எனக்குத் தெரிந்த என் நண்பரின் மகன் படு சுட்டி, அவன் அப்பாவை விட அவனுக்கு கொஞ்சம் தைரியம் அதிகம். School-க்கு ஆட்டோவில் போகும் போது இப்போதே புட்போர்ட் அடிப்பான் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
“யப்பா உள்ளே போய் ஒட்காருப்பா, விழுந்துரப்போற..’ என்று நண்பர் சொன்னால், “நீ முதல்ல உள்ளே போப்பா..எதுதாப்ல வண்டியில வர்றவன் இடிச்சுட்டு போய்ற போறான்.” என்று சொல்லக் கூடிய வாய் துடுக்கு.
தன் உடை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும் என்கின்ற கம்பீர எண்ணம்.
School விட்டு வந்தவுடன், தன் ஷூ-வை, புத்தகப்பையை, சரியான இடத்தில் வைக்கும் ஒழுங்கு. இப்படி எத்தனையோ விஷயங்களில் அவன் என் மனதில் ஆக்ரமித்திருக்கிறான்.
வெட்கம், தாழ்வு மனப்பான்மை, பயம், இவை போன்ற எதிர்மறை பழக்கங்களை அவனிடம் பார்க்கவே முடியாது. சின்ன வயசுதான். ஆனால் அவனுக்குள் ஒரு விவரம் தெரிந்தவருக்குள் இருக்கும் அசாதாரமாண தன்னம்பிக்கை எப்படி வந்தது..? அவன் வளர்க்கப்பட்ட விதம்தான் காரணம்.
அவன் அம்மா, அவனுக்கு ஊட்டிய தைரிய பண்புகள்தான் காரணம். குழந்தைகள் செய்யக்கூடாது என்று நாம் நினைக்கும் வேலையைக்கூட, “உனக்கு எது தேவையோ, அதை நீயேதான் செய்து கொள்ள வேண்டும்” என்று அவனை உறுதியுள்ளவனாய் மாற்றியிருக்கிறார்.
குழந்தை பெரிய ஆளாகி, இந்த ஊருலகத்தை யெல்லாம் ஆள வேண்டும் என்று நீங்கள் நினைப்பது நிறைவேற வேண்டுமென்றால், உங்கள் குழந்தைக்கு நல்ல பண்புகளை ஊட்டும் பயிற்சிக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள்.
|
|
தன் சட்டையில் பட்டன் பிய்ந்து இருந்தால் கூட, அதை அவன்தான் தைத்துக் கொள்ள வேண்டும். “ஐய்யோ..ஊசி குத்திடுச்சுனா..?” என்று நீங்கள் நினைப்பது போல் அவன் அம்மா நினைப்பதில்லை.
வாகன நெரிசல் இருக்கிற, சாலைகளைக் கடந்து போய், பொருட்களை வாங்கிவர அவனை அனுமதித்திருக்கிறார்கள்.
முழுக்க முழுக்க, தைரியம் என்கிற உற்சாக மருந்தைத்தான், அவனுக்கு அந்த தாயும் சரி, குடும்பத்திலுள்ளவர்களும் கொடுத்திருக்கிறார்கள். அதனுடைய reaction தான், அந்த குழந்தையின் தன்னம்பிக்கை. Smart boy என்று நாம் சொல்வோமே.! அதன் மொத்த உருவம் அந்த குழந்தைதான்.
தனக்கிருக்கும் திறமைகளை வெளிக்காட்ட அவன் ஒரு போதும் தயங்கியதில்லை. பாடச் சொன்னால், பல பேர் கூடியிருக்கிற இடமானாலும் பாடுவான், ஆடுவான்.
ஆனால் தனக்கு இதெல்லாம் தெரியும் என்று தன்முனைப்பு அல்லது முந்திரிக் கொட்டை மாதிரி அலட்டிக்கொள்ள மாட்டான்.
இது எதைக் காட்டுகிறது தெரியுமா? அவனுக்குள் எந்தவித தாழ்வு மனப்பான்மையோ, வெட்கமோ, பயமோ, கொஞ்சம் கூட அவனிடத்தில் தலைதூக்கவில்லை என்பதுதான்.
