– 2016 – June | தன்னம்பிக்கை

Home » 2016 » June

 
  • Categories


  • Archives


    Follow us on

    என் பள்ளி

    தமிழ்நாட்டின் கல்வி மாவட்டம்  என்று அழைக்கப்படும் நாமக்கல்  மாவட்டத்தில்  தான் பிறந்தேன்.. இதே ஊரில்  என்னுடைய தந்தை  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  பணிப்புரிந்தார். என் தாயார்  ஆசிரியராக இருந்து விருப்ப ஓய்வுப் பெற்றார். எனது  தங்கை திருமதி நந்தினி அவருடைய கணவா திரு. சு.அறிவுடைநம்பி அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வேளாண் துறைப் பேராசிரியராக இருக்கிறார்.  இருவரும்  தற்போது  சிதம்பரத்தில்  வசித்து  வருகிறார்கள்.

    என்னுடைய தாத்தா மற்றும்  அவருடைய அண்ணன் தம்பிகள் மற்றும்  சித்தப்பா, பெரியப்பா என்று  அனைவருமே  அரசுப் பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வுப் பெற்றவர்கள். அதனால்  எங்கள் குடும்பத்தை வாத்தியர்  வீட்டு குடும்பம்  என்று வாத்தியார் பரம்பரை  என்றும்  அழைப்பார்கள். அதனால்  தான் சின்ன வயதிலிருந்தே ஆசிரியர்  பணியின்  மீது ஆர்வம்  எனக்குள் வந்தது.

    மேலும் ஒரு  ஆசிரியரை தான் திருமணம்  செய்து  கொள்ள வேண்டும்  என்று  நினைத்தேன்  இறைவன்  அருளால்  அதுவும்  எனக்கு கிடைத்தது. வள்ளியம்மாள் என்பரை மணந்து  கொண்டேன். எங்களின்  ஆசிரியர்  குடும்பத்தின்  அடுத்த  வரிசு நிரஞ்சன் எட்டாம்  வகுப்பு படிக்கிறார்.

    நாமக்கல்  நகரின் நடுவே அமைந்துள்ள சந்தைப்பேட்டைப் புதூர் அர்த்தனாரி நிதியுதவி பெறும்  தொடக்கப்பள்ளியில்  என்னுடைய முதல்  வகுப்பு கல்விப்பயணம்  அமைந்தது.  இப்பள்ளியில்  திருமதி. பார்வதி ஆசிரியையின் பொற்கரங்களால்  விரல் பிடித்து எழுதவும்  படிக்கவும் தொடங்கினேன். இப்பள்ளி வரலாற்று சிறப்பு மிக்க நூற்றாண்டு கொண்டியப் பள்ளி.

    முடிவுகள் தெளிவாகட்டும்

    அன்று –  மாலை நேரம்.

    என்னை சந்திக்க வந்தார் நண்பர் ராஜாராம்.

    “சார்… பிளஸ் 2 ரிசல்ட் வந்துவிட்டது. என் மகன் 1200க்கு 1030 மதிப்பெண்கள் பெற்று, வெற்றி பெற்றிருக்கிறான். அவனை எந்தப்படிப்பில் சேர்க்கலாம்…?” என்று கேட்டார் ராஜாராம்.

    “நீங்கள் அவனை எந்தப் படிப்பில் சேர்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்…?” என்றேன்.

    “நான் அவனை எம்.பி.பி.எஸ்., படிப்பில் படிக்க வைக்க விரும்புகிறேன். ஆனால், அவன் பி.இ., படிப்பில் சேர விரும்புகிறான். அவனது நண்பர்கள் எல்லோரும் பி.ஏ., பி.எஸ்.சி., யில் ஏதாவது பாடம் எடுத்து படி என்கிறார்கள். பக்கத்து வீட்டு பேங்க் மேனேஜர் அவனை பாடெக்னிக்கில் சேர்ப்பதுதான் சிறந்தது எனச் சொல்கிறார். நாங்கள் குழம்பிப்போய் இருக்கிறோம். என்ன செய்வதென்றே தெரியவில்லை,” என்று வருத்தத்துடன் சொன்னார் நண்பர்.

