பொதுவாக நம்மில் பலர் அடிக்கடி நினைப்பதுண்டு அல்லது புலம்புவதுண்டு. “என்னோட தகுதிக்கு மேலே சோதனைகளும் சங்கடங்களும் வருகிறதே” என்று. அதுபோன்றசமயங்களில் வரும் சோதனைகள், பிரச்சனைகள் சுமைகளா? அல்லது நம் வாழ்க்கையைச் சுவையாக்குவதற்காக வந்தவையா என்பதை அமைதியாக ஆராய்ந்தால் பெரும்பாலும் சுவை கூட்டுவதற்காகத்தான் என்றதெளிவுவரும். சில சமயங்களில் நமது தவறான கணிப்பால் அல்லது செயலால் சுமைகளாகவும் வந்து சேரும். அனுபவித்துத்தான் தீர வேண்டும்.
சுமைகள்
பொதி சுமக்கும் உயிரினங்களைப் பலர் பார்த்திருக்கலாம். நகர்ப்புறங்களில் வசிப்பவர்களுக்கு இந்த வாய்ப்பைப் பள்ளிக் குழந்தைகள் வழங்கி வருகின்றனர். பாடப் புத்தகங்களின் எடை சிறுகுழந்தைகளின் எடையில் பாதியளவு வந்துவிடுகிறது.
குறைவான சுமைகள், நிறைந்த வசதி தரும் (Less Luggage; More Comfort) என்று கூறுகிறோம். ஆனாலும், செயலுக்கு வரும்போது பயணங்களில் தூக்க முடியாமல் சாமான்களைத் தூக்கிச் செல்லும் பெரும்பாலானவர்களாகவே இருக்கிறோம். காரணம், அடிப்படையைத் தெளிவாகப் புரிந்து கொள்ளாததுதான்.
சாதாரணமாகத் திருமணத்துக்குச் செல்பவர்கள், குறிப்பாகப் பெண்கள் பட்டுப்புடவை, தங்க நகைகள் அல்லது விதவிதமான கவரிங் நகைகள் அதீதமான ஒப்பனை என, இயல்புநிலைக்கு மாறாகத்தான் இன்றும் செல்கின்றனர். அவர்களிடம் மனமாறுதல் வந்தால் நிரந்தரமாக மகிழ்ச்சியைப் பெறுவார்கள். ஆனால், சிறிது நேர மகிழ்ச்சியைப் பெரிதாக அல்லவா எண்ணி எதிர்பார்த்துச் செல்கின்றனர்.
சுமை என்றால் நம் உடல் மீது எடுத்துச் செல்லும் பொருட்கள் ஒருவகை, மனதுக்குள் வைத்துள்ள எண்ணங்கள் மறுவகை என இருவகைப்படுகிறது. முதல்வகை சுமைகள் கண்களுக்குத் தெரியும். அதிக சுமைகளைச் சுமந்து செல்ல சிரமப்படுவதையும் காண முடியும்.
ஆனால், 2ம் வகைச் சுமை, அதாவது மனச்சுமைகள், மற்றவர்கள் கண்களுக்குத் தெரியாதது மட்டுமல்ல. பலசமயம் சுமையை சுமப்பவருக்கே தெரியாமலும்கூட அடிமனதில் நங்கூரமிட்டுப் பதுங்கியிருக்கும்.
இந்த இருவகை சுமைகளை மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான சுவைகளாக மாற்றமுடியுமா?
நிச்சயமாக முடியும்.
முயன்றால் முடியாதது ஒன்றுமே இல்லை.
“ஊழையும் உப்பக்கம் காண்பர்” என்றார் பொய்யாமொழி.
எப்படி?
உலைவின்றித் தாளாது உஞற்றினால்…
என்று வழியையும் காட்டினார்.
இடைவிடாமுயற்சி தான் தேவை. சுமைகளை வாழ்வின் சுவைகளாக்கத் தேவை இடைவிடாமுயற்சி தான். எப்படி எனப் பார்ப்போம்.
ருசியான சமையல்
பிறந்தது முதல் இறக்கும் வரை நாம் சாப்பிட்டே உயிர் வாழ்கிறோம். சாப்பாடு சுவையாக, ருசியாக இருப்பதைப் பல நாட்கள் அனுபவித்து சாப்பிட்டிருப்போம். மேலும் பல நாட்கள் ஏதோ சாப்பிட்டோம் என முடித்திருப்போம். ஒரு சில நாட்கள் கடனே எனச் சாப்பிட்டிருப்போம்.
