்கியமும் அறிவும்

    அன்பிற்கினிய மாணவச் செல்வங்களே! நம் வாழ்வில் அறிவுத் தேடல் மிகவும் முக்கியம் என்று தெரிந்து கொண்டதால்தான் நாம் எல்லோரும் பள்ளிகளுக்குப் படை எடுக்கிú\ôம். அதே சமயம் நாம் ஆரோக்கியமாக இருந்தால்தான் நாம் அறிவைத் தேட முடியும் என்பதையும் உணர்ந்துகொள்ள வேண்டும். வாழ்க்கையில் பிழைத்துக் கொள்ள படித்துத் தேர்ந்து விடுகிú\ôம். அதே சமயம், படித்தபின் ஆரோக்கியம் காணாமல் போனால் ஒரு வேலைக்கும் ஆகாது என்பது தெரியும்தானே? ஆகவே, மாணவச் செல்வங்களே! அறிவுத் தேடலோடு நாம் ஆரோக்கியச் செயல்களும் அவசியம் செய்ய வேண்டும். ஆரோக்கியமாக இருக்கத் தனியாக நாம் எதையும் செய்ய வேண்டியதில்லை. அன்றாடம் நாம் செய்யும் செயல்களை ஆரோக்கிய வழியில் செய்தாலே போதுமானது. நாம் அன்றாடம் செய்யும் செயல்களில் உள்ளடக்க வேண்டிய ஆரோக்கிய முû\கள் பற்றி இனி நாம் பர்ப்போம்.

    அதிகாலையில் எழுதல்: நாம் சூரியன் எழுவதற்கு முன் நாம் எழுந்தால் நமக்கு நாளெல்லாம் புத்துணர்வு உண்டாகும். அதிகாலையில் பூமியின் குளிர்ந்த பரப்பில் ஓசோன் படலம் நிலைக்கொண்டு இருக்கும். ஓசோன் என்பது மூன்று பிராண அணுக்கள் (Oxygen Atom) ஒன்றிணைந்த மூலக்கூ\ôக (O3-Molecule) விளங்குவதாகும். இப்படி மூன்\ணுக் கூ\ôக பிராண வாய்வு இருக்கும் போது நம் சுவாசத்திற்கு அதிகமான பிராண சக்தி கிடைக்கி\து. பிராண வாய்வு ஒசோனாக மா\க் குளிர்ந்த தன்மை வேண்டும். இந்த குளிர்ந்த தன்மையானது அதிகாலையில்தான் இருக்கும். சூரிய வெப்பம் அதிகமாகும் போது ஓசோன் மூலக்கூறு உடைந்து சாதாரண பிராண வாய்வாகிவிடும். ஆகவே, அதிகாலையில் எழுவது நம் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

    அதிகாலையில் படித்தல்: நாம் பரிட்சைக்கு அதிகம் படிக்க வேண்டியிருந்தால், இரவெல்லாம் கண் விழித்து படித்து முடித்துதான் தூங்கப்போக வேண்டும் என்ற வைராக்கியத்தைப் பாராட்டலாம்தான். ஆனால், இரவு அதிக நேரம் (10 மணிக்கு மேல்) கண் விழிப்பதால் நம் கல்லீரல் அழற்சி (Liver Chirrosis) ஏற்படுகி\து. இதனால் அடுத்த நாள் பகல் முழுவதும் உடல் மற்றும் மூளைச் சோர்வு ஏற்படுவதால், என்னதான் விழுந்து விழுந்து படித்திருந்தும் பரிட்சையை சி\ப்பாக எழுத முடிவதில்லை. ஆனால் அதிகாலை 4.30 மணிக்கு மேல் எழுந்து படிக்கும் போது உடலும் மூளையும் புத்துணர்வாக இருப்பதுடன், பகல் முழுவதும் இந்தப் புத்துணர்வு நீடிப்பதால் படித்தது சுலபமாக பதிவதும், பதிந்தது இலகுவாக ஞாபகத்திற்கு வந்து பரிட்சையை சி\ப்பாக எழுதவும் முடிகி\து. இதைத்தான் நம் பாரதியார் காலை எழுந்தவுடன் படிப்பு என்று கூறியுள்ளார். அன்பு மாணவர்களே! பின் இரவு மூன்று மணி நேரம் படிப்பதற்கு பதில் அதிகாலையில் ஒரு மணி நேரம் படித்து விடலாம். ஆக, நீங்கள் கடுமையாக உழைத்து (Hard Work) உடலையும் கெடுத்து சுமாராக தேறப்போகிறீர்களா? அல்லது புத்திசாலியாக உழைத்து (Smart Work) நிû\வான பலனைக் காணப்போகிறீர்களா? எல்லாம் உங்கள் சாய்ஸ்.

