Home » Editorial (Page 2)

உள்ளத்தோடு உள்ளம்

வயது என்பது ஒருவரின் மனதைப் பொறுத்தது. நாம் என்ன நினைக்கிறோமோ அது தான் நமது வயது என்று சொல்வார்கள். அதுபோன்ற மனநிலை உள்ளவர் விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன்.

அவர் தனது 80 வது அகவையைக் கொண்டாடிய போது, நெருங்கிய நண்பர் ஒருவர் கூறினார். எடிசன் உங்களுக்கு 80 வயதாகிவிட்டது. உங்களின் ஆராய்ச்சியின் வேகத்தை குறைத்துக் கொள்ளுங்கள். இனி நன்றாக ஓய்வெடுத்துக் கொண்டு உங்கள் பொழுதை மகிழ்ச்சியாக செலவழியுங்கள். ஏதாவது ஒரு பொழுதுபோக்கைத் தேர்ந்து எடுத்துக்கொள்ளுங்கள் என்றார்.

அதற்கு எடிசன் நண்பரே நீங்கள் சொல்வது போல எனக்கு அவ்வளவு ஒன்றும் வயதாகிவிடவில்லை. வயது முதிர்ந்த பருவமான 80 வயதிலும் தான் இன்னும் இளமையாக இருப்பதாகவே நினைக்கிறேன் என்று எடிசன் நகைச்சுவையாக கூறினார்.

ஒருவரின் வயது என்பது இந்தப் பூமியில் அவர் வாழ்ந்த ஆண்டுகளை குறிப்பிடுவது. இதில் இந்த வாழ்நாட்களை நாம் எப்படி வாழ்ந்தோம் என்பது தான் முக்கியமானது. வாழ்க்கையின் உச்சத்தை அடையவும், சாதனைகள் நிகழ்த்தவும் நினைப்பவர்களுக்கு வயது ஒரு போதுமே தடையாக இருந்தது கிடையாது.

உள்ளத்தோடு உள்ளம்

எழுந்திருங்கள்! விழித்துக் கொள்ளுங்கள்! இனியும் தூங்க வேண்டாம்! எல்லா தேவைகளையும் எல்லா துன்பங்களையும் நீக்குவதற்கான பேராற்றல் உங்கள் ஒவ்வொருக்குள்ளேயும் இருக்கிறது என்பார் சுவாமி விவேகானந்தர்.

மகிழ்ச்சியான மனநிறைவான எத்தனையோ நினைவுகளை நம்மிடையே விட்டு விடை பெற்றுவிட்டது 2018.

நாம் தற்போது புதிய ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். சென்ற ஆண்டில் சில சபதங்கள் எடுத்திருப்போம். சிலர் அதை நிறைவேற்றியிருப்பார்கள். ஒரு சிலர் அதை நிறைவேற்றாமல் இருந்திருக்கலாம்.. அதை தற்போது எண்ணிப் பாருங்கள். அப்போது தான் புதிய ஆண்டில் திட்டம் தீட்டுவதற்குச் சரியாக இருக்கும்.

புத்தாண்டு மட்டும் புதிதான நாள் அல்ல. சாதிக்கப் பிறந்த நமக்கு ஒவ்வொரு நாளும் புதிது தான். தோல்வியே வரினும் அந்த நாளை நீங்கள் கொண்டாடிக் கொண்டே இருங்கள். வெற்றிக்கு கொடுக்கும் அதே மகிழ்ச்சியைத் தோல்விக்கும் கொடுங்கள்… எதையும் தாங்கும் மணவலிமையை உங்களுக்குள் புகுத்திக் கொள்ளுங்கள் ஒவ்வொரு நாளும் தித்திப்பாகும்.

சந்தாதாரர்கள், விளம்பரதாரர்கள், கட்டுரையாளர்கள், நூலகத்தார்கள், கடை உரிமையாளர்கள், வாசிப்பாளர்கள் உங்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

எதிர்காலத்திற்கான திட்டங்களைத் தீட்டுதல், கடந்த காலத் தவறுகளைக் களைதல் எல்லாம் தேவை தான் என்றாலும் ஒவ்வொவரும் பயனுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும் என்கிற உறுதியான தீர்மானத்தோடு 2019 புத்தாண்டை வரவேற்போம்…

அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!!

