– 2019 – August | தன்னம்பிக்கை

Home » 2019 » August (Page 2)

 
  • Categories


  • Archives


    Follow us on

    அறிஞர்களின் அறிவுரைகள்

    நூலில் சின்ன தூசி இருந்தால் கூட அது ஊசிக்குள் நுழையாது. நல்லவர்களுக்குப் பொய் நஞ்சு. கெட்டவர்களுக்குப் உண்மை நஞ்சாகும்.

    மானிட உடல் அடிக்கடி கிடைக்காது கிடைத்து இருக்கின்ற இந்த நேரத்தில் தொண்டு செய். உண்மையாக இரு.

    இதயத்தில் இருக்கும் எளிமையும் தூய்மைமே தெய்வ ஒளியாகும். அந்த ஒளி தெய்வத்திடம் செல்ல வழியாகும்.

    சந்தன மரம் முளைக்கும் போதே நறுமணத்தை நலாபுறமும் பரப்புவதில்லை. அது வளர்ந்து விட்டவுடன் கிளைகளை கழித்துவிடும் போது நறுமணத்தைப் பரப்பும்.

    மனோபலம் கொண்டவர்கள் சங்கடங்களைக் காலால் மிதித்துவிட்டு அமுக்கி அதன் மேல் ஏறிச் சென்றுவிடுகிறார்கள்.

    வாயில் நாக்கு எப்படி இருக்கிறதோஅப்படி உலகில் நீ இரு. அதாவது நாக்கு எவ்வளவு நெய்யைச் சாப்பிட்டாலும் அதில் நெய்  ஒட்டுவதில்லை.

    போனதையும் வருவதையும் எண்ணிக் கவலைப்படாதே. இன்று இருக்கும் நேரத்தை முழுமையாகப் பயன்படுத்து.

    வீட்டில் நெருப்புப் பற்றிய பிறகு கிணறு தோண்டிக் கொள்வோம் என்று எண்ணுபவருடைய வீடு முழுமையும் எரித்துவிடும்.

    நெல் வேகாத வரையில் தான் முளைக்க முடியும். வெந்து விட்டால் முளைக்காது. இதே போல் வெந்து போன உடல் வேண்டும் உயிர் பெறாது.

    அரிசியை விதைத்தால் முளைக்காது அரிசி வேண்டுமானால் நெல்லை விதைக்க வேண்டும். உமி நீக்கிய நெல் முளைக்கப் போவதில்லை.

    உயிர் பிரிந்து உடலை குடும்பத்தினர் கவலையும் கட்டையையும் போல மயான பூமியில் கிடத்துகிறார்கள்.

    ஒவ்வொரு மனிதனும் மரிப்பதைப் பார்க்கிறான். ஆனால் அவனோ, தான் எப்பொழுதும் இளமையாக இருப்பேன் என்று எண்ணுகிறான்.

    சூரியனுக்கும் சந்திரனுக்கும் கூட இரவும் பகலும் சுற்றிக் கொண்அட இருக்க வேண்டி இருக்கிறது. அவைகள் ஒரு நிமிடம் கூட இளைப்பாறுவதில்லை.

    காலையில் விண்மீன் களைப் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே மறைந்து விடுவதைப் போலவே மனிதன் மறைந்து போவான்.

    பச்சை மண்குடம் உடைய நேரமாகாது அதே போல இந்த உடலும் அழிவதற்கு நேரமாகாது.

    மகிழ்ச்சி மிக பெரிய சொத்து. அது எல்லாவற்றையும் விட சிறந்தது. மகிழ்ச்சி இருக்கும் இடத்தில் தான் இறைவன் இருக்கிறார்.

    உடல் இன்னலின் ஒளி போல மேகத்தின் நிழல் போல நிலையற்றது. மரணம் வாசல் கதவைத் தட்டிக் கொண்டே இருக்கிறது.

    தானம் தயவு இந்த எண்ணம் இல்லை என்றால் முழு வாழ்வும் அமைதிக்குச் சமம். வீண் சர்சசைகளில் விரயமாகும் நேரத்தைக் குறைத்தால் அறம் பேசும் கெட்ட குணம் குறையும்.

    இதைச் சொன்னது யார் என்று கேட்காதே சொல்லப்பட்ட கருத்தின் மேல் கவனத்தைச் செலுத்து.[hide]

    தன்னடகத்துக்கு ஒப்பான கடினமான செயல் எதுவும் இல்லை. இதில் வெற்றி அடைந்து விட்டால், பிறகு பெறுவதற்கு என்னதான் இருக்கிறது?

    உடலின் அழுகை பற்றிப் புகழாதே. ஏனென்றால் சிறு வியாதி வந்தால் கூட அழகுப் போய்விடும்.

    சொல்லப் போவது நியாயமாகவும் தேவையாகவும் இருந்தால் மட்டுமே சொல் அவை பெருமை தராது என்றால் சொல்லாதே.

    ஆசை ஆரம்பிக்கும் போதே விழிப்புடன் இருக்க வேண்டும். ஏனென்றால் இதயக் கோவிலுக்குள் நுழைவதற்கு முன்பே வாசல் படியில் தடுத்து விட வேண்டும்.

    மற்றவர்களுடைய கெட்ட குணங்கள் பலவீனங்களைப் பொறுத்துக் கொள். ஏனென்றால் உன்னிடமும் அவைகள் இருக்கின்றன.

    நாம் மற்றவரை கடுமையாக நடந்து திருத்தி விட வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் நம்மைத் திருத்திக் கொள்வதில்லை.

    தொண்டு செய்யவே வந்தாய். உத்தரவு போடுவதற்கு அல்ல. கஷ்டப்படவும் உழைக்கவும் வந்து இருக்கிறாய். சோம்பி நேரத்தைக் கழிப்பதற்கு இல்லை.

    அமாவாசையின் இருளில் கருப்புக் கல்லில் உட்கார்ந்து இருக்கும் எறும்பை போல இறைவன் மனித இதயத்தில் மறைந்து இருக்கிறார்.

    இறைவனின் அன்பை விரும்பினால், அவர் உன்னை எந்த நிலையில் வைத்து இருக்கிறாரோ அதிலேயே மனநிறைவுடன் இருக்கக் கற்றுக் கொள்.

    இறைவனுடைய நினைவு வாழ்க்கைக்கு உணவு அவரைப் புகழ்வது குடிநீர் அவரிடம் கொள்ளும் அடக்கும் உடைகளாகும்.

    எல்லா உயிர்களுக்கும் உணவு இறைவனுடைய களஞ்சியத்தில் இருந்து தான் வருகின்றது. நாவினால் மட்டும் பிரார்த்தனை செய்துவம் கும்பிடு போடுவதும் ஒரு போதும் பயன் அளிக்காது பிரார்த்னையில் ஒரு முகப்பட்ட மனது இருக்க வேண்டும்.

    கல்கண்டை ருசித்த நாக்கு வெல்லத்தின் இனிப்பை இன்பம் காணுமா? ஆசையை அனுபவிப்பதனால் ஒரு பொழுதும் தணியாது. நெய்விட்ட நெருப்பைப் போல மேலும் மேலும் அதிகமாகிக் கொண்டே செல்லும்.

    இறைவனை வணங்குவதை விட்டு மற்றவர்களை வழிபாடு செய்கிறவர்கள் பெரிய மூடர்கள்.

    யானையின் தந்தம் வெளியே வந்ததும் பிறகு உள்ளே போகாது. அது போலவே, நல்லவர்கள் கொடுத்த உறுதிமொழியை திருப்பி எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.[/hide]

    இந்த இதழை மேலும்

    வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 11

    சிகரத்தில் சந்திப்போம்

    (SEE YOU AT THE TOP)

    இந்த நூலை ஜிக் ஜிக்லர் (Zig Zigler) ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். (தமிழில் பாரிகாண்டீபன் மொழிபெயர்த்துள்ளார். கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.) “பிறருக்குத் தேவையான உதவிகளை நீங்கள் செய்வீர்களானால், உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் நீங்கள் பெறுவீர்கள்” என்கிற நிதர்சனமான உண்மையை, இந்நூல் முழுவதும் ஆங்காங்கே மிக அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். காரணம், இந்தக் கலியுகத்தில், நவீன வியாபாரச் சூழலில், இதுதான் மிகவும் பயன்படக்கூடிய ஒரு நடைமுறைச் சித்தாந்தம் என்று ஜிக் ஜிக்லர் மிக ஆணித்தரமாக அதே நேரத்தில் மிக அதிகமான எடுத்துக்காட்டுகளுடன் நிறுவுகின்றார்.

    இந்த நூல் ஏழு இயல்களைக் கொண்டுள்ளது.

    1. சிகரத்திற்கான படிகள்,

    2. உங்கள் சுயமதிப்பீடு,

    3. மற்றவர்களுடன் உங்களது உறவுமுறை,

    4. குறிக்கோள்கள்,

    5. மனப்பாங்கு,

    6. வேலை,

    7. ஆசை என்பதாக அமைக்கப்பட்டுள்ள இந்நூல் 615 பக்கங்களைக் கொண்ட பெரிய நூல் ஆகும். மேற்கண்ட ஏழு இயல்களில் சொல்லப்பட்டுள்ள சிகரத்தை அடைவதற்கான சிந்தனைகளை வருமாறு காண்போம்.

    1. சிகரத்திற்கான ஆறு படிகள்

    சிகரத்தின் உயரம் படிக்கட்டுகளாக இருந்தால் அவை பின்வரும் ஆறு படிக்கட்டுக்களாக இருக்கும்.

    1. சுய கௌரவம் (Self Image),

    2. மற்றவர்களுடன் ஒத்துப்போதல் பண்பு,

    3. சரியான இலக்கு,

    4. சரியான மனோபாவம்,

    5. நேர்மறைச் சந்தனையுடன் செயல்படல்,

    6. வெற்றியை எட்டும் வேட்கை கொழுந்துவிட்டு எரிதல். இந்த ஆறு படிகளை ஒருவன் சரியாகக் கடந்திட்டால் அவனது வெற்றியை எவராலும் தடுத்திட முடியாது.

    வெற்றிபெற விரும்பும் ஒருவரின் குணங்களி ல் மிக முக்கியமானவை நல்ல குணம், நம்பிக்கை, நாணயம், நேர்மை, அன்பு, விசுவாசம் போன்றனவாகும். உங்களுக்கு உங்களி டமும் உங்களது நண்பர்களி டமும் பல விஜயங்கள் பிடித்திருக்கின்றன. உங்களி டம் சில இலக்குகளும், சில சரியான மனோபாவங்களும் உள்ளன. நிறைய பணிகளைச் செய்கின்றீர்கள். தவிர சில ஆசைகளும் உள்ளன. நீங்கள் இப்போது செய்ய வேண்டியது என்னவென்றால் உங்களி டம் இருப்பதை முழுமையாகப் பயன்படுத்துவதும் வளர்ச்சிக்கு உங்களுடைய மனோபாவத்தை பிரயோகிப்பதும் மிக அவசியமானதாகும். காரணம்; உங்களி டம் உள்ளதை அதிகமாக உபயோகிக்கும்போது, இன்னமும் அதிகமாக உபயோகிக்கும்படியான கட்டாயம் ஏற்படும். இதைத் தவிர ஒரு ஆணோ, ஒரு பெண்ணோ வெற்றியாளராவதற்கு நிறைய குணங்கள் தேவையில்லை. “ஒருவரிடம் என்ன இருக்கிறதோ அவற்றைப் பயன்படுத்தினாலே போதும். அவர் சிகரத்தை அடைந்துவிடுவார்” என்கிறார் ஜிக் ஜிக்லர்.

    உலக வரைபடமும் மனித உருவமும்

    ஓயாமல் தொல்லை செய்யும் தனது மகனின் கவனத்தைத் திசை திருப்ப எண்ணிய தந்தை உலக வரைபடத்தை சுக்குநூறாகக் கிழித்து; இதை ஏற்கனவே இருந்ததுபோல் ஒட்டி வை என்றார். மகன் ஏய் சாலி! இப்பவே செய்கிறேன் என்று ஐந்து மணித்துளி யில் சரியாக ஒட்டிக் காண்பிக்க; தந்தைக்கு அதிர்ச்சி. எப்படி இத்தனை வேகத்தில் செய்தாய் என்று கேட்க. அந்தச் சிறுவன் சொன்னான். “அந்த வரைபடத்தின் பின்னால் ஒரு மனிதனின் படம் உள்ளது. ஆகவே அந்தப் பக்கத்தைத் திருப்பிப் பின்பக்கம் உள்ள மனிதனின் படத்தை ஒன்று சேர்த்தேன். அந்த மனிதனின் உருவம் சரியாக அமைந்தவுடனேயே அந்த வரைபடமும் சரியாகிவிட்டது” என்று சொன்னான். நீங்கள் சரியானால் உங்களி ன் உலகமும் சரியாகிவிடும்” என்று கூறுகிறார் ஜிக் ஜிக்லர். எதைச் செய்வதற்கும் சரியான நேரம் இப்போதே என்ற மனம் கொண்டவர் சிகரம் தொடுவதில் சிரமம் ஏதும் இருக்காது. உண்மையில் உங்களுக்குக் கிடைப்பதை விரும்பாமல்; விரும்பியதைக் கிடைக்க வைக்கலாம். நீங்கள் நம்பத் துவங்கிவிட்டால் பிறகு வெற்றி என்பதே சுலபமானதுதான். ஆனால் முதலில் நீங்கள் நம்ப வேண்டும்.

    1. உங்கள் சுய – மதிப்பீடு

    இந்த இயலில் ஆரோக்யமான சுயமதிப்பீட்டின் முக்கியத்துவம் பற்றியும், மோசமான சுயகௌரவம் பற்றியும் விளக்கி; ஒருவர் சுய கௌரவத்தை நல்ல முறையில் வளர்ப்பதற்கான பதினைந்து வழிமுறைகளை விளக்குகிறார் ஆசிரியர். இவற்றில் சில,

    “நல்லதே நடக்கும் என்று நம்புவது”

    “கடவுள்தோல்வியுறாத மனிதர்களைப் படைப்பதேயில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுதல்”

    “சந்தோஷமாக இருக்கும் இதயத்திற்குத் தொடர்ச்சியாக விருந்துகள் கிடைக்கும்”

    “உங்களது நண்பர்களைப் பற்றிக் கவனமாக இருங்கள்”

    “மற்றவர்களி ன் துயரங்களைப் பங்கு போட்டுக் கொள்ளுங்கள்”

    “நேர்மறைச் சிந்தனையுடன் செயல்படுங்கள்” “நீங்கள் பெற்ற வெற்றிகளை எப்போதும் மறந்துவிடாதீர்கள்”

    “தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்”

    “பிறருடன் நட்புடன் எப்போதும் இருங்கள்”

    “உங்கள் தோற்றத்தைக் கச்சித அளவுடன் எப்போதும் வைத்துக் கொள்ளுங்கள்”

    “உங்களை நீங்களே ஒப்புக்கொள்ளுங்கள்”

    “தேர்வு உங்கள் கையில்தான் உள்ளது”

    “யாராவது உங்களை வீழ்த்துவதால் நீங்கள் வீழ்வதில்லை. நீங்கள் கீழே விழுந்த பின்னரும் அங்கேயே இருந்தால்தான் கீழே விழுந்ததாக அர்த்தம்”.

