தட்டுங்கள் திறக்கப்படும்…
மேதகு முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் அவர்கள் அணுசக்தி விஞ்ஞானியாக இருந்த காலத்தில், ஒருநாள் அவருடைய விஞ்ஞானக் கூடத்தில் அவரிடம் வேலை பார்த்துக் கொண்டிருந்த இளம் விஞ்ஞானி ஒரு வேண்டுகோளை வைத்தார். “நான் என் குழந்தைகளை கண்காட்சிக்கு அழைத்துச் செல்வதாக வாக்குக் கொடுத்திருக்கிறேன்”. மாலை 5.30 மணிக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று விண்ணப்பித்தார். அப்துல்கலாம் அதற்கு சம்மதம் தெரிவித்தார்.
வேலை மும்முரத்தில் மூழ்கிப்போன விஞ்ஞானி இதை மறந்து போனார். கடிகாரத்தைப் பார்த்த போது இரவு 8.30 மணி ஆகி இருந்தது. வீட்டில் குழந்தைகளை கண்காட்சிக்கு அழைத்துச் செல்வதாய் இருந்தோமே, நேரம் போவது தெரியாமல் மறந்து விட்டோமே, குழந்தைகள் ஏமாந்து போயிருப்பார்களே என்று தன்னைத்தானே நொந்து கொண்டு வருத்தப்பட்டார்.
வருத்தத்துடனும், பயத்துடனும் வீட்டிற்குப் போனார். வீட்டில் மனைவி மட்டுமே இருந்தார். குழந்தைகள் எங்கே? என்று கேட்டதும், மனûவி சொன்னார், “உங்கள் மேலதிகாரி கலாம் அவர்கள் வந்து குழந்தைகளை கண்காட்சிக்கு அழைத்துச் சென்றுள்ளார்” என்று சொன்னார். அந்த இளம் விஞ்ஞானி ஆனந்தத்தாலும், மகிழ்ச்சியாலும் வாயடைத்துப்போனார்.
இளம் விஞ்ஞானி வேலையில் மூழ்கி விட்டதைப் பார்த்த கலாம் அவர்கள், அவருடைய கவனத்தை கலைக்க விரும்பாமல், குழந்தைகளின் கனவையும் கலைக்க விரும்பாமல் தானே அந்த வீட்டிற்கு சென்ற குழந்தைகளை கண்காட்சிக்கு அழைத்துச் சென்றார். கலாம் அவர்களுக்கு இருந்த தடுக்க முடியாத நேர்மறை ஈர்ப்பு (Irresistibly Attractive) அதிர்வு அலைகளும், இளம் விஞ்ஞானிக்கு இருந்த நேர்மறை ஈர்ப்பு அதிர்வு அலைகளும் ஒரே திசையில் பயணித்ததால்தான், இளம் விஞ்ஞானி என்ன நினைத்தாரோ, அதை செயலில் செய்து காட்டினார் டாக்டர் அப்துல் கலாம் அவர்கள்.
தடுக்க முடியாத ஈர்ப்பு (Irresistibly Attractive) என்றால் என்ன?
ஒருவர் தடுக்க முடியாத ஈர்ப்புடன் இருப்பது எப்படி? இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கேள்வி இது தடுக்க முடியாத ஈர்ப்பு என்பது ஒரு சக்தி. ஒவ்வொருவருக்குள்ளேயும் இருக்கும் ஒரு உந்து சக்தி. நம் மனதிலே அந்த சக்தி உருவாகிறது. சக்தி நம்மைச் சுற்றியே இருக்கிறது. நம்மை சுற்றி இருப்பவர்களிடமும் இருக்கிறது. அந்த சக்தி உண்மையானது. கண்ணுக்குப் புலனாகாதது. ஆனால், வலிமையானது. நம்மிடம் உள்ள அந்த உந்து சக்திதான் (Irresistibly Attractive) நம்மை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்கிறது.
நம்மிடமுள்ள அந்த சக்தி அலை நம்மிடமிருந்து நம்மைச் சுற்றி இருப்பவரிடமும் பரவுகிறது. நமக்குப் பக்கத்தில் இருப்பவருடைய சக்தியும், நம்மை நோக்கி சக்தி அலைகளாக திரும்பி வருகிறது. இதை சோதித்துக்கூட பார்க்க முடியும். நம்முடைய கைகளை அடுத்தவர்களுடைய கைகளுக்கு பக்கத்தில் ஒரு அங்குல இடைவெளி விட்டு 2 நிமிடம் வைத்துப்பாருங்கள். நம் சக்தி அடுத்த உடலுக்குள் பாய்வதையும், அடுத்த உடலில் உள்ள சக்தி நம்மை நோக்கி வந்து மின் அலைகளைப் போல நமக்குள் பிரவேசிப்பதையும் உணரலாம். பாம்பின் கால் பாம்பு அறியும் என்பதைப்போல நம்மிடமுள்ள நேர்மறை அதிர்வுகள் அதே நேர்மறை அதிர்வுகள் கொண்ட பக்கத்தில் உள்ளவர்களின் அதிர்வுகளோடு கலக்கும்.
இந்த இதழை மேலும்
0 comments Posted in Articles