    “இதில் என்ன குழப்பம் இருக்கிறது…? உங்கள் பையன் எதை விரும்புகிறானோ, அந்தப்படிப்பில் சேர்த்துவிட்டு, நன்றாகப்படிக்கச் சொல்லி உற்சாகப்படுத்த வேண்டியதுதானே…?” என்றேன்.

    நண்பர் ராஜாவுக்கு கோபம் வந்துவிட்டது. “என்ன சார் இப்படி சொல்றீங்க. அவன் சின்னப்பையன். அவனுக்கு என்ன தெரியும்…? அவன் நினைத்த கோர்ஸிலெல்லாம் நான் சேர்த்து படிக்க வைக்க முடியுமா…?” என்று சற்ற சூடாகவே பேசினார்.

    நான் அமைதியாக இருந்தேன். நண்பர் விடவில்லை.

    நான்கூட படிக்கிற காலத்தில் எம்.பி.பி.எஸில் சேரத்தான் நினைத்தேன். எனக்கு வாய்ப்பில்லை. ஆனால், என் குறிக்கோளை இதன் மூலம் நிறைவேற்றலாம் என்ற நினைக்கிறேன். பையனுக்கு ஆர்வம் இல்லை. இப்போதுள்ள பிள்ளைகள் சொன்னால் கேட்கவா செய்கிறார்கள்…? என்றும் வருத்தப்பட்டார்.

    பாடம் சொல்லும் பறவைகள்……

    பறவையைக் கண்டான்; விமானம் படைத்தான்; பாயும் மீன்களில் படகினைக்கண்டான்; மனிதன் மாறிவிட்டான்; வந்தநாள் முதல் இந்த நாள் வரை வானம் மாறவில்லை.

    இது ஒரு திரைப்படப்பாடல்.

    இயற்கை படைத்த கோள்கள். தாவரங்கள் அனைத்து உயிரினங்களும் அப்படியே உள்ளன. ஆனால், மனிதன் மட்டும் மாறிவிட்டான்.

    ஏன்…?

    மாறுவதற்காகவே படைக்கப்பட்டவன் மனிதன். அதனால்தான், இவனுக்கு மட்டும் பகுத்தறிவு என்னும் ஆறாவது அறிவை இயற்கை வைத்துள்ளது.

    எனவேதான், பரிணாம வளர்ச்சியின் ஆரம்பத்தில், மிருகங்கள் போல் வாழ்ந்த மனித இனம், தம் பகுத்தறிவால் இன்றைய வளர்ச்சியை அடைந்துள்ளது.

    இயற்கை வளங்களை வாழ்க்கை வசதிகளாக மாற்றி, அனுபவித்து வருகிறோம். இதனால், இன்பமும் வருகிறது, துன்பமும் வருகிறது. எதையுமே அளவோடு உபயோகித்தால் துன்பத்தைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.

    ஆனால், துன்பப்படுவதற்கென்றேபலர் பிறந்து வாழ்ந்து வருகின்றனரோ என எண்ணத்தோன்றுகிறது. கிடைத்த வாய்ப்பை மறுத்துவிட்டு, மீண்டும் அது வராதா என ஏங்கும் பலரை நாம் பார்க்கிறோம்.

    ஒவ்வொரு உயிரின் வாழ்க்கையும் முறைப்படுத்தப்பட்ட வழியிலேயே செல்கிறது, மனிதனின் வாழ்க்கையைத் தவிர.

    இணையப்பழக்கம், நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகள், தற்காலிக இன்பத்தின் மீதான மயக்கம் விரும்பி அனுபவிக்க வேண்டுமென்றதலையெழுத்து என்று சொல்லிக் கொள்ளும் வினைப்பதிவுகளுக்கான விளைவுகள் என்பவை முறையற்றவாழ்க்கைப்பாதையில் மனிதனைத் தள்ளி விடுகின்றன.

    “கற்றது கையளவு; கல்லாததது உலகளவு” என்றபொன் மொழியை நினைவில் கொள்வோம். ஒவ்வொரு நிகழ்வுகளிலிருந்தும் நாம் கற்க வேண்டியவை ஏராளம். இந்த வகையில் பறவைகளிடமிருந்து நாம் கற்க வேண்டியவை எவை எனப்பார்ப்போம்.

