இக்கட்டுரையின் முதற்பகுதியில், உலகத்து மனிதரெல்லாம் மொத்தம் எட்டு வகைப்பட்டோர்கள்தாம் என்றும், அத்தைகையோரை நான் எவ்வாறு பிரித்துள்ளேன் என்ற விவரத்தையும் கீழே உள்ளதுபோல எழுதியிருந்தேன்.
எலும்பும் தோலுமாய் உள்ளோர்,
ஒல்லியாய் உள்ளோர்,
செம்மையானோர்,
தடிப்பு வரிசையின் இரண்டாம் நிலையினர்,
தடிப்பு வரிசையின் முதல் நிலையினர் (அல்லது, தடிப்பின் தொடக்கநிலையில் உள்ளோர்),
தடிப்பு வரிசையின் மூன்றாம் நிலையினர்,
தடிப்பு வரிசையின் நான்காம் நிலையினர் (அல்லது, தடித்தவர்),
நிலைகுலைந்தோர் (அல்லது, நலம் இழந்தோர்). (இவர்களே எட்டாம் வகையினர் ஆவர்.)
இறுதியாக உள்ள எட்டாவது வகையினர், அவர்களுக்குள்ள நோய்களின் விளைவாகச் சிறிது சிறிதாக நலிவுறுவர். அந்நலிவுக்கு ஏற்ப, அவர்கள் மேலும் எட்டுவகையான உடல் அமைப்புக்களைப் பெறுவர்.
இக்கட்டுரையின் இரண்டாம் பகுதியில் நாம் கண்டவை:
மேற்குறிப்பிட்ட அத்தனை வேறுபாடுகளுக்குமான அடிப்படைக்காரணம் மனிதஉடலில் சேரும் கால்சியம் எனப்படும் சுண்ணாம்புச் சத்தின் வேறுபட்ட அளவுகள்தாம் என்பதையும்,
நிலைகுலைந்தோர் (அல்லது, நலம் இந்தச் சுண்ணாம்புச் சத்து உடம்பில் மிகுந்துவிடும்போது, அது எவ்வாறெல்லாம் நமது உடலைவிட்டு வெளியேறுகிறது என்பதையும்,
நிலைகுலைந்தோர் (அல்லது, நலம் அவ்வாறு வெளியேறாது மிகைப்படும் சுண்ணாம்பு, மனிதரிடத்திலேயும் விலங்குகளிடத்திலேயும் எவ்வாறெல்லாம் உருப்பெறுகின்றது என்பதையும் கண்டோம்.
மேற்குறிப்பிட்ட இந்த எட்டுவகைப்பட்ட மனிதரிடையே உள்ள வேறுபாடுகள் என்னென்ன என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டுவது மிக முக்கியமான ஒன்றாகும்.
அவற்றை அறிந்துக்கொண்ட பிறகுதான், நீங்கள் எந்த வகையைச் சார்ந்தவர் என்பதை உணரமுடியும்.
எனவே, அந்த எட்டுவகைப் பட்டோரின் உடல் அமைப்புக்களையும் அவர்களது மற்ற மற்ற விவரங்களையும் இனி காண்போமாக.
எலும்பும் தோலுமாய் உள்ள, “Skeletal People” அல்லது “S” எனும் முதல் வகையினரது உடற்கூறுகளையும், பழக்கவழக்கங்களையும், இவர்களுக்கு இப்பொதுள்ள நோய்களையும் முதலில் பட்டியலிடுகிறேன்.
இவ்விவரங்களில் பெரும்பகுதியானவை உங்களுக்கு ஒத்துவந்தால், நீங்கள் இந்த “S” வகையைச் சேர்ந்தவர்கள் என முடிவு செய்துகொள்ளுங்கள்.
மாறாக, பெரும்பாலானவை தவறாக இருக்குமானால், நீங்கள் வேறு ஏதோ ஒரு வகையைச் சேர்ந்தவர் எனப் புரிந்துகொண்டு, உங்களுக்கான வகை விளக்கம் வரும்வரை பொறுத்திருங்கள்.
எலும்பும் தோலுமாய் உள்ளோர் பற்றியவை:
உங்கள் முகம் வற்றினாற்போல், சதுர வடிவமான முக எலும்பினைக் கொண்டிருக்கும்.
உங்கள் உடம்பு, எலும்பும் தோலுமான ஒல்லியான தோற்றத்தைக் கொண்டிருக்கும்.
சட்டையின் முன் கழுத்துப் பட்டைக்கு கீழே உள்ள உங்களின் (Collar Bone) இருபக்கத்து எலும்புகளும், நெஞ்செலும்புகளும் தோலுக்கு வெளியே சற்றே தூக்கினாற்போல அமைந்திருக்கும்.
கால்-கைகளின் எலும்புகள்கூடக் ‘குச்சி-குச்சியாகவே’ தென்படும். முழங்காலும் முட்டிக்கொண்டிருக்கும்.
உங்களின் இப்போதைய வயது பதினாருக்கும் எண்பதுக்கும் இடையில் இருக்கும். (இதன் பொருள் என்னவெனில், எந்த வயதினர் வேண்டுமானாலும் இந்த “ந” எனும் ‘எலும்பும்-தோலுமான’ வகையைச் சார்ந்தவராக இருக்க முடியும் என்பதே.)
ஒவ்வொரு நாளும் (24 மணி நேரத்தில்), நீங்கள் 14 அல்லது அதற்குக் கூடுதலான தடவைகள் சிறுநீர் கழிப்பீர்கள்.
