– 2012 – October | தன்னம்பிக்கை

Home » 2012 » October (Page 3)

 
  • Categories


  • Archives


    Follow us on

    நேர நிர்வாகக் கொள்கைகள்

    கோவை மாவட்டத்தில் உள்ள ராமகிருஷ்ணாபுரம் மகளிர் மேனிலைப்பள்ளியில் உதவியாசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றேன். அப்போது எனக்குள் ஒரு உறுதியை எடுத்துக் கொண்டேன். படிப்பை முடித்தவுடன் எந்தவித கஷ்டமும் இல்லாமல் அரசு பணி ஒதுக்கீடு செய்திருக்கிறது. அதற்கு நன்றிக்கடனாக எந்த எதிர்பார்ப்பும் இன்று என்னிடம் பயிலும் மாணவர்களுக்கு சொல்லித் தருவதுடன் அவர்களை மேம்பாடையச் செய்ய வேண்டும் என்று உள்ளத்தில் உறுதிமொழியை எடுத்துக்கொண்டேன்.
    அந்தப் பள்ளியில் நான் பணியாற்றி 29 ஆண்டுகளில் நூறுசதவீதத் தேர்ச்சியையும், சராசரி மதிப்பெண்களில் அதிகபட்ச சராசரியையும் எனது பாடத்தில் வைத்திருந்தேன். அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் குறைவாக இருந்த காலத்திலும் கூட என்னுடைய பாடத்தில் தேர்ச்சி சதவீதம் நூறுசதவீதமாக இருந்து கொண்டிருக்கிறது இன்றுவரை. மேலும் என் பாடத்தில் மாவட்ட அளவில் முதன்மையும், மாநில அளவில் முதன்மையும் கொடுத்திருக்கிறேன். இதற்குக் காரணம் என்னுடைய அர்ப்பணிப்பு உணர்வும், மாணவர்களை புரிந்துகொண்டு அவர்களுக்கு ஏற்றவாறு பாடம் எடுக்கும் திறமையும் தான்.
    இப்படி 29 ஆண்டுகளைச் சிறப்பாகச் சென்று கொண்டிருந்த என் ஆசிரியப் பணியில் தலைமையாசிரியர் உயர்வு பெற்றேன். அப்போதே ஒரு முடிவெடுத்தேன். எந்த வகையிலும் முன்னேற்றமடையாத ஒரு பள்ளிக்குத் தலைமையாசிரியராகச் சென்று அந்தப் பள்ளியை பிரமாதமான பள்ளியாக மாற்றிக்காட்ட வேண்டும் என்று. அப்படி பார்த்தபோது தற்போது நான் பணியாற்றும் பள்ளி மிகவும் பின்தங்கிய தேர்ச்சி சதவீதத்தையும், மாணவர்கள் பலர் ஒழுங்கீனமாகவும் இருப்பதாக அறிந்தேன். நமக்கான பள்ளி இதுதான் என்று முடிவு செய்து தலைமையாசிரியராக பணியில் சேர்ந்து கொண்டேன்.
    கோவை மாவட்டம் இராமநாதபுரம் மாநகராட்சி ஆண்கள் மேனிலைப்பள்ளித் தலைமையாசிரியர் திரு. ராமதாஸ் அவர்கள் இந்தாண்டு டாக்டர் இராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதைப் பெற்றிருக்கிறார். கோவை மாவட்டத்தில் சிறிய ஊரான இருகூர் கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அவர் அதே ஊரில் உள்ள மேனிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த அவர் உயர்கல்வியான கல்லூரிப் படிப்பை சென்னையில் உள்ள பிரசிடென்சி காலேஜில் முடித்தவர். ஆசிரியர் பணியை முடித்தவுடன் கோவை மாவட்டத்தில் இராமகிருஷ்ணாபுரம் மகளிர் பள்ளியில் உதவியாசிரியராகப் பணியில் சேர்ந்த அவர் 29 ஆண்டுகள் அங்கு பணியாற்றிவிட்டு, தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்று இப்பள்ளிக்கு வந்து, இன்று பள்ளியின் தேர்ச்சி சதவீதத்தை 58 சதவீதத்திலிருந்து 93 சதவீதத்திற்கு உயர்த்தி மாநகராட்சி பள்ளிக்கு ஒரு முன்னுதாரணமாக மாற்றிக் காட்டியுள்ளார்.
    இத்தகைய அளப்பரிய சாதனையைத் தொட எவ்வளவு தூரம் பயணம் செய்தார், அப்பயணத்தில் பெற்றஅனுபவங்கள் முதலியவற்றைநம்முடன் பகிர்ந்து கொண்டதிலிருந்து…
    “முதலில் இந்த விருதை எனக்களித்த தமிழக அரசுக்கும், விருதுக்குக் காரணமாக இருந்த அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எப்போதும் நமக்கு இது கிடைக்க வேண்டும் என்று எண்ணி செயல்பட மாட்டேன். அப்படித்தான் இந்த விருதுக்காக நான் உழைக்கவில்லை. நான் பெற்றகல்வியை, அறிவை என் மாணவர்கள் பெறவேண்டும் என்று தான் உழைத்தேன்.
    நான் பள்ளியில் படிக்கும்போதே கல்லூரியை சென்னையில் உள்ள பிரசிடென்சி காலேஜில் தான் படிக்க வேண்டும் என்று இலக்கை நிர்ணயித்துக்கொண்டு, அந்த இலக்கை அடையவேண்டும் என்று கடுமையாக உழைத்தேன். பலன் கைமேல் கிடைத்தது. என் எண்ணத்தைப் போல் அதே கல்லூரியில் சேர்ந்து படித்தேன். அப்போதுதான் உணர்ந்தேன் விவேகானந்தர் சொன்னதைப் போல் நாம் என்னவாக நினைக்கிறோமோ அதுவாகவே ஆவாய் என்றகூற்றை, கல்லூரி படிப்பு முடித்தவுடன் பி.எட். படிப்பில் சேர்ந்தேன்.
    ஆசிரியர் பயிற்சி முடித்தவுடன் சில மாதங்களிலேயே பள்ளியில் சேர்ந்தவுடன் உள்ளூர் பெருமக்களிடமும், மாணவர்களின் பெற்றோர்களிடமும் சில உறுதிமொழிகளை வாங்கிக்கொண்டு, கல்வித்துறையின் வழிகாட்டல்களை முழுமையாகப் பின்பற்றி தரமான கல்வியை மாணவர்களுக்கு கொடுக்கும் பள்ளியாக உருவாக்கிக் காட்ட வேண்டும் என்று முடிவு செய்து பல கடினமான நடவடிக்கைகளை மேற்கொண்டேன். குறிப்பாக அப்போது மாநகராட்சியின் கமிஷனராக இருந்த திரு. அன்சுவ் மிஸ்ரா அவர்களின் சீரிய வழிகாட்டலால் பல மாற்றங்களைப் பள்ளியில் புகுத்தினேன். அனைத்து மாணவர்களுக்கும் தரமான கல்வி என்று ஒரு குறிக்கோளை அடிப்படையாக வைத்துச் செயல்பட ஆரம்பிதேன்.
    பெரும்பாலான மாணவர்களுக்கும், அவர்களின் பெற்றோர்களுக்கும் கல்வியின் அவசியம் தெரியாமல் இருந்தது. முதலில் அவர்களுக்கு கல்வியின் அவசியத்தை எடுத்துக் கூறினோம். மாணவர்களுக்கு அதுவரை இருந்த படிக்கும் சூழலையும், அவர்களின் மனநிலைக்கு ஏற்ப கற்பிக்கும் முறையையும் கொண்டுவந்தோம். மாணவர்களுக்கு படிக்கும் சூழலை உருவாக்கும் பொருட்டு எக்கோலஜிக்கல் பேலன்ஸிக்காக பள்ளியில் கிட்டத்தட்ட 500 மரக்கன்றுகளை வைத்து வளர்த்தோம். பள்ளியின் சூழல் இப்படி மாற்றியமைக்கப்பட்டதால் மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வந்து படிக்க ஆரம்பித்தனர். அதற்கு முன்பு வரை இருந்த வருகைப் பதிவும் அதிகரிக்க ஆரம்பித்தது.
    இப்படி மாணவர்கள் கல்வி பயில ஆர்வமூட்டியதுடன் மாலைவேலையில் தனிப்பயிற்சியைப் பின்தங்கிய மாணவர்களுக்குக் கொடுத்தோம். எங்கள் பள்ளியில் பயிலும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழைக்குழந்தைகள் என்பதால் மாலை வகுப்புகளுக்கு இலவசமாக சுண்டல் கொடுத்து பசியைப் போக்கி பாடத்தில் கவனத்தைச் செலுத்த வைத்தோம்.
    விளையாட்டுப் பருவத்தில் உள்ள குழந்தைகளின் மனநிலையைப் புரிந்து அவர்களுக்கு ஏற்றவாறு பள்ளிப்பாடத்தை கற்றுக்கொடுக்க ஆசிரியர்களை பழக்கப்படுத்தியதுடன், கற்றலில் பல்வேறு புதுமைகளைப் புகுத்தினோம். அதில் முதல் படியாக மாணவர்களை தரம் பிரித்தோம். பள்ளிக்கு விடுமுறையின்றி வரும் மாணவர்கள், பள்ளிப் பாடங்களை ஆர்வமாய் படிக்கும் மாணவர்கள் என்று தனித்தனியாகத் தரம் பிரித்து ஒவ்வொருவருக்கும் ஏற்றவகையில் பாடங்களை எங்கள் ஆசிரிய பெருமக்களைக் கொண்டு நடத்தினோம்.
    ஒரு கட்டத்திற்குப் பிறகு, எங்களின் பள்ளி மாணவர்களைவிட ஆசிரியர்கள் அதிக ஆர்வத்துடன் பாடங்களில் எப்படி புதுமையைப் புகுத்தலாம் என்று யோசித்து, அவற்றைசெயல்படுத்தினார்கள். அத்தகைய புதுமைக்கும், அர்ப்பணிப்பு உணர்வுக்கும் பரிசாக தேர்ச்சி சதவீதம் 58 சதவீதத்தில் இருந்து 93 சதவீதமாக உயர்ந்தது.
    தொடர்ந்து புதுமைப்படுத்துதலில் ஒரு பகுதியாக சுற்றுச்சூழலில் கவனத்தைத் திருப்பினோம். மாணவர்களைக் கொண்டே நாற்றங்காலில் விதைகளை போட்டு, வளர்த்தி, நிலத்தில் அவற்றைநட்டுவைத்து வளர்க்கச் செய்தோம். இதனால் பள்ளியைச் சுற்றியும் மரங்களாகவும், நல்ல சுற்றுச்சூழலும் ஏற்பட்டது. தற்போது கூட 2000 மரக்கன்றுகள் நாற்றங்காலில் வைத்திருக்கிறோம். மழையை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். மழைக் காலத்தில் அத்தனை மரக்கன்றுகளையும் மாணவர்களை வைத்தே நட்டுவிட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறோம்.
    இதைத்தவிர மாணவர்களின் ஆளுமையை வளர்க்கும் பொருட்டு என்.சி.சி., என்.எஸ்.எஸ். விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடுத்துவதுடன் அவற்றைஎன் மேற்பார்வையிலேயே கவனித்துக் கொள்கிறேன். இத்தகைய பயிற்சியை மாணவர்களுக்குத் தருவதால் உடல் ரீதியாக அவர்கள் பலமிக்கவர்களாவதுடன் மன ரீதியாகவும் தின்மை பெறுகிறார்கள்.
    இத்தகைய பயிற்சிக்குப் பின்னர் மாணவர்களின் ஒழுக்கம் அதிகரித்ததுடன் கற்றலிலும் முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. முன்பெல்லாம் 40, 50 என்று மதிப்பெண்கள் பெற்றமாணவர்கள் 70, 80 என்று பெறுவதைக் காணும்போது மேலும் மகிழ்ச்சி பொங்குகிறது” என்று தன்னுடைய அனுபவங்களைச் சொல்லிக் கொண்டே சென்ற தலைமையாசிரியர் திரு. ராமதாஸ் அவர்கள் பல மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் முன்னுதாரணமாக காட்சியளிப்பதற்குக் காரணம் தனக்குப் பாடம் எடுத்த ஆசிரியர்களான திரு. காமராஜ், திரு. குமாரசாமி மற்றும் திரு. விஸ்வநாதன் ஆகியவர்களின் ஆளுமையும், கற்பித்தலின் வடிவமும் தான் என்றார். தொடர்ந்து இத்தகைய வெற்றிக்குக் காரணம் இப்பள்ளியின் ஆசிரியப் பெருமக்களும், பெற்றோர்களும், மாணவர்களும் தான் என்றவர், தனிப்பட்ட முறையில் தனக்கு ஊக்கம் கொடுத்த தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுக்கு இந்நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று முடித்தவர் தன்னுடைய எதிர்கால கனவான இப்பள்ளியின் தேர்ச்சி 100% சதவீதமாகவும், மாணவர்கள் மாநில அளவில் ரேங்கும் பெற உழைக்கத் தயாரானார். அவரின் எதிர்கால கனவு நனவாகி இதுபோல் பல விருதுகளையும், பாராட்டுக்களையும் பெறமுன்னேற்றத்தின் மூலதனமான தன்னம்பிக்கை வாழ்த்துகிறது.

