Home » Articles (Page 3)

விரட்டுங்கள் மனச்சோர்வை

ராம் ஸ்ரீதர்,சென்னை – 9043019109

சில சமயம் நீங்களே உணர்ந்திருக்கலாம். எதைப் பார்த்தாலும் வெறுப்பாக இருக்கும். யாரைப் பார்த்தாலும் எரிச்சல் வரும். மனதுக்குள் தோற்றுவிட்டதுபோல் ஒரு வெறுமை உண்டாகும். அப்படியானால், மனச்சோர்வு (க்ங்ல்ழ்ங்ள்ள்ண்ர்ய்) என்ற எதிரியை உள்ளே அனுமதித்துவிட்டீர்கள் என்று அர்த்தம்!

மனச்சோர்வு எதனால் வருகிறது அடிப்படையில் உங்களுக்கு என்ன நிகழ்கிறது? ஒருவர் தீக்குச்சி பற்றவில்லை என்றாலே துக்கமாகிவிடுவார். இன்னொருவர் வீடே தீப்பற்றி எரிந்தாலும், அலட்டிக் கொள்ள மாட்டார்.

நீங்கள் விரும்பியபடி யாரோ நடக்கவில்லை. எதிர்பார்த்தபடி எதுவோ நிகழவில்லை. ஆசைப்பட்டபடி வாழ்க்கை அமையவில்லை. சுருக்கமாகச் சொன்னால், உங்களுக்கு என்ன கிடைத்திருக்கிறதோ, அதை ஏற்றுக் கொள்ள முடியாமல், நீங்கள் தவிக்கிறீர்கள். அதை எதிர்க்கிறீர்கள். நீங்கள் மனச்சோர்வுடன் இருக்கும்போது எல்லாம், மற்றவர்கள் உங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள். உங்களுடன் உட்கார்ந்து மற்றவர்களும் அழ வேண்டும் என்று விரும்புகிறீர்கள். இரக்கத்தை யாசிக்கிறீர்கள்.

என்ன பைத்தியக்காரத்தனம் இது? உங்கள் விருப்பப்படி எல்லாம் உலகம் ஏன் நடக்க வேண்டும்? நீங்கள் விரும்பியபடியெல்லாம் தங்களை ஏன் மற்றவர்கள் ஏய்த்துக் கொள்ள வேண்டும்? அகங்காரம் எங்கே இருந்தாலும், அதற்கு அடி விழத்தான் செய்யும். அப்போது, மனச்சோர்வு முளைத்து எழும். அது உங்களைப் பற்றிய நம்பிக்கைகளைத் தகர்த்துவிடும். வெளியே இருந்து ஆயுதங்களால் தாக்குபவர்களைக் கூட சரியாகக் கையாண்டால், சமாளித்துவிடலாம்.

மனச்சோர்வு என்பது உள்ளிருந்து கொண்டே, கீறிக் கிழித்துக் குடைந்து உங்களை உபயோகமில்லாமல் அழித்துவிடும் விஷ ஆயுதம். உங்களை நீங்களே தாக்கி அழித்துக் கொள்வதைப் போன்ற முட்டாள்தனம் அது! எதை நினைத்தும் சும்மா வருத்தப்பட்டுக் கொண்டு இருப்பதால், எந்தப் பலனும் இல்லை.

வருத்தம் என்பதும், துக்கம் என்பதும் ஆளுக்கு ஆள் மாறுபடும்.

இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் ஒருநாள், ஜெனரல் ஐஸனோவர் (உண்ள்ங்ய்ட்ர்ஜ்ங்ழ்) சொர்க்கத்துக்குப் போனார். “வாரக் கடைசியில் நரகத்தைச் சுற்றிப் பார்க்க எனக்கு அனுமதி வேண்டும்என்று கடவுளிடம் அவர் கோரினார். “நரகத்தில் இருப்பவர்கள் சொர்க்கத்தைப் பார்க்க விரும்பினால் அர்த்தம் இருக்கிறது. உனக்கு நரகத்தைப் பார்க்கும் ஆசை எதற்கு?” என்று கேட்டார் கடவுள். “அங்கே ஹிட்லர் என்ன வேதனைகளை அனுபவிக்கிறார் என்று பார்க்க வேண்டும்என்றார் ஐஸனோவர்.

கடவுள் நரகத்துக்கான பாஸ் கொடுத்தார். நரகத்தில் ஹிட்லர் சித்ரவதை செய்யப்படும் முகாமுக்கு ஐஸனோவர் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அசிங்கங்களால் நிரப்பப்பட்ட இரண்டு ஆள் உயரத் தொட்டி ஒன்றில், ஹிட்லர் அமிழ்த்தப்பட்டிருந்தார். தொட்டிக்கு வெளியே தெரிந்த அவருடைய முகத்தில், பிரகாசமான புன்னகையைப் பார்த்து ஐஸனோவர் ஆச்சர்யம் அடைந்தார்.[hide]

சகிக்க முடியாத நாற்றத்தில், அருவருப்பான அசிங்கத்தில் அழுத்தியபோதும், எதைப் பற்றி நினைத்து இப்படி வெட்கமில்லாமல் சிரிக்கிறாய்?” என்று ஹிட்லரிடம் கேட்டார். “எனக்கு கீழே சிக்கிக் கொண்டு இருப்பது யார் தெரியுமா? முசோலினி! அவன் தோள்களில்தான் நான் நிற்கிறேன்.அவன் நிலைமையை நினைத்துப் பார்?” என்று ஹிட்லர் பொங்கிப் பொங்கிச் சிரித்தார்.

துக்கம் என்பதும், வருத்தம் என்பதும் ஒருவருக்கொருவர் மாறுபடும். மற்றவருடன் ஒப்பிட்டுப் பார்த்தால் வருத்தம் கூடும் அல்லது குறையும் என்றால், அவை வெளியிலிருந்தா வருகின்றன? இல்லை. உங்கள் மனதுக்கு உள்ளேயேதான் உற்பத்தியாகின்றன. உங்கள் மனத்தைச் சந்தோஷமாக வைத்துக் கொள்வதோ, சோர்வாக வைத்துக் கொள்வதோ உங்கள் கையில்தான் இருக்கிறது. நீங்கள் நினைத்தபடி உலகம் நடக்க வேண்டும், மற்றவர்கள் இயங்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் உங்கள் அகங்காரம் வீண் சுமை. அதைக் காலடியில் போட்டு நசுக்கி விட்டு மேலே தொடரவில்லை என்றால், நீங்கள் வைக்கும் ஒவ்வொரு அடியும் வலிக்கும். ஒவ்வொரு திருப்பத்திலும் அச்சம் வரும்.

நம்பிக்கை குறைந்து, மனச்சோர்வு எழும். மனச்சோர்வு வரும்போதெல்லாம் மற்றவர்கள் மீது எரிச்சல் கொள்வதை நிறுத்திவிட்டு, அதற்குக் காரணம் நீங்கள்தான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். உலகத்தின் மீது கோபம் கொள்ளாதீர்கள். உங்கள் குறைகளை உணர்ந்து அவற்றை மாற்றிக் கொள்ளக் கிடைத்த அற்புதமான வாய்ப்பு இது என்று உணருங்கள். வலிகளும், வேதனைகளும் நிரம்பிய அனுபவங்களையே வாழ்க்கைப் பாடங்களாக ஏற்று, உங்களைப் பக்குவப்படுத்திக் கொள்ள வழங்கப்பட்ட வரம் இது!

எதிர்பார்ப்பை வளர்த்துக் கொண்டதால்தான் ஏமாற்றங்கள் என்பதை உணருங்கள். அகங்காரத்தை விட்டொழியுங்கள். மாற்றுக் கருத்துக்களையும் எதிர்க்காமல் ஏற்கப் பழகுங்கள். அவற்றையே உங்களுக்குச் சாதகமாக மாற்றக் கொள்வது எப்படி என்று திட்டமிடுங்கள். கிடைக்கும் அனுபவங்களை உங்களுக்குப் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ளுங்கள்![/hide]

இந்த இதழை மேலும்

நில்! கவனி !! புறப்படு !!! – 11

மகிழ்ச்சித்தருணங்கள் ! (பாதை 10)

வாழ்வில் வெற்றிக்காற்றை மட்டுமே சுவாசிக்கும் நண்பர்களே !

அனைத்திலும் சிறக்கும் ஆறு லட்சம் குடும்பங்கள்ஒரு ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்குவதே உங்கள் வண்ணமயமான வாழ்வுக்கு வழி காட்டும் வாழ்வியல் பயிற்சியாளரான என் லட்சியம்.

அந்த ஆனந்தக்குடும்பத்தில் உங்களையும் இணைத்துக்கொள்ளஇந்தத்தொடர் ஒரு இணைப்புப்பாலம்.

மகிழ்ச்சித்தருணங்கள் !

அனைவருக்கும் பாரபட்சம் இன்றி கிடைத்திருப்பது 24 மணிநேரம் தான்.  பங்கிடவே முடியாத இந்த பொக்கிஷத்தை வைத்துக்கொண்டு நீங்கள் எந்த அளவு வாழ்வை வாழ்கிறீர்கள் என்பதில் தான் சூட்சுமமே

உலகப்பெரும் பணக்காரன், உலகம் சுற்றும் வாலிபன், தொழில் உலக சக்ரவர்த்தி,  அறிவையே வியக்க வைக்கும் விஞ்ஞானி, ஆண்டவனை அடையாளம் காட்டும் ஆன்மீகத் தந்தைஅவர்க்கு மட்டுமல்ல,,,

பொய், களவு, சூது, நம்பிக்கை துரோகம், பஞ்ச மகா பாதகங்களின் மொத்த குத்தகை, களவானிகளின் பட்டியல் இருந்து உய்ஸ்ரீர்ன்ய்ற்ங்ழ் பட்டியலுக்கு ஏற்றுமதி ஆனவன், – இவர்களுக்கு மட்டுமல்ல ,,,

முன்னேற முடியும் என்ற கொள்கையில் முயற்சி செய்யும் சாமானியன், உழைப்பே உயர்வுக்கு வழி என்று வாழும் தொழிலாளி,  நாளைய விடியல் நிச்சயம் எனக்கு நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையுடன் நாட்களை நகர்த்தும் அப்பாவிஅவர்க்கும் பொதுவானதே இந்த 24 மணி நேரம்

காற்றில் மிதந்து வந்த கண்ணதாசனின் பாடல் ஒன்று.

கடவுள்ஒருநாள்உலகைக்கானதனியேவந்தானாம்

கண்ணில் கண்ட மனிதர்களை எல்லாம் நலமா என்றானாம்.

ஒருமனிதன்வாழ்வைஇனிமைஎன்றான்

ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்

படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்” – என்று.

ஆமாம்.  கடவுள் சிரிப்பின் உண்மையான காரணம் இது தான்.

ஒரே அளவு நேரத்தில் நீங்கள் எந்த அளவு முறையாக, சரியாக பயன்படுத்தி வருகிறீர்கள் என்பதில் தான் உங்கள் வாழ்க்கையே இருக்கிறது

கிடைத்திருக்கும் நேரத்துக்கு முதலில் நீங்கள் மகிழுங்கள்.  எந்த நிலையில் நீங்கள் இன்று இருந்தாலும் அந்த நிலைக்கு முதலில் மகிழுங்கள்.  இன்னும் அதிகம் இன்பம் தேவையாக இருந்தாலும்இப்போது கிடைத்திருக்கும் இன்பத் தருணத்திற்கு மகிழுங்கள்.  மகிழ்ச்சி ஆற்றில் குளிக்க விழைந்தாலும்  இப்போது உழன்று கொண்டிருக்கும் துன்பச்சேற்றில் இருந்துகொண்டே இந்த தருணத்திற்கு மகிழுங்கள்.  அறிவாளி என்று நாளை ஊரே புகழும் காலம் வரும் வரைஇப்போதைய ஏமாளி என்ற துன்பத்தருனத்திலும் மகிழுங்கள்

உங்களுக்கு திருவோடு இருப்பதில் மகிழ்ச்சியாஅல்லது திருவோட்டில் இருப்பதற்கு மகிழ்ச்சியா? – என்பதை உங்கள் மனம் தான் முடிவு செய்ய வேண்டும்.

உங்களது 24 மணி நேரத்தில் எத்தனை மகிழ்ச்சித் தருணங்களை உங்களால் உருவாக்கிக்கொள்ள முடியும்.

அதெல்லாம் சரி!  மகிழ்ச்சித் தருணம் என்றால் என்ன?

பரந்துபட்ட பொறுப்புக்கள், கடினமான சூழ்நிலைகள், மோசமான முதலாளிஇதுபோன்று பல நிர்பந்தங்களுக்கும் மத்தியில் மன அமைதி குலையாமல் இருப்பது எப்படி என்று கற்றுத்தெளிவதேமகிழ்ச்சித்தருணங்கள்

அதாவது சூழலை துன்பமாக எடுத்துக்கொள்ளாமல் மகிழ்ச்சி என்றே ஏற்பது.

