– 2012 – November | தன்னம்பிக்கை

Home » 2012 » November (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    கல்லூரிப் பிரச்சினைகள்… கவனம் தேவை

    இளமைப்பருவம் இனிமை நிறைந்த பருவம். இந்தப் பருவத்தில்தான் மனிதர்கள் மிக அதிகமாக மகிழ்ச்சியாக இருக்க முடியும். இளமைப் பருவத்தில்தான் எந்தச் செயலையும் தைரியமுடன் செய்யமுடியும்” – உளவியல் வல்லுநர்கள் கருத்தாகும். பள்ளி – கல்லூரிகளில் பயிலும்போது மாணவ – மாணவிகள் இளமைப் பருவத்தை இனிமையாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் அவர்கள் படிப்பில் சிறந்து விளங்க இயலும்.
    சிலருக்கு கல்வி நிறுவனங்களில் மிக மகிழ்ச்சியான அனுபவங்கள் நிறைய கிடைக்கும். ஆனால், அதேவேளையில் மனதில் வலியை ஏற்படுத்தும் சில நெருடல்களும் கல்வி நிலையங்களில் உருவாக வாய்ப்புகள் உள்ளது.
    சமீபத்தில் கல்லூரி மாணவர்களிடம் காணப்படும் முக்கிய பிரச்சினைகள் குறித்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வின் முடிவில் மாணவர்களின் மனநிலையைப் பாதிக்கும் சில பொது பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டது. அவை –
    1. படிப்பு (Study)
    பள்ளிப் படிப்பை முடித்து உயர்கல்விக்காக கல்லூரியில் சேரும் மாணவ – மாணவிகளுக்கு முக்கிய பிரச்சினையாக அமைவது அவர்களது படிப்புதான். ஏனென்றால் பள்ளிகளில் பயிலும்வரை பெற்றோர்களின் முழு கவனம் தங்கள் பிள்ளைகள்மீது படிந்திருக்கும். ஆனால் கல்லூரிக்குச் சென்றதும் “என் மகன் தோளுக்குமேல் வளர்ந்துவிட்டான். அவன் இனிமேல் என் தோழன்” – என்று எண்ணி சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்பைப்பற்றி கவலைப்படுவதில்லை.
    கல்லூரிக்குச் சென்றமாணவன் தானாகவே படிப்பில் கவனம் செலுத்தி படிக்க வேண்டிய ஒருநிலை உருவாகிறது. மேலும் கல்லூரிகளில் பெரும்பாலும் “செமஸ்டர் சிஸ்டம்” (Semester System) உள்ளது. அதாவது ஒரு வருடத்தில் இரண்டு முறைநடத்தப்படும் பல்கலைக்கழகத் தேர்வுகளை மாணவ – மாணவிகள் எழுத வேண்டும். இதனால் குறுகியகாலத்தில் நிறைய தகவல்களை சேகரிப்பதிலும், படிப்பதிலும் அதிக அக்கறைசெலுத்தவேண்டிய நிலை உள்ளது.
    தங்கள் ஊர் பள்ளிகளில் முதலிடம் பெற்றசில மாணவ – மாணவிகள் கல்லூரிப் படிப்பில் எதிர்பார்த்த மதிப்பெண்கள் பெறஇயலாத நிலையும் சிலவேளைகளில் ஏற்பட்டுவிடுகிறது. ஆங்கில வழியில் படிப்பதும், படித்த பாடத்தை “பகுத்தாய்வு செய்து புரிந்துகொள்ளும் திறனை” வளர்ப்பதிலும் மிகுந்த கவனம் செலுத்தவேண்டிய நிலை உள்ளது.”பள்ளியைப்போல கல்லூரியில் படிக்கும் பாடங்களில் அதிக மதிப்பெண்கள் பெறமுடியவில்லையே” என்றகவலை சில மாணவர்களுக்கு உண்டு இதுவே, பெரிய பிரச்சினையாக அவர்களுக்கு மாறிவிடுகிறது. கல்லூரிப் படிப்பில் ஒரு மாணவன் மிகவும் சிறந்து விளங்க வேண்டுமென்றால் தினம்தோறும் தொடர்ந்து கவனமாகப் படித்து வரவேண்டும். அப்போதுதான் இந்தக் கவலையை மாற்றஇயலும்.
    2. பணம் (Money)
    கல்லூரியில் படிக்கும்போது பல நிலைகளில் ‘கல்விக் கட்டணம்’ (Tution Fees) உள்ளது. தமிழகத்தில் இயங்கும் கல்லூரிகளை – அரசு கல்லூரிகள் (Government Colleges), அரசு உதவிபெறும் கல்லூரிகள் (Government Aided Colleges), சுயநிதிக் கல்லூரிகள் (Self Financing Colleges) என மூன்று வகையாகப் பிரிக்கலாம். அரசு கல்லூரிகளில் கல்விக் கட்டணம் மிகமிக குறைவாக இருக்கும். அரசு உதவிபெறும் கல்லூரிகளில் கல்விக் கட்டணம், அரசு கல்லூரிகளைவிட சற்று அதிகமாக இருக்கும். இந்த அடிப்படைத் தகவல்களையெல்லாம் கல்லூரியில் சேருவதற்கு முன்பே தெரிந்து கொள்ளாத சில மாணவ – மாணவிகள் கல்லூரியில் சேர்ந்தபின்பு படிப்புச் செலவுக்கான பணம் இல்லாமல் திண்டாடித் தவிக்கிறார்கள். கல்லூரிக் கட்டணம் கட்ட முடியவில்லை என்பதற்காக தங்கள் படிப்பைப் பாதியில் நிறுத்திக் கொண்டவர்களும் உண்டு.
    கல்வி கட்டணம் தவிர மாணவ – மாணவிகளுக்கு விடுதி கட்டணம், பேருந்து கட்டணம், கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்குவதற்கான செலவு, நோட்டுப் புத்தகத்திற்கான செலவுகள் என பல்வேறு விதமான செலவுகள் தவிர்க்க இயலாத செலவுகளாக மாறிவிடுகிறது. ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த சில மாணவர்கள் கல்விக் கட்டணத்தை மட்டுமே கருத்தில்கொண்டு கல்லூரியில் சேர்ந்துவிடுகிறார்கள். பின்னர் பணப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக மாறிவிடுவதால் இவர்களது படிப்பு பாதியிலே நின்றுபோய் விடுகிறது.
    இந்தப்பிரச்சினையைத் தவிர்ப்பதற்கு பள்ளிகளில் பயிலும்போதே மாணவ – மாணவிகள் ஒவ்வொரு கல்லூரியின் இணையதளங்களை (Websites) பார்வையிட்டு கல்லூரி பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்றும் வேண்டிய தகவல்களைப் பெறமுயற்சிகள் மேற்கொள்ளலாம். கல்வி உதவித்தொகைகளை (Scholarships) வழங்கும் நிறுவனங்களை அடையாளம் கண்டு அவைகள் வழங்கும் உதவியைப் பெற முயற்சி செய்வதும் நல்லது
    3. பணி (Job)
    கல்விக் கட்டணத்தைச் செலுத்துவதற்காகவும், விடுதிக் கட்டணத்தை கட்டுவதற்காகவும் சில மாணவ – மாணவிகள் பகுதிநேரப் பணிகளில் (Part Time Job) ஈடுபடுவது வழக்கம். கல்லூரியில் படித்துக்கொண்டும், பகுதிநேர பணியைப் பார்த்துக்கொண்டும் தொடர்ந்து உழைப்பது நல்லதுதான். இருந்தபோதும் இளமைப் பருவத்தில் ஓய்வு இல்லாமல் நீண்டநேரம் உழைக்கும்போது படிப்பிலுள்ள கவனம் சிதறுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே – கல்லூரிப் படிப்பை பாதிக்காத வகையில் பகுதிநேரப் பணியில் சேர்ந்துகொள்வது சிறந்ததாகும். சில பல்கலைக்கழகங்கள் அல்லது கல்லூரிகள் மாணவர்களின் படிப்பைப் பாதிக்காத வகையில் பகுதிநேர பணியை வழங்குகிறது. அவற்றைஅடையாளம் கண்டு அந்தப் பணிகளில் சேர்ந்து படிப்பையும் பாதுகாத்துக்கொள்வது நல்லது.
    4. வீட்டுக் கவலை (Homesickness)
    கல்லூரியில் படிக்கின்றசில மாணவ – மாணவிகளுக்கு தங்கள் வீட்டைப் பற்றிய கவலை தானாக உருவாகிவிடுகிறது. வீட்டின் நிதிநிலைமையைப்பற்றி சிந்தித்து “நமது குடும்பத்தில் இப்படி பணப் பிரச்சினை இருக்கிறதே” என்று எண்ணி அதிகமாக கவலைப்படுபவர்கள் படிப்பின்மீது கவனம் கொள்வதை குறைத்துக்கொள்கிறார்கள். விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவ – மாணவிகளில் சிலருக்கு “வீட்டிற்குச் செல்ல வேண்டும்” – என்றஎண்ணம் அடிக்கடி தோன்றுவதால் விடுதியிலும் நிம்மதியாக அவர்களால் இருக்க முடியாது. படிப்பிலும் கவனம் செலுத்த முடியாது.
    விடுதியில் பயிலும்போதே தங்கள் வீட்டுநிலையைப்பற்றி கவலைப்பட்டு நேரத்தை வீணடிப்பதைவிட, மாதத்திற்கு ஒருமுறைவீட்டிற்கு சென்று வரலாம். மாதத்திற்கு இருமுறைவீட்டிற்கு தொடர்புகொண்டு பேசிக்கொள்ளலாம். இ-மெயில் அல்லது எஸ்.எம்.எஸ். மூலம் நண்பர்களிடம் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளலாம். பெற்றோர்கள் – நண்பர்கள் – உறவினர்களிடம் வீட்டில் இருக்கும்போது பழகுவதைப்போலவே தொடர்பை ஏற்படுத்திக்கொண்டால் வீட்டுக் கவலை மறந்துவிடும்.
    தொடரும்