    “உன் மீது நீயே நம்பிக்கை வைத்தாயானால் நிச்சயமாகச் சிகரத்தை அடையலாம்”

    “மனிதன்என்பவன்பிறப்பதே வற்றியடை வதற்காகத்தான்”“ஒன்றைத் தொடங்காமல் நிச்சயம் இலக்கை  அடையமுடியாது”

    என்று நிறைய எடுத்துக்காட்டுகளுடன் சுயமதிப்பீட்டை மதிப்பீடு செய்கின்றார். தன்னை நேசிப்பவன் ஆரோக்கியமான சுயமதிப்பீட்டாளன். தன்னை வெறுப்பவன் மோசமான சுயமதிப்பீட்டாளன். நம்மால் எதுவும் முடியுமென்று நம்புவது ஆரோக்கியமான சுயமதிப்பீடு. நம்மால் முடியுமா? என்று சிந்திப்பது மோசமான சுயமதிப்பீடு என்பது ஜிக்ஜில்லரின் சிந்தனை.

    1. மற்றவர்களுடன் உங்களது உறவுமுறை

    பல வருடங்களுக்கு முன்னர் சுயமாக லட்சாதிபதிகளான நூறு பேர்களைப் பற்றி ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் 21 வயது முதல் 70 வயது வரையில் இருந்தார்கள். அவர்களது கல்வித் தகுதி பள்ளி  இறுதி முதல் பிஎச்.டி வரையில் இருந்தது. மற்ற குணாதிசயங்களும் வேறு அம்சங்களும்கூட முற்றிலுமாக வேறுபட்டிருந்தன. ஆனால் அவர்களுக்குள் ஒரு விஜயம் மட்டும் பொதுவாக இருந்தது. எல்லோருமே “நல்லதைத் தேடுபவர்களாக இருந்தனர்.”அவர்கள் மற்றவர்களி டம் இருக்கும் நல்லனவற்றை எல்லாச் சமயங்களி லும் தேடுபவர்களாக இருந்தனர். ஆக மற்றவர்களி டம் உறவுடன் இருக்க விரும்புபவர்கள் வெற்றி மேல் வெற்றி பெறுகிறார்கள் என்று அந்த ஆய்வு முடிவு சொல்லியது.

    வாழ்க்கை என்பதே எதிரொலிதான். நீங்கள் எதைத் தருகிறீர்களோ அதையே திரும்பப் பெறுகிறீர்கள். நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதுவே விளைகிறது. நீங்கள் மற்றவர்களி டம் எதைப் பார்க்கிறீர்களோ அது உங்களி டமே இருக்கிறது. நீங்கள் யார், என்ன செய்கிறீர்கள் என்பதெல்லாம் பொருட்டல்ல. எல்லா வழிகளி லும் வாழ்க்கையில் நல்லனவற்றை அறுவடை செய்ய வேண்டுமென்றால் ஒரே வழி எல்லோரிடமும் இருக்கும் நல்லவற்றைக் காண்பதுதான். எல்லா சந்தர்ப்பங்களி லும் இந்த விதியை தங்க விதியாக நினைத்து அனுசரியுங்கள். இந்தப் பிரபஞ்சத்தின் விதி என்னவெனில் நீங்கள் மற்றவர்களை எப்படி பார்க்கிறீர்களோ அதேபோல நேசியுங்கள்.[hide]

    1. குறிக்கோள்கள்

    இப்பகுதியில் சிகரத்தை அடைய விரும்புகின்ற ஒருவருக்கு குறிக்கோள்கள் எவ்வளவு அவசியமானது என்று விளக்குகின்றார். குறிக்கோள் என்பதற்கு இலக்கு அல்லது நோக்கம் என்று பொருள். அது ஒரு திட்டம். நீங்கள் ஏதாவது செய்தாக வேண்டும். நீங்கள் யாராக இருந்தாலும் சரி, நீங்கள் எங்கிருந்தாலும் சரி அல்லது என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் சரி, உங்கள் ஒவ்வொருவருக்கும் குறிக்கோள் என்பது அவசியம் தேவை. ஜே.சி. பென்னி என்ற எழுத்தாளர் இதனை அழகாக இப்படிச் சொல்கிறார். “குறிக்கோளைக் கொண்டிருக்கும் ஒரு குமாஸ்தாவை என்னிடம் கொடுங்கள், அவரை வரலாற்றில் இடம்பெற வைக்கிறேன். குறிக்கோள்கள் இல்லாத ஒரு மனிதனை என்னிடம் கொடுங்கள், அவரை ஒரு குமாஸ்தாவாக நான் உங்களி டம் ஒப்படைக்கின்றேன்.”

    நீங்கள் குறிக்கோள்களை நிர்ணயித்துக் கொள்ளும்போது, மேலும் முன்னேற வேண்டும், மேலும் முன்னேற வேண்டும் என்று உங்கள் உள்மனம் நச்சரித்துக் கொண்டே இருக்கும். இதனால் உங்கள் குறிக்கோள்களி ன் வரையறை உயர்ந்துகொண்டே இருக்கும். பொதுவாகக் குறிக்கோள்கள் பெரிதாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் செம்மையாக இருக்க வேண்டும் என்று பேசும் ஜிக் ஜிக்லர் இவ்வியலில் குறிக்கோள்கள் குறித்து நிறைய பேசுகிறார். அவற்றில் சில,

    “எப்போதும் சிறிய திட்டங்களை வகுத்துக் கொள்ளாதீர்கள்.மனிதனின் ஆன்மாவைக் கிளர்ச்சி ஊட்டக்கூடிய சக்தி, அவற்றிற்கு ஒருபோதும் இல்லை”

    “உங்கள் பார்வைக்குப் புலனாகும் இலக்கினை நோக்கி முன்னேறிச் செல்லுங்கள். அந்த இலக்கினை நீங்கள்அடைந்த பிறகு அடுத்த இலக்கு உங்கள் பார்வைக்குப் புலப்படும்”

    “மற்றவர்கள் உங்கள் வளர்ச்சியைத் தற்காலிகமாகத் தடுக்க முடியும் – அதனை நிரந்தரமாகத் தடுக்கக் கூடியவர் நீங்கள் மட்டுமே”

    “நீங்கள் பெரிதாகச் சாதிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் அந்த இலக்கினை எட்டிப் பிடிக்க நீங்கள் நாள்தோறும் உழைக்க வேண்டும்.”

    “உங்கள் முன்னேற்றத்தைப் படிப்படியாக அமைத்துக் கொள்ளுங்கள்”

    “உங்களுக்கு நீங்களே நேர்மையாக இருங்கள்”

    “உங்கள் குறிக்கோளை நீங்கள் அடைய விரும்பினால், அதனை நிஜத்தில் அடைவதற்கு முன்பாக, அதனை அடைந்துவிட்ட காட்சியை உங்கள் மனக்கண்ணால் முதலிலேயே பார்த்துவிட வேண்டும்.”

    குறிக்கோள் இல்லாமல் பெரிய வெற்றிகள் சாத்தியப்படாது. குறிக்கோள்களே இடையறாது நம்மை இயங்கச் செய்யும் காரணிகள் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.

    1. மனப்பாங்கு

    நீங்கள் அதிக பணம் சம்பாதிக்க வேண்டுமா? அதிகமான சந்தோஷத்தை விரும்புகிறீர்களா? ஆரோக்கிய உடலமைப்பு வேண்டுமென விரும்புகிறீர்களா? இவை எல்லாமே சாத்தியமானவைதான். ஆனால் அதற்கு ஒரு அடிப்படையான அம்சம் தேவை. அந்த அம்சத்தின் பெயர்தான் “சரியான மனப்பாங்கு” என்பது. ஹார்வேர்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட ஒரு ஆய்வுக்குறிப்பில் ஒருவருடைய வெற்றிக்கும், சாதனைக்கும், பதவி உயர்வுக்கும் 85% காரணமாக இருப்பது மனப்பாங்குதான் என்றும், 15% மட்டுமே தொழில்நுட்பத்திறன் காரணமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. அமெரிக்கத் தத்துவஞானி வில்லியம் ஜேம்ஸ் “நம்முடைய மனப்பாங்கை மாற்றிக்கொள்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முடியும்” என்று சொல்லியதற்கேற்ப ஒருவர் தனது மனப்பாங்கை மாற்றிக்கொள்வதன் மூலம்; சிறந்த வெற்றியாளராக மாறமுடியும் என்பதை இவ்வியலில் ஜிக் ஜிக்லர் பல சிந்தனைகளை எடுத்துக்காட்டுகளுடன் முன்வைத்துப் பேசுகிறார். அவற்றில் சில,

    “சூழ்நிலை ஒருவனுக்கு எவ்வளவு மோசமாக இருந்தாலும் அதில் நம்பிக்கையூட்டும் அம்சங்கள் நிச்சயமாக இல்லாமல் போகாது.”

    “வாழ்க்கை விளையாட்டில் எப்போதும் சற்றும் ஆர்வம் குறையாமல், நம் வளர்ச்சிக்கான அறிவாற்றலைத் தொடர்ந்து அதிகரித்தபடியே இருக்க வேண்டும்.”

    “விசேஷமான குணாதிசயம் கொண்டவராக உங்களை நீங்கள் பாவித்துக்கொண்டால் அந்தக் குணாதிசயங்கள் உங்களை விரைவாகப் பற்றிக்கொள்ளும்.”

    “உங்களுக்கான வெகுமதிகள் உங்கள் பிறப்பைக் கொண்டு கிடைப்பதில்லை, நீங்கள் நடந்துகொள்ளும் விதத்தில்தான் அது கிடைக்கிறது.”

    1. வேலை

    பல வருடங்களுக்கு முன்பு ஞானம் மிகுந்த ஒரு வயதான அரசன் தன் அரசவையில் இருந்த பண்டிதர்களை அழைத்து; நீண்டகால ஞானம் குறித்து நீங்கள் தொகுக்க வேண்டும்; அதனை, பிற்காலச் சந்ததியினர் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் புத்தக வடிவில் எழுதித் தரவும் என்று கூறினார். பண்டிதர்கள் பலவற்றை தொகுதி தொகுதியாக தொகுத்து வழங்கினர். இவற்றை பலமுறை சுருக்கமாக எழுதச் செய்து, ஒரே ஒரு வாக்கியமாகச் சுருக்கினான் அரசன். அந்த வாக்கியம், “இலவச உணவு எங்கும் கிடைக்காது” (NO FREE LUNCH) என்பது ஆகும். “இது எதையும் செலுத்தாமல் எதையும் பெறமுடியாது” என்றும் விளங்கிக்கொள்ளலாம். எவர் ஒருவர் வேலை செய்யவில்லையோ அவர்கள் சாப்பிடுவதற்குத் தகுதியற்றவர்கள் ஆவர் என்பதும் மேலே சொன்ன வாசகத்தின் இன்னொரு வடிவமே.

    “வேலைதான் எல்லாவித வியாபாரங்களுக்கும் அடித்தளம், எல்லாவித வளங்களுக்கும் ஆணிவேர், அறிவுக் கூர்மையின் தாய் – தந்தை.”

    “ஒருவனுடைய செழிப்பான வாழ்க்கைக்கு அஸ்திவாரச் சின்னமாக விளங்குவது வேலைதான்.”

    “நேசிக்கப்படும் வேலை வாழ்க்கையை இனிமையானதாகவும் குறிக்கோள் நிறைந்ததாகவும், சுவையானதாகவும் மாற்றுகிறது.”

    கற்பது என்பதே ஒரு விஷயத்தை வெளிக்கொணர்வது அல்லது வெளியே இழுப்பது என்பதாகும். இந்தப் புத்தகத்தின் நோக்கமும் உங்களுக்குள் ஓளிந்திருக்கும் பெரிய, இன்னமும் சாதனை புரியக்கூடிய மனிதனை வெளிக்கொணர்வதென்பதாகும். இப்புத்தகத்தைப் பொறுத்த அளவில் உங்களுக்கு இதிலிருந்து நிறைய கிடைக்கும் என்பது மட்டுமல்ல, உங்களுக்குள்ளி ருந்தே உங்களுக்கு மேலும் நிறைய கிடைக்கும். சிகரத்தை அடையவேண்டுமென்றால் நேர்மை, நற்குணம், நம்பிக்கை, நேசம், ஒழுக்கம் மற்றும் விசுவாசம் ஆகிய கற்களைக் கொண்டு உங்கள் வெற்றிப் படிகளை அமைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சிகரத்தை அடைந்துவிடுவீர்கள்.

    – வாசிப்புத் தொடரும்…[/hide]

    இந்த இதழை மேலும்

    பாலியல் வன்கொடுமை… போராடாமல் விடிவில்லை…

    பெண்கள், பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குற்றங்கள் தமிழகத்தில்; மட்டுமல்ல, இந்தியா முழுவதும் கொடூரமான முறையில் நடந்தேறி வருகிறது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தவை, இன்று அன்றாடச் செய்தியாகி நம் அருகிலேயே நடைப்பெறத் தொடங்கி விட்டது.

    தமிழ்நாட்டில் தினமும் ஏதாவதொரு இடங்களி ல் தொடர்ந்து பாலியல் வன்முறைகள் அரங்கேறிக்கொண்டே இருக்கிறது. பிறந்த குழந்தை, பள்ளி  படிக்கும் சிறுமி, வயது வந்த குமரி, மனைவி, குழந்தைப் பெற்ற தாய், நரை விழுந்த பாட்டி என்று எந்த வயது வித்தியாசமில்லாமல் எப்போதும் ‘தான் ஒரு பெண்” என்கிற எச்சரிக்கை உணர்வோடு பள்ளி , கல்லூரி, வேலை பார்க்கும் இடங்கள், பேருந்து, ரயில் என எங்கு சென்றாலும் அச்சத்தையும் தன்னுடனே நிழலாக சுமந்து கொண்டு செல்கின்றனர் பெண்கள் இன்று. இந்த அச்சம் அவர்களி ன் சொந்த வீட்டிலும் பின் தொடர்கிறது என்பது மிகவும் அவலமான விசயம்.

    இப்படி அச்சத்தோடும், பயத்தோடும் பெண்கள் வாழவே தகுதியற்ற நாட்டில் தான் பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளி யாக்கி, அவளி ன் உடை சரியில்லை, இரவு நேரத்தில் அங்கு என்ன வேலை என அவள் நடத்தையின் மீதே சந்தேகப்பட்டு குற்றம் சாட்டுவது இச்சமூகத்தின் வேலையாக உள்ளது.

    ஆணாதிக்கச் சமுதாயமே இத்தனை சீர்கேடுகளை விளைவிக்கிறது. பெண்ணை அனுபவிக்கக் கூடிய ஒரு போகப் பொருளாக மட்டும் பார்க்கும் மனநிலையை ஒரு மனிதனுக்கு ஏற்படுத்துகிறது. எந்த ஒரு மிருகமும் கூட்டு பாலியல் வல்லுறவில் ஈடுபடுவதில்லை. மனிதன் மட்டும் அந்த மிருகத்தை விடவும் மோசமானவனாக் தாழ்ந்து போகக் காரணம் என்ன?

    20 வயது கூட நிரம்பாத இளைஞனும், 80 வயதைத் தாண்டிய கிழவனும் கூட பலாத்காரத்தில் ஈடுபடுகின்றனர். இவர்களை மனிதத்தன்மை அற்றவர்களாக மாற்றியது எது? இந்தக் கேள்விகளுக்கு பதில் தோடாமல், குழந்தைகளையும், பெற்றோர்களையும் எச்சரிக்கையாக இருக்கச் சொல்லி விளம்பரம் போடுகிறார்கள்.