ஒவ்வொரு சந்தர்பத்திலும் நீங்கள் எடுத்த தேர்வுகளே இன்றைய உங்கள் நிலை.   துன்பத்தருணம் என்றாலும் மகிழ்ச்சித்தருணம் என்றாலும் சரி சூழ்நிலைகள், சூழல்கள் மாற வேண்டுமானால்உங்களுக்கான தேர்வுகளை நீங்கள் தான் சரியாக தேர்வு செய்ய வேண்டும்.[hide]

எப்போதும் துன்பத்தருணத்தில் இருக்க சில வழிகள் :

அனைவரும் உங்களை பாராட்ட வேண்டும் என்று எப்போதும் எதிர்பார்த்து வாழுங்கள்.  உங்களை பற்றியே எப்போதும் பெருமை பேசிக்கொண்டு இருங்கள்.  யாரையும் நம்பாதீர்கள்.  உங்களை மட்டுமே எப்போதும் நம்புங்கள்.  எல்லோரையும், எதையும் எப்போதும் சந்தேகக்கண் கொண்டே பாருங்கள்.  யாருக்கும், எதற்கும் எந்த தருணத்திலும் எந்த உதவியும் செய்யாதீர்கள்.  சுயநலமாகவே எப்போதும் இருங்கள்.  மற்றவரை மரியாதை குறைவாக நடத்துங்கள். இகழ்ந்து பேசுங்கள்.  ஏளனமாக பாருங்கள்.  யார் என்ன நல்ல அறிவுரை கூறினாலும் உதாசீனம் செய்யுங்கள்

துன்பத்தருணத்தில் இருப்பவர்கள் எப்போதும் தன்னைப்பற்றி மட்டுமே நினைத்து மகிழ்ச்சி இல்லாமலேயே இருப்பார்கள்.  ஆனால், மகிழ்ச்சித் தருனத்தில் இருப்பவர்கள் இதற்கு நேர் மாறாக இருப்பார்கள்.

சரி!  மகிழ்ச்சித்தருணத்தில் இருக்க என்ன செய்ய வேண்டும்.

பயிர்ச்சி முறை :

Step 1   : Have Realistic Expectations. உங்கள் எதிர்பார்ப்புகள் எதார்த்தமாக இருக்கட்டும்.

நடைமுறைக்கு மீறிய வகையில் உங்கள் வேலையில் அதிகமான ஈடுபாடும் எதிர்பார்ப்பும் வைத்திருந்தால் மிக கடினமாக வேலை செய்தாலும் அது உங்களுக்கு மகிழ்ச்சியை தராது.  எனவே, உங்கள் பணத்தேவைக்காக மட்டுமே வேலை செய்யுங்கள், கடமையை செய்யுங்கள்.  இதை மனதார உணருங்கள்.                       

Step 2  :   Find a Different Boss .  உங்கள் முதலாளியை மாற்றுங்கள். 

மனநிலையில் மாற்றம் என்பது எல்லோருக்கும் பொதுவானது.  உங்கள் முதலாளியும் அதில் அடக்கம்.  எப்போதும் அவர் சொல்வதும், செய்வதும் சரியாகத்தான் இருக்கும் என்று நீங்கள் எடுத்துக்கொள்ளக் கூடாது.  ஆனால் உங்கள் முதலாளி எப்போதும் உங்களை வருத்தத்துடனேயே வைத்திருந்தால்அவரை மாற்ற நினைப்பதில் தவறில்லை

அலுவலக பணிகள் என்பதுஎனக்கு என்ன கிடைக்கிறது? “ என்று நீங்கள் நினைப்பது தவறு.  நான் என்னவாக ஆகின்றேன்? – என்பதே உங்கள் கேள்வியாக இருக்கட்டும்.  உங்களது வெற்றி, வளர்ச்சி, மகிழ்ச்சி இவற்றுக்கு உங்களுக்கு கிடைத்திருக்கும்ஒரேமுதல்முக்கியமான, செல்வாக்கு நிறைந்த நபரே உங்கள் முதலாளி என்பதை உணருங்கள்

உங்கள் முதலாளியின் சிறந்த நண்பனாக நீங்கள் மாற வேண்டிய அவசியம் இல்லை.  உங்கள் Personal மற்றும் Professional Life இவற்றுக்கு இடையே தெளிவான ஒரு கோட்டை வரைந்துஎல்லை தாண்டாமல் இருக்கப் பழகுங்கள்.  ஆனால் அதற்குப் பின்னும் சகித்துக்கொள்ள முடியாத, மனம் புண்படுத்தும் பேச்சுக்கள், முரட்டுத்தனம், மரியாதை இன்மை, இடைஞ்சல், துன்புறுத்தல் இருந்தால், ஒரு புது முதலாளியை, புதிய வேலையை நீங்கள் தேடத் துவங்கலாம்.  தவறில்லை.

Step 3   :  Think of yourself as a Free Agentசுதந்திர முகவராக இருங்கள்

வெறும் சம்பளத்துக்காக வேலை பார்க்கும் வேலைக்காரன் என்று உங்களை நீங்கள் எண்ணாதீர்கள்.  அப்படி எண்ணினால்ஒரு வேலைக்காரனாக மட்டுமே சம்பளம் கொடுக்கப்படுவீர்கள்மற்றவரால் மதிக்கப்படுவீர்கள்.  உங்களுக்கான ஒரு சுய பிம்பத்தை (நங்ப்ச்ஐம்ஹஞ்ங்) கட்டமையுங்கள்.  நான் ஒரு திறமை வாய்ந்த சுதந்திரமான முகவர்.  என் அறிவை, அனுபவத்தை, திறமையைசிறப்பான ஒரு ஊதியத்துக்கு இந்த நிறுவனத்துக்கு அளிக்கிறேன்” – என்று உங்களுக்குள் தினமும் சொல்லிக்கொள்ளுங்கள்.   உங்களை நீங்களே அந்த உயர்ந்த நிலையில் உணருங்கள், மனக்கண்ணில் காணுங்கள்

நினைவு கொள்வீர்.  அதிகமான திறமையை நீங்கள் வெளிப்படுத்த வெளிப்படுத்தஅந்த நிறுவனத்தில் உங்கள் வருமானமும் ஆளுமையும் அதிகரிக்கக் காணலாம்.  திறமைகளின் மொத்த களஞ்சியமாக உங்களை நிரூபித்தால்உங்களை இழக்க எந்த முதலாளியும் விரும்ப மாட்டார்கள்.  அப்படி ஒரு தருணத்தை உருவாக்குங்கள்

Step 4   :   Add Fun to your Work Place.  அலுவலகத்தை மகிழ்ச்சிப் பகுதியாக மாற்றுங்கள்.

மகிழ்ச்சியான தொழிலாளர்கள் அதிகம் இருக்கும் அலுவலகத்தில் விடுப்பு எடுத்தல் குறைவாக இருக்கும், உற்பத்தி அதிகமாக இருக்கும், பிரச்சினைகள் அரிதாக இருக்கும்

மகிழ்ச்சிப் பகுதியாக மாற்ற சில யோசனைகள்.  அடுத்த அலுவலக விருந்தில் ஆடல் பாடல் என்று கொண்டாடுங்கள்.  சரியான நேரத்துக்கு வருபவர்களுக்கு சிறப்பு பரிசுகள் என்று அறிவிப்பு, வாரம் ஒரு நாள் உங்கள் செல்லப் பிராணிகளை அலுவலகத்துக்கு அழைத்து வரலாம் என்ற அறிவிப்பு” – இது போன்று புதுமையான செயல்கள் செய்யலாம்

எல்லாம் சரியாக இருந்தால் தான் முழுமையான மகிழ்ச்சி என்பது இல்லை.  குறைகளையும், குறைபாடுகளையும் தாண்டிஉங்கள் பார்வையும், மனசும் விசாலமாக விரியஅதுவே மகிழ்ச்சி.

அலுவலகம் என்று இல்லைஇவை வெறும் உதாரணங்களே.  உங்கள் வாழ்வின் அனைத்து நிமிடங்களையும், நிகழ்வுகளையும் மகிழ்ச்சித்தருணங்களாக மாற்றினால்அது உங்களுக்காக நீங்கள் உருவாக்கிய ஒரு புதிய உலகமாக இருக்கும் என்பது உறுதி.

அந்த உலகம் உருவாக என் உளப்பூர்வமான வாழ்த்துக்கள்.

Minutes with Mithran – கேள்விகளால்ஒருவேள்வி

17. நீங்கள் தொடங்குபவரா அல்லது முடிப்பவரா?(உதாரணமாக) வாழ்வின் வெற்றிக்கான புதிய பழக்கம், தன் மதிப்பு உயரும் விதமான முயற்சிகள் ,,, அல்லது இந்த சிக்கலை அடுத்து எப்படி முடிப்பது என்ற குழப்பத்தில் அனைவரும் இருக்கஒரு சிறந்த தீர்வை அழைக்காமலே வ|யச்சென்று தீர்த்து வைப்பது, இப்படி.

18. எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் நீங்கள் அண்மையில் அல்லது கடைசியாக செய்த ஏதாவது ஒரு செயல்.  (உதாரணமாக)  விபத்தில் சிக்கிய நபரை மருத்துவமனையில் சேர்த்தது, பண வசதி இல்லாதநன்கு படிக்கும் மாணவனுக்கு கல்விக்கட்டணம் கட்டியது  ,,, இப்படி.      

19. உங்கள் இதயம் திடீரென்றுதுடிப்பதை நிறுத்தியதருணம்எப்போது? ஏன்?  (உதாரணமாக)  உங்களுக்கு மிக நெருக்கமான ஒருவர் இன்னும் கொஞ்ச நேரத்தில் இறந்து விடுவார் என்று மருத்துவர்கள் சொன்னது,  நீங்கள் முதலீடு செய்திருந்த நிறுவனம் பங்கு சந்தையில் மிகப்பெரும் சரிவை சந்திக்கஉங்கள் பணம் முழுவதும் தொலைந்து போவது போன்ற நிலைமை ,,, இப்படி.      

இங்கே கேட்கப்படும் ஒவ்வொரு கேள்வியும் (100 கேள்விகள் இடம்பெறும்) உங்கள் வாழ்க்கைக்கான வழித்துணை.  இந்த கேள்விகளும், அதற்கான உங்கள் பதில்களையும் ஒரு வெள்ளைத்தாளில் எழுதி வையுங்கள்.  தட்டச்சு செய்து பாதுகாப்பது இன்னும் சிறந்தது.  இந்தக்கேள்விகள் உங்கள் வாழ்க்கை பயணத்துக்கான வரைபடம்.

பத்து நாட்களுக்கு ஒரு முறை உங்கள் பதில்களை மீண்டும் சரிபாருங்கள்.  பதிலில் மட்டுமல்லஉங்கள் வாழ்விலும் மிகப்பெரிய மாற்றங்கள் உருவாகி வருவதை நீங்களே கண்கூடாக காணலாம்.  மேலும் தெளிவுக்கு என்னையும் தொடர்பு கொள்ளலாம்.

நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

திசைகளை தீர்மானியுங்கள் !  திட்டமிடுங்கள் !  செயல்படுங்கள் !

கேளாய் மகனே கேளொரு வார்த்தை !  நாளைய உலகின் நாயகன் நீயே ![/hide]

இந்த இதழை மேலும்

ஜெயிப்பது வாழ்க்கையையா? வாழ்க்கையிலா?

வாழ்க்கையை ஜெயிப்பது என்பது சரியல்ல எனத் தெரிந்து கொண்டீர்கள் தானே!

அப்படியென்றால் நாம் வாழும் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும். அதுவும் எல்லோருமே ஜெயிக்க வேண்டும்.

இதை WIN-WIN FORMULA என ஆங்கிலத்தில் சொல்வர். இதன் பொருள் நாமும் வெற்றி பெறுவோம். மற்றவர்களையும் வெற்றி பெறச் செய்வோம் என்பது தான்.

தன்னம்பிக்கையாளர்கள் மத்தியில் நம்பிக்கையே இல்லாத ஒருவன் இருந்தால் ஒன்று  அவன் பயந்து ஓடிவிடுவான் ; அல்லது அவர்களது தன்னம்பிக்கையின் அழுத்ததால் இவனும் தன்னம்பிக்கையாளாக மாறுவான்.

ஓட்டு வீடுகளும், குடிசைகளும் நிறைந்த பகுதி. மிகவும் விலை குறைவாகக் கிடைக்கிறது என நிலத்தை வாங்கி, அரண்மனை போன்ற வீட்டைக்கட்டி, அதில் வசிக்கும் ஒருவரின் மனநிலை எப்படி இருக்கும்?

எதற்காக இந்தப்பகுதியில் வசிக்க வேண்டுமென வேறிடம் செல்வாரா? அல்லது தன் வீட்டைச்சுற்றியுள்ளவர்களது வாழ்க்கை மேம்பாட்டுக்கு திட்டமிட்டு செயல்படுவாரா?

பிரச்சனைகளையும் சவால்களையும் இனம் கண்டுபிடித்துவிட்டால், செயல்பாடு சுலபமாகிவிடும். இதை இனம் காண்பதில் பெரும் பாலானவர்களுக்கு குழப்பம்.

விளக்கம் இதோ:

அகச்சூழல், புறச்சூழல் என்பதை முதலில் விளக்கிக் கொள்வோம்.

அகச்சூழல் என்பதுஒவ்வொருவரிடமும் உள்ள தகுதிகள், திறமைகள், பயிற்சிகள், தன்னம்பிக்கை விழிப்புநிலை, காலம்அறிந்து செயல்படுதல் போன்றவை.

புறச்சூழல் என்பது ஒருவர் ஒன்றை எதிர்கொள்ளும் இடம், காலம், இயற்கை உள்ளிட்டவைகளாகும்.

நம் வாழ்க்கையில் நாம் எதிர்கொள்பவைகளை இரண்டாகப் பிரிக்கலாம். 1- சவால் ; 2- பிரச்னை.

சவால் என்பதை ஆங்கிலத்தில் இஏஅககஉசஎஉ என்கிறோம். எதிர்கொள்ளும் சூழல் அவரிடமுள்ள திறமைகளால் எளிதாக செய்து விட முடியும் என்பதே சவால்.