    புனித யாத்திரை கயிலயங்கிரி

    நேரமாற்றம்
    உலகில் ஒவ்வொரு நாடும் ஒரு நேரத்தைக் கடைபிடிக்க ஒரு நகரைத் தேர்வு செய்கின்றன. இந்தியாவில் டெல்லியில் நேரம் என்னவோ, அந்த நேரமே இந்தியா முழுதும் கடைபிடிக்கப்படுகிறது.
    பூமியை உருண்டையாக மனதில் காணுங்கள். மேலிருந்து கீழே கோடு போடுங்கள். இது தீர்க்கரேகை. 360 டிகிரியை 24 மணியில் வகுத்தால் 15 டிகிரிக்கு ஒரு மணிநேரம். ஏனென்றால் பூமி கிழமேற்கு திசையில் சுற்றிக்கொண்டுள்ளது. இங்கிலாந்தின் கிரீனிட்ஜ் என்ற இடத்தை ஜூரோ என்று வைத்துக்கொண்டு, ஒவ்வொரு நாட்டின் நேரமும் நிர்ணிக்கப்படுகிறது.
    இந்தியா என்றால் குஜராத் முதல் வடகிழக்கு பிராந்தியமான அருணாச்சலப் பிரதேசம் முடிய சுமார் 25 டிகிரி தீர்க்க ரேகைகளைக் கொண்டது. குஜராத்தில் நேரம் ஒருமணி என்றால், அருணாசலப் பிரதேசத்தில் நேரம் இரண்டரை மணியாக இருக்கும். ஆனால் நம் நாட்டின் தலைநகரமான டெல்லியை மையப்படுத்தி நாடு முழுதும் ஒரே நேரத்தை நிர்ணயிக்கிறோம். இங்கிலாந்தின் கிரீனிட்ஜ் பகுதியிலிருந்து டெல்லி சுமார் 75 டிகிரி தீர்க்க ரேகைப் பகுதியில் இருப்பதால் நேர வித்தியாசம் சுமார் 5 மணி.
    ஆனால் அவர்கள் ஏப்ரல் முதல் செப்டம்பர் முடிய நான்கரை மணியும் அக்டோபர் முதல் மார்ச் முடிய ஐந்தரை மணியும் நிர்ணயிக்கின்றனர். அவர்கள் மட்டும் நேரத்தை மாற்றிக் கொள்கின்றனர். நாம் மாற்றுவது கிடையாது. நேபாளத்தின் நேரம் இந்திய நேரத்தை விட கூடுதலாக அரைமணியாகும். நேபாள எல்லையைத் தாண்டிவிட்டாலே, பீகிங் நேரம் செயல்பாட்டுக்கு வந்துவிடுகிறது. அதாவது நேபாள நேரத்திலிருந்து இரண்டு மணிநேரம் கூடுகிறது. இந்திய நேரத்தில் இருந்து இரண்டரை மணிநேரம் கூடுகிறது. இது எதற்காக இவ்வளவு விரிவாக எழுதப்படுகிறது என்றால், வேடிக்கையை நீங்கள் தெரிந்து கொள்வதற்காகத்தான்.
    நேபாளத் தலைநகர் காத்மண்டுக்கு நேர் கீழே (அதாவது தெற்கிலுள்ள) உள்ள பாட்னாவில் நேரம் 2 மணி, ஆனால் சைனா பார்டர் காஷா போர்ட் (KAZA PORT) உள்ள ஜாங்மூவில் நான்கரை மணி. இதனால் நமக்கு சூரியன் உதித்து மறைவது 12 மணிநேரம் என்பது அங்கு பகல்பொழுது பதினான்கரை மணிநேரம் என்றாகிறது.
    வழியில் பெரும்பாலான ஊர்களில் இரவு எட்டரை வரை சூரிய வெளிச்சம் இருக்கிறது. இது இந்த நேர நிர்ணயிப்பின் வெளிப்பாடு. எனவே அந்தப்பகுதியில் (சீனாவில்) இரண்டரை மணிநேர வேறுபாடு என்றாலும், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் நேபாள நேரத்தையே கடைபிடிக்கின்றனர். நமக்கும் அவர்களுக்கும் அரைமணி மட்டுமே வேறுபடுவதால், பசி, தூக்கம் இவற்றில் வேறுபாடு காணமுடியவில்லை.
    கரன்சி மாற்றம்:
    நம் நாட்டு நாணயம் ரூபாய். இதை என்று இப்போது குறிப்பிடுகிறோம். நேபாள நாட்டு மொழியான நேபாளியும், இந்தி மொழி போன்றேஉள்ளது. அவர்களது நாணயமும் ரூபாய் தான். இந்திய ஒரு ரூபாயின் மதிப்பு நேபாள ரூபாயில் 1.60 ஆகும். சீனாவின் நாணயம் யுவான் ஆகும். அதில் மாசேதுங் படம் உள்ளது. ஒரு யுவான் வாங்கும்போது நம் ரூபாய் ஒன்பதரை தர வேண்டும். யுவான் நாம் திருப்பிக் கொடுத்தால் ரூ. 9 மட்டுமே தருகின்றனர்.
    நேபாளத்தில் எல்லா இடங்களிலும், கடைகளிலும் நம் இந்திய ரூபாயை வாங்கிக் கொள்கின்றனர். பல இடங்களில் மீதியை நேபாள ரூபாயாகவே கொடுக்கின்றனர். அங்கிருந்து நம் ஊருக்குப் புறப்படு முன்பு அவைகளைச் செலவு செய்துவிட வேண்டும். சிலவற்றைநினைவாக எடுத்துவரலாம்.
    ஆனால், சீனாவுக்குள் யுவான் மட்டுமே செல்லுபடியாகிறது. பொருட்கள் வாங்குவது, குதிரைக்குத் தருவது, பரிக்ரமா செல்ல ஆள் கூலியாகத் தருவது, அஷ்டபத் காரில் சென்று வரத்தரும் கட்டணம் அனைத்துக்கும் யுவான் தான் தேவை. எனவே சுற்றுலா ஏற்பாட்டாளரே எத்தனை யுவான் வேண்டுமென்று கேட்டு, ஒரு யுவானுக்கு ரூ. ஒன்பதரை வீதம் பெற்றுக்கொண்டு தருகிறார். திரும்பிய பின் மீதியுள்ள யுவான்களைப் பெற்றுக்கொண்டு ரூ. 9 வீதம் திருப்பித் தருகிறார்.
    எச்சரிக்கை:
    சைனா எல்லையில் ஜாங்மூவில் குடியேற்ற(எமிக்ரேசன்) நடைமுறைகளை முடித்து வெளிவந்த உடனே, அங்கு பலர் ‘யுவான் வேண்டுமா?’ எனக்கேட்டு இந்திய ரூபாய் பெற்றுக்கொண்டு சீன யுவான் தருகின்றனர். கை நிறைய நோட்டுக்களுடன் நடமாடிக் கொண்டுள்ளனர்.
    அதேபோல் பயணம் முடித்து சீனாவில் இருந்து வெளியே வருவதற்கு ஜாங்மூ வந்தபோதும், யுவானைப் பெற்றுக்கொண்டு இந்திய ரூபாய் தருகின்றனர். நேபாள எல்லையான கோதாரியிலும் ஒரு சிலர் மட்டும் நாம் தங்கிய இடத்தில் கரன்சி மாற்றவேண்டுமா என விசாரித்தனர். நேபாள எல்லை ஊரை (TATOANI SINDH UALCHOK) ததோனி – சிந்து அல்சோக் என எழுதி வைத்துள்ளனர். அங்குதான் எமிக்ரேசன் நடைமுறைகள். அதை சுற்றுலா ஏற்பாட்டாளரே முடித்து விடுகிறார்.
    வெளியில் வாங்கும் யுவான்களில் போலி இருக்கும். அதை யார் நமக்கு கொடுத்தார்களோ, அவர்களே சைனா அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்து, வழியில் சோதனை என்றபெயரால் பல தொல்லைகளுக்கு ஆளாகலாம். எனவே யாரிடமும் வாங்க வேண்டாம் என சுற்றுலா ஏற்பாட்டாளர் எச்சரிக்கிறார்.
    என் உடன் வந்த அன்பர் ஊரிலிருந்தே யுவான் கொண்டு வந்திருந்தார். இந்த எச்சரிக்கை அந்த அளவு நம்பகமானது, உண்மையானது என்பது, அந்தக் கைலாய நாதனுக்கே வெளிச்சம்.
    மொழி:
    நேபாளத்தைப் பொறுத்தவரை இந்தி, ஆங்கிலத்தை வைத்து பொருட்கள் வாங்குதல், விசாரித்தல் முதலியவைகளைச் சிரமம் இல்லாமல் முடித்துவிடலாம். வாகனங்களில் இந்தி எழுத்துக்கள் இருப்பதால் வசதியாக உள்ளது. பெயர் பலகைகள், பொருட்களின் பெயர்களும் ஆங்கிலத்தில் உள்ளன.
    ஆனால் சீனாவுக்குள் நுழைந்துவிட்டால் இந்தி, ஆங்கிலம் இரண்டுமே நமக்கு உதவி செய்யாது. உடன் வரும் நேபாள நபர்களிடம் ஆங்கிலத்திலோ இந்தியிலோ தெரிவித்து, அவர்கள் மூலம் தான் நாம் கார் டிரைவர்கள் உட்பட அனைவரிடமும் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும். அப்போது துணைக்கு வருவது உலகமெங்கும் ஒரே மொழி, உண்மை பேசும் உடலின் மொழி என்ற Body Language தான்.
    எனவே அடிக்கடி உபயோகப்படுத்தும் பாத்ரூம், டாய்லெட், நடக்கிறேன், சிறிது நில், என்ன விலை என்பன போன்றவற்றுக்கு சரியான சைனா மொழி வார்த்தைகளைத் தெரிந்து கொண்டால் நல்லது. இல்லாவிட்டாலும் பரவாயில்லை. சுற்றுலா குழுவினரே சரியாக கவனித்துக் கொள்கின்றனர். மேலும் முக்கியத் தகவல்களுக்கு காத்திருப்போம்.