சாப்பாட்டுக்கு எப்படி சுவை வருகிறது? என ஆராய்ச்சி செய்து பாருங்கள். பயன்படுத்தும் பொருட்களினாலா? உபயோகிக்கும் நெருப்பினாலா? செய்பவர்களது விருப்பமான மனநிலையாலா? என உங்களுக்குத் தெரிந்தவாறெல்லாம் சிந்தியுங்கள். தெளிவு கிடைத்துவிடும். பிறகு சுமையில்லா வாழ்க்கைக்கு நீங்கள் தயாராகிவிட்டீர்கள்.
விருப்பம்
“எந்த ஒன்றைநாம் விரும்புகிறோமோ, அந்த ஒன்று நமக்கு சுவையாகத் தெரியாது” இது மூத்தோர் சொல். அடிப்படையே விருப்பம் தான். வண்டியின் அச்சாணி போன்றது வாழ்க்கைக்கான விருப்பம். இன்னும் பலர் வாழப்பிடிக்காமலேயே வாழ்ந்து கொண்டிருப்பதை அடிக்கடி சொல்லிக் கொள்கிறார்கள்.
“என்ன வாழ்க்கை”
“ஏதோ, உங்க தயவுலே”
“ஏன் தான் பொறந்தேனோ?”
“எல்லாம் என் தலையெழுத்து”
“என்னாலே முடியாது”
“எனக்கு மட்டும் ஏன் இவ்ளோ கஷ்டம்”
இதுபோன்று பலவிதமான புலம்பல்களை அன்றாடம் ஆகாய வெளியில் கலக்கவிடும் பலர் உள்ளனர்.
இவர்கள் செய்ய வேண்டியது ஒரு சிறுசெயல்தான்.
வாய்க்காலில் நீர் ஓடி, சிறுசிறு வயல்கள் வழி பாய்ந்து செல்வதை, வேறு வயலுக்கு மாற்றமடைமாற்றம் செய்வது போல் தடை மற்றும் மாற்றம் இரண்டும் செய்ய வேண்டும்.
இதுபோன்றபுலம்பல்களைத் தடை செய்ய வேண்டும். பிறகு சுவையாக, மகிழ்ச்சியாக வாழ வேண்டுமென்றவிருப்பத்தை ஆழ்மனதில் விதைக்க வேண்டும். விருப்பத்துடன் எதை எண்ணினாலும், பேசினாலும் செய்தாலும் மிக அதிக அளவு பலன்களே வந்துசேரும்.
சில உதாரணங்கள்
அண்ணல் காந்தியடிகள் சுதந்திர இந்தியாவை விரும்பி செயல்பட்டார். அவர் தலைமையில் இந்தியர்கள் அணி திரண்டதால், ஆங்கிலேயர்கள் நம் நாட்டைவிட்டு அகன்றனர்.
ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த ஜி.டி. நாயுடு மோட்டார் பைக்கை வாங்க விரும்பினார். வாங்கியதுடன் மிகப்பெரிய தொழில் அதிபராகவும் முன்னேறினார்.
இதுபோல் பல உதாரணங்களை உங்கள் பகுதியில் தேடுங்கள். நிச்சயம் காண முடியும்.
மனமிருந்தால் மார்க்கம் உண்டு
என்னால் முடியாது என எண்ணிவிட்டால், உற்சாக ஊற்றுக்கண்கள் அடைபட்டுவிடும். தோல்வி தலைவிரித்து அணைத்துக் கொள்ளும். மனதளவில் ‘முடியும் முடியும்’ என்று சிந்தித்தால், முடிப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் தேடிவரும். விழிப்பு நிலையிலிருந்து படித்துக் கொண்டோரெல்லாம் வெற்றிபெற்றார். தூங்கிவிட்டோரெல்லாம் இன்னும் புலம்பிக் கொண்டே இருக்கின்றனர்.