ஒவ்வொரு நாளும் (24 மணி நேரத்தில்), நீங்கள் குறைந்தது மூன்றரை லிட்டர்கள் (3ணீ க ‘ 14 பெருங் குவளைகள்) அல்லது அதற்குக் கூடுதலான அளவு தண்ணீர் குடிப்பீர்கள்.
உங்கள் உள்ளங்கைகளிலும், பாதங்களிலும், உடல் முழுமையும், மிக அதிகமான அளவில், எந்தநேரமும் வியர்வை சுரந்துகொண்டேயிருக்கும்.
கோவையில், கல்லூரியில் படிக்கும் மாணவி ஒருவர் என்னிடம் மருத்துவம் பார்த்துக் கொள்ளுவதற்காக அழைத்துவரப்பட்டார். அந்தப் பெண்ணின் உடலில், நினைத்துப் பார்க்கமுடியாத அளவிற்கு வியர்வை வடியும். ஆயினும் உடலில் வியர்வை நாற்றம் இராது. நடு இரவுப் பொழுதில், அவர் படுத்திருக்கும் மெத்தையின் விரிப்பு முழுவதும் ‘தெப்பமாய்’ நனைந்துவிடுமாதலால், நள்ளிரவுதோறும், அப்பெண்ணின் அன்னையார், அப்பெண்ணை எழுப்பி, படுக்கை விரிப்பை மாற்றுவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார். கல்லூரியில், அவர் உட்கார்ந்திருக்கும் நாற்காலி நனைந்துவிடுமாதலால், அவருக்கென தனியொரு இருக்கை போட்டிருப்பார்களாம். இந்த அளவிற்குக்கூட, இந்த ‘எலும்புந்தோலுமாய்’ உள்ள வகையினருக்கு, வியர்வை ஏற்பட முடியுந்தான். உங்களின் ஆர்வத்தை அடக்கும்பொருட்டு, பின்னர் என்ன ஆனது என்ற விவரத்தையும் இங்கேயே தெரிவித்துவிடுகிறேன்.
மருந்து-மாத்திரைகள் ஏதுமில்லாது, ‘Reverse Engineering’ என்ற முறைப்படி, அவரது வாழும் நெறிமுறையை மாற்றி அமைத்த அடுத்த இரு மாதங்களிலேயே அந்தப்பெண் முற்றிலுமாக நலம்பெற்றுவிட்டார்.
இந்தக் கட்டுரையை அந்தப்பெண் படிக்கநேர்ந்தால், இப்போது அவர் எப்படி இருக்கிறார் எனும் விவரத்தை நேரடியாகவே “தன்னம்பிக்கை”க்கு எழுதுவார் என எதிர்பார்ப்போமாக.
இக்கட்டுரையைப் படிக்கும் நீங்கள் இந்தவகையைச் சார்ந்தோராக இருப்பீர்களானால், நீங்கள் எல்லையில்லாத மன உளைச்சலுக்கு ஆளாகித்தான் இருப்பீர்கள். அவ்வாறானால், எவ்வாறு இதனைக் குணப்படுத்திக் கொள்ளுவது என்பதை “தன்னம்பிக்கை”யின் வழி உங்களுக்குப் பின்னர் அறிவுறுத்துகிறேன்.
இப்போதைக்கு, மிக அதிகமான அளவில் உங்களுக்கு வியர்த்தபோதிலுங்கூட, உங்களால், காற்றாடி அல்லது குளிரூட்டியின் குளிரைத் தாங்கிக்கொள்ள முடியாது. எனவே, காற்றாடியை மிகக்குறைந்த வேகத்தில்தான் பயன்படுத்துவீர்கள்.
உங்களுக்கு அடிக்கடி மென்மையான இருமல் இருந்துகொண்டே இருக்கும்.
உங்களின் முழங்காலுக்கும் கணுக்காலுக்கும் இடையே, பின்புறமுள்ள ஆடுசதையைச் சற்றே அழுத்திப்பாருங்கள். அது, தொள-தொளவென, சதைப்பிடிப்பில்லாது, துணிபோல, மிக மென்மையாக இருக்கும். இது, -21 முதல் -40 வரையிலான சதை இறுக்கம் (Calf Hardness = cH) எனப்படும்.
உங்களுக்கு அடிக்கடி, மாதம் ஒரு முறையாவது, சளி பிடித்துக் கொள்ளும். ஆயினும், பெரும்பாலும், அது ஒரே நாளில் குணமாகிவிடும்.
அடிக்கடி காய்ச்சலும் ஏற்படும். வந்த வேகத்தில் தானாகவே குணமுமாகிவிடும்.
பெரும்பகுதி, உங்களுக்குக் குடலில் புண் (Duodenal Ulcer) ஏற்பட்டிருக்கும். இவ்வலி, பால் குடித்தாலும், அல்லது எந்த உணவு உட்கொண்டாலும், தற்காலிகமாக நின்றுவிடும்.
காலையில் உறங்கி எழுந்தவுடன், உங்களுக்கு நிறையத் தடவைகள் தொடர்ந்து தும்மல்கள் ஏற்படும்.
உங்களுக்குத் தலைவலி அடிக்கடி ஏற்படும். ஒற்றைத் தலைவலியும் (migraine) இந்தப் பிரிவினரில் பலருக்கும் ஏற்படுவதுண்டு.
முகத்திலும் முதுகிலும் பருக்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பு இவர்களுக்கு மிகுதியாக உண்டு.
இவர்கள் மலச்சிக்கலுக்கும் ஆளாகித் துன்பப்படுவதுண்டு. மலத்துவாரத்தில் “மூலம்” எனும் கட்டிகள் ஏற்பட்டு, இரத்தக் கசிவும் ஏற்படலாம் இப்படி இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளது அவைகள்
அடுத்த இதழில்…