    அவதூறு அவசியம் அல்ல

    மன்னாதி மன்னனாய் இருந்தாலும், மகானாக வாழ்ந்தாலும் குறைகூறாமல் அவதூறு கொல்லாமல் இருந்தது இல்லை. எனவேதான் சேக்ஸ்பியர் கூறுகிறார், “நீ பனிக்கட்டி போல தூய்மையாகவும், பனி போன்று துப்புரவாகவும் இருந்தாலும் அவதூறுகளிலிருந்து தப்ப இயலாது”.
    அவதூற்றினுடைய நுனியானது வாளைவிட கூர்மையாக உள்ளது. அதனுடைய நாவு நைல் நதியிலுள்ள கிருமிகளை விடக் கொடியது. அதனுடைய விஷமூச்சு காற்றின் மூலம் ஒவ்வொரு இடத்திலும் பரவுகிறது.
    பிறரைப் பற்றி அவதூறு கூறுவது கோழைகளின் செயலே தவிர வீரர்களின் செயல் அல்ல. கெட்ட எண்ணம் கொண்டவர்கள் தான பிறரைப் பற்றி அவதூறுகளைக கிளப்பிவிடும் வேலையில் ஈடுபடுகிறார்.
    நல்ல எண்ணம் கொண்டவர்கள் இவ்விதம் செய்ய மாட்டார்கள். பொறாமையாலும் கெட்ட எண்ணத்தாலும் கிளப்பி விடப்படும் அவதூறுகளை சோம்பேறிகள் தான் செய்வார்கள். வேலை இல்லாமல் இருப்பதனால் செய்திகளைத் தேடித் திரித்து ஊர் முழுவதும் பரப்புவது இயல்பாக இருக்கிறது. அதனால் பெரிய தீமை ஏற்படும்.
    காதால் கேட்பதை வாயால் தெரியப்படுத்தும் போது அது விபரீத விளைவுகளை உண்டாக்கும். காலியான நாவும் உளரும் மூளையும் கைக்கோர்த்துச் செயல்படுகின்றன. காலியான
    மூளையை ஓர் அற்பத்தனமான செய்தி நிரம்பச் செய்து விடுகிறது. அதனை உளறும் நாவு உடனே விற்பனை செய்யத் தொடங்கிவிடுகிறது.
    நல்ல செய்தி மணிக்கு ஒரு கிலோ மீட்டர் வேகத்தில் பரவுகிறது என்றால் அவதூறானது மணிக்கு முப்பது கிலோ மீட்டர் வேகத்தில் பரவுகிறது. “எந்தப் பிராணி மிகவும் கொடிய நஞ்சுள்ளது” எனறு தத்துவஞானி டயோஜிலிஸிடம் கேட்டார் ஒருவர், “கொடிய பிராணிகளில் மிகவும் கொடியது அவதூறு பேசுகிறவன்” என்றார்.
    அவதூறு கூறுகிறவனும், கொலைகாரனும் தாங்கள் பயன்படுத்தும் ஆயுதங்களில் வேற்றுமை இருக்கிறது. கொலைகாரனின் ஆயுதம் வாள். அவதூறு கூறுபவனின் ஆயுதம் நாக்கு. கொலைகாரனின் வாள் மனிதனின் உடலை வெட்டி மாய்த்து விடுகிறது. அவதூறு கூறுபவனுடைய நாக்கானது, ஒருவனது நற்பெயரையும் நன்மதிப்பையும், மன அமைதியையும் கொலை செய்துவிடுகிறது.
    சிறிதாகக் கிளப்பி விடப்படும் அவதூறு சிறிது நேரத்தில் எல்லோரிடமும் பரவி விடுகிறது. ஒவ்வொருவருடைய நாவிலும் வளர்ச்சி அடைந்து விடுகிறது. ஒன்று பத்தாகவும், பத்து நூறாகவும் பெருகிவிடுகிறது. அவ்வாறு கூறுகின்றவனின் நாக்கு நுனியானது வாளின் முனையைவிட கூர்மையானது. அதில் நஞ்சு உள்ளது. நாக்கு எனனும் கொடுவாளானது ஆறாத காயங்களை உண்டுபண்ணிவிடுகின்றது.
    நம்முடைய தரம் உயர உயர நம்மீது எழப்படும் அவதூறுகளின் தன்மையும் உயர்ந்து கொண்டே போகும். அவதூறுகளைக கிளப்பி விடுபவர்களுக்கு அது ஒரு விளையாட்டு போல இருக்கிறதே, தவிர அது குற்றமாகத் தெரிவிப்பதில்லை.
    அறிவாளிகள் அவதூறுகளைக் கண்டு அஞ்சுவதில்லை. பிளேட்டோவிடம் ஒருவர் சென்று “உங்களை மிகவும் கெட்ட மனிதர் என்று அவர் கூறுகிறாரே” என்றார். அவர் கூறிய கூற்றைஒருவரும் நம்பாதபடி நான் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று மறுமொழி கூறினார் பிளாட்டோ.
    நச்சு நாவை நாம் கட்டுப்படுத்த முடியாது. நம்முடைய நல்வாழ்வானது பிறா நம் மீது சுமத்தும் அவதூறுகளைத் துச்சமாக மதிக்கும் ஆற்றலை நமக்குத் தரும். ஒருவன் உன்னைப் பற்றி அவதூறு கூறுவானாயின் அவன் கூறியது சரியா, தவறா என்று உன் மனசாட்சியைக் கேள். உன்னுடைய மனதை நீயே ஆராய்ச்சி செய்து பார். நீ செய்தது தவறாக இருந்தால் திருத்திக் கொள்.
    நீ செய்தது சரியாக இருந்தால், அந்த அவதூறைஅலட்சியப்படுத்திவிடு என்கிறார் அறிஞர் சோசப் கார்டன். நம்மீது எழுப்பப்படும் வீண் அவதூறாக இருந்தால் அதனைத் துளிகூட பொருட்படுத்தாமல் நம்முடைய கடமையை ஒழுங்காகவும், அமைதியாகவும் செய்து கொண்டு இருப்பதுதான். ஏன் என்றால் அவதூறு அற்ப ஆயுள் கொண்டவை. நாம் பொறுமையைக் கையாண்டால் காலம் என்னும் அன்னை உண்மை என்றமகவை ஈன்று எடுப்பாள். அம்மகன் நமக்காகப் போராடி நம் மீது எழுப்பப்பட்ட அவதூறுகளை வெட்டி வீழ்த்திவிடுவான். அவதூறுகள் யாதொரு பாவமும் அறியாதவர்களைக் கூடத் தங்களின் நெஞ்சு உறுதியை இழக்கச் செய்யும் வண்ணம், அவ்வளவு கொடுமை வாய்ந்தவைகளாக இருக்கின்றன என்கிறார் மாவீரன் நெப்போலியன்.
    அவதூறைவிரட்டிப் பிடிக்க முயலும்போது அது வேகமாகப் பாய்ந்து ஓடி பரவ ஆரம்பித்துவிடுகின்றது நம்மீது வீணாகக் கூறப்படும் அவதூறுகளைக் கண்டு நாம் மனத்துயர் அடைந்தால், அவை உண்மையாக இருக்குமோ என்றசந்தேகத்தைப் பிறருக்கு உருவாக்கிவிடும். அதனால் நாம் மனக்கஷ்டம் அடையக் கூடாது. அதேபோல் நாம் அதைக் கண்டு வெகுளவும், வெதும்பவும் செய்தால் தான் அது கிளர்த்து எழும். இல்லை என்றால் அது அமிழ்ந்து போய்விடும். அவதூறு என்பது ஒரு குளவி. அதனை அடித்துக் கொன்று விடலாம் என்றநம்பிக்கை இருந்தால் தான் அதனை எதிர்த்து நிற்க வேண்டும். இல்லையென்றால் நாம் அதனை எதிர்க்க எதிர்க்க அது முன்பைவிடப் பல மடங்கு வேகத்துடன் நம்மைவிட்டு பறந்துவிடும்.
    நம்மீது சுமத்தப்படும் வீண் அவதூறுகளைத் துச்சமாகக் கருதினால் அவை தானாகவே செத்துவிடும். அவற்றால் நமக்கு துன்பமும் துயரமும் இழிவும் ஏற்பட்டுவிட்டன எனறு காட்டிக் கொண்டால், நாம் அவற்றுக்கு உயிர் அளித்துவிட்டோம், அவைகளை உண்மையாக்கிவிட்டோம் என்று தான் அர்த்தம்.
    நேர்மை வழியில் செல்லும் நாம் இதற்கு அஞ்ச வேண்டியது இல்லை. அவதூறு எந்த அளவு தவறாகவும் நம்ப முடியாதவையாகவும் இருக்கின்றதோ அந்த அளவு விரைவாகப் பரவும்.
    அவதூறைப் போன்று வேகமாகப் பரவக் கூடியது வேறு ஒன்றும் இல்லை. அதைப்போன்று ஆவலாகக் கேட்கக் கூடியது வேறில்லை. அதைப்போல நான்கு பக்கங்களிலும் விரைவாகப் பரவக் கூடியதும் வேறு ஒன்றும் இல்லை என்று சிசரோ கூறுகிறார். அவதூறுகளுக்கு செவி சாய்த்து உள்ளங்களில் இருப்பிடம் அளிக்காவிட்டால் அவை தாமாகவே மறைந்துவிடும்.

