ஒரு நாட்டின் எதிர்கால தலைவிதி என்பது ஒவ்வொரு வகுப்பறையிலிருந்து தான் உருவாக்கப்படுகிறது.
உடல் ஆற்றலும், மன ஆற்றலும் மிகப்பெரிய அளவில் ஒருங்கிணைந்த இனமான இந்த மனித இனிமே நான் அறிந்த வரையில் ஈடுஇணையற்ற ஆற்றலைப் பெற்றது. இப்படிப்பட்ட ஆற்றலை வைத்துக்கொண்டு, அவற்றை சரியான வழியில், நாம் விரும்பியவற்றில் தான் பயன்படுத்துகிறோமா என்றால் பதில் என்னவோ இல்லை தான். ஏனென்றால் அத்தகைய ஆற்றலை வளப்படுத்த நாம் சிறிதும் முயற்சி செய்வதில்லை. அப்படியே சிலர் வளப்படுத்தினாலும், அதை தான் நினைத்த, தனக்குப் பிடித்த செயல்களில் பயன்படுத்த முடிவதில்லை.
ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய உள்ளார்ந்த மனநிலையில் நிறைய திறமைகளைப் பெற்றவர்களாக இருக்கிறோம். உதாரணமாக, நல்ல இசைக் கலைஞர்ராக, நல்ல எழுத்தாளராக, சிறந்த அறிவியலாளராக, தத்துவஞானியாக, மொழியில் வல்லுநராக, குதிரை ஏற்றத்தில், கராத்தேயில், துப்பாக்கிச் சுடுதலில் என்று அடுக்கிக் கொண்டே செல்லலாம். நம்முடைய பணியைத் தவிர்த்து இவற்றில் ஏதோ ஒன்றில் நம் மனதைப் பறிக்கொடுத்தவர்களாகவே உள்ளோம். இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.
சரி, இவற்றில் நாம் சாதனை செய்ய முடியாமல், எட்டாக் கனியாகவே இவை இருப்பதற்குக் காரணம் என்ன என்று சிந்திக்கையில் நம் கண்முன் வருபவர்கள் ஆசிரியர்கள். இங்கே நான் ஆசிரியர் என்று குறிப்பிடுவது பள்ளி ஆசிரியரையோ, பணி மேலாளரையோ அல்ல. அவற்றையெல்லாம் தாண்டி நீங்கள் விரும்பும் வாழ்வை, கலையை உங்கள் விரல் பிடித்துக் கற்றுத்தரும் ஆசிரியரை.
எந்தத் துறையில் ஒருவன் மிகச்சிறந்த வல்லுனனாக, ஆளுமையுடையவனாக வர வேண்டுமானால் அவனுக்கு மிகச் சரியான ஆசிரியர் அமையப் பெற்றிருக்க வேண்டும். இல்லையேல் மிகக் கடினம். தன் வாழ்நாளில் அத்துறையில் அறிந்ததை, அனுபவத்தை அப்படியே மாணவர்களுக்குக் கற்றுக் கொடுப்பவர்.
அப்படி ஊட்டப்பட்ட அறிவை மாணவன் கிரகித்துக்கொண்டு, பன்மடங்காகப் பெருக்கிக் காட்டுகிறான். இவ்வாறு தலைமுறைக்குத் தலைமுறை மனித ஆற்றலும், வளமும் பெருகிக் கொண்டே செல்கிறது. இத்தகைய ஆசிரிய மாணவ (Master Desciple) முறையினால் பண்பாடும், அறிவும் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குச் சேதாரமின்றி கடத்தப்படுகிறது. இதற்கு மிகச்சிறந்த உதாரணம் குங்பு, கராத்தே கலைகளை கற்றுத்தரும் ஆசிரியர்களையும், கற்றுக்கொள்ளும் மாணவர்களையும் கூறலாம்.
