– 2012 – September | தன்னம்பிக்கை

Home » 2012 » September (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    மாடுகள் இங்கே! தீவனங்கள் எங்கே?

    விவசாயத்தில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளைச் சமாளிக்க கோழி, ஆடு, மாடுகளைக் கூடவே வளர்க்க வேண்டும் என்று (Integregate Forms) நமக்கு நமது முன்னோர்கள் சொல்லி கொடுத்தது கப்பு விவசாயம். இந்த விவசாய உத்தியைப் பயன்படுத்திதான் தமிழக விவசாயிகள் வெற்றிகரமாக தொன்றுதொட்டு விவசாயம் செய்து வந்தார்கள். ஆனால் சமீபகாலமாக விவசாயிகளின் வீட்டில் ஆடு, மாடு, கோழிகள் எண்ணிக்கை மிகவும் குறைந்துகொண்டே வருகிறது. அதனால் தான் தமிழக அரசும் கால்நடைகளைக் கிராமப்புறத்து மக்களுக்கு இலவசமாக கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

    இன்று நிதானமாக சிந்தித்துப் பார்த்தால் ஏன் உழவரின் வாழ்வு ஆதாரமான கால்நடைகளைக் கூட நமது விவசாயிகள் பராமரிக்க முயலாமல் போனது? இது காலத்தின் கட்டாயமா? இல்லை, விவசாயிகள் தங்கள் பாரம்பரிய தொழில்நுட்பங்களை மறக்க ஆரம்பித்து விட்டார்கள் என்றால், இதற்கு பல காரணங்களை பல்வேறு தரப்பினர்களும் பக்கம் பக்கமாக விளக்கம் கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால் நமது தமிழகத்தின் விவசாயிகளுக்குத்தான் தெரியும், ஏன் இந்த அடிப்படை மாற்றம் என்று.

    “மாற்றங்கள் ஒன்று தான் மாறாதது” என்று காலம் நம்மை வழிநடத்துகிறது. இன்றைய சூழ்நிலையில் உள்ள சமுதாயப் பொருளாதார மாற்றங்களினால் உழவர்களும் தங்களை மாற்றி அமைக்க தயாராகிவிட்டார்கள் என்பதுதான் நிஜமான உண்மை.

    நான் பிறந்த பூசப்பாடி என்ற குக்கிராமத்தில் 30 வருடங்களுக்கு முன்னால் இருந்த விவசாய சூழ்நிலையையும், தற்போது எனது தம்பி செய்துவரும் விவசாய சூழ்நிலையையும் ஆராய்ந்து பார்க்கும் போது இந்த மாற்றம் எதனால்  நிகழ்ந்தது என்று கூறமுடிகிறது.          1980ல் 10 ஏக்கர் விளைநிலம் தோட்டம் இருந்தால், குறைந்தது 10 மாடுகள், 20 ஆடுகள், 20 கோழிகள் என்று வீட்டைச் சுற்றி கால்நடைகள் இருந்தது. அப்போது இவைகளைப் பார்த்துக்கொள்ள குறைந்தது 3 முதல் 4 தோட்ட வேலை ஆட்கள், தேவையான வைக்கோல், சோளம், தட்டு,  என்று பலவகையான தீவன பயிர்கள் ஒரு வருடத்திற்கு அனைத்து கால்நடைகளுக்கு வேண்டிய தீவனங்கள் இருக்கும். ஓராண்டு மழைபெய்வது குறைந்தாலும், ஓராண்டு வறட்சியைச் சமாளிக்கத் தேவையான தீவனங்கள் இருக்கும்.

    இந்த உலவு மாடுகளை உபயோகித்து விவசாயம் செய்தனர். பால் மாடுகள் மூலம் கிடைக்கப் பெறும் பால் வீட்டுக்குத் தேவைக்குப்போக, மீதமிருப்பதை கூட்டுறவு பால் உற்பத்தி சங்கம் மூலம் நகரங்களுக்கு எடுத்துச் செல்வர்.

    ஆனால் இன்று அவ்வளவு கால்நடைகள் இருந்தால், தேவையான தீவனங்கள் உற்பத்தி செய்து சேகரித்து வைக்க முடிகிறதா? தற்போது நெல் அறுவடை எந்திரம் வந்து அனைத்து வைக்கோலையும் தூள் தூளாக்கி வயலில் போட்டுச் சென்று விடுகிறது. சோளத்தைக் கண்ணால் பார்க்க முடியவில்லை. இதற்குப் பதிலாக மக்காச்சோளம் அனைத்து விளைநிலத்தையும் ஆக்கிரமிப்பு செய்து கொண்டுள்ளது. இவை அனைத்தும் பல லட்சம் கோழிகள் கொண்ட கோழிப்பண்ணைகளுக்குத் தீவனமாக கொண்டு செல்லப்படுகிறது.

    தீவனத்தை அறுவடை செய்து சேகரித்து வைக்க தேவையான ஆட்கள் இல்லை. நவீன விவசாய எந்திரங்கள் வந்தபிறகு தேவையான வைக்கோலைச் சேமிக்க முடிவதில்லை. அப்படியே நினைத்தாலும் அதிக வெயிலில் உழைக்கும் வேலை ஆட்களும் இருப்பதில்லை.

    ஒரு தோட்டத்தில் 5 முதல் 10 ஆட்கள் தினமும் ஆண்டு சம்பளத்திற்கு வேலை செய்த நிலைமாறி, தற்போது ஒரு மணிநேர சம்பளம் என்று விவசாய தொழிலாளர்கள் மாறிய பிறகு, தங்கள் குடும்ப உறுப்பினர்கள் விவசாய வேலையைச் செய்தால் மட்டுமே விவசாயத்தை நடத்தமுடியும் என்ற நிலையில் இருக்கிறோம்.

    கிராமத்தில் இருந்த ஆடு, மாடுகள் குறைந்த அளவு பால், கறி கொடுப்பதால் அவைகளை விட்டுவிட்டு, தற்போது பல நூறு மாடுகளைக் கொண்ட மாட்டுப் பண்ணை, ஆட்டு பண்ணை என்று விவசாயத்துடன் இணைந்து இருந்த ஆடு, மாடுகள் தங்களுக்கு என்று தனி கொட்டகை அமைத்து தனிக்குடித்தனம் நடத்த ஆரம்பித்துவிட்டன.

    இந்த ஆடு மாடுகளுக்கு தீவனம் எப்படி விவசாய நிலத்தில் இருந்து தொடர்ச்சியாக வரும் என்று எதிர்பார்க்க முடிகிறது.

    எனவே பல பன்னாட்டு நிறுவனங்கள் மாடுகளுக்கு தூசியான மாட்டுத் தீவனங்களை உற்பத்தி செய்து தேவையான சத்துக்களை அடக்கி பாக்கெட் செய்து ரேசன் முறையில் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். எனவே ஆடு, மாடுகளை பார்க்க ஆள் இல்லாமல் இயந்திரத்தால் அவற்றை மேற்பார்வை செய்ய ஆரம்பித்துவிட்டோம்.

    இந்த அவசரகால உலகத்தில் மனிதனே இயந்திரமயமான சூழ்நிலையில் வாடும்போது, இந்த ஆடு, மாடுகள் விவசாயம் அனைத்தையும் இயக்கும் மயமாக மாறியிருப்பதில், ஆச்சரியப்பட வாய்ப்பு ஏதும் இல்லை!

    மாறிவரும் வேளாண்மை மாறிக்கொண்டு தான் இருக்கும். அன்றைய வேளாண்மை என்று இன்றும் பழமை பேசிக்கொண்டு இருந்தால் எந்தப் பயனும் இல்லை. காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து வாழ்வோம்.

    ஸ்மால் இஸ் ப்யூட்டிபுள்

    இந்தியாவின் இளைஞர்களில் பலர் தம் தேசத்திற்காக தாம் காணும் கனவாக இந்தியா வல்லரசாகவேண்டும் என்று கூறுவார்கள்.

    இதில் நமது தேசத்தந்தை காந்தி என்ன கனவு கண்டார் என்பதை எண்ணிப் பார்க்கும் போது, அவர் இந்தியாவை ஒரு போதும் வல்லரசாக நினைத்துப் பார்த்ததில்லை. அவரின் கனவு நல்லரசு, வல்லரசு அல்ல.

    ஏனென்றால் மிகக்குறைவான மக்கள் தொகைகொண்ட பிரிட்டீஸ் அரசு ஒரு பேரரசாக உருவெடுக்க அது உலகின் சரிபாதி நாடுளின் வளங்களை உறிஞ்சியது. இந்தியா போன்ற அபரிமிதமான மக்கள் தொகைகொண்ட நாடு வல்லரசாக வேண்டுமென்றால் உலகின் மொத்த வளங்களும் அவற்றிற்குப் போதாது என்று எண்ணினார் காந்தி.

    ஒவ்வொரு மனிதனின் தேவையையும் நிறைவு செய்து தரக்கூடிய இயற்கையால் அவனது பேராசையை ஒரு போதும் நிரப்ப முடியாது என்றார் அவர். காந்தியே நம் காலத்தின் முதன்மையான மக்களுக்கான பொருளாதார நிபுணர் (People’s Economist).

    சூழியல் விழிப்புணர்வு குரல்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக எழத்தொடங்கிய காலகட்டத்தில் நவீன பொருளாதாரக் கட்டுமானம் எவ்வாறு இயற்கையைச் சுரண்டுகிறது என்பதை ‘ஸ்மால் இஸ் ப்யூட்டிபுள்’ என்ற நூலில் ‘பௌத்த பொருளியல்’ என்று விவரித்திருப்பார் அந்நூல் ஆசிரியர் ‘எர்னைஸ்ட் பிரெடெரிக் ஷூமேக்கர்’.

    புத்தர் முன்வைத்த எட்டு பௌத்த நெரிமுறைகளில் சரியான வாழ்க்கைமுறை என்பது முக்கியமானது. சரியான வாழ்க்கை முறைக்குத் தகுந்த பொருளாதார அமைப்பு அவசியம் அதற்கு நவீன பொருளியலைத் தவிர்த்து ஒரு புதிய பொருளாதாரமாக பௌத்த பொருளாதாரம் கட்டாயம் இருக்க வேண்டும்.

    நவீனயுகத்தின் மனிதன் தன்னுடைய பொருளாதார, நிலையை அடிப்படையாக வைத்தே தனது அடையாளத்தை முடிவு செய்து கொள்பவனாக இருக்கிறான்.

    இன்றைய வணிகக் கலாச்சாரம், மனிதனை மீளமுடியாத சூறாவளிக்குள் சிக்கிக்கொண்ட நெருக்கடியான மனநிலைக்குத் தள்ளியிருகிறது. தனக்கு என்ன தேவை? அது எதற்காகத் தேவை? ஏன் எல்லா மதிப்பீடுகளையும் பொருளாதாரம் சார்ந்தே தீர்மானிக்கிறோம் என்பதற்குப் பதிலாக பௌத்த பொருளியல் கோட்பாடு உள்ளது.

    அதுமூன்று முக்கிய அம்சங்களை முன்வைக்கிறது,

    1. மனிதன் தனது திறன்களை முழுமையாகப் பயன்படுத்தவும், திறன்களை வளர்த்துக் கொள்ளவும் வேண்டும்.
    2. தனது அகந்தையைப் புறம்தள்ளி சக மனிதனோடு பொதுவான காரியங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளவும் வேண்டும்.
    3. வாழ்வதற்குத் தேவையான அடிப்படை வளங்களைக் கண்டடைதல் எனபவவையே அந்த 3 முக்கிய அம்சங்கள்.