    விடை தெரியாத கேள்விகள்

    கேள்வி பிறந்தது அன்று – நல்ல பதிலும் கிடைத்தது இன்று” என்பது ஒரு பிரபல திரைப்படப்பாடல் ஆகும். “கேள்விகள் கேட்கும்போதுதான் நல்ல பதில்கள் நமக்கு கிடைக்கும்” என்பதை உணர்த்தும் வகையில் அமையும் என்று அந்தப்பாடல் நமக்கு உணர்த்துகிறது.
    நமது இந்தியத் திருநாட்டை நிர்வகிக்க அடிப்படையாக அமையும் பாராளுமன்றத்திலும் “கேள்வி நேரம்” என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். சட்டமன்றத்திலும் “கேள்வி நேரம்” உண்டு. பல சந்திப்புகள், பேட்டிகள், உரையாடல்கள் என பல்வேறு நிகழ்வுகளில் ஒரு கேள்வியைக் கேட்டு அதற்கான பதிலைப்பெற்று பல முக்கிய பிரச்சினைகளுக்கும் தீர்வுகாண்கிறார்கள்.
    இந்தவகையில் “கேள்விகள்” (Questions) என்பது நம் வாழ்க்கையில் தவிர்க்க இயலாத ஒன்றாக மாறிவிட்டது.
    கிராமங்களில்கூட – “அவனைப் பார்த்து நாக்கைப் பிடுங்கிக்கொண்டு அவன் சாகும்படி நான்கு கேள்வி சூடாகக் கேட்கவேண்டும்” என்று அடிக்கடி சிலர் குறிப்பிடுவார்கள். ஏனென்றால் – அந்தக் “கேள்வியைக் கேட்டால் கேட்பவருடைய மானம் மரியாதையைக் கேட்பவர் இழந்துவிடுவார்” என்னும் நோக்கில் இது குறிப்பிடப்படுகிறது.
    கேள்விகள் எப்போதுமே நம் சிந்தனையை செதுக்குவதற்கும் தரமான பதிலை உருவாக்குவதற்கும் வாய்ப்புகளை வழங்குகின்றன. இதனால்தான் யாரையும் மதிப்பீடு (Evaluation) செய்ய சில கேள்விகளைக் கேட்கிறார்கள். அந்தக் கேள்விக்கு அவர்சொல்லும் பதிலை அடிப்படையாகக் கொண்டு அவரது ஆளுமைத் தன்மையை (Personality) மதிப்பீடு செய்கிறார்கள்.
    பெரும்பாலான நேர்முகத் தேர்வுகளில் (Interview) கேள்விகளை பேச்சுமூலம் கேட்டு பதிலைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால் – ஒருவரது தகுதியை நிர்ணயிக்கும் “திறனறியும் தேர்வு”களில் (Aptitude Test) ஒருவரது பாடம் சம்பந்தப்பட்ட திறமை மதிப்பீடு செய்யப்படுகிறது. இதுதவிர பள்ளி – கல்லூரிகளில் நடத்தப்படும் பாடங்களிலும், போட்டித் தேர்வுகளிலும் கேள்விகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தக் கேள்விகள் ஏன் கேட்கப்படுகின்றன? என்கின்றஅடிப்படை உண்மைகூட புரியாமல் சிலர் அந்தக் கேள்விகளை விலைகொடுத்து வாங்குவதற்கும், கேள்வித் தாள்களை திருடுவதற்கும் தயாராகியிருப்பது அதிர்ச்சி தரக்கூடிய சம்பவங்களாக உள்ளன.
    சமீபத்தில் புதுடெல்லியில் மருத்துவ முதுநிலை கேள்வித் தாளில் மோசடி செய்ததாக டாக்டர், எம்.பி.ஏ. படிப்பை படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டார்கள். கைதான எம்.பி.ஏ. மாணவர்கள் 2 பேர் தேர்வு நடைபெறும் மையத்திற்குச் சென்று அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த கேள்வித் தாள்களை சக்தி வாய்ந்த “மொபைல்” போன்மூலம் படம் எடுத்திருக்கிறார்கள். பின்னர் ‘புளூ டூத்’ முறைப்படி தங்களுக்கு வேண்டியர்களுக்கு அந்த கேள்விகளைக் கொடுத்து பணம் சம்பாதித்தது விசாரணையில் தெரியவந்தது. அதன்பின்னர் இந்த கேள்வித்தாள்களைத் திருடிய திருட்டு கும்பலை கைது செய்தார்கள்.
    இதைப்போலவே தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிசன் சமீபத்தில் நடத்திய குரூப் – 2 தேர்வில் கேள்வித் தாள்களைத் தேர்வு நடப்பதற்கு முன்பே திருடி விற்றதாக சிலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இதுதொடர்பாக ஈரோடு, நாமக்கல், சென்னை அரும்பாக்கம், எழும்பூர், மேடவாக்கம், திருவள்ளூர் போன்ற பல பகுதிகளைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். கைது செய்யப்பட்ட ஒருவர் போலீஸ் விசாரணையில் தனது வாக்குமூலத்தில் ஆந்திராவைச் சேர்ந்த ஒருவரிடம் 4 லட்சம் ரூபாய் கொடுத்து கேள்வித்தாளை வாங்கியிருப்பதாக தெரிவித்தார்.
    தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வின் கேள்வித்தாள் அனைத்தும் ஆந்திர மாநிலத்தில் அச்சடிக்கப்படுவதால் அங்கிருந்து கேள்வித்தாள்கள் முறைகேடாக வெளியாகியிருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுதவிர – சுமார் 80 லட்சம் ரூபாய் வரை பேரம்பேசி கேள்வித் தாள்களைப் பெற்றிருப்பதாக போலீஸ் விசாரணையில் கைது செய்யப்பட்ட ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
    இப்படி தேர்வுக்கான கேள்வித்தாள்களை மாணவர்களும், மற்றவர்களும் திருடுவதற்கும், திருட்டுத்தனமாக உபயோகிப்பதற்கும் முக்கியக் காரணம் – “தேர்வு எழுதுபவர்கள் அந்தத் தேர்வுக்கு முறையான தயாரிப்பை மேற்கொள்ளாததுதான்” என கல்வியாளர்கள் கருதுகிறார்கள். முறையாக தேர்வு தயாரிப்பை மேற்கொள்வதற்கு கீழ்க்கண்ட வழிமுறைகளை மாணவ – மாணவிகள் முன்கூட்டியே கடைபிடிக்கலாம்.
    படிப்புக் குழுக்களை (Study Groups) ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
    உங்கள் படிப்புக்கு உதவும் வகையில் சிறிய படிப்புக் குழுக்களை முதலில் ஏற்படுத்திக்கொள்ளுங்கள். 2 முதல் 5 பேர்கொண்ட படிப்பில் உள்ளவர்கள் குழு உறுப்பினர்களாக இருந்தால் நல்லது. உங்கள் மனநிலைக்கும், உங்கள் படிப்பிற்கும் உதவும் வகையிலும் உங்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் அந்தக் குழு அமைந்தால் தேர்வுத் தயாரிப்பு மிக எளிதாக மாறிவிடும்.
    2.ஆசிரியர்கள் உதவியைப் பெறுங்கள்.
    உங்கள் பள்ளி – கல்லூரி ஆசிரியர்களை நேரடியாக சந்தித்து உங்கள் பாட சந்தேகங்களுக்கு விடை காணுங்கள். நீங்கள் வெற்றிபெறவேண்டும் என்று அக்கறைகொண்டவர்களில் ஆசிரியர்கள் மிக முக்கியமானவர்கள் என்பதால் அவர்களின் துணையோடு உங்கள் பாடங்களை எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.
    3.தேவையான நேரத்தில் மட்டுமே ஆசிரியர்களை சந்திக்க வேண்டும்.
    மிகவும் அவசியமான, அவசரமான நேரங்களில் மட்டுமே ஆசிரியர்களைச் சந்திக்கவேண்டும். தேவையில்லாமல் சந்தித்து அவர்களுக்கு இடையூறு தரும் வகையில் நடந்துகொள்ளாதீர்கள்.
    4 இடைவெளிவிட்டு படியுங்கள்.
    சிலர் தொடர்ந்து பல மணி நேரங்கள் ஒரே இடத்தில் அமர்ந்து படித்துக்கொண்டே இருப்பார்கள். 1 மணி நேரம் முடிந்தவுடன் சுமார் 5 நிமிடங்கள் “படிப்பு இடைவெளி”விட்டு (Study breaks) மீண்டும் படிப்பைத் தொடரலாம். இதன்மூலம் பாடத்தில் அதிக கவனம் செலுத்த இயலும்.
    5. ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி நோட்டுப் புத்தகங்களை வைத்துக் கொள்ளுங்கள்.
    நீங்கள் படிக்கும் ஒவ்வொரு பாடத்திற்கும் தனியாக நோட்டுப் புத்தகங்களை வைத்துக் கொள்ளவேண்டும். இதன்மூலம் தேர்வுக்கு தயார்செய்யும்போது குழப்பம் இல்லாமல் அந்த பாட நோட்டுகளிலுள்ள குறிப்புகளைத் திரும்பவும் வாசித்துக் கொள்வதற்கும், குளறுபடி இல்லாமல் புரிந்துகொள்ளவும் முடியும்.
    படிப்பு ஆலோசகர்களை (Study Advisors) துணையாக வைத்துக் கொள்ளுங்கள்.
    உங்கள் படிப்பிற்கு உதவிசெய்யும் வகையில் சில படிப்பு ஆலோசகர்களை நீங்கள் துணையாக வைத்துக்கொள்ளலாம். குறிப்பாக – நன்றாக படிக்கும் மாணவர் அல்லது மாணவி, ஆசிரியர், நண்பர் என சிலரை படிப்பு ஆலோசகர்களாக வைப்பது சிறந்தது. இவர்கள் உங்களின் படிப்பு சம்பந்தப்பட்ட சந்தேகங்களை நீக்குவதற்கு மிகவும் உதவியாக அமைவார்கள்.
    7. தேர்வு நேரத்தில் மட்டுமே தயாரிப்பை மேற்கொள்ளாதீர்கள்.
    சிலர் தேர்வு நேரத்தில் பாடத்தை படிக்கின்றபழக்கத்தை வழக்கமாக வைத்திருப்பார்கள். இந்தப் பழக்கத்தை அடியோடு மாற்றிவிடவேண்டும். தொடர்ந்து நாள்தோறும் பாடங்களைப் படிக்கின்றபண்பு இருந்தால்தான் தேர்வுநேரத்தில் வீணாக ஏற்படும் பதற்றத்தைக் குறைத்துக்கொள்ளலாம். தேர்வை சிறப்பாகவும் எழுத இயலும்.
    8. எந்த நேரத்திலும் படிக்கலாம்.
    காலை வேளை, மதிய வேளை, மாலை வேளை, இரவு வேளை – என படிப்பதற்கு பல வேளைகள் உள்ளன. எந்த நேரத்தில் படித்தால் சிறப்பாக இருக்கும்? என்பதில் சிலருக்கு குழப்பம் ஏற்படலாம். உங்கள் மனம் எந்தவேளையில் சீரானநிலையில் இருக்கிறதோ அந்த நேரத்தை உங்கள் படிப்பு நேரமாக மாற்றிக்கொள்ளுங்கள். இடையூறுகள் இல்லாத வேளை உங்கள் படிப்பு வேளையாக அமைந்தால் மிகச்சிறந்த மதிப்பெண்களைப் பெறுவதற்கு உதவியாக அமையும்.
    9. முக்கியத்துவம் கொடுக்கப் பழகுங்கள்.
    எந்த வேலைக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்னும் நுணுக்கத்தைத் தெரிந்தவர்கள் எந்தச்செயலிலும் எளிதில் வெற்றி பெறுகிறார்கள். இதனைத்தான் “முன்னுரிமை” (priority) என அழைக்கிறார்கள். பள்ளி – கல்லூரிகளில் படிக்கும் காலங்களில் படிப்புக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கும் நிகழ்வுகளுக்கு ‘முன்னுரிமை’ கொடுத்து பணிகளில் ஈடுபடுவது மட்டுமே சிறப்பான வெற்றியைத் தரும்.
    10. படித்தவற்றை நினைவு கூறுங்கள்.
    படித்தப் பாடங்களை நினைவில் நிறுத்தி அதனை கேள்விகளுக்குப் பதிலாக்கும் வகையில் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். நாள்தோறும் மேற்கொள்ளும் இந்தப் பயிற்சிதான் உங்கள் தேர்வு பயத்தைப் போக்கும். தேர்வு பயம் இல்லாவிட்டால் குறுக்கு வழிகளில் ஈடுபட்டு மதிப்பெண்கள் பெறமுயலுவதை தடுத்துவிடலம்.
    தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு எத்தனையோ வழிகள் இருந்தாலும் குறுக்கு வழிகளில் சில மாணவர்கள் ஈடுபட்டு மதிப்பெண் பெறமுயலுவது ஏன்? என்பது இன்னும் பலருக்கு புரியவில்லை.
    இது விடைதெரியாத கேள்விகளாக எல்லோர் மனதிலும் இன்றும் இருக்கிறது.