உள்ளத்தோடு உள்ளம்

ஃபிலடெல்பியாவைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஜரார்டு. இவர் கடவுள் மறுப்புக் கொள்கையாளர். ஒரு நாள் சனிக்கிழமையன்று அவர் தமது நிறுவனத்தில் பணிப்புரியும் பணியாட்களை அனைவரையும் அழைத்து, நாளை ஞாயிற்றுக்கிழமை அனைவரும் அலுவலகம் வர வேண்டும்  என்றும் புதிதாக வந்திருக்கும் பொருட்களை வண்டியிலிருந்து இறக்க உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டர்.

அப்போது கூட்டத்திலிருந்து ஒரு இளைஞன் மட்டும் ஐயா என்னால் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்ய முடியாது என்றான்.

இளைஞனே உனக்கு நம்முடைய நிறுவனத்தின் சட்ட திட்டங்கள் பற்றி தெரியும் என்று நினைக்கிறேன் என்றார் ஜிரார்டு.

தெரியும் ஐயா ஆனாலும் என்னால் ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்ய இயலாது என்று மறுபடியும் சொன்னான்.

அப்படியானால் சரி. நீ உடனே கம்பனி காசாளரைப் போய் பார்த்து உன்னுடைய கணக்கை முடித்துக் கொள் என்றார். அவனும் அதற்கு மறுப்புத் தெரிவிக்காமல் நின்று விட்டான்.

ஒருநாள் வங்கி மேலாளர் ஒருவர் எங்களின் வங்கிக்கு தகுதியான காசாளர் வேண்டும், அதற்கு நீங்கள் தான் யாரையேனும் பரிந்துரைக்க வேண்டும் என்று ஜிரார்டிடம் கேட்டார். சற்றும் தயங்காத ஜிரார்டு தனது நிறுவனத்தில் வேலை நீக்கம் செய்யபட்ட அந்த இளைஞனையே காசாளர் பதவிக்குப் பரிந்துரை செய்தார்.

காரணம் ஜிரார்டு அந்த இளைஞனைப் பணி நீக்கம் செய்த போதிலும், அவர் அவருடைய எண்ணத்தில் உறுதியாக இருந்தார். எவரொருவர் தான் நம்பும் ஒன்றிற்காக, தனக்கு மிகவும் பிடித்தமான விஷயங்களைக் கூட தியாகம் செய்யத் தயாராக இருக்கிறாரோ அவரே ஒரு நம்பிக்கையான, பணிவு மிகுந்த ஆட்களாக இருப்பார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

உள்ளத்தோடு உள்ளம்

அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரஹாம் லிங்கன். அடக்கத்துக்கும், உபசரிப்புக்கும் பெயர் பெற்றவர். மக்களிடையே எப்போதும் உயர்வு தாழ்வு பாராட்டாதவர்.

ஒருமுறை அவர் தனது அலுவலக அதிகாரியுடன் உலாச் சென்ற போது, வழியில் ஒரு கறுப்பின பிச்சைக்காரனைப் பார்த்தார். அந்தப் பிச்சைக்காரன் அவருக்கு மிகுந்த மரியாளதையுடன் அவருக்கு வணக்கம் சொன்னார்.

மகிழச்சி அடைந்த அதிபர் தன் தலையில் வைத்திருந்த தொப்பியை கழற்றி அவருக்குப் பரிசாகக் கொடுத்தார். இதைப் பார்த்தவுடன் உடன் வந்த அதிகாரி திடுக்கிட்டார்.

நீங்கள் ஏன் அந்தப் பிச்சைக்காரனுக்கு உங்கள் தொப்பியைப் பரிசாகக் கொடுத்தீர்கள் என்று கேட்டார்.

அதற்கு அதிபர் சிரித்துக் கொண்டே இந்த உலகத்தில் என்னை விடவும் பணியுள்ளவர்களாக வேறு யாரும் இருப்பதை நான் விரும்பவில்லை என்று சொன்னார்.

பணிவு இருக்குமிடத்தில் தான் அடக்கும் இருக்கும். அடக்கும் அனைவர் மனதையும் வென்று விடும். பணிவு தான் பெரிய பெரிய அறிஞர்களின் முக்கிய அடையாளம். நமது அன்றாட வாழ்க்கையில் அடக்கம் என்னும் இந்த மதிப்பீட்டை பழகிக் கொண்டு வாழ வேண்டும். அப்போதும் தான் வாழ்க்கை சீராக அமையும்.