    இந்த அம்சங்களைக் கணக்கில் கொண்டு பார்த்தால் இயற்கை தந்த மனிதனின் பெரும்பான்மை மூலதனங்களை இன்றைய நவீன மனிதன் உணராமல், அவற்றை இயற்கையிடமிருந்து பிடுங்கிக்கொண்டு, இயற்கையை முற்றிலுமாக அழித்தொழித்துக் கொண்டிருக்கிறான்.

    இதன் காரணமாக பெரும் இயந்திரங்களால் இயற்கை  வளங்கள் அசுரவேகத்தில் உறிஞ்சி எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இயற்கை வளங்களை அதிகமாகப் பயன்படுத்துவதால் நாட்டின் உற்பத்தி உயரும் என்ற பொய்யான பிம்பத்தைக் காட்டி மனிதன் தான் செய்யும் மோசடியை மறைத்துக் கொண்டு வருகிறான்.

    உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேலே அடித்தட்டிலும், வறுமையிலும் வசிக்கும் மக்களைக் காட்டிலும், பணக்காரர்களே இயற்கை வளத்தை சேதம் உண்டாக்குவதிலும், சுயலாபங்களுக்குப் பயன்படுத்திக் கொள்வதிலும் அதிக பங்கு வகிக்கிறார்கள்.

    இதற்கு உதாரணம் எரிபொருள் பயன்பாட்டில், ஏழைகளுக்கான சராசரி பயன்பாடு பணக்காரர்களின் பயன்பாட்டில் பதினான்கில் ஒரு பங்கு மட்டுமே. இப்படி பணக்காரர்களின் நலனிற்காக அதிகம் உறிஞ்சி எடுக்கப்படுவதால் ஏற்படும் சுற்றுசூழல் சீர் கேடுகளால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை மக்களே என்று கூறுகிறது பௌத்த பொருளாதாரம்.

    பௌத்த பொருளாதாரம், இந்தியப் பொருளாதாரம் குறித்த காந்தியின் குரலுக்கு மிகவும் நெருக்கமாகவே உள்ளது. அதாவது அதிக அளவிலான உற்பத்தி என்பதைவிட அதிக மக்களால் உருவாக்கப்பட்ட உற்பத்தியே மேலானது “Production from Mass is Better than Mass Production” என்ற காந்தியக் கோட்பாட்டினை வலியுறுத்துகிறது.

    அதாவது மனிதனின் வேலையை அடிமை இயந்திரங்களுக்கு தாரை வார்த்து மனிதனை இயந்திரங்களுக்கு ஊழியம் செய்ய வைக்காமல், மனிதனின் திறனையும், ஆற்றலையும் ஊக்குவித்து அதிகரிக்க வேண்டும் என்கிறது பௌத்த பொருளாதாரம்.

    இன்றைய நவீன பொருளாதாரம் பொருட்களை மனிதர்களுக்கு மேலானதாகவும், நுகர்வை படைப்பூக்கத்திற்கு மேலானதாகவும் சித்தரித்துக் கொண்டிருக்கிறது என்றும், மனிதனின் நுகர்வுத் திறனைக் கொண்டே அவனது வாழ்க்கைத் தரத்தை மதிப்பீடு செய்வதாகவும், அபரிமிதமாக நுகர்பவன் குறைவாக நுகர்பவனைக் காட்டிலும் உயர்வான வாழ்க்கைத் தரத்தைக் கொண்டவன் என்றும் கூறுகிறது.

    ஆனால் பௌத்த பொருளாதாரம் இந்த மதிப்பீட்டை முற்றிலும் நிராகரிக்கிறது. மேலும் நம் காலத்தில் மனிதனது சிந்தனையில் தெளிவும், உள்ளத்தில் தூய்மையும், மனதில் நேர்மையும் இன்றி இருப்பதே இன்றைய பொருளாதாரச் சீர்கேட்டிற்குக் காரணம் என்கிறது.

    உலகளாவிய சந்தை நிலவரங்களை அண்டிப் பிளைப்பவர்களைக் காட்டிலும் தன்னிறைவான சிறிய சமூகங்களில் வாழ்பவர்களே பெரும் வன்முறைகளுக்குப் பலியாகாமல் வாழ்கிறார்கள்.

    இயற்கை வளங்கள் அளவோடு இருப்பதால் அதை மிகக் குறைவாகப் பயன்படுத்தும் சமூகத்தில், ஒருவர் மற்றொருவரின் குரல்வலையை  நெரிக்கத் தேவையில்லை.

    உள்ளூர் தேவைகளை அங்குள்ள வளங்களைக் கொண்டு நிறைவு செய்து கொள்வதே பௌத்த பொருளியலுக்கு ஏற்றது.

    மிகச்சிறிய அளவில் சில விதிவிலக்குகளைத் தவிர்த்து, பிறநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தல், பின்னர் அவற்றை ஈடுகட்ட எங்கோ, யாருக்கோ ஏற்றுமதி செய்தல் போன்றவை பௌத்த பொருளாதாரத்திற்கு ஏற்புடையதில்லை.

    தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள தமது அருகாமை சுற்றுப் புறங்களைச் சாராமல் தூரதேசங்களைச் சார்ந்திருப்பது பொருளியலைப் பொறுத்தவரை தோல்வியையே குறிக்கும்.

    பிரெஞ்சு அரசியல் மெய்யியலாளர் ‘பெர்ட்ரான்ட் ஜோனேல் மேற்கின்’ – மனிதனைப் பற்றி சொல்லும் கருத்து நவீன பொருளியல் நிபுணருக்கும் பொருந்தும்.

    மனித உழைப்பைத் தவிற அவனுக்கு வேறு எதுவுமே செலவீனமாகத் தெரிவதில்லை. எத்தனை உயிருள்ள ஜீவன்களை அழிக்கிறான் என்பதைப் பற்றிய அக்கறை அவனுக்கு துளியும் கிடையாது. எத்தனையோ உயிர்கள் வாழும் இப்புவி அமைப்பில் வாழும் இன்னொரு உயிரினம்தான் மனிதன் என்பது அவனுக்குப் புரிவதில்லை. இந்த உலகம் நகரங்களிலிருந்து ஆளப்படுவதால், மனிதனுக்கு சக மனிதனைப் தவிர வேறு உயிர்களுடைய பரிச்சயம் நேர்வதில்லை. அவன் இருக்கும் சூழல் அமைப்பு அவனுக்குப் புரிவதில்லை. இதன் விளைவாக நாம் சார்ந்திருக்கும் மரங்கள், தண்ணீர் போன்றவளங்களை சகட்டுமேனிக்கு சீரழிக்கிறோம் என்கிறார் அவர்.

    இயற்கை வளங்களை எப்படி பயன்படுத்துவது என்பதிலும், நவீன பொருளியல் பௌத்த பொருளியலிலிருந்து விலகி நிற்பது புலப்படுகிறது.

    புதுபிக்கத்தக்க வளங்களுக்கும், புதிப்பிக்கவியலா வளங்களுக்கும் நவீன பொருளியல் எந்த வேறுபாட்டையும் காண்பதில்லை. எரிபொருளைப் பொருத்தவரை எண்ணெய், கரி, நீர், காற்று, விறகு போன்றவைகள் இருந்தாலும் இதில் ஒரு யூனிட்டுக்கு ஒப்பீட்டளவில் மிகக் குறைந்த செலவில் எரிசக்தி எது வழங்குகிறதோ அதுவே லாபகரமானது.

    அதைப்புதுபிக்க முடியுமா? இல்லையா? போன்ற கேள்விகளுக்கு இடமே இல்லை. புதிப்பிக்கவியலா வளங்களைத் தான்தோன்றித்தனமாகவும், ஊதாரித்தனமாகவும் பயன்படுத்துவது ஒருவித வன்முறைபோக்கு ஆகும். அவ்வளங்களைப் பேணி பாதுகாப்பது மிக முக்கியம் என்று பௌத்த பொருளியல் கருதுகிறது.

    முற்றிலும் தவிர்க்க முடியவில்லை என்றாலும், மிக அத்தியாவசியமான சூழலில் குறைந்த அளவில் புதுப்பிக்கவியலா வளங்களை விழிப்போடு பயன்படுத்த வேண்டும் வன்முறையை முற்றிலும் ஒழிக்க முடியாவிட்டாலும், அதற்கான முயற்சிகளில் மானுட குலம் சோம்பலின்றி முன்னெடுத்துச் சென்றாக வேண்டும்.

    இன்றைய நிலையில் இயற்கையுடன் இணைந்து மனிதன் வாழவேண்டும் என்பது விருப்பத்தைத் தாண்டியும் கட்டாயமான தேவையாகிறது.

    பொருட்களுக்கு முக்கியத்துவம் தரும் வாழ்க்கை முறையில் இருந்து மாறி தனது சுயதேவைகளை வரையறை செய்து கொண்டு, போதுமானது என்ற மனதுடன் உள்ள வாழ்க்கையை மனிதன் மேற்கொள்வதே எதிர்காலத்திற்கான வழியாகும்.

    சுருக்கமாக சொல்வதானால் நல்வாழ்க்கையை நோக்கிய நம் தேடல்தான் ‘ஸ்மால் இஸ் பியூட்டிபுள்’.

    Srini_flower@yahoo.com

    ஒன்றாய் இருக்கிறோம்! நன்றாய் வளர்கிறோம்!!

    தமிழக மக்களின் உணவுப் பழக்கத்தில் அரிசிக்கு அடுத்த இடத்தில் இருப்பது கோதுமை. மாறிவரும் உணவுப் பழக்கத்தின் காரணமாக கோதுமைக்கும், கோதுமையில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருள்களுக்குமான தேவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தச் சூழ்நிலையில் தென் இந்தியாவின் மான்செஸ்டார் என்றழைக்கப்படும் கோவையின் மற்றுமொரு சிறப்பாகவும், தரமான கோதுமையைக் கொள்முதல் செய்து அதற்கு சுவையாக மதிப்பூட்டி விற்பனை செய்து, உணவுத் தரக்கட்டுப்பாடு சான்றிதழான ஐ.எஸ்.ஓ. 22000 (HACCP ISO 22000) பெற்ற“மயில் மார்க்” சம்பா ரவையின் சேர்மன் திரு.ய.சந்திரசேகரன் அவர்களை சந்தித்தோம்.

    Continue Reading »

    ஆடையில் கவனம் – அவசியம்தானா?

    “ஆள் பாதி ஆடை பாதி” என்பது பழமொழி.

    மனிதர்களின் ஆடைகளை பார்த்தே அவர்களது சிறப்புத் தோற்றத்தையும், தன்மைகளையும் மற்றவர்களால் உணர்ந்துகொள்ள இயலும். இப்போது அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக ஒரு “ஆடை” அமைந்துவிட்டது.

    “ஆடையில்லா மனிதன் அரைமனிதன்” என்பார்கள். இதனை உணர்ந்துகொண்ட மக்கள் தனக்குப் பிடித்த ஆடைகளை அணிவதற்கு அதிக விருப்பமுடன் இருக்கிறார்கள். இதனால்தான் சில “ஜவுளிக் கடைகள்” இப்போது “ஜவுளிக் கடல்”களாக மாறிவருகிறது.

    சிறியவர் முதல் பெரியவர்கள் வரை ஆடை அணிவதில் மிகுந்த அக்கறை செலுத்த ஆரம்பித்துவிட்டார்கள். சமூக விழாக்களிலும், பண்பாட்டைச் சித்தரிக்கும் நிகழ்ச்சிகளிலும் விதவிதமான நவ நாகரிக ஆடைகளோடு காட்சித் தருவது இன்றைய காலகட்டத்தில் வழக்கமாகிவிட்டது

    ஒருவரை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவதில் அவரது “ஆடை” முக்கியப் பங்கு வகிக்கிறது. போலீஸ்காரர்கள், நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்கள், காவலாளிகள் – என பல்வேறு பணிகளில் ஈடுபடுபவர்களை வேறுபடுத்திக் காட்டுவதற்கு ‘சீருடை’ என்படும் ‘யூனிபார்ம்’ உதவியாக அமைகிறது. ஒருவர் அணிகின்றஆடையை வைத்தே ஒருவரது மதம், சமூக அந்தஸ்து, பண்பாடு ஆகியவற்றைஎளிதில் தெரிந்துகொள்ளலாம்.

    பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் தனது ஆட்சிக்காலத்தில் பள்ளியில் பயிலும் மாணவ – மாணவிகள் “சீருடை” எனப்படும் “யூனிபார்ம்” அணிந்து பள்ளிக்கு வரவேண்டும் என்பதை நடைமுறைப்படுத்தினார். “ஏழை – பணக்காரன் என்றவித்தியாசம் கல்வியை வழங்கும் பள்ளிகளில் இருக்கக்கூடாது” என்பதில் தீவிர ஆர்வம்காட்டி அப்போது ‘சீருடைத் திட்டம்’ என்னும் சீரிய திட்டத்தை அமுல்படுத்தி இலவசமாக சீருடை வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார்கள்.

    இப்போது – ‘பண்பாடு மாற்றங்கள்’ (Cultural Changes) நாள்தோறும் நிகழ்ந்து வருகிறது. நேரத்திற்கு தகுந்த ஆடைகளை அணிவதில் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

    தமிழ்நாட்டின் பெருமையைப் பறைசாற்றும் வேட்டி – சேலை அணியும் பழக்கம் இன்றும் உள்ளது. இதைப்போலவே திருமணங்கள், பிறந்தநாள் விழாக்கள் ஆகியவற்றில் கலந்துகொள்ளும்போது பட்டாடைகள் இன்றும் பயன்படுத்தப்படுகின்றன. சோகத்தை நிரப்பும் நிகழ்வுகளுக்குச் செல்லும்போது கருப்பு ஆடைகளை அணிவது வழக்கமாக உள்ளது. மத சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும்போது சிவப்பு மஞ்சள், பச்சை, நீலம் என கலர் கலராக ஆடை உடுத்தும் பண்பாடும் தமிழகத்தில் வளர்ந்து வருகிறது.

    இதுதவிர – இரவு நேரங்களில் மட்டுமே பெண்கள் அணியும் ‘நைட்டி’ எனப்படும் உடை இப்போது பகல் உட்பட எல்லா நேரங்களிலும் அணியும் அங்கீகரிக்கப்பட்ட ஆடையாக மாறிவிட்டது. ‘கேசுவல் டிரஸ்’ எனப்படும் எப்போதாவது அணியும் ஆடைகள் இப்போது எல்லா நேரத்திலும் அணிகின்றஅளவுக்கு முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

    இந்தச்சூழலில் “சீருடை அணிய வேண்டும்” என்பது தமிழகத்திலுள்ள சில கல்லூரிகளில் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது.

    “நாங்கள் எங்கள் விருப்பப்படி டிரெஸ் அணிந்து கல்லூரிக்கு வருவோம். ஏன் தடை செய்கிறார்கள்? எங்கள் சுதந்திரம் பறிக்கப்படுகிறது. நவீன ஆடைகளையும், சேலைகளையும், சல்வார் காமிஸ், போன்ற ஆடைகளை அணிவது தவறில்லை. ஜீன்ஸ் அணிந்து கல்லூரிக்கு வருவது எங்களுக்கு வசதியாக உள்ளது. “யூனிபார்ம்தான் அணிந்து வரவேண்டும் என கட்டுப்பாடுகள் விதிப்பது கல்லூரி நிர்வாகத்திற்கு அழகல்ல” – என்று பல இளைய உள்ளங்கள் குரல் எழுப்புகிறார்கள்.

    ஆனால் அதேவேளையில் – சில கல்லூரிகளில் மாணவிகள் அனைத்து நாட்களிலும் “சீருடைச் சேலை” (ருய்கைழசஅ ளுயசநந) அணிந்து வரவேண்டும் என்றும் மாதத்தில் ஒருநாள் பருத்திச் சேலை அணிந்து வர வேண்டும் என்றும் கல்லூரியில் விதிமுறைகளாக அறிவித்து, நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.

    கல்வி பயிலும் காலங்களில் இந்தச் சீருடை அவசியமா? இல்லையா? என்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. இருந்தபோதும் பள்ளி – கல்லூரிகளில் பயிலும் காலங்களில் ஒரு மாணவன் அல்லது மாணவி தன்னை நிலைப்படுத்தவும், தன்னை மற்றவர்களுக்கு அடையாளம் காட்டவும் உதவியாக அமைவது இந்தச் “சீருடை” ஆகும்.  கல்லூரிகளில் பயிலும் மாணவ- மாணவியருக்கு “சீருடை” எதற்கு? என்று சிலர் சிந்தித்தாலும் அந்த ‘சீருடை’தான் ஒரு கல்வி நிலையத்தில் பயிலும் மாணவன் அல்லது மாணவியை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. சில கல்வி நிலையங்களில் சீருடையைப் பயன்படுத்த இன்னும் தயங்குகிறார்கள். இதற்குக் காரணம் “மாணவ – மாணவிகள் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்ற எண்ணம் அந்த கல்வி நிலைய பொறுப்பாளர்களிடம் அதிகமாக உள்ளது.

    சீருடை என்பது சீரான உடையாகத் தோன்றினாலும் அதனை அணியும்போது மனதில் மகிழ்ச்சியும், உற்சாகமும், தன்னம்பிக்கையும் தானாய் உருவாகிறது. சீருடைகளில் காணப்படும் மாணவ – மாணவிகளை பொதுமக்கள் எளிதில் அடையாளம்கண்டு அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதற்கும் தயாராக இருப்பார்கள். சீருடை அணிந்து பழகியவர்கள் பிற்காலத்தில் எந்த ஒரு நிறுவனத்தில் எந்தப் பணியை ஏற்றாலும் சிறப்பாக செய்யவேண்டும் என்ற எண்ணத்தோடு காணப்படுவார்கள்.

    கல்வி நிலையங்களில் பயிலும்போது விதவிதமான குட்டை ஆடைகளையும், இறுக்கமான உடைகளையும் அணிந்து பழகியவர்கள் கல்லூரிப் பருவம் முடிந்து அலுவலகங்களில் பணிபுரியும்போது ஆடை அணிவதில் கண்டிப்பாக மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். அப்போது – அலுவலக விதிமுறைகளுக்குஏற்ப ஆடைகளை அணிந்துவருவது அவர்களின் கடமையாக மாறிவிடுகிறது.

    இதனால் ஆடை அணியும் விசயத்தில் சில பிரச்சினைகள் உருவாகிவிடுகிறது. மன அழுத்தம் ஏற்பட்டு செய்யும் பணியில் அதிக அக்கறைஇல்லாமல் இருக்கும்நிலை சிலருக்கு உருவாகிவிடுகிறது. இத்தகைய சூழலை தவிர்க்க விரும்புபவர்கள் பள்ளி – கல்லூரிகளில் படிக்கும்போதே கல்வி நிறுவனங்கள் உருவாக்கியுள்ள விதிமுறைகளின்படி ஆடைகள் அணிவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.

    சில கல்லூரிகளில் மாணவ – மாணவிகள் முறையாக, தரமாக ஆடை அணிவதை முறைப்படுத்த உதவும் ‘டிரெஸ் கோடு’ (Dress Code) என்பதை நடைமுறைப்படுத்த தயங்குகிறார்கள். இதனால் ஆடை அலங்காரப் போட்டியில் (Fashion show) கலந்து கொள்வதைப்போல விதவிதமான உடைகளில் மாணவ – மாணவிகள் கல்வி நிலையத்திற்கு வந்து செல்கிறார்கள். கல்வி நிலையங்கள் ‘டிரஸ் கோடு’ எனப்படும் நெறிமுறையை நடைமுறைப்படுத்தாவிட்டாலும் கூட கல்லூரிக்கு ஏற்றவாறு ஆடைகளை அணிந்து வருவது மாணவ – மாணவிகளின் கடமையாகும்.

    சமீபத்தில் அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் ஆடைகள் விசயத்தில் இளம்பெண்கள் எவ்வளவு கவனமாக இருக்கவேண்டும் என்பதை உணர்த்துகிறது.

    அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள கவுஹாத்தி நகரில் நடுரோட்டில் ஒரு இளம்பெண் மானபங்கப்படுத்தப்பட்டார். அந்தப் இளம்பெண்ணுக்கு வயது 17 தான். இந்த சம்பவத்தில் சில இளம்வயது வாலிபர்கள் மட்டுமே தொடர்புகொண்டு இருப்பது அனைவர் நெஞ்சிலும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

    இந்த சம்பவம்பற்றி தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி மம்தா சர்மா தனது கருத்தை தெரிவித்திருந்தார். “பெண்கள் தங்கள் உடை விசயத்தில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். வெளில்நாட்டு நாகரிகத்தை கண்மூடித்தனமாக பின்பற்றுவதால்தான் இதுபோன்றசம்பவங்கள் நடைபெறுகின்றன. நாடு சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது இப்போது இந்த ஆடையை உடுத்தவேண்டும். இதனை உடுத்தக்கூடாது என நாம் உத்தரவு பிறப்பிக்க முடியாது. பெண்கள் தங்களுக்கு வசதியான உடையை அணிந்துகொள்ளலாம். ஆனால் அதேவேளையில் ஆடை விசயத்தில் அதிக கவனமாக இருக்கவேண்டும்” – என்று தேசிய மகளிர் ஆணையத் தலைவி மம்தா சர்மா கூறினார்.

    இடத்திற்கு ஏற்றாற்போல ஆடைகள் அணியும் பழக்கம், நற்பெயரைத் தேடித்தரும். ஒருவரைப் பார்த்தவுடனே அவர் எப்படிப்பட்டவர்? என கணித்துக் கொள்வதற்கு ஆடை முதலில் உதவுகிறது. எனவே – இந்த ஆடை வி’யத்தில் அதிக அக்கறையோடு மாணவ – மாணவிகள் செயல்படவேண்டும்.

    குறிப்பாக – “நேர்முகத் தேர்வு” என அழைக்கப்படும் “இண்டர்வியூ” நடைபெறும்போது தரமான ஆடைகளை அணிந்துசெல்ல வேண்டும். பார்ப்பதற்கு அழகாகவும், அருமையாகவும் காட்சியளிக்கும் ஆடைகளை தேர்ந்தெடுத்து அணியவேண்டும். கண்களை உறுத்தும் கருப்பு, சிவப்பு, மஞ்சள் நிறஆடைகளை அணிவதை நேர்முகத்தேர்வு நேரத்தில் தவிர்த்துவிட வேண்டும்.

    மொத்தத்தில் விதிமுறைகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இடத்திற்கு ஏற்றாற்போல ஆடை அணிவது நாகரிகமான செயலாகும்.

    மர்மமாய் இருக்கும் மனசு

    காற்றை உள்ளிழுத்து வெளிவிடும் காலத்திற்குப் பெயர் தான் வாழ்க்கை. இந்த குறுகியகால இடைவெளியில் வாழும் மனிதனை நாளும் இயக்குவது மனம் என்கிற மர்மம் தான். இந்த மர்மம் இருக்கும் வரைதான் ஒருவனை மனிதன் என்போம். இங்கு மனதோடு தானே நாம் தினந்தோறும் போராட வேண்டியுள்ளது. சிறுகணம் கூட விடாது, நம்மை ஆட்டிப்படைக்கும் மனம் சொல்லும்படி தானே நாம் ஆடுகின்றோம்.

