Home » Articles (Page 2)

கபடியில் தடம் பதித்த சாதனையாளர்

என் பெயர் அஜீத்குமார். நான் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன். நான் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பி. உடையப்பட்டியிலுள்ள மாரிஸ் மேல்நிலை பள்ளியில் படித்தேன். என் பதினொன்றாம் வகுப்பை கே. எஸ். ஆர். வி. கோவகுளம் கரூரில் உள்ள பள்ளியில் முடித்தேன். படிக்கின்ற காலத்தில் எனக்கு கபடியின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. இதனால் பதினொன்றாம் படிக்கும் போது முழுமையாக கபடி பயிற்சியில் ஈடுபடுத்திக் கொண்டேன். சாதாரணமாக கபடியில் ஈடுபட்ட என்னை, என் உடற்கல்வி ஆசிரியர் விஜயகுமார், ராஜகோபால் ஆகியோரின் ஊக்குவிப்பின் காரணமாக கபடியில் தீவிரமாக ஈடுபட்டேன். அப்போது அந்த ஊர் பஞ்சாயத்து தலைவரான செல்வராஜ் அவர்கள் என் விளையாட்டுத் திறனைப் பார்த்து படிப்பிற்கும், விளையாட்டுக்கும் பெரிதும் உதவி புரிந்தார். நான் முன்னேறுவதற்கு தற்போதும் பல உதவிகள் புரிந்து வருகிறார். நான் பனிரெண்டாம் வகுப்பை அரசு ஜெயங்கொண்டான் பள்ளியில் படித்தேன். அந்தப் பள்ளியில் என்னைப் போல் சிறந்த வீரர்கள் இருந்தார்கள். அங்கு திருமுருகன், பாலசுப்ரமணியன் என்னும் பயிற்சியாளரின் உதவியால் போட்டிகளை வென்றுள்ளேன். இவர்கள் செய்த உதவியின் காரணமாகவே நான் பள்ளி பருவத்திலேயே சிறந்த விளையாட்டு வீரனாகத் திகழ்ந்தேன். மேலும் என் பயிற்சியினை அதிகப்படுத்திக் கொள்ள கற்பகம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன்.

எனக்கு கபடியின் மீது  ஆர்வம் வந்த தன் காரணம் என் அண்ணன் தான். அவர் ஆடும் இடத்திற்குச் சென்று அவர் ஆடுவதைப் பார்த்துக் கொண்டு இருப்பேன். தற்செயலாக ஒருநாள் அண்ணன் என்னையும் வந்து விளையாடுமாறு கூறி கபடிக்கான பயிற்சிப் பள்ளியில் சேர்த்து விட்டு ஊக்குவித்து வந்தார். இப்படிதான் என் கபடி விளையாட்டின் பயணம் ஆரம்பம் ஆனது. மேலும் என் பள்ளி பயிற்சியாளரின் ஊக்குவிப்பின் மூலமும் கபடியின் மீது எனக்கு மிகுந்த ஆர்வமானது ஏற்பட்டது.

என் கல்லூரி படிப்பானது கோவை கற்பகம் கல்லூரியில் தொடங்கப்பட்டது. இக்கல்லூரியில் நான் பயில என் பள்ளி பயிற்சியாளர் எனக்கு அறிவுரை வழங்கினார். மேலும் இக்கல்லூரியில் நான் விளையாட்டு இட ஒதுக்கீடு மூலம் பி. காம் பயின்று வந்தேன். இக்கல்லூரியில் படிப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது போலவே விளையாட்டிற்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதன் மூலம் கபடியில் நன்கு பயிற்சி பெற்று பல்வேறு போட்டிகளில் பங்கு பெற என்னால் முடிந்தது. மேலும் கல்லூரி நிர்வாகமும் பேராசிரியரும் இதற்குப் பெரிதும் துணை புரிந்தனர். நண்பர்களும் விளையாட்டின் போதும் போட்டிகளின் போதும் என்னை பெரிதும் ஊக்குவித்தனர்.   

விளையாட்டின் மீது இருந்த ஆர்வமானது தன்னை மேலும் ஊக்குவிக்கும் விதமாகவும் தன்னை மேலும் வளர்த்து கொள்ளவும் என் பயிற்சியாளரிடமும், முன்னாள் மாணவர்களிடமும், வெற்றிப் பெற்ற சாதனையாளர்களிடமும் விளையாட்டில் உள்ள நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அவர்களின் அறிவுரையின்படி பயிற்சியின் காலமாக காலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் மேலும் மாலை 4 மணி முதல் 7 1/2மணி வரை பயிற்சியில் ஈடுபடுவேன். [hide]

கோவை மாவட்டத்தில் நடைப்பெற்ற போட்டியில் கல்லூரியின் சார்ப்பாக கலந்து மாவட்டளவில் வெற்றிப் பெற்றேன். இதைத் தொடர்ந்து தூத்துக்குடியில்  நடந்த  ஜீனியர் சாம்பியன் போட்டியில் கலந்துக் கொண்டு மூன்றாம் பரிசைப் பெற்றேன். இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு விளையாட வாய்ப்பானது கிடைத்தது.  தமிழ்நாட்டின் சார்ப்பாக குஜராத்தில் நடைப் பெற்ற போட்டியில் கலந்துக் கொண்டு கால் இறுதியில் வெளியேறினேன். பின் மேலும் பயிற்சியையும் அதன் நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டு தமிழ்நாட்டுக்கு அணித் தலைவர் ஆக்கப்பட்டேன். பின்னர் போட்டியில் வெற்றி பெற்றேன்.

எனது கல்லூரியானது என் விளையாட்டிற்கு பெரிதும் உதவி புரிந்தது. மேலும் கோவை மாவட்டத்தில் உள்ள செயலாளரும் மற்றும் தமிழ்நாடு செயலாளரும் பெரிதும் தமக்கு உதவி புரிந்தனர். தன் பயிற்சிக்கு உடற்கல்வித் துறைத்தலைவரும் மற்றும் தன் பயிற்சியாளரும் பெரிதும் உதவினர். நான் பயிற்சியில் வெற்றிப் பெற எனது கல்வித் தலைவரும், என் பெற்றோரும் பெரிதும் ஊக்கமளித்தனர்.

பெற்றோரின் ஊக்கமளிப்பும், என் தாயாரின் தம்பியாகிய அ.முருகேசன் அவர்கள் நான் சிறுவயதில் இருக்கும் போதே என்னை உருவாக்கியவர் அவரே. அவரும் கபடி விளையாட்டு வீரரே. அவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆல் இந்தியா அளவில் இரண்டாம் இடம் பெற்றவர். கபடியில் அவர் அடையாத இடத்தை நான் அடைய வேண்டும் என்று பெரிதும் பாடுபட்டார். இன்று வரை நான் சாதனை படைக்க முதுகெலும்பாக விளங்குகிறார்.

பயிற்சியாளரின் பெயர் முனைவர். எம். கோவிந்தராஜ். இவர் உடற்கல்வித் துறை மற்றும் கபடியில் முனைவர் பட்டம் பயின்றவர். இவர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில்  நடைப்பெற்ற போட்டியில் கலந்துக் கொண்டு விளையாடினார். இவரின் வெற்றிக்கு காரணம் பள்ளி ஆசிரியரும், கற்பகம் கல்லூரியின் தலைவரான முனைவர். . புஷ்பாகராஜன் அவர்களும் தான். இவரின் உதவியால் கபடியின் ஆ.உக் மற்றும் ங.உக்  முடித்தேன். இவர் முதன் முதலில் கபடியில் ஆடும் போது வெறும் தோல்வியை மட்டும் சந்தித்தார்.. பின் தோல்வியைக் கண்டு துவளாமல் வெற்றியை நோக்கி பயணம் செய்து கொண்டு வந்தார். இவர் 2010-ஆம் ஆண்டில் இருந்து மாணவருக்கு பயிற்சியளிக்க தொடங்கினார்.

கபடி விளையாட்டானது ஆர்வத்துடன் விளையாடப்படுவது. அதனை பணத்தின் நோக்கோடு விளையாடுவது தவறாகும். பணத்திற்காக ஆடப்படுவது விளையாட்டு அல்ல. வெற்றி தோல்வியினைக் கொண்டும், விடா முயற்சியினாலும் தான் ஒரு செயலை மேற்கொள்ளுதல் வேண்டும். இது சந்தோஷத்திற்காகவும் உடல் வலிமையினை மேம்படுத்தும் விதமாகவும், தங்களின் ஆர்வத்தினாலும் விளையாடப்படுவதாகும். இதில் வெற்றி தோல்வி என்பது சாதாரண ஒன்று. தோல்வியையும் அதனால் ஏற்படும் அவமானங்களையும் கண்டு துவண்டு விடாமல் வெற்றியின் இலக்கை நோக்கிச் செல்லுதல் வேண்டும். இதுவே வெற்றிக்கு அடிப்படையாக அமைக்கிறது.

எல்லா மாணவர்களாலும் இங்கு சாதிக்க முடியும். இந்தியாவுக்கு ஆட வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டும் போதாது அதற்குரிய முயற்சியினை மேற்கொள்ளுதல் வேண்டும். அதனின் நுணுக்கத்தை ஆர்வத்துடன் கற்று அறிதல் வேண்டும். இதுவே போட்டியில் நாம் வெற்றிப் பெற பெரிதும் உதவிப் புரியும். போட்டியில் கலந்துக் கொள்வது மட்டுமின்றி அதற்குரிய முழு பயிற்சியினை மேற்கொண்டால் அனைவராலும் வெற்றிப் பெற இயலும்.

தற்போது நடைபெற்ற வரும் புரோ கபடிப் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணிக்காக விளையாடி, அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வரும் அஜீத்குமார் அவர்களை வாழ்த்தலாம்.[/hide]

இந்த இதழை மேலும்

  

பற்றி எரியும் அமேசான்.. அழுது புலம்பும் அன்னை பூமி..

காலநிலை மாற்றத்தினால் ஏற்பட்டு வரும் துயரக்கதைகளை உலகம் முழுவதிலும் இருந்து இன்று நாம் கேள்விப்படுகிறோம். நாமும் அதை அனுபவிக்கவும் செய்கிறோம். காலநிலையை நம்மால் மாற்றமுடியாது. ஆனால், நாம் வாழுமுறையை நம்மால் மாற்றிக்கொள்ள முடியும். அதற்கு நம்மைச் சுற்றிலும் நடக்கும் சம்பவங்களை நாம் கண் திறந்து பார்க்கவேண்டும். புரிந்துகொள்ளவேண்டும். செயல்படவேண்டும்.

பூமியின் சுவாசப்பைகள் என்று அழைக்கப்படும் அமேசான்மழைக் காடுகள் சில வாரங்களாகப் பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. நம்மில் எத்தனை பேர் இதைப் பற்றிக் கவலைப்படுகிறோம்? நம்மில் எத்தனை பேருக்கு இதைப் பற்றித் தெரியும்? நமக்குத் தெரிந்தது எல்லாம் அமேசான் என்றால், ஆன்லைன் வணிகம் செய்யும் நிறுவனத்தின் பெயர்தான்! தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியில் எவ்வளவோ முன்னேற்றங்கள் நடந்து வரும் போதும், நம்மை வாழவைக்கும் இயற்கையைப் பற்றிய விஷயங்களில், நம்மில் பலரும் இன்றும் கிணற்றுத்தவளைகளாகவே இருக்கிறோம்.

அமேசான் எரியும்போது, பூமியின் இயற்கைக் வளங்களின் கருவூலமும் சேர்ந்தே சாம்பலாகிறது. இயல்பாக நிகழாத இந்த இயற்கைப் பேரழிவு அங்கு உள்ள சில தொழிலதிபர்களால் ஏற்படுத்தப்பட்டது. இதற்கு எதிராக மனிதகுலத்தின் மனசாட்சி விழித்துக் கொள்ளவில்லை என்றால், வருங்காலத் தலைமுறையினருக்கு சாம்பலாகிவிட்ட பூமியையே நம்மால் வழங்கமுடியும். எங்கோ இருக்கும் அமேசான் காடுகள் எரிந்தால், நமக்கு என்ன என்று நம்மால் இருந்துவிடமுடியாது.