    தேர்வு வாழ்க்கையும் வாழ்க்கை தேர்வும்

    நான் கருப்பு  நிறந்தான். ஆனால்  கருப்பு  தான் எனக்கு பிடித்த  கலரு  என்பவர்களைப் போல என் நிறம்  விரும்புபவர்கள்  அதிகம். கருப்பு நிறம்  மாறினால்  கவலைப்படுபவர்களும்  நிறையப் பேர். என்னை சாயம்  பூசி  அழகு பார்ப்பதும், மிக அதிக பொருட் செலவில்  மீட்டு  நட்டு  பெருமை  கொள்வதும்  உண்டு . அனாஜென், மெட்டாஜென், டிலோஜென் என்று  என்  வாழ்க்கை  மூன்று நிலைப்படும்.

    வாழ்க்கை  என்றதும்  நல்ல  வாழ்க்கையை  தேர்வு செய்வது  எப்படி  என்று ஒரு  எண்ணம்  பிறக்கலாம் . தேர்வுகளில்  வெற்றி பெற்றால்  வளமான வாழ்வு அமையும்  என்றும்  சொல்வேன்.

    தேர்வு எழுத  தயார்  செய்கின்ற காலக்கட்டத்தை  தேர்வு வாழ்க்கை என்றும்…வாழ்வை வாழ்கின்ற முறையை தேர்தெடுக்கின்ற  செயலை  வாழ்க்ககை  தேர்வு  என்றும்  பிரிக்கின்றேன். கருப்பாக  ஆரம்பித்து வெளுத்துப் போய்  முடிகின்ற என் வாழ்வில் பல தேர்வுகளுக்கு தயாரித்த  அனுபவமும் பல வாழ்வை கண்ட நினைவுகளும் உள்ளன. நான் யாரென கவலைப்படாமல்  அப்பொருள்  மெய்ப்பொருள் காண கேட்டுக் கொள்கிறேன். வழக்கம்  போல்  கடைசி பத்தியில்  சொல் விடுகிறேன்.

    பள்ளித் தேர்வு, கல்லூரித் தேர்வு, வாழ்க்கைத்தேர்வு, திருமண வயதில் மணமக்கள்  தேர்வு செய்யும்  மணப்பெண் தேர்வு, மதிப்பெண்

    தேர்வு, போட்டித் தேர்வு, நட்புத் தேர்வு,  விளையாட்டில் வீரர்கள்  தேர்வு, அலுவலகத்தில்  பதவித்  தேர்வு என தேர்வுகள்  ஏராள வகைப்படும். . பல குடும்பங்கள்  இராசிபுரம், திருஞ்செங்கோடு, சென்னை, டெல், பெங்களூர், ஹைதரபாத்,  வெளிநாடு  என்று தங்கள்  குழந்தைகள்  படிக்கின்ற இடத்திற்கே  புலம்  பெயர்ந்து, தங்கள்  சுக துக்கங்களை அந்தப் பகுதியை மையமாக வைத்து  வாழ்வதை  தேர்வு  வாழ்க்கை என்று  கூறுகிறேன். தேர்வுகள் ஆரம்பித்து  அவற்றை  கடக்கின்ற காலக்கட்டத்தை  போர்கால  அடிப்படையில்  சந்திக்கும்  முஸ்தீபுகள் தினந்தோறும்  படிப்படியாக  மேற்கொள்ளப்படுகின்றன.

    தந்தையரைப் போற்றுவோம்

    நான் பட்ட கஷ்டம்,என் பிள்ளைகள் படக்கூடாது என்று தன்  வாழ்நாளை பிள்ளைகளின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிக்கும்  தந்தையரைப் போற்றும் வகையில்  ஆண்டுதோறும்  தந்தையர் தினம்  ஒவ்வொரு ஆண்டும் ஜீன் மாதம்  3 வது  ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. சிறு வயதிலேயே பிள்ளைகளுக்குத்  தந்தையை மதிக்க கற்றுத்  தருவதே இத்தினத்தின் நோக்கம்.