     

    இந்த உலகில் நமக்கு மாபெரும் சபைகளில் மாலை மரியாதையை ஏற்படுத்தித் தருவதும், அதே உலகில் மதிமழுங்கச் செய்து, நம்மை மானங்கெட்டவனாக்கி விடுவதும் மனம் தானே. இப்படி மனித வாழ்வின் அனைத்துமாய் திகழ்கின்ற, அவன் வாழ்க்கை வண்டி ஓடுவதற்கு அச்சாணியாய் இருக்கின்ற மனதின் மர்மத்தை அறிவோம் இனி.

    இன்று கோடான கோடி மக்களின் குறைநீக்கிய கோடீஸ்வர குருஜீக்கள் எத்தனையோ. குற்றம் சுமத்தப்பட்டு, சட்டத்தின் முன்னே, வெக்கங் கெட்டவர்களாக வேடிக்கை பார்க்கப்பட்டார்கள். இரவு பகலாய், கடுமையாக, கண்ணியத்துடன் உழைத்து உயர்ந்த உத்தமர்கள், எத்தனை பேர் கணநேர சபலத்தால் அவல நிலைக்கு தள்ளப்பட்டு அறுவறுப்புக்கு ஆளாகிப் போனார்கள். இதுபோன்று மனித வாழ்வின் சரித்திரத்தை புரட்டிப் பார்த்தால் சமகால இடைவெளியில் இதுபோன்று தோன்றிய எத்தனை மகாமனிதர்கள், கலை, இலக்கிய ஜாம்பவான்கள், அசிங்கப்பட்டு, பலிபாவத்திற்கு பலிகடாவாகிப் போனார்கள். ஏன் அவர்கள் இந்த நிலையை அடைந்தார்கள்? எது அவர்களை இந்த நிலைக்கு இழுத்துச் சென்றது? என ஆராயும்போது, கிடைத்த பதில் இதுதான், ஒன்று விதி, மற்றொன்று மதி என்று தான் சொல்லத் தோன்றுகிறது.

    பெரும் தலைகளுக்கு மட்டுமா இந்தக் கதி, சாதாரண மனிதனிடத்திலும் இது சாகசமாக நடந்து கொண்டு தான் இருக்கின்றது. எத்தனையோ வேதாந்திகள், விற்பனர்கள் இதற்கான காரணத்தை விளக்கி, திரும்பத் திரும்ப சொல்லிய போதும், விக்கிரமாதித்தனின் வேதளாம் மீண்டும் முறுங்கை மரம் ஏறுவதுபோல் மனிதர்களின் வாழ்வில் மாற்றம் ஏற்பட்டதாய் தோன்றவில்லையே ஏன்?

    மனிதன் உயர்நிலை எய்துவதும், கீழ்நிலைக்கு செல்லுவதும் எதனால் என்றால், பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முன்வரை என்ன சொன்னார்கள். “அது அவனவன் விதி” “தலை எழுத்து”அப்படி இருக்கு. அதற்கு ஒன்றும் செய்ய முடியாது. அவன் செய்த கர்மமோ, அவன் பரம்பரை செய்த கர்மமோ, அது இந்த ஜென்மத்தில் செய்ததோ அல்லது போன ஜென்மத்தில் செய்ததோ, எவன் கண்டான் அவன் அதை அனுபவித்துத்தான் ஆக வேண்டும் என்று சொல்லி அதற்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

    பத்தொன்பதாம் நூற்றாண்டுக்குப் பின் இந்த உலகம், எல்லாத் துறைகளிலும் மிகப்பெரும் மாற்றங்களை அதிவேகமாகக் கண்டது. புதுமை என்பன பொழுதுக்கு பொழுது புலர்வது போல ஒவ்வொரு விசயத்திலும் வியத்தகு விந்தையை விளைவித்த வண்ணம் இருந்தது. அக்கால கட்டத்தில் தான் மனம் என்கிற மர்மத்தைப் பற்றியும் பலப்பல புதுமைகள் வெளிப்படத் தொடங்கின. அதற்கு முன்னரே நம்மவர்கள் அறிந்திருந்ததும், அதை அனைவரும் அறியும்படி செய்ய மறந்தனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

    பத்தொன்பதாம் நூற்றாண்டில் சிக்மன் ஃபிராய்டு என்ற உளவியல் நிபுணர் தான் மனிதனின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் விதியோ, தலை எழுத்தோ காரணம் அல்ல. “நாம் செய்யும் செயல்களுக்கெல்லாம் தூண்டுதலாக இருக்கும் காரணி. நமது மனதிலேயே ஆழமாகப் புதைந்து இருக்கிறது. அதற்கு ஐட் (Id) என்று பெயர். இதன் இயக்கம் எப்படி இருக்கின்றதோ, அப்படியே ஒரு மனிதனின் செயல்பாடும், விளைவும் அமையும்” என்றார். இந்த ஐட்டின் (Id) இயக்கம் நேர்மறையாக இருக்கும்போது மனிதன் நல்லவனாகவும், அதன் இயக்கம் எதிர்மறையாக இருக்கும்போது அவன் கெட்டவனாகவும் சித்தரிக்கப்படுகின்றான். அப்படியானால் ஐட்டின் (Id) இயக்கத்தை நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் செய்வது எது என்கின்றகேள்வி எழுகின்றது இல்லையா?

    மனதின் அந்த ஐட் (Id) பகுதியை, நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் இயக்குவது நான் (Ego, I) என்கின்ற தன்முனைப்பு. இந்த நான் என்னும் உயிராற்றல் வலு இழக்கும்போது மனித மதி மழுங்கி, கதிகலங்கிப் போய்விடுகின்றது. இப்படித்தான், குருஜீக்களும், கோடீஸ்வரர்களும், சாமானியர்களும் கெட்டுச் சீரழிந்து கிறுக்குப் பிடித்துப் போகின்றார்கள் என்றார்.

    மேற்கண்ட இரண்டு பதில்களில் இருந்தும் நாம் விளங்கிக் கொள்ளுவது என்ன என்றால், ஒரு மனிதனின் உயர்வுக்கும், தாழ்வுக்கும் அவனிடம் உள்ள மனம் தான் காரணம். அந்த மனத்தை இயக்குகின்ற, நான் என்னும் தன்முனைப்பு எவ்வண்ணம் இருக்கின்றதோ, அதன் பிரதியாகத்தான் அது இயங்கும் என்றும். ஆகையினால் நான் என்னும் தன் முனைப்பு, மனதை எப்போதும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். இல்லையேல், நான் என்கிற மாயாவியின் மந்திரக் கோலான மனம் அவனையே அழித்துவிடும் என்பது புலனாகின்றது. மீண்டும் ஒருமுறை நினைவு கூறுகின்றோம்.

    “இமயமலையாய் இருந்தவர்கள்,         “இடிவிழுந்த இடமாகிப் போவதும்”,   “இடிவிழுந்த பள்ளமாய் கிடந்தவர்கள்,            இமயமலையாய் நிமிர்ந்துவிடுவதும்” மனதால் தான்’” வேறு எதுவாலும் அல்ல.

    மனதை எப்போது நலமுடன் வைத்துக் கொள்ள வேண்டும். மனம் கெடும்போது, உடல் பித்துபிடித்து, பிதற்றத் தொடங்கிவிடும். மனதிற்குப் பைத்தியம் பிடித்துவிட்டால் அதற்கு எந்த வைத்தியமும் கிடையாது. அதனால் ஒன்றும் உபயோகம் இருக்காது என்பதைத்தான் நம் முன்னோர்கள்.   ஆயிரம் தெய்வங்கள் உன்முன் அணிவகுத்து   நின்றாலும், நீ, நான் என்கின்ற பிரக்கனை அற்று   பத்தியமாய் இருப்பாய் என்றால் ஒன்றுக்கும்    உதவாது என்றனர்.

    மனமே தெளிவு பெறு

    உங்களுள் இருக்கும் தெய்வீகத்தை உணர்ந்து கொள்ளுங்கள். கடவுள்

    அனைவரும் ஒருவரே. அந்த தெய்வீகத்தை அடையுங்கள். சிறிது சிறிதாக உங்கள் மனம் தெளிவு பெறும். உங்களுள் தன்னம்பிக்கை என்னும் சக்தி பிறக்கும். கண்டிப்பாக ஒருநாள் மனம் முழுமையாக தெளிவு பெறும்.

    நம் மனம் ஒரு ஆழ்கடல் போன்றது. அதில் பல துன்பங்கள் அலைகளைப் போல நம்மைத் தாக்கும். சுனாமி போல பிரச்சனைகள் சீர்தூக்கும்.

    வாழ்வில் இன்பங்களற்று துன்பங்களே உங்களை வந்து சூழலாம். வெற்றிகள் உங்களை எட்டிக்கூட பார்க்காமல் தோல்விகளையே தரலாம். ஆனால் இதையெல்லாம் கண்டு பயந்துவிடாமல், இதை எதிர்த்து போராட உங்கள் மனம் தெளிவு பெற்றிருக்க வேண்டும்.

    நம் மனம் முழுமையாக தெளிவு என்னும் மாபெரும் சக்தியால் சூழ்ந்திருந்தால், துன்பமும் உங்களிடம் நெருங்க முடியாமல் துன்பப்படும்.

    படிப்பில் தோல்வி, வியாபாரத்தில் தோல்வி, அன்பில் தோல்வி என உலகத்தில் தோல்விகளே உங்கள் வாழ்வை சிறைப்பிடிக்கலாம். மனதை தொய்வடையச் செய்யலாம்.

    அதற்காக நீங்கள் வீழ்ந்து விடக்கூடாது. அதை எதிர்த்து போராடவும், நம் வாழ்வை தோல்விகளற்று சிறப்பானதொரு வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்ளவும், என்ன வழியோ அதை அடைய முயற்சிக்க வேண்டும். அதை தேடி நேரத்தைக் கழிக்காமல், அதை நாமே அமைத்துக் கொள்ள வேண்டும்.

    பலர் உங்களைப் பார்த்து ஏளனமாக சிரிக்கலாம். ஆயிரம் கொடுஞ்சொற்களால் உங்கள் மனதை கொஞ்சம் கொஞ்சமாக சாகடிக்க முயற்சிக்கலாம்.           ஏளனமாக சிரிப்பவர்களைப் பார்த்து, அவர்கள் சிரிப்பார்களே என்று எண்ணி, மேடை ஏறாமல் இருந்திருக்கலாம், விவேகானந்தர். ஆனால், அந்த நேரத்தில் ஏளனமாக சிரித்தவர்களை தன் வார்த்தைகளில் ஈர்த்தார் என்றால், அங்கு அவர் மனதில் தெளிவு பெற்றிருந்ததே மூலக்காரணம்.

    நம் மனது தெளிவு பெற,

    உங்களைப் பற்றி

    முழுமையாக சிந்தியுங்கள்.

    நீங்கள் முதலில் உங்களை

    அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.

    எதிர்மறை எண்ணங்களை நீக்குங்கள்.

    உலகத்தை முழுமையாக புரிந்து

    கொள்ளுங்கள்.

    பரந்த மனப்பான்மையை வளர்த்துக்

    கொள்ளுங்கள்.

    பிறர் மீது அன்பு கொள்ள வேண்டும்.

    பிறரின் நலனில் எவ்வித

    பிரதிபலனுமின்றி

    உதவி செய்ய வேண்டும்

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    “ஏளனமாக பேசுபவர்களின்

    வார்த்தைகளைக் கண்டு நொந்துவிடாதே!

    அமைதியாய் இரு.

    நீ வானுயரும் அளவு

    புகழை அடையும்போது,

    அவர்களே வருந்துவார்கள்

    அவர்களை நினைத்து”

    எனவே, இவைகளைக் கண்டு துவண்டு விடாமல் இருக்கவும், துன்பங்கள் நம்மை தொடராது இருக்கவும் நம் மனம் தெளிவு பெற்றிருக்க வேண்டும்.