    தொழில்நுட்ப வளர்ச்சி  என்ற பெயரில் வளர்ந்து வரும் மற்றொரு அபாயம் ஆபாச இணையதளங்கள், ஸ்மார்ட்போன் வடிவத்தில் நம் சட்டைப்பையில் இருக்கும் எதிரி. பெண்களி ன் உடல்களை விதவிதமாகக் காட்டி, மகளா, மனைவியா எனத் தெரியாத அளவிற்கு பாலியல் வெறியூட்டுகிறது. ‘தனக்குக் கிடைக்காதது யாருக்கும் கிடைகக்கூடாது. அதை எப்படியாவது அடைந்தே தீர வேண்டும் என்ன வேண்டுமானாலும் அதற்காக செய்வேன்’ என்பதன் உச்சம்தான் குழந்தைகள் மீது நடக்கும் பாலியல் வன்கொடுமைகள். பெண்கள் என்றாலே நுகர்ந்துத் தள்ள வேண்டிய, இன்பம் தரும் பண்டம் என்கிற பொதுப்புத்தியை உருவாக்கி, கல்லாக்கட்டும் முதலாளி களி ன் இலாபவெறியால் புகுத்தப்படும் கலாச்சார சீர்கேட்டின் பலனாக வளரும் தலைமுறையான மாணவர்கள் – இளைஞர்கள் சீரழிக்கப்படுகிறார்கள்.[hide]

    கலாச்சார சீரழிவின் உச்சம் தான் பத்துமாதம் சுமந்து சீராட்டி, பாராட்டி வளர்த்த தன் குழந்தைகளை தனது சுகத்திற்காகக் கொலை செய்ய தூண்டியது. அதுதான் உடன் பிறந்தவர்களையே பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக சிதைக்கத் தூண்டுகிறது.

    அரசியலுக்கு எதிரான சில திரைப்படங்களை தடைவிதிக்கும் நீதிமன்றம்தான், பெண்களை கவர்ச்சியாக, பால் உணர்வைத் தூண்டக்கூடியவளாக காட்டும் ஆபாச இணையத்தளங்கள், டிவி சீரீயல்கள், சினிமாக்கள், விளம்பரங்களைத் தடை செய்ய எனக்கு அதிகாரம் இல்லை என்று கையை விரிக்கிறது.

    குற்றங்களைத் தடுக்க வேண்டிய காவல்துறையில் கூட அலட்சியமே அதிகமானது. பெண் காவலாளி யையே பாலியலுக்குள்ளாக்குவது போன்ற பல குற்றங்களை செய்து வருகிறது.

    குற்றவாளி கள் பெரும்பாலும் போதைக்கு அடிமையாக இருப்பதும், மது அருந்தி இருப்பதும், பல வழக்குகளி ல் நாம் காணும் ஒரு நிலை. வீதி தோறும் இருக்கக்கூடிய மதுபானக் கடைகள் உயிரை மட்டும் கொல்வதில்லை கூடவே பெண்களுக்கு எதிராகவும் செயல்படுகிறது. Good Touch,bad touch,  கேமரா பொருத்துவது. தண்டனைகளை கடுமையாக்குவது உடனடியாக தண்டிப்பது போன்றவை குற்றங்களை குறைப்பதற்கான வழிமுறைகள் சொல்லப்படுகிறது என்றாலும் பாலியல் வன்முறை குற்றங்களுக்கான அவசரச்சட்டம் வந்த பிறகும் கூட பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் குறைந்து விட்டதா? அல்லது ஆணாதிக்க வெறியர்கள் இந்த அவசரச் சட்டத்தைக் கண்டு அஞ்சி நடுங்கிவிட்டார்களா? அல்லது சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகளும் போலீசும் குற்றங்களைத் தடுக்க முனைப்பாகச் செயல்படுகிறாஏகளா? எதுவும் இல்லை முன்னை விட அதிகளவில் வக்கிரமாகவும் பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றன.

    உண்மையான விடுதலைக் காற்றை ஒரு பெண் சுவாசிக்க வேண்டுமெனில், பிற்போக்கு, ஆபாசக் குப்பைகளை ஒழித்து பெண்ணை சக மனுசியாக மதிக்க சமத்துவமான பண்பாட்டை உருவாக்காமல், எந்த வீட்டிலும் தாய், மகள், மனைவி சகோதரி என யாரையும் பாதுகாக்க முடியாது.

    போராடுவோமா, வேண்டாமா என நாம் யோசிக்கும் ஒவ்வொரு நிமிடமும் 45 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்படுகிறார்கள். போராடாமல் நம் குழந்தைகளை காக்க முடியாது என்கின்ற உண்மை நம் முகத்தில் அறையும் போது தான் பிரச்சனைகளுக்கு வழி காண முடியும். பிரச்சனைகள் ஏதோ ஒரு மூன்றாவது மனிதனுக்குதான் என்று சிந்திப்பதை விடுத்து இந்த பிரச்சனையை நாளை நமக்கும் வரலாம், நம் சந்ததியினரும் எதிர்கொள்ளக்கூடும் என ஒவ்வொருவரும் சிந்தித்து இக்கொடுமையை எதிர்த்துப் போராடினால் மட்டுமே இதற்கு தீர்வு கிட்டும்.

    பல லட்சம் பேர் கூடிய மெரினா போராட்டத்திலும், பல மாத வருடம் என்று நீண்ட எல்லாப் போராட்டங்களி லும் பெண்கள் பாதுகாப்பாகவே இருந்தார்கள்.

    ஆம், போராட்டங்களே பெண்ளையும் சமூகத்தையும் பாதுகாக்கின்றன. செயல்படுவோம் தன்னம்பிக்கையோடு…. பெண்மையைப் போற்றுவோம் பெண் விடுதலையை பெறுவோம்.[/hide]

    இந்த இதழை மேலும்

    மாமரத்தில் கொய்யாப்பழம் – 7

    ஒரு நாளில் பல சமயங்களில் ச்சே என்ன வாழ்க்கை என்ற சலிப்பு தோன்றும். இம்மாதிரி தோன்றாவிட்டால் அது வாழ்க்கையே அல்ல.

    என்னவிதை போடுகிறோமோ அது தான் முளைக்கும்.

    பொதுவாக இன்று-

    குழந்தைகள்  மனதில் பெற்றோர்கள் விதைப்பது

    மாணவர்கள் மனதில் ஆசிரியர்கள் விதைப்பது

    வாசகர்கள் மனதில் புத்தகங்கள் விதைப்பது

    பார்வையாளர்கள் மனதில் காட்சிகள் விதைப்பது

    உபயோகிப்பாளர்கள் மனதில் செல்போன்கள் விதைப்பது

    எதுவோ அவை தான் வளரும் வளர்கிறது.

    ஆனால், குழந்தைப் பருவம் முடிந்த பின் மாணவப் பருவத்திலும் பின் வாலிபப் பருவத்திலும் வேறு மாதிரி எதிர் பார்க்கின்ற மனநிலையில் தான் விதைத்தவர்கள் இருக்கிறார்கள்.

    இதைத்தான் மாமரத்தில் கொய்யாப்பழம் என்றேன். குழந்தைகளுக்கு பெற்றோரும்; மாணவர்களுக்கு ஆசிரியர்களும்; வாலிபர்களுக்கு சமுதாயமும் அல்லவா நல்ல முன் உதாரணமாக இருக்க வேண்டும்.

    சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

    சொல்லிய வண்ணம் செயல் ( குறள்-664)

    திருவள்ளுவர் இக்குறளை வினைத்திட்பம் என்ற அதிகாரத்தில் வைத்துள்ளார். அதாவது ஒரு செயலைச் செய்து முடிப்பதற்கான உறுதி என்பதே வினைத்திட்பம்.

    திட்டமிட்ட வாழ்க்கை தெவிட்டாத இன்பம். இதைப் பலர் தெரிந்திருப்பீர்கள்.  சாதாரணமாக ஒரு விளையாட்டுக்குக் கூட பல கட்டுபாடுகள், விதிகள் எனக் கடைப் பிடிக்கிறோம்.

    வீடு கட்டுவதற்கு மதிப்பீடு எனும் எஸ்டிமேட், வரைபடம்  எனப்பலவும் தயாரித்து, அதன் பின்பே செயல் படுகிறோம்.

    ஆனால், பெற்றோராவதற்கு முன் எத்தனை பேர்திட்டமிட்டு செயல்படுகின்றனர். இன்று கரு உருவானதே பல தாயார்களுக்கு டாக்டர்கள் சொல்லித் தெரிய வேண்டிய நிலையில் உள்ளது.

    குழந்தை உருவாக்கம் என்பது பெரும்பாலும் விபத்தாகவே (அவர்கள் அறியாமலேயே) அமைகிறதோ என எண்ணத் தோன்றுகிறது.

    ஒவ்வொரு மணியையும் ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு வார்த்தையையும் ஒவ்வொரு  மாதத்தையும் திட்டமிடத் தொடங்கி விட்டால், மாமரத்தில் மாம்பழங்கள் மட்டுமே காய்க்கும்.

    கொய்யாப்பழத்தை எதிர்பார்க்க வேண்டியதில்லை. அடிப்படையாக அவசியமாக எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டியது.

    ஒன்றே ஒன்று தான். அது அவரவர் வாழ்வின் சிற்பி அவர்களே. எல்லா லட்சணங்களும் பொருந்திய கல், ஒரு சுத்தியல், ஓர் உளி இவை மூன்றும் உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ளன.

    உளியையும் சுத்தியலையும் உபயோகித்து கையிலுள்ள கல்லை எப்படிச் செதுக்குகிறீர்கள் என்பது தான் வாழ்க்கை.

    நான் மனதுக்குள் தானே நினைத்தேன். நினைத்ததை அப்படியே சொல்கிறார்களே என்ன இது ஆச்சரியம் என வியப்பதில் பயனில்லை.

    நாம் வாழும் உலகம் அசைந்து கொண்டிருப்பது; இன்னும் சொன்னால் சூரியனைச் சுற்றி வெகு வேகமாக, அதாவது ஒருநாளுக்கு சுமார் பதினைந்திரை மைல் ஓடிக் கொண்டிருக்கிறது.

    இந்த அசைவிருக்கும் வரை ஆசைகளும் இருக்கும், ஆசைகளைச் சீரமைத்துக் கொண்டால் நம் வாழ்க்கை நம் கையில் இருக்கும்.

    விழிப்பு நிலை தவறி, தன்நிலை மறந்து, மற்றவர்களுடன் ஒப்பிட்டு வாழ்ந்தால், வாழ்க்கை இனிக்காது.

    இந்தப் பிரபஞ்சமானது சுழன்று கொண்டே இருக்கிறது. அதனால் அலைகள் உருவாகி, கரைந்து கொண்டே இருக்கிறது. இதை காந்தம் என்று சொல்கிறோம்.[hide]

    பிரபஞ்சத்தோடு இணைந்து நாமும் சுழல்கிறோம். ஆனால் நம் மனதிலுள்ள எண்ணங்களும் அலைகளாக காந்தத்துடன் கலந்து வானவீதியில் உலாவருகிறது.

    எப்படி பல வானொலி நிலையங்கள் ஒலிபரப்பும் நிகழ்ச்சிகளை சரியான மீட்டரில் எங்கும் கேட்க முடிகிறதோ, அதே போல எண்ணங்களும் உரியவர்களைச் சென்றடைகிறது.

    எனவே, மற்றவர்களைப் பற்றி தவறாக எண்ணவோ, அவர்கள் தான் இங்கு இல்லையே எனப் பேசவோ கூடாது.

    உலகத்தை உங்களால் மாற்ற முடியாது. உங்கள் கட்டுப்பாட்டில் உள்ளதை மட்டுமே உங்களால் சுலபமாக மாற்ற முடியும்.

    உங்கள் கட்டுபாட்டில் இருப்பது நீங்கள் மட்டும் தான். எனவே மாற்ற முடிவது உங்களை மட்டுமே என்பதை உறுதியாக நம்புங்கள்.

    இது ஒன்றும்       பெரிய காரியமில்லை. பொறுமையும், விடாமுயற்சியும் இருந்தால் நிச்சயமாக உங்கள் கட்டுப்பாட்டுக்குள் உள்ள உங்களை உங்களது விருப்பம் போல மாற்றிக் கொள்ள முடியும்.

    மிக முக்கியமானது. உங்களுக்குத் தேவைப்படும் ஒன்றை அது  உங்களிடம் இல்லாதபோது. பிறரிடமிருந்து எதிர்பார்ப்பது.

    தேவையில் தெளிவாக இருந்தால், நம்மிடம் இல்லாத ஒன்று நமக்குத் தேவைப்படுகிறது என்ற நிலையை ஒத்தி வைப்பது புத்திசாலித்தனம்.

    அத்தியாவசியத் தேவை என்ற நிலையில் நம் அறிவும், மனமும் இணைந்து அதைப் பெற்றுத் தந்து விடும். இதை நம்புங்கள்.

    நீங்கள் எதை நம்புகிறீர்களோ, அதை மனக்கண்ணில் காட்சியாகப் பார்க்க வேண்டும். அந்தக் காட்சி உங்களது ஒவ்வொரு செல்களிலும் பதிய வேண்டும். அதன் பின் உங்கள் ஆழ்மனம் அதைச் செயலுக்கு கொண்டு வரும்.

    எங்களுக்கு போதிய கல்வியறிவு இல்லை. வழிகாட்டுதல் இல்லை என்று சொல்வது உங்களது அறியாமைதான்.

    இயற்கை எல்லோருக்கும் தேவையான எல்லாவற்றையும் வாரி வழங்கியுள்ளது. இதை அறியாதது; அறிந்தாலும் நம்பாதது தான் உங்கள் குறைபாடுகளாகும்.

    சிறு உதாரணம் மூலம் தெளிவு பெறலாம்.

    மழை பெய்கிறது. மழை நீர் பிடிப்பதற்கு பாத்திரங்களை வைக்கிறோம். மழை நீர் விழுமாறு பாத்திரங்களைத் திறந்து வைத்தால் பாத்திரம் மழை நீரால் நிரம்பும்.

    அதற்குப் பதிலாக பாத்திரத்தை நீங்கள் மழையில் நனைத்து விடக்கூடாது என்பதற்காக அவசரத்தில் குப்புறக் கவிழ்த்து வைத்தால் என்ன ஆகும்.

    பாத்திரத்தில் மழைநீர் சேராது. இது போன்றது தான் நம் மனமும். மனதைத் திறந்து வைப்பவை பொறுமையும் விழிப்பு நிலையுமாகும்.

    இன்று உலகில் வாழும் உயிரினங்களில் உயர்வானவர்கள் நாம் தான். இதற்குக் காரணம் நம் சிந்தனையாற்றல் தான்.

    குளத்து நீரின் அளவைப் பொறுத்து மலரின் உயரம் அமைவது போல, சிந்தனையின் அளவைப் பொறுத்தே நம் வாழ்க்கை அமைகிறது.

    நாம் வாழும் காலத்தில் நம்முடன் வாழ்பவர்களது செழிப்புக்கு அடிப்படை அவர்களது சிந்தனையின் அளவே என்பதை உறுதியாக நம்புங்கள்.

    சிந்திக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயிலப்பா என்ற பாடல் வரிகளை நினைவில் வையுங்கள்.

    விதைப்பதே முளைக்கும்; ஒன்றை விதைத்து விட்டு வேறொன்றை எதிர்பார்த்து ஏமாந்து வாழ்வது மனித வாழ்க்கையல்ல ;

    மனிதராய் சிந்திப்போம்; திட்டமிட்டு செயல்படுவோம் இனிமையாய் நிறைவாய் வாழ்வோம். வாழ்க வளமுடன்.[/hide]

    இந்த இதழை மேலும்

    தூண்டுகோள்

    எப்படி வாழ வேண்டும்? எப்படி வாழக் கூடாது? என்பதற்குப் பலப்பல உதாரணங்கள் நமக்கு முன்பாக ஏராளமாக இருக்கின்றன. இப்படித்தான் வாழ வேண்டும் என்பது ஒரு நகம். எப்படியும் வாழலாம் என்பது இன்னொரு ரகம்.