    தாய் பத்து மாதம்  வயிற்றில்  சுமக்கிறாள்.  தந்தை ஆயுள் முழுக்க நெஞ்சில் சுமக்கிறாள். தாயின்  அன்புக்குச் சற்றும் குறையாதது தந்தையின் அன்பு. குடும்பத்திற்காக மாடாய் உழைத்து, ஒடாய் தேயும்  தந்தைக்கு, தாயைப் போல பாசத்தை வெளிக்காட்டத்  தெரியாது.கல்வி முதல்  கல்யாணம்  வரை அனைத்திலும் தந்தையின்  பணி அளவிட முடியாதது.

    அப்பா …நம் மனத்தை ஆழமாகத் தொடும் வார்த்தை. அவரின் கரம்  பிடித்து நடக்கையில் , கவலைகள் அனைத்தும் மறந்து போகும் . நான் இருக்கிறேன். எதற்கும்  கவலைப்படாதே என்று தாங்கி பிடிக்கும் நம்பிக்கையின் நிழல். வாழ்க்கையில் எதிர் நீச்சலை கற்றுத் தரும் ஆசான். தன் வியர்வைத் துளிகளை நம் வளர்ச்சிக்கு உரமாக்கும் தியாகி.

    தனக்கு படிப்பு வாசனையே இல்லாவிட்டாலும் உயர்ந்த நிலைக்குச் செல்ல வேண்டமென்று நம்மை தோளில்  சுமந்து உலகைக் காட்டும் கலங்கரை விளக்கம். நாம்  வளர்ந்து தந்தையான பிறகும்  கூட நம்மை சிறு பிள்ளையாகவே பார்க்கும் ஒரே  ஜீவன். தந்தையர்  தினம்  தோன்றிய  வரலாறு சற்று  வித்தியாசமானது. 1862 ஆம்  ஆண்டுகளில் அமெரிக்க ராணுவ வீரராக இருந்த வில்லியம்  ஜாக்சன் ஸ்மார்ட் என்பவர் அவரது மனைவி எல்லன்  விக்டோரியா ஸ்மார்ட்டுடன் வாஷிங்டன் அருகே வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு முதல் குழந்தையாக மகள் சொனோரா ஸ்மார்ட் பிறந்தார்.  அதன் பிறகு அடுத்தடுத்து நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தன. சொனேராவுக்கு 16 வயதாகும் போது தாய் எல்லன் விக்டோரியா கடைசி பிரசவத்தின் போது மரணமடைந்தார்.

    மனைவி இருக்கும்  போது  கணவன் இன்னொரு  பெண்ணுடன்  வாழ்வது  அமெரிக்காவில்  சாதாரண விஷயம். அப்படிப்பட்ட நாட்டில்  தன்  மனைவி இறந்த  பிறகும், ஆறு குழந்தைகளை வைத்துக் கொண்டு  மறுமணம்  செய்த கொள்ள  மறுத்த  விட்டார். ஆறு பிள்ளைகளையும்  தனி ஆளாகவே போராடிக்  காப்பாற்றினார்  வில்லியம்  ஜாக்சன்.

    வேலை வாங்குவது எப்படி…? :மற்றவர்கள் மனம் நோகாமல்

    உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த நீங்கள் தோந்தெடுத்து சொல்கிற வார்தை ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும். அது எவ்வாறு மற்றவர்கள் மனதை உங்கள்பால் ஈர்க்கச் செய்கிறது என்பதை உணர முடியும்.

    சில வார்த்தைகள் உறவுக்கு பாலம் போடும். அந்த வார்த்தைகள் உண்மையான மகிழ்ச்சியை வெளிப்படுத்தும். ஒற்றுமையை உண்டாக்கும். தன்னம்பிக்கையை வளர்க்கும். மனதளவில் உற்சாகத்தையும், உத்வேகத்தையும் உண்டாக்கும்.

    ஆரோக்கியமான சூழலும் அன்யோனியமும் அதிகமாகும். நெருக்கத்தையும், பாசத்தையும் பெருக்கும். பிரியத்தையும், விருப்பத்தையும் அதிகப்படுத்தும். நேர்மறையான எண்ணங்களையும், அதனால் மேலான பலன்களையும் உண்டாக்கும். இந்த வார்த்தைகள் நம்பிக்கையை ஊட்டி வெற்றிக்கு வழிகாட்டும்.