    சரி, அப்படியென்றால், மனம் தெளிவு பெற நாம் என்ன செய்ய வேண்டும்? என்னும் கேள்வி நிச்சயம் நம்முள் எழும்.

    நம் மனது தெளிவு பெற, உங்களைப் பற்றி முழுமையாக சிந்தியுங்கள். நீங்கள் முதலில் உங்களை அடையாளம் கண்டுகொள்ளுங்கள். எதிர்மறை எண்ணங்களை நீக்குங்கள். உலகத்தை முழுமையாக புரிந்து கொள்ளுங்கள். பரந்த மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். பிறர் மீது அன்பு கொள்ள வேண்டும். பிறரின் நலனில் எவ்வித பிரதிபலனுமின்றி உதவி செய்ய வேண்டும்.

    மனிதாபிமானம் கொள்ள வேண்டும். பேராசை, பொறாமையை மனதிலிருந்து தூக்கி எறிந்து நல்லவைகளையே நினைக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பிறர் மனம் சிறிதும் காயப்படாமல் நடந்து கொள்ள வேண்டும்.

    விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். பெரியோர்களுக்கு மரியாதை தருவதை எந்த சூழ்நிலையிலும் குறைத்துவிடக்கூடாது. “நான்” என்ற அகத்தையை முழுமையாக அகற்றிவிட வேண்டும்.

    இவை போன்ற இன்னும் பல நேர்மறை எண்ணங்கள் நிச்சயம் நம் மனதை தெளிவுபடுத்தும். உங்கள் மனம் சில சமயம் சஞ்சலம் அடையலாம். அந்த சமயத்தில் நீங்கள் விரும்பும் நூல்களை படிக்கலாம். இசையை ரசியுங்கள்! இயற்கையை சுவாசியுங்கள்! தனிமையில் அமர்ந்து உங்களுடைய நிறை, குறைகளை அறியுங்கள். நிறைகளை வளர்க்கப் பாடுபடுங்கள். குறைகளைக் குறைக்க தீவிர முயற்சி எடுங்கள். நிச்சயம் ஒவ்வொரு தனித்திறமைகள் இருக்கும். மறைத்து வைத்துள்ள திறமைகளை வெளிக்கொண்டு வாருங்கள்.

    உங்களுள் இருக்கும் தெய்வீகத்தை உணர்ந்து கொள்ளுங்கள். கடவுள் அனைவரும் ஒருவரே. அந்த தெய்வீகத்தை அடையுங்கள். சிறிது சிறிதாக உங்கள் மனம் தெளிவு பெறும். உங்களுள் தன்னம்பிக்கை என்னும் சக்தி பிறக்கும். கண்டிப்பாக ஒருநாள் மனம் முழுமையாக தெளிவு பெறும்.

    அன்று நீங்கள் தன்னம்பிக்கையோடு எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும், வெற்றிகளாய் உங்களை வந்து சேரும்.

    மனதை தெளிவுபடுத்துங்கள்!

    வாழ்வை வளப்படுத்துங்கள்!!

    ஆசிரியர்கள்

    சிறந்த ஆசிரியர் என்பவர்கள் செயலுக்கும், சொல்லுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பவர்களாக இருந்து மனிதனை முதன்மைப்படுத்துபவர்கள்

     

     

     

     

     

     

    மாறுவேஷம்

    மான நிலையத்தில் குறுக்கும் மறுக்குமாய் தலைதெரிக்க ஓடுவது அவ்வளவாக ரசிக்கவில்லைதான், என்ன செய்வது? இது இரண்டாவது முறை, இப்படி நடக்கின்றது. ஹேம்பர்க் நகரத்தில் இது முதலில் ஏற்பட்டது. அந்த நகரில் ஒரு சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நமது குழு சென்ற பணி சுற்றுலாவிற்காக அல்ல, இருந்த போதிலும் பயண ஒருங்கிணைப்பு நிறுவனம் ஒரு குழுவாக எல்லோருக்கும் சேர்ந்து பேருந்து ஒன்றை வாடகைக்கு எடுத்திருந்தது. அதில் நிறைய மொஹா நகரைச் சேர்ந்த பஞ்சாபிய தொழில் முனைவோர் இருந்தார்கள். அவர்களுக்கு ஊர்திரும்பும் விமானம் அடுத்த நாள் தான்.

    நண்பர்களின் பஞ்சாபி மொழியைப் பற்றியும் சொல்லியாக வேண்டும்.  உற்சாகம் ஒரு மொழியின் பெயரைச் சொல்லும்பொழுதே பீறிட்டுக் கிளம்ப வேண்டும் என்று ஒரு நிபந்தனை வைத்தால்? எனக்குத் தெரிந்து பஞ்சாபி மொழி சந்தோசமாக முதலாவதாக தகுதிபெற்று ஓடி வரும் ஓயி ஓய்…… ஹா….. ஹா பல்லே பல்லே….. வாவ்….வா, வா….என சரசரவென  சந்தோஷ மத்தாப்பைக் கொளுத்தி உற்சாக உணர்வை உயர்த்திக்கொண்டே இருந்தனர்.

    சந்தோஷமாக பாடிக்கொண்டும் ஆடல் பாடலாக நண்பர்கள் இருக்க, நாம் பதட்டமும், கவலையுமாக முகவரை கவனித்துக்கொண்டு இருந்தோம். இரவு 9.25க்கு விமானம் கிளம்புகிறது. இந்தியாவில் பன்னாட்டு விமான நிலையத்திற்கு குறைந்தபட்சம் மூன்று மணி நேரத்திற்கு முன்னதாகவே வந்து கடவுச்சீட்டு, சுங்க பரிசோதனை எல்லாம் முடிக்க வேண்டுமென்று சொல்வார்கள். முகவரை நெருக்கு நெருக்கென்று பேசி அன்பாக எவ்வளவு நேரமோ? கழித்து வேண்டுகோளுக்கு செவிசாய்க்க வைக்க முடிந்தது.

    அதன்பிறகு 6.45 மணிக்கு ஜெர்மானிய வழிகாட்டி (ஐரின் அம்மா அற்புதமாக பிஸ்மார்க் பற்றியும் இசைமேதையை குறித்தும் (பிராஹ்ம் (Brahm) லல்லபி பாடிக்காட்டினார்). தாலாட்டுப்பாடல் பாடி  புகழ்பெற்ற மேதை ஹம்பூர்க் காரராம். ஹம் என்றால் தடுத்து நிறுத்தும் என்றும் பூர்க் என்றால் கோட்டை என்றும் பொருள் படுகின்றதாம்.

    எட்டு மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டுகளில் வைக்கிங் மன்னர்களின் படையெடுப்பை தடுத்து நிறுத்துகின்ற கோட்டை என்று பொருள்படும் வண்ணம் ஹம்பூர்க் நகரை நிர்மானித்திருக்கின்றார்கள். அதன் பழைய நகரைச்சுற்றிலும் பாதுகாப்புக் கோட்டை இருந்திருக்கின்றது. அந்த சுவரை பின்னாளில் இடித்து ஊரை பெரிதாக  மாற்றியிருக்கின்றார்கள். காவல் கோட்டம் புத்தகம் பேசுகின்றமாதிரி மதுரைச் சுற்றுச்சுவர் இடிப்பதைப்போல வரலாற்றோடு உரசிக்கொள்கிற விஷயமாக கோட்டைச் சுவர்கள் இடிபடுவது இருந்திருக்கும். அது ஒரு நகருக்கு மாறுவேஷம் கட்டுவது மாதிரியான அனுபவம்!! இல்லையா?…..

    ஒரு குறிப்பிட்ட மாதிரியான அறிவு, நினைவு, விவரம், தெளிவு, தகவல், உள்ளவர்கள் என்று சிலரை நாம் நினைத்துக்கொள்வோம் என்றால்……., அவர்களுக்கு அந்த தகவல் தெரியவில்லை அல்லது அந்த நினைவுப்புலம் பின்னணியில் இல்லை என்று தெரிய வருகையில் அதை எப்படி ஏற்றுக்கொள்கின்றோம்; சம்பந்தப்பட்டவர்கள் இருவருமே- என்பது முக்கியம்.  அப்படி இல்லாவிட்டால் மாறுவேடம் இட்டவர்களாக தெரியும் வாய்ப்பு உள்ளது.  இதை ஐரின் அவர்களின் உணர்ச்சிப் பிரதிபலிப்பில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது.

    அதனை பார்க்கும் வாய்ப்பு நாங்கள் அனைவரும் சேர்ந்து பாடல் பாடுக என்று கேட்டபோது புரிந்தது. எங்களுக்கு ஆழ்ஹட்ம் பற்றி தெரியவில்லை என்பது அவர்களுக்கு நம்பமுடியாத மாதிரி இருந்தது. முதலில் தவிர்த்து வெட்கப்பட்டாலும் பின்னர் பிராஹ்மின் தாலாட்டினை ஹம்மிங் செய்து காட்டினார்…….  நாடு திரும்பிய பிறகு You tube சென்று பார்த்த பொழுது அந்தப் பாடலும் கிடைத்தது.  மூன்று ‘பீக்கள்’ (3’B’ள்) என்று இசையின் உலகில் போற்றப்படும் மூவரில் ஒருவராக பிராஹ்ம் இருப்பது தெரியவந்தது. என்ன மாறுவேடம் அவர் இட்டுக்கொண்டார்?! என்று கேட்பதா? அல்லது மறையும் வேடமிட்டுக் கொண்டார் என்று நினைப்பதா?

    இப்படியெல்லாம் எண்ணங்களுடன் ஒரு வழியாக 9.15 விமானத்திற்கு ஏழு மணிக்கு விமான நிலையம் நோக்கி கிளம்பலாம் என முடிவானது……. இனி விடுதிக்கு சென்று திரும்ப வேறு வாகனத்தில் போக நேரம் இல்லை என்று பஸ்ஸையே விமானத்திற்கு  எடுத்துச் செல்வது என தீர்மானித்தோம். நான்கு பேருக்கு எழுபது இருக்கை கொண்ட வாகனம்!? பஞ்சாப் நண்பர்களுக்கு எப்படி இருக்கும். விரும்பாததால் அவர்களை ‘ஷாப்பிங்’  பகுதியில் விட்டுச் செல்வது என முடிவானது. அங்கு சென்று விட்டு பிறகு ஒருவழியாக ஏழு மணிக்கு விமான நிலையம் நோக்கிச் சென்றோம். ஒன்றரை மணிநேரம் மட்டுமே முன்னதாக விமான நேரத்திற்கு செல்லமுடியும் என்ற நிலை…… இந்நிலையில்  ஒரு போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டோம்.  வாகனம் மெதுவாகச் சென்று, அதை கடந்தது. ஒருவழியாக தப்பித்தோம் என நினைத்தோம். அதுதான் தவறு. எங்கள் ஓட்டுனர் புது ஆளாக இருந்ததால் சரக்கு ஏற்றிச் செல்லும் (Cargo) பகுதியை நோக்கி  பேருந்து சென்றது. வேகமாக சென்று திரும்பி சுற்றி சுற்றி வந்தால்…… எப்படி இருக்கும் என அனுமானிக்க முடியுமல்லாவா……. விமான நிலையமே மாறுவேடமிட்டதுபோல ஆனது.

