வாசியுங்கள்! வாகை சூடலாம்! – 11
சிகரத்தில் சந்திப்போம்
(SEE YOU AT THE TOP)
இந்த நூலை ஜிக் ஜிக்லர் (Zig Zigler) ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். (தமிழில் பாரிகாண்டீபன் மொழிபெயர்த்துள்ளார். கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.) “பிறருக்குத் தேவையான உதவிகளை நீங்கள் செய்வீர்களானால், உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்தையும் நீங்கள் பெறுவீர்கள்” என்கிற நிதர்சனமான உண்மையை, இந்நூல் முழுவதும் ஆங்காங்கே மிக அழுத்தம் திருத்தமாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். காரணம், இந்தக் கலியுகத்தில், நவீன வியாபாரச் சூழலில், இதுதான் மிகவும் பயன்படக்கூடிய ஒரு நடைமுறைச் சித்தாந்தம் என்று ஜிக் ஜிக்லர் மிக ஆணித்தரமாக அதே நேரத்தில் மிக அதிகமான எடுத்துக்காட்டுகளுடன் நிறுவுகின்றார்.
இந்த நூல் ஏழு இயல்களைக் கொண்டுள்ளது.
1. சிகரத்திற்கான படிகள்,
2. உங்கள் சுயமதிப்பீடு,
3. மற்றவர்களுடன் உங்களது உறவுமுறை,
4. குறிக்கோள்கள்,
5. மனப்பாங்கு,
6. வேலை,
7. ஆசை என்பதாக அமைக்கப்பட்டுள்ள இந்நூல் 615 பக்கங்களைக் கொண்ட பெரிய நூல் ஆகும். மேற்கண்ட ஏழு இயல்களில் சொல்லப்பட்டுள்ள சிகரத்தை அடைவதற்கான சிந்தனைகளை வருமாறு காண்போம்.
- சிகரத்திற்கான ஆறு படிகள்
சிகரத்தின் உயரம் படிக்கட்டுகளாக இருந்தால் அவை பின்வரும் ஆறு படிக்கட்டுக்களாக இருக்கும்.
1. சுய கௌரவம் (Self Image),
2. மற்றவர்களுடன் ஒத்துப்போதல் பண்பு,
3. சரியான இலக்கு,
4. சரியான மனோபாவம்,
5. நேர்மறைச் சந்தனையுடன் செயல்படல்,
6. வெற்றியை எட்டும் வேட்கை கொழுந்துவிட்டு எரிதல். இந்த ஆறு படிகளை ஒருவன் சரியாகக் கடந்திட்டால் அவனது வெற்றியை எவராலும் தடுத்திட முடியாது.
வெற்றிபெற விரும்பும் ஒருவரின் குணங்களி ல் மிக முக்கியமானவை நல்ல குணம், நம்பிக்கை, நாணயம், நேர்மை, அன்பு, விசுவாசம் போன்றனவாகும். உங்களுக்கு உங்களி டமும் உங்களது நண்பர்களி டமும் பல விஜயங்கள் பிடித்திருக்கின்றன. உங்களி டம் சில இலக்குகளும், சில சரியான மனோபாவங்களும் உள்ளன. நிறைய பணிகளைச் செய்கின்றீர்கள். தவிர சில ஆசைகளும் உள்ளன. நீங்கள் இப்போது செய்ய வேண்டியது என்னவென்றால் உங்களி டம் இருப்பதை முழுமையாகப் பயன்படுத்துவதும் வளர்ச்சிக்கு உங்களுடைய மனோபாவத்தை பிரயோகிப்பதும் மிக அவசியமானதாகும். காரணம்; உங்களி டம் உள்ளதை அதிகமாக உபயோகிக்கும்போது, இன்னமும் அதிகமாக உபயோகிக்கும்படியான கட்டாயம் ஏற்படும். இதைத் தவிர ஒரு ஆணோ, ஒரு பெண்ணோ வெற்றியாளராவதற்கு நிறைய குணங்கள் தேவையில்லை. “ஒருவரிடம் என்ன இருக்கிறதோ அவற்றைப் பயன்படுத்தினாலே போதும். அவர் சிகரத்தை அடைந்துவிடுவார்” என்கிறார் ஜிக் ஜிக்லர்.
