படித்தவர்கள், பாமரர்கள், அறிவு ஜீவிகள், உழைப்பாளிகள், சிந்தனையாளர்கள், சோம்பேறிகள், அரசியல்வாதிகள், ஆயுதவாதிகள், ஆண்கள், பெண்கள், நண்பர்கள், எதிரிகள் என்று எல்லாதரப்பு மனிதர்களும் கொண்டாடக்கூடிய நாட்களைக் கொண்டதுதான் ஆகஸ்ட் மாதம்.
ஆழ்ந்த எண்ணங்களும், உறுதியான உள்ளமும், தேர்ந்த அரசியல் மேதையாகவும், உலக வரலாற்றில் இரக்க மனப்பான்மை கொண்ட ஓர் சர்வாதிகாரியாகவும், அழகிய தோற்றமுடைய, அறிவாற்றலில் சிறந்த, நல்லொழுக்கமுள்ள, எகிப்தியர்கள், பாபிலோனியர்கள், யூதர்கள், கிரேக்கர்கள் போன்ற
பண்டைய உலக மக்களின் கொள்கைகளையும், பண்பாட்டுச் சாதனங்களையும் மேற்கு ஐரோப்பாவுக்குப் பரப்புகின்றவடிகாலாகவும், அலெக்சாந்தருடனும், மா-சே-துங்குடனும், ஜார்ஜ் வாஷிங்டன்னுடனும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நீண்ட கால ஆட்சி, கொள்கைகளின் வெற்றி, உலக வரலாற்றில் ரோமானியப் பேரரசுக்கு ஒரு மிகப்பெரிய இடத்தை ஏற்படுத்திக் கொடுத்த காய்ஸ் ஆக்டேவியஸ் என்றஅகஸ்டஸ் சீசர் பிறந்த மாதம் ஆகஸ்ட் மாதம்.
“வாழ்க்கை எதார்த்தத்தின் விளிம்புகளுக்குள் செல்ல இருந்த போதுதான் நீ எனக்கு அறிமுகம் ஆனாய். உண்மையான அன்பை என் இதயம் நாடின தருணம் தான் என் உணர்வுகளுக்குள் பயணித்தாய். புன்னகை செய்ய என் உதடுகள் மறந்த தருணங்களில் உன் முகம் தான் அதை எனக்குக் கற்றுக்கொடுத்தது. வலி மறைக்கும் வித்தையும், வாழ்வியல் எதார்த்தமும்… நீ எனக்குக் கற்றுக்கொடுத்த பாடங்கள். உன் அன்பு மழையால் என் மனதின் பள்ளங்களை
நிரப்பினாய், என்னை முதன்முதலில் உரிமையுடன் அழைத்தது உன் குரல்தான். எதிர்பார்க்கத் தெரியாத, எதிர்பார்ப்புகள் இல்லாத அன்பை உடையவளே, என்ன தவம் செய்தேன் உன் தோழியாவதற்கு…” என்று நட்பைக் கொண்டாடும் “நண்பர்கள் தினம்” (Friendship Day First Sunday in August) வருவதும் இந்த மாதத்தில்தான்.
உறவுகளை அறிமுகப்படுத்தி, உயிரை உணரவைத்து, தோல்விகளைத் தூரத்தள்ளி, வெற்றிக்கு வடிவமைத்து, சதையை உடலாக்கி, உணர்வை உயிராக்கி, என்னை நானாகவும், என்னை நீங்களாகவும், பார்க்கும் உங்களுக்காக மட்டும் என்னையும் மாற்றிக் கொள்வேன் என்று உயிருக்குள் ஊடுருவி, உதிரமாகவும், உயிராகவும் இருக்கும் மகன் மற்றும் மகள்களைக் கொண்டாடும் தினமான “Son and Daughters Day” வருவதும் இந்த ஆகஸ்ட் மாதத்தில் தான்.
மனிதர்கள் விசித்திரமானவர்கள். சில சந்தர்ப்பங்களும் விசித்திரமாகவே அமைந்தும் விடுகின்றன என்பதைப்போல், “ஆசைகளை எழுதிவைத்து, ரசித்து… நிஜங்களை கனவுகளில் தேடிபார்க்கும் சோம்பேறிகளுக்கான “கஹக்ஷ்ஹ் ஈஹஹ்” வும்,
“என்னையே நான் கண்டுகொள்ள உதவும் கண்ணாடியாகவும், முகம் திருப்பிக்கொள்ளும் பகைவரிடமும் எனக்காக வாதாடும் இன்னொரு முகம்” என்று உறக்கக்கூறும் எழுத்துக்களை நேசிப்பவர்கள்
கொண்டாடும் Book Lover’s Daym, இடது கை பழக்கம் உள்ளவர்கள் கொண்டாடும் Left Hander’s Daym, மன்னிப்பு கேட்பது மனிதகுணம், மன்னித்தல் தெய்வகுணம் என்று மன்னிப்பு கோருவதையும், மன்னிப்பதையும் கொண்டாடும் “International Forgiveness Day Frst Sunday in August; Global Forgiveness Day 4th Sunday in August” நாட்கள் வருவதும் இந்த ஆகஸ்ட் மாதத்தில் தான்.