    மர்மமாய் இருக்கும் மனசு

    நான் என்னும் தன்முனைப்பு, மனதை எப்போதும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் மனம் என்கிறமர்மப்பகுதி சீர்கெடாது இருக்கும்.
    நான் அல்லது தன்முனைப்பு (Ego):
    நான் எனும் முனைப்பு, உளப்பாகுப்பாய்வுக் கோட்பாட்டில், தனது அல்லது நான் எனும் உணர்வோடு இருக்கும் மனிதனின் ஒரு பகுதி. இந்தப் பகுதியே, நினைவில் கொள்தல், மதிப்பீடு செய்தல், திட்டமிடுதல், சுற்றியுள்ள சூழல் மற்றும் சமூகத்தில் செயல்படுதல் ஆகியவை சம்பந்தப்பட்டதாகும். உளவியல் நிபுணர் ஸிக்மண்ட் ஃப்ராய்டின் கூற்றுப்படி இப்பகுதியும் உள்ளுந்தல் உணர்வுப் (மனத்தின் உணர்வின் அடிநிலை, இயல்பு உணர்ச்சி கொண்ட பகுதி) பகுதியும், இடித்துரைக்கும் மேல் மனம் உணர்வும் (உணர்வை எடுத்துக் காட்டுகிறது அல்லது சமுதாயப் பண்புகளை அகவியலாக்குகிறபகுதி) ஒருங்கிணைந்து வருகின்றன.
    தன்முனைப்பு ஒருவரின் ஆளுமையோடு அல்லது உடலோடு இணைந்திருக்கும் ஒன்றன்று, இன்னும் சரியாகச் சொல்லப்போனால் “நான்” எனும் முனைப்பு, ஆளுமை மற்றும் உடல் ஆகிய அம்சங்களையும், இதர அம்சங்களான, நினைவாற்றல், கற்பனை, நடத்தை போன்றவற்றையும் ஒன்றிணைக்கிறது. மேலும் பல்வேறு பாதுகாப்புச் செயல்பாடுகளை அமைத்து உள்ளுந்தல், உணர்வுக்கும் இடித்துரைக்கும் மேல்மன உணர்வுக்கும் சமரசம் செய்கிறது என்று தன்முனைப்பைப் பற்றி விளக்கம் கொடுக்கின்றார்கள்.
    “தானான தன் நிலையே நானாகித் துணிவாகி
    வானாகி மீனாகி நீராகி நிலனாகி
    வானுறையும் கோளாகித் தாவரமாய்க்
    கானும் பல்லுருவாகி வித்தாகி விந்தாகி
    மானுடரின் நீதியாகி நிலைபெற்றஞானமாகி
    நானென்று நின்றமர்ந்த தன்னிலையில்
    தானான தன்நிலையே நானென்றஇறை!”
    எந்த ஒரு செயலுக்கும் காரணமாக விளங்குவது நான் என்றதுணிவேயாகும். ஒன்றில் நான் என்றதுணிவு ஏற்பட்டதும், அதற்கான பொறிபுலன்களான அவையங்கள் செயல்படத் தொடங்கி, வேண்டியதனைத்தையும் ஈர்த்து வெற்றி காண்கிறது.
    நடப்பன அனைத்திற்கும் காரணகாரியமாக இருப்பது இந்த நான்தான். இதனால் தான் கணியன்பூங்குன்றனார் “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்றார். நம்மில் நடக்கும் நல்லது கெட்டதற்கு எப்படி இந்த நான் மூலமாக அமைகின்றது. அந்த நானை எப்படி நல்லதை நோக்கி இயக்குவது என்பன போன்றவிஷயத்தை இனி பார்ப்போம்.
    “அறிந்தறிந்து விடுவது ஞானம்
    அறிந்தறிந்து கொள்வது ஞானம்
    அறிந்தறிந்து அறிவது ஞானம்
    அறிந்தறிந்து தெளிவது ஞானம்”
    அறிவதெங்கே? அறிந்ததெங்கே? ஆக்கினையும் கடந்த ஆறாதாரத்தில் அழுத்தும் உணர்வின் கண்ணால்” என்பார் பரஞ்ஜோதி மகான்.
    மேலும், “உணர்வு என்பது உயர்வான ஞானமாம், அத்தகைய ஞானமே உணர்வு, உயர்வே உயர்வு, உயர்வே உணர்வு, உணர்வை உணர்வது உங்களின் அறிவு” என்றும் கூறுவார் பரஞ்ஜோதி மகான்.
    நமது நல்வாழ்க்கைக்கு வழிவகுப்பது, நமக்கு வெளியிலுள்ள பொருள்களின் தன்மைகள், அங்கு நடைபெறும் செயல்கள், சூழ்நிலை மாற்றங்கள் போன்றவைகளைத் தெரிந்து கொண்டு அவற்றுக்குத் தகுந்தபடி நம்மைச் சரிபடுத்திக் கொள்ளுவதே சிறந்த வழியாகும். அதற்கு உறுதுணைபுரிவது நமது பொறிகளான கண், காது, மூக்கு, நாக்கு, தோல் போன்றவை இத்தகைய பொறிகள் மூலமே, நல்வாழ்விற்குத் தேவையான தூண்டல்கள், உடலுள்ளே வருகின்றன.
    நமது ஒவ்வொரு பொறியிலும் அதற்கு உரித்தான வேலைக்கு ஏற்றசிறப்புத் தன்மைகள் பொருந்திய உணர்வு செல்கள் இருக்கின்றன. அந்த செல்கள் உணர்ச்சி நரம்பு மூலம் மூளையுடன் தொடர்பு கொண்டு தேவையான செயலை வெளிப்படுத்தும்.
    உதாரணமாக, ஒளிக்கிரணங்கள் கண்ணுலுள்ள பார்வை உணர்வு செல்களில் பட்டு அந்த செல்களைத் தூண்ட அந்தத் தூண்டல்கள் பார்வை நரம்புகள் மூலம் மூளைக்கு எட்டுகின்றன. மூளை மனம் வழியாக அதைக் காண்கின்றது. இதுபோன்றேஅனைத்து பொறிகளும் இயங்குகின்றன.
    உணர்வு செல்கள் நரம்பு ஆகிய பாகங்களைத் தவிர ஒரு பொறியியல் மற்றும் சில கூறுகள் இருக்கின்றன. அவை பொறிகளைக் காப்பாற்றவும் வெளியிலிருந்து வரும் தாக்குதல்கள் பொறியுணர்ச்சி செல்களால் நன்றாகக் கிரகிக்கப்படவும் பயன்படும். இவை பொறியின் துணைக்கூறுகள் எனப்படும்.
    உணர்வுகளை மூளைக்குக் கொண்டு செல்லும் நரம்புக் கிளைகள், நமது உடலிலுள்ள பற்பல உறுப்புளுடைய செயல்களைக் கட்டுப்படுத்தி, ஒழுங்காகவும் முரண்பாடு இல்லாமலும் நடத்துவது மட்டுமின்றி சூழ்நிலைக்குத் தகுந்தபடி நமது உடல்நிலையைச் சரிப்படுத்தி விடுவதும் இதன் செயல்தான்.
    மூளை தலைமை அதிகாரி என்றால் அவருக்குத் தகவல்களைக் கொண்டு வருவதும், அவர் கொடுக்கும் உத்தரவைக் கொண்டு சென்று செயல்படுத்துவதும் நரம்புகளாகும். நரம்புகளைத் தகவல் கொண்டு செல்லும் தந்திக் கம்பிக்கு ஒப்பிட்டால் அது மிகையாகாது.
    நரம்பின் இழைகளுள் தகவல்களை மூளைக்கு அறிவிப்பவை சில இவை உணர்ச்சி நரம்பிழைகள் எனப்படும் மூளையிலிருந்து உறுப்புகளுக்குத் தாக்கீதுகளைக் கொண்டு செல்பவை சில. இவை செயற்கை நரம்பிழைகள் எனப்படும்.
    சில நரம்புகளில் உணர்ச்சி நரம்பிழைகளே உள்ளன மற்றும் சில நரம்புகளில் செயற்கை நரம்பிழைகளே உள்ளன. பெரும்பாலானவை இருவகையும் கொண்டவையே. இவை பல பிரிவுகளாகி, செயற்கை நரம்பிழைகள் தசைகளிலும், உணர்ச்சி நரம்பிழைகள் உணர்ச்சியை உண்டு பண்ணும் பரப்புகளிலும் முடிகின்றன. மேற்கண்ட விசயங்களைப் பற்றி விரிவாகப் பின்பு பார்க்கலாம். இப்போதைக்கு இத்துடன் நிறுத்திக்கொண்டு மனம் குறித்த மையத்தை நோக்கி தொடர்வோம்.
    நான் என்னும் தன்முனைப்பு, மனதை எப்போதும் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் மனம் என்கிறமர்மப்பகுதி சீர்கெடாது இருக்கும்.
    நான் அல்லது தன்முனைப்பு (Ego):
    நான் எனும் முனைப்பு, உளப்பாகுப்பாய்வுக் கோட்பாட்டில், தனது அல்லது நான் எனும் உணர்வோடு இருக்கும் மனிதனின் ஒரு பகுதி. இந்தப் பகுதியே, நினைவில் கொள்தல், மதிப்பீடு செய்தல், திட்டமிடுதல், சுற்றியுள்ள சூழல் மற்றும் சமூகத்தில் செயல்படுதல் ஆகியவை சம்பந்தப்பட்டதாகும். உளவியல் நிபுணர் ஸிக்மண்ட் ஃப்ராய்டின் கூற்றுப்படி இப்பகுதியும் உள்ளுந்தல் உணர்வுப் (மனத்தின் உணர்வின் அடிநிலை, இயல்பு உணர்ச்சி கொண்ட பகுதி) பகுதியும், இடித்துரைக்கும் மேல் மனம் உணர்வும் (உணர்வை எடுத்துக் காட்டுகிறது அல்லது சமுதாயப் பண்புகளை அகவியலாக்குகிறபகுதி) ஒருங்கிணைந்து வருகின்றன.