    காலைக் கடன் அடைத்தல்: நாம் காலை எழுந்தவுடன் முடிக்க வேண்டிய கடமை என்பதை உணர்த்தவே ‘காலைக் கடன்’ என்று நம் முன்னோர்கள் பெயரிட்டுள்ளனர். இந்தக் காலைக் கடனை குû\யில்லாமல் நிû\வேற்ற வேண்டுமானால், நாம் அதிகாலையில் எழுந்தால்தான் சாத்தியமாகும். அதாவது, அதிகாலை 4.30 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் எழுந்தால்தான் நம் பெருங்குடல் மற்றும் சிறுநீரகங்கள் புத்துணர்வு பெற்று உடற்கழிவுகளை இலகுவாக வெளியேற்றும். ஆறு மணிக்கு மேல் எப்பொழுது எழுந்தாலும் மலச்சிக்கல் (Constipation) இருக்கத்தான் செய்யும். இதனால் நாளெல்லாம் உடல் சோம்பல் இருக்கத்தான் வெய்யும். அதேசமயம் இன்னும் முன்னதாக எழுந்திருக்கிú\ன் பேர்வழி என்று அதிகாலை 4.30 மணிக்கு முன் எழுவதும் தவறானதே ஆகும். அப்படி எழுந்தால் கல்லீரல் சோர்வானது உடல் புத்துணர்வைக் குலைத்துவிடும். ஆக, அதிகாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையே நாம் துயில் எழ ஏற்ற முகூர்த்த (நல்ல) நேரமாகும்.

    தினமும் குளித்தல்: அன்பு மாணவர்களே! ஒவ்வொரு நாளும் குளிப்பதன் மூலம் நம் உடலின் 20 சத வீத நீர்த் தேவைப் பூர்த்தியாகி\து. அது போலவே, அன்றாடம் குளிப்பதால் 20 சத வீத வியர்வைக் கழிவும் 20 சத வீத உடல் உஷ்ணமும் நீக்கம் பெறுகின்றன. ஆகவே அன்றாடம் குளிப்பது என்பது மிக அவசியமான ஒன்றாகும். நமக்கு உடல் சுகமில்லாது இருந்தாலும், ஈரத்துணியால் உடல் முழுவதும் துடைத்தால் கூட ஓரளவுக்கு குளித்த பலன் கிடைக்கும். குளிப்பது என்றால் ஏதோ உடலுக்கு மட்டும் நீர் ஊற்றிக்கொள்வது அல்ல, தலைக்கும் சேர்த்து நீர் ஊற்றுவதே முழுக் குளியலாகும். அப்பு\ம் குளிக்கத் தண்ணீரைத்தான் (குளிர் நீரைதான்) பயன்படுத்த வேண்டும் வெண்ணீரை அல்ல.