ஆம் நண்பர்களே…தைரியம்தான் தன்னம்பிக்கையின் ஆணி வேர். இது ஆழமாக வேறூன்றி விட்டால், எந்த எதிர்மறை சிந்தனைகளும், உள்ளுக்குள் ஊடுருவாது.
நம்மில் எத்தனைபேர், அப்படி குழந்தைகளை வளர்க்கிறோம்..? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
பாட்டி பேய் கதையாய் சொல்லி பயமுறுத்துவாள். தாத்தா மீசையைக் காட்டி காட்டியே பயமுறுத்துவார். அப்பா நேரடியாகவே மிரட்டுவார். அம்மா பூச்சாண்டியை நினைவுபடுத்தாமல் சோறூட்ட மாட்டாள். போதாக்குறைக்கு பள்ளிகளும் நம் குழந்தைகளை அநியாயத்திற்கு பயமுறுத்துகின்றன. படிக்கின்ற ஆர்வத்தை நம் குழந்தைகளிடம் குறைத்ததே இந்த பயமுறுத்தல்தான்.
நன்றாக யோசித்துப் பாருங்கள். பள்ளிக்கு போக மறுக்கும் குழந்தையை, அப்பா மாட்டை விரட்டுவதுபோல் ஒரு மரத்திலிருந்து குச்சியை உடைத்து, போறியா? இல்லையா? என்று மிரட்டி மிரட்டியே வகுப்பறை வரை விரட்டிச் செல்வார். அதோடு அந்த மிரட்டலும், பயமுறுத்தலும் நின்று விடாது. “நீங்க விடுங்க சார், இனி நான் பாத்துக்கிறேன்..” என்று தன் பங்குக்கு அந்த வகுப்பு வாத்தியாரும் சேர்ந்துக் கொள்ளுவார். தினமும் இதே வேளையாக இருந்தால் அந்த குழந்தைக்கு பள்ளி செல்லும் ஆர்வம் எப்படி வரும்.? தன்னம்பிக்கை எப்படி வளரும்.?
நண்பர்களே..நம் குழந்தைகளின் ஒவ்வொரு பண்பிற்கும் நாமும், நம் குடும்பத்தாரும் தான் மிக முக்கிய காரணமாக இருக்கிறோம். நம் குழந்தையின் ஒவ்வொரு பார்வையும் நம்மீது மட்டும்தான் அதிகமாக பதிகிறது. நாம் எதை சொல்கிறோமோ..அதையே திருப்பி சொல்கிறது. கூட்டாஞ்சோறு விளையாட்டு விளையாடும் போது கூட, தன் பெற்றோர் எப்படி சண்டை போடுவார்களோ அதைப் போலவே திட்டிக் கொண்டும், அடித்துக் கொண்டும் விளையாடுவதை நான் பார்த்திருக்கிறேன்.
அப்படியானால் அந்த குழந்தைளின் மனதில் உருவாகும் அனைத்து எண்ணங்களுக்கும் நாம்தான் மிக முக்கிய களமாக இருக்கிறோம். நாம் சொல்லிக் கொடுக்கும் விசயங்களைத்தான் அவர்கள், வேத வாக்காக நினைக்கிறார்கள். பயமுறுத்தியே வளர்க்கும் குழந்தை, கோழையாகி, தாழ்வு மனப்பான்மை நிறைந்து, மற்றவரர்கள் துணையில்லாமல் எந்த வேலையையும் செய்யத் துணிவில்லாமல், கடைசியில் சோர்ந்து போகிறது.
கூட்டத்தை பார்த்தால் சில குழந்தைகளுக்கு வெட்கம் வந்து, வாய் பேசக் கூட கூசி நிற்கும் பரிதாப ஊமைக் குழந்தைகளை நான் நிறைய பார்த்திருக்கிறேன். இவர்கள் இப்படியே வளர்ந்தால் எதிர்கால போட்டிகள் நிறைந்த உலகத்தில் சாதிக்கப் போவதுதான் என்ன..?