    சில வார்த்தைகள் உறவுக்கு வேலி போடும். இவைகள் ஒற்றுமையை குலைக்கும். வெறுப்பை உண்டாக்கும். அதிருப்தியை அதிகப்படுத்தும், மனக்காயங்களை உருவாக்கும். பணி நேரத்திலே அழுத்தங்களும், மனச்சோர்வுகளும் உருவாகும். ஈடுபாட்டை குறைக்கும். வெற்றிகளுக்கு விலங்கு போடும். வினைகள் உங்களுக்கு பரிசாகத்தரும். இதனால் இழப்புகளுடன் கூடிய எதிர்மறையான விளைவுகள் உண்டாகும்.

    உங்களிடம் பணிபுரிபவர்களிடம் இந்த வேலையை கண்டிப்பாக செய்ய வேண்டும். இதை செய்து முடித்தே தீர வேண்டும். இன்று மாலைக்குள் இதை முடித்துவிட்டு என்னிடம் பேசுங்கள் என்று கட்டளையிடுகிற அதிகாரதோரணைக் காட்டுகிற, ஆணைணயிட்டுப்பேசுகிற, அழுத்தமான வார்த்தைகளை உபயோகிக்கும்போது அந்த வார்த்தைகள் உங்களுக்கு முன்னால் இருப்பவர்கள் முகத்தில் அல்லது மனத்தில் எந்த மாற்றத்தை உண்டாக்குகிறது என்பதை பார்க்க வேண்டும்.

    இந்த வார்த்தைகளை கேட்டு அவர்கள் அதிர்ச்சியுற்றார்களா…? அல்லது உடைந்து போனார்களா…? அல்லது கோபப்பட்டார்களா…? அல்லது ஏதாவது எதிர்வினை ஆற்றினார்களா…? என்பதை பார்க்க வேண்டும். இதே வார்த்தைகளை உங்கள் மேல் அதிகாரிகள் உங்களிடம் உபயோகித்திருந்தால் உங்கள் மனநிலை எப்படி இருந்திருக்கும் என்பதையும் யோசித்துப்பார்க்க வேண்டும். அந்த வார்த்தைகள்தான் உறவுகளுக்கிடையே சுவர்களை எழுப்புகின்றன.

    உங்களிடம் பணிபுரிவர்களிடம் “நான் சொல்லுகின்ற யோசனைகளை யோசித்துப்பார், உன்னால் அதை உறுதியாக செய்ய முடியும். உன்னால் மட்டுமே செய்ய முடியும். வேறு ஒருவரிடம் இந்தப்பணியைத்தர விருப்பம் இல்லை. இந்தப்பணியை முடிக்கிற திறமை உன்னிடம் மட்டுமே இருக்கிறது. உன்னைத்தவிர யாரும் செய்ய முடியாது என்று நம்புகிறேன். முயற்சித்துப்பார், இன்று மாலைக்குள் வேலை முடியும்” என்று அனுகூலமான, மென்மையான, நம்பிக்கையூட்டுகிற ஆனால், அழுத்தத்துடன் கூடிய வேண்டுகோள்களை முன்வையுங்கள். அந்த வேலையை அவர்கள் எளிதாகவும்  விருப்பத்தோடும், மகிழ்ச்சியோடும் செய்வார்கள்.

    எப்படி ஜெயித்தார்கள்?

    எப்படி ஜெயித்தார்கள்? ஏர்டெக்கான் கேப்டன் கோபிநாத்

    ஒரு குக்கிராமத்தில் பிறந்து, மாட்டு வண்டியில் பயணம் செய்தவர்; ஹெலிகாப்டர் வாடகைக்கு விடும் கம்பெனியைத் தொடங்கி, பின்னர் இந்தியாவின் மலிவுக் கட்டண விமான நிறுவனத்தின் தலைவராக உயர்ந்த மனிதரின் கதை…

    12 வயதில் ராணுவப் பள்ளியில் சேர்ந்து, 15 வருடங்களில் ராணுவ வேலையை ராஜினாமா செய்துவிட்டு வந்து பசுக்களை வளர்த்து, பால் வியாபாரம் செய்து, கோழிப்பண்ணை நடத்தியதுடன், பட்டுப்பூச்சி வளர்த்தது, மோட்டார் சைக்கிள் டீலராக இருந்தது, உடுப்பி ஹோட்டலை நடத்தி வந்தது என பல்வேறு துறைகளில் அனுபவம் பெற்றவர். பங்குச்சந்தை தரகராக நீர்பாசனக் கருவி விற்பவராக இருந்து விமான நிறுவனத்தின் தலைவராக உயர்ந்த ஒரு போராட்ட வாழ்க்கைப் பயணம் தான் இவரின் வாழ்க்கை.