உள்ளத்தோடு உள்ளம்

அவர் ஒரு ஜப்பானிய சாமானியர். புதுமையாக ஏதாவது படைக்க வேண்டும் என்பது அவரது உத்வேகம். ஆனால் உத்வேகத்திற்கு ஏற்ற உந்து சக்தியாக குடும்பச் சூழலோ, பொருளாதாரச் சூழலோ அமையவில்லை. இருப்பினும்  அவர் முயற்சியை தன் மூச்சாகக் கொண்டிருந்தார்.

அதனால் கார்களில் பொருத்தப்படும் பிஸ்டன்களைப் புதிய முறையில் பல போராட்டத்திற்குப் பிறகு வடிவமைத்தார். அதனை விற்பனை செய்ய டொயோட்டா கார் நிறுவனத்தை அணுகிய போது பலரின் கேலிகளே அவருக்கு கிடைத்தது. கேலிகளை வளர்ச்சிக்கான வேலிகளாக்கிக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தார்.

புதியதாகத் தொழிற்சாலை ஒன்றைக் கட்டத் தொடங்கினார் அது வெற்றி பெறும் தருணத்தில் ஜப்பானில் நிலநடுக்கும் ஏற்பட்டது. அனைத்தும் தரைமட்டம் ஆனது. இதனால் அவரை மனச்சுமை அழுத்தியது. பணச்சுமை இறுக்கியது. ஆனால் முயற்சியை மட்டும் அவர் விட்டபாடில்லை.

மீண்டும் தொழிற்சாலை கட்டும் பணியைத் தொடர்ந்தார்.  விழாக்கோலம் பூண்டு திறப்பு விழாக் காணும் நேரத்தில் இடி விழுந்தது போல் இரண்டாம் உலகப் போர் மூண்டது.  போரில் தொழிற்சாலை மீண்டும் தரைமட்டமானது.

தோல்விக்கு மேல் தோல்வி, ஆனால் எந்தத் தோல்விகளும் அவரை முடக்கவில்லை. மனச்சுமைகள் கூடக் கூட மனதைரியம் பெற்றார். இதன் விளைவு தான் தன்னைக் கேலி செய்த டொயோட்டா கம்பெனியை விட இன்று அதிக கார்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்துள்ளார்.  அந்த ஜப்பானிய சாமானியர் தான் ஹோண்டா. ஹோண்டா தன் தோல்விகளுக்குச் சன்மானமாகக் கொடுத்தது தனது பொருள், பணம், அறிவு, உழைப்பு முதலியவை மட்டுமே. ஆனால் பெற்றதே பெரும் வெற்றி.

அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

உள்ளத்தோடு உள்ளம்

அவன் ஒரு பள்ளி மாணவன். சிறு சிறு திருட்டுகளைச் செய்வதில் கெட்டிக்காரன். தனது சக வகுப்புத் தோழர்களின் பொருட்களைத் திருடுவது அவனுக்கு வாடிக்கையாகிவிட்டது. இதனால் மாணவர்கள் ஆசிரியரிடம் புகார் தெரிவித்தார்கள். இதை அறிந்த அவனது வகுப்பு ஆசிரியர் அவனைத் திருத்த முயன்றார். அவனைத் தனியாக அழைத்துப் பேசினார்.

திருடுவது தவறு என்று அறிவுரை சொன்னார். ஆனால் அந்த மாணவன் திருந்தவில்லை. இருந்தும் அந்த மாணவனைத் தண்டிக்கவும் ஆசிரியர் விரும்பவில்லை. தண்டனைகள் எல்லா நேரத்திலும் பயன்தராது என்பது அந்த ஆசிரியரின் கருத்து. இருந்தாலும்  அவன் மோசமான நிலைக்குத் தள்ளப்படும் முன்பு அவனை எப்படியாவது திருத்த வேண்டும் என்று அந்த ஆசிரியர் முடிவு செய்தார்.

இதன் படி அந்த மாணவனை அழைத்து கொஞ்சம் பணம் கொடுத்து வகுப்புக்குத் தேவையான பொருட்களை வாங்கி வரச் சொன்னார்.

அந்த மாணவனும் கடைக்குச் சென்று  பொருட்களை வாங்கிக் கொடுத்தான். மீதி பணத்தை ஆசிரியரிடம் கொடுத்தான். ஆசிரியர் அந்தப் பணத்தை எண்ணிப் பார்க்காமல், அதை அப்படியே தன்னுடைய பையில் வைத்துக் கொண்டார்.