உலக வரைபடமும் மனித உருவமும்
ஓயாமல் தொல்லை செய்யும் தனது மகனின் கவனத்தைத் திசை திருப்ப எண்ணிய தந்தை உலக வரைபடத்தை சுக்குநூறாகக் கிழித்து; இதை ஏற்கனவே இருந்ததுபோல் ஒட்டி வை என்றார். மகன் ஏய் சாலி! இப்பவே செய்கிறேன் என்று ஐந்து மணித்துளி யில் சரியாக ஒட்டிக் காண்பிக்க; தந்தைக்கு அதிர்ச்சி. எப்படி இத்தனை வேகத்தில் செய்தாய் என்று கேட்க. அந்தச் சிறுவன் சொன்னான். “அந்த வரைபடத்தின் பின்னால் ஒரு மனிதனின் படம் உள்ளது. ஆகவே அந்தப் பக்கத்தைத் திருப்பிப் பின்பக்கம் உள்ள மனிதனின் படத்தை ஒன்று சேர்த்தேன். அந்த மனிதனின் உருவம் சரியாக அமைந்தவுடனேயே அந்த வரைபடமும் சரியாகிவிட்டது” என்று சொன்னான். நீங்கள் சரியானால் உங்களி ன் உலகமும் சரியாகிவிடும்” என்று கூறுகிறார் ஜிக் ஜிக்லர். எதைச் செய்வதற்கும் சரியான நேரம் இப்போதே என்ற மனம் கொண்டவர் சிகரம் தொடுவதில் சிரமம் ஏதும் இருக்காது. உண்மையில் உங்களுக்குக் கிடைப்பதை விரும்பாமல்; விரும்பியதைக் கிடைக்க வைக்கலாம். நீங்கள் நம்பத் துவங்கிவிட்டால் பிறகு வெற்றி என்பதே சுலபமானதுதான். ஆனால் முதலில் நீங்கள் நம்ப வேண்டும்.
- உங்கள் சுய – மதிப்பீடு
இந்த இயலில் ஆரோக்யமான சுயமதிப்பீட்டின் முக்கியத்துவம் பற்றியும், மோசமான சுயகௌரவம் பற்றியும் விளக்கி; ஒருவர் சுய கௌரவத்தை நல்ல முறையில் வளர்ப்பதற்கான பதினைந்து வழிமுறைகளை விளக்குகிறார் ஆசிரியர். இவற்றில் சில,
“நல்லதே நடக்கும் என்று நம்புவது”
“கடவுள்தோல்வியுறாத மனிதர்களைப் படைப்பதேயில்லை என்பதை ஏற்றுக் கொள்ளுதல்”
“சந்தோஷமாக இருக்கும் இதயத்திற்குத் தொடர்ச்சியாக விருந்துகள் கிடைக்கும்”
“உங்களது நண்பர்களைப் பற்றிக் கவனமாக இருங்கள்”
“மற்றவர்களி ன் துயரங்களைப் பங்கு போட்டுக் கொள்ளுங்கள்”
“நேர்மறைச் சிந்தனையுடன் செயல்படுங்கள்” “நீங்கள் பெற்ற வெற்றிகளை எப்போதும் மறந்துவிடாதீர்கள்”
“தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்”
“பிறருடன் நட்புடன் எப்போதும் இருங்கள்”
“உங்கள் தோற்றத்தைக் கச்சித அளவுடன் எப்போதும் வைத்துக் கொள்ளுங்கள்”
“உங்களை நீங்களே ஒப்புக்கொள்ளுங்கள்”
“தேர்வு உங்கள் கையில்தான் உள்ளது”
“யாராவது உங்களை வீழ்த்துவதால் நீங்கள் வீழ்வதில்லை. நீங்கள் கீழே விழுந்த பின்னரும் அங்கேயே இருந்தால்தான் கீழே விழுந்ததாக அர்த்தம்”.