    காலை உணவைத் தவிர்க்காதிருத்தல்: காலை உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவே அதனை ‘Break fast’ என்று ஆங்கிலத்தில் சொல்கி\ôர்கள். முன் இரவு எட்டு மணிக்கு சாப்பிட்ட பின் மறுநாள் காலை எட்டு மணிக்கு மேல்தான் கால உணவை எடுக்கிú\ôம். ஆக, 10 மணி நேரத்திற்கும் மேலாக உணவில்லாது இருக்கும் இடைவெளியை விரதமாக பாவித்து அதனை உடைக்கும் விதமாக சாப்பிடப்படும் உணவைத்தான் பிரேக் பாஸ்ட் என்று கூறுகிú\ôம். ஆகவே நாம் காலையில் தாமதமாக எழுந்து விட்டு பள்ளி செல்ல நேரமாகி விடுவதால் காலை உணவைத் தவிர்ப்பது என்பது மிக மோசமான விளைவைத் தரும். காலை உணவைத் தவிர்ப்பது என்பது நம் விரதத்தை இன்னும் ஐந்து மணி நேரம் நீட்டிப்பதாகும். இரவு உணவில்லாத போது தூக்க ஓய்வில் இருப்போம், ஆனால் காலையில் உணவில்லாத போது வேலை பார்க்கிú\ôம். ஆக, காலைப் பட்டினியால் உடல் பலவீனமாகும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

    சத்தாகச் சாப்பிடுதல்: நாம் சாப்பிடும் மாவுச் சத்து (Carbohydrates), புரதச் சத்து (Protein) மற்றும் கொழுப்புச் சத்து (Fat) ஆகிய மூன்றும் செரிக்கத் தேவையான கிரியா ஊக்கிகளான (Catalyst) உயிர்ச் சத்துக்களும் (Vitamins), துணைப் ஊக்கிகளான (Cofactors) தாதுச் சத்துக்களும் (Minerals) அவசியம் தேவை. இந்த உயிர் மற்றும் தாதுச் சத்துக்கள் காய்கறி, கீரை மற்றும் பழங்களில் இருக்கின்றன.நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் கருவேப்பிலையைத் தட்டுக்கு வெளியே போடுவதற்கு பதில் வாய்க்குள் போட்டால் உயிர்ச் சத்துக்கள் கிடைத்து செரிமாணம் சி\க்கும். அது போலவே செரித்த உணவு சத்தாகவும் சக்தியாகவும் மாறியபின் மீதமாக உள்ள கழிவுகளை நீக்க நார்ச் சத்து (Fiber) அதிகமுள்ள வாழைத் தண்டு, வாழைப்பூ, அவரைக்காய் மற்றும் அன்னாச்சி பழம் ஆகியவற்û\ சாப்பிட வேண்டும். மேலும் செரிமானம் (Digestion) மற்றும் சத்து கிரகிப்பு (Assimilation) நீர்த் தன்மையில்தான் நிகழ்கி\து ஆகையால், நீர்த் தன்மையைக் கெடுக்காத வெண்பூசணி, முள்ளங்கி மற்றும் பழச்சாறுகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.

    சாப்பிடும் போது கவனம் உணவில் இருந்தால், நாம் நன்றாக மென்றுச் சாப்பிடுவோம். அப்படி மென்றுச் சாப்பிடும் போது உணவானது வாயிலேயே செரிக்க ஆரம்பித்து வயிற்றுச் செரிமாணத்தை இலகுவாக்குகி\து. நாம் சாப்பிடும் போது, தொலைக்காட்சி பார்ப்பது, வாக்குவாதம் செய்வது அல்லது பேசிக்கொண்டிருந்தால், சாப்பாட்டின் மேல் ஈடுபாடு குû\ந்து, மென்று சாப்பிடுவதற்கு பதில் மெல்லாமல் விழுங்கிவிடுவோம். இதனால் இû\ப்பை செரிமானம் கடினமாகி\து. ஆகவே, சாப்பிடும் போது அமைதியாக முழு ஈடுபாட்டோடு மென்று சாப்பிட வேண்டும்.