    வாழ்க்கை முழுவதும் தேடலும், விடாமுயற்சியும் கொண்ட மனிதராகவே வாழ்ந்து போராட்டம், வீழ்ச்சி, எழுச்சி, மறுபடியும் வீழ்ச்சி, மீண்டும் எழுச்சி என்று வாழ்க்கைப் பயணத்தை தொடர்ந்த கேப்டன் கோபிநாத் அவர்களின் சாதனைப் பயணம்.

    மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் ஹேமாவதி ஆற்றின் கரையில் அமைந்திருக்கும் ஒரு சிறிய கிராமம் கொரூர். பச்சைப் பசேல் என்று பரந்து விரிந்து கிடந்த கொரூர் கிராமத்தில் தான் கழிந்தது கோபிநாத்தின் சிறுவயது வாழ்க்கை.

    ஆசிரியராகப் பணியாற்றிய கோபிநாத்தின் அப்பா, பள்ளிக்கூடம் என்பது ஒழுங்கையும், கட்டுப்பாட்டையும் திணிக்கும் வெறும் ஓர் அமைப்பு தான். தேர்வுகளின் சுமைகளே இல்லாத திறந்தவெளிக் கல்வியில் தான் குழந்தைகள் சிறப்பாகத் தங்கள் உள்ளார்ந்த திறமையுடன் வெளிப்பட முடியும் என்ற காந்தியின் கூற்றையும், பள்ளிக்கூடம் என்பது ஒரு சிறைச்சாலை. உண்மையான கல்வி என்பது வாழ்க்கை அனுபவங்களின் மூலம் பெறப்படுவதே என்று சொன்ன தாகூரின் கூற்றையும் சொல்லி கோபிக்கு வீட்டிலேயே பாடம் சொல்லித்தந்தார்.

    கணிதம், அறிவியல் பாடத்தைக் காலையிலும், காந்தி, தாகூர், சாக்ரடீஸ், பிளேட்டோ, எமர்ஸன் என தலைசிறந்தவர்களின் படைப்புகளை மாலையிலும் அப்பா சொல்க் கொடுக்கக் கற்றுக்கொண்டார்.

    தோலும் தோற்றமும்

    அன்புத் தோழர்களே! தோல் என்பது நமது உடலின் மிகப் பெரிய உறுப்பாகும். இதன் மொத்த பரப்பளவு 25 சதுர அடியாகும். நமது உடலின் பாதுகாப்பு கவசமாக நம் தோல் விளங்குகிறது.

    இதன் முக்கியத்துவத்தை உணர வேண்டுமாயின் தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர் பிழைத்துக் கொள்வது என்பது அவர் எவ்வளவு சதவிகிதம் தோலை இழந்து இருக்கிறார் என்பதைப் பொறுத்து முடிவு செய்யப்படுகிறது. தீ விபத்தில் சுமார் 30 விழுக்காடுக்கு கீழ் பாதித்திருந்தால் பிழைக்க வாய்ப்பு உண்டு. அதற்கு மேல் என்றால் கஷ்டம்தான். ஆக, தோல் நாம் உயிர் வாழ்வதற்கு அவ்வளவு முக்கியம்.

    நமது தோலானது ஏழு அடுக்கு படிமம் (Layer) கொண்டதாகும். முதல் மூன்று அடுக்குகள் தோலின் மேலடுக்காகும் (Epidermis). இது தோல் உணர்வுச் செயலையும் (Sensitivity) புதுப்பிக்கும் செயலையும் பார்த்துக் கொள்கிறது. அடுத்த மூன்று படிமங்கள் (Dermis) தோலின் மொத்தம், முடி பிடிமானம் மற்றும் வியர்வை சுரப்பு ஆகியவற்றை தீர்மானிக்கிறது. இந்தப் பகுதிதான் தோலில் ஏற்படும் காயங்களை ஆற்றும் செயலைச் செய்கிறது. இறுதியாக, ஏழாவது படிமனான தோல் கொழுப்பு உடல் உஷ்ணம், நோய்ப் பாதுகாப்பு மற்றும் குளிர் வெயில் தாங்கும் திறன் ஆகியவற்றை நிர்வகிக்கிறது. இந்த மூன்று பகுதிகளில் மூன்றாவது பகுதியான தோல் கொழுப்பின் தன்மைதான் தோலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முகியமானது. அது பற்றிதான் நாம் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.