“உன் மீது நீயே நம்பிக்கை வைத்தாயானால் நிச்சயமாகச் சிகரத்தை அடையலாம்”
“மனிதன்என்பவன்பிறப்பதே வற்றியடை வதற்காகத்தான்”“ஒன்றைத் தொடங்காமல் நிச்சயம் இலக்கை அடையமுடியாது”
என்று நிறைய எடுத்துக்காட்டுகளுடன் சுயமதிப்பீட்டை மதிப்பீடு செய்கின்றார். தன்னை நேசிப்பவன் ஆரோக்கியமான சுயமதிப்பீட்டாளன். தன்னை வெறுப்பவன் மோசமான சுயமதிப்பீட்டாளன். நம்மால் எதுவும் முடியுமென்று நம்புவது ஆரோக்கியமான சுயமதிப்பீடு. நம்மால் முடியுமா? என்று சிந்திப்பது மோசமான சுயமதிப்பீடு என்பது ஜிக்ஜில்லரின் சிந்தனை.
- மற்றவர்களுடன் உங்களது உறவுமுறை
பல வருடங்களுக்கு முன்னர் சுயமாக லட்சாதிபதிகளான நூறு பேர்களைப் பற்றி ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் 21 வயது முதல் 70 வயது வரையில் இருந்தார்கள். அவர்களது கல்வித் தகுதி பள்ளி இறுதி முதல் பிஎச்.டி வரையில் இருந்தது. மற்ற குணாதிசயங்களும் வேறு அம்சங்களும்கூட முற்றிலுமாக வேறுபட்டிருந்தன. ஆனால் அவர்களுக்குள் ஒரு விஜயம் மட்டும் பொதுவாக இருந்தது. எல்லோருமே “நல்லதைத் தேடுபவர்களாக இருந்தனர்.”அவர்கள் மற்றவர்களி டம் இருக்கும் நல்லனவற்றை எல்லாச் சமயங்களி லும் தேடுபவர்களாக இருந்தனர். ஆக மற்றவர்களி டம் உறவுடன் இருக்க விரும்புபவர்கள் வெற்றி மேல் வெற்றி பெறுகிறார்கள் என்று அந்த ஆய்வு முடிவு சொல்லியது.
வாழ்க்கை என்பதே எதிரொலிதான். நீங்கள் எதைத் தருகிறீர்களோ அதையே திரும்பப் பெறுகிறீர்கள். நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதுவே விளைகிறது. நீங்கள் மற்றவர்களி டம் எதைப் பார்க்கிறீர்களோ அது உங்களி டமே இருக்கிறது. நீங்கள் யார், என்ன செய்கிறீர்கள் என்பதெல்லாம் பொருட்டல்ல. எல்லா வழிகளி லும் வாழ்க்கையில் நல்லனவற்றை அறுவடை செய்ய வேண்டுமென்றால் ஒரே வழி எல்லோரிடமும் இருக்கும் நல்லவற்றைக் காண்பதுதான். எல்லா சந்தர்ப்பங்களி லும் இந்த விதியை தங்க விதியாக நினைத்து அனுசரியுங்கள். இந்தப் பிரபஞ்சத்தின் விதி என்னவெனில் நீங்கள் மற்றவர்களை எப்படி பார்க்கிறீர்களோ அதேபோல நேசியுங்கள்.[hide]
- குறிக்கோள்கள்
இப்பகுதியில் சிகரத்தை அடைய விரும்புகின்ற ஒருவருக்கு குறிக்கோள்கள் எவ்வளவு அவசியமானது என்று விளக்குகின்றார். குறிக்கோள் என்பதற்கு இலக்கு அல்லது நோக்கம் என்று பொருள். அது ஒரு திட்டம். நீங்கள் ஏதாவது செய்தாக வேண்டும். நீங்கள் யாராக இருந்தாலும் சரி, நீங்கள் எங்கிருந்தாலும் சரி அல்லது என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும் சரி, உங்கள் ஒவ்வொருவருக்கும் குறிக்கோள் என்பது அவசியம் தேவை. ஜே.சி. பென்னி என்ற எழுத்தாளர் இதனை அழகாக இப்படிச் சொல்கிறார். “குறிக்கோளைக் கொண்டிருக்கும் ஒரு குமாஸ்தாவை என்னிடம் கொடுங்கள், அவரை வரலாற்றில் இடம்பெற வைக்கிறேன். குறிக்கோள்கள் இல்லாத ஒரு மனிதனை என்னிடம் கொடுங்கள், அவரை ஒரு குமாஸ்தாவாக நான் உங்களி டம் ஒப்படைக்கின்றேன்.”