எப்போது விருப்பம் வரும்
விரும்புவது என்பது பேச்சுக்கு சுலபமாயிருந்தாலும், செயலுக்கு வரும்போது கடினமானதுதான். நம்மில்பலர் பெரிய பெரிய பிரச்சனைகளுக்கான தீர்வுகளை மிகச்சுலபமாக மற்றவர்களுக்குக் கூறுகிறார்கள். தனக்கென்று வரும்போது முடங்கிவிடுகிறார்கள். இதற்குக் காரணம் ஈடுபாடில்லாத நிலையாகும் (Lack of Involvement).
முன் அனுபவங்கள்
சுய ஆதாயங்கள்
மனத்திருப்தி
உள்ளார்ந்த ஈடுபாடு
ஆகியவைகளால் விருப்பம் வருவதற்கான வாய்ப்புகள் வந்து சேரும். அதன்பிறகும் நாம் தான் அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி விரும்ப வேண்டும்.
அறிவுநிலை
விரும்புவதற்கான வாய்ப்புகளை உருவாக்கி, செயலுக்குக் கொண்டுவருவதால் விருப்பம் உண்டாகும் என்பதைத் தெரிந்து கொண்டோம். அடுத்து நமக்குள்ள ஆறாவது அறிவு என்றபகுத்தறிவைக் கொண்டும் சுமைகளை மாற்றிக் கொள்ள முடியும்.
“இதற்கு ஒன்றைவிட வேண்டும்;
ஒன்றைப் பிடிக்க வேண்டும்”
எதை விடுவது? … ஆத்திரத்தை … !
எதை பிடிப்பது? … அறிவை … !
“ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு” இது மூத்தோர் சொல். ஆத்திரப்பட்டால் புத்தி வேலை செய்யாது. ஆறாவது அறிவு வேலை செய்யாத போது, மிருக குணங்கள் மேலோங்கும். அவை செயலுக்கு வந்து சுமைகள் மேலும் பல தொல்லைகளைத் தரும்.
கண்ணியம், திறமை, புத்தி இந்த மூன்றும் நமது ஆறாவது அறிவின் வெளிப்பாடாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் ஆத்திரமும், தொடர்ந்து கோபமும் கொள்ளக் கூடாது. இவை இரண்டும் சேர்ந்து அறிவைத் துரத்திவிடும்.
முயற்சி திருவினையாக்கும்
முயற்சி, அதுவும் விடாமுயற்சி; மேலும் இடை விடா முயற்சி. இதுதான் இன்றைய தேவை. “கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்” கிராமங்களில் இன்றும் பெரியோர்கள் கூறிவரும் சொற்கள் இவை. கல்லைக் கரைக்க முடியுமா? முடியும்.
திருவள்ளுவர் ஒரு துணியில் மணலை மூட்டையாகக் கட்டி எடுத்துக்கொண்டு, பெண்பார்க்கச் செல்வாராம். இந்த மணலை சாதமாக சமைக்கும் பெண்ணையே மணந்து கொள்வதாய் கூறி, பல வருடங்கள் காத்திருந்தார். அவருக்காகவே பிறந்த வாசுகி அம்மையார், புத்திசாலித்தனமாக, மணல் துணி மூட்டையை வாங்கி, அடுப்படிக்குச் சென்று, அரிசியை உலையில் இட்டு சாதம் சமைத்தார். மணலை வெளியே கொட்டிவிட்டார்.
இதைத்தானே, இந்த சமயோசிதமான, அறிவுபூர்வமான செயலைத்தானே திருவள்ளுவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தார். அவருக்குத் தெரியாதா? மணலில் சாதம் சமைக்க முடியாதென்று.
இதுபோன்றேநாம் நம் வாழ்க்கையில் முயற்சி செய்து கொண்டு செயல்படுகிறோம். ஒருசில வெற்றிகளைப் பெறுகிறோம். பல தோல்விகளைத் தழுவுகிறோம்.
மேலும் விடாமுயற்சி அதாவது தொடர் முயற்சி செய்கிறோம். பாதிக்குப்பாதி வெற்றி பெறுகிறோம்.
முயற்சி, முயற்சி என்று இடைவிடாமல் சதாநேரமும், அதாவது எந்நேரமும் முயற்சியின் மீதே மூச்சாக, சிந்தனையாக இருப்பதே இடைவிடா முயற்சி. இந்நிலையில் தான் சுமைகள் எல்லாம் சுவையாக மாறுகின்றன. தொடர்ந்து சுகத்தைத் தருகின்றன.