    நன்றாகத் தூங்க வேண்டும்: நாம் தூங்கும் போது நமது தன்னிச்சை நரம்பு மண்டலம் (Voluntary Nervous System) ஓய்வுக்கு வந்து, தானியங்கி நரம்பு மண்டலம் (Autonomous Nervvous System) அதிக விழிப்புணர்வுக்கு வருகி\து. இதனால், நமது உள்ளுறுப்புகள் எல்லாம் பழுது பார்க்கப்பட்டு புத்துணர்வாக்கப்படுகி\து. இந்தப் புத்தாக்கம் நிகழ நாம் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.30 மணி வரை நன்றாகத் தூங்க வேண்டும். நன்றாக தூங்க நாம் அன்û\ய சிந்தனைகளை ஐஸ் போல் உû\ய வைத்துவிட்டு மறுநாள் பார்த்துக் கொள்ளலாம் என்ற உணர்வோடு தூங்கச் செல்ல வேண்டும்.

    அறிவும் ஆரோக்கியமும் உயிரும் உடலும் போல.
    ஒன்û\ இழந்தால் இன்னொன்று இல்லை!
    அறிவும் ஆரோக்கியமும் இணைவதால மட்டுமே வாழ்க்கை மேம்பாடு கிடைக்கும்!

    மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி நகரும் பொருளாதாரம்
    இன்றைய சூழ்நிலையில் இந்தியாவின் பொருளாதார சீர்திருத்தம் சார்ந்த செயல்பாடுகளைப் பார்க்கும்போது பெரும்பான்மை மக்களின் கருத்தில் இருந்து அரசு மாறுபட்டு நிற்பதாகவே உணர வேண்டியுள்ளது.
    நவீனமயமாதல் என்ற ஒன்றை நோக்கி செல்லும் இந்தியா, மேற்கத்திய கலாசாரத்தையும், அவர்களது பொருளாதார கொள்கைகளையும் கடைபிடிப்பது தான் நவீனமயமாதல் என்பதை எழுதப்படாத விதியாகக் கொண்டு செயல்படுவதைப் போல் உள்ளது.
    இருப்பதைக் கொண்டு சிறப்பாக வாழக் கற்றுக்கொள், போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்று கற்பிக்கும் பழமொழிகள் இன்று காலாவதியாகி விட்டதற்கு கண்முன் உதாரணமாகத் தெரிகிறது இன்றைய தலைமுறை. இவர்கள் தாங்களாகவே சந்தை பொருளாதார விதிகளின் படி செயல்படும்படி உருவாக்கப்பட்டுவிட்டதன் எதிரொலி தான் இதற்குக் காரணம்.
    மேற்கத்திய முறையில் நவீன மயமாகிவிட்ட இன்றைய தலைமுறை, அதிகமாக சம்பாதிக்கலாம், அதனையும் செலவிட்டு உலக இன்பங்களில் ஈடுபடலாம் என்று பழக்கப்படுத்தப்பட்டு வருகின்றார்கள். இதனால் அவர்களுக்கு எதிர்காலப் பொருளாதாரப் பாதுகாப்புகள் குறித்த சிந்தனைகள் குறையத் தொடங்கிவிட்டன.
    தாராளமயம், நவீன தாராளமயம் ஆகிய கொள்கைகள் சந்தைப் பொருளாதாரத்தின் அச்சாணியாகி வருகின்றன. தேசப் பொருளாதாரத்துக்கு பங்குச்சந்தை தலைமை வகிக்கும் வகையில் அனைத்தும் தனியார் மயமாக்கப்பட்டு வருகின்றது.
    பொருளாதார நடவடிக்கைகளில் அரசின் பங்களிப்பையும், பொதுப் பணிகளுக்கான அரசின் செலவுகளையும் கணிசமாகக் குறைத்து, தனியார் மயத்தையும், தாராள மயத்தையும் ஊக்குவித்து பெரும் கார்பரேட் நிறுவனங்களுக்கு வரிகளைக் குறைத்து என்று 1980ம் ஆண்டுகளில் பிரிட்டிஸ் பிரதமர் மார்கரெட் தாட்சர் அறிமுகப்படுத்திய தாட்சரிஸமும், அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன் அறிமுகப்படுத்திய ‘ரீகனாமிக்ஸ்’ கொள்கையும் அந்நாடுகளை முதலில் பீடு நடை போட வைத்தாலும் பின்னாளில் கால்களை உடைத்துக்கொண்டு படுத்துக் கொண்டன.