    தன்முனைப்பு ஒருவரின் ஆளுமையோடு அல்லது உடலோடு இணைந்திருக்கும் ஒன்றன்று, இன்னும் சரியாகச் சொல்லப்போனால் “நான்” எனும் முனைப்பு, ஆளுமை மற்றும் உடல் ஆகிய அம்சங்களையும், இதர அம்சங்களான, நினைவாற்றல், கற்பனை, நடத்தை போன்றவற்றையும் ஒன்றிணைக்கிறது. மேலும் பல்வேறு பாதுகாப்புச் செயல்பாடுகளை அமைத்து உள்ளுந்தல், உணர்வுக்கும் இடித்துரைக்கும் மேல்மன உணர்வுக்கும் சமரசம் செய்கிறது என்று தன்முனைப்பைப் பற்றி விளக்கம் கொடுக்கின்றார்கள்.
    “தானான தன் நிலையே நானாகித் துணிவாகி
    வானாகி மீனாகி நீராகி நிலனாகி
    வானுறையும் கோளாகித் தாவரமாய்க்
    கானும் பல்லுருவாகி வித்தாகி விந்தாகி
    மானுடரின் நீதியாகி நிலைபெற்றஞானமாகி
    நானென்று நின்றமர்ந்த தன்னிலையில்
    தானான தன்நிலையே நானென்றஇறை!”
    எந்த ஒரு செயலுக்கும் காரணமாக விளங்குவது நான் என்றதுணிவேயாகும். ஒன்றில் நான் என்றதுணிவு ஏற்பட்டதும், அதற்கான பொறிபுலன்களான அவையங்கள் செயல்படத் தொடங்கி, வேண்டியதனைத்தையும் ஈர்த்து வெற்றி காண்கிறது.
    நடப்பன அனைத்திற்கும் காரணகாரியமாக இருப்பது இந்த நான்தான். இதனால் தான் கணியன்பூங்குன்றனார் “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்றார். நம்மில் நடக்கும் நல்லது கெட்டதற்கு எப்படி இந்த நான் மூலமாக அமைகின்றது. அந்த நானை எப்படி நல்லதை நோக்கி இயக்குவது என்பன போன்றவிஷயத்தை இனி பார்ப்போம்.
    “அறிந்தறிந்து விடுவது ஞானம்
    அறிந்தறிந்து கொள்வது ஞானம்
    அறிந்தறிந்து அறிவது ஞானம்
    அறிந்தறிந்து தெளிவது ஞானம்”
    அறிவதெங்கே? அறிந்ததெங்கே? ஆக்கினையும் கடந்த ஆறாதாரத்தில் அழுத்தும் உணர்வின் கண்ணால்” என்பார் பரஞ்ஜோதி மகான்.
    மேலும், “உணர்வு என்பது உயர்வான ஞானமாம், அத்தகைய ஞானமே உணர்வு, உயர்வே உயர்வு, உயர்வே உணர்வு, உணர்வை உணர்வது உங்களின் அறிவு” என்றும் கூறுவார் பரஞ்ஜோதி மகான்.
    நமது நல்வாழ்க்கைக்கு வழிவகுப்பது, நமக்கு வெளியிலுள்ள பொருள்களின் தன்மைகள், அங்கு நடைபெறும் செயல்கள், சூழ்நிலை மாற்றங்கள் போன்றவைகளைத் தெரிந்து கொண்டு அவற்றுக்குத் தகுந்தபடி நம்மைச் சரிபடுத்திக் கொள்ளுவதே சிறந்த வழியாகும். அதற்கு உறுதுணைபுரிவது நமது பொறிகளான கண், காது, மூக்கு, நாக்கு, தோல் போன்றவை இத்தகைய பொறிகள் மூலமே, நல்வாழ்விற்குத் தேவையான தூண்டல்கள், உடலுள்ளே வருகின்றன.
    நமது ஒவ்வொரு பொறியிலும் அதற்கு உரித்தான வேலைக்கு ஏற்றசிறப்புத் தன்மைகள் பொருந்திய உணர்வு செல்கள் இருக்கின்றன. அந்த செல்கள் உணர்ச்சி நரம்பு மூலம் மூளையுடன் தொடர்பு கொண்டு தேவையான செயலை வெளிப்படுத்தும்.
    உதாரணமாக, ஒளிக்கிரணங்கள் கண்ணுலுள்ள பார்வை உணர்வு செல்களில் பட்டு அந்த செல்களைத் தூண்ட அந்தத் தூண்டல்கள் பார்வை நரம்புகள் மூலம் மூளைக்கு எட்டுகின்றன. மூளை மனம் வழியாக அதைக் காண்கின்றது. இதுபோன்றேஅனைத்து பொறிகளும் இயங்குகின்றன.
    உணர்வு செல்கள் நரம்பு ஆகிய பாகங்களைத் தவிர ஒரு பொறியியல் மற்றும் சில கூறுகள் இருக்கின்றன. அவை பொறிகளைக் காப்பாற்றவும் வெளியிலிருந்து வரும் தாக்குதல்கள் பொறியுணர்ச்சி செல்களால் நன்றாகக் கிரகிக்கப்படவும் பயன்படும். இவை பொறியின் துணைக்கூறுகள் எனப்படும்.
    உணர்வுகளை மூளைக்குக் கொண்டு செல்லும் நரம்புக் கிளைகள், நமது உடலிலுள்ள பற்பல உறுப்புளுடைய செயல்களைக் கட்டுப்படுத்தி, ஒழுங்காகவும் முரண்பாடு இல்லாமலும் நடத்துவது மட்டுமின்றி சூழ்நிலைக்குத் தகுந்தபடி நமது உடல்நிலையைச் சரிப்படுத்தி விடுவதும் இதன் செயல்தான்.
    மூளை தலைமை அதிகாரி என்றால் அவருக்குத் தகவல்களைக் கொண்டு வருவதும், அவர் கொடுக்கும் உத்தரவைக் கொண்டு சென்று செயல்படுத்துவதும் நரம்புகளாகும். நரம்புகளைத் தகவல் கொண்டு செல்லும் தந்திக் கம்பிக்கு ஒப்பிட்டால் அது மிகையாகாது.
    நரம்பின் இழைகளுள் தகவல்களை மூளைக்கு அறிவிப்பவை சில இவை உணர்ச்சி நரம்பிழைகள் எனப்படும் மூளையிலிருந்து உறுப்புகளுக்குத் தாக்கீதுகளைக் கொண்டு செல்பவை சில. இவை செயற்கை நரம்பிழைகள் எனப்படும்.
    சில நரம்புகளில் உணர்ச்சி நரம்பிழைகளே உள்ளன மற்றும் சில நரம்புகளில் செயற்கை நரம்பிழைகளே உள்ளன. பெரும்பாலானவை இருவகையும் கொண்டவையே. இவை பல பிரிவுகளாகி, செயற்கை நரம்பிழைகள் தசைகளிலும், உணர்ச்சி நரம்பிழைகள் உணர்ச்சியை உண்டு பண்ணும் பரப்புகளிலும் முடிகின்றன. மேற்கண்ட விசயங்களைப் பற்றி விரிவாகப் பின்பு பார்க்கலாம். இப்போதைக்கு இத்துடன் நிறுத்திக்கொண்டு மனம் குறித்த மையத்தை நோக்கி தொடர்வோம்.

    புனித யாத்திரை – கயிலயங்கிரி

    தர்பூசேவிலிருந்து கிரிவலம் ஆரம்பமாகிறது. அங்கிருந்து 12 கி.மீ. தூரத்திலுள்ள தேராபுக் (Dehra Buk) சென்று இரவு அங்குள்ள விடுதியில் தங்குவது முதல் நாள் பயண முடிவு. தொடர்ந்து செல்ல முடியுமா எனச் சந்தேகப்படுபவர்கட்கு, முடியாது என்றே முடிவெடுக்குமளவுக்கு புறத்தாக்குதல்கள் இருக்கும்.
    எதிரில் திரும்பி வரும் சிலர் சொல்லும் செய்திகள், அங்கு நிலவும் குளிர், இந்த 12 கி.மீ. பயணம் (நடை அல்லது குதிரை மீது அமர்ந்து) நம் குடும்ப உறுப்பினர்களின் நினைவு ஆகியன இது போதும் என்ற முடிவெடுத்துவிட வைக்கும்.
    சராசரியாக கிரிவலம் செல்ல முடிவெடுத்துச் செல்பவர்களில் சுமார் பாதிப்பேர் இந்த இடத்துடன் தங்கள் கிரிவலத்தை நிறுத்திக் கொண்டு அன்றே தார்ச்சனுக்கு திரும்பி விடுகின்றனர்.
    எச்சரிக்கை:
    கிரிவலம் செல்ல குதிரை என்றால் சுமார் ரூ.12,000 நம் பையை எடுத்து வர ஓர் ஆள் செலவு ரூ.6000 என ரூ.18,000 செலவாகும் அல்லது நடந்து செல்பவர்கட்கு ரூ.6000 மட்டும் செலவாகும்.
    டிராவல்ஸ் நிறுவனங்கள் யாத்ரிகர்கள் பயணிக்கும் வாகனங்கள் தவிர, கூடுதலாக இரு டிரக்குகள் வாடகைக்கு எடுப்பார்கள். ஒன்றில் நமது பொருட்கள் அடங்கிய பைகளும், மற்றதில் சமையல் பாத்திரங்கள், எரிவாயு, குடிநீர், மளிகை சாமான்கள் மற்றும் உணவுப் பொருட்களுடன் சிலரும் பயணிப்பர்.
    நாம் பயணம் செய்யும் காரிலும் ஒருவர் உடன் வருவார். பெரும்பாலும் இந்த ஆட்களை நமது கிரிவலத்தின் போது, நம் பையை எடுத்து வரும் நபராக (கட்டணம் ரூ.6,000) அனுப்புகிறார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ரூ.6000 வசூலிப்பார்கள். நான்கு பேருடைய பைகளை ஒரு யாக் எருமை மீது கட்டியோ அல்லது இரண்டு மூன்று பேர் பைகளை ஒருவர் சுமந்து கொண்டோ வருவார்கள்.
    பாவம், அவர்கட்கு இந்த கிரிவலம் முடிந்த பின் நாம் கொடுக்கும் அன்பளிப்புத் தொகை தான் முழுமையாகக் கிடைக்கும். கட்டணத் தொகையான ரூ.6,000ல் மிகமிகக் குறைவான ஒரு தொகையை மட்டுமே சுற்றுலா ஏற்பாட்டாளரின் மேலாளர் (காத்மாண்டு நபர்) தருவார் என்ற செய்தியை அறிய முடிந்தது. எனவே, 12 கி.மீ. சென்று வர, குதிரை எனில் ரூ.18,000மும் நடந்து என்றால், ரூ.6,000மும் செலவழிப்பது தேவைதானா என முன்பே முடிவெடுப்பது சிறப்பு.