ஒரு இடத்தில் நடக்கும் காலநிலையுடன்தொடர்புடைய சம்பவங்கள் உலகம் முழுவதையும் பாதிக்கிறது. ஆர்டிக் முதல் அமேசான் வரை, இதற்கு முன் ஒருபோதும் நடந்திராதவகையில் தீ தாண்டவமாடிக் கொண்டிருக்கிறது. இனி, ஒருபோதும் மீட்கமுடியாத அளவிற்கு நம் அன்னை பூமி வெந்து உருகிக் கொண்டிருக்கிறது. அமேசான் காடுகள் என்பது பிரேசில், பெரு, பொலிவியா, வெனிசுவெலா, கயானா, கொலம்பியா, சுரினாம், பிரெஞ்சு கயானா, ஈகுவெடார்  ஆகிய ஒன்பது நாடுகளில்பரவியிருக்கும் உலகின் மிகப்பெரிய மழைக்காடுகள்.

இயற்கையின் இந்த அற்புதக் கருவூலம் பிரேசிலில் 58.4%, பெருவில் 12.8%, பொலிவியாவில் 07.7%, வெனிசுவெலாவில் 06.1%, கயானாவில் 03.1%, கொலம்பியாவில் 07.1%, சுரினாமில் 02.5%, பிரெஞ்சு கயானாவில் 01.4%, ஈகுவெடாரில் 01.0% என்ற அளவில் அமைந்துள்ளது. இந்தக் காடுகளின் மொத்த நிலப்பரப்பு 55 இலட்சம் ச.கி.மீ. பிரபஞ்சத்தின் மாபெரும் கானகங்களான இந்தக் காடுகளின் வயது 5.5 கோடி வருடங்கள் என்று கருதப்படுகிறது. கோடிக்கணக்கான அரியவகை தாவரங்களும், விலங்கினங்களும் இங்கு தோன்றி வாழ்ந்துவருகின்றன.

இங்கு வாழும் தாவரங்களையும், பறவைகளையும், விலங்குகளையும் யாரும் போற்றி வளர்ப்பது இல்லை. இதன் வரலாறு நீண்ட நித்திரையில் (hibernation) ஆழ்ந்துகிடக்கிறது. இந்தக் காடுகளில், 40,000 தாவரவகைகள், 427 பாலூட்டி இனங்கள், 1300 பறவை இனங்கள், 378 ஊர்வன, 3000 நந்நீர்வாழ் மீன் இனங்கள், 1 இலட்சம் மற்றவகை விலங்கினங்கள் வாழ்கின்றன. அமேசான் என்ற இந்தப் பொக்கிஷம் மரம் முதல் மருந்து வரை மனிதனுக்கு எல்லாவற்றையும் வாரி வழங்கிவருகிறது. விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்ட இவை எல்லாம் வெறும் 1% மட்டுமே.

அமேசான், ஆதிவாசிகளின் தாய்வீடு எனலாம். 420  வேறுபட்ட ஆதிவாசி இனங்களைச் சேர்ந்த ஏறக்குறைய 10 இலட்சம் ஆதிவாசிமக்கள் இங்கு வாழ்ந்துவருகிறார்கள். வெளியுலகுடன் தொடர்பு கொள்ளாத ஏறக்குறைய 50 இனங்களைச் சேர்ந்த ஆதிவாசிமக்கள் இன்றும் காட்டிற்குள்ளேயே வாழ்கிறார்கள். தங்களுக்கு என்று பல்வேறு சிறப்புகளை உடைய மொழிகளும், கலாச்சாரங்களும் இவர்களுக்கு உண்டு. அடர்ந்த உள் வனங்களில், குறைந்த அளவில் வேளாண்மை செய்தும், வேட்டையாடியும் வாழ்கிறார்கள்.[hide]

இவர்களின் வாழ்வு இயற்கையுடன் இணைந்த ஒன்று 20,000க்கும் அதிகமான மக்கள் உள்ள யானுமாமி ஆதிவாசி இன மக்கள் முதல் 30 பேருக்கும் குறைவான மக்கள் உள்ள கேனோ,  அகிம்துனூ இனங்களைச் சேர்ண்ட மக்கள் வரை இங்கு வாழ்கிறார்கள். எழுத்து வடிவம் உள்ள, இல்லாத 180 மொழிகள் இங்கு பேசப்படுகின்றன.

பூமியின் மிகப்பெரிய மழைக்காடான அமேசான், காற்று மண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் சமநிலையைப் பேணுவதில் முதன்மை இடம் வகிக்கிறது. ஆனால், இந்த மாபெரும் வனப்பிரதேசம் தீப்பற்றி எரியும்போது, கார்பனைச் சேமிக்கும் ஒன்றான அமேசான் கார்பனை வெளியிடும் (Corbon emitter) ஒன்றாக மாறுகிறது. இது புவி வெப்பமயமாவதியும், காலநிலை தாறுமாறாவதையும் துரிதப்படுத்துகிறது.

இலட்சக்கணக்கான வருடங்களுக்கு முன்பு, தியோடின் காலத்தில் தோன்றியதாகக் கருதப்படும் அமேசான் காடுகள் கார்பன் சுழற்சியையும், நீர் சுழற்சியையும் பூமியில் நிலைநிறுத்துவதில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்தக் காடுகள் தோன்றியதற்குப் பின் ஏற்பட்டபனியுகத்தில்” (ice age) ஏராளமான உயிரினங்கள் அழிந்துபோயின. ஆனால் அமேசான் அக்காலகட்டத்தில் அழியாமல் தன்னைத்தான் பாதுகாத்துக் கொண்டதுடன், அங்கு வாழ்ந்த மற்ற உயிரினங்கள் பலவற்றையும் இன அழிவில் இருந்து காப்பாற்றியது. சுற்றிலும் உள்ள சூழல் மண்டலங்களைப் பாதுகாப்பதில் அமேசான் மகத்தானசேவை செய்துவருகிறது.

அமேசானில் தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான பாஸ்பரஸ் சத்தை சஹாரா பாலைவனத்தில் இருந்து வீசும் மணற்காற்றுகளே கொண்டுவந்து சேர்க்கிறது. பெருமழை பெய்யும்போது, அடித்துச் செல்லப்படும் மேல் மண்ணால் ஏற்படும் சத்துகளின் இழப்பை வருடம்தோறும்  சஹாராவின் மணல் புயல்கள் கொண்டுவரும் மண்ணில் உள்ள சத்துகள் ஈடுசெய்கிறது. எனவே, அமேசானின் அழிவு ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியை மட்டும் பாதிக்காது. அதனுடன் சேர்ந்துள்ள மற்ற பிரதேசங்களின் அழிவிற்கும், காலநிலை சீர்கேட்டிற்கும் அது காரணமாகிறது.

அடர்ந்த இந்தக் காட்டிற்குள் நன்பகல் வேளையில் கூட, சூரிய ஒளி உள்ளே நுழைய முடியாது. அந்த அளவிற்கு குளிர்ச்சியில் உறைந்துபோயிருந்த, இருள் மண்டிக் கிடந்த அமேசான் காடுகள் இன்று தீப்பிழம்புகளின் அசுரப்பிடியில் சிக்கி,  கொழுந்துவிட்டுஎரிகிறது. காட்டுத்தீ என்பது இங்கு தொடர்கதையாகிவிட்டது. சிலர், காட்டை வெட்டி அழிக்க, நூற்றுக்கணக்கான மரங்கள் தினம் தினம் அக்னிக்கு இரையாகின்றன. 2019ம் ஆண்டின் கடைசி ஐந்து மாதங்களில், 9,000க்கும் அதிகமான காட்டுத்தீ சம்பவங்கள் இங்கு நடந்துள்ளன.

இதில், 80%ம் மனிதன் வேண்டுமென்றே வைத்த தீ! அமேசான் காடுகளில், பாரா என்ற பிரதேசத்தில், பணப்பயிர்களைப் பயிர் செய்வதற்காக, பெரிய தொழிலதிபர்கள் காட்டிற்கு தீ வைத்து அழிக்கின்றனர். செய்தித்தாள்களில் விளம்பரம் செய்து முன்கூட்டியே தேதியை நிச்சயித்து அவர்கள் இதைச் செய்கிறார்கள். நிர்வாகத்தினரின் சம்மதத்துடந்தான் காடுகள் அழிக்கப்படுகின்றன என்று உயிரைப் பனயம் வைத்து அமேசானைக் காப்பாற்றப் போராடிவரும் சூழல் ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

சோனியாப் வாஜாரா என்ற பிரேசில் ஆதிவாசி இனப் பெண் தலைவர் அவர்களில் முக்கியமானவர். பல காலங்களாக வேளாண், சுரங்கத்தொழில், ரியல் எஸ்டேட் தொழில், கார்பரேட் தொழில்களைச் சேர்ந்த பெரும் பணக்காரர்கள், ஆட்சியாளர்கள் ஆகியோரை எதிர்த்துப் போராடிவரும் இந்த சூழல் போராளிகள்அமேசான் காடுகளையும், தங்களின் வாழ்விடத்தையும் காத்துவருகிறார்கள். இங்குதான் வெளியுலகுடன் தொடர்பு கொள்ளாத ஆதிவாசி இனமக்கள் அதிகமாக வாழ்கிறார்கள்.

பிரேசிலில் உள்ள அமேசான் காடுகள் மட்டும் ஒவ்வொருநாளும் 5,200 கோடி லிட்டர் நீரை வழங்கிவருகிறது. 27% வனப்பரப்பை இங்கு வாழும் ஆதிவாசிகளே காப்பாற்றிவருகிறார்கள். அமேசான் காட்டுத்தீயைத் தடுக்கத் தவறிய பிரேசில் ஆட்சியாளர்களுக்கு எதிராக, உலகில் பல இடங்களில், போராட்டங்கள் நடக்கின்றன. ஆர்டிக் முதல் அமேசான் வரை உள்ள அலாஸ்கா, சைபீரியா, பிரேசில் போன்ற முக்கியமான சூழல் வளப் பிரதேசங்கள் (eco hotspots) இவ்வாறு அடிக்கடி உண்டாகும் காட்டுத்தியிற்கு இரையாவதால், பூமி வேகமாக மரணம் அடைந்துகொண்டிருக்கிறது.

நாம் வாழ இந்த ஒரே ஒரு பூமிதான் இருக்கிறது. மரங்களும், அவை உள்ள காடுகளும் ஒளிச்சேர்க்கை செய்வதை நிறுத்திவிட்டால், நம் நிலைமை என்ன ஆகும்? நம் அன்னை பூமியை எரிந்துகொண்டிருக்கும்சிதையில் இருந்து காப்பாற்றுவோம். கை கோர்ப்போம்.  [/hide]

இந்த இதழை மேலும்

பிரசவம்

  • சிசுவின் வளர்ச்சி கர்ப்பபையில் குறைவாக இருந்தால் உடனடியாக பிரசவம் செய்ய வேண்டும்.
  • தாய்க்கு இரத்த கொதிப்பு அதிகமாக இருந்தால் உடனடியாக பிரசவம் பார்க்க வேண்டும்.

பிறந்த குழந்தைக்கு அவசர சிகிச்சைப் பிரிவு

குழந்தை பிறந்தவுடன் குழந்தையை அவசர சிகிச்சை பிரிவிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். அங்கு குழந்தையைத் தலை முதல் கால் வரை பரிசோதிக்க வேண்டும். குழந்தையின் உடல் வெப்பநிலை, இதயத்துடிப்பு, மூச்சு விடுதல் அனைத்தையும் பரிசோதிக்க வேண்டும்.

நஞ்சுக் கொடியைப் பரிசோதித்தல்

நஞ்சுக்கொடியைப் பரிசோதிக்கும் போது ஏதேனும் தொற்று நோய் உள்ளதா என்பதைப் பரிசோதிக்க வேண்டும்.

பின்விளைவுகள்

  • தாழ் வெப்பநிலை
  • இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைவது
  • வெள்ளை அணுக்களின் குறைபாடு
  • கால்சியம் குறைபாடு
  • இரத்தத்தின் அளவு அதிகரித்தல்

பரிசோதனைகள்

  • இரத்தத்தின் சர்க்கரை அளவைக் கண்காணித்தல்
  • இரத்தத்தின் கால்சியம் அளவைக் கண்காணித்தல்
  • இரத்தத்தின் சோடியம் அளவைக் கண்காணித்தல்

பிறந்த குழந்தையின் எடை 2500 கிராமிற்குக் குறைவாக இருத்தல்.