    இந்தியாவின் இன்றைய பொருளாதார சீர்திருத்த நடவடிக்கை கூட அந்தப் பாதையில் தான் செல்கிறதோ என்ற ஐயம் ஏற்படுகிறது. எனினும் நிலைமை மோசமாகி விடாததற்கு வேளாண்மை, தொழில், வர்த்தகம் போன்ற அடிப்படைத் துறைகள் வலுவாக இருந்து நிலைமையைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. இவையனைத்துக்கும் மேலாக இந்தியர்களிடையே சேமிக்கும் பழக்கம் அதிகமாக இருந்ததும் ஒரு காரணம். 2008ல் உலக அளவில் பொருளாதாரத்தில் மிகப்பெரிய அளவில் சரிவு ஏற்பட்ட போதிலும் கூட இந்தியப் பொருளாதாரம் சரியாமல் காப்பாற்றப்பட்டதற்குக் காரணம் நமது சேமிப்பே என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
    ஆனால் தாராளமய பொருளாதாரத்தால் இளைய தலைமுறையினரிடையே அருகிவரும் சேமிக்கும் பழக்கத்தால் இந்தியாவும், இந்தப் பொறியில் விரைவில் சிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
    சூழ்நிலை இப்படி இருக்க, ஏற்கனவே கணிக்கப்பட்ட ஒரு விஷயத்தை அதிகாரப் பூர்வ அறிக்கையாக அளித்துள்ளது அமெரிக்க புலனாய்வுத் துறை. அதாவது 2030ம் ஆண்டில் சர்வதேச பொருளாதார சக்தியின் மையமாக ஆசியக் கண்டம் திகழும் என்பதே அந்த அறிக்கை.
    குறிப்பாக இந்தியாவும், சீனாவும் இதில் முக்கிய பங்காற்றும் என்றும், சீனா அடுத்த 20 ஆண்டுகளில் அமெரிக்காவைவிட பொருளாதார வலிமை பெற்ற நாடாக உருவெடுக்கும் என்றும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
    அதே நேரத்தில் தண்ணீர், உணவு, எரிசக்தி போன்ற அடிப்படைப் பிரச்சனைகளுக்கு இந்தியா முறையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த இருபது ஆண்டுகளில் மிகப்பெரிய சிக்கலை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கிறது அந்த அறிக்கை.
    அமெரிக்க புலனாய்வுத் துறை அளித்துள்ள சர்வதேச பொருளாதாரத்தின் போக்கு தொடர்பான 5வது அறிக்கையான இதன் மூலம் இதுநாள் வரை, அசைக்க முடியாத சக்திகள் என்ற மாயையை உருவாக்கி வந்த அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார ரீதியாக ஆசியக் கண்டத்தால் தோற்கடிக்கப்பட வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டுகின்றது.
    இதுவரை உலகின் ஒரே அதிகார மையம் அமெரிக்கா என்ற நிலையிலிருந்து மாறி இந்தியா, சீனாவை முன்னிறுத்தி சில அதிகார மையங்கள் உருவாகும். இப்போதே பல ஆண்டுகளாக பொருளாதார ரீதியாக இந்தியாவை அலட்சியமாக பார்த்த மேற்கத்திய நாடுகள் தங்கள் பார்வைகளை மாற்றிக்கொள்ளத் தயாராகின்றன. இந்த நாடுகளின், தாங்கள் தான் அசைக்க முடியாத சக்திகள் என்ற எண்ணம் சிறிது சிறிதாக சிதறுண்டு பல நாடுகளில் பொருளாதார நெருக்கடி முற்றி உதவிக்காக பிற நாடுகளின் கையை எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டன தற்போது.
    இந்தியாவுடன் உறுதியான நட்புறவையும், வர்த்தக உறவுகளையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அளவில் சர்வதேச நாடுகள் முயற்சியை மேற்கொள்வதை பார்க்கும்போது இதுவரை இருந்த மேற்குலகம் குறித்த பிரமிப்பு விலகி, பொருளாதாரம் கிழக்கு நோக்கி நகர ஆரம்பித்துவிட்டதையே காட்டுகிறது.
    இயல்பாகவே நமக்குச் சாதகமாகத் திரும்பும் இச்சூழ்நிலைகளைப் பயன்படுத்தி நமது பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை அறிந்து அதற்குரிய பொருளாதாரக் கொள்கைகளை வகுக்க வேண்டும். ஏற்கனவே பல நாடுகள் கையைச் சுட்டுக்கொண்ட அதி தாராள மயமாக்கல் சித்தாந்தம் நமக்கு அவசியமா? அல்லது நமது கலாச்சாரத்தோடு இணைந்த பாதுகாக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சியே தொடரலாமா? என்று தலைவர்களும், பொருளாதார நிபுணர்களும் சிந்திக்க வேண்டிய தருணமிது…