    வால்மார்ட்

    சில்லறைவணிகத்தில் அன்னிய முதலீடு’ என்பது கடந்த சில ஆண்டுகளாகவே பல நிலைகளில் விவாதிக்கப்பட்டு வருகிறது. சில்லறைவணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவில் மூலம் இந்தியாவில் வால்மார்ட், கேர்போர், மெட்ரோ உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் கடைகளைத் திறந்து சில்லறைவணிகத்தில் ஈடுபட முடியும். இந்நிறுவனங்கள் நம்மூர் கடைகளை விட மிகக் குறைந்த விலையில் பொருட்களை விற்கும் சக்தி படைத்தவை. இந்த சில்லறைவணிகத்தில் அன்னிய நிறுவனங்கள் நுழையும்போது தற்போது இந்த வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கும் 12 லட்சம் குடும்பங்களின் எதிர்காலம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகும் என்று அஞ்சப்படுகிறது.
    சில்லறைவணிகம் (Retail Industry) இரண்டு பிரிவுகளாக உள்ளன. முறையாக லைசன்ஸ் பெற்று, விற்பனை வரி, வருமான வரி போன்றஅனைத்து வகை வரிகளையும் கட்டும் வணிக நிறுவனங்கள் முறைப்படுத்தப்பட்டவை (Organized) என்றும் மேற்குறிப்பிட்ட எந்தவகை வரிகளையும் செலுத்தாத வணிக நிறுவனங்கள் முறைப்படுத்தப்படாதவை (UnOrganized) என்றும் இரண்டு பிரிவுகளாக உள்ளன. இந்தியாவில் மொத்த சில்லறைவணிகத்தில் வெறும் 3 சதவீத நிறுவனங்கள் தான் முதல் வகையைச் சார்ந்தவை. எஞ்சிய 97 சதவீதம் இரண்டாம் வகையைச் சார்ந்தவை. அமெரிக்கா உள்ளிட்ட வளர்ச்சி அடைந்த நாடுகளில் முறைப்படுத்தப்பட்ட சில்லறைவணிகம் 70 முதல் 80 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
    விற்பனை ரீதியில் சில்லறைவணிக நிறுவனங்களை இரண்டு வகையாக பிரிக்கிறார்கள். ஒன்று ‘சிங்கள் பிராண்ட்’ சில்லறைவணிகம். இதற்கு நோக்கியா ஷோரூமை உதாரணமாகக் கூறலாம். இதில் ஒரே ஒரு பிராண்ட் செல்போன் மட்டும் விற்பனை செய்யப்படும். மற்றொன்று ‘மல்ட்டி பிராண்ட்’ சில்லறை வணிகம். இதற்கு யுனிவர்செல் ஷோரூமை உதாரணமாகக் கூறலாம். இதில் பல கம்பெனி பிராண்ட் செல்போன்கள் விற்பனை செய்யப்படும். தற்போது கொண்டுவரப்பட்டுள்ள சட்டமானது இந்த இரண்டு வகையான சில்லறைவணிகத்திலும் அன்னிய நேரடி முதலீட்டின் வரம்பை அதிகப்படுத்தியுள்ளது. ‘சிங்கள் பிராண்ட்’ சில்லறைவணிகத்தில் 51% முதல் 100% வரையிலும், ‘மல்ட்டி பிராண்ட்’ சில்லறை வணிகத்தில் 51% வரையிலும் அன்னிய முதலீட்டை உயர்த்தியிருக்கிறது இந்த சட்டம் திருத்தம்.
    இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம் இனி வால்மார்ட், டெஸ்கோ, பிளாக்பெர்ரி போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் நேரடியாக முதலீடு செய்யும். அன்னிய முதலீட்டை இந்தியாவிற்குள் கொண்டு வருவதால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்றும், இடைத்தரகர்களை விலக்கப்படுவதால் விவசாய விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் என்றும், இதன் காரணமாக வேளாண் உற்பத்தியாளர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்றும் இதற்கு ஆதரவாக கூறப்படுகின்றது.
    அதே நேரத்தில் சில்லறைவணிகத்தில் ஈடுபட்டிருக்கும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் சீர்குலைக்கும் என்ற அச்சமும் நிலவுகிறது. பெரும்பாலான மக்கள் மளிகை பொருள்களை வாங்கும் அண்ணாச்சிக்கடைகளும் பெட்டிக்கடைகளும் காணமால் போய், சில்லறை வணிகத்தின் மூலம் கிடைக்கும் லாபம் உள்ளூர் வியாபாரிகளுக்கு கிடைக்காமல் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு போய்விடும் அபாய நிலையும் தோன்றியுள்ளது.
    இந்தியா பல தரப்பட்ட மக்களை கொண்டதொரு தேசம். பெரும்பாலான மக்கள் ஏழைகளாகவும் நடுத்தர வர்கத்தினராகவும் இருக்கின்றனர். இவர்கள் மளிகைப் பொருட்களை மொத்தமாக வாங்காமல் அன்றைக்குத் தேவையாக மளிகை பொருட்களை மட்டுமே வாங்குகின்றனர். உதாரணமாக 50 மில்லி நல்லெண்ணையும் 2 ரூபாய்க்கு தேங்காய் சில்லும் 50 பைசாவுக்கு பச்சை மிளகாயும் வாங்குவார்கள். இவர்களின் தேவையை நிறைவேற்ற சிறுவணிகர்களால்தான் முடியும். அவசர தேவைக்கு கடனாகவும், மாதத் தவணையில் பொருள்கள் வாங்கும் வசதியும் இல்லாததும்தான்.
    ‘ரிலையன்ஸ், டாட்டா மற்றும் பிர்லா போன்றநிறுவனங்கள் முன்னமே இந்த துறையில் இருக்கின்றனவே, இப்போது மட்டும் ஏன் இந்த அளவுக்கு மக்கள் பயப்படுகிறார்கள்?’ என்றகேள்வி எழும். ரிலையன்ஸ், டாட்டா போன்றநிறுவனங்களுக்கு சில்லறைவணிகம் பிரதானமான தொழில் அல்ல. அவர்கள் நடத்தும் பலவகையான தொழில்களில் இதுவும் ஒன்று, அவ்வளவுதான்.
    ஆனால் இந்தியாவில் கால் பதிக்க காத்திருக்கும் Walmart,Carefour,Tesco போன்றவெளிநாட்டு நிறுவனங்களுக்கு இதுதான் முதன்மையான தொழில் ஆகும். எனவே மிகத் தெளிவாக திட்டமிட்டு களத்தில் இறங்குவார்கள். இதனால் தற்போதைய சிறு வணிகர்கள் பெரும் சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். பிழைப்புக்காக வேறு தொழில் தேட வேண்டியிருக்கும். தொழிலை விட இயலாதவர்கள் வேறு வழியில்லாமல் நடத்திக் கொண்டிருக்க வேண்டிவரும்.
    சில்லறைவணிகத்தில் அன்னிய முதலீட்டால் விவசாயிகளுக்கு நன்மை ஏற்படும் என்று ஒருபுறம் சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் இந்தியாவில் இருக்கும் சிறு விவசாயிகள் ஒழிக்கப்பட்டு பண்ணை விவசாயம் என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கம் வரும் என்று மறுபுறம் அச்சமும் தோன்றியுள்ளது. ஒருவகையில் இந்த அச்சம் நியாயமானதாகக் கூட தோன்றுகிறது. காரணம் மேற்கத்திய நாடுகளில் இருக்கும் ஒரு விவசாயிக்கு பல ஆயிரம் ஏக்கர் நிலம் இருக்கும் போது இந்தியாவில் அது ஓரிரு ஏக்கராகத்தான் இருக்கிறது. எனவே, பண்ணை விவசாயம் வந்தால் சிறுவிவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் வேலை இழக்க நேரிடும்.
    மக்களுக்கு பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கும் என்றகருத்தும் அன்னிய முதலீட்டிற்கு ஆதரவாக சொல்லப்படுகிறது. மலிவு விலை என்பதுதான் மக்களை வீழ்த்த வால்மார்ட் உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் ஏந்தியிருக்கும் ஆயுதம். நுகர்தலே மகிழ்ச்சி, நுகர்தலே வாழ்க்கை, நுகர்தலே இலட்சியம் என்று ஏற்கனவே அமெரிக்க சமூகத்தையே வளைத்து வசப்படுத்தி வைத்திருக்கிறது வால்மார்ட்.
    வால்மார்ட்
    இரண்டாம் உலகப்போரில் உளவுத்துறைஅதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றசாம்வால்டன், அமெரிக்காவின் அர்கன்ஸாஸ் மாநிலத்தின் ரோஜர்ஸில் வாங்கிய தள்ளுபடி விற்பனைக் கடைதான் வால்மார்ட். துவக்க காலத்தில் மற்றபலசரக்குக் கடைகளில் விற்கப்படாத மிக மலிவான பொருட்களும், மற்றகடைகளில் விற்கப்படும் பொருட்களை சந்தை விலையைவிட மலிவாகவும் விற்று வந்தது இந்த வால்மார்ட்.சாம்வால்டன் இரண்டு வகையான வியாபார நுணுக்கத்தை கையாண்டார். ஓன்று, ஊழியர்களுக்கு மிகக் குறைந்த சம்பளம் கொடுப்பது. மற்றொன்று உற்பத்தியாளர்களிடம் குறைவான விலையில் பொருட்களை கொள்முதல் செய்வது. இதன் காரணமாக அமெரிக்கச் சந்தைக்குத் தேவையான நுகர்பொருட்களை மலிவான ஊதியத்தில் உற்பத்தி செய்து தரும் ஏழை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் போக்கு அதிகரித்தது. அமெரிக்காவின் மற்ற உற்பத்தியாளர்களும் பெருவணிகர்களும் வால்மார்டின் குறைந்த விலை கொள்முதலுக்கு அடிபணியாவிட்டால் அழிந்து விடக்கூடிய நிலைக்கு அமெரிக்காவின் பல தொழில்களை மாற்றியிருந்தது வால்மார்ட்.
    1990ல் அமெரிக்காவில் வெறும் 5 சூப்பர் சென்டர்களை கொண்டிருந்த வால்மார்ட், அடுத்த 12 ஆண்களில் 1268 சூப்பர் சென்டர்களை நிறுவி அசுர வளர்ச்சியடைந்தது. இந்த காலகட்டத்தில் தோன்றிய உலகமயமாக்கல் கொள்கையைப் பயன்படுத்தி அயல்நாடுகளிலும் கால்பதிக்கத் துவங்கியது. 1990ல் மெக்ஸிகோவில் ஒரே ஒரு கடை மட்டும் திறந்திருந்த வால்மார்ட், இன்று அர்ஜென்டினா, பிரேசில், கனடா, சீனா, ஜெர்மனி, ஜப்பான், மெக்ஸிகோ, நிகராகுவா, பிரிட்டன் முதலிய நாடுகளில் 2700 கடைகளைத் திறந்திருக்கிறது. பல நாடுகளில் சில்லறைவணிகத்தில் இந்நிறுவனம் முதலிடத்தில் இருக்கிறது.
    அமெரிக்காவின் மொத்த பலசரக்கு மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனையில் 35% வீட்டு உபயோகப் பொருட்கள், சோப்பு, ஷாம்பு போன்றவைகளில் ஏறத்தாழ 40%. ஆடியோ வீடியோ விற்பனையில் 25% என்று அமெரிக்கச் சந்தையையே தனது கைப்பிடிக்குள் வைத்திருக்கிறது வால்மார்ட். அதேபோல பிரொக்டர் அண்ட் காம்பிள் (விக்ஸ் கம்பெனி), லீவைஸ் (ஜீன்ஸ் கம்பெனி), ரெவ்லான் (அழகு சாதனங்கள்) போன்றபல முன்னணி அமெரிக்க நிறுவனங்கள் தமது பொருட்களில் 20% முதல் 40% வரை வால்மார்ட் மூலமாகவே விற்பனை செய்கின்றன. தனது ஆணைக்குக் கட்டுப்பட மறுக்கும் நிறுவனங்களின் பொருட்களை வால்மார்ட் விற்பனை செய்யாது. மாறாக அதே மாதிரி பொருட்கள் வேறு நிறுவனத்திடமிருந்தோ அல்லது வேறு நாடுகளிலிருந்தோ பெறப்படும்.
    பிளாஸ்டிக் கச்சா பொருள் விலை கடுமையாக உயரவே, தனது தயாரிப்புகளின் விலையைக் அதிகரிக்க முடிவெடுத்தது அமெரிக்காவின் மிகப்பெரிய பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான ‘ரப்பர் மெய்ட்’. ஆனால் வால்மார்ட் விலை உயர்வுக்கு சம்மதிக்கவில்லை. மாறாக ரப்பர்மெய்டின் பொருட்களை விற்பதை நிறுத்தியது. அதன் விளைவாக ரப்பர்மெய்ட் நிறுவனம் திவாலாகி தனது நிறுவனத்தை போட்டிக் கம்பெனியான நியுவெல்லிடம் விற்றுவிட்டது. இதேபோன்று லீவைஸ், தாம்சன் டி.வி. போன்று விற்பனையில் கொடிகட்டிப் பறந்த பலப்பல அமெரிக்க நிறுவனங்களை மூடச்செய்து பல லட்சம் அமெரிக்கத் தொழிலாளர்களின் வாழ்க்கையை அழித்திருக்கிறது வால்மார்ட்.
    சீனாவிலிருந்து அமெரிக்கா செய்து வரும் இறக்குமதியில் 15%க்கு மேல் வால்மார்ட்டின் பங்குதான். பிரிட்டனும் ரஷ்யாவும் பல்வேறு வெளிநாடுகளிலிருந்து செய்யும் இறக்குமதியின் மொத்த மதிப்பைக் காட்டிலும் வால்மார்ட் செய்யும் இறக்குமதியின் மொத்த மதிப்பு அதிகம்.
    உலக அளவில் வால்மார்ட்டின் ஊழியர்கள் 15 லட்சம் பேர். ஏழை நாடுகளின் தொழிலாளர்களை ஒடுக்குவதைப் போன்றே தனது ஊழியர்களையும் ஒடுக்குகிறது வால்மார்ட். எங்குமே பெயருக்குக் கூட ஒரு தொழிற்சங்கம் கிடையாது. ஒருவர் முன்னர் எப்போதாவது தொழிற்சங்கத்தில் உறுப்பினராக இருந்திருந்தால் கூட அவருக்கு வால்மார்ட்டில் வலை வாய்ப்பு கிடையாது.
    ‘ஏன் 51 சதவீத முதலீடு? ஏன் இதை 49 சதவீதமாக வைத்திருக்கக் கூடாது? அந்த இரண்டு சதவீதத்தை இந்திய நிறுவனங்களால் கொண்டு வர முடியாதா?’ என்றகேள்வி எழும். இந்த இரண்டு சதவீத வேறுபாட்டில் கட்டுப்பாடு கைமாறும் என்பதுதான் இதில் உள்ள சிதம்பர ரகசியம்.
    இக்கட்டான இந்த நிலையில் சில்லறைவணிகத்தில் அன்னிய முதலீடு என்பதை அந்தந்த மாநிலங்கள் விரும்பினால் மட்டுமே அனுமதிக்கலாம் என்பது கொஞ்சம் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய ஒன்றாகும். மேலும் இத்தகைய நிறுவனங்கள் பெரு நகரங்களில் அதாவது 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட 53 நகரங்களில்தான் இதற்கான வாய்ப்பு இருக்கின்றது என்பதும் ஆறுதலான செய்தியாக உள்ளது. எது எப்படி இருப்பினும் இதன் நன்மை தீமைகள் பற்றி தீர்க்கமாக இப்போது கூறமுடியாது, காலம்தான் பதில் சொல்லும்.