பின்னர் வகுப்பில் மாணவனின் நேர்மை, நம்பகத்தன்மை ஆகியவற்றைப் பற்றி பாராட்டிப் பேசினார். வாங்கி வரச் சொன்ன பொருளை தரமானதாகவும், மீதிப் பணத்தை பத்திரமாகவும் திருப்பி கொடுத்துவிட்டான் என்று சொன்னார்.

இதைக் கேட்ட அந்த மாணவன் அதிர்ச்சி அடைந்தான். காரணம் அவன் மீதிப் பணத்தை சரியாகக் கொடுக்கவில்லை. அவ்வாறு இருக்கும் போது  ஆசிரியர் தன்னைப் பாராட்டுவதைக் கண்டு வெட்கித் தலைகுனிந்தான்.  தனது தவறை உணர்ந்தான். இனி திருட்டுக்களை செய்யவே கூடாது என்று முடிவெடுத்தான். அதன்படியே நேர்மையாகவே நடந்து கொண்டான்.

ஆசிரியர்கள் என்பவர்கள் ஒவ்வொரு மாணவரின் வாழ்க்கையிலும் ஒளிவிளக்கை ஏற்றி வைப்பார்கள் என்பது இக்கதையின் மூலம் உணரப்படுகிறது.

அனைவருக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்

உள்ளத்தோடு உள்ளம்

1947 ஆம் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி என்பது ஒவ்வொரு இந்தியரின் வாழ்விலும், நினைவிலும் வசந்தத்தை ஏற்படுத்திய தினமாகவே கருதப்பட்டு வருகிறது.

அந்நாள் நம்முடைய புதிய சுதந்திர நாட்டின் உதய நாள். ஏனென்றால், இறையாண்மைக் கொண்ட நாடாகத்திகழும் நமது பாரத்தின் சுதந்திரம் என்பது, ஆயிரக்கணக்கான ஆன்மாக்கள், புரட்சியாளர்கள், போராட்டக்காரர்களின் வெற்றி என்று பெருமையுடன் நெஞ்சை நிமிர்த்திச் சொல்லலாம்.

நமது தாய்த்திரு நாடான இந்தியா சுதந்திரமடைந்து சுமார் அரை நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. இப்போது நாம் அனைவரும் நம் தாய் மண்ணில்  சுதந்திரக் காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு முதன்மைக் காரணம் தேசியத் தலைவர்களும், போராட்ட வீரர்களுமே தான்.

200 ஆண்டுகளாக, நாம் சொந்த நாட்டில் அந்நியர்களிடம் அடிமைகளாக இருந்த போது, அவர்களின் பீரங்கிக்கும், துப்பாக்கிக்கும் பயப்படாமல் அவர்களை தைரியத்துடனும், துணிச்சலுடனும் பலரும் வீறு கொண்டு எதிர்த்தனர்.

புரட்சிகளையும், கிளர்ச்சிகளையும், போர்களையும் நிகழ்த்தி அந்நியர்களையே அச்சப்பட வைத்தனர். இவர்களின் அனைவரின் ஒரே நோக்கம்  சுதந்திரம் என்பதாகவே இருந்தது. சுதந்திரத்திற்காக இன்னுயிரைத் தந்தவர்கள் இம்மண்ணில் ஏராளம். இந்த தியாக உள்ளத்தையும், அவர்கள் பெற்று தந்த சுதந்திரத்தையும் இந்நாள் நாம் கொண்டாடி வருகிறோம். இனி எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அவர்களின் நினைவைப் போற்றி கொண்டாடுவோம்.

தேசபக்தியுன் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவோம்… வாழ்க இந்தியா… வளர்க பாரத திருநாடு….

அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

உள்ளத்தோடு உள்ளம்

ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குத் தீராத தலைவலி இருந்தது, ஊரிலுள்ள பல்வேறு புகழ்பெற்ற மருத்துவர்களை தனது வீட்டிற்கே வரவழைத்து சிகிச்சைப் பார்த்து வந்தார், ஆனாலும் வலி குறையவே இல்லை.

ஒருநாள் அந்த செல்வந்தர் வசித்த ஊருக்கு சன்னியாசி ஒருவர் வந்தார். செல்வந்தரின் பிரச்சனையை அறிந்து கொண்ட அவர், அவருக்கு மருத்துவம் பார்க்க அனுமதி கேட்டார். பின்னர் அந்த செல்வந்தருக்கு மருத்துவ சோதனை செய்தார். இப்போது அவரின் வலிக்கான காரணத்தைச் சொன்னார்.