    இரகசியம் – 2

    ஒரு சின்ன எடுத்துக்காட்டு பார்ப்போம். ஒரு கண்ணாடி சீசாவிற்குள் இரு சின்ன பொட்டலங்களுக்குள் கொஞ்சம் சர்க்கரையைப் போட்டு ஒன்றன் மீது இரகசியம் என்றும் இன்னொன்றின்மீது சர்க்கரை என்றும் எழுதினால் …… எவ்வளவு பேர் முதலில்….. சர்க்கரையை விரும்பி எடுத்து சுவைப்பார்கள்?

    இன்னும் கொஞ்சம் உதறலான மாற்று உதாரணம்…… கொடுப்போம் ……. இரகசியம் என்று எழுதியுள்ள பொட்டலத்தினுள் பொட்டாசியம் சயனைடை கொஞ்சம் போட்டுவைத்தால் நம்மில் பலபேரின் நிலைமை பரிதாபமாகிப் போய்விடும். நிஜ வாழ்வில் இரகசியங்களின் கவர்ச்சி இவ்வளவே. அடிப்படையான விஷயங்கள் கவர்ச்சிப்படாத மெருகில்லாத வெளிப்படையானவையே.

    புராண இதிகாச காரணங்களால் சிவபிரான் தனது கழுத்தில் விஷத்தை தடுத்து நிறுத்தப் பெற்றதால் அமைந்த பெயரே நஞ்சப்பர் என்பது. பெயர்க்காரணம் மறந்து போய்விடில் திருநீலகண்டர் என்பதன் மறுவடிவமான இப்பெயரை உணர்ந்து இரசிப்பவர்கள் குறைவாக போய்விடக்கூடும். கல்லூரி வாழ்வில் உடற்செயலில் கற்றுக்கொடுத்த போராசிரியர் அடிக்கடி கூறிய இரகசியமொன்றை கூறுகின்றேன். அவர் சொல்வது அதிக நேரம் படிப்பவர்கள் – அதிக மதிப்பெண் பெறுவார்கள் என்பதாகும். மிக வெளிப்படையான உண்மை இது. நேரம்….. அருகில் ஈடுபாடு காட்டும் விஷயத்தை யதார்த்தமாக அதிக உன்னத நிலையை நோக்கி எடுத்துச் செல்கின்றது. பெரும்பாலான படிப்புகளில் மட்டுமல்ல வாழ்வின் சந்தர்ப்பங்களில் மட்டுமல்ல வாழ்வின் நிதர்சனத்தில் இது உண்மை என்று ஆகிவிடுகின்றது. யதார்த்தம் என்கின்ற பதம் மிகவும் உன்னதமான இரகசியம். இத்தலைப்பில் முன்பொரு சிறுகதை எழுதியது நினைவில் வருகின்றது. கால்நடை மருத்துவக் கல்லூரியின் செய்முறை பயிற்சி வகுப்பு ஒன்றில் உட்புற நோயாளிகளின் உளவியல் சிகிச்சை மேலாண்மை என்கின்ற தலைசுத்துகிற தலைப்பில் நாய்க்கு பிஸ்கெட் எப்படி தருவது என ஆராய, கடைசியில் தூக்கிப் போட்டால் போதும், சாப்பிட்டு விடும் என்று முடியும். நடைமுறை அறிவு அல்லது பொது நடப்பு அறிவு (Common Sense) என்று சொல்லப்படும் யதார்த்தம் ஒவ்வொரு விஷயத்திலும் இருக்க வேண்டும். விஷயத்தில் (விஷயம்) “ய” என்கின்ற ‘‘யதார்த்தம்” இல்லாமல் போனால் விபரீதமான பொருள் உருவாவது போல….. வாழ்வின் அர்த்தங்களை திடுக்கிட வைக்கும் திருப்பு முனைகளை, பக்குவப்படுத்தி சுவைக்க யதார்த்தம் என்கின்ற பதார்த்தம் இன்றியமையாததாகும்.