    அதற்குப் பிறகு ஒரு வழியாக வாசலைக் கண்டுபிடித்தால்…. எங்களில் ஒருவர் நான்கு பெரிய சூட்கேஸ்கள் மற்றும் பைகளுடன் வந்திருந்தார்….. நமது ட்ராவல் ஏஜென்ட்டும் ஒரு பெட்டியை எடுத்துக்கொண்டு ஓடிவர வேண்டியிருந்தது…… ஓட்டமும் நடையுமாக சேர்ந்தபொழுது ஹாம்பர்க்  விமானநிலைய பணிப்பெண் புன்னகையோடு வரவேற்றார்… அப்பொழுதுதான் புன்னகையின் மதிப்பு புரியவந்தது. அரைமணி முன்பு பாதுகாப்பு சோதனையெல்லாம் முடிந்து விமானத்திற்குள் கால் வைத்தோம். வருகின்றபொழுது பயணச்சீட்டே ஏதோ மேக்காலூருக்கு…பஸ் டிக்கெட் எடுப்பதுபோல எடுத்து வந்தோம்…. ஏராளமான பொருட்செலவு வீணாகிப் போகுமே….. அடுத்து தங்குவது…எங்கே? என்றெல்லாம் யோசித்தபொழுது தோன்றிய ரூபங்கள் அனைத்தும் மாறுவேடங்களே! நேர்மறையான எண்ணங்கள் இருந்தால் மாறுவேடங்கள் மறைகின்றன! என்பதே இவ்வனுபவம் மூலம் தெளிவாகத் தெரிகின்றது.

    கற்களை சிற்பங்களாக்கி

    உலகத்தின் அழகு பதுமைகளாக

    உலா வர ஆசீர்வதித்த

    சிற்பிகளை பூசிக்க

    சிட்டுக்குருவிகளுக்கு

    ஒரு இனிமையான நாள்

     

     

     

     

     

     

     

    கனவுக்குச் செயல் கொடுப்போம்

    இன்றைய இளைஞர்களுக்கு பொறுப்புணர்வே இல்லை என்ற கருத்து பரவலாக உண்டு. எப்போதும் பேஸ்புக், ஆர்குட் என்று சமூக வலைத்தளங்களில் தனது பொன்னான நேரங்களைச் செலவளித்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை மாற்றும் விதமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது ஒரு அமைப்பு. மதுரையில் கல்லூரி மாணவர் திரு. பி. சபரி சங்கர் மற்றும் நண்பர்கள் சிலர் ஒன்றிணைந்து ‘கனவுக்குச் செயல் கொடுப்போம்’ என்ற அமைப்பை நிறுவி, கிராமப்புற பகுதிகளை மேம்படுத்தி அவற்றின் வளர்ச்சிக்கு உதவுவதுடன் ஏழைக் குழந்தைகளின் கல்விக்கும் உதவி வருகிறது. இந்த அமைப்பில் 200க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் உறுப்பினர்களாகி சேவை செய்து வருகிறார்கள். ‘கனவுக்குச் செயல் கொடுப்போம்’ அமைப்பை நிறுவிய சபரி சங்கரிடம் அதன் நோக்கம் மற்றும் இலக்கைப் பற்றிக் கேட்டதற்கு,

    “எங்களின் நோக்கம், நமது முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்களின் கனவான இந்தியா 2020ல் வல்லரசாக வேண்டும் என்பதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பது தான். எங்களின் ‘கனவுக்கு செயல் கொடுப்போம்’ என்பது கூட அவரின் ‘இந்தியா 2020 தொலைநோக்கு’ என்பதில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது தான்.

    அப்துல் கலாம் அவர்களின் கனவுப்படி கிராமப்புறங்கள் வளர்ச்சியடைந்தால் தான் இந்தியா வல்லரசு என்பது சாத்தியம் என்பதை புரிந்து கொண்டு எங்கள் அமைப்பு கிராமங்களின் வளர்ச்சிக்குத் தேவையான பணிகளைச் செய்கிறது. முக்கியமாக கிராமத்தில் உள்ள ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு முன்னுரிமை அளிக்கிறோம். குழந்தைகளின் கல்வி மற்றும் கிராம வளர்ச்சி என்பது தான் எங்கள் அமைப்பின் நோக்கமாக வைத்துள்ளோம்” என்றார். சரி எப்படி இதை செய்ய முடிகிறது என்றபோது,

    “இந்த சேவைக்கு நாங்கள் பயன்படுத்துவது பல சமூக மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் சமூக வலைத்தளமான பேஸ்புக் மற்றும் ஆர்குட் போன்றவைகளையே. கல்வி உதவி கேட்டுவரும் உண்மை விண்ணப்பங்களை இத்தகைய சமூக வலைத்தளங்களில் போஸ்ட் செய்து அதன் மூலம் கிடைக்கும் உதவியைப் பெற்று உதவி கேட்பவர்களுக்குச் செய்து கொடுக்கிறோம். சிலசமயம் மற்ற தொண்டு நிறுவனத்திற்குப் பரிந்துரை செய்தும் உதவி பெற்றுத் தருகிறோம். குறிப்பாக நாங்கள் எந்தவித அரசின் நிதியையும், வெளிநாட்டு நிதியையும் பெறாமல் முழுக்க முழுக்க கல்லூரி நண்பர்கள் மற்றும் பணியில் இருக்கும் நண்பர்கள் தரும் சிறு நிதியைக் கொண்டு இத்தகைய சமூகப் பணிகளைச் செய்து வருகிறோம்” என்றவரிடம்,

    “இதுவரை எத்தனை நபர்களுக்கு உதவியிருக்கிறீர்கள்” என்று கேட்டதற்கு, இந்த அமைப்பு பிப்ரவரி 2012ல் பதிவு செய்யப்பட்டு இயங்க ஆரம்பித்த இந்த இரண்டு ஆண்டுகளில் 9 கல்லூரி மாணவர்கள், 21 பள்ளி மாணவர்கள் உட்பட 30க்கும் மேற்பட்டவர்களின் கல்விக்கு நேரடியாக உதவி பெற்றுத் தந்திருக்கிறோம். குறிப்பாக சென்னை லயன்ஸ் கிளப் மற்றும் பேஸ்புக் நண்பர்களின் பங்களிப்பு அதில் அதிகம் இருக்கிறது. உதவி பெற்ற இவர்களில் பெரும்பான்மையானவர்கள் இன்ஜினியரிங் மற்றும் மருத்துவக் கல்வியை கற்று வருகிறார்கள் என்பது கூடுதல் மகிழ்வைத் தருகிறது

    இதைத் தவிர ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும், கல்லூரி விடுமுறை நாட்களிலும் அனாதை இல்லங்களுக்குச் சென்று உதவிகளும், டியூசனும் எடுக்கிறோம். அங்குள்ள பெண்களுக்கு சுயமுன்னேற்றப் பயிற்சியும், இலவச கணிப்பொறி பயிற்சியும் அளித்து வருகிறோம்.

    இத்தகைய பயிற்சியளிப்பதால் அவர்களின் வாழ்வாதாரத்திற்கான வருவாயை அவர்களே ஏற்படுத்திக் கொள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது” என்றவரிடம் எதிர்காலத் திட்டம் பற்றி கேட்டதற்கு, “இன்னும் 10 ஆண்டுகளில் எங்களின் இலக்கை அடைய வேண்டும் என்பதற்கான திட்டத்தை வகுத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். குறிப்பாக, ஹச்.ஐ.வி. எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட பெற்றோரின் குழந்தைகளுக்கும் கல்வியைக் கொடுக்க வேண்டும் என்பதை நோக்கி இருக்கும்” என்றார்.

    ‘கனவுக்குச் செயல் கொடுப்போம்’ என்பதற்கேற்ப செயல் கொடுத்துக் கொண்டிருக்கும் இவர்களின் சமுதாயப் பணி தொடர தன்னம்பிக்கை வாழ்த்துகிறது.

    கற்றுக் கொடுங்கள்…..

    எனக்குத் தெரிந்த என் நண்பரின் மகன் படு சுட்டி, அவன் அப்பாவை விட அவனுக்கு கொஞ்சம் தைரியம் அதிகம். School-க்கு ஆட்டோவில் போகும் போது இப்போதே புட்போர்ட் அடிப்பான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

    “யப்பா உள்ளே போய் ஒட்காருப்பா, விழுந்துரப்போற..’ என்று நண்பர் சொன்னால், “நீ முதல்ல உள்ளே போப்பா..எதுதாப்ல வண்டியில வர்றவன் இடிச்சுட்டு போய்ற போறான்.” என்று சொல்லக் கூடிய வாய் துடுக்கு.

    தன் உடை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும் என்கின்ற கம்பீர எண்ணம்.

    School விட்டு வந்தவுடன், தன் ஷூ-வை, புத்தகப்பையை, சரியான இடத்தில் வைக்கும் ஒழுங்கு. இப்படி எத்தனையோ விஷயங்களில் அவன் என் மனதில் ஆக்ரமித்திருக்கிறான்.

    வெட்கம், தாழ்வு மனப்பான்மை, பயம், இவை போன்ற எதிர்மறை பழக்கங்களை அவனிடம் பார்க்கவே முடியாது. சின்ன வயசுதான். ஆனால் அவனுக்குள் ஒரு விவரம் தெரிந்தவருக்குள் இருக்கும் அசாதாரமாண தன்னம்பிக்கை எப்படி வந்தது..? அவன் வளர்க்கப்பட்ட விதம்தான் காரணம்.

    அவன் அம்மா, அவனுக்கு ஊட்டிய தைரிய பண்புகள்தான் காரணம். குழந்தைகள் செய்யக்கூடாது என்று நாம் நினைக்கும் வேலையைக்கூட, “உனக்கு எது தேவையோ, அதை நீயேதான் செய்து கொள்ள வேண்டும்” என்று அவனை உறுதியுள்ளவனாய் மாற்றியிருக்கிறார்.

    குழந்தை பெரிய ஆளாகி, இந்த ஊருலகத்தை யெல்லாம் ஆள வேண்டும் என்று நீங்கள் நினைப்பது நிறைவேற வேண்டுமென்றால், உங்கள் குழந்தைக்கு நல்ல பண்புகளை ஊட்டும் பயிற்சிக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்.

    தன் சட்டையில் பட்டன் பிய்ந்து இருந்தால் கூட, அதை அவன்தான் தைத்துக் கொள்ள வேண்டும். “ஐய்யோ..ஊசி குத்திடுச்சுனா..?” என்று நீங்கள் நினைப்பது போல் அவன் அம்மா நினைப்பதில்லை.

    வாகன நெரிசல் இருக்கிற, சாலைகளைக் கடந்து போய், பொருட்களை வாங்கிவர அவனை அனுமதித்திருக்கிறார்கள்.

    முழுக்க முழுக்க, தைரியம் என்கிற உற்சாக மருந்தைத்தான், அவனுக்கு அந்த தாயும் சரி, குடும்பத்திலுள்ளவர்களும் கொடுத்திருக்கிறார்கள். அதனுடைய reaction தான், அந்த குழந்தையின் தன்னம்பிக்கை. Smart boy  என்று நாம் சொல்வோமே.! அதன் மொத்த உருவம் அந்த குழந்தைதான்.

    தனக்கிருக்கும் திறமைகளை வெளிக்காட்ட அவன் ஒரு போதும் தயங்கியதில்லை. பாடச் சொன்னால், பல பேர் கூடியிருக்கிற இடமானாலும் பாடுவான், ஆடுவான்.

    ஆனால் தனக்கு இதெல்லாம் தெரியும் என்று தன்முனைப்பு அல்லது முந்திரிக் கொட்டை மாதிரி அலட்டிக்கொள்ள மாட்டான்.

    இது எதைக் காட்டுகிறது தெரியுமா? அவனுக்குள் எந்தவித தாழ்வு மனப்பான்மையோ, வெட்கமோ, பயமோ, கொஞ்சம் கூட அவனிடத்தில் தலைதூக்கவில்லை என்பதுதான்.

