சாதித்த ஆசிரியர்
ப. சரவணன்,
தலைமையாசிரியர்,
அரசு உயர்நிலைப்பள்ளி,
பாளத்தோட்டம்.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் பாளேத்தோட்டம் கிராமத்தில் உள்ள இப்பள்ளி சீரும் சிறப்போடும் பல்வேறு நிலைகளில் வளர்ச்சி பெற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 01-11-2011 முதல் தலைமையாசிரியராகப் பணிபுரிந்து வரும் திரு. ப. சரவணன் பணியேற்ற நாள் முதல் பள்ளியில் மாணவர்களுக்கு கீழ்கண்ட தேவையான அடிப்படை வசதிகளை கொடை உள்ளம் கொண்ட நல்ல மனிதர்களை சந்தித்து பள்ளிக்குத் தேவையான பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி உள்ளார்.
இதை ஆய்வு செய்த மாவட்டக்கல்வி அதிகாரிகள் பரிந்துரையின் பேரில் 2015-16 ஆம் கல்வி ஆண்டில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் சிறந்த தலைமையாசிரியருக்கான பாராட்டுச்சான்று வழங்கி பாராட்டினார்.
மேலும் 2017-18 ஆம் கல்வி ஆண்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொடர்ந்து 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றமைக்காக அன்றைய மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களால் IVDP தொண்டு நிறுவனத்தின் மூலம் சிறந்த தலைமையாசிரியராகத் தேர்வு செய்யப்பட்டு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.
தொடர்ந்து 2017-18 ஆம் கல்வி ஆண்டில் சிறந்த ஆசிரியர்க்கான தமிழக அரசின் டாக்டர் இராதகிருஷ்ணன் விருது கடந்த செப்டம்பர் 5 ஆம் நாள் சென்னை கலைவானர் அரங்கில் தமிழக அரசின் சார்பில் நடத்தப்பட்ட ஆசிரியர் தினவிழாவில் மான்புமிகு கல்வித்துறை அமைச்சர் அவர்களால் பாரட்டுச்சான்றிதழ் மற்றும் வெள்ளி பதக்கம் வழங்கி பாராட்டுப்பெற்றார்.
இவர் பணி காலத்தில் பள்ளி மேம்படுத்திய அடிப்படை வசதிகள்:
- சென்னை ஹீண்டாய் கார் நிறுவனத்தின் மூலம் ரூ. 3 லட்சம் மதிப்பீட்டில் 150 செட் பென்ச் மற்றும் டெஸ்க் நன்கொடையாக பெறப்பட்டது.
- சாம்பல்பட்டி பவர் கம்பெனி மூலம் ரூ. 2.75 லட்சம் மதிப்பீட்டில் நீர் சுத்தகரிப்பு இயந்திரம் நன்கொடையாகப் பெறப்பட்டது.
- போச்சம்பள்ளி MGM மெட்ரிக் பள்ளியின் சார்பில் ரூ. 3.5 லட்சம் மதிப்பீட்டில் கலை அரங்கம் கட்டித்தரப்பட்டது.
- இரண்டு வகுப்பறைகளுக்கு தரைத்தளத்திற்கு VPN ஒப்பந்ததாரர் மூலம் நன்கொடையாக ரூ. 50 ஆயிரம் மதிப்பில் டைல்ஸ் பதிக்கப்பட்டது.
- பள்ளி வளாகத்திற்குள் சுமார் 250 மரங்கள் பசுமையாக உள்ளது.
- 2018-19 ஆம் கல்வி ஆண்டில் போச்சம்பள்ளிக்கு அருகில் அமைந்துள்ள சிப்காட் வளாகத்தில் புதியதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள SHOE நிறுவனத்திடமிருந்து ரூ.6.4 லட்சம் மதிப்பில் பெண்களுக்கான நவீன கழிப்பறை கட்டுமான பணி தற்போது நடைப்பெற்று வருகிறது.
இது போன்று பல்வேறு நிலைகளிலும் மாணவர்களுக்கு படிப்பதற்கு ஏற்ற நல்ல சூழலை உருவாக்கியதின் மூலம் மாணவர்கள் ஆர்வத்தோடும் மகிழ்ச்சியோடும் பள்ளிக்கு வருகைப்புரிந்து கல்வி கற்கின்றனர்.
இவர் பணிபுரிகின்ற ஆசிரியர்களோடும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தோடும் ஒருங்கிணைந்து ஏற்றத் தாழ்வு இல்லாமல் நல்ல பண்பாளராய் நட்பு பாராட்டி வருகிறார் என்பதை கனிவுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
0 comments Posted in Online News