    நமது தோலுக்கு கீழ் உள்ள கொழுப்பானது நல்லக் கொழுப்புகளான ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 ஆகியவற்றின் 1: 5 என்ற சரியான விகிதாச்சாரத்தில் இருக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில்தான், நமது தோல் இலகுவாக சுருங்கி விரியும் தன்மையுடன் இருக்கும், இல்லையேல், இருக்கமாக, விரிந்தால் சுருங்க முடியாத தன்மைக்குப் போய்விடும்.

    நமது தோலின் கீழ் உள்ள கொழுப்பின் சுருங்கி விரியும் தன்மையால்தான் நம் உடலின் மூன்று முக்கிய உடல் ஆரோக்கியச் செயல்கள் நடைபெறுகின்றன. ஒன்று கழிவு வெளியேற்றம், இரண்டாவது தட்ப வெட்ப சூழலுக்கு ஈடு கொடுத்தல், மற்றும் மூன்றாவது நோய்க் கிருமிகளிடம் இருந்து பாதுகாப்பு. இந்த மூன்று செயல்களின் மூலம் நம் உயிரிச் சக்தியின் இளமைத் தன்மையை பாதுகாக்கிறது.

    தன்னம்பிக்கை மேடை

    ம. புவியரசு,
    உதவிப்பேராசிரியர்,
    தருமபுரி மாவட்டம்.

    பொது தேர்வு எழுதி வெற்றி பெற்றமாணவ, மாணவியர்கள் தங்களின் எதிர்காலத்தை எவ்வாறு நலம் பட அமைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்கள்…?

    பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி மாணவர்கள் கல்லூரிகளில் சேர இடம் தேடும் நேரத்தில் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். அதாவது, சரியான நேரத்தில் சரியான கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள், நன்றி.

    தமிழ்நாட்டில் 9.55 லட்சம் மாணவர்கள் எழுதிய பிளஸ் 2 தேர்வுகளில் 8.5 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது மிகப்பெரிய எண்ணிக்கையாகும். ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து போன்றவல்லரசு நாடுகளில் கூட இத்தனை மாணவர்கள் ஒரு ஆண்டில் பள்ளிப்படிப்பை முடிப்பதில்லை.

    தேர்வாகும் பல லட்சம் மாணவர்கள் இனி என்ன செய்யப்போகிறார்கள்…? அவர்களுக்கு என்னதான் அறிவுரை கூறுவது என்பது எல்லோரது கவலையாக இருக்கிறது.

    பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்றவர்களை இருவகையாகப் பிரிக்கலாம்.

    (அ) படிப்பை இத்தோடு முடித்துக் கொள்பவர்கள்: இதில் மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால் தமிழ்நாட்டில் படிப்பை இத்தோடு முடித்தவர்கள்தான் அதிகம். சென்றஆண்டு பிளஸ் 2 தேர்வான எட்டு லட்சம் பேரில் இரண்டு லட்சம் பேர் மட்டும் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கிறார்கள்.மற்றவர்கள் பள்ளிப்படிப்பை பிளஸ் 2 உடன் முடித்துக் கொண்டார்கள். இப்படித்தான் ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறது. தொடர்ந்து படிக்க வசதி இருக்காது, எனவே படிப்பை முடித்து விடவேண்டும்; அப்படியே ஒரு வேலைக்கும் சென்று விட வேண்டும்.
    இந்த நிலையில் இருக்கும் இளைஞர்கள் வருந்த வேண்டாம். உங்களுக்கும் வாய்ப்புகள் உண்டு. படிப்பு முடிந்து விட்டது; அவ்வளவுதான் வாழ்க்கை; நம்மால் ஒன்றும் சாதிக்க முடியாது என்று நம்பி விடாதீர்கள்…! கல்லூரிகளில் படிக்கவில்லை என்றாலும், ஒரு தொழிலில் ஈடுபட்டு, அந்தத்தொழிலில் பயிற்சி பெற்று, நல்ல வருமானம் ஈட்ட முடியும். எடுத்துக்காட்டாக ஒரு வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றால் கூட மாதம் ரூ. 40,000/- வரை வருமானம் ஈட்ட முடியும். தனியார் பஸ்கள், பெரிய எடை கொண்ட சரக்கு லாரிகள் ஓட்ட தகுதி உள்ள ஓட்டுநர்களை தொழில் அதிபர்கள் தேடுகிறார்கள். நல்ல ஓட்டுநர்களுக்கு தேவை இருக்கிறது, மரியாதையும் இருக்கிறது நல்ல சம்பளமும் இருக்கிறது.