எடை குறைந்த குழந்தையின் உணவு முறை

எடை குறைந்த குழந்தைகளுக்கு உணவு என்பது தாய்ப்பால், பால் பீய்ச்சி கொடுப்பது, தாய்ப்பால் கொடுப்பவர்களிடமிருந்து வாங்குதல், அதிக சத்து நிறைந்த பால் ஆகியவற்றுள் ஒன்றாக இருக்கலாம்.

தாய்ப்பால்

குறை பிரசவத்தில் பிறக்கும் குழந்தைக்குத் தாய்ப்பால் மிகவும் அவசியம். இது குழந்தையைப் பலவிதமான தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

பிற தாய்மார்களின் தாய்ப்பால் (Donor Breast milk)

பிற தாய்மார்களிடமிருந்து குழந்தைக்குக் கொடுக்கப்படும் பால் டோனர் பால் எனப்படும். டோனர் பால் கொடுப்பதால் குழந்தையின் வளர்ச்சி தடைபடுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

அதிக சத்து நிறைந்த பால் மற்றும் உணவை வலுவூட்டுதல் (fortification)

பாலுடன் மற்ற பொருட்களைச் சேர்த்து கொடுக்கும்பொழுது குழந்தையின் எடை அதிகரிக்கிறது.

மாட்டுப்பால்

எந்த ஆராய்ச்சிகளும் மாட்டின்பால் நல்லது என்று கூறவில்லை.[hide]

பரிந்துரைகள்

  • குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால் சிறந்த பால்
  • உணவை வலுவூட்டுதல் (fortification) மூலம் பால் கொடுப்பதை தடுப்பது நல்லது.

முன் பால் (Prelacteal feed)

முன் பால் என்பது குழந்தை பிறந்த நான்கு நாட்களுக்குள் தாய்ப்பால் தவிர வேறு ஏதேனும் பால் மற்றும் சர்க்கரை தண்ணீர் கொடுப்பது.

பரிந்துரைகள்

  • முன்பால் கொடுப்பது தவிர்க்க வேண்டும்.

குழாய் மூலம் பால் ஊட்டுதல்

32 வாரத்திற்கு மேல் குழந்தை பிறந்தால் தாய்ப்பால் கொடுக்கலாம். 32 வாரங்களுக்குக் கீழ் இருந்தால் குழாய் மூலம் தாய்ப்பால் பீய்ச்சி எடுத்து கொடுக்கலாம்.

LCPUFA மற்றும் DHA யின் முக்கியத்துவம்

LCPUFA மற்றும் DHA தாய் பாலில் இருப்பதால் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு மற்றும் கண்பார்வைக்கு மிகவும் உதவுகிறது என்பது ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஊட்டச்சத்து அல்லாத உறிஞ்சும் பொருட்களின் முக்கியத்துவம் (Non-nutritive sucking)

பரிந்துரைகள்

ஊட்டச்சத்து அல்லாத உறிஞ்சும் பொருட்களை சப்ப வைப்பதன் மூலம் எடை குறைந்த குழந்தையின் உறிஞ்சும் தன்மை அதிகரிக்கும்.

இரைப்பைக்குடல் தடத்தில் உணவு கொடுக்கும்  முறைகள் (Enteral Feeding)

  • குழாய் மூலம் பால் கொடுப்பது
  • கப், ஸ்பூன், பாலாடை, குப்பி மூலம் பால் கொடுத்தல்

பரிந்துரைகள்

  • குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு உறிஞ்சும் தன்மை அதிகமாக இருந்தால் நேரடியாக தாய்ப்பால் கொடுக்கலாம்.
  • உறிஞ்சும் தன்மை குறைவாக இருந்தால் கப், ஸ்பூன், பாலாடை மூலம் பால் கொடுக்கலாம்.

குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு எத்தனை முறை பால் கொடுக்கலாம்?

குழந்தையின் எடையைப் பொருத்தும், கருதாங்கல் வாரங்களைப் பொருத்தும் எத்தனை முறை பால் கொடுக்கலாம் என்பதை நிர்ணயிக்கலாம். பொதுவாக இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை பால் கொடுக்கலாம்.

பால் கொடுத்த பின் குழந்தையைப் படுக்க வைக்கும் நிலை

குழந்தையை மல்லாந்து, குப்புற மற்றும் ஒரு பக்கமாக படுக்க வைக்கலாம்.

குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தையின் ஊட்டச்சத்து வைட்டமின் டி தாய்ப்பால் குழந்தைக்கு போதுமான அளவு வைட்டமின் டி ஊட்டச்சத்து இல்லை. இதனால் குழந்தைகளுக்கு வைட்டமின்  ஊட்டச்சத்து குறைபாடு நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. எனவே குழந்தை பிறந்த சில மாதங்களுக்கு வைட்டமின் டி 400 யூனிட்ஸ் கொடுக்க வேண்டும்.

கால்சியம், பாஸ்பரஸ்

குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு எலும்பில் கால்சியம், பாஸ்பரஸ் அளவு குறைவாக இருக்கும். எனவே கால்சியம் 120 – 140 மி.கி./கி.கி/நாள் மற்றும் பாஸ்பரஸ் 60-90மி.கி./கி.கி./நாள் கொடுக்க வேண்டும்.[/hide]

இந்த இதழை மேலும்

அன்பும் அறனும் உடைத்தாயின். . .

கவிஞர் கவிநேசன் ,

கோபிசெட்டிபாளையம்

இன்னாருக்கு இன்னார்தான் என்று இறைவன் அருளால் ஆசிர்வதிக்கப்பட்டு அமைத்துக்கொடுக்கப்பட்ட உறவுதான் திருமணம். எல்லாக் காலங்களிலும் பிரச்சினைகளைத் தீர்த்து மகசூல் பெருக்கும் பயிர் என்ற  பொருளில்தான் நம் முன்னோர்கள் திருமணத்தை ஆயிரங்காலத்துப் பயிர் என்று வழங்கினார்கள். படிப்பு, அறிவு, அழகு , வேலை, சொத்து , குடும்பம் ஆகியவற்றையெல்லாம் தீர ஆலோசித்து  , பின்பு பெரியோர்களால் நிச்சயித்து ,  பலர் சாட்சியாக ஏற்படுத்திக்கொண்ட  இந்த பந்தம் வாழும் காலம் முழுமைக்குமான ஒரு தெய்வீக பந்தம். குடும்ப அமைப்பிற்கே பெரும் கவுரவத்தை ஏற்படுத்தித் தரும் மகோன்னதமான உறவுதிருமணம் . அவ்வாறு அமையப்பெற்ற இல்லறம் நல்லறமாக இனிக்க வேண்டுமாயின் , கணவனும் மனைவியும் வாழும் காலம் முழுமைக்கும் மனமொத்து ஒருவருக்கொருவர் ஆதரவாகவும் , ஆதாரமாகவும் ,  அன்புடனும் ,  அறத்துடனும் ,  உண்மையாகவும் , இருத்தல் வேண்டும். அப்படி இனிய  மணவாழ்க்கை வாய்க்கப்பெற்றவர்கள் இறைவன் அருளுக்கு பாத்திரமானவர்கள் ஆகிறார்கள்.

பரபரப்பான இன்றைய கால கட்டத்தில் எல்லாமே அவசரம் தான்.  தீர ஆலோசிக்காமல் அவசரமாக முடிவெடுத்து திருமணத்தால் இணைகிறார்கள்.  பிரிவதிலும் அவசரமாகவே முடிவெடுத்து நீதிமன்றத்திற்கு முந்துகிறார்கள். சிறு சிறு கருத்து மோதல்களைக்கூடக்  கடந்து வர முடியாமல் மணவாழ்க்கையை முடித்துக் கொள்ளும் அவலத்திற்கு உள்ளாகிறார்கள்.  சரியான புரிதல் இல்லாமல் இல்லற வாழ்வின் இனிமையைத் தொலைத்துவிடுகிறார்கள். சகிப்புத்தன்மையும் , விட்டுக்கொடுத்தலும் அறவே இல்லாததன் காரணமாக தொடக்கத்திலேயே  இல்லற வாழ்வு தொல்லையாய்த் தெரிகிறது. சுவைத்து  மகிழ்வதற்கு முன்பாகவே  கசக்க ஆரம்பித்துவிடுகிறது

திருமணத்தால் ஒரு பெண் , தன் தாய் தந்தையர் ,  குடும்பம் என  எல்லாவற்றையும்  விட்டு  கரம்பிடித்தவனே  காலத்திற்குமான உற்ற துணை என  உள்ளத்தில்  உறுதி  பூண்டு புகுந்த வீட்டிற்குப் புறப்பட்டு வருகிறாள். அவளது அனைத்து ஆசைகளையும் , விருப்பங்களையும் , எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவது ஒரு  நல்ல கணவனின் கட்டாயக் கடமையாகும்.  மனைவியிடம்  மனம்விட்டு பேசுவதற்கு நேரம் ஒதுக்கி , எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் மனைவியிடத்தில் மனதாரப் பகிர்ந்துகொள்ளுதல் அவசியமாகும் . மனம்விட்டு பேசுதலும் அதற்கு நேரம் செலவிடுதலுமே மனைவியின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்த குறைந்தபட்ச எதிர்பார்ப்பை நிறைவேற்ற  முடியாததிலிருந்து தான்  குடும்பத்தில் பனிப்போர் ஆரம்பமாகிறது.

பொருளீட்டுவதில் மட்டுமே ஒரு ஆணின் முழு கவனமும் இருந்துவிடக்கூடாது . மனைவியின் அன்பை  ஈட்டுவதிலும் கவனம் இருத்தல் வேண்டும்.  பணமே பிரதானம் என்று அதற்கான தேடல்களில் மூழ்கிக்கிடப்பதால் குடும்பக் கப்பல் கரைசேர முடியாமல் தத்தளித்து மூழ்கிவிடும் அபாயமும் உண்டு என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.  மனைவியை மகிழ்விக்கவும் குடும்பத்தின் நன்மைக்காகவுமே  நான் கடுமையாக உழைக்கிறேன்என்ற காரணம் ஏற்புடையதல்ல. உழைப்பதாலும் , பொருள் ஈட்டுவதாலும் மட்டுமே குடும்பத்திற்கு கவுரவம் சேர்ந்துவிடாது. இணையோடு இணக்கம் காட்டி இல்லறம் பேணுவதில்தான் குடும்ப கவுரவமே இருக்கிறது  என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். பொருள் தேடி ஓடிக்கொண்டிருப்பதால் வீடுகள் தீவுகளாக்கப்பட்டுவிடுகிறது. இந்த தனித்தீவில் சிக்கிக்கொண்டு தனித்துவிடப்பட்டு அன்பிற்கு ஏங்கித் தவிக்கிறார்கள். இப்படி தத்தளித்தும் தவித்தும் கொண்டிருப்பவர்களைக் குறிவைத்து ஒரு கூட்டம் காத்துக்கொண்டிருக்கிறது. வீட்டின் வாயில் கதவுகள் மூடி வைக்கப்பட்டிருந்தாலும் , இணையக் கதவுகள் திறந்து வைக்கப்பட்டே இருப்பதால் எவர் வீட்டிற்குள்ளும் எவரின் அனுமதியுமின்றியும் எவரும் உள்ளே நுழைந்துவிடும் வாய்ப்பை இன்றைய அறிவியல் தொழில்நுட்பம் நமக்கு வழங்கி இருக்கிறது. சமூக வலைத்தளங்கள் மூலமாகவும்  அலைபேசி வாயிலாகவும் அழையா விருந்தாளிகள் நம் படுக்கை அறை வரைக்கும் எளிதாக வந்துவிடமுடிகிறது.  அடுத்தவர்களின் அந்தரங்கங்களை விற்றுக் காசாக்குகின்ற தந்திரங்களை கலிகாலத்து சகுனிகள் கற்றுவைத்திருக்கிறார்கள்.  சில வக்கிர எண்ணம் கொண்டவர்கள் , தனிமையில் தவித்து அன்புக்கு ஏங்குபவர்களுக்கு உதவிக் கரம் நீட்டுவதுபோல நடித்து , தங்களது வசிய வலையில்  விழ வைத்துவிடுகிறார்கள்.[hide]

அதற்கேற்றாற்போல் பெரும்பாலான தொலைக்காட்சித் தொடர்களும் விஷமத்தை விதைக்கிறது.  கள்ளத்தொடர்புகளையும் , கூடா நட்பையுமே கூடுமானவரை காட்சிப்படுத்துகிறது. தனிமையில் தவித்துக்கொண்டிருக்கும்  குடும்பப் பெண்களைத் தவறான வழிக்குத் தூண்டுகிறது. இலேசாக மனம் தடுமாற்றம் அடைந்து தவறி விழுந்தவர்கள் , காமுகர்களின் கைகளில் அகப்பட்டு சிக்கிச் சின்னாபின்னமாகிச் சீரழிந்துபோகிறார்கள்.  பெற்ற குழந்தையைக் கொல்லும் பெரும் பாதகத்தைச் செய்யவும் தயங்குவதில்லை. குடும்ப கவுரவம் , அந்தஸ்து , குழந்தைகள் , பெற்றோர்கள் போன்ற குடும்ப உறவுகள் அனைத்தையும் உதாசீனப்படுத்தி உதறித் தள்ளிவிட்டு கயவர்களோடு  கைகோர்த்து காணாமல் போய்விடுகிறார்கள்.