    முக்கியமான விஷயங்கள் பற்றிப் பேச வேண்டி இருக்கும் போது அதற்கான ஒரு சொற்பொழிவுக்கு ஸ்கிரிப்ட் தயாரிக்கும் போது ரூஸஙவெல்ட் அவர்கள் தமக்கு எதிரே சுவரில் மாட்டியிருக்கும் உட்ரோ வில்சனின் படத்தை அடிக்கடிக் கூர்ந்து பார்ப்பாராம். ஏன் என்று கேட்கும் போது ரூஸ்வெல்ட் அவர்கள் கூறுகின்ற பதில் சற்று வித்தியாசமாக இருக்குமாம்.

    ஒரு முறை என் மனைவி எனது மணிப்பர்ஸில் அவளது அப்பாவின் புகைபப்படம் ஒன்று இருப்பதைப் பார்த்துவிட்டு மிகவும் பெருமைப்பட்டுக் கொண்டாள். அதை அக்கத்தில் பக்கத்தில் சொந்தத்தில் பந்தத்தில் உள்ளவர்களிடம் எல்லாம் சொல்லி சொல்லி என் வீட்டுக்காரருக்குத் தனது மாமனார் மீது அத்தனை மதிப்பு மரியாதை என்று பீற்றிக் கொண்டாள்.

    ஒருநாள் ஏதேச்யாக எனது பர்ஸைப் பார்த்தபோது அந்தப் புகைப்படம் அதில் இல்லை. என் மனைவிடம் அது பற்றி கேட்டபோது தான் அதைப் பார்க்கவில்லை என்றாள். எப்படியோ எங்கேயோ தொலைந்து விட்டது தொலையட்டும் என்று நான் அதோடு விட்டுவிட்டேன். ஆனாலும் அதனை அவள் விடவில்லை. எப்படி விட முடியும் என்று கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். அப்பாவிடம் கேட்டு வேறொன்று வாங்கித் தருகிறேன் என்றாள்.

    அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் விடு என்றேன் அதெப்படி இவ்வளவு நாளாக ஆசை ஆசையாய் பிரியமாய் வைத்திருந்து விட்டு இப்போது திடீரென்று இல்லாவிட்டால் அது அத்தனை நன்றாக இருக்குமா? அழகாக இருக்குமா? உங்கள் மனம் பாதிக்காதா என்றாள். நான் எனக்குள் சிரித்தேன்.[hide]

    அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அது சரி நான் ஒன்னு கேட்பேன். சரியாக பதில் சொல்ல வேண்டும். சாதாரணமாகவே நீ என்னிடம் ப்ரியமாகத்தானே இருப்பாய்? என்று நான் கேட்க.

    அதிலென்ன சந்தேகம் திடீரென்று உங்களுக்கு? என்றாள் அவள் நான் சிரித்தேன். அது வேறொன்றுமில்லை. அந்தப் புகைப்படம் கூட அவராகத்தான் கொடுத்தார். எப்போதுமே பர்ஸிலே வைத்துக் கொள் என்று அவரே வலிய வந்து கொடுக்கும் போது உன் அப்பா சொன்னார். என் மகளுக்கு என் மீது ப்ரியம் அதிகம். அவளுக்குப் பிரியமான எனது புகைப்படம் எப்போதும் உங்களிடமிருந்தால் அவள் உங்களிடமும் அதிகமான பிரியத்தைக் காட்டுவாள் என்று.

    நான் சொன்னதைக் கேட்டு என் மனைவி நாணத்துடன் நகைத்தாள்.இந்த அப்பா ஏன் தான் இத்தனை அசடாக இருக்கிறாறோ என்று. செல்லமாகத் தன் தலையில் தானே கொட்டிக் கொண்டாள்.

    உன் அப்பாவின் புகைப்படம்   என்னிடம் இருந்தது கூட ஒரு விதத்தில் தூண்டுகோலாகத்தான் இருந்தது. என்று நான் சொல்ல எப்படி என்று கேட்க அவள் கண்களைக் காதுவரை அகலமாக்கினாள். அவரைப் போல நானும் அசடாக இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் என்று நான் சொல்ல அகலமான அவள் கண்கள் சட்டென்று சுருங்கிப் போயின. என்னைப் பார்த்து முறைத்தாள்.

    ரூஸ்வெல்ட் என்ன சொன்னார் என்று கேட்கிறீர்களா? உட்ரோ வில்சனைப் போலத் தானும் தவறிழைத்து விடக் கூடாது என்பதற்காகத்தான் அவரது படத்தை அடிக்கடிப் பார்ப்பேன் என்றாராம். இது எப்படி இருக்கு..[/hide]

    இந்த இதழை மேலும்

    ஷூ மந்திரகாளி

    இன்றைய நாள் காலை…

    அதிகாலையில் அன்றைய உடற்பயிற்சியை தொடங்குவதற்காக ஷூக்களையும்… சாக்ஸ்களையும் (தேடிப்பிடித்து, வாசம் பார்த்து) தேர்ந்தெடுத்துக்கொண்டிருந்தேன்…  ஷூக்கள் குறித்து சில நாட்கள் முன்பு நண்பர் சத்யா சொன்னது நிழலாடியது…  Fore shadowing குறித்து மார்க்வெஸ் புத்தகம் சொன்னதும் ஞாபகம் வந்தது…  ஷூ மந்திரகாளி என்று ஒரு கட்டுரை பிறந்தது!

    இந்தத்தலைப்பில் ‘ஷூ மந்தர்’ என்று நண்பர் டாக்டர் விஜய் பிங்களே சென்னை மராத்தி மகாசபாவில் ஒரு மராத்திய நாடகம் போட்டிருந்தார்  பல வருடங்கள் முன்பு…  மந்திரங்கள் சுவாரஸ்யமானவைதான்…  வாருங்கள் படிப்போம்…

    சமீபத்தில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற இந்திய ஆட்சிப்பணி தேர்வு தயாரிப்பிற்கான போட்டியாளர் ஒருமுகப்படுத்தும் கூட்டம் ஒன்றில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.  கடந்த 11.11.2017 அன்று நடைபெற்ற நிகழ்வு. இணையத்தில் யு ட்யூப்’ மூலம் வெளியிடப்பட்டு சுமார் 2700 முறை பார்க்கப்பட்ட நிகழ்வாக இன்றளவில் இருக்கிறது. ஆட, Sugar எதுவும் இல்லை என்றாலும் இன்றளவில் ‘யு ட்யூபில்’ எவ்வளவு views இருக்கின்றது? என்று பார்க்கின்ற வியாதி வந்துவிட்டதோ? என்று ஐயப்படும் அளவு அந்த பதிவேற்றத்தை அடிக்கடி மீண்டும் மீண்டும் பார்த்த பின்பு இந்தக் கட்டுரையை எழுதுவதன் மூலம் இனிமேல் எவ்வளவு ‘லைக்’ ‘வியு’ (Like & View) உள்ளது என்று பார்க்க கூடாது என்கின்ற மன உறுதியை வரவழைத்துக் கொள்ள உள்ளோம்.இணையதளம் வாழ்வில் இணைந்துவிட்ட ஒன்றாக மாறிக்கொண்டு இருப்பதை காணலாம்.  இன்டர்நெட் ‘விரதம்’ அத்தியாவசியம் ஆக மாறிக்கொண்டு இருக்கின்றது.  படிக்கின்ற மாணவர்களுக்கு ‘வாட்ஸ் அப்’ எதற்கு? என்கின்ற பதிவிற்கு எண்பதாயிரம் ‘வியு’ வந்ததாகப் பார்த்தோம்.  இதைத்தான் ஐரனி என்கிறோம்.

    சமீபத்தில் ‘Irresistable: why we can’t stop checking, scrolling, clicking and watching: By Adam Alter’ என்ற புத்தகம் குறித்து நண்பர் செந்தில்ராஜ் பேசினார். இணையதளம் எப்படி குறைக்கப்படவும், நெருப்பைப் போல தேவையான அளவு மட்டுமே பயன்படுத்தப்படவும் வேண்டும் என்றும் கூறினார்.  கூகுள் ஒரு அறிவுச் சுரங்கம் என்பதில் ஐயம் எதுவும் இல்லை ஆனால் அது அளவாகவும் முறையாகவும் பயன்படுத்தப்பட வேண்டும் ஃபேஸ் புக்கில் முகம்பார்த்து, வாட்ஸ் அப்போடு பல் துலக்கி, ட்விட்டரோடு உணவருந்தி, இன்ஸ்டாகிராமோடு உறங்கப்போகும் சில இளைய தலைமுறையினர் ‘புளூ வேலோடு’ வாழ்க்கையை மூழ்கடிக்க முயல்கின்ற அபாயங்கள் குறித்து அறிந்து கொள்வராக!

    நாம் அண்ணா நூலகத்திற்கு மீள செல்வோம்.  மலர்மன்னன் என்றொரு மாணவர் ஐயம் கேட்டார். ஒருமுகப் படுத்துதல் கூட்டம் ஒன்றரை மணி நேரம் நடந்தது.  பலமுகங்கள் பேச வாய்ப்பளிக்கப்பட்டது. இராமகிருஷ்ணன் என்றோரு புதுமுகம் ஐயம் கேட்டார். அவர் சி.ஏ படித்திருப்பதாகவும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் பயனுள்ள வகையில் கழிக்க எண்ணி கூட்டத்தில் கலந்துகொள்ள வந்திருப்பதாகவும் தகவல் தெரிவித்தார். மொத்தம் சுமார் இருபத்தியிரண்டு பேர்  சந்தேகங்கள் கேட்டனர்.  சில பல உரையாடல்கள் இடையே நிகழ்ந்தன.

    “எட்டு வருடங்களாக 1995 முதல் 2003 வரை ஐ.ஏ.எஸ் ஆக வேண்டும் என்கின்ற நம்பிக்கை நாற்றை தளரவிடாமல் எப்படீங்க காப்பாத்துனீங்க!  நானும் படிக்கலாம்னு நினைக்கிறேன். அப்பப்போ கொஞ்ச நாள் கழித்து அந்த ‘சூடு’ ‘கொறைஞ்சி’ போயிடுது. நீங்க ‘அவ்ளோ’ நாள் எப்படீங்க நெருப்ப அணையாம பார்த்துக்கிட்டீங்க?” என்று மலர்மன்னன் கேட்டார்… “பெயர்… மலர் போல மென்மையாக இருந்தாலும், உங்களுக்குள்ள இப்படி ஒரு ‘எரிமலை’ பொங்கிக்கொண்டு இருக்கிறதே…  என்று பதில் சொல்ல தொடங்கினோம்”  நம்பிக்கை நாற்றை தளரவிடாமல் காப்பாற்றுவதற்கு நண்பர்களும் சூழ்நிலையும் தான் உயிர் நீர் ஆவார்கள்.  அதற்கான இன்ஸ்பிரேஷனை நமது சூழ்நிலையில் இருந்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பேசினோம்.  “வெற்றி நிச்சயம்” என்னும் ‘அண்ணாமலை’ திரைப்படப் பாடல் அந்தக் காலத்திலும், ‘ஒருதுளி மழையினில்’ என்று தொடங்கும் ‘ஈட்டி’ திரைப்படப்பாடல் இந்தக்காலத்திலும் எவ்வாறு ‘மோட்டிவேஷன்’ மருந்தாக பயன்பட்டது, படுகின்றது என்று தெளிவாக! (நாம் நினைக்கின்றோம்) பேசப்பட்டது.

    சமீபத்தில் நூலகத்தில் நாள்தோறும் செய்யத்தக்க எண்ணச் சுத்திகரிப்பு சுவாசக் காற்றை சேகரிக்கச் சென்றிருந்த பொழுது வரலாற்று அடுக்கில் தடுக்கி நின்ற சமயம் ‘அக்பர்’ குறித்து சுவாரஸ்யமான தகவல் கிடைத்தது.  ‘அக்பர்’, ஆப்கானிஸ்தான் பாலைவனங்களில் ஹøமாயூன்… அலைக் கழிக்கப்பட்ட சமயம் பிறந்தவராம்.  எழுதப்படிக்க கால அவகாசம் இல்லாமல் கவலைகள் புடைசூழ வளர்ந்தவராம்.  இளம் வயதில் வேறு போட்டியாளர் இல்லாததால் அரியாசனத்தில் அமர்ந்தவராம்.  இப்படி…  இளமை தன்னிடத்தில் வைத்த சவால்களை வெற்றிகரமாக சமாளித்ததால்தான்… திறமை அவருக்குள் புடம் போட்ட தங்கம்போல் பரிமளிக்கத் தொடங்கியிருக்கின்றது.  தாங்கள் இந்த வரிகளைப் படித்து உணர்ந்து அனுபவிப்பதுபோலும், எழுத்தாளர் நான்கு மணிக்கு எழுந்து எழுதி மகிழ்வது போலும்…  படிக்கவும் எழுதவும் தெரியாத பேரரசர் அவர்.  (பொறாமையாக இருந்தால் நாம் பொறுப்பல்ல) அவர் கற்றறிந்தோர் படித்துச் சொல்ல பாடம் கேட்டே உணர்ந்து கொண்டு இரசிப்பாராம்.  மிக அதிக நூல்களை அரண்மனை நூலகத்தில் சேகரித்தும்… புலவர்களை ஆதரித்தும் தீர்க்கமான நுண்ணறிவோடு வாழ்ந்தவர் என்பது வரலாறு பதிய வைத்திருக்கின்ற ஆச்சரியமான உண்மை.  இவ்வளவு முறை மொகலாயர் வரலாற்றை படித்தும் (வந்தார்கள் – வென்றார்கள்  மதன் – சாருடையதை மீண்டும் ஒருமுறை எடுத்துப் படிக்க வேண்டும்) அக்பருடைய இந்தமுகத்தை இழந்திருந்தோம்! என்று நம்மில் பலருக்கு தோன்றுவதுபோல… அன்றும் இன்றும் தோன்றுகின்றது.[hide]

    ஒரு மாமன்னனுக்கே இளமையில் வறுமை காரணமாக இவ்வளவு சிரமங்கள் இருந்தது என்று ஆசுவாசப்படுத்திக்கொள்வதா? கொந்தளிக்கும் கடல்தான் கொப்பளித்துக் கிளம்பும் ஆற்றலை உருவாக்கும் என்பதா? என்றால் இரண்டாவது சரியென்றே தோன்றுகின்றது.  முயற்சியும் பயிற்சியும் படிக்க எவ்வளவு முக்கியம், நமக்கு எவ்வளவு வசதி வாய்ப்புக்கள் படிக்க உருவாக்கித் தரப்பட்டு இருக்கின்றன.  அவற்றை எப்படி நேர்மறையாக சிந்தித்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றெல்லாம் இளைய தலைமுறையினர் சிந்திக்கலாம்.