குங்பு, கராத்தே கலைகளைக் கற்றுத்தரும் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களை ஒரு பந்தையக் குதிரைபோல தயார்செய்யும் விதம் மிகச்சிறப்பானதாக இருக்கும். அவற்றைக் கூர்ந்து கவனிக்கும்போது, அந்தக் கலையைக் கற்றுக் கொடுப்பதில் ஆசிரியர் காட்டும் சிரத்தையும், மாணவர்களின் ஆர்வமும் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.
அங்கு அவர்களின் கலை தலைமுறை விட்டு தலைமுறைக்கு, பன்மடங்காகப் பெருக்கப்பட்ட அளவில் பரிமாற்றப்படுகிறது என்பதே உண்மை. நாமும் அப்படிப்பட்ட ஆசிரியர்களை எல்லாத் துறையிலும் அமையப் பெற வேண்டும் என மனம் ஏங்க வைத்துவிடுகிறது. இங்கு ஆசிரியர் அமைய வேண்டும் எனக் கூறுவது, அவர்களிடம் எளிதில் கற்றுக்கொண்டு அதனை அப்படியே பிரதிபலிப்பதற்கு அல்ல. அவர்கள்தான் நம்மை ஒருமுகப்படுத்தி, இலக்கைக்காட்டி, நம்மை அதைநோக்கி ஓடவைப்பவர்கள்.
ஆசிரிய மாணவ முறையினால் பண்பாடும், அறிவும் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குச் சேதாரமின்றி கடத்தப்படுகிறது.
|
|
லேசாக ஒளிவிட்டுக் கொண்டிருக்கும் விளக்கு போன்ற நம் ஒவ்வொருவருடைய ஆற்றலையும் தூண்டி, சுடர்விட்டு எரியும் சுவாலையாக வளர்க்கும் திறன் கொண்டவர்கள். நாம் அடைய விரும்புவனவற்றை, நம் கனவை, அவர்களும் விரும்பி முழுமையாக அடைந்தவர்கள்.
நாம் அங்கிருந்து தொடங்கும்போது நல்ல அடித்தளம் அமையப் பெறுகிறோம். ஒருதுறையில் ஒருவர் எட்டும் உயரத்தில் பாதி அவரது ஆசிரியரையே சேரும் நான் கேட்பது நம்முடைய புராணங்களில் வரும் மிகுந்த கோபப்படும், கொடிய தண்டனைகளை வழங்கும் ஆசிரியர்களை அல்ல.
கரடு, முரடான கற்களையும் வைரம் பாய்ந்த மரங்களையும் வேண்டிய வடிவில் வடிவமைத்துச் செப்பனிடும் கூறிய உளியைப் போல மனிதப் பேராற்றலை நமக்கு உகந்த வடிவில் வடித்துக்கொடுக்கும் என்னுடைய, உங்களுடைய ஆசிரியர் எனும் உளியை. எங்கே அப்படிப்பட்ட உளிகள் ?
இந்தக் கட்டுரையை இத்துடன் முடித்துக்கொண்டு பேனாவை வைத்தபோது என்னுடைய நண்பரிடம் இருந்து அலைபேசி அழைப்பு வந்தது. என்னை நலம் விசாரித்தவர் சற்றே உடைந்துபோன குரலில் எங்களின் பள்ளி ஆசிரியரின் மறைவைத் தெரிவித்தார். வாழ்க்கை ஓட்டத்தில் என் நினைவில் இருந்து பல வருடங்களாக மறைந்து போனவர் இன்று நிரந்தரமாகவே மறைந்துபோனார் என்று எண்ணும்போதே வருத்தம் ஏற்பட்டது. வருத்தத்தில் தோய்ந்த வார்த்தைகளால் காரணத்தை வினவினேன். வயதும், நோயும், நோயை விதைத்த கவலையும், கவலைக்குக் காரணமான வறுமையும், வறுமையை வழங்கிய சூழலுமெனக் காரணங்களைக் கூறினார் நண்பர்.
