கபடியில் தடம் பதித்த சாதனையாளர்
என் பெயர் அஜீத்குமார். நான் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன். நான் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பி. உடையப்பட்டியிலுள்ள மாரிஸ் மேல்நிலை பள்ளியில் படித்தேன். என் பதினொன்றாம் வகுப்பை கே. எஸ். ஆர். வி. கோவகுளம் கரூரில் உள்ள பள்ளியில் முடித்தேன். படிக்கின்ற காலத்தில் எனக்கு கபடியின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. இதனால் பதினொன்றாம் படிக்கும் போது முழுமையாக கபடி பயிற்சியில் ஈடுபடுத்திக் கொண்டேன். சாதாரணமாக கபடியில் ஈடுபட்ட என்னை, என் உடற்கல்வி ஆசிரியர் விஜயகுமார், ராஜகோபால் ஆகியோரின் ஊக்குவிப்பின் காரணமாக கபடியில் தீவிரமாக ஈடுபட்டேன். அப்போது அந்த ஊர் பஞ்சாயத்து தலைவரான செல்வராஜ் அவர்கள் என் விளையாட்டுத் திறனைப் பார்த்து படிப்பிற்கும், விளையாட்டுக்கும் பெரிதும் உதவி புரிந்தார். நான் முன்னேறுவதற்கு தற்போதும் பல உதவிகள் புரிந்து வருகிறார். நான் பனிரெண்டாம் வகுப்பை அரசு ஜெயங்கொண்டான் பள்ளியில் படித்தேன். அந்தப் பள்ளியில் என்னைப் போல் சிறந்த வீரர்கள் இருந்தார்கள். அங்கு திருமுருகன், பாலசுப்ரமணியன் என்னும் பயிற்சியாளரின் உதவியால் போட்டிகளை வென்றுள்ளேன். இவர்கள் செய்த உதவியின் காரணமாகவே நான் பள்ளி பருவத்திலேயே சிறந்த விளையாட்டு வீரனாகத் திகழ்ந்தேன். மேலும் என் பயிற்சியினை அதிகப்படுத்திக் கொள்ள கற்பகம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன்.
எனக்கு கபடியின் மீது ஆர்வம் வந்த தன் காரணம் என் அண்ணன் தான். அவர் ஆடும் இடத்திற்குச் சென்று அவர் ஆடுவதைப் பார்த்துக் கொண்டு இருப்பேன். தற்செயலாக ஒருநாள் அண்ணன் என்னையும் வந்து விளையாடுமாறு கூறி கபடிக்கான பயிற்சிப் பள்ளியில் சேர்த்து விட்டு ஊக்குவித்து வந்தார். இப்படிதான் என் கபடி விளையாட்டின் பயணம் ஆரம்பம் ஆனது. மேலும் என் பள்ளி பயிற்சியாளரின் ஊக்குவிப்பின் மூலமும் கபடியின் மீது எனக்கு மிகுந்த ஆர்வமானது ஏற்பட்டது.
என் கல்லூரி படிப்பானது கோவை கற்பகம் கல்லூரியில் தொடங்கப்பட்டது. இக்கல்லூரியில் நான் பயில என் பள்ளி பயிற்சியாளர் எனக்கு அறிவுரை வழங்கினார். மேலும் இக்கல்லூரியில் நான் விளையாட்டு இட ஒதுக்கீடு மூலம் பி. காம் பயின்று வந்தேன். இக்கல்லூரியில் படிப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது போலவே விளையாட்டிற்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதன் மூலம் கபடியில் நன்கு பயிற்சி பெற்று பல்வேறு போட்டிகளில் பங்கு பெற என்னால் முடிந்தது. மேலும் கல்லூரி நிர்வாகமும் பேராசிரியரும் இதற்குப் பெரிதும் துணை புரிந்தனர். நண்பர்களும் விளையாட்டின் போதும் போட்டிகளின் போதும் என்னை பெரிதும் ஊக்குவித்தனர்.
விளையாட்டின் மீது இருந்த ஆர்வமானது தன்னை மேலும் ஊக்குவிக்கும் விதமாகவும் தன்னை மேலும் வளர்த்து கொள்ளவும் என் பயிற்சியாளரிடமும், முன்னாள் மாணவர்களிடமும், வெற்றிப் பெற்ற சாதனையாளர்களிடமும் விளையாட்டில் உள்ள நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் அவர்களின் அறிவுரையின்படி பயிற்சியின் காலமாக காலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் மேலும் மாலை 4 மணி முதல் 7 1/2மணி வரை பயிற்சியில் ஈடுபடுவேன். [hide]
கோவை மாவட்டத்தில் நடைப்பெற்ற போட்டியில் கல்லூரியின் சார்ப்பாக கலந்து மாவட்டளவில் வெற்றிப் பெற்றேன். இதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் நடந்த ஜீனியர் சாம்பியன் போட்டியில் கலந்துக் கொண்டு மூன்றாம் பரிசைப் பெற்றேன். இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு விளையாட வாய்ப்பானது கிடைத்தது. தமிழ்நாட்டின் சார்ப்பாக குஜராத்தில் நடைப் பெற்ற போட்டியில் கலந்துக் கொண்டு கால் இறுதியில் வெளியேறினேன். பின் மேலும் பயிற்சியையும் அதன் நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டு தமிழ்நாட்டுக்கு அணித் தலைவர் ஆக்கப்பட்டேன். பின்னர் போட்டியில் வெற்றி பெற்றேன்.