    வேகமாய் வருகிறது வெற்றி!

    ஜெ. கமலநாதன்
    முன்னாள் இயக்குநர், சென்னை வானொலி
    வெற்றி பெறவேண்டும் என்றஆசை நம் எல்லோருக்குள்ளும் இருக்கின்றது. ஆனால் எப்படி வெற்றி பெறவேண்டும் என்றவழிமட்டும் புலப்படுவதில்லை. அதுகூட பரவாயில்லை. எதில் வெற்றி பெறவேண்டும் என்பது கூட பலருக்குத் தெரிவதில்லை என்பதுதான் கொடுமை.
    ஒவ்வொரு படைப்புக்கும் கடவுள் ஒரு நோக்கத்தை வைத்தே பூமிக்கு அனுப்பியிருக்கின்றார். அந்த படைப்பின் நோக்கம் தெரிந்து செயல்பட்டாலே போதும். வெற்றி நிச்சயம்! தண்டவாளத்தில் ஓடுகின்றரயில், தார்சாலையில் ஓடுகின்றபேருந்து, காற்றைக் கிழித்துக்கொண்டு வானில் சீறிப்பாயும் ஜெட் விமானம் என்று எல்லோருக்கும் ஒரு சென்றடையும் (Destination) இலக்கு இருக்கிறது. ஆனால் பல இளைஞர்களுக்கு தான் என்னவாகப் போகிறோம் என்பதே உறுதியில்லாத நிச்சயமற்றநிலை இருப்பது வருந்தத்தக்கது. சிறு உணவுத்துணுக்கை இழுத்துச் செல்லும் எறும்புகூட தான் சென்றடைய வேண்டிய இடம் எது என்று உணர்ந்து வைத்திருக்கிறது. ஆனால் பட்டப்படிப்பு படிக்கும் பல மாணவர்களுக்கு தனது இலக்கு எது என எந்த சிந்தனையும் கிடையாது.
    தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்க்கு ‘நீங்கள் என்ன ஆக விரும்புகிறீர்கள்’ என்று கட்டுரைப்போட்டி வைப்பார்கள். குழந்தைகள் நான் கலெக்டர் ஆக விரும்புகிறேன், நான் டாக்டர் ஆக விரும்புகிறேன். நான் பெரிய தலைவராக விரும்புகிறேன் என்று எழுதுவார்கள். இது ஒரு நல்ல மனநலப் பயிற்சி ஆகும். எந்த உயரத்தை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்றஉந்துதலை இது தரும். உயரங்கள் மாறிப்போகலாம். டாக்டர் ஆக விரும்பியவன் I.T. என்ஜினியர் ஆகி இருக்கலாம். I.A.S. படித்து கலெக்டர் ஆக விரும்பியவன் ஒரு Electrical கம்பெனியின் M.D. ஆகி இருக்கலாம். தலைவன் ஆக விரும்பியவன் தலைமை ஆசிரியர் ஆகி இருக்கலாம். இதில் வருந்துதலுக்கு ஏதுமில்லை. நீங்கள் அடைய விரும்பிய உயரம் மாறி இருக்கலாம். ஆனால் வேறு ஒரு உயரத்தை நீங்கள் அடைந்திருப்பீர்கள் என்பது உறுதி.
    டாக்டர் ஆக வேண்டும் என்பதுதான் என் உயர்நிலைப்பள்ளி நாட்களின் போது இலட்சியமாக இருந்தது. அதற்குரிய வாய்ப்பு கிடைக்காமல் B.A., M.A. ஆங்கில இலக்கியம் படிக்க நேர்ந்தது. வானொலியின் அறிவிப்பாளராக சேரும் வாய்ப்பு வந்து இயக்குநர் என்னும் மிகப்பெரிய பொறுப்பு வரை கிடைத்தது. சென்னை வானொலி இயக்குனர் ஆகி தமிழகத்தின் அனைத்து வானொலி நிலையங்களுக்கும் தலைவர் ஆகும் உயர்நிலை வந்தது. மருத்துவர் ஆகும் கனவு மடிந்து போனாலும் இன்னொரு துறையில் பிரகாசிக்கும் வாய்ப்பினை இறைவன்தான் கொடுத்தார் என்று திடமாக நம்புகிறேன்.
    “ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும். மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்து விடாதே” என்ற ஆங்கில அறிஞர் ஒருவரின் கூற்று நினைவுக்கு வருகின்றது.
    டாக்டர் A.P.J. அப்துல்கலாம் அவர்கள் விமானவியல் துறையின் உயர்பதவிக்கான U.P.S.C. தேர்வு எழுதிவிட்டு காத்திருந்தார். கிடைக்கவில்லை. மனம் சோர்ந்து சுவாமி சிவானந்தரிடம் சென்றார். “மகனே, கவலைப்படாதே. ஒரு கதவு மூடப்பட்டாலும் இன்னொரு கதவு திறக்கும். உனக்கு வேறொரு பொறுப்பு காத்திருக்கிறது. சோர்வகற்றிப் பாடுபடுÐ எல்லாம் நல்லபடி நடக்கும்Д என்று ஆசி கூறி அனுப்பினார். அதற்குப் பிறகு நடந்தவை தான் அதிசய நிகழ்வுகள் ஆயின. அணுவியல் துறையில் பொக்ரான் குண்டுவெடிப்பு பரிசோதனையில் உலகத்தையே இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த இந்த அறிவியல் சாதனையாளர், பின்னாளில் ஆளும் கட்சியும் எதிர்கட்சியும் ஒன்றிணைந்து தேர்வு செய்த குடியரசுத் தலைவர் ஆனார். இந்தியத் திருநாட்டின் அனைத்து மக்களும் நேசிக்கும் அரும்பெரும் தலைவரானார்.
    இளைஞர்கள் இளம் வயதிலேயே இலக்கு ஒன்றை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும். பின்னாளில் அந்த குறிப்பிட்ட இலக்கை அடைய முடியாவிட்டாலும் வேறொரு சிகரத்தைத் தொடக்கூடிய வாய்ப்பு வந்து சேரும் என்பது உறுதி. இலக்கு இல்லாத பயணம் என்பது ஏதும் இல்லை. பயணம் புறப்படும்போதே எங்கு சென்று சேர வேண்டும் என்பதை தீர்மானித்துக் கொள்கின்றோம். அதுபோல வாழ்க்கை எனும் பயணத்திற்கும் சென்றடைய வேண்டிய இலக்கு எதுவென முடிவெடுத்து செயல்பட வேண்டும். அப்படி இலக்கினை தீர்மானத்துக் கொண்டாலே சென்றடையும் வழி என்பதும் தீர்மானிக்கப்பட்டுவிடும். சென்னையிலிருந்து திருச்சி செல்லவேண்டும் என்று தீர்மானித்தவுடன் பேருந்திலா? தொடர் வண்டியிலா? காரிலா என்றும் தீர்மானித்துக் கொள்கின்றோம் அல்லவா? அதுபோலவே, நாம் வாழ்க்கையில் அடைய வேண்டிய இடத்தைப் பற்றி முடிவெடுத்துக் கொண்டால் அதை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதையும் வகையாக வகுத்துக் கொள்ள இயலும்.
    தடுமாற்றமில்லாத, தயக்கமில்லாத கனவுச் சித்திரம் ஒன்றை மனதில் வரைந்து கொள்ள இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ‘என்னவாக விரும்புகிறோம்’ என்று ஆசைப்படுவது உயர்நிலைப் பள்ளிப் பருவம். ‘அந்நிலையை அடைய என்ன செய்யப்போகிறோம், எந்தெந்த அறிவுக்கூர்மை பயிற்சிகளை, பண்புநலன் மேம்பாட்டுப் பயிற்சிகளை, நேரக்கட்டுப்பாட்டு பயிற்சிகளைக் கைக்கொள்ளப் போகிறோம்’ என்று முடிவெடுத்து செயல்படுத்துவது கல்லூரிப்பருவம் என்பதை இளைஞர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
    Destination an Journey என்ற அளவில் சில தீர்மானங்களை கல்லூரிப் பருவத்தில் வகுத்துக்கொண்டால் பிறகு எல்லாமே எளிதாகிவிடும். இலக்கு, வழி இந்த இரண்டிலுமே எந்த தீர்மானமும் இல்லாத இளைஞனுக்கு எல்லாமே கண்ணைக்கட்டி காட்டில் விட்டமாதிரி இருக்கும். அச்சம் இதயத்தை கவ்வி நிற்கும். கலக்கமும், மயக்கமும், தயக்கமும், சோர்வும், தளர்ச்சியும், களைப்பும் ஏற்படும். இது அவர்களை ‘தற்காலிக தப்பித்தலுக்காக’ தீயபழக்கங்களை நோக்கி அழைத்துச் சென்றுவிடும். இந்த போதைப் பழக்கங்களால் தீய நட்பும், தன்னம்பிக்கை இழப்பும், பண்புநலன் சீர்கேடும் உண்டாகும்.
    “We always have a choice.We can always choose between right and wrong” என்கிறார் தன்னம்பிக்கைச் சிந்தனையாளர் ராபின் ஷர்மா. கல்லூரிப் பருவத்தில் இளைஞர்கள் தேர்வு செய்யும் பாதை தான் அவர்களது வாழ்க்கையின் முழுமையான பிரகாசத்தையோ, இருட்டையோ தீர்மானிக்கிறது. இந்த ஒப்பிடற்கரிய பொன்னான கல்லூரிப் பருவத்தில் முடிவெடுக்க தயக்கம் காட்டினால், 70 வயது வரை அல்லல்பட நேரலாம். கல்லூரிப் பருவத்தில் இலக்கையும் அதை அடைதலுக்குரிய வழிகளையும் தீர்மானித்துக் கொண்டால் 70 வயது வரை இன்பமாக வாழலாம்.
    இதைத்தான் ‘உன் வாழ்க்கை உன் கையில்’ என்கிறார்கள். “You become what you want to become” என்றார் கார்லே என்ற பேரறிஞர். ‘என்னவோ நடக்கிறபடி நடக்கட்டும்’ என்று புலம்பிக் கிடப்போர் சிலர்; ‘படிக்க வைக்கும் பெற்றோர் வேலையும் வாங்கித் தருவார்கள்’ என்று அவர்கள் மீது பொறுப்பைத் தள்ளிவிட்டு சும்மா அலைவோர் பலர்; ‘எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றாலும் வேலை கிடைக்கவா போகிறது?’ என்று தத்துவம் பேசுவோர் சிலர். இப்படிப்பட்டவர்களுக்குத்தான் நான் சொல்கிறேன், “தயக்கமில்லாமல், அச்சமில்லாமல் உங்கள் எதிர்காலத்தையும் அதை அடைவதற்கான வழிகளையும் திடமாக வகுத்துக் கொள்ளுங்கள்; மற்ற எல்லாம் நல்லபடி நடக்கும்..

    வாய்ப்புகளை உருவாக்கு! வாழ்க்கையை உயர்வாக்கு!