உங்கள் கண்ணில் இருக்கும் நோய் தான் இந்த வலிக்கு காரணம். இந்த நோயைக் கட்டுப்படுத்திவிட்டால் உங்கள் வலி குணமாகிவிடும் என்று கூறினார். அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார் செல்வந்தர்.

பெரிதாக ஒன்றும் செய்யத் தேவையில்லை, இனி நீங்கள் பார்க்கும் அத்துனை பொருட்களும் பச்சை நிறமாக இருக்க வேண்டும் என்று அறிவுரைக் கூறி கிளம்பினார். இந்த சன்னியாசியின் அறிவுரைப்படி அரண்மனை முழுவதும் பச்சை நிறத்தில் மாற்றினார் செல்வந்தர்.

தான் வெளியில் செல்லும் பொழுதும் கூட நான் பார்க்கும் அத்துனை பொருட்களும் ஆட்களும் பச்சை நிறத்தில் தெரிய வேண்டும் என்பதால் எப்போதும் பச்சை நிற வண்ணம் பூசுபவர்களை உடனே வைத்திருந்தார். செல்வந்தரைப் பார்க்க வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் மேல் பச்சை வண்ணம் பூசப்பட்ட பிறகு தான் அவரைப் பார்க்கவே அனுமதிப்பார்கள்.

அப்படி இருந்த சமயத்தில் தான் அந்த சன்னியாசி செல்வந்தரைப் பார்க்க வந்தார். வாசலிலே வண்ணம் பூசுபவர்கள், செல்வந்தர் இட்ட கட்டளையைச் சொல்லி அவர் மேலேயும் பூசினார்கள். பச்சை நிறத்துடன் செல்வந்தரைச் சந்தித்த சன்னயாசி. எதற்கு நீங்கள் இப்படி இவ்வளவு செலவிட்டு வண்ணத்தைப் பூசிக் கொண்டிருக்கிறீர்கள் என்றார், உடனே செல்வந்தர் நீங்கள் தானே இனி பார்க்கும் அனைத்தும் பச்சை நிறத்தில் இருக்க வேண்டும் என்று சொன்னீர்கள் என்றார் செல்வந்தர். அதற்கு அந்த சன்னியாசி இவ்வளவு செலவு செய்தற்கு ஒரு பச்சை நிறத்தில் கண்ணாடி அணிந்து கொண்டால் அனைத்தும் பச்சையாகவே இருக்குமே என்று சொன்னார், ஒரு கணம் அதிர்ந்தார் அந்த செல்வந்தர்.

இந்த செல்வந்தரைப் போல தன்னையும் தன் குணத்தையும் மாற்றிக் கொள்வதற்கு பதில், தன்னை சுற்றியுள்ளவர்களை மாற்றிக் கொள்ள விரும்புகிறார்கள், அவர்கள் மாறி விட்டால் நாம் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று நினைக்கிறார்கள். இந்நிலை மாற வேண்டும். நம்மை நாமே திருத்திக்  கொள்ள வேண்டும், அதன் மூலம் நல்ல குணங்களை வளர்த்து கொண்டு வாழ வேண்டும்.

உள்ளத்தோடு உள்ளம்

ஒரு அழகிய ஜென் கதை

தலைமைத்துறவி ஒருவர் உடலை விட்டு உயிர் போகும்  நிலையில் இருந்தார். அப்போது அந்த அவையிலேயே சிறந்த சீடன் ஒருவனை அழைத்து இந்த மடாலயத்திற்கு அடுத்த தலைமைத்துறவியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் இதனால் தூரத்தில் உள்ள சில மடாலயத்திற்குச் சென்று அங்கியிருந்து 100 சீடர்களை அழைத்து வாருங்கள் என்று அவரிடம் சொன்னார்.

ஓரே தலைமைத்துறவி பதவி தான் அதற்கு எதற்கு 100 பேர் என்று யோசித்தார். இருந்தாலும் சொன்னது தலைமைத்துறவி அல்லவா? இதனால் எதிர்பேச்சு எதுவும் சொல்லாமல் அங்கிருந்து சென்றார்.

போகும் பாதை கடுமையான பயணம், மலைகள், பள்ளத்தாக்குகள், மழை, வெயில், ஆபத்தான ஆறுகள் போன்றவற்றை கடக்க நேர்ந்தது. ஆனாலும் விடாப்பிடியாக செல்லும் தொலைவை சென்று அடைந்தார்.