இன்று செய்தித்தாள்களின் அனைத்துப் பக்கங்களையும் இதுபோன்ற தவறான உறவுகள் , கள்ளத்தொடர்புகள் சார்ந்த செய்திகளே அதிகம் ஆக்கிரமித்துள்ளது  என்பதை மறுப்பதற்கில்லை. சின்னப்பிரச்சினைகளை சகித்துக்கொள்ளாததன் விளைவு குடும்பத்திற்குள் பெரிய விரிசல்களை ஏற்படுத்திவிடுகிறது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்காததன் விளைவு குடும்பத்தையே விட்டுக்கொடுத்துவிட்டு போகும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. வார்த்தைகளைக்  கவனத்துடன்   விநியோகிக்காததன் விளைவு கடும் அவச்சொற்களை சுமக்கின்ற அவல நிலையைச் சந்திக்க நேரிடுகிறது.   விட்டுக்கொடுத்த|ல்தான்  வாழ்க்கை இனிமை அடைகிறது. அதைச் செய்யாதாலே  போதும் . இதுபோன்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைத்துவிடும். குடும்பத்துடன் நேரத்தைச் செலவழிப்பது என்பது இல்லற சந்தோசத்தை அறுவடை செய்வதற்கான பெரும்  முதலீடாகும்.

நாம் எதனோடு அதிக நேரம் செலவழிக்கிறோமோ ,   எதனோடு நாம் நெருக்கம் காட்டுகிறோமோ , அது நம்மைவிட்டு விலகாமல் நம்மிடம் நெருக்கமாக இருக்கும் என்ற இயற்கைவிதி இல்லறத்திற்கும் பொருந்தும்

குறை காணுதலைத் தவிர்த்து நிறைகளைப் பாராட்டி மகிழ்தலிலும் ,  கஷ்டத்தில் இருக்கும்போது ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாய் வார்த்தைகளைப் பரிமாறிக்கொள்வதிலும்தான் தாம்பத்தியம் மலரும்.   இல்லறம் செழிக்கும். அந்த ஆறுதல் வார்த்தைகள் மயிலிறகு வருடலாய் பெரும் இதத்தைத் தரும்.  ஈராயிரம் ஆண்டுக்கு முன்னர்  வள்ளுவர் வகுத்துவைத்த இல்லறத்தை நல்லறமாக்கும் அற்புதமான  சூத்திரம் ..

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை

பண்பும் பயனும் அது.[/hide]

இந்த இதழை மேலும்

தடம் பதித்த மா மனிதர்கள்

நம் தாய்நாடான இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட தலைவர்கள் பலர். விடுதலைப் போராட்டத்தில் காந்தியடிகள் கலந்து கொள்ளும் முன் கலந்து கொண்ட பெரிய தலைவர்களின் ஒருவர் வ..சிதம்பரம் பிள்ளை அவர்களும் ஒருவர் ஆவார். அவருடைய வாழ்க்கை வரலாற்றில் இருந்து சில நிகழ்வுகளை இக்கட்டுரை மூலம் பதிவு செய்வதால் பல்வேறு இளைஞர்கள் பலன் பெருவார்கள் என்பது உறுதி. ஏனெனில் அவரது நினைவு சின்னங்கள் பற்றிய குறிப்புகள் கீழே வரிசை படுத்தப்பட்டுள்ளது.

ஒட்டப்பிடாரத்தில் இவர் வாழந்த வீடு அவரது நினைவு இடமாக மாற்றப்பெற்று அதில் நூலகம் மற்றும் இவர் பற்றிய குறிப்புகள் பலவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

தமிழகம் முழுவதும் பல இடங்களில் இவரது உருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மத்திய சிறையில் இவர் இழுத்த செக்கு இன்று சென்னை கிண்டியில் உள்ள காந்தி நினைவு மண்டபத்தில் காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளது.

செக்கிழுத்த செம்மல் என்ற அடைமொழி பெற்றவர் இவர்.  தூத்துக்குடி துறை முகத்திற்கு அரசாங்கம் இவரது பெயரைச் சூட்டியுள்ளது. கப்பலோட்டிய தமிழன் அடைமொழியையும் பெற்றவர் இவர் ஆவார்.

மேலும் தமிழகம் முழுவதும் பல கல்வி நிறுவனங்கள் தெருக்கள், சாலைகள் மற்றும் பல அடுக்கு மாடிக்குடியிருப்புகள் பலவற்றிற்கு இவரது பெயர்  சூட்டப்பட்டுள்ளது.

செப்டம்பர் 5. 1972 ல் அவரது நூற்றாண்டு விழாவை நினைவு கூறும் வகையில் இந்தியத் தபால் தலையை இவரின் பெயரில் வெளியிட்டது.

கோயம்புத்தூரில் உள்ள வ..சி பூங்கா மற்றும் வ..சி. மைதானம் மிக முக்கியமான பொது சந்திப்புக்கூடமாக இன்றும் விளங்குகின்றன.

1961 ம் ஆண்டு இவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழ்த் திரைப்படம் ஒன்று வெளியானது. அதன் முன்னிணிப் பாத்திரமாக நடிகர் சிவாஜி அவர்கள் நடித்திருந்தார்.

..சிம்பரனார், விடுதலைப் போராட்ட வீரர், சிறந்த வழக்கறிஞர், நற்பண்புகளை ஒருங்கே பெற்றவர். அவர் தம் சொத்துக்களை எல்லாம் ஏழை, எளியவர்களின் வாழ்விற்காகப் பயன்படுத்தி, சிறந்த வெல்வந்தராய் பிறந்து வளர்ந்தவர் தன்னுடைய இறுதி நாட்களில் வறுமையால் வாடினாலும் இவர் தம் சுதந்திர தாகம் தணியாமல் உயிர் நீத்தார்.

இவர் 1872 ம் ஆண்டு செப்டம்பர்  மாதம் 5 ம் தேதி ஒட்டப்பிடாரத்தில், அன்றைய புகழ்பெற்ற வழக்கறிஞர்களில் ஒருவரான உலகநாதன் பிள்ளைக்கும் பரமாயி அம்மாளிற்கும் மகனாய் பிறந்தார். இவர் ஒட்டப்பிடாரத்திலும், திருநெல்வேலியிலும் உள்ள பள்ளிகளில் சேர்ந்து கல்வி பயின்றார். பள்ளிப்படிப்பிற்குப் பின் ஒட்டப்பிடாரத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் சேர்ந்து பணிபுரிந்தார். அதன் பின் அவரது தந்தையைப் போல சட்டம் படித்து புகழ் பெற்ற வழக்கறிஞர் ஆனார். ஆனால் இவர் தந்தையைப் போல் பணம் படைத்தவர்கள் மட்டும் வாதாடாமல், ஏழைகளுக்காக வாதாடி அதில் வெற்றியும் பெற்றார். ஒரு முறை அவர் தம் வாதத்தால் தன் தந்தையையே தோற்கடித்தார். இவர் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளை ஆர்வத்துடன் கற்று அவற்றில் புலமையும் பெற்றிருந்தார்.[hide]

இராமாயணம், மகாபாரதம், சிவபுராணம் இவற்றைப் பற்றியும் தன்னுடைய தாய் மற்றும் உறவினர்களிடம் கற்று அவற்றையும் திறம்பட கற்று தேர்ந்தார். இவர் 1895 ம் ஆண்டு வள்ளி அம்மையாரை மணந்தார். கி.பி 1900 ம் ஆண்டு தலைப்பிரசவத்தின் போது வள்ளியம்மை இறந்து விட்டார். ஆகையினால் 1901 ம் ஆண்டு தூரத்துக்குடியில் மீனாட்சி அம்மாளை திருமணம் செய்து கொண்டார்.  இவருக்கு சுதந்திர எழுச்சியை தன் பாடல் மூலம் வெளிப்படுத்திய சுப்ரமணி பாரதியார் ஒரு சிறந்த நண்பர் ஆவார் இருவரும் சந்தித்துக் கொண்டால் அவர்களது பேச்சு நாட்டைப் பற்றியதாகத் தான் இருக்கும். இவரது வாழ்க்கைல் சசி மகராஜ் என்பவரின் நட்பு ஒரு முக்கியத்துவம் பெற்றதாகும். சுதேச எண்ணங்கள் பல நம்மைகளைத் தரக்கூடியது இது என் கருத்து என்ற சசி மகராஜின் வார்த்தைகள் ஒரு விதையாய் இவரது உள்ளத்தில் விழுந்தது, அதைப் போற்றி காத்தும் வந்துள்ளார்.  இந்த விதையின் இரு தளிர்களே தூத்துக்குடி கைத்தொழில் சங்கம் மற்றும் தரும சங்கம் என்று இவர் தமது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். லாலா லஜபதிராய், பால கங்காதர திலகர் மற்றும் சுப்ரமணியம் சிவா இவர்களின் நட்பு இவருடைய தேசபக்தியை மிகவும் அதிகரிக்கச் செய்தது. 1905 ம் ஆண்டு இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரானார். இவர், இந்திய பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் அவற்றை சார்ந்த சமூகப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரபித்தோ கோஷ், பாரதியார், சுப்ரமணிய சிவா ஆகியோருடன் சேர்ந்து சென்னை மாகாண உறுப்பினர்களுடன் சேர்ந்து போராடி ஆங்கிலேய வர்த்தக பேரரசின் வற்புறுத்துலுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சி செய்தார். இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினராகச் சேர்ந்த பின் இந்தியா சுதந்திரம் பெறுவதற்காக முழுமனதுடன் இவர் சுதேச பணியில் மூழ்கினார்.

கடலோரங்களிலுள்ள ஆங்கிலேய போக்குவரத்தின் ஏக போகத்திற்கு ஒரு முற்றுபுள்ளி வைக்க எண்ணினார். 1906 ம் ஆண்டு நவம்பர் 12 ம் நாள் சுதேசிஸ் பீம் நேவிகேஷன் நிறுவனத்தை நிறுவினார்.  அதன் பின் தனது கப்பல் போக்கு நிறுவனத்தைத் தொடங்க இரண்டு நீராவி கப்பல்களான எஸ்.எஸ் காலியோவையும் எஸ். எஸ். லாவேயும் மற்ற உறுப்பினர்களின் உதவியோடு வாங்கினார். இதுவே முதல் வரியான போக்குவரத்து சேவை என்ற சிறப்பை பெற்றது. ஆங்கிலேயரின் கப்பல் நிறுவனம் சுதேசிஸ் டீம் நேவிகேஷனின் வளர்ச்சியை தோற்கடிக்க பல்வேறு யுக்திகளைக் கையாண்டது. இலசவ சவாரி மற்றும் பயணிகளுக்கு இலவச குடைகள் வளங்குதல் அவற்றில் சில ஆகும்.  ..சியால் அவ்வாறு தர இயலாததால் கம்பெனி திவாலாகும் நிலையை எட்டியது. முதன் முதலாக கப்பல் வாங்கி ஆங்கிலேயரை எதிர்த்து கடல் வாணிகம் செய்ததால் கப்பல் ஓட்டிய தமிழன் என்று அழைக்கப்பட்டார்.