    எழுத்து, நாடகம், நாட்டியம், உயிர் அறிவியல், ஆன்மிகம், வாழ்க்கை என்று பரந்துபட்ட தன்னுடைய விருப்பங்களை முதன்மைப்படுத்திக் கொண்டிருப்பவர்,
    உடற்பயிற்சியில் அமெரிக்காவின் CHEK இன்ஸ்டிடியூட்டில் கற்ற அறிவியல் மற்றும் உளவியல் சார்ந்த பயிற்சிகளை இந்திய மக்களுக்கு ஏற்றவகையில் கற்றுத் தருபவர்,
    Certificate of creative Excellence விருதை 1995 மற்றும் 2000 ஆண்டுகளில் அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடைபெற்றசர்வதேச வீடியோ மற்றும் திரைப்பட விழாவில் பெற்றவர்,
    2002 2003ல் ‘விசாலம்’ என்ற 52 வார தொடரையும், ‘புத்த ஜாதகம்’ (புத்தரின் வழிமுறைகள்) என்றதலைப்பில் புத்தரின் வாழ்வியல் கருத்துக்களை 13 பகுதிகளாகவும், ‘ஊரரிந்த ரகசியம்’ என்ற தலைப்பில் 36 சிறுகதைகள் அடங்கிய வாழ்வியல் பற்றிய தொடரையும் இயக்கியவர், அஞ்ஞானமும், கடவுளும் சந்தித்தால் (When Science met God) என்ற தலைப்பில் தத்துவத்தை அறிவியலுடன் இணைத்து எழுதி வருபவர்,
    சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கையைப் பற்றிய தொடரை தற்போது இயக்கி வருபவர் என்று பன்முகத் தன்மை கொண்டவர் ‘மேவ்ரிக் ஃபிட்னெஸ் ஸ்டுடியோ’வின் சி.இ.ஓ. திருமதி கீதா கிருஷ்ணராஜ்.
    நடிப்பு, நாட்டியம், இயக்கம், எழுத்துத்துறை, உடற்பயிற்சி நிலையம் என்று பல்வேறு துறைகளில் தன்னை ஈடுபடுத்தி அவை எல்லாவற்றிலும் சாதிப்புகளை நிகழ்த்தி வருகின்றவரை, எப்படி இவ்வளவு துறையிலும் தொடர்ந்து சாதனைகளை செய்கிறார்; கிடைக்கும் வாய்ப்புக்களை எப்படி பயன்படுத்திக் கொள்கிறார்; எதிர்காலத்தில் எத்தகைய சாதனைகளை படைக்க விருப்பப்படுகிறார் என்பதைப் பற்றியெல்லாம் அறிந்து கொள்ள திருமதி கீதா கிருஷ்ணராஜை, முனைவர் செந்தில் நடேசன், பேராசிரியர் கே. நாகராஜ் ஆகியோருடன் நாம் தொடர்பு கொண்டு பேசியபோது பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அதிலிருந்து இனி…

    Continue Reading »