1. இருசக்கரவாகனத்தில் நகரின் முக்கிய சாலையில் பயணிக்கிறோம். திடீரென டயர் பஞ்சராகிவிட்டது. இதை சுலபமாகச் சரிசெய்து விடலாம். ஓரமாக வாகனத்தை நிறுத்தி, அவசர வேலை இருந்தால் முடித்த பின்னர் கூட பஞ்சரை சரி செய்து ஓட்டிச் செல்லலாம். இது சவால்.

2 கடும் வெயில்; நடந்து செல்கிறோம். வழியில் ஒருவருமே தென்படவில்லை ; சாலையோரம் மரங்களுமில்லை ;கண்ணுக்கெட்டிய தூரம் வீடுகளும் தெரியவில்லை.

நாவறண்டு கடும் தண்ணீர் தாகம் ஏற்பட்டுவிட்டது. கையிலும் தண்ணீரில்லை ; வெளியில் எங்கும் தண்ணீரில்லை. மயங்கி விழும் நிலை இந்தச் சூழல் தான் பிரச்சனை என்பது.

பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு தன் திறமைகள் மட்டும் போதாது ; வெளியிலிருந்து பெறும் ஆலோசனைகளும் உதவிகளும் கட்டாயம் தேவை.[hide]

இதனால் தான் மனிதனின் பண்பு ஒத்தம் உதவியும் வாழ்தல் என்றனர். நம் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சூழல்களை சவால்களா பிரச்சனைகளா என இனம் பிரித்து, அதற்பேற்றவாறு நம்மிடமுள்ள ஆற்றலைப் பயன்படுத்தியோ, வெளியிலிருந்து  ஆலோசனைகளும் உதவியும் பெற்றோ, அந்தச் சூழலலிருந்து நிம்மதியாய் வெளியில் வருவது தான் வாழ்க்கையில் ஜெயிப்பதாகும்.

வாழ்க்கை என்பது பெரும்கடல் ; இதை சாகரம் என்று சொல்லியுள்ளனர். இதை எப்படிக் கடப்பது? நீச்சலடித்துக் கடப்பது சுலபமல்ல.

திருமூலம் சொல்கிறார். கடல் போன்ற பிறவியை (வினை) க் கடக்க வாழ்க்கை என்ற சிறிய படகை நாம் பெற்றிருக்கிறோம். படகு முன்னே செல்ல நம்மிடம் துடுப்புகள் இல்லாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறோம்.

இரண்டு துடுப்புகள் இருந்தால், இந்தப் பிறவிக் கடலை வாழ்க்கை எனும் சிறிய படகின் மூலம் கடந்து விடலாம். அந்தத் துடுப்புகள் தான் தவம் மற்றும் அறம் ஆகும்.

படகு கவிழ்ந்தால் வாழ்க்கை முடிவுறும் எதிர்கொள்ளும் மழை, காற்று, சூறாவளி உள்ளிட்ட இயற்கைச் சீற்றங்களைச் சவால்களாகவும் பிரச்சனைகளாகவும் இனம் கண்டு அதற்கேற்றவாறு துடுப்பு போட்டு சேருமிடம் அடைவது தான் வாழ்க்கையில் ஜெயிப்பதாகும்.

திருமூலரின் பாடல்.

திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி

இளைப்பினை நீக்க இருவழி யுண்டு

கிளைக்கும் தனக்கும் அக்கேடில் முதல்வன்

விளைக்கும் தவம் அறம் மேற்றுணையாமே

தவம் என்பது தம் பணியை விருப்பத்துடனும் ஈடுபாட்டுடனும் செய்வது. இதைத் திருவள்ளுவர் தவம் செய்வார் தம் கருமம் செய்வார் என்றார். இதனால் மன ஒருமைப்பாடும் மனோபலமும், பிறருடன் ஒப்பிடாத பெருந்தன்மையும் உண்டாகும்.

அறம் என்பது எண்ணம். சொல், செயல்களால் தனக்கும் மற்றவர்களுக்கும் இன்றும் என்றும் நல்லதே நடக்குமாறு வாழ்தலாகும். இதுவே அற வாழக்கை.

திருவள்ளுவர் தெளிவாகஅறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை என்று எழுதியுள்ளார். இந்த தவம், அறம் இரண்டையும் தான் அன்று முதல் இன்று வரை எல்லா மதங்களும் நூல்களும் போதித்த வருகின்றன.

இவை தெரியாதவர்கள் தான் தேர்வில் தோல்வி, காதலில்  தோல்வி, வியாபாரத்தில் தோல்வி வாழ்க்கையை ஜெயித்து விடுகிறார்கள். அதாவது இறந்து விடுகிறார்கள்.

நாம் வாழ்க்கையில் ஜெயிப்பதற்காகப் பிறந்திருக்கிறோம். முன்னொரு காலத்தில் மன்னன் ஒருவன் தன் நாட்டை நீதியுடன் ஆண்டு வந்தான். அவனுக்கு குழந்தைப் பேறு இல்லாததால், அவனுக்குப்பின் நாட்டை ஆள்வதற்கு தகுதியுள்ள இளைஞர் ஒருவரைத் தேர்ந்தெடுக்க விரும்பினான்.

இதை முரசறிவித்து தன் நாட்டு மக்களுக்குத் தெரிவித்தான். இப்போதைய மன்னனுக்குப்பின் நாடாள விரும்பும் இளைஞர்களை ஓரிடத்துக்கு வரவழைத்தான்.

அவர்கள் எல்லோரிடமும் ஒரே மாதிரியான இரண்டு விதைகளைக் கொடுத்து, அவற்றை முளைக்கச் செய்து 2 மாதங்களில் செடியாக்கி கொண்டு வருமாறும், அதில் சிறந்தது தேர்வு செய்து அறிவிக்கப்படும் என்றான்.

இளைஞர்கள் ஆர்வமுடன் வாங்கிச் சென்று முளைக்கச் செய்து, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்தனர்.

2 மாதம் முடிந்தது. கலந்து கொண்ட எல்லோருமே விதவிதமான செடிகளுடன் குறிப்பிட்ட இடத்தில் குழுமினர்.

ஓர் இளைஞன் மட்டும் முன்பு கொடுத்த இரண்டு விதைகளை மட்டும்கையில்  கொண்டு வந்தான்.

எல்லாவற்றையும் பார்த்த மன்னர் மனம் மகிழ்ந்து, செடிகளைக் கொண்டு வந்தோரைப் புறம் தள்ளி, விதைகளை மட்டும் எடுத்த வந்த இளைஞனைத் தேர்வு செய்தார். ஏன்? காத்திருங்கள்.

தொடரும்[/hide]

இந்த இதழை மேலும்

“ சரிவுக்கு தீர்வு… சரியான தேர்வு! ”

நாம்; எடுத்த முடிவு.. சரியா..? தவறா..?”

அடுத்தவர் போல, வாழ நினைப்பது.. சரியா..? தவறா.?’

மற்றவர்களை கலந்து ஆலோசித்து முடிவெடுப்பதுசரியா..? தவறா.?’

மற்றவர்களை, பார்த்து, நம்மை மாற்றிக்கொள்ளவது..சரியா.

.தவறா..?’

பொதுவாக, இது போன்ற கேள்விகளுக்கு, யாராலும், ‘இது சரி, இது தவறுஎன்று, அவ்வளவு எளிதாக, சரியாகவும், தவறாகவும்,, திட்டவட்டமாக பதில் சொல்லிவிட முடியாது. அதை நிருபித்தல் என்பதும் கடினம். காரணம்

வாழ்க்கையில்..                                        

எந்த ஒரு செயலின் ஆரம்பத்திற்கும், முடிவுக்கும்சரி, தவறுஎன்ற தீர்மானம் உண்டு. அந்த வகையில், நாம் படித்திருக்கும், கல்வி, பிடித்திருக்கும் தொழில், கொள்கை, மற்றும் நட்புகள், உறவுகள் என்று வடிவமைத்திருக்கும் வாழ்க்கை முறைகள் யாவும், நம்மை பொருத்தவரைசரி தவறுஎன்ற இரு முறைகளில்தான் நிர்ணயிக்கப்படுகிறது.

ஆனால், ‘சரி தவறுஎன்பது  மாயை. அவை இரண்டும் அவரவர்களின் , மனநிலை, சூழ்நிலை, பொருத்த, அனுபவ ரீதியான உண்மைகல்ன் வெளிப்பாடு. என்பதால்.

உதாரணமாக….

ஒருவன், ஒரு பச்சோந்தியை, வாழை மரத்தில் பார்க்கிறான். அங்கு அது பச்சை நிறத்தில் உள்ளது. அதனால் அவன் பச்சோந்தி, பச்சை நிறமென்கிறான்.   

இன்னொருவன் அதே பச்சோந்தியை , தென்னை மரத்தில் பார்க்கிறான். அது இப்போது, தென்னை மரத்தின் நிறத்தில் உள்ளது. அதனால் அது மா..நிறமானது..என்கிறான்.

இவ்விருவரில்,; யார் பார்த்ததும்,சொன்னதும், சரியானது..?, தவறானது.? இதில் எது உண்மை.?

இருவர் பார்த்ததும், சொல்வதும் ; சரியே!

ஆனால்,  சூழ்நிலைகளுக்கு ஏற்ப நிறம் மாறுதல், என்பது, பச்சோந்தியின் தன்மை என்பதே உண்மை!

அதனால் அவரவர் கண்ணோட்டத்திற்கும், கருத்துக்கும் ஏற்ப, ‘சரி, தவறுஎன்று முடிவுகள் நிரணயிக்கப்படுகிறது.என்பதுதான் உண்மை.

ஆனால், அதேசமயம், அடுத்தவர்களின் ஆலோசனைகளைக் கேட்பதோ, அதன்படி நடப்பதோ முற்றிலும் தவறென்றோ, சொல்லவில்லை. அதை நம் சூழ்நிலைகளில் கொண்டு சென்று ஆராய்தல் நல்லது.

ஒரு ஞானியிடம், ’ குருவே, ஒரு செயலைசரி, தவறுஎன்று எப்படி கண்டு பிடிப்பது.? என சீடர் கேட்டதற்கு,    குரு,”ஒருவரிடம் கேட்கும் கேள்விக்கு, பலரின் பதில் பல விதமாக இருக்கும். அதில் எதுசரி, தவறுஎன்று கண்டு கொள்வது உன் திறமையைப் பொருத்தது.’ என்றார்.

ஒருகேள்விக்கு, ஒரு பதில் இருக்காது. எல்லாமே ஏறக்குறைய சரியான கருத்துக்களே. இதில் நமக்கு,‘எது சரி. .எது..தவறுஎன்று யோசித்து முடிவெடுக்க வேண்டும்.

அவர் சரியானவர்என்பது சரி. ஆனால்,

அவர் என்னைவிட சரியானவர்என்பது தவறு

காரணம்..

இது தன்னம்பிக்கையின் குறைபாடு. தாழ்வு மனப்பான்மையின் மேம்பாடு. நாம் வேறு,அவர் வேறு. இருவரின் சூழ்நிலை. மனநிலைகளும் வேறு. வேறு.என்பதே சரியான நிலைபாடு. நாம் இருக்கும் இயல்பு நிலையி|ருந்து, இல்லாத நிலைக்கு தாவுவது தவறானது.

இப்படி சரியான ஒன்றைதவறாகமாற்ற முயற்சிப்பதுதான் நம் பிரச்சனை, தோல்விகளுக்கு மூலக்காரணம்.. 

நம்மில் பலர் கல்வியோ, தொழிலோ எதிர்காலத்திட்டங்களிலோ, சிறு தோல்வி கண்டு விட்டால், அதை தவறானது என்றும், சரியாக அமைந்து விட்டால், ‘சரியான முறைஎன்றும, தீர்மானித்துக் கொள்கிறோம்.[hide]

இன்று வரை, இந்த தீர்மானத்தில்தான் நம், ‘சரிதவறுகள்நிர்மானிக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்துதான் குழப்பங்களும் ஆரம்பமாகி, பல தவறுகளுக்கும்,; தோல்விகளுக்கும் காரணமாகிறது என்பதை நாம் அறிவதில்லை.

வாழ்க்கை சூழலும், பச்சோந்தியைப் போல, சூழ்நிலை மாற்றங்களுக்கு தகுந்தாற் போல் மாறக்கூடியது.

அந்த மாற்றத்திற்கு தகுந்தாற் போல், சரியானதை தேர்வு செய்து, நம் கல்வியையும், தொழிலையும் அமைத்துக் கொள்வதே, நல்லதொரு உயர்வை தரும்.

பொதுவாக, நம்மைச் சுற்றி, படித்தவர்களும். படிக்காதவர்களும் இருப்பது போல, நமக்கு (நம்மை) பிடித்தவர்களும், பிடிக்காதவர்களும் சுற்றி இருக்கிறார்கள்.

உண்மையில்நம்மைச் சுற்றியுள்ள இவர்களிடமிருந்துதான் நாம் (நம்) வாழ்க்கைப் பற்றி தெரிந்து  கொள்கிறோம்.தெரிந்த கொள்ளவும் வேண்டும்.

இவர்களில்,

நமக்கு பிடித்தவர்களின்  ;தவறான தகவல்களையும், ‘சரியென்றும்;, பிடிக்காதவர்களின் சரியான நியாயங்களையும், தகவல்களையும்தவறென்றும்ஏற்றுக் கொள்வது நடைமுறை சாத்தியம்.அல்லவா.?

இதன் முடிவு

நாளடைவில் நம் மனம் சரியானவைகளையும், தவறானவைகளாகவே சித்தரித்துக் கொள்ள பழகிக் கொள்கிறது.