ஆகவே நாம் நமக்கென வந்துவிட்ட விழுதுகளை, சரியான உரமிட்டு வளர்ப்பது நம் முக்கியக் கடமை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். குழந்தை பெரிய ஆளாகி, இந்த ஊருலகத்தையெல்லாம் ஆள வேண்டும் என்று நீங்கள் நினைப்பது நிறைவேற வேண்டுமென்றால், உங்கள் குழந்தைக்கு நல்ல பண்புகளை ஊட்டும் பயிற்சிக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். தன்னம்பிக்கையின் முதல் எதிரியான பயத்தை கொன்றுபோட, சூட்சுமங்களைக் கற்றுக் கொடுங்கள்.
இந்தக் காலத்தில் வாழ்க்கையின் வெற்றி என்பது சேர்த்து வைக்கும் செல்வத்தையும், சொத்துகளையும் வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. நிறையச் சம்பாதிப்பவன், நிறையச் சொத்து சேர்த்து வைத்திருப்பவன் வெற்றியாளன் என்றும் அதிர்ஷ்டசாலி என்றும் கருதப்படுகிறான். அதனாலேயே வாழ்க்கையின் ஓட்டம் முழுவதுமே பணம் சேர்ப்பதற்கான ஓட்டமாகி விடுகிறது.
நமக்கு வேண்டிய அளவு இருந்தாலும், நம் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவு செல்வம் இருந்தாலும் அதைவிட அதிக அளவு சம்பாதிப்பவனையும், சேர்த்து வைத்திருப்பவனையும் பார்த்தால் நம் திருப்தி காணாமல் போகிறது. நம்மை விட அதிகமாக உலகம் அவனை மதித்தால் வாழ்க்கை ஓட்டத்தில் நாம் பின் தங்கி விட்ட பிரமை நமக்கு ஏற்பட்டு விடுகிறது. உடனே நம் வேகத்தை இரட்டிப்பாக்கி நாமும் ஓடி அவனை முந்தப் பார்க்கிறோம். அப்படி முந்தி விடும் போதாவது திருப்தியுடன் நிற்கிறோமா என்றால் அதுவும் இல்லை. அந்த நேரத்தில் நம்மை முந்திச் சென்று கொண்டிருக்கும் இன்னொருவன் நம் கண்களில் படுகிறான். வேகத்தை இன்னும் அதிகப்படுத்துகிறோம். இந்தப் பைத்தியக்கார ஓட்டம் கடைசி வரை நிற்பதேயில்லை.
குழந்தையை நேரடியாகப் பார்த்துக் கொள்ள நேரமில்லை. அதனுடன் செலவழிக்கும் நேரம் மிகக்குறைவு. அதனால் அந்தக் குழந்தை வளரும் போது அதை ரசிக்கவோ, முழுமையாகப் புரிந்து கொள்ளவோ நேரமில்லை. |
|
பசிக்கிற அளவுக்கு சாப்பிடுவது இயற்கை. அது தேவையும் கூட. ஆனால் அதிகமாக சாப்பிடுகிறவனைத் தான் எல்லோரும் பாராட்டுகிறார்கள் என்ற ஒரு நிலை இருந்து, அதற்காக அசுரப்பசியை ஏற்படுத்திக் கொண்டு, அதைத் தீர்க்க சாப்பிட்டுக் கொண்டே போனால் அஜீரணம், வாந்தி முதலான உபாதைகள் ஏற்படுவது மட்டுமல்ல, ஒரு வடிகட்டிய முட்டாளாக நடந்து கொள்கிறோம் என்பதும் நமக்கும் புரியலாம். ஆனால் இதையே நாம் வேறுபல விஷயங்களில் செய்கிறோம் என்றாலும் அந்த முட்டாள் தனம் நமக்குப் புரிவதில்லை.
செல்வம் மிக முக்கியம் தானே, நம் வாழ்விற்கு ஆதாரம் தானே, அப்படி இருக்கையில் அதிகமாக அதைத் தேடி அடைவது தானே வெற்றி, அது தானே புத்திசாலித்தனம் என்ற கேள்விகள் நம் மனதில் எழலாம். அவை எல்லாம் நியாயமானதாகவும் நமக்குத் தோன்றலாம். செல்வம் தேடுவது தவறல்ல. அதை அதிகமாகத் தேடி அடைவதும் தவறல்ல. தவறு எங்கே தெரியுமா நிகழ்கிறது அதற்கு நம் வாழ்க்கையில் நாம் தரும் விலையில் தான்.