    நானும் என் மனைவியும் பரிக்ரமா செல்வதில்லை என முடிவெடுத்துத்தான் பயணத்துக்கான தொகையையே செலுத்தினோம். இயற்கையும் மிகவும் உறுதுணையாக இருந்தது.
    பணம் கொடுத்த பின்பே கிரிவலம் துவங்கும். அந்தப் பணத்தை நம்மிடமிருந்து யுவான்களாக (சைனா பணம்) பெற்றுக் கொள்பவர் காத்மாண்டு டிராவல்ஸ் நிறுவனப் பிரதிநிதி நாளுக்கு நாள் இத்தொகை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது.
    நம்மில் பலருக்கு நம் ரூபாயின் மதிப்பு அதிகரித்து வருகிறது எனத் தவறான எண்ணம் உண்டு. 2011ல் ஒரு அமெரிக்க டாலருக்கு நமது ரூபாய் சுமார் 50 இன்று 2012 அக்டோபரில் சுமார் ரூ.57 அதேபோல் ஒரு வருடம் முன் ஒரு சீனா யுவானுக்கு நமது ரூபாய் 7ணீ. ஆனால், இன்று ரூ. 9ணீ ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதால் வெளிநாட்டு நாணயங்களின் மதிப்பு கூடிக்கொண்டே உள்ளது. சுண்டைக்காய் அளவுள்ள நாடுகளின் கரன்சி மதிப்புகூட இன்று நமது ரூபாய் மதிப்பை விட உயர்வாகவே உள்ளன. இதற்கு நாம் தான் காரணம். சிந்தியுங்கள். எனவே, தார்ச்சனிலிருந்து பெறும் தரிசனத்துடன், அஷ்டபத் சென்று (வாகனத்துக்கு தனி கட்டணம் சுமார் ரூ.700) பார்க்கும் தரிசனம் மட்டுமே போதும்.

    12 கி.மீ. செல்ல ரூ.6,000 அல்லது ரூ.18,000 செலவழிப்பதை அவரவர் சிந்தனைக்கே விட்டுவிடுவோம்.
    கொண்டு செல்ல வேண்டிய பொருட்கள்:
    உல்லன் துணிகள்:
    படுத்து உறங்க எல்லா இடங்களிலுமே கட்டில், மெத்தை, ரசாய், கம்பளி போன்றவை வழங்கப்படுகின்றன. அவைகளை எடுத்துச் செல்ல வேண்டாம். அணிவதற்கு ஸ்வெட்டர், மங்கி கேப், கையுறை, காலுறை (ஷாக்ஸ்), தெர்மல்வேர் மற்றும் காதில் வைத்துக் கொள்ள பஞ்சு இவை போதும்.
    சுற்றுலா ஏற்பாட்டாளர் துணிகள் மற்றும் நமது பொருட்களை எடுத்துச் செல்ல எண் குறித்த கெட்டி துணிப்பையும், (மழை பெய்தால் நனையும்) உடலின் மேல் அணிந்து கொள்ள கெட்டி ஜெர்கினும் தருகின்றார். பயண முடிவில் ஜெர்கினைத் திருப்பிக் கொடுத்து விட வேண்டும்.
    ஆடைகள்: அணிந்து செல்வது நீங்களாக நான்கு செட் உடைகள் போதும். பெண்களுக்கு சுடிதார், புடவை எதுவானாலும் இந்த எண்ணிக்கையே போதும். ஆனால் தினமும் ஒன்று என்ற கணக்கில் பத்துக்கும் மேல் எடுத்துச் செல்வது வீணான மன உலைச்சலைத் தரும்.
    இதர பொருட்கள்:
    பரிக்ரமா செல்பவர்கள் மட்டும் ரெயின்கோட் (மழைக்காலமானால்) கொண்டு செல்லலாம். எல்லோரும் குடை, டார்ச்லைட், வெந்நீர் ஊற்றிக்கொள்ள பிளாஸ்க் (Flask), கறுப்பு கண்கண்ணாடி, பாத்ரூமுக்கு அணிந்து செல்ல ரப்பர் செப்பல், தினமும் அணியும் கேன்வாஷ் ஷு, பனியால் முகம் வெடிக்காமல் இருக்க கிரீம்கள், தேங்காய் எண்ணெய் போன்றவை.
    தின்பண்டங்கள்:
    பிஸ்கட், உலர் திராட்சை, பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு, சாக்லேட், குளுகோஸ் மற்றும் கடலை வகைகள்.
    மருந்துகள்:
    வழக்கமான மருந்து மாத்திரைகளுடன் முன் எச்சரிக்கையாக காய்ச்சல், தலைவலி, வாந்தி, சளி, இருமல் ஆகியவற்றுக்கான மாத்திரைகளுடன் உப்பு நாரத்தங்காய், உப்பு எலுமிச்சங்காய், எலக்ட்ரால் பவுடர், வலிக்கான களிம்புகள், இரத்த அழுத்தம் கூடாமலிருக்க (Diamox) டயமாக்ஸ் என்ற மாத்திரைகள் அவசியம் எடுத்துச் செல்ல வேண்டும்.
    பூஜை சாமான்கள்:
    சுற்றுலா ஏற்பாட்டாளரே எல்லாம் கொண்டு வந்து விடுவதால், நாம் தனியாக வாங்கிச் செல்ல வேண்டியதில்லை. சூடமும் தீப்பெட்டியும் மட்டுமே போதும். இதற்கு மேல் அவரவர் விருப்பப்படி எவ்வளவு விரும்புகிறார்களோ அவ்வளவு எடுத்துச் செல்லலாம்.
    குளியல்:
    நம்மூரில் குளித்த பின், நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் 2 நாட்கள் குளிக்க வாய்ப்பு உண்டு. அதன்பின் தொடர் பயணம் என்பதால் மூன்று முறை மட்டுமே குளிக்க வாய்ப்புண்டு. அவை:
    சாகா லாட்ஜில், மானசரோவர் ஏரியில் திரும்பி வரும்போதும் சாகாவில். எனவே, உள்ளாடைகளைக் கூட தினமும் மாற்ற வேண்டிய அவசியமில்லை. வியர்வையே வராது.
    பனிக்காற்று மூக்கினுள் செல்லாமலும், உதடுகளைப் பதம் பார்க்காமலும் இருக்க, டஸ்ட் மாஸ்க் (Dust Mask) அணிவது அவசியம். பிளாஸ்டிக் மக் ஒன்றும் அவசியம் வேண்டும்.

    உடற்பயிற்சியும் ஆரோக்கியமும்

    நாம் உணவுக்கு அளிக்கும் முக்கியத்துவம் உடற்பயிற்சிக்கு அளிப்பதில்லை. இதை மாற்றி உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து உடற்பயிற்சி மேற்கொண்டால் நோயற்றவாழ்வு வாழலாம்.

    உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும் முக்கியமான விஷயங்களைப் பட்டியலிட்டால் அந்தப் பட்டியலின் முதன்மையான இடத்தில் உடற்பயிற்சி இருக்கும்.
    உடற்பயிற்சியின் அவசியம் பற்றி காலம் காலமாக நாம் பேசி வந்தாலும் அதன் உண்மையான முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் முழுமையாக யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.
    உடற்பயிற்சி செய்வது உடலுக்கு நல்லது. உடற்பயிற்சி என்பது உடல் எடையைக் குறைக்க உதவுவதுடன் மன அழுத்தத்தை வெளியேற்றி நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.
    உடற்பயிற்சியில் இரண்டு வகை உண்டு. ஒன்று ஸ்டென்ர்த்தனிங் டிரைனிங். இரண்டு கார்டியோ எக்சசைஸ். தசைகளை வலுப்படுத்துவதற்கானது முதல்வகை. உடலில் இருக்கும் கொழுப்பை அகற்றுவதற்காக செய்யும் பயிற்சிகள் இரண்டாவது வகை (ட்ரெட் மில், சைக்கிளிங், ஓடுதல், நடனமாடுதல், ஏரோபிக்ஸ் செய்தல் போன்றவை கார்டியோ பயிற்சியாகும்).
    இவைகளை தினமும் செய்தால் உடலில் இருக்கும் கொழுப்பு குறையும். தசையும் பலமாகும். இந்த இரண்டு வகை உடற்பயிற்சிகளையும் அவரவருக்குத் தேவையான அளவில் தொடர்ந்து செய்துவர வேண்டும்.
    தற்போது உடல் உழைப்பு என்பது இல்லாமல் போய்விட்டது. என்ன தான் உணவுக்கட்டுப்பாடாக இருந்தாலும் உடற்பயிற்சி இருந்தால் தான் உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும்.
    உயிர்வளி பெருக்கும் உடற்பயிற்சி (Aerobic Exercise) எனப்படும் இத்தகைய உடற்பயிற்சியின் மூலம் உடலில் உள்ள உறுப்புகளுக்குத் தேவையான சக்தியை பன்மடங்காகப் பெருக்க முடியும். குறிப்பாக நடைப்பயிற்சி (Walking), மெல்லோட்டம் (jogging), சைக்கிள் பயிற்சி (Cycling), நீச்சல் பயிற்சி (Swimming) போன்றபயிற்சியின் மூலம் நமது இதயத்தை வலுவாக்க முடியும்.
    முறைப்படி மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் நம்மை பலவித நோய்களில் இருந்து பாதுகாக்கின்றன. தினமும் 30 நிமிடங்களில் தவறாமல் செய்யும் உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்கு பயன் அளிக்கும். வாரத்திற்கு குறைந்தபட்சம் ஐந்து முறை, முறையான உடற்பயிற்சி செய்தால் கீழ்காணும் நன்மைகளைப் பெறலாம்.
    – எடையைக் கட்டுப்படுத்தலாம் -வலிமையையும், திண்மையையும் பெறலாம்
    – மூட்டுக்களிலும், தசைகளிலும் இளக்கம் பெறலாம்
    -மனஅழுத்தத்தைக் குறைக்கலாம்
    – மாதவிடாய் பிரச்சனைகளை மட்டுப்படுத்துவதுடன் மூப்படையும்போது வலிமையைப் பேணலாம்
    தினமும் 30 நிமிடம் நடைப்பயிற்சி செய்தால் 30 வயதில் வரும் சர்க்கரை நோய் மற்றும் இதயநோயைக் கட்டுப்படுத்தலாம். அதேபோல் யோகா செய்வதும் உடல் எடையைக் குறைக்க உதவும்.
    ஒவ்வொருவர் உடலுக்குத் தக்கபடி பயிற்சி பெறவேண்டும். அவரவர் உடல்வாகுக்குத் தகுந்தபடியே உடலில் மாற்றங்கள் ஏற்படும்.
    புதிதாக உடற்பயிற்சி செய்பவர்கள் சுயபயிற்சியைத் தவிர்த்து ஜிம்முக்குச் சென்று பயிற்சியாளரின் வழிகாட்டுதலோடு உடற்பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும். ஜிம்முக்குப் போகும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் ரெட்மில், சைக்கிளிங் போன்றபயிற்சிக் கருவிகளை வாங்கி வீட்டில் வைத்து பயிற்சி மேற்கொள்ளலாம்.
    மாடிப்படிகளில் ஏறி இறங்குவது, ஸ்கிப்பிங் செய்வது போன்றவைகளும் நல்ல உடற்பயிற்சிகளே. அதேபோல் ஜிம்மைத் தேர்ந்தெடுக்கும்போது கவனம் தேவை. நல்ல பயிற்சியாளர், தரமான பயிற்சிக் கருவிகள், தேவையான வெளிச்சம், காற்றோட்டமும் இருப்பது நல்லது. மனதுக்கு உற்சாகமும், பாசிட்டிவ் எனர்ஜியும் கிடைக்கும் விதத்தில் ஜிம் அமைந்திருக்கும்படி பார்த்து சேர்ந்து பயிற்சி பெறவேண்டும்.
    அதிகாலையில் பயிற்சி பெறுவதே சிறந்தது. ய்துவிட்டு, நாளுக்குநாள் நேரத்தை அதிகரிக்க வேண்டும். வாரத்தில் 5 அல்லது 6 நாட்கள் ஒரு மணிநேரத்திற்குக் குறையாத அளவிற்கு பயிற்சியை மேற்கொண்டால் உடலுக்கும், மனதுக்கும் நல்லது. குறிப்பாக, இதயநோய்களால் பாதிக்கப்படாமல் தப்பிப்பதற்கு இத்தகைய உடற்பயிற்சிகள் உதவுகின்றன. தினமும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி உடற்பயிற்சியில் ஈடுபடும்போது இதயத்தமனி நோய்களையும், மாரடைப்புகளையும் கணிசமான அளவில் தடுக்க முடியும் என்று ஆய்வுகள் சொல்கின்றன.
    நமது உடல் ஆரோக்கியமாக இருக்க உடற்பயிற்சியும், சரியான உணவுப்பழக்கமும் தேவையானது. நாம் உணவுக்கு அளிக்கும் முக்கியத்துவம் உடற்பயிற்சிக்கு அளிப்பதில்லை. இதை மாற்றி உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து உடற்பயிற்சி மேற்கொண்டால் நோயற்றவாழ்வு வாழலாம்.