சுமை – என்ன?
ஓர் ஆட்டோ வில், படகில் அல்லது லிப்டில் இவ்வளவு பேர்தான் பயணம் செய்யலாம் என வரையறைஉண்டு. அதற்கும் அதிகமாய் பயணம் செய்தால் என்ன ஆகும்? ஓவர்லோடு? விபத்துதானே.
சுமைகளுக்கான காரணங்கள் என்ன?
அதிக பொறுப்புகள் (Responsibilities)
- தகுதிக்கும் மேலாக புகழ் எதிர்பார்த்தல்
- வறட்டுத்தனமான டாம்பீகமான பேச்சுக்கள்
இன்னும் இவைபோல் பல உங்கள் எண்ணத்தில் தோன்றும்.
இவைகளையெல்லாம் தனித்தாளில் எழுதுங்கள். இவையெல்லாம் நம் இன்பமான வாழ்க்கையைப் பாதிக்கும் சுமைகள். எனவே, இந்தச் சுமைகள் நமக்குத் தேவையா? எனச் சிந்தியுங்கள்.
வெரிகுட், தேவையில்லையென்று முடிவு செய்து விட்டீர்கள்.
இனி அவைகளை நம்மிடமிருந்து நம் உள்ளத்திலிருந்து அப்புறப்படுத்திவிட வேண்டியது தானே.
ஆம்.
நெருப்புவைத்து இந்தச் சுமைகளைக் கொளுத்துங்கள். சுமைகள் குறைய, குறைய வெற்றிடம் கூடும். இப்போது பாருங்கள். மனம் லேசாக இருக்கும். மகிழ்ச்சியாக இருக்கும். இந்நிலைதான் சுவையின் ஆரம்பம்.
சுவை – அதிகரிப்பு
சுவைகள் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். எனவே, யாருடனும் ஒப்பீடு செய்யக்கூடாது. உங்களுக்கு எப்படி எனக்கண்டுபிடியுங்கள்.
சுவையே இல்லாதபோது சுவையை உணரும் நிலைதான் உயர்ந்த நிலை. இந்த நிலையை மனோசித்திரமாய் உணரவேண்டும். காட்சி என்பது இல்லாததைக் காண்பது (யண்ள்ண்ர்ய் ண்ள் நங்ங்ண்ய்ஞ் ஐய்ஸ்ண்ள்ண்க்ஷப்ங் ஞய்ங்). இப்படிப்படட நிலையில் வெற்றிகள் ஒருவரிடம் வரிசையாக நின்று, காத்திருந்து வந்து சேரும்.
வெற்றியாளனுக்கு செயல் பாரமில்லை.
தாய்க்கு குழந்தை பாரமில்லை
மண்ணுக்கு மரம் பாரமில்லை
எனவே, சுவையான, இன்பமான வாழ்க்கைக்கு சுமைகள் தடைகள் அல்ல என்றஎண்ணம் மனதில் கொலுவாக வீற்றிருக்க வேண்டும்.
சரி, உங்கள் எடை சுமார் 60 கிலோ. உங்களால் 20 கிலோ எடையை மிகச் சுலபமாக எடுத்துச் செல்லமுடியும். ஆனால் 60 கிலோ எடையை எப்படி எடுத்துச் செல்வது?
இங்கு தேவை திட்டமிடுதல் (டப்ஹய்ய்ண்ய்ஞ்) பகுதி, பகுதியாகப் பிரித்து எடுத்துச் செல்வதால், செயல்படுவதால் சுமையின் தாக்கம் தெரியாமல், பணி நிறைவில் சுவை தரும் சுகமே மேலோங்கும்.
தவிர்க்க வேண்டியவை
தன்னம்பிக்கையின்மை, அனுபவம் இல்லை என்றஎண்ணம், பயம், முந்தைய தோல்விகள், ஒப்பீடு போன்றபலவற்றைத் தவிர்க்க வேண்டும்.
அதிகரிக்க வேண்டியவை
சிறுவயது சாதனைகள், பெற்றவெற்றிகள், மற்றவர்களின் வழிகாட்டுதல்கள், பெற்றபரிசுகள், மகிழ்ச்சியான நாட்கள் போன்றவைகளை ஒவ்வொரு நாளும் நினைத்து, நினைத்து அதிகரித்துக் கொள்ள வேண்டும். இதனால் தன்னம்பிக்கை கூடும்.