    நவரத்தினங்களை அணிந்த மகுடம் தரித்த பாதுஷாவாக நம் தலையில் கிரீடம் அணிந்து கொண்டு கற்பனை செய்து பார்க்கத் தடையேதுமில்லை.  அவரே இளம் வயதில் கற்க அவகாசமில்லாமல் பகைவர்களால் துரத்தப்பட்ட சூழலில் இருந்ததால் நம் கைகளில் “ஸ்மார்ட் ஃபோன்” தவழ்வதால்…  ஒவ்வொருவரும் ‘ஷா இன்ஷா’ அவர்களைக்காட்டிலும் அதிக ஆடம்பரத்தில்தான் திளைத்துக்கொண்டு இருக்கின்றோம்…  பழஇரசக் கோப்பையை எடுத்து வாய்க்கும்…  கைக்கும் இரண்டு மைல் தூரம் இருப்பதுபோல் பால்கனியில் நின்றுகொண்டு பருகிப் பார்ப்பதில் தடையேதுமில்லை…  சின்ன கற்பனைகளில்தான் பெரிய மலையளவு மனமாற்றங்கள் தொடங்குகின்றன…  இப்படி… திடுக்கிடும் கற்பனைகளை ‘முன் நிழலாட்டுதல்’ ஃபோர் ஷேடோயிங்’ (Fore Shadowing) என்கின்ற உத்தி மூலம்…  காப்ரியல் கார்ஷியா மார்க்வெஸ்…  தனது ‘தனிமையின் நூற்றாண்டுகள்” – “100 Years of Solitude” என்னும் புத்தகத்தில்…  அவ்வப்போது எழுதியிருக்கின்றார்.  அந்த உத்தியை “மேஜிக்கல் ரியலிஸம்” அந்த புத்தகத்தை படித்துவரும் பாதிப்போடு, பயன்படுத்திப் பார்த்த பரிட்சார்த்த முயற்சிதான் உங்களை மாமன்னராக்கி அழகு பார்த்தது.  அதில் என்ன பிழை இருக்க முடியும்.  எல்லோரும் இந்நாட்டு மன்னரன்றோ?  இன்னும் வந்துசேராத வரப்பிரசாதங்களை வருத்தத்தோடு பார்க்கின்றவர்கள், வாழ்க்கை வழங்கியிருக்கின்ற வாய்ப்பு வசதிகளை பொருத்தத்தோடு பார்க்க வேண்டும்!

    சமீபத்தில் சென்னை அருகேயுள்ள ஒரு கல்லூரியில் தேர்வின் இடையில் தவறிழைத்தமைக்காக பாதியில் வெளியே அனுப்பப்பட்ட மாணவி ஒருவர் வாழ்க்கையில் இருந்தே வெளியே சென்றுவிட முடிவெடுத்துவிட்ட செய்தியும் அதைத்தொடர்ந்த வருத்தம் தாளாத இளைய தலைமுறையின் துயர வெளிப்படுத்தலும் செய்தித்தாள்களில் படிக்க இயன்றது.  மாணவர்கள் தம் கரங்களில் இருக்கும் வாய்ப்பு வசதிகளை அடையாளம் கண்டு மதிக்கும் பொறுமையை பொறுத்தமாய் வாழ்க்கை அமைத்துத்தர வேண்டிக்கொள்ளத் தோன்றுகிறது.

    கலையரசி என்றொரு போட்டியாளர்… தனது ஓராண்டு போட்டித்தேர்வு முயற்சி தவறானதால்… போட்டியில் தோல்வியுற்றதால் உலகம் தன்னை குறைத்து மதிப்பிடுவதாக உணர்வதாக கூறினார்.  பயிற்சி மையம் ஒன்று கொடுத்த வெற்றி உத்திகளை ஒன்று விடாமல் பின்பற்றியதாக கூறினார்.  இருப்பினும் எங்கே தவறு ஏற்பட்டது என்று ஆராய்ந்து வருகின்றேன் என்றார்.  அவருக்கு இந்தக்கட்டுரையை எழுதியவர் சந்தித்த தோல்விகளை வரிசையாக கூறி… தேர்வாளர்களால் பயிற்சி மையங்களுக்கு வரும் நற்பெயர் பயிற்சி மையங்களால் தேர்வாளர்களுக்கு வரும் நற்பெயரை காட்டிலும் அதிகம் என்று கூறி பேச்சு வளர்ந்தது.

    சத்யா என்னும் நண்பர் அதுகுறித்து மேலும் பேசுகையில் தானே ஒரு பயிற்சி மையத்தை நிர்வகித்து வருவதாகவும், பயிற்சியிடங்களை ஒரு நல்ல ‘ஷூ’ வாக (Shoe)  உருவகப்படுத்தலாம் என்றும் கூறினார்.  ஓட்டப்பந்தைய வீரர் அணிந்துள்ள நட்ர்ங் – என்றும் வைத்துக்கொள்வோம்.  அது எவ்வளவு சிறப்பானதாக இருந்தாலும் அதை அணிந்திருப்பவர் நன்றாக ஓடுகின்ற கால்களை உடையவராக அதி முக்கியமானதாகும்.  வெளியே ஷூ தெரிந்தாலும்…  அதற்குள்ளே கால்கள்தான் உண்மையில் ஓடிக்கொண்டு இருக்கின்றன.  அதைப்போல மிகச்சிறப்பான மாணவர்கள் பயிற்சி கொடுப்பவர்களுக்கு நற்பெயர் பெற்று தருகின்றார்கள், மேலும் நல்ல போட்டித்தேர்வர்கள், பயிற்சி மையங்கள் தருகின்ற புத்தகங்கள், அறிவுரைகளை தேவையான நேரத்தில் சரியான அளவில் பயன்படுத்திக் கொள்வதில்தான் வெற்றியின் விதை இருக்கின்றது… மகத்துவத்திற்கான சூத்திரம் இதுதான்… ‘ஷூ’ மந்திரமும் இதுதான். இதை ஷூ மந்திரகாளி…  என்று மேஜிக்கல் ரியலிஸமாகப் பார்க்கத் தொடங்குவோமாக…  நேர்மறை சிந்தனைகள் நாளை வென்று தரட்டும்… நாளைகளை நமதாக்கட்டும்…

    ஷூ மந்திரகாளி![/hide]

    இந்த இதழை மேலும்

    வெற்றி உங்கள் கையில்-68

    மகிழ்ச்சிக்குப் பயிற்சி…

    இது ஒரு பரபரப்பு உலகம்.

    மிக வேகமாக மனிதர்கள் இயங்கத் தொடங்கிவிட்டார்கள். ஓய்வே இல்லாமல் உழைத்து, அதனால் கிடைக்கும் வருமானத்தில் பிழைத்து வாழ்க்கையை நகர்த்தி வருகிறார்கள். அவசரமாய், இயந்திரகதியாய் செயல்படுவதால், ஓய்வு எடுப்பதற்குக்கூட நேரம் இல்லாமல், பம்பரமாய் சுழன்று வருகிறார்கள்.

    சிலர் நெருக்கடியான சூழலில் சிக்கி, மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். பதற்றம் நிறைந்த வாழ்க்கை வாழ்வதால், நிம்மதியற்ற நிலை உருவாகிவிடுகிறது. இதனால், வாழ்க்கையில் தோன்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண இயலாமல் சிலர் தவிக்கிறார்கள்.

    “எந்தப் பிரச்சினையை எப்படி அணுகுவது?” என்று வழி தெரியாமல் மகிழ்ச்சிக்கு விடை கொடுக்கிறார்கள். இதனால், சோகத்தை அள்ளிச் சுமக்கிறார்கள்.

    பொதுவாக – திருப்தியான, மகிழ்ச்சியான வாழ்க்கையை ஒருவர் வாழும்போதுதான் அவர் வாழும் வாழ்க்கை பயன் நிறைந்த வாழ்க்கையாக மாறுகிறது.

    ஆடம்பரமாய் வாழ்வதும், வீடுகளில் உயர்ந்த ரக டி.வி., வாஷிங்மெஷின், கம்ப்யூட்டர் போன்றவற்றை தேவையில்லாமல் நிறைத்துக்கொள்வதும், கவர்ச்சியான உடைகள் அணிவதும், அதிக விலை கொண்ட ஆபரணங்களை அணிவதும், மகிழ்ச்சித் தருகின்ற வாழ்க்கை என்று சிலர் எண்ணுகிறார்கள்.

    எது மகிழ்ச்சியான வாழ்க்கை? என்பதைத் தெரிந்துகொண்டால் நிம்மதியாக வாழலாம்.

    அது ஒரு பயிலரங்கம்.

    கருத்தரங்கில் கலந்துகொண்ட பயிற்சியாளர் “நீங்கள் மகிழ்ச்சியாக வாழ விரும்புகிறீர்களா?” என்று ஒரு கேள்வியைக் கேட்டார்.

    “ஆமாம். சிறப்புடன் வாழ எங்களுக்கு மகிழ்ச்சி கண்டிப்பாக வேண்டும். அதற்கு வழி சொல்லுங்கள்” என்று பலரும் பதில் தந்தார்கள்.

    “இந்தப் பயிற்சியை நீங்கள் செய்து முடிக்கும்போது, ‘மகிழ்ச்சி எங்கே இருக்கிறது?’ என்பது உங்களுக்குப் புரியும்” – சொல்லிக்கொண்டே பயிற்சியை ஆரம்பித்தார் பயிற்சியாளர்.

    முதலில், தான் கொண்டு வந்த பைக்குள் வைத்திருந்த பலூன்களை ஒவ்வொருவருக்கும் கொடுத்தார். அதனை ஊதி பெரிதாக்கும்படி அனைவரிடமும் கேட்டுக்கொண்டார். எல்லோரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பலூனை மிகப்பெரியதாக ஊதினார்கள். பின்னர், பெரிதாக ஊதப்பட்ட அந்தப் பலூன் ஒவ்வொன்றிலும் தங்கள் பெயரை எழுதும்படி கேட்டுக்கொண்டார்.

    ஒவ்வொருவரும் தங்கள் பெயரை, தங்கள் பலூன்களில் எழுதினார்கள். பெயர்களை அவர்கள் எழுதி முடித்தப்பின், அந்தப் பலூனை குறுகலான வாசலுள்ள அறைக்குள் வைக்கச்சொன்னார்.

    பயிற்சியாளரின் அறிவுரைப்படி அனைவரும் தங்கள் பலூனை அந்த அறைக்குள் வைக்கத் தொடங்கினார்கள். பலூன்கள் குவியலாகக் குவிந்தது.

    சிறிது நேரம் கழித்து பயிற்சியாளர் அனைவரிடமும் ஒரு வேண்டுகோள் வைத்தார்.

    “நான் இப்போது ஒரு போட்டி வைக்கப்போகிறேன். இந்தப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தரப்போகிறேன். அந்தப்போட்டி இதுதான்” என்று கூறிக்கொண்டே போட்டியின் விதிமுறைகளைச் சொல்ல ஆரம்பித்தார்.

    “உங்கள் ஒவ்வொருவரின் பெயர் எழுதிய பலூன்கள் இந்த அறைக்குள் இருப்பது உங்களுக்குத் தெரியும். உங்களில் யார் தங்கள் பெயர் எழுதிய பலூன்களை எடுத்துக்கொண்டு வருகிறார்களோ, அவர்களில் முதல் 10 பேருக்கு 500 ரூபாய் பரிசாக வழங்கப்படும்” என்று போட்டியை பரிசுடன் அறிவித்தார்.[hide]

    எல்லோரும் போட்டியில் பரிசு பெற முயற்சி செய்தார்கள். பயிற்சியாளர் சுட்டிக்காட்டிய அறைக்குள் ஓடிப் பாய்ந்தார்கள். அடிதடி போட்டார்கள். “என் பலூனை எங்கே?” என்று அவசரஅவசரமாகத் தேடினார்கள்.

    நெருக்கடியில் சிக்கிய சில பலூன்கள் திடீர் சத்தமிட்டு உடைந்து அமைதியாகின. ஒரு சிலர் மட்டுமே தனது பெயர் எழுதிய பலூனை அடையாளம்கண்டு வெற்றிக் களிப்போடு எடுத்து வந்தார்கள். மற்றவர்கள் ஏமாற்றத்தோடு திரும்பினார்கள். கவலைப்பட்டார்கள்.

    இந்த நிகழ்வுகளை அமைதியாகக் கவனித்த பயிற்சியாளர், அனைவரையும் அழைத்து, மகிழ்ச்சியுடன் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளைச் சொன்னார்.

    மீண்டும் புதிய பலூன்களை அனைவருக்கும் கொடுத்தார். அந்தப் பலூன்களை ஊதிப் பெரிதாக்கி அவர்கள் பெயரை எழுதச் சொன்னார்.

    மிகச்சிறிய வாசல்கொண்ட அதே அறையில் மீண்டும் ஊதிய பலூன்களைக் கொண்டு வைக்கச் சொன்னார்.

    அனைவரும் பயிற்சியாளர் சொன்னபடி செய்தார்கள்.

    “இப்போதுதான் நீங்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு நான் ஒரு வழியைச் சொல்லப்போகிறேன்” என்றார்.

    எல்லோரும் கூர்ந்து கவனித்தார்கள்.

    “பலூன்கள் இருக்கும் அறைக்குச் செல்லுங்கள். அங்கு சென்றபின் ஆளுக்கு ஒரு பலூனை எடுத்து வாருங்கள். பின்னர், உங்கள் கையில் யாருடைய பெயர் எழுதிய பலூன் இருக்கிறதோ, அவர்களின் பெயரை உரக்க வாசித்து, பெயருக்கு உரியவரின் கையில் கொடுத்துவிடுங்கள். இதைப்போல ஒவ்வொருவரும் தங்கள் கையில் இருக்கும் பலூனை உரியவரிடம் ஒப்படைத்துவிட்டால், இங்கு பிரச்சினைகள் இல்லை. சண்டைகள் இல்லை. 5 நிமிடத்திற்குள் அவரவர் பலூனை அவரவர் வைத்துக்கொள்ளலாம். இங்குதான் மகிழ்ச்சி உருவாகிறது. நாம் நடந்துகொள்ளும் முறையில்தான் நமது மகிழ்ச்சி அமைகிறது. அடுத்தவர்களுக்கு உதவியும், பிடிவாதம் இல்லாமல் விட்டுக்கொடுத்தும் வாழப் பழகிவிட்டால், நம் வாழ்க்கை என்றும் ஆனந்தமாய் அமையும்” என்றார் பயிற்சியாளர்.

    ஒரு பலூனைக் வைத்துக்கொண்டு அதில் வாழ்க்கை தத்துவத்தை அனைவருக்கும் புரியும்படி எளிதில் உணர்த்திய பயிற்சியாளரை அனைவரும் வாழ்த்தினார்கள்.

    பரபரப்பு இல்லாமல், பரிசுக்காக ஏங்காமல், மகிழ்ச்சிக்காக பலூன் பயிற்சியில் ஈடுபட்டார்கள்.

    ஒவ்வொருவரிடமும் பலூனைப்போலவே பிரச்சினைகள் அவ்வப்போது வந்து சேருகிறது. அந்தப் பிரச்சினை நமது பிரச்சினையாக இருந்தால் மட்டும் அதனை கூர்ந்து கவனித்து தீர்வு காண்பதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

    தேவையில்லாமல் அடுத்தவருடைய பலூனை இன்னொருவர் கையில் வைத்திருப்பதைப்போல, மற்றவர்களுடைய பிரச்சினைக்குள் நாம் மூக்கை நுழைத்துவிடக்கூடாது. தேவையற்ற நிலையில் அடுத்தவர் பிரச்சினைக்கு தீர்வுகாண நேரத்தை ஒதுக்குவது, கவலையை விரும்பி கைப்பற்றுவதற்கு அடித்தளமாகிவிடும். எனவே, நமது பிரச்சினைகளை வெற்றிகரமாக சந்திப்பதற்கான பயிற்சிகளை சிறந்த முறையில் நாள்தோறும் மேற்கொள்வது நல்லது.

    இதைப்போலவே, வாழ்க்கையில் அவ்வப்போது தோன்றும் வேதனைகள், அவமானங்கள், எதிர்ப்புகள், கடும் தோல்விகள், தீராத நோய்கள், இழப்புகள்; போன்றவற்றையும், அதனால் ஏற்படும் பிரச்சினைகளையும் சந்திக்க சரியான வழிகளை கையாளுவதற்கு பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இந்தப் பயிற்சிகள்தான் வாழ்க்கையில் மகிழ்ச்சியை உருவாக்கி, மனதுக்கு நிரந்தரமான நிம்மதியையும் அள்ளி வழங்கும்.