இதன் அடிப்படையில்தான், மேற்கொண்டு, கல்வியை தொடர்வதற்கோ, புதிய தொழில் ஆரம்பிப்பதற்கோ, நமக்குள் ஒரு முடிவு இருந்தாலும், நம்மை சுற்றி இருப்பவர்களின் கவனத்த்ல்ற்கு கொண்டு போக வேண்டிய சூழ்நிலையில், நமக்கு பிடிக்காதவர்களின்சரியான கருத்தோ, தீர்வோகூட, தவறான கண்ணோட்டத்தில்தான் பார்க்க தோன்றும்.

இப்படித்தான் நமக்கு தேவையான, சரியான முடிவுகள் கூட தவறாக தெரிகிறது..

முடிவில்

எது சரி.? எது தவறு.? என்ற குழப்பத்திற்கு,  மனம் தள்ளப்படுகிறது.

ஒருகதை

ஒரு சலவைக்கார தந்தையானவன், தன் மகனையும், தன் கழுதையையும்  கூட்டிக் கொண்டு, பக்கத்து ஊருக்கு பயணித்தான். வழியில் ஒருவன் எதிர்பட்டு, தந்தையானவனிடம், “ஏய்யா..உனது மகன் பாவம் கஷ்டப்பட்டு நடக்கிறானே.  கழுதையும் சும்மாதான் நடக்கறதே மகனை கழுதை மீது  உட்கார வைத்து கூட்டி போகலாமேஎன்றான்.

அதுவும் சரிதான் என்று மகனை கழுதையின் மீது ஏற்றி கூட்டிப் போனான். சிறிது தூரம் சென்றபின் மற்றொருவன், “ ஏன்யா.. கழுதையே பொதி சுமக்கத்தானே.;. ஏன் வீணாக நடக்கிறாய்.?” நீயும் ஏறிக் கொள்.  என்றதும் , வழிப் போக்கன் சொன்னதே சரி என்று அவனும் ஏறிக் கொண்டு பயணிக்க, மீண்டும் எதிர்பட்ட இன்னொருவன்,

ஏன்யா.. உனக்கு கொஞ்சம் கூட மனசாட்சியே .இல்லையா..? பாவம் சின்ன கழுதை மீது ரெண்டு பேர் உட்கார்ந்து போறீங்களே. கழுதை என்னமாய் கஷ்டப்படுது. ரெண்டு பேரும் இறங்கி, இவ்வளவு நேரம் உங்களை சுமந்த கழுதையை. நீங்க ரெண்டு பேரும் தூக்கிக் சுமந்துகிட்டு போங்கஎன்று கடிந்து கொள்ள, ‘சரிஎன்று அப்படியே இருவரும் கழுதையின் கால்களை கடடி, தங்கள்  தோள்களில் சுமந்து சென்றனர்.

ஒரு பாலத்திற்கு மேல் நடந்த போது கழுதைக்குதன்னை தண்ணீரில் போட்டு கொல்லத்தான் தூக்கி போகிறார்கள் என்று நினைத்து, பயந்து, தன் கால்களை உதறி எட்டி உதைக்க, நிலை தடுமாறிய  தந்தையும், மகனும் கழுதையுடன் ஆற்றில் விழுந்து மூழ்கினர்.

இது படிக்க நகைச்சுவையாக இருந்தாலும்,இது போன்ற நிகழ்வுகள் நம் வாழ்வில் நடக்கும் நிஜங்கள்.

இப்படித்தான்..

நம்மில் ஒருசிலர் தனக்கு ஏற்பட்ட அவமானத்திலோ, கோபத்திலோ. ஏதோ ஒரு உத்வேகத்திலோ,அல்லது சிலர் உந்துதலிலோ, ‘சரி, தவறுஎனும், முடிவுகளை எடுப்பார்கள்.

இந்த வகையினரும்.தங்கள் முன்னேற்றத்திற்கு. தாங்களே  வேகத்தடைகளாகி விடுகின்றனர்.

நம் தொழில், கல்வி, வாழ்க்கை முறைகள், முடிவுகள் எல்லாம் நமக்கு மட்டும் சொந்தமானது.

அதை விடுத்து,மற்றவர்களின் அபிப்ராய முடிவுகளில், முழுமையாக விழுந்து, ‘அவர் அந்த படிப்பு () தொழிலைத் தேர்ந்தெடுத்துதான் முன்னேறினார்.’

இவர்கள் இதை செய்தார்கள், இப்படி சொன்னார்கள்என்பதற்கு தகுந்தாற் போல் நாமும் அதையேசரியென்றோ, தவறென்றோ, நிர்ணயம் செய்து, அதையே செயல்படுத்த ஆரம்பித்தால்,   நாமும்.‘சரியானநிலையிலிருந்து, தவறான நிலைக்கு மாறும் தவறைத்தான், செய்து, ‘சரியான பாதையிலிருந்துதவறானபாதைக்கு  செல்ல முயற்சிக்கிறோம். என்றாகும்.

முடிவில்நாம் மேற் கொள்ளவிருந்தஇலட்சியப் பாதை அலட்சியமாகி, வாழ்க்கை, பாதையே ,தடுமாறி தடம் மாறிய பயணமாகி விடுகிறது.          

இப்படித்தான், நாம், (வாழ்வியல்) தவறுகளில் சரியாக மாட்டிக் கொள்கிறோம்.

இன்று பலரும், ஒருவர் தொழிலை, ஒருவர் செய்து, தொடர் தொழில் தோல்விகளை சந்திக்க இதுவே.காரணம்.

ஆனால், அதே சமயம்……                       

இவர் இப்படி செய்துதான் சரியில்லாமல்போனதுஎன்று நாமும் அப்படி செய்யாமல் இருப்பதுதான்சரிஎன்று நினைத்து, ஒதுங்குவதும், ஒதுக்குவதும் தவறு. அந்த, தவறினை , நம்மில் பலரும் செய்து, நல்ல  வாய்ப்புகளை இழந்ததுமுண்டு.

இந்த இரு வகையிலும் வெற்றி பெற வேண்டுமானால், மற்றவர்களின் வெற்றி, தோல்விகளைப் பார்த்து கற்றுக் கொண்டதை அடிப்படையாக கொண்டு, அதில் மக்களின் தேவை,வசதி. சூழ்நிலைக்காக, சில மாற்றங்களை,செய்வதன் மூலம் சரிவினை சரியாக்கலாம். இந்த வகை,சரியான தேர்வேசரிவுக்கு தீர்வாகவும் அமையும்..

அதற்குமுதலில்..பிரச்சனை தூண்டுதல்கள் எப்படி.? அதை தீர்வுகளால் தாண்டுவது எப்படி என்பதையும் பாரக்க வேண்டும்      

தொடரும்…[/hide]

இந்த இதழை மேலும்

அறிவியலா? இலக்கியமா?

1. தயக்கம் என்பது தாய்மொழி:

இளமாறன் புன்னகைத்தார். தன் மகன்கள் இருவரையும் பாராட்டினார். வெண்ணிலவன், வலிமைச்செல்வன் இருவருமே அவருக்கு இரு கண்கள் போல. பெயருக்கேற்ப வெண்ணிலவன் அமைதியானவன், செல்வனோ கொஞ்சம் ஆற்றல் காட்டுபவன். வெண்ணிலவனை பள்ளி பேச்சுப்போட்டியில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டு இருக்கும் பொழுதுதான் இந்தக்கதை தொடங்கியிருக்கிறது. இரு பையன்களுமே ஒன்பதாம் வகுப்புப் படிக்கிறார்கள்.

அடுத்த நாள் வகுப்பறைக் காட்சியை உங்களுக்குக் காட்டுகிறோம். நீங்கள் கூட இந்த சூழ்நிலையைக் கடந்து வந்திருப்பீர்கள். தயக்கம். நிலவனுக்கு எதற்கும் தயக்கம். எழுதுவது என்றால் சரி! எவ்வளவு என்றாலும் எழுதலாம். ஆனால் இதுவரை பேசியதே இல்லையேநான் எப்படிப் பேசப் போகிறேன். கடவுளேஅப்பா வேறு சொல்லிஅனுப்பி இருக்கிறாரே! சிக்கலில் மாட்டிக்கொண்டோமே!

யார் யார் பேச்சுப்போட்டியில் கலந்துகொள்ளப் போகிறீர்கள்?”

என்று கேட்டார் அஞ்சலிடீச்சர்

அவருடைய கண்களைப் பார்ப்பதைத் தவிர்த்து விலகினான் நிலவன்.

பக்கத்திலிருந்த, பண்பழகன் கை உயர்ந்தது. அவன் ஒரு அதிர்வேட்டுப் பேச்சாலன். பேசமாட்டான்முழங்குவான்! நாம் சும்மா இருப்பதே நல்லதுஅப்பா கேட்டால்அப்போ பார்த்துக்கலாம்வகுப்பு முழுக்க நம்மைப் பார்க்கையில் நம்மால் எப்படிப் பேச முடியும்! ஒரே கூச்சமாக இருக்குமே! என்று தயங்கினான் வெண்ணிலவன். இளமாறனின் அறிவுரை மனதில் வந்து போனது. லேசாக கைகள் முன்னெற்றி ஆகியவை வியர்த்தன.

2.வாய்ப்பு என்பது வாய்மொழி:-

இன்னும் சில மாணவ மாணவியர் பெயர்களைக் கொடுத்தார்கள். பல்லவி வாயெல்லாம் பல்லோடு என்ன தலைப்பில் பேச வேண்டும் என்று கேட்ட பொழுது நிலவனுக்கு தலை சுத்தியது. அந்த வகுப்பு எப்படித்தான் முடிந்தது…?

எப்பொழுது முடிந்தது என்றே வெண்ணிலவனுக்குத் தெரியவில்லை.

கேரோஸ்” (இஹங்ழ்ன்ள்) என்றார் இளமாறன். அது அடுத்த நாள். ‘என்கிற எழுத்தில் தொடங்கும் சொல்லானாலும் அதன் முதல் உச்சரிப்புகேதான். கேரட் மாதிரி என்றார் இளமாறன். இது ஒரு கிரேக்க கடவுள். நம் ஊரில்குபேரன்என்றால் செல்வன் என்பது போல கிரேக்க புராணத்தில் கேரோஸ் என்றால் வாய்ப்பு. அதுல என்ன கவனிக்க வேண்டும்னா இந்தகேரோஸ்வாய்ப்புக்கடவுளோட முன்தலையில் மட்டும் முடி இருக்கும் பின்னாடி வழுக்கை. வாய்ப்பு வரும்போது பிடிக்காவிட்டால் அது கடந்து போன பிறகு வழுக்கிக்கொண்டு போய்விடும். என்ன? பேச்சுப் போட்டிக்கு பெயர் கொடுத்துவிட்டாயா? என்றார் இளமாறன்!

3.உடும்புப்பிடி

அப்பா வழுக்கைத் தலையைப் பிடிக்க முயற்சி செய்தேன்! என்று கூறினான் வெண்ணிலவன். அடடாநிலவாநான் கூறினேனே! உனக்கு என்ன தயக்கம் தருகிறதோஅதை  துணிவோடு எதிர்கொள்கிற ஆற்றல் எங்கிருந்து வரும் தெரியுமா? கேரோஸிடமிருந்தா? அப்பா என்று கேள்விக்குக் கேள்வியை போட்டான் நிலவன்!

இந்த நக்கலுக்கொன்றும் குறைவில்லை, குறும்புக்காரப் பையாஅந்தத் தயக்கத்தை வெல்லும் ஆர்வம் உன்னுள் இருந்து வரவேண்டும்! அதுவே நிலைக்கும். என்றார்இப்பொழுது என்ன செய்வது அப்பாவாய்ப்பை வழுக்க விட்டுவிட்டேனே! என்று சோர்ந்தான் நிலவன். அட வள்ளுவர் வழி சொல்வார் தம்பி….

ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்

ஒருவந்தம் கைத்துடை யார்

குறள்எண் 593 ல் ஊக்கமுடைமை அதிகாரத்தில் இப்படிச் சொல்லி இருக்கிறார். ஒரு வாய்ப்பை நழுவ விட்டாலும் அதனால் வரும் இனிய ஆக்கத்தை இழந்தாலும் நம்மால் முடியும் என்று ஊக்கம் உள்ளவர்கள் கலங்கி நிற்க மாட்டார்கள் என்றார், மாறன்.

சிறப்புஅப்பாநாளைக்குச் சென்று அஞ்சலி மேடத்தைப் பார்த்து என் பெயரைகேரோஸ்என்ற தலைப்பில் பேசுவேன் என்று தரப்போகிறேன்!

4. இரண்டாவது வழி:

கிளை பிரியும் தோட்டம்என்றார் இளமாறன்.

அப்பா இது என்ன? என்றான்

அர்ஜென்டீன எழுத்தாளர் ஜார்ஜ் லூயிஸ் போர்ஹே அவருடைய ஆங்கில ஸ்பெல்லிங்க் ஆர்ழ்ஞ்ங்ள்ஆனால் அர்ஜென்டீன மொழி உச்சரிப்பு போர்ஹேஇவர் எழுதிய கதைதான்கிளை பிரியும் தோட்டம்அதை எதுக்குப்பா இப்போ சொல்றீங்க? தம்பி, நிலவா, நம்ம கதையில கூட அப்படிக் கிளை பிரியலாம்!

ஆமாம்ப்பாநான் உங்களிடம், பேச்சுப்போட்டிக்கு பெயர் கொடுத்துவிட்டேன் என்று சொல்லி இருந்தால்

அப்படியா…?