இவர் திருநெல்வேலியில் இருந்த கோரல் மில்ஸ் தொழிலாளர்களுக்காக ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடினார். இதை சாதகமாக எடுத்துக்கொண்டு, இவரது செயல் ஆங்கில அரசுக்கு எதிரான துரோகம் என்ற குற்றத்தை அவர் மேல் சாட்டி 1908 ம் ஆண்டு மார்ச் 12 ம் தேதி கைது செய்தது இதனால் மேலும் போராட்டங்கள் தொடர்ந்தது. இவரை சிறையிலிருந்து விடுவிடுக்க நிதி சேகரித்தனர். அது சமயம் தென் ஆப்ரிக்காவிலிருந்து விடுவிடுக்க நிதி சேகரித்தனர். அது சமயம் தென் ஆப்ரிக்காவிலிருந்து மகாத்மா காந்தி இந்தியாவிற்கு நிதி சேகரித்து அனுப்பினார். ஆனால் 1908 ம் வருடம் ஜீலை 9 டங தேதி முதல் 1910 டிசம்பர் 1 ம் தேதி வரை கோயம்புத்தூரில் உள்ள மத்திய சிறையில் இவரை அடைக்கப்பட்டதும் இல்லாமல் அவருக்கு ஆயுள் தண்டனையை அளித்தது. அங்கு அவரை ஒரு மாடு போல் கையிரால் கட்டி செக்கை இழுக்க செய்தனர். அதனால் தான் செக்கிழுத்த செம்மல் என்று அழைக்கப்பட்டார். பல்வேறு கொடுமைகளை சிறையில் அனுபவித்ததால் அவரது உடம்பு மிகவும் பலவீனம் ஆனதால் 1912 ம் ஆண்டு டிசம்பர் 12 ம் தேதி இவர் விடுதலை அடைந்தார். சிறையிலிருந்து அவர் வெளியே வரும் போது அவரை அழைத்து செல்ல ஒருவரும் இல்லாதது அவருக்கு பெரும் வருத்தத்தை தந்தது.  ஆங்கிலேயர்கள் அவரிடமிருந்து பாரிஸ்டர் பட்டத்தை பறித்துக் கொண்டதால் அவரால் வழக்கறிஞர் பணியை செய்ய இயலவில்லை வறுமையான நிலையில் தனது இரண்டாம் மனைவியுடனும் இரண்டு குழந்தைகளுடன் சென்னை நகரத்தை அடைந்தார்.

1936 ஆம் ஆண்டு நவம்பர்  18 ம் நாள் அவரின் அலுவலகத்தில் அவர் உயிர் பிரிந்தது. இவரின் உடலிலிருந்து உயிர் பிரியும் தருணம் பாரதியின்  என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்? என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்? என்ற வரிகளை கேட்டு கொண்டே பிரிந்தது. இத்தகைய பல்வேறு முகம் கொண்ட வ.. சிதம்பரம் பிள்ளையின் சந்ததியர்கள் தமிழ்நாட்டில் சென்ûயிலும், மதுரையிலும் வாழ்ந்து வருகின்றனர். வந்தே மாதரம் என்ற உச்சரிப்பைக் கேட்டாலே வ..சியின் நினைவும் சேர்ந்து தமிழ் மக்களாகிய நமக்குள்ளும் அந்த உச்சரிப்பு ஓலிக்கவில்லை.[/hide]

இந்த இதழை மேலும்

சொத்து

தாத்தா தனது பேத்தியை மடியிலே வைத்துக் கொஞ்சினார். ஏன்டீ செல்லம் அழறே? எதுக்கு அழறே? பசிக்குதா? இப்பத்தானே பாலைக் குடிச்சே அதுக்குள்ளப் பசிக்குதா? என்ன சொல்றே நீ? பசியெல்லாம் ஒன்னுமில்லியா? சரிபிறகேன் இந்தச் சிணுங்கல்? கதை சொல்ல்ணுமா? என்ன கதை வேணும்? காக்கா கதை சொல்லட்டா?

ம்ம்ம் சொல்லுங்கிறியா? வேணாங்கிறியா?

ம்….ம்ம்எல்லாத்துக்கும் ம்ம்ம்.. ம்னா எப்படி செல்லம். அப்படியா சரிசரி காக்கா கல்லு போட்டு தண்ணீர் குடிச்சக்கதையும் வேணாம்..பாட்டி வடை சுட்டக் கதையும் வேணாம் நான் என் சொந்தக்கதையைச் சொல்லட்டுமா? கேக்கிறியா இதோ பாரு உங்கப்பன் எங்கேயோ ஊரைச் சுத்திட்டு இப்பத்தான் வர்றான்என்னன்னு கேளு. ஏன் மறுபடியும் மறுபடியும்அழறே? கதை சொல்ல இன்னமும் ஆரம்பிக்கலையேன்னாசொல்றேன்.. சொல்றேன்..ரொம்பத்தான் நீ அவசரப்பட்றே

உனக்கொரு தாத்தா மாதிரி எனக்கும் ஒரு தாத்தா இருந்தாரு அவர் வேலிக் கணக்கில நிலத்தைச் சம்பாதிச்சி வச்சிருந்தார். நல்ல பல சொந்த பந்தங்கள் எல்லாம் சம்பாதிச்சார்.

என்னோட அப்பா என்ன பண்ணினார் தெரியுமா? அவங்கப்பா சம்பாதிச்ச நெலத்தில நெத்தி வியர்வை சிந்தி உழைச்சிப் பாடுபட்டு ஒண்ணுக்கு நாலா வீடு கட்டினார். சொத்து மேலே சொத்து சேர்த்தார். நான் என்ன பண்ணினேன்னு கேக்கறையா? சமத்துக்குட்டி நீ?[hide]

என் தாத்தா சம்பாதிச்சதை எங்கப்பா சம்பாதிச்சதை எல்லாம் கட்டுக்கோப்பா கட்டிக்அ காப்பத்தினதோடு நாலு கடைகள் கட்டி வருமானத்தைப் பெருக்கினேன்.

அம்முக்குட்டி ஏன் இப்படி கையக் காலை ஒரேயடியா ஆட்றே உனக்கென்ன அப்படி அவசரம்.. ப்ளைட்டுக்கு நேரமாச்சி? இதைவிட வேகமா சொல்ல முடியாது.. மெதுவாத்தான் சொல்ல முடியும்தாத்தாவுக்கு வயசாயிடுத்தில்லியோ பொறுமையா கேளு உங்கப்பா என்ன பண்ணினார்னு கேக்கறையா? புத்திசாலிப் பொண்ணு நீ நல்லா

கேட்டே போ

அவருந்தான் ஓடி ஓடி சம்பாதிக்கிறாரு.. வீடுநிலம்கடை.. இவை எல்லாத்து மேலயும் கடனை சம்பாதிச்ச நிறைய வச்சிருக்கார்

நீ வளர்ந்து பெரியவளா ஆனப்புறம் அதையெல்லாம் மீட்டுடுவே இல்லை? ஏன் டீ செல்லம் அழறே? மீட்டுத் தந்துடுவே இல்லே? உனக்கொன்னும் புரியலையா?

உனக்குப் புரியுதோ இல்லியாபுரிய வேண்டியவங்களுக்குப் புரிஞ்சா சரிநீ இப்போ சரி..சரி ஐ அப்படித்தான். [/hide]

இந்த இதழை மேலும்

வெற்றி உங்கள் கையில் – 73

நேர்மை தந்த பரிசு

இந்தக்காலத்தில் நேர்மையாக இருந்தால் வாழ முடியாது. குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பவர்கள் மட்டுமே வாழ முடியும்” – இது சிலரின் ஏக்கப் பெருமூச்சு.

யாரையாவது ஏமாற்றினால்தான் முன்னுக்கு வரமுடியும்” – இது வேறுசிலரின் வேதனை கலந்த வார்த்தைகள்.

நல்லவர்களுக்கெல்லாம் எதிர்காலம் கிடையாது. நயவஞ்சகர்கள் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள்” – இதுவும் சிலரின் ஏமாற்றம் கலந்த எண்ணங்கள்.

உண்மையாக வாழ்ந்தால் பதவி கிடைக்காது. குறுக்குவழியில் சம்பாதித்தால்தான் பணம் கிடைக்கும்” – இப்படியும் சிலர் நினைத்து செயல்படுவதால், முடிவில் சிறைக்கம்பிகளை எண்ணும் நிலையும் உருவாகிவிடுகிறது.

நேர்மையாக வாழ்ந்தால் வாழ்க்கையில் முன்னேறவே முடியாதா?” என்ற கேள்விக்கு விடை தெரியாமல் சில இளைஞர்கள் தங்கள் பாதையில் தடம் புரளுகிறார்கள். “நேர்மையோடு வாழ்பவர்களின் வெற்றி நிரந்தரமாய் அமையும்என்பதைப் புரிந்துகொண்டவர்கள் வாழ்க்கையை ரசிக்கிறார்கள்.

அது ஒரு மிகப்பெரிய ஆலை.

அந்த ஆலையை சிறிய ஆலையாகத் தொடங்கியவர் ராஜாராம். பின்னர், மிகப்பெரிய ஆலையாக மாற்றியப் பெருமை அவரையே சாரும்.

பல வருடங்களாக அந்த நிறுவனத்தை வளர்த்து, நிர்வாக இயக்குநராக பணிபுரிந்த ராஜாராம், அந்த நிறுவனத்தின் பொறுப்பை வேறு ஒருவரிடம் கொடுக்க முடிவு செய்தார்.

வயதான நிலையில் இன்னொரு நிர்வாக இயக்குநரை தேர்ந்தெடுக்கவும் திறமையானவரை கண்டுபிடிக்கவும் முயற்சி செய்தார். தனது ஆலையில் பணிபுரிந்த அனுபவமிக்க பணியாளர்களை அழைத்தார்.

நிர்வாக இயக்குநர் பொறுப்பிலிருந்து நான் ஓய்வுப் பெறப்போகிறேன். எனக்குப் பின்னர் இந்த நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக பணிபுரிய உங்களில் ஒருவரைத்தான் தேர்ந்தெடுக்கப் போகிறேன். உங்களில் ஒருவரைத் தேர்வு செய்ய நான் ஒரு போட்டி நடத்தப்போகிறேன். அந்தப் போட்டியில் வெற்றி பெற்றவர்தான் எனக்குப்பின் பொறுப்பேற்கும் இந்த ஆலையின் நிர்வாக இயக்குநர்” – என நிர்வாக இயக்குநர் ராஜாராம் சொன்னதும் பணியாளர்கள் ஆர்வத்தோடு கவனித்தார்கள்.

நிர்வாக இயக்குநர் மீண்டும் தொடர்ந்தார்.

என்னிடம் இப்போது பலவகையான விதைகள் உள்ளன. இந்த விதைகளை நான் உங்கள் ஒவ்வொருவருக்கும் ஆளுக்கு ஒன்றாகத் தருகிறேன். எந்த விதை யாருக்குத் தருகிறேன் என்று எனக்கே தெரியாது. நீங்கள் உங்கள் வீட்டிற்கு இந்த விதையைக் கொண்டு செல்லுங்கள். வீட்டில் ஒரு தொட்டியில் இந்த விதையை ஊன்றுங்கள். நன்றாக நீர் ஊற்றி வளருங்கள். தேவையான உரமிடுங்கள். அடுத்த ஆண்டு இந்தச்செடி நன்றாக வளர்ந்தபின் நீங்கள் என்னிடம் அதனைக் காட்ட வேண்டும். அப்போது யாருடைய செடி செழிப்பாக உயர்ந்து வளர்ந்திருக்கிறதோ அவர்தான் எனது ஆலையின் முழு பொறுப்பையும் கவனிக்கும் நிர்வாக இயக்குநராக பதவியேற்பார்என்றுசொல்| போட்டியை ஆரம்பித்தார்.

நிர்வாக இயக்குநர் கொடுத்த விதையை அந்தப் பணியாளர்கள் வாங்கிச் சென்றார்கள். பணியாளர்களில் ஒருவர்தான் ராஜன். தனக்கு கிடைத்த விதையை வீட்டிற்கு வாங்கிக்கொண்டுவந்து தனது மனைவியிடம் காண்பித்தார்.[hide]

இது நமது முதலாளிநமக்குத் தந்த விதை. இதனை தொட்டியில்வைத்து கண்ணும் கருத்துமாக வளர்க்க வேண்டும்என்று சொன்னார். புதிய தொட்டியில் மண் நிரப்பி விதையை ஊன்றினார்கள். தனது மனைவியை நாள்தோறும் தண்ணீர் ஊற்றவும் ஏற்பாடு செய்தார் ராஜன்.