|
|
கண்களை விற்று சித்திரம் வாங்காதீர்கள்
|
|
எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தின் தம்பதியரை உதாரணமாகப் பார்ப்போம். அவர்களில் ஒருவர் அரசுப்பணியிலும் மற்றொருவர் சொந்தத்தொழிலும் செய்பவர் கைநிறையச் சம்பாதிக்கிறார்கள். காலையில் இருந்து இரவு வரை வேலை பார்க்கிறார்கள். ஒரு வீடு கட்டியாகிவிட்டது. இரண்டு கார்கள் வாங்கியாகி விட்டது. விடுமுறை நாட்களில் குழந்தையைக் கூட்டிக் கொண்டு வெளியே எங்காவது பிக்னிக் போகிறார்கள். இரவு திரும்புகிறார்கள். விடுமுறை முடிந்து மறுநாள் பழையபடி ஓட்டம் ஆரம்பிக்கின்றது. அடுத்த விடுமுறை வரை இதே ஓட்டம் தொடர்கிறது.
இருவரும் இப்படி கடுமையாக உழைப்பதால் தான் மிக நல்ல பள்ளியில் அதிகமாக ஃபீஸ் கட்டி குழந்தையைப் படிக்க வைக்க முடிகிறது. அவ்வப்போது பெரிய ஓட்டல்களுக்குச் சென்று சாப்பிட முடிகிறது. விலை உயர்ந்த ஆடைகளையும், பொருள்களையும் வாங்க முடிகிறது. வருடத்திற்கு ஒரு முறை காசைப் பற்றிக் கவலைப்படாமல் டூர் போக முடிகிறது. இதெல்லாம் அதில் அனுகூலங்கள். சரி இதில் எதையெல்லாம் விலையாகத் தருகிறார்கள் என்பதையும் பார்ப்போம்.
பணம் சம்பாதிக்கும் ஓட்டத்தில் தரும் முதல் பலி ஆரோக்கியம். உடற்பயிற்சி செய்யவோ, நடக்கவோ நேரமில்லை. அதனால் படிப்படியாக ஆரோக்கியம் குறைந்து கொண்டே வருகிறது.
குழந்தையை நேரடியாகப் பார்த்துக் கொள்ள நேரமில்லை. அதனுடன் செலவழிக்கும் நேரம் மிகக்குறைவு. அதனால் அந்தக் குழந்தை வளரும் போது அதை ரசிக்கவோ, முழுமையாகப் புரிந்து கொள்ளவோ நேரமில்லை. மாலை நான்கு மணிக்கு வீடு வந்து சேரும் குழந்தை டிவி பார்த்துக் கொண்டோ, வீடியோ பார்த்துக் கொண்டோ பொழுதைப் போக்கும். இல்லா விட்டால் டியூஷன் போகும். சாவகாசமாக அதனுடன் இருக்கவோ, நெருக்கமாகப் பழகவோ, புரிந்து கொள்ளவோ நேரமில்லை. குழந்தை வளர வளர அதனுடன் இருக்கும் இடைவெளியும் அதிகரிக்கிறது.
|
|
|
வாழ்க்கையில் பணம், உடல் ஆரோக்கியம், மன நலம் மூன்றுமே சம அளவில் முக்கியமானவை. |
|
|
பணம் சம்பாதிக்கும் ஓட்டத்தில் தரும் முதல் பலி ஆரோக்கியம். உடற்பயிற்சி செய்யவோ, நடக்கவோ நேரமில்லை. அதனால் படிப்படியாக ஆரோக்கியம் குறைந்து கொண்டே வருகிறது. |
உறவுகள், வேலை சம்பந்தப்படாத நண்பர்கள் ஆகியோருடன் நெருங்கி இருக்கும் சந்தர்ப்பங்கள் குறைவு. உண்மையான எத்தனையோ திறமைகள் வேறும் இருக்கக்கூடும். அந்தத் திறமைகளில் ஈடுபடவோ, வளர்த்துக் கொள்ளவோ, அதில் நிறைவு காணவோ நேரமில்லை.