எனது கல்லூரியானது என் விளையாட்டிற்கு பெரிதும் உதவி புரிந்தது. மேலும் கோவை மாவட்டத்தில் உள்ள செயலாளரும் மற்றும் தமிழ்நாடு செயலாளரும் பெரிதும் தமக்கு உதவி புரிந்தனர். தன் பயிற்சிக்கு உடற்கல்வித் துறைத்தலைவரும் மற்றும் தன் பயிற்சியாளரும் பெரிதும் உதவினர். நான் பயிற்சியில் வெற்றிப் பெற எனது கல்வித் தலைவரும், என் பெற்றோரும் பெரிதும் ஊக்கமளித்தனர்.
பெற்றோரின் ஊக்கமளிப்பும், என் தாயாரின் தம்பியாகிய அ.முருகேசன் அவர்கள் நான் சிறுவயதில் இருக்கும் போதே என்னை உருவாக்கியவர் அவரே. அவரும் கபடி விளையாட்டு வீரரே. அவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆல் இந்தியா அளவில் இரண்டாம் இடம் பெற்றவர். கபடியில் அவர் அடையாத இடத்தை நான் அடைய வேண்டும் என்று பெரிதும் பாடுபட்டார். இன்று வரை நான் சாதனை படைக்க முதுகெலும்பாக விளங்குகிறார்.
பயிற்சியாளரின் பெயர் முனைவர். எம். கோவிந்தராஜ். இவர் உடற்கல்வித் துறை மற்றும் கபடியில் முனைவர் பட்டம் பயின்றவர். இவர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்ற போட்டியில் கலந்துக் கொண்டு விளையாடினார். இவரின் வெற்றிக்கு காரணம் பள்ளி ஆசிரியரும், கற்பகம் கல்லூரியின் தலைவரான முனைவர். அ. புஷ்பாகராஜன் அவர்களும் தான். இவரின் உதவியால் கபடியின் ஆ.உக் மற்றும் ங.உக் முடித்தேன். இவர் முதன் முதலில் கபடியில் ஆடும் போது வெறும் தோல்வியை மட்டும் சந்தித்தார்.. பின் தோல்வியைக் கண்டு துவளாமல் வெற்றியை நோக்கி பயணம் செய்து கொண்டு வந்தார். இவர் 2010-ஆம் ஆண்டில் இருந்து மாணவருக்கு பயிற்சியளிக்க தொடங்கினார்.
கபடி விளையாட்டானது ஆர்வத்துடன் விளையாடப்படுவது. அதனை பணத்தின் நோக்கோடு விளையாடுவது தவறாகும். பணத்திற்காக ஆடப்படுவது விளையாட்டு அல்ல. வெற்றி தோல்வியினைக் கொண்டும், விடா முயற்சியினாலும் தான் ஒரு செயலை மேற்கொள்ளுதல் வேண்டும். இது சந்தோஷத்திற்காகவும் உடல் வலிமையினை மேம்படுத்தும் விதமாகவும், தங்களின் ஆர்வத்தினாலும் விளையாடப்படுவதாகும். இதில் வெற்றி தோல்வி என்பது சாதாரண ஒன்று. தோல்வியையும் அதனால் ஏற்படும் அவமானங்களையும் கண்டு துவண்டு விடாமல் வெற்றியின் இலக்கை நோக்கிச் செல்லுதல் வேண்டும். இதுவே வெற்றிக்கு அடிப்படையாக அமைக்கிறது.
எல்லா மாணவர்களாலும் இங்கு சாதிக்க முடியும். இந்தியாவுக்கு ஆட வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மட்டும் போதாது அதற்குரிய முயற்சியினை மேற்கொள்ளுதல் வேண்டும். அதனின் நுணுக்கத்தை ஆர்வத்துடன் கற்று அறிதல் வேண்டும். இதுவே போட்டியில் நாம் வெற்றிப் பெற பெரிதும் உதவிப் புரியும். போட்டியில் கலந்துக் கொள்வது மட்டுமின்றி அதற்குரிய முழு பயிற்சியினை மேற்கொண்டால் அனைவராலும் வெற்றிப் பெற இயலும்.
தற்போது நடைபெற்ற வரும் புரோ கபடிப் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணிக்காக விளையாடி, அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வரும் அஜீத்குமார் அவர்களை வாழ்த்தலாம்.[/hide]
இந்த இதழை மேலும்
0 comments Posted in Articles