    தொடரும்.[/hide]

    இந்த இதழை மேலும்

    அனைத்தும் ஆனந்தமாகட்டும் அகிலமெங்கும் உன் பெயர் சிறக்கட்டும்…!

    (5-ல் வளையாதது 15-ல் வளையும்)

    Dr.Z.R. ஆனந்

    நிறுவனர், i2C foundation

    கோவை.

    நம்பிக்கை எனும் நார் மட்டும்

    நம் கையில் இருந்துவிட்டால்

    உதிர்ந்த பூக்களெல்லாம்

    ஒவ்வொன்றாய் வந்து ஒட்டிக் கொள்ளும்

    கழுத்து மாலையாகவும்

    தன்னைத் தானே கட்டிக் கொள்ளும்….

    என்பார் சிந்தனைக் கவிஞர். அவரின் எண்ணங்களுக்கு வண்ணம் கொடுக்கும் விதமாக  கல்வித்துறையில் தடம் பதித்து வரும் தன்னம்பிக்கையாளர்.

    கனவு காணுங்கள் எனும் கலாம் வழியில் மாணவர்களுக்கு உபதேசம் சொல்லி அந்தக் கனவை நனவாக்க எவ்வாறு நடை போட வேண்டும், அந்த நடைக்கு தடையாக உள்ளவற்றை எவ்வாறு தவிர்த்தல் வேண்டும் ஆகியவற்றை தனது அனுபவத்தின் மூலம் போதித்து வரும் போதனையாளர்.

    உன் இலட்சியம் ஒன்றாக இருக்க வேண்டும், அதுவும் நன்றாக இருக்க வேண்டும். நேரத்திற்கு ஏற்றார் போல் இலட்சியத்தை மாற்றினால் அது உன் வெற்றிப் படிக்கட்டுகளை எட்ட விடாது என்பதே இவரின் தாரக மந்திரம்.

    உலக நாடுகளில் உள்ள யோக நெறிகள், ஆன்மீக நெறிகளைக் கற்று, தன் சமுதாயத்திற்கு ஏதேனும் ஒரு வகையில்  மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் எப்போதும் சிந்தித்து வரும் சிந்தனையாளர்.

    தாழ்வு மனப்பான்மையில் வாழும் இளைஞர்களுக்கும், சோதனையில் தவிப்போருக்கும் தனது மூன்றாவது கையான தன்னம்பிக்கை தான் பெரிய ஆயுதம் என்று தனது ஞானத்தால் அறிவுறுத்தி வரும் ஆசிரியர், ஆளுமை, ஆனந்தம், ஆரோக்கியம், தன்னம்பிக்கை, தன்னையறிதல், தைரியம், புத்துணர்வு போன்ற அத்துனை துறைகளின் பயிற்சியாளருமான I2C FOUNDATION நிறுவனர் DR.Z.R. ஆனந் அவர்களின் நேர்முகம் இனி நம்மோடு…

    கே: உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

    நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில்.  பத்தாம் வகுப்பு வரை பிரஸ் காலனியில் உள்ள தம்பு உயர்நிலைப் பள்ளியில் படித்தேன். அதன் பிறகு பனிரெண்டாம் வகுப்பு வரை சிவானந்தா பள்ளியில் படித்தேன். பள்ளிப்படிப்பு முடித்தவுடன் வித்யாலாயம் கல்லூரியில் இளங்கலை கணிதத்துறைத் தேர்ந்தெடுத்துப் படித்தேன். இந்தக் கல்லூரி தான் என்னை அடுத்தப் படிநிலைக்குக் கொண்டு சென்றது. ஒழுக்கம், பண்பு, ஆன்மீகம் என பல பரிமாணங்களைக்  கொண்ட கல்லூரி அது. கல்லூரியை முடித்தவுடன் பாரதியார் பல்கலைக்கழகத்தில் பி.எட் 1992 ஆம் ஆண்டு சேர்ந்தேன். பின்னர் 1996 ஆம் ஆண்டு எனக்கு ஆசிரியராகப் பணி கிடைத்தது. அன்று முதல்  2019 ஆம் ஆண்டு வரை என்னுடைய ஆசிரியர் பணி சிறப்பாகச் சென்றது. பின்னர் தற்போது விருப்பு ஓய்வுப் பெற்றுவிட்டேன். . அப்பா ரத்தினம் ஆசிரியார். மேட்டுப்பாளையம் பகுதியில் அவர் மிகவும் பிரபலமான ஆசிரியர். அம்மா, அண்ணன் அக்காள், தங்கை அனைவருமே ஆசிரியர்கள், மனைவி வக்கீல்,ஒரு மகன்  இருக்கிறார்.

    கே: நீங்கள் டாக்டர் பட்டம் பெற்றது பற்றி?

    நான் படிக்கின்ற காலத்திலிருந்து இன்று வரை சுமார் 600 ஆதரவற்றோர் சடங்களுக்கு மேல் என்னுடைய சொந்த செலவில் அடக்கம் செய்திருக்கிறேன். இதற்காக எனக்கு நல்லடக்கச் சேவை விருதும் டாக்டர் பட்டமும் கிடைத்தது. நாம் நம் தந்தை காணாமல் போனால் எப்படிப் பதறுவோம். அந்த நிலையில் ரோட்டோரத்தில் மோசமான நிலையில் தந்தை இருந்தால் நம்மால் அவரை ஒதுக்க முடியுமா? நாம் அவரை கட்டி அணைத்து வீட்டிற்கு அழைத்துச் செல்வோம் தானே. அந்த நிலை யாராக இருந்தாலும் நாம் அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற உந்துதலின் பேரில் இந்தச் சேவையை செய்து வருகிறேன்.

    கே: ஆசிரியர் பணியிலிருந்து விருப்பு ஓய்வு பெற்ற உங்களின் அடுத்தப் பணி என்ன?

    ஆசிரியப் பணி  என்பது மிகவும் புனிதமான பணி.  எதிர்கால சமுதாயத்தை ஒரு ஏற்றமிகு சமுதாயமாக மாற்ற அவர்கள் தூணாக இருந்து செயல்படுகிறார்கள. என்னுடைய 20 ஆண்டுகால ஆசிரியர் பணியில் பல மாணவர்களை சீர்ப்படுத்தி செம்மைப்படுத்திருக்கிறேன் என்பது என் மனதிற்கு மிகவும் மகிழ்வாக இருக்கிறது.

    எனக்கு எப்போதும் மாணவர்களிடம் நல்லதொரு புரிதல் இருப்பதால் அவர்களுக்கு ஒரு ஆசிரியராய் இருந்து வழிக்காட்டுவதை விட  ஒரு சிந்தனையாளராய் இருந்து வழிகாட்ட வேண்டும் என்பது தான் என்னுடைய நோக்கம்.

    இன்றைய சூழ்நிலையில் சமூகம் மாணவர்களுக்கு பல விதமான விஷயங்களை சிறிய வயதிலேயே கற்றுத் தருகிறது. மாணவர்களின்  மதிப்பு மிக்க நேரம் வலைதளங்களிலேயே செலவாகின்றது. மாணவர்கள் இதைத் தேடிச் செல்வதில்லை.சூழ்நிலைகள் தான் அவர்களை இதற்குள் வளைக்கின்றது. பல நேரங்களில் மாணவர்களால் நல்ல விஷயங்களையும், கெட்ட விஷயங்களையும் எப்படி எதிர்கொள்வது என்பது தெரியாமல் போகிறது.  மாணவர்களுக்க 13 முதல் 18 வயது வரை உள்ள வயது மிக முக்கியமானது.  இந்தக் காலங்களில் தான் அவர்கள் உடல் அளவிலும், மன அளவிலும் மிகப்பெரிய மாற்றத்தை எதிர்கொள்கிறார்கள்.

    எனவே, இந்த வயதில் அவர்களின் நேர்மறை ஆற்றலைத் தூண்டி மற்றும் எதிர்மறை எண்ணங்களை நீக்குவதன் மூலம் அவர்களுக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கை மற்றும் சமூகத்தை எதிர்கொள்வது எளிதாகிறது. இதை எப்படி பக்குவமாக அவர்களுக்கு எளிதாகவும், விருப்பம் உள்ளதாகவும் புரிய வைப்பது என்பதில் தான் இந்த பவுண்டேசன் பெரிய பங்கு வகிக்கிறது.

    கே: PET பயிற்சி முறையைப் பற்றிச் சொல்லுங்கள்?

    PET (Personal Improvement Transformation) பயிற்சி 12 வயது முதல் 18 வயதிலான குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறோம். இந்தப் பயிற்சியை அறிமுகம் செய்தது நான் தான். இது மூன்று படிநிலைகளைக் கொண்டிருக்கிறது. PET 1, உடல் மாற்றம், கோபம், பயம், போன்ற எதிர்மறை சிந்தனைகள் அனைத்தையும் நேர் மறையாக மாற்றி விடுவோம். PET 2, தலையின் பினயல் சுரப்பிப் பகுதியை திறக்கும் மூச்சுப் பயிற்சி. இதை மூன்றாவது கண் என்பார்கள், குழந்தைகள் தங்களின் இலக்கை நிர்ணயித்தல், அந்த இலக்கை அவர்கள் அடைய என்ன செய்ய வேண்டும் என்பதான வழிகாட்டுதல் பயிற்சியாகும். இது தங்களைப் பற்றி அறிந்து கொள்ள உதவும்.   PET 3, மனம் சார்ந்த பயிற்சியாகும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இந்தப் பயிற்சி கொடுக்கப்படுகிறது.  இந்தப் பயிற்சிகளுக்கெல்லாம்  10 முதல் 15 நாட்கள் போதுமானது.

    எதையும் ஆனந்தமாக எடுத்துக் கொண்டு செயல்படுத்த வேண்டும், அவ்வாறு செயல்படுத்தினால் அனைத்தும் உன்னைத் தேடி வரும். தன்னைப் பற்றி அறிதல், தான் யார் என்று தெரிதல். மனதை மூன்று நிலைகளில் பிரிக்கலாம் மேல்மனம், நடுமனம், ஆழ்மனம் ஆகியவையாகும். அன்பை யார் வேண்டுமானலும் கொடுக்கலாம், ஆனந்தத்தை உங்களால் மட்டுமே கொடுக்க முடியும் போன்றவற்றை விளக்குவது தான் இந்தப் பயிற்சி முறைகளாகும். 48 நாட்கள் தொடர்ந்து செய்யும் எந்த வேலையும் நம் மனதை விட்டு நீங்காது.

    கே: இந்தப் பயிற்சிகளை நீங்கள் எவ்வாறு கற்றுக் கொண்டீர்கள்?

    எனக்கு சிறிய வயதிலிருந்தே யோக நெறிகள் மீது அளவு கடந்த பற்றுதல் இருந்தது. இதனால் யோகா, ஆன்மீகம் சார்ந்த புத்தகங்களைத் தேடித் தேடி படிப்பதுண்டு. ஓசோ, ஈஷா, மகரிஷி, போன்ற மனவளக்கலை மன்றங்களில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். இதற்காகவே 12 ஆண்டுகள்  என்னை அர்பணித்துக் கொண்டேன். இதில் எல்லாவற்றிலும் சொல்லும் ஒரே கருத்து நீ நீயாக இரு, உன்னை பற்றி நீ முதலில் உணர வேண்டும் என்பதாகவே இருந்தது. இது போன்ற பயிற்சிகளை நான் கற்றுக் கொண்டேன்.

    கே: கருவறை தியானம் (Womb meditasion) என்ற புதிய தியான முறையை நீங்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள் அது பற்றி?

    கருவறை தியானம் எல்லா வயதினருக்கும் சொல்லிக் கொடுக்கும் ஒரு பொதுவான தியானம். ஒரு தாய் பிரசிவித்த காலம் முதல் குழந்தைப் பிறக்கும் நாள் வரை கருவறையில் உள்ள குழந்தையின் நலனில் எவ்வாறு அக்கறை கொண்டு செயல்படு கிறார்களோ, அதன் படி தான் செய்யப்படுகிறது இந்த முறை.

    இஸ்ரேல், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பிறக்கும் குழந்தைகளின் அறிவு மிக அதிகமாக இருக்கின்றது. இதற்கு காரணம் அவர்களின் தாயார்கள் அவர்களின் கருவறையில் இருக்கும் குழந்தைகளின் நலனுக்காக நிறைய பயிற்சிகள் செய்து வருகிறார்கள். அதனால் தான் அங்கு பிறக்கும் குழந்தைகள் அறிவாற்றலில் தலை சிறந்தவர்களாக இருக்கிறார்கள்.

    இந்தக் கருவறை தியானம் தினமும் 10 நிமிடங்கள் செய்தால் போதும். 3 வது மாதம், 6 வது மாதம், 9 வது மாதம் குழந்தை சுமக்கும் பெண்ணின் நிலை எப்படியிருக்குமோ, அது போன்ற உணர்வு ஏற்படும்.இதை தொடர்ச்சியாக செய்பவர்களின் வாழ்க்கையில் தோல்வி என்பதே இல்லை.  இதை செய்யும் பொழுது அனைவருக்கும்  தாயின் கருவறையில் இருப்பது போல் எண்ணம் தோன்றும்.இந்த தியானம் வேறு எங்கும் சொல்லிக் கொடுப்பதில்லை. இதை யார் செய்தாலும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றி தான்.[hide]

    கே: I2C பெயர் காரணம் பற்றிச் சொல்லுங்கள்?

    இந்தப் பெயருக்குப்பின் இரண்டு காரணங்கள் இருக்கின்றன. I2C என்றால் inner interface course என்பதாகும். இதன் பொருள் என்னவென்றால் தன்னை தனக்குள் போய் தேடுதல் வேண்டும். உன்னை நீ அறிதல் வேண்டும் என்பது தான். மற்றொன்று உன்னுடைய மூன்றாவது கண்ணான மனசாட்சிக்கு பயந்து வாழ்தல் வேண்டும். நீ செய்யும் தவறுகள் நன்மைகள் , தீமைகள் போன்றவற்றை அவர்கள் திறனாய்வு செய்து கொள்ளுதல் வேண்டும். என்பது போன்ற காரணத்திற்காக இப்பெயர் வந்தது.

    கே: ஒரு மாணவனின் வளர்ச்சிக்கு பெரிதும் துணைபுரிபவர்கள் யார்?

    இங்கு எல்லாப்படிநிலைகளும் ஒரு முக்கோண அமைப்பு உடையதாக இருக்கிறது. அதன் ஒரு மாணவனின் எதிர்கால வாழ்விற்கு பெரிதும் துணைப்புரிபவர்கள் என்றால் குடும்பம், ஆசிரியர், சமுதாயம் ஆகிய மூன்றும்  அவனை உயர்த்தும் ஏணிப்படிகளாகும்.

    ஒரு மாணவனின் முதல் ஆசான் பெற்றோர்கள் தான். அவர்கள்  அவனின் நிறைகுறைகளை  கேட்டறிந்து அதற்கு ஏற்றார் போல் அவனை வழிநடத்த வேண்டும்.