நான் இன்று வளமான வாழ்வு வாழ அன்று விதை விதைத்து, அதைச் சரியே விளையச் செய்தவர் அவர். பேராசிரியராக, பல அடுக்குமாடிக் கட்டிட கல்லூரியில், ‘லேப்டாப்’ கணினியுடன் அவரை நினைவு கூறும் இந்த உயரத்திற்கு என்னை உந்தியவர். உருப்பெருக்கியைத் துணையாகக் கொண்டு தேடினாலும் கிடைக்கப் பெறாத தமிழக கிராமத்தில் தன்னுடைய நாடியைச் சுருக்கிக் கொண்டார். மனம் கண்ணீர்விட வேண்டியும், கண்ணீர் வராத திடத்தைக் கொடுத்தவர்.
பள்ளி நாட்களில் என் விலாவை இறுகப்பிடித்து தூக்கி இந்த உலகம் உன்னுடையது எடுத்துக்கொள் என்று விண்ணைநோக்கி என்னை எறிந்து எனக்குள் இருந்த அச்சத்தையெல்லாம் போக்கியவர். தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் தந்தவர். அந்த வலுவான கைகளை என் விலா எலும்புகள் இப்போதும் உணர்கின்றன. என் வெற்றிகளைப் பாராட்டியவர், தவறுகளைத் தட்டிக்கொடுத்தவர், பள்ளி கடந்து கல்லூரி சென்ற பின்னரும் என் அப்பா, அவரை நேரில் பார்க்கும் போதெல்லாம் என் எதிர்காலம் குறித்து கவலை தெரிவித்த போதெல்லாம் அப்பாவிடம் என்னை உயர்த்திக் காட்டியவர்.
உலகம் அதன் சுழற்சி வேகத்தில் மாறியபோதும் தன் கடைசி நாட்கள் வரை நான் பள்ளியில் கண்ட அதே மிதிவண்டியில் பயணித்தவர். அவரைப்போன்ற எளிமை விரும்பிகளுக்கு இந்த உலகம் தகுதியற்றதாக மாறிப்போனதேன்? பலநூறு வெற்றியாளர்களை உருவாக்கியவர். உதவியென வாயைத் திறந்தால் உதவ எண்ணற்றோர் இருந்தும் கடைசிவரை இறுமாப்பாய் இருந்து இறந்துபோனது என் மனதில் இனம்புரியாத வேதனையைத் தோற்றுவித்துள்ளது.
என்னைப்போன்ற நூற்றுக்கணக்கான சிறு திரிகளைப் பற்றவைத்த பேரொளிச்சுடர் அணைந்தது எப்படி? சுடர் அணைந்தாலும் அதன் கங்கு என் மனதில் கனன்று கொண்டேதான் இருக்கிறது. எப்போதும் இருக்கும் அந்த பேரொளிச் சுடர் பற்றிய நினைவுகள்… ��்�r���(?���வர் பெயரை உச்சரிக்காமல் பேசி சமாளித்து விடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அவர் சென்றபின், அவர் பெயர் பிரகாஷ் என்று பிராகாசமாக உங்கள் மூளைக்குள் மிகவும் தாமதமாக லைட் எரிவதாக வைத்துக் கொள்வோம். இந்த விதமான ஞாபக சக்தி நமக்குத் தேவையா? அல்லது எப்பொழுது வேண்டுமோ அப்பொழுது வெளிப்படும் ஞாபகசக்தி வேண்டுமா?