    ஆம் நண்பர்களே…தைரியம்தான் தன்னம்பிக்கையின் ஆணி வேர். இது ஆழமாக வேறூன்றி விட்டால், எந்த எதிர்மறை சிந்தனைகளும், உள்ளுக்குள் ஊடுருவாது.

    நம்மில் எத்தனைபேர், அப்படி குழந்தைகளை வளர்க்கிறோம்..? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

    பாட்டி பேய் கதையாய் சொல்லி பயமுறுத்துவாள். தாத்தா மீசையைக் காட்டி காட்டியே பயமுறுத்துவார். அப்பா நேரடியாகவே மிரட்டுவார். அம்மா பூச்சாண்டியை  நினைவுபடுத்தாமல் சோறூட்ட மாட்டாள். போதாக்குறைக்கு பள்ளிகளும் நம் குழந்தைகளை அநியாயத்திற்கு பயமுறுத்துகின்றன. படிக்கின்ற ஆர்வத்தை நம் குழந்தைகளிடம் குறைத்ததே இந்த பயமுறுத்தல்தான்.

    நன்றாக யோசித்துப் பாருங்கள். பள்ளிக்கு போக மறுக்கும் குழந்தையை, அப்பா மாட்டை விரட்டுவதுபோல் ஒரு மரத்திலிருந்து குச்சியை உடைத்து, போறியா? இல்லையா? என்று மிரட்டி மிரட்டியே வகுப்பறை வரை விரட்டிச் செல்வார். அதோடு அந்த மிரட்டலும், பயமுறுத்தலும் நின்று விடாது. “நீங்க விடுங்க சார், இனி நான் பாத்துக்கிறேன்..” என்று தன் பங்குக்கு அந்த வகுப்பு வாத்தியாரும் சேர்ந்துக் கொள்ளுவார். தினமும் இதே வேளையாக இருந்தால் அந்த குழந்தைக்கு பள்ளி செல்லும் ஆர்வம் எப்படி வரும்.? தன்னம்பிக்கை எப்படி வளரும்.?

    நண்பர்களே..நம் குழந்தைகளின் ஒவ்வொரு பண்பிற்கும் நாமும், நம் குடும்பத்தாரும் தான் மிக முக்கிய காரணமாக இருக்கிறோம். நம் குழந்தையின் ஒவ்வொரு பார்வையும் நம்மீது மட்டும்தான் அதிகமாக பதிகிறது. நாம் எதை சொல்கிறோமோ..அதையே திருப்பி சொல்கிறது. கூட்டாஞ்சோறு விளையாட்டு விளையாடும் போது கூட, தன் பெற்றோர் எப்படி சண்டை போடுவார்களோ அதைப் போலவே திட்டிக் கொண்டும், அடித்துக் கொண்டும் விளையாடுவதை நான் பார்த்திருக்கிறேன்.

    அப்படியானால் அந்த குழந்தைளின் மனதில் உருவாகும் அனைத்து எண்ணங்களுக்கும் நாம்தான் மிக முக்கிய களமாக இருக்கிறோம். நாம் சொல்லிக் கொடுக்கும் விசயங்களைத்தான் அவர்கள், வேத வாக்காக நினைக்கிறார்கள். பயமுறுத்தியே வளர்க்கும் குழந்தை, கோழையாகி, தாழ்வு மனப்பான்மை நிறைந்து, மற்றவரர்கள் துணையில்லாமல் எந்த வேலையையும் செய்யத் துணிவில்லாமல், கடைசியில் சோர்ந்து போகிறது.

    கூட்டத்தை பார்த்தால் சில குழந்தைகளுக்கு வெட்கம் வந்து, வாய் பேசக் கூட கூசி நிற்கும் பரிதாப ஊமைக் குழந்தைகளை நான் நிறைய பார்த்திருக்கிறேன். இவர்கள் இப்படியே வளர்ந்தால் எதிர்கால போட்டிகள் நிறைந்த உலகத்தில் சாதிக்கப் போவதுதான் என்ன..?

    ஆகவே நாம் நமக்கென வந்துவிட்ட விழுதுகளை, சரியான உரமிட்டு வளர்ப்பது நம் முக்கியக் கடமை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். குழந்தை பெரிய ஆளாகி, இந்த ஊருலகத்தையெல்லாம் ஆள வேண்டும் என்று நீங்கள் நினைப்பது நிறைவேற வேண்டுமென்றால், உங்கள் குழந்தைக்கு நல்ல பண்புகளை ஊட்டும் பயிற்சிக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். தன்னம்பிக்கையின் முதல் எதிரியான பயத்தை கொன்றுபோட, சூட்சுமங்களைக் கற்றுக் கொடுங்கள்.

    இந்தக் காலத்தில் வாழ்க்கையின் வெற்றி என்பது சேர்த்து வைக்கும் செல்வத்தையும், சொத்துகளையும் வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. நிறையச் சம்பாதிப்பவன், நிறையச் சொத்து சேர்த்து வைத்திருப்பவன் வெற்றியாளன் என்றும் அதிர்ஷ்டசாலி என்றும் கருதப்படுகிறான். அதனாலேயே வாழ்க்கையின் ஓட்டம் முழுவதுமே பணம் சேர்ப்பதற்கான ஓட்டமாகி விடுகிறது.

    நமக்கு வேண்டிய அளவு இருந்தாலும், நம் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவு செல்வம் இருந்தாலும் அதைவிட அதிக அளவு சம்பாதிப்பவனையும், சேர்த்து வைத்திருப்பவனையும் பார்த்தால் நம் திருப்தி காணாமல் போகிறது. நம்மை விட அதிகமாக உலகம்  அவனை  மதித்தால் வாழ்க்கை ஓட்டத்தில் நாம் பின் தங்கி விட்ட பிரமை நமக்கு ஏற்பட்டு விடுகிறது. உடனே நம் வேகத்தை இரட்டிப்பாக்கி நாமும் ஓடி அவனை முந்தப் பார்க்கிறோம். அப்படி முந்தி விடும் போதாவது திருப்தியுடன் நிற்கிறோமா என்றால் அதுவும் இல்லை. அந்த நேரத்தில் நம்மை முந்திச் சென்று கொண்டிருக்கும் இன்னொருவன் நம் கண்களில் படுகிறான். வேகத்தை இன்னும் அதிகப்படுத்துகிறோம். இந்தப் பைத்தியக்கார ஓட்டம் கடைசி வரை நிற்பதேயில்லை.

    குழந்தையை நேரடியாகப் பார்த்துக் கொள்ள நேரமில்லை. அதனுடன் செலவழிக்கும் நேரம் மிகக்குறைவு. அதனால் அந்தக் குழந்தை வளரும் போது அதை ரசிக்கவோ, முழுமையாகப் புரிந்து கொள்ளவோ நேரமில்லை.

    பசிக்கிற அளவுக்கு சாப்பிடுவது இயற்கை. அது தேவையும் கூட. ஆனால் அதிகமாக சாப்பிடுகிறவனைத் தான் எல்லோரும் பாராட்டுகிறார்கள் என்ற ஒரு நிலை இருந்து, அதற்காக அசுரப்பசியை ஏற்படுத்திக் கொண்டு, அதைத் தீர்க்க சாப்பிட்டுக் கொண்டே போனால் அஜீரணம், வாந்தி முதலான உபாதைகள் ஏற்படுவது மட்டுமல்ல, ஒரு வடிகட்டிய முட்டாளாக நடந்து கொள்கிறோம் என்பதும் நமக்கும் புரியலாம். ஆனால் இதையே நாம் வேறுபல விஷயங்களில் செய்கிறோம் என்றாலும் அந்த முட்டாள் தனம் நமக்குப் புரிவதில்லை.

    செல்வம் மிக முக்கியம் தானே, நம் வாழ்விற்கு ஆதாரம் தானே, அப்படி இருக்கையில் அதிகமாக அதைத் தேடி அடைவது தானே வெற்றி, அது தானே புத்திசாலித்தனம் என்ற கேள்விகள் நம் மனதில் எழலாம். அவை எல்லாம் நியாயமானதாகவும் நமக்குத் தோன்றலாம். செல்வம் தேடுவது தவறல்ல. அதை அதிகமாகத் தேடி அடைவதும் தவறல்ல. தவறு எங்கே தெரியுமா நிகழ்கிறது அதற்கு நம் வாழ்க்கையில் நாம் தரும் விலையில் தான்.

    கண்களை விற்று  சித்திரம் வாங்காதீர்கள்

     

     

    எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தின் தம்பதியரை உதாரணமாகப் பார்ப்போம். அவர்களில் ஒருவர் அரசுப்பணியிலும் மற்றொருவர் சொந்தத்தொழிலும் செய்பவர் கைநிறையச் சம்பாதிக்கிறார்கள். காலையில் இருந்து இரவு வரை வேலை பார்க்கிறார்கள். ஒரு வீடு கட்டியாகிவிட்டது. இரண்டு கார்கள் வாங்கியாகி விட்டது. விடுமுறை நாட்களில் குழந்தையைக் கூட்டிக் கொண்டு வெளியே எங்காவது பிக்னிக் போகிறார்கள். இரவு திரும்புகிறார்கள். விடுமுறை முடிந்து மறுநாள் பழையபடி ஓட்டம் ஆரம்பிக்கின்றது. அடுத்த விடுமுறை வரை இதே ஓட்டம் தொடர்கிறது.

    இருவரும் இப்படி கடுமையாக உழைப்பதால் தான் மிக நல்ல பள்ளியில் அதிகமாக ஃபீஸ் கட்டி குழந்தையைப் படிக்க வைக்க முடிகிறது. அவ்வப்போது பெரிய ஓட்டல்களுக்குச் சென்று சாப்பிட முடிகிறது. விலை உயர்ந்த ஆடைகளையும், பொருள்களையும் வாங்க முடிகிறது. வருடத்திற்கு ஒரு முறை காசைப் பற்றிக் கவலைப்படாமல் டூர் போக முடிகிறது. இதெல்லாம் அதில் அனுகூலங்கள். சரி இதில் எதையெல்லாம் விலையாகத் தருகிறார்கள் என்பதையும் பார்ப்போம்.

    பணம் சம்பாதிக்கும் ஓட்டத்தில் தரும் முதல் பலி ஆரோக்கியம். உடற்பயிற்சி செய்யவோ, நடக்கவோ நேரமில்லை. அதனால் படிப்படியாக ஆரோக்கியம் குறைந்து கொண்டே வருகிறது.

    குழந்தையை நேரடியாகப் பார்த்துக் கொள்ள நேரமில்லை. அதனுடன் செலவழிக்கும் நேரம் மிகக்குறைவு. அதனால் அந்தக் குழந்தை வளரும் போது அதை ரசிக்கவோ, முழுமையாகப் புரிந்து கொள்ளவோ நேரமில்லை. மாலை நான்கு மணிக்கு வீடு வந்து சேரும் குழந்தை டிவி பார்த்துக் கொண்டோ, வீடியோ பார்த்துக் கொண்டோ பொழுதைப் போக்கும். இல்லா விட்டால் டியூஷன் போகும். சாவகாசமாக அதனுடன் இருக்கவோ, நெருக்கமாகப் பழகவோ, புரிந்து கொள்ளவோ நேரமில்லை. குழந்தை வளர வளர அதனுடன் இருக்கும் இடைவெளியும் அதிகரிக்கிறது.

    வாழ்க்கையில் பணம், உடல் ஆரோக்கியம், மன நலம் மூன்றுமே சம அளவில் முக்கியமானவை.
    பணம் சம்பாதிக்கும் ஓட்டத்தில் தரும் முதல் பலி ஆரோக்கியம். உடற்பயிற்சி செய்யவோ, நடக்கவோ நேரமில்லை. அதனால் படிப்படியாக ஆரோக்கியம் குறைந்து கொண்டே வருகிறது.