நீங்கள் குறிக்கோள்களை நிர்ணயித்துக் கொள்ளும்போது, மேலும் முன்னேற வேண்டும், மேலும் முன்னேற வேண்டும் என்று உங்கள் உள்மனம் நச்சரித்துக் கொண்டே இருக்கும். இதனால் உங்கள் குறிக்கோள்களி ன் வரையறை உயர்ந்துகொண்டே இருக்கும். பொதுவாகக் குறிக்கோள்கள் பெரிதாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் செம்மையாக இருக்க வேண்டும் என்று பேசும் ஜிக் ஜிக்லர் இவ்வியலில் குறிக்கோள்கள் குறித்து நிறைய பேசுகிறார். அவற்றில் சில,
“எப்போதும் சிறிய திட்டங்களை வகுத்துக் கொள்ளாதீர்கள்.மனிதனின் ஆன்மாவைக் கிளர்ச்சி ஊட்டக்கூடிய சக்தி, அவற்றிற்கு ஒருபோதும் இல்லை”
“உங்கள் பார்வைக்குப் புலனாகும் இலக்கினை நோக்கி முன்னேறிச் செல்லுங்கள். அந்த இலக்கினை நீங்கள்அடைந்த பிறகு அடுத்த இலக்கு உங்கள் பார்வைக்குப் புலப்படும்”
“மற்றவர்கள் உங்கள் வளர்ச்சியைத் தற்காலிகமாகத் தடுக்க முடியும் – அதனை நிரந்தரமாகத் தடுக்கக் கூடியவர் நீங்கள் மட்டுமே”
“நீங்கள் பெரிதாகச் சாதிக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால் அந்த இலக்கினை எட்டிப் பிடிக்க நீங்கள் நாள்தோறும் உழைக்க வேண்டும்.”
“உங்கள் முன்னேற்றத்தைப் படிப்படியாக அமைத்துக் கொள்ளுங்கள்”
“உங்களுக்கு நீங்களே நேர்மையாக இருங்கள்”
“உங்கள் குறிக்கோளை நீங்கள் அடைய விரும்பினால், அதனை நிஜத்தில் அடைவதற்கு முன்பாக, அதனை அடைந்துவிட்ட காட்சியை உங்கள் மனக்கண்ணால் முதலிலேயே பார்த்துவிட வேண்டும்.”
குறிக்கோள் இல்லாமல் பெரிய வெற்றிகள் சாத்தியப்படாது. குறிக்கோள்களே இடையறாது நம்மை இயங்கச் செய்யும் காரணிகள் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்.
- மனப்பாங்கு
நீங்கள் அதிக பணம் சம்பாதிக்க வேண்டுமா? அதிகமான சந்தோஷத்தை விரும்புகிறீர்களா? ஆரோக்கிய உடலமைப்பு வேண்டுமென விரும்புகிறீர்களா? இவை எல்லாமே சாத்தியமானவைதான். ஆனால் அதற்கு ஒரு அடிப்படையான அம்சம் தேவை. அந்த அம்சத்தின் பெயர்தான் “சரியான மனப்பாங்கு” என்பது. ஹார்வேர்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட ஒரு ஆய்வுக்குறிப்பில் ஒருவருடைய வெற்றிக்கும், சாதனைக்கும், பதவி உயர்வுக்கும் 85% காரணமாக இருப்பது மனப்பாங்குதான் என்றும், 15% மட்டுமே தொழில்நுட்பத்திறன் காரணமாக இருக்கிறது என்று கூறப்படுகிறது. அமெரிக்கத் தத்துவஞானி வில்லியம் ஜேம்ஸ் “நம்முடைய மனப்பாங்கை மாற்றிக்கொள்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முடியும்” என்று சொல்லியதற்கேற்ப ஒருவர் தனது மனப்பாங்கை மாற்றிக்கொள்வதன் மூலம்; சிறந்த வெற்றியாளராக மாறமுடியும் என்பதை இவ்வியலில் ஜிக் ஜிக்லர் பல சிந்தனைகளை எடுத்துக்காட்டுகளுடன் முன்வைத்துப் பேசுகிறார். அவற்றில் சில,
“சூழ்நிலை ஒருவனுக்கு எவ்வளவு மோசமாக இருந்தாலும் அதில் நம்பிக்கையூட்டும் அம்சங்கள் நிச்சயமாக இல்லாமல் போகாது.”