    விடாமுயற்சி! விஸ்வரூப வெற்றி!!

    நான் பிறந்து வளர்ந்தது கோவைக்கு அருகில் உள்ள சுகுணாபுரம் ஊரில். என்னுடைய அப்பா திரு. ரங்கசாமி, அம்மா திருமதி. தனலட்சுமி. மதுக்கரையில் தான் என் பள்ளி வாழ்க்கை. 11ம் வகுப்பு வரை படித்தேன். மேற்கொண்டு படிக்க முடியாத வறுமை. பள்ளிக்கு மதிய உணவு எடுத்துச் செல்லக்கூட முடியாத வறுமை. வறுமையின் பிடி இருகியதால் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு ஏதாவது வேலைக்குச் சென்றேஆக வேண்டிய சூழல். அப்போதும் என் குடும்பத்தினர் கஷ்டப்பட்டாவது நீ படி என்றுதான் என்னிடம் கூறினார்கள். ஆனாலும் எனக்கு மேலே படிக்க வேண்டும் என்றநினைப்பை விட வேலைக்குப்போய் சம்பாதித்து குடும்பத்தின் கஷ்டத்தில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கி இருந்தது. இதனால் 11ம் வகுப்பில் இருந்து இடைநின்று வேலைதேட ஆரம்பித்தேன்.
    அப்போது லேனா ஏஜென்ஸின் உரிமையாளர் திரு. லட்சுமணன் அவர்களின் அறிமுகம் கிடைத்தது. அவருடைய நிறுவனத்திலேயே மருந்துப் பொருட்கள் விற்பனை செய்யும் விற்பனை பிரதிநிதியாக பணியில் சேர்ந்தேன். திரு. லட்சுமணன் அய்யா அவர்களின் சரியான வழிகாட்டுதலும், நெறிப்படுத்தும் தன்மையும், நேர்மைத் தன்மையும் என்னை அந்தப் பணியில் சிறந்தவனாக மாற்றியது. எனக்கு கொடுக்கப்பட்ட பணியை விரைவாக செய்து முடித்துவிடுவேன்.
    சில ஆண்டுகளிலேயே விரைவான வளர்ச்சியை அடைந்த நான் புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று என் உள்ளத்தில் கனன்று கொண்டிருந்த நெருப்பால் அப்போது கோவையில் முதல் வெளியீடாக வெளிவந்த தினமலர் நாளிதழை விற்பனை செய்யும் விற்பனை முகவராக சேர்ந்து கொண்டேன். அதிகாலை 4.30 மணியில் இருந்து தினமலரை கடைகளுக்கு கொண்டு சேர்க்கும் வேலையையும் கூடுதலாக ஏற்படுத்திக் கொண்டேன்.
    முதல் வேலையில் எனக்கு கிடைத்த வெற்றி, என்னுடைய இரண்டாவது கட்டத்திலும் வெற்றியையே கொடுத்தது. தொடர்ந்து காஸ்மெட்டிக் பொருட்களை விற்பனை செய்வது, மருந்துப் பொருட்களுக்கான பிரவுன் கவர்களை விற்பனை செய்வது என்ற கூடுதலான பணிகளை விரும்பி ஏற்றுக்கொண்டு செயல்பட ஆரம்பித்தேன்.

    Continue Reading »

    பருவ மழை மாற்றங்கள்… சமாளிப்பது எப்படி?

    மாதம் மும்மாரி பொழிந்தது; நாடு செழித்தது; மக்கள் இன்பமுற இருந்தார்கள் என்று பழைய ராஜ கதைகளில் படித்து இருக்கிறோம்.
    தற்போதைய ஆட்சி காலத்தில் மும்மாரி பொழியாவிட்டாலும், குறைந்தது தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த பலன் கொடுக்குமா? இல்லை, வடகிழக்கு பருவமழை கொஞ்சம் அதிகமாக பெய்து தென்மேற்கு பருவமழை ஏமாற்றியதை ஈடுகொடுக்குமா? என்று பாரி ஆராய்ச்சி நிலையத்தை ஆட்சியாளர்களும் கேட்க வேண்டிய சூழ்நிலைக்கு என்ன காரணம்?
    ஒரு நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சியில் விவசாயம் சார்ந்த தொழில்கள் குறைந்த அளவு பங்களிப்பு, பருவமழை பொய்த்துவிட்டால் உணவுப்பொருட்கள் உற்பத்திக் குறைவு, விவசாயம் சார்ந்த தொழில்களில் ஏற்படும் பின்னடைவு, இவைகள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தும்.
    உணவு உற்பத்தி குறைய நேர்ந்தால் விலைவாசி உயர்வு அடையும், கிடைக்கின்ற குறைந்த அளவு நீர் மற்ற மாநிலங்கள் நீரை மற்ற மாநிலங்கள் பற்றாக்குறை காலங்களில் தர மறுப்பதனால் அண்டை மாநிலங்களுடனான நல்லுறவு பாதிக்கப்படுவது போன்றபிரச்சனைகள் தலைதூக்க ஆரம்பித்துவிடும்.
    பருவமழை ஏன் சீராக பெய்வதில்லை? எதனால் இப்படி நேர்கிறது? என்று கேட்டால் உலகத்தின் பல பகுதிகளில் பருவமழை மாற்றம் அடைந்துகொண்டு தான் இருக்கின்றது.
    ஆப்பிரிக்க நாடுகளில் பெரும் பஞ்சம், பருவமழை பெய்யாத காரணத்தால் பல விவசாயிகள் தங்கள் நிலங்களை விட்டு வேறு இடத்திற்கு இடம் பெயரும் சூழ்நிலை போன்றவற்றை பல வருடங்களாக ஊடகங்களில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இதேநிலை நமக்கும் வராது என்பதற்கான உத்திரவாதம் என்ன உள்ளது?
    இந்த பருவமழை ஏமாற்றங்கள் பல வருடங்களாக நடந்துகொண்டு வரும் நிகழ்வுகள் தான். இப்போது நாம் பார்க்கும் வறட்சியான ஆப்பிரிக்க நாடுகள் ஒரு காலத்தில் மழை பெய்து செல்வ பூமியாக இருந்ததுதான். பருவமழை மாற்றத்தின் காரணமாக தற்போது வறண்ட பாலைவனமாக காட்சி அளிக்கிறது.
    ஏன் தமிழகத்தில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு சற்று முன்னோக்கிப்பார்த்தால், கோயம்புத்தூரில் சுற்றி உள்ள வீட்டுமனை நிலங்கள் ஒரு காலத்தில் நல்ல விளைநிலங்களாக பருத்தி, சோளம் போன்ற பயிர்களை விளைவிக்கும் விவசாய நிலங்களாகத் தான் இருந்தது. ஆனால் தற்போது கோவை குடிநீருக்கு அத்திகடவு திட்டம், பவானி ஆற்று நீர், கேரளாவில் மழை பெய்தால் தான் சிறுவாணி அணை நிரம்பும் என்று அனைவரும் குடிநீருக்கு எதிர்பார்த்து இருக்கும் நிலையில் உள்ளோம்.
    கிணறுகள் எவற்றிலும் நீர் இல்லாமல், அவை குப்பைகளைக் கொட்டும் கிணறுகளாகத் தான் காணப்படுகின்றன. நிலத்தடி நீர்மட்டத்திற்கு 1000 அடி வரை ஆழ்குழாய் கிணறு போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
    இந்த மாற்றங்கள், மக்கள் நகரத்தை நோக்கி இடம்பெயர்ந்ததாலும், இருப்பிடத் தேவைக்காக ரியல் எஸ்டேட்களின் ஆக்கிரமிப்பாகவும் விளைநிலங்கள் உருமாறிவிட்டது. உண்மையான காரணம் பருவமழை குறைவை அறிந்த போதும், நிலத்தடி நீரைச் சேமிக்க தவறவிட்டோம். அதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைய ஆரம்பித்து இப்போது குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயகரமான நிலை உள்ளது.
    உலக வெப்பமடைதல் காரணமாக, புவியில் வெப்பமான பகுதிகள் அதிக வெப்பமடைவதும், குளிர் நிறைந்த பகுதிகள் மேலும் குளிரடைவதையும் கடந்த ஐம்பது ஆண்டுகளில் காணமுடிகிறது. இது இன்னும் மோசமடைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது என புவியியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உலக வெப்படைதலுக்கு உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் பொறுப்பேற்க வேண்டியுள்ளது. இதில் வளர்ச்சி அடைந்த நாடுகள் அதிக இயற்கை சேதங்களைச் செய்ததால் அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று வளர்ச்சியடையாத நாடுகளும், மக்கள்தொகை அதிகம் உள்ள வளர்ச்சி அடையாத நாடுகள் இதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று வளர்ந்த நாடுகளும் குறைகூறி வருகின்றன.எப்படி குறைகூறினாலும் பாதிக்கப்படுவதில் நாமும் உள்ளோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
    பருவமழை மாற்றம் விவசாயத்தை பெரும் அளவில் பாதிக்கச் செய்கிறது. பல ஆயிரக்கணக்கில் விதை, ஈடுபொருட்கள் செலவு செய்து பயிரிடும் விவசாயிகள் பருவ மழையை நம்பி தங்கள் விதைகளை மண்ணில் பயிரிட்டு வானத்தை எதிர்பார்த்து காத்திருக்கும்போது பருவமழை கைகொடுக்காவிட்டால் ஒவ்வொரு விவசாயிக்கும் ஏற்படும் பாதிப்பு உயிரை கொடுக்கும் அளவிற்குச் சென்றுவிடுகிறது.
    நம்மிடம் உள்ள நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பருவமழை காலங்களில் கிடைக்கும் அனைத்து நீரையும் வீணாக்காமல் குளம், ஏரி ஆகியவற்றில் சேமிக்கும்போது நிலத்தடி நீர் பெருக அதிக வாய்ப்பு உள்ளது.
    தமிழகத்தில் உள்ள விவசாயிகள் நீரின் முக்கியத்துவத்தை நன்கு அறிவார்கள். நீர் ஆதாரங்களைப் பாதுகாப்பது மட்டுமே இன்றைய பருவநிலை மாற்றத்தை சமாளிக்கக் கூடிய ஒரே தீர்வு!