    பெற்றோர்கள், செய்ய தவறுவதை ஆசிரியர்கள் செய்தல் வேண்டும். அதனால் தான் அடங்காத பிள்ளைகளைக் கூட ஆசிரியர்களிடம் விட்டுவிடுகிறார்கள். என் வாழ்க்கையில் முறைத் தவறிப் போன எத்தனையோ மாணவர்களுக்கு நல்லதொரு முகவரி கொடுத்திருக்கிறேன். பிள்ளைகள் நிச்சயம் ஆசிரியர்கள் பேச்சைக் கேட்பார்கள்.  அவ்வாறு இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு குருவாகிய ஆசிரியர்கள் தான் நல்லதொரு வாழ்க்கையை அவர்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

    இங்கு ஒவ்வொருவரையும் சமுதாயம் பார்த்து வருகிறது. தவறு என்று தெரிந்தால் அதைக் கண்டு தள்ளிப் போவது நல்ல சமுதாயம் அல்ல. அதை அங்கேயே திருத்தி விட்டுப் போக வேண்டும். அவ்வாறு நீங்கள் கண்டும் காணாமலும் போனால் இங்கு எதுவும் செய்யலாம் என்ற நிலை உருவாகி விடும்.  இதை இந்த சமுதாயம் திருத்துதல் வேண்டும். இவர்கள் மூவரும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கொடுத்து மாற்றினால் நிச்சயம் அவர்களால் சாதிக்க முடியும்.

    கே: உங்களை நாடி வருபவர்கள் எந்த நோக்கத்தோடு வருகிறார்கள்?

    மனித வாழ்க்கையில் எல்லோருக்குமே இன்பமாக அமைவதில்லை. இன்பம், துன்பம் கலந்த வாழ்க்கையில் சிலருக்கு இன்பத்தை விட துன்பமே பெரிதாகத் தெரிகிறது. அத்துன்பத்தை அவர்களால் வெல்ல முடியிவில்லை. அப்படிபட்டவர்கள் இன்பத்தை எதிர்பார்த்து எங்களிடம் வருகிறார்கள்.

    அவர்களுக்கு எவ்வித பிரச்சனைகள் என்றாலும் எங்களிடம் ஒரு முறை வந்து விட்டால் அதை முழுவதுமாக அவர்களுக்கு தீர்வு கண்டு அவர்களின் வாழ்க்கையில் ஒளிமயமான எதிர்காலத்தை தராமல் நாங்கள் விட்டதில்லை.

    அது போல் வருமுன் காப்பது சிறந்தது என்ற முறையில் பிரச்சனைகள், கஷ்டங்கள், துன்பங்கள் போன்றவை வராததற்கு முன்பே அவர்கள் எதை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும் போன்ற பயிற்சிகளும் கொடுக்கப்பட்டு வருகிறது.

    கே: நீங்கள் பயணப்பட்ட காலத்தில் உங்களால் மறக்க முடியாத நிகழ்வுகள் பற்றி?

    நான் ஆசிரியராய் இருந்த போதும், தற்போதும் நிறைய பேருக்கு பல பயிற்சிகள் கொடுத்து அவர்களின் எதிர்கால வாழ்விற்கு ஒரு அச்சாணியாக இருந்து செயல்பட்டிருக்கிறேன். அவர்களும் என்னுடைய பேச்சைக் கேட்டு, என் சொல் படி நடந்து அவர்களின் இலக்குகளை வெற்றிகரமாக முடித்து இருக்கிறார்கள்.

    அவ்வாறு சாதித்தவர்கள் என்னிடம் வந்து என்னுடைய நல்வாழ்க்கைக்கு நீங்கள் கொடுத்த ஊக்கமும் பயிற்சியும் தான் காரணம் என்று சொல்லி நன்றிப்பெருக்கோடு தங்களின் அன்பினை பகிர்ந்து கொள்வார்கள். அத்தருணம் என் வாழ்வில் ஒரு பெரிய மனநிறைவை ஏற்படுத்தும்.

    இது போன்ற எத்தனையோ பேர்  என்னிடம் சொல்லி என்னை நெகிழ்வித்த தருணங்களே என் வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வுகளாகும்.

     கே: உங்களின் 24 மணி நேரம் பற்றி?

    சரியான நேரத்தில் உறங்கி சரியான நேரத்தில் விழிப்பவர்கள் தான் சாதனையாளராய் உருவாகிறார்கள். சாதனை மனிதர்களின் சரித்திரப் பக்கங்களை திருப்பிப் பார்க்கும் அவர்கள் அதிகாலையில் விழிப்பவர்களாக இருப்பார்கள்.

    நானும் அவர்களைப் போல தான் 4 மணிக்கு எழுந்துவிடுவேன். எழுந்து யோக முத்திரைகள் செய்வேன். 4 மணிக்குத் தொடங்கும் யோகா 7 மணி வரை தொடரும். இதை ஒருநாளும் செய்யாமல் விட்டதில்லை.

    காலை உணவைத் தவிர்க்க மாட்டேன். குடும்பத்தினரிடம் பொன்னான நேரத்தை செலவிடுவேன். இறை வணக்கம்,பெரியோரை வணங்குதல் போன்றவை செய்வேன்.

    அதன் பிறகு 8 மணிக்கு புறப்பட்டு அலுவலகம் வந்து விடுவேன். அதன் பிறகு பயிற்சிகளுக்கு வந்தவர்களுக்கு நான் கற்றதையும் பெற்றதையும் அவர்களுக்கு கற்றுக் கொடுப்பேன்.

    அவர்களின் எதிர்ப்பார்வை 100 சதவீதம் தீர்த்து வைப்பேன். என்னுடைய மகிழ்ச்சி, சந்தோஷம் எல்லாமே இவர்கள் தான்.

    கே: மனதை எவ்வாறு ஒருமுகப்படுத்த வேண்டும்?

    மனித மனம் என்பது மாறும் குணமுடையது. மனம் நீரைப் போல் ஓடும், காற்று போல் பறக்கும் தன்மையுடையது. மனம் போன போக்கில் விட்டுவிட்டால் அதை மீண்டும் காட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது அவ்வளவு எளிது அல்ல.

    மனதை கலங்காத நீர் போல் வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு கலங்கியவர்கள் எங்களிடம் வந்தால் அவர்களுக்கு அதிலிருந்து எவ்வாறு விடபட வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுத்து அவர்களின் வாழ்வில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்திக் கொடுக்கிறோம்.

    ஆனந்தத்தை பணத்தாலும் குணத்தாலும் வாங்க முடியாது. அது நல்ல மனத்தால் மட்டுமே வாங்க முடியும். மனதை அழுக்காக்கினால் தீங்கு வரும், அதை சரிசெய்து விட்டால் நன்மை வரும்.

    கே: i2c யின் தனித்தன்மைகள் பற்றி?

    தன்னைப் பற்றி தானே உணர்வது தான் இதன் தனித்தன்மை. நமக்கு அடையாளம் கொடுத்தவர்கள் பெற்றோர்கள். படிப்பு சொல்லிக் கொடுத்தவர்கள் ஆசிரியர்கள். இப்படி ஒவ்வொருவரின் வாழ்விலும் அவர்களின் வளர்ச்சிக்கு பலர் துணையாக இருப்பார்கள். இதை மட்டுமே நம் மனம் கருத்தில் கொள்ளும், அவ்வாறு கொள்ளும் பொழுது நீங்கள் யார் நீங்கள் உணர தவறுகிறீர்கள். இதை தான் நாங்கள் சொல்லிக் கொடுக்கிறோம்.

    நிறைய பெற்றோர்கள் பயிற்சி முடிந்த பின்னர் என்னுடைய குழந்தை மற்ற பிள்ளைகளிடம் பேசவோ, விளையாடவோ மாட்டேன். எங்களுக்கு இது மிகப்பெரிய கவலையாக இருந்தது. எங்களிடம் வந்த பிறகு அந்த கூச்சம் அகன்று இன்று எல்லோரிடத்திலும் சகஜமாகப் பழகி வருகிறான் என்பதை பெருமையாகக் கூறுகிறார்கள். இது எங்களின் வெற்றியாகக் கருதுகிறேன்.

    ஒவ்வொரு நாளும் புதிய புதிய பயிற்சிகள் கொடுக்க முற்படுகிறோம். மற்ற எங்கும் கிடைக்காத பயிற்சிகள் எல்லாம் எங்கள் இடத்தில் கிடைக்கிறது. அதற்கு காரணம் எங்களை நாங்கள் எப்போதும் தயார்படுத்திக் கொள்கிறோம்.

    கே: அந்த அமைப்பில் ஆசிரியர்களை எவ்வாறு தேர்ந்தெடுக்கிறீர்கள்?

    தற்போது எங்களிடம் ஏழு ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்கள் அனைவரும் மிகவும் அனுபவம் பெற்றவர்கள்.

    இவர்கள் முதலில் அன்பானவர்களாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் இதில் அவர்களால் இயங்க முடியும்.

    கற்றுத்தருபவர்கள் கலகலப்பாக இருந்தால் தான் கற்பவர்களுக்கு கலகலப்பைக் கொடுக்க முடியும் என்பதால், ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதில் பெரிதும் கவனம் செலுத்துகிறேன்.

    யோக நெறிக் கற்றவர்களாக இருப்பார்கள். அதுமட்டுமின்றி இது வெறும் பாடம் போதிக்கும் கல்வி அல்ல. ஆரோக்கியம், ஆனந்தம் சார்ந்த கல்வி அதை அவர்கள் கருத்தில் கொண்டு அவர்களுக்குப் போதிக்க வேண்டும்.

    நானும் என்னிடம் பணியாற்றும் அத்துனை ஆசிரியர்களும் பயிற்சிக்கு வரும் மாணவர்களை தங்கள் பிள்ளைகள் போல் பாவித்து அவர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொடுத்து வருகிறார்கள்.

    கே: உங்களின் தாரக மந்திரம்?

    5 ல் வளையாதது 15 ல் வளையும் என்பது தான் என்னுடைய தாரக மந்திரம். எங்களிடம் வருபவர்கள் எல்லா வயதிலிருந்தும் வருகிறார்கள். வயதிற்கு ஏற்றார் போல் எங்களின் அணுமுறை கொடுத்து வருகிறோம். சிரிக்காத குழந்தை, சிந்திக்காத குழந்தை, மனதை கட்டுபடுத்த முடியாத குழந்தை, மற்றவர்களிடம் பழகாத குழந்தை என பல நிலைகளில் வருவார்கள். அவர்களுக்கு தொடர்ந்து 12 நாட்கள் பயிற்சி கொடுப்போம் 12 நாட்கள் முடித்த பிறகு அவர்களே ஆச்சரியம் படும் அளவிற்கு அவர்களை மாற்றி விடுவோம். அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கும் அத்தனை கலைகளும் எங்களிடம் இருக்கிறது. இது போல தான் பெரியவர்களுக்கு ஏற்படும் மனபிறழ்தல், மன அழுத்தம், துன்பங்கள் போன்றவை எங்களால் தீர்வு காண முடிகிறது.

    கே: இந்தப் பயிற்சியின் பலன்கள்  பற்றி சொல்லுங்கள்?

    இந்தப் பயிற்சிகள் பன்முகத்திறமை கொண்டது. ஆனந்தம், ஆரோக்கியம், ஆளுமைப்பண்பு வளர்த்தல், தன்னம்பிக்கையை உணர்தல், தன்னைப் பற்றி அறிதல், தைரியம் வரவழைத்தல், புத்துணர்ச்சியுடன் மனமகிழ்ச்சியைத் தரல், தனிமனித மாற்றம், சிக்கல்களின் தீர்வுகள்  போன்றவை இதன் தலையாயப் பணிகளாகும்.

    மன உலைச்சல், அலைச்சல் அகன்று முகமலர்ச்சியைக் கொடுத்தல். எல்லா நிலைகளிலும் அவர்களுக்கு ஆனந்தத்தைக் கொடுத்தல்.

    தீர்வு காண முடியாத பிரச்சனை என்று  வருபவர்களுக்கு கூட, அந்தப் பிரச்சனை இனி அவர்களின் வாழ்க்கையில் ஏற்படா வண்ணம் அவர்களுக்கு ஊக்கம் அளித்தல்.

    18 வயது முதல் 60 வயது வரை கவலையின்றி வாழ்க்கையை ஆனந்தமாய், அற்புமாய் மாற்றம்  கொடுக்கக்கூடிய வகையில் பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது.

    கே: மன அழுத்தம் ஏற்பட காரணம் அதைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் பற்றிச் சொல்லுங்கள்?

    ஒரு நிகழ்வை ஒருவர் தவறாகச் செய்து விடுகிறார். அந்தத் தவறை ஏன் செய்தோம், எதற்காக செய்தோம், எப்படி செய்தோம் என்று யோசித்து அந்தத் தவறைத் திருத்திக் கொண்டால் நன்மை பயக்கும். ஆனால் அதை விட்டுவிட்டு எப்படித் தவறாக நடந்து விட்டதே இனி வாழ்க்கையே பறிபோய் விட்டது என்று அதை மறக்காமல் நினைத்துக் கொண்டே இருந்தால் மன அழுத்தம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதனைத் தீர்க்க வேண்டும் என்றால் அதிலிருந்து வெளி வர வேண்டும். அவ்வாறு வெளி வந்தாலே பாதி பிரச்சனைக்கு தீர்வு கண்டு விடலாம்.

    மன அழுத்தம் தான் நிறைய நோய்களுக்கு காரணமாக இருக்கிறது.  இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

    நீ நீயாக இரு.. வில்லென்றால் அம்பாக இருக்க வேண்டும், துப்பாக்கி என்றால் குண்டாக இருக்க வேண்டும். அது தான் உன்னுடைய சாதிப்பின் வழித்தடமாகும்.

    கே: தன்னம்பிக்கை வாசகர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?

    நான் எப்போதும் எல்லோரிடமும் ஒன்றை மட்டும் சொல்லிக் கொண்டே இருப்பேன். அது தான் தன்னம்பிக்கை என்ற ஒற்றை வார்த்தை. எந்தச் சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை மட்டும் கை விட்டுவிடாதீர்கள். உங்களின் வாழ்க்கையில் வெற்றிப் பெற வேண்டுமா? தன்னம்பிக்கையை இறுக்கிப் பிடித்துக் கொள்ளுங்கள்.

    தோல்வி உன்னைத் துரத்தும், வறுமை உன்னை வாட்டும், ஏழ்மை உன்னை வீழ்த்தும், சங்கடம் உன்னை சாய்க்கும், தவறுகள் உன்னை தத்தளிக்க வைக்கும் எல்லாவற்றிலுருந்தும் உன்னை மீட்டெக்கும் ஒரே ஆயுதம் தன்னம்பிக்கை மட்டுமே.

    கே: எதிர்கால இலக்கு பற்றி?

    எண்ணம் நன்றாக இருந்தால் இலக்குகள் பெரிதாக இருக்கும். அது போல தான் என்னுடைய இலக்கும் மிகப் பெரியது. வசதியில்லாத மாணவர்களுக்கு நுண்சார் அறிவுத்திறன் மிகவும் அதிகமாக இருக்கும், அவன் படிப்பிலும் விளையாட்டிலும் மிக பெரிய அளவில் திறன் மிக்கவனாக இருப்பான். இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு என்று ஒரு பள்ளிக்கூடம் தொடக்க வேண்டும். அதுவும் அவனுக்கு இலவசமாகக் கல்விக் கொடுக்க வேண்டும். படிப்பு விளையாட்டு என எல்லாத்துறையும் இப்பள்ளியில் கொடுக்க வேண்டும். இது என்னுடைய ஆசை, கனவு, இலட்சியம், இலக்கு, நோக்கம் எல்லாம் இது தான்.[/hide]

    இந்த இதழை மேலும்

    சின்னஞ்சிறு சிந்தனைகள்

    நடக்க முடியாதது என்பது இவ்வுலகத்தில் எதுவும் இல்லை. எதையும் நாம் பார்க்கும் கண்ணோட்டத்தில் தான் வாழ்க்கை இருக்கிறது.