இப்படி விந்தைகள் ஒரு புறமும், விசனம் ஒரு புறமும், மேலிட்டு நின்றாலும் என் நெஞ்ச அலமாரியில் அடுக்கி வைத்திருக்கும் நினைவு ஏடுகளில் இப்போது எட்டிப்பார்க்கும்போது என் கண்ணெதிரில் தோன்றுவது 1945ல் இரண்டாவது உலக யுத்தத்தில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்திய ஆகஸ்ட் 6ம், ஆகஸ்ட் 9ம் தான்.
உலக வரலாற்றில் இரண்டுமுறை அணுகுண்டு போருக்கு உபயோகப் படுத்தப்பட்டுள்ளது. 2ம் உலகப்போரின் இறுதிக்கட்டத்தில் அமெரிக்கா தன்னை தாக்கிய ஜப்பானை தாக்கியழிக்க இரண்டு அணுகுண்டுகளைப் பயன்படுத்தியது.
லிட்டில்பாய் (Little Boy, சின்னப்பையன்) என்பது ஜப்பான் நகரான ஹிரோசிமா மீது 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் நாள் முன்காலையில் ஐக்கிய அமெரிக்காவினால் வீசப்பட்ட அணுகுண்டிற்கு இடப்பட்ட பெயர் ஆகும். இது அமெரிக்காவின் வான்படை விமானியான போல் டிபெட்ஸ் என்பவரால் எனோலா கே (Enola Gay) என்ற பி-29 ரக
விமானத்தில் இருந்து வீசப்பட்டது. இதுவே ஆயுதமாகப் பாவிக்கப்பட்ட முதலாவது அணுகுண்டாகும். இது 4000 கி.கி. நீளம் 9.84 அடி 3.0மீ விட்டம் கொண்டதாக இருந்தது.
இது விழுந்த 3வது நாளில் “கொழுத்த மனிதன்” (ஊஹற் ஙஹய்) என்றபெயரில் நாகசாகி நகரின் மீது வீசப்பட்டது. இது புளூட்டோனியம் கலவையைக் கொண்டு அமைக்கப்பட்ட ஆயுதம். ஊஹற் ஙஹய் 1800 அடிகள் (550 மீ) உயரத்திலிருந்து “பொக்ஸ்கார்” என்ற
பி-29 ரகப்போர் விமானத்திலிருந்து மேஜர் சார்லஸ் சுவீன் என்றபோர் விமானியால் வீசப்பட்டது. இக்குண்டு கிட்டத்தட்ட 21 கி. டன்கள் டி.என்.டி. அல்லது 8.78 ஷ் 1013 ஜூல் ‘ 88 பஒ அளவு ஆற்றலை வெளிப்படுத்தியது.
நாகசாகி மலைப்பாங்கான பகுதி என்பதால் ஹிரோசிமாவின் தாக்கத்துடன் ஒப்பிடும்போது இது சற்று குறைவான விளைவுகளையே ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட 39,000 பேர் அதே இடத்தில் கொள்ளப்பட்டார்கள். 25,000 பேர் காயம்பட்டார்கள். இந்த தாக்கத்தினால் பின்னர் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். 6.7 கி.மீ பரப்பளவும் முற்றாக எரிந்து சாம்பலானது. ஒட்டு மொத்தமாக இந்த குண்டுவீச்சுகளினால் 1,20,000 பேர் பலியானோர் எண்ணிக்கையாகவும், கதிரியக்கத்தினால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்காததாகவும் இருந்தது.
இக்குண்டு வீச்சுக்குப் பிறகு சுமார் இரண்டாயிரம் தடவைகள் சோதனைக்காக பல்வேறு நாடுகளால் அணுகுண்டு வெடிக்க வைக்கப்பட்டது. அமெரிக்காவுக்கும், சோவியத் ஒன்றியத்துக்கும் இடையே நடந்த கடும் ஆயுதப் போட்டியின் விளைவாக 1950களில் ஹைட்ரஜன் அணுகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. 1960களில் ஏற்பட்ட ஏவுகனை தொழில்நுட்ப வளர்ச்சியினால், அணுஆயுதங்களைத் தாக்கிச் செல்லும் ஏவுகணைகள் உருவாக்கப்பட்டது.