    ஒப்பனை

    அவன் ஒரு ஏழைச்சிறுவன். வீடு வீடாகச் சென்று துணிகளை விற்று, அதனால் வரும் பணத்தைக் கொண்டு, ஸ்கூல் ஃபீஸ் கட்டி படித்து வந்தான். ஒருநாள் அவனிடம் ஒன்றுமே இல்லை. கடும்பசி. தனது பாக்கெட்டைத் துழாவினான். கையில் தட்டுப்பட்டதோ வெறும் ஐந்து ரூபாய் நாணயம். இதை வைத்து சாப்பாடு சாப்பிட முடியுமா? யோசித்தான். ஏதாவது ஒரு வீட்டில் இந்தக் காசைக் கொடுத்து சாப்பாடு வாங்கிச் சாப்பிடலாம் என்று முடிவு செய்து, அருகில் இருந்த வீட்டின் கதவைத் தட்டினான்.
    “யாருங்க” என்ற இனிய குரலுடன் கதவைத் திறந்த இளம்பெண் தேவதையாகவே காட்சியளித்தாள். அவளிடம் சாப்பாடு கேட்க மனமில்லாமல், “கொ… கொஞ்… கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?” என்றான். அவனை ஏறஇறங்கப் பார்த்த அவள், அவன் கடும்பசியில் இருப்பதைக் குறிப்பால் உணர்ந்தாள். உள்ளே சென்று ஒரு டம்ளர் பாலை எடுத்து வந்து அவனுக்குத் தந்தாள். பாலை மெதுவாகக் குடித்து முடித்தான்.
    “நான் எவ்வளவு காசு கொடுக்கணும்?” என்றான்.
    “நீங்க எதையும் தர வேண்டாம்.

    ஒருத்தருக்கு அன்போட ஒன்றைத் தரும்போது, அதற்கு பதிலா எதையும் வாங்கக் கூடாதுன்னு எங்கம்மா சொல்லிக் கொடுத்திருக்காங்க” என்றாள் கனிவுடன்.
    “அப்படீன்னா என் அடி மனசில் இருந்து உங்களுக்கு ஒரு தேங்ஸ்”
    ஆண்டுகள் பல கடந்தன. அன்று அழகு தேவதையாக இருந்தவள், இன்று படுக்கையில் வீழ்ந்த நோயாளி. உள்ளூர் மருத்துவர்கள் கைவிரிக்க, நகரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டாள். அவளுக்கு சிகிச்சையளிக்க, மருத்துவ நிபுணர் டாக்டர் ஹாவர்ட் கெல்லி அழைத்து வரப்பட்டார்.
    நோயாளியின் கேஸ் ஷீட்டை மருத்துவர் படித்தார். அவருடைய புருவம் சுருங்கியது. அவள் எந்த நகரத்திலிருந்து வந்திருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்டவுடன் நாற்காலியைவிட்டு எழுந்து அவள் அறைக்கு விரைந்தார். அவளைப் பார்த்தவுடன் அவள் யார் என்று மருத்துவருக்குத் தெரிந்துவிட்டது. தன் அறைக்குத் திரும்பினார்.
    அன்றிலிருந்து அவளுக்காகப் பிரத்யேக அக்கறை எடுத்துக்கொண்டார். பெரும் போராட்டத்திற்குப் பின் அவள் பூரணமாகக் குணமடைந்தாள்.

    சிகிச்சைக்காகப் பில்லை, தான் பார்த்த பிறகு தான் அவளிடம் கொடுக்க வேண்டும் என்று அக்கவுண்ட்ஸ் பகுதிக்குக் கட்டளை பிறப்பித்தார். பில்லும் வந்தது. அதைப் பார்த்த மருத்துவர் அதன் மார்ஜினில் எதையோ எழுதினார். அவள் அறைக்கு அதை அனுப்பிவிட்டார்.
    பில் இருந்த உறையை பார்த்தாள் அவள். “இந்த பில் தொகையை முழுவதுமாகச் செலுத்தி முடிக்க வேண்டும் என்றால் என் ஆயுள் முழுக்கச் செலுத்தினாலும் போதாதே!” என்று எண்ணினாள். நடுக்கத்துடன் உறையைப் பிரித்தாள்.
    “ஒரு டம்ளர் பாலூக்கு ஈடாக இந்த பில்லுக்கு முழு கட்டணமும் செலுத்தப்பட்டுவிட்டது” டாக்டர் ஹாவர்ட் கெல்லி.
    இந்தக் கதை நமக்கு உணர்த்துவது அன்பின் சக்தியை. ஒருமுறை நிபந்தனையற்ற அன்பை தயைக் காட்டுகிற கலங்கரை விளக்காகவும் அன்பு திகழ்கிறது. எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் செய்கிற நல்ல காரியம், இன்றோ, நாளையோ அல்லது பல வருடங்களுக்குப் பிறகோ நன்மையைக் கொண்டுவரும் என்பதே இக்கதையின் சாரம்.

    பெறுவதன் மூலம் நாம் வாழ்கிறோம். கொடுப்பதன் மூலம் வாழ்விக்கிறோம் என்ற வின்ஸ்டன் சர்ச்சிலின் வரிகளை மனதில் கொண்டு, சூரியன் தரும் ஒளியைப் போலவும், ரோஜா வீசுகிற மணம் போலவும், மலை உருவாக்கும் நதியைப் போலவும் நம் ஒவ்வொருவரிடமும் நிபந்தனையற்ற அன்பு நிறைந்திருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் தற்போது இந்நிலை இருக்கிறதா? இல்லை. இத்தகைய நிபந்தனையற்ற அன்பு இல்லாததன் காரணமாகத் தான் கோபம், வன்முறை, குழப்பம் போன்ற எதிர்மறை உணர்வுகளை வெளிப்படுத்தும் மனிதர்கள் அதிகரித்துவிட்டிருக்கிறார்கள்.

    இப்படிப்பட்ட மனிதர்கள் வெளிக்காட்டும் ஈகோ என்ற மாயபிம்பம் நமது பிறப்பின் நோக்கத்தையே முடக்கிவிடுகிறது. நிபந்தனையற்ற அன்பை வளர்த்துக் கொள்வதன் மூலமே வன்முறையையும், அராஜகத்தையும் அழிக்க முடியும் என்பதை உணர வேண்டிய காலம் வந்துவிட்டது.
    “மன்னிக்கும் மனோபாவத்தால் இன்னல்களிலிருந்து ஒருவரை விடுவித்துவிட முடியும்; அந்த ஒருவர் நீங்கள் தான் என்பதை உணருங்கள்” என்பதற்கு ஏற்ப ஆன்மாவுக்கு அழகைத் தரும் மன்னிக்கும் மனோபாவத்தை வளர்க்க வேண்டும். உங்களைச் சுற்றி இருப்பவர்கள் உங்களது காயத்துக்குக் காரணமாக இருக்கலாம். அதையே மனதில் நினைத்துக்கொண்டு கோபமும், வலியும் கொள்ளாமல் மன்னித்துவிட்டாலே நமது மனம் லேசாகிவிடும். கடந்த கால காயங்களில் இருந்து விடுபடுவதற்கு அன்பு ஒன்றே நல்ல தீர்வு.

    ‘ஒரு டம்ளர் பால்’ கதை

    அவன் ஒரு ஏழைச்சிறுவன். வீடு வீடாகச் சென்று துணிகளை விற்று, அதனால் வரும் பணத்தைக் கொண்டு, ஸ்கூல் ஃபீஸ் கட்டி படித்து வந்தான். ஒருநாள் அவனிடம் ஒன்றுமே இல்லை. கடும்பசி. தனது பாக்கெட்டைத் துழாவினான். கையில் தட்டுப்பட்டதோ வெறும் ஐந்து ரூபாய் நாணயம். இதை வைத்து சாப்பாடு சாப்பிட முடியுமா? யோசித்தான். ஏதாவது ஒரு வீட்டில் இந்தக் காசைக் கொடுத்து சாப்பாடு வாங்கிச் சாப்பிடலாம் என்று முடிவு செய்து, அருகில் இருந்த வீட்டின் கதவைத் தட்டினான்.
    “யாருங்க” என்ற இனிய குரலுடன் கதவைத் திறந்த இளம்பெண் தேவதையாகவே காட்சியளித்தாள். அவளிடம் சாப்பாடு கேட்க மனமில்லாமல், “கொ… கொஞ்… கொஞ்சம் குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?” என்றான். அவனை ஏறஇறங்கப் பார்த்த அவள், அவன் கடும்பசியில் இருப்பதைக் குறிப்பால் உணர்ந்தாள். உள்ளே சென்று ஒரு டம்ளர் பாலை எடுத்து வந்து அவனுக்குத் தந்தாள். பாலை மெதுவாகக் குடித்து முடித்தான்.
    “நான் எவ்வளவு காசு கொடுக்கணும்?” என்றான்.
    “நீங்க எதையும் தர வேண்டாம்.

    ஒருத்தருக்கு அன்போட ஒன்றைத் தரும்போது, அதற்கு பதிலா எதையும் வாங்கக் கூடாதுன்னு எங்கம்மா சொல்லிக் கொடுத்திருக்காங்க” என்றாள் கனிவுடன்.
    “அப்படீன்னா என் அடி மனசில் இருந்து உங்களுக்கு ஒரு தேங்ஸ்”
    ஆண்டுகள் பல கடந்தன. அன்று அழகு தேவதையாக இருந்தவள், இன்று படுக்கையில் வீழ்ந்த நோயாளி. உள்ளூர் மருத்துவர்கள் கைவிரிக்க, நகரத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டாள். அவளுக்கு சிகிச்சையளிக்க, மருத்துவ நிபுணர் டாக்டர் ஹாவர்ட் கெல்லி அழைத்து வரப்பட்டார்.
    நோயாளியின் கேஸ் ஷீட்டை மருத்துவர் படித்தார். அவருடைய புருவம் சுருங்கியது. அவள் எந்த நகரத்திலிருந்து வந்திருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்டவுடன் நாற்காலியைவிட்டு எழுந்து அவள் அறைக்கு விரைந்தார். அவளைப் பார்த்தவுடன் அவள் யார் என்று மருத்துவருக்குத் தெரிந்துவிட்டது. தன் அறைக்குத் திரும்பினார்.
    அன்றிலிருந்து அவளுக்காகப் பிரத்யேக அக்கறை எடுத்துக்கொண்டார். பெரும் போராட்டத்திற்குப் பின் அவள் பூரணமாகக் குணமடைந்தாள்.