ஆமாம் அப்படியே சொல்லியிருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள் ஏனென்றால் பின்னாடிப் போய் பார்த்தால் இந்தக் கதையில் என்ன நடந்தது அந்த வகுப்பு முடியும் போது? என்று இருக்காது!

அதனால் எனது வாக்குமூலத்தை மாற்றிச் சொல்கிறேன்

அப்பா தன்னம்பிக்கையோடு பேச்சுப் போட்டிக்கு பெயர் கொடுத்துவிட்டேன். மிகச் சிறப்பு நிலவா நன்றாகப் பேசு. என்று இளமாறன் மகிழ்ச்சியோடு இரவு உணவு உண்ண எழுந்து சென்றார்.[hide]

5. கதைக்குள் கதை

அடுத்த வாரத்தில் ஒருநாள்இளமாறனின் அலுவலகத்தில் ஒரு சிறு பரபரப்புஅவருடைய நேர்முக உதவியாளர் ஆறுமுகம், வலிப்பு வந்தவர் போல அலுவலகத்தில்  மயக்கம் வந்து விழுந்துவிட்டார். சற்று நீர் தெளித்து ஆசுவாசப்படுத்திய பிறகு அவர் தன் மகளிடம் அழைத்துப் போகச் சொன்னார். ஆறுமுகம் ஒரு மிகச் சிறந்த மனிதர். எனவே இளமாறனும் கிளம்பினார். அவர்கள் போனது வெண்ணிலவன் பள்ளி, ஆறுமுகம் மகள் பெயர் அஞ்சலி. அந்த ஆசிரியை பேச்சு வாக்கில் இன்று நடந்த பேச்சுப் போட்டி முடிவுகளைக் காட்டினார். அதில் வெண்ணிலவன் பெயர் இல்லை. ஆறுமுகம்கேட்டார் சார் ஏன் வெண்ணிலவன் பேசவில்லை? என்று

அவனுக்கு எழுத்தில்தான் ஆர்வம் அதிகம்!”என்று மட்டும் சொன்னார்மகனின் மாற்றுச் சொல்லைக் கட்டிக்கொள்ளவில்லை.

அன்றிரவு வீட்டில் வந்து வெண்ணிலவன்அப்பா உங்களிடம் முன்பு போய் சொல்லிவிட்டேன் என்றான். எனக்கு மனசு பாரமாக இருக்கிறது நான் பெயர் கொடுக்கவில்லை என்பதே உண்மை என்றான். தம்பி தன்னெஞ்சறிவது பொய்யற்க என்பதும் வள்ளுவர் சொன்னதே.

6. மூன்றாம் பிறை

இப்படியாக இரண்டாவது குறள் வரை போர்ஹே போல இரண்டாவது கிளையில் பயணித்தோம். இனி மூன்றாவது கிளை அப்பாநான் பெயர் கொடுத்துவிட்டேன் நீங்களும் பேச்சுப்போட்டி அன்று வரவேண்டும் என்றான்.

என்னப்பா தலைப்பு என்றார்?

கிரேக்க புராணக் கதைகளும் திருக்குறளும் ஒரு ஒப்புநோக்கு! என்று கூறினான் வெண்ணிலவன். அப்படியா தம்பிதலைப்பு எதோ பி.ஹச்.டி தீஸிஸ் மாதிரி இருக்குஎன்றார்இருவரும் எழுந்து இரவு உணவிற்கு சென்றனர்.

பேச்சுப் போட்டியன்று வெண்ணிலவன் வெளுத்துக் கட்டியது இலக்கிய மன்ற விழா மேடையில் அஞ்சலி டீச்சர் வெற்றி பெற்றவர்களின் பெயரை வாசித்த பொழுது தெரியவந்தது.

7. பின் நவீனத்துவம்:

கேரோஸின் நெற்றி முடியைப் பிடித்து விட்டான் போலஎன்று நினைத்துக்கொண்டார் இளமாறன். லூயிஸ் போர்ஹெயின் கதைகளை ஒட்டி பின் நவீனத்துவ கதைகளை எம்.ஜி சுரேஷ் என்னும் எழுத்தாளர் அற்புதமாகப் படைத்து வருகிறார். ஒரு சம்பவத்தில் ஒரு சாத்தியக்கூறுகள் இருந்தால் அவ்விரண்டிலும் பயணித்துப் பார்ப்பது புதுமை. ஒன்றுதான் பெரும்பாலும் கதைகளில் சொல்லப்படும். உதாரணமாக சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகியோடு சந்தோஷமாக வாழ்ந்திருந்தால் இறந்து போயிருக்க மாட்டார். வயதாகும் வரை பூம்புகாரில் நன்றாக இருந்து இருப்பார்கள். மாதவியை சந்தித்திராவிடில் மணிமேகலை வருவார்களா? மதுரைதான் எரிந்திருக்குமா? இப்படி வேறுவேறு கிளைகளில் பயணிப்பது பின் நவீனத்துவ போர்ஹே வடிவமைப்பு ஆகும்.

8. அறிவியல் வந்துவிட்டது

குவாண்டம் (ணன்ஹய்ற்ஹம்) கொள்கை அணுக்களை விட சிறிய துகள்களின் வரையறையற்ற இயக்கத்தைப் பேசுகிறது. “நேரத்தின் ஒரு சுருக்கமான வரலாறுஎன்று ஒரு புத்தகத்தை ஸ்டீவன் ஹாக்கிங் எழுதியுள்ளார். அதில் குவாண்டம் என்றால் என்னவென்று சொல்கிறார். ஆற்றல் அலைவடிவில் பரவுகிறதென்றால், அப்படிபட்ட ஒரு அலையினுடைய மிகச்சிறிய பகுக்க முடியாத மிகச்சிறிய பகுதி ஒரு குவாண்டம் ஆகும் என்கிறார். அது வரையறைக்குட்படாது என்று சொன்ன பொழுது ஐன்ஸ்டைன் ஒப்புக்கொள்ளவில்லையாம். உலகில் குவாண்டம் கொள்கை எல்லாமே ஒரு எதிர்பார்க்க முடியாத வரையறையில்லாத நிகழ்வாக உள்ளது என்று கூற முடியாது என்பதை. “கடவுள் பகடையாட மாட்டார்என்று கூறினார். ஆனாலும் குவாண்டம் கொள்கை மெய்ப்பிக்கப்பட்டுக்கொண்டே வருகிறது. இப்படி நீளமாக அறிவியல் இலக்கியம் பேசினார் இளமாறன்.

அப்பா நீங்க பேசியது அறிவியலா? இலக்கியமா? என்றான் வெண்ணிலவன். கால்பந்து போட்டி ஒன்று தொடங்க உள்ளது! எல்லோரும் வாங்க என்றான் வலிமைச்செல்வன் அடடாபோகவேண்டும் என அனைவரும் கிளம்ப கேள்வியோடு கதையை முடிக்கலாமா?[/hide]

இந்த இதழை மேலும்

சின்னஞ்சிறு சிந்தனைகள்

ஏன் இப்படி நான் நடந்து கொள்கிறேன்? என்று  கேட்பதற்கு முன், அந்தச் செயலுக்கு விதையான எண்ணம்  என்னவாக இருக்கும் என்று யோசியுங்கள். காரணங்கள் புரிய வரும்.

ஒருவரின் முடிவுக்கான காரணத்தை அவனைத் தவிர எவராலும் சரியாக சொல்ல முடியாது. ஒருவரின் முடிவை, நேர்மறையாகவும், எதிர்மறையாகவும் விமர்சனம் செய்ய முடியும் . அதைப் பார்க்கும் கடைசிப் போக்கை பொறுத்தது அது.

உங்களின் தேர்வே உங்களின் தேடுதலை உறுதிப்படுத்தும்.

மிகச்சிறிய தூண்டுதலில், மிகப்பெரிய மாற்றம் நிகழக்கூடும். ஏன் இப்படி? நம் மூளை அப்படி உருவாகியுள்ளது.

மனித மனம் அச்சத்தை சுலபமாக உள்வாங்கி வரும் அதனால் தான் உலகம் அதை மையப்படுத்தியே ஓடிக்கொண்டே இருக்கின்றது.

அமைதி, மகிழ்ச்சி, நம்பிக்கை, வளர நிறைய முயற்சியும், பயிற்சியும் தேவைப்படுகின்றன.

நம் வாழ்க்கையில் நடப்பவை நம்மை துன்புறுத்துவதில்லை. அதைப் பற்றிய நாம்எண்ணும் எண்ணங்கள் நம்மை துன்புறுத்துகின்றன.

கணீரென்று பேசுங்கள். நம் மனம் எந்த மனநிலையை இருக்கிறதோ. அதற்கேற்ற நிகழ்வுகள் தான் நம்மைத் தொடரும்.

முன்கூட்டியே தீர்மானிக்கும் எண்ணங்கள், நாம் நம்பும் விளைவுகளைத் தந்து அந்த எண்ணங்களை வலுப்படுத்தும். காலப் போக்கில் அந்த எண்ணங்கள் அனுபவத்தால் வந்தால் அபிப்பிராயங்களால் மனம் பதிவு செய்து கொள்ளும். இது தான் மனம் செய்யும் தந்திரம். நம் வாழ்க்கையின் சகல விஷயங்களிலும் இது தான் நடக்கிறது.

உங்கள் வாழ்க்கையின் பெரும் பிரச்சனை எது என்று யோசியுங்கள் அது குறித்த உங்கள் எண்ணங்களை எழுதுங்கள். அவற்றில் ஏதாவது தெரிகிறதா என்று பாருங்கள். அப்படியானால் உங்கள் வாழ்க்கைத் திருப்பிப் போடும் வகையில் நீங்கள் கை வைத்து விட்டீர்கள் என்று அர்த்தம்.[hide]

எது நடக்கக்கூடாது என்று நினைப்போமோ, அதை திரும்ப திரும்ப நினைப்பதனால் அது தான் நடக்கும். ஆகவே, எது நடக்னும் என்று நினைப்போமோ அதையே திரும்ப திரும்ப நினைப்போம்.

இயல்பான முயற்சியை, மகிழ்ச்சியான முறையில் எடுக்க நேர்மறை எண்ணத்துடன் இருங்கள்.

முதலில் உங்களிடம் உள்ள எண்ணங்களை முழுவதும் ஆராயுங்கள். எண்ணங்களில் மாற்றம் கொண்டு வருவதன் மூலம் எதையும் சாதிக்கலாம்.

எதையும் தெரிந்து வைத்திருப்பதில் பயனில்லை, அதை முயற்சித்து நடைமுறைப் படுத்துப்படுவது மிக முக்கியம்.

வாழ்க்கை மாறக்கூடியது, மாற்றக் கூடியது என்பதை மறவாதே எண்ணத்தை மாற்றினால் எதையும் மாற்றலாம்.

மிகுந்த நம்பிக்கையோடு எதை நீ செய்தாலும், சொன்னாலும் அது பளிக்கும்.

நாம் மாறினால், நம்மைச் சுற்றியுள்ள சூழலும் மாறும்.

நம் எண்ணம் தான் நம் பேச்சை தீர்மானிக்கிறது, பேச்சும் செயலையும் நம் வாழ்வை தீர்மானிக்கிறது.

நீங்க் ஒரு நாளில் அதிக நேரம் சிந்திப்பவை எவை என்று கணக்கிடுங்கள். அவற்றில் எவை எல்லாம் நேர்மறை. எதிர்மறை என்று கணக்கிடுங்கள்.

உங்கள் வாழ்க்கையில், எந்தெந்த விஷயத்துக்காக என்னென்ன எண்ணங்களைத் தற்போது வைத்துள்ளீர்கள் பட்டியில் இடுங்கள்.

அச்சம் பல எதிர்மறை எண்ணங்களை வரவழைக்கின்றது. இது மனிதன் இயல்பு, இதற்கு குற்ற உணர்ச்சி கொள்ளத் தேவையில்லை. நாம் பேசும் மொழியைப் படங்களாய்த்தான் நம் மூளை உள்வாங்கிக் கொள்ளும்.

நீங்கள் மனகாட்சி படுத்துவதைப் பற்றி எந்த கவலையும் படாது உங்கள் மூளை அது எதுவாக இருக்கிறதோ, அதைப் போலவே அதை நடத்திக் காட்டும். அவ்வளவு தான் அதன் வேளை.

நம் சூழலை தேர்ந்தெடுப்பதன் மூலம் எதிர்மறை எண்ணங்களிலிருந்து தள்ளி இருக்க முடியும். அதற்கு மித மிஞ்சிய சுயகட்டுப்பாடு தேவை. படிப்படியாகத்தான் இதைப் பழக வேண்டும்.

இது நமக்கு ஆகாது தெரியாம வந்து மாட்டிக் கொண்டோம். இதை இருக்கும் வரை சிறப்பாக பணியாற்ற முயற்சிப்போம்.[/hide]

இந்த இதழை மேலும்

தன்னம்பிக்கை மேடை

நேயர் கேள்வி…?

போர்வெல்களில் குழந்தைகள் விழுந்து இறப்பதைத் தடுப்பது எப்படி? இதில் பெற்றோரின் பங்கு தான் என்ன?

நாகேந்திரன்,

ஆண்டிப்பட்டி.

மனிதனின் தேவைகளில் உணவு, குடிநீர், இவைகளுக்கு அடுத்த பெரிய தேவை, பாதுகாப்பு என்றார் உளவியல் அறிஞர், ஆபிரகாம் மேஸ்லோ. உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட இவரது தேவை படிக்கட்டுகள் (Hierarchy of Needs) எல்லா இடங்களிலும் மேற்கோள் காட்டப்படுகிறது.