    நிறையப் பேருடைய வாழ்வு, தம்மை வாழத் தயாரித்துக் கொள்வதிலேயே செலவழிந்து போகின்றது. அவர்கள் தம் வாழ்நாளில் வாழ்வதில்லை ஆனால் வாழ தயாராகிக் கொண்டே இருந்துவிடுகின்றனர். என்று இரோண்டா பைரின் என்னும் பெண்மனி எழுதிய தி சீக்ரெட் (இரகசியம்) என்னும் புத்தகம், பொன்மொழி பேசுகின்றது. நிஜத்தில் அச்சத்தின் எச்சம் பட்ட சந்தர்ப்பங்கள் சாதனைகளை மிச்சம் வைக்கின்ற சங்கதிகளாக மாறி சங்கடப்படுத்துகின்றன.

    உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும், நஞ்சை அள்ளி வாயில் பகைவர் அல்லர்…… நண்பர்கள் ஊட்டுகின்ற போதிலும்….. அச்சம் கொள்ள வேண்டிய பொருள் அல்ல; கொல்ல வேண்டிய பொருள்; என்று பாரதி பாடிய அச்சமில்லை என்கின்ற விதையிலிருந்துதான் உச்ச நிலையை அடையக்கூடிய முயற்சி விருட்சங்கள் விருத்தியாகின்றன.
    இந்திய ஆட்சிப்பணி தேர்வுக் கேள்விகளின் இரண்டாம் தாளை (முதனிலைத் தேர்வு) (கேள்வித்தாள்) புரட்டிப்பார்க்கையில் அதில் ஒரு ஆங்கில பத்தியை ஆழமாக புரிந்துகொண்டுள்ளோமா? என்று பரிட்சத்துப் பார்க்கின்ற கேள்விகள் வந்திருந்தன. அவ்வகை கேள்விகளை சுலபமாக எதிர்கொள்ளலாம். ஒரு முறை பத்தியை படித்துவிடும் முன்பு மேலோட்டமாக கண்பார்வையை ஒட்டினாலேயே விஷயத்தை குறித்த வெளிவட்ட கற்பனை உருவாகிவிடுகின்றது. அதற்குப்பிறகு மிகக்குறைந்த காலகட்டத்தில் அப்பத்தியிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு கண்பார்வையை, பார்வையை, மேய,விட வேண்டும். இப்பயிற்சி உள்ளூணர்வை விழிப் படையைச் செய்கின்றது. அவ்விழிப்புணர்வு சரியான விடையை மாத்திரம் மின்னல் போல தனித்து எழுந்துவர உதவி செய்கின்றது. இது இரயில் நிலையத்தில் நாம் செல்லவேண்டிய ஊருக்கான புகைவண்டி எண் மாத்திரம் எவ்வளவு நிறைய எண்களின் வரிசைக்கு மத்தியில் இருந்தாலும் தனித்து பளபளவென தெரிவது போல….. உள்மனம் இப்பணியை உன்னதமாகச் செய்துவிடுகின்றது. இதற்கான பயிற்சி எடுத்துக்கொள்கையில் பார்வை மேலும் மேலும் கூர்மையடைகின்றது. சில நேரங்களில் பயிற்சியில் ஏதேச்சையாய் வரும் தவறுகள் பாடங்களை கற்றுதந்து வீரத் தழம்புகளாக நிலைத்து மனதில் நிறுத்துகின்றன; பயிற்சி முக்கியம்.