    மேலாண்மை உத்திகள்

    உங்களுக்கு ஒரு நிறுவனத்தில் வேலை கொடுத்தார்கள் என்றால், அதை மிகச் சிறப்பாகச் செய்ய வேண்டும். ஆழ்ந்து செய்ய வேண்டும். துப்புரவு பணி கொடுத்தால் கூட, சிறந்த துப்புரவு தொழிலாளி என பெயர் எடுக்க வேண்டும்.
    செய்யும் தொழிலில் ஈடுபாடு வேண்டும்
    இந்தியாவின் சிறந்த ஓவியரான எம்.எப். உசேன் எப்படி படம் வரைவாரோ, ஜாகீர் உசேன் எப்படி தபேலா வாசிப்பாரோ அதைவிட கவனமாக உங்கள் வேலையைச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் நீங்கள் ஒரு நல்ல மேலாளராகி விடலாம்.
    ஒருநாள், சில பெண்கள் என்னிடம் முறையிட்டனர். நாங்கள் எம்.சி.ஏ. படித்திருக்கிறோம், எங்களுக்கு 25,000 சம்பளம் தரலாம் என்று சொல்லி பணியமர்த்தினார்கள். ஆனால் எங்களை கணிப்பொறிகளையெல்லாம் துடைக்கச் சொல்கிறார்கள். அவர்கள்மீது வழக்கு போட்டு சிறைக்கு அனுப்புங்கள் என்று புகார் செய்தார்கள். நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் கணிப்பொறியைத்தானே துடைக்கச் சொன்னார்கள் என்று கேட்டேன். அதெல்லாம் துப்புரவுப் பணியாளர்தான் துடைக்கவேண்டும். நாங்கள் எதற்குத் துடைக்க வேண்டும் என்றார்கள். இதுபோன்ற மனநிலை இருந்தால் உங்களுக்கு வேலை கிடைக்காது. கிடைத்த வேலையும் போய்விடும். இந்தியாவில் மட்டுமல்ல, எங்குமே கிடைக்காது.
    போட்டி உங்களுக்கும் இன்னொரு இந்தியனுக்கும் கிடையாது. உங்களுக்கும் சைனாக்காரர்களுக்கும், உங்களுக்கும் ஜப்பானியர்களுக்கும். ஜப்பானியர் கணிப்பொறியைத் துடைக்கச் சொன்னாலும் துடைப்பார். கழிப்பறையை சுத்தம் செய்யச் சொன்னாலும் செய்வார். இதுதான் உண்மை நிலை. பன்னாட்டு நிறுவனம் உங்களுக்கு வேலை தருமா? ஜப்பானியருக்கு வேலை தருமா?
    உங்கள் பணியை நீங்கள் நேசிக்க வேண்டும். செய்யக்கூடிய தொழிலை நேசிப்பதுதான் மேலாண்மை. எந்த வேலையாக இருந்தாலும் செய்யத் தயங்கக்கூடாது. சம்பளத்தை எதிர்பார்க்காமல் வேலை செய்யுங்கள்.
    நான்குபேர் வேலை பார்த்தால் இரண்டு மேற்பார்வையாளர்கள் என்பது பழையமுறை. இதுவே கேரளாவில் பார்த்தால் கட்டிட வேலை பார்ப்பவன் இரண்டுபேர் என்றால் மேற்பார்வையாளர்கள் ஒருவர் இருப்பார். இந்தியாவில் உள்ள மிகப்பெரிய பிரச்சனை இதுதான். வேலை பார்க்காமல் மேற்பார்வையிடுபவர்கள் அதிகம். ஹூண்டாய் கம்பெனியில் பி.இ. படித்த பொறியாளர்கள் மூன்றே பேர்தான். மற்றவர்கள் எல்லாம் டிப்ளமோ, ஐ.டி.ஐ. படித்தவர்கள். இவர்கள் போதும், வேலை பார்ப்பவர்கள் தான் வேண்டுமே தவிர மேற்பார்வையாளரெல்லாம் வேண்டாம் என்கிறார்கள், தென்கொரிய கார் தொழிலதிபர்கள்.
    சில மேலாண்மை உத்திகள்:
    உங்களுக்குக் கீழே பணியாற்றுபவர்களின் பெயரைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். தனது பெயர்தான் ஒரு மனிதனுக்கு மிகவும் பிடித்த இசை. பெரிய அதிகாரி பெயர் சொல்லி அழைத்தால் ஊழியருக்கும் மகிழ்ச்சி கிட்டும். பெயர்களை மறந்துவிடுவீர்கள் என்றால் மற்றவர்களின் பெயர்களை நினைவில் நிறுத்தும் பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள்.
    உங்களுடன் பணியாற்றுபவர்களைப் பார்த்துப் புன்னகைக்கக் கற்றுக்கொள்ளுங்கள். கீழே இருக்கும் ஊழியர்களிடம் சிரிக்கும் பழக்கம் அரிது. அறிவுரை வழங்கும் பழக்கம் தான் இருக்கிறது. பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அதில் பெரிய பயன் கிடையாது. ஒரு அதிகாரியைப் பார்த்தால் குட்மார்னிங் சார். ஒரு ஜூனியரைப் பார்த்தால் ‘குட்மார்னிங் ராஜூ, எப்படியிருக்கிறீர்கள்’ என்று பேசப்பழகிக் கொள்ளுங்கள்.
    வேலை பார்க்கும் இடத்தில் புன்னகை நிறைந்த முகத்தோடு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இறுக்கமாக இருக்கக்கூடாது. வெறும் ஐயாயிரம் தான் சம்பளம் தருகிறார்கள், எதற்காக வேலை பார்க்க வேண்டும் என்றிருக்காதீர்கள். நான் படித்த எம்.பி.ஏ. படிப்பிற்கு 50,000 கிடைக்க வேண்டாமா? வெறும் ஆறாயிரம் தான் தருகிறார்கள் என்பது தவறான மனப்பான்மை. பலர் விருப்பத்துடன் வேலை பார்ப்பது கிடையாது. உங்கள் வேலையை விரும்புங்கள். புன்னகையால் மகிழ்ச்சியை வெளிப்படுத்துங்கள். கண்களால் சிரியுங்கள். அதைவிட முக்கியமானது கவனித்துக்கேட்டல் (அஸ்ரீற்ண்ஸ்ங் கண்ள்ற்ங்ய்ண்ய்ஞ்). முதலாளி என்ன சொல்கிறார் என்று கேட்டுக் கொள்ளுங்கள். நிறைய பேர் கேட்பதே கிடையாது. ஒருவர் சொல்வதற்கு முன்பாக இவர்கள் பேசுவது என்பது மிகப்பெரிய தவறு. எதைப்பற்றிப் பேசுகிறீர்கள் என்பதும் மிகமிக முக்கியம். தேவையில்லாத விஷயங்களைப் பற்றிப் பேசுவது நேரத்தை வீணடிப்பதாகும். பல பிரச்சனைகளுக்கும் அதுவே வழிவகுக்கும். அளவாகப் பேசி நிறையக் கவனித்துக் கேட்க கற்றுக்கொள்ளுங்கள்.
    ஒரு மேலாளராக இருந்தால் பிரச்சனைகள் பற்றியும் நிர்வாக உத்திகள் பற்றியும் பேச வேண்டும். இன்றைய இளைஞர்கள் அதிகமாக சினிமாவைப் பற்றித்தான் பேசுகிறார்கள். அவர்களின் முக்கியமான பிரச்சனையே சினிமா தான். அடுத்து வெளிவரப்போகும் சினிமாவில் யார் நடித்திருப்பது, என்னவெல்லாம் தொழில்நுட்பங்கள் வருகிறது என்று ஆராய்ச்சி செய்கிறார்கள்.
    ஒரு சினிமா நடிகையின் நாய்க்குட்டிக்கு அறுவை சிகிக்சை என்ற செய்தியுடன் அந்த நடிகையின் பெரிய படம் ஒன்றை பத்திரிக்கையில் பார்த்தேன். நடிகை என்றால் அனைவரும் விரும்பிப்படிப்பார்கள் என்பது பத்திரிக்கை நடத்துபவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஒரு சினிமா நடிகைக்குத் திருமணம் நடக்கவிருக்கிறது என்றால் அதைத்தான் இந்தியா முழுவதும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நடிகை கர்ப்பமானால் அதற்கு அடுத்த கட்ட பேச்சு. திருப்பதி கோவிலுக்குச் சென்றால் அதுதான் மாணவர்களிடையே விவாதம். நடிகைக்கு விவாகரத்து ஆகிவிட்டால் அந்தப்பேச்சு இன்னொரு மூன்று மாதம் ஓடும். இதுபோன்ற தேவையில்லாத விஷயங்களைப் பேசிக்கொண்டிருக்காதீர்கள். இதனால் உங்கள் அறிவும் தொழில்திறனும் வளராது.