பெரியவர்கள் அவர்களை பாதுகாத்துக் கொள்வார்கள். ஆனால் குழந்தைகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் ஆற்றல் பெற்றவர்கள் அல்லர். எனவே தான் பெற்றோர்கள் குழந்தைகளின் பாதுகாவலாக இருக்க வேண்டியது அவசியமாகிறது. இந்தப் பொறுப்பை பெற்றோரும் உறவினர்களும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அப்படியிருந்தும், கவனக்குறைவு பெரிய ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்பது நடுக்காட்டுப்பட்டி நிகழ்வு நமக்கு உணர்த்தியது. நாடே சோகத்தில் ஆழ்ந்த நிலையும், தீபாவளி கொண்டாட முடியாத நிலையும் இதனால் ஏற்பட்டது.

பெற்றோரின் பொதுவான கவனக்குறைவு நமக்குத் தெரியாதது அல்ல. கிராம திருவிழாக்களில் குழந்தைகளைத் தவறவிட்டு விடுவார்கள். காவல் கட்டுப்பாட்டு அறையில் காணாமல் போன பல குழந்தைகளை கண்டுபிடித்து திருப்பி ஒப்படைக்கப்பட்டதைப் பார்த்திருக்கிறேன். ஓர் ஊரில் ஒரு குழந்தையை மகளிர் காவலர் தாயாரிடம் ஒப்படைத்த போது அந்தக் குழந்தையை, ‘எங்கே தொலைந்து போனாய்?’ எனக் கூறி சரமாரியாகத் தாக்கினார் அந்தக் குழந்தையின் தாய். ஆனால் எல்லா பெற்றோரும் அப்படியல்ல, கட்டியணைத்து, கண்ணீர்விட்டு அழும் பெற்றோர்தான் அதிகம். ஏன் சில பெற்றோர்கள் இப்படி அலட்சியமாக இருக்கிறார்கள்?

பெற்றோரை குறை சொல்ல முடியாது, அவர்களின் வாழ்க்கை முறை அப்படி! இது ஒரு கலாச்சார பிரச்சனை எனலாம். இப்படிதான் வளர்ந்தோம், இதுதான் எனக்குத் தெரியும், எனவே இப்படிதான் நடந்து கொள்வோம் என்ற வகையில் பெற்றோரின் நடவடிக்கை இருக்கிறது. படித்தவர்களும் பெரியதாக மாறவில்லை. தலைக்கவசம் அணியச் சொல்கிறோம், எத்தனை பேர் அணிகிறார்கள்? இருக்கை பெல்ட் அணிய வற்புறுத்துகிறோம், எத்தனை பேர் அதைச் செய்கிறார்கள்?

கட்டுபாடில்லாத சுதந்திர வாழ்க்கை வாழ பழக்கமாகிவிட்டோம். கடமைகளை மறந்து உரிமைகளுக்காக மட்டும் குரல் கொடுக்கிறோம். நமது பழக்கங்களும் அப்படியே இருக்கின்றன. பழக்கங்கள் சிலந்தி வலைகள், ஆனால் காலப்போக்கில் கம்பி வலை என்பது ஸ்பெயின் நாட்டு பழமொழி. கம்பி வலைகளான அலட்சிய பழக்கங்களை அறுத்தெறிந்து நல்ல பாதுகாப்பு பழக்கங்களை நாம் பழக வேண்டும். அதில் குழந்தைகளை பாதுகாப்பது முக்கியமான பழக்கம் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.[hide]

ஆழ்துளை கிணறு மீட்பு நடவடிக்கையை நேரலையில் பெற்றோர் பார்த்த வண்ணம் இருந்தபோதே, நீர் தொட்டியில் விழுந்து ஒரு குழந்தை இறந்திருக்கிறது. இதுபோலத்தான் மாடி வீட்டிலிருந்து குழந்தை விழுவதும், இருசக்கர வாகனத்திலிருந்து குழந்தைகள் தவறி விழுவதும்

முன் காலங்களில் வீடுகளில், பெரிய அளவில் சமையல் நடக்கும். கொதிக்கும் பானையில் விழுந்து உயிர் போன குழந்தைகளும் உண்டு, பிழைத்துக் கொண்ட குழந்தைகளின் தோல் கருகி, உடல் உருக்குலைந்ததைப் பார்க்க முடியும். அது அந்த நபரின் தலைவிதி என்றே நம்பினார்கள். இன்று சிறிய குடும்பங்கள், பாதுகாப்பான சமையல் எரிவாயு அடுப்புகள், அதனால் அது போன்ற பரிதாப விபத்துக்கள் குறைந்தன. ஆனால் பாதாள மரண கிணறுகள் இன்று தோன்றிவிட்டன.

நிலத்தடி நீர் குறைந்ததால் கண்மூடித்தனமாக ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்பட்டுவிட்டன. இதில் பல கிணறுகள் மூடியும், சில மூடாமலும், சில சரியாக மூடாமலும் இருந்தன. தமிழ்நாட்டில் கடந்த 19 ஆண்டுகளில் நடந்த 16 விபத்துகளில் இரண்டு குழந்தைகள் மட்டுமே காப்பாற்ற முடிந்திருக்கிறது. இந்திய அளவில் இதுவரை 59 நிகழ்வுகள் நடந்துள்ளன. இனியும் இது போன்ற சோக நிகழ்வுகள் நடைபெறாமல் தடுக்க மிக நேர்த்தியாக எல்லா ஆழ்துளை கிணறுகளையும் மூடிய தமிழக அரசின் முயற்சியைப் பாராட்ட வேண்டும். அதை ஒரு புனிதப்போராகவே செய்து முடித்தனர் அரசு அதிகாரிகள்.

குழந்தை ஆழ்துளை கிணற்றில் விழுந்தவுடன் அங்கு முதலில் வருபவர் தீயணைப்புத் துறையினர்தான். சமீபத்தில் சங்கரன்கோவிலில் நடந்த ஒரு சம்பவத்தில் மணிகண்டன் என்பவர் வடிவமைத்த கருவியின் உதவியுடன் துளையில் விழுந்த சிறுவனை காப்பாற்றி விட்டனர். அந்தமணிகண்டன்கருவிகளும், தீயணைப்பு துறையில் வாங்கப்பட்டது. ஆனால் நடுக்காட்டுப்பட்டி ஆழ்துளை கிணற்றில் அக்கருவியை பயன்படுத்த முடியவில்லை. ஏனென்றால் அந்த ஆழ்துளை வெறும் ஆறு அங்குல விட்டம் மட்டுமே கொண்டது. ஆறு அங்குல விட்டம் கொண்ட ஒரு துளையில் குழந்தை விழுமா என்று நாம் ஆச்சிரியப்படக் கூடும். ஆனால் விழுந்திருக்கிறது. அப்படியும் ஒரு குறுகலான கருவியை மணிகண்டன் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் சில மணி நேரத்தில் தயாரித்திருக்கிறார்.

இன்று தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் இந்தப் பணியில் கைத்தேர்ந்தவர்கள்தான் என்றாலும் சிறு குழந்தை வெகு ஆழத்தில் இறுக்கமாக மாட்டிக்கொண்டதால் உயிருடன் மீட்க முடியாமல் போனது. இணை கிணற்றின் துளை வழியாக உள்ளே சென்று சிறுவனை மீட்பது ஆபத்தானது. இருந்தும் 16 தீயணைப்பு வீரர்கள் அந்தப் பணியை செய்ய முன்வந்தார்கள். உயிரை விட கடமை பெரியது என்பது அவர்களது கொள்கை. ரங் ள்ங்ழ்ஸ்ங் ற்ர் ள்ஹஸ்ங், ‘காக்கும் பணி எங்கள் பணிஎன்பது தீயணைப்பு மற்றும் மீட்பு துறையின் நோக்கம்; அதை சரியாகவே நிரூபித்தனர் அந்த மாவீரர்கள்.

இந்தியாவில் ஒரு ஆண்டுக்கு வாகன விபத்துக்களில் ஒரு லட்சம் பேர் உயிரிழக்கிறார்கள். உலகின் 2 சதவீதம் வாகனங்கள் மட்டும் இருக்கும் இந்தியாவில் உலகின் 11 சதவீதம் உயிரிழப்புகள் நடக்கிறது. அந்த அளவுக்கு கவனக்குறைவு மற்றும் அலட்சியம் நம்மிடம் உண்டு. தங்களது உயிரை பாதுகாக்கத் தவறியவர்களாக இருக்கிறோம். இந்த சூழ்நிலையில் குழந்தைகள் பாதுகாப்பில் எப்படி கவனம் செலுத்தப் போகிறோம் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது

குழந்தைகளை விட பெரிய செல்வம் வேறில்லை. அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு விபத்துகள் எப்படியும் நேரலாம் என்பதை பெற்றோர்கள் சரியாகப் புரிந்து கொண்டு, எப்படியெல்லாம் அதை தடுக்க முடியுமோ அப்படியெல்லாம் தடுக்கும் நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். அதுவும் குழந்தைகள் இருக்கும் வீடுகளில் பெற்றோரின் கவனம் அதிகம் தேவை.

குறிப்பு : 2001 ஆம் ஆண்டு, சென்னை மண்ணடியில் 9 அங்குல ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த தமிழ்மணி என்ற மூன்று வயது சிறுவனை மீட்கும் பணி, அப்போது இணை ஆணையராக இருந்த கட்டுரையாசிரியர் முனைவர். செ. சைலேந்திரபாபு தலைமையில் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.[/hide]

இந்த இதழை மேலும்

பூமி, இன்னொரு வெள்ளிக் கோள் ஆகிவிடுமா?

பூட்டிவைக்கப்பட்ட காருக்குள் சிக்கிக்கொண்டதால் 2018ம் வருடத்தில் மட்டும் ஆறு குழந்தைகள் அமெரிக்காவில் உயிரிழந்ததாக செய்திகள் வெளிவந்தன. பலரும் இந்தச் செய்தியை ஆச்சரியத்துடன் நம்பமுடியாமல் வாசித்து இருப்பார்கள். அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் சராசரியாக ஒரு வருடத்தில் 37 குழந்தைகள் உயிரிழப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. உடலில் இருந்து வியர்வையின் மூலம் வெளியேற்றக்கூடிய வெப்பத்தைக் காட்டிலும், அதிகமாக உடல் வெப்பம் அடைகிறது. வெப்பச் சமச்சீர்நிலை (Thermo regulation) தாறுமாறாவதே இதற்குக் காரணம். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வெப்பம் பூட்டி வைக்கப்பட்டு உள்ள ஒரு வாகனத்திற்குள் உருவாகிறது.

70 டிகிரி வெப்பநிலையில் நாம் ஒரு முட்டையைப் பொரிக்கலாம். ஒரு மணிநேரத்திற்கு காரை வெய்யிலில் நிற்கவைத்தால் இதைவிட அதிகவெப்பம் காருக்குள் உண்டாகும். காரின் டேஷ் போர்டைத் தொட்டால் சுடும். வெப்பம் அதிகமாக இருப்பதால் சீட்டில் உட்காரவே முடியாமல் போகும். ஸ்டீயரிங்கைத் தொட்டால் கொதிக்கும். குழந்தைகளையும், செல்லப்பிராணிகளையும் அதிகவெப்பம் வேகமாகப் பாதிக்கும். கதவை மூடிவிட்டு ஒரு மணிநேரத்திற்கு வாகனத்தை நிழலில் நிறுத்திவைத்தாலும் கூட இதே நிலைதான்.

உடலின் வெப்பநிலை 40 டிகிரி செல்சியர்சை விட அதிகமானால் உடலின் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படும். காருக்குள் வெப்பம் எவ்வாறு இந்த அளவிற்கு அதிகரிக்கிறது என்று நமக்கு ஆச்சரியமாக இருக்கலாம். இதுதான் பசுமை இல்ல வாயு விளைவு (Green House Effect) எனப்படுகிறது. விரிவடைதல் மூலம் வெப்பநிலை அதிகமாகும். வெய்யிலில் ஒரு வாகனம் மூடப்பட்டநிலையில் நிறுத்திவைக்கப்படும்போது விரிவடைதல் மூலம் சூரியவெப்பம் வாகனத்திற்குள் செல்லும். அதனால் வாகனத்தின் இருக்கைகள் உட்பட்ட எல்லா பாகங்களும் சூடடைகிறது. இவ்வாறு உள்ளே நுழைந்த வெப்பம் சிறிதுசிறிதாக விரிவடையும்.

வெளிப்புறத்தில் இருந்து வெப்பம் தொடர்ச்சியாக உள்ளே வந்துகொண்டிருக்கும். இவ்வாறு காருக்குள் சேகரிக்கப்படும் வெப்ப ஆற்றல் அளவில்லாமல் அதிகரிக்கும். காருக்குள் நுழையும் வெப்பம் விரிவடைவதால் உள்ளே உள்ள எல்லாப் பொருள்களிலும் வெப்பம் பரவுகிறது. ஆனால், காரின் உள்ளே உள்ள பொருள்கள் வெளியிடும் வெப்பம் வெளியே போவது இல்லை. உள்ளேயே அகப்பட்டுக் கொள்கிறது.    

பூமியில் விழும் சூரியஒளியை முக்கியமாக மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். கண்களுக்குப் புலப்படும் சூரிய ஒளியில்  0.4 முதல் 0.6 மைக்ரான் வரை அலைநீளம் உடைய அலைகள் உள்ளன. சூரிய ஒளியில் பெரும்பகுதியும் கண்களுக்குப் புலப்படும் கதிர்களே ஆகும். அடுத்த வகை 0.4 மைக்ரானை விடக் குறைவான அலைநீளம் உடைய புறெளஉதாக்கதிர்கள். கொண்டதாகும்.