ஆலை பணிக்காக தினந்தோறும் அவர் செல்லும்போது மனைவியை தொட்டியை காவல் காக்கவும் சொன்னார் ராஜன்.

சிலநாட்கள் சென்றபின்பு அனுபவமிக்க அந்தப் பணியாளர்கள் சிற்றுண்டிச் சாலையில் சந்தித்துக்கொண்டார்கள்.

உனது செடி எப்படி வளர்கிறது?” என்று ஒருவருக்கொருவர் கருத்து கேட்டுக்கொண்டார்கள். 

எனது செடி பிரமாதமாக வளருகிறதுஎன்று எல்லோருமே பேசி மகிழ்ந்தார்கள்.

ராஜனின் மனம் வேதனைப்பட்டது.

நமது முதலாளி கொடுத்த விதை முளைக்கவில்லையே? மற்றவர்களுக்கெல்லாம் செடி வளர ஆரம்பித்துவிட்டதே!” என்று நினைத்தபோது கவலை அதிகமானது.

நாட்கள் மாதங்களாக மாறியது.

சுமார் 4 மாதங்கள் கழித்தபின்பும், ராஜன் வீட்டுத்தொட்டியில் விதை முளைக்கவே இல்லை. ஆனால், நாள்தோறும் தொட்டியில் தண்ணீர் ஊற்றிக்கொண்டே இருந்தார்கள்.

தனது தொட்டியில் செடி வளரவில்லைஎன்பதை ஆலையில் பணிபுரியும் பணியாளர்களிடம் ராஜன் சொல்லவில்லை.

சரியாக ஓர் ஆண்டு நிறைவுப் பெற்றது.

அனைவரது தொட்டிகளையும் நிர்வாக இயக்குநர் கொண்டுவந்து காண்பிக்க நாள் குறித்தார்.

ராஜன் மனதிற்குள் அழுதார்.

எல்லோரும் செழித்து வளர்ந்த செடியை கொண்டுவருவார்கள். நான் மட்டும் விதை முளைக்காத வெற்றுத் தொட்டியை கொண்டுபோவது எனக்கு அவமானமாக இருக்கிறதுஎன்று வருந்தினார்.

அவரது மனைவி அருகில் வந்து ஆறுதல் சொன்னாள்.

உங்கள் நிர்வாக இயக்குநர் சொன்னதைத்தான் நீங்கள் செய்தீர்கள். தொட்டியில் விதை முளைக்காததற்கு நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. நிர்வாக இயக்குநரிடம்போய் உண்மையைச்சொல்லி இந்தத் தொட்டியைக் காட்டுங்கள்என்ற மனைவியின் சொல் மந்திரமானது.

தொட்டியைத் தூக்கிக்கொண்டு ஆலைக்கு வந்தார் ராஜன்.

மற்ற பணியாளர்களுடைய தொட்டியில் விதை முளைத்து, பெரிய செடியாகி, பூக்கள் நிறைந்து காணப்பட்டது. தொட்டியை வரிசையாக வைத்தார்கள்.

செடியை வளர்க்கச் சொன்னால், நீர் வெறும் தொட்டியை கொண்டு வந்திருக்கிறிரே?” என்று ராஜனது தொட்டியைப் பார்த்து அனைவரும் கே| செய்ய ஆரம்பித்தார்கள்.

அவமானத்தால் நடுங்கி நின்றார் ராஜன். அப்போது செடிகளைப் பார்வையிட நிர்வாக இயக்குநர் வந்தார்.

அனுபவமிக்க பணியாளர்களான உங்களில் ஒருவர்தான் நிர்வாக இயக்குநராக பதவி ஏற்கப் போகிறீர்கள்என்று சொல்|க்கொண்டே கடைசியில் நின்றிருந்த ராஜனை அழைத்தார்.

ராஜன் நடுங்கிப்போனார்.

இன்றோடு எனது வேலை பறிபோகப்போகிறதுஎன்று பயந்து பதறினார்.

ஒரு வருடமாக செடியை பராமரித்ததை விரிவாகச் சொன்னார்.

விதை முளைக்கவில்லைநான் என்ன செய்வது?” என்று தலைகுனிந்து நின்றார் ராஜன்.

ராஜனை அருகில் அழைத்து, “நீர்தான் நமது ஆலையின் நிர்வாக இயக்குநராக பொறுப்பேற்க வேண்டும்என்று மகிழ்ச்சியோடு சொன்னார் நிர்வாக இயக்குநர்.

எல்லோரும் அதிர்ச்சியோர் பார்த்தார்கள்.

நான் சொல்வது உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். நான் உங்களுக்கு தந்த விதைகள் எல்லாமே வெந்நீரில் அவிக்கப்பட்ட விதைகள். அவிக்கப்பட்ட இந்த விதைகள் எப்படி முளைக்கும்? நான் கொடுத்த விதைக்கு முளைக்கும்தன்மை கிடையாது. ஆனால், நீங்கள் எல்லோரும் வேறு ஒரு விதையை நட்டு செடியை வளர்த்து இங்கே கொண்டுவந்திருக்கிறீர்கள். ஆனால், ராஜன் மட்டும் மிக உண்மையாக நடந்திருக்கிறார். நான் அவரது நேர்மையைப் பாராட்டுகிறேன். எனது நிறுவனத்தை நிர்வகிக்க நேர்மையான பணியாளர்தான் தேவை. இன்றிலிருந்து ராஜன் நமது ஆலையின் நிர்வாக இயக்குநர்என்று சொல்லிக்கொண்டே நிர்வாக இயக்குநரின் அறைக்கு ராஜனை அழைத்துச்சென்றார்.

ராஜன் ஆனந்த கண்ணீர் பெருக நிர்வாக இயக்குநர் இருக்கையில் அமர்ந்தார்.

இது ஒரு நிகழ்வாகத் தோன்றினாலும், “வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்என எண்ணுபவர்கள் நேர்மையோடு நேரான பாதையில் செயல்பட்டால், வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

தொடரும்.[/hide]

இந்த இதழை மேலும்

நேரம் ஒரு மூலதனம்..

வேகமாகச்செல், வேகமாகச் செல். உன்னுடைய உயிரை காப்பாற்றிக் கொள்ள வேகமாகச் செல். இந்த எழுத்துக்கள் எட்டாம் ஹென்றி காலத்தில் தபால் உறையின்  மீது எழுதப்பட்டிருந்தது.

தபால் போக்குவரத்து இல்லாத அந்தக் காலத்தில் அரசாங்கத்துத் தூதுவர்களே கடிதங்களை எடுத்துச் சென்றனர். அவர்கள் வழியில் தாமதித்தால் என்ன தண்டனை தெரியுமா? மரணதண்டனை.

நாம் இன்று சில மணி நேரத்தில் கடந்து செல்லும் தூரத்தை வாரக்கணக்கில் நடந்து செல்ல வேண்டி இருந்த காலக்கட்டத்திலும் கூட தாமதமானது பெரும் குற்றமாகக் கருதப்பட்டது.

அந்தக் காலத்தில் உள்ளவர்கள் ஒரு நாளில் செய்ய வேண்டிய காரியத்தை இன்று ஒரு மணி நேரத்தல் செய்து முடிக்கும் வகையில் ராக்கெட் வேகத்தில் முன்னேறிக் கொண்டு இருக்கும் பொழுது.

அன்று அனாவசிய தேவையற்ற தாமத்திற்கு மரண தண்டனை என்றால்  இன்று அவ்வித குற்றத்திற்கு என்ன தண்டனை அளிக்கப்பட வேண்டும்?

சோம்பேறித்தனத்தின் காரணமாக ஏற்பட்ட அனாவசியத் தாமத்தால் உலகில் ஏற்பட்ட அழிவுகள் அளவிட முடியாதவை. எத்தனையோ பேரரசுகள் சரிந்திருக்கின்றன. எத்தனை முடியரசுகள் கவிழ்ந்து உள்ளது.

எனவே தான் நெப்போலியன் கூறினார், இழந்தவிட்ட ஒவ்வொரு நிமிடமும் துயரத்திற்குச் சந்தர்ப்பம் அளிக்கிறது. உடனுக்குடன் காரியங்களை ஒழுங்காக செய்வது போன்று நமக்கு வெற்றி மாலை சூட்டக்கூடியது வேறு ஒன்றும் இல்லை.

இதே போன்று செய்ய வேண்டியதை ஓத்திப்போட்டு கொண்டு செல்லது போல துன்பப்படுகுழியில் தள்ளக்கூடியதும் வேறு ஒன்றும் இல்லை.

காலம் என்னும் கடிகாரத்தில் ஒரே ஒரு சொல் தான் பொறிக்கப்பட்டிருக்கிறது. அது என்னவென்றால் இப்பொழுதே என்பது தான். அது தான் வெற்றி வீரனின் தாரக மந்திரமாகும்.

பின்பு அப்புறம், பிறகு என்பது தோல்வியின் தோழமைச்சொல் அன்றாடம் செய்யப்பட்டிருக்க வேண்டிய வேலைகளை ஒத்திப் போட்டால் அவை மலை போல்குவிந்து மலைக்க வைத்துவிடும்.

இப்படித்தான் நம்முடைய வாழ்வில் ஒழுங்கினங்களும் தன்னுடைய கொடி உருவத்தைக் காட்டத் தொடங்குகிறது அதனால் நம்முடைய வாழ்வு சிறப்பின்றி சீதனம் குன்றி அமைந்து விடுகிறது.

செய்ய வேண்டிய வேலையை உடனுக்கு உடன் செய்யாமல் இருப்பது வாழ்க்கையின் வெற்றி சக்கரத்தை ஒட செய்யாமல் செய்து விடும்.

ஒரு வேலையை ஒத்திப் போடுவது என்றால் என்ன? அதைப் புதைக்குழியில் போட்டு மூடிவிடுவது தான், பின்பு பார்ப்பது இல்லை என்பது தான்.

ஒரு வேலையைச் செய்வது ஒரு விதையை விதைப்பது போலாகும். அது உரிய காலத்தில் நடவு நட்டப்படவில்லை பலன் அதற்கு ஏற்றார் போல் தான் இருக்கும்.

எனவே இப்பொழுது என்பது நமக்கு அருளப்பட்டிருக்கும் மாணிக்கம். அதனை நல்ல முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். தோசையை சுடச்சுடச் சாப்பிடும் சுவை, அது ஆறிய பின்பு இருக்குமா?

இதே போன்று தான் தள்ளிப் போடப்பட்டிருக்கும் வேலையும் இருக்கும். இதனால் நமக்கு உற்சாகம் குறைந்து விடுவதோடு, நம்முடைய ஆற்றலையும் சக்தியையும் இழக்கும்படி செய்து விடுகின்றது.[hide]

நான் வெற்றி அடைந்ததற்குக் காரணம், நான் எப்பொழுதும் தயராக இருந்தது தான் என்கிறார் ஹென்றி போர்டு. பத்து மணிக்கு வேலையை செய்வதாக இருந்தால் நான் ஒன்பது மணிக்கே தயாராகி விடுவேன்.

எனக்காக வேண்டி நான் யாரையும் ஒரு நிமிடம் கூட காத்திருக்க விடுவதில்லை என்று அவர் விளக்கம் தந்தார்.குறுகிய காலத்தில் இவ்வளவு அதிகமான வேலையைத் தங்களால் எவ்விதம் செய்ய முடிகிறது என்று உலக புகழ் பெற்றஎழுத்தாளர் சர்வால்ட்டா ரேலேயிடம் கேட்ட போது.

நான் எதையும் செய்ய வேண்டி இருந்தால் அதனை எவ்விதம் பொது வாழ்வில் ஈடுபட முடிகிறது என்று ஒரு பிரெஞ்சு அரசியல்வாதியிடம் ஒருவர் கேட்டார்.