அன்பு நண்பர்களே! நம் பிள்ளைகளும் படிப்பில் சுட்டியாக விளங்க இந்த ஞாபகத் திறன் அவசியம் வேண்டும். உதாரணமாக, விஞ்ஞானப்பாடப் பரிட்சையில் முதல் கேள்வி முதல் பாடத்திலிருந்துதான் கேட்பார்கள் என்று கூற முடியாது. மொத்தமுள்ள 24 பாடங்களையும் நன்கு படித்திருந்தாலும் இந்தக் கேள்விக்கான பதில் எந்தப் பாடத்தில் இருக்கிறது என்று முதலில் புரிந்து, பின்னர் அதற்கான பதிலை எழுத வேண்டும். இந்த செயல்பாடு என்பது ஒரு நூலகத்தில் துறைவாரியாகவும் அகர வரிசையாகவும் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் எவ்வாறு சுலபமாக குறிப்பிட்ட புத்தகத்தை எடுக்க முடியுமோ அதுபோல, நம் மூளையானது வரிசைக் கிரையமாக படித்து மூளையின் நினைவாற்றல் பகுதியில் பதிய வைக்கப்பட்டதிலிருந்து நினைவுக்கு கொண்டு வந்து (Recognition Power) கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விரைவாக பதில்களை எழுத வேண்டும். அப்படியில்லாமல் நான்காவது கேள்விக்கான பதில் பரிட்சை நேரம் முடியும் வரை ஞாபகத்திற்கு வராமல், பரிட்சை கூடத்தை விட்டு வெளியே வந்த பின்னர் ஞாபகத்திற்கு வருவதால் யாரும் மதிப் பெண்கள் அளிக்கப் போவதில்லை. ஆகவே, நம் குழந்தைகளுக்கு புத்திசாலித்தனமும் ஞாபக சக்தியும் ஒருங்கே பெற்றிருக்க வேண்டும் என்பது புரிகிறதா?
அன்பு பெற்றோர்களே! மூளையின் ஞாபகத் திறன் அதிகரிக்க ஜின்சங் என்ற தாவரச் சத்து அவசியம் தேவைப்படுகிறது. இந்த தாவரச் சத்தானது நம் மூளையின் நினைவாற்றலை வெளிக்கொண்டு வரும் தன்மையை அதிகப்படுத்தும். அதே போல், நம் நரம்பின் சுருங்கி விரியும் தன்மைக்கு எவ்வாறு ஒமேகா-3 கொழுப்பு அதிகம் தேவையோ அது போல, நம் நரம்பின் வலிமைக்கு ஜின்சங் தாவரச் சத்து அவசியம் தேவை. அதிக வேலைக்கு ஆளாகும் நரம்புகள் அதிகம் சுருங்கி விரிவதால் தளர்ச்சி ஏற்பட வாய்ப்பாகின்றன.
அவ்வாறு அதிகம் வேலை செய்யும் நரம்புகள் தளர்ச்சியடையாமல் இருக்க இந்த ஜின்சங் தாவரச் சத்து உதவியாக இருக்கும். அதே போல் அதிக மன உளைச்சலுக்கு ஆளாகும் நபர்களுக்கும் ஜின்சங் தாவரச் சத்தானது சாந்தப்படுத்தும் மருந்தாக விளங்கும். ஜின்சங் தாவரச் சத்து எடுத்துக் கொள்வதால் நம் மூளையானது இனிமையான தன்மைக்கு (Pleasant Mood) மாறுகிறது. அதே போல் வேண்டாத நினைவுகளில் (Negative thoughts) இருந்து விடுபடவும் ஜின்சங் தாவரச் சத்து உதவும்.
நம் பிள்ளைகளின் வேண்டாத குண அமைப்புகளைக் கலைந்து நேர்மைறயான குண அமைப்போடு வாழ மலர் மருந்துகளும் உதவியாக இருக்கும். அவை பற்றியும் இங்கு பார்ப்போம்.
அன்பு பெற்றோர்களே! நம் குழந்தைகள் புத்திசாலியாகவும் சூட்டிகையாகவும் (ஞாபகத்திறனில் சிறக்கவும்) ஒமேகா-3 கொழுப்பும், ஜின்சங் தாவரச் சத்து மற்றும் சமச்சீர் புரதம் கொடுத்து, அதனோடு அவர்களுக்கான மலர் மருந்தையும் கொடுத்தால், அவர்களின் வேண்டாத தன்மைகள் குறைந்து, வேண்டிய விதத்தில் படிப்பில் சிறப்படைவார்கள். நம் பிள்ளைகளை புத்திசாலியாக்க உதவுவோம்.