இந்தக் கதிர்கள்தான் நம் தோலில் வைட்டமின்டியை உற்பத்தி செய்ய உதவுகிறது. மிகக் குறைவான அளவில் மட்டுமே இவை பூமிக்கு வருகின்றன. மூன்றாவதுவகை 0.8 மைக்ரானை விட அதிக அலைநீளம் உடைய அகச்சிகப்புக்கதிர்கள் ஆகும். .8 இந்தக் கதிர்கள் மூடப்பட்ட வாகனங்களுக்குள் வெப்பநிலை அதிகரிப்பதற்குக் காரணம்.

கார் போன்ற வாகனங்களுக்குள் நுழையும் சூரிய ஒளி காருக்குள் இருக்கும் டேஷ்போர்டு, ஸ்டீயரிங், இருக்கைகள் போன்றவற்றால் ஏற்கப்பட்டு காரின் உள் பகுதி வெப்பம் அடைகிறது. டேஷ்போர்டு 157 டிகிரி பாரன்ஹீட் அல்லது 70 செல்சியர்ஸ் வரை வெப்பம் அடைகிறது. நம் உடல் வெப்பநிலை 97 முதல் 99 டிகிரி வரை பாரன்ஹீட் அல்லது 36.5 முதல் 37.5 டிகிரி செல்சியர்ஸ் வரை ஆகும். ஸ்டீயரிங் 53 டிகிரி செல்சியர்ஸ் வரையும், இருக்கை 51 டிகிரிசெல்சியர்ஸ் வரையும் சூடாகிறது. காருக்குள் புகும் அகச்சிகப்புக்கதிர்கள் உள்ளே இருக்கும் நீராவியையும், கார்பன் டை ஆக்சைடையும் வெளியே செல்லவிடாமல் தடுத்து நிறுத்துவதால் உள்ளே உருவாகும் வெப்பம் வெளியே செல்வது இல்லை. வெய்யிலில் ஒரு மணிநேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் காருக்குள் சராசரியாக வெப்பம் 47 டிகிரி செல்சியர்ஸ் வரை உயர்கிறது. நிழலில் இருந்தால்கூட இதேபோன்ற பசுமை இல்ல வாயு விளைவுதான் ஏற்படுகிறது. இதுதான் பூமியிலும், காற்று மண்டலத்திலும் நடக்கிறது. பூமிக்கு வரும் சூரியவெப்பம் பூமியில் உள்ள எல்லா உயிரினங்களாலும், மற்ற பொருள்களாலும் எடுத்துக் கொள்ளப்பட்டு பின் வெளியேற்றப்படுகிறது. ஆனால், இவ்வாறு வெளியேற்றப்படும் வெப்பம் வெளியே செல்லமுடியாமல் பூமியிலேயே முடக்கப்படுவதால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கிறது. உண்மையில் சூரியனின் வெப்பத்தாஅல் பூமி சூடு அடைவது இல்லை. உறிஞ்சப்பட்டு பூமியில் உள்ள பொருள்களால் வெளியேற்றப்படும் வெப்பமே பூமி வெப்பம் அடையக் காரணம்.[hide]

ஒரு விமானத்தில் 30,000 அடி முதல் 40,000 அடி உயரத்தில் நாம் பறப்பதாக வைத்துக்கொள்ளலாம். அப்போது பூமியின் மேற்பரப்புடன் ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் சூரியனுக்கு 30,000 அடி முதல் 40,000 அடி வரை அருகில் இருப்பதாகப் பொருள். அந்தநிலையில் விமானத்திற்கு வெளியே நிலவும் வெப்பநிலை மைனஸ் 20 முதல் 30 டிகிரி செல்சியர்ஸôகவே இருக்கும். அந்தக் குளிர்ச்சியான வெப்பநிலையில் நாம் உறைந்து மரணம் அடைந்துவிடுவோம். பூமியில் இருந்து உயரமாகச் செல்லச் செல்ல வெப்பநிலை குறையும். அதனால்தான் இமயமலை பனி மூடிய பிரதேசமாக இருக்கிறது. சூரியனிடம் இருந்து வரும் ஆற்றலின் 26% பூமியின் வாயு மண்டலத்திலும், மேகங்களிலும் மோதி வெற்றிடமாக உள்ள அண்டவெளியை நோக்கிப் பிரதிபலிக்கப்படுகிறது. பெரும்பான்மையான சூரிய ஆற்றலையும் பூமியின் மேற்பரப்புதான் உறிஞ்சிக்கொள்கிறது. வெறும் 19% வெப்பம் மட்டுமே பூமியின் வாயு மண்டலத்தாலும், மேகங்களாலும் கவர்ந்து எடுத்துக் கொள்ளப்படுகிறது. பூமியின் மேற்பரப்பு சூரியனின் மேற்பரப்பை விடக் குளிர்ச்சியானது. அதில் படிகின்ற கதிர்களில் அலைநீளம் குறைவாக உள்ளவை அதிகமாகக் கவர்ந்து எடுத்துக் கொள்ளப்படுகிறது. அலைநீளம் அதிகம் உள்ள அகச்சிகப்புக்கதிர்கள் மட்டுமே மீண்டும் திருப்பி அனுப்பப்படுகிறது. அதில் பெரும்பகுதியும் நீராவியாலும், வாயு மண்டலத்தில் உள்ள வாயுக்களாலும் உறிஞ்சப்படுகிறது. இதனால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கிறது. காற்று மண்டலத்தில் உள்ள கார்பன் டை ஆக்சைடுதான் அதிகமான வெப்பத்தை உறிஞ்சுகிறது. மீதேன், நைட்ரஸ் ஆக்சைடுகள், குளோரோபுளூரோகார்பன்கள், ஹைடிரோபுளூரோகார்பன்கள், சிறிய அளவிலான நீராவிபோன்றவையும் வெப்பத்தை உறிஞ்சுகின்றன. இந்த வாயுக்களைதான் பசுமை இல்ல வாயுக்கள் என்ரு அழைக்கிறோம்.

உயரம் குறைவாக உள்ள பாத்ரூமில் குளிக்கும்போது அதிக வெப்பத்தை நாம் உணர்வதற்கும் இதுவே காரணம். இந்த வாயுக்களால் மட்டுமே பூமியின் மேற்பரப்பின் மூலம் வெளியேற்றப்படும் வெப்பத்தை உறிஞ்சிக் கொள்ளமுடியும். இவற்றின் இந்தச் சிறப்புப் பண்பே இந்தப் பிரச்சனைக்குக் காரணம். அதனால் இந்த வாயுக்களின் அளவு காற்று மண்டலத்தில் அதிகரித்தால் பூமியின் வெப்பநிலையும் அதிகரிக்கும். இதுவேபுவி வெப்பமயமாதல்எனப்படுகிறது. இந்த வாயுக்கள் காற்று மண்டலத்தில் இல்லாமல் போய்விட்டால் இயற்கையின் சமநிலை பாதிக்கப்படும். செடிகள் ஒளிச்சேர்க்கை செய்வதற்கு கார்பன் டை ஆக்சைடுஅவசியம். செடிகள் உணவை உற்பத்தி செய்யாமல் போனால்மனிதர்களாகிய நாம் உட்பட உயிரினங்கள் எல்லாம் இங்கே எவ்வாறு வாழமுடியும்? இந்த வாயுக்கள் இல்லை என்றால் காற்று மண்டலத்தில் வெப்பமே இருக்காது. காற்று மண்டலத்தின் வெப்பநிலை மைனஸ் 18 டிகிரி வரை குறைந்துபோய்விடும்.  பசுமை இல்ல வாயு விளைவு (Green House Effect) இல்லை என்றால் எந்த ஒரு உயிரினத்தாலும் வாழமுடியாது.

நமக்கு இந்த வாயுக்கள் அவசியம். அவற்றின் அளவு அதிகமாவதுதான் பிரச்சனை. ஒரு மூடப்பட்டக் கட்டிடத்திற்குள் வெளியில் இருப்பதை விட ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையை நிலைநிறுத்த நம்மால் முடியும். செடிகள் நன்றாக வளரக்கூடிய இத்தகையஅமைப்புகளைதான் பசுமை இல்லம் என்ரு அழைக்கப்படுகிறது. இதில் இருந்துதான் பசுமை இல்ல வாயு விளைவு (Green House Effect) என்ற சொல்வழக்கு ஏற்பட்டது.

வெள்ளிக் கோளில் உள்ள வெப்பநிலை எவ்வளவு என்று உங்களுக்குத் தெரியுமா? 480 டிகிரி செல்சியர்ஸ். அதன் வாயு மண்டலத்தில் அதிகமாக கார்பன் டை ஆக்சைடு உள்ளது. வெளிவிடப்படுகிற வெப்பம் வாயு மண்டலத்தினால் பிடித்து வைத்துக் கொள்ளப்படுகிறது. நாம் வாயு மண்டலத்தில் பெருமளவில் கார்பன் டை ஆக்சைடை தொடர்ச்சியாக வெளியேற்றிக்கொண்டே இருந்தால் வருங்காலத்தில் பூமியும் ஒரு வெள்ளிக்கோள் போல ஆகிவிடும். நான்கு லட்சம் வருடங்களில் பூமியின் காற்றுமண்டலத்திற்குத் தொடர்ச்சியாக வந்துசேர்ந்த கார்பன் டை ஆக்சைடை விட இரு மடங்கு கார்பன் டை ஆக்சைடு கடந்த 200 வருடங்களில் மட்டும் பூமியின் காற்று மண்டலத்தில் நம்மால் வெளிவிடப்பட்டு உள்ளது. 1880ம் ஆண்டிற்கு முன்புவரை காற்று மண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் அளவு 280ppm(parts per million) ஆக இருந்தது. காற்று மண்டலத்தின் சராசரி வெப்பநிலை 13.5 டிகிரி செல்சியஸ்ஸாக இருந்தது. இப்போது அது 415 ppm ஆகவும், வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸ்ஸாகவும்  உள்ளது. டல்ம் என்றால் பத்து லட்சத்தில் ஒரு பாகம்.இந்த நூற்றாண்டு முடிவடைவதற்குள் கார்பன் டை ஆக்சைடின் அளவு 540ppm ஆகவும், வாயு மண்டலத்தின் வெப்பநிலை 19.8 டிகிரி செல்சியஸ்ஸாகவும்  உயரும் என்று அஞ்சப்படுகிறது. பூமியின் வெப்பநிலை 4 டிகிரி செல்சியர்ஸ் அதிகமானால் 40% உயிரினங்கள் இன அழிவை சந்திக்கநேரிடும். 2 டிகிரி செல்சியர்ஸ் அதிகமானாலே பேரிடர்கள் ஏற்படும். காலநிலை மாற்றம் ஏற்படுவதுதான் இதன் முதல்அறிகுறி.

காலம் தப்பிப் பெய்யும் மழை, தாமதமாக வரும் மழைக்காலம், விரைவிலேயே முடிந்துபோகும் மழைக்காலம், பொழியும் மழையின் அளவும், மழைப்பொழிவுகளுக்கு இடையில் உள்ள இடைவெளியில் குறைவு, பொழிகிற மழையின் அளவு அதிகரிப்பது, முன்பு இருந்தது போல சிறிய சிறிய தூறல் மழை இல்லாமல் போய்விடுவது, சில நாட்களிலேயே பேய்மழைப் பொழிவது, மற்ற நாட்களில் ஒரு துளி மழை கூடப் பெய்யாமல் போவது, சூறாவளிகள், புயற்காற்றுகள் அடிக்கடி தோன்ருவதுபோன்றவை காலநிலை மாற்றத்திற்கு உரிய ஒரு சில ஆரம்ப அறிகுறிகள். இந்தியாவின் கிழக்குக் கடற்கரை பகுதியில்தான் முன்பு புயற்காற்றுகள் ஏற்பட்டன. ஆனால், இப்போது மேற்குக் கடற்கரை பகுதியிலும் இவ்வாரு நிகழ்கிறது. நாட்டின் சில பாகங்களில் பிப்ரவரி மார்ச் மாதங்களில்கூட ஆலங்கட்டிமழை பெய்கிறது. இவை எல்லாம் மாறும் காலநிலையின் அறிகுறிகள். வெப்பத்தை உறிஞ்சி பனிமலைகள் உருகும். இமாலயத்தில் பனிப்பாறைகள் இப்போதே உருக ஆரம்பித்துவிட்டன. கங்கை, பிரம்மபுத்திரா, சிந்து நதிகள் வற்றி வறண்டுபோகும். வெப்பத்தை உட்கவர்வதால் கடலின் 3000 மீ ஆழம் வரை கடல் சூடாகும்.  இதனால் கடல்நீர் விரிவடையும். வருடத்திற்கு 3.1 மி.மீ வரை கடல்நீர் மட்டம் உயரும். இந்த நூற்றாண்டின் இருதியில், கடல்நீர் மட்டம் 88 செ.மீ முதல் 150 செ.மீ வரை உயர்ந்துவிடும். சிரிய தீவு நாடுகள் கடல்நீரில் மூழ்கிப்போகும். கடல்நீர் நதிகளின் வழியாக உள்ளே புகும். கடல்சூழல் மண்டலங்களும், பவழப்பாறைகளும் அழிந்துபோகும். உணவு உற்பத்திக் குறையும். உணவுப் பாதுகாப்பு என்பதே இல்லாமல் போய்விடும்.