    நமக்குத் தெரிந்த நண்பர் ஒருவடைய வீட்டில் அவர் மகனின் மாணவப் பருவத்தில் பத்து மணி நேரத்திற்கும் மேலாக படிப்பில் கலைகின்றது மன்னிக்கவும் கழிகின்றது. ஆனாலும் பரிட்சையில் பாஸான பாடில்லை. அரியருக்கும் அவனுக்கும் அயராத போராட்டம் தொடர்ந்தவாறு இருந்தது. ஓரே சீரான முனகல் சத்தம் போல் கிராமத்து வீட்டில் கேட்ட குரலைப்பற்றி விசாரித்தபொழுது இந்த வித்தியாசமான முயற்சி முன்வைக்கப்பட்டது. விளையாட்டு, நட்பு, தனித்திறன் வளர்ப்பு, இலக்கியம், கலை, ஓவியம், அளவளாவல், பாசம், நட்பு, உணர்வு போன்ற எந்த கலவையுமே இல்லாத வாழ்வு இளமையில் அமைகையில் கலலைந்து போய் “வ” இடம் மாறி “கவலை“ படவேண்டிய சூழ்நிலையை உருவாக்கி விடுகின்றது. வண்ணமயமான வாழ்வு மின்னி மினுக்கின்ற பட்டாம் பூச்சிகளாக சிறகடிக்க வேண்டிய வெளிப்பாடுகள் எல்லாம் எட்டாக்கனியாக வைத்துவிடுதல் இரகசியமாக கருதப்பட்க்கூடாது அது யதார்த்தமானது, இயல்பானது, அனுபவிக்கப்பட வேண்டியது.

    காதைக் கொடுங்கள், இரகசியம் ஒன்று சொல்கின்றேன், ஆகமொத்தம் அடுத்தமுறை “காதை கொடுங்கள் உங்களுக்கு மட்டும் இரகசியம் சொல்கின்றேன் யாரிடமும் சொல்லி விடாதீர்கள்” என்று யாராவது ஏதாவது, சொல்லவந்தால் வெளிப்படையான பொட்டலத்தில் உள்ளதை திறந்து முதலில் பார்க்க மறந்துவிட வேண்டாம்.

    உலகின் மிகப்பெரிய இரகசியங்கள் வெளிப்படையானவை- அனைவரும் அறிந்தவை- எளிமையானவை. சாதாரணமாக கிடைப்பவை எளிதில் புறக்கணிக்கப்படுபவை.

    இனிமேல் தெரிந்து கொள்ள முயற்சிக்காமல் தெரிந்ததை முயற்சிப்போம்!

    எது நல்லது என்று எல்லோருக்கும் தெரிந்தாலும்…… செய்து பார்ப்பதற்கு உரிய மனப்பாங்கை வரவழைப்போம்…….. இதுவே பகிரங்க இரகசியம்.