    எதற்கும் பயந்து எல்லாவற்றிலிருந்தும் தப்பிக்க விரும்பினால், வாழ்க்கையே நரகமாகி, உற்சாகமில்லாமல் ஓடி மறையும்.

    எப்போதும் எதற்கும் ஒரு விலை கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும். தயங்காமல், பயப்படாமல் நுழைந்தால் தான் வாழ்க்கையை வாழ்க்கையாய் உணர்ந்து வாழ முடியும்.

    எப்போதும் நடந்தவைகளையும், நடக்கப் போகின்றவைகளையும் குறித்துப் பயப்படுபதைத் தவிர்க்க வேண்டும்.

    இருப்பதை ஏற்றுக் கொள்வதன் மூலம் குற்ற  உணர்விலிருந்து விடுதலைப் பெறலாம்.

    நம் செயல்கள் தான் யார் என்பதை வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொருவரும் நிறை குறைகள் உள்ளவர்களே.

    பயத்தை விரட்டியடிக்க முதற்படி துணிச்சலை வரவழைத்துக் கொள்வது தான். துணிவுடன், பலனை எதிர்பார்க்காமல் வருவது வரட்டும். என்ற முடியுடன் ஒரு காரியத்தில் இயங்குவது பயத்தை விரட்ட முதல் வழியாகும்.

    நாம் பயமின்றி இருப்பது மட்டுமல்லாமல் மற்றவரின் பயமுறுத்தலுகளுக்குப் பணியாமல் இருக்கக் கற்றுக் கொள்து நல்லது.

    வாய்ப்பு என்பது ஒரு முறை தான், அதைத்  துணிவுடன் பற்றிக் கொள்ள வேண்டும்.

    மனத்தில் பயத்தை விதைக்கும் ஒரு பொய் மறுபடி, மறுபடி சொல்லப்பட்டால் அந்த பயமே உடல் முழுதும் வியாபித்து, உயிரணுக்களைக் கொல்லுகிறது என்பது பேருண்மையாகும்.[hide]

    என்னைப் பற்றி மருத்துவம் என்ன நினைத்தது என்பதை விட என்னைப் பற்றி நான் என்ன நினைத்தேன் என்பது மிக முக்கியமானது.

    உங்கள் மனம் உங்கள் கைவசம் இருந்தால் நீங்கள் செய்ய முடியாதது எதுவும் இல்லை.

    பொதுவாகவே நம் உடல் நோயுற்றுப் படுத்துக் கிடந்தால் மனம் இன்னும் வேகமாகச் செயல்படும்.மனதின் எண்ணங்கள் வெளிப்படையாக நமக்குக் கேட்கத்துவங்கும். நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் போது மனதின் குரலை நாம் கவனிக்கத் தவறுகிறோம்.

    மனமாற்றம் உடல் மாற்றத்திற்கு துணைப்புரிகிறது என்பது நூறு சதவீதம் சந்தேகத்திற்கு இடமற்றது.

    உடலிற்குத் தேவையான பலத்தை வழங்குவதற்காக இந்த உடல் தனக்குள் வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்.

    உலகில் மருந்துகளை விட மன அமைதியே அதிகத் தேவையாக இருக்கிறது.

    பயம், கவலை, அதீத மகிழ்ச்சி, துக்கம்,கோபம் போன்ற உணர்ச்சிகளில் தொடர்ந்து மனிதன் சிக்கிக் கொண்டால் மனச் சமநிலை குலைகிறது.

    நாம் அன்றாடம் சாப்பிடும் சாதாரண உணவுகளில் இருந்து தனக்குத் தேவையானவற்றை உடலே உற்பத்தி செய்து கொள்கிறது. அதுபோல் தனக்குள் நிகழும், பாதிப்புகளையும் தானே சரி செய்து  கொள்கிறது உடல்.

    உடலைப் பற்றிய அச்சத்தை நாம் கைவிட்டுவிட்டு மன சமநிலை கெடுவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு.

    உடல் ஆரோக்கியத்திற்கு திரும்புவதைத்தான் நாம் சமநிலைப்படுத்துவது என்று குறிப்பிடுகிறோம்.[/hide]

    இந்த இதழை மேலும்

    தன்னம்பிக்கை மேடை

    நேயர் கேள்வி…?

    தற்போது வாழும் தலைமுறையினர் தங்களுக்கு பின் வரும் தலைமுறையினருக்கு எந்த செல்வங்களை எல்லாம் விட்டு செல்ல வேண்டும்?

    பவதாரணி,

    இல்லத்தரசி,

    சேலம்.   

    உலக சுற்றுச்சூழல் பிரச்சனைகள் பெருகி வரும் நிலையில் இந்தக் கேள்வியைக் கேட்டதற்க்கு உங்களுக்குப் பாராட்டுகள். அதுவும் இன்று நாம் வாழ்ந்தால் போதும், நமது வாழ்நாள் வரை பூமிக்கு எந்த ஆபத்தும் வந்துவிடாது, நமக்கும் எந்த சமூக பிரச்சனைகளும் இல்லை, எனவே நாம் கவலைப்பட வேண்டியது இல்லை என்ற மனநிலையில் மக்கள் வாழ்ந்து வரும் போது இது கேட்கபட வேண்டிய கேள்வியாக உள்ளது.

    ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கம், புலி, கரடி போன்று ஆப்பிரிக்க காடுகளிலும் பிற நிலப்பரப்புகளிலும் மனிதன் பரவிக்கிடந்தான். சிங்கம் துரத்திய போது ஓடி குகைக்குள் பதுங்கினான் மனிதன். ஆனால் இன்று, அந்த சிங்கத்தையே கூட்டுக்குள் அடைத்து வேடிக்கை பார்க்கிறான். அப்படியே அவன் அனைத்து உயிரினங்களையும் அடக்கி விட்டான். சிலவற்றை வீட்டு செல்லப் பிராணிகளாகவும் மாற்றிவிட்டான். இந்த ஐந்நூறு ஆண்டுகளில் மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்துவிட்டதால், அவர்களுக்கு மற்ற உயிரினங்களை வேட்டையாடவும், அடக்கவும், கீழ்படிய வைக்கவும் அவற்றை முழுவதுமாக அழிக்கவும் முடிந்தது.

    அணுகுண்டு:

    கடந்த சில நூற்றாண்டுகளில் தொழில் நுட்பமும் வளர்ந்தது. துப்பாக்கி, வெடிமருந்து, அணுகுண்டுகள் என்று உலகத்தையே ஒட்டுமொத்தமாக பலமுறை அழிக்கும் ஆயுதங்களை மனிதன் சேகரித்து விட்டான். அடுத்த நூறு ஆண்டுகளில் இந்த அணு ஆயுதம் தான் முதல் ஆபத்து. அப்படி அணு ஆயுதங்களை மனிதன் பயன்படுத்தினால் அடுத்த தலைமுறை கூட இருக்காது, நம்மோடு கடைசி மனிதன் சமாதியாகிவிடுவான். எனவே அணு ஆயுதங்களை உடனே செயலிழக்கச் செய்ய வேண்டும். அடுத்த தலைமுறைக்கு நாம் செய்ய வேண்டிய முதல் வேலை இதுதான்.

    காடுகள்:

    விவசாயம் செய்த மனிதன் காலப்போக்கில் காட்டை அழித்து நாடாக்கினான். பின்னர் நல்ல வேளையாக காடுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை பாதுகாக்கவும் துணிந்தான். இருந்தாலும் காடுகள் இன்று விரைவாக அழிக்கப்பட்டு வருகிறது. வனவிலங்குகளும் வேட்டையாடப்படுகின்றன. வனவிலங்குகள் வாழ வேண்டிய இடத்தில் மனிதர்கள் குடியேறுவது தீவிரமாக நடந்து வருகிறது. மக்கள் நெருக்கம் அதிகமான நாடுகளில்தான் வனவிலங்குகளின் வாழ்விடத்துடன் நேரடிப் போட்டி போடுகின்றனர் இன்றைய தலைமுறையினர்.

    ஆறுகளும், மலைகளும், காடுகளும், புல்களும், பூக்களும்; புலி, சிறுத்தை, யானை, சிங்கம், முதலை போன்ற வனவிலங்குகளும் நமது முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றனர். ஆனால் நமக்கு பின்வரும் தலைமுறையினர் இதையெல்லாம் பார்க்கக் கிடைக்குமா என்பதே கேள்விக் குறியாக இருக்கிறது. பல வனச் சரணாலயங்களில் புலிகள் முற்றிலுமாக மறைந்து விட்டன. நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து, மிகப்பெரிய முயற்சி ஒன்றை எடுத்தால் மட்டுமே காடுகளையும் வனவிலங்குகளையும் காப்பாற்ற முடியும். காடுகளில் ரிசாட் கட்டுவதையும், தாதுப்பொருட்களை சுரண்டுவதையும், பாறைகளை உடைப்பதையும் தடுத்து நிறுத்த என்ன வழி என்பதை உடனே ஆராய வேண்டும். அப்போது தான் வரும் தலைமுறையினருக்கு வனத்தையும் வனவிலங்குகளையும்,  காட்டாறுகளையும் நாம் விட்டுச் செல்ல முடியும்.

    இயற்கை விவசாயம்:

    பெருவாரியான மக்கள் பட்டிணி கிடந்த காலம் மாறி இன்று ஓரளவுக்கு உணவு கிடைக்கிறது. அறிவியல் வேளாண்மையின் பரிசு அது. அதிகபடியான மக்களுக்கு உணவு வழங்க இரசாயன உரமும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டு  வருகின்றன. இதனால் புழுக்களும், பூச்சிகளும் மொத்தமாகக் கொல்லப்படுகின்றன. இதில் நன்மை பயக்கும் பூச்சிகளும் அடங்கும். இப்படியே நாம் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தினால் பூச்சி இனம் அழிந்து சில ஆண்டுகளில் உணவைத் தொடர்ந்து உற்பத்தி செய்ய முடியாமல் மனித இனமே அழிந்துவிடும் அபாயமும் உள்ளதாக அறிவியல் அறிஞர்கள் கவலை தெரிவித்திருக்கிறார்கள். எனவே நாம் நமது அடுத்த தலைமுறைக்கு இயற்கை விவசாயத்தை விட்டுச் செல்ல வேண்டியிருக்கிறது.[hide]

    தொழிற்சாலைகளால் காற்று மாசுபடுகிறது; இன்று உலக சுவாசக் காற்றின் தரம் மனித இனத்திற்கு ஏற்றதாக இல்லை. ஒருநாள் 23,040 முறை சுவாசிக்கும் காற்றையாவது நமது சந்ததிகளுக்கு தூய்மையாக நாம் விட்டுச் செல்ல வேண்டும். அதுபோலத்தான் குடிநீரும். அதற்கு மாசுக்கட்டுப்பாடு விதிகள் கடுமையாக்கப்பட்டு, அவை கடைபிடிக்க வேண்டும்.

    நம்மிடம் இல்லாதது:

    இனி நாம் நமது சந்ததியினருக்கு விட்டுச் செல்லக்கூடிய சில காரியங்கள் உண்டு, ஆனால் அது நம்மிடம் முழுமையாக இல்லை. எனவே அவற்றை நாம் முதல் பழக வேண்டும்.

    (அ) உயரிய சிந்தனை: மனிதர்கள் சிந்திக்கத் துவங்கி பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும், அறிவியல் சிந்தனை பரவலாக இல்லை. இன்னும் தவறான நம்பிக்கைக்காரர்களாகவும், அறிவியல் எதிரிகளாகவும், மதத்தீவிரவாதிகளாகவும், சர்வாதிகாரிகளாகவும், நேர்மையற்றவர்களாகவும் மக்கள் உள்ளார்கள். அறிவியல் சிந்தனை உள்ளவர்களாக மக்கள் முதலில் மாற வேண்டும். நீதி, சமத்துவம், மக்களாட்சி, பொதுவுடமை, மனிதத்துவம் போன்ற உலக சிந்தனைகளையும் அறிய வேண்டும், பின்னர் நல்லதைப் பின்பற்ற வேண்டும். அந்த உயரிய சித்தாந்தத்தை நமது அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டும்.

    (ஆ) அனைவரிடமும் அன்பு: நமது ஊர், நமது சாதி, நமது மதம், நமது பண்பாடு, நமது நாடு என்ற பெயரில் பொய் பெருமைகள் பேசுவது மனிதத்தன்மையாகாது. அது மாற்று பிரிவினரிடம் வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் அமைகிறது (நமது ஜாதிப்பெண்கள் பிற ஜாதியினரை மணந்தால் பெற்றோருக்கு 1.5 லட்சம் அபராதம் என்று குஜராத்தில் ஒரு ஜாதியின் தலைவர்கள் இன்று அறிவித்திருக்கிறார்கள் என இன்றைய பத்திரிக்கைகளில் செய்தி வந்துள்ளது.) வெறுப்பை களைந்து சக மனிதனிடம் அன்பை பெருக்குவோம்.

    (இ) தூய்மை: நோய்கள் நுண் கிருமிகளால் வருகின்றன. உடலையும், வீட்டையும், தெருவையும், ஊரையும், ஆற்றையும், குளத்தையும் தூய்மையாக வைத்துக் கொண்டால் நோய்கள் வருவதை தடுக்கலாம். இந்தப் பழக்கத்தை நாம் முதலில் கற்க வேண்டும், பின்னர் அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல வேண்டும்.

    (ஈ) வாசிப்பு: உலக பார்வை உள்ளவர்களாக முதலில் நாம் மாற வேண்டும். அதற்கு செய்தித்தாள்களையும், உலக ஆசிரியர்களின் நூல்களையும் வாசிக்க வேண்டும். முதலில் நாம் வாசகர்களாக மாற வேண்டும், பின்னர் அந்தப் பழக்கத்தை அடுத்த சந்ததியினருக்கு விட்டுச் செல்ல வேண்டும். ஒரு நல்ல நூலகம் ஒன்றை வீட்டில் ஏற்படுத்தி அதை அடுத்த தலைமுறைக்கு பரிசாக விட்டுச் செல்ல வேண்டும்.

    குறிப்பு:

    உலக வளங்கள் மிக வேகமாக சுரண்டப்பட்டு வருகின்றன. ஒருநாள் ஒன்றுக்கு 1800 கலோரி ஆற்றலைப் பயன்படுத்தினான் கற்கால மனிதன். ஆனால் இன்று, எரிவாயு, மின்விளக்கு, தொலைக்காட்சி, அலைபேசி என்று 22000 கலோரிப் பயன்படுத்துகிறோம். இதனால் பூமியின் இயற்கை வளங்கள் குன்றி, மனிதன் வாழ தகுதியற்ற நிலமாக பூமி மாறிவிடுமோ என்ற கவலை ஏற்பட்டிருக்கிறது. அப்படி நிகழ சில ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம். அன்று அடுத்த தலைமுறை என்ற பேச்சுக்கு இடமிருக்காது. பூமி மட்டும் சுற்றிக் கொண்டிருக்கும். ஆனால் மனிதன் அழிந்துவிட்டான் என்று பிரபஞ்சம் கவலைப்படாது; ஏனென்றால் பலகோடி நட்சத்திரங்கள் அடங்கிய பிரபஞ்சத்திற்கு சூரியனும் பூமியும் ஒரு பொருட்டே அல்ல. பூமி அழிந்து வருகிறது என்பதால் மனிதன்தான் கவலைப்பட வேண்டும். அதாவது அடுத்த தலைமுறை மீது அக்கரை கொண்ட அனைவரும் கண்டிப்பாக கவலைப் பட்டாக வேண்டும்.[/hide]

    இந்த இதழை மேலும்