     

     

     

     

     

     

    உறவுகள், வேலை சம்பந்தப்படாத நண்பர்கள் ஆகியோருடன் நெருங்கி இருக்கும் சந்தர்ப்பங்கள் குறைவு. உண்மையான எத்தனையோ திறமைகள் வேறும் இருக்கக்கூடும். அந்தத் திறமைகளில் ஈடுபடவோ, வளர்த்துக் கொள்ளவோ, அதில் நிறைவு காணவோ நேரமில்லை.

    ஒரு நாள் உடல் ஆரோக்கியம் முழுவதுமாகக் கெட்டு டாக்டர்களிடம் அடிக்கடி ஓட நேர்கிறது. மருந்திற்கும், மருத்துவத்திற்கும் நிறைய செலவு செய்ய வேண்டி வருகிறது. பிள்ளை நெருக்கமாக இருப்பதில்லை. நெருங்கிய உறவுகளும் தூரப்பட்டு விடுகிறார்கள். டென்ஷன், டென்ஷன் என்று அது நாள் வரை ஓடிய ஓட்டத்தில் மனதை அமைதிப்படுத்திக் கொள்ள எதுவுமே செய்ய நேரமிருக்காததால் மனநிலையிலும் நிறைய பாதிப்புகள் இருக்கின்றன.

    மொத்தத்தில் பணமும் பொருளாதார வசதிகளும் இருக்கின்றன. ஆனால்  ஆரோக்கியமும் இல்லை, நிம்மதியும் இல்லை, நேசிக்கும் ஆட்களும் இல்லை. இப்போதும் வெளியே இருந்து பார்ப்பவர்கள் பொருளாதார நிலைமையை மட்டும் பார்த்து இவர்களை வெற்றியாளர்கள் என்றே சொல்லலாம். இது தான் வெற்றியா? உயிர்வாழ எல்லாம் இருக்கிறது. ஆனால் நல்ல உணர்வுகளுடன் வாழ ஏதாவது இங்கே இருக்கிறதா? என்ன விலை கொடுத்து இவர்கள் எதைப் பெற்றிருக்கிறார்கள்?

    இந்த சராசரி உதாரணத்தில் பணமும், தனிமையும் இருப்பதால் கெட்டுப் போக முடிந்த குழந்தைகளைச் சொல்லவில்லை. தேவையான நேரத்தில் பெற்றோரில் ஒருவர் கூட அருகில் இருக்காததால் குழந்தைகளுக்கு ஏற்படும் மனரீதியான நஷ்டங்களைச் சொல்லவில்லை. அதே போல் வயதான பெற்றோர்கள் தனிமைப்படுத்தப்படுவது பற்றியும் கூட சொல்லவில்லை. அவற்றையெல்லாம் சேர்த்தால் நிலைமை இன்னும் பூதாகரமாகத் தெரியும்.

    ஆரோக்கியத்தை இளமையில் அலட்சியப்படுத்தி ஓயாமல் சம்பாதித்து நாற்பது வயதைத் தாண்டிய பிறகு சம்பாதித்ததை எல்லாம் மருத்துவத்திற்கு செலவு செய்வதுடன் உடல் உபாதைகளையும் தாங்குவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? குழந்தைகளின் பிஞ்சுப்பருவத் தேவைகளை அலட்சியப்படுத்தி விட்டு அந்த நேரத்திலும் சம்பாதித்து அவர்களுக்குக் கடைசியில் சேர்த்து வைப்பதில் பெருமை என்ன இருக்கிறது? அந்த வாழ்க்கையில் வெற்றி என்ன இருக்கிறது? மொமாத்தத்தில் கண்களை விற்று சித்திரம் வாங்கி எதை ரசிக்கப் போகிறோம்?

    வாழ்க்கையில் பணம், உடல் ஆரோக்கியம், மன நலம் மூன்றுமே சம அளவில் முக்கியமானவை. அதில் ஏதாவது ஒன்றை மட்டும் சம்பாதித்து மற்ற இரண்டை அலட்சியம் செய்தால் அது குறைபாடான வாழ்க்கையாகவே இருந்து விடும்; அதில் உண்மையான மகிழ்ச்சியையும் நிறைவையும் நாம் காண முடியாது. ஆனால் இந்தக் காலத்தில் பணம் ஒன்று மட்டுமே வெற்றியையும் மகிழ்ச்சியையும் தந்து விடும் என்று நம்பி ஏமாறுகிற போக்கை நாம் அதிகம் காண முடிகிறது. இது கண்களை விற்று சித்திரம் வாங்கும் போக்குத் தான். எனவே இந்த மூன்றுக்கும் சமமான முக்கியத்துவத்தை உங்கள் இளமையில் இருந்தே தரும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாக நிறைவான வாழ்க்கை வாழ்வீர்கள்!

    யானை கதை

    அன்றைக்கு ஒரு புது சாஃப்ட்வேர் புராஜெக்ட் ஆரம்பமாகிறது. எல்லோரும் பரபரப்பாகச் சுற்றிக்கொண்டிருந்தார்கள். 10 மணிக்கு கஸ்டமர் தரப்பிலிருந்து ஏழு பேர் வந்தார்கள். கூட்டம் ஆரம்பமானது. வந்தவர்களில் சீனியராகத் தோன்றிய ஒருவர் படபடவென்று பேசத் தொடங்கினார். ‘இப்போ எங்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் இருக்குன்னு ஏற்கனவே விளக்கமா சொல்லிட்டோம். அதையெல்லாம் உங்க சாஃப்ட்வேரால் தீர்க்க முடியுமா?’

    அந்த சாஃப்ட்வேர் கம்பெனியின் முக்கிய பிரமுகர் புன்னகையோடு பதில் சென்னார். ‘முடியலாம்’.

    ‘என்னது? முடியலாமா? உங்களால் முடியும்னு நம்பித்தானே லட்சக்கணக்கில் காசைக் கொட்டியிருக்கோம். இப்போ இப்படி சொன்னா என்ன சார் அர்த்தம்?’

    ‘பதற்றப்படாதீங்க சார். கொஞ்சம் நிதானமா பேசுவோம்’ என்றவர், ‘ஒரு ஜென் கதை சொல்றேன், கேட்கறீங்களா?’ என்றார்.

    ‘ஜென் கதையா?’ இது சாஃப்ட்வேர் கம்பெனியா இல்லை சாமியார் மடமா? என்று கிண்டலடித்ததைப் பற்றி கண்டுகொள்ளாமல் தொடர்ந்து பேசினார் சாஃப்ட்வேர் கம்பெனியின் பிரமுகர். ‘இப்போ உங்ககிட்ட நான் ஒரு கயிறைக் கொடுக்கறேன். அதில ஒரு முடிச்சு விழுந்திருக்கு. நீங்க அந்தக் கயிறை அறுக்காம அந்த முடிச்சை அவிழ்க்கணும். உங்களால முடியுமா?’

    ‘நிச்சயமா முடியும்?’ என்றவரிடம் ‘எப்படி அவிழ்ப்பீங்க?’ என்றதற்கு, ‘முடிச்சு எப்படி விழுந்திருக்குன்னு பார்ப்பேன். அதற்கு நேர் எதிர் திசையில கயிற்றை நகர்த்தினா முடிச்சு தானா அவிழ்ந்துடப் போகுது!’ என்றார். ‘ஆக, முடிச்சு இருக்குன்னு தெரிஞ்சா மட்டுமே அதை அவிழ்த்துட முடியாது. அந்த முடிச்சு எதனால விழுந்ததுன்னு கவனிச்சுப் புரிஞ்சுக்கணும். அப்புறம் தான் அதை அவிழ்க்க முடியும். கரெக்டா?’ என்ற சாஃப்ட்வேர் பிரமுகர், ‘சாஃப்ட்வேர் தத்துவமும் இதே தான்!’ என்ற படி ‘உங்க பிரச்சனைகளை மட்டும் சொன்னாப் போதாது நீங்க என்ன செஞ்சதால அந்த பிரச்சனைகள் வந்ததுன்னு நாங்க கேட்டு, பார்த்து, கவனிச்சுப் புரிஞ்சுக்கணும். அப்புறம் எங்க சாஃப்ட்வேர் மூலமா அதற்கு எதிர் திசையில் போய் பிரச்சனைகளைத் தீர்க்க முயற்சி பண்ணனும், எதையும் அவசரப்பட்டுச் செய்யமுடியாது’ என்றார். வந்தவர்களும் நம்பிக்கையுடன் சொன்றார்கள்.

    சில நாட்களுக்குப் பிறகு, சாஃப்ட்வேர் கம்பெனியின் பிரமுகர் தன்னுடைய பணியாளர்களிடம் அந்த புராஜெக்ட் பற்றி கேட்டதற்கு, ‘அது பெரிய பிரச்சனையுள்ளது. அவ்வளவு பிரச்சனைகளையும் தீர்ப்பதென்பது மிகவும் கடினம். எங்களால் சரி செய்ய முடியாது’ என்று பதிலளித்தனர்.            தன்னுடைய பணியாளர்கள் புராஜெக்டில் உள்ள பிரச்சனையை சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்பதை உணர்ந்தவராக, பணியாளர்களுக்கு ஒரு யானைக் கதையைக் கூறினார்.

    ‘அரசர் ஒருவருக்கு திடீரென்று ஒருநாள் தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்த காலத்தில் எடை மேடைகளோ, யானைகளை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசோ கிடையாது என்பதால் எப்படி அளப்பது என்று அமைச்சரிடம் கேட்க அவருக்கும், யாருக்கும் அதற்கான வழியே தெரியவில்லை. அந்த சமயத்தில் அமைச்சரின் 10 வயது மகன், ‘நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்’ என்றான். எல்லோரும் கிண்டலாகச் சிரித்தனர். ஆனாலும் மன்னர் ஒரு வாய்ப்புக் கொடுத்தார்.

    சிறுவன் யானையை நதிக்கு அழைத்துச் சென்று பெரிய படகில் ஏற்றினான். யானை ஏறியதும் தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே தண்ணீர் நனைந்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான்.

    பிறகு, யானையைப் படகில் இருந்து இறக்கிவிட்டு பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த குறியீடு அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும்வரை கற்கள் ஏற்றப்பட்டன.        கற்களை மன்னனிடம் காட்டி, ‘அவற்றின் எடைதான் யானையின் எடை’ என்ற சிறுவனைப் பார்த்து அனைவரும் வியந்தனர்.

    அங்கிருந்தவர்கள் எல்லோரும் யானையை ஒட்டுமொத்த உருவமாகத் தான் பார்த்தார்கள். ஆகவே அவர்களால் தான் எடையைக் கணிக்க முடியும் எனும் நம்பிக்கை வரவில்லை. ஆனால் சிறுவனோ, பல எடைகளின் கூட்டுத்தொகையே யானையின் எடை என்று எண்ணிச் செயல்பட்டான்; எளிதில் விடை கண்டான்.

    அதுபோல தான் எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும், செயலாக இருந்தாலும் அதனைச் சின்னச்சின்ன செயல்களாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். பிறகு அந்த ஒவ்வொரு செயலையும் செவ்வனே செய்து முடிக்க வேண்டும். அப்படிச் செய்தால் ஒட்டுமொத்த திட்டமும் அழகாக நிறைவேறிவிடும் என்று முடித்தவர், தன்னுடைய பணியாளர்களுக்கு அந்த புராஜெக்டின் பிரச்சனைகளை சிறுசிறு பகுதியாகப் பிரித்துக் கொடுத்து அவற்றிற்குத் தீர்வு காணச் செய்தார். எளிமையான தீர்வு கிடைத்தது. அவற்றை ஒட்டுமொத்தமாக ஒருங்கிணைத்து புராஜெக்டை வெற்றியாக்கிக் கொண்டார்.