    தொலைக்காட்சிப்பெட்டி, குளிரூட்டும் சாதனம், மோட்டார் வாகனம் போன்றவை பழுதுபார்க்கும் தொழில்நுட்ப பணிகள் (Technical job) பல உள்ளன. அவற்றைபயிற்சிகளின் மூலம் கற்றுக் கொள்ள முடியும்.

    ஒரு கை தேர்ந்த கலைஞரிடம் உதவியாளராகச் (Apprentice) சேர்ந்தால் கூட ஒரிரு ஆண்டுகளில் அந்தப் பணியைக் கற்று விட முடியும். திருப்பூர் பனியன் கம்பெனிகளில் தொழில் நுட்பம் அறிந்த நிபுணரைத் (Cutter) தேடுகிறார்கள். நேர்த்தியாக அந்த வேலையைச் செய்பவருக்கு அதிக சம்பளம் உண்டு.

    உள்ளத்தோடு உள்ளம்

    வேட்டையாடப்போன மன்னர் ஒருவர் தனது பரிவாரங்களுடன் திரும்பிக்கொண்டிருந்தார். வழியில் ஒரு சிறிய ஊர். மன்னர் மெய்க்காப்பாளரை அழைத்தார்.

    இந்த ஊருக்குள் போவோம், நம்மை யாராவது அடையாளம் கண்டு கொள்கிறார்களா…? என்று பார்ப்போம்” என்றார்.

    மெய்க்காப்பாளர் முன்னே சென்றார். மன்னன் பின்னே சென்றார். எதிரே வந்த மக்கள் யாரும் மன்னனை கண்டு கொள்ளவே இல்லை. ஆனால், மெய்க்காப்பாளரைப் பார்த்து எல்லோரும் புன்னகைத்தார்கள்.

    மன்னருக்கு கோபம். “இங்கு யாருக்குமே என்னைத் தெரியவில்லை. அனால், உன்னை எல்லோருக்கும் தெரிந்திருக்கிறது”  என்றார்.

    உடனே மெய்க்காப்பாளர் “மன்னா என்னையும், அவர்களுக்குத் தெரியாது” என்றார்.

    தெரியாது என்றால் உன்னைப் பார்த்து ஊர் மக்கள் ஏன் புன்னகைக்க வேண்டும் என்று மன்னர் கேட்டார்.

    மெய்க்காப்பாளர் சொன்னார், “ஏனென்றால் நான் அவர்களைப் பார்த்து புன்னகைத்தேன்” என்று…

    நாம் நம்மை எப்படி வெளிப்படுத்துகிறோமோ, அப்படியே இந்த சமுதாயம் பிரதிபலிக்கிறது என்பதை உணர்ந்தாலே மகிழ்ச்சியுடன் சாதித்து வாழ முடியும்.

    நல்லவைகளை மட்டும் வெளிப்படுத்தி பள்ளிகள் திறக்கும் இம்மாதத்தில், வாழ்வாங்கு வாழ வைக்கும் ‘கல்வி’ வேண்டும்…!

    தரம் உயர்ந்த, தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடாது தடுக்கும் கல்வி வேண்டும்…

    மதிப்பெண்ணுக்காக கல்வி என்றில்லாமல் ஒழுக்கம், பண்பாடு, கலாச்சாரம் போற்றும் ‘மதிப்பு’ கல்வி வேண்டும்…

    இப்படி வேண்டும் கல்வியே வேண்டும்…! வேண்டுவோம்…!!