தலைமைத்துறவியின் சொல்லின் படி  100 சீடர்களைப் பெற்றுக் கொண்டு அங்கியிருந்து திரும்பினார். வரும் வழியில் ஒரு நாட்டில் போட்டி ஒன்றை அறிவித்திருந்தார்கள். அதில் வெற்றிப் பெறுபவர்களுக்கு பொன்னும் மன்னனின் பெண்ணும் பரிசாகத் தரப்படும் என்று கூறினார்கள். அதைக் கேட்ட 50 பேர் அங்கு சென்று விட்டார்கள். மீதி 50 பேருடன் மீண்டும் பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

மற்றொரு நாட்டில் மன்னனுக்கு வாரிசுக்கு ஆள் தேடிக்கொண்டிருந்தார்கள்.  அதை கேள்விப்பட்டவர்கள் 25 பேர் சென்று விட்டார்கள். மீதியிருந்தவர்களும் நாங்கள் பிறகு வருகிறோம் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள். இதனால் ஏமாற்றத்துடன் தலைமைத்துறவியைச் சந்தித்தார்.

அவரின் வருகையை எதிர்நோக்கி காத்திருந்த தலைமைத்துறவி நீ மட்டும் தான் இங்கு வருவாய்  என்று எனக்கு முன்கூட்டியே தெரியும் என்றார். அப்படி யென்றால் அடுத்த தலைமைத்துறவி யார் என்று கேட்டார் அவர்.

அதற்கு நீதான் என்று பதிலளித்தார் தலைமைத்துறவி.

இங்கு எல்லோரும் உயர்ந்த குறிக்கோளை நோக்கி தான் பயணிக்கிறார்கள் ஆனால் எல்லோரும் அதை அடைகிறார்கள் என்றால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். போகும் பாதையில் முள்ளும் இருக்கும் மலரும் இருக்கும் அதை எல்லாம் யார் கடக்கிறார்களோ அவர்களே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள் என்பதைக் இக்கதையின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

உள்ளத்தோடு உள்ளம்

முன்னொரு காலத்தில் லினோர்டா டிவின்ஸி என்ற புகழ்பெற்ற சிற்பி ஒருவர் இருந்தார். அவர் பல சிற்பங்களை செதுக்க ஆரம்பித்து அவற்றை பூர்த்தி செய்யாமல் நடுநடுவே விட்டுவிடுவாராம்.

அவர் சிற்பத்துறையில் மட்டும் திறமைக் காட்டவில்லை. ஓவியம், பொறியியல் போன்ற துறையிலும் ஈடுபட்டிருந்தார். அவர் செய்து முடித்த வேலைபாடுகள் அனைத்தும் மக்கள் போன்றும் விதமாக ஆச்சரியம் தரும் வகையில் இருந்தது. அதே நேரத்தில் அவர் துவங்கிய சில வேலைப்பாடுகள் இடையில்  முடிக்காதவைகளையே சிந்தித்து ஏமாற்றம்  அடைந்தார்கள்.

அந்த ஏமாற்றத்தைப் போக்கும் விதமாக மைக்கேல் ஏஞ்சலோ என்ற அழகிய சிற்பத்தை வரைந்து உலக அளவில் மங்காப் புகழைப் பெற்றார்.

இவரைப் போல தான் நம்மில் பலர், ஒரு சமயத்தில் பல வேலைகளைச் செய்ய முற்படுகிறோம். ஒரு வேலை பூர்த்தி ஆகும் முன்னரே மற்றொரு வேலையில் ஈடுபட முன் வருகிறோம்.

இதனால் முன் தொடங்கிய வேலையும் முடியாமல், புதியதாய் தொடங்கியதிலும் சுணக்கம் கொள்கிறோம். இதனால் தான் தேவையில்லால் பிரச்சனை, மன அழுத்தம் போன்றவை ஏற்படுகிறது.

பல தொழில் செய்வதில் தவறு இல்லை, ஆனால் ஒரு தொழில் தொடங்கினால் அதில் முழு சாதனையும் பெற்ற பின்னர் தான் அடுத்த வேலையைத் தொடங்க வேண்டும். லினோர்டா டிவின்ஸி பல வேலைகள் செய்திருந்தாலும் அவரை உலகத்திற்கு காட்டியது அவரின் முதல் வேலையான சிற்பக் கலை தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் சாதிப்பு நம்மை வந்தடையும். நாமும் சாதிப்பு பக்கத்தில் ஒருவராய் திகழலாம்…