    சினிமா நடிகரின் தனிப்பட்ட வாழ்க்கையைத் தெரிந்து உங்களுக்கு என்ன ஆகப்போகிறது. உங்களது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிக் கவலைப்படுங்கள். உங்கள் மேலாளரைப் புரிந்துகொள்ளுங்கள். உடன் பணிபுரிபவர்களைப் புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு வரும் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளுங்கள்.
    நீங்கள் ஒருதலைவராக வேண்டும் அல்லது ஒரு மேலாளராக வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் ஒரு நல்ல மனிதனாகவும் இருக்க வேண்டும். ஒரு நல்ல மனிதனால் தான் ஒரு நல்ல மேலாளராக, சிறந்த தலைவராக இருக்க முடியும்.
    நான் பொய்தான் பேசுவேன். நிறுவன நிதியைக் கையாடலும் செய்வேன். என்னை ஒரு மேலாளராக நியமியுங்கள் என்றால் முடியுமா? நான் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்திருக்க மாட்டேன். எட்டு மணிக்குத்தான் எழுவேன். பத்துமணிக்கு அலுவலகத்திற்கு வரமுடியாது. பதினொரு மணிக்குத்தான் அலுவலகத்திற்கு வருவேன். என்னை முதுநிலை மேலாளராக உயர்த்துங்கள் என்றால் செய்வார்களா? வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்.
    ஒரு நல்ல மனிதனாக இருங்கள். நீங்கள் பேசுவதில் உண்மையிருக்க வேண்டும். உங்கள் மீது மற்றவர்களுக்கு நம்பிக்கை வரவேண்டும். வேலையில் ஆர்வமிருக்க வேண்டும். மற்றவர்களை மதிக்க வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும். தோற்றுப்போனால் கூட இது என்னுடைய தவறுதான்; இந்தத் தவறுக்கு நான் தான் காரணம் என்று ஏற்றுக்கொள்ளுங்கள். அதுதான் மிக உயர்ந்த மனிதப்பண்பு.
    ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருப்பவர், ஒரு தவறு நடந்துவிட்டால் உடனே இவர்தான் செய்தார் என்று வேறொருவரை கைகாட்டுவார். அதுவே ஒரு நல்ல சாதனை என்றால் நான்தான் செய்தேன். எனக்கு பதவி உயர்வு கொடுங்கள் என்பார். நிறுவனம் வளர்ச்சியடைந்தால் நான்தான் காரணம். நிறுவனத்தை இழுத்து மூடினால் அடுத்தவர்தான் காரணம் என்பார்கள்.
    இத்தகைய மனிதர்களை நல்ல குணமுள்ள மனிதர்கள் என்று சொல்ல முடியுமா? இவர் பதவி வகிக்கும் நிறுவனம் கூடிய விரைவில் வீழ்ந்துவிடும். அந்த வீழ்ச்சிக்குக் காரணம், அந்த மேலாளர்தான்.
    ஒரு நிறுவனத்திற்கு நான்தான் மேலாளர் என்றால், ஏதாவது தவறு நடந்திருக்கிறதென்றால் அந்த அலுவலர்தான் காரணம் என்று சொல்லாமல், இந்த நிறுவனத்தில் ஏதோ ஒரு அதிகாரி தவறு செய்திருக்கிறார். இருந்தாலும் நான்தான் அதற்கு பொறுப்பு. நான்தான் அதை முதலிலேயே கண்டுபிடித்திருக்க வேண்டும். நான்தான் அவரை சரி செய்திருக்க வேண்டும். என்னை மாற்றுங்கள் என்று கேட்பது சிறந்த மனிதப்பண்பு. இது ஜப்பானியர்களுடைய பாரம்பரியம்Ð
    நீங்கள் அனைத்திற்கும் பொறுப்பேற்கக் கற்றுக்கொள்ளுங்கள். பொறுப்பேற்பது நல்ல மனிதப் பண்பு. உண்மை சொல்லக்கூடிய பண்பு, ஒரு பொறுப்பை எடுத்துக்கொள்ளக்கூடிய பண்பு, உழைக்கக்கூடிய மனப்பான்மை இதுபோன்ற நல்ல பல பண்புகளை நீங்கள் வளர்த்துக்கொண்டால் மட்டும் தான் உங்களுக்குக் கீழே வேலை பார்ப்பவர்களுக்கு உங்கள் மீது மரியாதை வரும். இல்லாவிட்டால் மரியாதை வைத்திருப்பதுபோல் நடிப்பார்கள். உங்களுக்கு பதவி உயர்வும் கிடைக்காது. உங்களுக்குக் கீழே வேலை பார்க்க யாரும் விரும்பவும் மாட்டார்கள்.
    எனக்கு இரண்டு மகன்கள், மூத்த மகன் தொழில்நுட்பக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறான். சிறியவன் ஐந்தாம்வகுப்பு படிக்கிறான். கணினி மூத்த மகனிடம் தான் இருக்கிறது. கணினியில் விளையாட, இருவருக்குமிடையே இந்தியா பாகிஸ்தான் போல சண்டை நடக்கும். ஒரு பிள்ளையைப் பெற்றால் அப்பா. இரண்டு பிள்ளைகளைப் பெற்றால் நீங்கள் ஒரு நீதிபதி; சண்டையைத் தீர்ப்பதற்கே நேரம் போதாது.
    ஒருநாள் இருவரும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து நண்பர்களாகக் காணப்பட்டனர். எனக்கு ஒரே ஆச்சரியம். சின்னவனைக் கூப்பிட்டு என்னடா, உன் அண்ணணை ரொம்ப பிடித்திருக்கிறதா என்று கேட்டேன். உடனே அவன், கணினியில் விளையாடுவதற்காக அண்ணனிடம் நண்பன் ஆனேன் என்றான். உங்களிடம் நல்ல பண்புகள் இல்லை என்றால் உங்களுக்குக் கீழே வேலை பார்ப்பவர்கள் பிடிப்பதுபோல் நடிப்பார்கள். நல்ல வாய்ப்பு வரும்போது உங்களுக்கே ஏதேனும் ஆபத்தை ஏற்படுத்திவிடுவார்கள்.
    இரண்டு வருடங்கள் நீங்கள் உண்மையுடன் முயற்சி செய்தீர்களென்றால் ஒரு சிறந்த மேலாளராக வரமுடியும். அதில் ஒன்றும் சந்தேகமேயில்லை. விரும்பிய துறையில் ஆயிரம் மணிநேரம் நீங்கள் செலவு செய்தீர்களென்றால் அத்துறையில் நிச்சயம் ஒரு நிபுணராகிவிடலாம். நிபுணர்கள் அனைவரும் அவரவர் துறைகளில் தலைவர்களேÐ ஆயிரம் மணிநேரம் சிறப்பாகப் பயன்படுத்தியிருந்தால் பெரிய டாக்டராகலாம், பெரிய என்ஜினியராகலாம், பெரிய ஓவியராகலாம், ஓர் இசை அமைப்பாளராகலாம், ஒரு விளையாட்டு வீரனாக மாறலாம். ஆயிரம் மணிநேரம் தான் வேண்டும். அது உங்களுக்கு இருக்கிறது நேரத்தைப் பயன்படுத்துங்கள். தலைமைத் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். நிச்சயம் உங்களுக்கு வேலையும் கிடைக்கும்; வெற்றியும் கிடைக்கும்.

    உள்ளத்தோடு உள்ளம்

    ஊர் பெரியவர் ஒருவரிடம் அந்த ஊர் இளைஞன் ஒருவன் “இந்த ஊரில் உள்ள தோட்டங்களில் இருந்தும், வெளியூர்களில் உள்ள தோட்டங்களில் இருந்தும் பலவித பழங்கள் விற்பனைக்கு வருகின்றன. மக்கள் பழங்களை வாங்கி சுவைத்து அதன் விதைகளை எறிந்து விடுகிறார்கள். அப்படி எறியப்படுகிறவிதைகள் அனைத்தும் மண்ணில் முளைப்பதில்லை. மனிதர்கள் பெருகுவதைப் போல் செடி, கொடிகள் ஏன் முளைப்பதில்லை என்று கேட்டார்.

    Continue Reading »

    இலக்குகளை அடைய 10 வழிகள் …

    மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் இலக்கு என்பது அவசியம் என்று அறிஞர்கள் கூறுவது உண்மையா?இலக்கு இல்லாத மனிதன் மாலுமி இல்லாத படகு போல தத்தளிப்பான் என்பது நிஜமா?நீங்கள் நிர்ணயிக்கும் இலக்குதான் பிற்காலத்தில் உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கப் போகும் திருப்புமுனை.

    Continue Reading »