இன்றைய வேலையை நான் ஒரு போதும் நாளைக்கு என்று தள்ளிப் போட்டது இல்லை. என்று கூறினார். வாழ்க்கையில் முன்னேறி  வெற்றி பெற்றவர்களை கவனித்தால் அவர்கள் நேரத்தைச் செலவிடுவதில் சிக்கனக்காரர்களாக இருந்திருக்கிறார்கள்.

உடல் அமைப்பு கலைஞரான ஜான் ஹாண்டர் முதுமையிலும் ஓயாது வேலை செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று ஒருவர் கேட்டார்.

உடனே ஜான் ஹாண்டர், ஆம் நான் இறந்து போன பின்பு மற்றொரு  ஜான் ஹாண்டரைக் காண முடியுமா? என்று திருப்பிக் கேட்டார்.

ஒருவர் தன்னைப் பார்க்க வந்திருக்கிறார். என்பதை அறிந்ததும் அவருக்கென்று எவ்வளவு நேரம் செலவிடுவது என்று தீர்மானிப்பதில் அமெரிக்க ஜனாத்பிதி ரூஸ்வெல்ட் மிகவும் கெட்டிக்காரர்.

ஒருவர் அவருடைய அறைக்குள் நுழைந்ததும், தான் அவரை நீண்ட காலமாக சந்திக்க விரும்பியதை போன்று உணர்ச்சியை அவருடன் கை குலுக்கும் போதே காட்டிக்கொள்வார்.

ஆனால் அந்த அன்பான வரவேற்றப்பின் நடுவே வந்தவர் கூற வேண்டிய விஷயத்தை மட்டுமே சொல்ல வேண்டும் என்றும் பல நண்பர்கள் காத்துக்கெண்டிருக்கிறார்கள் என்றும் தெளிவு படுத்திவிடுவார்.

அதனால் வந்தவர் விஷயத்தைச் சுருக்கமாகக் கூறிவிட்டு விரைவில் சென்றுவிடுவார்கள் இவரைப் போலதான் காமராஜரும் நடந்துகொள்வார் தன்னைப் பார்க்க வந்த எல்லோரையும் சந்தித்துப் பேசுவார்.

அவரவர்களுடைய குறைகளைக் கேட்டு நிவர்த்தி செய்ய உடனே நடவடிக்கையை மேற்கொள்ளச் செய்வார். ஏழையாக இருந்தால் அவருக்கு வேண்டிய உதவியை உடனுக்கு உடன் செய்து கொடுப்பார்.

நேரம் ஒரு மூலதனம் என்பதை அவர்கள் ஒரு நாளும் மறந்தது கிடையாது. இதனையே தான் நாமும் பின்பற்ற வேண்டும். அப்பொழுது தான் நாமும் அவர்களைப் போல ஆகமுடியும்.[/hide]

இந்த இதழை மேலும்

இளம் இரவிவர்மா…

ஓவிய ஓடைகளில் ஓளிரும் ஓவியர் கோ.மோ.. தருண்ராஜா என்பவர்.கோபிசெட்டிபாளையத்தில் வைரவிழா பள்ளியில் படித்து வைரமாக ஜொலிப்பவர். தற்போது கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இயற்பியல் துறை மூன்றாம் ஆண்டில் படிக்கும் இவர் ஓவியத்தில் பல சாதனைகள் புரிந்து வருகிறார்.

2009 ஆம் ஆண்டு தொடங்கிய இவர் சாதனைப் பயணம் இன்றுவரை தொடர்கிறது. 2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை விருதுகளின் நாயகனாகவே வாழ்ந்துள்ளார். விஸ்வமலர் நாளிதழின் சார்பாக இளம் ஓவியர் விருது, பாரதிதாசன் கல்வி நிறுவனத்தின் சார்பாக இளம் ஓவியர் விருது, பணி தாய் மொழி விருது பெற்றுள்ளார் தருண்ராஜா.

தமிழிற்கே ஒளி சேர்க்கும் வகையில் திகழும் அகத்திய முனிவர் கலை இலக்கியம் பண்பாட்டு ஆய்வு மையம் சார்பில் தமிழ் ஓளி விருது மேலும் கலைச் செம்மல் விருது, எக்ஸல் காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி சார்பாக பெஸ்ட் பெயிண்டர் விருது, ஜெனரல் சேம்பியன் கிளப் சார்பில் ஜெனரல் சாம்பியன் விருது.  2016- 2017 ஆண்டு ஓவியருக்கான தமிழ்நாடு சாம்பியன் பட்டமும் பெற்றுள்ளார்.

படிப்பும், ஓவியமும் ஒரு புறம் இருக்க மானுடம் போற்றும் வகையில் குழந்தைகளுக்கு இலவச ஓவியப் பயிற்சியை அளித்தும் வருகிறார்.[hide]

2009 ஆம் ஆண்டு முதல் 90க்கும் மேற்பட்ட ஓவியப் போட்டியில் பங்கு பெற்று 70க்கும் மேற்பட் போட்டியில் வெற்றி பெற்றதோடு மொத்தம் 10 விருதுகள் பெற்றுள்ளனார். மேலும் 3 முறை மாநில அளவிலான போட்டிகளில் சாதித்தும் உள்ளார்.  2015 ஆம்ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை மாவட்ட அளவிலான போட்டிகளில் 12 முறை வென்றுள்ளார்.

கடந்த 2017,2018,2019 ஆகிய மூன்று கல்வியாண்டுகளில் இவரின் வெற்றிக்குப் பொற்காலம் எனலாம். ஈரோட்டில் நடைபெற்ற புக் ரீடர்ஸ் சார்பாக நடைபெற்ற ஓவியப் போட்டிகளில் தொடர்ந்து மூன்று முறை மாவட்ட அளவில் வெற்றி பெற்றுள்ளார்.  இதுவரை 500 க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளார்.

வரும் காலத்தில் ஓவிய ஆசிரியராக வர வேண்டும் என்பதை இவர் விருப்பம்.

இளம் இரவிவர்மாகத் திகழும் இவரை தன்னம்பிக்கை மாத இதழ் மனதார வாழ்த்துகிறது.[/hide]

இந்த இதழை மேலும்

வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 16

101 காக்கத் தகுந்த வாக்குறுதிகள்

(101 Promises worth keeping)

இந்த நூலின் ஆசிரியர் நீல் எஸ்கெலின் (Nil Eskelin) ஆவார். (தமிழில் லலிதா கல்யாண சுந்தரம் மொழிபெயர்த்துள்ளார். மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ் வெளியிட்டுள்ளது.) இந்நூல் பின்வரும் ஐந்து இயல்களில் அமைந்துள்ளது.

1. குடும்பம் மற்றும் நண்பர்களுக்குத் தரும் வாக்குறுதிகள்.

2. உங்கள் உதவியாளர்களுக்குத் தரும் வாக்குறுதிகள்.

3. எனக்கு நானே தரும் வாக்குறுதிகள்.

4. என் உலகத்துக்கு நான் அளிக்கும் வாக்குறுதிகள்.

5. என்னை படைத்த இறைவனுக்குத் தரும் வாக்குறுதிகள்.

இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள ஐந்து பிரிவுகளில் 101 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த நூலின் முன்னுரை இப்படித் தொடங்குகிறது.

ஒரு நாள் மாலை பையன் அப்பாவிடம் கேட்டான், இன்னிக்கி ராத்திரி சாப்பிட்டப்புறம் பாஸ்கின் ராபின்ஸ் ஐஸ்கிரீம் கடைக்குப் போலாமா?”

அப்பாவும்போலாம்என்றார்.

பையனுக்குநம்பிக்கைவரவில்லை, “பிராமிஸ்?”

அப்பா, “.கே. ப்ராமிஸ்.”

திங்கட்கிழமை இரவு கால் பந்தாட்டத்தைக் காரணம் காட்டி அப்பா பின் வாங்கி விட்டதில் பையனுக்கு ரொம்ப ஏமாற்றம், அப்பாவின் இமேஜ் பாழாகிவிட்டது.

வாழ்க்கையின் ஒவ்வொரு களத்திலும், வீடாகட்டும், வியாபாரமாகட்டும் அல்லது சமூகமாகட்டும் நாம் நமது வாக்குறுதிகளால் அல்ல, நமது செயல்பாடுகளால் மட்டுமே அளக்கப்படுகிறோம். காக்கப்படும் ஒவ்வொரு வாக்குறுதியும், நமது வாழ்க்கை அஸ்திவாரத்திற்கு ஒரு கல். போதுமான அளவு கற்கள் இடப்பட்டதும் நீங்கள் உறுதியான, நம்பகமாக ஒரு கட்டிடத்தை எழுப்பலாம்.

வாக்குறுதிகள் கொடுப்பதோடு வேலை முடிந்து விடுவதில்லை. அவற்றை ஒவ்வொரு நாளும் புதுப்பிக்க வேண்டும். வாழ்நாள் முழுவதும் காக்க வேண்டும். 101 வாக்குறுதிகளில் ஒருசில வாக்குறுதிகளை வருமாறு காண்போம்.

எனது திருமண பந்தத்தைக் காக்க நான் உறுதி கூறுகிறேன்

ஹென்றிபோர்டின் 50வது திருமண ஆண்டு நிறைவின்போது, “உங்கள் மகிழ்ச்சியான இல்லறத்தின் ரகசியம் என்ன? என்று ஒரு நிருபர் அவரைக் கேட்டார்.

சிறிது கூடத் தயங்காமல் உடனே ஃபோர்ட் கூறிய பதில் இதுதான். “என் பிசினெசை வெற்றிகரமாக்கிய அதே பார்முலாதான், ஒரே மாடலை வைத்திருக்க வேண்டும் என்றார்.

இன்றைய பயமுறுத்தும் விவாகரத்து புள்ளி விவரங்கள் நமக்குக் காட்டுவது, பிரச்சினை திருமணத்தில் அல்ல, ஆதாம், ஏவாள் காலத்திலிருந்து தம்பதிகள் பிரச்சினைகளையும், அழுத்தத்தையும் சந்தித்து வந்திருக்கிறார்கள்.உண்மையான அவலம் என்னவென்றால் ஒட்டுறவில்தான் பிரச்சினை. மக்கள் உண்மையாக நடந்துகொள்வதில்லை.

உங்கள் வாழ்க்கைத் துணைக்கு நீங்கள் தரும் வாக்குறுதி நழுவக் கூடிய ஓட்டைகள் நிறைந்த ஒப்பந்தமல்ல, அது ஒரு நிரந்தர புனித உடன்படிக்கை. இவ்வாறாக ஒவ்வொரு வாக்குறுதி பற்றியும் மிக அர்த்தமிக்க எடுத்துக்காட்டுக்களுடன் இந்நூலாசிரியர் வாக்குறுதியின் அடர்த்தியை சுருக்கமாக விவரித்துச் செல்கிறார். இந்நூலை ஒரேமட்டில் ஒரு நாவலைப் படிப்பதுபோல படித்துவிட முடியாது. நின்று நிதானித்து நம் வாழ்க்கையுடனும் நாம் கொடுத்துள்ள வாக்குறுதிகளுடனும் ஒப்பிட்டுப் பார்த்து; மிகக் கவனமாகப் படிக்க வேண்டிய நூல் இந்நூல். ஒவ்வொரு வாக்குறுதியை விளக்குவதற்காக நீல் எஸ்கெலின் எடுத்துக்காட்டும் கதைகள், உதாரணங்கள் மிகச் சிறப்பானவை ஆகும்.

நான் என் குழந்தைகளுக்கு முன் மாதிரியாக இருப்பேன்

ஒவ்வொரு தாய் தகப்பனும் கூடிய சீக்கிரம் தன்னைப் போலவே தன் மக்களும் தயாராவார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். தன்னை முன் மாதிரியாக நினைத்துக்கொள்ள வேண்டும். நல்லவரோ, கெட்டவரோ, நேர்மையானவரோ, ஏமாற்றுக்காரரோ, ஒழுக்கமானவரோ, ஒழுக்கமற்றவரோ, நாம் தான் நம் குழந்தைகளுக்கு அளவுகோல்களை நிர்ணயிக்கிறோம். ஒரு குழந்தை சமுதாயமெனும் நெசவில் இறுதியில் எப்படி இடம்பெறுகிறது என்பதில் தாய் தகப்பனின் ஒவ்வொரு சொல்லும் செயலும் ஒரு முக்கியமான இழையோட்டமாகிறது. இதேபோன்று குடும்பம் பற்றி அமையும் வாக்குறுதிகளில் சில வருமாறு.