உலக வரலாற்றில் அணு ஆயுதங்கள் நாட்டின் ராணுவ பலத்தின் சின்னமாகவும், ராணுவ தொழில்நுட்ப வளர்ச்சியைப் பரைசாற்றும் முயற்சியாகவும் கருதப்பட்டது. அமெரிக்காவுக்கும், சோவியத் குடியரசுக்கும் இடையே நடந்த பனிப்போரின்போது அணுஆயுதப் பரிசோதனைகள் எச்சரிக்கை சமிக்கைகள் போல் பயன்படுத்தப்பட்டன. இவ்வாறு பனிப்போர் நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் மற்றசில நாடுகளான, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சீனா போன்றவை அணு ஆயுத தொழில் நுட்பத்தைக் கற்றுக்கொண்டு இருந்தன.
பின்னர் அமெரிக்கா, சோவியத் குடியரசு, இங்கிலாந்து, பிரான்சு மற்றும் சீனா ஆகியவை இணைந்து அணு ஆயுத பரவலைத் தடுக்க வழிசெய்யும் ஓர் ஒப்பந்தத்தை (சடப) உருவாக்கி மற்றநாடுகளையும் அதில் கையெழுத்திடுமாறு வலியுறுத்தின. ஆனால் இதன் சரத்துக்கள் விவாதத்துக்குரியவையாக சில நாடுகள் கருதியதால் இந்த ஒப்பந்தம் முழு வெற்றியடையவில்லை. ஒப்பந்தத்தை விட்டு விலகி சில நாடுகளும் (வடகொரியா), ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் சில நாடுகளும் (இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இஸ்ரேல்) அணு ஆயுத தொழில் நுட்பத்தை அடைந்தன. 1990களின் தொடக்கத்தில் பனிப்போர் முடிவுற்றசூழ்நிலையில் அமெரிக்காவும், ரஷ்ய கூட்டமைப்பும் தம் அணு ஆயுதங்களைப் படிப்படியாக குறைத்துக்கொள்வதாக அறிவித்தன.
2005ம் ஆண்டு ஜனவரி மாதம் பாகிஸ்தானைச் சார்ந்த பிரபல விஞ்ஞானி அப்துல் கதீர்கான், தான் ஈரான், லிபியா, வடகொரியா ஆகிய நாடுகளுக்கு அணு ஆயுத தொழில்நுட்பத்தை விற்றதாக ஒப்புக்கொண்டு வளர்ந்த நாடுகளுக்கிடையே ஒரு அதிர்ச்சி அலையை உருவாக்கினார். இத்தகைய நிகழ்வுகளையும் தன்னகத்தே கொண்டதுதான் ஆகஸ்ட் மாதம்.
1947 ஆகஸ்ட் 15ம் நாள் உலகம் உறங்கிய நள்ளிரவில் தேசத் தந்தை மகாத்மா இந்தியாவில் இருந்து ஆங்கில ஆட்சியை அகற்றிய நாளாகவும், இந்தியப் பிரதமர் தில்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றும் கடமையாகவும், அப்போது சுதந்திரப் போராட்ட தியாகிகளை நினைவுகூறி, அவர்களுக்கு மரியாதை செலுத்தி, கடந்த ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும், வரும் ஆண்டுக்கான குறிக்கோளையும் நாட்டு மக்களுக்கு அறிவிக்கும் நாளாகவும் மட்டும் இல்லாமல்,
அதிக செலவில் அரங்கேரும் திருவிழாவாகவும், பல சட்டங்கள் விவாதிக்கப்படாமலேயே நிறைவேற்றப்படும் சூழ்நிலையில் இருக்கும் நான்கு தூண்களில் ஒன்றான நாடாளுமன்றமும்,
சிவப்பு நாடாவில் சிறைபட்ட திறமையான நிர்வாக இயந்திரம் ஆளும் கட்சி அதிகாரிகள் எனவும், எதிர்கட்சி அதிகாரிகள் எனவும் பல கூறுகளாக பிளவுபட்டு கிடக்கும் இரண்டாவது தூணான நிர்வாக இயந்திரமும்,
நீதித்துறையில் தாமதம் என்பது தாராளம் என்பதற்கேற்ப 64 ஆண்டுகளில் சுதந்திர இந்தியாவில் தீர்ப்பு எழுதுபவர்கள் குற்றவாளிகளாகவும், குற்றவாளிகள் தீர்ப்பு எழுதுபவர்களாக மாறிடும் சூழல் எதிர்காலத்தில் உருவாகிடுமோ என்கிறதுயரத்தில் 3வது தூணான நீதித்துறையும்,
முற்றிலும் நம்பிக்கை இழந்த தூண்கள் என்பதைப்போல் தகவல் சாதனங்கள் என்றதகுதியை இழந்து வணிகப் பொருளாக வடிவம் மாறிவிட்ட நான்காவது தூணான ஊடகங்களும், தங்களுடைய கடமைகளை செவ்வனே நிறைவேற்றசூளுரை எடுத்துக்கொள்ளக் கூடிய நாளாகவே இருக்க வேண்டும் இந்த ஆகஸ்ட் மாதம்.