    சிகிச்சைக்காகப் பில்லை, தான் பார்த்த பிறகு தான் அவளிடம் கொடுக்க வேண்டும் என்று அக்கவுண்ட்ஸ் பகுதிக்குக் கட்டளை பிறப்பித்தார். பில்லும் வந்தது. அதைப் பார்த்த மருத்துவர் அதன் மார்ஜினில் எதையோ எழுதினார். அவள் அறைக்கு அதை அனுப்பிவிட்டார்.
    பில் இருந்த உறையை பார்த்தாள் அவள். “இந்த பில் தொகையை முழுவதுமாகச் செலுத்தி முடிக்க வேண்டும் என்றால் என் ஆயுள் முழுக்கச் செலுத்தினாலும் போதாதே!” என்று எண்ணினாள். நடுக்கத்துடன் உறையைப் பிரித்தாள்.
    “ஒரு டம்ளர் பாலூக்கு ஈடாக இந்த பில்லுக்கு முழு கட்டணமும் செலுத்தப்பட்டுவிட்டது” டாக்டர் ஹாவர்ட் கெல்லி.
    இந்தக் கதை நமக்கு உணர்த்துவது அன்பின் சக்தியை. ஒருமுறை நிபந்தனையற்ற அன்பை தயைக் காட்டுகிற கலங்கரை விளக்காகவும் அன்பு திகழ்கிறது. எந்தப் பிரதிபலனும் எதிர்பார்க்காமல் செய்கிற நல்ல காரியம், இன்றோ, நாளையோ அல்லது பல வருடங்களுக்குப் பிறகோ நன்மையைக் கொண்டுவரும் என்பதே இக்கதையின் சாரம்.

    பெறுவதன் மூலம் நாம் வாழ்கிறோம். கொடுப்பதன் மூலம் வாழ்விக்கிறோம் என்ற வின்ஸ்டன் சர்ச்சிலின் வரிகளை மனதில் கொண்டு, சூரியன் தரும் ஒளியைப் போலவும், ரோஜா வீசுகிற மணம் போலவும், மலை உருவாக்கும் நதியைப் போலவும் நம் ஒவ்வொருவரிடமும் நிபந்தனையற்ற அன்பு நிறைந்திருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில் தற்போது இந்நிலை இருக்கிறதா? இல்லை. இத்தகைய நிபந்தனையற்ற அன்பு இல்லாததன் காரணமாகத் தான் கோபம், வன்முறை, குழப்பம் போன்ற எதிர்மறை உணர்வுகளை வெளிப்படுத்தும் மனிதர்கள் அதிகரித்துவிட்டிருக்கிறார்கள்.

    இப்படிப்பட்ட மனிதர்கள் வெளிக்காட்டும் ஈகோ என்ற மாயபிம்பம் நமது பிறப்பின் நோக்கத்தையே முடக்கிவிடுகிறது. நிபந்தனையற்ற அன்பை வளர்த்துக் கொள்வதன் மூலமே வன்முறையையும், அராஜகத்தையும் அழிக்க முடியும் என்பதை உணர வேண்டிய காலம் வந்துவிட்டது.
    “மன்னிக்கும் மனோபாவத்தால் இன்னல்களிலிருந்து ஒருவரை விடுவித்துவிட முடியும்; அந்த ஒருவர் நீங்கள் தான் என்பதை உணருங்கள்” என்பதற்கு ஏற்ப ஆன்மாவுக்கு அழகைத் தரும் மன்னிக்கும் மனோபாவத்தை வளர்க்க வேண்டும். உங்களைச் சுற்றி இருப்பவர்கள் உங்களது காயத்துக்குக் காரணமாக இருக்கலாம். அதையே மனதில் நினைத்துக்கொண்டு கோபமும், வலியும் கொள்ளாமல் மன்னித்துவிட்டாலே நமது மனம் லேசாகிவிடும். கடந்த கால காயங்களில் இருந்து விடுபடுவதற்கு அன்பு ஒன்றே நல்ல தீர்வு.

    நிலா மனிதன் ஆம்ஸ்ட்ராங்

    நிலாவைக் காட்டி பிள்ளைக்கு சோறு ஊட்டிக்கொண்டிருந்த காலத்தில் நிலவில் காலடி எடுத்து வைத்து சாதனை படைத்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங் அண்மையில் (26.8.2012) காலமானார், அவருக்கு வயது 82, அந்த நிலா மனிதனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அமெரிக்க தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது.
    நீல் ஆம்ஸ்ட்ராங், 5.8.1930 அன்று அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் பிறந்தார், சிறு வயது முதலே விமானம் ஓட்டுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்த ஆம்ஸ்டராங், தன் 15வது வயதில் விமானம் ஓட்டுவதற்கான உரிமம் பெற்றார், பத்தொன்பது வயதில் அமெரிக்க கடற்படையில் சேர்ந்தார்.
    1958ம் ஆண்டு அமெரிக்க விமான படையின் ‘விண்வௌல்யில் மனிதன்’ என்கிறதிட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார், அதனைத் தொடர்ந்து நாசா விண்வௌல் மையத்தில் சேர்ந்தார், 1966ம் ஆண்டு விண்வௌல்க்கு ஏவப்பட்ட ஜெமினி-8 விண்வௌல் கலத்திற்கு தலைமை விமானியாக நியமிக்கப்பட்டார், இதன் மூலம் விண்வௌல்க்கு சென்றமுதல் அமெரிக்கர் என்றபெருமையையும் பெற்றார்.
    அப்போல்லோ திட்டம் என்பது 1961 முதல் அமெரிக்கா மேற்கொண்ட ஒரு தொடர் விண்வௌல்த் திட்டமாகும், அந்தத் திட்டம் ஒரு மனிதனை சந்திரனில் இறக்கிப் பாதுகாப்பாக பூமிக்கு திருப்பிக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டிருந்தது, அந்தத் திட்டத்தின்படி 1969ல் நிலவுக்கு ஏவப்பட்ட அப்போலா-11 விண்கலத்தை தலைமை தாங்கி இயக்கும் பொறுப்பு ஆம்ஸ்டராங்குக்கு கிடைத்தது.
    1969ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி இரவு சர்வதேச நேரப்படி 8,17 மணிக்கு அப்போலோ-11 விண்கலம் நிலவில் பாதுகாப்பாக இறங்கியது, நிலவில் தன் முதல் காலடியை எடுத்து வைத்தபோது ஆம்ஸ்ட்ராங் ‘நிலவில் நான் எடுத்து வைக்கும் ஒரு அடி மனிதகுலத்தின் மிகப் பெரிய பாய்ச்சல்’ என குறிப்பிட்டார், இந்தச் சொற்றொடர் உலகம் முழுவதும் வானொலியில் ஒலிப்பரப்பப்பட்டது, இந்த வரி பின்னாளில் உலக பிரசித்தி பெற்றவாக்கியமாக மாறியது.
    இருபது நிமிடங்கள் கழித்து அவருடைய சக ஆராய்ச்சியாளர்;; ஆல்ட்ரின் நிலவில் காலடி எடுத்து வைத்தார், பின்னர் நிலவில் தாங்கள் காலடி எடுத்து வைத்ததை நினைவுகூரும் விதமாக அமெரிக்க கொடியை நட்டு வைத்தார் ஆம்ஸ்ட்ராங், அந்த கொடி இத்தனை ஆண்டுகள் ஆகியும் சேதமடையாமல் இருப்பதாக அண்மையில் நாசா தெரிவித்துள்ளது.
    ஆம்ஸ்ட்ராங்கும், ஆல்ட்ரினும் கிட்டதட்ட மூன்று மணி நேரம் நிலவில் ஆய்வுகளை மேற்கொண்டனர், வெற்றி களிப்பில் இருவரும் விண்கலத்திற்கு திரும்பி, கதவுகளை பத்திரமாக மூடிவிட்டு, நிலவில் இருந்து கிளம்பும் போதுதான் விண்கலத்தை கிளப்புவதற்கு தேவையான ஸ்விட்ச் உடைந்திருப்பதை தெரிந்துக் கொண்டனர், உடனே, சமயோசிதமாக தங்களிடம் இருந்த பேனாவை பயன்படுத்தி விண்கலத்தை கிளப்பினர்.
    பூமிக்கு திரும்பியதும் தங்கள் சாதனையை விளக்கும் விதத்தில், ஆம்ஸ்ட்ராங்கும், ஆல்ட்ரினும் 45 நாட்கள் உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டனர், பின்னர் ஆம்ஸ்ட்ராங் நாசா விண்வௌல் ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் ஆலோசகராக பணிபுரிந்தார், 1972 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதி அப்போலோ-17 விண்கலத்தில் அமெரிக்க விஞ்ஞானிகள் சென்றதுதான் நிலவுக்கு அமெரிக்கர்கள் கடைசியாகச் சென்றதாகும்.
    இந்த வியப்புக்குரிய பயணம் அமெரிக்கர்களை விண்வௌல்த்துறையில் தனியிடத்தில் அமர வைத்தது, அறிவியல் துறையின் வளர்ச்சியில் சாதனைக்குரிய மைல் கல் இந்த நிகழ்ச்சி என்றாலும் கூட, சோவியத் யூனியனுக்குப் போட்டியாக உருவானதே நிலவுப் பயணம் என்று கூறப்படுகிறது.
    உலகிலேயே முதன் முதல் சந்திரனைப் பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள் சோவியத் யூனியன் தான், 1930 ஆம் ஆண்டிலிருந்தே அவர்கள் இந்த ஆராய்ச்சியை தொடங்கி இருக்கிறார்கள், இருபதுக்கும் மேற்பட்ட ஆளில்லா விண்கலங்களை நிலாவிற்கு அனுப்பியிருக்கிறார்கள், 1957 ஆம் ஆண்டு விண்கலத்தில் “லைகா” என்றநாயை வைத்து நிலாவிற்கு அனுப்பி வைத்தனர், அந்த நாயும் பாதுகாப்பாக நிலவிற்கு சென்று திரும்பியது, அந்தப் பயணம் வெற்றிகரமாக முடிந்ததை பார்த்து உலகமே வியந்தது.
    இத்தனைப் பயணங்களும் வெற்றிகரமாய் அமைந்திடவே, சோவியத் யூனியன் மனிதனை நிலவிற்கு அனுப்பி சோதனை செய்ய முயற்சித்தது, அந்த அடிப்படையில் மூன்று பேரை ஏற்றிக்கொண்டு நிலவை நோக்கி புறப்பட்ட விண்கலம் கொஞ்ச நேரத்திலேயே வெடித்து சிதறியது, அதனால் உலகமே அதிர்ச்சியடைந்தது, மூன்று உயிர்களை அனாவசியமாக பலியிட்டுவிட்டோமே என்று சோவியத் யூனியனும் சோகத்தில் உறைந்து போனது, அதன்பிறகு நிலவிற்கு மனிதர்களை அனுப்பி சோதனை செய்யும் முயற்சியை கைவிடுவதாகவும் அறிவித்தது.
    எல்லா விஷயத்திலும் சோவியத் யூனியனுடன் போட்டிப்போடும் அமெரிக்கா நிலாவைப் பற்றிய சோதனையிலும் போட்டிப்போட்டது, நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் சோதனையை கைவிடுவதாக சோவியத் யூனியன் அறிவித்தவுடன், “அவர்களால் செய்யமுடியாததை வெற்றிகரமாக எங்களால் செய்து காட்டமுடியும்” என்று அமெரிக்கா சவால் விட்டது, அதன் பிறகு தான் விண்வௌல் ஆராய்ச்சியில் இறங்கியது அமெரிக்கா என்று சொல்லப்படுகிறது.
    ஆம்ஸ்ட்ராங் எந்த ஒரு மீடியாவிலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் ஒதுங்கியே இருந்தார், தன் பெயரை யாரும் விளம்பரத்துக்கு பயன்படுத்தக் கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்தார், அதனையும் மீறி பயன்படுத்தியவர்களை நீதி மன்றத்துக்கு இழுத்து அதன் மூலம் அவர்களை பல நல்ல காரியங்களுக்கு பணம் தரச் செய்தார், இறுதிக் காலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார், உலகம் முழுவதும் நிலவு மனிதனாக வலம் வந்த நாயகனை நிலவு உள்ளவரை உலகம் மறக்காது.