என் குடும்பத்தோடு செலவழிக்கும் நேரத்தைப் பொக்கிஷமாகக் கருதுவேன்.

ஒரு நல்ல சூழ்நிலையை வீட்டில் பராமரிக்க உறுதி கூறுகிறேன்.

என் குடும்பத்தின் பொருளாதாரப் பாதுகாப்புக்கான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

நம் இல்லம் மகிழ்ச்சியாலும் சிரிப்பாலும் நிறைந்திருக்கும்.

நான் என் பெற்றோருக்குப் பெருமை தேடித் தருவேன்.

நான் எனது அன்பையும் பாசத்தையும் காட்ட உறுதி கூறுகிறேன்.

நன்றி கூற ஒருபோதும் மறக்க மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன்.

நான் கருணையுடையவனாக இருப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.

அடுத்தவர் கருத்தை மதிப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.

தீங்கான விமர்சனத்தைத் தவிர்ப்பேன்.

அடுத்தவர்களை எடைபோடுவதை நிறுத்திவிடுவேன்.[hide]

பொறாமையை வெல்ல உறுதி பூணுங்கள்

அடுத்தவர் மீது பொறாமைப்படுவது வேகாததைத் தின்பதைப் போல; வயிற்றுவலி உங்களுக்குத்தான் வரும். ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் யாரைப் பார்த்துப் பொறாமைப்படுகிறீர்களோ அவர் மீது உங்களுக்கு மிகவும் உயர்ந்த மதிப்பு இருக்கிறது; பொறாமை உங்களுக்குப் பிடிக்காதவர்கள் மீது வருவதில்லை. அடுத்தமுறை பொறாமை தலை தூக்கினால் உங்களுக்கு நீங்களே இப்படிச் சொல்லிக் கொள்ளுங்கள். எனக்கு இவரை பிடித்திருக்கிறது. அதை நான் ஏன் நல்ல முறையில் வெளல்ப்படுத்தக்கூடாது. வாழ்வில் முன்னேற கூடுதல் முயற்சி தேவை; பொறுமையும் தேவை; நட்பில் உறுதி தேவை; நட்பில் வெற்றிபெற உங்கள் இதயத்தைக் கொடுங்கள் என்கின்றார் நீல் எஸ்கெலின்.

உங்கள் உதவியாளர்களுக்குத் தரும் உறுதிமொழிகள்

நாம் தனியே வாழவில்லை; பிறருடன் சேர்ந்தே வாழ்கிறோம். வெற்றி என்பதும் தனியே இல்லை. பிறருடன் சேர்ந்தே வெற்றிபெறுகிறோம். ஆக நாம் பிறருடன் வாழ்க்கையில் நம் மீது அவர்களுக்கு நம்பிக்கை மேம்படவும், தலைமைப்பண்பு, உயர்வு, கூட்டுறவு, உறுதிப்பாடு இவற்றில் நாம் உறுதியுடன் செயல்பட வேண்டும். இதனையே இப்பகுதியில் இந்நூல் விரித்துப் பேசுகின்றது. இப்பகுதியில் சொல்லப்பட்டுள்ள சில வாக்குறுதிகள்.

நான் எனது செயல்களுக்கு பதிலளிப்பேன்.

என் செயல் சிறந்ததாக விளங்கும்.

நான் என்னை ஒரு தொழில் வல்லுனராக நடத்துவேன்.

சந்திப்புக்களுக்குக் காலம் தவறாமையைக் கடைப்பிடிப்பேன்.

சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பேன்.

கிடைக்கும் வருமானத்துக்கு உண்மையாக உழைப்பேன்.

பெறுபவராக அல்லாமல் கொடுப்பவராகவே இருப்பேன்.

பழிவாங்க மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன்.

எனது தலைமைப் பண்புகளை நன்கு வளர்ப்பேன்.

கூட்டுறவை வளர்ப்பேன்; போட்டியை அல்ல.

நான் என் உதவியாளர்களை வேலைக்காரர்களாக அல்ல, கூட்டாளிகளாக நடத்துவேன்.

என் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தமாட்டேன்.

நம்பகத்தன்மையைச் செயல்படுத்துவேன்.

இவ்வாறு அமையும் இப்பகுதியில் நிறைய தலைமைப்பண்பு சார்ந்த செய்திகளை ஆசிரியர் உதாரணம் காட்டுகிறார். தலைமைப் பண்பு குறித்துச் சொல்கையில்,

உண்மையான தலைவர்கள் தனித் தீவுகளல்ல, அணுகக் கூடியவர்கள்.

உண்மையான தலைவர்கள் கடுமையானவர்கள் அல்ல, அக்கறை உடையவர்கள்.

உண்மையான தலைவர்கள் கொள்கைக்குக் கட்டுப்படாமல் மக்களுக்குக் கட்டுப்பட்டவர்கள்.

உண்மையான தலைவர்கள் பழம் பஞ்சாங்கமாக இல்லாமல் புதிய கருத்துக்களை மனம் திறந்து வரவேற்பவர்கள்.

தலைவர்கள் வழி நடத்துகிறவர்கள்.

எதையும் சுமாராகச் செய்யாதீர்கள்.

உனக்குப் பிறர் செய்ய வேண்டுமென்று எதிர்பார்ப்பதை நீ மற்றவர்களுக்குச் செய்.

எனக்கு நானே தரும் வாக்குறுதிகள்

ஆரோக்கியமற்ற அச்சத்தைப் போக்கவும், எதிர்மறைப் பழக்கங்களை அழிக்கவும், உணர்வுகளைக் கட்டுப்படுத்தவும்; திறன் மேம்பாட்டுக்கும், சுய வளர்ச்சிக்கும் உதவும் வாக்குறுதிகள் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.

நான் உண்மையையே பேசுவேன் என்று உறுதியளிக்கிறேன்.

என் வார்த்தையே என் வாக்கு.

என் கொள்கைகளிலிருந்து எப்போதும் பின்வாங்க மாட்டேன்.

நான் பேசுவதை விட அதிகமாகக் கவனிக்க உறுதியளிக்கிறேன்.

எனது சிந்தனை உலகத்தைக் கட்டுப்படுத்துவேன்.

சராசரியில் திருப்தி கொள்ள மாட்டேன்.

அடையக் கூடிய லட்சியங்களை ஏற்படுத்திக் கொண்டு அவற்றை அடைவேன்.

என் குறிக்கோளில் கருத்தாக இருப்பேன்.

என்னை வளர்க்கக் கூடிய சவால்களை ஏற்றுக்கொள்வேன்.

நான் தவறுகளிலிருந்து பாடம் கற்பேன்.

ஆரோக்கியமற்ற அச்சத்தையும், கவலைகளையும் விட்டுவிடுவேன்.

கசப்பையும், வெறுப்பையும் புதைத்துவிடுவேன்.

என் உணர்வுகளைக் கட்டுப்படுத்துவேன்.

என் கோபத்தைக் கட்டுக்குள் வைப்பேன்.

என் அகராதியில் தரக்குறைவான சொற்கள் இருக்காது.

வதந்திகளை உருவாக்க மாட்டேன்.

நல்லதே நடக்கும் என்ற மனப்பான்மையை வளர்த்துக்கொள்வேன்.

ஒவ்வொரு நாளையும் உற்சாகத்தோடு எதிர்கொள்வேன்.

தள்ளிப் போடுவதைத் தவிர்ப்பேன்.

பகட்டை வழியனுப்புவேன்.

நான் எனது கனவை ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டேன்.

என்று விரியும் இப்பகுதியில் நிறைய பொன்மொழிகளைக் குறிப்பிடுகிறார் நீல்கெலின். அவற்றில் சில,

இரண்டு எலிகளை வேட்டையாடுபவன் எதையும் பிடிக்க மாட்டான்.

யாராவது உங்களை நிழற்படம் எடுக்கும்போது வரும் ஓளிக்கற்றை கண நேரத்துக்கு உங்களைக் குருடாக்கி விடுகிறதல்லவா! அதைபோலத்தான் கோபமும் நம்மைப் பாதிக்கிறது.

யோசித்துக் கொண்டிருக்காமல் உடனே செயலில் இறங்குங்கள்.

விஜயங்கள் தவறாகப் போகும் நேரம், பழிபோட ஆளைத் தேடும் நேரமல்ல, அது சாதனைக்குரிய காலம்.

நீங்கள் திட்டமிட்டது எல்லாவற்றையும் அடைந்துவிட்டீர்கள் என்றால் நீங்க்ள போதுமான அளவு திட்டமிடவில்லை என்று பொருள்.

வயதாவதால் வளர்ச்சி நின்றுவிடுவதில்லை. வளர்ச்சி நின்று விடுவதால்தான் வயதாகிறது.

ஒன்றை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், நீங்கள் எதற்குக் குறி வைத்தீர்கள் என்று மற்றவர்கள் பார்ப்பதில்லை, எதை அடித்தீர்கள் என்றுதான் பார்க்கிறார்கள்.

என் உலகத்துக்கு நான் அளிக்கும் வாக்குறுதிகள்

உங்கள்சமுதாயத்தைஉயர்த்துவதும், நலிந்தோருக்கு நம்பிக்கையும் நல்லாதரவும் தரும் வாக்குறுதிகள் இப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.

நான் எனது நாட்டை மதித்துக் காப்பேன்.

நமது நாட்டின் தலைவர்களுக்காகக் கடவுளிடம் வேண்டுவேன்.

சட்டத்தை அதன் உயிர்ப்போடு உள்ளபடியே பாதுகாப்பேன்.

ஒரு வலிமையான சமுதாயத்தை உருவாக்க உதவுவேன்.

நான் அடுத்தவரின் தேவையை உணர்வேன்.

துன்புறுவோருக்கு உதவிக்கரம் நீட்டுவேன்.

தகுதியான முயற்சிகளை ஆதரிப்பேன்.

இப்பகுதியில்இடம்பெற்றுள்ளசிலவாழ்க்கைநியதிகள்.

தனது உடைமைகளை ஏழைகளுக்கு வழங்குபவன் அதே அளவும் அதைப்போல் பத்து மடங்கு பெறுகிறான்.

விளக்கு தொடர்ந்து எரிய வேண்டுமானால் தொடர்ந்து எண்ணையிட வேண்டும்.

ஒரு மாபெரும் தேவையைச் சந்திப்பது ஒரு பெரிய போராட்டத்தை நடத்துவதற்கு ஒப்பாகும்.

என்னைப் படைத்த இறைவனுக்கு நான் தரும் வாக்குறுதிகள்

எல்லாம் வல்ல இறைவன் உங்களுடன் ஓர் ஒப்பந்தம் போட்டிருக்கிறார். இப்போது உங்கள் முறை. உங்கள் சமயப் பற்று, செல்வ நிர்வாகம், உங்கள் எதிர்காலம் சார்ந்த சில வாக்குறுதிகளைத் தர உங்களைக் கேட்டுக்கொள்கிறேன் என்று வேண்டும் ஆசிரியர் இப்பகுதியில் சொல்லியுள்ள சில வாக்குறுதிகள் வருமாறு.

முக்கிய விஷயங்களுக்கு முன்னுரிமை தருவேன்.

நான் தினமும் கடவுளை வணங்குவேன்.

நான் இறைவனின் சொற்களைப் படிப்பேன்.

என் வாழ்க்கை என் நம்பிக்கையைப் பிரதிபலிக்கும்.

இறைவனின் நற்செய்தியை மற்றவர்களோடு பகிர்வேன்.

சலனத்து அடிபணிய மாட்டேன்.

நிறைவாக

இந்தப் புத்தகம் கொடுக்கத் தகுந்த வாக்குறுதிகளைப் பற்றியதல்ல. காக்கத் தகுந்த வாக்குறுதிகளைப் பற்றியது. நீங்கள் காக்கும் ஒவ்வொரு வாக்குறுதியும் வெற்றிதான். நீங்கள் ஏற்றுக்கொண்டு நிறைவேற்றிய ஒவ்வொரு பொறுப்பும் ஒரு கொண்டாட்டம்தான். இது அழும் நேரமல்ல, பாடும் நேரம். கொண்டாடத் தொடங்குங்கள்.

வாசிப்புத் தொடரும்…[/hide]

இந்த இதழை மேலும்