மாறும் சுவைகள்
சுவை என்றால், உடனே நினைவுக்கு வருவது ஆறு சுவைகள் தான்.
இனிப்பு, கார்ப்பு, துவர்ப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு இவைதான் நாம் உணவு மூலம் அறியும் ஆறு சுவைகள்.
இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு தன்மையுண்டு. அதிகரித்தாலும், குறைந்தாலும் உடல் ஆரோக்கியம் கெடும்.
இந்தச் சுவைகள் இயற்கை பருவங்களுக்கேற்ப (நங்ஹள்ர்ய்)வும், அவரவர் மன நிலைக்கேற்ப (ஙங்ய்ற்ஹப்ண்ற்ஹ்)வும் மாறுபடுகின்றன.
நம் மனதுக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு. இல்லாத சுவையை மனதில் உணர சுவைக்க முடியும். இருக்கின்றசுவையை மாற்றமுடியும்.
எதிர்பார்ப்பு குறைகின்றபோது இந்தச் சுவைகளுள் எவை நமக்குத் தேவையோ அவை தானாகவே வந்துசேரும்.
ஐஸ் கிரீம் சுவை, சாக்லேட் சுவை இந்த இரண்டும்தான் பெரியவர்களுக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்த சுவை. இதுபோன்றேநம் வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களை ஐஸ் கிரீமாகவும், சாக்லேட்டாகவும் மாற்றும் திறமையைப் பெற்றுவிட்டால் என்றுமே இன்பம் தானே.
சரி, இந்தச் சுவைகளைப் பெறுவதற்கு என்ன செய்வது?
நண்பர் ஒருவரிடம் உரையாடிக் கொண்டிருந்த போது, “உங்களது பல பணிகளுக்கு, இந்தப் புதிய பொறுப்பு சுமையாகிவிடாமல் செயல்படுங்கள்” என்றேன். அவர் சுமையல்ல, அய்யா இப்பொறுப்பு சுவையானதன்றோ என்றார். எப்படி அவரால் கூறமுடிந்தது?
விருப்பமும், ஈடுபாடும் தான் காரணங்கள்
இராமாயணத்தில் லட்சுமணன் மூர்ச்சையைத் தெளிவிக்க, சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்து வந்த அனுமனின் விருப்பம், ஈடுபாடு;
அமெரிக்க நாட்டின் பொருளாதார பாதிப்புகளைப் பல நாடுகளுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டி, சமீபத்தில் இந்தியாவுக்கு வந்து சென்ற, அதிபர் பராக் ஒபாமாவின் விருப்பம், ஈடுபாடு;
எத்தனை ஊழல்வாதிகள் இருந்தாலும் இந்தியாவை வல்லரசாக்குவதில் முனைப்புடன் செயல்பட்டுவரும் முன்னால் குடியரசுத்தலைவர் திருமிகு. ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் போன்றோரின் விருப்பம், ஈடுபாடு;
அரசு சலுகைகளை, சுகங்களை, சுவைத்ததால் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்காக, கூட்டணிகளை மாற்றத்தயாராகும் அரசியல் தலைவர்களின் விருப்பம், ஈடுபாடு;
அரசாணையில் மட்டும் இருந்தால் போதாது. செயல்பாட்டுக்கு வரவேண்டும் என்று, பக்கத்து மாநிலங்கள் போன்று ஆட்டோ ரிக்‘ôக்களுக்கு மீட்டர் கட்டண நடைமுறைக்கு, வழக்கு உள்ளிட்ட பல வழிகளிலும், முயன்றுவரும் பல நல் உள்ளங்களின் விருப்பம், ஈடுபாடு;
இவைபோன்று பல கூறலாம்.
எண்ணங்களை விதையுங்கள். கட்டாயம் முளைக்கும். களைகள் போன்றசுமைகளை இனங்கண்டு விலக்குங்கள். சுவைகளைத் தேர்வு செய்து, வாழ்வில் மகிழ்ச்சியை அனுபவியுங்கள்.
வாழ்க வளமுடன்