ஒரு நாள் உடல் ஆரோக்கியம் முழுவதுமாகக் கெட்டு டாக்டர்களிடம் அடிக்கடி ஓட நேர்கிறது. மருந்திற்கும், மருத்துவத்திற்கும் நிறைய செலவு செய்ய வேண்டி வருகிறது. பிள்ளை நெருக்கமாக இருப்பதில்லை. நெருங்கிய உறவுகளும் தூரப்பட்டு விடுகிறார்கள். டென்ஷன், டென்ஷன் என்று அது நாள் வரை ஓடிய ஓட்டத்தில் மனதை அமைதிப்படுத்திக் கொள்ள எதுவுமே செய்ய நேரமிருக்காததால் மனநிலையிலும் நிறைய பாதிப்புகள் இருக்கின்றன.
மொத்தத்தில் பணமும் பொருளாதார வசதிகளும் இருக்கின்றன. ஆனால் ஆரோக்கியமும் இல்லை, நிம்மதியும் இல்லை, நேசிக்கும் ஆட்களும் இல்லை. இப்போதும் வெளியே இருந்து பார்ப்பவர்கள் பொருளாதார நிலைமையை மட்டும் பார்த்து இவர்களை வெற்றியாளர்கள் என்றே சொல்லலாம். இது தான் வெற்றியா? உயிர்வாழ எல்லாம் இருக்கிறது. ஆனால் நல்ல உணர்வுகளுடன் வாழ ஏதாவது இங்கே இருக்கிறதா? என்ன விலை கொடுத்து இவர்கள் எதைப் பெற்றிருக்கிறார்கள்?
இந்த சராசரி உதாரணத்தில் பணமும், தனிமையும் இருப்பதால் கெட்டுப் போக முடிந்த குழந்தைகளைச் சொல்லவில்லை. தேவையான நேரத்தில் பெற்றோரில் ஒருவர் கூட அருகில் இருக்காததால் குழந்தைகளுக்கு ஏற்படும் மனரீதியான நஷ்டங்களைச் சொல்லவில்லை. அதே போல் வயதான பெற்றோர்கள் தனிமைப்படுத்தப்படுவது பற்றியும் கூட சொல்லவில்லை. அவற்றையெல்லாம் சேர்த்தால் நிலைமை இன்னும் பூதாகரமாகத் தெரியும்.
ஆரோக்கியத்தை இளமையில் அலட்சியப்படுத்தி ஓயாமல் சம்பாதித்து நாற்பது வயதைத் தாண்டிய பிறகு சம்பாதித்ததை எல்லாம் மருத்துவத்திற்கு செலவு செய்வதுடன் உடல் உபாதைகளையும் தாங்குவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? குழந்தைகளின் பிஞ்சுப்பருவத் தேவைகளை அலட்சியப்படுத்தி விட்டு அந்த நேரத்திலும் சம்பாதித்து அவர்களுக்குக் கடைசியில் சேர்த்து வைப்பதில் பெருமை என்ன இருக்கிறது? அந்த வாழ்க்கையில் வெற்றி என்ன இருக்கிறது? மொமாத்தத்தில் கண்களை விற்று சித்திரம் வாங்கி எதை ரசிக்கப் போகிறோம்?
வாழ்க்கையில் பணம், உடல் ஆரோக்கியம், மன நலம் மூன்றுமே சம அளவில் முக்கியமானவை. அதில் ஏதாவது ஒன்றை மட்டும் சம்பாதித்து மற்ற இரண்டை அலட்சியம் செய்தால் அது குறைபாடான வாழ்க்கையாகவே இருந்து விடும்; அதில் உண்மையான மகிழ்ச்சியையும் நிறைவையும் நாம் காண முடியாது. ஆனால் இந்தக் காலத்தில் பணம் ஒன்று மட்டுமே வெற்றியையும் மகிழ்ச்சியையும் தந்து விடும் என்று நம்பி ஏமாறுகிற போக்கை நாம் அதிகம் காண முடிகிறது. இது கண்களை விற்று சித்திரம் வாங்கும் போக்குத் தான். எனவே இந்த மூன்றுக்கும் சமமான முக்கியத்துவத்தை உங்கள் இளமையில் இருந்தே தரும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாக நிறைவான வாழ்க்கை வாழ்வீர்கள்!