“வாழ்க்கை விளையாட்டில் எப்போதும் சற்றும் ஆர்வம் குறையாமல், நம் வளர்ச்சிக்கான அறிவாற்றலைத் தொடர்ந்து அதிகரித்தபடியே இருக்க வேண்டும்.”
“விசேஷமான குணாதிசயம் கொண்டவராக உங்களை நீங்கள் பாவித்துக்கொண்டால் அந்தக் குணாதிசயங்கள் உங்களை விரைவாகப் பற்றிக்கொள்ளும்.”
“உங்களுக்கான வெகுமதிகள் உங்கள் பிறப்பைக் கொண்டு கிடைப்பதில்லை, நீங்கள் நடந்துகொள்ளும் விதத்தில்தான் அது கிடைக்கிறது.”
- வேலை
பல வருடங்களுக்கு முன்பு ஞானம் மிகுந்த ஒரு வயதான அரசன் தன் அரசவையில் இருந்த பண்டிதர்களை அழைத்து; நீண்டகால ஞானம் குறித்து நீங்கள் தொகுக்க வேண்டும்; அதனை, பிற்காலச் சந்ததியினர் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் புத்தக வடிவில் எழுதித் தரவும் என்று கூறினார். பண்டிதர்கள் பலவற்றை தொகுதி தொகுதியாக தொகுத்து வழங்கினர். இவற்றை பலமுறை சுருக்கமாக எழுதச் செய்து, ஒரே ஒரு வாக்கியமாகச் சுருக்கினான் அரசன். அந்த வாக்கியம், “இலவச உணவு எங்கும் கிடைக்காது” (NO FREE LUNCH) என்பது ஆகும். “இது எதையும் செலுத்தாமல் எதையும் பெறமுடியாது” என்றும் விளங்கிக்கொள்ளலாம். எவர் ஒருவர் வேலை செய்யவில்லையோ அவர்கள் சாப்பிடுவதற்குத் தகுதியற்றவர்கள் ஆவர் என்பதும் மேலே சொன்ன வாசகத்தின் இன்னொரு வடிவமே.
“வேலைதான் எல்லாவித வியாபாரங்களுக்கும் அடித்தளம், எல்லாவித வளங்களுக்கும் ஆணிவேர், அறிவுக் கூர்மையின் தாய் – தந்தை.”
“ஒருவனுடைய செழிப்பான வாழ்க்கைக்கு அஸ்திவாரச் சின்னமாக விளங்குவது வேலைதான்.”
“நேசிக்கப்படும் வேலை வாழ்க்கையை இனிமையானதாகவும் குறிக்கோள் நிறைந்ததாகவும், சுவையானதாகவும் மாற்றுகிறது.”
கற்பது என்பதே ஒரு விஷயத்தை வெளிக்கொணர்வது அல்லது வெளியே இழுப்பது என்பதாகும். இந்தப் புத்தகத்தின் நோக்கமும் உங்களுக்குள் ஓளிந்திருக்கும் பெரிய, இன்னமும் சாதனை புரியக்கூடிய மனிதனை வெளிக்கொணர்வதென்பதாகும். இப்புத்தகத்தைப் பொறுத்த அளவில் உங்களுக்கு இதிலிருந்து நிறைய கிடைக்கும் என்பது மட்டுமல்ல, உங்களுக்குள்ளி ருந்தே உங்களுக்கு மேலும் நிறைய கிடைக்கும். சிகரத்தை அடையவேண்டுமென்றால் நேர்மை, நற்குணம், நம்பிக்கை, நேசம், ஒழுக்கம் மற்றும் விசுவாசம் ஆகிய கற்களைக் கொண்டு உங்கள் வெற்றிப் படிகளை அமைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சிகரத்தை அடைந்துவிடுவீர்கள்.
– வாசிப்புத் தொடரும்…[/hide]
இந்த இதழை மேலும்
0 comments Posted in Articles