விநாடிகள் தோறும் வாய்ப்புகள்
இந்தியா வல்லரசாக வேண்டும். ஆனால் அப்படியொரு வல்லரசாக மாற
நாம் பல விஷயங்களை வேரோடு மாற்ற வேண்டும்.
அதற்கு நாம் அனைவரும் தயாராக வேண்டும்.
வாழ்க்கையில் வாய்ப்புகள் வந்து கொண்டே தான் இருக்கும். ஆனால் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதும்,பயன்படுத்தாமல் இருப்பதும் நம்மைப் பொறுத்தது, அதேமாதிரி ஒரு நல்ல கல்லூரியில் சேர்ந்து படிக்கக்கூடிய வாய்ப்பு உங்களுக்குக் கிடைத்திருக்கிறது, தமிழ் நாட்டில் சென்ற வருடம் பிளஸ் டு படிப்பில் தேர்ச்சிபெற்ற 6 லட்சம் பேரில் வெறும் 1.5 லட்சம் பேர்தான் கல்லூரிகளில் சேர்ந்திருக்கிறார்கள், அதில் ஒரு லட்சம் பேர் தொழில்நுட்பக் கல்லூரிகளில் சேர்ந்திருக்கிறார்கள்.
என்னுடைய மூத்த சதோதரர் மேல்நிலைக் கல்வியில் மாவட்டத்திலேயே இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அவருக்கு தொழில்நுட்பக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை. தமிழ்நாட்டில் அந்தக் காலத்தில் பொறியியல் கல்லூரிகளில் இருந்ததே 1000 இடங்கள் தான். ஆனால் தற்போது ஒரு கல்லூரியில் மட்டுமே 1200 இடங்கள் இருக்கின்றன, அப்படி 450 கல்லூரிகள் தமிழ்நாட்டில் மட்டும் வந்து விட்டது.
ஒரு கல்லூரி விழாவின் போது, ஒரு மாணவர், இந்தியா 2020ல் வல்லரசாகிவிடுமா ? என்று கேட்டார். Read More
0 comments Posted in Articles