கடலின் பசுமை அழிந்துபோவதால் மீன்வளம் குறையும். இத்தகைய பாதிப்புகள் அதிகமாக ஏற்படக்கூடிய நாடுகளில் நம் நாடும் ஒன்று. 7000 கி.மீ நீளம் உடைய கடற்கரை உள்ள நம் நாட்டில் இதனால் 25% மக்கள் நேரடியாகப் பாதிப்புக்கு உள்ளாவார்கள். மும்பை, சென்னை, கல்கத்தா, விசாகப்பட்டிணம், கொச்சி போன்ற கடற்கரை ஓர நகரங்களும். இதனால் பாதிக்கப்படும். ஆறு லட்சம் எஹ்க்டேர் நிலம் நீருக்குள் மூழ்கிவிடும். 5 கோடி மக்களின் வசிப்பிடங்கள் அழிந்துபோகும். இயற்கைப் பேரிடர்கள் அடிக்கடி நிகழ்வதால் பெரும் பொருளாதார நஷ்டங்கள் ஏற்படும். இந்த நிலை ஏற்படாமல் இருக்க நாம் என்ன செய்யவேண்டும்? புதைபடிவ எரிபொருள்களின் பயன்பாட்டைக் குறைத்தல், மின்சிக்கனம், பிளாஸ்டிக்கின் உபயோகத்தைக் குறைத்தல்போன்றவைஅதற்கான சில வழிகள். ஏராளமான மரங்களை நட்டு வளர்ப்பதும் பயன் தரும். நாம் ஒவ்வொருவரும் வருங்கால சந்ததிகளுக்காக சிந்தித்து செயல்படவேண்டும். இல்லை என்றால் பூமியும் சூரிய குடும்பத்தில் இன்னும் ஒரு வெள்ளிக்கோள் ஆகிவிடும்.[/hide]

இந்த இதழை மேலும்

சிசு பராமரிப்பு

  • குறைந்த பொருளாதார நிலை
  • தாயின் வயது 16க்குக் குறைவாக இருப்பது அல்லது 35க்கு அதிகமாக இருப்பது.
  • தாயின் செயல்பாடு
  • குறுகிய கால அல்லது நாட்பட்ட தாய்வழி நோய்
  • பலமுறை கருத்தரித்தல்
  • முற்கால பிறப்பு விளைவுகள்

குறைபிரசவத்தின் பிரச்சனைகள்

  • மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுவது
  • சுவாசம் நின்று விடுதல்
  • நுரையீரல் சம்பந்தமான நோய்கள்
  • நரம்பியல் தொந்தரவுகள்
  • இதய நோய்கள் (இரத்த அளவு குறைவு, இதயச் செயலிழப்பு)
  • ஊட்டச்சத்து (உணவின் அளவு மற்றும் ஊட்டும் முறையில் மாற்றம் ஏற்படுதல்)
  • இரைப்பை மற்றும் குடல் சம்பந்தப்பட்ட நோய்கள் (குடல் சுழற்சி)
  • வளர்சிதை மாற்றக் குறைபாடு
  • சிறுநீரகக் கோளாறு (வளர்ச்சி அடையாத சிறுநீரகம்)
  • உடல் வெப்பநிலையில் மாற்றம் (அதிக உடல் உஷ்ணம், உடல் வெப்பநிலை குறைவு)
  • நோய் எதிர்ப்புச் சக்தி குறைவு.
  • கண் பார்வைக் குறைபாடு (விழித்திரையில் மாற்றம்)

குறைப்பிரசவ குழந்தைகளைக் கையாளும்முறை 

பிறந்த சில மணி நேரத்திற்குள் கையாளுமுறை

பிரசவம்: பிரசவ அறையில் பயிற்சி பெற்றசெவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் அதற்குத் தேவையான அனைத்து உபகரணங்களையும் தயார்நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

சுவாசம் மற்றும் நிலைபேறுடைமை: குறைப்பிரசவ குழந்தைகளைக் கவனிப்பதற்குப் பயிற்சி பெற்ற பணியாளர்கள் தேவை. உடல் வெப்பநிலையைப் பராமரிக்க வேண்டும். தேவைக்கேற்ப பிராண வாயுவைச் செலுத்த வேண்டும்.

சிசுவைக் கையாளுமுறை

i) உடல் வெப்பநிலையைச் சீரான முறையில் வைத்தல்

குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தையின் உடல் வெப்பநிலை சீரான முறையில் வைத்துக் கொள்ள குழந்தையை நன்றாகப் போர்த்தி வெப்பமூட்டியில் வைக்க வேண்டும்.[hide]

ii) பிராணவாயு சிகிச்சை மற்றும் காற்றோட்டம்

iii) திரவ மற்றும் எலக்ட்ரோலைட் சிகிச்சை

குறைப்பிரசவக் குழந்தைகளுக்கு அதிக அளவில் உடலின் நீர்ச்சத்து குறைய வாய்ப்பு உள்ளது. நீர்ச்சத்து குறைவதைத் தடுக்க வேண்டும்.

iv) ஊட்டச்சத்து

குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் தாய்ப்பாலை உறிஞ்சவும், விழுங்கவும் மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்குக் குழாய் மூலம் தாய்ப்பால் அளிக்க வேண்டும். குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் மிகவும் முக்கியமானது.

v) இரத்தத்தில் மஞ்சள்காமாலையின் அளவு அதிகரித்தல்

குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு இரத்தத்தில் மஞ்சள் காமாலையின் அளவு அதிகமாக காணப்படும். அவ்வாறு அதிகரிக்கும் பட்சத்தில் குழந்தைகளை ஒளிக்கதிர்களில் (Phototherapy) வைக்க வேண்டும்.

vi) தடுப்பூசி

தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், இரணஜன்னி தடுப்பூசிகளைக் குழந்தையின் வயதுக்கு ஏற்பப் போடப்படும். ஹெபடைடிஸ்பி தடுப்பூசி குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு 4 வாரங்களுக்குப் பிறகோ அல்லது 2 கிலோ எடை வந்த பிறகோ போட வேண்டும்.

vii) குறைமாதக் குழந்தைகளை மற்றகுழந்தைகளிடமிருந்து மருத்துவமனையில் தனிமைப்படுத்துதல்

குறைமாத குழந்தைகளை மற்ற குழந்தைகளிடமிருந்து தனிமைப்படுத்துவதால் குழந்தையின் சிகிச்சை பயனுள்ளதாகவும் மற்றும் குழந்தையைத் தொற்றும் நோயிலிருந்தும் பாதுகாக்கலாம்.

viii) ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து

ரோட்டா வைரஸ் தடுப்பு மருந்து குறைப்பிரசவ (26 – 28  வாரத்திற்குள் பிறந்த) குழந்தைகளுக்குப் போடப்பட மாட்டாது. 37 வாரத்திற்கு மேல் பிறந்த குழந்தைகளுக்கு 6 – வாரத்திற்கு மேல் இந்த தடுப்பூசியைப் போடலாம்.

ix) குறை மாதத்தில் பிறந்த குழந்தைகளின் நீண்டகால பிரச்சனைகள்

குறைபிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு அதிக அளவில் நோய் வருவதற்கும், இறப்பு சதவீதம் அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.

x) வளர்ச்சி குறைபாடு

  • மூளை முடக்குவாதம்
  • மனநலப் பிரச்சனைகள்
  • கற்றல் மற்றும் சமூகப் பழக்கங்களில் பிரச்சினைகள்

xi) விழித்திரை வளர்ச்சி அடையாதிருத்தல்

xii)  பிறவிக் குறைபாடு

குழந்தையின் பிறப்பு எடை வளர்ச்சி அட்டையில் குறிக்கும் போது பத்து சதவீதத்திற்குக் கீழ் இருந்தால் அதனைச் சிசு வளர்ச்சி அடையாத நிலை என்று கூறலாம்.

காரணங்கள்

தாய்வழி காரணங்கள்

  • மரபணு காரணங்கள்
  • தாயின் வயது
  • தாயின் எடை பிரசவத்திற்கு முன் குறைவாக இருத்தல்
  • நாள்பட்ட நோய் (சர்க்கரை நோய், இருதய நோய், சீறுநீரக நோய்)
  • ஊட்டசத்து குறைபாடு
  • ண்ண்) நஞ்சுக்கொடி காரணிகள்
  • குறைபாடு
  • இரத்த ஓட்டத்தடையால் சிசு இறப்பு
  • நஞ்சுக் கொடி தகர்வு
  • முன் நஞ்சுக் கொடி
  • ண்ண்ண்) கருகாரணிகள்
  • குரோமோசோமினால் ஏற்படும் காரணங்கள்
  • குறைபாடு
  • பிறவியிலே தொற்று நோய்
  • பல சிசுக்கள் கருப்பையில் இருத்தல்

கையாளும் முறை

கர்ப்ப காலம்

கர்ப்ப காலத்தில் சிசுவின் இதயத் துடிப்பு மற்றும் சிசுவின் வளர்ச்சியைக் கண்காணிக்க வேண்டும். தாய்க்கு ஏதேனும் நோய்கள் இருந்தால் அதற்குத் தகுந்த  சிகிச்சையளிக்க வேண்டும்.[/hide]

இந்த இதழை மேலும்

சின்னஞ்சிறு சிந்தனைகள்

உங்களின் வளர்ச்சிப் பாதையை உங்களால்  துல்லியமாகக் கணிக்க முடியும். எப்போது என்றால் உங்கள் தகுதிகள், உங்கள் சூழ்நிலை, உங்கள் செயல் திறன் ஆகியவற்றை எவ்வாறு நீங்கள் அறிந்து வைத்திருக்கின்றால் என்பதைப் பொறுத்தே உங்களின் வளர்ச்சிப் பாதை அமைகிறது.

ஒரு செயலை சிறப்பாக செய்வது என்பது நபருக்கு நபர் வேறுபாடு அடைகின்றது. எவர் ஒருவர் தன் சிந்தனை ஓட்டத்தைச் சீர்செய்து நினைவுகளை நிரல்படுத்தி செயல்படுகின்றார்களோ அவர்கள் எல்லாம் எதையும் சிறப்பாக செய்து முடிக்கின்றார்கள்.

நமக்கான பொறுப்பை பொறுப்புடன் செயல்படுத்தும் போது, நம்மீதான நம்பிக்கை வலுப்படுகிறது.

செய்யும் செயலை இன்னும் இனிமையாக, இன்னும் சிறப்பாக,இன்னும் மேன்மையாக செய்ய செய்ய வேண்டும் என்ற உந்துதலில் பணியாற்றுபவர்களே செய்கின்ற பணிக்கு பெருமை சேர்க்கிறார்கள்.

வாழ்வில் கவனம் சிறிது குறைந்தாலும், நமக்குப் பின் காத்திருப்பவர்கள், நம்மை முந்திச் சென்று விடுவார்கள். கவனச்சிதறல் இல்லாமல் காரியம் செய்வோம் நமக்கான இடத்தை நாம் தக்க வைத்துக் கொள்வோம்.[hide]

பொறுப்புணர்ச்சிக் கொள்ளுங்கள். இன்று தட்டிக்கழிப்பதன் மூலம், நாளைய பொறுப்புணர்ச்சியில் இருந்து நீங்கள்தப்பித்து விட முடியாது. என்றும் உழைப்புடன் கூடிய பொறுப்புணர்ச்சியே மேலானது.

ஒரு பிரச்சனையை இரண்டு விதமாகப் பார்க்கலாம். ஒன்று இது சாதாரணமாக கடந்து போக வேண்டிய பிரச்சனை என்று நினைப்பது.சிறிதாக எடுத்து விட்டுவிடுவது. மற்றொரு பிரச்சனை எப்போதும் வருவது, வாழ்வில் மாறவே மாறது என அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு பெரிதாக்கி நீண்ட காலம் கஷ்டப்படுவது.

நாம் கூடுமானவரை கவலைக்கு நம்மில் இடங்கொடுக்காமல் இருநந்து பழகுதல் வேண்டும். அச்சம் கவலைக்கு ஒரு காரணம். எது கண்டும் பயப்படக்கூடாது. பயப்படுவது எப்போதும் பிரச்சனையை தீர்க்க உதவாது. இதன் மூலம் இன்னது விளையும் என்று அச்சத்தோடு நினைப்பது வரை சரியே. ஆனால் பயந்து கொண்டே இருப்பது நல்லதல்ல.பயம் சிந்தனை ஆற்றலைப் போக்கும். எனவே அஞ்சுவதை விடுத்து அடுத்து ஆக வேண்டியது என்ன? என்று எண்ணிட வேண்டும்.

உறுதியான மனம் அடுத்தடுத்த செயல்களை வரிசைப்படுத்தி செயல்படத் தூண்டும். அச்சம் கூட ஒரு பழக்கம் தான். அஞ்சியே பழக்கப்பட்டவர்கள் எதைக்கண்டும் அஞ்சுவார்கள்.எதிர்த்து நின்று விட்டால் எதுவும் ஓடிவிடும்.

பயந்து பழக்கப்பட்டவர்களிடம் போர்க்குணம் சிறதும் இருக்காது. போர்க்குணம் இல்லாதவர்கள் சிறிய எதிர்ப்புகளும் அஞ்சித் தன் பணிகளை மறந்து விடுகின்றார்கள். ஆகவே எதுவாக இருந்தாலும் எதையும் எதிர்கொள்ளும் தையரித்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

எதாவது ஒரு இலக்கை வைத்துக் கொண்டு எப்போதும் இயங்குங்கள். அப்பொழுது தான் வாழ்வு கடைசி வரை சுவாரசியமாக இருக்கும்.[/hide]

இந்த இதழை மேலும்